திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 944 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
944கண்ணிநுண்சிறுத்தாம்பு || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — எண் திசையும் அறிய இயம்புகேன் -என்கைக்கு ஹேது என் -என்னில் – ஆழ்வாருடைய அருள் -சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும் கபளீ கரித்து இருக்கையாலே -என்கிறார் 8
அருள்கொண்டாடு மடியவரின்புற அருளினானவ் வருமறையின் பொருள் அருள் கொண்டாயிர மின் தமிழ்ப்பாடினான் அருள் கண்டீரிவ்வுலகினில் மிக்கதே
பதவுரை Show / Hide
அடியவர், Adiyavar - பக்தர்கள்
இன்புற, Inpura - ஆநந்திக்கும்படி
அ அரு மறையின் பொருள், A Aru Maraiyin Porul - அந்த அருமையான வேதத்தின் உட்பொருள்களை
அருளினான், Arulinan - அருளிச்செய்தவராயும்
அருள் கொண்டு, Arul Kondu - பரமக்ருபையாலே
இன் தமிழ், In Thamizh - இனிய தமிழ்ப்பாஷையிலே அமைந்த
ஆயிரம், Aayiram - திருவாய்மொழியாயிரத்தை
பாடினான், Paadinan - பாடினவருமான ஆழ்வாருடைய
அருள் கண்டீர், Arul Kandir - க்ருபை ஒன்று மாத்திர மன்றோ
இ உலகினில், I Ulaginil - இந்த லோகத்திலே
மிக்கது, Mikkaadu - அதிசயித்திருக்கிறது பெரியதாயிருக்கிறது