| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 940 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || 4 | நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவரா தலில் அன்னையாயத்தனா யென்னையாண்டிடும் தன்மையான் சடகோபனென் நம்பியே | நன்மையால் மிக்க, Nanmaiyal Mikka - நற்குணத்தால் மேன்மை பெற்றவர்களாய் நால்மறை ஆளர்கள், Naalmarai Aalargal - நான்கு வேதங்களிலும் வல்லவர்களான வைதிகர்கள் புன்மை ஆக கருதுவர் ஆதலில், Punmai Aaga Karuthuvar Aadhalil - (என்னை) அடியேனை தாழ்வே ஒரு வடிவு கொண்ட தென்றெண்ணி உபேக்ஷித்திருப்பெரென்பதுவே காரணமாக அன்னை ஆய், Annai Aay - மாதாவாயும் அத்தன் ஆய், Athan Aay - பிதாவாயும் என்னை ஆண்டிடும் தன்மையான், Ennai Aanditum Thanmaiyaan - அடியேனைக் கைக்கொண்டருளுமியல் வினரான சடகோபன், Sadagopan - நம்மாழ்வார் என் நம்பி, En Nambi - எனக்குத் தலைவர் |