Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 935 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
935அமலனாதிபிரான் || 9
ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே
மா, Maa - பெரிதான
ஆல மரத்தின் , Aala Marathin - ஆல மரத்தினுடைய
இலை மேல், Iai Mel - (சிறிய) இலையிலே
ஒரு பாலகன் ஆய், Oru Paalakan Aay - ஒரு சிறு பிள்ளையாகி
ஞாலம் ஏழும் உண்டான், Gnalam Yezhum Undaan - ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும்
அரங்கத்து, Arangathu - கோயிலிலே
அரவு இன் அணையான், Aravu In Anaiyaan - திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியின் மீது சாய்ந்தருள் பவனுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
கோலம், Kolam - அழகிய
மா, Maa - சிறந்த
மணி ஆரமும், Maani Aramum - ரத்நங்களாற் செய்யப்பட்ட ஹாரமும்
முத்து தாமமும், Muthu Thaamamum - முத்து வடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திருவாபரணங்கள்)
முடிவு இல்லது, Mudivu Illadhu - எல்லை காண முடியாமல் அபரிமிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும்
ஓர் எழில், Oru Yezhil - ஒப்பற்ற அழகை யுடையதும்
நீலம், Neelam - கரு நெய்தல் மலர் போன்றதுமான
மேனி, Meni - திருமேனி யானது
என் நெஞ்சினை, En Nenjinai - எனது நெஞ்சினுடைய
நிறை, Nirai - அடக்கத்தை
கொண்டது, Kondadhu - கொள்ளை கொண்டு போயிற்று;
ஐயோ!, Aiyo! - இதற்கென் செய்வேன்? என்கிறார்.