Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 96 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
96ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 11
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே–1-7-11
ஆயர் குலத்தினில் வந்து,Aayar kulaththil vandhu - இடையர் குலத்திலே வந்து
தோன்றிய,Thondriya - அவதரித்த
அஞ்சனம் வண்ணன்,Anjanam vannan - மை போன்ற கருநிறமுடையனான கண்ணன்
தன்னை,Thannai - தன்னை (க்கண்டு)
தாயர்,Thaayar - தாய்மார்கள்
மகிழ,Magizha - மனமுகக்கவும்
ஒன்னார்,Onnar - சத்ருக்கள்
தளர,Thalara - வருத்தமடையவும்
தளர்நடை நடந்தனை,Thalar nadai nadaththana - தளர்நடை நடந்ததை
வேயர்,Veyar - வேயர் குடியிலிருப்பவரெல்லாராலும்
புகழ்,Pugazh - புகழப் பெற்ற
விட்டு சித்தன்,Vittu siththan - பெரியாழ்வார்
சீரால்,Seeraal - சிறப்பாக
விரித்தன,Viridhthana - விவரித்துச் சொன்ன பாசுரங்களை
உரைக்க வல்லார்,Uraikka vallaar - சொல்ல வல்லவர்கள்
மாயன்,Maayan - ஆச்சர்யமான குணங்கள யுடையவனும்
மணி,Mani - நீல மணி போன்ற
வண்ணன்,Vannan - நிறமுடையனுமான எம்பெருமானுடைய
தாள்,Thaal - திருவடிகளை
பணியும்,Paniyum - வணங்க வல்ல
மக்களை,Makkalai - பிள்ளைகளை
பெறுவார்கள்,Peruvaarhal - அடைவார்கள்.