| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 99 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 3 | பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ வச்சோ–1-8-3 | பஞ்சவர்,Panjavar - பாண்டவர்களுக்காக தூதன் ஆய்,Thoodhan aay - (துர்யோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய் பாரதம்,Paaratham - (அந்த துர்யோதநாதிகள் தன் சொற்படி இசைந்து வராமையால்) பாரத யுத்தத்தை கை செய்து,Kai seythu - அணி வகுத்துச் செய்து நஞ்சு,Nanju - விஷத்தை உமிழ்,Umizh - கக்குகின்ற நாகம்,Naagam - (கானிய) ஸர்ப்பம் கிடந்த,Kidandha - இருந்த நல் பொய்கை,Nal poigai - கொடிய மடுவிலே புக்கு,Pukku - புகுந்து அஞ்சு,Anju - (ஆய்ச்சிகளும் ஆயரும்) பயப்படும்படி பணத்தின் மேல்,Panathin mel - (அப்பாம்பின்) படத்திலே பாய்ந்திட்டு,Paindhittu - குதித்து அருள்செய்த,Arulseytha - (நடமாடி அக்காளியனை இணைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க) (அப்பாம்பின் ப்ராணனைக்) கருணையால் விட்டிட்ட அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-;,Anjanam vannane Achcho achcho - அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-; ஆயர்,Aayar - இடையர்களுக்கு பெருமானே,Perumane - தலைவனானவனே! அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ |