| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | திருப்பல்லாண்டு - தனியன் || (இது தான் திருப்பல்லாண்டுத் தனியனாயிருக்கும் . அந்தத் திருப்பல்லாண்டு பாடுகைக்கடியான பெரியாழ்வார் வைபவத் தைப் பெருக்கப் பேசி , அவரை ப்ரணிபாத நமஸ்காரம் பண்ணும்படி சொல்லுகிறது ) 6 | குருமுகம் அநதீத்ய ப்ராஹ வேதான் அசேஷான் நர பதி பரிக்லிப்தம் சுல்கம் ஆதாதுகாம ஸ்வசுரம் அமர வந்த்யம் ரங்க நாதஸ்ய ஸாக்ஷாத் த்விஜகுல திலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி | Guru Mukham,குருமுகம் - ஆசார்ய முகத்தாலே Anaditya,அநதீத்ய - அப்யசிக்காமலே Prah,ப்ராஹ - உபன்யசித்தாரோ Vedhan,வேதான் - வேதங்களை Aseshan,அசேஷான் - சமஸ்தமாகிய Nara Pathi,நர பதி - ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவினால் Parikliptham,பரிக்லிப்தம் - ஏற்படுத்தப்பட்ட Sulkam,சுல்கம் - வித்யா சுல்கத்தை Adhathukama,ஆதாதுகாம - க்ரஹிப்பதற்கு ஆசை உள்ளவராய் Svasuram,ஸ்வசுரம் - மாமனாரும் Amara,அமர - தேவதைகளால் Vandhyam,வந்த்யம் - ஸ்தோத்ரம் செய்வதற்கு தக்கவரும் Ranga Nathasya,ரங்க நாதஸ்ய - ஸ்ரீ ரெங்க அதிபனுக்கு Saakshath, ஸாக்ஷாத் - பிரத்யக்ஷமாய் Dwija Kula,த்விஜகுல - ப்ராஹ்மண வம்சத்துக்கு Thilagam,திலகம் - அலங்கார பூதருமாகிய Tham Vishnu Sitham,தம் விஷ்ணு சித்தம் - அந்த பெரியாழ்வாரை Namami,நமாமி - சேவிக்கிறேன் |
| 0 | திருப்பல்லாண்டு - தனியன் || (இதில் ஸ்ரீ வில்லி புத்தூர் பட்டர்பிரானான பெரியாழ்வார் அவதரண ஸ்தலத்தை அனுசந்திப்பார்- திருவடிகளைத் தொழுகையால் உண்டான ப்ரீதியையும்- அவர் செயலைச் சொல்லுகையால் உண்டான விரோதி நிவர்த்தியாதிகளில் த்ருப்தியையும் மனசோடே சொல்லி உலாவுகிறதாய் இருக்கிறது) 7 | மின்னார் தட மதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒரு கால் சொன்னார் கழல் கமலம் சூடினோம் -முன்னாள் கிழி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும் வழி யறுத்தோம் நெஞ்சமே வந்து | Min,மின் - மின்னுதல் (மணிகளால் ஒளி விடுதல்) Ar,ஆர் - நிறைந்த அதிகமான Thadam,தடம் - அகலப்பரப்பும் உயர்ந்து ஓங்குகையும் உள்ள Mathil,மதிள் - திரு மதிளாலே Soozh,சூழ் - வளைக்கப்பட்ட Villi Puthoor endru,வில்லி புத்தூர் என்று - ஸ்ரீ வில்லி புத்தூர் என்று Oru kaal sonnaar,ஒரு கால் சொன்னார் - ஒரு தரம் உச்சரிதவருடைய Kazhal Kamalam,கழல் கமலம் - திருவடித் தாமரைகளை Soodinom,சூடினோம் - விசேஷ புஷ்பமாக முடித்தோம் Munnal,முன்னாள் - புருஷார்த்தம் வெளியாக காலத்தில் Kizhi,கிழி - பொருள் முடிப்பை Aruthaan endru,அறுத்தான் என்று - அறுத்து வெளி இட்டவர் என்று Uraththom,உரைத்தோம் - சொல்லப் பெற்றோம் ஆகையால் Keezhmai,கீழ்மை - நரகத்தில் Ini,இனி - இனிமேல் Seerum,சேரும் - முன் போல் செல்லுகிற Vazhi,வழி - மார்க்கத்தை Aruththom,அறுத்தோம் - அறப் பண்ணினோம் Nenje,நெஞ்சே - மனசே Vandhu,வந்து - சம்ஸார ரஹீதராய் வந்து |
