Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 99 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
99ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 3
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து
நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ வச்சோ–1-8-3
பஞ்சவர்,Panjavar - பாண்டவர்களுக்காக
தூதன் ஆய்,Thoodhan aay - (துர்யோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய்
பாரதம்,Paaratham - (அந்த துர்யோதநாதிகள் தன் சொற்படி இசைந்து வராமையால்) பாரத யுத்தத்தை
கை செய்து,Kai seythu - அணி வகுத்துச் செய்து
நஞ்சு,Nanju - விஷத்தை
உமிழ்,Umizh - கக்குகின்ற
நாகம்,Naagam - (கானிய) ஸர்ப்பம்
கிடந்த,Kidandha - இருந்த
நல் பொய்கை,Nal poigai - கொடிய மடுவிலே
புக்கு,Pukku - புகுந்து
அஞ்சு,Anju - (ஆய்ச்சிகளும் ஆயரும்) பயப்படும்படி
பணத்தின் மேல்,Panathin mel - (அப்பாம்பின்) படத்திலே
பாய்ந்திட்டு,Paindhittu - குதித்து
அருள்செய்த,Arulseytha - (நடமாடி அக்காளியனை இணைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க) (அப்பாம்பின் ப்ராணனைக்) கருணையால் விட்டிட்ட
அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-;,Anjanam vannane Achcho achcho - அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-;
ஆயர்,Aayar - இடையர்களுக்கு
பெருமானே,Perumane - தலைவனானவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