திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: பெரிய திருமொழி (1089 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
தனியன் 23பெரிய திருமொழி - தனியன் || கலிகன்றி என்று திருநாமம் கொண்டவர், கவிகளில் ஸூர்யன் போல் ப்ரகாசிப்பவர், அடியேன் அஞ்ஞாந இருளைத் தம் ஒளிமிக்க சொற்களால் முற்றிலும் அகற்றிய ஞானக் கதிரவனான திருமங்கை ஆழ்வாரை த்யானிக்கிறேன்
திருக்கோஷ்டியூர் நம்பி
கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோகதிவாகரம் யஸ்ய கோபி: ப்ரகாஸாபி ஆவித்யம் நிஹதம் தம:
பதவுரை Show / Hide
யஸ்ய, yasya - யாரொருவருடைய
ப்ரகாஸாபி, prakasapi - ஒளி படைத்ததான
கோபி, gopi - கிரணம் (சூர்யகிரணம்), இவ்விடத்தில் திருமங்கை ஆழ்வாரின் ஒளி படைத்த பாசுரங்கள்
ஆவித்யம், avidyam - அக்ஞானத்தாலே ஏற்பட்டதான, அக்ஞான ப்ரயுக்தம் (அறிவின்மையாகிற)
தம, tama - அந்தகாரம் (இருளானது), உள் இருட்டானது
நிஹதம், nihatham - போக்கபட்டதோ அப்படிபட்டவராய்
கலித்வம்ஸம், kalithvamsam - கலி தோஷத்தை போக்கக்கூடியவரான
லோக திவாகரம், loka divakaram - நாட்டாருக்கு சூரியனான
கவிம், kavim - பரகால கவியை
கலயாமி, kalayami - த்யானம் பண்ணுகிறேன் (நன்றியோடு நினைக்கிறேன்)
தனியன் 24பெரிய திருமொழி - தனியன் || திருமங்கையாழ்வாரையும் அவரது திவ்வியாயுதத்தையும் வாழ்த்துகிறது இது. (எப்பெருமானது வைபவங்களைப் பொறாத பாவிகளைக் கண்டித்து ஒழிப்பவரும், கலி தோஷம் நீங்கும்படி உலகை வாழ்விப்பவரும், திருக்குறையலூரைத் திருவவதாரஸ்தலமாக வுடையவரும், மங்கைநகர்க்கு அரசருமான திருமங்கையாழ்வார் பல்லாண்டு பல்லாண்டாக வாழவேணும். அவரது திருக்கையிலே திகழ்வதும் எம்பெருமானை வெருட்டித் திருமந்திரோபதேசம் செய்வித்துக் கொண்டதுமான வேலும் வாழி என்றதாயிற்று)
எம்பெருமானார்
வாழிபரகாலன் வாழி கலிகன்றி வாழி குறையலூர் வாழ்வேந்தன் -வாழியரோ மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன் தூயோன் சுடர்மான வேல்
பதவுரை Show / Hide
பரகாலன், parakalan - சத்ருக்களுக்கு ம்ருத்யு போன்று இருப்பவர்
வாழி, vazhi - வாழ்ந்தருள வேண்டும்
கலிகன்றி, kalikanri - கலியினால் வரும் தோஷத்தை போக்குபவரான
வாழி, vazhi - திருமங்கையாழ்வார் வாழி
குறையலூர், kuraiyalur - திருக்குறையலூரிலே
வாழ், vazh - நித்யவாஸம் பண்ணும் (எம்போதும் இருக்கக்கூடிய)
வேந்தன், venthan - அரசன், வேந்தன், ராஜாவானவர்
வாழி, vazhi - வாழி
மாயோனை, maayonai - வயலாளி மணவாளன் கண்ணன் (ஆச்சரியமான குணத்தை உடைய ஸர்வேஸ்வரன் அவனிடத்தே)
வாள்வலியால், valvaliyal - தன் வாளின் வலிமையைக் காட்டி
மந்திரம், mandiram - பெரிய திருமந்திரத்தை
கொள், kol - உபதேசிக்கபெற்றவராய்
மங்கையர், mangaiyar - திருமங்கையில் உள்ளாருக்கு
கோன், kon - நிர்வாககராய்
தூயேன், thuyen - உள்ளும் புறமும் ஒக்க சுத்தியையுடையவரான ஆழ்வாருடைய
சுடர், sudar - ஒளியையுடைத்தாய்
மானம், maanam - மிகப்பெரியதான
வேல், vel - வேலானது
வாழி, vazhi - வாழ்ந்திடுக
தனியன் 25பெரிய திருமொழி - தனியன் || திருமங்கையாழ்வாருடைய ஸ்ரீஸூக்திகளின் பெருமை சொல்லுகிறது இது (இவருடைய ஸ்ரீஸூக்திகளை ஓதி உணர்ந்தால் மனனக மலங்களெல்லாம் அற்று ஹ்ருதயம் நிர்மலமாகும்; இந்த ஸ்ரீஸூக்திகளை ஓதுமவர்களுக்கு ”அண்டமாள்வதாணை” என்றபடி பரமபதம் ஸித்தமாதலால் ஸம்ஸாரத்தை அடியறுப்பவையாம் இவை; எழுத்து, சொல், பொருள், யாப்பு, அலங்காரம் என்று தமிழ் நூல்களிற் சொல்லப்பட்டுள்ள இலக்கணங்களுக்கு இலக்கியமாம் இவை; ஸகலவேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள அர்த்தங்கள் இவ்வாழ்வாருடைய ஸ்ரீஸூக்திகளில் சுருங்கக் காணலாயிருக்கையாலே வேதஸாரமுமாம் இவை; இந்த ஸ்ரீஸூக்திகள் அவதரித்தபின்பு பாஹ்யகுத்ருஷ்டி மதங்களெல்லாம் மாண்டுபோயினவாதலால் பரசமயப் பஞ்சுக்கு அனலின் பொறியாம் இவை)
கூரத்தாழ்வான்
நெஞ்சுக்கிருள்கடி தீபம் அடங்காநெடும்பிறவி நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழநன்னூல் துறைகள் அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப் பஞ்சுக்கனலின்பொறி பரகாலன் பனுவல்களே!
பதவுரை Show / Hide
பரகாலன், parakalan - ப்ரதிபக்ஷத்துக்கு (வேதத்திற்கு புறம்பானது) காலானான ஆழ்வார் அருளிச்செய்த
பனுவல்கள், panuvalgal - பாட்டுக்களானவை
நெஞ்சுக்கு, nenjukku - மனதில் இருக்கிற
இருள், irul - இருட்டை, அக்ஞானத்தை
கடி, kadi - போக்கவல்ல
தீபம், deepam - விளக்காயும்
அடங்கா, adanga - எதுக்கும் அடங்காத
நெடும், nedum - நெடுகிபோகிற
பிறவி, piravi - பிறப்பாகிற
நஞ்சுக்கு, nanjukku - விஷத்துக்கு
நல்ல, nalla - உயர்ந்த
அமுதம், amudham - ச்லாக்யமான அம்ருதமாயும்
நல், nal - விலக்ஷனமான
தமிழ்நூல்துறைகள், tamizhlnoolthuraigal - திராவிட சாஸ்திர மார்க்கமான
அஞ்சுக்கு, anjukku - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி (பஞ்சுலக்ஷனம்), 5 அடையாளங்களுக்கும்
இலக்கியம், ilakkiyam - லக்ஷ்யமாயும்
ஆரணம், aaranam - வேதத்தின்
சாரம், saaram - சாரமாயும்
பரசமய, parasamaya - இதர மதங்களான
பஞ்சுக்கு, panjukku - பருத்திக்கு
அனலின்பொறி, analinpori - நெருப்புப் பொறியாக இருக்கும் பரகாலனுடைய பாசுரங்கள்
தனியன் 26பெரிய திருமொழி - தனியன் || எம்பார் என்னுமாசிரியர் எம்பெருமானார் திருவடிகளிலே வந்து வணங்கிப் பிரார்த்திக்கின்றார் ( ஸ்வாமிந்! தேவரீரையொழிய வேறுயாரும் அடியோங்களுக்குப் புகலாவாரில்லை ; தத்துவ நூல்களில் எங்களுக்கு உண்டான எவ்வளவோ ஸம்சயங்களை இதுவரையில் தேவரீர் போக்கியருளி மஹோபகாரம் செய்திருக்கிறது. அதெல்லாம் பெரிதல்ல; திருமங்கையாழ்வாருடைய திவ்யஸூக்திகளை எவ்வளவு ச்ரமப்பட்டுக் கண்டபாடஞ் செய்தாலும் மறப்பின் மிகுதியாலே தரிக்கமுடியாமல் வருந்துகிற எங்களுக்கு எப்படியாவது அந்த ஸ்ரீஸூக்திகளையெல்லாம் தரிக்கும்படியான மனவுறுதியை அருள் செய்யவேணும்)
எம்பார்
எங்கள் கதியே இராமாநுச முனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா ! – பொங்குபுகழ் மங்கையர்கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும் தங்கு மனம் நீ எனக்குத் தா!
பதவுரை Show / Hide
எங்கள் கதியே, engal kathiye - எங்களுக்கு அடைக்கலமாய் இருக்குமவரே
இராமாநுச , Ramanuja - இராமாநுஜன் என்னும் திருநாமத்தையுடையவராய்
முனியே, muniye - ஆத்மாக்களின் ரக்ஷனத்தை மனனம் பண்ணுபவரே
சங்கை, sangai - வேத சாஸ்திரத்தில் இருக்கும் ஐயங்களை எல்லாம்
கெடுத்து, keduthu - போக்கி
ஆண்டு, aandu - எல்லாரையும் அடிமை கொண்டவரான
தவராசா, thavarasa - எதிராஜரே
பொங்கு, pongu - மிகுந்த
புகழ், pugazh - பெருமையுடைய
மங்கையர்கோன், mangaiyarkon - திருமங்கையில் உள்ளாருக்கு ராஜாவான திருமங்கையாழ்வார்
ஈந்த, eendha - அருளிச்செய்த
மறை, marai - வேத ரூபமான
ஆயிரம் அனைத்தும், ayiram anaithum - ஆயிரம் பாட்டாக இருக்கும் பெரிய திருமொழி பிரபந்தமும், அனைத்தும்
தங்கு மனம், thangu manam - தரித்திருக்கும்படியான மனதை
நீ எனக்கு தா, nee enakku tha - அடியேனுக்கு, தேவரீர் தந்தருள வேண்டும்
தனியன் 27பெரிய திருமொழி - தனியன் || ஸர்வேச்வரனைத் தனிவழியிலே வழிபறிக்க வேணுமென்று முயற்சி கொண்டு திருவரசடியிலே மறைந்திருந்த திருமங்கைமன்னனே!, வேற்படை யேந்திய திருக்கையாலே அடியேனுடைய பாவங்களைக் கண்டித்தொழிக்கவேணு மென்றதாயிற்று.
சோமாசியாண்டான்
மாலைத் தனியே வழி பறிக்க வேணுமென்று கோலிப்பத விருந்த கொற்றவனே! வேலை அணைத்து அருளும் கையால் அடியேன் வினையை துணித் தருள வேணும் துணிந்து
பதவுரை Show / Hide
Maalai, மாலை - சர்வேஸ்வரனான வயலாளி மணவாளனை
Thaniye vazhi, தனியே வழி - தனி வழியிலே
Parikka venum, பறிக்க வேணும் - கொள்ளையடித்துவிட வேண்டும்
Enru koli, என்று கோலி - முயன்று, ஆசைப்பட்டு
Padha virunda, பத விருந்த - (அரச மரத்தடியிலே) பதுங்கி இருந்த
Kotravane, கொற்றவனே - அரசனான திருமங்கை மன்னனே
Velai, வேலை - வேல் என்னும் ஆயுதத்தை
Anaithu arulum, அணைத்து அருளும் - அணைக்கும்படியான
Kaiyaal, கையால் - திருக்கையாலே
Adiyen, அடியேன் - சேஷபூதனான என்னுடைய
Vinaiyai, வினையை - பாபங்களை
Thunindhu, துணிந்து - துணிவையுற்று
Thunith tharula venum, துணித் தருள வேணும் - வெட்டிக் களைந்தருள வேண்டும்
948பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அநாதிகாலம் விஷயப்ரவணராய் எம்பெருமானை மறந்திருந்த இவ்வாழ்வார், நிர்ஹேதுகமான பகவத்கிருபையால் திருவஷ்டாக்ஷர மஹாமந்திரத்தைப் பெற்று ஸ்வரூபமுணர்ந்து திருந்தினராதலால், அந்த மஹா மந்திரத்தின் (உள்ளீடான ஸ்ரீ நாராயண நாமத்தின்) சிறப்பை விரித்துரைத்துக்கொண்டு, தாம் நெடுங்காலமாக பகவத் விஷயத்தை மறந்து அநர்த்தப்பட்டபடியையும் இப்போது உஜ்ஜீவிக்கப் பெற்றபடியையும் பலருமறியப் பேசுகிறார்) 1
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கலவியே கருதி ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-1
பதவுரை Show / Hide
வாடினேன், Vaadinen - கீழ்க் கழிந்த காலமெல்லாம் வாடிக் கிடந்தேன்;
வாடி, Vaadi - அப்படி வாடியிருந்ததனால்
மனத்தால் வருந்தினேன், Manathal varundhinen - மனவருத்தமடைந்தேன்;
பெரு துயர் இடும்பையில், Peru thuyar idumbaiyil - அளவற்ற துக்கங்களுக்கு இருப்பிடமான ஸம்ஸாரத்திலே
பிறந்து கூடினேன், Pirandhu koodinen - பிறந்து (அந்த ஸம்ஸாரத்திலேயே) பொருந்தப் பெற்றேன்;
கூடி, Koodi - அப்படி ஸம்ஸாரியாய்க் கிடந்ததனால்
இளையவர் தரும் கலவியே கருதி, Ilaiyavar tharum kalaviye karudhi - இளமை தங்கிய பெண்கள் தரக்கூடிய சிற்றின்பத்தை ஆசைப்பட்டு
அவர் தம்மோடு ஓடினேன், Avar thammodu odinen - அந்தப்பெண்கள் போன வழியையே பற்றி ஓடினேன்;
ஓடி, Odi - இப்படி ஓடித்திரியுமிடத்து;
உய்வது ஓர் பொருளால், Uyvadhu or porulal - ஆத்மோஜ்ஜீவநத்துக்கு உறுப்பான எம்பெருமான் திருவருளாலே
உணர்வு எனும் பெரு பதம் திரிந்து, Unarvu enum peru padham thirindhu - ஞானமென்கிற ஒரு சிறந்த ஸ்தானத்தில் அடிவைத்து
நாடினேன், Naadinen - நன்மை தீமைகளை ஆராயப் புகுந்தேன்;
நாடி, Naadi - அப்படி ஆராயுமளவில்
நாராயணா என்னும் நாமம் நான் கண்டு கொண்டேன், Narayana enum naamam naan kandu konden - திருவஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தை நான் லபிக்கப்பெற்றேன்.
949பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பாட்டிலும் முன்னடிகளால் பூர்வாவஸ்தையில் அநுதாபத்தையும், பின்னடிகளால் உத்தராவஸ்தையில் ஆநந்தத்தையும் பேசுகிறார்) 2
ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர் பணை முலை துணையா பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன நாள்கள் தூவிசேர் அன்னம் துணையோடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –1-1-2
பதவுரை Show / Hide
ஆவியே என, Aaviye ena - ‘எனக்கு உயிர் போன்றவளே!‘ என்றும்
அமுதே என, Amudhe ena - ‘எனக்கு அம்ருதம் போல் இனியவளே!’ என்றும் (இப்படிப் பலவாறாகச் சொல்லி வாய் பிதற்றிக்கொண்டு)
நினைந்து உருகி, Ninaindhu urughi - சிற்றின்பங்களை நினைத்து நினைத்து மனமுருகி
அவர் அவர், Avar avar - பலபல பெண்டுகளுடைய
பணைமுலை, Panaimulai - பருத்த முலைகளையே
துணை ஆ, Thunai aa - ரக்ஷகமாகக்கொண்டு
பாவியேன், Paaviyen - பாபியான நான்
உணராது, Unaraadhu - ஸ்வரூபஜ்ஞானம் பெறாததன் பயனாக
எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன, Eththanai pagalum pazhuthu poy olindhena - ஐயோ! எத்தனை காலம் வீணாகக் கழிந்தன;
எத்தனை நாட்கள் பழுது போய் ஒழிந்தன, Eththanai naatkal pazhuthu poy olindhena - அந்தோ எத்தனை நாள்கள் பாழாய்க் கழிந்தன! (காலமெல்லாம் பாழாகப் போயிற்றே!)
தூவிசேர் அன்னம், Thoovisaar annam - இறகுகளையுடைய அன்னப்பறவைகள்
துணையொடும் புணரும், Thunaiyodum punarum - பேடையோடு புணருமிடமாய்
புனல் சூழ், Punal soozh - நீர்நிலங்கள் சூழ்ந்ததான
குடந்தையே, Kudandhaye - திருக்குடந்தையையே
தொழுது, Thozhudhu - ஸேவித்து
உய்ய, Uyya - உஜ்ஜீவிக்கும்படியாக
நாராயணா என்னும் நாமம் என்நாவினால் நான் கண்டு கொண்டேன், Narayana enum naamam ennavinal naan kandu konden - திருவஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தை எனது நாவிலே உரைத்துக் கொள்ளப் பெற்றேன்
950பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பகவத் விஷயானுபவத்தாலே மிகவும் இனிதாகச் செல்ல வேண்டிய காலமெல்லாம் பாழாய்க் கழிந்தனவே யென்கிற அநு தாபமே மீண்டும் மேலிட்டு உள்ளடங்காத துக்கந் தோன்றப் பேசுகிறார்) 3
சேமமே வேண்டித் தீ வினை பெருக்கித் தெரிவைமார் உருவமே மருவி ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்த வந்நாள்கள் காமனார் தாதை நம்முடை யடிகள் தம்மடைந்தார் மனத்திருப்பார் நாமம் நானுய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-3
பதவுரை Show / Hide
சேமமே வேண்டி, Semame vendi - நன்மையையே அபேக்ஷித்திருந்தும் (அதற்கு உறுப்பாக வினை செய்யாமல்)
தீ வினை பெருக்கி, Thi vinai perukki - துஷ்கருமங்களை அதிகமாகச் செய்து
தெரிவைமார் உருவமே மருவி, Therivaimaar uruvame maruvi - ஸ்திரீகளுடைய வடிவழகையே பேணி
கழிந்த அந்நாள்கள், Kazhintha annaalkal - கீழே கழிந்த நாள்களானவை
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய் ஒழிந்தன, Oomanar kanda kanavilum pazhudhu aay ozhindhana - ஊமை கண்ட கனவிலுங் காட்டில் வீணாகக் கழிந்து போயின
காமனார் தாதை, Kaamanar thaadhai - மன்மதனுக்குப் பிதாவும்
நம்முடை அடிகள், Nammudai adigal - நமக்கு ஸ்வாமியும்
தம் அடைந்தார் மனத்து இருப்பார், Tham adainthaar manathu iruppaar - தம்மைப் பற்றினவர்களுடைய நெஞ்சில் நீங்காதிருப்பவருமமான பெருமாளுடைய
நாமம், Naamam - திருநாமமாகிய
நாராயணா என்னும் நாமம், Narayana enum naamam - நாராயண நாமத்தை
நான் உய்ய, Naan uyya - நான் உஜ்ஜீவிக்கும்படியாக
நான் கண்டு கொண்டேன், Naan kandu konden - நான் காணப் பெற்றேன்
951பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (‘நாம் எல்லார்க்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்’ என்று ஆசைப்பட வேண்டியது போய் எல்லாரிலும் நாம் மேற்பட்டிருக்க வேண்டும்; நாமே வெற்றி பெற்று எல்லாரும் நமக்குத் தோற்றிருக்க வேண்டும்’ என்று ஆசைப்பட்டுக் கிடந்தேன்; கையிலிருந்து ஒரு காசு நழுவிப் போனாலும் ஸர்வஸ்வமும் இழந்தாற் போல் அது தவித்துக் கிடந்தேன்; மாதர்களோடு புணர்ந்து வாழ்வதற்கு மேற்பட வாழ்ச்சியேயில்லையென்று துணிந்து கிடந்தேன் ; ஒன்றிலும் நிலைத்து நிற்கமாட்டாமல் கண்டவிடங்களிலும் சபலமாய்த் திரியும் நெஞ்சை யுடையேனான நான் என் செய்வது ! எப்படி உஜ்ஜீவிப்பது !! என்று தடுமாறிக் கிடந்தவளவிலே எம்பெருமானுடை நிர்ஹேதுகக் கிருபையாலே இன்று நன்றாக உஜ்ஜீவிக்க வழி ஏற்பட்டது என்றாராயிற்று.) 4
வென்றியே வேண்டி வீழ் பொருட்கிரங்கி வேற்கணார் கலவியே கருதி நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும் பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-4
பதவுரை Show / Hide
வென்றியே வேண்டி, Vendriye vendi - வெற்றியையே விரும்பியும்
வீழ் பொருட்கு இரங்கி, Veezh porutku irangi - நச்வரமான பொருள்களைப் பற்றிக் கரைந்தும்
வேல் கணார் கலவியே கருதி, Vel kanar kalaviye karudhi - வேல் போன்ற கண்களையுடைய மாதர்களின் கலவியை ஆசைப்பட்டும் (ஆக இப்படிகளாலே)
நின்ற ஆ நில்லா நெஞ்சினை உடையேன், Nindra aa nilla nenjinai udaiyen - நின்றபடி நில்லாத [சஞ்சலமான] நெஞ்சை யுடையேனான நான்
என் செய்கேன், En seiken - என்ன பண்ணுவேன்?
அன்று, Andru - முன்னொரு காலத்து
நெடு விசும்புஅணவும் பன்றி ஆய், Nedu visumbu anavum panri aay - நெடிய ஆகாசத்தை அளாவி வளர்ந்த மஹா வராஹஸ்வரூபியாய்
பாரகம் கீண்ட, Paragam keenda - பூ மண்டலத்தை உத்தரித்த
பாழியான், Paazhiyaan - மிடுக்கையு டையனாய்
ஆழியான், Aazhiyaan - ஸ்ரீ ஸுதர்சந பாணியான ஸர்வேச்வரனுடைய
அருளே, Arule - க்ருபையினாலே
நான் நன்று உய்ய, Naan nanru uyya - நான் செவ்வையாக உஜ்ஜீவிக்கும்படி
நாராயணா என்னும் நாமம் நான் கண்டு கொண்டேன், Narayana enum naamam naan kandu konden - நாராயணா என்னும் நாமம் நான் கண்டு கொண்டேன்
952பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உலகில் திருடப்படும் பொருளின் தாரதம்மியத்திற்கு ஏற்பவும் பொருளுடையவனது யோக்யதையின் தாரதம்மியத்திற்கு ஏற்பவும் பாபத்திலும் தாரதம்மியமுண்டு; விறகு திருடினவனுடைய பாபத்திற்காட்டில் ரத்னம் திருடினவனுடைய பாபம் பெரிது; சூத்ரனுடைய பொருளைத் திருடின பாபத்திற்காட்டில் பிராமணனுடைய பொருளைத் திருடின பாபம் பெரிது. நான் திருடின பொருளும் சிறந்தது, அப்பொருளுடையவனும் ஸர்வோத்தமன் ; சிறந்தரத்னத்தினும் மேற்பட்டதான ஆத்மவஸ்துவை அபஹரித்தேன்; அந்த வஸ்துவோ ஸர்வோத்தமனான எம்பெருமானுடையது. ஆகையாலே – ‘இதற்கு மேற்பட்ட பாபமில்லை’ என்னலாம்படியான கொடிய பாபத்திற்குக் கொள்கலமான களவைச் செய்தவனாயினேன். இப்போது நானிருக்கிறபடியைப் பாருங்கள்; ஸ்ரீமந்நாராயண நாமத்தை அநுஸந்திக்க வேணுமென்று நினைக்கும்போதே எனது ஹருதயம் நீர்ப்பண்டமாக உருகுகின்றது; அத்திருநாமத்தை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கினால் குரல் தழதழத்துப் போகிறது; ஆநந்தக் கண்ணீர் உடம்பெங்கும் முத்துமாலையிட்டாற்போலே பெருகுகின்றது. இப்படியாயிருந்து கொண்டு அஹோராத்ரமும் நான் நாராயண நாமந்தன்னையே கதறுபவனாயினேன் என்றாராயிற்று.) 5
கள்வனேன் ஆனேன் படிறு செய்திருப்பேன் கண்டவா திரி தந்தேனேலும் தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கமைந்தேன் சிக்கெனத் திருவருள் பெற்றேன் உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பெலாம் கண்ண நீர் சோர நள்ளிருளளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா வென்னும் நாமம் –1-1-5
பதவுரை Show / Hide
கள்வனேன் ஆனேன், Kalvanen aanen - (கீழ்க்கழிந்த காலமெல்லாம்) ஆத்மாபஹாரக் கள்வனாகி
படிறு செய்து இருப்பேன், Padiru seydhu iruppen - பலபல தீமைகளைச் செய்பவனாகி
கண்டவா திரிதந்தேனேலும், Kandava thirithandhenelum - (இப்படி) மனம்போன படியே திரிந்துழன்றேனாயினும் (இன்று)
தெள்ளியேன் ஆனேன், Thelliyen aanen - தெளிவு பெற்றவனானேன்
திருஅருள்சிக்கன பெற்றேன், Thiru arul sikkana petren - பகவத் கிருபையைத் திண்ணிதாக லபிக்கப் பெற்றேன்
செல் கதிக்கு அமைந்தேன், Sel gathikku amaindhen - போகவேண்டிய நல்வழிக்கு ஆளானேன்
உள்எலாம் உருகி, Ul elam urugi - ஹ்ருதய மடங்கலும் நீர்ப்பண்டமாகிக்
குரல் தழுத்தொழிந்தேன், Kural thazhuthozindhen - குரல் தழுதழுக்கப்பெற்று
கண்ண நீர் உடம்பு எலாம் சோர, Kanna neer udambu elam sora - ஆநந்த பாஷ்பமானது சரீரம் நிறையப்பெருகப்பெற்று
நள் இருள் அளவும் பகல் அளவும், Nal irul alavum pagal alavum - அஹோராத்ர விபாகமின்றி ஸர்வகாலத்திலும்
நாராயணா என்னும் நாமம் நான் அழைப்பன், Narayana enum naamam naan azhaippan - நாராயணா நாமத்தைச்சொல்லி நான் கதறா நிற்பன்
953பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமந்திரத்தின் அர்த்தத்தை ஒருபடி அநு ஸந்திப்பதாயிருக்கும் இப்பாட்டு. மாதா பிதா ப்ராதா நிவாஸச் சரணம் ஸுஹ்ருத் கதிர் நாராயண என்று ஸுபாலோபநிஷத்திலே சொன்ன அர்த்தத்தை அநுஸந்திக்கிறார். எனக்குப் பல உபகாரங்கள் பண்ணினவனும், எனக்குத் தந்தையும், எனக்கு எல்லா உறவுமுறையும், விரோதிகளைப் போக்கி என்னை ஆண்டவனும், என்னுடைய ஜீவித ஸர்வஸ்வமும், ஸங்கல்பத்தாலல்லாமல் சரமாரி பொழிந்து ராக்ஷஸவர்க்கங்களைக் கிழங்கெடுத்தவனுமான ஸர்வஸ்வாமி எழுந்தருளியிருக்கிற பரமபோக்யமான தஞ்சைமாமணிக்கோயிலைத் தொழுது ‘ஸர்வவித பந் துவும் அவனே” என்கிற அர்த்தத்துக்கு வாசகமான திருநாமத்தைக் காணப் பெற்றேன் என்றாராயிற்று.) 6
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாணாள் அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த வெம் மண்ணல் வம்புலாம் சோலை மா மதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-6
பதவுரை Show / Hide
நம்பிகாள், Nambikaal - பகவத் குணாநுபவத்தால் நிறைந்திருக்கின்ற பாகவதர்களே!
எம்பிரான், Embiraan - எமக்கு உபகாரகனும்
எந்தை, Enthai - எமக்குத் தந்தையும்
என்னுடைய சுற்றம், Ennudaiya sutram - எனக்கு ஸகலவித பந்துவும்
எனக்கு அரசு, Enakku arasu - என்னை ஆண்டவனும்
என்னுடைய வாழ்நாள், Ennudaiya vaazhnaal - என்னுடைய ப்ராண பூதனும்
அரக்கர் வெருக்கொள அம்பினால், Arakkar verukkola ambinaal - ராக்ஷஸர் அஞ்சும்படியாக அம்புகளினால்
நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல், Nerukki avar uyir sekutha em annal - தகர்த்து அவர்களது உயிரைமுடித்த அஸ்மத்ஸ்வாமியுமான ஸர்வேச்ரனுடைய
வம்பு உலாம் சோலை, Vambu ulaam solai - பரிமளம் வீசுகின்ற சோலைகளையும்
மாமதிள், Maamadhil - பெரிய மதிள்களையும் உடைத்தான
தஞ்சை மாமணிக்கோயிலே வணங்கி, Thanjai maa manikkoyile vanangi - தஞ்சை மாமணிக் கோயிலையே ஸேவித்து
நான் உய்ய, Naan uyya - (உங்களைப் போலே) நானும் உஜ்ஜீவிக்கும் படியாக
நாராயணா என்னும் நாமம் கண்டு கொண்டேன், Narayana enum naamam kandu konden - நாராயணா என்னும் நாமம் கண்டு கொண்டேன்
954பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நூல்களைக் கற்றுக் கவிபாடும் வல்லமை பெற்றவர்கள் உபயோகமற்றக்ஷத்ர மநுஷ்யர்களை வீணேசிறப்பித்துக்கூறிக் கவிபாடுவதுண்டே; அன்னவர்களை நோக்கி வெறுத்து, ஐயோ! நீங்கள் வாக்குப்படைத்ததற்கு இதுவோ ப்ரயோஜனம்; க்ருபணனைக் கல்பவ்ருக்ஷமென்பதும், நிரக்ஷரகுக்ஷியான மூடனை ப்ருஹஸ்பதியென்பதும், தெருத்திண்ணையில் தங்கவும் இடந்தராமல் துரத்தித்தள்ளுமவனை ஸர்வரக்ஷகனென்பதும் ஆகவிப்படி பொய்யுரை கூறுவதேயோ நீங்கள் கற்ற கல்விக்குப் பயனாவது!; கவிபாடுகைக்குப் பாங்கான ஊரும் ஆறும் பேருமுடையனான பெருமானை நான் காட்டித் தருகிறேன், வாருங்கள்; திருக்குடந்தையாராவமுதனை வாயாரப் புகழ்ந்து உஜ்ஜீவித்துப் போங்கள்; இதுவே உங்களுக்கு நான் உபதேசிக்கும் சிறந்த அர்த்தம் - என்கிறார்.) 7
இற்பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னதோர் தன்மை என்று உணரீர் கற்பகம் புலவர் களைகண் என்று வுலகில் கண்டவா தொண்டரைப் பாடும் சொற் பொருளாளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின் நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ம்மின் நாராயணா வென்னும் நாமம் –1-1-7
பதவுரை Show / Hide
இல் பிறப்பு அறியீர், Il pirappu ariyeer - இல்வாழ்க்கை நடத்துகிறபடியையும் குடிப்பிறப்பையும் அறியாதவர்களாயும்
இவர் அவர் என்னீர், Ivar avar enneer - இப்போது ஸம்பந்நராயிருக்கும் இவர்கள் முன்பு தரித்ரராயிருந்தவர்கள் என்று அறியாதவர்களாயும்
இன்னது ஓர் தன்மை என்று உணரீர், Innadhu or thanmai endru unareer - ‘இவர்களுடைய தன்மை இப்படிப் பட்டது’ என்று அறியாதவர்களாயும்
உலகில் தொண்டரை, Ulagil thondarai - உலகில் பிறர்க்கு இழிதொழில் செய்து ஜீவிக்கும் நீசர்களை
கற்பகம் என்று, Karpagam endru - கல்ப வ்ருக்ஷம்போல் ஸர்வஸ்வதானம் செய்பவரென்றும்
புலவர் என்று, Pulavar endru - ஸர்வஜ்ஞரென்றும்
களைகண் என்று, Kalaikan endru - ரக்ஷகர் என்றும் (ஆகவிப்படி)
கண்டவா பாடும், Kandavaa paadum - மனம் போனபடி (சிறப்பித்துக்கூறிக்) கவிபாடுகின்ற
சொல்பொருள் ஆனீர், Solporul aaneer - சொல்லும் பொருளும் நன்கறிந்த மஹாகவிகளே!
சொல்லுகேன், Solluken - உங்களுக்கு ஹிதஞ்சொல்லுகிறேன்
வம்மின், Vammin - நீசரைக் குறித்துக் கவிபாடுவதை விட்டு இப்படி வாருங்கள்
புனல் சூழ் குடந்தையே தொழுமின், Punal soozh Kudanthaiye thozhumin - நீர் சூழ்ந்த திருக்குடந்தையை ஸேவியுங்கள்
நாராயணா என்னும் நாமம் பாடி நீர் உய்ம்மின், Narayana enum naamam paadi neer uymin - நாராயணா நாமத்தைப் பாடி நீங்கள் உஜ்ஜீவித்துப் போங்கள்
நல் பொருள் காண்மின், Nal porul kaanmin - உங்களுக்கு நான் உபதேசிக்கும் சிறந்த அர்த்தம் இதுவே காணுங்கள்
955பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஓர் ஆசிரியன் திருவடிகளிலே சென்று பணிந்து குனிந்து கேட்டவனல்லேனாகையாலே ஒரு சாஸ்த்ர ஞானமும் எனக்கில்லை ; நெஞ்சை ஒரு நொடிப்பொழுதாகிலும் நல்விஷயத்திலே செலுத்தின னல்லேன் ; செவி வாய் கண் மூக்கு உடலென்னுமைம்புலன்கள் விரும்புகின்ற சப்தாதி விஷயங்களிலேயே நெஞ்சைச் செலுத்திப் போந்தவனாதலால் அறிவு கேடனாய் ஹிதசிந்தை பண்ணப்பெற்றிலேன்; எனக்கொரு நன்மை ஸம்பாதியாதவளவேயன்றி உலகத்திலுள்ள பிராணிகளையெல்லாம் ஹிம்ஸிக்கும் வழியைச் சிந்தித்தும் திரிந்தேன்; எல்லாரையும் ஹிம்ஸித்து நான் வயிறு வளர்க்கும் வழியையே நோக்கினேன். இப்படி நான் இருந்தது நேற்றுவரையில் ; இன்று இந்த நிலைமைகளெல்லாம் தவிர்ந்து நல்வீடு சேர்ந்து உஜ்ஜீவிக்க வேண்டிய வழியைச் சிந்தித்து, இக்கரையில் நின்றும் அக்கரையிலே கொண்டு தள்ள வல்லதொரு திருநாமத்தைத் துணையாகப் பற்றினேன்.) 8
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்தாருயிர்க்கு எல்லாம் செற்றமே வேண்டித் திரி தருவேன் தவிர்ந்தேன் செல்கதிக்கு உய்யுமாறு எண்ணி நல் துணையாகப் பற்றினேன் அடியேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-8
பதவுரை Show / Hide
கலைகள், Kalaigal - சாஸ்த்ரங்களை
கற்றிலேன், Kattrilen - கற்றறிந்தவன் அல்லேன்
ஐம்புலன் கருதும் கருத்துள், Aimpulan karuthum karuthul - பஞ்சேந்திரியங்கள் விரும்புகின்ற விஷயங்களிலே
மனதைத் திருத்தினேன், Manathai thiruthinen - நெஞ்சைச் செலுத்திக் கிடந்தேன்
அதனால், Adhanaal - இப்படி இருந்ததனாலே
பேதையேன், Pethaiyen - அவிவேகியான நான்
நன்மை பெற்றிலேன், Nanmai petrilen - ஒரு நன்மையும் பெறாதவனாயினேன்
பெரு நிலத்து ஆர், Peru nilathu aar - பெரிய இப்பூமியிலேயுள்ள
உயிர்க்கு எல்லாம், Uyirku ellaam - பிராணிகளுக்கு எல்லாம்
செற்றமே வேண்டி, Settrame vendi - தீங்கு செய்வதையே புருஷார்த்தமாகக் கொண்டு
திரிதருவேன், Thiritharuven - (அதுவே போதுபோக்காகத்) திரிந்து கொண்டிருந்தேன்
தவிர்ந்தேன், Thavirnthen - (இப்படி நெடுங்காலம் கெட்டுப் போனேனாகிலும்), இன்று பகவத் கடாக்ஷத்தாலே இக்கொடுமைகளெல்லாம் தவிரப்பெற்றேன்
அடியேன், Adiyen - தாஸனாகப் பெற்ற நான்
செல்கதிக்கு உய்யும் ஆறு எண்ணி, Selkathikku uyyum aaru enni - செல்ல வேண்டிய நல்வழியை நண்ணி உஜ்ஜீவிக்கும்படியைச் சிந்தித்து
நாராயணா என்னும் நாமம், Narayana ennum namam - நாராயணா நாமத்தை
நல் துணை ஆக பற்றினேன், Nal thunai aaga patrinen - நல்ல ஸஹாயமாகக் கைக்கொண்டேன்
956பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் ” என்று பலகால் அருளிச் செய்கின்ற ஆழ்வாரை நோக்கிச் சிலர் ‘நீர் ஆதரித்துப் போருகிற இத்திருநாமம் என்ன பலனைத் தரக்கூடியது?’ என்று கேட்க, இது தரமாட்டாத பலனே உலகில் இல்லை யென்கிறார்.) 9
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயின வெல்லாம் நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளோடு பெரு நிலம் அளிக்கும் வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் யாயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-9
பதவுரை Show / Hide
நாராயணா என்னும் நாமம், Narayana ennum namam - நாராயண நாமமானது (தன்னை அநுஸந்திக்கு மவர்கட்கு)
குலம் தரும், Kulam tharum - உயர்ந்த குலத்தைக் கொடுக்கும்
செல்வம் தந்திடும், Selvam thandhidum - ஐச்வரியத்தை அளிக்கும்
அடியார் படு துயர் ஆயின எல்லாம், Adiyaar padu thuyar aayina ellaam - அடியவர்கள் அனுபவிக்கிற துக்கம் என்று பேர்பெற்றவை எல்லாவற்றையும்
நிலம் தரம் செய்யும், Nilam tharam seiyum - தரை மட்டமாக்கிவிடும்
நீள் விசும்பு அருளும், Neel visumbu arulum - பரமபதத்தைக் கொடுக்கும்
அருளொடு, Arulodu - எம்பெருமானுடைய கிருபையையும்
பெரு நிலம், Peru nilam - கைங்கரியமாகிற மஹா பதவியையும்
அளிக்கும், Alikkum - உண்டாக்கும்
வலம் தரும், Valam tharum - (பகவதநுபவத்துக்குப் பாங்கான) சக்தியைக் கொடுக்கும்
மற்றும், Matrum - இன்னமும் வேண்டிய நன்மைகளை எல்லாம்
தந்திடும், Thandhidum - செய்து கொடுக்கும்
பெற்ற தாயினும், Petra thaayinum - பெற்று வளர்க்கும் தாயைக் காட்டிலும்
ஆயின செய்யும், Aayina seiyum - ஹிதங்களைச் செய்து கொடுக்கும் (ஆக இப்படி)
நலம் தரும் சொல்லை நான், Nalam tharum sollai naan - வேண்டிய நன்மைகளைத்தருமதான நாராயண நாமத்தை
கண்டு கொண்டேன், Kandu konden - அடியேன் லபிக்கப் பெற்றேன்
957பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இது திருநாமப்பாட்டு எனப்படும். கலியன் சொன்ன இப்பாசுரங்கள் வழியாக நாராயணா வென்னும் நாமத்தை எப்போதும் அநுஸந்தியுங்கள்; பாவங்களெல்லாம் பறந்தோடிப்போம் - என்று தலைக்கட்டுகிறார்.) 10
மஞ்சுலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலி கன்றி செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை இவை கொண்டு சிக்கெனத் தொண்டீர் துஞ்சும் போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம் நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா வென்னும் நாமம் –1-1-10
பதவுரை Show / Hide
மஞ்சு உலாம் சோலை வண்டு, Manju ulaam solai vandu - மேகங்கள் உலாவுகின்ற சோலைகளையுடையதும்
வண்டுஅறை மா நீர், Vandu arai maa neer - வண்டுகள் படிந்து ஒலிசெய்கின்ற சிறந்த தீர்த்தத்தை உடையதுமான
மங்கையார், Mangaiyaar - திருமங்கையென்னும் நாட்டிலே உள்ளவர்கட்குத் தலைவரும்
வாள், Vaal - வாளை உடையவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார்
செம் சொலால் எடுத்த, Sem solaal edutha - செவ்விய சொற்களைக்கொண்டு அருளிச்செய்த
தெய்வம், Dheivam - திவ்யமான
நல்மாலை இவை, Nal malai ivai - இந்த நல்ல சொல் மாலையை
சிக்கென கொண்டு, Sikkena kondu - நாவிலே த்ருடமாகக்கொண்டு
தொண்டீர், Thondir - பாகவதர்காள்!
துஞ்சும் போது அழைமின், Thunjum pothu azhaimin - சரீரம் முடியுங் காலத்தில் இத்திருநாமங்களைச் சொல்லுங்கோள்
துயர்வரில் நினைமின், Thuyarvaril ninaimin - மற்றும் துக்கங்களுண்டான போதும் இவற்றையே நினையுங்கோள்
துயர்இலீர் சொல்லிலும் நன்று ஆம், Thuyar ileer sollilum nanru aam - துக்கமொன்று இல்லாதவர்கள் இவற்றை அநுஸத்தித்தாலும் நன்மையாகும்
நாராயணா என்னும் நாமம், Narayana ennum namam - நாராயண நாமமானது
நம்முடை வினைக்கு, Nammudai vinaikku - நமது பாபங்களை முடிப்பதற்கு
நஞ்சு தான் கண்டிர், Nanju thaan kandir - விஷமேயாமென்பது தின்ணம்
958பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வாலியை வதை செய்தருளின பெருமான் இனிதாக எழுந்தருளியிருக்குமிடமான இமயமலையினுள் பரம போக்யமாக அமைந்துள்ள திருப்பிரிதியைச் சென்று சேருமாறு நெஞ்சை நோக்கிக் கூறுகின்றார்.) 1
வாலி மா வலத்தொருவன துடல் கெட வரிசிலை விளைவித்து அன்று ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்தநல்லிமயத்துள் ஆலி மா முகிலதிர் தர வருவரை அகடுற முகடேறி பீலி மா மயில் நடம் செய்யும் தடம் சுனைப் பிரிதி சென்று அடை நெஞ்சே -1-2-1
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenje - மனமே!
அன்று, Anru - ஸ்ரீராமாவதாரத்தில், சுக்ரீவன் சரணம் புகுந்தவன்று
வாலி, Vaali - வாலி என்னும் பெயரையுடையவனாய்
மா, Maa - மிக்க
வலம், Valam - பலம் பொருந்திய
ஒருவனது, Oruvanathu - ஒப்பற்றவனுடைய
உடல், Udal - சரீரம்
கெட, Keda - சிதறும்படி
வரி, Vari - அழகிய
சிலை, Silai - சார்ங்கம் (வில்)
வளைவித்து, Valaivithu - சரங்கள் பாயும் படி வளைத்து, (இன்று)
ஏலம், Elam - பரிமளம், வாசனை
நாறு, Naaru - வீசுகின்ற
தண், Than - குளிர்ந்து
தடம், Thadam - பரந்த
பொழில், Pozhil - தோட்டங்களிலே
இடம்பெற இருந்த, Idampera irundha - விசாலமாக ஸர்வேஸ்வரன் எழுந்தருளியிருக்கிற
நல் இமயத்துள், Nal Imayathul - விலக்ஷனமான இமாச்சலத்திலே
ஆலி மா முகில், Aali maa mugil - சிறு துளிகள் தெரிக்கிற பெரிய மேகங்கள்
அதிர்தர, Athirthara - அதிர முழங்கிக்கொண்டு
பீலி மா மயில், Peeli maa mayil - கணமான தோகையுடைய பெரிய மயில்களானவை
அருவரை, Aruvarai - தாவி ஏற வலிதான மலைகளிலே
அகடு உற, Agadu ura - கீழ் வயிறு தழுவும்படியாக
முகடு ஏறி, Mugadu eri - அவற்றின் சிகரங்களிலே ஏறி
நடம் செய்யும், Nadam seiyum - ஆடா நிற்பதாய்
தடம் சுனை, Thadam sunai - பரந்த சுனைகளுடைய
பிருதி, Pirudhi - திருப்பிருதி என்கிற திவ்யதேசத்தை
சென்று அடை , Sendru adai - சென்று சேர்ந்திடு
959பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸுக்ரீவ மஹாராஜருடைய துயரைத் தொலைத்த விருத்தாந்தத்தைக் கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்தார். அந்த ஸுக்ரீவனுடைய படைத் துணையால் இராமபிரான் தன் துயரைத் தொலைத்துக் கொண்ட விருத்தாந்தத்தை இப்பாட்டில் அநுஸந்திக்கிறார்.) 2
கலங்க மாக்கடல் அரிகுலம் பணி செய்ய அருவரை யணை கட்டி இலங்கை மா நகர் பொடி செய்தவடிகள் தாம் இருந்த நல்லிமயத்து விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர் கூர பிலம் கொள் வாள் எயிற்று அரியவை திரிதரு பிரிதி சென்றடை நெஞ்சே –1-2-2
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenje - மனமே!
மா கடல், Maa kadal - மஹா ஸமுத்தரமானது
கலக்க, Kalakka - கலங்கும்படி
அரி குலம் பணி செய்ய, Ari kulam pani seiya - வானர ஸமூஹம் கைங்கரியம் பண்ண
அரு வரை, Aru varai - அசைக்க முடியாத பெரிய மலைகளைக் கொண்டு
அணை கட்டி, Anai katti - ஸேது கட்டி
மா இலங்கை நகர், Maa Ilangai nagar - பெரிய லங்காபுரியை
பொடி செய்த, Podi seitha - பொடிபடுத்திய
அடிகள் தாம், Adigal thaam - ஸர்வஸ்வாமி
இருந்த, Irundha - எழுந்தருளியிருக்கப்பெற்ற
நல் இமயத்து, Nal Imayathu - நல்ல ஹிமவானில்
விலங்கல் போல்வன விறல், Vilangal polvana viral - மலை போன்றவையாய் மிருக்கையுடையவையாய்
இரு சினத்தன, Iru sinathana - மிக்க கோபத்தை யுடையவையான
வேழங்கள், Vezhangal - யானைகள்
துயர்கூர, Thuyarkoora - துன்பப்படும்படியாக
பிலம் கொள், Bilam kol - குகைகளை இருப்பிடமாகக் கொண்டிருக்கிற
வாள் எயிறு, Vaal eyiru - வாள் போன்ற பற்களையுடைய
அரி அவை, Ari avai - சிங்கங்களானவை
திரிதரு, Thiritharu - திரியுமிடமாகிய
பிரிதி, Pirithi - திருப்பிரிதியை
சென்றுஅடை, Sendru adai - சென்று சேர்ந்திடு
960பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஶீதாபிராட்டிக்காக இலங்கையைப் பாழ் படுத்தினமையைச் சொன்னார் கீழ்ப்பாட்டில். நப்பின்னைப் பிராட்டிக்காகச் செய்ததொரு செயலைச் சொல்லுகிறார் இதில்) 3
துடி கொள் நுண்ணிடைச் சுரி குழல் துளங்கெயிற்று இளம் கொடி திறத்து ஆயர் இடி கொள் வெங்குரலின விடை யடர்த்தவன் இருந்த நல்லிமயத்து கடிகொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி யறை மிசை வேழம் பிடியினோடு வண்டிசை சொலத் துயில் கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-3
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenje - மனமே!
துடி கொள் நுண் இடை, Thudi kol nun idai - உடுக்கைபோன்ற ஸூக்ஷ்மமான இடையையும்
சுரிகுழல், Surikuzhal - சுருண்ட கூந்தலையும்
துளங்கு எயிறு, Thulangu eyiru - பளபளவென்று விளங்குகின்ற பற்களையும் உடையவளாய்
இள கொடி திறத்து, Ila kodi thirathu - இளங்கொடி போன்றவளான நப்பிள்ளைப் பிராட்டிக்காக
ஆயர், Aayar - இடையர்களுடையவையாய்
இடி கொள் வெம் குரல் இனம் விடை, Idi kol vem kural inam vidai - இடிபோல் வெவ்விய குரலை யுடைவையாய் கூட்டமாக வந்தவையான ஏழு ரிஷபங்களை
அடர்த்தவன், Adarthavan - வலியடக்கின பெருமான்
இருந்த, Irundha - எழுந்தருளியிருக்கப் பெற்ற
நல் இமயத்து, Nal Imayathu - நல்ல இமயமலையினுள்
வண்டு இசை சொல, Vandu isai sola - வண்டுகள் இசைபாடா நிற்க
மணி அறை மிசை, Mani arai misai - இந்திரநீல மணிமயமான பாறைகளின் மேலே
கடிகொள் வேள்கையின் நறுமலர் அமளியில், Kadikol velkaiyin narumalar amaliyil - வேங்கைமரத்தினது மணம் மிக்க புஷ்பமயமான படுக்கையிலே
வேழம், Vezham - யானையானது
பிடியினோடு, Pidiyinodu - தன் பேடையோடுகூட
துயில்கொளும், Thuyilkolum - உறங்குமிடமான
பிரிதி, Piridhi - திருப்பிரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
961பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நரஸிம்ஹ மூர்த்தியாகத் திருவவதரித்து இரணியன் மார்வைப்பிளந்த பெருமிடுக்குத்தோற்ற எழுந்தருளியிருக்குமிட மென்கிறது இதில்.) 4
மறம் கொள் ஆள் அரி யுருவென வெருவர ஒருவனதகல் மார்வம் திறந்து வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்துள் இறங்கி ஏனங்கள் வளை மருப்பி இடந்திடக் கிடந்து அருகு எரி வீசும் பிறங்கு மா மணி யருவி யொ இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-4
பதவுரை Show / Hide
நெஞ்சே!, Nenje! - மனமே!
மறம் கொள் வெருவர, Maram kol veruvara - சீற்றங்கொண்ட
ஆள் அரி உரு என, Aal ari uru ena - நரசிங்க மூர்த்தி என்று பிரஸதாவமெடுத்த மாத்திரத்திலே
வெருவர, Veruvara - உலகம் அஞ்சி நடுங்கும்படியாக (நரஸிம்ஹாவதாரஞசெய்து)
ஒருவனது, Oruvanathu - வீரரில் ஒப்பற்றவனான இரணியனுடைய
அகல் மார்வம், Agal maarvam - விசாலமான மார்பைப்
திறந்து, Thirandhu - பிளந்து
வானவர் (அந்த விடாய்தீர), Vaanavar (antha vidaaytheera) - (இப்படி இரணியனைக் கொன்ற மஹோபகாரத்தில் ஈடுபட்ட)தேவர்கள்
மணி முடி பணிதர, Mani mudi panithara - மணிமயமான கிரிடங்களணிந்த தலையாலே வணங்கும்படியாக
இருந்த, Irundha - என்பெருமான் எழுந்தருளி யிருக்கப் பெற்ற
நல் இமயத்துள், Nal Imayathul - விலக்ஷணமான இமயமலையின் கண்,
ஏனங்கள், Yenangal - பன்றிகளானவை
இறங்கி, Irangi - தலை குனிந்து
வளை மருப்பு, Valai maruppu - வளைந்த கொம்புகளாலே
இடந்திட, Idanthida - (மணிப்பாறைகளைப்) பிளக்க (பிளந்ததனால் பெயர்ந்து)
அருகு கிடந்து எரி வீசும் பிறங்கு மா மணி, Arugu kidandhu eri veesum pirangu ma mani - ஸமீபத்திலிருந்து கொண்டு, தீ வீசுகின்ற ப்ரகாசம் மிக்க சிறந்த மணிகளானவை
அருவியொடு, Aruviyodu - மலையருவிகளோடுகூட
இழிதரு, Izhitharu - இழியுமிடமான
பிரிதி, Piridhi - திருப்பிரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
962பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவதாரங்களுக்கு அடியாகத் திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்தருளுகிறபடியை அநுஸந்தித்துப் பேசுகிறார் இதில்.) 5
கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-5
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenje - மனமே!
கனை கழல் தொழுது ஏத்த, Kanai kazhal thozhuthu etha - (ஆபரணங்கள் பூண்டதனால்) ஒலிசெய்கின்ற திருவடிகளை
அமரர்கள், Amarargal - தேவர்கள்
தொழுது ஏத்த, Thozhuthu etha - ஸேவித்துத் துதிக்கும்படியாக
கரை செய் மா கடல் கிடந்தவன், Karai sei maa kadal kidanthavan - தனக்குத்தானே கரை செய்து கொண்டிருக்கிற பெரிய கடலிலே (க்ஷீரஸாகரத்தில்) பள்ளி கொண்ட பெருமான்
அரை செய் மேகலை அலர் மகளவளொடும் அமர்ந்த, Arai sei megalai alar magalavalodum amarndha - திருவரையிலே சாந்தப்பட்ட மேகலையை யுடையளான பெரிய பிராட்டியோடு கூட எழுந்தருளியிருக்கப்பெற்ற
நல் இமயத்து, Nal imayathu - நல்ல இமயமலையின் கண்
வரைசெய் மா களிறு, Varaisei maa kaliru - மலைபோற் பெரிய ஆண் யானைகளானவை
இள வெதிர், Ila vethir - இளமூங்கிலைகளுடைய
வளர் மூளை, Valar moolai - ஓங்கி வளர்ந்த முளைகளை(பிடுங்கி)
அளை மிகு தேன் தோய்த்து, Alai migu then thoiththu - முழைஞ்சுகளிலே மிகுதியாகவுள்ள தேனிலே தோய்த்து
பிரசம் வாரி, Pirasam vaari - (அந்த) தேன்வெள்ளத்தை
தன் இள பிடிக்கு, Than ila pidikku - தனது இளையபேடைக்கு
அருள் செயும், Arul seiyum - கொடுக்குமிடமான
பிரிதி, Pridhi - திருப்பரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
963பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேவர்களுக்காக ஸ்ரீவைகுண்டத்தைவிட்டுத் திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்த எம்பெருமான் அக்கடலளவும் போக மாட்டாத மனிசர்க்கும் அநுகூலமாக இமயமலையிலேவந்து எழுந்தருளியிருக் கிறானென்பது தோன்ற அருளிச்செய்கிறார்) 6
பணங்கள் ஆயிரம் யுடைய நல்லரவணைப் பள்ளி கொள் பரமா வென்று இணங்கி வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்து மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்புற நிமிர்ந்தவை முகில் பற்றி பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-6
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenje - மனமே!
வானவர், Vaanavar - தேவர்கள்
இணங்கி, Inangi - திரளாகக் கூடி
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணை பள்ளி கொள் பரமா என்று, Panangal aayiram udaiya nal aravu anai palli kol parama endru - ‘ஆயிரம் படங்களையுடைய திருவனந் தாழ்வானாகிற சயனத்திலே பள்ளி கொண்டருளும் பரமபுருஷனே!’ என்று சொல்லி,
மணி முடி பணி தர இருந்த நல்இமயத்து, Mani mudi pani thara irundha nal imayathu - மணி முடிகளாலே வணங்கும் படி எம்பெருமான் எழுந்தருளி யிருக்கப் பெற்ற நல்ல இமயமலையின் கண்,
மணம் கொள் நெடு மாதவி கொடி அவை, Manam kol nedu Madhavi kodi avai - பரிமளமுள்ளவையும் நீண்டவை யுமான குருக்கத்திக் கொடிகளானவை
விசம்பு உற நிமிர்ந்து, visumbu ura nimirndhu - ஆகாசத்தளவுஞ் சென்று நிமிர்ந்து
முகில் பற்றி பிணங்கு, Mugil patri pinangu - மேகங்களைப் பற்றிக்கொண்டு அவற்றோடு சண்டைபோடுவதனாலே
பூ, Poo - புஷ்பிக்கப்பெற்ற
பொழில், Pozhil - (குருக்கத்திச்)சோலைகளிலே
வண்டு நுழைந்து, Vandu nuzhaindhu - வண்டுகள் (மதுவைப் பருகப்) பிரவேசித்து
இசை சொலும், Isai sollum - இசைபாடுமிடமான
பிரிதி, Piridhi - திருப்பிரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
964பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இமயமலையின் தாழ்வரைகளிலே மேக மண்டலத்தளவும் ஓங்கி வளர்ந்த வேங்கைமரங்கள் மிளகு கொடிகளாலே தழுவப்பெற்றுநிற்கும்; வெளி நிலங்களிலுள்ள சிறு மலைகளிலே கொடிய வேங்கைப் புலிகள் திரியாநிற்கும். இப்படி எங்கும் வேங்கை மயமாகவேயிராநின்ற இமய மலையின் கண் தேவர்கள் வந்து செங்கழுநீர் செண்பகம் இருவாட்சி பாதிரி புன்னை குருக்கத்தி கருமுகை தாமரை என்னப்படுகிற எண்வகைப் புஷ்பங்களையும் தடாகங்களிலிருந்து கொணர்ந்து ஸமர்ப்பித்து ஸஹஸ்ரநாமங்களைச் சொல்லிக்கொண்டே நமஸ்கரிக்குமிடமாகிய திருப்பிரிதியைச் சென்று சேர் நெஞ்சே) 7
கார்கொள் வேங்கைகள் கனவரை தழுவிய கறி வளர் கொடி துன்னி போர் கொள் வேங்கைகள் புனவரை தழுவிய பூம் பொழில் இமயத்துள் ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இனமலர் எட்டும் இட்டு இமையோர்கள் பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-7
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenje - மனமே!
கனம் வரை, Kanam varai - அழகிய தாழ்வரைகளில்
கார்கொள் வேங்கைகள், Kaarkol vengaikal - மேக மண்டலத்தை ஆகரமித்து வளர்ந்த வேங்கை மரங்களை
தழுவிய, Thazhuviya - தழுவிக்கொண்டிரா நின்ற
கறிகொடி, Karikodi - மிளகுகளின் கொடிகளானவை
துன்னி வளர், Thunni valar - நெருங்கிப் படரப்பெற்றதும்
புனம் வரை, Punam varai - கொல்லை நிலங்களிலுள்ள சிறுமலைகளிலே
போர்கொள் வேங்கைகள் தழுவிய, Porkol vengaikal thazhuviya - யுத்தத்திற்கு ஸித்தமான வேங்கைப் புலிகள் ஸஞ்சரிக்கப்பெற்றதுமாய்
பூ பொழில், Poo pozhil - அழகிய சோலைகளை யுடையதான
இமயத்துள், Imayathul - இமயமலையின் கண்
இமையோர்கள், Imaiyorkal - தேவர்கள்
ஏர் கொள் பூ சுனை தடம் படிந்து, Er kol poo sunai tadam padinthu - அழகிய புஷ்பங்களையுடைய தடாகங்களின் துறைகளிலே தீர்த்தமாடி
இனம் மலர் எட்டும் இட்டு, Inam malar ettum ittu - சிறந்த எட்டுவகைப் பூக்களையும் கொண்டு ஸமர்ப்பித்து
பேர்கள் ஆயிரம், Perkal aayiram - ஸஹஸ்ர நாமங்களையும்
பரவி நின்று, Paravi ninru - வாய்வந்தபடி சொல்லி
அடி தொழும், Adi thozhum - எம்பெருமான் திருவடிகளைப் பணியுமிடமான
பிரிதி, Pridhi - திருப்பரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
965பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இமயமலையில் சோலைகள் செறிந்து கிடக்குமாதலால் ‘ இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியா” என்னுமாபோலே பகற்போது காணமுடியாமல் இரவு காலமே விஞ்சி எங்கும் இருள் மூடிக்கிடக்கும். அப்படி இருள் மூடிக்கிடக்கிற மலையின் குஹைகளிலே பாம்புகளானவை ஆஹாரம் பெறாமல் பெரும்பசியோடே பெருமூச்சு விட்டுக்கொண்டு கிடக்கும். அப்படிப்பட்ட இமயமலையின்கண். அமரர்கள் வந்து சேர்ந்து ‘பரமபுருஷா!, ஸகல ஜகத்காரண பூதா!!, காளமேகச்யாமளா!!!” என்றிப்படி அநுஸந்தித்துக்கொண்டு நான்முகக்கடவுளை முன்னிட்டு வணங்குமிடமாகிய திருப்பிரிதி யைச் சென்று சேர் நெஞ்சே!) 8
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும்பசியது கூர அரவம் ஆவிக்குமகம் பொழில் தழுவிய அருவரை யிமயத்து பரமனாதி எம்பனி முகில் வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள் பிரமனோடு சென்று அடி தொழும் பெரும் தகைப் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-8
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenje - மனமே!
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை, Iravu koornthu irul perugiya varai muzhai - இராப்பொழுதே விஞ்சி இருள் அதிகரிக்கப்பெற்ற மலை முழஞ்சுகளிலே
இரு பசியது கூர, Iru pasiyathu koora - பெரும்பசி உண்டாக
அரவம், Aravam - மலைப்பாம்புகளானவை
ஆவிக்கும், Aavikum - பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிற
அகம் பொழில் தழுவிய, Agam pozhil thazhuviya - உட்சோலைகளோடு கூடிய
அரு வரை இமயத்து, Aru varai Imayathu - ஏறமுடியாத தாழ்வரையையுடைய இமயமலையின் கண்,
இமையோர்கள், Imaiyorkal - தேவர்கள்
பிரமனோடு சென்று, Brahmanodu sendru - நான்முகனோடு கூடச் சென்று
பரமன் என்று எண்ணி நின்று, Paraman endru enni ninru - பரமபுருஷனே! என்றும்
ஆதி என்று, Aadhi endru - ஆதி மூலமே ! என்றும்
எம் பனிமுகில் வண்ணன் என்று, Em panimukil vannan endru - குளிர்ந்த மேகம் போன்ற நிறத்தையுடைய எம்பெருமானே! என்றும்
எண்ணி நின்று, Enni ninru - அநுஸந்தித்துக் கொண்டு
அடி தொழும், Adi thozhum - திருவடிகளை வணங்குதற்குரிய
பெரு தகை, Peru thagai - பெருந்தன்மை பொருந்திய
பிரிதி, Pridhi - திருப்பிரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
966பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆயிரந் திருநாமங்களையும் வாயாலே சொல்லி அவற்றி துடைய அர்த்தங்களையும் அநுஸந்திப்பவர்களுக்கு எவ்விதமான துன்பமும் வந்து சேராத படியாக நித்யாநந்தத்தைக் கொடுத்து அருள் செய்கின்ற பரம புருஷன் எழுந்தருளியிருக்கப்பெற்ற இமயமலையின்கண் தாதுகள் நிறைந் திருக்கிற அசோகமலர் விகத்தால் அப்போ துண்டாகு மழகு நெருப்பு ஜ்வலிக்கிறாப்போலிருக்கும். வண்டுகளானவை அப்புஷ்பவிகாஸ சோபையைப் பார்த்து ‘இவை அசோகமலர்’ என்பதை மறந்து ‘இது நெருப்பு’ என்று ப்ரமிக்கும். அவற்றுக்கு இந்த ப்ரமம் நித்தியப்படியாகச் செல்லும். முதல் நாள் ‘இது நெருப்பு’ என்று ப்ரமித்து, பிறகு ஆராய்ந்து ‘நெருப்பு அல்ல, அசோகமலராமிவை’ என்று நிச்சயித்து அதிலே போயி ருந்தும் மறுநாளும் பழையபடியே ப்ரமித்து அதனருகு செல்ல அஞ்சியிருக்கும். இப்படி அச்சமும் அச்சங்கழிதலும் மாறாமல் செல்லப்பெற்ற திருப்பிரிதியைச் சென்று சேர் நெஞ்சே!) 9
ஓதி யாயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல் ஏதும் இன்றி நின்று அருளும் நம் பெரும் தகை இருந்த நல்லிமயத்து தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-9
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenje - மனமே!
ஆயிரம் நாமங்கள், Aayiram Naamangal - ஸஹஸ்ர நாமங்களை
ஓதி, Odhi - எப்போதும் சொல்லிக் கொண்டு
உணர்ந்தவர்க்கு, Unarnthavarkku - (அத்தாலே, ஸர்வேச்வரனே ரக்ஷகனென்று) விவேகம் பெற்றவர்களுக்கு
உறுதுயர் அடையாமல், Uruthuyar Adaiyaamal - உண்டாகக்கூடிய துன்பமொன்றும் உண்டாகாதபடியாகவும்
ஏதம் இன்றி, Aedham Inri - பாவமொன்றும் இல்லாதபடியாகவும்
நின்று அருளும், Nindru Arulum - எப்போதும் க்ருபை செய்கின்ற
நம் பெருந்தகை, Nam Perunthagai - நம் ஸ்வாமியானவன்
இருந்த, Irundha - எழுந்தருளி யிருக்குமிடமான
நல் இமயத்து, Nal Imayathu - நல்ல இமயமலையின் கண்
தாது மல்கிய, Thaathu Malkiya - தாதுகள் மிக்கிருக்கிற போதுண்டான
பிண்டி, Pindi - அசோக மலர்கள்
விண்டு அலர்கின்ற, Vindu Alargindra - விரிந்து அலருகிற
தழல்புரை எழில், Thazhalpurai Ezhil - நெருப்புப் போன்ற அழகை
பேதை வண்டுகள் நோக்கி, Pedhai Vandugal Nokki - அறிவில்லாத வண்டுகள் பார்த்து
எரி என, Eri Ena - நெருப்பென்று நினைத்து
வெருவரு, Veruvaru - பயப்படுமிடமான
பிரிதி, Pridhi - திருப்பிரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
967பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆழ்வாருடைய சொல்மாலையாகிய இத் திரு மொழியினது அருமையான இனிய இசையைப் பாடவல்ல விலக்ஷண பாகவதர்களுக்கு மஹாபாபங்களொன்றும் கிட்டமாட்டா என்று தலைக் கட்டுகிறார்) 10
கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை அரியவின்னிசை பாடு நல்லடியவர்க்கு அருவினை யடையாவே –1-2-10
பதவுரை Show / Hide
கரியமாமுகில் படலங்கள் அவை, Kariyamamukil Padalangal Avai - கறுத்த மஹாமேகங்களின் கூட்டங்களானவை
கிடந்து, Kidandhu - (நீர்க்கனத்தாலே திரிய மாட்டாமல்) ஓரிடத்திலே இருந்து கொண்டு
முழங்கிட, Muzhangida - கர்ஜிக்க, (அந்த கர்ஜனையைக் கேட்டு)
பெரிய மாசுணம், Periya Maasunam - பெரிய மலைப்பாம்புகளானவை
களிறு என்று, Kaliru Endru - (நமக்கு இரையாம்படி) யானைகள் (வருகின்றன) என்று நினைத்து
வரை என பெயர்தரு, Varai Ena Peyartharu - மலை பேர்ந்தாற் போலே பெயர்ந்து கிட்ட வருமிடமான
பிரிதி, Pridhi - திருப்பிரிதியிலே (எழுந்தருளியிருக்கிற)
எம்பெருமானை, Emperumaanai - எம்பெருமானைக் குறித்து
வரிகொள் வண்டு அறை பை பொழில் மங்கையர், Varikol Vandu Arai Pai Pozhil Mangaiyar - அழகிய வண்டுகள் ஒலிக்கின்ற விசாலமான சோலைகளையுடைய திருமங்கையிலே உள்ளவர்கட்குத் தலைவரான
கலியனது, Kaliyanathu - ஆழ்வாருடைய
ஒலிமாலை, Olimaalai - சொல்மாலையாகிய இத் திரு மொழியினது
அரிய இன் இசை பாடும், Ariya In Isai Paadum - அருமையான இனிய இசையைப் பாடவல்ல
நல் அடியவர்க்கு, Nal Adiyavarkku - விலக்ஷண பாகவதர்களுக்கு
அரு வினை அடையா, Aru Vinai Adaiyaa - மஹாபாபங்களொன்றும் கிட்டமாட்டா
968பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முற்றமுத்து.) சரீரத்துக்கு எவ்வளவு கிழத்தனம் வரக்கூடுமோ அவ்வள வும் வந்து, நடந்து செல்லமாட்டாமல் ஒரு கோலைக் கையிலே அவலம்ப மாகப் பிடித்துக்கொண்டு முதுகு கூனிட்டுப் போகவே முன்னடியை நோக்கி வளைந்து, முறிந்துபோன காலைக்கொண்டு நடக்கமுடியாதது போல ஓரடி யும் எடுத்து வைக்கமாட்டாமல் தடுமாறி, தடி பிடித்துக்கொண்டும் நடக்க மாட்டாமல் திடீரென்று தரையிலே விழுந்திருந்துகொண்டு பெருமூச்சு விட்டு இப்படியாக ச்ரமப்படுகிற காலம் வந்துவிட்டால் பதரிகாச்ர மயாத்ரையை நெஞ்சால் நினைக்கவும் முடியாதே; ஆகையால் அப்படிப்பட்ட கெட்ட நிலைமை வருவதற்கு முன்னே ஸ்ரீபதரியைச் சென்று வணங்குவோம் வாருங்க ளென்று அன்பர்களை அழைக்கிறார் போலும். 1
முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன் பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை வற்ற வாங்கி யுண்ட வாயான் வதரி வணங்குதுமே –1-3-1
பதவுரை Show / Hide
முற்ற மூத்து, Mutra Moothu - பூர்த்தியாகக் கிழத்தனமடைந்து
கோல் துணை ஆ, Kol Thunai Aa - ஊன்றுகோலை ஸஹாயமாகக் கொண்டு கூன் முதுகிட்டு
முன் அடி நோக்கி வளைந்து, Mun Adi Nookki Valaindhu - முன்காலைக் கவிழ்ந்து நோக்குமாபோலே
இற்ற கால்போல் தள்ளி, Itra Kaalpol Thalli - முறிந்த கால்போலே தடுமாறி
மெள்ள இருந்து, Mella Irundhu - மஹாப்ரயாஸத்தோடே உட்கார்ந்து
இளையா முன், Ilaiyaa Mun - இவ்விதமாகக் கஷ்டங்களையடைவதற்கு முன்னே,
பெற்ற தாய்போல் வந்த, Petra Thaaypol Vanda - பெற்ற தாயான யசோதையின் வடிவுகொண்டு (தன்னைக் கொல்ல) வந்த
பேய்ச்சி, Peychchi - பூதனையினுடைய
பெரு முலை ஊடு, Peru Mulai Oodu - பெரிய முலையின் வழியாக
உயிரை, Uyirai - அவளது உயிரை
வற்ற வாங்கி உண்டவாயன், Vattu Vaangi Undavayan - நிச்சேஷமாக உறிஞ்சி உண்ட திருப்பவளத்தை யுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற
வதரி, Vadhari - ஸ்ரீபதரியை
வணங்குதும், Vananguthum - வணங்குவோம்.
969பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) [முதுகுபற்றி.)கிழத்தனத்தில் நாலடி நடந்தாலும் பலஹீனத் தால் முதுகு நோகும்; ஒருகையாலே முதுகைப்பிடித்துக்கொள்ள வேண்டிய தாகும் ; முன் பக்கமாக வளைந்து விழாமைக்காக ஒரு தடியை ஊன்றிக்கொள்ள வேண்டியதாகும்; 2
முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோலூன்றி விதிர் விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளை கொண்டு இருமி இது வென்னப்பர் மூத்தவாறு என்று இளையவர் ஏசாமுன் மது வுண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-2
பதவுரை Show / Hide
கை தலத்தால், Kai Thalathaal - ஒரு கையாலே
முதுகு பற்றி, Mudhugu Patri - முதுகைப் பிடித்துக்கொண்டும்
முன் ஒரு கோல் ஊன்றி, Mun Oru Kol Oonri - (மற்றொருகையாலே) முன்னே ஒரு கொம்பை ஊன்றிக் கொண்டும்
விதிர்விதிர்த்து, Vithirvithirthu - (உடல்) நடுங்கியும்
கண் சுழன்று, Kan Suzhndru - (லொக்குலொக்கென்ற) பெரிய த்வநியைக்கொண்டு இருமியும்
இளையவர், Ilaiyavar - இளம்பெண்கள் (மோவாய்த் கட்டையில் கையை வைத்துக்கொண்டு)
அப்பர் மூத்த ஆறு இது என் என்று ஏசா முன், Appar Mootha Aaru Ithu En Endru Aesa Mun - “இந்தப் பெரியவர் கிழத்தன மடைந்த விது என்ன விசித்திரம்!” என்று சொல்லிப் பரிஹஸிப்பதற்கு முன்னே,
மது உண் வண்டு, Madhu Un Vandu - பூவில் தேனைப் பருகுகின்ற வண்டுகள்
பண்கள் பாடும், Pangkal Paadum - இசை பாடப்பெற்ற
வதரி, Vadhari - ஸ்ரீபதரியை
வணங்குதும், Vananguthum - வணங்குவோம்
970பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உறிகள்போல்.)சரீரத்தில் நரம்புகளானவை இளமைப்பருவத்தில் மறைந்து கிடக்கும்; முதுமையில் சரீரம் பசையற உலர்ந்தபடியாலே அந்த நரம்புகள் உறிகள் போலே நீண்ட கொத்துக் கொத்தாகக் கிளம்பி விளங்கும் அதற்குத் தகுதியாக மாம்ஸம் க்ஷணமாகி மனமும் நலிவுபடும். இப்படிப்பட்ட நிலைமையிலும் ஓரிடத்தில் வெறுமனே கிடக்கமாட்டாதே தாம்பும் தடியுமாகப் புறப்பட்டு எங்கேயாவது போகத் தொடங்குவர்கள். 3
உறிகள் போல் மெய்ந்நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று நடுங்கா முன் அறிதியாகில் நெஞ்சம் அன்பாய் ஆயிர நாமம் சொல்லி வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-3
பதவுரை Show / Hide
மெய் நரம்பு, Mei Narambu - சரீரத்திலுள்ள நரம்புகள்
உறிகள் போல் எழுந்து, Urigal Pol Ezhunthu - உறிகளைப் போலே மேலே கிளம்பித் தோன்றும்படியாக
ஊன் தளர்ந்து, Oon Thalarndhu - மாம்ஸம் கட்டுக்குலைந்து
உள்ளம் எள்கி, Ullam Elgi - நெஞ்சும் சிதிலமாகி
நெறியை நோக்கி கண் சுழன்று, Neriyai Nookki Kan Suzhndru - நடந்து செல்லவேண்டிய வழியை நோக்கினவாறே கண்கள் சுழலமிட்டு
நின்று, Ninru - போகமாட்டாதே ஸ்தம்பித்து நின்று
நடுங்கா முன், Nadunga Mun - நடுங்கும்படியான காலம் வருவதற்கு முன்னே,
நெஞ்சம், Nenjham - ஓ மனமே!
அறிதி ஆகில், Aridhi Aakil - நீ விவேகியாகில்
அன்பு ஆய், Anbu Aayi - பக்தி பூண்டு
ஆயிரம் நாமம் சொல்லி, Aayiram Naamam Solli - (எம் பெருமானது)  திருநாமங்களை யெல்லாம் சொல்லிக் கொண்டு,
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதும், Veri Kol Vandu Pangkal Paadum Vadhari Vananguthum - பரிமளம் மிக்க வண்டுகள் இசைபாடப்பெற்ற ஸ்ரீபதரியை வணங்குவோம் வா.
971பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பீளைசோர.)கிழத்தனத்தில் கண்கள் சுருங்கிப்போய் அவற்றில் நின்று பிளிச்சை பெருகவும், பித்தம் மேலிட்டுத் தலைசுற்றித் தள்ளம்பாறி நடக்கவும் நேர்தல் இயல்வு. அப்படி நேர்ந்தகாலத்து வதரி வணங்குதல் முடி யாத காரியமா தலால் அப்படி நேருவதற்கு முன்னமே அதனை வணங்குதல் நன்று . . 4
பீளை சோர கண் இடுங்கி பித்தெழ முத்து இருமி தாள்கள் நோவ தம்மில் முட்டி தள்ளி நடவா முன் காளையாகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான் பாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே –1-3-4
பதவுரை Show / Hide
கண் இடுங்கி பீளை சோர, Kan Idungi Peelai Soora - கண்கள் பசையற்றுப் பிளிச்சை பெருகவும்
பித்து எழ, Piththu Ezh - பித்தம் மேலிடும்படியாகவும்
மூத்து, Moothu - கிழத்தனமடைந்து
இருமி, Irumi - (க்ஷயரோகத்தாலே) இருமிக் கொண்டு
தாள்கள் தம்மில் முட்டி நோவ, Thaalgal Thammil Mudi Nova - கால்கள் ஒன்றோடொனறு தாக்கி நோகும்படியாக
தள்ளி நடவாமுன், Thalli Nadava Mun - தடுமாறி நடப்பதற்கு முன்னே-,
அன்று, Anru - முன்னொரு காலத்தில்
காளை ஆகி, Kaalai Aagi - இளம்பிள்ளையா யிருந்துகொண்டு
கன்று மேய்த்து, Kandru Meyththu - கன்றுகளை மேய்த்து
குன்று எடுத்து நின்றான், Kundru Eduthu Nindraan - (அவற்றுக்கு நேர்ந்த மழைத் தீங்கை யொழிப்பதற்குக்) கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து நின்ற எம்பெருமானது
வாளை பாயும் தண்தடம் சூழ்ந்த, Vaalai Paayum Thanthadam Soozhntha - வாளை மீன்கள் குதித்துப் பாய்கின்ற குளிர்ந்த குளங்கள் சூழ்ந்த
வதரி, Vadhari - ஸ்ரீபதரியை
வணங்குதும், Vananguthum - வணங்குவோம்.
972பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸம்ஸாரிகளுடைய காலக்ஷேபக்ரமத்தைப் பேசுகிறார். உடலில் வலிவு இருந்தகாலத்தில் ஒரு நல்ல காரியம் பண்ணியறியார்கள் ; விஷய போகங்கள் செய்வதற்கு எவ்வளவு நிஷித்த காரியங்கள் செய்ய வேணுமோ அவ்வளவும் செய்து தீருவர்கள்; இப்படியாக யௌவனபருவத் தைக் கழித்துவிட்டுக் கிழத்தனத்தில் வந்தவாறே அப்போதாவது இழந்த நாளைக்கு அநுதாபப்பட்டு ஏதாவது நன்மை தேடிக்கொள்ள விரும்புவார்களோ; அது கிடையாது;) 5
பண்டு காமரர் ஆனவாறும் பாவையர் வாய் அமுதம் உண்டவாறும் வாழ்ந்தவாரும் ஒக்க உரைத்து இருமி தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி நடவா முன் வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே –1-3-5
பதவுரை Show / Hide
பண்டு, Pandhu - இளம்பிராயத்தில்
காமர் ஆன ஆறும், Kaamar Aana Aarum - மாதர்கள் விரும்புதற்குத்தாம் உரியராக இருந்தபடியையும்
பாவையர்வாய் அமுதம் உண்ட ஆறும், Paavai Arvaai Amudham Unda Aarum - அம்மாதர்களுடைய வாயமுதத்தைப் பருகினபடியையும்
வாழ்ந்த ஆறும், Vaazhntha Aarum - சிற்றின்பங்களில் அழிந்தபடியையும்
ஒக்க உரைத்து இருமி, Okka Uraiththu Irumi - சொல்லுவது இருமுவது, மறுபடியும் சொல்லுவது இருமுவது ஆக இப்படியாகி
தண்ட காலா, Thanda Kaala - தடியைக் காலாகக்கொண்டு
ஊன்றி ஊன்றி, Oonri Oonri - (அசக்தியினால் ஓரிடத்திலேயே) பலதடவை ஊன்றி
தள்ளி, Thalli - தடுமாறி
நடவாமுன், Nadavaamun - நடக்க நேருவதற்கு முன்னே
வண்டு பாடும் தண் துழாயான், Vandu Paadum Than Thuzhaayaan - (மதுவுக்காக வந்து) வண்டுகள் பாடுகிற திருத்துழாய் மாலையை யுடையனான எம்பெருமானது
வதரி, Vadhari - ஸ்ரீபதரியை
வணங்குதும், Vananguthum - வணங்குவோம்
973பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கிழத்தனத்தில் ஒருவார்த்தை சொல்ல ஆரம்பிக்கும்போதே தட்டித் தடுமாறிக் குதலைச் சொல்லாக வரும் ; அத்தோடு கூடவே கபமும் வந்து விழும் ; கூடவே இருமலும் வந்து சேரும் ; ஆக இவ் வளவால் சரீரமானது இன்னமும் அதிகமாக பலஹீனப்பட்டுவிடும்.) 6
எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம் பித்தர் போலே  சித்தம் வேறாய் பேசி அயரா முன் அத்தன் எந்தை யாதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே –1-3-6
பதவுரை Show / Hide
எய்த்த சொல்லோடு, Eyththa Sollodu - பலஹீனமான பேச்சுடனே
ஈளை ஏங்கி, Eilai Aengi - கோழைவந்து தங்கப் பெற்று
இருமி, Irumi - இருமி
உடலம் இளைத்து, Udalam Ilaitthu - சரீரம் மெலிந்து
பித்தர் போல, Piththar Poala - பைத்தியம்பிடித்தவர்கள்போல
வேறு சித்தம் ஆய் பேசி, Veeru Siththam Aayi Paesi - விகாரப்பட்ட மனமுடையராய் வார்த்தை சொல்லி
அயரா முன், Ayara Mun - தளருவதற்கு முன்னே-,
அத்தன், Aththan - ஸர்வஸ்வாமியாய்
எந்தை, Endhai - எமக்குத் தந்தையாய்
ஆதிமூர்த்தி, Aadhimurthi - உலகத்திற்கு மூலக்கடவுளாய்
ஆழ் கடலை கடைந்த, Aazh Kadalai Kadaindha - (ஒரு காலத்தில் தேவர்களுக்காக) ஆழ்ந்த கடலைக் கடைந்தவனாய்
மைத்த ஜோதி, Maiththa Jothi - மைபோல் சாமமான புகரையுடையனான
எம்பெருமான், Emperumaan - எம்பெருமானுடையதான
வதரி  வணங்குதும், Vadhari Vanangudhum - ஸ்ரீபதரியை வணங்குவோம்.
974பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உலகில் விசித்திரமானதொன்றைப் பார்க்கும்போ தும் விகாரமானதொன்றை பார்க்கும்போதும் கண்கூசி அப்பப்ப! என்று மெய் சிலிர்த்துக் கூறுவது வழக்கம். கிழவர்கள் தண்டுகாலாவூன்றியூன்றித் தள்ளி நடந்துகொண்டு, தாம் நெடுநாள் பழகின மின்னிடை மடவார் வீதியேறச் சென்றவாறே அளவு கடந்த கிழத் தன விகாரங்களைக்கண்டு அந்த மாதர்கள் ‘அப்பப்ப!’ என்று தங்களுக்குள்ளே அதிசயித்து, ‘உலகில் எல்லாரும் கிழத் தனமடைவதுண்டு; இதென்னடோயப்பா! ‘இப்படிப்பட்ட கிழத்தனம் எங்குங் கண்டதில்லை. மிகவும் பொல்லாத கிழத்தனமாயிருக்கின்றதே இது;’ என்று சொல்லிச் சிரிப்பர்கள் ; அவ்வளவோடு நில்லாமல் அண்டைவீட்டுக் காரிகளை யழைத்து ‘உங்கள் எஜமானர் வந்திருக்கிற அழகைப்பாருங்கள் ‘ என்று காட்டியும் சிரிப்பர்கள் ; அப்படிப்பட்ட பரிஹாஸங்களுக்கு ஆளாவ தற்கு முன்னே வதரி வணங்குதல் நன்று.) 7
பப்ப வப்பர் மூத்த வாறு பாழ்ப்பது சீத் திரளை ஒப்ப ஐக்கள் போத வுந்த உந்தமர் காண்மின் என்று செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியா முன்னம் வைப்பும் நங்கள் வாழ்வு மானான் வதரி வணங்குதுமே –1-3-7
பதவுரை Show / Hide
சீத் திரளை ஒப்ப, Seeth Thiralai Oppa - சீயின் திரட்சிபோல
ஐக்கள், Aikkal - கோழையானது
போத உந்த, Podha Unda - மிகவும் அதிகரிக்க, (அந்த நிலைமையைக் கண்டு)
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம், Seppu Ner Men Kongai Nallaar Thaam - செப்புப் போன்ற மெல்லிய முலைகளையுடைய மங்கைமார்கள்
பப்ப அப்பர்மூத்த ஆறு பாழ்ப்பது, Pappa Apparumootha Aaru Paazhppadhu - “அப்பப்ப! இந்த சாமியார் கிழத்தன மடைந்த விதம் மிகவும் பொல்லாது” (என்று தங்களில் சொல்லிக்கொண்டும்)
உம் தமர் காண்மின் என்று, Um Thamar Kaanmin Endru - “அடீ!உங்களோடு உறவுள்ள ஐயங்காரைப் பாருங்கள்” என்று(அயற்பெண்களோடே ஏளனமாகச் சொல்லியும்)
சிரியாத முன்னம், Siriyaadha Munnam - சிரிப்பதற்கு முன்னமே-,
நங்கள் வைப்பும் வாழ்வும் ஆனான் வதரி வணங்குதும், Nangal Vaippum Vaalvum Aanaan Vadhari Vanangudhum - நமக்கு நிதி போன்றவனும் நம்மை வாழ்விப்பவனுமான எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம்.
975பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து சென்று குறடேறும்போதே, சீ சீ, நட, நட” என்று துரத்தியடிப்பர்கள் ; வாசலை விடமாட்டாத சாபல்யத்தாலே ‘அம்மா! நான் உள்ளே வரவில்லை; தெருத்திண்ணையிலேயே கிடந்து போகிறேன்’ என்று விநயமாகச் சொல்லி உட்காரப் பார்த்தவளவில், ஈங்கிரேல்மின்’ என்று வெருட்டுவர்கள்;) 8
ஈசி போமின் ஈங்கு இரேன் மின் இருமி இளைத்தீர் உள்ளம் கூசி யிட்டீர் என்று பேசும் குவளை யம் கண்ணியர் பால் நாசமான பாசம் விட்டு நன்னெறி நோக்கல் உறில் வாச மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே –1-3-8
பதவுரை Show / Hide
இருமி இளைத்தீர், Irumi Ilaiththir - “(ஐயங்கார்களே!) இருமலும் இளைப்புமாக ஆனீர்கள்;
உள்ளம் கூசியிட்டீர், Ullam Koosiyitthir - நெஞ்சு கூசப் பெற்றீர்கள்;
போமின், Pomin - அப்பால் ஒழிந்து போங்கள்
ஈ சி, Ee See - சீ சீ ;
ஈங்கு இரேல்மின், Eengu Irelmin - இங்கே இருக்கக்கூடாது;”
என்று பேசும், Endru Pesum - என்றிப்படி அவமரியாதையாகப் பேசுகிற
குவளை அம் கண்ணியர் பால், Kuvazhai Am Kanniyar Paal - கருநெய்தல் போன்ற அழகிய கண்ணையுடைய மாதர்களிடத்து
நாசம் ஆன பாசம் விட்டு, Naasam Aana Paasam Vittu - ஸ்வரூபநாசத்தை விளைக்க வல்ல ஆசாபாசத்தை விட்டுத் துலைத்து
நல் நெறி நோக்கல் உறில், Nal Neru Nookkal Uruil - நல்வழி போகப்பார்க்கும் பக்ஷத்தில்
வாசம் மல்கு தண்துழாயான் வதரி வணங்குதும், Vaasam Malku Thanthuzhaiyan Vadhari Vananguthum - பரிமளம் மிக்குக் குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம்.
976பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கருமேந்திரியங்களென்றும் ஜ்ஞானேந்திரியங்க ளென்றும் இந்திரியங்கள் இருவகைப்படும். வாய் கை கால் குதம் குறி என்பன கருமேந்திரியங்கள்; நாக்கு மூக்கு கண் காது உடல் என்பன ஞானேந்திரியங்கள். இவை யெல்லாம் சிதிலமாவது கிழத்தனத்தில். கண் தெரியாதபடியும் காது கேளாதபடியும் அடியெடுத்து வைக்க முடியாதபடியும் கிழத்தனம் அதி கரித்து ஒரு மூலையிலே கிடந்து கண்டபடி பிதற்ற நேருங்காலத்தில் வதரியை ஸ்மரிக்கத்தான் யோக்யதை ஏது? அப்போதைக் கிப்போதே வதரிவணங்குதல் நன்று .) 9
புலன்கள் நைய மெய்யில் மூத்துப் போந்திருந்த உள்ளம் எள்கி கலங்க  வைககள் போத உந்திக் கண்ட பிதற்றா முன் அலங்கலாய தண் துழாய் கொண்டு ஆயிர நாமம் சொல்லி வலம் கொள் தொண்டர் பாடி யாடும் வதரி வணங்குதுமே –1-3-9
பதவுரை Show / Hide
மெய்யில், Meiyil - சரீரத்தில்
புலன்கள் நெய்ய, Pulangkal Neyya - செவி வாய் கண் முதலிய இந்திரியங்களெல்லாம் சிதிலமாம்படி
மூத்து, Moothu - கிழத்தன மடைந்து
போந்து இருந்து, Pondhu Irundhu - (நால்வரிருக்குமிடத்தில் தலை காட்டக்கூசி ஏகாந்த ஸ்தலத்திலே) போயிருந்து
உள்ளம் எள்கி கலங்க, Ullam Elgi Kalanga - நெஞ்சு விகாரப்பட்டுக் கலங்க
ஐக்கள் போத உந்தி, Aikkal Podha Unthi - கோழைகளை அதிகமாக உமிழ்ந்து கொண்டு
கண்ட, Kanda - நெஞ்சில் தோன்றின வற்றை யெல்லாம்
பிதற்றா முன், Pithatra Mun - பிதற்றுவதற்கு முன்னே,-
வலம் கொள் தொண்டர், Valam Kol Thondar - சிறந்த பக்தர்கள்
அலங்கல் ஆய தண் துழாய் கொண்டு, Alangal Aaya Than Thuzhai Kondu - மாலையாகத் தொடுக்கப்பட்ட குளிர்ந்த திருத்துழாயைக் கையிற் கொண்டு
ஆயிரம் நாமம் சொல்லி, Aayiram Naamam Solli - ஸஹஸ்ரநாமங்களை அநுஸகத்தித்துப்
பாடி ஆடும், Paadi Aadum - பாடுதலும் ஆடதலும் செய்யப்பெற்ற,
வதரி வணங்குதும், Vadhari Vananguthum - ஸ்ரீபதரியை வணங்குவோம்
977பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரம் இது.) 10
வண்டு தண்  தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் நீள் விசும்பில் அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே –1-3-10
பதவுரை Show / Hide
வண்டு, Vandu - வண்டுகளானவை
தண்  தேன் உண்டு வாழும் வதரி, Than Then Undu Vazhume Vadhari - குளிர்ந்த தேனைப் பருகிக் களித்து வாழுமிடமான ஸ்ரீபதரியில் எழுந்தருளியிருக்கிற
நெடு மாலை, Nedu Maalai - ஸர்வேச்ரன் விஷயமாக,
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன், Kandal Veli Mangai Vendan Kalyan - தாழைகளை வேலியாகக் கொண்ட திருமங்கைக்குத் தலைவரான ஆழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை கொண்டு, Malai Kondo - இந்தச் சொல் மாலையைக் கொண்டு
தொண்டர், Thondar - பக்திமான்கள்
பாடி ஆட கூடிடில், Paadi Aada Koodidil - பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் அநுபவிக்கப் பெற்றால்
அவர்க்கு, Avarkku - அப்படிப்பட்ட மஹான்களுக்கு
நீள் விசும்பில் அண்டம் அல்லால், Neel Visumbil Andam Allal - பரமகாசத்திலேயுள்ள பரம பதத்தைத் தவிர
மற்று ஓர் ஆட்சி அறியோம், Mattru Oru Aatchi Ariyom - வேறொரு லோகமாளப் பெறுதல் இல்லை.
978பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீதேவி பூதேவிகட்காக அரிய பெரிய காரியஞ்செய்த மஹாநுபாவன் எழுந்தருளியிருக்குமிடம் ஸ்ரீபதரிகாச்ரமம் என்கிறார்.) 1
ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க தான வனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த வென் தலைவன் தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறு மலர் கொணர்ந்து வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-1
பதவுரை Show / Hide
முன் அன்று, Mun Anru - முன்னொரு காலத்தில்
இணை அடி, Inai Adi - (தனது) உபய பாதங்களைத்
இமையவர் வணங்க, Imaiyavar Vananga - தேவர்கள் வந்து வணங்குமாறு
ஏனம் ஆகி, Enam Aagi - மஹாவராஹரூபியாகி
இரு நிலம் இடந்து, Iru Nilam Idanthu - விசாலமான பூ மண்டலத்தைக் கோட்டு நுனியாற் குத்தி யெடுத்தவனாயும்,
தானவன் ஆகம், Thanavan Aagam - இராவணணுடைய சரீரமானது
தரணியில் புரள, Tharaniyil Purala - பூமியிலே (செத்துப்) புரளும்படி
தடசிலை குனித்த, Thadasilai Kunitha - பெரிய வில்லை வளைத்தவனாயுமிருக்கிற
என் தலைவன், En Thalaivan - அஸ்மத் ஸ்வாமி
வானவர், Vaanavar - தேவர்கள்,
தேன் அமர் சோலை கற்பகம் பயந்த, Then Amar Solai Karppagam Payantha - தேன் நிறைந்த நந்தனவனத் திலேயுள்ள கல்ப வ்ருக்ஷங்கள் கொடுத்த
தெய்வம் நல் நறு மலர், Deivam Nal Naru Malar - திவ்யமாய் நல்ல மணம் மிக்க பூக்களை
கொணர்ந்து, Konarnthu - கொண்டு வந்து ஸமர்ப்பித்து
வணங்கும், Vanangum - வணங்குமிடமாய்
கங்கையின் கரை மேல், Gangaiyin Karai Mel - கங்கையின் கரையிலுள்ள தான
வதரி ஆச்சிரமத்து, Vadhari Aachiramatthu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே
உள்ளான், Ullaan - எழுந்தருளியிருப்பவன்.——
979பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெருமாளையும் பிராட்டியையும் பிரிப்பதற்கு மாயமான் வடிவுகொண்டு வந்த மாரீசனை ஒழித்தபடியையும், ஆச்ரிதனான ஸுக்ரீவனுக்கு விரோதியான வாலியை ஒழித்தபடியையும் முன்னடிகளில் அருளிச் செய்கிறார்.) 2
கானிடை யுருவைச் சுடுசரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன் ஊனுடை யகலத்தடு கணை குளிப்ப உயிர் கவர்ந்துகந்த வெம் மொருவன் தேனுடைக் கமலத் தயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு வானிடை முது நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யா ச்சிராமத்துள்ளானே –1-4-2
பதவுரை Show / Hide
கானிடை, Kaanidai - காட்டிலே
உருவை, Uruvai - (மாரீசனாகிய) மாயா மிருகததை
முன் கண்டு, Mun Kandu - கண்ணெதிரில் பார்த்து
சுடு சரம் துரந்து, Sudu Saram Thurandhu - (அதன் மேல்) தீக்ஷ்ணமான பாணத்தைப் பிரயோகித்தவனும்
கொடு தொழில் உரவோன், Kodu Thozhil Uravon - கொடுமையான தொழிலை யுடையனாய் பலசாலியான வாலியினுடைய
ஊன் உடை அகலத்து, Oon Udai Akalathu - மாம்ஸமான மார்விலே
அடு கணை குளிப்ப, Adu Kanai Kulippa - தீக்ஷ்ணமான பாணத்தை அழுத்தி
உயிர் கவர்ந்து, Uyir Kavarndhu - (அவனது பிராணனை அபஹரித்து
உகந்த, Ugantha - மகிழ்ந்தவனுமான
எம் ஒருவன், Em Oruvan - விலக்ஷணனான அஸ்மத்ஸ்வாமி (எவ்விடத்திலுள்ளா னென்றால்)
தேன் உடை கமலத்து அயனொடு, Then Udai Kamalathu Ayanodu - தேனையுடைய(திருநாபிக்) கமலத்தில் பிறந்த பிரமனோடு கூட
தேவர், Thevar - மற்றுமுள்ள தேவர்களும்
சென்று சென்று, Sendru Sendru - பலகால் வந்து
இறைஞ்சிட, Iraichida - வணங்கப் பெற்றதும்
பெருகு வானிடை முது நீர் கங்கையின் கரைமேல், Perugu Vaanidai Muthu Neer Gangaiyin Karameel - பெருகுகின்ற புராதனமாக ஆகாசகங்கைக் கரைமீது உள்ளதுமான
வதரி ஆச்சிராமத்து, Vadhari Aachiramaathu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே
உள்ளான், Ullaan - எழுந்தருளியிருக்கிறான்.
980பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒருவரால் அழிக்க வொண்ணாத லங்கா புரியும் அதற்கும் அகழாகி ரக்ஷகமாயிருந்த தெற்கு ஸமுத்ரமும், இராவணனும், அவனுக்குத் துணையாயிருந்த ராக்ஷஸஜாதியடங்கலும் நாசமடையும்படி தனது கொடுமையான பராக்கிரமத்தைச் செலுத்திக் காரியஞ்செய்த ராஜாதி ராஜன் எழுந்தருளியிருக்குமிடம் வதரியாச்சிரமம்.) 3
இலங்கையும் கடலும் அடலருந்திப் பின் இரு நிதிக் கிறைவனும் அரக்கர் குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் கொழும்  சுடர் சுழன்ற விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி யென விரிந்து வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-3
பதவுரை Show / Hide
முன், Mun - ஸ்ரீராமாவதாரத்தில்
இலங்கையும், Ilankaiyum - லங்காபுரியென்ன
கடலும், Kadalum - (அதற்கு அகழான) தெற்கு ஸமுத்ரமென்ன
அடல் அருதுப்பின் இரு நிதிக்கு இறைவனும், Adal Aruthuppin Iru Nidhikku Iraivanum - ஒருவராலும் வெல்ல முடியாத பலத்தையுடையனாய்ப் பெரிய நிதிகளுக்கு ஸ்வாமியான ராவணனென்ன
அரக்கர் குலங்களும் கெட, Arakkar Kulangalum Keda - ராக்ஷஸஜாதியென்ன ஆகிய இவையெல்லாம் ஒழியும்படியாக
கொடுதொழில் புரிந்த கொற்றவன், Koduthozhil Purindha Kotravan - கடுமையான காரியங்களைச் செய்தருளின மஹாப்ரபு (எவ்விடத்திலுள்ளா னென்றால்)
கொழு சுடர் சுழன்ற விலங்கவில் உரிஞ்சி, Kozhu Sudar Suzhandra Vilangavil Urinji - ஸூர்யன் சுழன்று வரப்பெற்ற (மேரு) மலை வரைக்கும் சென்று முட்டி
மேல் நின்ற விசும்பில், Mel Nindra Visumbil - மேலேயிருக்கிற ஆகாசத்திலே
வெண் கொடி துகில் என விரிந்து, Ven Kodi Thugil Ena Virinthu - வெளுத்த த்வஜபடமென்ன லாம்படி பரந்து
வலந்தரும், Valantharum - (வேகத்தாலே) மிடுக்கையுடையதும்
மணி நீர், Mani Neer - அழகிய தீர்த்தத்தை யுடையதுமான
கங்கையின், Gangaiyin - கங்கைநதியினுடைய
கரை மேல், Karai Mel - கரையின்மேலுள்ள
வதரியாச்சிராமத்து, Vathariyachiramatthu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே
உள்ளான், Ullaan - எழுந்தருளியிருப்பவன்.
981பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெஞ்சே! இப்போது உனக்கு உறுதியாக ‘ஒரு நல்வார்த்தை சொல்லுகிறேன் கேள். அதுயாதெனில்; தொண்டர்களுடைய ‘விரோதியைப் போக்கிப் பரமபதத்தை அளிக்கின்ற பேரருளாளன் ஸ்ரீ பதரிகாச்ரமத்தில் எழுந்தருளியிராநின்றான்; அங்கே சென்று அவனை நீ வணங்கி உஜ்ஜீவிக்கக்கடவை ; இதுவே உனக்கு நான் உரைக்கும் உறுதிச்சொல்.) 4
துணி வினி யுனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு பிணி யொழித்தமரர் பெரு விசும்பு அருளும் பேரருளாளன் எம்பெருமான் அணி மலர்க் குழலாரரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர் மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே –1-4-4
பதவுரை Show / Hide
மனமே, Maname - நெஞ்சமே!,
இனி உனக்கு துணிவு சொல்லுவன், Ini Unakku Thunivu Solluvan - இதுமுதலாக உனக்கு இருக்க வேண்டிய உறுதியைச் சொல்லுகிறேன் (கேள்);
தொண்டர்கள் தமக்கு, Thondargal Thamakku - ஆச்ரிதர்களுக்கு
பிணிஒழித்து, Pinizhil - வியாதிகளைப்போக்கி
அமரர் பெரு விசும்பு அருளும், Amarar Peru Visumbu Arulum - நித்ய ஸூரிகளுடையதான பரமபதத்தை (அவர்கட்கு) அளித்தருளாநின்ற
பேர் அருள் ஆளன், Per Arul Alan - பரமதயாளுவான
எம்பெருமான், Emperuman - ஸர்வேச்வரனை
தொழுது எழு, Thozhudhu Ezhuthu - வணங்கி உஜ்ஜீவிக்கக் கடவை;
அணி நீர், Ani Neer - (கங்கையிலுள்ள) அழகிய ஜலமானது
மலர் அணி குழலார் அரம்பையர், Malar Ani Kuzhalar Arampaiyar - புஷ்பங்களை யணிந்த கூந்தலையுடைய அப்ஸரஸ் ஸ்த்ரீகளினுடைய
துகிலும், Thugilum - சேலைகளையும்
ஆரமும், Aaramum - ஹாரங்களையும்
வாரி வந்து, Vaari Vandu - திரட்டிக்கொண்டுவந்தும்
மணி கொழித்து, Mani Kozhithu - ரத்னங்களைத் தள்ளிக்கொண்டு வந்தும்
இழிந்த, Izhintha - ப்ரவஹிக்கப்பெற்ற
கங்கையின், Gangaiyin - கங்காநதியினுடைய
கரை மேல், Karai Mel - கரைமேலுள்ள
வதரி ஆச்சிரமத்து, Vadhari Aachiramatthu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே
உள்ளான், Ullaan - எழுந்தருளியிருக்கிறான்.
982பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ்ப்பாட்டில் “ அணிமலர்க்குழலாராம் பையர் துகிலும் ஆரமும் வாரிவந்து ” என்ற சொற்போக்கில் கண்ணபிரானுடைய திருவிளையாடல் ஆழ்வார்க்கு நினைவுக்கு வாவே, மற்றொரு க்ருஷ்ண சேஷ் டித்த்தை ஸ்மரித்துப்பேசுகிறார் இதில்) 5
பேய் இடைக்கிருந்து வந்த மற்றவள் பெரு முலை சுவைத்திட பெற்ற தாய் இடைக்கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த வென் தலைவன் சேய் முகட்டுச்சி யண்டமும் சுமந்த செம் பொன் செய் விலங்கலில் இலங்கு வாய் முகட்டிழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-5
பதவுரை Show / Hide
வந்த, Vandha - (யசோதையின் வேஷங்கொண்டு)வந்தவளான
பேய், Pei - பூதனையினுடைய
இடைக்கு இருந்து, Idaikku Irundhu - இடுப்பிலேயிருந்துகொண்டு
அவள்தன், Avalthan - அப்பேய்மகளுடைய
பெரு முலை, Peru Mulai - பெரிய முலையை
சுவைத்திட, Suvaiththida - ருசிபார்த்து உண்ண
பெற்ற தாய், Petra Thaai - (அதைக்கண்ட) யசோதையானவள்
இடைக்கு இருத்தல்அஞ்சுவன் என்று தளர்ந்திட, Idaikku Iruththal Anjuvan Endru Thalarndhida - (‘நான் இனி இவனை) இடுப்பிலே எடுத்துக் கொள்ள அஞ்சுகிறேன்’ என்று சொல்லிக் கூசும்படியாக
வளர்ந்த, Valarntha - வளர்ந்தவனான
எம் தலைவன், Em Thalaivan - அஸ்மத் ஸ்வாமி
சேய் முகடு உச்சி, Seyy Mugadu Uchi - உயர்ந்த கொடுமுடியின் உச்சியிலே
அண்டம் சுமந்த, Andam Sumandha - அண்டத்தைச் சுமக்கிற
செம் பொன் செய்விலங்கலில், Sem Pon Seyvilangalil - மேரு பர்வதத்திலே
இலங்கு, Ilangu - விளங்குகின்ற
வாய்முகடு, Vaay Mugadu - விசாலமான சிகரத்தில் நின்றும்
முன் இழிந்த, Mun Izhintha - ப்ரவஹிக்கின்ற
கங்கையின், Gangaiyin - கங்கைநதியினுடைய
கரை மேல், Karai Mel - கரைமீதுள்ள
வதரியாச்சிராமத்து, Vathariyachiramatthu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே
உள்ளான், Ullaan - எழுந்தருளியிருப்பவன்.
983பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண்ணபிரான் தொட்டிற்பருவத்திற் செய்த சேஷ்டித் மொன்றைக் கீழ்ப்பாட்டி லருளிச்செய்தார்; யௌவனப்பருவத்திற் செய்ததோர் செயலைச் சொல்லுகிறாரிதில்.) 6
தேரணங்கல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து பாரணங்கிமிலேறேழு முன்னடர்த்த பணி முகில் வண்ணன் எம்பெருமான் காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிள வெழக் குத்தி வாரணம் கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-6
பதவுரை Show / Hide
தேர் அணங்கு அல்குல், Ther Anangu Alkul - தேர்போன்று அழகிய நிதம்பத்தை யுடையளும்
செழுகயல் கண்ணி திறத்து, Sezhugayal Kanni Thirathu - அழகிய கயல்போன்ற கண்களையுடையளுமான நப்பின்னைக்காக
ஒரு மறத்தொழில் புரிந்து, Oru Marathozhil Purinthu - கோபம் மிக்க செயலைச்செய்து
பார் அணங்குஇமில், Paar Anangumil - பூமியிலுள்ளாரெல்லாரும் நடுங்கும்படியான முசுப்பையுடைய
ஏறு ஏழும் முன் அடர்த்த, Eru Ezhum Mun Adarttha - ஏழு எருதுகளையும் கண்முன்னே வலியடக்கின
பனி முகில் வண்ணன், Pani Mukil Vannan - குளிர்ந்த மேகம்போன்ற வடிவையுடையனான
எம்பெருமான், Emperuman - எம்பெருமான் (எங்கே எழுந்தருளியிருக்கிறானென்றால்)
காரணம் தன்னால், Kaaranam Thannal - பகீரதப்ரயத்நமாகிற காரணத்தினால்
கடு புனல் கயத்த, Kadu Punal Kayattha - வேகமாகப் பெருகுகின்ற ஜலம் நிறைந்த பள்ளங்களையுடையதும்
கரு வரை பிளவுஎழ குத்தி, Karuvarai Pilavuezha Kuththi - பெரியதொருமலைபிளந்துபோம்படி (அம்மலையை) உடைத்துக்கொண்டு
வாரணம் கொணர்ந்த, Vaaranam Konarntha - (அங்குள்ள) யானைகளைத் தள்ளிக் கொண்டுவந்து ப்ரவஹித்ததுமான
கங்கையின், Gangaiyin - கங்காநதியினுடைய
கரைமேல், Karaimeel - கரையின்மீதுள்ள
வதரியாச்சிராமத்து உள்ளான், Vathariyachiramaithu Ullaan - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே உள்ளான்.
984பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமால் தேவர்களின் பிரார்த்தனைக் கிணங்கிக் கடல்கடைந் தருளின காலத்து, கடையப்பட்ட அக்கடலினின்று ஐராவதயானை, உச்சைச்ச்ரவஸ் என்னுங் குதிரை, விஷம், சந்திரன், கல்ப வ்ருக்ஷம், அமுதம் முதலியன உண்டாயினவென்று புராணங்கள் கூறும். அவற்றில் தேவேந்திரனுக்கு ஐராவதயானையையும் அமிருதத்தையும் தேவர்கட் குத் தலைவனாயிருக்கும் ஸாம்ராஜ்யத்தையும் கொடுத்தருளி, அந்தரங்க அடியவர்களான நமக்குத் தன்னையே கொடுத்தருளி உபகரித்த எம்பெருமான் வதரி யாச்சிரமத்துள்ளான்;) 7
வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும் இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான் அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே –1-4-7
பதவுரை Show / Hide
வேலை வாய் வெம்திறல் களிறும், Velaivai Vemthiral Kalirum - கடலில் நின்றுமுண்டான மிக்க மிடுக்கையுடைய ஐராவதமென்கிற யானையையும்
அமுதும், Amudhum - அம்ருதத்தையும்
விண்ணொடு, Vinnodu - ஸ்வர்க்கலோகத்தையும்
விண்ணவர்க்கு அரசும், Vinnavarkku Arasum - தேவர்களுக்கெல்லாம் அரசனாயிருக்குந் தன்மையையும்
இந்திரற்கு அருளி, Indhirarku Aruli - இந்திரனுக்குக் கொடுத்தருளி
எமக்கும் ஈந்தருளும், Emakkum Eendharulum - நமக்கும் வேண்டிய அருளைச் செய்கிற
எந்தை எம் அடிகள் எம்பெருமான், Endhai Em Adigal Emperumaan - ஸர்வேச்வரன் (எங்கே எழுந்தருளியிருக்கிறானென்னில்)
அந்தரத்து  அமரர், Andharathu Amarar - ஸ்வர்க்கத்திலுள்ள தேவர்களெல்லோரும்
அடி இணை வணங்க ஸேவித்துப், Adi Inai Vananga Seviththu - எம்பெருமானுடைய திருவடிகளை ஸேவித்துப் பிரார்த்திக்க
ஆயிரம் முகத்தினால் அருளி, Aayiram Mukathinaal Aruli - (அவர்களது வேண்டுகோளின்படி) பலமுகமாகப் பிரவஹிக்கும்படி (கங்கையை நோக்கி) நியமித்தருள
மந்தரத்து இழிந்த, Mandarathu Izhintha - (அவ்வண்ணமாகவே) மந்தர மலையினின்றும் பெருகின
கங்கையின் கரை மேல், Gangaiyin Karai Mel - கங்கையின் கரைமீதுள்ள
வதரியாச்சிராமத்து உள்ளான், Vathariyachiramaithu Ullaan - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே உள்ளவன்.’
985பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மாரீசனாகிற மாயமான் மேலே அம்பு எய்து அதனை முடித்தவனும், பரமபக்தனான ப்ரஹ்லாதனுக்குக் கொடுமையியற்றி மஹாத்ரோஹியான ஹிரண்யகசிபுவின் மார்பைப் பிளந்தொழித்தவனும், பிரமனால் சிவனுக்கு நேர்ந்த ப்ரஹ்மஹத்திசாபத்தைத் தொலைத்தருளினவனுமான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான்.) 8
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன்னிறத்து உரவோன் ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனைத் தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன் தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே –1-4-8
பதவுரை Show / Hide
ஒருகால், Orukal - (பஞ்சவடியில் எழுந்தருளியிருந்த) ஒரு ஸமயத்தில்
மான் முனிந்து, Maan Muninthu - மாரிசமாயமானின் மேற் சீறி
வரி சிலை வளைத்த மன்னவன், Vari Silai Valaitha Mannavan - அழகிய வில்லை (அந்த மான் மேலே) வளைத்தெறிந்த செருக்கனாயும்
பொன் நிறத்து உரவோன், Pon Nirathu Uravon - பொன்போன்ற நிறத்தையுடைய ஹிரண்யனென்னுமொரு பலிஷ்டனுடைய
ஊன் முனிந்து, Oon Muninthu - உடலை ஒழித்து விடுவதாகச் சீற்றங்கொண்டு
அவனது உடல் இரு பிளவு ஆ, Avanathu Udal Iru Pilavu Aa - அவ்வசுரனுடைய சரீரம் இரண்டு பிளவாம்படி
உகிர் நுதி மடுத்து, Ukir Nuthi Maduthu - நகங்களின் நுனியை (அவ்வுடலில்) அழுத்தினவனாயும்,
அயன் தான் அரனை முனிந்து, Ayan Thaan Aranai Muninthu - நான்முகக் கடவுள் சிவன் மேல் சீறி
இட்ட, Itta - (அவனுக்குக்) கொடுத்த
வெம் திறல் சாபம் தவிர்த்தவன், Vem Thiral Saapam Thavirnthavan - மிகவும் க்ரூரமான சாபத்தைப் போக்கினவனாயுமுள்ள எம் பெருமான் (எங்குள்ளானெனில்;)
தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த, Thavam Purinthu Uyarndha Maa Muni Konarntha - தபஸ்விகளில் தலைவரான பகீரதர் கொண்டுவந்த
கங்கையின் கரைமேல், Gangaiyin Karameel - கங்கையின் கரைமீதுள்ள
வதரியாச்சிராமத்து உள்ளான், Vathariyachiramaithu Ullaan - ஸ்ரீபதரிகாச்ரமத்திலுளன்.
986பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸகல பதார்த்தங்களையும் பிரளயங் கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும் உபயவிபூதி நாதனு மான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான்.) 9
கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க் குரை கடல் உலகுடன் அனைத்தும் உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான் அண்டமூடறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கவனி யாளலமர பெருகு மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-9
பதவுரை Show / Hide
கொண்டல், Kondal - மேகங்களையும்
மாருதங்கள், Marudhangal - வாயுஸமூஹத்தையும்
குலம் வரை, Kulam Varai - குலபர்வதங்களையும்
தொகு நீர் குரை கடல், Thogu Neer Kurai Kadal - நீர் நிறைந்து கோஷம் செய்கிற கடல்களையும்
உலகு அனைத்தும், Ulaku Anaithum - மற்றுமெல்லா வுலகங்களையும்
உடன் உண்ட மா வயிற்றோன், Udan Unda Maa Vayittron - ஏககாலத்தில் அமுதுசெய்த பெரிய திருவயிறுடையனும்,
ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான், On Sudar Ayndha Umbarum Oozhiyum Aanaan - சந்திரஸூர்யர்கள் பொருந்தியிருக்கிற மேலுலகத்திற்கும் காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனுமான எம்பெருமான் (எங்குளன் எனில்)
அன்று, Anru - பகீரதன் கங்கையை அவதரிப்பித்த அப்போது
அண்டம் ஊடு அறுத்து, Andam Oodu Aruththu - ப்ரஹ்மலோகத்தை இடைவெளி யாக்கிக்கொண்டு
அந்தரத்து இழிந்து, Antharathu Izhindhu - ஆகாசத்தில் வந்திழிந்து
அங்கு, Angu - அங்கு நின்றும்
அவனியாள் அலமர பெருகும், Avaniyal Alamara Perugum - பூமி நடுங்கும்படியாக (பூமியிலே) ப்ரவஹித்ததும்
மண்டு மா மணி நீர், Mandhu Maa Mani Neer - நெருங்கி நிறைந்து தெளிந்த ஜலத்தை யுடையதுமான
கங்கையின் கரை மேல், Gangaiyin Karai Mel - கங்கையின் கரைமேலுள்ள
வதரியாச்சிராமத்து உள்ளான், Vathariyachiramaithu Ullaan - ஸ்ரீபதரிகாச்ரமத்திலுள்ளான்.
987பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டும் பாசுரம் இது.) 10
வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல் வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே –1-4-10
பதவுரை Show / Hide
வரும் திரை மணி நீர் கங்கையின் கரை மேல், Varum Thirai Mani Neer Gangaiyin Karai Mel - (பெரிய வேகத்தோடு) வருகிற அலைகளை யுடைத்தாய் தெளிந்த ஜலத்தை யுடைத்தான
கங்கையின் கரை மேல், Gangaiyin Karai Mel - கங்கையின் கரை மேலே
வதரியாச்சிராமத்து உள்ளானை, Vathariyachiramaithu Ullanai - ஸ்ரீபதரிகாச்ரமத்தில் எழுந்தருளியிருக்கிற
கரு முந்நீர் கடல் வண்ணனை, Karum Munneer Kadal Vannana - கறுத்த மூன்று வகைப்பட்ட நீரையுடைய கடல் போன்ற நிறத்தனான ஸ்ரீமந் நாராயனனை.
எண்ணி, Enni - அநுஸந்தித்து
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
வாய் ஒலி செய்த, Vaai Oli Seitha - திருவாய்மலர்ந்தருளிய
பனுவல், Panoval - பாசுரமாய்
வரம் செய்த, Varam Seitha - சிறந்ததான
ஐந்தும் ஐந்தும், Aindhum Aindhum - இப்பத்துப்பாசுரங்களையும்
வல்லார்கள் தாம், Vallargal Thaam - ஓதவல்லவர்கள்
வெண் குடை கீழ், Ven Kudai Keel - வெண் கொற்றக் குடையின் கீழ் வாழ்ந்து கொண்டு
இரு கடல் உலகம் ஆண்டு, Iru Kadal Ulagam Aandu - பெரிய கடல்சூழ்ந்த இப்பூமியை ஆண்டபின்
உடன், Udan - அடுத்தபடியாக
வானவர் உலகு மருவி, Vaanavar Ulagu Maruvi - ப்ரஹ்மலோக நிர்வாஹகராக இருந்து
இமையவர் ஆகுவர், Imaiyavar Aaguvar - (அதன் பிறகு) நித்யசூரியளாகவும் ஆவர்கள்.
988பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கலையுங்கரியும்.) நெஞ்சே! நீ ஸ்ரீஸாளக்ராமமென்னும் திவ்ய தேசத்தை அடைந்திடு. 1
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் –1-5-1
பதவுரை Show / Hide
கலையும் கரியும் பரிமாவும், Kalaiyum Kariyum Parimavum - மான்களும் யானைகளும் குதிரைகளுமாகிய மிருகங்கள்
திரியும் கானம் கடந்துபோய், Thiriyum Kaanam Kadandupoy - திரியுமிடமான காட்டைத் தாண்டிச்சென்று
சிலையும் கணையும் துணை ஆக, Silaiyum Kanaiyum Thunai Aaga - வில்லும் அம்பும் துணையாகக்கொண்டு
வென்றி செருகளத்து சென்றான், Vendri Serugalathu Senraan - (தனக்கு) வெற்றியை விளைக்கவல்ல போர்க்களத்திலே எழுந்தருளினவனும்,
அலை நீர், Alai Neer - அலைக்கின்ற நீரையுடைய கடலிலே
மலை கொண்டு, Malai Kondu - மலைகளாலே
அணை கட்டி, Anai Katti - ஸேது கட்டி
மதிள் நீர் இலங்கை, Mathil Neer Ilangai - மதிலையும் ஸமுத்ரத்தையும் காப்பாக உடைத்தான இலங்கையிலுள்ள
வாள் அரக்கர் தலைவன், Vaal Arakkar Thalaivan - வாளை ஆயதமாகக் கொண்ட இராவணனுடைய
பத்து தலை, Paththu Thalai - பத்துத்தலைகளையும்
அறுத்து உகந்தான், Aruththu Ugandhaan - அறுத்துத்தள்ளி (ஆச்ரித விரோதி தொலைந்தானென்று) திருவுள்ள முகந்தவனுமான எம்பெருமானுடைய திவ்ய தேசமாகிய
சாளக்கிராமம், Saalakkiraamam - ஸ்ரீஸாளக்ராமத்தை
நெஞ்சே அடை, Nenjee Adai - மனமே!, சென்று சேர்.
989பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெஞ்சே! சாளக்கிராமத்தைச் சென்று சேர்; அத்திவ்யதேசம் யாருடையது? —) 2
கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும் உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான் இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும் தடம் சூழ்ந்து எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-2
பதவுரை Show / Hide
கடம் சூழ் கரியும், Kadham Soozh Kariyum - மதஜலத்தையுடைய யானைகளும்
பரிமாவும், Parimavum - குதிரைகளும்
ஒலி மா தேரும், Oli Maa Therum - ஒலியையுடைய மஹாரதங்களும்
காலாளும், Kaalalum - காலாட்களும்
உடன் சூழ்ந்து, Udan Soozhndhu - ஒன்றாகத் திரண்டு
எழுந்த, Ezhundha - கிளர்ந்து தோற்றின
கடி இலங்கை, Kadi Ilangai - அரணையுடைத்தான லங்கை
பொடி ஆ, Podi Aa - பொடிபடும்படியாக,
வடி வாய், Vadi Vaai - கூர்மையான வாயையுடைய
சரம், Charam - அம்புகளை
துரந்தான், Durandhaan - பிரயோகித்தவனான இராமபிரான் (எழுந்தருளியிருக்குமிடமான)
இரு விசும்பில் இமையோர், Iru Visumbil Imaiyoor - விசாலமான ஸ்வர்க்கத்திலுள்ள தேவர்கள்
இடம் எங்கும் சூழ்ந்துவணங்க, Idam Engum Soozhnthuvanang - பூமியெங்கும் வந்துபரவி ஆச்ரயிக்கத்தக்கதாய்
மணம் கமழும் தடம் சூழ்ந்து, Manam Kamazhum Thadam Soozhndhu - புஷ்பவாஸனைகள் வீசுகின்ற தடாகங்களாலே சூழப்பட்டு
எங்கும் அழகுஆய, Engum Azhagu Aa - எல்லாப்பக்கங்களிலும் அழகையுடைத்தாயிருக்கிற
990பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பண்டைநான் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும், பிண்டமாய்விரிந்த பிறங்கொளியனலும் பெருகிய புனலொடு நிலனும், கொண்டல் மாருதமும் குரைகடலேழும் ஏழுமாமலைகளும் விசும்பும், அண்டமுந்தானாய் நின்ற வெம்பெருமான் -(பெரிய திருமொழி 5-7-1) என்னுமா போலே ஜகத்ஸ்வரூபியாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறார் ஒன்றரையடிக ளால்.) 3
உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா வெண் திக்கும் நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விரலாழி வலவன் வானோர் தம் பெருமான் மருவா வரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன் சலம் சூழ்ந்து அழகாய சாள்க்கிராமம் அடை நெஞ்சே –1-5-3
பதவுரை Show / Hide
உலவு திரையும், Ulavuthiraiyum - உலாவுகின்ற அலைகளையுடைய கடலும்
குலம் வரையும், Kulam Varaiyum - குலபர்வதங்களும்
ஊழி முதலா எண்திக்கும், Oozhi Muthalaa Enthikkum - காலம் முதலாகவுள்ள ஸகலபதார் த்தங்களும் எட்டுத்திசைகளும்
நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான், Nilavum Sudarum Irulum Aay Nindraan - சந்திரனும் ஸூர்யனும் இருட்டும் ஆகிய இப்பொருள்களுக்கெல்லாம் அந்தர்யாமியாயிருப்பவனும்
வென்றி விறல், Vendri Viral - வெற்றியையும் மிடுக்கையுமுடைய
ஆழி வலவன், Aazhi Valavan - திருவாழியை வலத் திருக்கையிலே யுடையவனும்
வானோர் தம் பெருமான், Vaanoor Tham Perumaan - தேவாதிதேவனும்
மருவா அரக்கர்க்கு, Maruvaa Arakkarkku - (தன்னை) ஆச்ரயியாத ராக்ஷஸர்கள் விஷயத்தில்
எஞ்ஞான்றும் சலவன், Enjnjaanrum Salavan - எப்போதும் நன்மை செய்யாதவனுமாகிய எம்பெருமான் (எழுந்தருளியிருக்குமிடமாய்)
சலம் சூழ்ந்து அழகு ஆய, Salam Soozhndhu Azhagu Aay - நீர் நிலங்களால் சூழப்பட்டு அழகு பொருந்தியதான
991பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (‘ஊரகம்’ என்கிற சொல் ஊர் என்று விகாரப்பட்டதாகக்கொண்டு ஊரகமென்கிற திவ்ய தேசத்தைத் தனக்கு இருப்பிடமாகவுடையவன் என்று பொருளுரைப்பது ஒருவழி.) 4
ஊரான் குடந்தை யுத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ் பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-4
பதவுரை Show / Hide
ஊரான், Ooraan - திருவூரகமென்னும் திவ்யதேசத்தை இருப்பிடமாகவுடையவனும்
குடைந்தை உத்தமன், Kudaindhai Uththaman - திருக்குடைந்தையிலே எழுந்தருளியிருக்கிற புருஷோத்தமனும்,
ஒருகால், Orukaal - முன்னொரு காலத்தில்
சிலை இருகால் வளையதேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான், Silai Irukaal Valaiyathera Arakkar Ther Vellam Setraan - வில்லினுடைய இரண்டு நுனிகளையும் வளைத்து அவிவேகிகளான ராக்ஷஸர்களுடைய சேனைத் தொகையைச் சிதைத்தவனும்
வற்றா வருபுனல் சூழ் பேரான், Vatraa Varupunal Soozh Peraan - ஒருநாளும் வற்றாமல் மேன்மேலும் பெருகி வருகின்ற காவிரிநீர் சூழ்ந்த திருப்பேர்நகரில் கண்வளர்ந்தருள்பவனும்
பேர்ஆயிரம் உடையான், Peraayiram Udaiyaan - ஸஹஸ்ரநாமங்களை யுடையவனும்
பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான், Pirangu Sirai Vandu Araikindra Thaaran - நெருங்கி யிருக்கிற சிறகுகளை யுடைய வண்டுகள் ஆரவாரிக்கின்ற (திருத்துழாய்) மாலையையுடை யவனுமான எம்பெருமான்
தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம், Tharaa Vayal Soozhntha Saalakkiraamam - தாரா என்னும் நீர்ப்பறவைகள் நிறைந்திருக்கிற வயல்களாலே சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்தை
992பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அடுத்தார்த்தெழுந்தாளவள். பிலவாய் விட்டலற அவள் மூக்கை அயில் வாளால் விடுத்தான் என்று! சூர்ப்பணகையின் மூக்கறுத்தமை சொல்லுகிறது.) 5
அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால் விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன் கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத் தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-5
பதவுரை Show / Hide
அடுத்து ஆர்த்து எழுந்தாள், Aduthu Aarthu Ezhundhaal - மேல் விழுந்து வந்துகிட்டி ஆரவாரஞ்செய்து கிளர்ந்தவளான சூர்ப்பணகை.
பிலம் வாய் விட்டு அலற, Pilaam Vaai Vittu Alara - பிலம்போன்ற வாயைத்திறந்து கொண்டு கதறும்படியாக
அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான், Aval Mookku Ayil Vaalal Viduththaan - அவளுடைய மூக்கை கூர்மையான வாளாலே (இளையவனைக் கொண்டு) அறுத்தவனும்
விளங்கு சுடர் ஆழி, Vilangu Sudar Aazhi - பிரகாசிக்கின்ற ஒளியையுடைய திருவாழியையுடையவனும்
விண்னோர் பெருமான், Vinnor Perumaan - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையை நண்ணார்முன் இனம் நிரைக்காகல் ஒன்று ஏந்திதடுத்தான், Kaduthu Aarthu Ezhundha Peru Mazhaiyai Nannaarmun Inam Niraikkaakal Ondru Aendhidaththaan - வேகத்துடன் ஆரவாரஞ்செய்துகொண்டு கிளர்ந்து வந்த  கனத்த மழையை எதிரிகளான இந்திராதிகளின் கண்ணெதிரில் பசுக்கூட்டங்களை ரக்ஷிப்பதற்காக, (கோவர்த்தனமென்கிற) ஒரு மலையை ஏந்தித்தடுத்தவனுமான எம்பெருமான்(எழுந்தருளியிருக்கிற)
தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம், Thadam Soozhndhu Azhagaaya Saalakkiraamam - தடாகங்களால் சூழப்பெற்று அழகாயிருக்கிற ஸாளக்ராமத்தை
993பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண்ணபிரானுக்குத் தயிர் பால் வெண்ணெய் முதலியன எப்படி போக்யமாயிருந்தனவோ, அப்படியே, தன்னைக் கொல்ல வந்த பூதனையின் உயிரும் போக்யமாயிருந்ததென்பது தோன்ற அருளிச் செய்கிற அழகு காண்மின்.) 6
தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான் தூய வரி யுருவில் குறளாய்ச் சென்று மா வலியை ஏயான் இரப்ப மூவடி மண்ணின்றேதா வென்று உலகு ஏழும் தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-6
பதவுரை Show / Hide
தாய் ஆய் வந்த பேய் உயிரும், Thaai Aay Vandha Pei Uyirum - தாய்வடிவு கொண்டு வந்த பூதனையின் உயிரையும்
தயிரும் விழுதும், Thayirum Vizhudhum - தயிரையும் வெண்ணெயையும்
உடன் உண்ட வாயான், Udan Unda Vaayaan - ஒன்றுசேர்த்து அமுதுசெய்தவனும்,
ஏயான், Eayaan - (யாசிப்பதற்குத்) தகாதவனானதான்
தூய வரி உருவின் குறள் ஆய்மாவலியை சென்று, Thuya Vari Uruvin Kural Aaymaavaliyai Sendru - பரிசுத்தமும் ஸுந்தரமுமான ரூபத்தையுடையவாமநனாகி மாவலியிடம் சென்று
இன்றே மூ அடி மண் தா என்று இரப்ப, Indrae Moo Adi Mann Thaa Endru Irappa - இப்போதே (எனக்கு) மூன்றடி நிலம் கொடுஎன்று யாசிக்க,
உலகு ஏழும் தாயான், Ulaku Ezhum Thaayaan - எல்லாவுலகங்களையும் தாவியளந்து கொண்டவனும்
காயா மலர் வண்ணன் சாளக்கிராமம், Kaaya Malar Vannan Chaalakkiraamam - காயாம்பூப்போன்ற நிறமுடையனுமான எம்பெருமான் எழுந்தரு ளியிருக்கிற ஸாளக்கிராமத்தை
994பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏனோரஞ்ச வெஞ்சமத்துள்.) கீழ்ப்பாட்டில் ”உலகேழும் தாயான் என்று ஸர்வலோக வ்யாபகத்வம் சொன்னவுடனே, முன்பு ப்ரஹ்லாதன் எம்பெருமான் ஸர்வ வ்யாபகன் என்று சொன்னதும் இரணியன் அதை மறுத்துச் சொன்னதும் முதலிய கதைகள் நினைவுக்கு வந்து ஹிரண்ய வத வ்ருத்தாந்தத்தை அருளிச் செய்கிறாரிதில். 7
ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பாரிய விரணியனை ஊனார கலம் பிளவெடுத்த ஒருவன் தானே யிரு சுடராய் வானாய்த் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகனைத்தும் தானாய் தானுமானான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-7
பதவுரை Show / Hide
ஏனோர் அஞ்ச, Eynoor Anja - சத்துருக்களான அசுரர்கள் பயப்படும்படியாக
அரி ஆய், Ari Aay - நரசிங்கமூர்த்தியாகி
பரிய இரணியனை, Pariya Iraniyanai - தடித்த சரீரத்தை யுடையனான ஹிரண்யனை
வெம் சமத்துள், Vem Samaththul - கடுமையான போர்க்களத்திலே
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்தஒருவன், Oon Aar Akalam Pilavu Eduththoruvan - மாம்ஸம் நிறைந்த மார்பு கிழியும்படி செய்த வொருவனும்,
தானே, Thaaney - இப்படி செய்தருளினவன் தானே
இரு சுடர்ஆய், Iru Sudar Aay - சந்த்ர ஸூர்யர்களாயும்
வான் ஆய், Vaan Aay - ஆகாசமாயும்
தீ ஆய், Thee Aay - அக்நியாயும்
மாருதம் ஆய், Maarudham Aay - காற்றாயும்
மலை ஆய், Malai Aay - மலைகளாயும்
அலை நீர் உலகு அனைத்தும் தான் ஆய், Alai Neer Ulagu Anaiththum Thaan Aay - கடல் ஆழ்ந்த உலகங்கள் யாவுமாய் இருப்பவனும்
தானும் ஆனான் தன் சாளக்கிராமம், Thaanum Aanaan Than Chaalakkiraamam - அஸாதாரணமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையனுமான எம்பெருமானுடைய ஸாளக்ராமத்தை
995பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வெந்தாரென்பும்.) சிவபிரானுடைய ஆபரணங்களையும் அலங் காரங்களையும் பேசுகிறார். 8
வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர் சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என் எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில் தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-8
பதவுரை Show / Hide
வெந்தார் என்பும், Venthaar Enbum - செத்து வெந்துபோன ப்ரேதங்களின் எலும்புகளையும்
சுடு நீறும், Sudu Neerum - சுட்ட சாம்பலையும்
மெய்யில் பூசி, Meiyyil Poosi - சரீரத்தில் தரித்துக்கொண்டு
சந்து ஆர் ஓர் தலைகையகத்து கொண்டு, Sandhu Aar Oor Thalaikayakththu Kondu - சந்துகள் நிறைந்த ஒரு மண்டையோட்டைக் கையிலே எடுத்துக்கொண்டு
உலகு ஏழும் திரியும், Ulagu Ezhum Thiriyum - எல்லாவுலகங்களிலும் திரிந்தவனான
பெரியோன் தான், Periyoon Thaan - பரமசிவன்
சென்று, Senru - கிட்டவந்து
என் எந்தாய் சாபம் தீர் என்ன, En Endhai Saapam Theer Enna - ‘என் ஸ்வாமீ!, (எனக்கு நேர்ந்திருக்கிற) சாபத்தை நீக்கியருள வேணும்’  என்று பிரார்த்திக்க,
திருமார்பில் இலங்கு அமுதம் நீர் தந்தான், Thirumaarbil Ilangu Amudham Neer Thandhaan - தனது திருமார்பில் விளங்குகின்ற அம்ருத ஜலத்தை  அளித்தவனான எம்பெருமான்
சந்து ஆர் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம், Sandhu Aar Pozhil Soozhntha Saalakkiraamam - சந்தனமரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஸாளக்ராமத்தை
996பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (“ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம்” என்று இடைவிடாது கைங்கரியம் பண்ணப்பாரித்திருக்கின்ற ஸ்ரீ வைஷ்ணவர்களின் கோஷ்டி ஒரு பக்கத்திலும்,) 9
தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும் அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம் வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய தன்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-9
பதவுரை Show / Hide
தொண்டு ஆம் இனமும், Thondu Aam Inamum - தொண்டு செய்பவர்களான பாகவதர்களுடைய ஸமூஹமும்
இமையோரும், Imaiyorum - நித்யஸூரிகளும்
துணை நூல் மார்வில் அந்தணரும், Thunai Nool Maarvil Andhanarum - யஜ்ஞோபவீதத்தோடு கூடின மார்வையுடைய பிராமணர்களும்
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும்கோயில், Andaa Emakke Arulaai Endru Anaiyumkoil - ‘தேவனே, எங்களுக்கே அருள் புரிய வேணும்’ என்று சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்து நிற்கிற கோவிலாயும்,
அருகு எல்லாம், Arugu Ellam - சுற்றுப்பிரதேசங்களெங்கும்
வண்டு ஆர் பொழிலின் பழனத்து, Vandu Aar Pozhilin Pazhanathu - வண்டுகள் நிறைந்திருக்கப்பெற்ற சோலைகளிலுண்டான நீர்நிலங்களில்
வயலின் அயலே கயல் பாய, Vayalin Aayale Kayal Paaya - கழனிகளிடத்துள்ள கயல் மீன்கள் வந்து துள்ள
தண்தாமரைகள் முகம்மலர்த்தும், Thanthaamaraigal Mukhammalarthum - குளிர்ந்ததாமரை மொக்குகள் முகம் விகஸிக்கப் பெற்றதாயுமுள்ள
சாளக்கிராமம், Saalakkiraamam - ஸாளக்ராமத்தை
997பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாராவாரும்.) எம்பெருமானுடைய ஸஹஸ்ரநாமங்களை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும் இந்தத் திருமொழியைக் கற்பதும் துல்ய பலமென்கிறார். 10
தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே –1-5-10
பதவுரை Show / Hide
உலகத்து, Ulagaththu - இவ்வுலகத்திலே
அறிவு உடையார் ஆரார், Arivu Udaiyaar Aaraar - விவேகமுள்ளவர்கள் ஆரார் இருக்கிறீர்களோ(அவர்களெல்லீரும்)
அமரர் நல் நாடு அரசு ஆள, Amarar Nal Naadu Arasu Aala - நித்யஸூரிகளுடைய வில க்ஷணமான ஸ்ரீவைகுண்டத்தை அரசாளும் படியாக
பேர்ஆயிரமும் ஓதுமின்கள், Peraayiramum Othuminngal - (ஸ்ரீ வைகுண்டநாதனுடைய) ஆயிரந் திரு நாமங்களையும் ஓதுங்கள்:
அன்றி, Andri - அல்லது,
கார் ஆர் புறவில் மங்கை வேந்தன் கலியன், Kaar Aar Puravil Mangai Vendan Kalyan - மேகங்கள் படிந்துள்ள தோட்டங்களையுடைய திருமங்கை நாட்டுக்குத் தலைவரான திருமங்கையாழ்வார்
தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை, Tharaa Aarum Vayal Soozhntha Saalakkiraamathu Adigalai - ஸாரஸபக்ஷிகள் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்திலே எழுந்தருளியிருக்கு மெம்பெருமான் விஷயமாக
ஒலி செய், Oli Sei - அருளிச்செய்த
தமிழ்மாலை இவையே, Thamizhmaalai Ivaiye - தமிழ் மாலையாகிய இப்பாசுரங்களையே
பிதற்றுமின், Pithatrumin - வாய்வந்தபடி சொல்லுங்கள்.
998பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (ஸ்ரீ நைமிசாரண்யத் தெம்பெருமான் திருவடிகளிலே பெரிய பிராட்டியார் முன்னிலையாகச் சரணம் புகுகிறார் இத்திருமொழியில். பகவானிடத்தில் சரணாகதி செய்யுமிடத்து அவனுடைய மேன்மைகளையும் தன்னுடைய தாழ்வுகளையும் வெளியிட்டுக்கொண்டே செய்ய வேணுமென்று விதியிருப்பதாலும், ஆர்த்தியின் கனத்தாலே தம்முடைய தோஷங்களெல்லாம் நினைவுக்கு வந்தே தீருமாகையாலும், இவ்வாழ்வார் தாமும் தம்முடைய குற்றங்குறைகளை யெல்லாம் விரிவாகப் பேசிக்கொண்டு சரணாகதி பண்ணுகிறார்.) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) 1
வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே பேணினேன், அதனைப்பிழையெனக்கருதிப் பேதையேன்பிறவிநோயறுப்பான், ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை நாணினேன், வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்! –1-6-1
பதவுரை Show / Hide
நைமிசாரணியத்துள் எந்தாய், Naimisaaraniyaththul Endhaai - நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கிற ஸ்வாமீ!,
பேதையேன், Paethaiyen - அறிவு கெட்டவனான அடியேன்,
வாள் நிலா முறவல், Vaal Nila Muraval - ஒளி பொருந்திய புண் சிரிப்பையும்
சிறு நுதல், Siru Nuthal - சிறிய நெற்றியையும்
பெரு தோள், Peru Thol - பெரிய தோளையும் உடையரான
மாதரார், Maatharaar - பெண்களினுடைய
வனம் முலையே, Vanam Mulaiye - அழகிய முலைகளையே
பயன், Payan - பரம புருஷார்த்தமாக
பேணினேன், Paeninaen - (நெடுநாள் வரை) ஆதரித்திருந்தேன்;
அதனை, Adhanai - அப்படி ஆதரித்திருந்த நிலைமையை
பிழை என கருதி, Pizhai Ena Karuthi - தப்பென்று நினைத்து
பிறவி நோய் அறுப்பான் ஏண் இலேன் இருந்தேன், Piravi Noi Aruppaan Aen Ileen Irundhen - ஸம்ஸாரமாகிற வியாதியை அறுத்துக்கொள்ள எண்ண மில்லாதவனாகவே இருந்திட்டேன்;
எண்ணினேன், Enninaen - ஸ்வரூபத்தை ஆராயத்தொடங்கினேன்;
எண்ணி, Enni - ஆராயவே,
இளையவர் கலவியின் திறத்தை நாணினேன், Ilaiyavar Kalaviyin Thiraththai Naaninaen - விசயாந்தர போகங்களைக் காறியுமிழ்ந்தேன்;
வந்து உன் திரு அடி அடைந்தேன், Vandhu Un Thiru Adi Adaindhen - இன்று உன் திருவடிகளை வந்து பணிந்தேன்.
999பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எம்பெருமான் பக்கல் வந்துசேர்ந்தவுடனே, கீழ்க்கழிந்த காலத்துக்கு அநுதாபம் பிறப்பது வழக்கம். இப்படி பகவத் விஷயத்திலீடுபட்டு ஆநந்தமயமாகப் போது போக்க வேண்டியிருக்க, அந்தோ! விஷயாந்தரங்களில் ஈடுபட்டுத் தருமத்தை அடியோடு மறந்து எவ்விதத்திலாவது இந்திரியங்களுக்கு திருப்தியை உண்டாக்குவதே வேண்டியது என்று கொண்டு அருமந்த காலத்தை அநியாயமாகப் போக்கினேனே! என்று கழிவிரக்கங் காட்டுகின்றார் முன்னடிகளில்.) 2
சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து புலம்படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா அலம் புரி தடக்கை யாயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர் நலம் புரிந்து இறைஞ்சுன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-2
பதவுரை Show / Hide
சிலம்பு அடி உருவின், Silambu Adi Uruvin - சிலம்புகளை அணிந்த கால்கள் அழகாயிருக்கப் பெற்றவர்களும்
கருநெடு கண்ணார் திறத்தன் ஆய், Karunedu Kannaar Thiraththan Aay - கறுத்து நீண்ட கண்களையுடையவர்களுமான மாதர்களிடத்திலேயே ஆஸக்தனாய்
அறத்தையே மறந்து, Araththaye Maranthu - தருமங்களை மறந்து
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி, Pulan Padinthu Unnum Pogame Perukki - இந்திரியங்கள் பொருந்தி அநுபவிக்கிற விஷய போகங்களையே மேன் மேலும் அதிகப்படுத்திக்கொண்டு
பொழுதினை வாளா போக்கினேன், Pozhudhinai Valaapo Kkinen - வாழ்நாளை வீணாகக் கழித்தேன்;
அலம் புரி தடகை, Alam Puri Thadakai - போதும் போதுமென்று சொல்லும்படியாக தாநஞ்செய்கிற பெரிய திருக்கையையுடைய
ஆயனே, Aayaney - கோபால க்ருஷ்ணனே!
மாயா, Maayaa - ஆச்சரியமான செய்கைகளையுடையவனே!
வானவர்க்கு அரசனே, Vaanavarkku Arasane - தேவாதிதேவனே!
வானோர், Vaanor - நித்யஸூரிகள்
நலம் புரிந்து இறைஞ்சு, Nalam Purinthu Irainju - அன்பு புண்டு ஆக்ரயிக்கப்பெற்ற
உன் திரு அடி அடைந்தேன், Un Thiru Adi Adaindhen - உன் திருவடிகளிலே இன்று வந்து கிட்டப்பெற்றேன்.
1000பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (போக்கினேன் பொழுதினை வாளா ” என்று வீண்போது போக்கினதாகக் கீழ்ப்பாட்டிலருளிச் செய்தார் ;) 3
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து கரி குழல் மடந்தையர் திறத்து காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும் வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை யலமரக் கடைந்த நாதனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-3
பதவுரை Show / Hide
வேலை வெண்திரை அலமர, Velaivendhirai Alamara - கடலிலேயுள்ள வெளுத்த அலைகள் கலங்கும்படி
கடைந்த, Kadaindha - (தேவர்களுக்காகக்) கடைந்தருளின
சூதினை பெருக்கி, Soodhinai Perukki - அதிகமாகச் சூதாடியும்
களவினை துணிந்து, Kalavinai Thuninthu - களவு செய்வதில் துணிந்தும்
சுரி குழல் மடந்தையர் திறத்து காதலேமிகுத்து, Suri Kuzhal Madanthaiyar Thirathu Kaadhalemiguthu - சுருண்ட கூந்தலையுடைய ஸ்த்ரீகள் விஷயத்திலே மிக்க ஆசைகொண்டு
கண்ட ஆ திரிந்த, Kanda Aa Thirindha - கண்டபடியெல்லாம் தட்டித்தரிந்த
தொண்டனேன், Thondaneyn - அடியேன்
நமன் தமர்செய்யும் வேதனைக்கு, Naman Thamarcheyyum Vedhanaiyikku - யமபடர்கள் செய்யப்போகிற ஹிம்ஸைகளை நினைத்து
ஒடுங்கி நடுங்கினேன், Odungi Nadunginen - உடல் குன்றி நடுங்கினவனாய்
வந்து உன் திருஅடி அடைந்தேன், Vandhu Un Thirudi Adaindhen - இன்று வந்து உன் திருவடிகளைச் சேர்ந்துவிட்டேன்.
1001பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அக்நி ஸாக்ஷிகமாகத் தாம் விவாஹம் செய்து கொண்ட பெண்டிர்களை அலக்ஷியஞ் செய்து விட்டிட்டுப் பிறருடைய மனைவியையும் பொருளையும் கைப்பற்றி இவ்வுலகில் மனம் போனபடி திரிந்தவர்கள் அந்தப் பாவங்களின் பலனை அனுபவிப்பதற்கு யம லோகஞ் சென்றவாறே அங்கு யமபடர்கள் வந்து பிடித்துக்கொண்டு சக்தி யுள்ளவளவும் புடைத்துத் தங்களுக்கும் இளைப்பு உண்டானவாறே ‘ இங்கே கிடவுங்கள்’ என்று ஒரு மூலையில் தள்ளிவைத்து, செம்பினால் செய்யப்பட்டு நெருப்பிலே பழுக்கப் பழுக்கக் காய்ச்சப்பட்டு எரி வீசுகின்ற பதுமையைக் கொணர்ந்து முன்னே நிறுத்தி, பாவீ! முன்னே பிறர் மனைவியை அணைந்தாயே; இப்போது இந்தப் பதுமையை அணைந்து கொள்” என்று சொல்லி அணைவித்துத் துன்பப்படுத்து வர்கள் – என்கிற விஷயத்தைக் கேள்விப்பட்டது முதல் அஞ்சி நடுங்குகின்றேன் ; உன்னைச் சரணமடைந்தால் எல்லா அச்சமும் நீங்கிவிடும் என்று இப்போது உன்னைச் சரணமடைந்திட்டேன் என்றாராயிற்று.) 4
வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-4
பதவுரை Show / Hide
வம்பு உலாம் கூந்தல் மனைவியை துறந்து, Vambu Ulaam Koondhal Manaiviyai Thurandhu - பரிமளம் வீசாநின்ற கூந்தலையுடையளான தாலி கட்டின பெண் சாதியை உபேக்ஷித்துவிட்டு
பிறர் பொருள் தாரம் என்று இவற்றை நம்பினார், Piraar Porul Thaaram Endru Ivatrai Nambinaar - பிறருடைய பொருள், பிறருடைய மனைவி என்னும்படிய பரத்ரவ்யங்களை விரும்பினவர்கள்
இறந்தால், Irandhaal - இறந்துபோனால்
நமன் தமர், Naman Thamar - யமபடர்கள்
பற்றி, Patri - பிடித்துக்கொண்டு
எற்றி, Etri - துன்பப்படுத்தி
வைத்து, Vaiththu - (தங்களுக்கும் கை சலித்தவாறே) ஓரிடத்தில் போட்டுவைத்து,
பாவீ, Paavee - “பெரும்பாவங்களைச் செய்து இவ்விடம் வந்து சேர்ந்தவனே!
செம்பினால் இயன்ற எரி எழுகின்ற பாவையை தழுவு என, Sembinaal Iyanra Eri Ezhugindra Paavaiye Thazhuvu Ena - செம்பினால் செய்யப்பட்டதாய் நெருப்புப் பற்றியெரிகின்றதான இந்த ஸ்த்ரீப்ரதிமையைத்தழுவிக்கொள்” என்று
மொழிவதற்கு அஞ்சி, Mozhivadharku Anji - சொல்லப்போகிறார்களே! யென்று பயப்பட்டு
நம்பனே, Nambane - ஆச்ரிதர்களுக்கு நம்பத்தகுந்தவனே!
1002பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இடும்பையாலடர்ப்புண்டு.- விஷய போகங்களைச்செய்து திரிபவர் களும் ஏழைகளைக் கண்டால் ஐயோ ! என்று இரங்குவதுண்டு ; அந்த இரக்கமும் எனக்கு இல்லாமல் போயிற்றே ! என்று அநுதாபப்படுகிறார்.) 5
இடும்பையால் அடப்புண்டு இடுமினோ துற்றென்று இரந்தவர்க்கு இல்லையே என்று நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர் கொடு மிறைக்கு அஞ்சி நடுங்கி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-5
பதவுரை Show / Hide
இடும்பையால் அடர்ப்புண்டு, Idumpaigal Adarppundhu - ஏழ்மைத்தனத்தினால் கஷ்டப்பட்டு
ஓ! துற்று இடுமின் என்று, O Thuttru Idumin Enru - “ஐயோ! ஒரு கவளம் இடுங்கோள்” என்று கதறி
இரந்தவர்க்கு, Irandavarkku - பிச்சை கேட்டவர்களுக்கு
இல்லையே என்று, Illaiye Enru - இல்லவேயில்லை யென்று சொல்லி
நெடு சொலால் மறுத்த, Nedu Solaal Marutha - நீண்ட சொல்லாலே திரஸ்கரித்த
நீசனேன் நான், Neesanen Naan - நீசனாகிய நான்
அந்தோ, Andho - ஐயோ!
வினை பயன்தன்னை நினைக்கிலேன், Vinai Payanthanai Ninaikkilena - பாபங்களுக்கு நேரக்கூடிய பலன்களை நெஞ்சாலும் நினைக்க மாட்டாதவனாயிருக்கின்றேன்;
கடு சொலார் கடியார் காலனார் தமரால் படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி நடுங்கி, Kadu Solaar Kadiyaar Kaalanaar Thamaral Paduvathu Oru Kodu Mirraikku Anji Nadungi - க்ரூரமான சொற்களையுடையராய் க்ரூரமான செய்கை களையுமுடையரான யமபடர்களாலே உண்டாகக் கூடியகடினமாக ஹிம்ஸைகளை நினைத்து அஞ்சி நடுங்கி
1003பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜீவஹிம்ஸைகள் பண்ணித் திரிந்ததற்கும் எல்லையில்லையென்கிறார். கோடியமனமாவது வழியைவிட்டு விலகின மனம்; ருஜு வான வழியில் போகாமல் கோணலாகச் செல்லுகின்ற மனம் என்றபடி. புத்தி கெட்டுச் சினத்தொழில்களைச் செய்தேனென்கிறார்.) 6
கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடும் திளைத்திட்டு ஓடியும் உழன்றும் உயிர் களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் நமனார் பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே பாற் கடல் கிடந்தாய் நாடி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-6
பதவுரை Show / Hide
பரமனே, Paramaney - புருஷோத்தமனே!
பாற்கடல் கிடந்தாய், Paarkadal Kidandhai - திருப்பாற்கடலில் திருக்கண் வளர்ந்தருளுமவனே!
கோடிய மனத்தால், Kodiyamanathal - கோணலான நெஞ்சோடே
சினம் தொழில் புரிந்து, Sinam Thozhil Purinthu - பிறர்க்கு விரோதமான காரியங்களைச் செய்து
நாய் இனத்தொடும் திரிந்து திளைத்திட்டு, Nai Inathodum Thirinthu Thilaithittu - நாய் முதலிய துஷ்ட ஜந்துக்களோடு கூடித்திரிந்து வேட்டையாடிக்களித்து
ஓடியும் உழன்றும், Oadiyum Uzhanthum - இங்குமங்கும் ஓடித்திரிந்தும்
உயிர்களே கொன்றேன், Uyirgale Konren - பிராணி ஹிம்ஸையையே செய்துகொண்டிருந்தவனாய்
உணர்வு இலேன் நான், Unarvu Ilen Naan - விவேக சூந்யனாயிருந்த நான்
நமனார் பாடியை பெரிதும் பரிசு அழித்திட்டேன், Namanar Paadiyai Peridum Parisu Azhithitten - யமபட்டணமான நரகத்தின் நிலைமையை மிகவும் அழித்து விட்டேன்.
1004பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மனமொழி மெய்கள் மூன்றாலும் பாவங் களையே செய்து செத்தவர்கள் போகிற வழியின் கொடுமையைக் கேள்விப்பட்ட மாத்திரத்திலே நடுநடுங்கி வந்து உன் திருவடிகளைப் பற்றினேன் என்கிறார்.) 7
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும் துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய் வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவர் தானவர்க்கு என்றும் நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-7
பதவுரை Show / Hide
விளங்கனி முனிந்தாய், Vilangani Munindhai - விளாம்பழமாய் வந்து தோன்றின அஸுரனைச் சீறித் தொலைத்தவனே!
வஞ்சனேன் அடியேன்நெஞ்சினில் பிரியா வானவா, Vanjanen Adiyennenjinil Priya Vaanavaa - வஞ்சகனான என்னுடைய நெஞ்சினுள்ளும் புகுந்து பிரியாதிருக்கிற தேவனே!
தானவர்க்கு என்றும் நஞ்சனே, Thaanavarkku Endrum Nanjane - அசுரர்களுக்கு எப்போதும் மிருத்யுவாயிருப்பவனே!
நீதி அல்லாதன, Neethi Alladhana - அநீதியான ஒழுக்கங்களை
நெஞ்சினால் நினைந்தும், Nenjinaal Ninaindhum - (முதலில்) நெஞ்சாலே நினைத்தும்
வாயினால் மொழிந்தும், Vaayinal Mozhindhum - (பிறகு) வாயாலே சொல்லியும்
செய்தும், Seithum - (பிறகு) செய்கையினால் அனுட்டித்தும்
துஞ்சினார், Thunjinar - முடிந்தவர்கள்
செல்லும், Sellum - அடையத்தக்க
தொல் நெறி, Thol Nerii - நரகமார்க்கத்தை
கேட்டே, Kette - (கற்றுணர்ந்த பெரியோர் சொல்லக்) கேட்டமாத்திரத்திலே
துளங்கினேன், Thulankinen - நடுங்கினவனாய்க்கொண்டு உன் திருவடி அடைந்தேன்-.
1005பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கலி புருஷன் என்னைத் துன்பப்படுத்த நினைத்துத் தனக்குக் கையாட்களான இந்திரியங்களையழைத்து நீங்கள் திருமங்கை யாழ்வாரை நன்றாக ஹிம்வித்துவிடுங்கள் என்று ஏவினான் ;) 8
ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா பாவினாரின் சொல் பன் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என் நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-8
பதவுரை Show / Hide
குறுங்குடி, Kurungudi - திருக்குறுங்குடியிலெழுந்தருளியிருக்கிற
நெடு கடல் வண்ணா, Nedu Kadal Vanna - பெரிய கடல் போன்ற திருநிறமுடையவனே!
கலியார், Kaliyar - கலிபுருஷனென்கிற ஒரு மஹாப்ரபுவானவர்
நலிக என்று, Nalika Endru - “இந்தத் திருமங்கை மன்னனை ஹிம்ஸியுங்கோள்” என்று சொல்லி
என் மேல், En Mel - என் மேலே
ஐவர் ஏவினார், Aivar Aevinar - பஞ்சேந்திரியங்களையும் ஏவிவிட்டார்;
எங்ஙனே வாழும் ஆறு, Enggane Vaalum Aaru - அந்தக் கலிபுருஷர் இனி பிழைக்க வழி ஏது? (ஏனென்னில்;)
நான், Naan - அடியேன்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன், Kovinar Seyyum Kodumaiyai Madithen - குறும்பர்களான அந்த இந்திரியங்கள் செய்யத்தக்க கொடுமைகளை அப்புறப்படுத்திவிட்டேன்;
என் நாவினால், En Naavinai - எனது நாவினாலே
பா ஆர் இன் சொல் பல் மலர்கொண்டு, Paa Ar In Sol Pal Malarkondu - நல்ல சந்தங்கள் நிறைந்த இனிய சொற்களாகிற புஷ்பங்கள் பலவற்றையுங் கொண்டு
உன் பாதமே பரவி, Un Paathame Paravi - உன் திருவடிகளையே தோத்திரஞ்செய்து
பணிந்து, Panindhu - கீழே விழுந்து
1006பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தம்முடைய அத்யவஸாயத்தை வெளி யிடுகிறாரிதில்.) 9
ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல் தானுடைக் குரம்பை பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன் தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய் நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-9
பதவுரை Show / Hide
தேன் உடை கமலம் திருவினுக்கு அரசே, Then Udai Kamalam Thiruvinukku Arase - தேன் நிறைந்த தாமரைப்பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்குப் பதியானவனே!
திரை கொள்மா நெடு கடல் கிடந்தாய், Thirai Kolma Nedu Kadal Kidandhai - அலைகள் நிரம்பிய மிகப்பெரிய திருப் பாற்டலில் கண் வளர்ந்தருளுமவனே!
ஊன், Oon - மாமிசத்தை
இடை சுவர் வைத்து, Idai Suvar Vaiththu - நடுநடுவே சுவராக வைத்து
என்பு, Enbu - எலும்புகளை
தூண் நாட்டி, Thoon Naatti - கம்பங்களாக நட்டு
உரோமம் வேய்ந்து, Uromam Veyndhu - மயிர்களை மேலே மூடி
ஒன்பது வாசல் தான் உடை, Onbathu Vaasal Thaan Udai - நவத்வாரங்களையுடையதாகச் செய்யப்பட்ட
குரம்பை, nan - குடிசை போன்ற இந்த சரீரத்தை
பிரியும் போது, nan - விட்டுப்பிரியுங்காலத்தில்
உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன், nan - உன்னுடைய திருவடிகளே ரக்ஷகமாக வேணுமென்று நினைத்திருந்தேன்;
நானுடை தவத்தால் திருஅடி அடைந்தேன், nan - (இப்போது) என்னுடைய பாக்கியத்தினால் திருவடிவாரத்தில் சேரப்பெற்றேன்.
1007பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இமையோர் நாதனாகிய இந்திரன் தனது பரிவாரங்களை யெல்லாம் அழைத்து நாம் எல்லாரும் நைமிசாரணியத்துள் சென்று எம்பெருமானை ஸேவிப்போம் வாருங்கள்;) 10
ஏதம் வந்து அணுகா வண்ண நாம் எண்ணி எழுமினோ தொழுதும் என்று இமையோர் நாதன் வந்து இறைஞ்சும் நைமி சாரணி யத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை தான் கற்று வல்லார்கள் ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் உம்பரும் ஆகுவர் தாமே –1-6-10
பதவுரை Show / Hide
ஏதம் வந்து அணுகா வண்ணம், nan - “துக்கங்கள் நம்மிடம் வந்து சேராத வகையை
நாம் எண்ணி, nan - நாம் எண்ணியிருப்போமாகில்
தொழுதும் எழு மின் என்று, nan - (நைமிசாரண்யத்திலேபோய்த்) தொழுவோம் வாருங்கள்” என்று சொல்லி
இமையோர் நாதன் வந்து, nan - தேவேந்திரன் வந்து
இறைஞ்சும், nan - ஆச்ரயிக்கப்பெற்ற
நைமிச அரணியத்து எந்தையை, nan - நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானை
சிந்தையுள் வைத்து, nan - தியானம் செய்து
காதல் மிகுந்த, nan - பகவத்பக்தி அதிகரிக்கப்பெற்ற
கலியன், nan - திருமங்கையாழ்வார்
வாய் ஒலி செய்மாலை, nan - அருளிச் செய்த இச்சொல் மாலையை
கற்று வல்லுநர்கள் தாம், nan - அப்யஸித்துத் தேறினவர்கள்
ஓதம்நீர் வையகம், nan - கடல் சூழ்ந்த இப்பூமண்டலத்தை
வெண் குடை கீழ் ஆண்டு, nan - வெளுத்த குடை நிழலின் கீழே இருந்துகொண்டு அரசாட்சி செய்தபின்பு
உம்பரும் ஆகுவர், nan - நித்யஸூரிகளோடும் சேரப்பெறுவர்கள்.
1008பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ் இரண்டாந் திருமொழியின் நான்காம் பாட்டின் உரையில் நரஸிம்ஹாவதார ப்ரமேயங்களை மிக்க விரிவாக வரைந்தோ மாதலால் அங்கே கண்டு கொள்வது.) 1
அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய் அவுணன் பொங்காவாகம் வள்ளு கிரால் போழ்ந்த புனிதன் இடம் பைம் கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ் செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே –1-7-1
பதவுரை Show / Hide
அங்கு, Angu - (‘நீ சொல்லுகிற விஷ்ணு இங்கில்லை’ என்று இரணியன் சபதஞ் செய்த) அவ்விடத்திலே
அம் கண் ஞாலம் அஞ்ச ஓர் ஆள் அரி ஆய், Am Kan Nyaalam Anja Oor Aal Ari Aay - அழகியதாய் விசாலமான பூமியிலுள்ளாரெல்லாரும் பயப்படும்படியான ஒப்பற்ற நரசிங்கமூர்த்தியாய் (எம்பெருமான் தோன்றினதைக் கண்டு)
அவுணன் பொங்க, Avunan Pong - இரணியன் கிளர்ந்த வளவிலே,
ஆகம், Aagam - அவனது உடலை
வள் உகிரால், Val Ukiraal - கூர்மையான நகங்களாலே
போழ்ந்த, Pozhntha - இருபிளவாகப் பிளந்த
புனிதன் இடம், Punithan Idam - பரம பரிசுத்தனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது;-
செம் கண் ஆளி, Sem Kan Aali - (சீற்றத்தால்) சிவந்த கண்களையுடைய சிங்கங்களானவை
பை கண் ஆனை கொம்பு கொண்டு, Pai Kan Aanei Kombu Kondu - பசுமையான கண்களையுடைய யானைகளின் தந்தங்களைக் கொணர்ந்து
பத்திமையால், Pathimaiyaal - பக்தியினாலே
அடி கீழ், Adi Keezh - (பகவானுடைய) திருவடிகளிலே
இட்டு, Ittu - ஸமர்ப்பித்து
இறைஞ்சும், Iraichum - ஆச்ரயிக்கப்பெற்ற
சிங்கவேள் குன்றம், Singaveal Kunram - அஹோபிலமென்கிற சிங்க வேள்குன்றமாம்.
1009பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சீற்றத்தாலே கடைவாயுடனே நாக்கை எற் றிக்கொள்ளுகிற பெரிய வாயையுடைய நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றி, பர ஹிம்ஸையே போது போக்கான இரணியனுடைய மார்பைப் பிளந்த பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேழ்குன்றம்.) 2
அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூர் உகிராளன் இடம் மலைத்த செல் சாத்தெறிந்த பூசல் வன் துடிவாய் கடுப்ப சிலைக்கை வேடர் தெழிப் பறாத சிங்க வேள் குன்றமே –1-7-2
பதவுரை Show / Hide
அலைத்த பேழ்வாய், Alaitha Pezhvai - (சீற்றத்தாலே) நாக்கு அலையா நின்றுள்ள பெரிய வாயையும்
வாள் எயிறு, Vaal Eiyiru - ஒளி பொருந்திய பற்களையுமுடையதாய்
ஓர், Oor - ஒப்பற்றதாய்
கோள், Kol - மிடுக்கையுடையதான
அரி ஆய், Ari Aay - நரஸிம்ஹமாய்க்கொண்டு
கொலை கையாளன் அவுணன் நெஞ்சு இடந்த, Kolai Kaiyaalan Avunan Nenju Idanthu - ஜீவ ஹிம்சையில் கைகாரனான இரணியனுடைய மார்வைக் கிழித்தெறிந்த
கூர் உகிராளன் இடம், Koora Ukiraalan Idam - கூர்மையான நகங்களையுடைய எம்பெருமான்  எழுந்தருளியிருக்கு மிடமாவது:-
மலைத்த, Malaittha - (வேடர்களாலே) ஆக்கிரமிக்கப்பட்ட
செல் சாத்து, Sel Saathu - வழிப்போக்கு ஜனங்களின் ஸமூகத்தாலே
எறிந்த, Erintha - (பிரதியாகச்) செய்யப்பட்ட
பூசல், Poosal - சண்டையிலே
வல் துடி வாய் கடுப்ப, Val Thudi Vaai Kaduppa - கடூரமான தொனியை யுடைத்தான பறையானது கோஷம் செய்ய,
சிலை கை வேடர், Silai Kai Veda - வில்லைக் கையிலேயுடைய வேடருடைய
தெழிப்பு, Thezhippu - ஆரவாரமானது
அறாத, Aradha - எப்போதும் மாறாத
1010பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வடிவின் பெருமைக்குத் தகுதியாகப் பெரிய வாயையும், ஒளி பொருந்திய (அல்லது, வாள் போன்ற) கோரப்பற்களையு முடைய நரசிங்கமாகத் தோன்றி இரணியனுடைய மாம்ஸஞ் செறிந்த மார்வைப் பிளந்த பெருமான் உறையுமிடம் சிங்கவேள் குன்றம்.) 3
ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம் ஓய்ந்த மாவுமுடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால் தேய்ந்த வேயுமல்ல தில்லாச் சிங்க வேள் குன்றமே –1-7-3
பதவுரை Show / Hide
ஏய்ந்த பேழ்வாய் வாள் எயிறு, Eyndha Pezhvai Vaal Eiyiru - (வடிவுக்குத்) தகுதியாகப் பெருத்த வாயையும் வாள் போன்ற பற்களையுடைமுடையதாய்
ஓர் கோள் அரி ஆய், Oru Kola Ari Aay - ஒப்பற்றதாய் மிடுக்கையுடையதான நரசிங்கமாகி
அவுணன், Avunan - இரணியாசுரனுடைய
வாய்ந்த ஆகம், Vaayndha Aagam - வளர்ந்த உடலை
வள் உகிரால், Val Ukiraal - கூர்மையான நகங்களாலே
வகிர்ந்த, Vagirntha - கிழித்தெறிந்த
அம்மானது இடம், Ammaanathu Idam - ஸ்வாமி எழுந்தருளி யிருக்கிற இடமாவது:-
ஓய்ந்த மாவும், Oyndha Maavum - (கடினமான நிலங்களில் அங்குமிங்கும் திரிந்து அலைந்ததனால்) களைத்துப்போன மிருகங்களும்
உடைந்த குன்றும், Udaindha Kunrum - உடைந்துபோன சிறு மலைகளும்
அன்றியும், Andriyum - இன்னமும்
நின்று அழலால் தேய்ந்த வேயும் அல்லது, Ninru Azhalal Theyndha Veyum Allathu - இருந்தபடியே நெருப்பாலே குறைகொள்ளியாய்க் கிடக்கிற மூங்கிலும் ஆகிய இவைகள் தவிர
இல்லா, Illaa - வேறொன்றுமில்லாத
1011பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கையும் வேலுமாயிருக்கிற விருப்பைக் கண்ட காட்சியிலே எல்லாரையும் துக்கப்படுத்தவல்லவனான இரணியனுடைய உயிரைக் கவர்ந்து அவனது மார்வைப் பிளந்தருளின பெருமான் உறையுமிடமாவது சிங்கவேழ்குன்றம்.) 4
எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் எதலனின் இன்னுயிரை வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம் கவ்வு நாயும் கழுகும் உச்சிப் போதொடு கால் சுழன்று தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே –1-7-4
பதவுரை Show / Hide
எவ்வம் வெம்வேல், Evvam Vemveel - துன்பத்தை விளைப்பதாய் தீக்ஷ்ணமான வேலாயுதத்தையுடையனாய்
ஏதலன், Aethalan - பாகவத விரோதியான
பொன் பெயரோன், Pon Peyaron - இரணியனுடைய
இன் உயிரை, In Uyirai - இனிமையான பிரானணை
வவ்வி, Vavvi - அபஹரித்து
ஆகம், Aagam - (அவனுடைய) சரீரத்தை
வள் உகிரால், Val Ukiraal - கூர்மையான நகங்களாலே
வகிர்ந்த அம்மானது இடம், Vagirntha Ammanathu Idam - கிழித்தெறிந்த பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது:-
கவ்வும் நாயும், Kavvum Nayum - (கண்டவர்களை) யெல்லாம் கவர்கின்ற நாய்களும்
கழுகும், Kazhugum - கழுகுகளும் (நிறைந்திருப்பதனாலும்)
உச்சிப் போ தொடு கால் சுழன்று, Uchchi Po Thodu Kaal Suzhndru - கொழுத்த வெய்யிலும் சுழல்காற்றும் எப்போது மிருப்பதனாலும்
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா, Deivam Allal Chella Onna - தேவதைகள் தவிர மற்றையோர் சென்று கிட்ட  முடியாததான
1012பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சீற்றத்தாலே பல்லோடு நாக்கைச் செலுத்தி மென்றுகொண்டே யிருக்கிற பெரிய வாயையும் ஒளிவிடுகிற எயிற்றையும் மிடுக்கையுமுடைய நரசிங்கமாய்த் தோன்றி இரணியன் உயிர்மாளும்படியாக அவனது மார்வைப் பிளந்த பெருமானெழுந்தருளி யிருக்குமிடம் சிங்கவேழ் குன்றம். அஃது எப்படிப்பட்டது? மாறாமல் நின்று எரிகிற அக்நியைச் சுழல் காற்றானது முகந்து கொண்டு ஆகாயமெங்கும் பரவி வீசியெறிகையாலே சென்று காண்பதற்கு அருமைப்படும் கோயில்.) 5
மென்ற பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் பொன்ற வாகம் வள்ளுகிரால்  போழ்ந்த புனிதனிடம் நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய சென்று காண்டற்கரிய கோயில் சிங்க வேள் குன்றமே –1-7-5
பதவுரை Show / Hide
மென்ற பேழ்வாய், Mendra Pezhvai - (சீற்றத்தாலே) மடித்த பெரிய வாயையும்
வாள் எயிறு, Vaal Eiyiru - வாள்போன்ற பற்களையுமுடையதாய்
ஓர், Oor - ஒப்பற்றதாய்
கோள், Kol - மிடுக்கையுடையதான
அரி ஆய், Ari Aay - நரசிங்கமாகி
பொன்றஅவுணன், Ponraavunan - (தன்னைக் கண்டமாத்திரத்திலே) செத்துப்போன இரணியனுடைய
ஆகம், Aagam - உடலை
வள் உகிரால், Val Ukiraal - கூர்மையான நகங்களாலே
போழ்ந்த, Pozhntha - பிளந்திட்ட
புனிதன் இடம், Punithan Idam - பரிசுத்தனான பகவான் எழுந்தருளியிருக்குமிடமாவது:-
சூறை, Soorai - சுழல்காற்றானது
நின்ற செம் தீ மொண்டு, Nindra Sem Thee Mondo - குறைவில்லாமலிருக்கிற சிவந்த நெருப்பை வாரிக்கொண்டு
நீள் விசும்பூடு இரிய, Neel Visumpoo Iriya - விசாலமான ஆகாசமடங்கலும் ஓடிப்பரவுகிறபடியாலே
சென்று காண்டற்கு அரிய கோயில், Sendru Kaandharku Ariya Koyil - கிட்டிச் சென்று ஸேவிக்க முடியாத கோயிலான
1013பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சீற்றத்தாலே அக்நிஜ்வாலைபோலே ஜ்வலிக்கிற சிவந்த கண்ணையும் ஒளிவிடாநின்ற பெரிய வாயையும் கோரப்பற்களையும் கண்டு “அப்பப்ப! இதென்ன உரு!” என்று பயப்பட்டு தேவர்கள் அங்கு மிங்கும் கால் தடுமாறிச் சிதறி ஓடும்படியாக நரசிங்கவுருக்கொண்டு எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேழ்குன்றம்.) 6
எரிந்த பைங்கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடி தெவ்வுரு வென்று இரிந்து வானோர் கலங்கியோடே இருந்த வம்மானதிடம் நெரிந்த வேயின் முழை யுள் நின்று நீண் எரி வா யுழுவை திரிந்த வானைச் சுவடு பார்க்கும் சிங்க வேள் குன்றமே –1-7-6
பதவுரை Show / Hide
எரிந்த, Erintha - (சீற்றத்தாலே) ஜ்வலிக்கின்ற
பை கண், Pai Kan - பசுமைதங்கிய கண்களோடும்
இலங்கு பேழ்வாய் எயிற்றொடு, Ilangu Pezhvai Eiyir Thodu - விளங்கா நின்ற பெரிய வாயில் பற்களோடும் கூடியிருக்கிற
இது, Idhu - இந்த நரசிங்கத் திருக்கோலமானது
எவ்வுரு என்று, Evuru Endru - என்ன பயங்கரமான ரூபம்! என்று அஞ்சி
வானோர், Vaanor - தேவர்கள்
இரிந்து கலங்கி ஓட, Irinthu Kalangi Oda - அங்குமிங்கும் சிதறிக் கால் தடுமாறி ஓடும்படியாக
இருந்த, Irundha - எழுந்தருளியிருந்த
அம்மானது இடம், Ammaanathu Idam - ஸர்வேசரனுடைய இடமாவது:-
உழுவை, Uzhuvai - புலிகளானவை
நெரிந்த வேயின் முழையுள் நின்று, Nerindha Veyin Muzhaiyul Nindru - நெருக்கமான மூங்கிற் புதர்களினின்றும்
நீள் நெறி வாய், Neel Nerai Vaai - பெரிய வழியிலே (வந்து)
திரிந்த ஆனை சுவடு பார்க்கும், Thirindha Aanai Suvadu Paarkkum - காட்டில் திரிகின்ற யானைகள் போன அடையாளத்தைஆராய்ந்து பார்க்குமிடமான
1014பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நரசிங்கமூர்த்தி இரணியன் மீது கொண்ட கோபம் அளவற்றிருந்ததனால் அந்தக் கோபாக்நி  மேலுலகமளவும் போய்ப் பரவி எங்கும் தஹிக்கப்புகவே ஸர்வலோக ஸம்ஹாரஸமயம் பிறந்துவிட்ட தென்று மூவுலகத்திலுள்ளோரும் அஞ்சி நடுங்கும்படியா யிருந்ததாம். அப்படிப்பட்ட உக்ர நரஸிம்ஹன் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேள் குன்றம்.) 7
முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூ வுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச வாளரியாய் இருந்த வம்மானிதிடம் கனைத்த தீயும் கல்லும் அல்லா வில்லுடை வேடருமாய் தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே –1-7-7
பதவுரை Show / Hide
முனைத்த சீற்றம், Munaiththa Seetrum - மிக்க கோபமானது
போய், Poy - வளர்ந்து சென்று
விண் சுட, Vin Sudha - ஆகாயத்தைக் கொளுத்தவும்
மூ உலகும்பிறவும், Moo Ulagum Piravum - மூன்று லோகங்களும் மற்றுமுள்ளவைகளும்
அனைத்தும், Anaiththum - எல்லாம்
அஞ்ச, Anja - பயப்படவும்
கனைத்த தீயும், Kanaittha Theeyum - ஒலி செய்கின்ற நெருப்பும்
கல்லும், Kallum - (அந்த நெருப்பினால் வேகின்ற) கற்களும்
அல்லா வில் உடை வேடரும் ஆய், Allaa Vil Udai Veadarum Aayi - உலகத்தில் கண்டறியாத விற்களையுடைய வேடர்களும் நிறைந்திருப்பதனாலே
தினை தனையும் செல்ல ஒண்ணா, Thinai Thanaiyum Sella Onna - க்ஷணகாலமும் கிட்ட வொண்ணாததான
1015பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான்முகக் கடவுளாகிய பிரமனும் சிவனும் முறைவழுவாது துதிக்கும்படியாக விலக்ஷணமான நரசிங்கவுருக் கொண்டு எம்பெருமா னெழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேள் குன்றம்.) 8
நாத் தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த அங்கு ஓர் ஆளரியாய் இருந்த வம்மானதிடம் காய்த்த வாகை நெற்றொலிப்பக் கல்லதர் வேய்ங்கழை போய் தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்க வேள் குன்றமே –1-7-8
பதவுரை Show / Hide
நான் முகனும் ஈசனும் ஆய், Naan Mughanum Eesanum Aayi - பிரமனும் சிவனும் கூடிக் கொண்டு
நா தழும்ப, Naa Thazhumba - நாக்குத் தடிக்கும்படி
முறையால் ஏத்த, Muraiyal Aetha - கிரமப்படி ஸ்தோத்ரம் பண்ண
காய்த்த, Kaayththa - காய்கள் நிறைந்த
வாகை, Vaagai - வாகை மரங்களினுடைய
நெற்று, Nettru - நெற்றுகளானவை
ஒலிப்ப, Olippa - சப்திக்க,
கல் அதர், Kal Adhar - கல்வழிகளிலேயுண்டான
வேய் கழை, Veiy Kazhai - குழல் மூங்கிற் செடிகள்
போய், Poy - ஆகாசத்தை அளாவிப்போய்
தேய்த்த, Theyththa - (மூங்கில்கள் ஒன்றோடொன்று) உராய்கையினாலுண்டான
தீயால், Theeyaal - நெருப்பினால்
விண் சிவக்கும், Vin Sivakkum - ஆகாசம் சிவந்திருக்கப்பெற்ற
1016பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ்ப்பாட்டுகளில் தெய்வமல்லால் செல்ல வொண்ணா” என்றும், சென்று காண்டற்கு அரிய கோயில்” என்றும், ‘தினைத்தனையுஞ் செல்லவொண்ணா” என்றும் இத்திவ்ய தேசத்தின் அருமையைச் சொல்லிவந்தாரே;) 9
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான் அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம் நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர் வாய்ச் சில்லி சில் லென்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே –1-7-9
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenjey - ஓ மனமே!
நல்லை, Nallai - நீ மிகவும் நல்லவன்;
நம்முடை நம்பெருமான், Nammudai Namberumaan - நமக்கு ஸ்வாமியாய்
அல்லி மாதர் புல்க நின்ற, Alli Maathar Pulka Nindra - பெரிய பிராட்டியாரை அணைத்துக் கொண்டிருப்பவனாய்
ஆயிரம் தோளன் இடம், Aayiram Tholan Idam - ஆயிரந்தோள்களை யுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கு மிடமாய்,
நெல்லி, Nelli - நெல்லி மரங்கள்
மல்கி, Malki - நிறைந்து
கல் உடைப்ப, Kal Udaippa - பாறைகளை உடைக்கவும்
புல் இலை ஆர்த்து, Pul Ilai Aarththu - பனையோலைகள் ஒலிசெய்யவும்
அதர் வாய், Adhar Vaai - வழிகளிலே
சில்லி, Chilli - சுவர்க்கோழிகளையுடைய
சில் என்று ஒல் அறாத, Sil Endru Ol Aradha - சில் என்கிற ஒலி இடைவிடாமல் ஒலிக்கவும் பெற்ற
சிங்கவேள் குன்றம், Singaveal Kunram - சிங்கவேள்குன்றத்தை
நாம்தொழுதும், Naamthozhudum - நாம் ஸேவிப்போம்.
1017பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வீரலக்ஷ்மி விளங்குங் கண்களையுடைய சிங்கங் களானவை யானைக்கோடு முதலியவற்றைக் கொண்டு ஸமர்ப்பித்து வணங்குமிட மான சிங்கவேழ் குன்றத்திலே யெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் விஷயமாகத் திருமங்கை மன்னன் அருளிச்செய்த சொல்மாலையை ஓதவல்லவர்கள் தீங்கின்றி வாழ்வார்கள் என்று – இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.) 10
செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன் மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன் செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே –1-7-10
பதவுரை Show / Hide
செம்கண் ஆளி, Semkan Aali - சிவந்த கண்களையுடைய சிங்கங்கள்
இட்டு, Ittu - (தமக்குக் கிடைத்த யானைத் தந்தம் முதலியவற்றைத்) திருவடிகளிலே ஸமர்ப்பித்து
இறைஞ்சும், Iraichum - வணங்குமிடமான
சிங்க வேழ் குன்று உடைய, Singam Vezh Kuntru Udaiya - சிங்கவேழ் குன்றத்தை இருப்பிடமாகவுடையனாய்
எங்கள் ஈசன், Engal Eesan - ஸம்ஸாரிகளான நமக்கெல்லார்க்கும் ஸ்வாமியாய்
எம் பிரானை, Em Piraanai - நமக்கு உபகாரகனாயுமுள்ள ஸ்ரீ நரஸிம்ஹமூர்த்தி விஷயமாக,
இரு தமிழ் நூல் புலவன், Iru Tamil Nool Pulavan - பெரிய தமிழ் சாஸ்த்ரத்தில் வல்லவராய்
மங்கை ஆளன், Mangai Aalan - திருமங்கை நாட்டுக்குத் தலைவராய்
மன்னு தொல்சீர், Mannu Tholseer - நித்யஸித்தமான ஸ்ரீ வைஷ்ணவலஷ்மியை உடையவராய்
வண்டு அறைதார், Vandu Araidhaar - வண்டுகள் படிந்து ஒலி செய்கின்ற மாலையை யணிந்தவராய்
செம் கை ஆளன், Sem Kai Aalan - மிக்க உதாரரான
கலியன், Kaliyan - ஆழ்வாரருளிச்செய்த
செம் சொல் மாலை, Sem Sol Maalai - செவ்விய இச்சொல் மாலையை
வல்லவர், Vallavar - ஓதவல்லவர்கள்
தீது இலர், Theethu Ilar - தீமை யொன்றுமின்றி நன்மை பெற்றவராவர்.
1018பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கொங்கலர்ந்த மலர்க்குருந்த மொசித்த கோவலனாய் எம்பிரானாய் சங்கு தங்கு தடங்கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினனாய் பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணனான எம்பெருமானது இருப்பிடமாகிய பொங்கு நீர் செங்கயல் திளைக்குஞ்சுனைத் திருவேங்கடத்தை நெஞ்சமே! அடை என்கிறார்.) 1
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான் சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன் பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச் செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-1
பதவுரை Show / Hide
கொங்கு அலர் ந்த மலர் குருந்தம் ஒசித்த, Kongu Alar Nda Malar Kurundham Osiththa - பரிமளம் வீசுகின்ற பூக்கள் நிறைந்த குருந்த மரத்தை முறித்தழித்த
கோவலன், Kovalon - கோபால க்ருஷ்ணனாய்
எம்பிரான், Embiran - அஸ்மத்ஸ்வாமியாய்
சங்கு தங்கு தட கடல் துயில் கொண்ட, Sangu Thangu Thada Kadal Thuyil Konda - சங்குகள் தங்கியிருக்கிற பெரிய கடலிலே திருக்கண் வளர்கின்ற
தாமரை கண்ணினன், Thamarai Kanninann - புண்டரீகாக்ஷனாய்,
பொங்கு புள்ளினை வாய் பிளந்த, Pongu Pullinai Vai Pilantha - செருக்குடன் கிளர்ந்து வந்த பகாஸூரன் வாயைக் கிழித்தெறிந்த
புராணர்தம் இடம், Puranartham Idam - புராண புருஷனான ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளியிருக்கு மிடமாயும்
பொங்கு நீர், Pongu Neer - நீர்வளமுடையதாய்
செம் கயல் திளைக்கும், Sem Kayal Thilaikkum - சிவந்த மீன்கள் களித்து வாழப்பெற்ற
சுனை, Sunai - சுனைகளையுடையதாயுமிருக்கிற
திருவேங்கடம், Thiruveengadam - திருமலையை
நெஞ்சமே அடை, Nenjamai Adai - நெஞ்சே! நீ அடைந்திடு.
