திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 1 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1திருப்பல்லாண்டு || ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –அவதாரிகை --சௌந்த்ர்யாதி கல்யாண குணோபேதமான விக்ரஹத்தோடே வகுத்த சேஷி யானவனை கால அதீநமான தேசத்திலே காண்கையாலே -இத்தால் இவனுக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று அதி சங்கை பண்ணி அநாதிர் பகவான் காலோ ந அந்தோஸ் யத்விஜ வித்யதே –ஸ்ரீ விஷ்ணு புராணம்-என்கிறபடியே கால தத்வம் உள்ளதனையும் இச் செவ்வி மாறாதே நித்யமாய்ச் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார் – 1
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு
பதவுரை Show / Hide
பல்லாண்டு, pallaandu - பல(எண்‌ண முடியாக) வருஷங்கள்‌. இங்கு ஆண்டு மனுஷ்ய லோகத்தில்‌ ஆண்டைக்‌ குறிக்கும்‌
பல்லாண்டு, pallaandu - தேவ வருஷத்தில்‌ எண்ண முடியாக வருஷங்கள்‌
பல்லாயிரத்தாண்டு, pallayiraththaandu - பிரஹ்மாவின்‌ வருஷக்‌ கணக்கில் எண்ண முடியாத வருஷங்கள்‌
பலகோடி நூறாயிரம், palakodi nooraayiram - எண்‌ண முடியாத பிரஹ்மாக்களுடைய கணக்கில்லாத வருஷங்கள்‌- அதாவது: கால தத்த்வம்‌ உள்ளவரை
மல்லாண்ட, mallanda - மல்‌-சாணூரன்; முஷ்டிகன் முதலிய மல்லர்களை. ஆண்ட-அடக்கிக்‌ கொன்ற
திண்தோள், thinthol - திண்‌-திடமான ; மஹா பலம்‌ பொருந்திய தோள்‌ -இருத்‌ தோள்களை உடைய
மணிவண்ணா, manivanna - மாணிக்கம் போன்ற வர்ணத்தையும்‌ ஸ்வபாவத்தையும்‌ உடையவனே
உன், un - உன்னுடைய
செவ்வடி, chevvadi - செம்‌-அடி ; சிவந்த திருவடியின்‌
செவ்விதிருக் காப்பு, chevvi thiruk kaappu - அழகுக்கு குறைவற்ற ரக்ஷை உண்டாக
வேணும் . )