| 0 | திருப்பல்லாண்டு - தனியன் || (இதில் பிரபந்த வக்தவான பெரியாழ்வார் திருவடிகளில் உபாய ச்வீகாரத்தை -சொல்கிறது) 8 | பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான் என்று ஈண்டிய சங்கம் எடுத்தூத -வேண்டிய வேதங்களோதி விரைந்து கிழி யறுத்தான் பாதங்கள் யாமுடைய பற்று | Pandiyan,பாண்டியன் - ஸ்ரீ வல்லப தேவன் என்கிற பாண்டிய ராஜன் Kondada,கொண்டாட - மேன்மேல் ஏத்த Pattar Piran,பட்டர்பிரான் - ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தலைவன் Vandhaan endru,வந்தான் என்று - எழுந்து அருளினான் என்று Eendiya,ஈண்டிய - கூடின அநேகமான Sangam eduthu,சங்கம் எடுத்து - சங்குகளைக் கொண்டு Ootha,ஊத - அநேகர் சப்திக்க Vendia,வேண்டிய - அக்காலத்துக்கு ஆவஸ்யகமாகிய Vedhangal,வேதங்கள் - வேதார்தங்களை Oodhi,ஓதி - தெரியச் சொல்லி Viraindhu,விரைந்து - தாமசியாமல் Kizhi,கிழி - வித்யா சுல்கமாகிய பொருள் முடிப்பை Yaruthaan,யறுத்தான் - அறுத்தவனுடைய Paadhangal,பாதங்கள் - திருவடிகளே Yaamudaiya,யாமுடைய - நாங்கள் ஆஸ்ரயமாக உடைய Patru,பற்று - ஆதாரம் |
| 1 | திருப்பல்லாண்டு || 1 | பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு | பல்லாண்டு, pallaandu - பல(எண்ண முடியாக) வருஷங்கள். இங்கு ஆண்டு மனுஷ்ய லோகத்தில் ஆண்டைக் குறிக்கும் பல்லாண்டு, pallaandu - தேவ வருஷத்தில் எண்ண முடியாக வருஷங்கள் பல்லாயிரத்தாண்டு, pallayiraththaandu - பிரஹ்மாவின் வருஷக் கணக்கில் எண்ண முடியாத வருஷங்கள் பலகோடி நூறாயிரம், palakodi nooraayiram - எண்ண முடியாத பிரஹ்மாக்களுடைய கணக்கில்லாத வருஷங்கள்- அதாவது: கால தத்த்வம் உள்ளவரை மல்லாண்ட, mallanda - மல்-சாணூரன்; முஷ்டிகன் முதலிய மல்லர்களை. ஆண்ட-அடக்கிக் கொன்ற திண்தோள், thinthol - திண்-திடமான ; மஹா பலம் பொருந்திய தோள் -இருத் தோள்களை உடைய மணிவண்ணா, manivanna - மாணிக்கம் போன்ற வர்ணத்தையும் ஸ்வபாவத்தையும் உடையவனே உன், un - உன்னுடைய செவ்வடி, chevvadi - செம்-அடி ; சிவந்த திருவடியின் செவ்விதிருக் காப்பு, chevvi thiruk kaappu - அழகுக்கு குறைவற்ற ரக்ஷை உண்டாக வேணும் . ) |
| 2 | திருப்பல்லாண்டு || 2 | அடியோமோடும் நின்னொடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு விடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே | அடியோமோடும், adiyoomodum - தாஸரான எங்களோடும் நின்னோடும், ninnodum - ஸ்வாமியான உன்னோடும் பிரிவின்றி, pirivinri - பிரிவில்லாமல் இருக்கும் ஸம்பந்தம் ஆயிரம் பல்லாண்டு, aayiram pallaandu - எந்நாளும் நித்யமாய்ச் செல்ல வேண்டும் வடிவாய், vativai - அழகே உருவெடுத்தவளும் ஸர்வாபரணபூஷிதையுமான வலமார்பினில் வாழ்கின்ற, valamaarpinil vaazhginra - வலத்திருமார்பில் நித்யவாஸம் பண்ணுகிற மங்கையும், mangaiyum - நங்கை; ஸ்த்ரீத்வத்தில் பரிபூர்ணமானவள்; நித்ய யௌவனத்தை உடையவள். ('உம்' என்பதினால் பூமி நீளாதேவிகளும் காப்பிடப்படுகிறார்கள்.) பல்லாண்டு, pallaandu - நித்யமாகக் கூடி இருக்கவேண்டும் ('உம்' என்பதினால் பூமி நீளாதேவிகளும் காப்பிடப்படுகிறார்கள்) வடிவார் சோதி, vativar jodhi - பகவானுடைய திவ்யசரீரத்தையும் சூழும் ஒளியையுடைய