Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: முனியே நான்முகனே (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3766திருவாய்மொழி || 10-10 முனியே (நிர்ஹேதுகமாக வடிவழகைக் காட்டி என்னை யீடுபடுத்திவைத்து உன்னையொழியச் செல்லாதபடி பண்ணிவைத்து இப்படி ஸம்ஸாரத்திலே இன்னமும் தள்ளி வைப்பது தகுதியன்று என்கிறார்.) 1
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1
முனியே, Muniye - படைக்கும் வகையை மனனம் பண்ணுமவனே!
நான்முகனே, Naanmugane - நான்முகனுக்கு அந்தரியாமியாயிருக்குமவனே!
முக்கண் அப்பா, Mukkan appa - ஸம்ஹாரக் கடவுளான ருத்ரனுக்கு அந்தரியாமியானவனே!
கனிவாய் தாமரை கண், Kanivaai thaamarai kan - கனிந்த அநரத்தையும் தாமரைபோன்ற திருக்கண்களையுமுடைய
என் பொல்லா கருமாணிக்கமே, En polla karu maanikkame - துளையாத கருமாணிக்கம் போன்ற திருவுருவத்தை எனக்கு அநுபவிப்பித்தவனே!
என் கள்வா, En kalva - என்னை வஞ்சித்து ஈடுபடுத்திக் கொண்டவனே!
தனியேன் ஆர் உயிரே, Thaniyen aar uyire - என்னொருவனுக்குப் பாரி பூர்ண ப்ராணனானவனே
என் தலை மிசை ஆய் வந்திட்டு, En thalai misai aai vandhittu - என் தலைமேலே வந்து சேர்ந்தாயான பின்பு
இனி நான் போகல் ஒட்டேன், Ini naan pogal otten - இனி யொருநாளும் உன்னை அகன்றுபோக இசையமாட்டேன்:
என்னை , Ennai - ஆர்த்தி மிகுந்த என்னை
ஒன்றும் மாயம் செய்யேல், ondrum maayam seiyel - ஒரு படியாலும் வஞ்சிக்கலாகாது.