| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 10 | திருப்பல்லாண்டு || 10 | எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடி யோம் என்று எழுத்துப்பட்ட அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண் செந்நாள் தோற்றித் திரு மதுரையிற் சிலை குனித்து ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே | எம்பெருமான், Emperumaan - எங்களுக்கு ஸ்வாமியானவனே ! உன் தனக்கு, Un Thanakku - (ஸர்வசேஷியான) உனக்கு அடியோமென்று, Adiyomendru - அடிமைப்பட்டவர்கள் நாங்கள் என்று எழுத்துப்பட்ட, Ezuthuppatta - அடிமை ஓலை எழுதிக்கொடுத்த எந்நாள், Ennnaal - நாள் எதுவோ அந்தாளே, Andhaale - அந்த நாளே அடியோங்கள், Adiyongal - சேஷபூதர்களான எங்களுடைய அடி, Adi - அடிமைப்பட்ட குடில், Kudil - தாய் வீட்டிலுள்ள புத்ரபௌத்ராதிகளெல்லாம் வீடு பெற்று, Veetu Petru - கைவல்யமோக்ஷத்திலிருந்து விடுதலை பெற்று உய்ந்தது, Uyindhadhu - உஜ்ஜீவித்தது செம் நாள், Sem Naal - அழகியதான திருநாளிலே தோற்றி, Thorri - திருவவதாரம் செய்து திரு மதுரையுள், Thiru Madhuraiyul - அழகிய வட மதுரையில் சிலை குனித்து, Silai Kunithu - (கம்ஸனுடைய ஆயுதசாலையில்) வில்லை முறித்து ஐந்தலைய, Aindhalaiya - ஐந்து தலைகளை உடையதாய் பை, Pai - பாந்த படங்களையுமுடையதான நாகம், Naagam - காளியனென்னும் நாகத்தின் தலை, Talai - தலையின் மேல் பாய்ந்தவனே, Paaindhavane - ஏறிக் குதித்தருளிள ஸர்வேச்வரனே ! உன்னை, Unnai - உனக்கு பல்லாண்டு கூறுதும், Pallandu Koorudhum - மங்களாசாஸனம் பண்ணக்கடவோம் |