வலத்துறையும், valathuraiyum - உன் வலது திருக்கையில் நித்ய வாஸம் பண்ணுகிற சுடராழி, sudaraazhi - எதிரிகளை எரிக்கும் சக்கரத்தாழ்வானும் பல்லாண்டு, pallaandu - சாச்வதமாய்ச் சேர்ந்து இருக்கவேண்டும் படை போர் புக்கு, padai por pukku - ஆயுதமாய் போரிலேபுகுந்து முழங்கும், muzhangum - சப்திக்கும் அப்பாஞ்ச சன்னியமும், appaanja sanniyamum - அந்தபாஞ்சு சன்னியம் என்று பெயர் பெற்ற சங்கமும் பல்லாண்டே, pallaandae - அத்யமாய் இருக்கவேண்டும். இருக்கவேண்டும் |
| 3 | திருப்பல்லாண்டு || 3 | வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினிற் புகுதலொட்டோம் ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை பாழாள் ஆகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே | வாழ் ஆள் - Vaazh Aal - கைங்கர்யமாகிற போகத்துக்கு பட்டு - Pattu - பொருந்தி நின்றீர் - Nindreer - நிலைநின்றவர்களாய் உள்ளீரேல் - Ulleerel - இருப்பீர்க ளானால் வந்து - Vandhu - (விரைவாக) மண்ணும் - Mannum - (திருமுளைத் திருநாளைக்குப்) புழுதிமண் சுமக்கையையும் மணமும் - Manamum - (அந்தக்கலியாணத்திற்கு) அபிமானிகளாய் இருக்கையையும் கொண்மின் - Konmin - ஸ்வீகரியுங்கள் கூழ் - Koozh - சோற்றுக்காக ஆள் பட்டு - Aal Pattu - (பிறர்க்கு) அடிமைப்பட்டு நின்றீர்களை - Nindreergalai - (எங்கும் பரந்து) நிற்கும் உங்களை எங்கள் - Engal - (அநந்யப்ரயோஜனரான) எங்களுடைய குழுவினில் - Kuzhuvinil - கூட்டத்திலே புகுதல் ஒட்டோம் - Puguthal Ottom - சேரவிடமாட்டோம் நாங்கள், Naangal - நாங்களோவெனில் ஏழ் ஆள் காலும், Ezh Aal Kaalum - முன்னேழ் பின்னேழ் நடுவேழாகிய இருபத்தொரு தலைமுறைகளிலும் பழிப்பு இலோம், Pazhippu Ilom - (ஒருவித மான) குற்றமும் இல்லாதவர்கள் இராக்கதர், Iraakkathar - (ராவணன் முதலிய) ராக்ஷஸர்கள் வாழ், Vaazh - வாழ்ந்துவந்த இலங்கை, Ilankai - லங்கையானது பாழ் ஆள் ஆக, Paazh Aal Aaga - பாழடைந்த ஆளை உடையதாம்படி படை, Padai - யுத்தத்திலே பொருதானுக்கு, Poruthaanukku - (அன்று) சண்டை செய்தருளிய எம்பிரானுக்கு பல்லாண்டு கூறுதும், Pallaandu Koordhum - (இன்றிருந்து) திருப்பல்லாண்டு பாடுமவர்களாயிருக்கிறோம். |
| 4 | திருப்பல்லாண்டு || 4 | ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய என்று பாடு மனம் உடைப் பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே | ஏடு, Aedu - பொல்லாங்கான நிலத்தில், Nilathil - நிலமாகிய மயானத்தில் இடுவதன் முன்னம், Idhuvadhan Munnam - (உங்களைச் ) சேர்ப்பதற்கு முன் வந்து, Vandhu - (உங்கள் திரளிலிருந்து ) வந்து எங்கள் குழாம், Engal Kuzhaam - எங்கள் கோஷ்டியிலே புகுந்து, Pugundhu - ப்ரவேசித்து கூடும் மனம் உடையீர்கள், Koodum Manam Udaieergal - கூடுவோம் என்னும் நினைவுள்ளவர்களாகில் வரம்பு ஒழி வந்து, Varambu Ozi Vandhu - (ஆத்மான மாவை மட்டும் அனுபவிப்பது என்னும் ) வரம்பை விட்டு வந்து ஒல்லை, Ollai - விரைவாக கூடுமினோ, Koodumino - (எங்கள் கோஷ்டியில்) கூடுங்கள் நாடும், Naadum - நாட்டுப்புறங்களிலுள்ள ஸாமாந்யரும் நகரமும், Nagaramum - நகரத்திலுள்ள அறிவாளிகளும் நன்கு அறிய, Nangu Ariya - நன்றாக அறியும்படி நமோ நாராயணாய என்று, Namo Naaraayanaaya Endru - திருமந்திரத்தை அனுஸந்தித்து பாடும், Paadum - ( ப்ரீதிக்குப் போக்கு விட்டுப் ) பாடக்கூடிய மனம் உடை, Manam Udaie - நினைவுள்ள பத்தர் உள்ளீர், Pathar Ullireergal - பக்தியை உடையவர்களாகில் வந்து பல்லாண்டு கூறுமினே, Vandhu Pallaandu Kooremine - வந்து திருப்பல்லாண்டு பாடுங்கள் |
| 5 | திருப்பல்லாண்டு || 5 | அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் தனக்கு தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது ஆயிர நாமம் சொல்லிப் பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல் லாயிரத்தாண்டு என்மினே | அண்டக் குலத்துக்கு, Andak Kulathukku - அண்டங்களின் ஸமூஹத்துக்கு அதிபதி ஆகி, Adhipathi Aagi - நியமிப்பவனாகி அசுரர், Asurar - அஸுரர்களும் இராக்கதரை, Iraakkatharai - ராக்ஷஸர்களுமாகிற இண்டக் குலத்தை, Indak Kulathai - நெருக்கின கூட்டத்தை எடுத்து, Eduthu - திரட்டி களைந்த, Kalaindha - ஒழித்த இருடீகேசன் தனக்கு, Irudeekesan Thaankku - இந்திரியங்களுக்கு அதிபதியான எம்பெருமானுக்கு தொண்டக் குலத்தில் உள்ளீர், Thondak Kulathil - அடிமை செய்பவர்கள் குலத்திலே உள்ளீர், Ullireer - உள்ளவர்களான வந்து, Vandhu - எங்கள் கோஷ்டிக்கு வந்து அடி, Adi - அச்சுதனுடைய திருவடிகளை தொழுது, Thozhudhu - ஸேவித்து ஆயிர நாமம் , Ayira Naamam - அவனுடைய ஆயிரம் பெயர்களையும் சொல்லி, solli - வாயாரச்சொல்லி பண்டைக் குலத்தை, Pandai Kulathai - புருஷோத்தமனிடம் சென்று மற்றொரு பலனைப் பெற்று அகலுபவர்களாயிருந்த பழைய ஜன்மத்தை தவிர்ந்து, Thavirndhu - நீக்கி பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே, Pallaandu Pallaayiraththaandu Enmine - பலகால் மங்களாசாஸனம் செய்யுங்கள் |
| 6 | திருப்பல்லாண்டு || 6 | எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு வோணத் திருவிழவில் அந்தியம் போதில் அரியுரு ஆகி அரியை அழித்தவனைப் பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு என்று பாடுதுமே | எந்தை, Endhai - நானும் என் தகப்பனும் இருவர் தந்தை தந்தை தந்தை, Thandhai Thandhai Thandhai - என்று ஒரு மூவர் தம் மூத்தப்பன், Tham Moothappan - அவனுக்குத் தந்தையும் பாட்டனுமாகிய ஏழ் படி கால் தொடங்கி, Ezh Padi Kaal Thodangi - ஏழு தலைமுறைகள் தொடங்கி வந்து, Vandhu - மங்களாசாஸநம் பண்ணத்தக்க ஸமயங்கங்களிலே வந்து வழி வழி, Vazhi Vazhi - முறை முறையாக ஆட்செய்கின்றோம்,Aatcheikinrom - அடிமை செய்கிறோம் திருவோணத் திருவிழவில், Thiruvonath Thiruvizhavil - திருவோணமென்கிற திருநாளிலே அந்தியம் போதில், Andhiyam Pothil - (அஸுரருடைய பலம் வளரும்) அந்திவேளையிலே அரியுருவாகி, Ariyuruvagi - நரஸிம் ஹரூபத்தை உடையவனாய் அரியை , Ariyai - (தன் அடியவனான ப்ரஹ்லாதனுக்கு) சத்துருவான இரணியனை அழித்தவனை, Azhithavannai - உருவழித்தவனுக்கு பந்தனை தீர, Pandhanai Theera - (அவனை ஸம் ஹரித்ததினால் உண்டான) ஆயாஸம் தீரும்படியாக பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதும், Pallaandu Pallaayiraththaandendru Paaduthum - காலதத்வமுள்ள வரையில் மங்களாசாஸநம் செய்வோம் |
