Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 940 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
940கண்ணிநுண்சிறுத்தாம்பு || 4
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவரா தலில்
அன்னையாயத்தனா யென்னையாண்டிடும்
தன்மையான் சடகோபனென் நம்பியே
நன்மையால் மிக்க, Nanmaiyal Mikka - நற்குணத்தால் மேன்மை பெற்றவர்களாய்
நால்மறை ஆளர்கள், Naalmarai Aalargal - நான்கு வேதங்களிலும் வல்லவர்களான வைதிகர்கள்
புன்மை ஆக கருதுவர் ஆதலில், Punmai Aaga Karuthuvar Aadhalil - (என்னை) அடியேனை தாழ்வே ஒரு வடிவு கொண்ட தென்றெண்ணி உபேக்ஷித்திருப்பெரென்பதுவே காரணமாக
அன்னை ஆய், Annai Aay - மாதாவாயும்
அத்தன் ஆய், Athan Aay - பிதாவாயும்
என்னை ஆண்டிடும் தன்மையான், Ennai Aanditum Thanmaiyaan - அடியேனைக் கைக்கொண்டருளுமியல் வினரான
சடகோபன், Sadagopan - நம்மாழ்வார்
என் நம்பி, En Nambi - எனக்குத் தலைவர்