திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: திருப்பல்லாண்டு - தனியன் (3 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
தனியன் 6திருப்பல்லாண்டு - தனியன் || (இது தான் திருப்பல்லாண்டுத் தனியனாயிருக்கும் . அந்தத் திருப்பல்லாண்டு பாடுகைக்கடியான பெரியாழ்வார் வைபவத் தைப் பெருக்கப் பேசி , அவரை ப்ரணிபாத நமஸ்காரம் பண்ணும்படி சொல்லுகிறது )
ஸ்ரீ நாத முனிகள்
குருமுகம் அநதீத்ய ப்ராஹ வேதான் அசேஷான் நர பதி பரிக்லிப்தம் சுல்கம் ஆதாதுகாம ஸ்வசுரம் அமர வந்த்யம் ரங்க நாதஸ்ய ஸாக்ஷாத் த்விஜகுல திலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி
பதவுரை Show / Hide
Guru Mukham,குருமுகம் - ஆசார்ய முகத்தாலே
Anaditya,அநதீத்ய - அப்யசிக்காமலே
Prah,ப்ராஹ - உபன்யசித்தாரோ
Vedhan,வேதான் - வேதங்களை
Aseshan,அசேஷான் - சமஸ்தமாகிய
Nara Pathi,நர பதி - ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவினால்
Parikliptham,பரிக்லிப்தம் - ஏற்படுத்தப்பட்ட
Sulkam,சுல்கம் - வித்யா சுல்கத்தை
Adhathukama,ஆதாதுகாம - க்ரஹிப்பதற்கு ஆசை உள்ளவராய்
Svasuram,ஸ்வசுரம் - மாமனாரும்
Amara,அமர - தேவதைகளால்
Vandhyam,வந்த்யம் - ஸ்தோத்ரம் செய்வதற்கு தக்கவரும்
Ranga Nathasya,ரங்க நாதஸ்ய - ஸ்ரீ ரெங்க அதிபனுக்கு
Saakshath, ஸாக்ஷாத் - பிரத்யக்ஷமாய்
Dwija Kula,த்விஜகுல - ப்ராஹ்மண வம்சத்துக்கு
Thilagam,திலகம் - அலங்கார பூதருமாகிய
Tham Vishnu Sitham,தம் விஷ்ணு சித்தம் - அந்த பெரியாழ்வாரை
Namami,நமாமி - சேவிக்கிறேன்
தனியன் 7திருப்பல்லாண்டு - தனியன் || (இதில் ஸ்ரீ வில்லி புத்தூர் பட்டர்பிரானான பெரியாழ்வார் அவதரண ஸ்தலத்தை அனுசந்திப்பார்- திருவடிகளைத் தொழுகையால் உண்டான ப்ரீதியையும்- அவர் செயலைச் சொல்லுகையால் உண்டான விரோதி நிவர்த்தியாதிகளில் த்ருப்தியையும் மனசோடே சொல்லி உலாவுகிறதாய் இருக்கிறது)
ஸ்ரீ பாண்டிய பட்டர்
மின்னார் தட மதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒரு கால் சொன்னார் கழல் கமலம் சூடினோம் -முன்னாள் கிழி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும் வழி யறுத்தோம் நெஞ்சமே வந்து
பதவுரை Show / Hide
Min,மின் - மின்னுதல் (மணிகளால் ஒளி விடுதல்)
Ar,ஆர் - நிறைந்த அதிகமான
Thadam,தடம் - அகலப்பரப்பும் உயர்ந்து ஓங்குகையும் உள்ள
Mathil,மதிள் - திரு மதிளாலே
Soozh,சூழ் - வளைக்கப்பட்ட
Villi Puthoor endru,வில்லி புத்தூர் என்று - ஸ்ரீ வில்லி புத்தூர் என்று
Oru kaal sonnaar,ஒரு கால் சொன்னார் - ஒரு தரம் உச்சரிதவருடைய
Kazhal Kamalam,கழல் கமலம் - திருவடித் தாமரைகளை
Soodinom,சூடினோம் - விசேஷ புஷ்பமாக முடித்தோம்
Munnal,முன்னாள் - புருஷார்த்தம் வெளியாக காலத்தில்
Kizhi,கிழி - பொருள் முடிப்பை
Aruthaan endru,அறுத்தான் என்று - அறுத்து வெளி இட்டவர் என்று
Uraththom,உரைத்தோம் - சொல்லப் பெற்றோம் ஆகையால்
Keezhmai,கீழ்மை - நரகத்தில்
Ini,இனி - இனிமேல்
Seerum,சேரும் - முன் போல் செல்லுகிற
Vazhi,வழி - மார்க்கத்தை
Aruththom,அறுத்தோம் - அறப் பண்ணினோம்
Nenje,நெஞ்சே - மனசே
Vandhu,வந்து - சம்ஸார ரஹீதராய் வந்து
தனியன் 8திருப்பல்லாண்டு - தனியன் || (இதில் பிரபந்த வக்தவான பெரியாழ்வார் திருவடிகளில் உபாய ச்வீகாரத்தை -சொல்கிறது)
ஸ்ரீ பாண்டிய பட்டர்
பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான் என்று ஈண்டிய சங்கம் எடுத்தூத -வேண்டிய வேதங்களோதி விரைந்து கிழி யறுத்தான் பாதங்கள் யாமுடைய பற்று
பதவுரை Show / Hide
Pandiyan,பாண்டியன் - ஸ்ரீ வல்லப தேவன் என்கிற பாண்டிய ராஜன்
Kondada,கொண்டாட - மேன்மேல் ஏத்த
Pattar Piran,பட்டர்பிரான் - ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தலைவன்
Vandhaan endru,வந்தான் என்று - எழுந்து அருளினான் என்று
Eendiya,ஈண்டிய - கூடின அநேகமான
Sangam eduthu,சங்கம் எடுத்து - சங்குகளைக் கொண்டு
Ootha,ஊத - அநேகர் சப்திக்க
Vendia,வேண்டிய - அக்காலத்துக்கு ஆவஸ்யகமாகிய
Vedhangal,வேதங்கள் - வேதார்தங்களை
Oodhi,ஓதி - தெரியச் சொல்லி
Viraindhu,விரைந்து - தாமசியாமல்
Kizhi,கிழி - வித்யா சுல்கமாகிய பொருள் முடிப்பை
Yaruthaan,யறுத்தான் - அறுத்தவனுடைய
Paadhangal,பாதங்கள் - திருவடிகளே
Yaamudaiya,யாமுடைய - நாங்கள் ஆஸ்ரயமாக உடைய
Patru,பற்று - ஆதாரம்