திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 97 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
97பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 1
பொன்னியல் கிண் கிணி சுட்டி புறம்கட்டி தன்னிய லோசை சலஞ்சல னென்றிட மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற் போல் என்னிடைக் கோட்டரா அச்சோ வச்சோ எம்பெருமான் வாரா அச்சோவச்சோ–1-8-1
பதவுரை Show / Hide
பொன் இயல்,Pon iyal - பொன்னாற்செய்த
கிண்கிணி,Kinkini - அரைச் சதங்கை பாதச் சதங்கைகளையும்
சுட்டி,Sutti - சுட்டியையும்
புறம்,Puram - (அதற்கு உரிய) இடங்களிலே
கட்டி,Katti - அணிந்து
தன்,Than - சதங்கைக்கு
இயல்,Iyal - பொருந்திய
இசை,Isai - சப்தமானது
சலன் சலன் என்றிட,Salan salan endrida - சலன் சலனென்று ஒலிக்க
மின் இயல்,Min iyal - மின்னலோடு பொருந்திய
மேகம்,Megam - மேகமானது
விரைந்து,Viraindhu - வேகமாக ஓடி வந்து
எதிர் வந்தால் போல்,Ethir vanthal pol - எதிரே வந்தாற் போலே
என் இடைக்கு ஒட்டரா,En idaiyku ottara - என் இடையிலிருக்க (விரும்பி) ஓடிவந்து
அச்சோ அச்சோ,Achcho achcho - (என்னை) அணைத்துக் கொள்ள வேணும் அணைத்துக் கொள்ள வேணும்
எம்பெருமான்,Emperuman - எங்களுடைய தலைவனே!
வாரா,Vaara - வந்து
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