1019பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கம்ஸனால் ஏவப்பட்டு முலை கொடுக் கிற வியாஜத்தாலே ஸ்ரீ க்ருஷ்ண சிசுவை முடித்திடவேணுமென்று முலையிலே விஷம் தடவிக்கொண்டு தாய்போல வந்த பூதனையென்னும் பேய்ச்சியானவள் கதறும்படியாக அவளுடைய முலையையும் உயிரையும் உறிஞ்சியுண்ட பெருமான், பிரமன் முதலியோர்க்கு முகங்கொடுப்பதற்காகப் பள்ளி கொண்டருளுமிடம் திருப்பாற்கடல்;) 2
பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம் வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2
பதவுரை Show / Hide
வன் பேய், Van Pei - கல்நெஞ்சை யுடையளான பூதனை யென்பவள்
இரங்க, Iranga - கதறும்படியாக
முலை, Mulai - (அவளது) முலையை
பிள்ளை ஆய், Pillai Aay - சிறு குழந்தையாயிருக்கச் செய்தே
உயிர், Uyir - உயிருடன்
உண்ட, Unda - உறிஞ்சி அமுதுசெய்த
எந்தை பிரான், Endhai Piraan - ஸ்ரீக்ருஷ்ணபகவான்
பள்ளி ஆவது, Palli Aavathu - பள்ளி கொள்ளுமிடமாவது
பாற்கடல் அரங்கம், Paarkadal Arangam - திருப்பாற்கடலும் திருவரங்கமுமாம்;
அவன், Avan - அப்பெருமான்
பெருகும் இடம், Perugum Idam - வளருகிற இடமாயும்,
தெள்ளியார், Thelliyar - தெளிந்த ஞானிகள்,
வெள்ளியான் கரியான் மணி நிறம் வண்ணன் என்று எண்ணி, Velliyan Kariyan Mani Niram Vannan Endru Enni - (கிருதயுகத்தில்) வெளுத்த நிறத்தனாயும் (கலியுகத்தில்) கறுத்த நிறத்தனாயும் (த்வாபரயு கதில்) சாமநிறத்தனா யுமிருப்பவன் என்று தியானித்துக் கொண்டு
நாள் தொறும், Naal Thorum - ஒவ்வொரு நாளும்
வணங்கும், Vanangum - வணங்கப்பெற்றதாயு முள்ள
திருவேங்கடம் மலை, Thiruveengadam Malai - திருமலையை
நெஞ்சே அடை, Nenje Adai - மனமே! ஆச்ரயி.
1020பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சயனித்தருளும்படியையும் நின்றருளும்படியையும் கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்தார்; நடந்தருளும்படியை இப்பாட்டில் அநுஸந்திக்கிறார்.) 3
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான் கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-3
பதவுரை Show / Hide
நின்ற, Nindra - பேராமல் நின்று கொண்டிருந்த
மா மருது, Maa Maruthu - பெரிய மருதமரங்களிரண்டும்
இற்று வீழ, Itru Veela - முறிந்து விழும்படியாக
நடந்த, Nadanda - நடைகற்ற
நின்மலன், Ninmalan - நிர்மலனும்,
நேமியான், Nemiyan - திருவாழியை யுடையவனும்,
என்றும், Endrum - எப்போதும்
வானவர், Vaanavar - நித்யஸூரிகள்
கை தொழும், Kai Thozum - ஸேவிக்கப்பெற்ற
தாமரை அடி இணை எம்பிரான், Thamarai Adi Inai Empran - இரண்டு திருவடித் தாமரைகளை யுடைய ஸ்வாமியும்,
கன்றி, Kandri - (இந்திரன்) கோபங்கொண்டு
மாரி, Maari - மழையை
பொழிந்திட, Pozhindida - பெய்வித்தவளவிலே
ஆ நிரைக்கு, A Niraikku - பசுக்கூட்டங்களுக்கு
இடர்நீக்குவான், Idarnikkuvan - துன்பம் தொலைப்பதற்காக
சென்று, Sendru - போய்
குன்றம் எடுத்தவன், Kundram Eduththavan - கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்தவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற
1021பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாண்டவர்களுக்காகப் பாரதயுத்தம் நடத்தி வெற்றி பெற்றவனும், இப்படி ஆச்ரிதர்களுக்காகக் காரியஞ் செய்யப்பெற்றதனால் திருமேனி மிக விளங்கப் பெற்றவனும், இடைச்சிகளோடு ராஸக்ரீடை யென்கிற குரவைக்கூத்து ஆடினவனும், தன்னைத் துதிப்பவர்களின் நெஞ்சை விட்டுப் பிரியாதே யிருப்பவனும், இடவெந்தை யென்கிற திவ்யதேசத்திலே இனிதாக எழுந்தருளி யிருப்பவனுமான எம்பெருமானுடைய தாய், பலபல புண்ய தீர்த்தங்களாலும் பெரிய பூஞ்சோலைகளாலும் சூழப்பட்டதான திரு வேங்கட மலையைச் சென்று சேர் மனமே!) 4
பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர் கோத்தங்காயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெம் கோவலன் ஏத்துவார் தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய வெம்பிரான் தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-4
பதவுரை Show / Hide
அன்று, Andru - முற்காலத்தில்
பார்த்தற்கு ஆய், Paarttharkku Aay - அர்ஜூநனுக்காக
பாரதம், Bharatham - பாரத யுத்தத்திலே
கை செய்திட்டு, Kai Seidittu - கையும் அணியும் வகுத்து
வென்ற, Vendra - வெற்றிபெற்ற
பரம் சுடர், Param Sudar - பரஞ்சோதியானவனும்,
அங்கு ஆயர்தம் பாடியில், Angu Aayartham Paadiyil - அங்கே திருவாய்ப் பாடியிலே
குரவை கோத்து பிணைந்த, Kuravai Koththu Pinaindha - ராஸக்ரீடை செய்தருளின
எம் கோவலன், Em Kovalann - நமது கோபாலனும்,
ஏத்துவார்தம், Aethuvaartham - தன்னைத் துதிப்பவர்களுடைய
மனத்து, Manaththu - நெஞ்சிலே
உள்ளான், Ullaan - வஸிப்பவனும்
இடவெந்தை, Idaventhai - திருவிடவெந்தையிலே
மேவிய, Meviya - பொருந்திய
எம்பிரான், Embiran - அஸ்மத் ஸ்வாமியுமானவன் எழுந்தருளியிருக்கப்பெற்றதும்
தீர்த்தம் நீர் தட சோலை சூழ், Theertham Neer Thada Solai Soozh - புண்ய தீர்த்தங்களாலும் பெரிய சோலைகளாலும் சூழப்பெற்றதுமான
1022பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வேண்டினார்க்கு வேண்டின படியே தானஞ் செய்கிற அஸுர சக்ரவர்த்தியான மஹாபலியினுடைய யாகபூமியிலே வாமநப்பிரமசாரியாய்ச் சென்று கை நீட்டி மூவடி மண் தாவென்று இரந்தவனும், ஸுக்ரீவனுக்கு நம்பிக்கையுண்டாவதற்காக ஸப்த ஸாலவ்ருக்ஷங்களைத் துளை படுத்தின மஹா பலமுடையவனும், ஆச்ரிதரக்ஷணார்த்தமாகத் திவ்யாயுதங்களைத் தரிப்பதற்கான பல திருக்கைகளையுடையவனும், (அல்லது) கச்சிமாநகரி லுள்ள அஷ்டபுஜகரம் என்கிற திவ்ய தேசத்திலே அஷ்டபுஜனாக ஸேவை ஸாதிப்பவனும், இமயமலையில் திருப்பிரிதியென்னும் திருப்பதியிலே யெழுந் தருளியிருப்பவனும், திருமாலிருஞ்சோலையிலே வந்து நிற்பவனும், முதலை வாயிலே அகப்பட்டுத் துடித்த ஸ்ரீ கஜேந்த்ராழ்வானுடைய துன்பத்தைத் தொலைத்தவனுமான பெருமானுடைய திருவேங்கட மலையைச் சென்று சேர் மனமே!) 5
வண் கையான வுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான் எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய வெம்பிரான் திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-5
பதவுரை Show / Hide
வண் கையான், Van Kaiyaan - விசேஷமாக தானஞ்செய்கிற கையையுடையவனாய்
அவுணர்க்கு நாயகன், Avaunarkku Naayagan - அசுரர்கட்குத் தலைவனான மாவலியினது
வேள்வியில், Velviyil - யாக பூமியிலே
மாணி ஆய் சென்று, Maani Aay Senru - பிரமசாரி வேஷத்துடன் எழுந்தருளி
கையால், Kaiyaal - தனது திருக்கையாலே
மண் இரந்தான், Man Irandhaan - பூமியை யாசித்தவனும்
மராமரம் ஏழும், Maraamaram Ezhum - ஏழு மராமரங்களையும்
எய்த, Eytha - துளைபடுத்தின
வலத்தினான், Valaththinaan - வலிவையுடையவனும்
எண் கையான், En Kaiyaan - அஷ்ட புஜங்களையுடையவனும்
இமயத்து உள்ளான், Imayaththu Ullaan - இமயமலையின் கண் (திருப்பிரிதியிலே) எழுந்தருளியிருப்பவனும்
இரு சோலை, Iru Solai - திருமாலிருஞ் சோலையிலே
மேவிய, Meviya - பொருந்திய
எம்பிரான், Embiran - ஸ்வாமியும்
திண் கை மா, Thin Kai Maa - திடமான துதிக்கையையுடைய கஜேந்திரனது
துயர், Thuyar - துன்பத்தை
தீர்த்தவன், Theerthavan - போக்கினவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற
1023பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உலகங்களெல்லாம் பிரளயத்திலே அழுந்திப் போகாதபடி அவற்றைத் தனது திருவயிற்றிலே வைத்து நோக்கி ஓராலந்தளிரிலே பள்ளி கொண்டவனும், சந்திரனுக்கு நேர்ந்த க்ஷயரோகத்தைப் போக்கி யருளினவனும், “அழகியான் தானே அரியுருவன் தானே” என்கிறபடியே அழகிய கோரப்பற்களுடனே மஹாபலசாலியான நரசிங்கமாய்த் திருவவதரித்து, தன் வலிவோடு ஒத்தவலிவுடையனான ஹிரண்யனுடைய மார்விலே நகங்களை யூன்றி அவ்வுடலைப் பிளந்தவனுமான பெருமானுடைய திருவேங்கடத்தைச் சென்று சேர் மனமே!) 6
எண் திசைகளும் ஏழு உலகமும் வாங்கிப் பொன் வயிற்றில் பெய்து பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன் பான் மதிக்கிடர் தீர்த்தவன் ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு திண் திறல் அரியாய் அவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-6
பதவுரை Show / Hide
பண்டு, Pandhu - முன்னொருகால்,
எண் திசைகளும், En Thisaigalum - எட்டுத் திக்குகளையும்
ஏழ் உலகமும், Ezh Ulagamum - ஸப்த லோகங்களையும்
வாங்கி, Vaangi - (பிரளயம் கொள்ளாதபடி) எடுத்து
பொன் வயிற்றில், Pon Vayittril - (தனது) அழகிய திருவயிற்றிலே
பெய்து, Peidhu - இட்டுவைத்து
ஓர் ஆல் இலை, Oor Aal Ilai - ஒரு ஆலந்தளிரிலே
பள்ளி கொண்டவன், Palli Kondaavan - சயனித்தருளினவனும்
பால் மதிக்கு, Paal Mathikku - வெளுத்த சந்திரனுக்கு
இடர், Idar - க்ஷயரோகமாகிற துக்கத்தை
தீர்த்தவன், Theerthavan - போக்கினவனும்,
ஒள் எயிற்றோடு, Ol Eiyirtoadu - ஒளிபொருந்திய கோரப் பற்களோடு கூடி
திண் திறல் அரி ஆயவன், Thin Thiral Ari Aayavan - மிக்க வலிவுடைய நரசிங்கமூர்த்தியாகத் தோன்றினவனாய்
ஒண் திறல் அவுணன், On Thiral Aavunan - மஹா பலசாலியான இரணியாசுரனுடைய
உரத்து, Urathu - மார்விலே
உகிர், Ukir - (திருக்கை) நகங்களை
வைத்தவன், Vaiththavan - வைத்து அழுத்தினவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற
1024பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூத ஸ்வரூபியாக நிற்பவன் என்று சொன்னது-ஸகல லோகங்களும் தானிட்ட வழக்கா யிருக்குமவன் என்றபடி.) 7
பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமுமிவை யாயினான் பேருமாயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம் காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோருமா முகில் தோய் தர சேரும்வார் பொழில் சூழ் எழில் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-7
பதவுரை Show / Hide
பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினான், Paarum Neer Eri Kaatrinodu Aakachamum Ivai Aayinaan - பூமி ஜலம் தேஜஸ் வாயு ஆகாசம் என்கிற பஞ்சபூத ஸ்வரூபியானவனும்
ஆயிரம் பேரும் பேச நின்ற, Aayiram Perum Pesa Nindra - ஸஹஸ்ர நாமங்களாலும் பிரதி பாதிக்கப்படா நிற்பவனும்
பிறப்பு இலி, Pirappu Ili - (கருமமடியாகப்) பிறத்தல் இல்லாதவனுமான எம்பெருமான்
பெருகும் இடம், Perugum Idam - வளருகிற இடமானதும்,-
நீள் விசும்பிடை, Neel Visumbidai - பெரிய ஆகாசத்தினின்றும்
காரும் வார் பனி, Kaarum Vaar Pani - மழைநீரும் மிக்க பனித்துளியும்
சோரும், Soorum - பெய்யப்பெற்றதும்
மாமுகில் தோய்தர, Maamugil Thoythara - (மேலுள்ள) காள மேகங்கள் வந்து படியும்படியாக
சேரும், Serum - பொருத்தமான
வார், Vaar - உயரவோங்கியிருக்கிற
பொழில், Pozhil - சோலைகளாலே
சூழ், Sool - சூழப்பெற்றதும்
எழில், Ezhil - அழகியதுமான
1025பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ்ப்பாட்டில் “பாரு நீரெரி காற்றினோடு ஆகாயமுமிவையாயினான்” என்ற முதலடியிற் சொன்ன அர்த்தமே இப்பாட்டிலும் முதலடியிற் சொல்லப்படுகிறது. அம்பரம் – ஆகாயம்; தற்சம வடசொல். பிருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூதஸ்வ ரூபியானவனும், நித்யஸூரிகளுக்குத் தலைவனும், அலர்மேல் மங்கைக்குத் துணைவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கப்பெற்ற திருமலையைச் சென்று சேர்மனமே!.) 8
அம்பர மனல் கால் நிலம் சலமாகி நின்ற வமரர் கோன் வம்புலா மலர் மேல் மலி மட மங்கை தன் கொழுநன் அவன் கொம்பின்னன விடை மடக் குற மாதர் நீளிதணம் தொறும் செம்புனமவை காவல் கொள் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-8
பதவுரை Show / Hide
அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற, Ambaram Anal Kaal Nilam Salam Aagi Nindra - ஆகாயம் நெருப்பு காற்று பூமி ஜலம் ஆகிய பஞ்சபூதஸ்வ ரூபியும்
அமரர் கோன், Amarar Kon - நித்ய ஸூரிகட்குத் தலைவனும்
வம்பு உலாம் மலர்மேல் மலி மட மங்கை தன், Vambu Ulaam Malarmel Mali Mada Mangai Than - பரிமளம் உலாவுகின்ற தாமரை மலரின் மேலே பொருந்திய பெரிய பிராட்டியாருக்கு
கொழுநன் அவன், Kozhunaan Aavan - நாயகனுமான எம்பிரான் எழுந்தருளியிருக்கப் பெற்றதும்,
நீள் இதணம் தொறும், Neel Idhanam Thorum - உயர்ந்த பரண்கள் தோறும்
கொம்பின் அன்ன இடை, Kombin Anna Idai - வஞ்சிக் கொம்போடு ஒத்த (நுண்ணிய) இடுப்பையுடைய
மட குற மாதர், Mada Kura Maathar - மடமை தங்கிய குறப்பெண்கள்
செம்புனம் அவை காவல் கொள், Sempunam Avai Kaaval Kol - செவ்விய வயல்களைக் காவல் செய்து கொண்டிருக்கப் பெற்றதுமான
1026பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்திருமொழியில் கீழ்ப்பாசுரங்க ளெல்லாவற்றிலும் ஆழ்வார் தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுதலொன்றே யுள்ளது; பரோபதேசமென்பது இல்லை. இப்பாசுரம் “பேசுமின் திருநாம மெட்டெழுத்தும் ” என்று தொடங்கப்படுகிறது. பேசுமின் என்றால், ‘சொல்லுங்கள்’ ‘ என்று பொருள்படுகையாலே முன்னடிகளிரண்டும் பரோபதேசமென்றும் பின்னடிகளிரண்டும் ஸ்வாத்மோத்போதநமென்றும் கொள்க.) 9
பேசுமின் திருநாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும் பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம் வாச மா மலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக் கெல்லாம் தேசமாய்த் திகழும் மலைத் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-9
பதவுரை Show / Hide
பேசும், Pesum - எல்லாராலும் அநுஸந்திக்கத் தக்கதும்
இன், In - போக்யமுமான
திரு நாமம் எட்டு எழுத்தும், Thiru Naamam Ettu Ezhuthum - திருவஷ்டாக்ஷர மஹா மந்திரத்தை
சொல்லி நின்று, Solli Nindru - அநுஸந்தித்து
பின்னரும், Pinnaarum - மேன்மேலும்
பேசுவார் தம்மை, Pesuvaar Thammai - (அதனையே) அநுஸந்திப்பவர்களை
உய்யவாங்கி, Uyya Vaangi - உஜ்ஜீவிக்கச்செய்து
பிறப்பு அறுக்கும் பிரான் இடம், Pirappu Arukkum Piraan Idam - (அவர்களது) ஸம்ஸாரத்தைத் தொலைக்கு மெம்பெருமான் எழுந்தருளி யிருக்குமிடமானதும்,
வாசம் மா மலர் நாறும், Vaasam Maa Malar Naarum - மணம்மிக்க சிறந்த புஷ்பங்கள் பரிமளிக்கப்பெற்ற
வார் பொழில், Vaar Pozhil - விசாலமான சோலைகளாலே
சூழ்தரும், Sooltharum - சூழப்பட்டதும்,
உலகுக்கு எல்லாம், Ulagukku Ellam - எல்லா வுலகங்களுக்கும்
தேசம் ஆய் திகழும், Desam Aay Thigalum - திலகம்போன்று விளங்குவதுமான
திருவேங்கடம் மலை, Thiruveengadam Malai - திருமலையை
நெஞ்சமே அடை, Nenjamai Adai - மனமே! அடைந்திடு.
1027பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (யௌவனபருவத்திற்குத் தகுதி யாகச் சிவந்த நிறத்தையுடைய கயல்களானவை ஒன்றோடொன்று களித்து விளையாடப்பெற்ற சுனைகளையுடைய திருவேங்கட மலையிலே நித்யவாஸம் செய் தருள்கின்ற பெருமானைக்குறித்துத் திருமங்கைமன்னன் அழகிய தமிழிலே செவ்விய சொல்லாலே அருளிச்செய்த இச்சொல்மாலையைத் தரித்துச் சொல்லவல்லவர்கள் இவ்விபூதியிலுள்ள வளவும் ராஜாதி ராஜர்களாய் விளங்கி, பின்னை நித்திய விபூதிக்கும் நிர்வாஹகராகப் பெறுவர்களென்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.) 10
செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேம்கடத்துறை செல்வனை மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள் சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே –1-8-10
பதவுரை Show / Hide
செம் கயல், Sem Kayal - (இளமையாலே) சிவந்த மீன்கள்
திளைக்கும், Thilaikkum - களித்து விளையாடப் பெற்ற
சுனை, Sunai - நீர் நிலைகளையுடைய
திரு வேங்கடத்து, Thiru Vengadaththu - திருமலையிலே
உறை, Urai - நித்யவாஸம் பண்ணா நின்ற
செல்வனை, Selvanai - திருமாலைக் குறித்து,
மங்கையர் தலைவன் கலிகன்றி, Mangaiyar Thalaivan Kalikanri - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான கலியன் (அருளிச் செய்த)
வண் தமிழ், Van Tamil - அழகிய தமிழினாலாகிய
செம் சொல் மாலைகள், Sem Sol Maalaigal - சிறந்த சொல் மாலையை
சங்கை இன்றி தரித்து உரைக்க வல்லார்கள், Sangai Indri Tharithu Uraikka Vallarhal - ‘இது பலன்தருமோ, தராதோ’ என்கிற ஸந்தேஹமில்லாமல் (விச்வாஸத்துடனே) அப்யஸித்து அநுஸந்திக்க வல்லவர்கள்
வங்கம் மா கடல் வையம், Vangam Maa Kadal Vaiyam - கப்பல்கள் நிறைந்த பெரிய கடலால் சூழப்பட்ட பூமண்டலத்திலுள்ளார்க்கு
தஞ்சம் அது ஆகவே காவலர் ஆகி, Thanjam Adhu Aagave Kaavalar Aagi - புகலிடமாய்க்கொண்டு அவர்களுக்கு ரக்ஷகராகி (இப்படி லீலாவிபூதியை நிர்வஹித்த பின்பு)
வான் உலகு ஆள்வர், Vaan Ulagu Aalvar - பரமபதத்தையும் ஆளப் பெறுவர்கள்.
1028பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (1.“சேலேய்கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத்தாய் தந்தையுமவரே யினியாவாரே” 2. “தாயாய்த்தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய், நீயாய் நீ நின்றவாறு” என்கிறபடியே உன்னையே ஸகலவிதபந்துக்களுமாகக் கொள்ள வேண்டியிருக்க அது செய்யாதே தாயேயென்றும் தந்தையேயென்றும் தாரமேயென்றும் கிளையேயென்றும் மக்களேயென்றும் ஆபாஸமான புத்ரமித்ராதிகளிடத்திலே ஆசைவைத்து மிகவும் கஷ்டங்கள் பட்டேன்; அவர்களுக்கு என்னை ரக்ஷிக்க சக்தியுண்டாகிலன்றோ அவர்களால் நான் வாழ்வேன்; உண்மையில் அசக்தர்களான அவர்களை நான் வீணே நம்பிக்கெட்டேன் என்றபடி.) 1
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டு ஒழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால் வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே –1-9-1
பதவுரை Show / Hide
வேய் ஏய், Vey Aey - மூங்கில்கள் நெருங்கி யிருக்கப் பெற்றதும் (ஆகையினாலே)
பூ பொழில் சூழ், Poo Pozhil Soozh - பூஞ்சோலைகள் நிறைந்திருக்கப் பெற்றதும் (ஆகையினாலே)
விரை ஆர், Virai Aar - பரிமளம் விஞ்சியிருக்கிற
திருவேங்கடவா, Thiruveengadavaa - திருமலையில் எழுந்தருளியுள்ள பெருமானே!
தாயே என்றும் தந்தையே என்றும் தாரமேஎன்றும் கிளையே என்றும் மக்களே என்றும், Thaaye Endrum Thandhaie Endrum Thaarameendrum Kilaie Endrum Makkaie Endrum - தாய் தந்தை மனையாள் பந்துக்கள் பிள்ளைகள் என்கிற ஆபாஸமான சரீர ஸம்பந்திகளையே எப்போதும் வாய்வெருவிக்கொண்டு
நோய் பட்டு ஒழிந்தேன், Noi Pattu Ozhindhen - அநர்த்தப்பட்டுப் போனவனும்
நாயேன், Naayen - நாய் போலே மிக்க நீசனுமான அடியேன்
உன்னை காண்பது ஓர் ஆசையினால், Unnai Kaanbathu Oor Aasaiyin Aal - (அந்த ஆபாஸ பந்துக்களை விட்டு, ப்ராப்த பந்துவான) உன்னை ஸேவிக்க வேணுமென்கிற ஆசையினால்
வந்து அடைந்தேன், Vandhu Adaindhen - உன்னிடம் வந்து சரணம் புகுந்தேன்;
என்னை, Ennai - சரணாகதனான என்னை
நல்கி, Nalki - கிருபை செய்து
ஆள் கொண்டருள், Aal Konda Arul - அடிமை கொண்டருளவேணும்.
1029பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆபாஸபந்துக்களை உற்ற உறவினராக நினைத்திருந்த குற்றத்தைப் பொறுத்தருளவேணுமென்று சரணம் புகுந்தார் கீழ்ப்பாட்டில்;) 2
மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன் தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என் ஆனாய்  வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-2
பதவுரை Show / Hide
தேன்ஏய், Then Aey - வண்டுகள் நிறைந்த
பூ பொழில் சூழ், Poo Pozhil Soozh - பூஞ்சோலைகளாலே சூழப்பட்ட
திருவேங்கடம் மா மலை, Thiruveengadam Maa Malai - திருவேங்கடமென்னும் சிறந்த மலைகளாலே எழுந்தருளியிரா நின்ற
என் ஆனாய், En Aanai - ஆனை போன்ற எம்பெருமானே!
மா நிலத்து, Maa Nilaththu - இப்பெரிய பூமண்டலத்திலே
மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு, Maan Aey Kan Madavaar Mayakkil Pattu - மான்போன்ற கண்ணழகுடைய மாதர்களின் கண்மயக்கிலே, அகப்பட்டு,
நாநாவித நரகம் புகும் பாவம், Naanavitha Naragam Pugum Paavam - பலவகைப்பட்ட நரகங்களிலே புகுவதற்குக் காரணமான பாவங்களை
நானே செய்தேன், Naane Seidhen - நானொருவனே செய்து வைத்தேன்;
வந்து அடைந்தேன், Vandhu Adaindhen - உன்பக்கல் வந்து சரணம் புகுந்தேன்;
1030பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜீவஹிம்சை பண்ணிப் போந்த குற்றங்களையும் பொறுத்தருளவேணுமென்று சரணம் புகுகிறார்.) 3
கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோளொன்றி லாமையினால் என்றேனும் இரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன் குன்றேய் மேக மதிர்  குளிர் மா மலை வேங்கடவா அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-3
பதவுரை Show / Hide
குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா, Kundru Aey Megam Adhir Kulir Maa Malai Vengadavaa - மலைபோன்ற மேகங்கள் கோஷிக்குமிடமாய்க் குளிர்ந்ததாய்ச் சிறந்ததான திருவேங்கட மலையி லெழுந்தருளி யிருப்பவனே!
குறிக்கோள் ஒன்று இலாமையினால், Kurikkol Onru Ilamaiyinai - விவேகமென்பது சிறிதுமில்லாமையினாலே
இரந்தார்க்கு, Irandhaarkku - யாசித்தவர்களுக்கு
இனிது ஆக, Inidhu Aaga - மதுரமாக
என்றேனும், Endraenume - ஒருநாளும்
உரைத்து அறியேன், Uraiththu Ariyaen - பதில் சொல்லி அறியேன்;
பல் உயிரை, Pal Uyirai - பல பிராணிகளை
கொன்றேன், Konraen - கொலைசெய்து முடித்தேன்;
அன்றே, Andrae - அந்த க்ஷணத்திலேயே
வந்து அடைந்தேன், Vandhu Adaindhen - உன்னை வந்து பற்றினேன்;
1031பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அநுலோமப் பிறவிகளென்றும் பிரதிலோமப் பிறவிகளென்றும் சாஸ்த்ரங்களில் எத்தனை விதமான ஸங்கர ஜன்மங்கள் சொல்லப்பட்டிருக்கின்றனவோ, அத்தனை ஜன்மங்களிலும் பிறப்பதுமிறப்பதும் செய்தாயிற்று.) 4
குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன் நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன் நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திருவேங்கடவா அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-4
பதவுரை Show / Hide
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா, Nilam Thoy Neel Mukil Ser Neri Aar Thiruveengadavaa - பூமியிலே படிந்த பெரிய மேகங்கள் நடமாடின வழிகள்  பொருந்தியிரு க்கிற திருமலையிலெழுந்தருளி யுள்ளவனே!
எத்தனை குலமும், Ethanai Kulamum - எல்லாக்குலங்களிலும்
பிறந்து இறந்து எய்த்து ஒழிந்தேன், Pirandhu Irandhu Eyththu Ozhindhaen - பிறப்பதும் இறப்பதுமாக இளைத்துப் போனவனும்
நலம் ஒன்றும் இலேன், Nalam Onrum Ilaen - ஒருவகை நன்மையுமில்லாதவனும்
நல்லது ஓர் அறமும் செய்திலேன், Nalladhu Oru Arahamum Seidhilaen - நல்ல தருமமொன்றும் செய்தறியாதவனும்
அலந்தேன், Alandhaen - பல கஷ்டங்களை அநுபவித்த வனுமான அடியேன்
வந்து அடைந்தேன், Vandhu Adaindhen - உன்னை வந்து பற்றினேன்;
1032பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அதிபாதகம், உபபாதகம், மஹாபாதகம் என்னும்படியான பாவங்கள் எப்படிப்பட்டவையாயினும் செய்யும்போது சிறிதும் சலியாமல் செய்துவிட்டேன்.) 5
எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன் துப்பா நின்னடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன் செப்பார் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என் அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-5
பதவுரை Show / Hide
செப்பு ஆர் திண் வரை சூழ், Seppu Aar Thin Varai Soozh - அரணாகப் போரும்படியான திண்ணிய மலைகளாலே சூழப்பட்ட
திரு வேங்கடம் மா மலை, Thiru Vengadam Maa Malai - திருமலையிலே எழுந்தருளியிரா நின்ற
என் அப்பா, En Appaa - என் அப்பனே
துப்பா, Thuppaa - ஸர்வசக்தனே!
எப்பாவம் பலவும் இவையே செய்து, Eppavam Palavum Ivaiye Seidhu - பலவகைப்பட்ட பாவங்களையே பண்ணி
இளைத்தொழிந்தேன், Ilaiththozhindhaen - துக்கப்பட்டவனாய்
நின் அடியே, Nin Adiye - உனது திருவடிகளை
தொடர்ந்து, Thodarnthu - அநுஸரித்து
ஏத்தவும், Aeththavum - துதிக்கவும்
கிற்கின்றிலேன், Kirkkinrilen - சக்தியற்றவனான நான் வந்து அடைந்தேன்-.
1033பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சரீரமென்பது பஞ்சபூமயமாயிருக்கும். மண்ணையும் மணலையும் கல்லையும் நீரையும் சேற்றையுங்கொண்டு வீடு கட்டுமா போலே, ப்ருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூதங்களைக் கொண்டு இந்த மாம்ஸபிண்டம் நிருமிக்கப்பட்டிராநின்றது.) 6
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுளாவு மாகாசமுமாம் புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்து ஒழிந்தேன் விண்ணார் நீள் சிகர விரையார் திருவேங்கடவா அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-6
பதவுரை Show / Hide
விண் ஆர் நீள் சிகரம், Vin Ar Neel Sikaram - ஆகாசத்தையளாவி உயர்ந்திருக்கிற கொடுமுடிகளையுடையதும்
விரை ஆர், Virai Aar - பரிமளம் மிக்கதுமான
திருவேங்கடவா, Thiruveengadavaa - திருமலையிலே எழுந்தருளியிருக்கிற
அண்ணா, Anna - ஸ்வாமிந்!,
மண்ஆய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம், Manai Neer Eri Kaal Manju Ulaavum Aakachamum Aam - பூமி, ஜலம், அக்நி, வாயு, மேகங்களு லாவுகின்ற ஆகாசம் ஆகிய பஞ்சபூதங்களினாலாகியதும்
புண் ஆர், Pun Ar - புண்கள் நிறைந்ததுமான
ஆக்கை தன்னுள், Aakkai Thannul - சரீரத்திலே (அகப்பட்டுக் கொண்டு)
புலம்பி தளர்ந்து எய்த்து ஒழிந்தேன், Pulambi Thalarndhu Eyththu Ozhindhen - கதறியழுது உடல் மெலிந்து மிகவும் கஷ்டப்பட்டவனான அடியேன்
1034பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (“கிளரொளியிளமை கெடுவதன் முன்னம்” என்றும்) 7
தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன் பெரியேனாயின பின் பிறர்க்கே வுழைத்து ஏழை யானேன் கரிசேர் பூம் பொழில் சூழ் கனமா மலைவேங்கடவா அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-7
பதவுரை Show / Hide
கரி சேர், Kari Ser - யானைகள் மிகுந்திருக்கப் பெற்றதும்
பூ பொழில் சூழ், Poo Pozhil Soozh - அழகிய சோலைகளாலே சூழப்பட்டும்
கனம் மா மலை வேங்கடவா, Kanam Maa Malai Vengadavaa - திண்ணியதாயு மிருக்கிற திருமலையிலே வாழ்பவனே!
அரியே, Ariye - ஹரியே!
பாலகன் ஆய், Palagan Aayi - சிறியேனாயிருந்தபோது
தெரியேன், Theriyeen - அறிவில்லாதவனாய்
பல தீமைகள், Pala Theemaigal - பல பாவங்களை
செய்தும் இட்டேன், Seithum Ittaein - செய்து தீர்த்தேன்;
பெரியேன் ஆயின பின், Periyeen Aayin Pin - யௌவன பருவ மடைந்த பின்பு
பிறர்க்கே உழைத்து, Pirarkke Uzhaiththu - விஷயாந்தர பரனாய் ச்ரமப் பட்டு
ஏழை ஆனேன், Ezhaai Aanen - சதிர்கெட்டுப்போனேன்;
1035பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நோற்கையாவது – ஸங்கல்பிக்கை; பல பிறவிகளை ஸங்கல்பிக்கையாவது – பலபிறவிகள் உண்டாகும்படி கருமங்களைச் செய்தலாம்.) 8
நோற்றேன் பல் பிறவி உன்னைக் காண்பதோர் ஆசையினால் ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம்பெருமான் கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-8
பதவுரை Show / Hide
கோல் தேன் பாய்ந்து ஒழுகும், Kol Then Paayndhu Ozhugum - கோல்களின்றும் தேன் இழிந்து வெள்ளமிடா நின்ற
குளிர் சோலை சூழ் வேங்கடவா, Kulir Solai Soozh Vengadavaa - குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமலையில் வாழ்பவனே!
எம்பெருமான், Emperumaan - அஸ்மத் ஸ்வாமியே!,
பல் பிறவி நோற்றேன், Pal Piravi Nootren - எனக்குப் பல பிறவிகள் உண்டாகும்படி காரியம் செய்து வைத்தேன்.
உன்னை காண்பது ஓர் ஆசையினால், Unnai Kaanbathu Oor Aasaiyin Aal - உன்னை ஸேவிக்கவேணுமென்று ஒரு காதல் கிளர்ந்த படியினாலே
இப்பிறப்பே ஏற்றேன், Ippirappe Aetren - இந்த ஜந்மத்திலே உனக்கு அன்பனாக ஏற்பட்டேன்.
இடர்உற்றனன், Idarutranan - (இன்னமும் நேரக்கூடிய பிறவிகளை நினைத்து) துக்கப்படா நின்றேன்;
1036பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன்னுடைய ஸம்பந்தத்தை               அறுத்துக்கொண்டு வெகுதூரம் ஓடிப்போன வெனக்கு ஓரிடத்திலும் ஒருவகையான ஆதாரமுமில்லை.) 9
பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன் மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-9
பதவுரை Show / Hide
மாயனே, Maayaney - ஆச்சரியமான குணங்களை யுடையவனே!
எங்கள் மாதவனே, Engal Maadhavane - எங்களுக்குப் புருஷகாரமான பிராட்டிக்கு வல்லபனே!
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலம் சுனை வேங்கடவா, Kal Then Paayndhu Ozhugum Kamalam Sunai Vengadavaa - மலை முழைஞ்சுகளின்றும் தேன் பெருகி வெள்ளமிடா நிற்பதும் தாமரைச் சுனைகளை யுடையதுமான திரு மலையிலே வாழ்பவனே!
பற்று ஒன்றும் இலேன், Patru Ondrum Ileen - ஒருவிதமான ஆகாரமும் அற்றவனாய்
பாவமே செய்து பாவி ஆனேன், Paavame Seidhu Paavi Aaneen - பாவங்களையே செய்து பாபிஷ்டனாய்
மற்று ஒன்று அறியேன், Mattru Ondru Ariyeen - ஒரு உபாயமுமறியாதவனான அடியேன்
அற்றேன், Atraen - உனக்கே அற்றுத் தீர்ந்தவனாய்க் கொண்டு
1037பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (“கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கடவிண்ணோர் வெற்பனே” என்றபடி) 10
கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன் பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே –1-9-10
பதவுரை Show / Hide
ஏழ் உலகுக்கு, Ezhu Ulagukku - எல்லா வுலகங்களுக்கும்
கண் ஆய், Kan Aay - கண் போன்றவனும்
உயிர் ஆய, Uyir Aay - உயிர் போன்றவனும்
எம், Em - எமக்காக
கார் வண்ணணை, Kaar Vannanaik - மேகம் போன்ற திரு நிறத்தையுடையவனும்
விண்ணோர் தாம் பரவும்பொழில் வேங்கடம், Vinnor Thaam Paravumpozhil Vengadam - நித்ய ஸூரிகளும் வந்து துதிக்கப்பெற்ற, சோலை சூழ்ந்த திருமலையிலே
வேதியதனை, Vediyathanai - வேத ப்ரதிபாத்யனாய் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமானைக் குறித்து
திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர்கோன் கலியன், Thin Ar Maadangal Soozh Thiru Mangaiyarkon Kalyan - திண்ணிய மாடங்கள் சூழ்ந்த திருமங்கையி லுள்ளார்க்குத் தலைவரான கலியன் (அருளிச் செய்த)
பண் ஆர் பாடல் பத்தும், Pan Ar Paadal Paththum - பண்ணோடு கூடிய இப்பத்துப் பாசுரங்களையும்
பயில்வார்க்கு, Payilvaarakku - ஓதுமவர்களுக்கு
பாவங்கள் இல்லை, Paavangal Illai - பிரதிபந்தங்களெல்லாம் தொலைந்து போம்.
1038பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மிகப் பெரிய கடலையே அகழாகவுடைத்தான இலங்கைக்குத் தலைவனான இராவணனுடைய திண்மை பொருந்திய சரீரம் இருபிளவாகப் பிளவுறும்படியாக அவன் மீது அம்புகளைப் பிரயோகித்தவனே! என்று ஸ்ரீராமபிரானாக விளிக்கின்றார் திருவேங்கடமுடையானை;) 1
கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன் திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய் விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய அண்ணா வடியேன் இடரைக் களையாயே –1-10-1
பதவுரை Show / Hide
கண் ஆர் கடல் சூழ், Kan Aar Kadal Soozh - விசாலமான கடலாலே சூழப்பட்ட
இலங்ககைக்கு இறைவன் தன், Ilankakaikku Iraivan Than - லங்காபுரிக்கு தலைவனான இராவணனுடைய
திண்ஆகம் பிளக்க, Thinagham Pilakka - திண்ணிய சரீரம் பிளந்துபோம் படியாக
சரம், Saram - அம்புகளை
செல உய்த்தாய், Sela Uyththai - செலுத்தினவனே!
விண்ணோர் தொழும், Vinnor Thozhum - (பிரமன் முதலிய) தேவர்கள் வந்து ஸேவிக்கப் பெற்ற
வேங்கடம் மாமலை, Vengadam Mamalai - திருமலையிலே
மேய அண்ணா, Meya Annan - எழுந்தருளி யிருக்கிற பெருமானே!
அடியேன் இடரை களையாய், Adiyen Idarai Kalaiyai - என் துன்பங்களை நீக்கியருள வேணும்.
1039பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புற்றானது என்றைக்கும் துஷ்ட ஸர்ப்பங்கள் மாறாதே உறையுமிடமாக இருப்பதுபோல இலங்கையானது இராவணனுக்கு முன்பும் குடியிருந்து வந்த மாலி முதலானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்ததாதலால் அவர்களையும் தொலைத்தபடி சொல்லுகிறது இப்பாட்டில்.) 2
இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர் குலம் கெட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய் விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய அலங்கல் துளப முடியாய் அருளாயே –1-10-2
பதவுரை Show / Hide
அன்று, Andru - முற்காலத்தில்
இலங்கை பதிக்கு, Ilankai Pathikku - லங்காபுரிக்கு
இறை ஆய, Irai Aaya - அரசர்களாயிருந்த
அரக்கரவர், Arakkaravar - (மாலிமுதலிய) ராக்ஷஸர்கள்
குலம்கெட்டு மாள, Kulamkettu Maala - கும்பலோடே சிதறியோடி முடியும்படியாக
கொடி, Kodi - (தனக்கு) த்வஜமான
புள், Pul - பெரிய திருவடியை
திரித்தாய், Thiriththai - ஸஞ்சரிப்பித்தவனே!,
விலங்கல் குடுமி, Vilankal Kudumi - (மேலே ஸஞ்சரீக்கிற சந்திர ஸூர்யர்கள்) விலங்கிப் போகவேண்டும்படியான (உயர்த்திபொருந்திய) சிகரத்தையுடைய
திருவேங்கடம், Thiruveengadam - திருமலையிலே
மேய, Meya - மேவியிருப்பவனாய்
துளபம், Thulabam - திருத்துழாயினாலாகிய
அலங்கல், Alangal - மாலையை
முடியாய், Mudiyaai - திருமுடியிலே அணிந்துள்ளவனே!
அருளாய், Arulai - (அடியேன் மீது) க்ருபை பண்ணியருள வேணும்.
1040பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மற்ற பேர்களை ரக்ஷிக்க நான் சக்தனாயினும் பாவிகளில் தலைவரான உம்மை ரக்ஷித்தல் எனக்கு எளிதன்றே; இஃது அருமையான காரியமாயிற்றே!’ என்று எம்பெருமான் திருவுள்ளமாக;) 3
நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய் சீரார் திருவேங்கட மா மலை மேய ஆராவமுதே அடியேற்கு அருளாயே –1-10-3
பதவுரை Show / Hide
நீர் ஆர் கடலும், Neer Aar Kadhalum - நீர் நிரம்பியிருக்கிற கடலையும்
நிலனும், Nilanum - பூமியையும்
முழுது, Muzhuthu - மற்றுமுள்ள எல்லாவற்றையும் (பிரளயம் கொள்ளாதபடி)
உண்டு, Undu - அமுது செய்து
ஏர், Aer - அழகியதும்
இள, Ila - இளையதுமான
ஆலந்தளிர் மேல், Aalanthazhirk Mel - ஆலந்தளிரின் மேலே
துயில், Thuyil - திருக்கண்வளர்ந்தருளின
எந்தாய், Endhai - ஸ்வாமியே!,
சீர் ஆர், Seer Aar - சிறப்புப் பொருந்திய
திருவேங்கடம் மா மலை மேய, Thiruveengadam Maa Malai Maeya - திருமலையிலே எழுந்தருளியிருக்கிற
ஆரா அமுதே, Aaraa Amudhe - ஆராவமுதமான எம்பெருமானே!
அடியேற்கு அருளாய், Adiyeerkku Arulai - அடியேன் மீது கிருபை செய்தருளவேணும்.
1041பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமலையிலெழுந்தருளியிருக்கிற இருப்பில் பரத்வ ஸௌலப்யங்களிரண்டும் ஒருங்கே விளங்குகின்றன வென்ன வேண்டி இரண்டுக்கும் ப்ரகாசகமான இரண்டு சேஷ்டிதங்களை முன்னடிகளிற் கூறுகின்றார்.) 4
உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக கொண்டாய் குறளாய் நிலமீரடியாலே விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4
பதவுரை Show / Hide
உறி மேல், Uri Mel - உறிகளின் மேல் வைக்கப்பட்டிருந்த
நறு நெய், Naru Ney - நல்ல நெய்யை
அமுது ஆக உண்டாய், Amuthu Aaga Undaai - அமுதமாகக் கொண்டு புஜித்தவனே!
குறள் ஆய், Kural Aai - வாமநனாகி
நிலம், Nilam - பூமியை
ஈர் அடியாலே, Eer Adiyaale - இரண்டடியாலே
கொண்டாய், Kondai - அளந்து கொண்டவனே!
விண் தோய் சிகரம், Vin Thoy Sikaram - பரமபதம் வரையில் சென்று ஓங்கின சிகரத்தையுடைய
திருவேங்கடம் மேய, Thiruveengadam Maeya - திருமலையிலே நித்யவாஸம் பண்ணுகிற
அண்டா, Andaa - தேவாதி தேவனே!
அடியேனுக்கு அருள் புரியாய், Adiyenukku Arul Puriyai - அடியேன் மீது கிருபை செய்தருளவேணும்.
1042பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பக்தர்களின் சத்துருக்களிடத்தில் சீற்றமும், பக்தர்களிடத்தில் வாத்ஸல்யமும் விளங்கத் திருமலையிலே ஸேவைஸாதிக்கிறபடியைப் பேசுகிறார். தூணினுள்ளே நரசிங்கமாய்த் தோன்றி இரணியனுடலைப் பிளந்தெறிந்து சிறுக்கனான ப்ரஹ்லாதாழ்வானுக்கு அருள் செய்தாப்போலே அடியேன் மீதும் அருள் செய்யவேணு மென்கிறார்.) 5
தூணாய தனூடு அரியாய் வந்து தோன்றி பேணா வவுணனுடலம் பிளந்திட்டாய் சேணார் திருவேங்கட மா மலை மேய கோணா கணை யாய் குறிக்கொள் எனை நீயே –1-10-5
பதவுரை Show / Hide
தூணாயதனூடு, Thoonayathanoodu - வெறும் தூணாகவேயிருக் கிறவதற்குள்ளே
அரி ஆய், Ari Aai - நரஸிம்ஹமாகி
வந்து தோன்றி, Vandhu Thondri - திருவவதரித்து,
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய், Pena Avunan Udalam Pilandittai - (தன்னை) மதியாத ஹிரண்ய கசிபுவின் சரீரத்தைக் கிழித்துப் போகட்டவனே!
சேண் ஆர், Seen Aar - மிக்க உயர்த்தி பொருந்திய
திரு வேங்கடம் மா மலை மேய, Thiru Vengadam Maa Malai Maeya - திருமலையிலே எழுந்தருளியிருப்பவனும்
கோள் நாகம் அணைபாய், Kol Naagam Anaipai - மிடுக்கையுடைய திருவனந்தாழ்வானைப் பள்ளியாகவுடையனுமான பெருமானே!
எனை, Enai - அடியேனை
நீயே குறிக்கொள், Neeye Kurikkol - நீயாகவே திருவுள்ளம் பற்றியருளவேணும்.
1043பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ் ஐந்து பாட்டும் பிரார்த்தனையாய்ச் சென்றது; இனி மேற்பாட்டுக்கள் பிரார்த்தனை ஒருவாறு தலைக்கட்டினபடியைச் சொல்வதாகச் செல்லுகிறது.) 6
மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே –1-10-6
பதவுரை Show / Hide
மன்னா, Mannaa - நிலைத்திராத
இ மனிசப் பிறவியை, I Manisap Piraviyai - இந்த மநுஷ்யஜன்மத்தை
நீக்கி, Neekki - போக்கடித்து
தன் ஆக்கி, Than Aakki - தனக்கு ஆளாக்கிக்கொண்டு
தன் இன் அருள் செய்யும், Than In Arul Seyyum - தனது பரமகிருபையைச் செய்கின்ற
தலைவன், Thalaivan - ஸ்வாமியும்,
மின் ஆர் முகில் சேர், Min Ar Mukil Ser - மின்னலோடுகூடிய மேகங்கள் வந்து சேரப்பெற்ற
திருவேங்கடம், Thiruveengadam - திருமலையிலே
மேய, Meya - எழுந்தருளியிருக்கிற
என் ஆனை, En Aanai - எனது ஆனை போன்றவனுமான
என் அப்பன், En Appan - எம்பெருமான்
என் நெஞ்சில் உளானே, En Nenchil Ulaaney - எனது நெஞ்சிலே எழுந்தருளி விட்டான்
1044பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அண்ணா வடியே னிடரைக் களையாயே” என்று முதற்பாட்டிலே தாம் பிரார்த்தித்தபடியே தம்முடைய இடர்களைக் களைந்து அருளினது, முன்பு நப்பின்னைப்பிராட்டியின் கலவிக்கு விரோதிகளாயிருந்த ஏழு ரிஷபங்களை வலியடக்கினதுபோலே யிருக்கையாலே அதனைப்பேசி இனியராகிறார்.) 7
மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா தேனே திருவேங்கட மா மலை மேய கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே –1-10-7
பதவுரை Show / Hide
மான் ஏய் மட நோக்கி திறத்து, Maan Aey Mad Nookki Thirathu - மானினுடைய நோக்குப் போன்ற அழகிய நோக்குடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக,
எதிர் வந்த, Edhir Vanda - செருக்குடன் வந்த
ஆன் விடை ஏழ் செற்ற, Aan Vidai Aezh Settra - ஏழு ரிஷபங்களைக் கொன்ற
அணி வரை தோளா, Ani Varai Thoalaa - அழகிய மலைபோன்ற திருத்தோள்களை யுடையவனே
தேனே, Thene - தேன்போல் போக்யனானவனே!
திருவேங்கடம் மா மலை மேய கோனே, Thiruveengadam Maa Malai Maeya Kone - திருமலையிலே எழுந்தருளியிருக்கிற ஸ்வாமியே!
என் மனம், En Manam - என்னுடைய நெஞ்சை
குடிகொண்டு, Kudikondru - இருப்பிடமாகக்கொண்டு
இருந்தாய், Irundhai - நிலைபெற்றிரா நின்றாய்.
1045பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி என்னெஞ்சிலே நப்பின்னைப்பிராட்டியோடுங்கூட வந்து புகுந்தானானபின்பு இவன் திருவடிகளிலே கைங்கரியம் பண்ணுகையொழிய வேறொன்றும் நானறியேன் என்கிறார்.) 8
சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள் வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய ஆயன் அடி அல்லது மற்று அறியேனே –1-10-8
பதவுரை Show / Hide
சேயன், Seyan - (பக்தியற்றவர்களுக்கு) எட்டாதவனும்
அணியன், Aniyan - (பக்தர்களுக்குக்) கையாளாயிருப்பவனும்
என சிந்தையுள் நின்ற மாயன், En Sinthaiyul Nindra Maayan - என் நெஞ்சினுள்ளே வந்து நின்ற ஆச்சரியபூதனும்,
வேய் விண்டு, Vey Vindu - மூங்கில்களானவை பிளவுபட்டு
ஒளி வெண்தரளங்கள், Oli Ventharalangkal - பிரகாசமுள்ள வெளுத்த முத்துக்களையும்
வாள்மணி, Vaalmani - ஒளியுள்ள ரத்னங்களையும்
உதிர், Uthir - உதிர்க்குமிடமான
வேங்கடம் மா மலை மேய, Vengadam Maa Malai Meya - திருமலையில் எழுந்தருளியிருப்பவனுமான
ஆயன், Aayan - ஸ்ரீக்ருஷ்ணனுடைய
அடி அல்லது, Adi Allathu - திருவடிகளையொழிய
மற்று, Mattru - வேறொன்றையும்
அறியேன், Ariyeen - அறியமாட்டேன்.
1046பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாம் பெற்ற பேற்றை வாயாரச் சொல்லி மகிழ்கிறார். “வந்து என் மனம் புகுந்து மன்னிநின்றாய்” என்று ஒரு வாக்கியமாகவே சொல்லிவிடலாமாயினும் தம்முடைய ஆநந்தம் நன்கு விளங்குமாறு ”வந்தாய் – என் மனம் புகுந்தாய் – மன்னிநின்றாய் ” என்று தனித்தனி வாக்கியமாக நீட்டி நீட்டி யுரைக்கின்றார்.) 9
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ சிந்தா மணியே திருவேங்கடம் மேய எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே –1-10-9
பதவுரை Show / Hide
நந்தாத, Nandhaadha - ஒருகாலும் அணையாத
கொழு சுடரே, Kozhu Sudare - சிறந்த தேஜஸ்ஸாயிருப்பவனே!
எங்கள் நம்பீ, Engal Nambi - எங்களுடைய குறையை நிரப்பவல்ல பூர்ணனே!
சிந்தாமணியே, Sindhamaniye - நினைத்த மாத்திரத்தில் எல்லாவற்றையும் கொடுத்தருள வல்லவனே!
திருவேங்கடம் மேய எந்தாய், Thiruveengadam Meya Enthaai - திருமலையிலெழுந்தருளியிருக்கும் பெருமானே!
வந்தாய், Vandhaai - என்பக்கல் வந்தாய்;
என் மனம் புகுந்தாய், En Manam Pugundhaai - எனது நெஞ்சினுள்ளே புகுந்தாய்;
மன்னி நின்றாய், Manni Nindraai - உள்ளேயே பொருந்தி நின்றாய்;
இனி, Ini - இனிமேல்
யான், Yaan - அடியேன்
உன்னை என்றும் விடேன், Unnai Endrum Vidaen - உன்னை ஒருநாளும் விடமாட்டேன்.
1047பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமலையிலே வில்லுங்கையுமான வேடர்கள் நிறைந்து கிடப்பது வருணிப்பதன் கருத்து யாதெனில்; ஆழ்வார் மங்களாசாஸநபரராகையாலே தம்மைப்போன்ற மங்களாசாஸநபரர்கள் திருமலையிலே பலருளர் என்றபடி.) 10
வில்லார் மலி வேங்கட மா மலை மேய மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை வல்லார் வர் வானவர் ஆகுவர் தாமே –1-10-10
பதவுரை Show / Hide
வில்லார் மலி, Villaar Mali - வேடர்கள் நிறைந்திருக்கப்பெற்ற
வேங்கடம் மாமலை, Vengadam Mamalai - திருவேங்கடமென்னும் சிறந்த மலையிலே
மேய, Meya - எழுந்தருளியிருப்பவனும்
மல் ஆர் திரள் தோள், Mal Aar Thiral Thol - மிடுக்குமிக்குத் திரண்ட திருத்தோள்களை யுடையவனும்
மணிவண்ணன், Manivannan - நீலமணி போன்ற திருநிறத்தையுடையவனுமான
அம்மானை, Ammanai - எம்பெருமானைக் குறித்து,
கல் ஆர் திரள் தோள், Kal Aar Thiral Thol - மலைபோன்ற திரண்ட தோள்களையுடையரான
கலியன், Kaliyan - திருமங்கைமன்னன்
சொன்ன, Sonna - அருளிச்செய்த
மாலை, Maalai - இச்சொல்மாலையை
வல்லாரவர் தாம், Vallaaravar Thaam - ஓதவல்லவர்கள்
வானவர் ஆகுவர், Vaanavar Aaguvar - நித்யஸூரிகளாகப் பெறுவர்கள்.
1048பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் உடைமையை பெறுகைக்கு தன்னை இரப்பாளன் ஆக்கினவர்க்கு–மகாபலிக்கு கொடுத்து அல்லது நிற்க ஒண்ணாத படி விநீத வேஷத்தோடே சென்றான் ஆயிற்று –அவன் அடிமை கொள்வதாக வந்து இரந்து நிற்கிற பின்பு நீயும் அவன் நினைவின் படி போகப் பெறுவதே-என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
வானவர் தங்கள் சிந்தை போலேன் நெஞ்சமே.இனிவந்து, மாதவ மானவர் தங்கள் சிந்தையமர்ந்துறை கின்றவெந்தை, கானவரிடு காரகிற்புகை யோங்கு வேங்கடம் மேவி, மாண்குறள் ஆன அந்தணற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. –2-1-1
பதவுரை Show / Hide
என் நெஞ்சமே, En Nenjame - என்னுடைய மனமே!
மா தவம் மானவர் தங்கள் சிந்தை, Maa Thavam Maanavar Thangal Sinthai - மிக்க தவஞ் செய்தவர்களான மனிசருடைய நெஞ்சிலே
அமர்ந்து உறைகின்ற எந்தை, Amarnthu Uraikindra Endhai - பொருந்தி வாழ்கின்ற ஸ்வாமியும்
கானவர் இடு கார் அகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி, Kaanavar Idu Kaar Akil Pugai Ongu Vengadam Mevi - வேடர்கள் ஸமர்ப்பிக்கும் காரகிலபுகை பரவியிருக்கப்பெற்ற திருமலையிலே வாழ்பவனும்
மாண் குறள் ஆன அந்தணற்கு, Maan Kurai Aan Andhanarukku - வாமந ப்ரஹ்மசாரி வடிவெடுத்தவனுமான எம்பெருமானுக்கு
வானவர் தங்கள் சிந்தை போல, Vaanavar Thangal Sinthai Pola - நித்யஸூரிகளுடைய ஹ்ருதயம் போலே (நீயும்)
இனிது உவந்து, Inidhu Uvandu - நன்றாகக் கனிந்து
இன்று, Indru - இப்போது
அடிமை தொழில் பூண்டாயே, Adimai Thozhil Poondhaaye - கைங்கர்ய் வ்ருத்தியை ஏற்றுக் கொண்டாய் காண்.
1049பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தண்ணீர் பந்தலை வைத்து நம் அடிமை பெறுகைக்கு தம்மை நமக்குத் தந்து கொடு நிற்கிற நம்மை அடிமை கொள்வதாக ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிதி பண்ணின பரம -தார்மிகனுக்கு அடிமைத் தொழில் பூண்டாய் –அவன் திருமலையில் வந்து நிற்கிற நிலையை நீ ஒருபடி சபலம் ஆக்கினாயே- என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2
உறவு சுற்றமென் றொன்றிலா வொருவன் உகந்தவர் தம்மை, மண்மிசைப் பிறவி யேகெடுப் பானது கண்டென் நெஞ்சமென்பாய், குறவர் மாதர்க ளோடு வண்டு குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து, அறவ நாயகற் கின்று அடிமைத் தொழில் பூண்டாயே. –2-1-2
பதவுரை Show / Hide
என் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - எனது நெஞ்சே!, (- (இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-.))
உறவு சுற்றம் என்று ஒன்று இலா ஒருவன், Uravum Suttam Endru Ondru Ila Oruvan - பந்துக்கள் தாயாதிகள் என்று சொல்லக்கூடிய எவ்வகை ஆபாஸஸம்பந்தமுமில்லாத அத்விதீயனான பெருமான்
உகந்தவர் தம்மை, Uganthavar Thammai - தானுகந்த அந்தரங்கபக்தர்களுக்கு
மண் மிசை பிறவியே கெடுப்பான் அது கண்டு, Man Misai Piraviye Keduppaan Adhu Kandu - இப்பூமியில் பிறவியைப் போக்குவானென்கிற தன்மையைக் கண்டு
குறவர் மாதர்களோடு, Kuravar Maathargalodu - குறத்திகளோடு கூட
வண்டு, Vandu - வண்டுகள்
குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து, Kurinji Marul Isai Paadum Vengadaththu - குறிஞ்சி, மருள் முதலிய இசைகளைப் பாடுமிடமான திருமலையிலுள்ள
அறவன் நாயகற்கு, Aravan Naayakarukku - பரமதர்மிஷ்டனான அப்பெருமானுக்கு
1050பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு –அடிமைத் தொழில் பூண்டாயே – அவாப்த சமஸ்த காமனானவனுடைய குறையை ஒருபடி நிரப்பினாயே ஸ்ரீ திருமலையிலே வந்து புகுந்து இவரை அடிமை கொள்வதற்கு முன்பு உபய விபூதி யோகத்தால் வந்த ஐஸ்வர்யத்தை ஒன்றாக நினைத்திலன் காணுமவன் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3
இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்து வாருற வோடும், வானிடைக் கொண்டு போயிடவு மதுகண்டென் நெஞ்சமென்பாய், வண்டு வாழ்வட வேங்கடமலை கோயில் கொண்டத னோடும், மீமிசை அண்ட மாண்டிருப் பாற்கு அடிமைத்தொழில் பூண்டாயே. –2-1-3
பதவுரை Show / Hide
என் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - ஓ மனமே!, (- (அடிமைத்தொழில் பூண்டாயே-.))
இண்டை ஆயின கொண்டு, Indai Aayin Kondo - புஷ்பமாலைகளை ஏந்திக் கொண்டு (தன் பக்கல்வந்து)
ஏத்துவார், Aeththuvaar - ஸ்தோத்ரம் பண்ணுமவர்களான
தொண்டாகள், Thondaagal - தாஸபூதர்களை
உறவோடும், Uravodum - அவர்களுடைய ஸம்பந்த ஸம்பந்திகளோடுங் கூட
கொண்டு போய், Kondupoi - இந்நிலத்தில் நின்றும் கொண்டுபோய்
வானிடை, Vaanidai - பரமபதத்திலே
இட அது கண்டு, Ida Adhu Kandu - (எம்பெருமான்) சேர்க்கிற படியைக் கண்டு,
வண்டு வாழ், Vandu Vaal - வண்டுகள் களித்து வாழப்பெற்ற
வடவேங்கடம்மலை கோயில் கொண்டு, Vadavaengadammalai Koyil Kondo - வடதிசையிலுள்ள திருமலையை திருக்கோயிலாகக் கொண்டு
அதனோடும், Adhanodum - அந்தத் திருமலையையும்
மீமிசை அண்டம், Meemichai Andam - நித்ய விபூதியான திரு நாட்டையும்
ஆண்டு இருப்பாற்கு, Aandu Iruppaarku - ஆண்டு கொண்டிருக்கிற அப்பெருமானுக்கு
1051பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -என்கிறபடியே ஜ்ஞாநிகளைத் தனக்கு ஆத்ம பூதராக உடையவனாய் இருக்கிறவனுக்கு நீயும் ஆவி ஆனாயோ-என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4
பாவி யாதுசெய் தாயென் னெஞ்சமே! பண்டு தொண்டுசெய் தாரை, மண்மிசை மேவி யாட்கொண்டு போய்வி சும்பேற வைக்குமெந்தை, கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்க டமலை யாண்டு, வானவர் ஆவி யாயிருப் பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே. –2-1-4
பதவுரை Show / Hide
என் நெஞ்சமே, En Nenjame - என் மனமே! (- (அடிமைத்தொழில் பூண்டாயே-.))
பாவியாது செய்தாய், Paaviyadhu Seithai - அலைபாயாமல் திண்ணிதான அத்யவஸாயம் கொண்டாய்;
பண்டு மண்மிசை மேவி, Pandhu Manmichai Mevi - முன்பு இந்நிலத்திலே வந்தவதரித்து,
தொண்டு செய்தாரை ஆள் கொண்டுபொய், Thondu Seithaarai Aal Kondupoi - அடிமை செய்தவர்களை ஆட்படுத்திக்கொண்டு போய்
விசும்பு ஏற வைக்கும் எந்தை, Visumbu Eera Vaikkum Endhai - பரமபதத்திலே ஸ்தாபித்தருளும் ஸ்வாமியும்,
கோவி நாயகன், Kovi Naayagan - கோபிகளுக்கு நாதனும்,
கொண்டல் உந்து உயர், Kondal Unthu Uyar - மேகங்களைத் தள்ளும்படியான உயர்த்தியையுடைய (சிகரங்கள் பொருந்திய)
வேங்கடம் மலை, Vaengadam Malai - திருமலையை
ஆண்டு, Aandu - அரசாட்சி செய்துகொண்டு
வானவர் ஆவியாய் இருப்பாற்கு, Vaanavar Aaviyai Iruppaarku - ஞானிகளைத் தனக்கு உயிர் நிலையாகவுடையவனுமான அப்பனுக்கு
1052பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாவியாது -என்று நீ இப்படி விசாரியாதே துணிவதே என்று என்னைக் கொண்டாட வேண்டின ஹேது என் -என்ன விசாரிக்க வேண்டும்படி எத்தனை விஷயம் புறம்பே கிடக்கிறது என்கிறார் – அக் கண்ணில் குளிர்திக்கு இலக்கு ஆவதே –அக் கண் அழகுக்கு ஜிதம் என்று எழுதிக் கொடுத்தார் உடைய வ்ருத்தியிலே அன்வயித்தாயோ-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
பொங்கு போதியும் பிண்டி யுமுடைப் புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை, தங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்சமென்பாய்! எங்கும் வானவர் தான வர்நிறைந் தேத்தும் வேங்கடம் மேவி நின்றருள், அங்க ணாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. –2-1-5
பதவுரை Show / Hide
என் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - ஓ மனமே!, (- (இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-.))
பொங்கு, Pongu - கொம்புங்கிளையுமாகப் பணைத்து வளர்ந்திருக்கிற
போதியும், Podhiyum - அரசமரத்தையும்
பிண்டியும், Pindiyum - அசோகமரத்தையும்
உடை, Udai - (தங்களுக்குத் தஞ்சமாக) உடையவர்களான
புத்தர், Puththar - பௌத்தரும்
நோன்பியர், Nonpiyar - அமணரும்
பள்ளியுள் உறை தங்கள் தேவரும் தாங்களுமே ஆக, Palliyul Urai Thangal Thevarum Thangalume Aaga - தமது தேவாலயங்களிலேயுள்ள தங்களுடைய சாமிகளும்  தாங்களுமேயாய் உலகமெங்கும் நிறைந்து கிடக்கச் செய்தேயும் (அந்த மதங்களில் நீ புகாமல்),
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும், Engum Vaanavar Thanavar Nirainthu Aeththum - தேவப்ரக்ருதிகளும் அஸூரப்ரக்ருதிகளும் எங்கும் சூழ்ந்துகொண்டு  போற்றுமிடமான
வேங்கடம், Vengadam - திருமலையிலே
மேவி நின்று, Mevi Nindru - எழுந்தருளியிருந்து
அருள், Arul - அருள்செய்கின்ற
அம் கண் நாயகற்கு, Am Kan Nayakarukku - அழகிய திருக்கண்களையுடைய பெருமானுக்கு
1053பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ த்ரி பாத் விபூதி-அதிலே உண்டான ஸ்ரீ அநந்த ஸ்ரீ வைநதேயாதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனுக்கு – அமரருடைய வ்யாபாரத்தை அநாதரித்து நித்ய ஸூரிகள் உடைய யாத்ரைகளிலே அன்வயித்தாயே- என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6
துவரி யாடையர் மட்டை யர்சமண் தொண்டர் கள்மண்டி யுண்டு பின்னரும், தமரும் தாங்களுமே தடிக்கஎன் நெஞ்சமென்பாய், கவரி மாக்கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்டகண் ணார்வி சும்பிடை, அமர நாயகறகு இன்றடிமைத் தொழில் பூண்டாயே. –2-1-6
பதவுரை Show / Hide
என் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - ஓ மனமே!, (- (நீயும் அவர்களைப்போலே உண்டு தடிக்க நினையாமல்) (இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-.))
துவரி ஆடையர், Thuvari Aadaiyar - காஷாய வஸ்த்ரமுடுத்தவர்களாய்
மட்டையர், Mattaiyar - மொட்டைத்தலையரா யிருக்கிற
சமண் தொண்டர்கள், Saman Thondargal - சமணமதக்காரர்கள்
மண்டி, Mandi - ஒருவர்க்கொருவர் மேல் விழுந்து
உண்டு, Undu - (மனம்போன படி) உணவுகளை உட்கொண்டு
பின்னரும், Pinnarum - மேலும்
தாங்களும் தமரும் தடிக்க, Thangalum Thamarum Thadikka - அவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் உடல் தடித்துக்கிடக்க,
கவரி மா கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட, Kavari Maa Kanam Serum Vengadam Koyil Konda - சவரிமான்கள் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்திருக்கப்பெற்ற திருமலையைக் கோயிலாகக் கொண்டவனும்
கண் ஆர் விசும்பிடை அமரர் நாயகற்கு, Kan Aar Visumpidai Amarar Nayakarukku - விசாலாமான பரமபதத்திலேயுள்ள நித்யஸூரிகளுக்குத் தலைவனுமான பெருமானுக்கு
1054பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆதித்ய அந்தராத்மாவாய் இருக்கும் என்று அனுசந்தித்துப் போகை அன்றிக்கே கண்ணாலே கண்டு அடிமை செய்து அனுபவிக்கப் பெற்றாயே நீ –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7
தருக்கி னால்சமண் செய்து சோறுதண் தயிரினால்திரளை,மிடற்றிடை நெருக்கு வார்அலக் கணது கண்டென் நெஞ்சமென்பாய், மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டத னோடும், வானிடை அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே. –2-1-7
பதவுரை Show / Hide
தருக்கினால், Tharukkinaal - வெறும் தர்க்கங்களாலே (- (அடிமைத்தொழில் பூண்டாயே-.))
சமண் செய்து, Saman Seythu - தங்களுடைய சமண மதத்தைப்பற்றி வாது செய்துகொண்டு
தண் தயிரினால், Than Thayirinaal - நல்ல தயிரோடு கூடிய
சோறு திரளை, Sooru Thiralai - சோற்றுக் கவளத்தை
மிடறு இடை, Mitaru Idai - கழுத்துக்குள்ளே யிட்டு
நெருக்குவார், Nerukkuvaar - அடைப்பவர்களான அந்தச் சமணருடைய
அலக்கண் அது, Alakkan Adhu - அப்படிப்பட்ட திண்டாட்டத்தை
கண்டு, Kandu - பார்த்து
என் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - ஓ மனமே! (நீ அவர்களுடைய திரளில் சேராமல்)
வண்டுகள், Vandugal - வண்டுகளானவை
மருட்கள், Marutkal - மருள் முதலிய இசைகளை
பாடும், Paadum - பாடுமிடமான
வேங்கடம், Vengadam - திருமலையை
கோயில் கொண்டு, Koyil Kondu - திருக்கோயிலாகக் கொண்டு
அதனோடும், Adhanodum - அவ்வளவுமாத்திரமன்றிக்கே
வானிடை, Vaanidai - ஆகாசத்திலே (திரிகிற)
அருக்கன், Arukkan - ஸூர்யமண்டலத்திலும்
மேவி நிற்பாற்கு, Mevi Nirpaaruku - பொருந்தியிருக்கும் பெருமானுக்கு
1055பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னோராயிரம் பிள்ளைகளுக்கு தலைவன் ஆனவனுக்கு வரையாதே ரஷகன் ஆனவனுக்கு அடிமை செய்கையிலே ஒருப்பட்டாயே-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
சேயனணியன் சிறியன் பெரிய னென்பது சிலர்ப்பேசக் கேட்டிருந்தே, என் னெஞ்சமென் பாய் எனக் கொன்று சொல்லாதே, வேய்கள் நின்றுவெண் முத்த மேசொரி வேங்க டமலை கோயில் மேவிய, ஆயர் நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. –2-1-8
பதவுரை Show / Hide
சேயன் என்பது, Seyan Enbadhu - (அவன்) வெகு தூரத்திலுள்ளவன் (அவனை எப்படி தொழ முடியும்) என்று சொல்லுவதும், (- (பரமபதநாதனைத் தொழுங்கள் என்றால்) (அர்ச்சாரூபியான எம்பெருமானைத் தொழுங்கள் என்றால்) (ஸ்ரீ கிருஷ்ணனைத் தொழுங்கள் என்றால்) (வ்யூஹவாஸூதேவனையும் அந்தர்யாமியான பெருமானையும் தொழுங்கள் என்றால்) (அந்த துர்வாதிகளின் திரளில் புகாமல்) (இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-))
அணியன்  என்பது, Aniyan Enbadhu - (இவன்) இதோ இருக்கிறானே (இவனையா தொழுவது) என்று சொல்லுவதும்,
சிறியன் என்பது, Siriyan Enbadhu - (இவன்) இழிகுலத்திலே பிறந்தவனாயிற்றே (இவனையோ தொழுவது) என்று சொல்லுவதும்,
பெரியன் என்பதும், Periyan Enbadhu - கைக்கு எட்டாதவனை எப்படி தொழுவது? என்று சொல்லுவதுமாய் (ஆக இப்படியெல்லாம்)
சிலர் பேச, Silar Pesu - சில துர்ப்பாக்கியசாலிகள் பேசாநிற்க,
என் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - ஓ மனமே!
கேட்டிருந்தே, Kettirundhe - (அந்த குத்ஸிதவாதங்களை நீ) ;கேட்டு வைத்தும்
எனக்கு ஒன்று சொல்லாதே, Enakku Ondru Sollaadhe - என்னிடத்திலும் ஒரு வார்த்தை சொல்லாமல்,
வேய்கள், Veygal - மூங்கில்களானவை
நின்று, Ninru - ஒரு படிப்பட நின்றுகொண்டு
வெண்முத்தமே சொரி, Venmuthame Sori - வெளுத்த முத்துக்களைச் சொரியுமிடமான
வேங்கடம் மலை, Vaengadam Malai - திருமலையை
கோயில் மேவிய, Koyil Meviyah - கோயிலாக விரும்பிய
ஆயர்நாயகற்கு, Aayarnayakarukku - ஸ்ரீ கோபால கிருஷ்ணனுக்கு
1056பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பலரும் அவனை ஆஸ்ரயித்து பின்னையும் காணப் பெறார்கள் – ப்ரஹ்மாதிகள் அநந்தரம் தம் தாம் அதிகார அர்த்தமாக ஆஸ்ரயியா நிற்பர்கள் – நீ இவ்விரண்டு கோடியிலும் இன்றிக்கே அவன் பக்கலிலே அடிமை புக்காயே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9
கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்நெஞ்சமென் பாய் துணிந்துகேள், பாடி யாடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலா, ஆடு தாமரை யோனு மீசனும் அமர் கோனும்நின் றேத்தும்,வேங்கடத்து ஆடு கூத்தனுக் கின்று அடிமைத்தொழில் பூண்டாயே. –2-1-9
பதவுரை Show / Hide
கூடி, Koodi - உலகத்தாரோடே கூடி (- (இதற்கு முன்பெல்லாம்) (இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-.))
ஆடி, Aadi - அவர்கள் எந்த விஷயங்களிலே ஊன்றுவர்களோ அந்த விஷயங்களிலே ஊன்றி,
உரைத்ததே உரைத்தாய், Uraiththade Uraiththai - அவர்கள் என்ன வார்த்தைகளைச் சொல்லுவார்களோ அந்த வார்த்தை களையே சொல்லிக் கொண்டிருந்த
என் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - என் மனமே!
துணிந்து கேள், Thuninthu Kela - (இப்போது நான் உனக்கு மகிழ்ந்து சொல்வதை) விச்வஸித்துக் கேள்;
பலரும், Palarum - எத்தனையோ பேர்கள்
பாடி, Paadi - (பகவத் குணங்களைப்) பாடிக் கொண்டும்
ஆடி, Aadi - கூத்தாடிக்கொண்டும்
பணிந்து, Paninthu - ஆச்ரயித்து
ஏத்தி, Aethi - துதித்தும்
காண்கிலா, Kankila - ஸாக்ஷாத்கரிக்க முடியாதவனும்,
ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர் கோனும் நின்று ஏத்தும் வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு, Aadu Thamaraiyonum Eesanum Amarar Konum Ninru Aethum Vengadathu Aadu Koothanukku - வெற்றியையுடைய பிரமனும் சிவனும் இந்திரனும் நிலை நின்று போற்றுமிடமான திருமலையிலே நிற்பவனும் (முன்பு) குடக்கூத்தாடினவனுமான பெருமானுக்கு
1057பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருமங்கையில் உள்ளாருக்கு பிரதாநரான ஸ்ரீ ஆழ்வார் இன் தமிழாலே அருளிச் செய்த இப்பத்தும் பாட வல்லார்க்கு பூண்ட வடிமை நித்யமாக செல்லும் தேசத்தை இருப்பிடமாக உடையவர் ஆவர்- என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10
மின்னு மாமுகில் மேவு தண்திரு வேங்க டமலை கோயில்மேவிய, அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை, கன்னி மாமதிள் மங்கை யர்க்கலி கன்றி யிந்தமி ழாலு ரைத்த, இம் மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே. –2-1-10
பதவுரை Show / Hide
மின்னும் மா முகில் மேவு, Minnum Maa Mukil Mevu - மின்னுகின்ற காளமேகங்கள் வந்து சேருகிற
தண் திரு வேங்கடம் மலை கோயில் மேவிய, Than Thiru Vengadam Malai Koyil Meviyah - குளிர்ந்த திருமலையைக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளி யிருப்பவனும்,
அன்னம் ஆய் நிகழ்ந்த, Annam Aay Nigazhndha - ஹம்ஸ ரூபியாய்த் திரு வவதரித்தவனும்
அமரர் பெருமானை, Amarar Perumanai - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனுமான பெருமான் விஷயமாக,
கன்னி மா மதிள் மங்கையர் கலிகன்றி, Kanni Maa Madi Mangkaiyar Kalikanri - நிலைநின்ற பெரிய மதில்களையுடைய திருமங்கை நாட்டில் உள்ளவர்களுக்குத் தலைவரான ஆழ்வார்
இன் தமிழால் உரைத்த, In Tamizhal Uraitha - செவிக்கினிய தமிழ்ப் பாஷையாலே அருளிச்செய்த
மன்னு, Mannu - (வேதம்போலே) நித்யமான
இப்பாடல், Ippadal - இப்பாசுரங்களை
வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு
வான் உலகு, Vaan Ulagu - பரமபதம்
இடம் ஆகும், Idam Aakum - வாஸஸ்தானமாகும்.
1058பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அறிவுடையார் -ராமோ ராமோ ராம -என்னத்-தன் பக்கல் நசை உடையார்கள் இப்படி ஏச – இவை இரண்டையும் கேட்டு-திரு வெவ்வுளிலே கண் வளர்ந்தான் ஆயிற்று-என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
காசை யாடை மூடியோடிக் காதல்செய் தானவனூர், நாச மாக நம்பவல்ல நம்பி நம்பெருமான், வேயி னன்ன தோள்மடவார் வெண்ணெயுண் டானிவனென்று ஏச நின்ற வெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. –2-2-1
பதவுரை Show / Hide
காசை ஆடை, Kaasai Aadai - காஷாய வஸ்த்ரத்தினால்
மூடி, Moodi - உடம்பை மறைத்துக்கொண்டு
ஓடி, Oodi - (பஞ்சவடிக்கு) ஓடிவந்து
காதல் செய்தானவன், Kaadhal Seithaanavan - (பிராட்டியிடத்தில்) ஆசை கொண்டவனான இராவணனுடைய
ஊர், Oor - ஊராகிய இலங்கையானது
நாசம் ஆக நம்ப வல்ல, Naasam Aaga Namba Valla - நாசமாகும்படி ஸங்கல்பித்த
நம்பி, Nambi - பரிபூர்ண சக்தியையுடையவனும்
நம்பெருமான், Namberumaan - நமக்கு ஸ்வாமியும்
வேயின் அன்னதோள் மடவார், Veiyin Annathol Madavaar - மூங்கிலோடு ஒத்த தோள்களையுடைய இடைச்சியர்
இவன் வெண்ணெய் உண்டான் என்று ஏச நின்ற எம்பெருமான, Ivan Vennai Undaan Endru Aesa Nindra Emperumaan - ‘இவன் வெண்ணெய் திருடி உண்டவன்’ என்று சொல்லிப்பரிஹஸிக்கும்படி நின்றவனுமான எம்பெருமான்
எவ்வுள் கிடந்தான், Evval Kidanthaan - திருவெவ்வுளூரில் திருக்கண் வளர்ந்தருளா நின்றான்.
1059பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரியட்டும் ஸ்ரீ ராமாவதாரம் அனுவர்த்தித்த படி –-அவன் வந்து -சாய்ந்தான்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2
தைய லாள்மேல் காதல்செய்த தானவன் வாளரக்கன், பொய்யி லாத பொன்முடிக ளொன்பதோ டொன்றும்,அன்று செய்த வெம்போர் தன்னி லங்கோர் செஞ்சரத் தாலுருள, எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. –2-2-2
பதவுரை Show / Hide
தையலாள்மேல், Thaiyalalmael - அழகிற் சிறந்த பிராட்டி விஷயத்திலே (- (எவ்வுள் கிடந்தானே-.))
காதல்செய்த, Kaadhalseitha - காமம் கொண்ட
தானவன், Thaanavan - ஆஸூரப்ருக்ருதியாய்
வாள், Vaal - வாளாயுதத்தை யுடையவனான
அரக்கன், Arakkan - இராவணனுடைய
பொய் இலாத பொன் முடிகள், Poi Iladha Pon Mudigal - மெய்யான பொன்முடிகள்
ஒன்பதோடு ஒன்றும், Onpathodu Ondrum - பத்தையும்
அன்று அங்கு செய்த வெம்போர் தன்னில், Andru Angu Seitha Vembor Thannil - முன்பு ராமாவதாரத்திலே கடற்கரையில் செய்த கோரமான யுத்தத்திலே
ஓர் செம் சரத்தால் உருள எய்த எந்தை எம் பெருமான், Oru Sem Sarathaal Urula Eytha Endhai Em Perumaan - ஒப்பற்ற சிவந்த பாணத்தினாலே  உருட்டின எம் பெருமான்
1060பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏச நின்ற -என்றது அனுவர்த்திக்கிறது-உதித அநுதித ஹோம நிந்தை போலே இருப்பது ஓன்று இறே – இது புக்க புக்க துறை தோறும் பகவத் விஷயத்தில் கால் தாழ வல்லர் -ஆயிற்று- பூமியிலே ஏவிக் கார்யம் கொள்ளுவாரைப் பெற்றது-இனி இவ்விடம் விட்டுப் போவோம் அல்லோம் என்று சாய்ந்தான் ஆயிற்று –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து,அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே பின்னோர் தூத னாதிமன்னர்க் காகிப் பெருநிலத்தார், இன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே. –2-2-3
பதவுரை Show / Hide
முன், Mun - ஸ்ரீராமாவதாரத்திலே (- (எவ்வுள்  கிடந்தான்-.))
வானரத்தின் வாயில், Vaanaraththin Vaayil - சிறிய திருவடி மூலமாக
ஓர் தூது மொழிந்து, Oru Thoodhu Mozhinthu - (பிராட்டிக்குத்) தூது சொல்லியனுப்பி (பிறகு)
அரக்கன், Arakkan - இராவணனுடைய
மன் ஊர்தன்னை, Man Oorthannai - சிறந்த லங்காபுரியை
வாளியினால், Vaalaiyin Aal - ஓர் அம்பினாலே
மாள முனிந்து, Maala Muninthu - மாண்டுபோகும்படி சீறிமுடித்து,
பின், Pin - பின் பொருகாலத்தில்
ஆதி மன்னர்க்கு, Aadhi Mannarkku - ராஜாதிராஜர்களான பாண்டவர்களுக்கு
ஓர் தூது ஆகி, Oru Thoodhu Aagi - விலக்ஷணனான தூதனாய்,
பெரு நிலத்தார் இன்னார் தூதன்  என நின்றானவனே, Peru Nilaththaar Innar Thoodhan En Nindraanavaney - பெரிய இப்பூமியிலுள்ளாரெல்லாரும் இவன் இன்னாருடைய தூதன் என்று சொல்ல அதனால் நிலைபெற்று நின்ற அப்பெருமான்
1061பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரியவும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரமே பின்னாட்டிற்று –சமஸ்த கல்யாண குணாத்மகனாய்ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்த இருப்பிலும் இங்கே வந்து அவதரித்து தான் தாழ நின்ற பின்பு ஆயிற்று –பூரணன் ஆயிற்று – சர்வ வித பந்துவானவனை காணலாவது ஸ்ரீ பரம பதத்திலே என்று அவ்விடத்துக்கு போக பொதி சோறு கட்ட வேண்டாதே பந்து க்ருத்யம் பண்ணலாம் படி ஸ்ரீ திரு வெவ் வுள்ளிலே வந்து சாய்ந்தான் ஆயிற்று – என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4
பந்த ணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால், வெந்தி றலே றேழும்வென்ற வேந்தன் விரிபுகழ்சேர், நந்தன் மைந்த னாகவாகும் நம்பி நம்பெருமான், எந்தை தந்தை தம்பெருமானெவ்வுள் கிடந்தானே. –2-2-4
பதவுரை Show / Hide
பந்து அணைந்த மெல் விரலாள் பாவைதன் காரணத்தால், Pandhu Anaindha Mel Viralal Paavaithan Kaaranaththal - பந்து பொருந்திய மெல்லிய விரல்களை யுடையளான நப்பின்னைப்பிராட்டி நிமித்தமாக (- (எவ்வுள் கிடந்தான்-.))
வெம் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன், Vem Thiral Aeru Aezhum Vendhan - க்ரூரமான மிடுக்கையுடைய ஏழுரிஷபங்களையும் வென்று முடித்த அரசனும்,
விரி புகழ் சேர் நந்தன், Viri Pugazh Cher Nandhan - உலகமெங்கும் பரந்த புகழையுடையனான நந்தகோபனுக்கு
மைந்தன் ஆக ஆகும் நம்பி, Maindhan Aaga Aagum Nambi - திருக்குமாரனாக அவதரித்த பரிபூர்ணனும்
நம்பெருமான், Namberumaan - நமக்கு ஸ்வாமியும்
எந்தை தந்தை தம்பெருமான், Endai Thandai Thamberumaan - நம்குலத்துக்கெல்லாம் நாதனுமானவன்
1062பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரிமள பிரசுரமான பர்யந்தத்தை உடைத்தான தேசத்தில் அரியது செய்ய வல்லவன் ஆயிற்று கண் வளர்ந்து அருளுகிறான் -எழுப்பி கார்யம் கொள்வார் குறையே –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
பால நாகி ஞாலமேழு முண்டுபண் டாலிலைமேல், சால நாளும் பள்ளிகொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில், நீல மார்வண் டுண்டுவாழும் நெய்தலந் தண்கழனி, ஏல நாறும் பைம்புறவி லெவ்வுள் கிடந்தானே. –2-2-5
பதவுரை Show / Hide
பண்டு, Pandhu - முன்பொரு காலத்தில்
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு, Paalan Aagi Nyaalam Ezhum Undu - சிறு குழந்தையாய் உலகங்களை யெல்லாம் திரு வயிற்றிலே வைத்து
ஆல் இலை மேல், Aal Ilai Mael - ஆலந்தளிரின் மேலே
சால நாளும், Saal Naalum - வெகு நாள் வரையில்
பள்ளி கொள்ளும், Palli Kollum - சயனித்திருந்த
தாமரை கண்ணன், Thamarai Kannan - புண்டரீகாக்ஷன்,
எண் இல் நீலம்;, En Il Neelam - எண்ணிறந்த நெய்தற் பூவிலே
ஆர், Aar - படிந்த
வண்டு, Vandu - வண்டுகள்
உண்டு, Undu - (அப்பூக்களிலுள்ள தேனைப்)பருகி
வாழும், Vaalum - வாழப்பெற்ற
அம் தண், Am Than - அழகிய குளிர்ந்த
நெய்தல் கழனி, Neithal Kazhani - நெய்தல் கழனிகளையும்
ஏலம் நாறும், Elam Naarum - பரிமளம் கமழ்கின்ற
பை புறவில், Pai Puravil - பரந்த சோலைகளையுமுடைய
எவ்வுள், Evvul - திருவெவ்வுளூரிலே
கிடந்தான், Kidandhaan - சயனித்திருப்பவன்.
1063பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அசாதாராண திவ்ய விக்ரஹ யுக்தனாய் –இதர விஸஜாதியனாய் இருக்கச் செய்தேயும் ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாய் நின்று ஸ்ருஷ்ட்யாதிகளை நடத்துகிறான் என்று ஸநகாதிகள் ஏத்தும் படியாய் இருக்கிறவன் இங்கே சாய்ந்தான் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6
சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும், ஆத்தனம்பி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம், மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு- தேத்தும், நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. –2-2-6
பதவுரை Show / Hide
தொண்டர், Thondar - அடியவர்கள் (- (எவ்வுள் கிடந்தான்-.))
மிண்டி, Mindi - நெருக்கமாகத் திரண்டு
நம்பி சோத்தம் என்று  தொடர்ந்து அழைக்கும், Nambi Soththam Endru Thodarnthu Azaikkum - ‘ஸ்வாமீ! உனக்கு அஞ்சலி’ என்று சொல்லிப் பின் தொடர்ந்து துதிக்கப் பெற்ற
ஆத்தன், Aathan - ஆப்தனான
நம்பி, Nambi - ஸ்வாமியாய்
செம் கண், Sem Kan - செந்தாமரைக் கண்ணனான
நம்பி ஆகிலும், Nambi Aakilum - ஸ்வாமியுமாய் இருக்கச் செய்தேயும்,
முனிவர், Munivar - ஸநகர் முதலிய ரிஷிகள்
தேவர்க்கு எல்லாம், Thevarkku Ellam - தேவர்களுக்குள் பெரிய
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று தொழுது ஏத்தும் நம்பி எம்பெருமான், Mootha Nambi Mukkan Nambi Endru Thozhuthu Aethum Nambi Emperumaan - ‘பிரமனே! சிவனே!. என்று சொல்லி வணங்கி ஏத்தும் படியாயுள்ள (ஸர்வாந்தர்யாமியான) பெருமான்
1064பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரு மேனியில் ஏக தேசத்தில் இருக்கிற ருத்ரன் விஸ்த்ருதமான திருவடிகளை தலையாலே சுமக்கும்படி நிற்கிறவன் –எங்களுக்கு ஜநகனுமாய்-ஸ்வாமி யுமானவன்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7
திங்க ளப்பு வானெரிகாலாகி, திசைமுகனார் தங்க ளப்பன் சாமியப்பன் பாகத் திருந்த,வண்டுண் தொங்க லப்பு நீண்முடியான் சூழ்கழல் சூடநின்ற, எங்க ளப்ப னெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே. –2-2-7
பதவுரை Show / Hide
திங்கள் ஆகி, Thingal Aagi - சந்திரனுக்கு அந்தர்யாமியாயும் (- (எங்கள் அப்பன் எம்பெருமான்-;) (எவ்வுள் கிடந்தான்-.))
அப்பு வான் எரி கால் ஆகி, Appu Vaan Eri Kaal Aagi - ஜலம் ஆகாசம் தேஜஸ்வாயு முதலிய பூதங்களுக்கு சரீரியாயும்
திசைமுகனார் தங்கள் அப்பன், Thisaimughanar Thangal Appan - பிரமனுக்குத் தந்தையாயும்
சாமி அப்பன், Saami Appan - ஸாமவேதத்தால் பிரதிபாதிக்கப்பட்ட ஸ்வாமியாயும்
பாகத்து இருந்த, Paagathu Irundha - தனது திருமேனியின் ஒருபக்கத்திலே இருப்பவனாய்
வண்டு உண்தொங்கல் அப்பு நீள் முடியான், Vandu Unthongal Appu Neel Mudiyan - வண்டுகள் மதுபானம் பண்ணப்பெற்ற கொன்றை மாலையையும் கங்கா ஜலத்தையும் நீண்ட சடையிலேயு டையனான சிவபிரான்
சூழ் கழல் சூட நின்ற, Sool Kazhal Sooda Nindra - விசாலமான திருவடிகளைத் தன் தலைமீது அணிந்து கொள்ளும்படி யிருப்பவனாயுமுள்ள
1065பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி தான் அத்விதீயனாய் இருந்தானே யாகிலும் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு இனியவன் – எனக்கு ஜநகனுமாய் ஸ்வாமியுமானவன் –எவ்வுள் கிடந்தானே-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த புனிதன், பூவை வண்ணனண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன், தனியன் சேயன் தானொருவன் ஆகிலும் தன்னடியார்க்கு இனியன், எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே. –2-2-8
பதவுரை Show / Hide
முனிவன், Munivan - உலகங்களைப் படைக்க ஸங்கல்பம் செய்தவனும் (- (எவ்வுள் கிடந்தான்-.))
மூர்த்தி மூவர் ஆகி, Moorthi Moovar Aagi - பிரமன் விஷ்ணு சிவன் என்று மூன்று மூர்த்தியாக நிற்பவனும்
வேதம் விரித்து உரைத்த புனிதன், Vedham Virithu Uraitha Punithan - வேதப் பொருள்களை வெளியிட்ட வியக்தமாக பவித்திரனும்
பூவை வண்ணன், Poovai Vannan - காயாம்பூப்போன்ற திரு நிறத்தை யுடையவனும்
அண்ணல், Annal - ஸர்வ ஸ்வாமியும்
புண்ணியன், Punniyan - வடிவுகொண்ட புண்ணியமானவனும்
விண்ணவர் கோன், Vinnavar Kon - நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
தனியன், Thaniyan - “ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்ம” என்று உபநிஷத்தில் ஓதப்பட்டவனும்
தான் சேயன் ஒருவனாகிலும், Thaan Cheyan Oruvanagilum - தான் ஒருவர்க்கும் எட்டாத வொருவனா யிருந்தாலும்
தன் அடியார்க்கு இனியன், Than Adiyarkku Iniyan - தன்னுடைய அடியவர்களுக்குப் பரம போக்யனா யிருப்பவனும்
எந்தை, Endhai - எமக்குத் தந்தையா யிருப்பவனுமான
எம் பெருமான், Em Perumaan - ஸ்வாமியானவன்
1066பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய சம்ச்லேஷத்தாலே கையும் பந்துமாய் -அது தான் பொறாமை சிவந்து ஸூகுமாரமான விரலை உடையவள் – நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் – குளிர்ந்த தாமரைப் பூவை பிறந்தகமாக உடையவள் – அப்பூ நெரிஞ்சி முள்ளாய் அடிக் கொதித்து வந்து அகலகில்லேன் -என்று இருக்கும்படி மார்வு படைத்தவன் –எவ்வுள் கிடந்தானே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9
பந்தி ருக்கும் மெல்விரலாள் பாவை பனிமலராள், வந்தி ருக்கும் மார்வன்நீல மேனி மணிவண்ணன், அந்த ரத்தில் வாழும் வானோர் நாயக னாயமைந்த, இந்தி ரற்கும் தம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. –2-2-9
பதவுரை Show / Hide
பந்து இருக்கும் மெல் விரலாள், Pandhu Irukkum Mel Viralal - பந்து தங்கிய மெல்லிய விரல்களை யுடையவளும் (- (எவ்வுள் கிடந்தான்-.))