| 7 | திருப்பல்லாண்டு || 7 | தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம் மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழி குருதி பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே | தீயில், Theeyil - அக்னி/ஸூரியன் முதலிய பொருள்களைக் காட்டிலும் பொலிகின்ற, Polikindra - மிகவும் விளங்குகிற செம்சுடர், Semsudar - சிவந்த ஒளியை உடையவனாய் ஆழி, Aazhi - வட்டமாக திகழ், Thigazh - பிரகாசிக்கிற திருச் சக்கரத்தின் கோயில், Thiru Chakkarathin Koyil - ஸ்ரீஸுதர்சநாழ்வானுடைய இருப்பிடத் தின் பொறியாலே, Poriyale - சிந்தத்தாலே ஒற்றுண்டு நின்று, Ottrundu Nindru - அடையாளம் செய்யப்பட்டவராய் நின்று குடிகுடி, Kudikudi - தலைமுறை தலைமுறையாக ஆட்செய்கின்றோம், Aatcheikinrom - அடிமை செய்வதற்காக வந்தோம் மாயப் பொரு படை, Maaya Poru Padai - வஞ்சனையாகப் போர் செய்யும் ஸேனையை உடைய வாணனை, Vaananai - பாணாஸுரனுடைய ஆயிரம் தோளும், Ayiram Tholum - ஆயிரம் தோள்களிலிருந்தும் பொழி குருதி பாய, Pozhi Kuruthi Paaya - பொழியாநின்றுள்ள ரத்த வெள்ளம் பாயும்படியாக சுழற்றிய, Suzhatriya - சுழற்றப்பெற்ற ஆழி, Aazhi - திருவாழி யாழ்வானை வல்லானுக்கு, Vallaanukku - ஏந்தி நிற்க வல்லவனுக்கு பல்லாண்டு கூறுதுமே, Pallaandu Koordhume - திருப்பல்லாண்டு பாடுகிறோம் |
| 8 | திருப்பல்லாண்டு || 8 | நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும் கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே | நெய் இடை, Nei Idai - நெய்யின் நடுவிலிருக்கும் நல்லது ஓர் சோறும், Nalladhu Or Sorum - பாவசுத்தியுடன் இடப்பட்டதாய்(ஒப்பற்ற சுவையை உடையதான ப்ரஸாதத்தையும்) நியதமும், Niyadhamum - எப்போதும் அத்தாணிச் சேவகமும், Athaanich Sevakamum - பிரிவில்லாத ஸேவையையும் கை, Kai - (எம்பெருமான் தன்) திருக்கையாலே இட்ட அடைக்காயும், Adaikkaayum - வெற்றிலைப் பாக்கையும் கழுத்துக்குப் பூணொடு, Kazhuthukkup Poonodu - கழுத்துக்கு ஆபரணமான குண்டலத்தையும் காதுக்குக் குண்டலமும், Kaadhukkuk Kundalamum - காதுக்கு ஆபரணமான குண்டலத்தையும் மெய்யிட, Meyyida - உடம்பிலே பூசத்தக்க நல்லது ஓர் சாந்தமும், Nalladhu Or Saanthamum - பரிமளம் நிறைந்த ஒப்பற்ற சந்தனமும் தந்து, Thandhu - கொடுத்து என்னை, Ennai - (மிகவும் நிஹீனனான) என்னை வெள் உயிர் ஆக்கவல்ல, Vel Uyir Aakkavalla - சுத்த ஸ்வபாவனாக ஆக்கவல்ல பை உடை, Pai Udai - படங்களை உடைய நாகம், Naagam - ஸர்ப்பத்துக்கு பகை, Pagai - விரோதியான கருடனை கொடியானுக்கு, Kodiyaanukku - கொடியாக உடையவனுக்கு பல்லாண்டு கூறுவன், Pallaandu Kooruvan - மங்களாசாஸனம் பண்ணக்கடவேன் |
