| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 10 | திருப்பல்லாண்டு || ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –அவதாரிகை --கீழில் பாட்டில் புகுந்த அநந்ய பிரயோஜனர் தேக யாத்ரையிலும் தங்கள் பாரதந்த்ர்யமே ஸ்வரூபமாய் இருக்கிற ஏற்றத்தை சொல் லிக் கொண்டு புகுந்தார்கள் – இதில் -பிரயோஜநாந்த பரர் புகுருகிரார்கள் ஆகையாலே -தங்கள் பக்கல் அங்கன் இருப்பதோர் ஏற்றம் காண விரகு இல்லாமையாலே -பகவத் பிரபாவத்தால் தங்களுக்கு பிறந்த ஏற்றத்தை சொல்லிக் கொண்டு வந்து புகுருகிரார்கள் – ஐஸ்வர்யார்த்தியும் சங்கதனாகிற போது -சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல -என்று பகவத்ப்ரபாவத்தை சொல்லிக் கொண்டு வந்து இ றே புகுந்தது – அவன் தான் நான் அபேஷித்த சூத்திர புருஷார்த்தத்தை தந்து வைத்து -என்னை சுத்த ஸ்வபாவன் ஆக்கினான் -என்று ஆச்சர்யப் பட்டான் – கைவல்யார்திகள் தங்கள் ஷூ த்ர புருஷார்த்த சம்பந்தம் யாவதாத்மபாவி விநாசகரம் ஆகையாலே ஆஸ்ரயண வேளையில் மீட்ட ஆச்சர்யத்தைக் கொண்டாடுகிறார்கள் – 10 | எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடி யோம் என்று எழுத்துப்பட்ட அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண் செந்நாள் தோற்றித் திரு மதுரையிற் சிலை குனித்து ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே | எம்பெருமான், Emperumaan - எங்களுக்கு ஸ்வாமியானவனே ! உன் தனக்கு, Un Thanakku - (ஸர்வசேஷியான) உனக்கு அடியோமென்று, Adiyomendru - அடிமைப்பட்டவர்கள் நாங்கள் என்று எழுத்துப்பட்ட, Ezuthuppatta - அடிமை ஓலை எழுதிக்கொடுத்த எந்நாள், Ennnaal - நாள் எதுவோ அந்தாளே, Andhaale - அந்த நாளே அடியோங்கள், Adiyongal - சேஷபூதர்களான எங்களுடைய அடி, Adi - அடிமைப்பட்ட குடில், Kudil - தாய் வீட்டிலுள்ள புத்ரபௌத்ராதிகளெல்லாம் வீடு பெற்று, Veetu Petru - கைவல்யமோக்ஷத்திலிருந்து விடுதலை பெற்று உய்ந்தது, Uyindhadhu - உஜ்ஜீவித்தது செம் நாள், Sem Naal - அழகியதான திருநாளிலே தோற்றி, Thorri - திருவவதாரம் செய்து திரு மதுரையுள், Thiru Madhuraiyul - அழகிய வட மதுரையில் சிலை குனித்து, Silai Kunithu - (கம்ஸனுடைய ஆயுதசாலையில்) வில்லை முறித்து ஐந்தலைய, Aindhalaiya - ஐந்து தலைகளை உடையதாய் பை, Pai - பாந்த படங்களையுமுடையதான நாகம், Naagam - காளியனென்னும் நாகத்தின் தலை, Talai - தலையின் மேல் பாய்ந்தவனே, Paaindhavane - ஏறிக் குதித்தருளிள ஸர்வேச்வரனே ! உன்னை, Unnai - உனக்கு பல்லாண்டு கூறுதும், Pallandu Koorudhum - மங்களாசாஸனம் பண்ணக்கடவோம் |