பனி மலரான், Pani Malaraan - குளிர்ந்த தாமரைப் பூவைப் பிறப்பிடமாக வுடையவளுமான
பாவை, Paavai - பிராட்டியானவள்
வந்து இருக்கும் மார்வன், Vandu Irukkum Maarvan - வந்து தங்கி வாழ்கின்ற திரு மார்பை யுடையவனாய்
நிலம் மேனி மணி வண்ணன், Nilam Meeni Mani Vannan - நீலமான நிறத்தையுடைய மணியின் வர்ணம் போன்ற வர்ணத்தை யுடையவனாய்
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகன் ஆய் அமைந்த இந்திரற்கும் தம்பெருமான், Andharathil Vaalum Vaanor Naayagan Aay Amaindha Indirarkkum Thamberumaan - சுவர்க்கத்தில் வாழ்கின்ற தேவர்களுக்கு நாதனாக அமைந்த இந்திரனுக்கும ஸ்வாமியானவன்
1067பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்கே வந்து சாய்ந்த படியாலே பகவத் குணங்கள் நெஞ்சிலே ஊற்றிருந்து சொல்லி அல்லது நிற்க ஒண்ணாதபடி அவை ப்ரேரிக்க பாடின மாலை-இது கற்றார் அண்டத்தை ஆளுகை நிச்சயம் – அவனைப் பற்றியும் இத்தைப் பெறுமத்தனையோ – என்று விரக்தர் ஆனார்கள் ஆகில் அவர்கள் ஆளுமது பரம பதம் —என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10
இண்டை கொண்டு தொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை, வண்டு பாடும் பைபுறவில் மங்கையர் கோன்கலியன், கொண்ட சீரால் தண்டமிழ்செய் மாலையீ ரைந்தும்வல்லார், அண்ட மாள்வ தாணையன்றே லாள்வ ரருலகே. –2-2-10
பதவுரை Show / Hide
தொண்டர், Thondar - பக்தர்கள்
இண்டை கொண்டு, Indai Kondu - புஷ்ப மாலைகளை ஏந்திக் கொண்டு
ஏத்த, Aetha - துதிக்கும்படியாக
எவ்வுள் கிடந்தானை, Evvul Kidandhaanai - திருவெவ்வுளூரிலே சயனித்தருள்பவனான பெருமான் விஷயமாக,
வண்டு பாடும் பை புறவில் மங்கையர்கோன் கலியன், Vandu Paadum Pai Puravil Mangaiyarkon Kalyan - வண்டுகள் களித்துப் பாடா நின்ற விசாலமான சோலைகளையுடைய திருமங்கையிலுள்ளார்க்கு ஸ்வாமியான ஆழ்வார்
கொண்ட சீரால், Konda Seeraal - நெஞ்சிலே கொண்ட பகவத் குணங்களாலே
தண் தமிழ் செய், Than Tamil Sei - அழகிய தமிழ்ப் பாஷையிலருளிச் செய்த
மாலை, Maalai - சொல்மாலையாகிய
ஈர் ஐந்தும், Eer Aindhum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள்
அண்டம் ஆள்வது ஆணை, Andam Aalvathu Aanai - இந்த பிரஹ்மாண்டங்களையெல்லாம் செங்கோல் செலுத்தி ஆளப் பெறுவது திண்ணம்;
அன்றேல், Andrel - இவ் வுலகங்களை ஆள்வதில் ஆசையற்றவர்களாகில்
அமரர் உலகு ஆள்வர், Amarar Ulagu Aalvar - பரமபதந் தன்னையே ஆளப் பெறுவர்கள்.
அமருலகு, Amarulagu - அமரருவகு.
1068பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதி வர்க்கத்தை கிழங்கு எடுக்குமவனாய் –ஈஸ்வர அபிமாநிகளுக்கு இடர் வந்தால் -போக்குமவனாய் – தனக்கு ஸ்நேஹிதர் ஆனார்க்காகத் தன்னை அழிய மாறுமவனாய் – போலியான ஸ்நேஹிகளுக்கும் ஏவிற்றுச் -செய்யுமவனானவனை –திரு வல்லிக்கேணியிலே காணப் பெற்றேன் என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ, செற்றவன் றன்னை, புரமெரி செய்த சிவனுறு துயர்களை தேவை, பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு பார்த்தன்றன் தேர்முன்நின் றானை, சிற்றவை பணியால் முடிதுறந் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-1
பதவுரை Show / Hide
பெரு வில் விழவும், Peru Vil Vizhavum - சிறந்ததான தநுர்யாகமென்கிற உத்ஸவமும்
கஞ்சனும், Kanjanum - (அந்த உத்ஸவத்தை நடத்தின) கம்ஸனும்
மல்லும், Mallum - (அந்த கம்ஸனாலே ஏவி நிறுத்தப்பட்ட) மல்லர்களும்
வேழமும்பாகனும், Vezhamumpaganum - (குவலயாபீடமென்கிற) யானையும் அதன் பாகனும் (ஆகிய எல்லாம்)
வீழ செற்றவன் தன்னை, Veela Settravan Thannai - பங்கமடையும்படி த்வம்ஸம் பண்ணினவனும்,
புரம் எரி செய்த சிவன் உறு துயர், Puram Eri Seitha Sivan Uruthu Thuyar - திரிபுரமெரித்த சிவபெருமானடைந்த ப்ரஹ்மஹத்தி சாபத்தை
களை, Kalai - களைந்தொழிந்த
தேவை, Thevai - தேவனும்,
பற்றலர் வீய, Patralar Veeya - சத்துருக்கள் மாளும்படியாக
கோல் கையில் கொண்டு, Kol Kaiyil Kondu - சாட்டையைத் திருக்கையிலே பற்றிக்கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்றானை, Parthan Than Ther Mun Nindraanai - பார்த்தசாரதியாய் நின்றவனும்
சிறு அவை பணியால், Siru Avai Paniyala - சிறிய தாயாகிய கைகேயியினுடைய சொல்லாலே
முடி துறந்தானை, Mudi Thurandhaanai - உபேக்ஷித்தவனுமான பெருமானை
திருவல்லிக்கேணி, Thiruvallikeni - திருவல்லிக்கேணி யென்னும் க்ஷேத்ரத்திலே
கண்டேன், Kandein - ஸேவிக்கப்பெற்றேன்.
1069பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வேதத்தை தனக்கு விபூதியாக உடையவன்-அவ்வவருடைய ருசி அநு கூலமாக பல பிரதானம் -பண்ணுமவன் – கேவலம் ப்ரஹ்ம பாவனையாயே இருக்கும் சநகாதிகளுக்கு நிரதிசய போக்யனாய் உள்ளவனை – ஸ்ரீ நந்த கோபர்க்கு தன்னுடைய அதி மானுஷ சேஷ்டிதங்களாலே எப்போதும் ஒக்க இனியனானவனை – தன்னையே ஆஸ்ரயிக்கும் படி ஜகத் காரண பூதனாய் உள்ளவனை –அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனை – அவர்களுக்கு எல்லாம் புறம்பாய் இருக்கிற என்னை அடிமை கொண்ட -உபகாரகனை – ஸ்ரீ திரு வல்லிக்கேணிக் கண்டேனே –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2
வேதத்தை வேதத் தின்சுவைப் பயனை விழுமிய முனிவர்கள் விழுங்கும், கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத் தோர்தொழு தேத்தும், ஆதியை யமுதை யென்னை யாளுடை அப்பனை ஒப்பவ ரில்லா மாதர்கள் வாழும், மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-2
பதவுரை Show / Hide
வேதத்தை, Vedaththai - வேதஸ்வரூபியானவனும்
சுவை, Suvai - அவரவர்களுடைய ருசிக்குத் தக்கபடி
வேதத்தின் பயனை, Vedaththin Payanai - வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருமங்களின் பலன்களைக் கொடுப்பவனும்
விழுமிய முனிவர் விழுங்கும், Vizhumiya Munivar Vizhungum - சிறந்த முனிவர்களால் அநுபவிக்கப்படுகிற
கோது இல் இன் கனியை, Kothu Il In Kaniyai - கோதற்ற போக்யமான பழம் போன்றவனும்
நந்தனார் களிற்றை, Nandhanar Kalittrai - நந்தகோபர் வயிற்றிற் பிறந்த ஆனைக்கன்று போன்ற பிள்ளையானவனும்
குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை, Kuvalayaththor Thozhuthu Aeththum Aadhiye - பூமியிலுள்ளாரெல்லாரும் வணங்கித் துதிக்கநின்ற ஜகத்காரணபூதனும்
அமுதை, Amuthai - அமுதம்போலே போக்யனானவனும்
என்னை ஆள் உடை அப்பனை, Ennai Aal Udai Appanai - என்னை அடிமை கொண்டவனுமான எம்பிரானை
ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும், Oppavar Illa Maathargal Vaalum - ஒப்பற்ற ஸ்த்ரீகள் வஸிக்கப் பெற்ற
மாடம் மா மயிலை, Maadam Maa Mayilai - மாடங்களையுடைய சிறந்த மயிலைக் கடுத்த
திரு அல்லிக்கேணி, Thiru Allikeni - திருவல்லிக்கேணியிலே
கண்டேன், Kandein - ஸேவிக்கப்பெற்றேன்.
1070பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புருஷோத்தமனான தனக்கு சேராத வடிவைக் கொண்டு அம்ருதத்தை அனுகூலரை புஜிக்கும் படி பண்ணினவனை – ஸ்ரீ திரு வல்லிக்கேணிக் கண்டேனே –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3
வஞ்சனை செய்யத் தாயுரு வாகி வந்தபே யலறிமண் சேர, நஞ்சமர் முலையூ டுயிர்செக வுண்ட நாதனைத் தானவர் கூற்றை, விஞ்சைவா னவர்சா ரணர்சித்தர் வியந்து துதிசெய்யப் பெண்ணுரு வாகி, அஞ்சுவை யமுத மன்றளித் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-3
பதவுரை Show / Hide
வஞ்சனை செய்ய, Vanjanai Seyya - கபடமாகக் கொல்வதற்காக (- (திருவல்லிக்கேணி கண்டேன்-.))
தாய் உரு ஆகி வந்த, Thaai Uru Aagi Vantha - தாய் வடிவு கொண்டுவந்த
பேய், Pei - பூதனை யென்னும் பேய்ச்சி
அலறி, Alari - கதறிக்கொண்டு
மண் சேர, Man Cheera - தரையிலே விழும்படியாக
நஞ்சு அமர்முலை  ஊடு, Nanju Amarmulai Oodu - விஷந்தடவின (அவளது) முலைவழியாக
உயிர் செக, Uyir Sek - அவளுடைய பிராணன் ஒழியும்படியாக
உண்ட, Unda - முலைப்பாலுண்ட
நாதனை, Nadhanai - ஸ்வாமியானவனும்
தானவர் கூற்றை, Thaanavar Koottrai - அஸூரர்கட்கு யமன் போன்றவனும்
விஞ்சை வானவர், Vinchai Vaanavar - வித்யாதரர்களென்ன
சாரணர், Saaranar - சாரணர்களென்ன
சித்தர், Siddhar - ஸித்தர்களென்ன ஆகிய தேவவர்க்கமடங்கலும்
வியந்து, Viyandhu - ஆச்சரியப்பட்டு
துதி செய்ய, Thudi Seyya - தோத்திரம் செய்யும்படி
பெண் உரு ஆகி, Pen Uru Aagi - மோஹிநீவேஷமெடுத்து
அன்று, Andru - முன்னொரு காலத்திலே
அம் சுவை அமுதம் அளித்தானை, Am Suvai Amudham Aliththaanai - இனிய சுவையுள்ள அமுதத்தை (தேவர்களுக்கு) அளித்தவனுமான பெருமானை
1071பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அந்த மழையின் அளவு அல்லாத பெரிய மலையாலே மழையைத் தடுத்து –அப்படியே சந்த துக்க வர்ஷிணி -என்கிற என்னுடைய சம்சாரம் ஆகிற வர்ஷத்தை பரிகரிக்க வந்தவன் என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4
இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த எழில்விழ வில்பழ நடைசெய், மந்திர விதியில் பூசனை பெறாது மழைபொழிந் திடத்தளர்ந்து, ஆயர் அந்தமோ டினவா நிரைதள ராமல் எம்பெரு மானரு ளென்ன, அந்தமில் வரையால் மழைதடுத் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-4
பதவுரை Show / Hide
இந்திரனுக்கு என்று, Indiranukku Endru - இந்திரனை உத்தேசித்து (- (திருவல்லிக்கேணி கண்டேன்-.))
ஆயர்கள் எடுத்த, Aayargal Edutha - இடையர்களால் நடத்தப்பட்டு வந்த
எழில் விழவில், Ezhil Vizhavil - சிறந்த உத்ஸவத்திலே
பழநடை செய், Pazhanadai Sei - அநாதி ஆசாரமாகச் செய்து வருகிற
மந்திரம் விதியில் பூசனை பெறாது, Manthiram Vidhiyil Poosanaik Peradhu - ஸங்கேதப்படி நடக்கவேண்டிய ஆராதனையைப் பெறாமல்
மழை பொழிந்திட, Mazhai Pozhindhida - (இந்திரன்) மழை பெய்விக்க,
ஆயர், Aayar - இடையர்
தளர்ந்து, Thalarndhu - துன்பப்பட்டு
எம் பெருமான், Em Perumaan - “எங்களுக்குத் தலைவனான கண்ணபிரானே!
எம் தம்மோடு, Em Thammodu - நாங்களும்
இனம் ஆ நிரை, Inam Aa Nirai - கூட்டங்கூட்டமான பசுக்களின் திரளும்
தளராமல், Thalaramal - (மழையினால்) நோவு படாதபடி
அருள் என்ன, Arul Enna - ரக்ஷித்தருளவேணும்” என்று பிரார்த்திக்க
அந்தம் இல் வரையால், Andham Il Varaiyal - அளவில்லாத (மிகப்பெரிய) கோவர்த்தனமலையைக கொண்டு
மழை தடுத்தானை, Mazhai Thaduthaanai - அந்த மழையைத் தடுத்தருளின பெமானை
1072பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ யபதியாய் இருக்கையாலே அல்லாதார் எல்லார்க்கும் வலிய துணை யானவன் – ஆஸ்ரித விஷயத்தில் தாழ நின்ற நிலையாலே தானே துணை என்னும் இடத்தை எனக்கு அறிவித்தவன் – எனக்கு ஸ்வாமியாய் –என் குலத்துக்கு நாதன் ஆனவன் -திருவல்லிக்கேணிக் கண்டேனே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
இந்துணைப் பதுமத் தலர்மகள் தனக்கும் இன்பன்நற் புவிதனக் கிறைவன், தந்துணை யாயர் பாவைநப் பின்னை தனக்கிறை மற்றையோர்க் கெல்லாம் வன்துணை, பஞ்ச பாண்டவர்க் காகி வாயுரை தூதுசென் றியங்கும் என்துணை, எந்தை தந்தைதம் மானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-5
பதவுரை Show / Hide
இன் துணை, In Thunai - தனக்கினிய துணையான (- (திருவல்லிக்கேணி கண்டேன்-.))
பதுமத்து அலர் மகள் தனக்கும் இன்பன், Pathumathu Alar Magal Thanakku Inban - தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டிக்கு இன்பனும்
நல் புவி தனக்கு இறைவன், Nal Puvai Thanakku Iraivan - ஸ்ரீபூமிப் பிராட்டிக்கு நாதனும்
தன் துணை, Than Thunai - தன்னையே துணையாகவுடையளான
ஆயர்பாவை நப்பின்னை தனக்கு இறை, Aayarpaavai Nappinnai Thanakku Irai - ஆயர்மகளான நப்பின்னைப் பிராட்டிக்கு நாயகனும்
மற்றையோர்க்கு எல்லாம், Mattraiyorkku Ellam - மற்றுமுள்ள எல்லார் தமக்கும்
வன் துணை, Van Thunai - ஒருகாலும் விட்டு நீங்காத துணையாயிருப்பவனும்
பஞ்ச பாண்டவர்க்கு ஆகி, Pancha Pandavarkku Aagi - பஞ்ச பாண்டவர்களுக்காய்
தூது சென்று, Thoodhu Sendru - தூதனாக எழுந்தருளி
வாய் உரை இயங்கும், Vaai Urai Iyankum - வாய் வார்த்தைகளைச் சொன்னவனும்
என் துணை, En Thunai - எனக்குத் துணையானவனும்
எந்தை தந்தை தம்மானை, Endai Thandai Thammaanai - எம் குலநாதனுமான பெருமானை
1073பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வலியார் சிலரை அபாஸ்ரயமாக பற்றினாலும் தானே தாழ நின்று ரஷகனாக வல்லன் என்னும் இடத்தை சொல்லுகிறது- த்ரௌபதிக்கு பர்த்தாகள் உதவிற்று இலர்-அர்ஜுனனுக்கு இந்த்ரன் உதவிற்று இலன் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6
அந்தகன் சிறுவ னரசர்த்த மரசற் கிளையவ னணியிழை யைச்சென்று, எந்தமக் குரிமை செய் எனத் தரியாது எம்பெரு மானருள் என்ன, சந்தமல் குழலாள் அலக்கண்நூற் றுவர்த்தம் பெண்டிரு மெய்திநூ லிழப்ப, இந்திரன் சிறுவன் தேர்முன்நின் றானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-6
பதவுரை Show / Hide
அந்தகன் சிறுவன், Andhagan Siruvan - குருடனான த்ருதராஷ்ட்ரனுடைய பிள்ளையாய் (- (திருவல்லிக்கேணி கண்டேன்-.))
அரசர் தம் அரசற்கு, Arasar Tham Arasarkku - ராஜாதி ராஜனென்று தன்னை மதித்திருந்த துரியோதனனுடைய
இளையவன், Ilaiyavan - தம்பியான துச்சாஸநன்
அணி இழையை சென்று, Ani Izhaiyai Sendru - அழகிய ஆபரணங்களையுடையளான த்ரௌபதியிடம் வந்து
எம்தமக்கு உரிமை செய் என, Emthamakku Urimai Sei Ena - “நீ எங்களுக்கு அடிமை செய்யக்கடவை” என்று சொல்ல,
தரியாது, Thariyadhu - (அவள்) பொறுக்க மாட்டாமல்
எம்பெருமான்!, Emperumaan - “ஸ்வாமியான கண்ணபிரானே!
அருள் என்ன, Arul Enna - கிருபை பண்ணவேணும்” என்று ப்ரார்த்திக்க,
சந்தம் அல் குழலாள் அலக்கண், Sandham Al Kuzhalal Alakkan - அழகிய இருண்ட கூந்தலையுடையான அந்த த்ரௌபதியின் மனவருத்தத்தை
நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி, Noorruvar Tham Pendirum Eydhi - துரியோதநாதியர்நூறு பேர்களுடைய மனைவிகளும் அடைந்து
நூல் இழப்ப, Nool Izhappa - தாலியை இழக்கும்படியாக
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை, Indiran Siruvan Ther Mun Nindraanai - இந்திர புத்திரனான அர்ஜூநனுடைய தேரின் முன்னே ஸாரதியாய் நின்ற பெருமானை
1074பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பரதாழ்வானும் அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் – இலக்குமனோடு மைதிலியும் தாயும் பிள்ளையுமாய் இருக்கிற சேர்த்தி –பெருமாளைப் பிரியில் தரியாமையால் உண்டான சேர்த்தி- கண்டு அனுபவித்தார்களோடு –கேட்டார் வாய் கேட்டாரோடு வாசியற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று – அவர்களோபாதி நானும் தோற்று ஏத்தும்படி -பண்ணினவனை திருவல்லிக்கேணிக் கண்டேனே—என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7
பரதனும் தம்பி சத்துருக் கனன்னும் இலக்கும னோடுமை திலியும் இரவுநன் பகலும் துதிசெய்ய நின்ற இராவணாந் தகனையெம் மானை, குரவமே கமழும் குளிர்ப்பொழி லூடு குயிலொடு மயில்கள்நின் றால, இரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியாத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-7
பதவுரை Show / Hide
பரதனும், Barathanum - பரதாழ்வானும்
தம்பி சத்துருக்கனனும், Thambi Sathurukkananum - அவனது தம்பியான சத்ருக்நாழ்வானும்
இலக்குமனோடு, Ilakkumanodu - லக்ஷ்மணணும்
மைதிலியும், Maithiliyium - ஸீதாபிராட்டியும்
இரவும் நன்பகலும் துதி செய்ய நின்ற, Iravum Nanpakalum Thudi Seyya Nindra - இடைவிடாது தோத்திரம் பண்ணும்படியாக எழுந்தருளியிருக்கிற
இராவண அந்தகனை எம்மானை, Iravana Andhakanai Emmaanai - ராவண ஸம்ஹாரியான பெருமானை,
குரவமே கமழும் குளிர் பொழிலூடு, Kuravame Kamazhum Kulir Pozhiloodu - குரவமலர்களே பரிமளிக்கின்ற குளிர்ந்த சோலைகளிலே
குயிலொடு மயில்கள் நின்று ஆல, Kuyilodu Mayilgal Nindru Aala - குயில்களும் மயில்களும் ஆரவாரிக்க,
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா, Iraviyin Kathirgal Nuzhaithal Seythu Ariya - ஸூர்ய கிரணங்கள் உள்ளே நுழைந்தறியாத (எப்போதும் நிழல் செய்திருக்கிற)
திரு அல்லிக்கேணி, Thiru Allikeni - திருவல்லிக்கேணியிலே
கண்டேன், Kandein - ஸேவிக்கப்பெற்றேன்.
1075பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வாயில் ஓர் ஆயிர நாமம் –-அவன் அப்போது சொல்லிற்று-நால் இரண்டாகிலும் பருவத்துக்கு தக்க அளவல்லாதபடி இருக்கையாலே குவாலாகச் -சொல்லுகிறார் – நால் இரண்டு -ஸ்ரீ திரு அஷ்டாஷரம் ஆகவுமாம்–ஸ்ரீ நாராயண -ஸ்ரீ ஹரி என்றுமாம் -ஸ்ரீ விஷ்ணு ஷட் அஷரி-யாகவும் – ஹிரண்யன் உடைய முரட்டு வடிவைக் கண்டு பிற் காலியாதே ஸ்ரீ நரசிம்ஹமாய் அவ்வழியாலே தானே ஆஸ்ரயணீயன் என்னும் இடத்தை வெளி இட்டான் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம், ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பில னாகி, பிள்ளையைச் சீறி வெகுண்டுதூண் புடைப்பப் பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய், தெள்ளிய சிங்க மாகிய தேவைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-8
பதவுரை Show / Hide
பள்ளியில் ஓதி வந்த, Palliyil Oadhi Vanda - பள்ளிக்கூடத்தில் வாசித்து விட்டு வீட்டுக்கு வந்த (- (திருவல்லிக்கேணி கண்டேன்.))
தன் சிறுவன் வாயில், Than Siruvan Vayil - தனது மகனான ப்ரஹ்லாதனுடைய வாயில்
ஓர் ஆயிரம் நாமம், Oru Aayiram Naamam - விலக்ஷணமான ஸஹஸ்ர நாமங்கள்
ஒள்ளிய ஆகி போத, Olliya Aagi Podha - அழகாக உச்சரிக்கப்பட்டு வர
ஆங்கு, Aangu - அக்காலத்திலே
அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி, Adhanukku Ondrum Oru Poruppu Ilan Aagi - அதை எள்ளளவும் பொறுக்கமாட்டாதவனாய் (இரணியன்)
பிள்ளையை சீறி வெகுண்டு, Pillaiyai Seeri Vegundu - அந்த ப்ரஹ்லாதன்மீது மிகவும் கோபித்து
தூண் புடைப்ப, Thoon Pudaippa - தூணைத் தட்டினபோது
பிறை எயிறு அனல் விழி பேழ் வாய், Pirai Eiyiru Anal Vizhi Pezh Vayi - பிறைபோன்ற பற்களையும் நெருப்புப்பொறி கிளர்கின்ற கண்களையும் பெரிய வாயையுமுடைய
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை, Thelliya Singam Aagiya Thevai - தெளிசிங்கப் பெருமாளாகத் திருவவதரித்த தேவனை
1076பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆனை நெடு நாள் பட்ட இடர் எல்லாம் போம்படியாக ஸ்ரீ பெரிய திருவடியை மேற் கொண்டு வந்து ஆனைக்கு இடர் இன்றிக்கே முதலைக்கே இடர் ஆம்படியாக ஸ்ரீ திரு வாழியை ஏவினான் ஆயிற்று –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9
மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையி னோடுசென் றிழிந்த, கானமர் வேழம் கையெடுத் தலறக் கராவதன் காலினைக் கதுவ, ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து சென்றுநின் றாழிதொட் டானை, தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-9
பதவுரை Show / Hide
மீன் அமர்பொய்கை, Meen Amarpoykai - மீன்கள் அமர்ந்ததொரு தடாகத்திலே (- (மாடம் மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேன்.))
நாள் மலர் கொய்வான் வேட்கையினோடு, Naal Malar Koyvaan Vetkaiyinodu - புதிய புஷ்பங்களைப் பறிக்க வேணுமென்கிற விருப்பத்தோடு
சென்று இழிந்த, Sendru Izhindha - போய் இறங்கின
கான் அமர் வேழம், Kaan Amar Vezham - காட்டில் திரியும் கஜேந்திரன்
கை எடுத்து அலற, Kai Eduthu Alara - தனது துதிக்கையை உயரத் தூக்கிக் கூச்சலிடும்படியாக
கரா, Karaa - முதலையானது
அதன் காலினை கதுவ, Adhan Kaalinai Kathuva - அவ் யானையின் காலைத் கௌவிக்கொள்ள,
ஆனையின் துயரம் தீர, Aanaiyin Thuyaram Theera - அந்த யானையினுடைய மனவருத்தம் தீரும்படி
புள் ஊர்ந்து சென்று, Pul Oornthu Sendru - பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு (பொய்கைக் கரையிலே) எழுந்தருளி
நின்று, Ninru - அங்கே நின்று
ஆழி தொட்டானை, Aazhi Thottanai - திருவாழியை (அந்த முதலையின்மீது) பிரயோகித்த பெருமானை,
தேன் அமர்சோலை, Then Amarsolai - தேன்மாறாத சோலைகளையுடைய
1077பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –நித்ய அனுபவம் பண்ணலாம் படியான ஸ்ரீ நித்ய விபூதியைப் ப்ராபிக்க பெறுவர் .) 10
மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும் மாடமா ளிகையும்மண் டபமும், தென்னன்தொண் டையர்க்கோன் செய்தநன்மயிலைத் திருவல்லிக் கேணிநின் றானை, கன்னிநன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க்கலி கன்றி, சொன்னசொன் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர்வா னுலகே. –2-3-10
பதவுரை Show / Hide
மன்னு தண் பொழிலும், Mannu Than Pozhilum - நித்தியமாய் குளிர்ந்த சோலைகளும்
வாவியும், Vaaviyum - நீர் நிலங்களும்
மதிளும், Mathilum - மதில்களும்
மாடம் மாளிகையும், Maadam Maaligaiyum - மாட மாளிகைகளும்
மண்டபமும், Mandapamum - மண்டபங்களும் உண்டாம்படி
தென்னன் தொண்டையர்கோன் செய்த, Thennan Thondaiyarkon Seitha - பாண்டிய குலத்தவனான தொண்டைமான் சக்கரவர்த்தி  நிருமித்த
நல் மயிலை திரு அல்லிக்கேணி நின்றாணை, Nal Mayilai Thiru Allikeni Nindraanai - அழகியமயிலைக்கடுத்த திருவல்லிக்கேணியிலே  நின்றளும் பெருமான் விஷயமாக,
கன்னி நல் மாடம் மங்கையர்தலைவன், Kanni Nal Maadam Mangaiyarthalaivan - அழிவில்லாத நல்ல மாடங்களையுடைய திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரும்
காமரு சீர், Kaamaru Seer - சிறந்த ஸ்ரீவைஷ்ணவலக்ஷ்மியை உடையவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச்செய்த
சொல் மாலை பத்து உடன், Sol Maalai Pattu Udan - சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள்
சுகம் இனிதுவான் உலகு, Sukam Inidhuvaan Ulagu - ஆநந்தமயமான பரமபதத்தை
ஆள்வர், Aalvar - ஆளப்பெறுவர்கள்.
1078பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு நறையூரிலே நின்றான்-ஸ்ரீ திருவாலியிலே இருந்தான்-ஸ்ரீ திருக் குடந்தையிலே சாய்ந்தான்-ஸ்ரீ திருக் கோவலூரிலே நடந்தான் – இடம் மா மலையாவது நீர் மலையே –மலையாய் இருக்கச் செய்தே அல்லாதவை வாஸ ஸ்தானம் ஆகிறது இல்லை இறே – உகந்து அருளின நிலங்களில் எங்கும் பண்ணக் கடவ விருப்பத்தைப் பண்ணிக் கொடு வந்து சந்நிஹிதனான தேசம் ஸ்ரீ திரு நீர் மலை- என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
அன்றாயர்கு லக்கொடி யோடணிமா மலர்மங்கையொ டன்பளவி,அவுணர்க் கென்றானு மிரக்கமி லாதவனுக்குக் குறையுமிட மாவது,இரும்பொழில்சூழ் நன்றாயபு னல்நறை யூர்த்திருவா லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர், நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-1
பதவுரை Show / Hide
அன்று, Andru - கிருஷ்ணனாய்ப் பிறந்த அக்காலத்து
ஆயர்குலம் கொடியோடு, Aayarkulam Kodiyodu - இடைக்குலத்திற் பிறந்தகொடி போன்ற நப்பின்னை பிராட்டியோடும்
அணி மா மலர் மங்கையொடு, Ani Maa Malar Mangaiyodu - மிகச் சிறந்த தாமரை மலரிற் பிறந்த பெரிய பிராட்டியோடும்
அன்பு அளவி, Anbu Alavi - அன்புடன் கலந்தவனும்
என்றானும், Endraanum - எக்காலத்திலும்
அவுணர்க்கு, Avunarkku - அசுரர்கள் விஷயத்திலே
இரக்கம் இலாதவனுக்கு, Irakkam Ilaadhavanukku - இரக்கமில்லாதவனுமான எம்பெருமானுக்கு
உறையும் இடம் ஆவது, Urayum Idam Aavathu - வாஸஸ்தான மெதுவென்றால்;-.
இரு பொழில் சூழ், Iru Pozhil Soozh - பரந்த சோலைகளாலே சூழப்பட்டு
நன்று ஆய புனல், Nandru Aaya Punal - நல்ல தீர்த்தங்களையுடைய
நறையூர், Naraiyoor - திருநறையூரிலே
நின்றான், Nindraan - நின்றவனும்
திரு ஆலி, Thiru Aali - திருவாலியிலே
இருந்தான், Irundhaan - வீற்றிருந்தவனும்
குடந்தை, Kudanthai - திருக்குடந்தையிலே
கிடந்தான், Kidandhaan - சயனித்தவனும்
தடம் திகழ் கோவல் நகர், Thadam Thigazh Koval Nagar - தடாகங்களாலே விளங்குகின்ற திருக்கோவலூரிலே
நடந்தாற்கு இடம், Nadandaarku Idam - உலகளந்த திருக்கோலமாக எழுந்தருளியிருந்தவனுமான எம்பெருமானுக்கு இடமான
மா மலை ஆவது நீர்மலை, Maa Malai Aavadhu Neermalai - சிறந்த மலையான திருநீர் மலையாம்.
1079பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முன்பு பூ பாரத்தைப் போக்கி நிர்வஹித்துப் -போந்தவன் –சீறி யருளி –அவனுடைய பிரதிஞ்ஞா காலத்தில் வந்து உதவிற்றிலன் ஆகில் குணங்கள் சாவாதியாம் போலே சர்வாதிகனான தான் வாமன வேஷத்தைப் பரிகிரஹித்து நிற்கச் செய்தே மஹா பலி பக்கலிலே சென்று இரந்து திருக் கையிலே நீர் விழுந்தவாறே ஆகாசவகாசம் இடம் அடையும்படி வளர்ந்து அளந்து கொண்டவனுக்கு வாஸ ஸ்தானம்- என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2
காண்டாவன மென்பதொர் காடமரர்க் கரையனது கண்டவன் நிற்க,முனே மூண்டாரழ லுண்ணமு னிந்ததுவும்அதுவன்றியும் முன்னுல கம்பொறைதீர்த் தாண்டான்,அ வுணனவன் மார்வகலம் உகிரால்வகி ராகமு னிந்து, அரியாய் நீண்டான்குற ளாகிநி மிர்ந்தவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-2
பதவுரை Show / Hide
அமரர்க்கு அரையன் அவன், Amararkku Arayan Avan - தேவர்களுக்குத் தலைவனான இந்திரனானவன் (- (மா மலை ஆவது நீர்மலை-.))
கண்டு நிற்க, Kandu Nirka - பார்த்துக்கொண்டிருக்கையில்
முனே, Mune - அவன் கண் முன்னே
“காண்டாவனம்”; என்பது ஓர் காடு அது, Kandavanam Enbathu Oru Kaadu Adhu - ‘காண்டாவனம்’ என்று ப்ரஸித்தமான வொருகாட்டை
ஆர் அழல், Aar Azhai - அக்நி பகவான்
மூண்டு உண்ண, Moondru Unna - மேல் விழுந்து உட்கொள்ளும்படியாக
முனிந்ததுவும், Munindathuvum - சீறி நியமித்தவனும்,
அது அன்றியும், Adhu Andriyum - அதுவுந்தவிர,
முன், Mun - முன்பு(பாரதப்போரில்)
உலகம் பொறை தீர்த்து, Ulagam Porai Theerthu - பூமியின் பாரங்களைத்தீர்த்து
ஆண்டான், Aandaan - உலகங்களை ரக்ஷித்தவனும்
அவுணன் அவன், Avunan Aavan - இரணியாசுரனுடைய
அகலம் மார்பு, Ahalam Maarbu - அகன்ற மார்பு
உகிரால், Ukiral - (திருக்கை) நகங்களாலே
வகிர் ஆக, Vagir Aaga - இருபிளவாம்படி
முனிந்து, Muninthu - சீறி
அரி ஆய் நீண்டான், Ari Aay Neendan - நரசிங்கமாய் வளர்ந்திட்டவனும்
குறள் ஆகி, Kural Aagi - (முதலில்) வாமநாவதாரஞ் செய்து
நிமிர்ந்தவனுக்கு, Nimirndhavanukku - (பிறகு) திரிவிக்கிரமனாய் வளர்ந்தவனுமான பெருமானுக்கு
இடம், Idam - இடம் (எதுவென்றால்)
1080பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நில மன்னனுமாய் உலகு -ஆண்டவனுக்கு ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைச் சொல்லுதல்-அன்றிக்கே பூ பார நிர் ஹரணம் பண்ணின படியைச் சொல்லுகையாலே ஸ்ரீ கிருஷ்ணனைச் சொல்லுதல்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3
அலமன்னு மடல்சுரி சங்கமெடுத் தடலாழியி னாலணி யாருருவில், புலமன்னு வடம்புனை கொங்கையினாள் பொறைதீரமு னாளடு வாளமரில், பலமன்னர் படச்சுட ராழியினைப் பகலோன்மறை யப்பணி கொண்டு,அணிசேர் நிலமன்னனு மாயுல காண்டவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-3
பதவுரை Show / Hide
அணி ஆர் உருவில், Ani Aar Uruvil - அழகுபொருந்திய திருமேனியிலே (- (மா மலை ஆவது நீர்மலையே-.))
அடல் ஆழியினால், Adal Azhiyinai - தீக்ஷ்ணமான திருவாழியோடு கூட
அலம், Alam - கலப்பையையும்
மன்னும் அடல் சுரி சங்கம், Mannum Adal Suri Sangam - (எதிரிகட்கு) நித்யபயங்கரமான ஸ்ரீ பாஞ்சஜந்யத்தையும்
எடுத்து, Eduthu - தரித்துக் கொண்டிருப்பவனாயும்
முன், Mun - முன்னொருகால்,
புலம் மன்னுவடம் புனை கொங்கையினாள், Pulam Mannuvadam Punai Kongaiyinai - மநோஹரமான முத்து வடங்களணிந்த முலையை யுடையளான பூமிப் பிராட்டியினுடைய
பொறை, Porai - பாரமானது
தீர, Theera - தொலையும்படி
ஆள் அடு வாள் அமரில், Aal Adu Vaal Amarlil - ஆண்களை யெல்லாம் முடிக்கிற மஹத்தான யுத்தத்திலே
பல மன்னர் பட, Pala Mannar Pada - பல அரசர்கள் நசிக்கும்படி (செய்தவனாயும்)
பகலோன் மறைய, Pagalon Maraiya - ஸூர்யன் மறையும்படியாக
சுடர் ஆழியினை பணி கொண்டு, Sudar Azhiyinai Pani Kondu - ஒளிமிக்க திருவாழியைக் காரியங் கொண்டவனாயும்
அணிசேர் நிலம் மன்னனும் ஆய், Anicher Nilam Mannanum Aay - அழகிய இந்நிலத்திற்கு நாயகனாயிருந்துகொண்டு
உலகு ஆண்டவனுக்கு, Ulaku Aandavanukku - உலகங்களை ரக்ஷித்தவனாயுமிருக்கிற பெருமானுக்கு
இடம், Idam - இருப்பிடம்
1081பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தான் ஸ்வாமியான முறை தோற்ற இருக்குமாகில் அவர்களோடும் பொருந்த ஒண்ணாது இறே- அதுக்காக தன்னைத் தாழ விட்டு அவர்களோடு உறவு பண்ணி கலந்து –த்ரௌபதி உடைய ஸ்த்ரீத்வத்தை பரிஹரித்தவனுக்கு வாஸ ஸ்தானம்–என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4
தாங்காததோ ராளரி யாயவுணன் – றனைவீட முனிந்தவ னாலமரும், பூங்கோதையர் பொங்கெரி மூழ்கவிளைத் ததுவன்றியும் வென்றிகொள் வாளமரில், பாங்காகமுன் ஐவரொ டன்பளவிப் பதிற்றைந்திரட் டிப்படை வேந்தர்பட, நீங்காச்செரு வில்நிறை காத்தவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-4
பதவுரை Show / Hide
தாங்காதது, Thangadhadhu - எதிரிகளுக்கு ஸஹிக்கமுடியாத
ஓர் ஆளி அரி ஆய், Oru Aali Ari Aay - ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி
அவுணன் தனை, Avunan Thanai - (ஹிரண்யனென்னும்) அஸூரனை
வீட முனிந்து, Veeda Muninthu - முடியுமாறு சீறி,
அவனால் அமரும், Avanal Amarum - அவ்விரணியனால் நிலைபெற்றிருந்த
பூங்கோதையர், Poongothaiyar - பெண்டுகள்
பொங்கு எரி மூழ்க, Pongu Eri Moongka - எரிகிற நெருப்பிலே புகும்படி
விளைத்து, Vilaitthu - செய்தவனாயும்
அது அன்றியும், Adhu Andriyum - அதுவுமல்லாமல்,
முன், Mun - முன்னே
வென்றி கொள் வாள் அமரில், Vendri Kol Vaal Amiril - வெற்றியையுடைய பெரிய போர்க்களத்திலே
ஐவரொடு, Aivarodu - பஞ்சபாண்டவர்களோடே
பாங்கு ஆக அன்பு அளவி, Paangu Aaga Anbu Alavi - அவர்களுக்குத் தக்கபடி உறவு பண்ணிக் கலந்து,
படை, Padai - ஆயுதங்களை யுடையவர்களான
பதிற்றைந் திரட்டி வேந்தர் பட, Pathirrain Thiratti Vendar Pada - நூற்றுவரான துரியோதனாதிகள் முடிந்துபோம்படி செய்தவனாயும்
நீங்கா செருவில், Neenga Seruvil - மாளாத அப்பெரும் பூசலினாலே
நிறை, Nirai - (த்ரௌபதியின்) நலத்தை
காத்தவனுக்கு, Kaathavanukku - ரக்ஷித்தவனாயுமுள்ள ஸர்வேச்வரனுக்கு
1082பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவண வதம் பண்ணின அநந்தரம் திருமேனியில் பிறந்த பௌஷ் கல்யம் இருக்கிறபடி – நீலமானது அமர்ந்து இருக்கிற முகில் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவன் – அவ் வடிவு அழகாலே என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனுக்கு –மா மலையாவது நீர் மலையே – என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
மாலுங்கட லாரம லைக்குவடிட் அணைகட்டி வரம்புருவமதிசேர் கோலமதி ளாயவி லங்கைகெடப் படைதொட்டொரு காலம ரிலதிர, காலமிது வென்றயன் வாளியினால் கதிர்நீண்முடிபத்து மறுத்தமரும், நீலமுகில் வண்ணனெ மக்கிறைவற் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-5
பதவுரை Show / Hide
ஒரு கால், Oru Kaal - முன்னொருகாலத்திலே (- (அவ்வளவிலும் இராவணன் சளைக்காமல்) (இடம் மாமலை ஆவது நீர்மலையே-))
மாலும் கடல் ஆர, Maalum Kadal Aara - பெரிய கடல் நிறையும்படி
மலை குவடு இட்டு, Malai Kuvalu Ittu - மலைக் கொடுமுடிகளைக் கொண்டு போட்டு
வரம்பு உருவ, Varambu Uruva - அக்கரையிலே சென்று சேரும்படி
அணை கட்டி, Anai Katti - ஸேது கட்டி,
மதி சேர், Madi Ser - சந்திரன் வரையில் ஓங்கியிருக்கிற
கோலம் மதிளாய, Kolam Madilay - அழகிய மதில்களையுடைத்தான
இலங்கை, Ilankai - லங்காபுரியானது
கெட, Keda - அழியும்படியாக
படை தொட்டு, Padai Thottu - ஆயதங்களைச் செலுத்தி
அமரில் அதிர, Amaril Athira - போர்க்களத்தில் நின்று குமுறின வளவிலே
இதுகாலம் என்று, Idhukalam Endru - இவனை முடிப்பதற்கு இதுவே தக்க ஸமயமென்று கொண்டு
அயன் வாளியினால், Ayan Valiyinal - ப்ரஹ்மாஸ்த்ரத்தாலே
கதிர் நீள் முடி பத்தும் அறுத்து, Kathir Neel Mudi Pathum Aruthu - (கிரீடங்களால்) ஒளிபெற்ற நீண்ட பத்துத் தலைகளையும் அறுத்து
அமரும், Amarum - அயோத்திமாநகரில் பிராட்டியும் தானுமாக வந்து சேர்ந்த
நீலம் முகில் வண்ணன், Neelam Mukil Vannan - காளமேக நிறத்தனான
எமக்கு இறைவற்கு, Emakku Iraivarku - எம்பெருமானுக்கு
1083பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷ்யம் அளவுபட்டு ரஷகத்வமே விஞ்சி இருக்கிறவன் –இப்படி தான் சர்வ ரஷகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன் –நீரார் பேரான் –நீர் -என்று நீர்மையாய்-அத்தால் ஸ்வாபாவமாய் -அதாகிறது சேஷித்வமாய்-ஆக ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தவஸ்துவும் தனக்கு பிரகாரமாய் தான் ப்ரகாரியாய் இருக்கையாலே ஸ்ரீ நாராயணன் என்னும் திரு நாமத்தை உடையவன் –சர்வாதிகனான எம்பெருமானுக்கு ஸ்ரீ நீர் வண்ணன் என்று திரு நாமம் – என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6
பாராருல கும்பனி மால்வரையும் கடலும்சுட ருமிவை யுண்டும், எனக் காரா தென நின்றவ னெம்பெருமான் அலைநீருல குக்கரசாகிய,அப் பேரானைமுனிந்தமுனிக்கரையன் பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான், நீரார்ப்பே ரான்நெடு மாலவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-6
பதவுரை Show / Hide
ஆர் பார் உலகும், Ar Paar Ulagum - விசாலமான பூலோகமும் (- (நீர்வண்ணனென்னும் திருநாமத்தை யுடையவனுமான) (இடம் மா மலை ஆவது நீர்மலையே))
பனி மால் வரையும், Pani Maal Varaiyum - குளிர்ந்தபெரிய மலைகளும்
கடலும், Kadalum - ஸமுத்ரங்களும்
சுடரும், Sudarum - சந்திர ஸூரியர்களும்
இவை, Ivai - ஆகிய இவற்றையடங்கலும்
உண்டும், Undum - அமுது செய்தும்
எனக்கு ஆராது என நின்றவன், Enakku Aaraathu Ena Nindravan - எனக்கு வயிறு நிறை வில்லையே! என்று சொல்லிக்கொண்டே யிருந்தவனும்
எம்பெருமான், Emperuman - எம்போலியர்க்கு ஸ்வாமியானவனும்
அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அப்பேரானை முனிந்த முனிக்கு அரையன், Alai Neer Ulakukku Arasu Aagi Apperaanai Munintha Munikku Arayan - கடல் சூழ்ந்த உலகத்துக்கு ராஜாக்களென்கிற அந்தப் பேரையுடைய க்ஷத்ரிய குலத்தைச் சீறிக்களைந்த பரசுராம முனிவரனாகத் தோன்றினவனும்
நுனக்கு பிறர் இல்லை எனும் எல்லையினான், Nunakku Pirar Illai Ennum Ellaiyinan - ‘உனக்கு மேற்பட்டாரொருவருமில்லை‘ என்னும்படியாகப் பெருமையின் எல்லையிலே நிற்பவனும்
நீர் ஆர் பேரான், Neer Aar Peeraan - நீர்வண்ணனென்னும் பேரான்
நெடு மால் அவனுக்கு, Nedu Maal Avanukku - ஸர்வேச்வரனுக்கு
1084பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் எதிரி என்று தோற்றினவனுடைய மார்வை இரண்டு கூறாம்படி பிளந்து பொகட்டவனுக்கு-ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் உடைய வார்த்தையாலே –முன்பு அவன் பண்ணின பராதி கூல்யத்தை எல்லாம் பொறுக்க வேணும் என்ன பொறுத்துப் போந்தான் – இனி இவன் இருக்கில் இவனுக்கு அநர்த்தம் என்னும் அளவில் பின்னை அழியச் செய்து விட்டான் ஆயிற்று என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7
புகராருரு வாகிமுனிந்தவனைப் புகழ்வீட முனிந்துயி ருண்டு,அசுரன் நகராயின பாழ்பட நாமமெறிந்ததுவன்றியும் வென்றிகொள் வாளவுணன், பகராதவ னாயிர நாமமடிப் பணியாதவ னைப்பணி யாமலரில், நிகராயவன் நெஞ்சிடந் தானவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-7
பதவுரை Show / Hide
புகர் அர் உரு ஆகி, Pugar Ar Uru Aagi - (கண்ணபிரானான தன்னைப்போலவே சங்கு சக்கரங்களைச் செய்வித்துத் தரித்துக் கொண்டதனால்) ஒளிமிக்க உருவையுடையனாய்
முனிந்தவனை, Munindhavanai - (தன்மீது) கோபத்தைக் காட்டினவனான பௌண்ட்ரக வாஸுதேவனை
நாமம் பாழ்பட எறிந்து, Naamam Pazhpad Erinthu - பேருங்கூட அழந்துபோம்படியாக த்வம்ஸம் பண்ணினவனும்
அது அன்றியும், Adhu Andriyum - அது தவிரவும்,
வென்றி கொள் வாள், Vendri Kol Vaal - வெற்றி கொருந்திய வாளைத் துணையாகவுடையனாய்
ஆயிரம் நாமம் பகராதவன், Aayiram Naamam Bhakaradhavan - (தன்னுடைய) ஸஹஸ்ர நாமங்களில் ஒன்றையும் சொல்லாதவனாய்
புகழ் வீட முனிந்து, Pugazh Veeda Muninthu - (அவனுடைய புகழ் ஒழியும்படி சீறி
உயிர் உண்டு, Uyir Undu - (அவனது) பிராணனை அபஹரித்தவனும்
அசுரன், Asuran - ஆஸுரப்ரக்ருதியான அவனுடைய
நகர் ஆயின, Nagar Aayin - நகரங்களாக அமைந்திருந்த பல ஸ்தானங்களை
அடி பணியாதவன், Adi Paniyadhavan - திருவடிகளிலே வணங்காதவனாய்
அமரில் நிகர் ஆயவன், Amaril Nikar Aayavan - போர்புரிவதில் தன்னோடு ஒத்தவனாயிருந்த
அவுணனை, Avunai - இரணியரசுரனுடைய
நெஞ்சு, Nenju - மார்வை
பணியால், Paniyal - (ப்ரஹ்லாதனுடைய) சொல்நிமித்தமாக
இடந்தான் அவனுக்கு, Idanthan Avanukku - பிளந்தவனுமான எம்பெருமானுக்கு
1085பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எங்கள் பக்கலிலே அருளைப் பண்ண வேணும் என்று நெஞ்சு நெகிழ்ந்து ப்ரேமயுக்தராய் கொண்டு நாள் தோறும் அனுசந்திக்குமவர்கள்-நிச்சம் அருள் செய்யும் அவர்க்கு –மா மலையாவது நீர் மலையே என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
பிச்சச்சிறு பீலிபி டித்துலகில் பிணந்தின்மடவாரவர் போல்,அங்ஙனே அச்சமிலர் நாணில ராதன்மையால் அவர்செய்கை வெறுத்தணி மாமலர்த்தூய், நச்சிநம னாரடை யாமைநமக் கருள்செய் எனவுள்குழைந் தார்வமொடு, நிச்சம்நினை வார்க்கருள் செய்யுமவற் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-8
பதவுரை Show / Hide
உலகில், Ulagil - இவ்வுலகத்திலே
பிச்சம் இது பீலி பிடித்து, Picham Ithu Peelipidithu - பிச்சங்களையுடையதாய்ச் சிறிதான மயிலிறகைக் கையிலே வைத்துக் கொண்டு (இருப்பவர்களான ஜைநர்கள்)
பிணம் தின்மடவார் அவர்போல் அங்ஙனே, Pinam Thinmadavaar Avarpol Anggane - பிணங்களைப் பிடுங்கித் தின்கிற பிசாச ஸ்த்ரீகளைப்போலே (திகம்பரர்களாய்த் திரிகையாலே)
அச்சம் இலர், Acham Ilir - பயமில்லாதவர்களாயும்
நாண் இலர் ஆதன்மையால், Naan Ilir Aadhanmaiyaal - வெட்கமில்லாதவர்களாயு மிருக்கையாலே
அவர், Avar - அப்படிப்பட்ட ஜைநர்களினுடைய
செய்கை, Seigai - நடத்தைகளை
வெறுத்து, Veruthu - வெறுத்துத் தள்ளிவிட்டு
அணி மா மலர்தூய், Ani Maa Malartthuuy - அழகிய சிறந்த புஷ்பங்களைக்கொணர்ந்து ஸமர்ப்பித்து
நச்சி, Nachchi - பக்திபண்ணி
நமனார் அடையாமை நமக்கு அருசெய் என, Namanar Adaiyaamai Namakku Aruseyi Ena - யமன் (எங்களைக்) கிட்டாதபடி (எமக்கு) அருள்புரியவேணும் என்று
உள் குழைந்து, Ul Kuzhaindhu - மனங்குழைந்து
ஆர்வமொடு, Aarvamodu - அன்புடனே
நிச்சம், Nicham - நித்யமாக
நினைவார்க்கு, Ninaivaarakku - அநுஸந்திக்கு மடியவர்களுக்கு
அருள் செய்யுமவற்கு, Arul Seyyumavarkku - கிருபைபண்ணுகிற எம்பெருமானுக்கு
1086பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருவடிகளில் விழுந்து ஆஸ்ரயிப்பார் உடைய பாபங்களை வாசனையோடே நசிப்பிக்கும் – அவ்வரியத்தையும் செய்யும்-இப்படி இருக்கையாலே அதுவே நமக்கு உஜ்ஜீவிக்கைக்கு ஸ்தானம் – என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9
பேசுமள வன்றிது வம்மின்நமர்! பிறர்க்கேட்பதன் முன்பணி வார்வினைகள், நாசமது செய்திடும் ஆதன்மையால் அதுவேநம துய்விடம் நாண்மலர்மேல் வாசமணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்துழல் வார்,மதியில் நீசரவர் சென்றடை யாதவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே! –2-4-9
பதவுரை Show / Hide
நமர், Namar - நம்முடையவர்களே!
இது பேசும் அளவு அன்று, Ithu Pesum Alavu Andru - இந்த திவ்யதேசவைபவம் நம்மால் சொல்லி முடிக்கப்போகாது,
பிறர் கேட்பதன் முன், Piraar Kaetpadhan Mun - (இது) நாஸ்திகாதிகளின் காதில் விழுவதற்கு முன்னமே
வம்மின், Vammin - வந்து கேளுங்கள்,
அது, Adhu - அந்த திவ்யதேசமானது
பணிவார் வினைகள் நாசம் செய்திடும், Panivaar Vinaigal Naasam Seididum - தன்மை வணங்குமவர்களின் பாவங்களைத் தொலைக்கும்
ஆதன்மையால், Aadhanmaiyaal - ஆகையாலே
அதுவே, Adhuvae - அந்த திவ்யதேசமே
நமது உய்வு இடம், Namathu Uyvu Idam - நாம் உஜ்ஜீவிப்பதற்கு உறுப்பானது (அஃது எவ்விடமென்றால்)
மனம் ஐந்தொடு நைந்து உழல்வார், Manam Aindhodu Naindhu Uzhalvaar - நெஞ்சானது ஐந்து விஷயாந்தரங்களிலே செல்லப்பெற்று மிகவும் வருந்துகிறவர்களாயும்
மதி இல், Madhi Il - புத்தி கெட்டவர்களாயுமிருக்கிற
நீசர் அவர், Neesar Avar - அற்ப மனிதர்கள்
சென்று அடையாதவனுக்கு இடம், Sendru Adaiyadaavanukku Idam - சென்று கிட்ட முடியாதவனான எம்பெருமானுக்கு இடமானதும்
நாள் மலர்மேல், Naal Malarmel - அப்போதலர்ந்த பூவின் மேலே (படிந்து)
வாசம் அணி வண்டு, Vaasam Ani Vandu - பரிமளத்தை ஏற்றுக் கொண்ட வண்டுகள்
அறை, Arai - ரீங்காரம் செய்யப்பெற்ற
பை புறவில், Pai Puravil - பரந்த சோலைகளை யுடையதுமான
மா மலை ஆவது நீர்மலை, Maa Malai Aavadhu Neermalai - சிறந்த மலையாகிய திருநீர்மலையாம்.
1087பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரயண காலத்திலேயே கர்மங்கள் அடைய விட்டோடிப் போம் – அதுக்கு மேலே பிராப்தியும் வேண்டி இருக்கில் அதுவும் அவர்க்கு சுலபமாம் – அன்றிக்கே-பூமிக்கு எல்லாம் தாங்களே நிர்வாஹகராய் ஐஸ்வர்யத்தை அனுபவித்து பின்னையும் திருவடிகளிலே கூடப் பெறுவர்–என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10
நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல் நிலவும்புகழ் மங்கையர் கோன்,அமரில் கடமாகளி யானைவல்லான் கலியன் ஒலிசெய்தமிழ் மாலைவல் லார்க்கு, உடனே விடுமால்வினை வேண்டிடில் மேலுலகும் எளிதாயிடு மன்றியி லங்கொலிசேர், கொடுமாகடல் வையக மாண்டுமதிக் குடைமன்னவ ராயடி கூடுவரே. –2-4-10
பதவுரை Show / Hide
நெடு மால் அவன் மேவிய, Nedu Maal Aavan Meviyai - ஸர்வேச்வரன் நித்யவாஸம் செய்தருளப்பெற்ற (- (ஆல்-அசை.) (பின்பு))
நீர்மலை மேல், Neermalai Mel - திருநீர்மலை விஷயமாக,
நிலவும் புகழ், Nilavum Pugazh - நித்யமான புகழையடையரும்
மங்கையர்கோன், Mangaiyarkon - திருமங்கைநாட்டி லுள்ளார்க்குத் தலைவரும்
அமரில், Amaril - போர்க்களத்திலே
கடம் மா களி யானை வல்லான், Kadham Maa Kali Yaanai Vallaaan - மதத்தாலே மிகவும் களித்த யானையை நடத்தவல்லவருமான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலிசெய், Olisei - அருளிச்செய்த
தமிழ் மாலை, Tamizh Maalai - இத்தமிழ்த்தொடையை
வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு
வினை, Vinai - (உள்ள) பாவங்கள்
உடனே, Udane - அப்போதே
விடும், Vidum - அகன்றொழியும்;
வேண்டிடில், Vendidil - அபேக்ஷை யுண்டாகில்
மேல் உலகும், Mel Ulakum - சுவர்க்கம் முதலிய மேலுலகங்களின் அநுபவமும்
எளிது ஆயிடும், Ezhithu Aayidum - ஸூலபமாகும்;
அன்றி, Andri - அதுவுமல்லாமல்,
இலங்கு ஒலி சேர் கொடு மா கடல் வையகம், Ilangu Oli Ser Kodu Maa Kadal Vaiyagam - விளங்காநின்ற கோஷத்தையுடைய வளைந்த பெரிய கடலால் சூழப்பட்ட பூமியை
மதி குடை மன்னவர் ஆய்  ஆண்டு, Mathi Kudai Mannavar Aay Aandu - சந்திரனை யொத்த வெண் கொற்றக்குடையை யுடைய ராஜாக்களாய் அரசாண்டு
அடி கூடுவர், Adi Kooduvar - அவனது திருவடிகளைக் கிட்டப் பெறுவர்கள்.
1088பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ வித ரஷணம் பண்ணுமவன் -சர்வருக்கும் ஸ்ப்ருஹணீ யமாய் –தானே தாரகனுமாய்-பிரபல பிரதிபந்தகங்களை கேசி வாயைக் கிழித்தாற் போலே அநாசேயேந போக்க வல்லவனை-என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனை – இடர் பட்டு வரவும் பிற் பாடாகை அன்றிக்கே –இவன் இடர் பட்ட மடுவின் கரையிலே வந்து உதவினாப் போலே நான் நோவு படுகிற சம்சாரத்திலே -சம காலத்திலேயே –காணப் பெற்றேன் என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப் பாடுகடலி லமுதத்தைப் பரிவாய்கீண்ட சீரானை, எம்மானைத் தொண்டர்தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை, போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப் புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை, காரானை யிடர்க்கடிந்த கற்பகத்தைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-1
பதவுரை Show / Hide
பார் ஆயது, Paar Aayadhu - உலகமாக வுள்ளவற்றை யெல்லாம்
உண்டு, Undu - (பிரளயம் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்து
உமிழ்ந்த, Umizhndha - (பிரளயம் கழிந்தபிறகு) வெளிப்படுத்தினவனும்
பவளம் துணை, Pavalam Thunai - பவழத்தூண் போலே விரும்பத்தக்கவனும்
படு கடலில் அமுதத்தை, Padu Kadalil Amudhatthai - ஆழ்ந்த கடலிலுண்டான அமுதம்போலே போக்யனானவனும்
பரி வாய் கீண்ட சீரானை, Pari Vaai Kiinda Seeranaai - குதிரை வடிவுடன் வந்த கேசியென்னுமஸூரனுடைய வாயைக் கிழித்தெறிந்த வீரலக்ஷ்மியையுடையவனும்
எம்மானை, Emmaanai - எனக்கு ஸ்வாமியானவனும்
தொண்டர் தங்கள் சிந்தை உள்ளே, Thondar Thangal Sindhai Ullae - அடியவர்களுடைய நெஞ்சினுள்ளே
முளைத்து, Mulaiththu - தோன்றி
எழுந்த, Ezhundha - அபிவிருத்தியடைகின்ற
தீம் கரும்பினை, Theem Karumbinai - இனிய கரும்பு போன்றவனும்
போர் ஆனை, Poar Aana - போர் செய்யவந்த குவலயாபீடமென்னும் யானையினுடைய
கொம்பு, Kombu - தந்தங்களை
ஒசித்த, Osiththa - முறித்தெறித்த
போர் ஏற்றினை, Poar Aetrinai - யுத்தஸாமர்த்திய முள்ளவனும்
புணர் மருதம் இற நடந்த, Punar Marudham Ira Nadandha - இரட்டை மருதமரங்கள் முறியும்படி தவழ்ந்தவனும்
பொன் குன்றினை, Pon Kunrinai - பொன்மலை போல் அழகியவனும்
கார் ஆனை இடர் கடிந்த, Kaar Aana Idar Kadintha - பெரிய கஜேந்தராழவானுடைய துன்பத்தைத் தொலைத்தவனும்
கற்பகத்தை, Karppagaththai - கல்பவருக்ஷம்; போல ஸர்வ ஸ்வதானம் செய்பவனுமான எம்பெருமானை
நான் கண்டது, Naan Kandhadhu - அடியேன் ஸேவிக்கப்பெற்றது (எவ்விடத்திலென்றால்)
கடல்மல்லை தலசயனத்து, Kadalmallai Thalasayanaththu - ஸ்தலசாயிப் பெருமாளுடையதான திருக்கடல் மல்லையிலே
1089பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எனக்கு ஜனகனாய் எனக்கு சென்று ஆஸ்ரயிக்கலாம் படி சீலவானாய் உள்ளவனை – காட்டுத் தீயில் வர்ஷித்தாற் போலே நோவு படுகிற சம்சாரத்திலே காணப் பெற்றேனே-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2
பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப் பொய்ந்நூலை மெய்ந்நூலென் றென்றுமோதி மாண்டு,அவத்தம் போகாதே வம்மினெந்தை என்வணங்கப் படுவானை, கணங்களேத்தும் நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை, காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-2
பதவுரை Show / Hide
அவத்தம் பூண்டு, Avatham Poondhu - ஸ்வரூபத்தைக் கெடுக்கவல்ல காரியங்களை ஏறிட்டுக் கொண்டு (- (நான் கண்டது கடல்மல்லைத் தலசயனத்தே-))
பிறர்க்கு அடைந்து, Pirarkku Adaindhu - பிறரை(நீசர்களை) ஆச்ரயித்து
தொண்டுபட்டு, Thondupattu - (அவர்களுக்கு)அடிமை செய்தும்
பொய் நூலை, Poi Noolai - அபத்தங்களான பாஹ்யமதச்சுவடிகளை
மெய்நூல் என்று, Mei Nool Endru - யதார்த்தமான சாஸ்த்ரமாகக் கொண்டு
என்றும், Endrum - எப்போதும்
ஓதி, Othi - (அந்தச் சுவடிகளையே) வாசித்துக்கொண்டிருந்து
மாண்டு, Maandu - முடிந்து
அவத்தம் போகாதே வம்மின், Avatham Pogaadhe Vammin - பாழாய்ப் போகாமல் (உஜ்ஜீவிக்க) வாருங்கள்;
எந்தை, Endhai - எனக்குத் தந்தையானவனும்
என் வணங்கப்படுவானை, En Vanangappaduvaanai - என்போல்வாரும் வணங்குதற்கு உரியவனும்
கணங்கள் ஏத்தும், Kanangal Aethum - (ஞானிகளின்) கூட்டங்களாலே துதிக்கப்படுபவனும்
நீண்ட அத்தை, Neenda Aththai - அளவிறந்த அப்படிப்பட்ட வஸ்துவாக உள்ளவனும்
கரு முகிலை, Karum Mugilai - காளமேகம் போன்றவனும்
எம்மான் தன்னை, Emmaan Thannai - அஸ்மத் ஸ்வாமியானவனும்
நின்றவூர் நித்திலத்தை, Nindra Vuur Niththilaththai - திருநின்றவூரில் (எழுந்தருளியிருக்கிற) முத்துக்கோவை போலக் குளிர்ந்த வடிவையுடையவனும்
தொத்து ஆர் சோலை காண்டவத்தை, Thoththu Aar Cholai Kaandavaththai - பூங்கொத்துகள் நிறைந்த சோலைகளையுடைய காண்டவவனத்தை
கனல் எரிவாய் பெய்வித்தானை, Kanal Erivai Peyviththaanai - ஜ்வலிக்கிற அக்நியினுடைய வாயிலே புகுவித்தவனுமான பெருமானை
1090பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ ப்ராப்தி உபாயங்களில் பெரு நெறியாய் உள்ளவனை –ஜகத்தை அடைய ரஷிக்க கடவனாய் இருக்கிறவனுடைய ரஷணத்துக்கு நான் இப்போது விஷய பூதன் ஆனேன் என்கிறார்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3
உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய் உலகுய்ய நின்றானை,அன்றுபேய்ச்சி விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து விளையாட வல்லானை வரைமீகானில், தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில் தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும், கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே. –2-5-3
பதவுரை Show / Hide
உலகு உய்ய, Ulaku Uyya - (ஸ்ரீமந்நாராயண னொருவனே மூன்று வடிவுகொண்டு காரியஞ் செய்கையாலே) (ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களாலே) உலகங்கள் வாழ்வதற்காக (- (நான் கண்டுகொண்டேன்..))
உடம்பு உருவில், Udam Bu Uruvil - சரீ ரசரீரிபாவத்தையிட்டுப் பார்க்குமளவில்
மூன்று ஒன்று ஆய், Moondru Ondru Aay - மூன்று தத்துவமும் ஒருபடியாய்
மூர்த்தி வேறு ஆய்நின்றானை, Moorthi Veeru Aayninraanaai - (உண்மையில்) ஸவ்ரூபம் வேறுபட்டு நிற்குமவனும்
அன்று, Andru - கண்ணனாகப் பிறந்த அக்காலத்து
பேய்ச்சி, Peychchi - பூதனையினுடைய
விடம், Vidam - (முலையில் தடவியிருந்த) விஷத்தை
பருகு, Paruku - பானம்பண்ணின
வித்தகனை, Viththakanai - ஆச்சரீயபூதனும்
கன்று மேய்த்து விளையாட வல்லானை, Kanru Maeyththu Vilaiyaada Vallaanaai - கன்றுகளை மேய்த்து விளையாடுகைக்காக வந்து பிறந்தவனும்
வரை மீ கானில், Varai Mee Kaanil - மலைமேலுள்ள காடுகளிலே
தடம், Thadam - தடாகங்களிலே
பருகு, Paruku - (கன்றுகளுக்கு நீர் குடிக்கும் விதத்தைப் பயிற்றுவிக்கைக்காகத் தான் இறங்கிக் கையை முதுகிலே கட்டிக் கொண்டு) தண்ணீர் குடித்தவனும்
கரு முகிலை, Karum Mugilai - காளமேகம் போன்றவனும்
தஞ்சை கோயில், Thanjai Koyil - தஞ்சை மாமணிக்கோயிலிலே
தவம் நெறிக்கு ஓர் பெரு நெறியை, Thavam Nerikku Oru Peru Neriyai - தன்னைக் கிட்டுகைக்கான  உபாயங்களிலே சிறந்த  உபாயம் தானாக நிற்பவனும்
வையம் காக்கும், Vaiyam Kaakkum - உலகத்தைக் காப்பதற்காக
கடு பரி மேல் கற்கியை, Kadu Pari Mel Karkkiyai - கடுநடையுடைய குதிரையின் மேலே கல்கியவதாரம்  செய்யப்போகிறவனுமான எம்பெருமானை
கடி பொழில் சூழ் கடல் மல்லை தல சயனத்தே, Kadi Pozhil Soozh Kadal Mallai Thala Sayanatthae - மணம்மிக்க சோலைகள் சூழ்ந்த திருக்கடன் மல்லையிலே
1091பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித ஸ்பர்சமுடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக இருந்த செயலாலே லோகத்தை அடைய எழுதிக் கொண்டவனை – எல்லார் கண் முகப்பே திருக் குரவை கோத்தவனை-தன்னுடைய ரஷணத்தைக் காட்டி என்னை அனன்யார்ஹனாக எழுதிக் கொண்டவனை – ரஷகன் என்று அறியப் பெற்றேன் –எனக்கு ஒரு குறை உண்டோ என்கிறார்- என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4
பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னைப் பிணைமருப்பில் கருங்களிற்றைப்  பிணைமான்னோக்கின், ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை அந்தணர்தம் அமுதத்தைக் குரவைமுன்னே கோத்தானை, குடமாடு கூத்தன்றன்னைக் கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக் காத்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-4
பதவுரை Show / Hide
தாய், Thaai - தாய்வடிவையெடுத்துக் கொண்டு கொல்லவந்த (- (கடி பொழில் சூழ் கடன் மல்லைத் தலசயனத்தே கண்டு கொண்டேன்-.))
பேயை, Peyai - பூதனையென்னும் பேய்ச்சியினுடைய
முலை, Mulai - (விஷந்தடவின) முலையை
உண்ட, Unda - உறிஞ்சியமுதுசெய்க
பிள்ளைதன்னை, Pillai Thannai - குமாரனும்,
பிணை மருப்பின் கரு களிற்றை, Pinai Maruppin Karu Kalittrai - இரண்டு கொம்பு முளைத்த கரிய யானைக்குட்டிபோல்  இனியவனும்,
மான் பிணை நோக்கின், Maan Pinai Nookkin - மான் பேடையின் நோக்குப் போன்ற நோக்கையுடைய
ஆய் தாயர், Aai Thaayar - இடைத்தாயரான யசோதையினுடைய
தயிர் வெண்ணெய், Thayir Vennai - தயிரிலும் வெண்ணெயிலும்
அமர்ந்த, Amarntha - ஊன்றியிருந்த
கோவை, Kovai - ஸ்வாமியும்,
அந்தணர் தம் அமுதத்தை, Andhanar Tham Amudhatthai - வைதிகர்களுக்குப் பரம யோக்யனும்,
முன்னே, Munnai - முன்பொருகால்
குரவை கோத்தானை, Kuravai Koththaanai - இடைப்பெண்களோடு ராஸக்ரிடை செய்தவனும்
குடம் ஆடு கூத்தன் தன்னை, Kudam Aadu Kooththan Thannai - குடக்கூத்தாடினவனும்
கோகுலங்கள் தளராமல், Kokulangal Thalaramal - (இந்திரன் பெய்வித்த பெருமழையினால்) பசுங்கூட்டங்கள்  வருந்தாதபடி
குன்றம் ஏந்தி, Kundram Aendhi - கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி
காத்தானை, Kaathaanai - ரக்ஷித்தவனுமான
எம்மானை, Emmaanai - எம்பெருமானை
1092பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிலவறையிலே பிரவேசிப்பித்து நலிய வேணும் என்று –பதிபடை கிடந்த மல்லர் முடிந்து போம் படி சீறினவனை- அந்த க்ருத்ரிமத்தைத் தப்பி என்னை எழுதிக் கொண்டவனை காணப் பெற்றேன் என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப் பாலகனா யாலிலையில் பள்ளியின்பம் ஏய்ந்தானை, இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை, தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்றப் பொய்யறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக் காய்த்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-5
பதவுரை Show / Hide
திரி சகடம், Thiri Sakadam - உருளுகிற சகடமானது (- (கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே கண்டுகொண்டேன்-.))
பாறி, Paari - சின்னபின்னமாகச் சிதறி
வீழ, Veela - விழும்படி
பாய்ந்தானை, Paayndhaanai - திருவடியாலுதைத்தவனும்
பாலகன் ஆய், Paalagan Aay - சிறுபிள்ளையாய்
ஆல் இலையில், Aal Ilaiyil - ஆலந்தளிரிலே
பள்ளி இன்பம் ஏய்ந்தானை, Palli Inbam Aeyndhaanai - திருக்கண்வளர்தலாகிற ஸுகத்தை அநுபவித்தவனும்
இலங்கு ஒளி சேர், Ilangu Oli Seer - மிக்க ஒளியை யுடைத்தான
மணி குன்று அன்ன, Mani Kunru Anna - ரத்னமயமான பர்வதம் போன்றவனும்
மால் வரை, Maal Varai - பெரிய மலைபோன்ற
ஈர் இரண்டு தோள் எம்மான் தன்னை, Eer Irandu Thol Emmaan Thannai - நான்கு திருத்தோள்களையுடைய ஸ்வாமியானவனும்
நிலம் மகள் தோள் தோய்ந்தானை, Nilam Magal Thol Thoyndhaanai - பூமிப்பிராட்டியின் தோளோடே அணைந்தவனும்
தூதின் சென்று, Thoodhin Sendru - (பாண்டவர்களுக்குத்) தூது செய்யுந் தொழிலுடனே (துரியோதனனிடம்) எழுந்தருளி
பொய் அவ் அறை வாய்புக பெய்த, Poi Av Arrai Vaaypuka Peytha - (அத்துரியோதனன்) க்ருத்ரிமமாகச் செய்துவைத்த அந்த நிலவறையி  னுள்ளே நிறுத்தப்பட்டிருந்த
மல்லர், Mallaar - மல்லர்கள்
மங்க, Manga - முடியும்படி
காய்ந்தானை, Kaayndhaanai - சீற்றங்காண்டவனுமான
எம்மானை, Emmaanai - எம்பெருமானை
1093பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரப்பை உடைத்தான பூமியைத் திரு எயிற்றாலே கிழியும் படி இடந்தவனை –உடம்பு நோவ வ்யாபரித்த படி சொல்லுகிறது – பூமி அந்தரிஷ்யாதிகள் போராதபடி யாக வளர்ந்து லோகத்தை அளந்து கொண்டவனை – எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த நீர்மையாலே என்னை எழுதிக் கொண்டவனை – அவன் தானே திருவடிகளை கொண்டு வந்த வைத்த அன்று தப்பின நான் இன்று இங்கே காணப் பெற்றேன் என்கிறார் – ஆறாம் பாசுரத்தில்) 6
கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக் கிளர்ப்பொறிய மறிதிரிய வதனின்பின்னே படர்ந்தானைப், படுமதத்த களிற்றின்கொம்பு பறித்தானைப் பாரிடத்தை எயிறுகீற இடந்தானை, வளைமருப்பி னேனமாகி இருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம் கடந்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-6
பதவுரை Show / Hide
தடகடலுள், Thadakadalu - விசாலமான திருப்பாற் கடலிலே
பணங்கள் மேவி, Panangal Mevi - (திருவனந்தாழ்வானது) படங்களின் கீழே பொருந்தி
கிடந்தானை, Kidandhaanai - பள்ளி கொள்பவனும்,
கிளர் பொறிய, Kilar Poriy - கிளர்ந்த பலவகைப் புள்ளிகளையுடைய
மறி, Mari - (மாரிசனென்னும்) மாயாமிருகம்
திரிய, Thiriya - (எதிரே வந்து) ஸஞ்சரீக்க
அதனின் பின்னே படர்ந்தானை, Adanin Pinne Padarnthaanai - அதன் பின்னால் தொடர்ந்து சென்றவனும்
படு மதத்த களிற்றின், Padu Mathath Kalittrin - ஒழுகுகின்ற மதநீரையுடைய (குவலயாபீடமென்னும்)
கொம்பு பறித்தானை, Kombu Pariththaanai - தந்தங்களை முறித்து அவ்யானையை முடித்தவனும்
வளை மருப்பின் ஏனம் ஆகி, Valai Maruppin Yenam Aagi - வளைந்த கோரப்பற்களையுடைய வராஹ ரூபியாகி
பார் இடத்தை, Paar Idaththai - விசாலமான பூமியை
எயிறு கீற இடந்தானை, Eiyiru Keera Idanthanai - பற்களாலே கொத்தி (அண்டபித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித்தெடுத்தவனும்
இரு நிலனும், Iru Nilanum - விசாலமான இந்நிலவுலகும்
பெரு விசும்பும், Peru Visumbum - பெரிய மேலுலகங்களும்
எய்தா வண்ணம், Eidha Vannam - திருவடிகளுக்குப் போராதென்னும்படி (மிக வளர்ந்து)
கடந்தானை, Kadandhaanai - உலகளந்தவனுமான
எம்மானை, Emmaanai - எம்பெருமானை
1094பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவள் முலை கொடா விடில் தரியாதாளாய் கொடுத்தால் போலே தானும் முலை உண்ணா விடில் தரியாதானாய் செவ்வியாருக்கு தான் செவ்வியனாய் பரிமாறும்படியும் துஷ்டர்க்குத் தானும் அப்படி இருக்கும் படியும் காண வேணும் என்று தட்டித் திரிகிற நான் பசித்தவன் ஜீவிக்கப் பெற்ரார் போலே காணப் பெற்றேன் – சாஸ்தரங்களிலே கேட்டு-ஒரு தேச விசேஷத்தால் சென்றால் காண இருக்கை அன்றிக்கே விடாய்த்த இந்நிலத்திலே காணப் பெற்றேன்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7
பேணாத வலியரக்கர் மெலியவன்று பெருவரைத்தோ ளிறநெரித்தன் றவுணர்க்கோனை, பூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனைப் பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை ஊணாகப் பேய்முலைநஞ் சுண்டான் தன்னை உள்ளுவா ருள்ளத்தே யுறைகின்றானை, காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே. –2-5-7
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்னொரு காலத்தில், (- (அவ்வரக்கர்களுடைய) (இன்று) (கடி பொழில் சூழ் கடன்மல்லைத்தலசயனத்தே கண்டுகொண்டேன்-.))
பேணாத, Penaadha - (தன்னை ஸர்வேச்வரனாக) மதியாத
வலி அரக்கர், Vali Arakkar - மிடுக்கையுடைய ராக்ஷர்கள்
மெலிய, Meliya - ஒழியும்படி
பெரு வரை தோள் இற நெரித்து, Peru Varai Thol Ir Neriththu - பெரிய மலைபோன்ற தோள்கள் முறியும்படி அழித்தவனும்,
அன்று, Andru - பிரஹ்லாதன் துன்பப்பட்ட அக்காலத்து
அவுணர் கோனை, Avunaar Konai - அசுரர் தலைவனான இரணியனுடைய
பூண் ஆகம் பிளவு எடுத்த, Poon Aagam Pilavu Edutha - ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மார்வைப் பிளந்தொழிந்தவனும்
போர் வல்லோனை, Por Vallonai - யுத்தத்தில்; ஸமர்த்வனானவலனும்
பொரு கடலுள் துயில் அமர்ந்த, Poru Kadalul Thuyil Amarntha - அலை யெறிகின்ற திருப்பாற் கடலிலே திருக்கண்  வளர்ந்தருள்பவனும்
புள் ஊர்தியை, Pul Oorthiyai - கருடப் பறவையை வாஹனமாக வுடையவனும்
பேய் முலை நஞ்சு, Pei Mulai Nanju - பூதனையின் முலையில் தடவியிருந்த விஷத்தை
ஊண் ஆக உண்டான் தன்னை, Oon Aaga Undaan Thannai - உணவாகக் கொண்டு அமுது செய்தவனும்
உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானை, Ulluvaar Ullaththae Uraikindraanai - தன்னைச் சிந்திப்பவர்களின் நெஞ்சிலே நித்யவாஸம் செய்பவனுமான எம்பெருமானை
காணாது திரி தருவேன், Kaanadhu Thiri Tharuven - (வெகு காலமாக) ஸேவியாமல் அலைந்து கொண்டிருந்த அடியேன்
1095பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய சூரிகள் பரிய இருக்கிறவன் இங்கே வந்து சாய்ந்து அருளுவதே – இது என்ன நீர்மை -என்று எப்போதும் எண்ணப் படுமவன் படபாமுகாக்னி நிறைந்தால் போலே காண வேணும் என்று உறாவிப் பட்டினி விட்ட கண்களின் உடைய உறாவுதல் தீர காணப் பெற்றேன் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை, தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும் தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி, என்ணானை யெண்ணிறந்த புகழினானை இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-8
பதவுரை Show / Hide
பெண் ஆகி, Pen Aagi - மோஹினி யுருவமெடுத்து (- (கடி பொழில் சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே கண் ஆரக் கண்டுகொண்டேன்-.))
இன் அமுதம் வஞ்சித்தானை, In Amudham Vanchiththaanai - இனிய அமிருத்தை (அசுரர்கள் புஜிக்கவொண்ணாதபடி) வஞ்சித்தவனும்
அன்று, Andru - முன்பொரு காலத்தில்
பிறை எயிறு, Pirai Eiyiru - சந்திரனை யொத்த பற்களையுடைய
அடல் அரிஆய், Adal Ariyaai - பலசாலியான நரஸிம்ஹமுர்த்தியாய்
பெருகினானை,, Peruginanai - வளர்ந்தவனும்,
தண் ஆர்ந்த வார் புனல் சூழ், Than Aarntha Vaar Punal Soozh - குளிர்த்தி பொருந்திப் பெருகுகின்ற ஜலத்தாலே சூழப்பட்ட
மெய்யம் என்னும், Meiyyam Ennum - திருமெய்யமென்கிற
தடவரைமேல், Thadavarai Mel - பெரிய திருமலையின்மீது
பணங்கள் மேவி கிடந்தானை, Panangal Mevi Kidandhaanai - (திருவனந்தாழ்வானுடைய) படங்களின் கீழே பொருந்திப் பள்ளி கொண்டிருப்பவனும்
எண்ணானை, Ennaanai - (யோகிகளால்) சிந்திக்கப்படுமவனும்
எண் இறந்த புகழினானை, En Irandha Pugazhinaanai - கணக்கில்லாத கீர்த்திகளையுடையவனும்
இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை, Ilangu Oli Ser Aravindham Poonru Neenda Kannaanai - மிக்க ஒளியையுடைய தாமரையிதழ்போலே நீண்ட திருக்கண்களையுடையவனுமான எம்பெருமானை
1096பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சாஸ்த்ரீய ஜ்ஞானத்தாலே தன்னை ப்ராபிக்கைக்கு ஈடான வழியைக் கண்டு வைத்தவனை – அப்பெரு வழியான சாஸ்திர ஜ்ஞானத்தாலே அன்றிக்கே இக் கண்ணாலே காணப் பெற்றேன் – என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9
தொண்டாயர் தாம்பரவு மடியினானைப் படிகடந்த தாளாளற் காளாயுய்தல் விண்டானை, தென்னிலங்கை யரக்கர்வேந்தை விலங்குண்ண வலங்கைவாய்ச் சரங்களாண்டு, பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும் கண்டானை, தொண்டனேன் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-9
பதவுரை Show / Hide
தொண்டு ஆயார் தாம், Thondu Aayaar Thaam - அடிமைப்பட்டவர்கள் (- (கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே கண்டுகொண்டேன்.))
பரவும், Paravum - துதிக்கப்பெற்ற
அடியினானை, Adiyinanae - திருவடிகளை யுடையவனும்,
படி கடந்த தாள் ஆளற்கு ஆள் ஆய் உய்தல் விண்டானை தென் இலங்கை அரக்கர் வேந்தை, Padi Kadanda Thaal Aalarku Aal Aayi Uythal Vintaanai Then Ilangai Arakkar Vendai - பூமியை யளந்த திருவடிகளை யுடையனான தனக்கு ஆட்பட்டு உஜ்ஜீவிப்பது தவிர்ந்தவனான இராவணனை
விலங்கு உண்ண, Vilangu Unna - மிருகங்கள் தின்னும்படி
வலம் கைவாய், Valam Kaivai - வலத்திருக்கையாலே
சரங்கள் ஆண்டு, Sarangkal Aandu - அம்புகளைப்பிரயோகித்தவனும்,
பண்டு ஆய, Pandhu Aaya - நித்யமான
நான்கு வேதங்களும், Naanthu Vedhangalum - நாலு வேதங்களையும்
ஐந்து வேள்விகளும், Ainthu Velvikalum - பஞ்சமஹா யஜ்ஞங்களையும்
கேள்வியோடு, Kelviyodu - ஸ்மிருதிகளையும்
அங்கம் ஆறும், Angam Aarum - ஆறு அங்கங்களையும் (பிரவர்த்திப்பித்தவனுமான எம்பெருமானை
தொண்டனேன், Thondanaen - அடியேன்
1097பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வாதிகனான புண்டரீகாஷன் என்று தோற்றும் படி கண் வளர்ந்து அருளினவனை ஆயிற்று கவி பாடிற்று – இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –ப்ராக்தமான கர்மங்களை தாங்களே வாசனையோடு போக்க வல்லார் ஆவார்கள் பாபங்களை கூடு பூரித்துக் கொள்ளும் இத்தனை போக்கி எலி எலும்பனான இவனால் இது போக்கிக் கொள்ளலாம் என்றால் -இது கூடுமோ என்னில் –அதில் ஒரு தட்டு இல்லை இது த்ருடம் -என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10
படநாகத் தணைக்கிடந்தன் றவுணர்கோனைப் படவெகுண்டு மருதிடைப்போய்ப் பழனவேலி, தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத் தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை, கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர்க் கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல், திடமாக விவையைந்து மைந்தும்வல்லார் தீவினையை முதலரிய வல்லார்தாமெ. –2-5-10
பதவுரை Show / Hide
படம் நாகம் அணை கிடந்து, Padam Naagam Anai Kidandhu - படங்களையுடைய சேஷசயனத்திலே பள்ளிகொள்பவனும்
அன்று, Andru - முன்பொருகால்
அவுணர் கோனை படவெகுண்டு, Avaunar Konai Padavegundhu - அசுரர் தலைவனான இரணியனை முடியும்படி சீறினவனும்
மருது இடை போய், Maruthu Idai Poi - இரட்டை மருதமரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனும்
பழனம் வேலி, Pazhanam Veli - நீர் நிலங்களைச் சுற்றிலுமுடைத்தாய்
தடம் ஆர்ந்த, Thadam Aarntha - தடாகங்கள் நிறையப்பெற்றதான
கடல்மல்லை தலசயனத்து, Kadalmallai Thalasayanaththu - திருக்கடல்மல்லையிலே
தாமரை கண்துயில் அமர்ந்த, Thamarai Kanthuyil Amarntha - தாமரைபோன்ற திருக்கண்கள் துயில்கொண்டிராநின்ற
தலைவர் தம்மை, Thalaivar Thammai - ஸ்வாமியுமான தலசயனத்துறைவாரைப் பற்றி,
கடம் ஆரும் கருகளிறு வல்லான், Kadham Aarum Karugaliru Vallan - மதம்மிக்க பெரிய யானையை நடத்தவல்லவரும்
போர் வெல், Por Vel - யுத்தத்திலே வெற்றி பெறுமவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார்
ஒலிசெய்த, Oliseitha - அருளிச்செய்த
இன்பம், Inbam - இன்பம் விளைக்கவல்ல
இவை ஐந்து ஐந்து பாடலும், Ivai Ainthu Ainthu Paadalum - இப்பத்துப் பாசுரங்களையும்
திடம் ஆக, Thidam Aaga - உறுதியாக
வல்லார் தாம், Vallaar Thaam - ஓதவல்லவர்கள்
தீவினையை, Theevinaiyai - பாவங்களை
முதல் அரிய வல்லார், Muthal Ariya Vallaar - வேரறுக்க வல்லவராவர்கள்.
1098பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரயோஜனாந்த பரராய் –தன்னை உகவாது இருப்பாருக்கும் கூட அபேஷித சம்விதானம் பண்ணுமவன்- நம்மை உகப்பாரையும் கிடைக்க வற்றோ என்று அவசர ப்ரதீஷனாய் இங்கே வந்து கிடக்கிற இந்நீர்மையை அனுசந்தியாதே புறம்பே உண்டு உடுத்து போது போக்குவாரை ஒரு வஸ்துவாக நினைத்து இரோம் என்கிறார்- கலங்குகை போலே காணும் மஹா மதிகளாவது அஸ்தாநே பயசங்கை பண்ணுவார்க்கு எல்லாம் பேராய் கொள்ளீர்-மஹா மதிகள் என்று – நித்ய சூரிகள் நடுவே இருக்கக் கடவ வஸ்து இப்படி சம்சாரத்திலே புகுந்து தரைக் கிடை கிடப்பதே – இது என்ன நீர்மை இருக்கும்படியே என்று அநவரதம் பாவித்தல் சொல்லுதல் செய்கையாயிற்று சேதனர்க்கு செய்ய அடுப்பது – இது செய்யாதே இருப்பாரை – அவனிடை ஆட்டம் கொண்டு -கார்யம் அற்று- கேவல தேக போஷண பரராய் இருப்பாரை –எண்ணப் பெற்றிலோம் என்ற அனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை –அவஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே வஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே-அவ்வளவிலும் எண்ணோம் –என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
நண்ணாத வாளவுண ரிடைப்புக்கு, வானவரைப் பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார், மருவினிய தண்ணார்ந்த கடன்மல்லைத் தலசயனத் துறைவாரை, எண்ணாதே யிருப்பாரை யிறைப்பொழுது மெண்ணோமே. –2-6-1
பதவுரை Show / Hide
பெண் ஆகி, Pen Aagi - மோஹிநிபவதாரமெடுத்து, (- (அவர்களை வஞ்சித்துவிட்டு))
நண்ணாத வாள் அவுணரிடைபுக்கு, Nannaadha Vaal Avunaridhaipukku - பிரதிகூலர்களான அசுரர்களின் நடுவே புகுந்து
வானவரை அமுது ஊட்டும் பெருமானார், Vaanavarai Amuthu Oottum Perumaanar - தேவர்களுக்குமாத்திரம் அமுதமனித்த ஸ்வாமியாயும்,
மருவ இனிய, Maruva Iniya - பொருந்தி வாழ்வதற்குப் பாங்கான
தண் ஆர்ந்த, Than Aarntha - குளிர்ந்திநிரம்பிய
கடல்மல்லை தலசயனத்து, Kadalmallai Thalasayanaththu - திருக்கடல்மல்லை யென்னும் திருப்பதியில்
உறைவாரை, Uraivaaraik - நித்யவானம் செய்பவராயுமிருக்கிற ஸ்தலசாயிப்பெருமாளை
எண்ணாதே இருப்பாரை, Ennaadhe Irupaarai - சிந்தியாமலிருப்பவர்களை
இறைபொழுதும், Iraipozhudhum - அற்பகாலமும்
எண்ணோம், Ennom - ஒரு பொருளாக நினைக்கமாட்டோம்.