| 9 | திருப்பல்லாண்டு || 9 | உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்து கலத்தது உண்டு தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம் விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு வோணத் திருவிழவில் படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே | உடுத்து, Uduthu - திருவரையில் உடுத்து களைந்த, Kalaindha - கழித்த நின், Nin - (ஸ்வாமியான) உன்னுடைய பீதக ஆடை, Peethaka Aadai - திருப்பீதாம் பரத்தை உடுத்து, Uduthu - உடுத்தும் கலத்தது, Kalathadhu - (நீ அமுது செய்த) கலத்தில் மிகுந் திருப்பதை உண்டு, Undu - உண்டும் சூடிக்களைந்தன, Soodikkalaindana - (உன்னால்) சூட்டிக்கொள்ளப்பட்டு களையப்பட்டதும் தொடுத்த, Thodutha - (உன்னுடைய அடியாரான எங்களால் ) தொடுக்கப்பட்டதுமான துழாய் மலர், Thuzhaai Malar - திருத்துழாய் மலர்களை சூடும், Soodum - சூட்டிக்கொள்ளும் இத்தொண்டர்களோம், Iththondarkalom - இப்படிப்பட்ட அடியார்களாயிருக்கிறோம் நாங்கள் விடுத்த, Vidutha - ஏவின திசைக் கருமம், Thisai Karumam - திக்கிலுள்ள காரியங்களை திருத்தி, Thiruththi - நன்றாகச்செய்து திருவோணத் திருவிழவில், Thiruvonath Thiruvizhavil - திருவோண மென்னும் திருநாளிலே படுத்த, Padutha - படுக்கப்பட்டு பை, Pai - (அதனாலே ) பணைத்த படங்களையுடைய நாக அணை, Naaga Anai - திருவனந்தாழ் வானாகிற படுக்கையிலே பள்ளி கொண்டானுக்கு, Palli Kondaanukku - திருக்கண் வளர்ந்தருளுகிற உனக்கு பல்லாண்டு கூறுதும், Pallaandu Koorudhum - திருப்பல்லாண்டு பாடுவோம் |
| 10 | திருப்பல்லாண்டு || 10 | எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடி யோம் என்று எழுத்துப்பட்ட அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண் செந்நாள் தோற்றித் திரு மதுரையிற் சிலை குனித்து ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே | எம்பெருமான், Emperumaan - எங்களுக்கு ஸ்வாமியானவனே ! உன் தனக்கு, Un Thanakku - (ஸர்வசேஷியான) உனக்கு அடியோமென்று, Adiyomendru - அடிமைப்பட்டவர்கள் நாங்கள் என்று எழுத்துப்பட்ட, Ezuthuppatta - அடிமை ஓலை எழுதிக்கொடுத்த எந்நாள், Ennnaal - நாள் எதுவோ அந்தாளே, Andhaale - அந்த நாளே அடியோங்கள், Adiyongal - சேஷபூதர்களான எங்களுடைய அடி, Adi - அடிமைப்பட்ட குடில், Kudil - தாய் வீட்டிலுள்ள புத்ரபௌத்ராதிகளெல்லாம் வீடு பெற்று, Veetu Petru - கைவல்யமோக்ஷத்திலிருந்து விடுதலை பெற்று உய்ந்தது, Uyindhadhu - உஜ்ஜீவித்தது செம் நாள், Sem Naal - அழகியதான திருநாளிலே தோற்றி, Thorri - திருவவதாரம் செய்து திரு மதுரையுள், Thiru Madhuraiyul - அழகிய வட மதுரையில் சிலை குனித்து, Silai Kunithu - (கம்ஸனுடைய ஆயுதசாலையில்) வில்லை முறித்து ஐந்தலைய, Aindhalaiya - ஐந்து தலைகளை உடையதாய் பை, Pai - பாந்த படங்களையுமுடையதான நாகம், Naagam - காளியனென்னும் நாகத்தின் தலை, Talai - தலையின் மேல் பாய்ந்தவனே, Paaindhavane - ஏறிக் குதித்தருளிள ஸர்வேச்வரனே ! உன்னை, Unnai - உனக்கு பல்லாண்டு கூறுதும், Pallandu Koorudhum - மங்களாசாஸனம் பண்ணக்கடவோம் |
