| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3766 | திருவாய்மொழி || 10-10 முனியே (நிர்ஹேதுகமாக வடிவழகைக் காட்டி என்னை யீடுபடுத்திவைத்து உன்னையொழியச் செல்லாதபடி பண்ணிவைத்து இப்படி ஸம்ஸாரத்திலே இன்னமும் தள்ளி வைப்பது தகுதியன்று என்கிறார்.) 1 | முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1 | முனியே, Muniye - படைக்கும் வகையை மனனம் பண்ணுமவனே! நான்முகனே, Naanmugane - நான்முகனுக்கு அந்தரியாமியாயிருக்குமவனே! முக்கண் அப்பா, Mukkan appa - ஸம்ஹாரக் கடவுளான ருத்ரனுக்கு அந்தரியாமியானவனே! கனிவாய் தாமரை கண், Kanivaai thaamarai kan - கனிந்த அநரத்தையும் தாமரைபோன்ற திருக்கண்களையுமுடைய என் பொல்லா கருமாணிக்கமே, En polla karu maanikkame - துளையாத கருமாணிக்கம் போன்ற திருவுருவத்தை எனக்கு அநுபவிப்பித்தவனே! என் கள்வா, En kalva - என்னை வஞ்சித்து ஈடுபடுத்திக் கொண்டவனே! தனியேன் ஆர் உயிரே, Thaniyen aar uyire - என்னொருவனுக்குப் பாரி பூர்ண ப்ராணனானவனே என் தலை மிசை ஆய் வந்திட்டு, En thalai misai aai vandhittu - என் தலைமேலே வந்து சேர்ந்தாயான பின்பு இனி நான் போகல் ஒட்டேன், Ini naan pogal otten - இனி யொருநாளும் உன்னை அகன்றுபோக இசையமாட்டேன்: என்னை , Ennai - ஆர்த்தி மிகுந்த என்னை ஒன்றும் மாயம் செய்யேல், ondrum maayam seiyel - ஒரு படியாலும் வஞ்சிக்கலாகாது. |