1099பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முதல் தன்னிலே நம் குற்றம் அவன் திரு உள்ளத்திலே படாத படி பண்ணும் ஸ்ரீ பூமி பிராட்டியாரும் – அவன் தன் சர்வஞ்ஞத்வத்தாலே நம் குற்றத்தை கண்டானே ஆகிலும் -அவன் தன்னை – ந கச்சின் ந அபராத் யதி-என்று பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும் அவன் பக்கலிலே கிட்ட இருக்கையாலே நமக்கு இனி இழக்க வேண்டாதபடி சுலபன் என்று அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை ஹிருதயத்தில் அனுசந்திக்கும் அவர்கள் என்னை அடிமை கொள்ளுமவர்கள் என்கிறார்- நமக்கு புருஷகார பூதைகளான நாய்ச்சிமார்கள் அங்கே சேர இருந்தார்கள் என்று அனுசந்தித்தால் பின்னை நமக்கு கிட்டுகைக்கு ஒரு குறை இல்லை இறே – மாதா பிதாக்கள் சேர இருந்த இடத்தில் பிரஜைகளுக்கு சென்று கிட்டுகையில் ஒரு அருமை இல்லை கீழ்ப் பாட்டில் அங்கு நமக்கு எண்ணுகைக்கும் எண்ணாமைக்கும் பிராப்தி இல்லை –-இதுக்கு எல்லாம் கடவார் அவர்கள் என்கிறார் – அவர்கள் நின்ற நிலைகளிலே பிரமாணம் காட்டாதே நம்மை கார்யம் கொள்ள வுரியார் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2
பார்வண்ண மடமங்கை பனிநன்மா மலர்க்கிழத்தி, நீர்வண்ணன் மார்வகத்தி லிருக்கையைமுன் நினைந்தவனூர், கார்வண்ண முதுமுந்நீர்க் கடல்மல்லைத் தலசயனம், ஆரெண்ணும் நெஞ்சுடையா ரவரெம்மை யாள்வாரே. –2-6-2
பதவுரை Show / Hide
பார்வண்ணம் மடம் மங்கை, Paarvannam Madham Mangai - ஆத்மகுணங்கள் நிறைந்த பூமிப்பிராட்டியும் (- (அதற்குப்பிறகு))
பனி நல் மா மலர் கிழத்தி, Pani Nal Maa Malar Kizhaththi - குளிர்ந்த சிறந்த தாமரை மலரில் தோன்றிய  ஸ்ரீதேவியும்
நீர் வண்ணன், Neer Vannaan - கடல்வண்ணனான எம்பெருமானுடைய
மார்வு அகத்தில், Maarvu Agathil - திருமார்பிலும் இடப்பக்கத்திலும்
இருக்கையை, Irukkaiyae - எழுந்தருளியிருக்கும் படியை
முன் நினைந்து, Mun Ninaindhu - முந்துற அநுஸந்தித்து
அவன் ஊர், Avan Oor - அப்பெருமானெழுந்தருளி யிருக்குமிடமாகிய
கார் வண்ணம் முது முந்நீர் கடல்மல்லை தலசயனம், Kaar Vannam Muthu Munnir Kadalmallai Thalasayanam - கரிய கடலின் கரையிலேயுள்ள திருக்கடல்மல்லைத் திருப்பதியை
எண்ணும் நெஞ்சு உடையார் ஆர், Ennum Nenju Udaiyaar Aar - சிந்திக்கவல்ல மனமுடையவர்கள் எவரோ
அவர் எம்மை ஆள்வார், Avar Emmai Aalvaar - அப்படிப்பட்ட பாகவதர்கள் அடியோகங்களை அடிமை கொள்ளத்தக்கவர்கள்.
1100பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒருதலைக் காமமாய் போகாமே இவன் வந்து கிடக்கிறது நமக்காக என்று தாங்களும் நினைக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் – அவர்கள் ஆளாத போது வேறு சிலருக்கு சேஷ பூதர் அல்லோம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3
ஏனத்தி னுருவாகி நிலமங்கை யெழில்கொண்டான், வானத்தி லவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள, கானத்தின் கடல்மல்லைத் தலசயனத் துறைகின்ற, ஞானத்தி னொளியுருவை நினைவாரென் நாயகரே. –2-6-3
பதவுரை Show / Hide
ஏனத்தின் உரு ஆகி, Eanathin Uru Aagi - வராஹரூபியாய்த் திருவவதரித்து
நிலம் மங்கை, Nilam Mangai - பூமிப்பிராட்டியை
எழில், Ezil - (முன்னிருந்த அழகு சிறிதும் குறையாமல்) அவ்வழகுடனே
கொண்டான், Kondaan - (அண்டபித்தியில் நின்றும்) மீட்டுக்கொணர்ந்தவனும்,
வானத்திலவர், Vaanaththilavar - தேவர்கள்
மகிழ்ந்து, Magizhndhu - ஆநந்தத்துடனே
முறையால், Murayal - தங்கள் தங்கள் அதிகாரத்திற்குத் தகுதியாக
ஏத்தி, Aethi - துதிக்க
வலம் கொள்ள, Valam Kolla - பிரதக்ஷிணம் செய்வதற்குப் பாங்காக,
கானத்தின் கடல்மல்லை தலசயனத்து உறைகின்ற, Kaanaththin Kadalmallai Thalasayanaththu Uraikindra - காட்டினிடையேயிருக்கிற திருக்கடல்மல்லையிலெழுந்தருளியிருப்பவனும்,
ஞானத்தின் ஒளி உருவை, Gnanaththin Oli Uruvai - ஞானலொளிபொருந்திய திருமேனியையுடையவனுமான பெருமானை
நினைவார், Ninaivaar - சிந்திக்கும் பாகவதர்கள்
என் நாயகர், En Naayakar - அடியேனுக்குத் தலைவராவர்.
1101பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் பிரதி பஷ நிரசன சமர்த்தனாய் இருக்கச் செய்தே ஆநு கூல்யத்தாலே கார்யம் கொள்வானாக நினைத்து வந்து கிடக்கிறபடியை அனுசந்தித்து ஈடுபடுமவர்கள் என் ஒருவன் அளவன்றிக்கே என் குலத்துக்காக நாதர் ஆவார்கள் என்கிறார்- இவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார் நமக்காக விறே -என்று நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் – எங்கள் குல தெய்வமே- குல தைவதம் தத் பாதாராவிந்தம் –என்னும் அளவல்ல எங்களது-என்கிறார் நான்காம் பாசுரத்தில்) 4
விண்டாரை வென்றாவி விலங்குண்ண, மெல்லியலார் கொண்டாடும் மல்லகலம் அழலேற வெஞ்சமத்துக் கண்டாரை, கடல்மல்லைத் தலசயனத் துறைவாரை, கொண்டாடும் நெஞ்சுடையா ரவரெங்கள் குலதெய்வமே. –2-6-4
பதவுரை Show / Hide
விண்டாரை, Vindaarai - சத்துருக்களை ராவணாதி ராக்ஷஸர்களை (- (கடல்மல்லைத்  தலசயனத்து உறைவாரை-;))
வென்று, Vendru - தோற்கடித்து
ஆவி விலங்கு உண்ண, Aavi Vilangu Unna - (அவர்களுடைய) உயிரை (நாய் நரி முதலிய) மிருகங்கள் மேல்விழுந்து முடிக்கும் படியாகவும்,
மெல் இயலார் கொண்டாடும் மல் அகலம், Mel Iyalar Kondadum Mal Akalam - மாதர்கள் கொண்டாடப் பெற்றதும் மிடுக்கையுடையதுமான (அவர்களது) மார்வை
அழல் ஏற, Azhala Eera - அக்நி ஆக்ரமித்து புஜிக்கும் படியாகவும்
வெம் சமத்து, Vem Samathu - பயங்கரமான போர்க்களத்திலே
கண்டாரை, Kandaarai - பார்த்துக்கொண்டிருந்த
கொண்டாடும் நெஞ்சுஉடையாரவர், Kondadum Nenjuudaiyaaravar - புகழ்ந்து பேசும்படியான நெஞ்சுபடைத்த பாகவதர்கள்
எங்கள் குலம் தெய்வம், Engal Kulam Deivam - எங்கள் குலத்துக்குத் தெய்வங்களாவர்.
1102பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (குத்ருஷ்டிகள் சொல்லுகிறவற்றை ஆஸ்ரயித்து வர்த்தியாதே –ஆஸ்ரிதர்க்காக திரு வெக்காவில் படுக்கை மாறிக் கிடந்தவனை – ஓர் ஆஸ்ரிதனுக்காக தரை கிடக்கிற தேசம் –அவன் தனக்கு பரம ப்ராப்யமாக கொண்டு வந்து நிற்கிற தேசத்தை – கர்த்தவ்யம் என்று தொழா நிற்கச் செய்தே புறம்பே-நெஞ்சு அந்ய பரமாய் இருக்கை அன்றிக்கே ஆசையின் கார்யம் தொழ வேண்டும் என்று தோற்றும்படி இருக்கை – திரு கடல் மல்லையைத் தொழுகிறவர்கள் உடைய அவ்வேற்றம் எல்லாம் நமக்கு உடலாக அவர்களை ஸ்நேஹி- என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
பிச்சச் சிறுபீலிச் சமண்குண்டர் முதலாயோர், விச்சைக் கிறையென்னு மவ்விறையைப் பணியாதே, கச்சிக் கிடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம், நச்சித் தொழுவாரை நச்சென்றன் நன்னெஞ்சே. –2-6-5
பதவுரை Show / Hide
பிச்சம் சிறு பீலி, Picham Siru Peeli - (மயிலிறகுகளினால் செய்யப்பட்ட) குடையையும் சிறிய விசிறியையு முடைய
சமண் குண்டர் முதலாயோர், Saman Gundar Mudhalaayor - நீசரான சமணர் முதலானவர்கள்
விச்சைக்கு இறை என்னும், Vichchaikku Irai Ennum - ஸர்வஜ்ஞனென்று சொல்லிக் கொண்டாடுகிற
அவ் இறையை, Av Iraiyai - அந்த அமணச்சாமியை
பணியாதே, Paniyadhe - பணியாமல்.
கச்சி கிடந்தவன் ஊர் கடல்மல்லை தலசயனம் நச்சி தொழுவாரை, Kacchi Kidandhavan Oor Kadalmallai Thalasayanam Nachchi Thozhuvaarai - கச்சியில் (திருவெஃகாவில்) பள்ளி கொள்ளும் பெருமானது திவ்யதேசமாகிய திருக்கடல் மல்லையை விரும்பித் தொழுகின்ற பாகவதர்களை
என் தன் நல் நெஞ்சே!, En Than Nal Nenje - எனது நல்ல நெஞ்சமே!
நச்சு, Nachchu - நீ விரும்பித்தொழு.
1103பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருக்கடல் மல்லையிலே சுழிக்கும் நெஞ்சு உடையவர்களை மட நெஞ்சே––வலம் கொள் – நமக்கு அவர்கள் நின்ற நிலை போராதுஅவர்கள் பக்கல் அநுவர்த்தநத்திலே அந்வயிக்க வேணும் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6
புலன்கொள்நிதிக் குவையோடு புழைக்கைமா களிற்றினமும் நலங்கொள்நவ மணிக்குவையும் சுமந்தெக்கும் நான்றொசிந்து, கலங்களியங் கும்மல்லைக் கடல்மல்லைத் தலசயனம், வலங்கொள்மனத் தாரவரை வலங்கொள்ளென் மடநெஞ்சே. –2-6-6
பதவுரை Show / Hide
புலன் கொள், Pulan Kol - இந்திரியங்களைக் கவர்கின்ற (மநோஹரமான)
நிதி குவையோடு, Nidhi Kuvaivodu - பொற்குவியல்களையும்
புழை கை மா களிறு இனமும், Puzhai Kai Maa Kaliru Inamum - துதிக்கையையுடைய பெரிய யானைக் கூட்டங்களையும்
நலம் கொள் நவமணி குவையும், Nalam Kol Navamani Kuvaikum - நல்ல நவரத்னக் குவியல்களையும்
சுமந்து, Sumandhu - தாங்கிக்கொண்டு
நான்று ஒசிந்து, Naantru Osindhu - (ஏறின சரக்குகளின் கனத்தாலே) மிகவும் உள்ளழிந்து
கலங்கள், Kalangal - கப்பல்களானவை
எங்கும், Engum - பார்த்தவிடமெங்கும்
இயங்கும், Iyankum - ஸஞ்சரிக்கப்பெற்ற
மல்லை, Mallai - பெருமையையுடைத்தான
கடல், Kadal - கடலின் கரையிலுள்ள
மல்லைத் தலசயனம், Mallai Thalasayanam - மல்லாபுரியை
வலம் கொள் மனத்தாரவரை, Valam Kol Manaththaravarai - பிரதிக்ஷணம் பண்ணவேணுமென்கிற விருப்பமுடைய பாகவதர்களை,
என் மட நெஞ்சே, En Mada Nenchae - எனக்கு விதேயமான மனமே!
வலம் கொள், Valam Kol - நீ அநுவர்த்திப்பாயாக.
1104பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அந்த ஸ்ரீ திருக்கடல் மல்லையையும் அங்கு கிடக்கிற ஸ்ரீ நாயனாரையும் தேடி இராதே தொழுவார்கள் உத்தேச்யராய் தொழு என் தூய் நெஞ்சே –ததீய சேஷத்தளவிலே நிற்கும்படியான சுத்தியை யுடையை யிறே நீ –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7
பஞ்சிச் சிறுகூழை யுருவாகி, மருவாத வஞ்சப்பெண் நஞ்சுண்ட அண்ணல்முன் நண்ணாத, கஞ்சைக் கடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம், நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாயென் தூய்நெஞ்சே. –2-6-7
பதவுரை Show / Hide
பஞ்சி சிறு கூழை உரு ஆகி, Panjji Siru Kuzhai Uru Aagi - பஞ்சுபோலே மிருதுவாய் சிறிதான மயிர்முடியையுடையளான யசோதைப் பிராட்டியின் உருவெடுத்துக் கொண்டு (வந்தவளும்)
மருவாத வஞ்சம் பெண் நஞ்சு, Maruvatha Vancham Pen Nanju - நெஞ்சில் இரக்கமற்றவளும் வஞ்சகமுடையவளுமான  பூதனையென்னும் பேய்மகளினுடைய (முலையில் தடவியிருந்த) விஷத்தை
உண்ட அண்ணல், Unda Annal - அமுது செய்த ஸ்வாமியும்,
முன், Mun - முன்னொருகால்
நண்ணாத நஞ்சை கடந்தவன், Nannaadha Nanjai Kadandhavan - தன்னிடத்து அன்பு கொள்ளாமலிருந்த கம்ஸனை வென்று முடித்தவனுமான பெருமானுடைய
ஊர், Oor - திவ்ய தேசமாகிய
கடல்மல்லை தலசயனம், Kadalmallai Thalasayanam - திருக்கடன்மல்லையை
நெஞ்சில் தொழுவாரை, Nenjin Thozhuvaarai - நெஞ்சாரத் தொழுகின்ற பாகவதர்களை
என் தூய் நெஞ்சே, En Thoo Nenchae - எனது பரிசுத்தமான மனமே!
தொழுவாய், Thozhuvaai - நீ தொழக்கடவை.
1105பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருக் கடல் மல்லையைத் தொழுகை காதா சித்கமாகை தவிர்ந்து ஸ்வபாவம் ஆம்படியான நெஞ்சை யுடையாரை – அவர்களுக்கு ஊரைத் தொழுகை யாத்ரையானவோபாதி அவர்கள் தங்களை தொழுகை கிடாய் நெஞ்சே உனக்கு யாத்ரை – பாகவத சேஷத்வம் நன்று என்று உபதேசிக்கலாம் படி இறே உன் சுத்தி இருக்கிறது -என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
செழுநீர் மலர்க்கமலம் திரையுந்த வன்பகட்டால், உழுநீர் வயலுழவ ருழப்பின்முன் பிழைத்தெழுந்த, கழுநீர் கடிகமழும் கடன்மல்லைத் தலசயனம், தொழுநீர் மனத்தவரைத் தொழுவாயென் தூயநெஞ்சே. –2-6-8
பதவுரை Show / Hide
உழுநீர் வயல், Uzhu Neer Vayal - எப்போதும் உழுதுகொண்டேயிருக்க வேண்டும்படியான இயற்கையுடைய கழனிகளிலே (- (என் தூய் நெஞ்சே! தொழுவாய்-.))
உழவர், Uzhuvar - க்ருஷி பண்ணுகிற உழவர்கள்.
செழு நீர் திரை, Sezhu Neer Thirai - அழகிய நீரின் அலைகளையும்
கமலம் மலர், Kamalam Malar - தாமரை மலர்களையும்
உந்து, Undhu - தள்ளுகிற
வல் பகட்டால், Val Pagattal - வலிய எருதுகளைக்கொண்டு
உழ, Uzha - உழுதல் செய்ய,
பின் முன், Pin Mun - பின்னும் முன்னும்
பிழைத்து எழுந்த, Pizhaithu Ezhuntha - உழவுக்குத் தப்பி யெழுந்த
கழுநீர், Kazhunir - செங்கழுநீர் மலர்களினுடைய
கடி கமழும், Kadi Kamazhum - பரிமளம் வீசப்பெற்ற
கடல்மல்லை தலசயனம், Kadalmallai Thalasayanam - திருக்கடல்மல்லையை
தொழுநீர் மனத்தவரை, Thozhunir Manaththavarai - வணங்குவதையே இயற்கையாகவுடைய நெஞ்சு படைத்த  பாகவதர்களை
1106பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்கே வந்து சாய்ந்து அருளின நீர்மையை அனுசந்தித்து தொழும் நெஞ்சு உடையாரை – அவர்கள் தொழும் விஷயத்தை தேடி இராதே-நெஞ்சே உனக்குத் தொழுகைக்கு விஷயம் அவர்கள் தாங்கள் கிடாய்- என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9
பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு, இணங்குதிருச் சக்கரத்தெம் பெருமானார்க் கிடம்,விசும்பில் கணங்களியங் கும்மல்லைக் கடன்மல்லைத் தலசயனம், வணங்குமனத் தாரவரை வணங்கென்றன் மடநெஞ்சே. –2-6-9
பதவுரை Show / Hide
பிணங்கள் அடு காடு அதனுள், Pinangal Adu Kaadu Adhanul - பிணங்களைச் சுடுகிற சுடுகாட்டிலே (- (என்தன் மட நெஞ்சே! வணங்கு-.))
நடம் ஆடு, Nadam Aadu - நடமாடுகின்ற
பிஞ்ஞகனோடு, Pinjjanonodu - ருத்ரனோடுகூட
இணங்கு, Inangu - பொருந்தி யிருக்கிற
திரு சக்கரத்து எம்பெருமானார்க்கு இடம், Thiru Chakkarathu Emperumanarkku Idam - சக்ரபாணியான பெருமானுக்கு இடமானதும்
விசும்பில் கணங்கள், Visumbil Kanangal - தேவ ஸமூஹங்கள்
இயங்கும், Iyankum - வந்து ஸஞ்சரிக்கும் பெருமையுடையதுமான
கடல் மல்லை தலசயனம், Kadal Mallai Thalasayanam - திருக்கடல் மல்லையை
வணங்கும் மனத்தாரவரை, Vanangum Manaththaravarai - வணங்குதற்குரிய சிந்தை படைத்த பாகவதர்களை
1107பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷிக்கைக்கு – கையில் வேல் பிடித்தால் போலே ஆயிற்று சேஷத்வத்திலும் -பாகவத சேஷத்வத்தில் நின்றபடி – இத் திருமொழியை அப்யசிக்க வல்லார் –முடியை உடையராய் நாட்டுக்கு அநந்ய பிரதானராய் இருந்துள்ள ஷத்ரியருக்கு பிரதானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகராய் நித்ய ஸூரிகளோடு சத்ருசராகப் பெறுவர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10
கடிகமழு நெடுமறுகில் கடல்மல்லைத் தலசயனத்து, அடிகளடி யேநினையு மடியவர்கள் தம்மடியான், வடிகொள்நெடு வேல்வலவன் கலிகன்றி யொலிவல்லார், முடிகொள்நெடு மன்னவர்தம் முதல்வர்முத லாவாரே. –2-6-10
பதவுரை Show / Hide
கடி கமழும் நெடுமறுகின், Kadi Kamazhum Nedumarugin - பரிமளம் வீசுகின்ற நீண்ட வீதிகளையுடைய
கடல்மல்லை தலசயனத்து, Kadalmallai Thalasayanaththu - திருக்கடல்மல்லையி லெழுந்தருளியிருக்கிற
அடிகள், Adigal - எம்பெருமானுடைய
அடியேநினையும், Adiyeninaiyum - திருவடிகளையே தியானிக்கின்ற
அடியவர்கள் தம், Adiyavarkal Tham - பாகவதர்கட்கு
அடியான், Adiyan - தாஸபூதரும்.
வடிகொள் நெடு வேல் வலவன், Vadikol Neduveel Valavan - கூர்மை பொருந்திய பெரிய வேலைக்கொண்டு பொருவதில்  வல்லவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வாருடைய
ஒலி, Oli - இவ்வருளிச்செயலை
வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள்,
முடி கொள் நெடு மன்னவர் தம் முதல்வர் முதல் ஆவார், Mudi Kol Nedumannar Tham Muthalvar Muthal Avar - கிரீடமணிந்த ராஜாதி ராஜர்களுக்கும் தலைவராகப் பெறுபவர்கள்.
1108பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முதலிலே ஸ்ரீ பாற் கடலாய் அது தன்னை கோதாக்கி-அம்ருதமாய் –அவ் வம்ருதம் தானே கோதாம்படி பிறந்தவள் ஆயிற்று –வடிவு அழகாலும் பருவத்தாலும்-பிறப்பாலும் வந்த ஏற்றத்தை உடையாள் ஆனவளும் – அவள் இருக்கிற இருப்பு தனக்கு பற்றுகைக்கு பற்றாசு என்று பற்றினவளை- திருமுகம் என்று சமுதாய சோபை இறே அவளுக்கு சொல்லுகிறது – குவளை யங்கண்ணி –என்று அவயவ சோபையால் உண்டான ஏற்றம் சொல்லுகிறது இவளுக்கு – அவன் தன்னில் காட்டில் –அஸி தேஷணை-என்று அவள் கண்ணுக்கு உண்டான ஏற்றதோ பாதியும் போருமாயிற்று அவளில் காட்டில் இவள் கண்ணுக்கு உண்டான ஏற்றம் – அவள் மார்வை ஆசைப்பட்டாள் இவள் திருவடிகளை ஆசைப்பட்டாள் அவன் வாசி அறிந்தார் அவன் மார்வை ஆசைப் படுவார்கள் – அவளோடு கூடினவன் வாசி அறிந்தார் அவன் திருவடிகளை பற்றும் இத்தனை இறே – ஸ்ரீ கலங்கா பெரு நகரில் புகப் பெறாதே கை கழியப் போனாரும் பிழைக்கைக்காக ஸ்ரீ திருவிட வெந்தையிலே வந்து நிற்கிற என் குல நாதன் ஆனவனே-என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
திவளும்வெண் மதிபோல் திருமுகத் தரிவை செழுங்கட லமுதினிற் பிறந்த அவளும்,நின்னாகத் திருப்பது மறிந்தும் ஆகிலு மாசைவி டாளால், குவளையங் கண்ணி கொல்லியம் பாவை சொல்லுநின் தாள்நயந் திருந்த இவளை,உன் மனத்தா லென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-1
பதவுரை Show / Hide
இடவெந்தை எந்தைபிரானே, Idaventhai Endhaipirane - திருவிடவெந்தையி லெழுந்தருளி  யிருக்கிற எம்பெருமானே!,
திவளும் வெண்மதி போல் திருமுகத்து, Thivalum Venmathi Pol Thirumugaththu - ஒளிவிடாநின்ற வெளுத்த சந்திரனைப்போன்று அழகிய முகத்தை யுடையளாய்
அரிவை, Arivai - நித்ய யௌவனமுடையளாய்
செழு கடல் அமுதினில் பிறந்த, Sezhu Kadal Amuthinil Pirandha - செழுமை தங்கிய கடலில் அமுதத்தோடு கூடப் பிறந்தவளான
அவளும், Avalum - அந்த பெரியபிராட்டியாரும்
நின் ஆகத்து, Nin Aagathu - உனது திருமார்பிலே
இருப்பதும், Iruppadhum - எழுந்தருளியிருப்பதை
அறிந்தும் ஆகிலும், Arindhum Aagilum - (இப்பரகாலநாயகி) அறிந்திருக்கச்செய்தேயும்
ஆசை விடாள், Aasai Vidaal - (உன்னிடத்தில்) ஆசையை விடுகின்றிலள்;
குவளை அம்கண்ணி, Kuvazhai Amkanni - கருநெய்தல்போன்று அழகிய கண்ணையுடையவளும்
கொல்லி அம்பாவை, Kolli Ambavai - கொல்லி மலையிலுள்ள அழகிய பதுமை போன்றவளும்
நின் தாள் நயந்திருந்த, Nin Thaal Nayandhirundha - உனது திருவடிகளையே ஆசைபட்டுக் கொண்டிருப்பவளுமான
இவளை, Ivalai - இப்பெண் விஷயத்திலே
உன் மனத்தால் என் நினைந்திருந்தாய், Un Manathaal En Ninaindhirundhaai - என்ன செய்வதாக நீ நினைத்திருக்கிறாய்!
சொல்லு, Sollu - அதை வெளியிட்டருள்.
1109பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பின்னானார் வணங்கும் -என்கிறபடியே சொல்லு என்று கிரியை உண்ணவும் பொறாதே-பட்டினி இடவும் பொறாதே –இருக்கும் ஸூ குமாரரைப் போலே அதிகமான சம்ச்லேஷம் விச்லேஷம் பொறுக்க மாட்டாத படியான ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் உடைய மார்த்த்வம் இருக்கும் படி -என்று – இவளுடைய பிரகிருதி அறிந்து கலக்கைக்காக ஸ்ரீ திருவிட வெந்தையில் வந்து எழுந்து அருளி இருக்கிற நீ உன்னுடைய திரு உள்ளத்தாலே நினைத்து இருக்கிறது என் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2
துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள் துணைமுலை சாந்துகொண் டணியாள், குளம்படு குவளைக் கண்ணிணை யெழுதாள் கோலநன் மலர்க்குழற் கணியாள், வளம்படு முந்நீர் வையமுன் னளந்த, மாலென்னும் மாலின மொழியாள், இளம்படி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-2
பதவுரை Show / Hide
மால் இனம் மொழியாள், Maal Inam Mozhiyal - தன்னுடைய வியாமோஹத்துக்குத் தகுதியான பேச்சையுடையளான இப்பெண்பிள்ளையானவள், (- (இடவெந்தை எந்தை பிரானே!- ;))
துளம்படு முறுவல், Thulampadu Muruvai - மாதுளம் விரைபோன்ற பற்களினின்றும் உண்டாகின்ற புன்சிரிப்பை
தோழியர்க்கு, Thozhiyarkku - தன் தோழிமார்களை நோக்கி
அருளாள், Arulal - அருள்கின்றாளில்லை;
துணை முலை, Thunai Mulai - சேர்த்தியழகுடைய முலைகளை
சாந்து கொண்டு, Santhu Kondo - சந்தனத்தாலே
அணியாள், Aniyal - அலங்கரிக்கின்றாளில்லை
குளம் படு குவளை கண் இணை, Kulam Padu Kuvalai Kan Inai - தடாகத்திலுள்ள (செவ்வி மாறாத) குவளை மலர் போன்ற கண்களில்
எழுதாள், Ezuthal - மையிட்டுக்கொள்கிறாளில்லை;
குழற்கு, Kuzharku - கூந்தலில்
கோலம் நல் மலர் அணியாள், Kolam Nal Malar Aniayal - அழகிய சிறந்த புஷ்பங்களைச் சூட்டிக் கொள்ளுகிறாளில்லை
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த மால் என்னும், Valam Padu Munnir Vaiyam Mun Alandha Maal Ennum - (ரத்னம் முதலிய) நற்சரக்குகளுக்கிடமான கடலால் சூழப்பட்ட பூமியை முன்னொருகால் அளந்த மால் ஸர்வேச்வரன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்;
இளம் படி இவளுக்கு என் நினைந்திருந்தாய், Ilam Padi Ivalukku En Ninaindhirundhai - (விரஹம் பொறாத) ஸுகுமாரஸ்வபாவையான இவள் விஷயத்திலே என்ன செய்வதாகத் திருவுள்ளம்?
1110பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நை வார்த்தைர் ந ச பூஷணை -என்னும்படி பண்ணுகைக்குகோ நீ இங்கே வந்து இருக்கிறது ஸ்ரீ ராம அவதாரத்தில் இழவு தீர்க்கைக்கு அன்றோ இங்கு வந்து இருக்கிறது-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தடமுலைக் கணியிலும் தழலாம், போந்தவெண் திங்கள் கதிர்சுட மெலியும் பொருகடல் புலம்பிலும் புலம்பும், மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறைநில்லா, என்தன் ஏந்திழை யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-3
பதவுரை Show / Hide
சாந்தமும், Santhamum - கலவைச் சந்தனத்தையும் (- (இடவெந்தை யெந்தை பிரானே!-;))
பூணும், Poonum - முத்துவடத்தையும்
சந்தனும் குழம்பும், Sandhanum Kuzhampum - குழம்பான சந்தனத்தையும்
தட முலைக்கு அணியிலும், Thada Mulaiyilum - (இவள் தனது) பெரிய முலைகளில் அணிந்து கொண்டாலும்
தழல் ஆம், Thazhal Aam - (அவையெல்லாம்) நெருப்பாகவேயிரா நின்றன;
போந்த, Pontha - வெளிவந்து தோன்றின
வெள் திங்கள், Vel Thingal - வெளுத்த சந்திரனுடைய
கதிர், Kathir - கிரகணங்களானவை
சுட, Suda - (நெருப்புப்போல்) தஹிக்க
மெலியும், Meliyum - (அதனாலே) நோவுபடா நின்றாள்;
பொரு கடல், Poru Kadal - அலையெறிகின்ற கடலானது
புலம்பில், Pulambil - கோஷம் செய்யத் தொடங்கினால்;
புலம்பும், Pulambum - (இவளும்) கூக்குரலிடா நின்றாள்;
மாந்தளிர், Manthalar - மாந்தளிர்போன்ற
மேனி வண்ணமும், Meni Vannamum - (இவளது) உடம்பின் நிறமும்
பொன் ஆம், Pon Aam - பசலைநிறமாக மாறிவிட்டது;
வளைகளும், Valaigalum - கையில் வளைகளும்
இறை, Irai - சற்றேனும்
நில்லா, Nilla - தங்குகின்றில்
என்தன் ஏந்து இழை இவளுக்கு, Enthan Aendhu Izhai Ivalukku - எனது பெண்பிள்ளையாகிய இவள் விஷயத்திலே
என் நினைந் திருந்தாய், En Ninainthirundhai - என்ன செய்வதாகத் திருவுள்ளம்;
1111பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏழை-கிடையாதது தூர நின்றால் கிடைக்கும் அதில் போலே சாபலத்தை பண்ணுமவள் இவளும் தன் சாபலமும் பட்டது படுகிறாள் என்று ஆறி இருக்க ஒண்ணாத படி இருக்கும் மகள் – இடவெந்தை –உக்தியாலே தன் சாபலம் தோற்ற இருக்கிற இவளைப் போல் அன்றிக்கே கிரியையாலே சாபலம் தோற்ற இருக்கிற நீ நினைத்து இருக்கிறது என்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4
ஊழியில் பெரிதால் நாழிகை. என்னும் ஒண்சுடர் துயின்றதால் என்னும், ஆழியும் புலம்பும். அன்றிலு முறங்கா தென்றலும் தீயினிற் கொடிதாம், தோழியோ. என்னும் துணைமுலை யரக்கும் சொல்லுமி னென்செய்கேன் என்னும், ஏழையென் பொன்னுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-4
பதவுரை Show / Hide
நாழிகை ஊழியின் பெரிது என்னும், Nazhigai Oozhiyin Peridhu Ennum - ‘ஒரு நாழிகைப் பொழுதானது ஒரு கல்பத்தைக் காட்டிலும் நெடிது என்கிறாள்; (- (இடவெந்தை எந்தை பிரானே-; (இப்பெண்பிள்ளையானவன்).) (என் நினைத்திருந்தாய்!-.))
ஒண் சுடர் துயின்றது என்னும், On Sudar Thuyinrathu Ennum - ‘ஸூர்யன் செத்துப் போய் விட்டான்’ என்கிறாள்;
தோழி, Thozhi - ‘அடீ ஸகியே!’ (என்று தோழியை அழைத்து அவளிடம் என்ன சொல்லுகிறாளென்னில்;)
ஆழியும் புலம்பும், Azhiyum Pulambum - ‘ஸமுத்ரமோ கோஷதட செய்யாநின்றது;
அன்றிலும் உறங்கா, Andrilum Urangaa - அன்றிற்பறவையோ உறங்குகிறதில்லை;
தென்றலும் தீயினில் கொடிது ஆம், Thendralum Theeyinil Kodidhu Aam - தென் திசைக்காற்றோ நெருப்பைவிட தீக்ஷ்ணமாயிருக்கின்றது
ஓ, O - ஐயோ! (என்ன பண்ணுவேன்)
என்னும், Ennum - என்று சொல்லாநின்றாள்;
துணை முலை அரக்கும், Thunai Mulai Arakkum - ‘இரண்டு முலைகளையும் வேரோடே பிடுங்கி யெறிப வள் போலேயிராநின்றாள்
என் செய்கேன் சொல்லுமின் என்னும், En Seigain Sollumin Ennum - ‘இரண்டு முலைகளையும் வேரோடே பிடுங்கி யெறிபவள் போலேயிராநின்றாள்(இப்படிப்பட்ட கஷ்டங்களுக்கு) என்ன   பரிஹாரம் பண்ணுவேன், சொல்லுங்கள்’ என்று (அடிக்கடி) சொல்லாநின்றாள்;
ஏழை, Ezhaik - மிகவும் சாபல்ய முடையளான
என் பொன்னுக்கு, En Ponnukku - எனது பெண்மகள் விஷயத்திலே
1112பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உகவாதார் முன்பே நம்முடையார் நோவுபட விட்டுப் பார்த்திருக்குமது நமக்கு போராது என்று இருக்கக் கடவ நீர் இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என் – ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு ஆகில் போரும் என்னவுமாம் –இப்படி கைவிட்டு இருக்குமது உமக்கு போராது- என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
ஓதிலும் உன்பே ரன்றிமற் றோதாள் உருகும்நின் திருவுரு நினைந்து, காதன்மை பெரிது கையற வுடையள் கயல்நெடுங் கண்துயில் மறந்தாள், பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல், ஏதலர் முன்னா என்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-5
பதவுரை Show / Hide
ஓதிலும், Othilum - (இம்மகள்) வாய்விட்டு எதைச் சொன்னாலும் (- (இடவெந்தை யெந்தை பிரானே!- ;) (அவமானப்படுத்துவாயோ, பஹி மானப்படுத்துவாயோ?))
உன் பேர் அன்றி, Un Per Andri - உனது திருநாமம் தவிர
மற்று, Mattru - வேறொன்றையும்
ஓதாள், Othaal - சொல்லுகின்றிலள்;
நின் திருஉரு நினைந்து உருகும், Nin Thiruuru Ninaindhu Urugum - உனது திருமேனியைச் சிந்தித்து உருகினபடியே யிராநின்றாள்;
காதன்மை பெரிது, Kaadhamai Peridhu - (உன் விஷயத்தில்  இவளுக்கு) ஆசை பெருகுகின்றது;
கையறவு உடையள், Kaiyaravu Udaiyal - ஒன்றும் செய்யமாட்டாதே யிராநின்றாள்;
கயல் நெடு கண் துயில் மறந்தாள், Kayal Nedhu Kan Thuyil Marandhaal - கயல்மீன் போன்று நீண்ட கண்களிலே உறக்கத்தை மறந்துவிட்டாள்;
பேதையேன் பேதை, Pethaien Pethai - அறிவு கெட்டவளான என்னுடைய இப்பெண்பிள்ளை
பிள்ளைமை பெரிது, Pillaimai Peridhu - மிகவும் இளம்பிராயமாயிருக்கச் செய்தேயும்
தெள்ளியள், Thelliyal - (உனது ஸ்வரூ பகுணங்களிலே) தெளிவுள்ளவளா யிரா நின்றாள்;
வள்ளி நுண் மருங்குல், Valli Nun Marungul - கொடி போன்று நுட்பமான இடையையுடைய இம்மகளைப்பற்றி
ஏதலர் முன்னா, Aedhalar Munnai - சத்துரக்கள் முன்பாக
என் நினைந்திருந்தாய், En Ninaindhirundhai - என்ன செய்வதாகத் திருவுள்ளம்?
1113பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உதவாதவன் உதவாது ஒழிகை அன்றிக்கே உதவும் ஸ்வ பாவனாய் இருந்து வைத்து நம் தசை இதுவாய் இருக்க உதவாது ஒழிவதே –என்று மோஹிக்கும்- நம் தசையை உடையாள் ஒருத்திக்கு உதவினவன் அன்றோ என்று அந்த அண்ணிமையை அனுசந்தித்து இனியளாய்- அணித்தாக உதவினவன் நமக்கு வாராது ஒழிவதே -என்று மயங்கும் இவளுடைய-வை வர்ண்யமும்-அத்யாவச்யமும்-செல்லாமையும்-வடிவு அழகும் பிறப்பும் இருந்தபடியாலும் உமக்கு உதவாது ஒழியப் போமோ- இவளைக் காட்டில் உமக்கு உண்டான வைவர்ண்ய உத்யோதகம் இறே ஸ்ரீ திருவிடவெந்தையில் இருப்பு – உடம்பு வெளுப்பு அன்றாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க அமையும் இறே – உம்முடைய வைவர்ண்யம் தோற்ற ஸ்ரீ திருவிடவெந்தையில் எழுந்து அருளி இருக்கிற நீர் இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6
தன்குடிக் கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயி லிலங்கை, வன்குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தைகேட் டின்புறும் மயங்கும், மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி மென்முலை பொன்பயந் திருந்த, என்கொடி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-6
பதவுரை Show / Hide
தன் குடிக்கு தக்க ஆ, Than Kudikku Thakka Aa - தனது குலமரியாதைக்குத் தகுந்தபடியை (- (இடவெந்தை எந்தை பிரானே!;) (இப்பெண்பிள்ளையானவள்))
ஏதும் நினையாள், Edhum Ninaial - சிறிதும் ஆராய்கின்றிலள்;
தட கடல், Thada Kadal - பெரிய கடலோடும்
நுடங்கு எயில், Nudangu Eiyil - வளைந்த மதிளோடும் கூடின
இலங்கை, Ilankai - இலங்கையிலிருந்த
வல்குடி, Valkudi - வலிய ராக்ஷஸகுலமானது.
மடங்க, Madanga - அழியும்படி
வாள் அமர்தொலைத்த வார்த்தை கேட்டு, Vaal Amartholaittha Vaarthai Kettu - கொடிய போர்க்களத்திலே ஒழித்த செய்தியைக் கேட்டு
இன்புறும், Inpurom - (ஒரு பிராட்டிக்காக இவ்வளவு காரியம் செய்வதே! என்று) ஈடுபடாநின்றாள்;
மயங்கும், Mayangum - (அப்பிராட்டிக்குப்போல நமக்கும் ஒரு காரியம் செய்வதில்லையே! என்று வருந்தி)  மூர்ச்சிக்கின்றாள்;
மின்கொடி மருங்குல் சுருங்க, Minkodi Marungul Surunga - மின்னலும் வஞ்சிக்கொடியும் போன்ற இடையானது நுடங்கும்படி
மென் முலை, Men Mulai - மெல்லிய முலைகளானவை
மேல் நெருங்கி, Mel Nerungi - மார்பின்மேலே (ஒன்றோடொன்று ) நெருக்கமுற்று
பொன் பயந்திருந்த, Pon Payandhirundha - பசலை நிறமுடைத்தாம்படியிருக்கின்ற
என் கொடி இவளுக்கு, En Kodi Ivalukku - எனது இப்பெண்பிள்ளை திறத்திலே
என் நினைந்திருந்தாய், En Ninaindhirundhai - என்ன செய்வதாகத் திருவுள்ளம்?
1114பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளைக் கை பிடிக்கைகாக ஸ்ரீ மிதிலையிலே புறச் சோலையிலே விட்டுக் கொண்டு இருந்தால் போலே இவளைப் பெறுகைகாக ஸ்ரீ திருவிடவெந்தையில் விட்டுக் கொண்டு இருக்கிற நீர் இவள் விடை யாட்டத்தில் என் நினைந்து இருந்தீர் – என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7
உளங்கனிந் திருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி யெனக்கன்பொன் றிலளால், வளங்கனி பொழில்சூழ் மாலிருஞ் சோலை மாயனே! என்றுவாய் வெருவும், களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோ டவலம்சேர்ந் திருந்த, இளங்கனி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-7
பதவுரை Show / Hide
உளம் கனிந்திருக்கும், Ulam Kanindhirukkum - நெஞ்சு கனிந்திருக்கின்றாள்; (- (இடவெந்தை எந்தை பிரானே!- ;) (இப்பெண் பிள்ளை எப்போதும் உன்னையே சிந்தித்திருக்கையாலே) (என் நினைந்திருந்தாய்!-;))
உன்னையே பிதற்றும், Unnaiye Pithatrum - உன்னைப்பற்றியே வாய் பிதற்றுநின்றாள்;
உனக்கு அன்றி, Unakku Andri - உன்விசயத்தில் தவிர
எனக்கு, Enakku - என்விசயத்தில்
அன்பு ஒன்று இலள, Anbu Ondru Ilala - அன்பு சிறிதும் உடையளல்லள்;
வளம் கனி பொழில் சூழ்மாலிருஞ் சோலை மாயனே என்று வாய் வெருவும், Valam Kani Pozhil Soozhmalirunj Cholai Mayane Endru Vaai Veruvum - செழிப்பான பழங்களையுடைய சோலைகளாலே சூழப்பட்ட திருமாவிருஞ் சோலையிலெழுந்தருளியிருக்கிற ஆச்சரியனே! என்று வாய் வெருவுகின்றாள்;
களங்கனி முறுவல் காரிகை, Kalankani Muruvai Karikai - களாப்பழம்போல் இனிதான முறவலையும் அழகையும் உடையளாய்
பெரிது கவலையோடு அவலம் சோர்ந்திருந்த, Peridhu Kavalaiyodu Avalam Sorndhirundha - மிக்க மனக்கவலையும்; இளைப்பும் உடையளாயிருக்கிற
இள க(ன்)னி இவளுக்கு, Ila Kanini Ivalukku - இளங் கன்னியாகிய இம்மகள் திறத்திலே
1115பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம் தசை இருந்த படியாலே ஸ்ரீ திரு நீர் மலையிலே போய் புக்கே விடுவோம் போலே இருந்ததீ யென்று விலக்க நினைக்கிற தாயாரோடு தோழிமாருக்கு சொல்லுமா போலே சொல்லா நின்றாள் – ராகவோர்ஹதி வைதேஹீம் -என்னும்படியே உனக்கு தகுதியாம்படியாய் இருக்கிற இவளிடை யாட்டத்தில் நீர் நினைத்து இருக்கிறது என்- என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற் கழியுமா லென்னுள்ளம் என்னும், புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும், குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி, இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-8
பதவுரை Show / Hide
அலம் கெழு தடகை ஆயன் வாய் ஆம்பற்கு என் உள்ளம் அழியும் என்னும், Alam Kezhu Thadakai Aayan Vaai Aambarku En Ullam Azhiyum Ennum - ‘கலப்பை விளங்குகின்ற பெரிய திருக்கையை யுடையனான கோபால க்ருசணனுடைய திருப்பவளத்தில வைத்து ஊதுகிற இலைச்சூழலோசைக்கு என்னெஞ்சு அழிகின்றது’ என்கிறாள்; (- (இடவெந்தை எந்தை பிரானே!-;) (என் நினைந்திருந்தாய்!-.))
புலம் கெழு, Pulam Kezhu - மநோஹரமான
பொரு நீர், Poru Neer - அலையெறிகின்ற நீர்ப்பெருக்கையுடைய
புட்குழி, Putkuzhi - திருப்புட்புழி விஷயமாக
பாடும், Paadum - பாட்டுகள் பாடாநின்றாள்;
நீர்மலைக்கு போதுமோ என்னும், Neermalaikku Podhumo Ennum - திருநீர்மலைக்குப் போவோமென்கிறாள்;
குலம் கெழு கொல்லி கோமள வல்லி, Kulam Kezhu Kolli Komala Valli - மிகச்சிறந்த கொல்லி மலையிலுள்ள பாவை போன்றவளும்
கொடி இடை, Kodi Idai - வஞ்சிக்கொடிபோன்ற இடையையுடையவளும்
நெடு மழை கண்ணி, Nedu Mazhai Kanni - பெருமழைபோலே நீர்த்தாரைகள் பெருகப்பெற்ற கண்களை  யுடையவளும்
இலங்கு எழில் தோளிக்கு, Ilangu Ezhil Tholikku - விளங்குகின்ற அழகிய தோள்களையுடையவளுமான இப்பெண்பிள்ளை திறத்திலே
1116பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாய் கைவிடுதல் தான் கை விடுதல்-செய்தால்-அதைக் கொண்டு நோக்குகைக்கு ஈடாக ஸ்ரீ திருவிடவெந்தையில் வந்திருக்கிற நீர் -உம்முடைய திரு உள்ளத்தால் நினைந்து இருக்கிறது என் – வாலி பக்கலிலே கண்டோம் இறே ப்ராதாக்கள் உதவாதபடி – ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே கண்டோம் இறே தமப்பன் உதவாதபடி தான் தன்னை அனுசந்தித்து அஞ்சின அர்ஜுனனுக்கு மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னக் கண்டோம் இறே அவன் உதவும் படி-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9
பொன்குலாம் பயலை பூத்தன மெந்தோள் பொருகயல் கண்துயில் மறந்தாள், அன்பினா லுன்மே லாதரம் பெரிது இவ்வ ணங்கினுக் குற்றநோ யறியேன், மின்குலா மருங்குல் சுருங்கமேல் நெருங்கி வீங்கிய வனமுலை யாளுக்கு, என்கொலாம் குறிப்பி லென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-9
பதவுரை Show / Hide
மெல் தோள், Mel Thol - மென்மைதங்கிய தோள்களானவை (- (இடவெந்தை யெந்தை பிரானே!-;) (இப்பெண்பிள்ளையினுடைய))
பொன் குலாம் பயலை புத்தன, Pon Kulam Payalai Puththan - பொன்னிறமென்று சொல்லத்தக்க பசலை நிறத்தைக் கொண்டன;
பொரு கயல் கண் துயில் மறந்தாள், Poru Kayal Kan Thuyil Marandhaal - ஒன்றோடொன்று போர் செய்கிற இரண்டு மீன்கள் போன்ற கண்களிலே உறக்கத்தை மறந்துவிட்டாள்;
உன் மேல், Un Mel - உன் விஷயத்திலே
அன்பினால், Anbinai - ஆசையினாலே
ஆதரம் பெரிது, Aadaram Peridhu - ஆதரவு பெருகிச் செல்லுகின்றது;
இவ் அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன், Iv Ananginukku Utra Noi Ariyen - இப்பெண்ணுக்கு உண்டான வியாதியை அறிகின்றே னில்லை;
மின் குலாம் மருங்குல் சுரங்க, Min Kulam Marungul Suranga - மின்னல்போன்று கொண்டாடத்தக்க இடையானது துவளும்படியாக
மேல் நெருங்கி, Mel Nerungi - மார்பின்மேலே ஒன்றோடொன்று நெருக்கமுற்று
வீங்கிய, Veengiya - வளர்ந்துவாராநின்ற
வனம் முலையாளுக்கு, Vanam Mulaiyalukku - அழகிய முலைகளையுடையளான இம்மகளுக்கு
என் ஆம் கொல், En Aam Kol - என்ன ஆகுமோ!
குறிப்பில் என் நினைந்திருந்தாய், Kurippil En Ninaindhirundhai - (இவளைப்பற்றித்) திருவுள்ளத்தில் என்ன நினைத்திருக்கிறாய்?.
1117பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அறிவு குடி போய் நோவு பட தமக்கு அறிவு கொடுத்த அவதாரங்களை நினைக்கிறார் அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு தீர்க்கைக்காக ஸ்ரீ திருவிடவெந்தையில் வந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று – இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –பிராரப்த கர்மாக்களை வாசனையோடு போக்கப் பெறுவார்கள் தாம் மோஹிப்பது உணர்வதாக திருத் தாயார் கூப்பிடுவதாக வேண்டாதபடி பகவத் அனுபவமே யாத்ரையான தேசத்திலே புக்கு அனுபவிக்கப் பெறுவார்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆயஎம் மாயனே !அருளாய், என்னுமின் தொண்டர்க் கின்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை, மன்னுமா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள், பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப் பாரே! –2-7-10
பதவுரை Show / Hide
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய, Annamum Meenum Aamaiyum Ariyum Aaya - “ஹம்ஸரூபியாகவும் மத்ஸ்யரூபியாகவும் கூர்மரூபியாகவும் நரஸிம்ஹரூபியாகவும் திருவவதரித்த
எம் மாயனே, Em Maayaney - எம்பெருமானே!
அருளாய் என்னும், Arulai Ennum - “கிருபை பண்ணவேணும்”. என்று பிரார்த்திக்கின்ற
இன் தொண்டர்க்கு, In Thondarkku - பரமபக்தர்களுக்கு
இன் அருள் புரியும், In Arul Puriyum - பரம க்ருபையைச் செய்தருள்கின்ற.
இடவெந்தை எந்தைபிரானை, Idaventhai Endhaipiraanai - திருவிடவெந்தைப் பெருமான் விஷயமாக,
மன்னு மா மாடம் மங்கையர்தலைவன், Mannu Maa Maadam Mangaiyarthalaivan - சாச்வதமான பெரிய மாடங்களையுடைய திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும்
மானம் வேல், Maanam Vel - சிறந்த வேலாயுதத்தையுடையவருமான
கலியன், Kaliyan - ஆழ்வார்
வாய் ஒலிகள் பன்னிய, Vaai Oligal Panniya - விஸ்தரித்த அருளிச்செய்த
பனுவல், Panoval - இப்பாசுரங்களை
பாடுவார், Paaduvaar - பாடுமவர்கள்
நாளும், Naalum - எந்நாளும்
பழ வினை பற்று அறுப்பார், Pazha Vinai Patru Aruppaar - கல்மஷ ஸம்பந்தமற்றிருப்பர்கள்.
1118பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு சிறுக்கனுக்கு தமப்பன் பகையாக அவனிலும் அணியனாய் உதவி நோக்கினவனைப் போலே இரா நின்றார் -இவர் யார் தான் என்கிறாள்-அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே நிச்சயிக்க ஒண்ணாத படி இறே விஷய ஸ்வபாவம் – ஒரு சிறுக்கனுக்காக உதவின அவ்வளவோ –உனக்கு உதவுகைகாக இங்கே வந்து அவசர ப்ரதீஷனாய் வந்து நிற்கிறவன் அன்றோ நான் -என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
திரிபுர மூன்றெரித் தானும்மற்றை மலர்மிசை மேலய னும்வியப்ப, முரிதிரை மாகடல் போல்முழங்கி மூவுல கும்முறை யால்வணங்க, எரியன கேசர வாளெயிற்றோ டிரணிய னாக மிரண்டுகூறா, அரியுரு வாமிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-1
பதவுரை Show / Hide
திரிபுரம் மூன்று எரித்தானும், Thiripuram Moondru Erithaanum - எங்குந் திரிந்துகொண்டு உலகங்கட்குத் துன்பம் விளைத்துக் கொண்டிருந்த மூன்று பட்டணங்களைக் கொளுத்தியொழித் தவனான சிவபிரானும் (- (அதற்கு அவர்))
மலர் மிசை மேல் அயனும், Malar Misai Mael Ayanum - தாமரை மலரிற் பிறந்து மேன்மை பொருந்திய பிரமனும்
வியப்ப, Viyappa - ஆச்சரியப்படவும்,
மூ உலகும், Moo Ulagum - மூன்று லோகங்களிலுமுள்ளவர்கள்
முரி திரைமா கடல் போல் முழங்கி, Muri Thiraimaa Kadal Pool Muzhangi - அலையெறிகின்ற பெரிய கடல் போலே (ஸ்தோத்ர) கோஷங்களைச் செய்து கொண்டு
முறையால், Murayal - முறைதவறாது
வணங்க, Vananga - வணங்கவும்,
இரணியன் ஆகம் இரண்டு கூறு ஆ, Iraniyan Aagam Irandu Koordu Aa - இரணியாசுரனுடைய உடல் இரண்டு பிளவாம்படியாக
எரி அன கேசரம், Eri An Kesaram - நெருப்புப்போன்ற உளைமயிர்களோடும்
வாள் எயிற்றோடு, Vaal Eiyitroadu - வாள்போன்ற கோரப்பற்களோடும் கூடி
அரி உரு ஆம் இவர், Ari Uru Aam Ivar - நரசிங்கவுருக்கொண்ட பெருமானைப் போன்றுள்ள இப்பெரியவர்
ஆர் கொல் என்ன, Aar Kol Enna - யார்? என்று நான் சொல்ல,
அட்டபுய கரத்தேன் என்றார், Attapuy Karatthen Endraar - ‘அட்டபுயகரக்ஷேத்ரத்திலுள்ளவன்; நான்’  என்று மறுமொழி கூறினார்.
1119பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வீரத்தைப் பார்த்தவாறே சத்ருக்களும் யேத்தும்படியாய் இருந்தது – சீலத்தைப் பார்த்தவாறே அனுகூலர் அடைய யேத்தும்படியாய் இருந்தது – இவரை இன்னார் என்று நிச்சயிக்க போகிறது இல்லையீ கழஞ்சு மண் இரந்து வந்தவன் அல்லேன் உன்னை இரந்து வந்தவன் நான் பிறர்க்காக இரந்தவன் அல்லேன் எனக்காக இரந்தவன் என்கிறார்- இரண்டாம் பாசுரத்தில்) 2
வெந்திறல் வீரரில் வீரரொப்பார் வேத முரைத்திமை யோர்வணங்கும், செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும் தேவ ரிவர்கொல் தெரிக்கமாட்டேன், வந்து குறளரு வாய்நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த, அந்தணர் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-2
பதவுரை Show / Hide
இமையோர், Imaiyor - தேவர்கள் (- (மாவலி நீர் வார்த்து தத்தம் பண்ணினவாறே) (அட்புயகரத்தேன் என்றார்-.))
வேதம் உரைத்து, Vedham Uraithu - வேத வாக்கியங்களைச் சொல்லி
வணங்கும், Vanangum - வணங்க நின்ற
வெம் திறல் வீர்ரில் வீரர் ஒப்பார் இவர், Vem Thiral Veeril Veerar Oppaar Ivar - மிக்க வலிவுகொண்ட வீரர்களிலுங் காட்டில் மஹாவீரரான இராமபிரானைப் போன்றுள்ள இப்பெரியவர்
செம் தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர்கொல், Sem Tamil Paaduvaar Thaam Vanangum Thevarkol - அழகிய தமிழ்ப் பாசுரங்களைப் பாடின முதலாழ்வார்கள் வணங்கப் பெற்ற திருவேங்கடமுடையானோ?
தெரிக்க மாட்டேன், Therikka Maatten - அறிகின்றிலேன்;
மாவலி வேள்வியில், Mavali Velviyil - மஹாபலியின் யாகபூமியிலே
குறள் உரு ஆய் வந்து, Kural Uru Aay Vandhu - வாமநவுருக் கொண்டுவந்து
நிமிர்ந்து, Nimirndhu - திரிவிக்கிரமனாக வளர்ந்து
மண் அளந்த, Man Alandha - பூமியை அளந்துகொண்ட
அந்தணர் போன்ற இவர் ஆர் கொல் என்ன, Andhanar Ponda Ivar Aar Kol Enna - பிரமசாரியைப் போலுமிரா நின்ற இப்பெரியவர் ஆர்? என்ன,
1120பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (யுத்த உன்முகமாய் இருக்கிற குவலயாபீடத்தை முடிக்கும்படியாக நிறத்துக்கு பரபாகமான வெண்மையை உடைய கொம்பை பறித்து இருண்ட மேகம் போலே இருக்கிற இவர் ஆர் தான் என்ன மேல் வார்த்தை – கம்ச ப்ரேரிதமான குவலையா பீடத்தை நிரசித்து கம்சன் படைவீட்டில் பெண்கள் பயத்தைப் போக்கின அவ்வளவே அல்ல உன் பயம் தீர்க்கைகாக வந்து நிற்கிறவன் நான் என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3
செம்பொ னிலங்கு வலங்கைவாளி திண்சிலை தண்டொடு சங்கமொள்வாள், உம்ப ரிருசுட ராழியோடு கேடக மொண்மலர் பற்றியெற்றே, வெம்பு சினத்தடல் வேழம்வீழ வெண்மருப் பொன்று பறித்து,இருண்ட அம்புதம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-3
பதவுரை Show / Hide
வலம் கை, Valam Kai - வலத்திருக்கைpயலே (- (அட்டபுயகரத்தேன் என்றார்-.) (எற்றே!–; இது என்ன ஆச்சரீயம்!..))
இலங்கு, Ilangu - விளங்குகின்ற
செம் பொன், Sem Pon - பசும்பொன்னாற் செய்யப்பட்ட
வாளி, Vaali - அம்புகளையும்
திண் சிலை, Thin Silai - திண்ணிதான சார்ங்க வில்லையும்
தண்டொடு, Thandodu - கௌமோதகி யென்னும் கதையையும்
சங்கம், Sangam - ஸ்ரீ பாஞ்சஜந்யத்தையும்
ஒள் வாள், Ol Vaal - அழகிய நந்தவகவாளையும்,
உம்பர், Umbar - (ஆயதங்களெல்லா வற்றினும்) மேற்பட்டு
இரு சுடர், Iru Sudar - மிக்க தேஜஸ்ஸையுடைய
ஆழியோடு, Azhiyodu - திருவாழியாழ்வானையும்
கேடகம், Kedagam - கேடயத்தையும்
ஒண் மலர், On Malai - அழகிய புஷ்பத்தையும்
பற்றி, Patri - தரித்துக்கொண்டு,
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ, Vembu Sinathu Adal Vezham Veel - மிக்க கோபத்தையும் மிடுக்கையுமுடைய குவலய பீடமென்னும்  யானை  முடியும் படியாக
வெண் மருப்பு ஒன்று, Ven Maruppu Ondru - (அவ்யானையினுடைய) வெளுத்த ஒரு கொம்பை
பறித்து, Parithu - பிடுங்கிக் கையிலே கொண்டு
இருண்ட அம்புதம் போன்ற இவர் ஆர் கொல் என்ன, Irunda Ambudham Ponda Ivar Ar Kol Enna - காளமேகத்தை ஒத்திருக்கின்ற இவர் யார்? என்று நான் கேட்க
1121பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனுடைய ஆச்ரயமான செயல்கள் எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை-திவ்யாயுதங்களை தரித்து அருளிச் செய்கிற வார்த்தை அடைய வேதம் போலே இரா நின்றது முறை கெடாதபடி பரிமாறக் கடவ பரம பதத்தில்-அத்யததபரோதி தோஜ்யோதிர் தீப்யதே அத்தனை தூரஸ்தன் என்று கை வாங்க வேண்டா-உனக்காக கிட்ட வந்து இருக்கிறவன் காண் என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4
மஞ்சுயர் மாமணிக் குன்றமேந்தி மாமழை காத்தொரு மாயவானை யஞ்ச,அதன்மருப் பொன்றுவாங்கும் ஆயர்கொல் மாய மறியமாட்டேன், வெஞ்சுட ராழியும் சங்குமேந்தி வேதமு னோதுவர் நீதிவானத்து, அஞ்சுடர் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-4
பதவுரை Show / Hide
மஞ்சு உயர், Manju Uyar - மேக மண்டலம் வரையில் உயர்ந்ததும் (- (ஆர் கொல் என்ன–;) (அட்டபுயகரத்தேன் என்றார்-.))
மா மணி குன்றம், Maa Mani Kuntram - சிறந்த ரத்னங்களை யுடையதுமான கோவர்த்தனகிரியை
ஏந்தி, Aendi - (குடையாக) எடுத்துப் பிடித்து
மா மழைகாத்து, Maa Mazhaikathu - பெருமழையைத் தடுத்தவராயும்,
அன்று, Andru - கம்ஸ னரண்மனையினுட் புகும்போது
ஒரு மாயம் ஆனை அஞ்ச, Oru Maayam Aana Anja - ஒப்பற்றதும் மாயச் செயல்களை யுடையதுமான (கம்ஸனுடைய) யானையானது நடுங்கும்படியாக
அதன் மருப்பு, Adhan Maruppu - அவ் யானையின் கொம்பை
வாங்கும், Vaangum - பறித்தெறிந்தவராயுமுள்ள
ஆயர்கொல், Aayarkol - கோபாலகிருக்ஷ்ணரோ? இவர்
மாயம் அறிய மாட்டேன், Maayam Ariya Maatten - (இன்னாரென்று நிச்சயிக்க முடியாத இந்த) ஆச்சரியத்தை அறிகிறேனில்லை;
வெம் சுடர் ஆழியும், Vem Sudar Azhiyum - தீக்ஷ்ணமான சோதியையுடைய சக்கரத்தையும்
சங்கும், Sangum - சங்கையும்
ஏந்தி, Aendi - தரித்துக்கொண்டு
முன், Mun - கண்ணெதிரே
வேதம் ஓதுவர், Vedham Othuvaar - வேதங்களை ஓதிக்கொண்டிருப்பவராய்
நீதி வானத்து அம்சுடர் போன்ற இவர், Neethi Vaanaththu Amsudar Ponda Ivar - முறை தவறாத பரமபதத்திலேயுள்ள பரஞ்சோதி போன்றவரான இவர்
1122பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கடல் போலே இழிய ஒண்ணாத படி-அபரிச்சின்னன் என்று இருக்க வேண்டா உனக்கு நெஞ்சால் பரிச்சேதிக்கலாம்படி வந்து நிற்கிறேன் என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமும் சொற்பொருள் தானும்,மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையி னாலருள் செய்து,நீண்ட மலைகளும் மாமணி யும்மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற, அலைகடல் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-5
பதவுரை Show / Hide
கலைகளும், Kalaigalum - (வேதத்தின் உபநிஷத் பாகமான) வேதாந்தங்களையும் (- (இவர் ஆர்கொல் என்ன–;) (அட்டபுயகரத்தேன் என்றார்–.))
வேதமும், Vedhamum - (கர்மகாண்டமான) வேதங்களையும்
நீதி நூலும், Neethi Noolum - இதிஹாஸங்களையும்
கற்பமும், Karppamum - கல்பஸூத்ரங்களையும்
சொல், Sol - வியாகரண சாஸ்த்ரத்தையும்
பொருள் தானும், Porul Thaanum - மீமாம்ஸா சாஸ்த்ரத்தையும்
நிலைகளும், Nilaigalum - அவரவர்க்கு உரிய ஸ்தானங்களையும்
வானவர்க்கும், Vaanavarkkum - தேவர்களுக்கும்
பிறர்க்கும், Pirarkkum - மற்றுமுள்ள மனிசர்க்கும்
நீர்மையினால், Neermayinal - கிருபையினால்
அருள் செய்து, Arul Seythu - அளித்தவரும்
­­­­­­நீண்ட மலைகளும் மா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும தங்குகின்ற அலை கடல் போன்ற, Ninda Malaihalum Ma Maniyum Malarmel Mankaiyum Sangamum Thangukinra Alai Katal Ponra - பெரிய மலைகளும் சிறந்த கௌஸ்துபமணியும் பிராட்டியும் சங்கும்  எப்போதும் நிலைத்திருக் கப்பெற்ற அலையெறிகின்ற கடல் போன்றவருமான
1123பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெரிய கிளர்த்தியை உடைத்தாய் இருக்கிற கருங்கடல் பூவை காயா செவ்வியிலே அலர்ந்த நீலம் இவற்றோடு ஒக்க தொடுத்த மேகம்-ஓன்று உபமானமாகப் போராமையாலே-அங்கும் இங்குமாக-கதிர் பொறுக்குகிறார் சொன்ன உபமானம் தான் உபமேயதுக்கு போராமையாலே-உனக்கு அறியாமைக்கு உடலாக சொல்லா நின்றாய் நீ அறிகைக்காக வந்து நிற்கிறவன் அன்றோ நான் என்கிறார்-ஆறாம் பாசுரத்தில்) 6
எங்ஙனும் நாமிவர் வண்ணமெண்ணில் ஏது மறிகிலம், ஏந்திழையார் சங்கும் மனமும் நிறைவுமெல்லாம் தம்மன வாகப் புகுந்து,தாமும் பொங்கு கருங்கடல் பூவைகாயாப் போதவிழ் நீலம் புனைந்தமேகம், அங்ஙனம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-6
பதவுரை Show / Hide
நாம், Nam - நாம்; (- (ஆர்கொல் என்ன—;) (அட்டபுகரத்தேன் என்றார்–.))
இவர் வண்ணம், Ivar Vannam - இவருடைய படிகளை
எங்ஙன் எண்ணிலும், Ennan Ennilum - எவ்விதமாக அறியப் பார்த்தாலும்
ஏதும் அறிகிலம், Edum Arikilam - ஒன்றும் அறிய மாட்டுகின்றிலோம்:
ஏந்து இழையார், Endu Ilaiyar - ஆபரணம் பூண்டிருப்பவர்களான மாதர்களுடைய
சங்கும், Sangum - வளைகளும்
மனமும், Manamum - நெஞ்சும்
நிறைவும் எல்லாம், Niraivum Ellam - அடக்கமுமாகிய எல்லாமும்
தம்மன ஆக, Thammana Aka - தம்முடையதாம்படி
புகுந்து, Pukunthu - இவ்விடம் வந்து சேர்ந்து,
பொங்கு கருகடல், Ponku Karukatal - அலையெறிகின்ற கூரிய ஸமுத்ரமென்ன
பூவை, Puvai - பூவைப்பூவென்ன
காயா, Kaya - காயாம்பூவென்ன
போது அவிழ் நீலம், Pothu Avaizhi Nilam - காலத்திலே அலர்ந்த கருநெய்தற்பூவென்ன
புனைந்த மேகம், Punaindha Megam - அழகிய மேகமென்ன
அங்ஙனம் போன்ற இவர் தாம், Annanam Ponda Ivar Tham - இவற்றைப் போலேயிருக்கிற இவர்
1124பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவ் ஒப்பனை அழகைக் கொண்டு ஸ்ரீ பரமபததில் இருக்கிறேன் என்று கூச வேண்டா உனக்காக வந்து நிற்கிறவன் நான் என்கிறார்-ஏழாம் பாசுரத்தில்) 7
முழுசிவண் டாடிய தண்டுழாயின் மொய்ம்மலர்க் கண்ணியும், மேனியஞ்சாந் திழிசிய கோல மிருந்தவாறும் எங்ஙனஞ் சொல்லுகேன். ஓவிநல்லார், எழுதிய தாமரை யன்னகண்ணும் ஏந்தெழி லாகமும் தோளும்வாயும், அழகிய தாமிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-7
பதவுரை Show / Hide
வண்டு முழுசி ஆடிய, Vandu Muluci Atiya - வண்டுகள் (தேனிலே) முழுகிக் கூத்தாடா நிற்கப்பெற்ற (- (ஆர்கொல் என்ன—;) (அட்டபுகரத்தேன் என்றார்–.))
தண் துழாயின், Than Tulayin - குளிர்ந்த திருத்துழாயினால்
மொய் மலர் கண்ணி இருந்த ஆறும், Moy Malai Kanni Irundha Aarum - செறியத் தொடுக்கப்பட்ட புமாலை சாத்தியிருக்கும் படியையும்
மேனி அம் சாந்து இழுசிய கோலம் இருந்த ஆறும், Meeni Am Santhu Izhuchiya Kolam Irundha Aarum - திருமேனியிலே அழகிய சந்தனம் பூசப்பெற்ற அலங்கார மிருக்கும்படியையும்
எங்ஙனம் சொல்லுகேன், Engganam Sollugeen - என்னவென்று சொல்லுவேன்;
ஒவி நல்லார் எழுதிய, Ovi Nallaar Ezhudhiya - சித்ரமெழுதுவதில் வல்லவர்கள் எழுதினவை யென்னலாம் படியுள்ள
தாமரை அன்ன கண்ணும், Thamarai Anna Kannum - தாமரை யிதழ்போன்ற திருக்கண்களும்
ஏந்து எழில் ஆகமும், Ainthu Ezhil Aagamum - மிக்க அழகையுடையய திருமார்வும்
தோளும், Tholum - திருத்தோள்களும்
வாயும், Vaayum - திருப்பவளமும்
அழகியது ஆம் இவர், Azhagiyadhu Aam Ivar - அழகியவாக அமையப்பெற்ற இவர்
1125பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வ்யதிரேகத்தில் ஜீவிக்க அரிதாம்படி இரா நின்றார் இவர் ஆர் தான் என்ன- சொன்னபடி பொல்லாது-ஞாநீத் ஆத்ம மே மதம் -கேட்டு அறியாயோ என்றார் – உன்னை ஒழிய ஜீவியாதவன் காண் நான் என்கிறார் –எட்டாம் பாசுரத்தில்) 8
மேவியெப் பாலும்விண் ணோர்வணங்க வேத முரைப்பர்முந் நீர்மடந்தை தேவி,அப் பாலதிர் சங்கமிப்பால் சக்கரம் மற்றிவர் வண்ணமெண்ணில், காவியொப் பார்க்கட லேயுமொப்பார் கண்ணும் வடிவும் நெடியராய்,என் ஆவியொப் பாரிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-8
பதவுரை Show / Hide
விண்னோர், Vinnor - நித்யஸுரிகள் (- (ஆர்கொல் என்ன—;) (அட்டபுயகரத்தேன் என்றார்–.))
எப்பாலும் மேவி, Eppaalum Mevi - சுற்றிலும் சூழ்ந்துகொண்டு
வணங்க, Vananga - வணங்கப்பெற்று
வேதம் உரைப்பர், Vedham Uraippar - (இப்பெரியவர்) வேதங்களை உருச்சொல்லுகின்றார்;
முந்நீர் மடந்தை, Munnir Madanthai - கடலிற்பிறந்த கமலையானவள்;
தேவி, Devi - பட்டமஹிஷியாயிரா நின்றாள்
அதிர் சங்கம், Adhir Sangam - முழங்குகின்ற சங்கானது
அப்பால், Appaal - இடத்திருக்கையிலுள்ளது;
சக்கரம், Sakkaram - திருவாழியானது
இப்பால், Ippaal - வலத்திருக்கையிலுள்ளது;
மற்று, Mattru - இதற்குமேல்
இவர் வண்ணம் எண்ணில், Ivar Vannam Ennil - இவருடைய நிறத்தை ஆராய்ந்து சொல்லப்புகுந்தால்
காவி ஒப்பார், Kaavi Oppaar - கருநெய்தல் பூவின் நிறத்தை ஒத்திருக்கின்றார்;
கடலும் ஒப்பார், Kadalum Oppaar - ஸமுத்ரத்தையும் ஒத்திருக்கின்றார்;
கண்ணும் வடிவும் நெடியர்ஆய், Kannum Vadivum Nediyaraai - திருக்கண்களிலும் வடிவழகிலும் அளவிறந்தவராய்
என் ஆவி ஒப்பார் இவர், En Aavi Oppaar Ivar - என் உயிரை ஒத்திருக்கின்ற இவர்
1126பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவர் சொல்லுகிற வார்த்தை தான் பொல்லாது அல்ல இறே ஆகிலும் அவரையும் நம்மையும் பார்த்தவாறே அஞ்சா நின்றேன் அப் பெரியவனுக்கு இவ்வாற்றாமை உண்டாகக் கூடுமோ என்று அஞ்சா நின்றேன் ஒரு வசநம் கொண்டு ஈஸ்வரன் என்று அஞ்ச வேண்டா நீ அஞ்சாமைக்கு உன்னோடு சஜாதீயனாய் வந்து நிற்கிறவன் அன்றோ நான் என்கிறார்-ஒன்பதாம் பாசுரத்தில்) 9
தஞ்ச மிவர்க்கென் வளையும்நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு, வஞ்சி மருங்குல் நெருங்கநோக்கி வாய்திறந் தொன்று பணித்ததுண்டு, நஞ்ச முடைத்திவர் நோக்கும்நோக்கம் நானிவர் தம்மை யறியமாட்டேன் அஞ்சுவன் மற்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-9
பதவுரை Show / Hide
தஞ்சம், Thanjam - நிச்சயமாக (- (ஆயினும் தாமே) (அட்டபுயகரத்தேன் என்றார்–.))
என் வளையும், En Valaiyum - எனது கைவளைகளும்
இவர்க்கு நில்லா, Ivarkku Nillaa - இவரை நோக்கி (என் கையில்) நிற்கின்றன வில்லை;
சிந்தித்தேற்கு, Sindhitheerkku - நான் ஆராயுமளவில்
நெஞ்சமும், Nenjamum - எனது மனமும்
தம்மதே, Thammathe - இவருடையதேயாம்;
வஞ்சி மருங்குல், Vanjji Marungul - வஞ்சிக்கொடிபோன்ற(எனது) இடையானது
நெருங்க, Nerunga - துவளும்படியாக
நோக்கி, Nookki - கடாக்ஷித்து
வாய் திறந்து, Vaai Thirandhu - தனது திருப்பவளத்;தைத் திறந்து
ஒன்று பணித்தது உண்டு, Onru Paniththathu Undu - ஒருவார்த்தை சொன்னது முண்டு;
இவர் நோக்கும் நோக்கம், Ivar Nookkum Nokkama - இவர் பார்க்கிற பார்வையானது
நஞ்சம் உடைத்து, Nanjam Udaiththu - விஷங்கலந்ததுபோலே கொடிதாயிருக்கின்று;
நான் இவர் தம்மை அறிய மாட்டேன், Naan Ivar Thammai Ariya Maatten - நான் இவருடைய படியை அறிகின்றிலேன்;
இவர் ஆர் கொல் என்ன, Ivar Aar Kol Enna - இவரார் என்று கேட்கவும்
அஞ்சுவன், Anjuvan - பயப்படுகின்றேன்;
1127பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உருவு வெளிப்பாட்ட்டாலே அனுபவித்து பிறருக்கு இருந்து சொல்ல வேண்டாதே நித்ய அனுபவம் பண்ணிக் களிக்கலாம் தேசத்திலே புகப் பெறுவர் என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10
மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும் நீள்முடி மாலை வயிரமேகன், தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி அட்ட புயகரத் தாதிதன்னை, கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன் காமரு சீர்க்கலி கன்றி,குன்றா இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை யேத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே. –2-8-10
பதவுரை Show / Hide
தொண்டையர்கோன், Thondaiyarkon - தொண்டை மண்டலத்திலுள்ளவர்கட்குத் தலைவனான
மன்னவன், Mannavan - அரசனாலே
வணங்கும், Vanangum - வணங்கப்பட்ட
நீள்முடி மாலை, Neelmuti Maalai - நீண்ட திருவபிக்ஷேகத்தையுடைய ஸர்வேச்வரனாயும்,
வயிரமேகன் தன் வலி, Vayiramegan Than Vali - வயிரமேகனென்னும் பிரபுவின் பராக்கிரமும் கீர்த்தியும் மலிந்த
புகழ் சூழ்ந்த கச்சி, Pugazh Soozhntha Katchi - காஞ்சிபுரியிலே
அட்டபுயகரத்து, Attapuyakarathu - திருவட்டபுயகரத்திருப்பதியிலே எழுந்தருளியிருப்பவனாயுமுள்ள
ஆதிதன்னை, Aadhithannai - முதல்வனான எம்பெருமானைக்குறித்து
கன்னி நல் மாமதிள் மங்கை வேந்தன், Kanni Nal Maamathil Mangai Vendan - அழிவற்ற நல்ல பெரிய மதிள்களையுடைய திரு மங்கைக்குத் தலைவரும்
காமரு சீர், Kaamaru Seer - விரும்பத்தக்க குணங்களையுடையவருமான
கலிகன்றி, Kalikanri - கலியன்
குன்றா இன் இசையால்  சொன்ன, Kundraa In Isaiyaal Sonna - குறைவில்லாத இனிய இசையுடனே அருளிச்செய்த
செம் சொல் மாலை, Sem Sol Maalai - அழகிய இச்சொல் மாலையைக்கொண்டு
ஏத்த வல்லார்க்கு, Aetha Vallarukku - (எம்பெருமானைத்) துதிக்க வல்லவர்களுக்கு
இடம் வைகுந்தம், Idam Vaikundham - இருப்பிடம் வைகுண்டமாகும்.
1128பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாம்தாம் கர்மத்தாலே கிலேசப்படுகிற பிராணிகளை தீம்பிலே கை வளர்ந்த பிரஜையை காலிலும் கழுத்திலும் விலங்கிட்டு வைக்கும் பித்ராதிகளைப் போலே இவற்றுக்கு ஹித ரூபமாக உபசம்ஹாரத்தை பண்ணும் ருத்ரனுக்கு அந்தர்யாமியாயும் ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தைப் பண்ணியும் – பிரஜாபதிக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்துப் போருகிற ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு வாசஸ்தானம் ஆகிறது- அவன் ஆஸ்ரயிக்கிற ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம்-நல்ல நீர் நலம் சூழ்ந்து அழகியதாய் இருக்கிற ஸ்ரீ கச்சியில் – ஸ்ரீ திருக்கடல் மலை யாயிற்று படை வீடு-என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை யூறொலி நாற்றமும் தோற்றமுமாய், நல்லரன் நான்முகன் நாரண னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி, பல்லவன் வில்லவ னென்றுலகில் பல ராய்ப்பல வேந்தர் வணங்குகழற் பல்லவன், மல்லையர் கோன்பணிநத பர மேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-1
பதவுரை Show / Hide
சொல்லுவன் சொல் பொருள் அவைதான் ஆய், Solluvan Sol Porul Avaithaan Aayi - ஸாமாந்ய சப்தங்களும் நித்யசப்தமான வேதமும் இவற்றின் பொருளுமாகிய இவை, தானேயாய்
சுவை ஊறு ஒலி நாற்றமும்  தோற்றமும் ஆய், Suvai Ooru Oli Naatramum Thotramum Aayi - ரஸம் ஸ்பர்சம் சப்தம் கந்தம் ரூபம் ஆகிய பஞ்ச விஷயங்களும் தானேயாய்
நல்அரன் நாரணன் நான்முகனுக்கு, Nalaaran Naarayanan Naanmuganukku - சிவனுக்கு தன்மையாலும் தானான பிரமனுக்கு அந்தர்யாமியாயிருந்து அந்தர்யாமியாயிருந்து கொண்டும் கொண்டும்லோகாரியங்களை நடத்துமவனான எம்பெருமானுக்கு
இடம், Idam - இருப்பிடம் (ஏதுவென்றால்):
தடம் சூழ்ந்து அழகாய் கச்சி, Thadam Soozhnthu Azhagai Katchi - தடாகங்கள் சூழப்பெற்று அழகு பொலிந்த காஞ்சீபுரியிலே,
உலகில், Ulagil - இவ்வுலகத்திலே
பல்லவன் வில்லவன் என்று பலர் ஆய் பலவேந்தர், Pallavan Villavan Endru Paler Aayi Palavendrar - பல்லவனென்றும் வில்லவனென்றும் பல பெயர்களாலே சொல்லக்கூடிய பல அரசர்களாலே
வணங்கு கழல், Vanangu Kazhal - வணங்கப்பட்ட பாதத்தையுடையவனும்
மல்லையர்கோன், Mallaiyarkon - மல்லாபுரியென்கிற திருக்கடல் மல்லையிலுள்ளார்க்குத் தலைவனுமான
பல்லவன், Pallavan - பல்லவராஜன்
பணிந்த, Panintha - கைகங்கரியம் செய்யப்பெற்ற
பரமேச்சுர விண்ணகரம் அது, Paramechura Vinnakaram Adhu - பரமேச்வர விண்ணகரமென்கிற திவ்ய தேசமாம்
1129பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் ராவண வதம் பண்ணினதோடு-இவன் சத்ரு வதம் பண்ணினதோடு வாசி அற்று இருக்கிறது ஆயிற்று இவருடைய ஆதரம்- தான் இல்லை யானாலும் தன்னுடைய வீர ஸ்ரீ நிற்கும்படி வாழ்ந்த பல்லவன் -என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2
கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுடரும் நில னும்மலை யும்,தன்னுந்தித் தார்மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மாமதிள் சூழ்ந்தழ காயகச்சி, தேர்மன்னு தென்னவ னைமுனையில் செரு வில்திறல் வாட்டிய திண்சிலையோன், பார்மன்னு பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-2
பதவுரை Show / Hide
கார்மன்னு நீள் விசும்பும், Karmannu Neel Vichumbum - மேகங்கள் பொருந்திய பெரிய ஆகாசமென்ன (- (ஆகிய இவையெல்லாம்) (பரமேச்சுர விண்ணகரம் அதுவே-.))
கடலும், Kadalum - ஸமுத்திரங்களென்ன
சுடரும், Sudarum - சந்திரன் சூரியன் முதலிய சுடர்ப்பொருள்களென்ன
நிலனும், Nilanum - பூமியென்ன
மலையும், Malaiyum - குலபர்வதங்களென்ன
தன் உந்தி தார்மன்னு, Than Undhi Tharmannu - தனது திருநாபிக் கமலத்தில் நின்றும் உண்டாகப்பெற்ற
தாமரை கண்ணன், Thamarai Kannan - புண்டரிகாக்ஷனுக்கு
இடம், Idam - இருப்பிடமாவது
தடம் மா மதிள் சூழ்ந்து, Thadam Maa Mathil Soozhndhu - தடாகங்களாலும் பெரிய மதிள்களாலும் சூழப்பட்டு
அழகாக கச்சி, Azhagaga Kachchi - அழகான காஞ்சீபுரியிலே,
முனையில், Munaivil - போர்க்களத்திலே
தேர்மன்னு தென்னவனை, Thermannu Thennavanai - மஹாரதனான பாண்டிய ராஜனுடைய
செரு வில் திறல் வாட்டிய, Seru Vil Thiral Vaattiya - சண்டை செய்யும் வில்லின் வலியைப் பங்கப்படுத்தின
திண் சிலையோன், Thin Silaiyon - வலிய வில்லையுடையனாய்
பார்மன்னு, Paarmannu - இப்புமியில் நெடுங்காலம் வாழ்ந்திருந்த
பல்லவர்கோன், Pallavarkon - பல்லவராஜன்
பணிந்த, Panintha - கைங்கரியம் செய்யப்பெற்ற
1130பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் மதிக்கும் படியான ஆண் பிள்ளைத்தனம் இறே அவரதும் – கட மா களி யானை வல்லான் -என்றும் ஆடல் மா வலவன் -என்றும் மருவலர் தம்முடல் துணிய வாள் வீசும் பரகாலன் -என்றும் துறை தோறும் தலையாய் இருக்கிற ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் இறே மதிக்கிறார் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3
உரந்தரு மெல்லணைப் பள்ளி கொண்டான் ஒருகால் முன்னம் மாவுரு வாய்க்கடலுள், வரந்தரும் மாமணி வண்ணனிடம் மணிமா டங்கள் சூழ்ந்தழ காயகச்சி, நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல்நெடு வாயி லுகச்செரு வில்முனநாள், பரந்தவன் பல்லவர் கோன்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-3
பதவுரை Show / Hide
முனம் ஒருகால், Munaam Orukaal - முன்பொருகால் (- (பரமேச்சுர விண்ணகரம் அதுவே-.))
மா உரு ஆய், Maa Uru Aay - விலக்ஷணமான வடிவுடையனாய்
கடலுள், Kadalul - திருப்பாற்கடலிலே
உரம் தரு மெல் அணை, Uram Tharu Mel Anai - வலிமிக்க மிருதுவான சேஷசயனத்திலே
பள்ளி கொண்டான், Palli Kondaaan - திருக்கண்வளர்ந்தவனும்
வரம் தரும், Varam Tharum - வரதனென்று திருநாமமுடையவனும்
மா மணிவண்ணன், Maa Manivannan - நீலமணிபோன்ற நிறத்தனுமான பெருமானுக்கு
இடம், Idam - இடமாவது,
மணி மாடங்கள் சூழ்ந்து, Mani Maatangal Soozhndu - ரத்நமயமான மாடங்களாலே சூழப்பட்டு அழகு பொலிந்த
அழகாய கச்சி, Azhagaaya Katchi - கச்சிப்பதியிலே,
முனநாள், Munanaal - முற்காலத்தில்,
மண்ணையில் நிரந்தவர், Mannaivil Niranthavar - மண்ணையென்னும் நகரத்திலுள்ள சத்ரு ராஜாக்களானவாகள்
புண் நுகரி வேல் நெடு, Pun Nukhari Veel Nedu - மாம்ஸங்களைக் கவர்கின்ற வேலாயுதத்தின் கொடிய வாயிலே
வாயில் உக, Vaayil Uga - பட்டு முடியும்படியாக
செருவில், Seruvil - போர்க்களத்திலே
பரந்தவன், Parandhavan - வியாபித்தவனான
பல்லவர்கோன் பணிந்த, Pallavarkon Panintha - பல்லவராஜன் பணிவிடை செய்யப்பெற்ற
1131பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ருக்களின் உடைய செறிந்த குழாமானது சிதறி ஓட-முனிந்து சீறி முன்பு ஒருகால் கையிலே வில் வளைத்தவன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4
அண்டமு மெண்டிசை யும்நிலனும் அலைநீரொடு வானெரி கால்முதலா உண்டவன், எந்தைபி ரானதி டமொளி மாடங்கள் சூந்தழ காயகச்சி, விண்டவ ரிண்டைக்கு ழாமுடனே விரைந் தாரிரி யச்செரு வில்முனைந்து, பண்டொரு கால்வளைத் தான்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-4
பதவுரை Show / Hide
அண்டமும், Andamum - அண்டங்களையும் (- (ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய உச்சி-.) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.))
எண் திசையும், En Thisayum - எட்டுத்திசைகளையும்
நிலனும், Nilanum - பூமியையும்
அலை நீரொடு, Alai Neerodu - கடல்களையும்
வான், Vaan - ஆகாசத்தையும்
எரி, Eri - அக்நியையும்
கால், Kaal - காற்றையும்
முதலா, Muthala - இவை முதலான மற்றும் பல பொருள்களையும்
உண்டவன், Undavan - (பிரளயம் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்து நோக்கின
எந்தைபிரானது, Endhaipiraanathu - எம்பெருமானுக்கு
இடம், Idam - இடமாவது,
பண்டு ஒருகால், Pandhu Orukaal - முன்னொரு காலத்தில்
செருவில், Seruvil - போர்க்களத்திலே
விரைந்தார், Viraindhaar - சண்டை செய்ய விரைந்து வந்தவர்களான
விண்டவர், Vintavar - பகைவர்கள்
இண்டை, Intai - நெருங்கின (தங்களது)
குழாமுடனே, Kuzhamudane - கூட்டங்களோடே
இரிய, Iriya - சிதறியோடும்படி
முனிந்து, Muninthu - சீறி
வளைத்தான், Valaiththan - வில்லைவளைத்தவனான பல்லவராஜன்
பணிந்த, Panintha - கைங்கரியம் செய்யப்பெற்ற
1132பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாக லோகத்தை வென்று சர்ப்பத்தை த்வஜமாக எடுத்தானாக சொல்லக் கடவது – பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
தூம்புடைத் திண்கைவன் தாள்களிற்றின் துயர் தீர்த்தர வம்வெருவ,முனநாள் பூம்புனல் பொய்கைபுக் கானவ னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி, தேம்பொழில் குன்றெயில் தென்னவனைத் திசைப் பச்செரு மேல்வியந் தன்றுசென்ற, பாம்புடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-5
பதவுரை Show / Hide
முன நாள், Muna Naal - முன்னொரு காலத்தில் (- (தடம் சூழ்ந்து அழகாய கச்சி.) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.))
தாம்பு உடை திண்கை வன் தாள், Thambu Udai Thin Kai Van Thaal - துளையையுடைய துதிக்கையையும் வலியுள்ள காலையுமுடைய
களிற்றின், Kalittrin - கஜேந்திராழ்வானது
துயர், Thuyar - துன்பத்தை
தீர்த்து, Theerthu - போக்கினவனாயும்,
பும் புனல் பொய்கை, Pum Punal Poigai - அழகிய நீரையுடைய பொய்கையிலே
அரவம், Aravam - காளிய நாகம்
வெருவ, Veruva - அஞ்சும்படியாக
புக்கான் அவனுக்கு, Pukkan Avanukku - பாய்ந்தவனாயுமிருக்கிற எம்பெருமானுக்கு
இடம், Idam - இருப்பிடமாவது,
தேம் பொழில் குன்று எயில் தென்னவனை, Them Pozhil Kunru Eyl Thennavanai - தேன் நிறைந்த சோலைகளையும் மலைபோன்ற மதிள்களையுடைய பாண்டிய நாட்டின் அரசன்
திசைப்ப, Thisaippa - அறிவு கலங்கும்படி
அன்று, Andru - முன்பு
செரு மேல், Seru Mel - போர்க்களத்திலே
வியந்து சென்ற, Viyandhu Senra - விருப்பத்துடனே போய்ச் சேர்ந்தவனும்
பாம்பு உடை, Paambu Udai - நாகத்தைக் கொடியாகவுடையவனுமான
பல்லவர் கோன், Pallavar Kon - பல்லவராஜன்
பணிந்த, Panintha - கிஞ்சித்கரிக்கப்பெற்ற
1133பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஹிரண்யன் உடலுக்கு வளையாத திரு உகிரை ஆயுதமாக உடைய நரசிம்ஹமாய் – பெரு மிடுக்கனான ஹிரண்யன் உடைய மார்வை யுத்தத்திலே புண் படும்படி -போழ்ந்த புனிதன் இடம் – பண்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6
திண்படைக் கோளரி யினுரு வாய்த் திறலோனக லம்செரு வில்முனநாள், புண்படப் போழ்ந்த பிரானதிடம் பொரு மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி, வெண்குடை நீழல்செங் கோல்நடப் பவிடை வெல்கொடி வேற்படை முன்னுயர்த்த, பண்புடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-6
பதவுரை Show / Hide
முனநாள், Munanaal - முன்னொரு காலத்திலே (- (பல்லவர் கோன்–:) (பணிந்த-:) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.))
திண் படை, Thin Padai - கூர்மையான (நகங்களாகிற) ஆயதங்களையுடைய
கோள் அரியின் உரு ஆய், Kol Ariyin Uru Aai - வலிமிக்க நரஸிம்ஹ மூர்த்தியாய்த் தோன்றி
செருவில், Seruvil - போர்க்களத்தில்
திறலோன் அகலம், Thiralon Akalam - மஹாபலசாலியான இரணியனது மார்வை
புண் பட போழ்ந்த, Pun Pada Pozhntha - புண்படும்படி கிழித்தெறிந்த
பிரானது, Piranathu - எம்பெருமானுக்கு
இடம், Idam - இருப்பிடமாவது,
பொரு மாடங்கள் சூழ்ந்து, Poru Madangal Soozhndhu - ஒன்றோடொன்று சேர்ந்திருக்கிற மாடங்கள் நிறைந்திருப்பதனால்
அழகாய, Azhagaya - அழகுபொலிந்திருக்கிற
கச்சி, Kacchi - கச்சிப்பதியிலே,
வெண் குடை நீழல், Ven Kudai Neezhal - வெண் கொற்றக்குடையின் நிழலில் (வீற்றிருந்துகொண்டு)
செங்கோல் நடப்ப, Sengol Nadappa - தனது கட்டளை விலைச்செல்லும்;படி (அரசாண்டவனும்)
விடம் வெல் கொடி, Vidam Vel Kodi - பாம்பாகிற வெற்றிக்கொடியையும்
வேல் படை, Vel Padai - வேல் என்னு மாயுதத்தையும்
முன் உயர்த்த, Mun Uyarndha - சேனைகளின்முன்னே உயர எடுத்தவனும்
பண்பு உடை, Panbu Udai - நீதி தவறாதவனுமான
1134பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மகாபலி உடைய யஞ்ஞ வாடத்திலே இரப்பிலே தகண் ஏறிய வடிவை உடையவனாய் முன்பு ஒரு நாளிலே கையிலே நீர் விழுந்த போதே பரப்பை உடைத்தான பூமியைக் கைக் கொண்டு அளந்தவனுக்கு இடந்தான் ஸ்ரீ பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7
இலகிய நீண்முடி மாவலி தன்பெரு வேள்வியில் மாணுரு வாய்முனநாள், சலமொடு மாநிலங் கொண்டவ னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி, உலகுடை மன்னவன் தென்னவனைக் கன்னி மாமதிள் சூழ்கரு வூர்வெருவ, பலபடை சாயவென் றான்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-7
பதவுரை Show / Hide
முன நாள், Muna Naal - முன்னொருகால், (- (தடம் சூழ்ந்து அழகாய கச்சி–.) (பணிந்த–;) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.))
இலகிய நீள் முடி, Ilakiyai Neel Mudi - விளங்காநின்ற நீண்ட கிரிடத்தையுடைய
மாவலி தன், Mavali Than - மஹாபலியினது
பெரு வேள்வியில், Peru Velviyil - பெரிய யாகத்திலே
மாண் உரு ஆய், Maan Uru Aai - வாமந ரூபியாய் (சென்று)
சலமொடு, Salamodu - கபடமான வகையாலே
மா நிலம் கொண்டவனுக்கு, Maa Nilam Konda Vanukku - உலகத்தையெல்லாம் ஆக்ரமித்துக்கொண்ட பெருமானுக்கு
இடம், Idam - இருப்பிடமாவது
கன்னி மா மதிள் சூழ்  கருவூர்வெருவ, Kanni Maa Mathil Soozh Karuvurveruva - அழிவில்லாத பெரிய மதிள்களாலே சூழப்பட்ட கருவூர்என்னும் நகரம் நிலைகலங்கவும்
பல படை சாய, Bala Padai Saaya - சதுரங்க ஸேனை முடியும்படியாகவும்,
உலகு உடை மன்னவன் தென்னவனை  வென்றான், Ulaku Udai Mannavan Thennavanai Vendraan - உலகங்களை அடிமையாகவுடைய அரசனாயிருந்த பாண்டியனை வென்ற பல்வவன்
1135பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சக்கரவர்த்தி திருமகனாய் பூசல் என்றால் அஞ்சக் கடவ குரங்குகளைப் படையாகக் கொண்டு நீரிலே ஆழக் கடவ மலையாலே கடலை அடைத்தான் – எனக்கு ஜனகனாய் உபகாரனானவனுக்கு இடம் – அழகிய மாடங்களாலே சூழப் பட்ட அழகிய பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
குடைத்திறல் மன்னவ னாயொருகால் குரங் கைப்படை யா,மலை யால்கடலை அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி, விடைத்திறல் வில்லவன் நென்மெலியில் வெருவச்செரு வேல்வலங் கைப்பிடித்த, படைத்திறல் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-8
பதவுரை Show / Hide
ஒரு கால், Oru Kaal - முன்னொரு காலத்தில், (- (அணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி–;) (பல்லவர் கோன்–;) (பணிந்த–;) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.))
குடை திறல் மன்னவன் ஆய், Kudai Thiral Mannavan Aayi - வெண் கொற்றக்குடையையும் பெரு மிடுக்கையுமுடைய சக்ரவர்த்தி திருமகனாய் (அவதரித்து)
குரங்கை, Kurangai - வாநர வீரர்களை
படையா, Padaiya - ஸேனையாகக்கொண்டு
மலையால், Malaiyaal - மலைகளினால்
கடலை, Kadalai - தெற்கு ஸமுத்ரத்தை
அடைத்தவன், Adaiththavan - அணைகட்டி யடைத்தவனான
எந்தை பிரானது, Endai Piraanathu - எம்பெருமானுக்கு
இடம், Idam - இருப்பிடமாவது,
நென் மெலியில், Nen Meliyil - நென்மெலி யென்னும் நகரத்தில்
விடை திறல், Vidai Thiral - காளையின் வலிவுபோன்ற வலிவையுடையனான
வில்லவன், Villavan - வில்லவனென்கிற அரசன்
வெருவ, Veruva - அஞ்சி நடுங்கும்படி
செரு வேல், Seru Vel - யுத்தத்திற்குக் கருவியான வேற்படையை
வலம் கை பிடித்த, Valam Kai Piditha - வலக்கையிலே பிடித்தவனும்
படை திறல், Padai Thiral - ஆயதங்களை ஆளத்தக்க மிடுக்கை யுடையனுமான
1136பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நப்பின்னைப் பிராட்டிக்காக முன்பு ஒருநாள் யுத்தத்திலே உருமு போலேயாய் உருமும் இடி . நெஞ்சிலே க்ரித்ரிமத்தை உடைத்தான –பெரிய ருஷபங்களை அடர்த்தவனுக்கு இடம் பரமேச்சுர விண்ணகரம் கடிய வாயை உடைய-கன்றப் பறை கறக்க -என்று திருவரையிலே கோத்துக் கட்டின பறையோபாதியாக தோற்றுகிறதாயிற்று இவர்க்கு-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9
பிறையுடை வாணுதல் பின்னை திறத்து முன்னொரு கால்செரு வில்லுருமின், மறையுடை மால்விடை யேழடர்த்தாற் கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி, கறையுடை வாள்மற மன்னர்க்கெடக் கடல் போல முழங்கும் குரல்கடுவாய், பறையுடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-9
பதவுரை Show / Hide
முன்னே ஒருகால், Munnai Orukaal - முன்னொருகால் (- (தடம் சூழ்ந்து அழகாய கச்சி) (பல்லவர் கோன்–;) (பணிந்த–;) (பரமேச்சுர விண்ணகரம் அதுவே–.))
பிறைவாள் உடை நுதல் பின்னைதிறத்து, Piravaal Udai Nuthal Pinnai Thiraththu - சந்திர கலைபோன்று ஒளியையுடைத்தான  நெற்றியையுடையளான நப்பின்னைக்காக
உருமின், Urumin - இடிபோன்ற கரிஜனையையுடையவைகளாய்
மறை உடை, Marai Udai - எதிர்த்து வருகையை யுடையவைகளான
மால் விடை ஏழ், Maal Vidai Ezh - பெரிய ஏழு ரிஷபங்களை
செருவில், Seruvil - போர்க்களத்தில்
அடர்த்தாற்கு, Adarthaarku - வலியடக்கின பெருமானுக்கு
இடம், Idam - இருப்பிடமாவது
கறை உடை வாள், Karai Udai Vaal - ரத்தக்கறை மாறாத வாளை யுடையவர்களும்
மறம், Maram - த்வேஷமுடையவர்களுமான
மன்னர், Mannar - எதிரரசர்க்ள
கெட, Keda - முடிந்துபோம்படியக
கடல்போல் முழங்கும் குரல், Kadalpol Muzhangum Kural - கடல்போலே கோஷம் செய்கிற குரலையுடைய
கடுவாய்ப் பறை உடை, Kadavaip Parai Udai - கடுவாய்ப்பறையை உடையவனான
1137பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பகவத் குணங்கள் நெருங்கத் தொடுத்த செவ்விய தமிழ்த் தொடை வல்லார் பெரிய பிராட்டியார் உடைய கடாஷத்தாலே லோகத்திலே மகா ரதராய் கடல் சூழ்ந்த பூமியை அடைய ஆண்டு – உஜ்ஜ்வலர் ஆவார்கள்-இந்த ஐஸ்வர்யம் அடைய மலடாய் போகாமே இவரைப் போலே பாகவத சேஷமாக்கப் பெறுவார் என்கிறார் பத்தாம் பாசுரத்தில் ஆக இத்திரு மொழியால் சர்வேஸ்வரன் விரும்பும் நிலம் ஆகையாலே இத்தேசம் ஆஸ்ரயணீயம் என்றும் அது தான் சர்வ சமாஸ்ரயணீயம் என்றும் சொல்லிற்று ஆயிற்று – அதாகிறது சமதமாத்யுபேதர்க்கு இறே ஆஸ்ரயணீ யத்தில் அதிகாரம் உள்ளது – அவை இல்லாதவனும் தம் தானாய் ஆஸ்ரயிக்கும் படியான தேசம் இறே) 10
பார்மன்னு தொல்புகழ்ப் பல்லவர்கோன் பணிந் தபர மேச்சுர விண்ணகர்மேல், கார்மன்னு நீள்வயல் மங்கையர் தந்தலை வன்கலி கன்றிகுன் றாதுரைத்த, சீர்மன்னு செந்தமிழ் மாலைவல்லார்த் திரு மாமகள் தன்னரு ளால்,உலகில் தேர்மன்ன ராயொலி மாகடல்சூழ் செழு நீருல காண்டு திகழ்வர்களே. –2-9-10
பதவுரை Show / Hide
பார்மன்னு தொல் புகழ், Paarmannu Thol Pugazh - இப்பூமியிலே நிலைத்து நின்ற பெரும்புகழையுடைய
பல்லவர்கோன், Pallavarkon - பல்லவராஜன்
பணிந்த, Panintha - கைங்கரியங்கள் செய்யப்பெற்ற
பரமேச்சுரவிண்ணகரிமேல், Paramechuravinnagarimeel - பரமேச்சுரவிண்ணகர மென்னும் திருப்பதி விஷயமாக
கார்மன்னு நீள்வயல், Kaarmannu Neelvayal - சினைகொண்ட பெரிய கழனிகளையுடைய
மங்கையர்தம்தலைவன், Mangaiyarthamthalaivan - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான
கலிகன்றி, Kalikanri - கலியன்
குன்றாது, Kunraathu - இலக்கணக் குறையொன்றுமின்றி
உரைத்த, Uraitha - அருளிச்செய்த
சீர்மன்னு செம் தமிழ் மாலை, Seermannu Sem Tamil Maalai - அழகு பொருந்திய செந்தமிழினாகிய இப்பாமாலைகள்
வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள்
திரு மா மகள் தன் அருளால், Thiru Maa Magal Than Arulaal - பெரிய பிராட்டியாருடைய கிருபையினால்
உலகில், Ulagil - இவ்வுலகத்திலே
தேர்மன்னர் ஆய், Thermannar Aay - தேரை நடத்தவல்ல அரசர்களாகி
ஒலி மா கடல் சூழ், Oli Maa Kadal Soozh - ஆரவாரிக்கின்ற பெரிய கடலாலே சூழப்பட்ட
செழு நீர்உலகு, Sezhu Neerulagu - செழிப்பான நீர்மையையுடைய உலகையெல்லாம்
ஆண்டு, Aandu - ஆண்டுகொண்டு
திகழ்வர்கள், Thigalvargal - விளங்குவார்கள்.
1138பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆபத் சகன் -என்கிறது – திரு வயிற்றிலே எடுத்து வைத்து பிரளயத்துக்கு அஞ்சவும் அறியாதே ஓர் ஆலின் இலை மேல் அது தன்னிலும் ஒரு பவனான இளம் தளிரிலே யோக நித்தரை கொண்டு அருளின ஆதார ஆதேய பாவம் தன் புத்த்ய அதீநமாம் படி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை ஸ்ரீ திருக் கோவலூரிலே நான் காணப் பெற்றேன் -என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
மஞ்சாடு வரையேழும் கடல்க ளேழும் வானகமும் மண்ணகமும் மற்று மெல்லாம், எஞ்சாமல் வயிற்றடக்கி யாலின் மேலோர் இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் றன்னை, துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூயநான் மறையாளர் சோமுச் செய்ய, செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. –2-10-1
பதவுரை Show / Hide
மஞ்சு ஆடு வரை ஏழும், Manju Aadu Varai Ezhum - மேகங்கள் உலாவப்பெற்ற குலபர்வதங்கள் ஏழும்
கடல்கள் ஏழும், Kadalgal Ezham - ஸமுத்ரங்கள் ஏழும்
வானகமும், Vanagakum - ஸ்வர்க்கம் முதலிய மேலுலகங்களும்
மண்ணகமும், Mannakum - மண்ணுலகமும்
மற்றும் எல்லாம், Mattrum Ellam - மற்றுமுள்ள எல்லாப்பொருள்களும்
எஞ்சாமல், Enjamal - அழிந்து போகாதபடி
வயிறு அடக்கி, Vayiru Adakki - (இவற்றையெல்லாம்) திருவயிற்றிலே எடுத்து வைத்து
ஓர்ஆலின் இள தளிரின், Oraalin Ila Thalirin - ஒப்பற்ற ஆலமரத்தினுடைய பால்மாறாத இளந்தளிரிலே
மேல் கண் வளர்ந்த, Mel Kan Valarntha - துயில் கொண்ட
ஈசன் தன்னை, Eesan Thannai - ஸ்வாமியை
வளம் நீர், Valam Neer - மணிகள் முத்துக்கள் முதலியவற்றைக் கொழிக்கின்ற நீரானது
துஞ்சா, Thunja - ஒருகாலும் மாறாமல்
சுரக்கும், Surakkum - பெருகி வரப்பெற்ற
பெண்ணை, Pennai - பெண்ணையாற்றினுடைய
தென்பால், Thenpal - தென்கரையிலே,
தாய, Thaaya - ஒருபலனையும் விரும்பாமையாகிற மனத்தாய்மையை யுடையவர்களாய்
நால் மறை ஆளர், Naal Marai Aalar - நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்தவர்களான வைதிகோத்தமர்கள்
சோமு செய்ய, Somu Seyya - ஸோமயாகங்களைப் பண்ண (அத்தாலே)
செம் சாலி, Sem Saali - செந்நெற்பயிர்களானவை
விளை வயலுள், Vilai Vayalul - விளைநிலமான வயல்களிலே
திகழ்ந்து தோன்றும், Thigazhndhu Thonrum - செழித்து விளங்கப்பெற்ற
திருக்கோவலூர்அதனுள், Thirukkovalurathanul - திருக்கோவலூரென்னும் திருப்பதியிலே
நான் கண்டேன், Naan Kandein - நான் ஸேவிக்கப்பெற்றேன்.
1139பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனை ஆஸ்ரயித்து நான்மறைகளைக் கொண்டு-ஆத்மேத்யேஸ்து க்ருஹணீயாத் -என்றும் ஆத்மேதிதிது பகச்சந்தி க்ராஹயந்திச -என்கிறபடியே அவனை பிரகாரியாகவும் தங்களை பிரகாரமாகவும் காலங்கள் தோறும் ஒருப்படிப்பட அனுசந்திதுச் சொல்லுகிற அத ப்ராஹ்மியான ஸ்ரீ லஷ்மி மாறாமே செல்லுமாயிற்று -ஸ்ரீ பகவத் உபாசன ரூப சம்பத்- என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2
கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம் தீபம்கொண் டமரர்த்தொழப் பணங்கொள்பாம்பில், சந்தணிமென் முலைமலராள் தரணி மங்கை தாமிருவ ரடிவருடும் தன்மை யானை, வந்தனைசெய்து இசையேழா றங்கம் ஐந்து வளர்வேள்வி நான்மறைகள் மூன்று தீயும், சிந்தனைசெய் திருபொழுது மொன்றும் செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன்நானே. –2-10-2
பதவுரை Show / Hide
அமரர், Amarar - பிரமன் முதலான தேவர்கள் (- (திருக்கோவலூரதனுள்—;) (நான் கண்டேன்–.))
கொந்து அலர்ந்த நறுதுழாய், Kondhu Alarntha Naruthuzhai - கொத்துக்கொத்தாக மலர்கின்ற மணம்மிக்க திருத்துழாய்    மலர்களையும்
சாந்தம், Shantham - சந்தனத்தையும்
தாபம், Thabam - தாபத்தையும்
தீபம், Deepam - தீபத்தையும்
கொண்டு, Kondhu - கையிலேந்திக்கொண்டு
தொழ, Thozha - ஆச்ரயிக்க
பணம் கொள் பாம்பில், Panam Kol Pambhil - (ஆனந்தத்தினால்) படமெடுத்திருக்கிற திருவனந்தாழ்வான் மேலே.
சந்து அணி மெல் முலை மலரான, Sandhu Ani Mel Mulai Malaraana - சந்தனத்தாலே அலங்கரிக்கப்பட்ட மெல்லியமுலைகளயுடைய பெரிய பிராட்டியும்
தரணி மங்கை, Tharani Mangai - பூமிப்பிராட்டியும்  ஆகிற
இருவர் தாம், Irivar Thaam - இரண்டு தேவிமார்களும்
அடி வருடும் தன்மையானை, Adi Varudum Thanmaiyana - திருவடிகளைப் பிடிக்கும்படியாகவுள்ள எம்பெருமானை,
ஏழ் இசை, Ezhu Isai - ஸப்தஸ்வரங்களையும்
ஆறு அங்கம், Aaru Angam - ஆறு அங்கங்களையும்
ஐந்து வளர் வேள்வி, Ainthu Valar Velvi - பஞ்ச மஹா யஜ்ளுங்களையும்
மூன்று தீயும், Moondru Theeyum - மூன்று அக்நிகளையுங்கொண்டு
வந்தனை செய்து, Vandhanai Seidhu - எம்பெருமானை யடிபணிந்து
நால் மறைகள், Naal Maraihal - நான்கு வேதங்களை
இருபொழுதும், Irupozhudum - இரவும் பகலும்
சிந்தனை செய்து, Sindhanai Seythu - அநுஸந்தித்துக்கொண்டு
ஒன்றும், Ondrum - (வைதிகரிகள்) பொருந்தி வாழ்வதற்கிடமான
செல்வம், Selvam - அழகு பொலிந்த
1140பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கையிலே திரு ஆழியையும் விட அறியாதே-ஆகாச அவகாசத்தை இடம் அடைத்துக் கொண்டு தோற்றி – ஏவர வெளியடைய-அதினுடைய புண் ஆறும்படியாக திருக் கையாலே ஸ்பரசித்து திருப் பரியட்டத் தலையாலே ஒற்றிப் பண்ணின சிசிரோ உபசாரங்களை நினைக்கிறது-மூன்றாம் பாசுரத்தில்) 3
கொழுந்தலரு மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக் கோள்முதலை வாளெயிற்றுக் கொண்டற்கெள்கி, அழுந்தியமா களிற்றினுக்கன் றாழி யேந்தி அந்தரமே வரத்தோன்றி யருள்செய் தானை, எழுந்தமலர்க் கருநீல மிருந்தில் காட்ட இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன்காட்ட, செழுந்தடநீர்க் கமலம்தீ விகைபோல் காட்டும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. –2-10-3
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்பொருகால். (- (மலர்களுண்டாகப் பெற்றதனால்) (திருக்கோவலூரதனுள் , நான் கண்டேன்–.))
கொழுந்து, Kozhundu - தளிர்களையும்
அலரும் மலர், Alarum Malar - விகஸிக்கின்ற புஷ்பங்களையுமுடைய
சோலை குழாம் கொள் பொய்கை, Solai Kuzham Kol Poigai - சோலைகளின் கூட்டங்கள் சூழ்ந்த தடாகத்திலே
கோள் முதலை, Kol Muthalai - வலிவுள்ள முதலை
வாள் எயிறு, Vaal Eiyiru - (தனது) வாள் போன்ற பற்களினால்
கொண்டற்கு, Kondarthu - காலைக் கவ்வினதற்கு
எள்கி, Elgi - மெலிந்து
அழுந்திய, Azhundhiya - வருந்தின
மா களிற்றினுக்கு, Maa Kalirittinukku - கஜேந்திராழ்வானுக்காக
ஆழி ஏந்தி, Aazhi Aendhi - திருவாழியை எடுத்துக்கொண்டு
அந்தரம் மேவர தோன்றி, Andharam Mevara Thondri - ஆகாசம் இடமடையும்படி வந்து தோன்றி
அருள் செய்தானை, Arul Seithanai - (அவ்வானைக்குக்) கிருபை பண்ணின பெருமானை.
எழுந்த, Ezhundha - (நீரில்நின்றும்) மேற்கிளம்பின
கரு நீலம் மலர், Karun Neelam Malar - கருநெய்தற் பூவானது
இருந்தில் காட்ட, Irundhil Kaata - கரிபோல் விளங்கவும்
இரு புன்னை, Iru Punnai - பெரிய புன்னை மரங்களானவை
அரும்பி, Arumbi - அரும்புகளுண்டாகப் பெற்றதனால்
முத்து, Muthu - முத்துக்களையும்
செம்பொன், Sembon - பசும்பொன்னையும்
காட்ட, Kaata - தோற்றுவிக்கவும்,
செழுநீர்தடம் கமலம், Sezhuneerthadam Kamalam - செழித்த நீரையுடைய தடாகங்களில் தாமரைகள்
தீவிகை போல் காட்டும், Theevigai Pol Kaattum - விளக்குப்போலே விளங்கவும் பெற்ற
1141பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ விஷயத்தில் பிரேமத்தால் கண்ண நீர் அரும்பி -அது தான் கண்ணை விட்டு சோர -பிரேம பரவசராய் இருக்கும் சேஷ பூதருக்கு நிரதிசய போக்யனானவனை–முதல் ஆழ்வார் விஷயம் ஆயனே கரும்பு-மதுபான மத்தமாக பாடும் பாட்டைக் கேட்டு -அத்தாலே –நீர் பாய்ந்தாப் போலே இருக்கிற இனிய கரும்பானது ஒரு கண் தேறி வளரா நிற்கும் ஆயிற்று-என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4
தாங்கரும்போர் மாலிபடப் பறவை யூர்ந்து தராதலத்தோர் குறைமுடித்த தன்மையானை, ஆங்கரும்பிக் கண்ணீர்சோர்ந் தன்பு கூரும் அடியவர்கட் காரமுத மானான் றன்னை, கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக் குழாவரிவண் டிசைபாடும் பாடல் கேட்டு தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. –2-10-4
பதவுரை Show / Hide
தாங்க அரு போர், Thaanga Aru Por - ஒருவராலும் தாங்க முடியாத (கொடிய) யுத்தம் நடந்தவல்ல (- (அத்தாலே நீர்பாய்ந்தாற் போலேயாம்) (திருக்கோவலூரதனுள், நான் கண்டேன்–.))
மாலி, Maali - மாலியென்னுமரக்கன்
பட, Pada - முடியும்படி
பறவை, Paravai - கருடனை
ஊர்ந்து, Oorndhu - (போர்க்களத்தில்) நடத்தி (மாலியைக் கொன்றொழித்து)
தராதலத்தோர்குறை முடித்த, Tharaathalathorkurai Muditha - புமியிலுள்ள ஸத்துக்களுடைய குறைகளைத் தீர்த்த
தன்மையானை, Thanmaiyanaai - பெருமையுடையவனும்,
கண் நீர்அரும்பி சோர்ந்து, Kan Neerarumbi Soorndhu - கண்ணீர்அரும்பரும்பாகப் பெருகி (ஆநந்த பாஷ்பங்கொண்டு)
அன்பு கூரும், Anbu Koorum - பக்தி பண்ணுகிற
அடியவர்கட்கு, Adiyavarkadku - பக்தர்களுக்கு (முதலாழ்வார்கட்கு)
ஆங்கு, Aangu - அப்போதே
ஆர்அமுதம் ஆனான் தன்னை, Aar Amudham Aanaan Thannai - அருமையான அமுதம் போன்றிருந்தவனுமான பெருமானை
கோங்கு அரும்பு, Kongu Arumbu - கோங்கின் புக்களும்
சுரபுன்னை, Surapunnai - சுரபுன்னைகளும்
குரவு, Kuravu - குரவுகளும்
ஆர், Aar - செறிந்திருக்கிற
சோலை, Solai - சோலைகளிலே
குழாம் வரி வண்டு, Kuzham Vari Vandu - கூட்டங் கூட்டமாகக் கூடிய அழகிய வண்டுகள்
இசை பாடும் பாடல் கேட்டு, Isai Paadum Paadal Kettu - (மதுபான மயக்கத்தாலே) இசை பாடுகிற பாடல்களைச் கேட்டு
தீம் கரும்பு, Theem Karumbu - இனிய கரும்புகளானவை
கண் வளரும், Kan Valarum - ஒரு கண் ஏறி வளரப்பெற்ற
கழனி, Kazhani - கழனிகளினால்
சூழ்ந்த, Sozhndha - சூழப்பட்ட
1142பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணனோடு கூட அழியச் செய்த ஸ்வாமி தன்னை-உடையவன் இறே ஷேத்ரத்தில் களை பிடுங்குவார்- ராவண வத அனந்தரத்தில் அத்யயன அனுயாகங்கள் மாறாதாப் போலே யாயிற்று அவன் பட்ட பின்பு ஸ்ரீ திருக் கோவலூரும் – சோலையிலே புக்கு அணைந்த தென்றலானது அந்நீர் நிலத்திலே திவலைகளையும் சோலையில் பரிமளத்தையும் கொண்டு வந்து இவ்வோ இடங்களில் அத்யயனம் பண்ணுபவர்கள் உடைய ஸ்ரமம் ஆறும்படி சிசிரோ உபசாரம் பண்ணும் ஆயிற்று என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
கறைவளர்வேல் கரன்முதலாக் கவந்தன் வாலி கணையொன்றி நால்மடிய இலங்கைதன்னுள், பிறையெயிற்று வாளரக்கர் சேனை யெல்லாம் பெருந்தகையோ டுடந்துணித்த பெம்மான்றன்னை, மறைவளரப் புகழ்வளர மாடந் தோறும் மண்டபமொண் தொளியனைத்தும் வாரமோத, சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. –2-10-5
பதவுரை Show / Hide
கறை வளர், Karai Valar - (ரத்த மாம்ஸங்களின்) கறை ஏறிக்கிடக்கிற (- (திருக்கோவலூரதனுள்–;) (நான் கண்டேன்–.))
வேல், Vel - வேற்படையையுடைய
கரன் முதலா, Karan Muthala - கரன் முதலாக
கவந்தன் வாலி, Kavandan Vaali - கபந்தவனும் வாலியும்
கணை ஒன்றினால் மடிய, Kanai Ondrinhaal Madiya - ஓர்அம்பாலே முடியும்படி (செய்தவனும்)
இலங்கை தன்னுள், Ilankai Thannul - லங்காபுரியிலே
பிறை எயிறு வாள் அரக்கரி, Pirai Eiyiru Vaal Arakkari - பிறைபோன்ற கோரப்பற்களையும் வாள்களையுமுடைய
சேனை எல்லாம், Sennai Ellam - அரக்கரிகளின் சேனைகளையெல்லாம்
பெரு தகையோடு உடன், Peru Thagaiyodu Udan - அவர்களது தலைவனான இராவணனோடு கூடவே
துணித்த, Thuniththa - தொலைத்தொழித்த
பெம்மான் தன்னை, Pemmaan Thannai - பெருமானை,
மாடம் தோறும், Maadam Thoram - ஒவ்வொரு வீடுகளிலும்
மறை வளர, Marai Valara - வேதகோஷம் ஓங்கவும்
புகழ் வளர, Pugazh Valara - (அதனால்) கீர்த்திவளரவும்
ஒண் தொளி, On Tholi - அழகிய வீதிகளிலேயுள்ள
மண்டபம் அனைத்தும், Mandapam Anaithum - மண்டபங்களிலெல்லாம்
வாரம் ஓத, Vaaram Oda - ‘ வாரமோதுகை’ என்கிற அத்யயநத்தை நடத்தவும் பெற்றதாய்
சிறை அணைந்த பொழில் அணைந்த  தென்றல் வீசும், Sirai Anaindha Pozhil Anaindha Thendral Veesum - நீரரண் நெருங்கின சோலைகளோடு உறைந்து வருகின்ற தென்றல் வீசப்பெற்றதான
1143பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் தனக்கு தாரகமாய் அது பெறாத போது அவன் முடியும் அளவாய் இருக்குமா போலே அவன் வியாபாரம் தங்களுக்கு பிராணகரமாய் இருக்கும்படியாலே அத்தை தேடா நிற்பார்கள் இறே இவர்கள் கருங்களிறே போலே-தன்னை உணராதே நின்ற நிலை-பிரதிகூலரான துர்யோநாதிகள் கட்டின கட்டாகில் இறே அவிழ்த்துக் கொண்டு போக வல்லது-அனுகூலர் கட்டினால் அவிழ்த்துக் கொண்டு போக மாட்டான் இறே- விஸ்மய நீயமான கலையை வாகனமாக உடையளாய் எட்டுத் தோளை உடைய துர்க்கை அவள் ஆயிற்று அவ் ஊருக்குக் காவல் பிறந்த அன்று காட்டிக் கொடுத்துப் போனோம் -என்னும் அவ் இழவு தீர அவள் ஊர்ந்து நோக்குகிற தேசம் ஆயிற்று இதுக்கு முன்பு இங்கனே இருப்பதொரு லாபம் வ்யுத்புத்தி பண்ணி அறியாத நான் ஸூ ரஷிதமான தேசத்திலே காணப் பெற்றேன்- என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6
உறியார்ந்த நறுவெண்ணெ யொளியால் சென்றங் குண்டானைக் கண்டாய்ச்சி யுரலோ டார்க்க, தறியார்ந்த கருங்களிறே போல நின்று தடங்கண்கள் பனிமல்கும் தன்மை யானை, வெறியார்ந்த மலர்மகள்நா மங்கை யோடு, வியன்கலையெண் தோளினாள் விளங்கு, செல்வச் செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. –2-10-6
பதவுரை Show / Hide
ஒளியால் சென்று, Oliyal Sendru - (தன்னுடைய புன்முறுவலின்) காந்தியாலே இருட்டான இடங்களிலே  நடந்து சென்று (- (திருக்கோவலூரதனுள்–;) (நான் கண்டேன்–.))
அங்கு, Angu - அவ்விடங்களிலே
உறி ஆர்ந்த, Uri Aarntha - உறிகளிலே நிரம்பிய
நறுவெண்ணெய், Naruvennai - மணம்மிக்க வெண்ணெயை
உண்டானை ஆய்ச்சி கண்டு, Undaanaai Aaychchi Kandu - வாரியுண்ணும்போது யசோதையானவள் கண்டு
உரலோடு ஆர்க்க, Uralodu Aarkka - உரலோடே பிணைத்துக்கட்ட (அதனாலே)
தறி ஆர்ந்த கரு களிறு  போல நின்று, Thari Aarntha Karu Kaliru Pola Nindru - கட்டுத்தறியிலே சேர்த்துக் கட்டப்பட்ட கரிய யானை போலக்கட்டுண்டிருந்து
தட கண்கள் பனிமல்கும் தன்மை யானை, Thada Kangal Panimalgum Thanmai Yaanai - பெரிய திருக்கண்கள் நீர்நிரம்பப்பெற்ற தன்மையை யுடைய பெருமானை,
வெறி ஆர்ந்த மலர்மகள், Veri Aarntha Malarmagal - பரிமளம் நிறைந்த தாமரைப் பூவில்பிறந்த பிராட்டியோடும்
நாமங்கையோடு, Naamankaiyodu - ஸரஸ்வதியோடும்
வியன் கலை எண்தோளினான், Viyan Kalai Entholinan - அழகிய மானை வாஹனமாக வுடையளாய் எட்டுத் தோள்களை யுடையளான துர்க்கையோடும்
விளங்கு செல்வம், Vilangu Selvam - விளங்குகையாகிற செல்வத்தையுடையதும்
செறி ஆர்ந்த, Serri Aarntha - நெருக்கம்பொருந்திய
மணி மாடம், Mani Maadam - ரத்னமயமான மாடங்கள்
திகழ்ந்து தோன்றும், Thigazhndhu Thonrum - மிகவும் விளங்கப்பெற்றதுமான
1144பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வில் விழவு என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு அழைத்து க்ருத்ர்மத்தாலே நலிய அழைத்த கம்சனை அவன் நினைவு அவன் தன்னோடே போக்கி அவனுக்கு மிருத்யு ஆனவனை-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7
இருங்கைம்மா கரிமுனிந்து பரியைக் கீறி இனவிடைக ளேழடர்த்து மருதம் சாய்த்து, வரும்சகட மிறவுதைத்து மல்லை யட்டு வஞ்சகஞ்செய் கஞ்சனுக்கு நஞ்சா னானை, கருங்கமுகு பசும்பாளை வெண்முத் தீன்று காயெல்லாம் மரகதமாய்ப் பவளங் காட்ட, செருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள் சோலைத் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. –2-10-7
பதவுரை Show / Hide
இரு கை மா கரி முனிந்து, Iru Kai Maa Kari Muninthu - நீண்ட துதிக்கையையுடைய ஐந்துவாகிய (குவலயாபீடமென்னும்)   யானையைச் சீறி முடித்து (- (அவற்றின் கனிகள்) (திருக்கோவலூரதனுள். நான் கண்டேன்–.))
பரியை கீறி, Pariyai Keerki - குதிரை வடிவெடுத்துவந்த கேசியென்னு மசுரனைப் பிளந்தொழித்து
இனம் ஏழ் விடைகள் அடர்த்து, Inam Ezhu Vidaihal Adaruthu - ஒன்றோடொன்று ஒத்த ஏழு ரிஷபங்களையும்  (நப்பின்னைக்காக) வலியடக்கி
மருதம் சாய்த்து, Marudham Saaythu - இரட்டை மருதமரத்தை முறித்து
வரும் சகடம் இற உதைத்து, Varum Sakadham Ira Udaithu - (தன்னைக்கொல்ல) மேல் விழுந்த சகடம் முறியும்படி  அதனை யுதைத்து
மல்லை அட்டு, Mallai Attu - மல்லர்களை த்வம்ஸம்பண்ணி (கடைசியாக)
வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை, Vanjam Sei Kanjanukku Nanju Aananaai - கபடச் செயல்களைச் செய்து வந்த கம்ஸனுக்கு விஷமாகி அவனையும் முடித்த பெருமானை,
கரு கமுகு, Karukamuku - கறுத்த பாக்கு மரங்கனினுடைய
பசு பாளை, Pasu Paalai - பசுமை தங்கிய பாளையானது
வெண் முத்து ஈன்று, Ven Muthu Eendru - வெளுத்த முத்துக்களை வெளிப்படுத்தவும்
காய் எல்லாம், Kaai Ellam - (அதன்) காய்களெல்லாம்
மரகதம் ஆய், Maragatham Aayi - மரகதம்போல் விளங்கவும்
பவளம் காட்ட, Pavalam Kaata - பவழங்களைக் காட்டவும்
செருத்தி, Seruththi - சுரபுன்னைகள்
மொட்டு, Mottu - மொக்குகளை
மிக அலர்த்தும், Miga Alarththum - மிக அலரச் செய்யவும் பெற்ற
தேன் கொள் சோலை, Then Kol Solai - தேன் நிறைந்த சோலைகளையுடைய
1145பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவனைத் தோழன் ஆகவும் மைத்துனன் ஆகவும்-தூதனாகவும் சாரதியாகவும் உடைய அர்ஜுனன் உடைய தேர்- ரதியான் ஆகில் வெற்றி தன் தலையிலே கிடக்குமே-அதுக்காக தான் சாரதியாய் வெற்றியும் அவன் தலையிலே கிடக்கும்படி பண்ணினான் ஆயிற்று-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
பாரேறு பெரும்பாரந் தீரப் பண்டு பாரதத்துத் தூதியங்கி, பார்த்தன் செல்வத் தேரேறு சாரதியா யெதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறலழியச் செற்றான்றன்னை, போரேறொன் றுடையானு மளகைக் கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்து மூர்ப்போல், சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. –2-10-8
பதவுரை Show / Hide
பார்ஏறு பெரு பாரம் தீர, Paar Eru Peru Paaram Theera - பூமியின் மேலேறிக் கிடந்த பாரங்கள் தொலைவதற்காக (- (திருக்கோவலூரதனுள்,  நான் கண்டேன்–.))
பண்டு, Pandhu - முற்காலத்தில்
பாரதத்து தூது இயங்கி, Bharathaththu Thoodhu Iyangi - பாரத யுத்தம் ஸமீபித்தபோது தாதுசென்றவனும்
பார்த்தன், Paarththan - அர்ஜுநனுடைய
செல்வம் தேர்ஏறு சாரதி ஆய், Selvam Ther Eru Saarathi Aayi - அழகிய தேரையேறி நடத்தின பாகனாகி
எதிர்ந்தார்சேனை, Edhirndhaar Senai - எதிரிகளின் சேனையை
செரு களத்து, Seru Kalathu - போர்க்களத்திலே
திறல் அழிய, Thiral Azhiya - வலிமாளும்படி செய்து
செற்றான் தன்னை, Settran Thannai - ஒழித்தவனுமான பெருமானை
போர்ஏறு ஒன்று உடையானும், Por Aeru Ondru Udaiyanum - (செருக்காலே) கரைபொருகிற ஒரு எருதை வாஹநமாக வுடைய சிவனும்
அனகை கோனும், Anakai Konum - குபேரனும்
புரந்தரனும், Purandharanum - தேவேந்திரனும்
நான்முகனும், Nanmuganum - பிரமனும்
பொருந்தும், Porundum - நித்யவாஸம் செய்யப்பெற்ற
ஊர்போல், Oorpol - வானுலகத்துஸ்தானங்களைப் போன்று
சீர்ஏறு மறையாளர் நிறைந்த  செல்வம், Seer Aeru Maraiyalar Niraintha Selvam - சிறந்த வைதிகரிகள் நிறைந்திருக்கையாகிய செல்வம் பொருந்திய
1146பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு கல்பக தரு பணைத்து பூத்தாப் போலே ஆயிற்று ஸ்ரீ பிராட்டிமார் உடன் திவ்ய ஆயுதத்தை தரித்தால் இருக்கும் படி- தனிக் கற்பகம் அன்றிக்கே சோலை செய்து இருப்பதொரு கல்பகம் போலே நின்று – அதாகிறது-சர்வ அபேஷித ப்ரதனாய் இருக்கும் படி – நாங்கள் எங்கள் உடைய ரஷணத்துக்கு கடவோம் அல்லோம் நீயே கடவாய் -என்று தன் கை பார்த்து இருக்கும் அவர்கள் பக்கலிலே மிக்க பிரசாதத்தைப் பண்ணும்படியை மநோ ரதிக்குமவனை – அருள் பண்ணா விட்டால் தான் விடலாமோ – இவன் வடிவைக் கண்டால் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9
தூவடிவின் பார்மகள்பூ மங்கை யோடு சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற, காவடிவின் கற்பகமே போல நின்று கலந்தவர்கட் கருள்புரியுங் கருத்தி னானை, சேவடிகை திருவாய்கண் சிவந்த வாடை செம்பொன்செய் திருவுருவ மானான் றன்னை, தீவடிவின் சிவனயனே போல்வார் மன்னு திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. –2-10-9
பதவுரை Show / Hide
தூ வடிவின், Thoo Vadivin - அழகிய வடிவையுடைய (- (திருக்கோவலூரதனுள். நான் கண்டேன்–.))
பார்மகள் பூ மங்கையோடு, Paar Magal Poo Mangaiyodu - பூமிப்பிராட்டியோடும் பெரிய பிராட்டியோடும் கூடி
இருபால், Irupaal - இரண்டு திருக்கைகளிலும்
சுடர் ஆழி சங்கு பொலிந்து தோன்ற, Sudar Aazhi Sangu Polinthu Thonra - திருவாழி திருச்சங்குகள் பள பளவென்று விளங்க
காவடியின் கற்பகம் போல நின்று, Kaavadiyin Karppagam Pola Nindru - சோலைசெய்திருக்கின்ற கற்பகம்போல நின்று
கலந்தவர்கட்கு அருள் புரியும் கருத்தினானை, Kalandavarkadku Arul Puriyum Karuthinana - பக்தர்களுக்குக் கிருபைபண்ணுந் திருவுள்ளமுடையவனும்,
சே அடி கை திருவாய் கண் சிவந்த ஆடை, Sae Adi Kai Thiruvai Kan Sivantha Aadai - சிவந்த திருவடிகள் திருக்கைகள் திருப்பவளம் திருக்கண் திருப்பிதாம்பரம் இவற்றோடு கூடி
செம் பொன் செய் திரு உருவம்  ஆனான் தன்னை, Sem Pon Sei Thiru Uruvam Aanaan Thannai - செம்பொன் போன்ற திருமேனியையுடையவனுமான பெருமானை
தீ வடிவின் சிவன் அயன் போல் வார்மன்னு, Thee Vadivin Sivan Ayan Pol Vaar Mannu - நெருப்புப் போன்ற வடிவை யுடையனான சிவனும் பிரமனும்   போல அரிய பெரிய காரியங்கள் செய்யவல்ல மஹான்கள் பொருந்தியிருக்கிற
1147பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தையும் அப்யசிக்க வல்லவர்கள் –ஐஸ்வர்யாத்துக்காகவும் ஆத்ம பிராப்திக்காகவும் பகவத் பிராப்திக்காகவும் லோகத்தில் உள்ளார் திரண்டு ஆஸ்ரயிக்க- ஆஸ்ரயித்த போதே ஆஸ்ரயித்தார் அபேஷிதத்தை கொடுக்கைக்காக எங்கும் புக்கு வியாபித்து அந்யைரத்ருஷ்டனாய்-நம்மை ஆஸ்ரயிப்பாரோ என்று அவசர பிரதீஷனாய் நிற்கிறவனைக் காணப் பெறுவார்- என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10
வாரணங்கொ ளிடர்க்கடிந்த மாலை நீல மரதகத்தை மழைமுகிலே போல்வான்றன்னை, சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன், என்று வாரணங்கு முலைமடவார் மங்கை வேந்தன் வாட்கலிய னொலியைந்து மைந்தும் வல்லார், காரணங்க லாலுகங் கலந்தங்க் கேத்தக் கரந்தெங்கும் பரந்தானைக் காண்பர் தாமே. –2-10-10
பதவுரை Show / Hide
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை, Vaaranam Kol Idar Kadintha Maalai - கஜேந்திராழ்வானடைந்த துக்கத்தைப் போக்கின     பெருமானும் (- (என்ன பலனைப் பெறுவர்களெனில்))
நீலம் மரதகம் மழை முகில்போல்வான் தன்னை, Neelam Maradhagam Mazhai Mukilpolvan Thannai - கருநெய்தற்பூ, மரகதப்பச்சை, குளிர்ந்தமேகம் ஆகிய இவற்றை யொத்தவனுமான கோபாலனை
சீர், Seer - ஆத்ம குணங்களாலே
அணங்கு, Anangu - (அனைவரும்) ஆசைப்படக்கூடிய
மறையாளர், Maraiyalar - வைதிகரிகள்
நிறைந்த செல்வம், Niraindha Selvam - நிறைந்திருக்கையாகிற அழகு பொருந்திய
திரு கோவலூர்அதனுள், Thiru Kovalooradhanul - திருக்கோவலூரென்னுந் திருப்பதியிலே
கண்டேன் என்று, Kandeen Endru - ஸேவிக்கப்பெற்றேனென்று,
வார்அணங்கு முலை மடவார்மங்கை, Vaaranangu Mulai Madavarmangai - கச்சினால் அழகுபெற்ற முலைகளையுடைய மாதர்நிறைந்த திருமங்கை நாட்டுக்கு
வேந்தன், Vendhan - தலைவரும்
வாள், Vaal - வாட்படையை நிருபகமாகவுடையருமான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிற்செய்த
ஐந்தும் ஐந்தும், Aindhum Aindhum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்தாம், Vallaartham - ஓதவல்லவர்கள்,
உலகம், Ulagam - உலகத்திலுள்ள பலவகையதிகாரிகள்
காரணங்களால், Kaaranangalal - தங்கள் தங்களுக்கு இஷ்டமான பலன்களைப் பெற வேண்டியகாரணத்தினால்
கலந்து, Kalandhu - திரண்டு வந்து
ஏத்த, Aetha - துதிக்க
கரந்து ஏங்கும் பரந்தானை, Karandhu Aengum Parandhanai - ஒருவர்க்கும் க்ரிணவொண்ணாதபடியிருந்து எல்லாவிடங்களிலும்  வியாபித்திருக்கின்ற பரமாத்மாவை
காண்பர், Kaanbar - ஸேவிக்கப்பெறுவர்கள்.
1148பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஷட்பத நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ தெய்வ நாயகன் திருவடி தாமரைகளில் தேனைக் குறைவற உண்டு ஆசையாலே ஸ்ரீ நித்யசூரி பரிஷத் கதனான வாசுதேவ தருவின் பாதமலரில் தேனை புஜிக்க கோலி சஞ்சரித்து கொண்டு இருப்பார்கள் என்று ஸ்வாபதேசம்) 1
இரும் தண் மாநிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமல நன் மலர்த் தேறல் அருந்த இன்னிசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு திருவயிந்திரபுரமே –3-1-1
பதவுரை Show / Hide
இரு தண் மா நிலம், Iru Than Maa Nilam - மிகக் குளிர்ந்த பெரிய பூமியை
ஏனம் அது ஆய்வளை மருப்பு அகத்தினில் ஒடுக்கி, Enam Athu Aayvalai Maruppu Agathinil Odudki - வராஹ ரூபியாய் வளைந்த கோரப் பற்களினிடத்தே அடக்கினவனாயும்,
கரு தண் மா கடல் கண்  துயின்றவன், Karun Than Maa Kadal Kan Thuyinravan - கறுத்துக் குளிர்ந்து பெருத்த கடலில் யோக நித்திரை  செய்தருள்பவனாயுமுள்ள எம்பெருமானுக்கு
இடம், Idam - வாழுமிடம் (எதுவென்றால்)
அம் பொழிலூடே, Am Pozhilude - அழகிய சோலைகளினுள்ளே
நல் கமலம் மலர்தேறல் அருந்தி, Nal Kamalam Malartheeral Arundhi - நல்ல தாமரைப்பூவின் தேனைக் குடித்து
இன் இசை முரன்று எழும், In Isai Murandru Ezhum - இனிய ராகங்களைப் பாடிக்கொண்டு கூத்தாடா நிற்கிற
அணி குலம் பொதுனி, Ani Kulam Podhuni - வண்டுகளின் கூட்டங்கள் நெருங்கி
செருந்தி நாள் மலர்சென்று அணைந்து உழிதரு, Serundhi Naal Malarsendru Anaindhu Uzitharu - சுரபுண்ணை மரத்தினுடைய அப்போதலர்ந்த பூவிலே போய்ச் சேர்ந்து ஸஞ்சரிக்கப்பெற்ற
திரு அயிந்திரபுரம், Thiru Ayindhirapuram - திருவஹீந்த்ரபுரமாம்.
1149பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சர்வேஸ்வர லஷணம் ஆகிறது – ஸ்ரீ திரு ஆழியைக் கையிலே சலியாதே பிடித்தல்-ஸ்ரீ லஷ்மீ பதியாதல் வேதைக சமிதிகன் ஆதல்-இவை ஆயிற்று இவை மூன்றும் இங்கே உண்டு- ஸ்ரீ பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே பிரணய கலஹம் மாறாதே செல்லுமா போலே ஆயிற்று அங்குத்தை திர்யக்குகள் உடைய யாத்ரையும் – பாடப் பகை தீரும் -எனபது இறே-பேதை நெஞ்சற பாடும் பாட்டால் பகை தீர்ந்ததே) 2
மின்னும் ஆழி அம் கையவன் செய்யவள் உறை தரு திரு மார்பன் பன்னு நான்மறைப் பல் பொருளாகிய பரனிடம் வரைச் சாரல் பின்னும் மாதவிப் பந்தலில் பேடை வரப்பிணியவிழ் கமலத்து தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் தரு திருவயிந்தபுரமே –3-1-2
பதவுரை Show / Hide
மின்னும் ஆழி அம் கையவன், Minnum Aazhi Am Kaiyavan - ஜ்வலிக்கின்ற திருவாழியை அழகிய திருக்கையிலே உடையவனும் (- (திரு அயிந்திரபுரம்-.))
செய்பவள் உறைததரு திருமார்வன், Seipaval Uraithatharu Thirumaarvan - பிராட்டி நித்யவாஸம் பண்ணுகிற திருமார்வையுடையவனும்
பன்னு நால் மறை பல் பொருள் ஆகிய பரன் இடம், Pannu Naal Marai Pal Porul Aagiya Paran Idam - ஓதப்பட்டு வருகிற நான்கு வேதங்களின் பலவகைப் பொருள்களும் தானேயாயிருப்பவனுமான பரம புருஷனுக்கு வாழுமிடம் (எதுவென்றால்)
வண்டு, Vandu - வண்டுகளானவை
வரை சாரல், Varai Saaral - மலைப் பக்கங்களில்
பின்னும் மாதவி பந்தலில் பெடை வர, Pinnum Maadhavi Panthalil Pedai Vara - நெருங்கி யிருக்கின்ற குருக்கத்திப் பந்தலில் நின்றும் தம் பேடைகள் (பெண் வண்டுகள்) தம்மிடம் வந்து சேர்வதற்காக
பிண அவிழ் கமலத்து தென்ன என்று இன் இசை முரல்தரு, Pin Avizh Kamalaththu Then Enru In Isai Muraltharu - கட்டு அவிழ்கிற தாமரைப்பூவிலே இருந்துகொண்டு தென்னா தெனாவென்று இனிய இசைகளைப் பாடா நிற்கப்பெற்ற
1150பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காதாசித்கமாக லோகத்துக்கு வந்த பிரளயத்தை பரிஹரித்தாப் போலே அன்றிக்கே தன்னை நித்ய அனுபவம் பண்ண வேணும் என்று இருப்பார்க்கு-அதுக்கு ஒரு ஷணம் விச்சேதம் வருகையாவது நித்ய பிரளயம் இறே தனக்கு அசாதாரணமாய் இருப்பார்க்கு தன் படிகளை எல்லாம் இவனுக்கு உள்ளது இவ்வளவு என்று பரிசேதித்து அனுபவிக்கலாம் படி வெளி இட்டுக் கொண்டு நிற்கிற-ஸ்ரீ தெய்வ நாயகனிடம்- ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு தன் படிகள் எல்லாம் அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு இருக்குமா போலே இங்கு உள்ள ஆஸ்ரிதர்க்கும் தன்னை அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு நிற்கிற விடம் – அகடிகடதங்களை கடிப்பித்தும் அவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமா போலே விருத்தமான தேசத்தில் அவை இரண்டையும் சம காலத்தில் கிட்டி அனுபவிக்கலாம் தேசம் ஆயிற்று குறிஞ்சி நிலமான மலை சாரலிலே முல்லை நிலமும் மருத நிலமும் இருந்தது போலே) 3
வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வ நாயகனிடம் மெய்தகு வரைச் சாரல் மொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய முல்லை யம் கொடி யாட செய்ய தாமரைச் செழும் பணை திகழ் தரு திருவயிந்திரபுரமே –3-1-3
பதவுரை Show / Hide
வையம் ஏழும் உண்டு, Vaiyam Ezhum Undu - (பிரளய காலத்தில்) (- (திருஅயிந்திபுரம்-.))
ஆவிலை வைகிய மாயவன், Aavilai Vaikiyamaayavan - ஆலந்தளரிலே போதுபோக்கின ஆச்சர்யபூதனும்,
அடியவர்க்கு மெய்யன் ஆகிய, Adiyavarkku Meyyan Aagiya - தன்னை யடிபணந்தவர்கட்கு உண்மையாக வேலை ஸாதிக்குமவனுமான
தெய்வநாயகன் இடம், Deivanaayakan Idam - தெய்வநாயகப் பெருமானுக்கு உறைவிடம்:
மெய் தருவரை சாரல், Mei Tharuvarai Saaral - அப்பெருமானுடைய திரு மேனியோடொத்த நிறத்ததான மலையின் அருகில்
மொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய, Moykol Maadhavi Senbagam Muyangiya - நெருங்கிய குறுக்கத்திச் செடிகளோடும் செய்பக மரங்களோடும் தழுவிய
முல்லை அம்கொடி ஆட, Mullai Amkodi Aada - அழகிய முல்லைக்கொடிகள் அசையாநிற்கப் பெற்றதும்
செய்ய தாமரை செழு பணை திகழ்தரு, Seyya Thaamarai Sezhu Panai Thigaztharu - செந்தாமரைபூக்கள் செழத்து வளர்கின்ற  வயல்கள் விளங்கப் பெற்றதுமான
1151பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெற்ற தமப்பன் பகையா அவனில் அண்ணிய உறவாய் உதவினவன் தனக்கு தன்னில்-அண்ணிய உறவு இல்லை இறே – புறம்பு –இப்படி இருக்கிற தானும் -ஆத்மைவ ரிபு ராதமான -என்கிறபடி தனக்குத் தானே பகையாய் தன்னை முடிக்கப் பார்த்த வன்று – உன்னை உன் கையில் காட்டித் தாரேன் -என்று நோக்குகைக்காக வந்து நிற்கிற விடம் – வ்யாபாரித்த போது ஹிரண்யன் உடைய ருதிர வெள்ளத்தாலே பார்த்த பார்த்த இடம் எங்கும் சேறு செய்தாற் போலே கரும்புகள் ஒன்றோடு ஓன்று நெருங்கி பிரவஹித்த சாற்று வெள்ளத்தாலே பூமி எல்லாம் சேறாய்க் கிடக்கும் ஆயிற்று) 4
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல்லவுணன் தன் மார்பகம் இரு பிளவா கூறு கொண்டு அவன் குல மகற்கு இன்னருள் கொடுத்தவனிடம் மிடைந்து சாறு கொண்ட மென் கரும்பு இளங்கழை தகை விசும்புற மணி நீழல் சேறு கொண்ட தண் பழனமது எழில் திகழ திருவயிந்தபுரமே –3-1-4
பதவுரை Show / Hide
அவன் குலம் மகற்கு இன் அருள்  கொடுத்தவன் இடம், Avan Kulam Makarku In Arul Koduthavan Idam - அவளது சிறந்த மகனான ப்ரஹ்லாதாழ்வானுக்கு நல்ல க்ருபை பண்ணின பெருமான் வாழுமிடமாவது; (- (திரு அயிந்திரபுரம்-.))
மிடைந்து, Midaindhu - ஒன்றோடொன்று நெருங்கி
சாறுகொண்ட, Saarukondha - ரஸமயமா யிருக்கிற
மெல் கரும்பு இள கழை, Mel Karumbu Ila Kazhai - மெல்லிய கரும்பின் இளந்தடிகளானவை
தகை விசும்பு உற, Thakai Visumbu Ura - (தங்களை விம்மி வளரவொட்டாமல்) தடை  செய்கின்ற ஆகாசத்தைக் கிட்டி    வளர்ந்திருப்பதனால்
மணி நீழல், Mani Neezhal - அழகிய நிழலையுடையதும்
சேறுகொண்ட தண் பழனமது எழில் திகழ், Searukondha Than Pazhanamathu Ezhil Thigazh - (கருப்பஞ் சாற்று வெள்ளத்தினால்) சேற்றையுடைத்தாய் குளிர்ந்த நீர்நிலங்களின் அழகு விளங்கப் பெற்றதுமான
1152பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மகா பலி தானம் பண்ணா நின்றான் என்று கேட்டவாறே அவனுடைய யஞ்ஞவாடத்திலே தன்னை அர்த்தியாக்கிச் சென்று அவன் கையில் நீர் தன் கையில் விழுந்த அநந்தரம் அவ்விடம் தன்னிலே நின்றே பூமிப் பரப்பு அடைய அளந்து கொண்டு – இடையர் பூத்த கொடி போலே இருக்கிற ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக உபன்னம் தேட்டமான பருவம் ஆயிற்று பதிசம்யோக சுலபம் வய -என்கிறபடியே ஒரு கொள் கொம்பிலே கூட்டில் கிடக்குமவளாய்- இல்லையாகில் தர்மி லோபம் பிறக்குமவளாய் இருக்கை இனம் இனமான ருஷபங்களோடே பொருதவன் உடைய ஸ்ரீ ஸ்தானம்) 5
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து ஆயர் பூங்கொடிக்கு இனவிடை பொருதவனிடம் பொன் மலர் திகழ் வேங்கை கொங்கு செண்பகக் கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்தோடி தேன் கலந்த தண் பலங்கனி நுகர் தரு திருவயிந்திரபுரமே –3-1-5
பதவுரை Show / Hide
மாவலி வேள்வியில் சென்று இரந்து, Maavali Velviyil Sendru Irandhu - மஹாபலியின் யாக பூமியிலே        (மாணியுருவாகிச்) சென்று (மூவடிமண்) யாசித்துப் பெற்று (- (திரு அயிந்திபுரம்-.))
ஆங்கு, Aangu - அவ்விடத்திலேயே
அகல் இடம் அளந்து, Akal Idam Alandhu - பரந்த உலகம் முழுவதையும் அளந்து கொணடவனும்
ஆயர் பூங்கொடிக்கு, Aayar Poongodikku - அழகிய இடைப்பெண்ணான நப்பின்னைப் பிராட்டிக்காக
இனம் விடை, Inam Vidai - ஓரினமான ஏழு ரிஷபங்களையும்
பொருதவன் இடம், Poruthavan Idam - போர்செய்து முடித்த பெருமானுறையும் இடமாவது;
குரங்கு இனம், Kurangu Inam - குரங்குகளின் கூட்டமானது,
பொன்மலர்திகழ், Ponmalar Thigazh - பொன்னிறமான மலர்கள் விளங்காநின்ற
வேங்கை கோங்கு செண்பகம் கொம்பினில், Vengai Kongu Senbagam Kombinil - வேங்கைமரம், கோங்குமரம்,            செண்பக மரம் என்பனவற்றின்  கொம்புகளிலே
குதிகொடு இரைத்து ஓடி, Kudikodu Iraithu Odi - குதித்தல் செய்துகொண்டும் பெரிய ஆரவாரங்கள்   செய்துகொண்டும் இங்குமிங்கும் ஓடிக்கொண்டும்
தேன் கலந்த தண்பலங்கனி நுகரிதரு, Then Kalanda Thanpalangani Nukaritharu - தேன் மிக்க சிறந்த பலாப்பழங்களை               உட்கொள்ளப்பெற்ற
1153பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒக்கத்தை உடைய பெரிய மலைகளையும் பெரிய மதிள்களையும் சுற்றிலே உடைத்தாய் வண்டுகள் சஞ்சரியா நின்றுள்ள அழகிய பொழிலாலே சூழப்பட்ட ஸ்ரீ திருவயிந்திரபுரமே முன்பு -ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுக்கு ஸ்ரீ சித்ர கூடத்தையும் ஸ்ரீ தண்ட காரண்யத்தையும் விஸ்மரித்து வர்திக்கலாம் தேசம் ஆயிற்று) 6
கூனுலாவிய மடந்தை தன் கொடும் சொலின் திறத்து இளங் கொடியோடும் கானுலாவிய கருமுகில் திரு நிறத்தவன் இடம் கவினாரும் வானுலாவிய மதி தவழ் மால்வரை மா மதிள் புடை சூழ தேனுலாவிய செழும் பொழில் தழுவிய திருவயிந்திரபுரமே –3-1-6
பதவுரை Show / Hide
கூன் உலாவிய மடந்தைதன்  மடந்தைகள் கொடும் சொலின், Koon Ulaaviyam Madandhaithan Madandaigal Kodum Solin - கூனேறின மந்தரையென்னும் ஸ்திரியினுடைய கொடிய பேச்சுக்காக திறத்து (- (திரு அயிந்திபுரம்-;))
இளகொடியோடும் கான் உலாவிய, Ilakodiyodum Kaan Ulaaviyam - இளங்ககொடிபோன்ற பிராட்டியோடகூட    காட்டுக்கொழுந்தருளின
கருமுகில் திரு நிறத்தவன் இடம், Karumugil Thiru Niraththavan Idam - காளமேகம் போன்ற வடிவையுடைய பெருமானுக்கு இடமாவது;
கவின் ஆரும், Kavin Aarum - அழகு நிரம்பிய
வான் உலாவிய மதிதவழ் மால் வரை மாமதிள் புடை சூழ, Vaan Ulaaviyam Mathithavazhal Maal Varai Mamathil Pudai Soozh - ஆகாசத்தில் சஞ்சரிக்கின்ற சந்திரன் தவழப்பெற்ற பெரிய மலையும் பெரிய மதிளும் பக்கங்களில் சூழ்ந்திருக்கப்பெற்றதும்
தேன் உலாவிய செழு பொழில் தழுவிய, Then Ulaaviyam Sezhu Pozhil Thazhuviyam - வண்டுகள் ஸஞ்சரிக்கின்ற அழகிய சோலைகளால் சூழப்பட்டதுமான
1154பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸூ வேல சைலமாய் -அதின் மேலே த்ரி கூடமாய் -அதின் மேலே படைவீடாய் இறே இருப்பது இப்படி ஒருவரால் அழிக்க ஒண்ணாத படை வீட்டுக்கு நான் ராஜா அல்லனோ என்று அபிமானித்து இருக்கிற பையலுடைய–தேவதைகள் உடைய வரங்களால் பூண் கட்டி இருக்கிற முடிகள் பத்தும் துகளாம்படி பண்ணின மிடுக்கனானவான் வர்த்திக்கிற ஸ்தானம்) 7
மின்னின் நுண் இடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை மன்னன் நீள் முடி பொடி செய்த மைந்தன் இடம் மணி வரை நீழல் அன்ன மா மலர் அரவிந்தத் தமளியில் பெடையொடும் இனிதமர செந்நெலார் கவரிக்குலை வீசு தண் திருவயிந்திரபுரமே –3-1-7
பதவுரை Show / Hide
மின்னின் நுண் இடை மடம், Minnin Nun Idai Madham - மின்போல் ஸூக்ஷ்மமான இடையையுடையவளும் மடமைக் குணம் வாய்ந்தவளும் (- (தண் திரு அயிந்திபுரம்-.))
கொடி காரணம், Kodi Kaaranam - கொடி போன்றவளுமான பிராட்டிக்காக,
விலங்கலின் மிசை இலங்கை மன்னன், Vilangalin Misai Ilangai Mannan - ஸூவேல மலையின் மீது அமைக்கப் பட்டிருந்த (ஸூரக்ஷிதமான) லங்கா புரிக்கு அரசனான இராவணனுடைய
நீள்முடி பொடி செய்த மைந்தனது இடம், Neelmutti Podi Seitha Maindhanathu Idam - பெரிய முடிகள் பத்தையும் பொடி படுத்தின மிடுக்கையுடைய பெருமானுக்கு இடமாவது;
மணி வரை நீழல், Mani Varai Neezhal - அழகிய மலையின் நிழலிலே
அன்னம் மா அரவிந்தம் மலர்அமளியில் பெடை யொடும் இனிது அமர, Annam Maa Aravindham Malararamalil Pedai Yodum Inidhu Amara - ஹம்ஸங்களானவை பெரிய தாமரைப் பூவாகிய படுக்கையில் தங்கள்  பேடைகளுடனே இனிதாகப் பொருந்தி வாழ்வதற்குப் பாங்காக
செந்நெல் ஆர்குலை கவரி வீசு, Sennel Aarkulai Kavari Veesu - செந்நெல் நிறைந்த குலை சாமரம் வீசப்பெற்ற
1155பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ ரஷணத்தில் அந்வயம் இல்லாத பசுக்களுக்கும் இடையருக்குமாக மலையை எடுத்து மழையை பரிகரித்தான் ஆயிற்று – இந்த்ரன் வர்ஷிப்பிக்க பிற பாடராய் நோவு பட விட்டால் போலே ஆக ஒண்ணாது என்று ஏற்கவே நோவு படாமே நோக்குகைக்காக வந்து நித்யவாசம் பண்ணுகிற இடம் ஆயிற்று) 8
விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில் இறுத்த அடல் மழைக்கு நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடமார் வரை வளம் திகழ மதகரி மருப்பொடு மலைவளர் அகில் உந்தித் திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே –3-1-8
பதவுரை Show / Hide
விரை கமழ்ந்தமென் கருங்குழல் காரணம் வில் இறுத்து, Virai Kamazhnthamen Karunguzhal Kaaranam Vil Iruththu - பரிமளம் வீசுகின்ற மெல்லிய கறுத்த கூந்தலையுடையளான பிராட்டிக்காக வில்லை முறித்தவனும், (- (திரு அயிந்திரபுரம்-.))
அடல் மழைக்கு நிறை கலங்கிட, Adal Mazhaikku Nirai Kalangida - அஸஹ்யமான பெருமழை வந்தபோது ஆநிரைகள் பரிதபித்து நிற்க
வரை குடை எடுத்தவன், Varai Kudai Eduththavan - கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துக் காத்தவன்
நிலவிய இடம், Nilaviyam Idam - மகிழ்ந்து உறையும் இடமாவது;
தடம் ஆர்வரை வளம் திகழ் மதகரி மருப்பொடு, Tadam Aarvarai Valam Thigazh Madakari Maruppodu - தடாகங்கள் நிறைந்த மலைக்கு அழகுசெய்து விளங்குகின்ற மதயானைகளையுடைய
மருப்பொடு, Maruppodu - தந்தங்களையும்
திரை உந்தி கொணர்ந்து அணை, Thirai Undhi Konarnthu Anai - அலைகளினாலே தள்ளிக் கொண்டுவந்து சேருகிற
செழு நதி, Sezhu Nathi - அழகிய ஆறு
வயல் புகு, Vayal Pugu - கழனிகளில் பாயப்பெற்ற
1156பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அர்ஜுனனுக்காக தன்னை அழிவுக்கு இட்டு –ரதியைச் சீறினவன் சாரதியை இறே அழியச் செய்வது – உடம்புக்கு ஈடு இடாதே தன்னை அழிவுக்கு இட்டு நின்றான் ஆயிற்று – தான் கொண்ட விஜயமும் அர்ஜுனன் தலையிலே கிடக்கும்படி –தன்னைத் தாழ விட்டு வைத்தான் ஆயிற்று – ஸ்லாக்கியமான தேரிலே கையிலே உழவு கோலைக் கொண்டு நின்ற என் குல நாதன் உடைய ஸ்ரீ ஸ்தானம் – ஆக தாரகம் தார்யத்துக்கு உள்ளே மறைந்து இருக்கும் தேசம் ஆயிற்று – தான் வெல்லச் செய்தேயும் -அர்ஜுனன் வென்றான் என்று சொல்லலாம்படி ஸ்ரீ கிருஷ்ணன் அவனுக்கு பரிகரமாய் அந்தர்பவித்து நிற்குமா போலே தான் விளைவிக்கச் செய்தே -வயல் விளைந்தது -என்று சொல்லலாம்படி யாயிற்று இருப்பது) 9
வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில் விசயனுக்காய் மணித்தேர் கோல் கொள் கைத்தலத்து எந்தை பெம்மான் இடம் குலவு தண் வரைச் சாரல் கால் கொள் கண் கொடிக் கை எழக் கமுகு இளம் பாளைகள் கமழ சாரல் சேலைகள் பாய் தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே –3-1-9
பதவுரை Show / Hide
கைத்தலத்து வேல் கொள் அரசர் வெம் போரினில், Kaithalathu Vel Kol Arasar Vem Porinil - கையிலே வேலாயுதத்தை யுடையவராக (துரியோதனன் முதலிய) அரசர்களையுடைய கடூரமான பாரத யுத்தத்தில் (- (திரு அயிந்திரபுரமே-.))
விசயனுக்கு ஆய், Visayanukku Aayi - அர்ஜூனனுக்குத் துணையாகி
மணி தேர்தலத்து கோல் கொள் எந்தைபெம்மான் இடம், Mani Therthalathu Kol Kol Endhaipemman Idam - (அவனுடைய) அழகிய தேரிலே கையில் கோல்பிடித்து நின்ற எம்பெருமானுக்கு இடமாவது:
குலவு தண் வரை சாரல், Kulavu Than Varai Charal - கொண்டாடத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில்
கால் கண் கொள் கொடி கையெழ, Kaal Kan Kol Kodi Kaiyezha - வெற்றிலைக் கால்கள் கணுக்கள் தோறும் கிளைக்கின்ற (வெற்றிலைக்) கொடிகள் மிகுதியாக வளரப் பெற்றதும்
கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல், Kamuku Ilam Paalaigal Kamazh Charal - பாக்கு மரங்களின் இளங்குருத்துகள் வாஸனை வீசப்பெற்ற சுற்றுப் பிரதேசங்களையுடையதும்
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு, Selgal Paaytharu Sezhu Nathi Vayal Pugu - மீன்கள் துள்ளி விளையாடுகிற அழகிய ஆறானது கழனிகளிலே பெருகப் பெற்றதுமான
1157பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ நியந்தாவாய் ஆயிற்று –ஆபத் சகனும் ஆயிற்று-தேவானாம் தனவாநாஞ்ச-என்கிறபடியே தன்னாலே ஸ்ருஜ்யரான இவர்கள் இரண்டு திறத்தாருக்கும் ஒத்து இருக்கையாலே தம்தாமுடைய அபேஷித சித்திக்காக தேவர்களும் அசுரர்களும் அடைய சென்று ஆஸ்ரயிகலாம் படி திருவயிந்திரபுரத்தில் நித்ய வாசம் பண்ணி அத்தாலே பரம பதத்தில் காட்டிலும் உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை எல்லாம் இல்லை இறே பரமபதத்தில் இவர்களுக்கு அபேஷிதம் விதானம் பண்ணுகையால் வந்த ஏற்றம் உண்டு இறே இங்கு- பாடிட-பாப அனுபவம் பண்ணுகைக்காக இறே சம்சாரத்தில் பிறக்கிறது அத்தை அனுபவிக்க வந்த இத் தேசத்தில் இத்தை அதிகரிக்கில் அவை தாம் நமக்கு இருப்பிடம் இல்லை என்று விட்டு ஓடிப் போம்) 10
மூவராகிய ஒருவனை மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த பாவு தண் தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே –3-1-10
பதவுரை Show / Hide
மூவர் ஆகிய ஒருவனை, Moovar Aagiya Oruvanai - தானொருவனே மும்மூர்த்தியாக உருவெடுத்து முத்தொழில் நிகழ்த்துமவனாய
மூ உலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை., Moovulagu Undu Umizhndhu Alandhanai - (பிரளயகாலத்தில்) மூன்று லோகங்களையும் உட்கொண்டு (பிறகு) வெளிப்படுத்தி (மற்றொருகால் திரிவிக்கிரமனாகி) அளந்தவனாய்
தேவர் தானவர் சென்றுசென்று இறைஞ்ச, Thevar Thanavar Senru Senru Irainja - தேவரும் தானவரும் வந்து வந்து வணங்கலாம்படி
தண்திரு அயிந்திராபுரத்து மேவு சோதியை, Thanthiru Ayindhirapurathu Mevu Sothiyai - குளிர்ந்த திருவயிந்திரபுரத்திலே நித்யவாஸம் பண்ணுகிற பரஞ்சோதியான பெருமானைக்குறித்து
வேல் வலவன் கலிகன்றி, Vel Valavan Kalikanri - வேல் பிடிக்கவல்ல திருமங்கை மன்னன்
விரித்து உரைத்த, Virithu Uraitha - விரிவாக அருளிச்செய்த
பாவு தன் தமிழ் இவை பத்து பாடிட, Paavu Than Tamil Ivai Paththu Paadida - அழகிய விஸ்தார கவியாக அமைந்த இப்பத்துப் பாசுரங்களையும் பாடியநுஸந்திக்குமளவில் பாவங்கள் பயிலா பாவங்கள் சேரமாட்டா.
1158பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மாம்சமானது குறைய அசன வசநாதிகளைக் குறைத்து பிராணன்களைப் போகாதபடி அப்பஷண வாயு பஷணங்களாலே கால் கட்டி சரீரத்தை விட்டுப் போகாத இந்திரியங்கள் ஐந்தும் ஸ்வ ஸ்வ விஷயங்களைப் பெறாமையாலே நொந்து ஈடுபடும் படி தாங்கள் மேன்மேலும் கிலேசிக்கும்படி தபஸு பண்ண வேண்டா-தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே) 1
ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர் கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய் தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே –3-2-1
பதவுரை Show / Hide
இமையோர் உலகு தமதுஆ ஆள கிற்பீர், Imaiyor Ulagu Thamathu Aala Kirbeer - பரமபதத்தை ஸ்வாதீநமாக ஆளவேண்டி யிருக்குமவர்களே!, (- (பின்னை என்ன செய்யவேண்டுமென்னில்;))
ஊன் வாட உண்ணாது, Oon Vaada Unnaadhu - மாம்ஸம் வற்றி யுலரும்படி உபவாஸங்களிலிருந்து
உயிர்காவலிட்டு, Uyirkavalittu - பிராணன் மாத்திரம் போகாதபடியாக (நீரையும் காற்றையும் உட்கொண்டு பிராணனைக்) காப்பாற்றி
உடலில் பிரியா புலன் ஐந்தும் நொந்து, Udalil Priya Pulam Aindhum Nondhu - சரீரத்தை விட்டுப் போகாத பஞ்சேந்திரியங்களும் நோவ
தாம் வாடவாட, Thaam Vaadavaada - தாங்கள் மேன்மேலும் வாட்டமடையும்படி
தவம் செய்ய வேண்டா, Thavam Seyya Venda - தபஸ்ஸூ பண்ணவேண்டா
கான் ஆட மஞ்ஞை கணம் ஆட, Kaan Aada Manjai Kanam Aada - சோலைகள் அசையும்படியாக
மஞ்சை கணம் ஆட, Manjai Kanam Aada - மயில்களின் கூட்டங்கள் ஆடவும்
மாடே, Maade - பக்கத்திலே
தேன், Then - வண்டுகளானவை
கயல் ஆடுநீர்கால் பழனம் படைபோய் ஆட, Kayal Aaduneerkal Pazhanam Padaipoy Aada - ஜலஸம்ருத்தியையுடைய வாய்க்கால்களை யுடைத்தான நீர்நிலங்களினருகே போய் (மதுவில்நசையாலே) மேலே பறக்கவும்
மாடம் கொடி ஆடு, Maadam Kodi Aadu - மாடங்களிலுள்ள கொடிகள் அசையாநிற்கவும் பெற்ற
தில்லை திருசித்ர கூடம், Thillai Thiruchithra Koodam - தில்லைத் திருச்சித்திரகூடமென்னுந் திருப்பதியை
சென்று சேர்மின்கள், Sendru Serminkal - சென்று சேருங்கள்.
1159பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு பண்ண வேண்டா ஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர் வாயாலே ஓதுகிற வேதம் குறைவறுகையாலே வந்த ஸ்வ பாவிக சம்பத்தை உடைய பிராமணர் என்றும் ஒக்க முறையாலே அனுஷ்டித்த அக்னி வளர வளர புகழ் ஓங்கா நின்று உள்ள ஸ்ரீ தில்லை) 2
காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் வாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-2
பதவுரை Show / Hide
திரு மார்பினை சிந்தையுள் வைத்தும் என்பீர், Thiru Maarbinai Sindhaiyul Vaiththum Enbeer - பிராட்டியைத் திருமார்பிற் கொண்ட பெருமானை நெஞ்சில் தரிப்போமென்றிருக்கிற பக்தர்களே!, (- (பிள்ளை என்ன செய்யவேண்டுமென்னில்) (தில்லை திருசித்ரகூடம் சென்று சேர்மின்கள்-.))
காயோடு நீடு கனி உண்டு வீசு கடுங் கால் நுகரிந்து, Kaayodu Needu Kani Undu Veesu Kadung Kaal Nukarinthu - இளங்காய்களையும் நெடுநாளுலர்ந்த பழங்களையும் புஜித்தும் வீசுகிற உஷ்ணமான காற்றை உட்கொண்டும்
நெடுங்காலம் ஐந்து தீயூடு நின்று, Nedungkaalam Aindhu Theeyoodu Nindru - நெடுநாள் வரையில் பஞ்சாக்நி மத்தியில் நின்றுகொண்டு
தவம் செய்ய வேண்டா, Thavam Seyya Venda - தபஸ்ஸூ பண்ணவேண்டர்
வாய் ஓது வேதம் மலிகின்ற, Vaai Othu Vedham Malikindra - வாயாலே ஓதப்பட்டு வருகிற வேதங்கள் குறைவற்றிருக்கிற
தொல்சீர்மறையாளர் நாளும் முறையால் வளர்த்த, Tholseermaraiyalar Naalum Muraiyala Valarttha - இயற்கையான நற்குணங்களமைந்த  வைதிகரிகள் நாள்தோறும் கிரமமாக அநுஷ்டித்த
தீ ஓங்க ஓங்க புகழ் ஓங்கு, Thee Onga Onga Pugazh Ongu - அந்நிகார்யங்கள் வளர வளர, (அதனாலே) கீர்த்தி வளரப் பெற்ற
1160பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பொழில் சூழ்ந்த பூமியை எடுத்தவனுடைய திருவடித் தாமரையை அணைய வேணும் என்னும் விருப்பத்தோடு வர்த்திப்பீர் – ரத்னங்களைக் கொண்டு பரிகரத்தோடும் பல்லவர் கோன் பணிவதும் செய்து செம் பொன்னாலும் மணியாலும் செய்த மாடங்கள் சூழா நின்றுள்ள ஸ்ரீ தில்லை) 3
வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள் புக்கு அழுந்த வம்புண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர் பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-3
பதவுரை Show / Hide
வம்பு உண் பொழில் சூழ் உலகு, Vambu Un Pozhil Soozh Ulagu - வாஸனை வீசுகின்ற சோலைகளால் சூழப்பட்ட பூமியானது (- (தில்லை…சேர்மின்கள்-.))
விரி முதுநீர்வெள்ளம் உள் புக்கு அழுந்த, Viri Muthuneervellam Ul Pukku Azhundha - பரந்த கடல் வெள்ளத்தினுள்ளே புகுந்து மூழ்கிப் போக
அன்று, Anru - அக்காலத்து,
வெம்பும் சினம் புனம் கேழல் ஒன்று ஆய் எடுத்தான், Vembum Sinam Punam Kezhal Onru Aayi Eduththan - மிக்க கோபத்தை யுடைத்தாய் விலக்ஷணமான காட்டு வராகத் திருவுருவாகி (அப்பூமியை அங்கு நின்றும்) உத்தரிப்பித்துக் கொணர்ந்த பெருமானுடைய
அடி போது அணைவான் விருப்போடு இருப்பீர், Adi Podhu Anaivan Viruppodu Iruppir - பாதாரவிந்தத்தை சாரவேணுமென்னும் ஆசை கொண்டிருக்கும் அன்பர்களே!,
மன்னவன் பல்லவர்கோன், Mannavan Pallavarkon - பல்லவ ராஜன்
பை பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து, Pai Ponnum Muththum Maniyum Konarndhu - அழகிய பொற்பூக்களையும் முத்துக்களையும் மாணிக்கங்களையும் கொண்டு வந்து (ஸமர்ப்பித்து)
படை பணிந்த, Patai Panintha - தனது பரிவாரங்களோடுகூட ஆச்ரயிக்கப்பெற்றதும்
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த, Sembon Mani Matangal Sulndha - அழகிய பொன்னாலும் ரத்னங்களாலும் செய்யப்பட்ட மாடங்களால் சூழப்பட்டதுமான
1161பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரு அநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே கறுத்துப் பெருத்த கடலிலே உகந்து கண் வளர்ந்து அருளின ஸ்ரீயபதி ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடே கூட விடாதே சஞ்சரிக்கிற ஸ்ரீ தில்லை) 4
அருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான் திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்ன கிற்பீர் கருமா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின் அணைப் பள்ளியின் மேல் திருமால் திரு மங்கையோடாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-4
பதவுரை Show / Hide
அன்று அரு மா நிலம் அளப்பான் குறள் ஆய், Anru Aru Ma Nilam Alappan Kural Aayi - முன் பொரு காலத்தில், ஒருவராலும் அளக்கமுடியாத பெரிய பூமியை அளப்பதற்காக வாமந ரூபியாகி (- (தில்லை…சேர்மின்கள்-.))
அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான் திரு நாமம் பிதற்றி, Avunan Peru Velviyan Senru Irandha Peruman Thiru Namam Pithattri - மாவலியென்னு மசுரனுடைய பெரிய யாகபூமியிற் சென்று (மூவடிமண்) யாசித்த பெருமானுடைய திருநாமங்களை வாயராச் சொல்லி
நும்தம் பிறவி துயர்நீங்குதும் என்ன கிற்பீர், Numtham Piravi Thuyarningudum Enna Kirpir - உங்களுடைய ஸம்ஸார துக்கங்களைப் போக்கிக் கொள்ள நினைத்திருக்குமன்பர்களே!,
கரு மா கடலுள், Karuma Katalul - கறுத்துப் பெரிய கடலிலே
கவை நா அரவின் அணை பள்ளியின்மேல், Kavai Na Aravin Anai Palliyinmel - இரட்டை நாவையுடைய திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளி மெத்தையின் மேல்
உவந்து கிடந்தான் திருமால், Uvandhu Kitandhan Thirumal - மகிழ்ந்து சயனித்தருள்பவனான திருமால்
திரு மங்கையொடு ஆடு, Thiru Mankaiyodu Adu - பிராட்டியோடு நித்பவாஸம் பண்ணப்பெற்ற
1162பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் நித்யவாசம் பண்ணி புகழ் மங்கை எங்கும் உஜ்ஜ்வலமாய் வர்த்திப்பதும் செய்து புகழையும் காப்பையும் உடைய பொழில் சூழ்ந்த ஸ்ரீ தில்லை) 5
கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக் குல மன்னரங்கம் மழுவில் துணிய தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித் தவ மா முனியைத் தமக்காக கிற்பீர் பூ மங்கை தங்கிப் புல மங்கை மன்னிப் புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-5
பதவுரை Show / Hide
கோ மங்க, Ko Manga - க்ஷத்ரியர்கள் அழியவும் (- (தில்லை…சேர்மின்கள்-.))
வங்கம் கடல் வையம் உய்ய, Vankam Katal Vaiyam Uyya - மரக்கலங்கள் நிறைந்த கடலால் சூழப்பட்ட பூமியிலுள்ளார் உஜ்ஜூவிக்கவும்
குலமன்னர் அங்கம் மழுவில் துணிய, Kulamannar Angam Maluvil Thuniya - ராஜாக்களுடைய சரீரம்  மழுவாலே துணிபடவும்
தாம், Tham - தாமே
அங்கு அமருள், Anku Amarul - அப்போதுண்டான போர்க்களத்திலே (புகுந்து)
படை தொட்ட, Padai Thotta - ஆயுதத் தொழில் புரிந்த
வென்றி தவம் மா முனியை, Vendri Thavam Maa Muniyai - ஜயசீலனாய்த தபஸ்வியான பரசுராமனாக அவதாரம் பண்ணின பெருமானை
தமக்கு ஆக்க கிற்பீர், Thamakku Aakka Kirbeer - ஸ்வாதீனப்படுத்திக்கொள்ள நினைக்கு மன்பர்களே!,
பூ மங்கை தங்கி புலம் மங்கை மன்னி, Poo Mangai Thangi Pulam Mangai Manni - பெரிய பிராட்டியர்(வலவருகே) தங்கியும் பூமிப் பிராட்டியர் (இடவருகே) பொருந்தியும்
புகழ் மங்கை எங்கும் திகழ, Pugazh Mangai Engum Thigazha - கீர்த்தியாகிற மங்கை எல்லாவிடங்களிலும் வியாபித்து விளங்கவும் பெற்று
புகழ் சேர் சேமம் கொள், Pugazh Ser Semam Kol - புகழோடு கூடிய க்ஷேமத்தையுடைத்தாய்
பை பூ பொழில் சூழ்ந்த, Pai Poo Pozhil Soozhntha - பரந்து பூத்த சோலைகளால் சூழப்பட்ட
1163பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராமணர் உடைய ஹிருதயத்துக்கு ஏற்ற – சிவந்த வாயை உடைத்தான கிளியானது நல்ல ஸ்வரத்தோடே நாலு வேதத்தையும் பாடா நின்றுள்ள ஸ்ரீ தில்லை) 6
நெய் வாயழ்லம்பு துரந்து முந்நீர் துணியப் பணி கொண்டு அணி யார்ந்து இலங்கு மையார் மணி வண்ணன் எண்ணி நுந்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர் அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான் அருமா மறை யந்தணர் சிந்தை புக செவ்வாய்க் கிளி நான் மறை பாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-6
பதவுரை Show / Hide
நெய் வாய் அழல் அம்பு துரந்து, Ney Vaai Azhala Amba Thurandhu - கூர்மை பொருந்திய வாயையுடைத்தாய் அக்நியைச் சொரிகின்ற அம்பை பிரயோகித்து (- (தில்லை சேர்மின்கள்-.))
முந்நீர்துணிய, Munnirthuniy - ஸமுத்ரத்தை த்வம்ஸம் செய்ய முயன்று (பின்பு ஸமுத்ரராஜன் அநுகூலித்து வந்தவாறே)
பணி கொண்டு, Pani Kondo - (அவன் மேலே அணை கட்டுகையாகிற) கைங்கரியத்தை அவனால் கொண்டவனாயும்
அணி ஆர்ந்து இலங்கு மை ஆர்மணிவண்ணனை எண்ணி, Ani Aarnthu Ilangu Mai Aarmani Vannanaik Enni - ஆபரணங்கள் நிறைந்து விளங்குகின்ற கருமணி போன்ற வடிவுடைய னாயு மிருக்கிற பெருமானை சிந்தித்து
நும் தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர், Num Tham Manaththae Iruththumpadi Vaazha Valliir - உங்களுடைய  நெஞ்சிலே (அவனை) இருத்தி வாழ நினைத்திருக்கு மன்பர்களே!,
அவ்வாய் இள மங்கையர், Avvai Ila Mangaiyar - அப்படிப்பட்ட வாயையுடைய சிறு பெண்கள்
அரு மா மறை பேசவும், Aru Maa Marai Pesavum - (காதால் கேட்டுக்கேட்டு முகபாடமான) அரிய பெரிய வேதவாக்கியங்களை சொல்லாநிற்க (அப்பெண்களுடனே கூட)
செம் வாய்கிளி அந்தணர் சிந்தை புக நால் மறைபாடு, Sem Vaaykili Andhanar Sindhai Puga Naal Maraipadu - சிவந்த வாயையுடைய கிளிகளானவை பிராஹ்மணர்கட்கும் மநோஹரமாக நான்கு வேதங்களையும் பாடுமிடமான
1164பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முல்லை -உடன் கூடின திருக் குழலை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டி யினுடைய மிருதுவான திருத் தோளிலே கலந்து அங்குண்டான மச்த்யங்கள் சுழலும்படி சுழன்று வருகிற கடல் பெற்ற ஸ்ரீ பெரிய பிராட்டி தங்கும் திரு மார்பை உடையவனை ஹிருதயத்தில் வைத்துக் கொள்ளும் என்பீர்-ஸ்ரீ தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே) 7
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் கௌவைக் களிற்றின் மருப்பும் பொறுப்பில் கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள் தெய்வப் புனல் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-7
பதவுரை Show / Hide
மௌவல் குழல் ஆய்ச்சி மெல் தோள் நயந்து, Mauval Kuzhal Aaychchi Mel Thol Nayandhu - முல்லைப்பூவைக் கூர்தலிலே அணிந்துள்ள நப்பின்னைப் பிராட்டியினுடைய மெல்லிய தோள்களை விரும்பி யணைந்தவனும், (- (தில்லை சேர்மின்கள்-.))
மகரம் சுழல சுழல் நீர்பயந்த தெய்வம் திரு மா மலர்மங்கை தங்கு திரு மார்பினை, Makarum Suzhal Suzhal Neerpayandha Deivam Thiru Maa Malarmangai Thangu Thiru Maarbinai - மீன்கள் சுழலும்படி சுழன்று வருகிற கடலினால் பிரஸவிக்கப்பட்ட அழகிய பெரிய பிராட்டியர்நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்பை யுடையவனுமான பெருமானை
சிந்தையுள் வைத்தும் என்பீர், Sindhaiyul Vaiththum Enbeer - நெஞ்சில் வைக்க வேண்டியிருக்குமன்பர்களே!,
கௌவை களிற்றின் மருப்பும், Kauvai Kalittrin Maruppum - (சிங்கத்தோடே பிணங்கிப் பிளிறுகிற யானையின் கொம்புகளையும்
நெருப்பில் கமழ் சந்தும, Neruppil Kamazh Chandhum - மலையிலுள்ள மணங்கமழ்கின்ற சந்தன மரங்களையும்
உந்தி, Undhi - தள்ளிக்கொண்டு
நிவா வலங்கொள் தெய்வம் புனல் சூழ்ந்து அழகயாய, Nivaa Valangol Deivam Punal Soozhndhu Azhagayaya - ‘நிவா’ என்கிற ஆறானது சுற்றிலும் பிரவஹிக்கப் பெற்றதும் புண்ய தீர்த்தங்களால் சூழப்பட்டு  அழகியதுமான
1165பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெருத்துப் பழையதான ஸ்ரீ கோவர்த்தனத்தை எடுத்து ஆயர் தலைவனாய் பசு மேய்த்து லோகத்தை திரு வயிற்றில் வைத்த ஆச்சர்ய பூதனுடைய ஆபரண ஒலியை உடைத்தாய் போக்யதை மிக்க திருவடிகளை கூட வேணும் என்னும் குறிப்பு உடையீர் சாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடியே ஆஸ்ரயிக்க அவர்களுக்கு ஆஸ்ரயணீயனாய் தேஜசை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்) 8
மா வாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முதுகுன்று எடுத்து ஆயர் தங்கள் கோவாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்புடையீர் மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-8
பதவுரை Show / Hide
மா வாயின் அங்கம் மதியாது கீறி, Maa Vaayin Angam Mathiyaadhu Keerii - கேசியென்னும் குதிரை வடிவாக வந்த அரசனுடைய வாயோடுகூட (அதன்) உடலையும் அலக்ஷியமாகப் பிளந்தொழித்தவனாயும், (- (தில்லை சேர்மின்கள்-.))
மழை மா முது குன்று எடுத்து, Mazhai Maa Muthu Kuntru Eduthu - (இந்திரன் பெய்வித்த) பெரு மழைக்காக பெரிய பழைய கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்துப் பிடித்தவனாயும்
ஆயர்தங்கள் கோ ஆய் நிரை மேய்த்து, Aayarthangal Ko Aay Nirai Meyththu - இடையர்கட்குத் தலைவனாய் பசுக்களை மேய்த்தவனாயும்
உலகு உண்ட, Ulaku Unda - (பிரளய காலத்தில்) உலகங்களை உண்டவனாயுமிருக்கிற
மாயன், Maayan - எம்பெருமானுடைய
குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர், Kurai Maa Kazhal Koodum Kurippu Udaiyeer - ஆபரவொலி பொருந்திய சிறந்த திருவடிகளை சேர வேணுமென்னும் நினைவுடைய அன்பர்களே!,
மூவாயிரம் நான்மறையாளர், Moovaayiram Naanmaraiyalar - மூவாயிரம் பிராமணர்கள்
நாளும் முறையால் வணங்க, Naalum Muraiyhaal Vananga - நாள்தோறும் முறைமைப்படி வந்து பணியப்பெற்று
அணங்கு ஆய சோதி, Anangu Aaya Sothi - அப்ராக்ருதமான தேஜஸ்ஸையுடையனான
தேவாதி தேவன், Devaadhi Devan - ஸர்வேசுரன்
திகழ்கின்ற, Thigazhkindra - விளங்குகின்ற
1166பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாதிகளுக்கும் கிட்ட அரிய ஸ்ரீ பரம பதத்தில் இருக்க வேண்டி இருப்பீர் மிக்க நீரை உடைய நிவா என்கிற ஆறு முத்தை கொடு வந்து வித்துகிற வயலிலே விக்ருதமான கயல்கள் பாய்ந்து தாவித் திரிய தர்சநீயமான நீலம் நின்று திகழா நின்றுள்ள ஸ்ரீ தில்லை) 9
செரு நீல வேல் கண் மடவார் திறத்துச் சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும் அரு நீல பாவம் அகலப் புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர் பெரு நீர் நிவா வுந்தி முத்தம் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-9
பதவுரை Show / Hide
செரு நீலம் வேல் கண் மடவார்திறத்து சினத்தோடு நின்று, Seru Neelam Veel Kan Madavaarthirathu Sinaththodu Nindru - யுத்தத்திற்குக் கருவியாய் நீல நிறத்தான வேல் போன்ற கண்களையுடைய ஸ்த்ரிகள் விஷயமாக வுண்டான கோபத்தோடு கூடியிருந்து (- (தில்லை சேர்மின்கள்-.))
