Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 1 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1திருப்பல்லாண்டு || 1
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!
உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு
பல்லாண்டு, pallaandu - பல(எண்‌ண முடியாக) வருஷங்கள்‌. இங்கு ஆண்டு மனுஷ்ய லோகத்தில்‌ ஆண்டைக்‌ குறிக்கும்‌
பல்லாண்டு, pallaandu - தேவ வருஷத்தில்‌ எண்ண முடியாக வருஷங்கள்‌
பல்லாயிரத்தாண்டு, pallayiraththaandu - பிரஹ்மாவின்‌ வருஷக்‌ கணக்கில் எண்ண முடியாத வருஷங்கள்‌
பலகோடி நூறாயிரம், palakodi nooraayiram - எண்‌ண முடியாத பிரஹ்மாக்களுடைய கணக்கில்லாத வருஷங்கள்‌- அதாவது: கால தத்த்வம்‌ உள்ளவரை
மல்லாண்ட, mallanda - மல்‌-சாணூரன்; முஷ்டிகன் முதலிய மல்லர்களை. ஆண்ட-அடக்கிக்‌ கொன்ற
திண்தோள், thinthol - திண்‌-திடமான ; மஹா பலம்‌ பொருந்திய தோள்‌ -இருத்‌ தோள்களை உடைய
மணிவண்ணா, manivanna - மாணிக்கம் போன்ற வர்ணத்தையும்‌ ஸ்வபாவத்தையும்‌ உடையவனே
உன், un - உன்னுடைய
செவ்வடி, chevvadi - செம்‌-அடி ; சிவந்த திருவடியின்‌
செவ்விதிருக் காப்பு, chevvi thiruk kaappu - அழகுக்கு குறைவற்ற ரக்ஷை உண்டாக
வேணும் . )