திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 935 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
935அமலனாதிபிரான் || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — ஊரழி பூசல் போலே திரு மேனியின் நிறமானது எல்லாவற்றையும் கூடக் கொண்டு வந்து என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது என்கிறார். 9
ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய் ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான் கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில் நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே
பதவுரை Show / Hide
மா, Maa - பெரிதான
ஆல மரத்தின் , Aala Marathin - ஆல மரத்தினுடைய
இலை மேல், Iai Mel - (சிறிய) இலையிலே
ஒரு பாலகன் ஆய், Oru Paalakan Aay - ஒரு சிறு பிள்ளையாகி
ஞாலம் ஏழும் உண்டான், Gnalam Yezhum Undaan - ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும்
அரங்கத்து, Arangathu - கோயிலிலே
அரவு இன் அணையான், Aravu In Anaiyaan - திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியின் மீது சாய்ந்தருள் பவனுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
கோலம், Kolam - அழகிய
மா, Maa - சிறந்த
மணி ஆரமும், Maani Aramum - ரத்நங்களாற் செய்யப்பட்ட ஹாரமும்
முத்து தாமமும், Muthu Thaamamum - முத்து வடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திருவாபரணங்கள்)
முடிவு இல்லது, Mudivu Illadhu - எல்லை காண முடியாமல் அபரிமிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும்
ஓர் எழில், Oru Yezhil - ஒப்பற்ற அழகை யுடையதும்
நீலம், Neelam - கரு நெய்தல் மலர் போன்றதுமான
மேனி, Meni - திருமேனி யானது
என் நெஞ்சினை, En Nenjinai - எனது நெஞ்சினுடைய
நிறை, Nirai - அடக்கத்தை
கொண்டது, Kondadhu - கொள்ளை கொண்டு போயிற்று;
ஐயோ!, Aiyo! - இதற்கென் செய்வேன்? என்கிறார்.