திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| தனியன் 33 | திருவாசிரியம் - தனியன் || (காசினியோர்) | அருளாளப்பெருமாள் எம்பெருமானார் காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து
ஆசிரியப்பா வதனாலரு மறைநூல் விரித்தானைத்
தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத் தாரானை
மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே | பதவுரை Show / HideKaasiniyor thaam, காசினியோர் தாம் - பூலோகத்திலுள்ளார் Vaazha, வாழ - உஜ்ஜீவிக்கும்படி Kaliyugathe, கலியுகத்தே - கலியுகத்தில் Vandhu, வந்து - (பரமபதத்தில்நின்றும்) வந்து Udhithu, உதித்து - அவதரித்து Aasiriyapaa athanaal, ஆசிரியப்பா அதனால் - ஆசிரியப்பா என்கிற பாக்களாலே Aru, அரு - அறிவதற்கரிதான Marai, மறை - வேதமாகிற Nool, நூல் - சாஸ்த்ரத்தை Virithaanai, விரித்தானை - விஸ்தரிக்கச் செய்தவராய் Desikanai, தேசிகனை - ஆசார்யராய் Thigazh, திகழ் - விளங்காநின்ற Vagulatharanai, வகுளத்தாரானை - மகிழம்பூமாலையை அணிந்தவரான Parangusanai, பராங்குசனை - நம்மாழ் வாரை Maasu adaiyaa, மாசு அடையா - அஹங்கார மமகாரங்களாகிற அழுக்குச் சேராத Manathu, மனத்து - மநஸ்ஸில் Vaithu, வைத்து - ஸ்த்தாபித்து Maravaamal, மறவாமல் - மறவாதபடி Vaazhthuthum, வாழ்த்துதும் - மங்களாசாஸநம் பண்ணுவோம் |