மனத்தால் வளர்க்கும் அரு நீலம் பாவம் அகல, Manaththaal Valarkkum Aru Neelam Paavam Akala - நெஞ்சினாலே மேன்மேலும் வருத்தி செய்விக்கப்படுகிற போக்கமுடியாத நெஞ்சையிருள்மூடப் பண்ணுகிற பாவங்கள் நீங்கப்பெற்று
புகழ்சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர், Pugazhseer Amararukkum Eydhaadha Andaththu Iruppeer - புகழையுடைய பிரமன் முதலிய தேவர்கட்கும் துர்லபமான பரமபதத்திலே இருக்க வேண்டியிருக்கு மன்பர்களே?,
பெரு நீர்நிவா முத்தம் கொணர்ந்து உந்தி வித்தும் வயலுள் எங்கும், Peru Neernivaa Muththam Konarndhu Undhi Viththum Vayalul Engum - மிக்க நீரையுடைய ‘நிவா’ என்னும் ஆறானது முத்துக்களைக் கொண்டுவந்து தள்ளி விதைவிதைத்தாற்போலே சொருகப்பெற்ற வயல்களிலெல்லாம்
கயல் பாய்ந்து உகள, Kayal Paayndhu Ugal - மீன்கள் குதித்துத் துள்ளவும்
திரு நீலம் நின்று திகழ்கின்ற, Thiru Neelam Nindru Thigazhkindra - அழகிய நெய்தல்மலர்கள் எப்போதும் விளங்கவும் பெற்ற
1167பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரம உதாரரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் குறையாத ஓசை உடைத்தாக அருளிச் செய்த ஸ்ரீ திரு மொழி பத்தும் வல்லார் ப்ருதீவி பிரசுரமான லோகத்தை அளந்த திருவடிகளில் கீழே காலம் எல்லாம் வர்த்திக்கும்படி வாழ்வர்) 10
சீரார் பொழில் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடத்துறை செங்கண் மாலுக்கு ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும் காரார் புயல் கைக் கலிகன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார் பாரார் உலகம் அளந்தான் அடிக் கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே –3-2-10
பதவுரை Show / Hide
சீர்ஆர்பொழில் சூழ்ந்து அழகாய தில்லை திரு சித்ர கூடத்து, Seeraarpozhil Soozhndhu Azhagaya Thillai Thiru Chithra Koodaththu - சிறந்த சோலைகளால் சூழப்பட்டு அழகுபெற்ற தில்லைத் திருச்சித்திர கூடத்திலே
உறை செங்கண் மாலுக்கு, Urai Chengkan Malukku - நித்யவாஸம் பண்ணுகிற புண்டரி காக்ஷனான பெருமான் விஷயமாக,
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப, Aaradha Ullaththavar Kaettu Uvappa - எவ்வளவு பகவதநுபவம் பண்ணினாலும் திருப்தி பிறவாத நெஞ்சை யுடையரான அன்பர்கள் கேட்டு ஆநந்திக்கும்படி,
அலைநீர்உலகுக்கு அருளே புரியும், Alainirulakukku Arule Puriyum - கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலுள்ளார்க்கு அருள் செய்யுமவராய்
கார்ஆர்புயல் கை கலிகன்றி, Kaararpuval Kai Kalikanri - காளமேகம்போல் உதாரரான திருமங்கையாழ்வார் (அருளிச்செய்த)
குன்றா ஒலி மாலை ஓர்ஒன்பதோடு ஒன்றும் வல்லார்தாம், Kundraa Oli Maalai Ooronpathodu Ondrum Vallartham - குறையாத ஓசையை யுடைத்தான சொல்மாலையாகிய் இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள்,
பார்ஆர்உலகம் அளந்தான் அடி கீழ், Paararulakham Alandhaan Adi Keezh - பூமியையும் ஸ்வர்க்காதிலோகங்களையும் அளந்தவனான பெருமானுடைய திருவடிவாரத்திலே
பல காலம் நிற்கும்படி வாழ்வர், Pala Kaalam Nirkkumpadi Vaalvar - நெடுங்காலம் அடிமைசெய்து நிற்கும்படி வாழப் பெறுவர்.
1168பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இடையர் உடைய பசு நிரைக்கு அன்று இடர் தீர்க்கைக்காக இந்த்ரன் பிரேரித்த புஷ்கலா வர்த்தகாதி மேகங்கள் எல்லாம் கூடி வர்ஷித்த பெரு மழையைக் காத்த மநோஹாரி சேஷ்டிதத்தை உடையவன் என்று எல்லாரும் சொல்ல வருகிறவன்-ஸ்ரீ தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே) 1
வாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு ஆடல் நன் மா வுடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான் சேடுயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே –3-3-1
பதவுரை Show / Hide
மருது இடை வாட போகி, Maruthu Idai Vaada Pogi - இரட்டை மருதமரங்களின் நடுவே அவை பக்கமடையும் படி தவழ்ந்து சென்றவனாயும்,
மல்லரை கொன்று, Mallarai Konru - மல்லர்ளைக் கொன்றவனாயும்,
ஒக்கலித்திட்டு ஆடல் நல் மா உடைத்து, Okkalithittu Aadal Nal Maa Udaittu - நடைபழகி ஆடிக்கொண்டு வந்த கொடிய (அசுரக்) குதிரையைக் கொன்றவனாயும்,
அன்று ஆயர்ஆநிரைக்கு இடர் தீர்ப்பான், Andru Aayaraanairaikku Idar Theerppaan - முன்பொரு காலத்தில் இடையர்கட்கும் பசுக்கூட்டங்கட்கும் நேர்ந்த துன்பத்தைத் தீர்ப்பதற்காக
கூடிய மா மழை காத்த, Koodiya Maa Mazhai Kaatha - திரண்ட பெருமழையைத் தடுத்து ரக்ஷித்தவனாயுமிருக்கிற
கூந்தன் என, Koondhan Ena - கூத்துக்களாடின கோபால க்ருஷ்ணனென்று சொல்லும்படியாக
வருகின்றாள், Varugindraal - வருமவள்
சேடு உயர்பூ பொழில் தில்லை சித்திரகூடத்த உள்ளான, Sedu Uyarpo Pozhil Thillai Chithirakoodath Ullaana - இளமை தங்கிய ஓங்கின பூஞ்சோலைகளையுடைய தில்லைத் திருச்சித்திர கூடத்திலுள்ளான்.
1169பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவன் கேவலம் பிள்ளை அல்லன்-ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபன் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நாயகன் என்று நாட்டார் உடைய இந்திரியங்களைப் பிணைக்கும் வடிவை உடைய இடைப் பெண்கள் பாடி செவ்வைப் பூவைத் தூவ வருமவன்) 2
பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை பரிசு இது வென்றால் மா நிலமா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டுண் பூ மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி தே மலர் தூவ வருவான் சித்திர கூடத்து உள்ளானே –3-3-2
பதவுரை Show / Hide
பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட இது, Pei Magal Kongai Nanju Unda Ithu - “பேய்ச்சியான பூதனையினுடைய முலையில் (தடவியிந்த) விஷத்தை (அம்ருதமாக)
பிள்ளை பரிசு என்றால் புலன் கெழு கோவியர், Pillai Parisu Endraal Pulankezhu Koviyaar - இச் சிறுபிள்ளளையின் செயல்” என்று சொல்லிக் கேட்டதும
புலன் கெழு கோவியர், Pulankezhu Koviyaar - அழகிய இடைப் பெண்களானவர்கள்,
இவன், Ivan - “இக் கண்ணபிரான்”
மா நிலமாமகள் மாதர் கேள்வன் என்றும், Maa Nilamaamagal Maathar Kaelvan Endrum - பூமிப்பிராட்டிக்கு வல்லபன்” என்றும்
வண்டு உண் பூ மகள் நாயகன் என்றும் பாடி, Vandu Un Poo Magal Nayagan Endrum Paadi - “வண்டுகள் மதுவுண்கிற தாமரைப்பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்கு நாதன்” என்றும் சொல்லிப் பாடிக்கொண்டு
தே(ன்) மலர்தாவ, Theen Malartava - செவ்விகுன்றாத புஷ்பங்களைப் பணிமாற
வருவான், Varuvaan - (திருவாய்ப் பாடித் திருவீதிகளிலே) ஸஞ்சரித்த பெருமான்
சித்திர கூடத்து உள்ளான், Siththira Koodathu Ullaan - (இப்போது) சித்திரகூடத்திலே ஸேவை ஸாதிக்கின்றான்.
1170பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவன் வெண்ணெய் உண்டான் என்று இடைப் பெண்கள் கூடி ஏச எட்டுத் திக்கில் உள்ளாறும் திருவடிகளிலே வணங்கும்படியாக நிர்விகாரமான மருதின் உள்ளிட்டுப் போய் இடையர்களும் தேவர்களுமாய் ஆயிரம் திரு நாமங்களை சொல்லிக் கொண்டு தன்னுடைய ஆண் பிள்ளைத் தனத்தை பண்டு பாட வருவான்) 3
பண்டு இவன் வெண்ணெய் யுண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப எண் திசையோரும் வணங்க இணை மருதூடு நடந்திட்டு அண்டரும் வானத்தவரும் ஆயிர நாமங்களோடு திண் திறல் பாட வருவான் சித்திர கூடத்து உள்ளானே –3-3-3
பதவுரை Show / Hide
பண்டு, Pandhu - முன்பொருகாலத்தில் (- (சித்திரகூடத்து உள்ளான்-.))
இவள் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர்கூடி இழிப்ப, Ival Vennai Undaan Endru Aaychiyar Koodi Izhippa - “இச்சிறுபிள்ளை வெண்ணெயைத் (திருடித்) தின்றான்” என்று சொல்லி இடைச்சிகள் கும்பல் சேர்ந்து இழிவாகப் பேசப் பெற்றவனர்யும்,
எண் திசையோரும் வணங்க, En Thisaiyorum Vananga - எட்டுத்திக்கிலுள்ளாரும் வணங்கும்படியாக
இணை மருதூடு நடந்திட்டு, Inai Marudhoodu Nadandittu - இரட்டை மருதமரத்தினிடையே நடை பயின்றவனாயும்
அண்டரும் வானத்தவரும் ஆயிரம் நாமங்களோடு, Andarum Vaanaththavarum Aayiram Naamangalodu - இடையர்களும் தேவர்களும் ஸஹஸ்ரநாமங்களைச் சொல்லி
திண் திறல் பாட வருவான், Thin Thiral Paada Varuvaan - த்ருடமான ஆண் பிள்ளைத் தனத் தைப் பாடும்படி (திருவாய்ப்பாடியில்)  ஸஞ்சரித்தவனாயுமுள்ள பெருமான்
1171பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வளையாலே அலங்க்ருதமான கையையும் பீதைகளாய் பார்க்கும் நோக்கையும் உடைய இடைப் பெண்கள் அஞ்சிக் கூப்பிட கட்டவிழ்ந்து அலர்ந்த தாமரைப் பொய்கையினுடைய ஸ்ரமஹரமான கரையிலே சென்று இடையர் காண முளைத்த எயிற்றை உடைய பாம்பின் உடைய உச்சியிலே புக்கு நின்று அது வாடும்படி கூட விளையாடி அமர் செய்து வருமவன்-ஸ்ரீ சித்திர கூடததுள்ளானே) 4
வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட திளைத்தமர் செய்து வருவான் சித்திர கூடததுள்ளானே –3-3-4
பதவுரை Show / Hide
வளை கை நெடுங் கண் மடவார்ஆய்ச்சியர், Valai Kai Nedung Kan Madavaar Aaychiyar - வளையல்களணிந்த கைகளையும் நீண்ட கண்களையுமுடைய இடைப்பெண்கள் (- (சித்திரகூடத்து உள்ளான்-.))
அஞ்சி, Anji - பயப்பட்டு
அழைப்ப, Azaippa - (‘காளிங்க மர்த்தனமாகிற இந்த பயங்கரமான செய்தியை வந்து பாருங்கள்’ என்று) அழைக்க,
அண்டர், Andar - இடையர்கள்
தளைத்து அவிழ் தாமரை பொய்கை தண் தடம்புக்கு, Thalaiththu Avizh Thamarai Poigai Than Thadampukku - மலர்ந்த தாமரைப் பூக்களையுடைய வொரு பொய்கையின் குளிர்ந்த கரையிலே சென்று
காண, Kaan - பார்த்தவளவிலே
முளைத்த எயிறு அழல் நாகத்து உச்சியில், Mulaiththa Eiyiru Azhala Naagaththu Uchiiyil - முளைத்த பற்களையுடையதும் விஷாக்நியை உமிழ்வதுமான காளியநாகத்தினுச்சியிலே
நின்று, Nindru - நின்று கொண்டு
அது வாட திளைத்து, Adhu Vaada Thilaiththu - அந்த நாகம் இளைக்கும்படி நர்த்தனஞ் செய்து
அமர் செய்து, Amar Seidhu - உல்லாஸமாக வீதியார எழுந்தருளின பெருமான்
1172பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நப்பின்னை பிராட்டி யிடையாட்டத்துக்காக திரண்டு பெருமையை உடைய ருஷபங்களைக் கொன்று தன் பருவத்தில் பிள்ளைகளோடே தெருவிலே கூடி விளையாடி வருமவன் ஸ்ரீ சித்திர கூடததுள்ளானே) 5
பருவக் கரு முகில் ஒத்து முத்துடை மா கடல் ஒத்து அருவித் திரள திகழ்கின்ற ஆயிரம் பொன் மலை யொத்து உருவக் கரும் குழல் ஆய்ச்சி திறத்து இனமால் விடை செற்று தெருவில் திளைத்து வருவான் சித்திர கூடத்துள்ளானே –3-3-5
பதவுரை Show / Hide
பருவம் கருமுகில் ஒத்து, Paruvam Karumugil Othu - கார்காலத்திலுண்டான கான மேகம்  போன்றவனாயும் (- (சித்திரகூடத்து உள்ளான்-.))
முத்து உடை மாகடல் ஒத்து, Muthu Udai Magadal Othu - முத்துக்களையுடைய பெரிய கடல் போன்றவனாயும்
அருவி திரள் திகழ்கின்ற ஆயிரம் பொன் மலை ஒத்து, Aruvi Thiral Thigazhkindra Aayiram Pon Malai Othu - அருவிகளின் கூட்டங்களால் விளங்குகின்ற ஆயிரம் பொன் மலைகள்   போன்றவனாயும்,
உருவம் கருகுழல் ஆய்ச்சி திறந்து, Uruvam Karuguzhal Aaychchi Thirandhu - அழகிய கருத்த கூந்தலையுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
மால் விடை இனம் செற்று, Maal Vidai Inam Settru - பெரிய ரிஷபங்களின் திரளைத் தொலைத்தவனாயும்
தெருவில் திளைத்து வருவான், Theruvil Thilaithu Varuvaan - திருவாய்ப்பாடியின் வீதியிலே கூத்தாடிக்கொண்டு வருமவன்
1173பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவன் பண்டு எய்ய இலங்கை அழிந்தது-பசுக்களும் இடையரும் மலங்கும்படியாக வருகிற மழையைக் காக்கைக்காக அவை உய்யும்படிக்கு ஈடாக பெரிய மலையை எடுத்துக் காத்தான் என்று ஏத்தி பூமியில் உள்ளார் எல்லாரும் ஆஸ்ரயிக்க தேவா விஷ்டமான மலை போலே ஸ்ரீ பெரிய திருவடி மேலே ஏறி வருமவன்) 6
எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான் உய்யப் பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி வையத் தெவரும் வணங்க அணங்கு எழு மா மலை போலே தெய்வப் புள் ஏறி வருவான் சித்திர கூடத்துள்ளானே –3-3-6
பதவுரை Show / Hide
எய்ய இலங்கை சிதைந்தது, Eyy Ilangai Sithaindhadhu - (அதுவுந் தவிர) “ஒரு அம்பை தொடுத்து விட்ட மாத்திரத்திலே லங்காபுரியானது அழிந்தொழிந்தது (- (சித்திரகூடத்து உள்ளான்-;))
ஆநிரை மலங்க வரும் மழை காப்பான், Aanirai Malanga Varum Mazhai Kaappaan - பசுக்களின் கூட்டம் துன்பமடையும்படியாக  வந்து ஏழுநாள் ஓயாமல் பெய்த மழையை தடுப்பதற்காகவும்
உய்ய, Uyya - (ஆநிரைகள்) பிழைப்பதற்காகவும்
பருவரை தாங்கி காத்தான், Paruvarai Thaangi Kaaththaan - பெரிய கோவர்த்தன மலையைக் (குடையாக) எடுத்துப் பிடித்து எல்லாரையும் காப்பாற்றினான்.
என்று வையத்து எவரும் ஏத்தி வணங்க, Endru Vaiyaththu Evarum Aethi Vananga - என்று சொல்லி பூமியிலுள்ளாரெல்லாரும் துதித்துத் தொழும் படியாக
அணங்கு எழுமா மலைபோலே தெய்வம் புள் ஏறி வருவான், Anangu Ezhumaa Malaipolae Deivam Pul Aeri Varuvaan - தெய்வாவேசங் கொண்ட ஒரு பெரிய மலைபோலே யிருக்கிற திவ்ய பக்ஷியாகியகருடன் மீதேறிக் கொண்டு எழுந்தருளும் பெருமான்
1174பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தர்சநீயங்களாய் காவிமலர் போலே கறுத்து நெடிய கண்ணை உடைய ஸ்திரீகள் கை தொழும்படி வீதியிலே வருமவன் தேவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீ தில்லைச் சித்திர கூடத்துள்ளானே) 7
ஆவர் இவை செய்தறியார் அஞ்சன மா மலை போலே மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான் தேவர் வணங்கு தண் தில்லைத் சித்திர கூடத்துள்ளானே –3-3-7
பதவுரை Show / Hide
மா அஞ்சனம் மலைபோலே, Maa Anjanam Malaipolae - ” பெரிய கரிய மலை போன்றதும்
மேவு சினம், Mevu Sinam - மிகுதியாகக் கொண்ட கோபத்தையுடையதும்
முனிந்து இவை செய்வதறிவார் ஆவர், Muninthu Ivai Seivadharithaar Aavar - சீறியருளினது முதலிய இப்படிப்பட்ட  அருந்தொழில்களைச்  செய்வதறிவார்(இக்கண்ணபிரான் தவிர) வேறு யாருமில்லை ”( என்று சொல்லி )
அழகாய காவி மலர்நெடு கண்ணார் கைதொழ, Azhagaaya Kaavi Malarnedu Kannaar Kaithozh - அழகிய நீலோற்பலம் போன்ற நீண்ட கண்களையுடைய மாதர்கள் கைகூப்பித் தொழும்படியாக.
அடல், Adal - மிக்க வலிமையுடையதுமான
வேழம், Vezham - (குவலயாபீடமென்னும் கம்ஸனது) யானை
வீழ, Veel - மாண்டொழியும் படி
வீதி வருவான், Veethi Varuvaan - (வடமதுரைத்) தெருவிலே கம்பீரமாக எழுந்தருளினவன்
தேவர் வணங்கு, Thevar Vanangu - நித்யஸூரிகளும் வந்து வணங்கப்பெற்ற
தண், Than - அழகிய
தில்லை சித்திர கூடத்து உள்ளான், Thillai Chithira Koodathu Ullan - தில்லைத்திருச் சித்திரக்கூடத்தில் ஸேவை  ஸாதிக்கின்றான்
1175பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பண்டு ஒருகால் ஹிரண்யனை வெருவும்படி சீறி அவ்விடத்திலேயே அவனுடைய உடம்பை அளைந்து ஆயிரம் தோள் தோற்ற வ்யாபாரித்த உசிதமாக எரி கான்ற பசுமையை உடைய கண்ணும் நீண்ட எயிறும் பெரிய வாயும் ஆன ஸ்ரீ சிம்ஹ ரூபத்தை உடையவனாய் வருமவன்) 8
பொங்கி அமரில் ஒருகால் பொன் பெயரோனை வெருவ அங்கு அவனாகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்தாட பைம் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றோடு பேழ் வாய் சிங்க வுருவின் வருவான் சித்திர கூடத்துள்ளானே –3-3-8
பதவுரை Show / Hide
ஒருகால் அமரில் பொன் பெயரோன் வெருவ பொங்கி, Orukal Amarl Pon Peyron Veruva Pongi - முன்பொரு காலத்தில் போர்க்களத்தில் ஹிரண்யா ஸூரன் பயப்படும்படியாகக் கிளர்ந்து
அங்கு அவன் ஆகம் அளைத்திட்டு, Angu Avan Aagam Alaitthittu - அவ்விடத்திலே அவ்விரணியனது உடம்பிலே கை வைத்து
ஆயிரம் தோள் எழுந்தாட, Aayiram Thol Ezhundhaada - (அவனைச் சித்திரவதம் பண்ண வேணுமென்கிற பதற்றத்தாலே ) கைகள்  பலமுகமாகப் பெருக்கமடைய.
எரிகான்ற இரண்டு பைங்கண், Erikaanra Irandu Paingkan - நெருப்பை உமிழ்கின்ற பசுத்த இரண்டு திருக்கண்களையும்
நீண்ட எயிற்றொடு பேழ்வாய் சிங்கம் உருவில் வருவான், Neenda Eiyirrodhu Pezhvai Singam Uruvil Varuvaan - நீண்ட கோரப் பற்களையும்  பெரிய வாயையுமுடைய நரஸிம்ஹ ரூபியாய்க் காட்சி தந்த பெருமான் வருவான்
1176பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காளமேகம் போலே இருக்கும் வடிவையும் கையில் திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் உடையனாய் பெரிய மிடுக்கை உடைய ப்ரஹ்மாதிகள் சூழ்ந்து சேவிக்க சப்த லோகத்தில் உள்ளாறும் திருவடிகளில் விழுந்து ஏத்த ஸ்ரீ பிராட்டிமார் மூவரோடும் கூட வருமவன்) 9
கருமுகில் போல்வது ஓர் மேனி கையன் ஆழியும் சங்கும் பெரு விறல் வானவர் சூழ ஏழுலகும் தொழுது ஏத்த ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத் திருமகளோடும் வருவான் சித்திர கூடத்துள்ளானே –3-3-9
பதவுரை Show / Hide
கருமுகில் போல்வது ஓர்மேனி, Karumugil Polvathu Ormaeni - காளமேகம் போன்று விலக்ஷணமான திருமேனியோடும்
கையன ஆழியும் சங்கும், Kaiyan Aazhiyum Sangum - திருக்கைகளிலுள்ள திருவாழி திருச்சங்குகளோடுங் கூடி
பெருவிறல் வானவர் சூழ, Peruviral Vaanavar Soozha - மிக்க சக்தியையுடைய தேவர்கள் சுற்றிலும் சூழ்ந்து ஸேவிக்கவும்
ஏழ் உலகும் தொழுது ஏத்த, Ezhu Ulagum Thozhudhu Aetha - உலகத்திலுள்ளா ரெல்லாரும் வணங்கித் துதிக்கவும் பெற்று,
ஒருமகள் ஆயர்மடந்தை, Orumagal Aayarmadanthai - விலக்ஷணையான நீளாதேவியோடும்
ஒருத்தி நிலமகள், Oruththi Nilamagal - ஒப்பற்ற பூமிப்பிராட்டியோடும்
மற்றை திருமகளோடும், Mattrai Thirumagalodum - இன்னும் ஸ்ரீதேவியோடுங்கூடி
வருவான், Varuvaan - வருமவன்
1177பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ருக்கள் சரீரமே தனக்கு உறையாக உடைய வேலை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த அழகிய தமிழான இப்பத்தும் அப்யசித்தவர்கள் பக்கலில் அவர்கள் பண்ணின பாபம் பல அனுபவத்துக்கு சாரா) 10
தேனமர் பூம் பொழில் தில்லைச் சித்திர கூடம் அமர்ந்த வானவர் தங்கள் பிரானை மங்கையர் கோன் மருவார் ஊனமர் வேல் கலி கன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் தானிவை கற்று வல்லார் மேல் சாரா தீ வினை தானே –3-3-10
பதவுரை Show / Hide
தேன் அமர் பூ பொழில் தில்லை சித்திரகூடம் அமர்ந்த, Then Amar Poo Pozhil Thillai Chithirakoodam Amarntha - வண்டுகள் மொய்த்து அழகிய சோலைகளையுடைய தில்லைத்திருச் சித்திரகூடத்திலே நித்யவாஸஞ் செய்தருள்கிற
வானவர் தங்கள் பிரானை, Vaanavar Thangal Piraanai - தேவாதிதேவன் விஷயமாக,
மங்கையர்கோன், Mangaiyarkon - திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும்
மருவார்ஊன் அமர்வேல், Maruvaroon Amarveel - எதிரிகளின் சரிரத்திலே பொருந்தித் தைக்கும் வேற்படையையுடைய வருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார்(அருளிச் செய்த)
ஒண் தமிழ் இவை ஒன்பதோடு ஒன்றும், On Tamil Ivai Onpathodu Ondrum - அழகிய தமிழினாலாகிய இப்பத்துப் பாசுரங்களையும்
கற்று வல்லார்மேல், Kattru Vallarmeel - ஓதித் தேறினவர்களிடத்தில்
தீவினை சாரா, Theevinai Saara - பாவங்கள் கிட்டமாட்டா
1178பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித அர்த்தமாக தான் இரந்தான்-என்னும் மேன்மையை உடையவன் திருவடிகளை கிட்ட வேண்டி இருப்பீர் – அபௌருஷேயத்வ நிபந்தனமான கீர்த்தியை உடைய வேதங்கள் உடைய திரள்கள் நாலும் பஞ்ச மகா யஞ்ஞங்களும் ஆறு அங்கங்களும் ஏழு இசைகளும் தெருவிலே மிக்கு இருந்துள்ள உத்சவத்தால் வந்த அழகும் இவை எல்லாம் அடைய சிறக்கும்படியான ஸ்ரீ சீராம விண்ணகரை ஆஸ்ரயிங்கோள்) 1
ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருக வென மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும் தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-1
பதவுரை Show / Hide
ஒரு குறள் ஆய் இரு நிலம் மூ அடி மண் வேண்டி, Oru Kural Aayi Iru Nilam Moo Adi Mann Vendi - விலக்ஷண வாமநரூபியாகி (மஹாபலியிடஞ் சென்று) விசாலமான இந்த பூமிக்குள்ளே மூவடிநிலத்தை மாத்திரம் யாசித்து (- (அப்படியே அவன் தாரைவார்த்து தத்தஞ்செய்தவாறே) (மூன்றாமடியை வைக்க இடம் காணாமையாலே) (அதற்கு அவன் தன் தலையைக் காட்டவே அதில் மூன்றாமடியை வைத்து ) (நீங்கள் செய்யத்தக்கது என்னவென்றால்))
உலகு அனைத்தும், Ulaku Anaithum - கீழ்மேலுலகங்களெல்லாவற்றையும் இரண்டடியாலே ஈர்அடியால் ஒடுக்கி ஆக்கிரமித்து,
ஒன்றும் தருக எனா, Ondrum Taruga Ena - மற்றோரடி வைப்புக்கு உரிய நிலத்தைக் கொடு என்று சொல்லி
மாவலியை சிறையில் வைத்த, Mavalaiyai Siraiyil Vaiththa - அந்த மஹாபலியைப் (பாதாளமாகிற) சிறையிலே கொண்டு  வைத்த
தாடாளன், Thaadalain - பெருமை பொருந்திய ஸர்வேச்வரனுடைய
தாள் அணைவீர், Thaal Anaiveer - திருவடிகளைச் சேரவேண்டியிருக்குமவர்களே!
தக்க கீர்த்தி அருமறையின் திரள் நான்கும், Thakka Keerthi Arumaraayin Thiral Naankum - தகுதியான கீர்த்தியையுடைய அரிய வேதங்களின் திரள்கள் நான்கும்
வேள்வி ஐந்தும், Velvi Aindum - பஞ்சமஹாயஜ்ஞங்களும்
அங்கங்கள் அவை ஆறும், Angangal Avai Aarum - வியாகரணம் முதலிய ஆறு அங்கங்களும்
இசைகள் ஏழும், Isaihal Aezhum - ஸப்த ஸ்வரங்களும்
தெருவில் மலி விழா வளமும், Theruvil Mali Vizha Valamum - வீதி நிறைந்த உத்ஸவவைபவங்களும் (ஆகிய இவற்றாலே
சிறக்கும், Sirakkum - சிறப்புப் பெற்ற
காழி, Kaazhi - காழியென்னும் க்ஷேத்திரத்திலுள்ள
சீராம விண்ணகரி, Seerama Vinnakari - சீராம விண்ணகரமென்னும் திருப்பதியை
நீர்சேர்மின், Neerchermin - நீங்கள் சென்று சேருங்கள்
1179பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜகத்துக்கு ஈச்வரர்களாக பிரசித்தர் இருவரும் இறே அவர்கள் இருவரும் உடைய அபிமானத்தை கழித்தான் ஆயிற்று- ப்ரஹ்ம ருத்ராதிகள் -சேக்கள்-ஈச்வரோஹம் என்று கை ஒழிய ஓட ஸ்ரீ பக்தி உழவன் நம் பூர்வர்கள் -சங்குகள் -ஸ்வ ஸ்வபாவரைப் பெறுவிக்க கமலமலர் பாவை முகம் விகசித்து அனுராக அதிசயம் வெள்ளம் இட அதிலே துள்ளா நிற்பர் ஸ்ரீ நித்ய சூரிகள்) 2
நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை நலமிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன் ஊன் முகமார் தலையோட்டூண் ஒழித்த எந்தை ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழுசேயோடச் சூழ் முகமார் வளையளைவாய் உகுத்த முத்தைத் தொல் குறுக்கு சினை என்னச் சூழ்ந்து இயங்க எங்கும் தேன் முகமார் கமல வயல் சேல் பாய் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-2
பதவுரை Show / Hide
நான்முகன் நாள் மிகை தருக்கை, Naanmugan Naal Mikai Tharukkai - பிரமனுக்குஆயுள் மிகுதியினா லுண்டான கருவத்தை (- (நீங்கள் செய்ய வேண்டியதாவது) (காழி………சேர்மின்-.))
இருக்கு வாய்மை நலம் மிகுசீர் உரோமசனால்நவிற்றி, Irukku Vaimai Nalam Mikuseer Uromasanalnavittri - வேதாத்யயநநிஷ்டனும் நற்குணங்க ளமைந்தவனுமான ரோமசமஹர்ஷி யினால் போக்கடித்தவனாயும்.
நக்கன் ஊன்முகம் ஆர்தலை ஓடு ஊண் ஒழித்த எந்தை, Nakkan Oonmugam Aarthalai Odu Oon Ozhitha Endhai - மாமிசம் முதலியவை தங்கியிருந்த கபாலத்தைக் கொண்டு பிச்சையெ டுத்தலை தவிர்த்தவனாயுமுள்ள எம் பெருமானுடைய
ஒளிமலர்சேவடி அணைவீர், Olimalarsevati Anaiveer - அழகு பொருந்திய திருவடித் தாமரைகளை அணுகவேணுமென்றிருக்கு மன்பர்களே!
உழு சே ஓட, Uzhu Se Oda - உழுகிற எருதுகள் (வயல்களிலே ஓடுவதனால்.
சூல்முகம் ஆர்வளை அளைவாய் உகுத்த முத்தை, Soolmugam Aarvalai Alaiyai Ukutha Muththai - பிரஸவிக்குந் தருணத்திலிருந்த சங்குகள் வங்குகளிலே ஈன்ற முத்துக்களை
தொல் தருகு, Thol Tharugu - பெரிய கொக்குகளானவை
சினை என, Sinai Ena - தங்களுடைய முட்டையென்று (மயங்கி )
சூழ்ந்து இயங்க, Sozhndhu Iyanga - (அந்த முத்துக்களைச்) சுற்றி ஸஞ்சாரியா நிற்கப் பெற்றதும்
எங்கும், Engum - எல்லாவிடங்களிலும்
தேன்முகம் ஆர்கமலம், Thenmugam Aarkamalam - தேனெழுகுகின்ற முகம் பொருந்திய தாமரைகளையுடையதும்
சேல் பாய், Sel Pai - மீன்கள் துள்ளிக் குதிக்கப் பெற்றதுமான
வயல், Vayal - கழனியையுடைய
1180பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (களை பறிப்பதாக அடுத்து வயலிலே இழிந்து கண்ணுக்கும் வாய்க்கும் அவற்றோடு உண்டான சர்வதா சாம்யத்தாலே களை பரியாதே போந்து ஏறுகிற ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே) 3
வையணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்ந்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு மையணைந்தகு வளைகள் தம் கண்கள் என்றும் மலர்க்குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள் செய்யணைந்து களைகளை யாதேறும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-3
பதவுரை Show / Hide
வை அணைந்த நுதி கோடு வராகம் ஒன்று ஆய், Vai Anaindha Nuthi Kodu Varagam Ondru Aayi - கூர்மை பொருந்திய முனையையுடைய கோரப் பற்களையுடைத்தான விலகூண் வராஹகூரூபியாகி
மண் எல்லாம் இடத்து எடுத்து மதங்கள் செய்து, Man Ellam Idathu Eduthu Mathangal Seidhu - பூமி முழுவதையும் அண்டபித்தியில் நின்றும் ஓட்டுவிடுவித்து (கோட்டு நுனியில்) ஏந்திக் கொண்டு வந்து  செருக்கு விளங்கும் வியாபாரங்களைச் செய்தவனாயும்,
வாணன் திண் நோள் நெய் அணைந்த திகிரியினால் நேர்ந்தவன், Vaanan Thin Nool Ney Aanaindha Thigiriyinaal Naerndhavan - பாணாஸீரனுடைய திடமான புஜங்களை கூர்மை பொருந்திய திருவாழியினால் அறுத்தவனாயுமுள்ள பெருமானுடைய
தாள்;, Thaal - திருவடிகளை
அணைகிற்பீர், Anaikirbeer - சேர விரும்பியிருக்கு மண்பர்களே
கடைசிமார்கள், Kadaisimaargal - பள்ளச்சிகள்
செய் அணைந்து, Sei Anaindhu - களை பறிப்பதாகக்  கழினியிலே இழிந்து,
நெய்தலோடு மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும், Neithalodu Mai Anaindha Kuvalaihal Tham Kangkal Endrum - நெய்தல் மலரையும் கருமை நிறம் மிக்க குவளை மலரையும் தங்களுடைய கண்களாகவும்
குமுதம் மலர்தம் வாய் என்றும், Kumudham Malartham Vaai Endrum - சிவந்த ஆம்பல் மலரை தங்களுடைய வாயாகவும் ப்ரமித்து
களை களையாது ஏறும், Kalai Kalaiyadhu Aerum - களை பறியாமலே வெறுமனே கரையேறுமிடமான
காழி, Kaazhi - சேர்மின்
1181பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆளிட்டு செய்தல் -ஆயுதங்களாலே அழியச் செய்தல் செய்கை அன்றிக்கே ஆஸ்ரித விரோதியை தானே கை தொட்டு திரு உகிராகிற வேலாலே அழியச் செய்து அத்தாலே வந்த சுத்தியை உடையவன் திருவடிகளைக் கிட்ட வேண்டி இருப்பீர்-ஏக காலத்தில் இருளும் சந்த்ரோதயமும் வெய்யிலும் ஒக்கக் கண்டு அனுபவிக்கும் படியான தேசம் ஆயிற்று) 4
பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னம் பைம்பூண் நெஞ்சிடந்து குருதி உகிர் வேலாண்ட நின்மலன் தாள் அணை கிற்பீர் நீல மாலைத் தஞ்சடைய இருள் தழைப்பத் தரளம் ஆங்கே த்ண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால் செஞ்சுடர் வெயில் விரிக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-4
பதவுரை Show / Hide
முன் நாள், Mun Naal - முற்காலத்தில்
பஞ்சிய மெல் அடி            பின்னை திறந்து, Panjiy Mel Adi Pinnai Thirandhu - பஞ்சு போன்று மிருதுவான திருவடிகளையுடைய  நப்பின்னைப் பிராட்டிக்காக
பாய் விடைகள் ஏழ் அடர்ந்து, Pai Vidhaigal Ezhu Adarndhu - மேல் விழுந்து நலியுமியல்வுடைய ரிஷபங்களேழையும் வலியடக்கினவனாயும்
பொன்னன் பை பூண் நெஞ்சு இடந்து, Ponnan Pai Poon Nenju Idanthu - இரணியாசுரனுடைய அழகிய ஆபரணங்களணிந்துள்ள மார்வை பிளந்து
குருதி உக உகிர்வேல் ஆண்ட நின்மலன், Kuruthi Uga Ugirvel Aanda Ninmalan - ரத்தம் பீறிப்புறப்படும் படி நகங்களையே வேலாயுதமாகக் கொண்டு வியாபரித்தவனாயுமுள்ள பரிசுத்த பரமாத்மாவினது
தான் அணைகிற்பீர், Thaan Anaikirbeer - திருவடிகளை சேர விரும்பும் அன்பர்களே!
நீலம், Neelam - (மாடங்களிற் பதித்த) நீல ரத்னங்கள்
மாலை தஞ்சு உடைய இருள் தழைப்ப, Maalaithanju Udaiya Irul Thazhaippa - அந்திப் பொழுதை ஆதாரமாகவுடைய இருட்டை அதிகப்படுத்தவும்
ஆங்கே தரளம் தண் மதியின் நிலா காட்ட, Aange Tharalam Than Mathiyin Nila Kaata - அவற்றின் நடுவே யழுத்தின முத்துக்கள் குளிர்ந்த சந்திரனது நிலாவைக் காட்டவும்
பவளம் தன்னால், Pavalam Thannal - (இடையிடையே அழுத்தப்பட்ட) பவழங்களாலே
சுடர் செம் வெயில் விரிக்கும், Sudar Sem Veyil Virikkum - (உதயகாலத்து) ஸூர்யனுடைய சிவந்த காந்தியைப் பரப்பவும் பெற்று
அழகு  ஆர், Azhagu Aar - அழகு பொருந்தியுள்ள
1182பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து இப்படி ஆஸ்ரித விரோதிகளை கை தொட்டு போக்குமவன் திருவடிகளைக் கிட்ட வேண்டி இருப்பீர் ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே) 5
தெவ்வாய மற மன்னர் குருதி கொண்டு திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்தி செய்து வெவ்வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர் கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர் அவ்வாய வாள் நெடும் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல் செவ்வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-5
பதவுரை Show / Hide
தெவ் ஆய மறம் மன்னர் குருதி கொண்டு, Thev Aaya Maram Mannar Kuruthi Konda - சத்துருக்களாகிய வீரராஜாக்களினுடைய ரத்தத்தாலே
திருக்குலத்தில் இறந்தோர்க்கு திருத்தி, Thirukkulathil Irandhorkku Thiruththi - தன் வம்சத்தில் மாண்டவர்களுக்குத் தர்ப்பணம் செய்து செய்த பரசுராமனாக அவதரித்தவனாயும்
வெம் வாய மா கீண்டு, Vem Vaaya Maa Keendu - கொடிய வாயையுடைய குதிரையாக வந்த வசுரனைக்  கிழித்தொழித் தவனாயும்
வேழம் அட்ட, Vezham Atta - கம்ஸனது யானையை முடித்தவனாயுமுள்ள
விண்ணவர்கோன், Vinnavarkon - தேவாதி தேவனுடைய திருவடிகளை தாள் அணைவீர் சேரவிரும்பு மன்பர்களே! குவளை விகிர்தம் மாதர் அவ்வாயலாள்
நெடுங் கண் காட்ட, Nedung Kan Kaata - கருநெய்தற் பூக்களானவை விலகூணைகளான ஸ்திரிகளுடைய அப்படிப்பட்ட அழகிய நீண்ட கண்கள்  போன்று விளங்கவும்
அரவிந்தம் முகம் காட்ட, Aravindham Mugam Kaata - தாமரை மலர்களானவை (அவர்களது முகம் போன்று விளங்கவும் )
அருகே ஆம்பல் செம் வாயின் திரள் காட்டும், Aruke Aampal Sem Vaayin Thiral Kaatum - அருகிலுள்ள செவ்வல்லி மலர்களானவை (அவர்களது  சிவந்த வாய்களின் கூட்டம் போன்று விளங்கவும் பெற்ற
வயல் சூழ், Vayal Soozh - கழனிகளால் சூழப்பட்ட நெல்
1183பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதியைப் போக்கி தேவ ஜாதிக்கு குடி இருப்பைப் பண்ணிக் கொடுத்த ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளை ஆஸ்ரயிக்க வேண்டி இருப்பீர்) 6
பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாளப் படர் வனத்துக் கவந்தனொடும் படையார் திண் கை செங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் தாள் அணைகிற்பீர் வெற்புப் போலும் துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி யிடையார் முகக் கமலச் சோதி தன்னால் திங்கள் முகம் பனி படைக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-6
பதவுரை Show / Hide
பைங் கண் விறல் செம் முகம் வாலி மாள, Paing Kan Viral Sem Mukam Vaali Maala - பசுமை தங்கிய கண்களையும் மிடுக்கையும் (கோபத்தாற்) சிவந்த முகத்தையுமுடைய வாலியென்னும் வாநர ராஜன் முடியும்படியாகவும். (- (அழகு ஆர்காழி ………. சேர்மின்-.))
படர் வனத்து கவந்தனொடும் திண் படை ஆர்கை வெம் கண் விறல் வீராதன் உக, Patar Vanaththu Kavandhanodum Thin Padai Aarkai Vem Kan Viral Veeradhan Uga - பரந்த காட்டிலுள்ள கபந்தனென் பவனும் திடமான   ஆயுதங்கள் நிறைந்த கைகளையும் உக்ரமான கண்களையும் வலிமையையுமுடைய விராதனெ ன்பவனும் முடியும்படியாகவும்
வில் குனிந்த, Vil Kunindha - வில்லை வனைத்து (அம்புகளைப் பிரயோகித்த)
விண்ணவர் கோன், Vinnavar Kon - தேவாதி தேவனுடைய
தாள் அணைவீர், Thaal Anaiveer - திருவடிகளையடைய விரும்புமன்பர்களே!;-
வெற்பு போலும் துங்கம் முகம் மாளிகை மேல் ஆயம் கூறும், Verpu Polum Thungam Mukam Maaligai Mael Aayam Koorum - மலை போன்று உயர்ந்த முகத்தையுடைய மாளிகைகளின்  மேல் நிலத்திலே நின்று ஸ்நேஹமாகப் பேசிக் கொண்டிருக்கிற
துடி இடையார், Thudi Idaiyaar - உடுக்கை போன்று நுண்ணிய இடையையுடைய மாதர்களது
கமலம் முகம் சோதி தன்னால், Kamalam Mukam Sothi Thannal - தாமரை போன்ற முகத்தின் காந்தியினாலே
திங்கள் முகம் பனி படைக்கும், Thingal Mukam Pani Padaikkum - சந்திரனுடைய முகத்திலே வருத்தமுண்டாக்கப் பெற்ற
1184பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ருக்களால் சலிப்பிக்க அரிதான தோளை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனைக் கிட்டி அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க வேண்டி இருப்பீர்) 7
பொருவில் வலம்புரி யரக்கன் முடிகள் பத்தும் புற்றுமறிந்தன போலப் புவி மேல் சிந்த செருவில் வலம்புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த் தெள்கி மருவி வலம்புரி கைதைக் கழி யூடாடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே –3-4-7
பதவுரை Show / Hide
பொருவு இல் வலம்புரி அரக்கன் முடிகள் பத்தும் பத்தும் புற்று மறிந்தன போல புவிமேல சிந்த, Poruvu Il Valampuri Arakkan Mudigal Paththum Paththum Putttru Marindhana Pol Puvimel Sindha - ஒப்பற்ற வலிமையைக் கொண்டுள்ள இராவணனுடைய பத்துத் தலைகளும் புற்று சரியுமாபோலே (எளிதாகக்) கீழே இற்று விழும்படியாக (- (பிறகு அங்கு நின்றும் ) ( பிறகு அங்கு நின்றும் ) (காழி …………..சேர்மின்))
செருவில் வலம்புரி சிலை கைமலை தோள்வேந்தன், Seruvil Valampuri Silai Kaimalai Tholvendhan - யுத்தத்தில் வலிமை காட்டுகிற வில்லை திருக்கையிலேயுடைய மலை போன்ற தோள்களையுடைய சக்ரவர்த்தி திருமகனது
திரு அடி சேர்ந்து உய்கிற்பீர், Thiru Adi Serndhu Uygirbeer - திருவடிகளையடைந்து வாழ விரும்புமன்பர்களே!
வலம்புரி, Valampuri - சங்குகளானவை
திரை எள்கி நீத்து மருவி, Thirai Elgi Neethu Maruvi - ஸமுத்ரத்தை இகழ்ந்து விட்டு நீங்கி (கடலில் நின்றும் வந்து ) (சீர்காழியிலே) வந்து சேர்ந்து
கைதை கழியூடு ஆடி, Kaithai Kazhiyoodu Aadi - தாழைகள் நிறைந்த கழயினுள்ளே திரிந்து
வயல் நண்ணி, Vayal Nanni - கழனிகளைச் சென்று சேர்ந்து
மழை தருநீர்தவழ் கால், Mazhai Tharuneerthavazh Kaal - மழைநீர்வெள்ளம் பெருகி வருகிற வாய்க்கால்கள் மூலமாக
தெருவில் மன்னி, Theruvil Manni - வீதிகளிலே வந்து சேர்ந்து
வலம்புரி தரளம் ஈனும், Valampuri Tharalam Eenum - சங்குகளையும் முத்துக்களையும்  (தெருக்களிலே) பிரஸவிக்கப்பெற்ற
1185பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சத்ய பாமைப் பிராட்டி ஹேதுவாக என்றும் ஒக்க ஸ்வர்க்கத்தில் இருக்கக் கடவதான வ்ருஷத்தை பூமியிலே கொடு வந்து நிறுத்தினவனுடைய இத்தால் –அரியன செய்தும் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமவன் என்கை) 8
பட்டரவேரகல்குல் பவளச் செவ்வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பாலாம் இன் சொல் மட்டவிழும் குழலிக் காவானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி யணை வீர் அணில்கள் தாவ நெட்டிலைய கரும் கமுகின் செங்காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத் தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-8
பதவுரை Show / Hide
பட்டு அரவு ஏர்அகல் அல்குல், Pattu Aravu Aerakhal Alkul - பட்டுச் சேலை யணிந்துள்ளதும், பாம்பின் படத்தை யொத்து அழகியதும் அகன்றதுமான நிதம்ப ப்ரதேசத்தையும் (- (காழி……… சேர்மின்))
பவளம் செம் வாய், Pavalam Sem Vai - பவழம் போற் சிவந்த அதரத்தையும்
பணை நெடு தோள், Panai Nedu Thol - மூங்கில் போன்று நீண்ட தோள்களையும்
பிணை நெடு கண், Pinai Nedu Kan - அமுதம் போன்று இனிமையான வாய்மொழிகளையும்
மட்டு அவிழும் குழலிக்கா, Mattu Avizhum Kuzhalikka - முழயிலணிந்த மலர்களினின்றும் ) தேன்வெள்ள மிடா நின்ற கூந்தலையும் உடையளான ஸத்யபாமைப் பிராட்டிக்காக
வானோர்காவின், Vaanorkavin - தேவலோகத்துச் சோலையில் நின்றும்
மரம் கொணர்ந்தான், Maram Konarnthaan - பாரிஜாத மரத்தைப் பிடுங்கிக் கொண்டு வந்த பெருமானுடைய
அடி அணைவீர், Adi Anaiveer - திருவடிகளைச் சேர விரும்புமன்பர்காள்
அணில்கள் தாவ, Anilkal Thaava - அணிற்பிள்ளைகள் கிளை கிளையாகத் தாவித்தவழ்வதனால்
நெடு இலைய கரு கமுகின் செங்காய் வீழ, Nedu Ilaiya Karu Kamukin Chengai Veezha - நீண்ட இலைகளையுடைய கறுத்த பாக்கு மரங்களின் பழுக்காய்கள் உதிர்ந்து விழ (அதனாலே)
நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு, Neel Palavin Thaazh Sinaiyil Nerungu - நீண்ட பலாமரங்களினுடைய (காய்களின் கணத்தால்) தாழ்ந்த கிளைகளில் நெருங்கியிருக்கிற
பீனம் தெட்ட பழம் சிதைந்து மது சொரியும், Peenam Thetta Pazham Sithaindhu Madhu Soriyum - பருத்த கனியப்பழுத்த (பலாப்) பழங்கள் நசுங்கி தேனைப்  பொழியுமிடமான
1186பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடு அநந்ய பரையான ஸ்ரீ பிராட்டியோடு வாசி அற திருமேனியில் இடம் கொடுத்துக் கொண்டு இருக்கிற ஸ்ரீ சீலவானைப் பெற வேண்டி இருப்பீர்) 9
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழி நீர் கூடி துறை தங்கு கமலத்துயின்று கைதைத் தோடாரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணிச் சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காசிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே— –3-4-9
பதவுரை Show / Hide
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து, Pirai Thangu Sadaiyainai Valatthae Vaiththu - சந்திரகலை தங்கியிருக்கப் பெற்ற சடைமுடியையுடையனான சிவனை வலவருகே வைத்துக் கொண்டிருப்பவனாயும் (- (காழி…….சேர்மின்))
பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து, Brahmanai Than Unthiyile Thotruviththu - நான்முகனைத் தனது ஜாபிக்கம லத்தில் படைத்தவனாயும்
கறை தங்குவேல் தட கண் திருவைமார்வில் கலந்தவன், Karai Thanguvael Thada Kan Thiruvaimarvil Kalandhavan - சத்ருக்களின் ரத்தமாம்ஸக் கறை தங்கிய வேல்  போன்று விசாலமான திருக்கண்களையுடைய பிராட்டியைத் திருமார்பிலே கொண்டுள்ளவனாயுமிருக்கிற பெருமானுடைய
தாள் அணைகிற்பீர், Thaal Anaikirbeer - திருவடிகளைச்சேர விரும்புமன்பர்களே!
சிறை வண்டு, Sirai Vandu - இறகையுடைய வண்டுகளானவை
கழுநீர்கூடி, Kazhunirkoodi - செங்கழுநீர்ப்பூக்களில் (பேடையோடு) சேர்ந்திருந்து
துறை தங்கு கமலத்து துயின்று, Thurai Thangu Kamalathu Thuyinru - நீர்நிலங்களிலுள்ள தாமரைப் பூவிலே (புகுந்து தேனைப் பருகி அங்கே) உறங்கி (அதன் பிறகு)
கைதை தோடு ஆரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணி, Kaithai Thodu Aarum Pothi Soattruch Sunnaam Nanni - தாழைமடல்களில் பொருந்தியுள்ள பூந்தாதுத் துகள்களிலே புரண்டு
களி பாடும் வயல் சூழ், Kali Paadum Vayal Soozh - களித்து இசைபாடப் பெற்ற கழனிகளால் சூழப்பட்ட
1187பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாயந்தே தேவரைக் கவி பாட என்று துடங்கி தம்மைக் கவி பாடிக் கொண்டார் என்ன – அதுவும் நம்மை அன்றோ சொல்லிற்று என்று திரு உள்ளம் ஆனார் ஸ்ரீ சர்வேஸ்வரனைப் போலே எல்லார்க்கும் தாங்களே ஆஸ்ரயணீயராவார்) 10
செங்கமலத் தயன் அனைய மறையோர் காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலிநாடன் அருள்மாரி யரட்டமுக்கி யடையார்சீயம் கொங்குமலர் குழலியர் கோன் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன சங்க முத்தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலக்குக்கு தலைவர் தாமே –3-4-10
பதவுரை Show / Hide
செங்கமலத்து அயன் அனைய மறையோர், Chengamalathu Ayan Anaiya Maraiyor - (திருநாபிக்) கமலத்திற் பிறந்த பிரமனையொத்த வைதிகரிகள் வாழ்கிற
காழி சீராம விண்ணகரின், Kaazhi Seeraama Vinnagarin - காழிச் சீராம விண்ணகரத்திலுள்ள
செங் கண் மாலை, Cheng Kan Maalai - செந்தாமரை போற் கண்ணனான பெருமான் விஷயமாக
அம் கமலம் தடம் வயல் சூழ் ஆலி நாடன், Am Kamalam Thadam Vayal Soozh Aali Naadan - அழகிய தாமரைத்தடாகங்களையுடைய வயல்களால் சூழப்பட்ட திருவாலி நாட்டுக்குத்  தலைவரும்
அருள் மாரி, Arul Maari - (பக்தர்கட்கு) அருளைப் பொழியும் மேகம் போன்றவரும்
அரட்டு அமுக்கி, Arattu Amukki - தீங்கு செய்யுமவர்களைத் தலையெடுக்க வொட்டாதே அமுங்கச் செய்பவரும்
அடையார்சீயம், Adaiyaarcheeyam - சத்ருக்களுக்கு ஸிம்ஹம் போன்றவரும்
கொங்கு மலர்குழலியர்வேள், Kongu Malarkuzhaliyarveel - தேன்மிக்க பூக்களையணிந்த கூந்தலையுடைய மாதர்க்கு விரும்பத்தக்கவரும்
மங்கை வேந்தன், Mangai Vendan - திருமங்கைக்கு நிர்வாஹகரும்
பரகாலன், Parakaalan - எதிரிகட்கு யமன் போன்றவரும்
கொற்றம் வேல், Kotrama Veel - வெற்றி பொருந்தியவேற்படையை யுடையவருமான
கலியன், Kaliyan - ஆழ்வார்
சொன்ன, Sonna - அருளிச் செய்த
சங்கம் முகம் தமிழ் மாலை பத்தும் வல்லார்தாம், Sangam Mukam Tamil Maalai Pathum Vallaartaam - (புலவர்) கூட்டங்கூடிக் கொண்டாடத் தகுந்த தமிழ்ப் பாசுரங்களான இப்பத்தையும் ஓதவல்லவர்கள்
தட கடல் சூழ் உலகுக்கு தலைவர், Thada Kadal Soozh Ulagukku Thalaivar - பரந்த கடலால் சூழப்பட்ட உலகத்திலுள்ளார்க்கெல்லாம் மேலாயிருக்கப் பெறுவர்.
1188பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எனக்கு தாரகனுமாய்-நிரதிசய போக்யனுமான நீ ஸ்ரீ திருவாலியை இருப்பிடமாக உடையையாய் வைத்து தனக்கு என ஓர் இடம் இல்லாதாரைப் போலே என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தாயே – அந்யதா அஞ்ஞானமான தேசத்தை இருப்பிடமாக உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து என் ஹிருதயத்திலே வந்து புகுந்தாயே) 1
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும் என் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னார் உயிரே அந்தளி ரணியார சோகின் இளந்தளிர்கள் கலந்து அவை எங்கும் செந்தழல் புரியும் திருவாலி யம்மானே –3-5-1
பதவுரை Show / Hide
அம் தளிர்அணி ஆர் அசோகின் இளதளிர்கள் அவை, Am Thalirani Aar Asokkin Ilathalirgal Avai - அழகிய தளிர்களாலுண்டான அழகு பொருந்திய அசோக மரத்தினது இளந்தளிர்களானவை
எங்கும், Engum - எல்லாவிடங்களிலும் பாளியிருப்பதனாலே
செம் தழல் புரையும், Sem Thazhal Puraiyum - சிவந்த அக்கி ஜ்வலிப்பது போலேயிருக்கப்பெற்ற
திரு ஆலி அம்மானே, Thiru Aali Ammaane - திருவாலியில் எழுந்தருளியிருக்கும் பெருனானே!, எனக்குச் செல்ல மானவனே!
என் ஆர்உயிரே, En Aaruyire - எனது அருமையான உயிர்போன்றவனே!,
வந்து, Vandhu - நீயாகவே நிர்ஹேதுக் விஷயீகாரம்பண்ணி
உனது அடியேன் மனம் புகுந்தாய், Unathu Adiyean Manam Pugundhai - உன்னடியனான என்னுடைய மனத்திலே வந்து புகுந்தருளினாய்;
புகுந்ததற்பின், Pugundhatharpin - அப்படி நீ வந்து புகுந்த பின்பு
வணங்கும் என் சிந்தனைக்கு, Vanangum En Sindhanaikku - வணக்கமுற்ற என் மனத்துக்கு
இனியாய், Iniyai - போக்யனானாய்
1189பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளிற்று இவர் நெஞ்சிலே புகுருகைக்கு விலக்காமைக்கு அவசரம் பெரும் அளவும் யாயிற்று – விலக்காமை பெற்று – இவர் ஹிருதயத்தில் புகுந்த பின்பு க்ருத்யக்ருத்யனாய் இருந்தான் ஆயிற்று விபரீத ஜ்ஞானம் ஜனகமான தேசத்தை இருப்பிடமாக உடையையாய் இருந்து வைத்து என்னுடைய ஹிருதயத்தில் புகுந்து இருந்தாயே) 2
நீல தடவரை மா மணி நிகழக் கிடந்தது போல் அரவணை வேலைத் தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய் சோலைத் தலைக் கணமா மயில் நடமாட மழை முகில் போன்று எழுந்து எங்கும் ஆலைப் புகை கமழும் அணி யாலி யம்மானே –3-5-2
பதவுரை Show / Hide
சோலைத்தலை மாமயில் கணம் நடம் ஆட, Solai Thalai Maamayil Kanam Nadam Aada - சோலையிலே அழகிய மயில்களின் கூட்டமானது (களித்துக்) கூத்தாடும்படியாக (- (அணி ஆலி அம்மானே!-.))
ஆலை புகை மழைமுகில் போன்று எங்கும் எழுந்து கமழும், Aalai Pugai Mazhaimugil Ponderu Engum Ezhundhu Kamazhum - கருப்பஞ்சாறு அட்டபுகையானது காளமேகம்போலே எங்குங் கிளர்ந்து பரவி பரிமளிக்கப்பெற்ற
நீலம் தடவரை மாமணி நிகழ கிடந்தது போல், Neelam Thadavarai Maamani Nigazha Kidandhadhu Pol - நீலநிறமுள்ள பெரிய வொரு மலையானது (தன்மேல்) ஒரு நீலரத்னம் விளங்கப்பெற்றுப் படுத்திருப்பது போன்று
வேலைத்தலை அரவு அணை கிடந்தாய், Velaithalai Aravu Anai Kidandhai - திருப்பாற்கடலிலே சேஷசயனத்திலே (கௌஸ்துப மணி விளங்கப்) பள்ளி கொண்டிருந்தாய் முன்பு;
அடியேன் மனத்து இருந்தாய், Adiyean Manaththu Irundhai - (இப்போது) என்னுடைய மனத்திலே புகுந்து நீங்காதிருக்கின்றாய்
1190பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மநோ ரதத்தாலே நான் கால ஷேபம் பண்ணாத படியாக என் ஹிருதயத்திலே வந்து புகுந்தது இஹ லோகத்திலே எனக்கு விலக்காமைக்கு என்று இருந்தேன்) 3
நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி யிராமை என் மனத்தே புகுந்தது இம்மைக்கு என்று இருந்தேன் எறி நீர் வளம் செறுவில் செந்நெல் கூழை வரம் பொரீ இ அரிவார் முகத்தெழு வாளை போய் கரும்பு அந்நல் காடு அணையும் அணி யாலி யம்மானே –3-5-3
பதவுரை Show / Hide
எறி நீர்வளம் செறுவில், Eri Neervalam Seruvil - அலையெறிகின்ற நீர்வளம் பொருந்திய வயல்களிலே (- (அணி ஆலி அம்மானே !–))
செந்நெல் கூழை, Sennel Kuzhai - செந்நெற்பயிர்கள்
வரம்பு ஒரி இ, Varambu Ori I - வரப்புகளின்மேலே சாயவிட்டு
அரிவார்முகத்து, Arivaar Mugaththu - அறுக்கிறவர்களுடைய முகத்திலே
எழு வாளை, Ezhu Vaalai - (அக்கதிர்களில் நின்றும்) குதித்துப்பாய்ந்த மீன்களானவை (அபாயமுள்ள இவ்விடம் இனி நமக்குத் தகாதென்று அவ்விடம் விட்டுப்) புறப்பட்டுப் போய்
அ நல் கரும்பு காடு அணையும், A Nal Karumbu Kaadu Anaiyum - அப்படிப்பட்ட நல்ல கருப்பஞ் சோலைகளிலே சேரப்பெற்ற
நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி இராமை, Nennal Poi Varum Endru Endru Enni Iramai - ‘நேற்றுப்போனான், இன்று வருவன் இன்று வருவன்’ என்றிப்படி பாரித்துக்கொண்டு போதுபோக்கவேண்டாதபடி
என் மனத்தே புகுந்தது, En Manaththae Pugundhadhu - (ஸ்திரப்ரதிஷ்டையாக நீ) என் நெஞ்சிலே புகுந்தவிது
இம்மைக்கு என்று இருந்தேன், Immaikku Endru Irundhen - இந்த ஜன்மம் மழுமைக்குனமாம் என்று துணிந்திருக்கிறேன்.
1191பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன் பக்கலிலே வந்து சதைகரூபமான உன் திருவடிகளிலே எனக்கு மறவாமை யாகிற பேறு உண்டாம்படியாக – நான் அபேஷிக்க அன்றிக்கே தண்ணீர் பந்தல் வைப்பாரோபாதி நிர்ஹேதுகமாக செய்து அருளினாய் – தர்ச நீயமான ஸ்ரீ திரு வாலியிலே நிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனே) 4
மின்னின் மன்னு நுடங்கிடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால் புன்னை மன்னு செருந்தி வண் பொழில்வாய் அகன் பணைகள் கலந்து எங்கும் அன்னம் மன்னு வயல் அணி யாலி யம்மானே –3-5-4
பதவுரை Show / Hide
புன்னை செருந்தின்னு வண் பொழில் வாய், Punnai Serundhinnu Van Pozhil Vaai - புன்னை மரங்களும் சுரபுன்னை மரங்களும் பொருந்திருயிருக்கிற அழகிய சோலைகளிலே
அகன் பனைகள் எங்கும், Akan Panaigal Engum - விசாலமான தடாகங்களிலெங்கும்
அன்னம் கலந்து மன்னும், Annam Kalandu Mannum - அன்னப்பற்றவைகள் சேர்ந்து வாழப்பெற்றதாயும்
வயல், Vayal - வயல்தளையடைத்தாயுமிருக்கிற
அணி ஆலி அம்மானே, Ani Aali Ammane - அழகிய திருவாலிநகரிக்கு இறைவனே!;
மின்னின் மன்னுநுடங்கு இடைமடவார்தம் சிந்தை மறந்து வந்து, Minnin Mannunudangu Idaimadavaartham Sindhai Marandhu Vandu - மின்னல் போன்று துவண்ட இடையையுடைய ஸ்த்ரிகளைப் பற்றின சிந்தனையை தவிர்ந்துவந்து
நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாய், Nin Mannu Sevadhikke Maravaamai Vaiththai - உன் இணைத்திருவடிகளையே நான் நித்தியம் அநுஸந்திக் கும்படி அருள்செய்து வைத்திருக்கிறாய்;
ஆல், Aal - ஆச்சரியம்!.
1192பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதர்க்கு விஸ்வாசத்தைப் பண்ணிக் கொடுக்குமவன் அன்றோ – எங்களுடைய நினைவு போலே தப்பிலும் தப்பி பலிக்கிலும் பலிக்கும் படி அன்று இறே உன் நினைவு இருக்கும் படி) 5
நீடு பல் மலரிட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம் வாட நீ நினையேல் மரம் எய்த மா முனிவா பாடலின் ஒலி சங்கினோசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும் ஆடலோசை யறா அணி யாலி யம்மானே –3-5-5
பதவுரை Show / Hide
பாடல் இன் ஒலி சங்கின் ஓசை பரந்து, Paadal In Oli Sangin Osai Parandhu - (பகவத்விஷயப்) பாட்டுக்களின் மதுரமான தொனியும் சங்குகளின் முழக்கமும் எங்கும் வியாபித்திருக்கப் பெற்றதும்
பல் பணையால் மலி;ந்து, Pal Panaiyaal Malinthu - பலவகைப்பட்ட வாத்ய கோஷங்களாலும் நிறைந்திருக்கப் பெற்றதும்
எங்கும் ஆடல் அம்மானே, Engum Aadal Ammane - அழகிய திருவாலிநகரிக்கு ஸ்வாமியே!,
மரம் எய்த மா முனிவா, Maram Eytha Maa Munivaa - (ஸூக்ரிவனுடைய நம்பிக்கைக்காக) மராமரங்களேழின் மேலும் அம்புவிட்டுத் துளைத்த ஸத்யஸங்கல்பனே!,
நின் இணை அடி, Nin Inai Adi - உன் இணைத்திருவடிகளில்
பல் மலர்மாலை நீடு இட்டு, Pal Malarmalai Needu Ittu - பல வகைப்பட்ட புஷ்பமாலேகளை நெடுங்கலாம் ஸமர்ப்பித்து
தொழுது ஏத்தும் என் மனம் வாட, Thozhudhu Aeththum En Manam Vaada - ஸேவித்து துதிசெய்கின்ற அடியேனுடைய நெஞ்சு (உன்னைப்பிரிந்து)வாட்டமடையும் வகை
நீ நினையேல், Nee Ninaieyl - நீ நினைக்கலாகாது (என்னை விட்டு நீ பிரியலாகாது.)
1193பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரம போக்யமான ஸ்ரீ திரு மந்தரத்தால் பிரதிபாத்யமான வஸ்துவின் பக்கலில் தன்னை சமர்ப்பித்து – சர்வ கந்த -என்கிற வஸ்து ஆகையாலே – உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான சிவந்த திருவடிகளை கையாலே தொழுது உஜ்ஜீவிக்க வேணும் என்னும் அத்யவாசாயத்தை உடைய என்னுடைய ஹிருதயத்திலே – நான் உன்னை அபேஷியாதே இருக்க நீயே வந்து புகுந்த பின்பு இனிப் போகல ஒட்டேன்) 6
கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும் புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும் அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6
பதவுரை Show / Hide
சந்தி வேள்வி சடங்கு நால் மறை, Sandhi Velvi Sadangu Naal Marai - ஸந்தியாவந்தனம் முதலிய நித்ய கரிமங்களையும் யாகம் முதலிய நைமித்திக கருமங்களையும் காம்ய கருமங்களையும் தெரிவிக்கிற நான்கு வேதங்களையும் (- (அணி ஆலி அம்மானே!-;))
ஆதியாய் ஓதிஓது வித்து வரும் அந்தணாளர் அறா, Aadhiyaai Othioathu Viththu Varum Andhanalaar Aru - அநாதிகாலமாகம தாங்கள் ஓதியும் பிறர்க்கு ஓதுவித்தும் வருக்கின்றன பிராம்மணர்கள் விட்டுநீங்காத (நித்யவாஸம் பண்ணுமிடமான)
நின்காமருசே அடி, Ninkamaruse Adi - உனது அழகிய திருவடிகளிலே
கந்தம் மா மலர்எட்டும், Kandham Maa Malarettum - மணம் மிக்க சிறந்த எட்டு வகைப் பூக்களையும் ஸமர்ப்பித்து
கை தொழுது எழும் புந்தியேன் மனத்தே, Kai Thozhudhu Ezhum Pundhiyen Manathae - வணங்கி உஜ்ஜீவிக்கவேணு மென்கிற அத்யவஸாய முடையேனான்  என்னுடைய நெஞ்சிலே
புகுந்தாயை போகல் ஒட்டேன், Pugundhaayi Pogaal Otten - வந்து புகுந்து வுன்னை இனி வேறோரிடம் போகவொட்டேன்
1194பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன்னைப் பெறுக்கைக்கு ஒரு முதல் இல்லாதபடி இருக்கிற எனக்கு ஸூஹ்ருதமானவனே நீயே வந்து புகுந்த பின்பு உன்னை நான் இனி போகல் ஒட்டேன் ஸ்ரீ வயலாலி மணாளன் உடைய வியாபாரத்தோடு-அங்கு உண்டான திர்யக்குகள் உடைய வியாபாரத்தோடு வாசி அற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு அந்நிலத்தில் உள்ள ஆசையாலே) 7
உலவு திரைக் கடல் பள்ளி கொண்டு வந்து உன்னடியேன் மனம் புகுந்த அப் புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி அலவன் கண் படுக்கும் அணியாலியம்மானே –3-5-7
பதவுரை Show / Hide
நிலவு மலர்புன்னை நாழல் நீழல், Nilavu Malarpunnai Naazhal Neezhal - (இவற்றினுடைய நிழலில்) எப்போதுமுள்ள புஷ்பங்களை யுடைய புன்னை மரங்களென்ன ஞாழல் மரங்களென்ன (- (ஸமயம் பார்த்திருந்து))
தண்தாமரை மலரின் மிசை, Thanthamarai Malarin Misai - குளிர்ந்த தாமரைப் பூவின் மேலே
மலி அலவன்கண் படுக்கும், Mali Alavankann Padukkum - பெரிய ஆண் நண்டுகள் பள்ளி கொண்டிருக்கப் பெற்ற
திரை உலவு கடல், Thirai Ulavu Kadal - திரைக் கிளப்பத்தையுடைய திருப்பாற்கடலில்
பள்ளிகொண்டு, Pallikondru - சயனித்திருந்து
வந்து உன் அடியேன் மனம் புகுந்த அப்புலவ, Vandhu Un Adiyen Manam Pugundha Appulava - அங்கு நின்றும் ஒடிவந்து உனது தாஸனான என்னுடைய மனத்திலே புகுந்த அப்படிப்பட்ட ஸர்வஜ்ஞனே!
புண்ணியனே, Punniyaney - எனது பாக்கியம் வடிவெடுத்துள்ளவனே!
புகுந்தாயை போகல் ஒட்டேன், Pugundhaayi Pogaal Otten - என்னிடம் வந்து சேர்ந்தவுன்னை இனி வேறிடம் போகவொட்டேன்
1195பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினாய் அங்கு நின்றும் ஆஸ்ரிதனுக்காக ஸ்ரீ திருக் கடல் மல்லையிலே கண் வளர்ந்து அருளினாய் இவ்வோ இடங்கள் உனக்கு வாசஸ்தானமாய இருக்க என் பக்கல் கிருபை பண்ணி வந்து புகுந்தாய்) 8
சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள் புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ கொங்கு செண்பக மல்லிகை மலர் புல்கி இன்னிள வண்டு போய் இளம் தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே –3-5-8
பதவுரை Show / Hide
இன் இளவண்டு, In Ilavandu - இனிய இள வண்டுகளானவை (- (அவை கொதித்தபடியாலே) (திரு ஆலி அம்மானே!- ;))
கொங்கு செண்பகம் மல்லிகை மலர்புல்கி, Kongu Senbagam Malligai Malarpulki - மணம் மிக்க செண்பகப்பூவையும் தழுவிப்பார்த்து
போய், Poy - அவற்றைவிட்டுப்போய்
இளதெங்கின் நாது அளையும், Ilathengin Naathu Alaiyum - இளைய தென்னை மரங்களின் பாளைகளிலே அளையப்பெற்ற
சங்கு தங்கு தட,கடல் கடல் மல்லையுள் கிடந்தாய், Sangu Thangu Thada Kadal Kadal Mallaiyul Kidandhai - சங்குகள் தங்கிய பெரிய திருப்பாற்கடலிலும் திருக்கடன் மல்லையிலும் (முன்பு) பள்ளி கொண்டிருந்தாய்;
இங்கு அருள் புரிந்து என்னுள் புகுந்தாய், Ingu Arul Purindhu Ennul Pugundhai - இப்போது கருணைகூர்ந்து என்னெஞ்சிலே பிரவேசித்தாய்;
இனி போயினால் அறையோ, Ini Poyinaal Arayyo - இனி நீயே விட்டுப்போக நினைத்தாயாகில் அறையோவறை
1196பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னை வன்னியமறுத்து ஆளுகிறவனே எனக்கு ஸ்வாமி ஆனவனே மாஸூச -என்று நான் உஜ்ஜீவிக்கும்படி ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்) 9
ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள் வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய் நீதியாகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு ஆதியாய் இருந்தாய் அணி யாலி யம்மானே –3-5-9
பதவுரை Show / Hide
நீதி ஆகிய வேதம், Neethi Aagiya Vedham - (காட்டார் அநுஷ்டிக்க வேண்டு மவற்றை) விதிக்குமவையான வேதங்களையும் (- (அணி ஆலி அம்மானே!–;))
மாமுனியாளர் தோற்றம், Maa Muniyalar Thotram - (அந்த வேதங்களிலுள்ள மந்திரங்களை தர்சநம் பண்ணினவர்களான) மஹர்ஷிகளின் வரலாற்றையும்
உரைத்து, Uraithu - வெளியிட்டவனாயும்
மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய், Mattravarkku Aadhi Aay Irundhai - மற்றுமுள்ள எல்லார்க்கும் காரணபூதனாயு மிருக்குமவனே!
வேதியா, Vedhiya - வேதமொன்றினாலேயே அறியத்தக்கவனே!
அரையா, Araiyaa - தேவாதி தேவனே!
எந்தாய், Endhai - எமக்கு ஸ்வாமியானவனே!
ஆயிரம் நாமமும் ஓதி, Aayiram Naamamum Othi - (உனது) ஸஹஸ்ர நாமங்களேயுஞ் சொல்லி;
பணிந்து ஏத்தி, Panindhu Aethi - வணங்கித் துதித்து
நின் அடைந்தேற்கு, Nin Adaindhaerku - உன்னைத் தஞ்சமாகப்பற்றி புள்ள எனக்கு
ஒரு பொருள் ஒரு மாற்றம் உரையாய், Oru Porul Oru Maatram Uraiyaai - ஒரு அர்த்தத்தையாவது ஒரு சொல்லையாவது அருளிச் செய்யவேணும்.
1197பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதில் உண்டான ஆதராதி அதிசயத்தாலே விட மாட்டாமை பிரித்து பிரித்து அருளிச் செய்கிறார்) 10
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென்னாலி யிருந்த மாயனை கல்லின் மன்னு திண தோள் கலியன் ஒலி செய்த நல்ல இன்னிசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடனே வல்லராய் யுரைப்பார்க்கு இடமாகும் வானுலகே –3-5-10
பதவுரை Show / Hide
வண்டு புல்லி அறையும் பொழில் சூழ், Vandu Pulli Arayum Pozhil Soozh - வண்டுகளானவை ஒன்றோடொன்று அணைந்து இசைலே சுற்றிலுஞ் சூழப்பட்ட
தென் ஆலி இருந்த மாயனே, Then Aali Irundha Maayane - திருவாலியிலே எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் விஷயமாக,
கல்லின் திண் மன்னு தோள், Kallin Thin Mannu Thol - மலைபோலே திடமாயும் நித்யனாயு மிருக்கிற தோள்களையுடைய
கலியன் ஒலி செய்த, Kalyan Oli Seidha - திருமங்கை யாழ்வார்அருளிச்செய்த
நல்ல இன் இசை மாலே நாலும் ஓரைந்தும் ஒன்றும், Nalla In Isai Maale Naalum Ooraindhum Ondrum - அழகிய இனிய இசையை யுடைத்தான சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும்
நவின்று, Navindru - அபயளித்து
தாம் உடன் வல்லராய் உரைப்பார்க்கு, Thaam Udan Vallarai Uraipaarakku - அர்த்தாநுஸந்தாகம் பண்ணிக் கொண்டுரைக்கு மவர்கட்கு
வான் உலகு இடம் ஆகும், Vaan Ulaku Idam Aakum - பரமபதம் இருப்பிடமாகும்.
1198பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அதில் ஒரு வண்டைக் குறித்துத் தூது விடுகிறாள் முதல் பாட்டில் – உனக்கு உன் கார்யம் குறை அற்று இருந்தது-எனக்கு என் கார்யம் குறை பட்டு இருக்கிறபடி -கண்டாயே எனக்கு குறை தீர்க்கைக்காக வந்திருக்கிற அவனுக்கு அறுவியாயோ- என்கிறாள்) 1
தூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே பூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திருவாலி ஏவரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே –3-6-1
பதவுரை Show / Hide
தூ விரிய மலர்உழக்கி துணையோடும் பிரியாதே, Thoo Virya Malaruazhakki Thunaiyodum Piriyadhe - சிறகு விரியும்படி இருந்து புஷ்பங்களே மிதித்து தன் துணைவியைவிட்டுப் பிரியாமலிருந்து
பூ விரிய மது நுகரும், Poo Virya Madhu Nukarum - பூக்கள் விகஸிக்க, அவற்றிலுள்ள தேனைப் பானம் பண்ணுகிற
பொறி வாயி சிறுவண்டே, Pori Vaayi Siruvandhe - புள்ளிகளையும் ரேகைகளை யுமுடைய சிறிய வண்டே அக்நி காரியங்கங்கள் விஸ்தாரமாகப் பரவும்படி வைதிக மரியாதைகளே
வளர்க்கும் புகழ் ஆளர் திரு ஆவி, Valarkkum Pugazh Aalar Thiru Aavi - குறைவின்றி நடத்துகையால் வந்து கீர்த்தியையுடைய வைதிகரிகள் வாழ்கின்ற திருவாலியிலே நித்யவாஸம் பண்ணுகிற
ஏ வரிவெம் சிலேயானுக்கு, Ea Varivem Sileyaanukku - அம்புகள் தொடுக்கப்பெற்று அழகியதாய் (சத்துருக்களுக்கு)க் கொடிதா யிருந்துள்ள வில்லை ஆளவல்ல எம்பெருமானுக்கு
என் நிலைமை உரையாய், En Nilaimai Uraiyaai - என்னுடைய அவஸ்தையை சொல்லுவாயாக.
1199பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அறுகால-இரண்டு காலை உடையாரைப் போலே அன்றிக்கே-ஆறு கால் உடையார்க்கு கடுகப் போய் கார்யம் தலைக் கட்டலாம் இறே – நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம் – என்று சேர்ப்பார் காலே இறே இவர்கள் ஜீவனமாய் நினைத்து இருப்பது – என் ஜீவனம் கூடு பூரித்து கிடந்தபடி என்றான் -என்கிறாள் நீ சென்று –முறை கெட்டாகிலும் நீ முற்பட சென்று –அவன் தானே வர பெற இருக்குமதாயிற்று முறை – பயலை நோயை உரை –வாசா மகோசரம் இறே இவளுடைய வைவர்ண்யம் தான் வாக்குக்கு அவிஷயமான அவற்றுக்கும் பாசுரம் இட்டு சொல்லவற்றுக் காணும் இவை தான்) 2
பிணியவிழும் நறு நீல மலர்கிழியப் பெடையொடும் அணி மலர் மேல் மது நுகரும் அறுகால சிறு வண்டே மணி கெழு நீர் மருங்கலரும் வயலாலி மணவாளன் பணி யறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே –3-6-2
பதவுரை Show / Hide
பிணி அவிழும் நறு நீலமலர்கிழிய, Pini Avizhum Naru Neelamalarkizhiya - கட்டு அவிழ்கின்ற மணம் மிக்க நீலோற்பல மலர்கள் கிழியும்படியாக
பெடையோடும் அணி மலர்மேல் மது நுகரும், Pedaiyodum Ani Malarmel Madhu Nukarum - பேடையுடனே அழகிய அந்த மலர்களிலிருந்துகொண்டு மதுபானம் பண்ணுகிற
அறுகால சிறு வண்டே, Arugala Siru Vande - ஆறு கால்களையுடைய சிறியவண்டே!
மணி கெழுநீர்மருங்கு அலரும் வயல், Mani Kezhuneermarungu Alarum Vayal - அழகிய செங்கழுநீர்ப் பூக்கள் நாற்பக்கத்திலும் விகளிக்கப்பெற்ற கழனிகளையுடைய
ஆலி, Aali - திருவாலியிலே யெழுந்தருளியிருக்கிற
மணவாளன் பணி, Manavaalan Pani - மணவாளப்பிள்ளை போன்ற எம்பெருமானுடைய செய்தியை
அறியேன், Ariyen - இன்னதென்று நானறிகின்றேனில்லை;
என் பயலே நோய் உரையாய், En Payale Noi Uraiyaai - என்னுடம்பு வேறுபட்டிருந்தலாகிற நோயை சொல்லுவாயாக.
1200பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆசை இல்லாத ஜகத்தையும் தான் ஆசைப்படுமவன் -அவற்றை சொன்ன சொல் தன்னளவிலே வந்து பர்யவசிக்கும்படி நிற்கிற பெரும் பிச்சன் – அவனுடைய பிரணயித்வத்துக்கு விஷயம் ஆயிற்றிலோம் ஆகிலும் அவனுடைய கிருபைக்கு விஷயம் ஆகாது ஒழிவுதோமா- அவன் நைராச்யத்தை அறிந்து வந்து சொல் என்றதுக்கு கருத்து யாது என் என்னில் – நம் தசையை அறிவித்தால் நமக்கு தலை வேணும் -என்றான் ஆகில் நம் ஆற்றாமை பாராதே யாகிலும் நாம் ஜீவித்துக் கிடக்க வேண்டா -என்றான் ஆகில்-நாம் முடிந்து பிழைக்கும் படி —) 3
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நெடுமால் தன் தாராய நறும் துளவம் பெருந்தகையேற்கு அருளானே சீராரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் சூழும் கூர்வாய சிறு குருகே குறிப்பறிந்து கூறாயே –3-6-3
பதவுரை Show / Hide
நீர்வானம் மண் எரி கால் ஆய் நின்ற நெடுமால், Neervaanam Mann Eri Kaal Aayi Nindra Nedumaal - பஞ்ச பூதங்களுக்கு நிர்வாஹகனா யிருக்கிற ஸர்வேச்வரன்
தன் தார்ஆய நறு துளவம், Than Thaar Aaya Naru Thulavam - தன்னுடைய மாலையாகிய மணம்மிக்க திருத்துழாயை
பெரும் தகையேற்கு அருளானே, Perum Thagayeerku Arulaanae - மிகவும் தகுதியையுடையளான எனக்கு கொடுத்தருள்கின்றானில்லையே;
சீர்ஆரும், Seeraarum - சீர்மை பொருந்திய
வளர் பொழில் சூழ், Valar Pozhil Soozh - வளர்கின்ற சோலைகளாலே சூழப்பட்ட
திரு ஆலி, Thiru Aali - திருவாலிமாநகரில்
வயல் வாழும் கூர்வாய சிறு குருகே, Vayal Vaalum Koovai Siru Kuruge - கழனியிலே வாழ்கின்ற கூர்மையான வாயலகையுடைய சிறிய கொக்கே!
குறிப்பு அறிந்து, Kurippu Arindhu - (திருவாலி யெம்பெருனானுடைய) திருவுள்ளக் கருத்தை அறிந்து கொண்டு வந்து (எனக்குச்) சொல்லிவேணும்.
1201பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு ஆய்ப்பாடியிலே சம்பத்தோடே-ஸ்ரீ திரு ஆலியில் சம்பத்தையும் அடைப்பாக்கினால் பின்னை அவனுக்கு நொந்தாரை ஐயோ என்ன அவசரம் உண்டோ-அறியாமை வாராது ஒழிந்தான் இத்தனை நீ போய் அவன் அறியும் படி போய் சொல்லு) 4
தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர் மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ தேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும் ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே –3-6-4
பதவுரை Show / Hide
தான் ஆக நினையான் ஏல், Thaan Aaga Ninaithaan Ael - அவன் தானாகவே என்னே நினையாதிருந்தாலும்;
தன் நினைந்து நைவேற்கு, Than Ninaindhu Naiveerkku - அவன் தன்னையே நினைத்துக் கொண்டு மனம் தளர்ந்திருக்கிற என்னை
ஓர்மீன் ஆய கொடி நெடுவேள் வலி செய்ய, Oormeen Aaya Kodi Neduveel Vali Seyya - மகரத்வஜனான மன்மதன் துன்பப்படுத்த
மெலிவேனா, Meliveena - இப்படியும் நான் இளைத்துப் போவேனா?
தேன் வாய வரி வண்டே, Then Vaai Vari Vande - தேன்போல் இனிய வாய்ப் பேச்சையும் ரேகையையுமுடைய வண்டே!,
திரு ஆலி நகரி ஆளும், Thiru Aali Nagari Aalum - திருவாலி நகரியை ஆட்சி புரிகின்ற
ஆன் ஆயற்கு சென்று, Aan Aayarku Sendru - கோபாலகிருஷ்ணன் பக்கலிலே போய்
எனது உறு நோய், Enathu Uru Noi - எனது அதிகமான மனோவியாதியை
அறிய உரையாய், Ariya Uraiyaai - தெளிவாகத் தெரிவிக்க வேணும்.
1202பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அத்தலை இத்தலையாய்-தன்னைப் பெற வேண்டும் நான் ஆசைப்பட்டு நோவு படா நிற்க – தான் தன்னைத் தொட்டாரும் அகப்படுத்தினான் என்று சொல்லுங்கோள் என்று தூதர்க்கு வார்த்தை சொல்லப் புக்கு அது தான் போய் பாவனா பிரகர்ஷத்தாலே அவன் முன்னே நின்றனவாய் கொண்டு அவன் தனக்கு வார்த்தை சொல்லி செல்லுகிறது மேலில் பாட்டுக்களில் – ஸ்ரீ ராமாயணத்தின் படி போலே இருக்கிறதாயிற்று இதுவும் – தூதர்க்கு வார்த்தை சொல்லா நிற்க்ச் செய்தே பாவனா பிரகர்ஷத்தாலே அவன் சந்நிஹிதனாகக் கொண்டு அங்கு வார்த்தை சொல்லுகிறாள் இறே-ஷம பேதம் மஹீ பதே -என்னுமா போலே) 5
வாளாய கண் பனிப்ப மென்முலைகள் பொன் அரும்ப நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஒ மண்ணளந்த தாளாளா ! தண் குடந்தை நகராளா ! வரை எடுத்த தோளாளா ! என் தனக்கு ஓர் துணையா ளானாகாயே ! –3-6-5
பதவுரை Show / Hide
ஓ மண் அளந்த தாளாளா, O Mann Alandha Thaalala - பூமியை யளந்துகொண்ட திருவடிகளை யுடையவனே!
ஓ தண் குடந்தை நகரி ஆளா, O Than Kudandhai Nagari Aalaa - குளிர்ந்த திருக்குடந்தையை ஆளுமவனே!
ஓ வரை எடுத்த தோன் ஆனா, O Varai Edutha Thon Aanaa - கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப் பிடித்த திருத்தோள்களே யுடையவனே!
வாள் ஆய கண் பனிப்ப, Vaal Aaya Kan Panippa - வாள்போன்ற (எனது) கண்கள் நீரைப்பெருக்கவும்
மெல் முலைகள் பொன் அரும்ப, Mel Muligal Pon Arumba - மெல்லிய முலைகளில் நிற வேறுபாடு தோன்றவும்
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு என்தனத்கு, Naal Naalum Nin Ninaindhu Naiveyarku Enthanathkku - நாள்தோறும் உன்னையே நினைத்துக்கொண்டு மனம் தளர்கின்ற எனக்கு
ஓர்துணையாளன் ஆகாய், Oorthunaiyalan Aagaai - நீ சிறந்த துணைவனாக வேணும்
1203பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரமஹரமான வடிவைக் காட்டி பஞ்ச லஷம் குடியில் பெண்களை வளை கவர்ந்தவன் என் கையில் வளை பெறா விடில் உண்டது உருக் காட்டானாய் இரா நின்றான் –சமகாலத்தில் பிறவாதார் வளையும் கொள்ள வேணுமோ இவனுக்கு ஓர் ஊராக வளை கொண்டதுவும்-உண்டது உருக் காட்டுகிறது இல்லை காணும் இவள் கையில் வளை சேஷிக்கில்) 6
தாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன் போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான் தேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும் காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ –3-6-6
பதவுரை Show / Hide
தார் ஆய தண் துள்பம் வண்டு உழுத வரை மார்பன், Thaar Aaya Than Thulbam Vandu Uzutha Varai Marban - மாலையாகிய திருத்துழாயிலுள்ள வண்டுகளாலே (தேனும் கண்ணமுங்கொண்டு) சேறு செய்யப்பட்ட மலைபோன்ற திருமார்பையுடையவனும்
போர்ஆனை கொம்பு ஒசித்த, Poraanai Kombu Osiththa - போர்புரிய நின்ற (கம்ஸனது) யானையினுடைய தந்தங்களை முறித்தொழித்தவனும்
புள் பாகன், Pul Paagan - கருடனை  வாஹநமாகக்  முறித்தொழித்தவனும்
என் அம்மான், En Ammaaan - எனக்கு ஸ்வாமியானவனும்
தேர் ஆரும் நெடுவீதி, Ther Aarum Neduveethi - திருத்தேர் எழுந்தருள்வதற்குப் பாங்கான பெருமை பொருந்திய வீதிகளையுடைய
திரு ஆலி நகரி ஆளும், Thiru Aali Nagari Aalum - திருவாலி நகரை ஆள்பவனுமான
கார் ஆயன், Kaar Aayan - கரியகோலக் கண்ணபிரான்
என்னுடைய, Ennudaiya - (வேறு புகலற்றிருக்கிற) என்னுடைய
கனம் வளையும், Kaanam Valaiyum - பொன் வளைகளையும்
கவர்வானை, Kavaruvaanai - அபஹரிப்பனோ! (அபஹரிப்பது தகுமோ).
1204பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மகா பலியாலே அபஹ்ருதமான பூமியை மீட்டு இந்தரனுக்கு கொடுத்த நீர் மையை உடையவனே- அந் நீர்மைக்கு பிற்பாடானாரும் இழவாமைக்கு ஆக ஆயிற்று திருவாலியிலே வந்து நிற்கிறது ஸ்ரீ திருப் பாற் கடலில் நின்றும் ஸ்ரீ வாமனனாய் அவதரித்து பூமியை அகப்படுத்திக் கொண்டால் போலே யாயிற்று ஸ்ரீ திருவாலியிலே வந்து நிற்கிற தன் யௌவனத்தைக் காட்டி இவரை அகப்படுதின படி) 7
கொண்டு அரவத் திரை யுலவு குரை கடல் மேல் குலவரை போல் பண்டு அரவின் அணைக் கிடந்தது பாரளந்த பண்பாளா ! வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயலாலி மைந்தா !என் கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ! –3-6-7
பதவுரை Show / Hide
பண்டு அரவம் திரை உலவு குரை கடல்மேல், Pandhu Aravam Thirai Ulavu Kurai Kadalmel - முற்காலத்தில் பெரிய கோஷத்தையுடைய அலைகள் உலாவுகின்ற பரந்த திருப்பாற்கடலிலே
கொண்டு, Kondhu - திருவுள்ளங்கொண்டு
அரவு இன் அணை, Aravu In Anai - ஆதிசேஷனாகிற இனிய படுக்கையிலே
குலம் வரை போல், Kulam Varai Pol - சிறந்த மலைபோலே
கிடந்து, Kidandhu - பள்ளிகொண்டவனாயும்
பார்அளந்த, Paaralanda - (திரிவிக்கிரமனாய்) பூமியை அளந்தவனாயுமுள்ள
பண்பு ஆளா, Panbu Aalaa - தயாளுவானவனே!
வண்டு அமரும் வளர் பொழில் சூழ், Vandu Amarum Valar Pozhil Soozh - வண்டுகள் படித்து ஓங்கின சோலைகளால் சூழப்பட்ட
வயல், Vayal - கழனிகளையுடைய
ஆலி, Aali - திருவாலியி லெழுந்தருளியிருக்கிற
மைந்தா, Maindha - நித்ய யௌவனசாலியான பெருமானே;
என் கண் துயில், En Kan Thuyil - எனது கண்ணுறக்கத்தை
நீ கொண்டாய்க்கு, Nee Kondaaykku - போக்கடித்த உனக்கு
என் கனம் வளையும், En Kanam Valaiyum - எனது பொன்வளைகளையும்
கடவேனோ, Kadaveno - இழக்கக்கடவேனோ?
1205பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மன்றிலே குடக் கூத்தாடி தன் அலகை சர்வ ஸ்தானம் பண்ணினவன் பிற்பாடர் இழவாமைக்காக திருக் குடந்தையிலே சுலபன் ஆனான் என்றவாறே உறக்கம் குடி போயிற்றாய் ஆயிற்று அவன் பிரத்யாசன்னன் ஆனான் என்றவாறே உறக்கம் குடி போயிற்று ஆயிற்று இவளுக்கு- உறங்காமைக்கு இரண்டு லஷ்மணர்களைப் போலே யாயிற்று கண்கள் இரண்டும் – இளைய பெருமாள் பிறந்த முகூர்த்ததில் ஆயிற்று இவள் கண்களும் பிறந்தது) 8
குயிலாலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடமாடீ ! துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ ! முயலாலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே வயலாலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே ! –3-6-8
பதவுரை Show / Hide
குயில் ஆலும் வளர் பொழில் சூழ்தண் குடந்தை, Kuyil Aalum Valar Pozhil Soozhthaan Kudandhai - குயில்கள் (களித்துத்) கூடத்தாடுமிடமான வளர்ந்த சோலைகளால் சூழப்பட்ட குளிர்ந்த திருக்குடந்தையிலே எழுந்தருளியிருக்கிற (- (வயலாலி மணவாளா!-;))
குடம் ஆடீ, Kudam Aadi - குடக் கூத்தாடின பெருமானே!
துயிலாத கண் இணையேன், Thuyilaadha Kan Inaiyen - உறக்கங் கொள்ளாத கண்களே யுடைய அடியேன்
நின் நினைந்து, Nin Ninaindhu - உன்னையே சிந்தித்துக் கொண்டு
துயர்வேனோ, Thuyarveno - துக்கித்துக் கிடப்பேனோ!
முயல் ஆலும் இள மதிக்கே, Muyal Aalum Ila Mathikke - (தன்னிடையிலே)முயல் துள்ளிவிளையாடப் பெற்ற பாலச்சந்திரனுக்கே
வளை இழந்தேற்கு, Valai Izhandheirkku - வளைகளை இழந்தவளான என்னிடத்தினின்றும்
இது நடுவே, Idhu Naduve - இத்தனை துக்கங்களினிடையே
மணி நிறமே கொள்வாயோ, Mani Nirame Kolvaayo - அழகிய மேனிநிறத்தையும் கொள்ளை கொள்வாயோ?