| 11 | திருப்பல்லாண்டு || 11 | அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமானதுங்கன் செல்வனைப் போல திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன் நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவி பல் வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே | அல்வழக்கு, Alvazhakku - தவறான வழக்குகளில் ஒன்றும் இல்லா, Ondrum Illa - சிறிதும் இல்லாதவராய் அணி, Ani - (ஸம்ஸாரத்துக்கு) ஆபரணமான கோட்டியர், Kottiyar - திருக்கோட்டியூரிலுள்ளவர்களுக்கு கோன், Kon - தலைவராய் அபிமான துங்கன், Abimaana Thungan - நான் எம்பெருமானுக்கு அடியேன் என்னும் அபிமானத்தில் உயர்ந்தவராயுள்ள செல்வனைப்போல், Selvanai Pol - செல்வநம்பியைப்போல திருமாலே, Thirumale - லஷ்மீநாதனே ! நானும், Naanum - அடியேனும் உனக்கு, Unakku - ஸ்வாமியான உனக்கு பழ அடியேன், Pazha Adiyen - பழமையான அடிமையாயிருக்கிறேன் நல் வகையால், Nal Vagaiyaal - அழகிய வகையில் நமோ நாராயணா என்று, Namo Narayana Endru - திருமந்திரத்தை அனுஸந்தித்து நாமம் பல, Naamam Pala - உன்னுடைய பல திருநாமங்களையும் பரவி, Paravi - க்ரமமில்லாமல் சொல்லி பல்வகையாலும் பவித்திரனே, Palvakaiyaalum Pavithirane - (ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி முதலிய) எல்லாவற்றாலும் பாபத்தைப் போக்குபவனே ! உன்னைப் பல்லாண்டு கூறுவன், Unnaip Pallandu Kooruvan - உனக்கு மங்களாசாஸனம் செய்வேன் |
| 12 | திருப்பல்லாண்டு || 12 | பல்லாண்டு என்று பவித்திரனைப் பர மேட்டியைச் சார்ங்கம் என்னும் வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல் நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணாய என்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே | பல்லாண்டு என்று, Pallandu Endru - நித்யமாய் மங்கள முண்டாகவேண்டும் என்று பவித்திரனை, Pavithiranai - (இயற்கையாகவே) பரிசுத்தனாய் பரமேட்டியை, Paramettiyai - மேலான ஸ்தானமான வைகுண்டத்தில் எழுந்தருளியிருப்பவனாய் சார்ங்கம் என்னும், Saarngam Ennum - சார்ங்கமென்று திருநாமத்தை உடைய வில், Vil - வில்லை ஆண்டான் தன்னை, Aandaan Thannai - ஆளும் எம்பெருமானைக் குறித்து வில்லிபுத்தூர், Villiputhoor - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த விட்டுசித்தன், Vittu Chithan - விஷ்ணுசித்தன் என்ற திருநாமத்தையுடைய பெரியாழ்வார் விரும்பிய, Virumbiya - விருப்பத்துடன் அருளிச்செய்த சொல், Sol - ஸ்ரீஸூக்தியை நல் ஆண்டு என்று, Nal Aandu Endru - (பல்லாண்டு பாடத்தக்க) நல்ல காலம் (நேர்படுவதே!) என்று நவின்று உரைப்பார், Navinru Uraippar - இடைவிடாமல் சொல்லுமவர்கள் நமோ நாராயணாய், Namo Narayanaaya - திருமந்திரத்தை அனுஸந்தித்து பல்லாண்டும், Pallandum - கணக்கற்ற காலங்கள் பரமாத்மனை, Paramaathmanai - பரமாத்மா நாராயணனை சூழ்ந்து இருந்து, Soozhnthu Irundhu - சுற்றிலும் இருந்து ஏத்துவர் பல்லாண்டே, Ethuvar Pallande - பல்லாண்டு பாடுவார்கள் |