| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 97 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 1 | பொன்னியல் கிண் கிணி சுட்டி புறம்கட்டி தன்னிய லோசை சலஞ்சல னென்றிட மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற் போல் என்னிடைக் கோட்டரா அச்சோ வச்சோ எம்பெருமான் வாரா அச்சோவச்சோ–1-8-1 | பொன் இயல்,Pon iyal - பொன்னாற்செய்த கிண்கிணி,Kinkini - அரைச் சதங்கை பாதச் சதங்கைகளையும் சுட்டி,Sutti - சுட்டியையும் புறம்,Puram - (அதற்கு உரிய) இடங்களிலே கட்டி,Katti - அணிந்து தன்,Than - சதங்கைக்கு இயல்,Iyal - பொருந்திய இசை,Isai - சப்தமானது சலன் சலன் என்றிட,Salan salan endrida - சலன் சலனென்று ஒலிக்க மின் இயல்,Min iyal - மின்னலோடு பொருந்திய மேகம்,Megam - மேகமானது விரைந்து,Viraindhu - வேகமாக ஓடி வந்து எதிர் வந்தால் போல்,Ethir vanthal pol - எதிரே வந்தாற் போலே என் இடைக்கு ஒட்டரா,En idaiyku ottara - என் இடையிலிருக்க (விரும்பி) ஓடிவந்து அச்சோ அச்சோ,Achcho achcho - (என்னை) அணைத்துக் கொள்ள வேணும் அணைத்துக் கொள்ள வேணும் எம்பெருமான்,Emperuman - எங்களுடைய தலைவனே! வாரா,Vaara - வந்து அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ |