திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1000 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1000பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (போக்கினேன் பொழுதினை வாளா ” என்று வீண்போது போக்கினதாகக் கீழ்ப்பாட்டிலருளிச் செய்தார் ;) 3
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து கரி குழல் மடந்தையர் திறத்து காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும் வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை யலமரக் கடைந்த நாதனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-3
பதவுரை Show / Hide
வேலை வெண்திரை அலமர, Velaivendhirai Alamara - கடலிலேயுள்ள வெளுத்த அலைகள் கலங்கும்படி
கடைந்த, Kadaindha - (தேவர்களுக்காகக்) கடைந்தருளின
சூதினை பெருக்கி, Soodhinai Perukki - அதிகமாகச் சூதாடியும்
களவினை துணிந்து, Kalavinai Thuninthu - களவு செய்வதில் துணிந்தும்
சுரி குழல் மடந்தையர் திறத்து காதலேமிகுத்து, Suri Kuzhal Madanthaiyar Thirathu Kaadhalemiguthu - சுருண்ட கூந்தலையுடைய ஸ்த்ரீகள் விஷயத்திலே மிக்க ஆசைகொண்டு
கண்ட ஆ திரிந்த, Kanda Aa Thirindha - கண்டபடியெல்லாம் தட்டித்தரிந்த
தொண்டனேன், Thondaneyn - அடியேன்
நமன் தமர்செய்யும் வேதனைக்கு, Naman Thamarcheyyum Vedhanaiyikku - யமபடர்கள் செய்யப்போகிற ஹிம்ஸைகளை நினைத்து
ஒடுங்கி நடுங்கினேன், Odungi Nadunginen - உடல் குன்றி நடுங்கினவனாய்
வந்து உன் திருஅடி அடைந்தேன், Vandhu Un Thirudi Adaindhen - இன்று வந்து உன் திருவடிகளைச் சேர்ந்துவிட்டேன்.