1206பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராமணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமா போலே தலைமகளான சமயத்திலும் சேஷத்வ அநுரூப வ்ருத்தியையே ஆசைப்படுகிறாள் இறே உன்னை ஆஸ்ரயித்த மகா ராஜர் ஆர்த்தி போக்குகைக்காக மராமரங்களை எய்து மழு ஏந்தி கொடுததிலையோ – அவ் இழவை தீர்க்குகைக்கு அன்றோ திரு மெய்யத்திலே வந்து சாய்ந்து அருளிற்று) 9
நிலையாளா ! நின் வணங்க வேண்டாயே யாகிலும் என் முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே ? சிலையாளா ! மரம் எய்த திறலாளா ! திரு மெய்ய மலையாளா ! நீ யாள வளையாள மாட்டோமே –3-6-9
பதவுரை Show / Hide
சிலையாளா, Siliyaala - சாரங்க வில்லை அடக்கியாள்பவனே!
மாம் எய்த திறாளா, Maam Eytha Thiraala - (ஸூக்ரிவனுடைய நம்பிக்கைக்காக) ஸப்தங்களால் வருஷங்களை வீழத்தொழித்த பெருமிடுக்கனே!
திரு மெய்ய மலை ஆளா, Thiru Meyya Malai Aala - திருமெய்ய மென்னுந் திருப்பதியை ஆளுமவனே!
நிலை ஆள் ஆ நின் வணங்க வேண்டாயே ஆகிலும், Nilai Aal Aa Nin Vananga Vendaaye Aagilum - நிலைபெறற் அடிச்சியாக விருந்து உன்னை நான் வணங்கும்படி திருவுள்ளம் பற்றாமற்போனாலும்
ஒரு நாள், Oru Naal - ஒருநாளாகிலும்
என் முலை ஆள, En Mulai Aala - எனது முலைகள் ஆட்செய்யும்படியாக
உன் அகலத்தால் ஆளாய், Un Akalathaal Aalaai - உனது திருமார்பினால் அணைத்தருளுவேணும்;
நீ ஆள, Nee Aala - உன்னுடைய ஆளுகையில் உட்பட்டிருக்குமளவில்
வளை ஆன மாட்டோமே, Valai Aana Maattome - கையில் வளை தாங்காமல் துள்ளப்படவேண்டியதேயன்றோ எமக்குக் கதி.
1207பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெடுமாலை –தூது விடவும் வார்த்தை சொல்லவும் மாட்டாதே நிற்கிறான் போலே காணும் தூது விட மாட்டாத படி யாயிற்று அத்தலை பட்டுக் கிடக்கிறது – இத்தலை ஊர்த்த்வம் மாசான் நா ஜீவிஷ்யதே -என்றால்-ந ஜீவேயம் -என்னும் அத்தனை இறே அத்தலை – அவன் சேஷித்வ சூசகமாக திரு ஆழியைப் பிடித்தால் போலே ஆயிற்று இவர் சேஷத்வ சூசகமாக திரு வேலைப் பிடித்த படி -சேவகனுக்கு வேல் நிரூபகம் என்றது ஆயிற்று – சர்வேஸ்வரனைப் பிரிந்து தூது விடப் புக்கு-அது தானும் கூட மாட்டாதே படும் வியசனம் பட வேண்டா – இப்பத்தையும் அப்யசித்தாருக்கு தூது விடுவான் அவன் தான் ஆயிற்று) 10
மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி நெய்யிலங்கு சுடராழிப் படையானை நெடுமாலை கையிலங்கு வேல் கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை ஐயிரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே –3-6-10
பதவுரை Show / Hide
கை இலக்கு வேல் கலியன், Kai Ilakku Vel Kalyan - கையில் விளங்குகின்ற வேலையுடைய திருமங்கையாழ்வார்,
மை இலங்கு கரு குவளை, Mai Ilangu Karu Kuvalai - மைபோல் விளங்குகின்ற கறுத்த குவளை மலர்கள்
மருங்கு அலரும் வயல், Marungu Alarum Vayal - ஸமீபங்களிலே விகஸிக்கப் பெற்ற கழனிகளையுடைய
ஆலி, Aali - திருவாலியிலே இருக்கிற
நெய் இலங்கு சுடர் ஆழி, Ney Ilangu Sudar Aazhi - நெய் பூசப்பட்டு விளங்குகின்றதும் சுடரையுடையதுமான
படையானை, Padaiyaanai - சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டுள்ள
நெடு மாலை, Nedu Maalai - ஸர்வேச்வரனை
கண்டு உரைத்த, Kandu Uraitha - ஸேவித்துக் சொன்ன
தமிழ் மாலை, Tamil Maalai - தமிழ்த் தொடைகளான
இவை ஐ இரண்டும், Ivai Ai Irandum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு
அரு வினைகள், Aru Vinaigal - துஷ்கருமங்கள்
அடையா, Adaiyaa - சேரமாட்டா.
1208பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இருவரும் இரண்டு முக்தர் ஆயிற்று –மாயா மிருகத்தை பிடித்து தா என்பாரும்-அதைப் பிடிப்பதாக அதன் பின்னே போவாரும் – லங்கத்வாரத்திலே சென்று நிற்கலாகாதோ என்று நில்லாதே-உத்தேச்ய பூமியிலே புக்கார்களோ அல்லர்களோ இருவரும் ஒருவருக்கு ஒருவராய் ஆழல் ஆயிற்று) 1
கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப் போதாவென்று வெள்ளி வளைக்கை பற்றப் பெற்ற தாயாரை விட்டகன்று அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ –3-7-1
பதவுரை Show / Hide
கள்வன் கொல்யான் அறியேன், Kalvan Kolyaan Ariyeen - (வந்து அழைத்துக் கொண்டு போனவன்) திருடனோ? (அன்றி உடையவன் தானோ?) எனக்குத் தொயிவில்லை; (- (இப்படி தம்பதிகளாகப்போன விவர்கள்))
கரியான் ஒரு காளை வந்து, Kariyaan Oru Kaalai Vandu - கருநிறத்தவனான ஒரு யௌவன புருஷன் வந்து,
வள்ளி மருங்குல், Valli Marungul - கொடி போல் நுட்பமான இடையை யுடையளாய்
என்தன் மடம் மானினை, Enthan Madham Maaninai - இள மான் போன்றவளான எனது மகளை
போத என்று, Podha Endru - வா வா என்றழைத்து,
வெள்ளி வளை கை பற்ற, Velli Valai Kai Patra - வெள்ளை வளைகளணிந்துள்ள கையைப் பிடிக்க, (உடனே அவள்)
பெற்ற  தாயாரை இட்டு அகன்று, Petra Thaayaarai Ittu Aghandru - பெற்ற வளர்த்த தாயாகிய என்னையும்  உபேக்ஷித்து விட்டொழிந்து(போய் விட்டாள்;)
அள்ளல் அம் பூ கழனி அணி, Allal Am Poo Kazhani Ani - சேற்று நிலங்களிலே அழகிய பூக்கள் நிறைந்த கழனிகளாலே அலங்கரிக்கப்பட்ட
ஆலி, Aali - திருவாலியிலே
புகுவர் கொலோ, Pughuvar Koloo - சென்று சேருவர்களோ?
1209பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காணாம்ருதமான அம்மான்பொடியை இட்டு கொண்டு போன படி- கண்ணால் கேட்டு கேளாதவற்றை வாயாலே கேட்டு -அவனுக்கு முன்னோக்கிப் போக ஒண்ணாதபடி அவன் பின்னே நடந்து ந சபுன ஆவர்த்ததே என்று புகுந்து-திர்யக்குகளும் கூட மீளாத ஊரிலே புகுவர் கொலோ) 2
பண்டு இவன் ஆயன் நங்காய் ! படிறன் புகுந்து என் மகள் தன் தொண்டை யஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின் கெண்டை யொண் கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து வண்டமர் கானல் மல்கும் வயலாலி புகுவர் கொலோ ? –3-7-2
பதவுரை Show / Hide
நங்காய், Nangai - பெண்ணே!, (- (அயல் வீட்டுப் பெண்களில் ஒருத்தியை நோக்கி சொல்லுகிறாள்) (அப்படிப்பட்டவிவன் இப்போது) (தம்பதிகளாய்ச் சேர்ந்துகொண்ட அவ்விருவரும்))
இவன், Ivan - என் மகளைக்கொண்டுபோன விவன்
பண்டு, Pandhu - முன்பெல்லாம்
படிறன், Padiran - (பெண்களைத் திருடுவது முதலான) தீம்புகளைச் செய்கிற
ஆயன், Aayaan - இடையனாயிருந்தவன்
புகுந்து, Pugunthu - (என் வீட்டிலே ப்ரத்யக்ஷமாக) வந்து நுழைந்து
என் மகள்தன், En Magalthan - என் பெண்ணினுடைய
அம் செம்தொண்டை கனி வாய், Am Semthondai Kani Vaai - அழகிய சிவந்த ஆதொண்டைப் பழம் போன்ற அதரத்தை
நுகர்ந்தானை, Nugarnthaanai - (பானம் பண்ணினான்) அப்படி பானம்பண்ணின இவனை
உகந்து, Uganthu - (என் பெண்) விரும்பி
கொண்டை ஒரு கண் மிளிர, Kondai Oru Kan Milira - கொண்டைமீன் போலே அழகிய கண்கள் ஒளிவிட
கிளி போல் மிழற்றி, Kili Pol Mizhatri - கிளிபோலே மழலைச் சொற்கள் பேசிக்கொண்டு
அவன் பின் நடந்து, Avan Pin Nadandhu - அவன் பின்னே நடந்துபோய்
வண்டு அமர், Vandu Amar - வண்டுகள்படிந்த
கானல்மல்கும், Kaanalmalgum - கடற்கரைச் சோலை சூழ்ந்த
வயல், Vayal - கழனிகளையுடைய
ஆலி, Aali - திருவாலியிலே
புகுவர் கொலோ, Pughuvar Kollo - சென்று சேருவர்களோ?
1210பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பட்டர் இப்பாட்டை அருளிச் செய்து-ஒரு ஸ்திரியை விரூபை ஆக்கினவன் உடைய திறம் கேட்கில் அஞ்சுவன் என்கையாலே – இத்தலைக்கு ஒரு ஹானியாய் தோற்றா நின்றது –இது ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்யக் கூடாது இது எங்கனே சேரும்படி -என்று ஸ்ரீ ஆச்சானைக் கேட்க துடிப்பு இருக்க கை வேக வேணுமோ-ஸ்ரீ எம்பெருமானார் தானே அருளிச் செய்து வைத்தார் இறே -என்ன அருளிச் செய்த படி என்ன -என்று கேட்க – முன்பு ஒரு புணர்ந்து விட போக்கிலே பிறந்த பிரமாதத்தை கேட்டு அத்தை நினைத்து இப்பொழுது பயப்படுகிறாள் -என்று அருளிச் செய்தார்) 3
அஞ்சுவன் வெஞ்சொல் நங்காய் ! அரக்கர் குலப்பாவை தன்னை வெஞ்சின மூக்கரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே பஞ்சிய மெல்லடி எம் பணைத் தோளி பரக்கழிந்து வஞ்சி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ? –3-7-3
பதவுரை Show / Hide
வெம் சொல் நங்காய், Vem Sol Nangkaai - விரும்பத்தக்க வாய் மொழியையுடைய (அயல் வீட்டுப்) பெண்ணே!
அரக்கர் குலம் பாவை தன்னை மூக்கு, Arakkar Kulam Paavai Thannai Mooku - ராக்ஷஸகுலத்துப் பதுமை போன்ற சூர்ப்பணகையினுடைய மூக்கை
வெம் சினம், Vem Sinam - கடுங்கோபத்தாலே
அரிந்த, Arintha - அறுத்தொழித்த
விறலோன், Viralon - மிடுக்கையுடையனான அந்த யௌவந  புருஷனுடைய
திறம், Thiram - தன்மையை
கேட்கில், Kaetkil - கேள்விப்படுமளவில்
மெய்யே அஞ்சுவன், Meyye Anjuvan - உண்மையாக அஞ்சுகிறேன்!
பஞ்சிய மெல் அடி, Panjiy Mel Adi - பஞ்சுபோன்ற மிருதுவான அடியையுடையவனும்
எம் பணை தோளி, Em Panai Tholi - மூங்கில்போன்ற தோள்களை யுடையவளுமான என் மகள்
பாக்க்க்கழிந்து, Paakkazhindhu - பெரும்பழிக்கு இடமாகி (அவனோடு செல்ல, அவ்விருவரும்)
வஞ்சி அம் தண் பணை சூழ், Vanchi Am Than Panai Soozh - வஞ்சிக் கொடிகளாலழகிய குளிர்ந்த நீர் நிலகள் சூழ்ந்த
வயல், Vayal - கழனிகளையுடைய
ஆலி, Aali - திருவாலியிலே
புகுவர் கொலோ, Pughuvar Koloo - சென்று சேர்ந்திருப்பர்களோ?
1211பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்தார் என்று ஆசைப்படுவார்-இடையனை பிறந்தான் என்று ஆசைப் படுவாராய் ஆசைப்படா நின்றீர் கோள்-எனக்கு இரண்டும் தோற்றுகிறது இல்லை – மாதவன் தன் துணையா நடந்தாள்-ஆழம் காலை மிதப் பெற்று புத்தி பண்ணினாள் அளவுடையவர்கள் அகப்பட்ட விஷயம் என்றால்-தனக்கு நிலம் அன்று என்று மீள அறியாதே போனாள்) 4
ஏது அவன் தொல் பிறப்பு ? இளையவன் வளை யூதி மன்னர் தூதுவனாயவனூர் சொல்லுவீர்காள் ! சொலீர் அறியேன் மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் போது வண்டாடு செம்மல் புனலாளி புகுவர் கொலோ ? –3-7-4
பதவுரை Show / Hide
அவன், Avan - (என்மகளைக் கொண்டு போன) அவனுடைய (- (என்மகளோ வென்னில்) (சென்ற இருவரும்))
தொல் பிறப்பு, Thol Pirappu - பழைய ஜன்மம்
ஏது, Aethu - க்ஷத்ரிய ஜன்மமோ? இடைச்சன்மமோ? யாது கொல்?
அறியேன், Ariyen - நானறிகின்றிலேன்;
இளையவன், Ilaiyavan - குமரனாயும்
வளை ஊதி, Valai Oothi - சங்கை ஊதுமவனாயும்
மன்னர் தாதுவனாயவன், Mannar Thadhuvanayavan - பாண்டவர்களுக்காகத் தாதுசென்றவனாயுள்ள அவனுடைய
ஊர், Oor - ஊரையும்
அறியேன், Ariyen - அறிகின்றிலேன்;
சொல்லுவீர், Solluveer - சொல்லத் தெரிந்தவர்களே!
சொல்லீர், Sollir - சொல்லுங்கள்;
மாதவன் தன் துணை ஆ, Madhavan Than Thunai Aa - திருமால் தனக்குத் துணையாகப் பெற்று
நடந்தாள், Nadandhaal - (அவனோடு கூடச்) சென்றாள்;
தடம் சூழ் புறவின், Thadam Soozh Puravin - தடாகங்கள் சூழ்ந்த சோலைகளை யுடையதும்
போது, Podhu - பூக்களிலே
வண்டு ஆடு, Vandu Aadu - வண்டுகள் களித்துக் கூத்தாடப் பெற்ற
செம்மல், Semmal - பெருமைதங்கிய
புனல், Punal - தீர்த்தங்களையுடையதுமான
ஆலி, Aali - திருவாலியிலே
புகுவர் கொலோ, Pughuvar Koloo - சென்று சேருவர்களோ?
1212பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனுடைய சர்வ அங்க சௌந்தர்யமும்-இவள் உடைய தோள் அழகு ஒன்றுக்கும் போரும் அத்தனை – இருவரும் கூட ஜல கிரீடை பண்ணி வர்த்திக்கலாம் தேசத்தில் புகுவர் கொலோ) 5
தாய் எனை என்று இரங்காள் தடந்தோளி தனக்கமைந்த மாயனை மாதவனை மதித்து என்னை யகன்ற இவள் வேயன தோள் விசிறிப் பெடையன்ன மென நடந்து போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் கொலோ ? –3-7-5
பதவுரை Show / Hide
தட தோளி இவள், Thada Tholi Ival - பெரிய தோள்களையுடைய என் மகள்
எனை, Enai - என் விஷயத்தில்
தாய் என்று இரங்காள், Thaai Endru Irangaal - பெற்றதாய் என்றும் இரக்கங்கொள்ளவில்லை;
தனக்கு அமைந்த, Thanakku Amaindha - தனக்குத் தகுந்த
மாயனை, Maayanai - ஆச்சரியனான திருமாலை
மதித்து, Mathiththu - கொண்டாடிக் கொண்டு என்னை அகன்ற என்னை விட்டு நீங்கினவளாய்
வேய் அன தோள் விசிறி, Vey Ana Thol Vichiri - மூங்கில் போன்ற தோள்களை வீசிக்கொண்டு
பெடை அன்னம் என நடந்து போயின, Pedai Annan Ena Nadandhu Poyina - அன்னப் பேடைபோல் நடந்து சென்ற
பூகொடியாள், Pookodiyal - அழகிய கொடிபோன்ற என் மகளும் (அவனும்)
புனல் ஆலி, Punal Aali - நீர்வளம்மிகுந்த திருவாலியிலே
புகுவர்கொலோ, Puguvarkolo - சென்று சேருவர்களோ?
1213பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிரதிசய போக்யனுமாய்-சுலபனுமாய்-ரஷகனுமானவன் உடன் கூட-ராவண வதம் பண்ணி மீண்டு எழுந்து அருளுகிற போது ஸ்ரீ திரு அயோத்யை கோடித்தாற் போலே ஸ்ரீ திரு வாலியையும் கோடிக்கப் பண்ணி புகுகிறார்கள் இறே) 6
என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள் தன் துணையாய் என் தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள் வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும் இன் துணைவனோடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ ? –3-7-6
பதவுரை Show / Hide
என் துணை என்று எடுத்தேற்கு, En Thunai Endru Eduthetku - ‘இவள் நமக்கு உதவியாயிருப்பள்’ என்று வளர்த்து வந்த என் விஷயத்தில் (- (என் மகளானவள்) (இலங்கைக்குச் சென்று) (இருவரும்) (எழில் ஆலி புகுவர்கொலோ-.))
இறையேனும், Irayeenum - கொஞ்சமாகிலும்
இரங்கிற்றிலன், Irangittrilan - இரக்கங்கொண்டாளில்லை;
தன் துணை ஆய என்தன் தனிகைக்கும், Than Thunai Aay Enthan Thanikaikkum - (இதுவரையில்) தனக்கு உதவியாயிருந்த நான் தனியே யிருப்பதற்காகவும்
இரங்கிற்றிலள், Irangittrilal - இரக்கங் கொண்டாளில்லை;
வானவர்க்கு, Vaanavarkku - தேவர்களுக்கு
வன் துணை ஆய், Van Thunai Aay - சிறந்த துணையாய்
அரங்கத்து உறையும், Arangathu Uraiyum - கோயிலிலே கண் வளர்ந்தருளுகிற
இன் துணைவனொடும் போய், In Thunaivanodum Poy - நல்ல துணைவனான திருமாலோடே சென்று
1214பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்கே இருவரைக் கை விட்டால்-அங்கே இருவரைப் பற்ற வேணும் இறே) 7
அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள் பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால் மின்னியும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள் நடந்து புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர் கொலோ ? –3-7-7
பதவுரை Show / Hide
மின்மையும், Minmaiyum - மின்னற் கொடியையும் (- (அவ்விருவரும்) (புகுவர் கொலோ சென்று சேருவர்களோ?))
வஞ்சியையும், Vanjiyaiyum - வஞ்சிக் கொடியையும்
வென்று, Vendru - தோற்கடித்து
இலங்கும், Ilankum - (மிகவும் ஸூக்ஷ்மமாக)விளங்காநின்ற
இடையாள், Idaiyal - இடையை யுடையளான என் மகள்,
அன்னையும் அத்தனும் என்று, Annaiyum Aththanum Endru - தாய் தகப்பனென்று கூட
அடியோமுக்கு, Adiyomukku - எங்கள் விஷயத்தில்
இரங்கிற்றிலள், Irangittrilal - தயை பண்ணினாளில்லை;
பின்னை தன் காதலன் தன், Pinnai Than Kaadhalan Than - திருமாலினது
பெரு தோள் நலம் பேணினள், Peru Thol Nalam Peeninal - பெருமை தங்கிய தோள்களோடே அணைந்துபெறும் ஸுகத்தையே விரும்பின வளாய்
நடந்து, Nadandhu - (அவனோடு கூட) நடந்து செல்ல,
புன்னையும் அன்னமும் சூழ், Punnaiyum Annanum Soozh - புன்னைப் பொழிலும் அன்னப் பறவைகளும் சூழ்ந்த
புனல், Punal - நீர்வளம் பொருந்திய
ஆலி, Aali - திருவாலியிலே
1215பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செழும் கோதை-லிலோ உபகரணங்களை விட்டு-அவனைப் பற்றின பின்பு உடம்பிலே பிறந்த பௌஷ்கல்யம்- தன்னைக் காண்பார்க்கு காட்சிக்கு கொடுக்க இடம் உள்ள தேசத்தில் புகுமோ) 8
முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற செழும் கோதை தன்னைப் பெற்றிலேன் முற்றிழையை பிறப்பிலி பின்னே நடந்து மற்றெல்லாம் கை தொழப் போய் வயலாலி புகுவர் கொலோ ? –3-7-8
பதவுரை Show / Hide
முற்றிலும், Muttirulum - (வினையாட்டுக் கருவியான சிறுமுறத்தையும் (- (இருவரும்) (வயல் ஆலி புகுவர்கொலோ-.))
பைங்கிளியும், Paingiliyum - பச்சைக் கிளியையும்
பந்தும், Pandhum - பந்தையும்
ஊசலும், Oosalum - ஊஞ்சலையும்
சிற்றில்பேசுகின்ற, Sitrilpesugirn - சிறிய கூட்டிலிருந்து பேசுகிற
மென் பூவையும், Men Poovaiyum - மெல்லிய நாகணவாய்ப ; பறவையையும்
விட்டு அகன்ற, Vittu Aghandra - விட்டிட்டு வெளியேறின
செழு கோதை தன்னை, Sezhu Kothai Thannai - அழகிய பூமாலை போன்றவளும்
முற்று இழையை, Muttru Izhaiyai - நிறைந்த ஆபரணங்களையிணந்த வளுமான என் மகளே
பெற்றிலேன், Petrilein - நான் கண்ணால் காணப்பெற்றிலேன்;
மற்று எல்லாம் கைதொழ, Mattru Ellam Kaithozha - எல்லோருங் கண்டு ஸேவிக்கும் படியாக
பிறப்பு இலிபின்னே நடந்து போய், Pirappu Ilipinnai Nadandhu Poi - நித்யனான எம்பெருமான் பின்னே  நடந்துசென்று.
1216பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஈஸ்வரனைக் காட்டில் ஸ்ரீ பிராட்டி-அஸி தேஷணை-என்னும் ஏற்றத்தை உடையாள் ஆனாப் போலே ஸ்ரீ பிராட்டியில் ஏற்றம் இவளுக்கு -காவியங்கண்ணி -என்று இருவரையும் சேர அனுபவிக்கிற கண் இறே இவளுடைய கண்கள்) 9
காவியங்கண்ணி எண்ணில் கடி மா மலர்ப்பாவை யொப்பாள் பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய் வாவி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ? –3-7-9
பதவுரை Show / Hide
ரவி அம் கண்ணி, Ravi Am Kannni - நீலோற்பலமலர்போன்று அழகிய கண்களையுடையவளும், (- (இருவரும்) (வயல் ஆலி புகுவர்கொலோ-.))
யெண்ணில் கடி மா மலர்பாவை ஒப்பாள், Yennil Kadi Maa Malarpavai Oppaal - ஆலோசிக்குமிடத்தில், பெரிய பிராட்டியாரோடு ஒப்பாகச் சொல்லத் தகுந்தவளும்
தாவிசேர்அன்னம் அன்னத் நடையாள், Thavicheraannam Annath Nadayaal - இறகையுடைய அன்னப்பேடையின் நடைபோன்ற நடையையுடையவளும்
ஈடு பணை தோளி, Eedu Panai Tholi - மூங்கில் போன்ற தோள்களையவளுமான  என் மகள்
பாவியேன் பெற்றமையால், Paaviyen Petramaiyaal - பாவியான என்னுடையவயிற்றிற் பிறந்த குற்றத்தினால்
பரக்கழிந்து, Parakazhindhu - பெரும்பழிக்கு இலக்காகி
நெடுமாலொடும் போய், Nedumaalodum Poi - ஸர்வேச்வரனோடு கூடச் சென்று
வாவி, Vaavi - நடைவாவிகளும்
அம் தண்  பணை, Am Than Panai - அழகிய குளிர்ந்த தடாகங்களும்
சூழ், Sool - சூழ்ந்த
1217பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தும் சஹ்ருதயமாக கற்க வல்லாருக்கு பரம பதம் நிச்சிதம் –தாயார் தனி வழியே போனாள் என்று பயப்பட வேண்டா – ஆதி வாஹிக கணத்தோடு தானே வழி காட்டிப் போம்) 10
தாய் மனம் நின்று இரங்கத் தனியே நெடுமால் துணையா போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் என்று காய்சின வேல் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பத்தும் மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே –3-7-10
பதவுரை Show / Hide
தாய், Thaai - தாயானவள்
நின்று மனம் இரங்க, Ninru Manam Irangka - வயிறொயி நிற்க
தனியே, Thaniye - தாயினிடம் சொல்லாமல் தன் இஷ்டப்படியே
நெடு மால் துணை ஆ, Nedu Maal Thunai Aa - ஸர்வேச்வரனைத் துணையாகக் கொண்டு
போயின, Poyin - புறப்பட்டுப் போன
பூ கொடியாள், Poo Kodiyal - அழகிய கொடிபோன்ற என் மகளும் (அவனும் ஆகிய இருவரும்)
புனல் ஆலி, Punal Aali - நீர்வளம் மிக்க திருவாலியிலே
புருவர் என்று, Puruvaar Endru - சென்று சேர்ந்திருப்பர்களோ என்று சிந்தைப்படுவதாக
காய் சினம் வேல் கலியன், Kaai Sinam Vel Kalyan - எதிரிகளைத் தபிக்கச் செய்கின்ற கோபத்தையும் வேலையுமுடையரான திருமங்கையாழ்வார்
ஒலிசெய், Olisei - அருளிச்செய்த
தமிழ் மாலை பத்தும், Tamil Maalai Pathum - இத்தமிழ்ப் பாமாலை பத்தையும்
மேவிய நெஞ்சு உடையார், Meviya Nenju Udaiyaar - (கற்க) விரும்பும் மனமுடைய வர்கட்கு
விண் உலகு, Vin Ulagu - பரமபதம்
தஞ்சம் ஆவது, Thanjam Aavathu - ப்ராப்யபூமியாம்.
1218பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாதிகள் எங்கள் அபிமதங்கள் செய்ய வேணும் – என்று பிரார்திக்கிற ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நெஞ்சே நீயும் சென்று அனுபவி -என்கிறார்) 1
நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல் எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும் கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே ! –3-8-1
பதவுரை Show / Hide
நந்தாவிளக்கே, Nandavilakke - ‘நித்யமாய் ஸ்வயம் ப்ரகாசமான ஞானத்தை ஸ்வரூபமாகவுடையவனே! (- (என் மனனே வணங்கு-.))
அளத்தற்கு அரியாய், Alaththarku Ariyai - அளவிட முடியாதவனே!
நரநாரணனே, Naranarayananey - நரநாரயணாவதாரம் செய்தருளினவனே!
கரு மா முகில் போல் எந்தாய், Karumaa Mukil Pol Endhaai - கறுத்துப் பெருத்த மேகம் போன்ற எம்பெருமானே
எமக்கே அருளாய் என, Emakke Arulai Ena - எங்களுக்கே அருள் செய்ய வேணும் என்று சொல்லி
இமையோர்நின்று பரவும் இடம், Imaiyorninru Paravum Idam - தேவர்கள் இந்நிலத்தில் வந்து நின்று துதிசெய்யுமிடமானதும்,
அம் தேன், Am Then - அழகிய தேன்சாதி வண்டுகள்
எத்திசையும், Eththisaiyum - எல்லாவிடங்களிலும்
கந்தாரம் இசை பாட, Kanthaaram Isai Paada - தேவகாந்தாரி ராகம் பாடவும்
களி வண்டு, Kali Vandu - களி வண்டு சாதியிற் பிறந்த வண்டுகள்
மாடே, Maade - பக்கங்களில்
மிழற்ற, Mizhatra - ஆலாபனை பண்ணவும்
மந்தாரம், Mandhaaram - பாரிஜாத மரங்கள்
நிழல் துதைந்து நின்று, Nizhal Thuthaindhu Ninru - நிழல் தர நெருங்கி நின்று
மணம் மல்கும், Manam Malkum - பரிமளம் நிறைந்திருக்கப்பெற்றதுமான
நாங்கூர்;, Naangoor - திருநாங்கூரிலுள்ள
மணிமாடக் கோயில், Manimaadak Koyil - மணிமாடக் கோயிலென்னுந்திருப்பதியை
1219பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபத்தைப் போக்கினவன் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்ற அருளினான் நெஞ்சே -உன் துக்கம் எல்லாம் கெட அங்கே சென்று அனுபவி -என்கிறார்) 2
முதலைத் தனிமா முரண் தீர அன்று முது நீர்த் தடத்துச் செங்கண் வேழம் உய்ய விதலைத் தலைச் சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மானிடம் விண்ணனவும் பதலைக்க போதததொளி மாட நெற்றிப் பவளக் கொழுங்கால பைங்கால் புறவம் மதலைத் தலை மென்பெடை கூடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே –3-8-2
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பொருகாலத்தில் (- (மணிமாடக்கோயில் என் மனனே, வணங்கு,))
முதுநீர்தடத்து, Muthuneerthadathu - அகாதமான நீரை யுடைய பொய்கைக் கரையிலே
முதலை தனி  மா முரண் தீர, Muthalai Thani Maa Murandhira - முதலையினுடைய மிகப் பெரிய துஷ்டத்தனம் தீரும்படியாகவும்
செம் கண் வேழம் உய்ய, Sem Kan Vezham Uyya - சிவந்த கண்களையுடைய கஜேந்திராழ்வான் உஜ்ஜீவிக்கும் படியாகவும்
விதலைத்தலை சென்று, Vithalaithalai Sendru - (அவ்யானை) மிகவும் நடுங்கிக் கிடந்த ஸமயத்தில் எழுந்தருளி
அதற்கே உதவி, Adharkae Uthavi - அந்த யானைக்கு உபகரித்து
வினை தீர்த்த அம்மான் இடம், Vinai Theertha Ammaaan Idam - அதன் இடரை நீக்கின பெருமான் எழுந்தருளியிருக்குமிடமானதும்,
விண் அணவும், Vin Anavum - விண்ணுலகை அளாவியிருப்பனவாய்
புதலை கபோதம், Puthalai Kapodham - கலசங்களையும் கபோத வொழுங்குகளையுமுடையனவாய்
ஒளி மாடம் நெற்றி, Oli Maadam Netri - (இழைத்த ரத்னங்களினால்) ஒளி பெற்றனவான மாடமாளிகைகளினுடைய முகங்களிலே,
பவளம் கொழுகால பைங்கால் புறவம், Pavalam Kozhukala Paingaal Puravam - அழகிய பவழத்தூண்போன்ற பசுமையான காலையுடைய புறா
மதலைத்தலை மென் பெடை கூடும் நாங்கூர், Madhalaithalai Men Pedaikoodum Naangoor - கொடுங்கையின் மேலுள்ள மெல்லிய பேடையுடனே கலவி செய்யப்பெற்ற திரு நாங்கூரிலே
1220பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு விரோதியான முதலையைப் போக்கி – அத்தாலே ப்ரீதியான ஸ்ரீ பிராட்டி கரத்தைப் போலே அணைக்க அவளோட்டை வரும் சம்ச்லேஷத்தை பெற்ற ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே –அப்போது சென்று அனுபவி என்கிறார்) 3
கொலைப் புண் தலைக் குன்ற மொன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர் செய்து கொங்கு ஆர் இலைப் புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மானிடம் ஆளரியால் அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி மலைப்பண்ட மண்டத்திரை யுந்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே ! –3-8-3
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பொருகாலத்தில், (- (இந்த ஸந்தோஷத்தினால்) (நாங்கூர்; * * *  வணங்கு))
கொலை புண்தலை ஒன்று குன்றம் உய்ய, Kolai Pundhalai Ondru Kuntram Uyy - கொலைத்தொழில் செய்ய வல்லதும் புண்பட்ட தலையையுடையதும் மலைபோன்றதுமான ஒரு யானை உஜ்ஜீவிக்கும்படியாக
கொடுமா முதலைக்கு இடர் செய்து, Kodumaa Muthalaikku Idar Seidhu - கொடுமையிற் சிறந்த முதலைக்கு துன்பமுண்டாக்கி
கொங்கு ஆர் இலை புண்டரிகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட, Kongu Aar Ilai Pundarigathaval Inbam Anbodu Anaindhitta - பரிமளம் நிரம்பிய இலைகளையுடைய தாமரைப்பூவிற் பிறந்தவளான பிராட்டியின் சேர்த்தி யின்பத்தை அன்புடன் அநுபவிக்கப்பெற்ற
பொன்னி, Ponni - காவேரியானது,
ஆள் அரியால், Aal Ariyaal - வீரச் சிங்கங்களாலே
அலைப்புண்ட, Alaippund - ஸம்ஹரிக்கப்பட்ட
யானை, Yaanai - யானைகளினுடைய
மருப்பும், Maruppum - தந்தங்களையும்
அகிலும், Akilum - அகில் மரங்களையும்
அணிமுத்தும், Animuthum - அழகிய முத்துக்களையும்
வெண் சாமரையோடு, Ven Saamaraiyodu - வெளுத்த சாமரங்களையும்
மலை பண்டம் அண்ட, Malai Pandam Andha - மலையில் விளையக்கூடிய மற்றும் பல வஸ்துக்களையுமெல்லாம்
திரை, Thirai - அலைகளாலே
உந்து, Undhu - தள்ளிக்கொண்டு பெருகப்பெற்ற
1221பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மாலி சுமாலி தொடக்கமான ராஷசரை அடைய பண்டு இலங்கையிலே வென்ற ஸ்ரீ சர்வேஸ்வரனே ஸ்ரீ திரு மணி மாட கோயிலிலே வந்து நின்று அருளினான் -நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்) 4
சிறையார் உவணப் புள் ஓன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில் கறையார் நெடு வேல் அரக்கர் மடியக் கடல் சூழ் இலங்கை கடந்தான் இடந்தான் முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி யாறங்கர் ஏழின் இசையோர் மறையோர் வணங்கப் புகழ் எய்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே ! –3-8-4
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பொருகாலத்தில்,
சிறை ஆர, Sirai Aar - சிறகோடு கூடின
ஒன்று, Ondru - ஒப்பற்ற
உவணம் புன், Uvanam Pun - கருடப்பறவையின் மீது
ஏறி, Eri - ஏறிக்கொண்டெழுந்தருளி
செருயில், Seruyil - யுத்த்த்தில் (எதிர்த்த)
கறை ஆர் நெடுவேல் அரக்கர், Karai Ar Neduveel Arakkar - (ரத்தக) கறை நிரம்பிய பெரிய வேற்படையை யுடைய ராக்ஷஸர்கள்
திசை நான்கும் நான்கும் இரிய, Thisai Naanthum Naanthum Iriya - எட்டுத்திசைகளிலும் (சிலர்) சிதறியோடும்படியாகவும்
மடிய, Madiya - (பலர்) உயிர்மாண்டொழியும் படியாகவும் (செய்து)
கடல் சூழ் இலங்கை, Kadal Soozh Ilangai - கடலால் சூழப்பட்ட லங்காபுரியை
கடந்தான், Kadandhaan - ஒழித்த பெருமானுடைய
இடம் தான், Idam Thaan - இருப்பிடமான
முறையால் வளர்க்கின்ற மூத்தியர், Murayal Valarkkinra Moothiyar - முறைப்படி ஹோமஞ்செய்கிற மூன்று அக்நிகளையுடையாய்
நால் தேவர், Naal Thevar - நான்கு வேதங்களையும் அதிகரித்தவராய்
ஐ வேள்வி, Ai Velvi - பஞ்சமஹாயஜ்ஞங்களை அநுஷ்டிப்பவராய்
ஆறு அங்கர், Aaru Angkar - வேதாங்கங்கள் ஆறையும் பயின்றவராய்
ஏழின் இசையோர், Ezhalin Isaiyor - ஸப்தஸ்வாங்களையும் அறிந்தவரான
மறையோர், Maraiyor - ஸவதிகப்ராஹ்மணர்கள்
வணங்க, Vananga - (நித்யவாஸம்பண்ணிக் கொண்டு) வணங்குவதனால்
புகழ் எய்து நாங்கூர், Pugazh Eydhu Naangoor - புகழ் பெற்றிருக்கின்ற திருநாங்கூரிலே
மணிமாடக்கோயில், Manimadakoyil - என் மனனே வணங்கு.
1222பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரதி கூல வர்க்கத்தைப் போக்கி இடைப் பெண்களோடு சம்ஸ்லேஷித்தவன் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினவன்-நெஞ்சே அத்தேசத்தை ஆஸ்ரயி-என்கிறார்) 5
இழையோடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து தழை வாடவன் தாள் குருந்தம் ஒசித்துத் தடந்தாமரைப் பொய்கை புக்கான் இடந்தான் குழை யாட வல்லிக் குலமாட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு மழை யாடு சோலை மயிலாலு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே –3-8-5
பதவுரை Show / Hide
இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம், Izai Aadu Kongai Thalai Nanjam - ஆபரணங்கள் விளங்கப் பெற்ற (பேய்ச்சி பின்) முலையிலுள்ள விஷத்தை (- (இடம் தான்-;) (மணிமாடக்கோயில் என் மனனே! வணங்கு-.))
உண்டிட்டு, Undittu - (அவளுயிரோடு கூட) உண்டவனாரையும்,
இளகன்று கொண்டு, Ilakanru Kondu - வத்ஸாஸூரனை (எறிதடியாக)க் கொண்டு
விளங்காய் எறிந்து, Vilangai Erinthu - கபித்தாஸூரன்மேல்சுழற்றி யெறிந்து இருவரையும் முடித்தவனாயும்,
வல் தாள் குருந்தம் தழைவாட ஒசித்து, Val Thaal Kurundham Thalaivada Osithu - வலிதான வேர்ப்பற்றை யுடைய குருந்தமரத்தை (அதன்) தழைகளெல்லாம் வாடியுலரும்படி முறித்தவனாயும்
தட தாமரை பொய்கை புக்கான், Thada Thamarai Poigai Pukkan - பெரிய தாமரைக் தடாகத்திலிழிந்(து கோபிகளுடனே ஜலக்ரிடை செய்) தவனாபுமுள்ள பெருமானுடைய
குழை ஆட, Kuzai Aada - மரங்களின் தளிர்கள் (மந்கமாருத்தாலே) அசைந்தாடுவதனால்
மாடே வல்லி குலம் ஆட, Madae Valli Kulam Aada - அவற்றினருகேயுள்ள பூங்கொடிகளின் திரள் ஆடவும்
குயில் கூவமழை ஆடு, Kuyil Koovamazhai Aadu - குயில்கள் கூவவும் மேகங்கள் உலாவுகின்ற
சோலே, Sole - சோலைகளிலே
முயில்  ஆலும், Muyil Aalum - மயில்கள் நர்த்தனம் பண்ணவும் பெற்றதாய்
நீடு கொடி மாடம் மல்கு நாங்கூர், Needu Kodi Madham Malku Nangoor - நீண்ட த்வஜங்கள் நாட்டப்பெற்ற மாடமாளிகைகளினால் நிறைந்திருக்கப்பெற்றதாம திருநாங்கூரிலே
1223பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூதனையை அப்போதே பிராணன் போம்படி முலை உண்ட ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ திருமணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்) 6
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப் பகுவாய்க்கழுதுக்கு இரங்காது அவள் தன் உண்ணா முலை மற்றவள் ஆவியோடும் உடனே சுவைத்தானிடம் ஓங்கு பைந்தாள் கண்ணார் கரும்பின் கழை தின்று வைகிக் கழு நீரில் மூழ்கிச் செழு நீர்த் தடத்து மண் எனது இள மேதிகள் வைகு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே –3-8-6
பதவுரை Show / Hide
பண்ணேர் மொழி ஆய்ச்சரியர் அஞ்ச, Panneer Mozhi Aaychariyar Anja - (பண்ணிசையோடொத்த பேச்சையுடையரான இடைச்சிகள் பயப்படும்படியான வடிவுடையவளாய் (- (மணிமாடக்கோயில் என் மன்னே! வணங்கு–;))
வஞ்சம்  பகுவாய் கழுதுக்கு இரங்காது, Vanjam Pakuvai Kazhuthukku Irangathu - வஞ்சனையையும் பெரிய வாயையு முடையளான (பூதனையென்னும்) பேய்ச்சியினிடத்தில் தான் நோவுபடாமல்
அவள் தன் உண்ணா முலைமற்றவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் இடம், Aval Than Unnaa Mulaimattraval Aaviyodum Udaney Suvaithan Idam - ஆப்பூதனையினது உண்ணத் தகாத முலைப்பாலை அவளுடைய உயிரோடு கூடவே உறிஞ்சியுண்ட பெருமானுடைய இருப்பிடமாய்
ஓங்கு பைந் தாள் கண் ஆர் கரும்பின் கழை தின்று, Ongu Pain Thaal Kan Ar Karumpin Kazhai Thinru - உயர்ந்து பசுங்கால்களை யுடையனவாய் கணுக்கள் நிரம்பியவான கரும்புத் தடிகளைத் தின்று
ஐவகி, Aivagi - நகரமாட்டாமல் அங்கேயே தாமஸித்துக்கடந்து (அதன்பிறகு)
கழு நீரின் செழு நீர் தடத்து மூழ்கி, Kazhu Neerin Sezhu Neer Thadathu Moongki - செங்கழுநீர்ப் பூக்களோடு கூடிய அழகிய நீர் நிரம்பிய தடாகத்திலே முழுகி
மண் ஏந்து, Man Aendu - (கொம்புகளில்) மண்ணைத் தாங்கிக்கொண்டிருக்கிற
இள மேதிகள், Ila Methigal - இளைய எருமைகள்
வைகும், Vaikum - (கரையேறாது நீரிலேயே) தாமஸித்திருக்கப்பெற்ற
நாங்கூர், Nangoor - திருநாங்கூரிலே
1224பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காளியனால் வந்த ஆபத்தை போக்கின ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்) 7
தளைக் கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடங்கால் அரவம் இளைக்கத் திளைத்திட்டு அதனுச்சி தன் மேல் அடி வைத்த அம்மானிடம் மா மதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண் நெற்கு எனச் சென்று முன்றில் வளைக்கை நுளைப் பாவையர் மாறு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே –3-8-7
பதவுரை Show / Hide
தளை (தாமரை), Thalai Thamarai - (தாமரைப் பூக்களும்) கட்டுவிரியாமல் மொக்காயிருக்கிற (- (மணிமாடக்கோயில் என் மனனே ! வணங்கு–.))
கட்டு அவிழ் தாமரை, Kattu Avizh Thamarai - கட்டு நெகிழ்ந்து அலர்ந்த தாமரைப் பூக்களும்
வைகு, Vaiku - தங்கி யிருக்கப்பெற்ற
பொய்கைத் தடம் புக்கு, Poykai Thadam Pukku - பொய்கையிலே புகுந்து,
அடங்காவிடம் கால் அரவம் இளைக்க திளைத்திட்டு, Adangavidham Kaal Aravam Ilaikka Thilaithittu - (அப்பொய்கையினுள்) அடங்காமல் கிளர்ந்தெழுந்தாய் விஷத்தைக் கக்குகின்ற காளிய நாகம் இளைத்துப்போம்படி விளையாடி
அதன் உச்சி தன்மேல் அடி வைத்த அம்மான், Adhan Uchi Thanmel Adi Vaiththa Amman - அதன் தலைமேலே திருவடியை நாட்டியருளின் பெருமானுடைய
இடம், Idam - இருப்பிடமாய்;-
வளை கை நுளைப்பாவையர், Valai Kai Nulaippaavai - வளையணிந்த கையையுடைய குறத்திகள்,
மா மதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில், Maa Mathiyam Thilaikkum Kodi Maaligai Soozh Theruvil - சந்திரன் விளையாடும்படி ஓங்கின, கொடிகளணிந்த மாளிகைகள் நிறைந்த வீதியிலே
செழு முத்து, Sezhu Muthu - சிறந்த முத்துக்களை
வெண் நெற்கு என, Ven Nerku Enna - வெளுத்த நெல்லுகளுக்குத் தருகிறோமென்று சொல்லிக்கொண்டு
முன்றில் சென்று மாறும், Munril Sendru Maarum - ஒவ்வொரு வீட்டுவாசலிலும் போய் விற்பனை செய்யப்பெற்ற
நாங்கூர், Nangoor - திருநாங்கூரிலே
1225பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே பெண்களோடு நிரவதிக சம்ஸ்லேஷத்தைப் பண்ணின ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான்-நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்) 8
துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா இளையார் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மானிடம் வேல் நெடுங்கண் முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல் வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே –3-8-8
பதவுரை Show / Hide
துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர்தம் துகில் வாரியும், Thulai Aar Karu Men Kuzhal Aaychiyartham Thugil Vaariyum - (சுருண்டிருக்கையாலே) துளைகள் பொருந்திய கறுத்த மெல்லிய கூந்தலையுடைய இடைச்சிகளினுடைய ஆடைகளை அபஹரித்தும் (- (மணிமாடக்கோயில் என்மனனே ! வணங்கு))
சிற்றில் சிதைத்தும், Sitril Sithaiththum - (அவர்களிழைக்கிற) சிறு மணல் வீடுகளை அழித்தும்
முற்றா இளையார் விளையாட்டொடு, Muttira Ilaiyaar Vilaiyattodu - முற்றுதலில்லாத இளம் பெண்களுக்கு லீலா ரஸத்தையும்
காதல் வெள்ளம், Kaadhal Vellam - ஆசைப்பெருக்கையும்
விளைவித்த அம்மான், Vilaiviththa Amman - உண்டாக்கின பெருமானுடைய
இடம், Idam - இருப்பீடமாய்;
முதிராத இன் சொல் வளைவாய கிள்ளை, Muthiraadha In Sol Valaivaai Killaai - பரிபக்குவமாக மதுரமான சொல்லையும் வளைந்த வாயையுமுடைய கிளிகள்
வேல் நெடு கண் முளை வாள் எயிறு மடவார் பயிற்று, Vel Nedu Kan Mulai Vaal Eiyiru Madavaar Payitru - வேல்போன்று நீண்ட கண்களையும், முளைக்கின்றவளவாய் ஒளியையுடைய பற்களையுமுடையரான வைதிக ஸ்திரீகள் அப்யாஸம் செய்விக்கிற
மொழி கேட்டிருந்து, Mozhi Kaettirundhu - வேதச் சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்து
மறை பாடும், Marai Paadum - வேதபாராயணம் பண்ணப்பெற்ற
நாங்கூர், Nangoor - திருநாங்கூரிலே
1226பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக எருது ஏழு அடர்த்த செயலையும்-திவ்ய ஆயுதங்கள் உடைய சேர்த்தி அழகையும் சொல்லி தேவர்கள் ஏத்த ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் – நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்) 9
விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா ! விளங்கு சுடர் ஆழி என்னும் படையோடு சங்கு ஓன்று உடையாய் ! என நின்று இமையோர் பரவும் இடம் பைந்தடத்துப் பெடையோடு செங்கால அன்னம் துகைப்பத் தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர் மடையோட நின்று மது விம்மு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே –3-8-9
பதவுரை Show / Hide
விடை ஓடவென்று, Vidai Oadavendru - ‘(ஏழு) ரிஷபங்கள் பங்கமடையும்படி அவற்றை ஜயித்து (- (மணிமாடக் கோயில் என் மனனே!  வணங்கு))
ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா, Aaychi Men Thol Nayandha Vikirtha - நப்பின்னைப் பிராட்டியினுடைய மெல்லிய புஜங்களை விரும்பியணைத்த விலக்ஷண புருஷனே!
விளங்கு சுடர் ஆழி என்னும் படையோடு சங்கு ஒன்று உடையாய், Vilangu Sudar Aazhi Ennum Padaiyodu Sangu Ondru Udaiyaai - விளங்குகின்ற தேஜஸ்ஸையுடைய சக்ராயுதத்தையும் ஒப்பற்ற சங்கையும் உடையவனே!’
என நின்று, En Nindru - என்ற சொல்லாநின்று கொண்டு
இமையோர் பரவும் இடம், Imaiyor Paravum Idam - தேவர்கள் துதிசெய்யுமிடமாய்,
பைந்தடத்து செம் கால அன்னம் பெடையோடு துகைப்ப, Painthadathu Sem Kaala Annan Pedaiyodu Thugaippa - அழகிய தடாகத்திலே, சிவந்த கால்களையுடைய அன்னப் பறவை பேடையோடு கூடி ஏறித் துகைப்ப, (அதனாலே துகைப்புண்ட)
தொகை புண்டரிகத்திடை மது, Thokai Pundarikatthidai Madhu - திரளான தாமரைப் பூக்களினின்று பெருகின தேனானது
செங்கழுநீர் மடை ஓட நின்று விம்மும், Chengaluneer Madai Oda Nindru Vimmum - செங்கழுநீர் மடைகளிலும் ஓடிப் பாயும்படியாகப் பெருகப்பெற்ற
நாங்கூர், Nangoor - திருநாங்கூரில்
1227பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத் திருமொழிக்கு கற்றாருக்கு பலம் சொல்லுகிறது –அனுகூல பிரதி கூல சீலர் என்று வாசி அன்றிக்கே லோகமாக தங்கள் காலிலே வந்து விழும்படி மத்தகத்தின் மேல் ஏறி கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய் – ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்து வந்து பூமிக்கு தாங்களே நிர்வாஹகராய் ஆகாசத்திலே சென்று கிட்டும் படியாக முத்துக் குடையின் கீழே கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு விரும்பப் படுவர்-நிரதிசய ப்ரீதி உடையார் ஆவார்கள் – ஐஸ்வர்யத்தை புருஷார்த்தமாக சொல்லுவான் என் என்று ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க ஸ்ரீ ஈச்வரனே ஆகிலும் ஒரு கால் பிறந்து அபிஷேகம் பண்ண அமையும் ஸ்ரீ பாகவத சேஷம் ஆகலாம் ஆகில் என்று காணும் ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் இருப்பது -என்று அருளிச் செய்து அருளினார்) 10
வண்டார் பொழில் சூழ்ந்து அழகாய நாங்கூர் மணி மாடக் கோயில் நெடுமாலுக்கு என்றும் தொண்டைய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார் கண்டார் வணங்கக் களியானை மாதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய் விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ் விரி நீர் உலகாண்டு விரும்புவரே –3-8-10
பதவுரை Show / Hide
என்றும் தொண்டு ஆய தொல் சீர்வயல் மங்கையர்கோன் கலியன, Endrum Thondu Aaya Thol Seervayal Mangaiyarkon Kaliyana - நித்ய கைங்காரியம் செய்வதையே ஸஹஜகுணமாகவுடையரும் வயல் சூழ்ந்த மங்கை நாட்டிலுள்ளார்க் குத் தலைவருமான ஆழ்வார்
ஒலி செய்தமிழ் மாலை, Oli Seithamil Maalai - அருளிச் செய்த தமிழ்த் தொடையான இத்திருமொழியை
வல்லார், Vallaar - ஓதவல்லர்கள்
கண்டார்வணங்க, Kandaarvananga - கண்டவரெல்லாம் காலிலே விழும்படி
காளியனை மீதே, Kaaliyana Meedhe - மத்தகஜத்தின் மேலேறி (இருந்து)
கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர்ஆய், Kadal Soozh Ulakukku Oru Kaavalaraai - கடல் சூழ்ந்த மண்ணுலகம் முழுமைக்கும் தாங்களே துணையற்ற அரசராகி
விண் தோய் நெடு வெண்குடை நிழலின் கீழ், Vin Thoi Nedhu Venkudai Nizhalin Keel - வானத்தளவுமளாவிய நீண்ட வெண்கொற்றக் குடையின் கீழிருந்து
விரி நீர்உலகு ஆண்டு விரும்புவர், Viri Neerulagu Aandu Virumbuvar - ஆவாரண ஜலம் சூழ்ந்த பிரம்மாண்டத்தை ஆண்டு கொண்டு மகிழ்ந்திருக்கப்பெறுவர்.
1228பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நல் உயிரான அமிர்தத்தை வாங்கி நம்மை ஆஸ்ரயித்த தேவ ஜாதி கார்யம் தலைக் கட்டப் பெற்றோம் இறே -என்று அது பெற்றால் அவர்களுக்கு உரும் இன்பத்தை தான் உடையேனாய் – அவ்வமுருதத்தை புஜித்தாருக்கு இழியக் கண்ட ராகராதிகளை தான் உடையனாய் இருக்கிறவன்- பெரிய ஹர்ஷத்தோடு நித்ய வாசம் பண்ணுகையாலே ஆஸ்ரிதருக்கு இனிதான தேசம்) 1
சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை நலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான் நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில் சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி சண்பகங்கள் மண நாறும் வண் பொழிலி னூடே வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-1
பதவுரை Show / Hide
சலம்கொண்ட இரணியனது அகல் மார்வம், Salamkonda Iraniyanadhu Akal Maarvam - தப்பு எண்ணங்கொண்ட ஹிரண்யாஸுரனுடைய அகன்ற மார்வைப் பிளந்தொழித்தவனுயும் பெரிய கடலைக் கடைந்து (- (மட நெஞ்சே ! வணங்கு-.))
தடகடலை கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை, Tadakadala Kadainthu Amudham Kondo Ugandha Kaalai - பெரிய கடலை கடைந்து (அதில் தோன்றிய) அமுதத்தை (தேவர்களுக்காக), எடுத்து(க் கொடுத்து திருவள்ள முவந்தனையும் நித்ய யௌவனமுடையனுயும்
நலம் கொண்ட கரு முகில் போல் திருமேனி அம்மான்;, Nalam Konda Karu Mukil Pol Thirumeni Amman - அழகிய நீலமேகம் போன்ற திருமேனியையுடையவனுயுமிருக்கிற எம்பெருமான்
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில், Naalthorum Magizhndhu Inidhu Maruvi Urai Koyil - எப்போதும் திருவுள்ள மூவந்து போக்கியமாக பொருந்தி வாழுமிடமாய்
சலம் கொண்டு, Salam Kondo - தண்ணீரைப்பகுதி
மலர்செழியும், Malarchezhiyum - புஷ்பங்களைச் சொரிகின்ற
ஓண் மல்லிகை செருந்தி சண்பகங்கள், On Malligai Serundhi Sanbagangal - அழகிய மல்லிகைச் செடிககளும் சுரபுன்னை மரங்களும் சண்பக மரங்களும்
மணம் நாறும், Manam Naarum - பரிமளம் வீசப் பெற்ற
வண் பொழிலி னூடே, Van Pozhili Noodae - அழகிய சோலைகளினுள்ளே
கயல் ஒடி வலங்கொண்டு விளையாடும் நாங்கூர், Kayal Odi Valankondu Vilaiyadum Naangoor - மீன்களானவை ஓடித்துள்ளி விளையாடப்பெற்ற திருநாகூரில்
வைகுந்த விண்ணகரம், Vaikundha Vinnagaram - வைகுந்தவிண்ணகரமென்னுக் திருப்பதியை
1229பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னுடைய ஈஸ்வரத்வத்தை நிலை நிறுத்தினவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்- பூமியில் இதுக்கு இவனே கடவான் இதுக்கு இவனே கடவான் என்னும்படி சமைந்த பிராமணர் நெருங்கி வர்த்திக்கிற தேசம்) 2
திண்ணிய தோர் அரி யுருவாய்த் திசை யனைத்தும் நடுங்கத் தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை நண்ணி அவன் மார்வகலத்து உகிர் மடுத்த நாதன் நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில் எண்ணில் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழு இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் மண்ணில் மிகு மறையவர்கள் மலி வெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-2
பதவுரை Show / Hide
திசை அனைத்தும் நடுங்க, Thisai Anaithum Nadunga - எல்லாத் திசைகளிலுள்ளவர்களும் நடுங்கும்படியாகவும்
தேவரோடு தானவர்கள் திசைப்ப, Thevarodu Thaanavarkal Thisaippa - தேவரும் தானவரும் கலங்கும் படியாகவும்
திண்ணிய ஒர்அரி உரு ஆய், Thinaiya Orari Uru Aayi - வலிமிக்க நரஸிம்ஹ ரூபியாய்
இரணியனை நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர்மடுத்த நாதன், Iraniyanai Nanni Avan Maarvu Akalathu Ughirmadutha Nadhan - ஹிரண்யாஸுரனைக் கிட்டி அவனுடைய அகன்ற மார்விடத்து (திருக்கை) நகங்களை ஊன்றவைத்துப் பிளந்தொழித்த எம்பெருமான்
எண்ணில் பெரு செல்வத்து, Ennil Peru Selvaththu - எண்ணமுடியாமல் மிகுந்த (அளவிறந்த) (நிர்தோஷத்வம் முதலிய) பெருஞ்செல்வத்தோடு கூடி
எழில் விளங்கும் மறையும், Ezhil Vilangum Maraiyum - அழகு விளங்காநின்ற வேதங்களும்
ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரு குணத்தோர், Ezhu Isaiyum Kelvigalum Iyanra Peru Gunaththor - ஸ்தப ஸ்வரங்களும் வேதார்ந்த சரவணங்களும் பொருந்திய மஹா குணசாலிகளாய்
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்து நாங்கூர், Mannil Migu Maraiyavargal Malivu Eydhu Naangoor - பூமிக்குள் சிறப்புப் பெற்ற வைதிக ப்ராமணர்கள் நிறைந்திருக்கப் பெற்ற திருநாகூரில்
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில், Naalthorum Magizhndhu Inidhu Maruvi Urai Koyil - வைகுந்த விண்ணகரம் மட நெஞ்சே வணங்கு
1230பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அண்டமும் இந்த லோகத்தை சூழப் போந்து அலை எறிகிற அண்ட தீபங்களையும் எல்லாம் அமுது செய்த திரு வயிற்றை உடையவன் –இப்படி சர்வ நியந்தாவானவன் வர்த்திக்கிற கோயில்) 3
அண்டமும் இவ் வலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும் முண்ட மது நிறைத்து அவன் கண் சாபமது நீக்கும் முதல்வனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில் எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி இலைக் கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய வண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-3
பதவுரை Show / Hide
அண்டமும் அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுது செய்த திருவயிற்றின், Andamum Alai Kadhalum Avanigalum Ellam Amudhu Seidha Thiruvayittrin - அண்டங்களும் இந்த அலையெறிகின்ற கடல்களும் பூமிகளும் ஆகிய எல்லாவற்றையும் (பிரளய காலத்தில்) உட்கொண்ட திருவயிற்றையுடையவனும் (- (மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்) (வைகுந்த * * * வணங்கு))
அரன் கொண்டு திரியும் முண்டம் அது நிறைந்தது, Aran Kondo Thiriyum Mundam Adhu Nirainthathu - ருத்ரன் தன் கையில் ஏற்றுக் கொண்ட திரிந்த தலையோட்டை நிறையச் செய்து
அவன்கண் சாபம் அது நீக்கும், Avankal Sapam Adhu Neekum - அவனிடத்து நேர்ந்திருந்த பிரமஹக்கி சாபத்தைப் போக்கினவனுமான
முதல்வன் அவன், Muthalvan Avan - ஜகத்காரண பூதனுன ஸவேச்வரன்
எண் திசையும் பெரு செல்வம் பெரு செந்நெல் இள தெங்கு கதலி இலை கொடி ஒண் குலை கமுகோடு, En Thisaiyum Peru Selvam Peru Senel Ila Thengu Kathali Ilai Kodi On Kulai Kamugodu - அழகிய குலைகளையுடைய பாக்கு மரங்களும் ஒன்றுக்கொன்று மிகைத்துக் கொண்டு
வளம் சொரிய, Valam Soriyai - சேழித்து வளரபடிபற்றதும் வண்டுகள் பலவகையான ராகங்களைப் பாடப்
வண்டு பல இசை பாட, Vandu Pala Isai Pada - வண்டகள் பலவகையான ராகங்களைப் பாடப் பெற்றதும்
மயில் ஆலும் நாங்கூர், Mayil Aalum Nangoor - மயில்கள் ஆடப்பெற்றதுமான திருநாகூரில்
1231பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவள் ஏறிட்டுக் கொண்டு வந்த வடிவைப் போக்கி தானாம்படி பண்ணி விட்டான் ஆயிற்று அநந்தரம் அவளும் கூப்பிட்டு கொண்டு தலையிலே கையை வைத்து மலையின் மேலேயான இலங்கையிலே புகும்படி பண்ணின தோள் வலியை உடையவன் நித்ய வாசம் பண்ணுகிற கோயில்) 4
கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக் காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில் சிலை இலங்கு மணி மாடத்துச்சி மிசைச் சூலம் செழும் கொண்டல் அடடிரியச் சொரிந்த செழு முத்தம் மலை இலங்கு மாளிகை மேல் மலி வெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-4
பதவுரை Show / Hide
கலை இலக்கும் அகல் அல்குல் அரக்கரி குலக் கொடியை, Kalai Ilakkum Akal Alkul Arakkari Kulak Kodayai - நல்ல சேலை விளங்கப்பெற்ற அகன்ற நிதம்ப ப்ர தேசத்தையுடையளான சூர்ப்பணகையினுடைய (- (மகிழ்ந்து இனிது மருவி உறைகோயில்) (வைகுந்த * * * வணங்கு))
காதொடு மூக்கு உடன் அரிய, Kaadodu Mooku Udan Ariya - காதையும் மூக்கையும் உடனே அறுக்க
அவள் கதறி தலையில், Aval Kathari Thalaiyil - அவ்வரக்கி வாய்விட்டு அலறி தன் தலைமேலே
அங்கை வைத்து, Angai Vaiththu - உள்ளங்கையை வைத்துக் கொண்டு
முலை இலங்கை ஒடி புக செய்த தட தோளன், Mulai Ilangai Odi Puga Seidha Thad Tholan - மலைமேலுள்ள இலங்கையிலே ஓடிப் புகுந்து அழம்படி பண்ணிளன மஹாபாஹுவான பெருமான்
சிலை இலங்க மணி மாடத்து உச்சி மிசை குலம், Silai Ilanga Mani Maadathu Uchi Misai Kulam - ஓளி விளங்குகின்ற ரத்தனங்களிழைத்த மாளிகைகளின் மூடிமேலேயிரக்கிற குலங்கள்
செழு கொண்ர்ல் அகடு இரிய, Sezhu Konral Akadu Iriya - அழகிய மேகங்களினுடைய கீழ்யிவற்றைப் பிளக்க (அதனாலே)
சொரிந்த செழு முத்தம், Sorindha Sezhu Muththam - பெய்த அழகிய முத்துக்கள்
முலை இலங்கு மாளிகை மேல் மலிவு எய்து நாங்கூர், Mulai Ilangu Maaligai Mael Malivu Eydhu Nangoor - மலைப்போல் விளங்குகின்ற மாளிகைகளின் மேலே குவிந்து கிடக்கப்பெற்ற திருநாகூரில்
1232பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அன்று இலங்கையை பொடி படுத்திய தோள் மிடுக்கை உடைய ஸ்ரீ பிராட்டிக்கு பண்ணின வியாபாரத்தை ஆஸ்ரிதர் எல்லாருக்கும் ஒக்கப் பண்ணினது போலே அவன் பிரீதியோடே வர்த்திக்கிற தேசம் ஆகையாலே கண்டார்க்கு எல்லாம் இனிதாமோபடி இருக்கிற தேசம்) 5
மின்னணைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடி யொருபதும் தோள் இருபதும் போய் உதிர தன்னிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில் செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை செங்கழு நீரொடும் இடைந்து கழனி திகழ்ந்து எங்கும் மன்னு புகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-5
பதவுரை Show / Hide
அன்று மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கு ஆ, Andru Min Anaiya Nun Marungul Melliyarku Aa - முன்பொரு காலத்தில் மின்னல் போன்று நுட்பமான இடையுடைய ஸீதாபிராட்டிக்காக
இலங்கைவேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர, Ilangai Vendan Mudi Orupadhu Thol Irupadhu Poi Uthira - இராவணனுடைய பத்துக் தலைகளும் இருபது தோள்களும் சின்னபின்னமாம்படி
நிகரி இல் தன் சிலை விளைத்து, Nikari Il Than Silai Vilaitthu - ஒப்பற்ற தனது கோதண்ட வில்லை வளையச்செய்து (அம்புகளைச் செலுத்தி)
இலங்கை பொடி செய்த தட தோளன், Ilangai Podi Seidha Thad Tholan - லுங்காபுரியைப் பொடியாகக் கின மஹாவீரன்.
செங்கலொடு, Sengalodu - செந்நெல்லும்
செம் கமலம் சேல் கயல்கள் வாளை செய்கழு நீரோடு மிடைந்து கழனி மிடைந்து, Sem Kamalam Sel Kayalgal Vaalai Seykalzu Neerodu Midaindhu Kazhani Midaindhu - செந்தாமரைப்பூக்களும் மீன் விசேஷங்களும் செங்கழு நீர்பூக்களும் சேர்ந்து கொண்டு
கழனி எங்கும் திகழ்ந்து மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்து நாங்கூர், Kazhani Engum Thigalndhu Mannu Pugazh Vedhiyargal Malivu Eydhu Naangoor - கழனிகளுக்குள்ள விடமெங்கம் விளங்கப்பெற்றிதும் நித்தியமான கீர்த்தியையுடைய வைதிகரிகள் நிறைந்திருக்கப் பெற்றதுமான திருநாகூரில் வைகுந்த * * * வணங்கு
1233பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதியைப் போக்கப் பெற்றோமே என்று அத்தாலே தீப்தனாய் ஸ்ரீ சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கிற தேசம்) 6
பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு திண்மை மிகு மருதொடு நற் சகடம் இறுத்து அருளும் தேவனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில் உண்மை மிகு மறையொடு நற் கலைகள் நிறை பொறைகள் உதவு கொடை என்று இவற்றின் ஒழிவில்லா பெரிய வண்மை மிகு மறையவர்கள் மலி வெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-6
பதவுரை Show / Hide
பெண்மைமிகு வடிவு கொடு வந்தவளை, Penmaimigu Vadivu Kodu Vandhavazhai - உத்தம ஸ்தீரியின் வடிவைப் பூண்டுக்கொண்டு (கொல்லுவதற்காக) வந்த பூனையானவள். (- (மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்))
பெரிய போயினது உருவு கொடுமாள், Periya Poyinathu Uruvu Kodumaal - தன் நிஜமான கொடிப் பேய் வடிவத்துடனே இறக்கும் படியாக
உயிர்உண்டு, Uyirundhu - அவளது உயிரை உறிஞ்சியுண்டவனையும்
திறமைமிகு மருதோடு நலசங்கம் இறுத்து அருளும் தேவன் அவன், Thiramaimigu Marudhodu Nalasangam Iruthu Arulum Devan Avan - திடமாக வேரூன்றிக் கிடந்த மருத மரத்தையும் கொடிய சகடத்தையும் முறித் தருளினவனுயுமுள்ள அப்பெருமான்
உண்மை மிகு மறையோடு, Unmai Migu Maraiyodu - உள்ளது உள்ளபடி சொல்லுகிற வேதங்கடிளென்ன
நல்களைகள், Nalkalailgal - (அந்த வேதங்களுக்கு வியாக்கியாமான) சிறந்த அதிஹாஸ புராணுதிகளென்ன (இவற்றறையும்)
நிறை, Nirai - நிறைந்து கிடக்கிற
பொறைகள், Poraihal - பொறுமை முதலிய குணங்களென்ன
உதவ கொடை, Udhava Kodai - கேட்டார்கேட்டபடி கொடுக்கும் ஔதார்யமென்ன
என்று இவற்றின் ஒழிவு இ;ல்லா, Endru Ivatrin Ozhivu Illa - ஏன்றிவை முதலான குணங்களையும் எப்போதும் உடையவர்களாய்
பெரிய வண்மை மிகு மறையவர்கள், Periya Vanmai Migu Maraiyavargal - ஆத்ம ஸமமர்பணமாகிற சிறந்த ஔதார்மாய் உடையவர்காய்
மலிவு எய்தும் நாங்கூர், Malivu Eydhum Naangoor - முலிந்திருக்கப்பெற்ற திருநாகூரிலே வைகுந்த விண்ணகரம் மட நெஞ்சே ! வண்ங்கு
1234பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வெண்ணெயையும் ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யம் ஆகையாலே திரு உள்ளமானது குளிரும்படியாக அமுது செய்து அநந்தரம் இந்த லோகத்தை அடைய திரு வயிற்றிலே வைத்து ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்தை பண்ணுகையாலே இளகிப் பதித்து இருக்கிற-நிரவதிக சம்பத்து மாறாதே செல்லுகிற தேசம் ஸ்ரீ நாங்கூர் வைகுந்த விண்ணகரம்) 7
விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து வேல் நெடுங்கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் உளங்குளிர அமுது செய்து இவ் வுலகுண்ட காளை உகந்தினிது நாள் தோறும் மருவி யுறை கோயில் இளம்படி நற் கமுகு குலைத் தெங்கு கொடிச் செந்நெல் ஈன் கரும்பு கண் வளரக் கால் தடவும் புனலால் வளங்கொண்ட பெருஞ் செல்வம் வளரு மணி நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வண்ங்கு மட நெஞ்சே –3-9-7
பதவுரை Show / Hide
இள கன்று கொண்டு விளங்கனியை உதிர எறிந்து, Ila Kankuru Konda Vilanganiyai Uthira Erindhu - (வத்ஸுஸர னென்கிற ஒரு இளங்கன்றைத் தூக்கி விளாம்பழங்கள் உதிரும் படி (கபி த்தாஸுரன் மேல்) வீசி யெறிந்தவனையும்
வேல் நெடு கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர்வெண்ணெய், Vel Nedu Kan Aaychiyargal Vaiththa Thayirvennai - வேல் போன்ற நீண்ட கண்களைக் யுடையரான இடைச்சிகள் (உறிகளில்) சேமித்த வைத்த தயிரையும் வெண்ணெயையும்
உளம் குளிர அமுது செய்து, Ulam Kulira Amuthu Seythu - தன் திருவுள்ளம் குளிரும்படி அமுதுசெய்தும் (அதனால்) திருபடதிபெறாதவன் போன்று)
ஈன் கரும்ப, Een Karumbu - இனிய கரும்பகளும் (ஆகிய இவை)
கண்வளர, Kanvalara - நாடோறும் செழித்தோங்கி வளரும்படி
கால்தடவும் புணலால், Kaalthadavu Punalaal - அடியிலே பாய்கின்ற தண்ணீரினால்
இஉலகு உண்ட, Iulagu Unda - இந்த லோகங்களையும்யெல்லாம் அமுது செய்தவனுயுமிருக்கிற
காளை, Kaalai - நித்யயுவானான பெருமான் உகந்து இனிது நாள்தோறும் மருவி உறை கோயில்
இள படி நல் கழுகு, Ila Padi Nal Kazhugu - இளமையை இயல்வாகவுடைய நல்ல பாக்கு மரங்களும்
குலை தெங்கு, Kulai Thengu - குலைகளையுடைய தென்னை மரங்களும்
கொடி செந்நெல், Kodi Sennel - வெற்றிலைக் கொடிகளும் செந்நெற்பயிர்களும்
வளம் கொண்ட பெரு செல்வம், Valam Konda Peru Selvam - அழகு மிகுந்தம் மிக்க ஜச்சரியம் பொலிந்திருப்பதும்
அணி, Ani - அழகியதுமான  நாங்கூர்திருவாங்கூரிலே வைகுந்தவிண்ணகரம் மட நெஞ்சே வணங்கு
1235பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கும் ருத்ரனுக்கும் என்னது என்று கூறிட்டு அனுபவிக்கும் படி திரு மேனியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற சீலத்தை உடையவன் –ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு நாதன் ஆனவன்) 8
ஆறாத சினத்தின் மிகு நரகனுரம் அழித்த அடலாழித் தடக்கையன் அலர்மகட்கும் அரற்கும் கூறாகக் கொடுத்தருளும் திரு யுடம்பன் இமையோர் குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில் மாறாத மலர்க்கமலம் செங்கழுநீர் ததும்பி மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை யடைப்ப மாறாத பெருஞ் செல்வம் வளரு மணி நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-8
பதவுரை Show / Hide
ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழத்த அடல் ஆழி தட கையன், Aaraadha Sinathin Migu Narakan Uram Azhatta Adal Aazhi Thada Kaiyan - தணியாமல் வளர்கின்ற கோபத்தினால் மிகுந்தவனான நரகாசுரனுடைய மிடுக்கை தொலைந்த தீக்ஷ்ணமான திரு வாழியை தனது தடங்கையிலே யுடையவனும் (- (மகிழ்ந்து இனிது மருவி உறை கோவில்) (வைகுந்த விண்ணகரம் மட நெஞ்சே ! வணங்கு;))
ஆலர் மகட்கும் அரற்கம் கூறு ஆக கொடுத்தருளும் திரு உடம்பன், Aalar Makadkum Ararkkam Kooru Aaga Koduththarulum Thiru Udanban - பெரிய பிராட்டியார்க்கும் சிவ பிரானுக்கும் பகுதியாகக் கொடுக்கப்பட்ட திருமேனியை யுடையவனும்
இமையோர் குலம் முதல்வன், Imayior Kulam Muthalvan - நித்யஸூரிகள் திரளுக்கு நாதனுமான எம்பெருமான்
மாறாத மலர் கமலாம், Maaradha Malar Kamalam - மாறாத மலரையுடைய தாமரைகள்
செங்கழுநீர், Sengal Nheer - செங்கழுநீர்ப்பூக்கள் (ஆகிய இவற்றில் நின்று)
மது வெள்ளம் ததும்பி ஒழுக உழவர், Madhu Vellam Thadumbi Ozhuga Uzhavar - தேன் வெள்ளமானது இடைவிடாது பாய்வதனால் பயிர்த் தொழில் செய்பவர்கள்
வுயல் மடை அடைப்பு, Vuyal Madai Adaippu - (தங்கள் தங்கள்) கழனி மடைகளை யடைக்கப் பெற்றதும்
மாறாத பெரு செல்வம் வளரும் அணி நாஞ்கூர், Maaradha Peru Selvam Valarum Ani Naangkoor - ஓயாத மிக்க செல்வம் வளர்வதுமான அழகிய திருநாங்கூரில்
1236பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேவர்களோடே-சனகாதிகளோடே-புஷ்பாத் உபகரணங்களைத் தூவி எங்களுக்கு நாதனான ஸ்ரீ சர்வேஸ்வரனே எங்கள் பக்கலில் கிருபையை பண்ணி அருள வேணும்-என்னும் ஸ்ரீ சர்வேஸ்வரன் பிரீதி பூர்வகமாக நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 9
வங்கமலி தடங்கடலுள் வானவர்களோடு மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி எங்கள் தனி நாயகனே ! எமக்கு அருளாய் என்னும் ஈசனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில் செங்கயலும் வாளைகளும் செந்நெல் இடைக் குதிப்பச் சேலுகளும் செழும் பணை சூழ் வீதி தொறும் மிடைந்து மங்குல் மதிய கடு உரிஞ்சி மணி மாட நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-9
பதவுரை Show / Hide
வங்கம் மலி தட கடலுள், Vangam Mali Thada Kadalul - மரக்கலங்கள் நிறைந்து கிடக்கிற பெரிய திருப்பாற்கடலிலே (- (மகிழ்ந்து இனிதுமருவி உறை கோயிவில்) (வைகுந்த விண்கரம் மட நெஞ்சே! வணங்கு-;))
வானவர்களோடு மா முனிவர் பலர்கூடி, Vaanavarkalodu Maa Munivar Palarkoodi - தேவர்களும் மஹர்ஷிகளும் பலர் ஒன்றுகூடி
மா மலர்கள் துவி, Maa Malargal Thuvi - சிறந்த புஷ்பங்களைப் பணி மாறி
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும், Engal Thani Naayagane Emakku Arulai Ennum - எங்களுக்கு அத்விதீய நாதனானவனே! எமக்குக் கிருபை பண்ணவேணும் என்று வேண்டப்பெற்ற
ஈசன் அவன், Eesan Avan - எம்பெருமான்
செம் கயலும் வாளைகளும், Sem Kayalum Valaigalum - செவ்விய கயல் மீன்களும் வாளை மீன்களும்
செந்நெலிடை குதிப்ப, Sennelidai Kudippa - செந்நெற் பயிர்களிடையே துள்ளிக் குதிக்க
சேல் உகளும் செழு பணைசூழ் விதிதொறும் மிடைந்து, Sel Ugalum Sezhu Panaisuzhu Vidhithorum Midainthu - சேல் மீன்களும் டவே களித்து விளையாடப்பெற்ற அழகிய தடாகங்கள் பெரிய வீதிகள் தோறும் நெருங்கியிருக்கப் பெற்றதும்.
மங்குல மதி அகடு உரிஞ்சும் மணி மாடம், Mangula Mathi Akadu Urinjum Mani Madham - ஆகாசத்தில் திரிகிற சந்திரனுடைய கீழ்வயிறு தேயுமத்படியுயர்ந்த மணி மாடங்களை யுடையதுமான
நாங்மூகூர், Nangmoogoor - திருநாங்கூரில்
1237பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித அர்த்தமாக ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு இருக்கிற புண்டரீ காஷனான ஸ்ரீ சர்வேஸ்வரன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்-தமிழ் தொடை பத்தையும் வல்லார்கள் உபய விபூதியையும் தாங்கள் இட்ட வழக்காம் படியான பிரபாவத்தை உடையராய்ப் பெறுவர்) 10
சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரைக் கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில் வங்கமலி கடலுலகில் மலி வெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ் மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன சங்க மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள் தரணியோடும் விசும்பாளும் தன்மை பெறுவாரே –3-9-10
பதவுரை Show / Hide
சங்கு மலி தண்டு சக்கரம் முதல் முன் வந்தும், Sangu Mali Thandu Chakkaram Mudhal Mun Vandhum - ஸ்ரீ பாஞ்சஜந்யமும் பொருந்திய கௌமோதகியும் ஸூதர்சநமும் முதலான திவ்யா யுதங்களை கண் முன்னே தரித்துக் கொண்டிருக்கிற
நெடிய தாமரை கண் பிரான் தான், Nedhiya Thamarai Kan Piraan Thaan - நீண்ட தாமரை போன்ற திருக்கண்களையுடைய ஸர்வேச்வரன்
அமரும் கோயில், Amarum Koyil - நித்யவாஸம் பண்ணுகிய ஸந் நிதியாய்
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்து நாங்கூர், Vangam Mali Kadal Ulagil Malivu Eythu Nangoor - கப்பல்கள் நிறைந்த கடலால் சூழப்பட்ட நிலவுலகத்தில் பிரஸித்திபெற்ற திருநாங்கூரிலுள்ளதான்
வைகுந்த விண்ணகர்மேல், Vaikundha Vinnakarmel - வைகுந்த விண்ணகரத் திருபதி விஷயமாக
வண்டு அறையும் பொழில் சூழ் மங்கையர்த்தம் தலைவன், Vandu Araiym Pozhil Soozh Mangaiyartham Thalaivan - வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற சோலைகளினால் சூழப்பட்ட திருமங்களை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரும்
மருவலர்தம் உடல் துணியவாள் வீசும்பரகாலன் கலிகன்றி சொன்ன, Maruvalartham Udal Thuniyavaal Veesumparakalan Kalikanri Sonna - பகைவருடைய சரீரங்கள் தொலையும்படி வாட்படையை வீசுகின்றவரும் பரகாலனென்னுந் திருநாமமுடையவருமான திருமங்கையாழ் வார் அருளிச் செய்த
சங்கம் மலி தமிழ் மாலை இவை பத்து வல்லார்கள், Sangam Mali Tamil Maalai Ivai Paththu Vallarhal - சங்கப்புலவர்கள் கொண்டாடத்தக்க தமிழ்மாலையாகிய இப்பத்துப் பரசுரங்களையும் ஓதவல்லவர்கள்
தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவார், Tharaniyodu Vizhumbu Aalum Thanmai Peruvar - பூமியையும் பரமபதத்தையும் ஆளும்படியான அதிசஙத்தைப் பெறுவார்கள்.
1238பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பொறுப்பிக்கும் அவளும்-பொறைக்கு உவாத்தானவளும்-எப்போதும் ஒக்க அருகே இருக்கையாலே ஆஸ்ரிதர் பக்கல் எப்போதும் அவன் அருளே நடந்து அத்தாலே கொடிய அபராதங்கள் இவ்வோ விடங்கள் நமக்கு இருப்பிடம் அல்ல என்று விட்டு ஓட – தேவர்களுக்கும் கூட கால் பொருந்த அரிதாம்படியான இஸ் சம்சார விபூதியிலே அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான ஸ்ரீ நித்ய சூரிகள் பொருந்தி ஆஸ்ரயிக்கும் படியாக இருக்கிற தேசம்) 1
திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும் அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-1
பதவுரை Show / Hide
இருபாலும் திருமடந்தை மண் மடந்தை திகழ, Irubaalum Thirumadandhai Mann Madandhai Thigazha - இரண்டு பக்கங்களிலும் ஸ்ரீதேவி பூதேவிகள் விளங்க நின்று (- (அரியமேய விண்ணகரம் மடநெஞ்சே! வணங்கு))
அடியவர்கட்கு தீ வினைகள் போய் அகல, Adiyavarkadku Thee Vinaigal Poi Akala - ஆச்ரிதர்பக்கலில் கொடிய பாவங்கள் தொலையும் படியான
என்றும் அருள் நடந்து, Endrum Arul Nadandhu - எப்போதும் க்ருபைபண்ணி
இவ் ஏழ் உலகத்தவர் பணிய, Iv Ezh Ulagaththavar Paniya - இந்த ஸப்த லோகங்களிலுள்ளாராலும் ஆச்ரயிக்கப்பெற்று
வானோர் அமர்ந்து ஏத்த, Vaanor Amarnthu Aetha - நித்யஸூரிகள் கால் பொருந்தில் தோத்திரம் பண்ணப் பெற்று
இருந்த இடம், Irundha Idam - (எம் பெருமான்) எழுந்தருளியிருக்குமிடமாய்
பெரு புகழ் வேதியர் வாழ்தரும் இடங்கள், Peru Pugazh Vedhiyar Vazhtharum Idangal - மிக்க புகழை யுடையரான வைதிகர்கள் வாழ்கின்ற இடங்களை யுடைத்தாய்
மலர்கள் மிகு கைதைகள், Malargal Miku Kaithaigal - புஸ்ப  ஸம்பத்தியையுடைய
சேங்கழுநீர் தாமரைகள், Sengalunir Thamaraihal - தாழைகளும் செங்கழுநீர் களும் தாமரைகளும்
தடங்கள் தொறுநும், Thadangal Thorunam - தடாகங்கள் தோறும்  (நிறைந்து )
இடங்கள்  தொறும் திகழ, Idangal Thorum Thigazha - கண்விட மெங்கும் விளங்கப்பெற்றதாய்
பொழில், Pozhil - ஆகாச ஸ்தலங்களைத் தழுவி யிருப்பதனாலே
ஏழில் திகழும் நாங்கூர், Ezhal Thigazhum Nangoor - அழகு விளங்கா நிற்பதான திருநாங்கூரில்
1239பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவர்கள் நீ வேண்டா -எங்களுக்கு உப்புச் சாறு அமையும் –என் பெரு விலையனான தன் படி ஒன்றும் பாராதே தன் தோள் நோவும்படி கடலை நெருக்கிக் கடைந்த அவர்களுக்கு அமிர்தத்தை உபகரித்தவன் – என் ஆரமுதம் – அவர்கள் அமிர்தம் போல் அன்றிக்கே தம்முடைய அமிர்தம் இருக்கிறபடி- கொண்டாடிக் கொண்டு வர்த்திக்கிற தேசம்) 2
வென்றி மிகு நரகனுரமது அழிய விசுறும் விறல் ஆழித் தடக்கையன் விண்ணவர்கட்கு அன்று குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும் குரு மணி என்னாரமுதம் குலவி யுறை கோயில் என்றும் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழு இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் அன்று உலகம் படைத்தவனை யவர்கள் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-2
பதவுரை Show / Hide
வென்றி மிகு நரகன், Vendri Miku Naragan - ஜெயசீலனான நரகாசுரனுடைய
ஊரம் அது அழிய, Ooram Adhu Azhiya - மிடுக்கு அழியும்படி
விசிறும், Visirum - (அவன் மீது) வீசி யெறியப் பட்ட
விறல் ஆழி, Viral Aazhi - வலிவுள்ள திருவாழியை
தட கையன், Thada Kaiyan - பெரிய திருக்கையிலே உடையவனும்
அன்று, Anru - முன் பொருகாலத்தில்
விண்ணவர்கட்கு, Vinnavarkadku - இந்திரன் முதலிய தேவர்களுக்காக
குன்று கொடு, Kundru Kodu - மந்தர பர்வதத்தை நட்டு
குரைகடலை, Kuraikadalai - கோஷஞ்செய்யு மியல்வை யுடைய ஜமுத்ரத்தை கடைந்து
கடைந்து, Kadaindhu - கடைந்து
அமுதம் அளிக்கும், Amudham Alikkum - அமிருதத்தை யெடுத்துக் கொடுத்தவனும்
குரு மணி, Guru Mani - சிறந்த ரத்னம் போன்றவனும்
என் ஆர் அமுதலம், En Ar Amudhalam - அமுதம் போன்றவனுமான பெருமான்
குலவி, Kulavi - கொண்டாட்டத்துடனே
உறை கோவில், Urai Kovil - எழுந்தருளியிருக்கும் திவ்ய தேசம்
ஏன்றும் மிகு, Aendrum Migu - எப்பொழுதும் வளர்ந்துவருகிற
பெரு செல்வத்து எழில் விளங்கும், Peru Selvaththu Ezhil Vilangum - அளவற்ற செல்வத்தின் அழகு விளங்கும்படியுள்ள வர்களாய்
மறையோர், Maraiyor - வேதம் வல்லவர்களாய்
ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரு குணத்தோர், Ezhu Isaiyum Kelvigalum Iyanra Peru Gunaththor - முன்பு உலகங்களைப் படைத்த பிரமனைப் போன்றவர்களான அந்தணர்கள் வாழ்கிற திருநாங்கூரில்
1240பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரளயத்திலே நோவு பட புக வயிற்றிலே வைத்து நோக்கின உபகாரகன் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து – இடையர்கள் கண்டு பிரீதராம்படி குவலயா பீடத்தின் உடைய கொம்பை முறித்து அநந்தரம் கம்சனுடைய மயிரைப் பிடித்து தலை கீழாகத் தள்ளி முதுகிலே அறைந்து அவனை அழியச் செய்த உபகாரகன் உடைய கோயில்) 3
உம்பரும் இவ் ஏழு உலகும் ஏழு கடலும் எல்லாம் உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வெய்த கும்பமிகு மதயானை மருப்பொசித்துக் கஞ்சன் குஞ்சி பிடித்தடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும் பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்டப் பலங்கனிகள் தேன் காட்ட படவரவேரல்குல் அம்பனைய கண் மடவார் மகிழ்வெய்து நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-3
பதவுரை Show / Hide
உம்பரும் இவ் ஏழ் உலகும் ஏழ் கடலும் எல்லாம், Umbarum Iv Aezh Ulagum Aezh Kadalum Ellam - தேவஜாதியும் இந்த ஸப்த லோகங்களும் ஸப்த ஸாகரங்களும் ஆகிய இவை யெல்லாவற்றையும் (- (மொக்கும் மலருமாய்ப் பூத்து  நின்று))
உண்ட பிரான், Unda Piraan - (பிரளயகாலத்தில் ) திரு வயிற்றிலே வைத்து நோக்கின உபகார சீலனும்
முன் அண்டர்கள் கண்டு மகிழ்வு  எய்த, Mun Andarkal Kandu Makizhvu Eytha - முன்பு இடையர்கள் கண்ணாலே கண்டு களிப்படையும்படி
கும்பம் மிகு மதம் யானை மருப்பு ஒசித்து, Kumbam Migu Matham Yaanai Maruppu Osiththu - குடம் போன்ற பெரிய மத்தகத்தையுடைய மந்தகஜ மான குவலயாபீடத்தி னுடைய தந்தங்களை முறித்துவிட்டு (உள்ளே நுழைந்து)
கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த, Kanjan Kunchipidiththu Adiththu - கம்ஸனுடைய மயிரைப் பிடித்து (கீழே தள்ளி) அவனை யழியச் செய்த
புpரான், Puraan - உபகாரகனுமான  பெருமானுடைய
கோயில் மருங்கு எங்கும்  பல புண்ணை, Kovil Marungu Engum Pala Punnai - திவ்ய தேசம்  பக்கங்களிலெல்லாம்  பலபல புன்னைமரங்கள்
பைம்பொனொடு வெண்முத்தம் காட்ட, Paimponodu Venmuththam Kaata - அழகிய பொன்னையும் வெளுத்த முத்துக்களையும் பிகாரப்படுத்தவும்
பலங்கனிகள் தேன் காட்ட, Palankanigal Then Kaata - பலாப்பழங்கள் தேனைச் சொரிந்து காட்டவும் பெற்றதாய்
படம் அரவு ஏர் அல்குல் அம்பு அனைய கண் மடவார், Padam Aravu Aer Alkul Ambu Anaiya Kan Madavaar - படமெடுத்து பாம்பைப் போன்று அழகிய நிதம்பத்தையும் அம்பு போல் கூர்மையான கண்களையும் உடைய ஸ்த்ரீகள்
மகிழ்வு எய்தும் நாங்குர் அரிமேய விண்ணகரம், Makizhvu Eythum Naangur Arimeya Vinnakaram - மகிழந்து வாழுமிடமான திருநாங்கூரிலே                வணங்கு
1241பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஹிரண்யன் உடைய முரட்டு உடலிலே வைத்தால் வளையக் கடவது அன்றிக்கே கூர்மை மிக்கு இருந்த திரு உகிராலே இரண்டு கூறாம்படி பிளந்து அவன் பக்கல் இழவு தீரும் படி அவன் மகன் என்று ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே அருளைப் பண்ணினவன் வர்த்திக்கிற தேசம்) 4
ஓடாத வாளரியின் உருவமது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி வாடாத வள்ளுகிரால் பிளந்து அவன் தன் மகனுக்கு அருள் செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர் சேடேறு மலர்ச் செருந்தி செழுங்கமுகம் பாளை செண்பகங்கள் மணம் நாறும் வான் பொழிலினூடே ஆடேறு வயலாலைப் புகை கமழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-4
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பொரு காலத்தில் (- (அரிமேய விண்ணகரம்             வணங்கு))
ஓடாத ஆள் அரியின் உருவம் அது கொண்டு, Odaadha Aal Ariyin Uruvam Adhu Konda - போரில்அ பின்வாங்க மாட்டாத நரஸிம்ஹ  ரூபியாகி
உலப்பு இல் மிகு பெரு வரத்த இரணியனை பற்றி, Ulapu Il Migu Peru Varaththu Iraniyanai Patri - முடிவில்லாத மிகப்பெரிய வரங்ளைப் பெற்றவனான ஹிரண்யாஸூரனை பிடித்துக் கொண்டு
வாடாத வள் உகிரால் பிளந்து, Vaadaadha Val Ukiraal Pilandhu - வுளையாத தீக்ஷ்ணமான நகங்களினால் கிழித்து
அவன் தன் மகனுக்கு அருள் செய்தான், Avan Than Maganukku Arul Seithaan - அவனது புத்திரனான ப்ரஹ்லாதனுக்கு க்ருபை பண்ணின பெருமான்
வாழும் இடம், Vaalum Idam - எழுந்தருளியிருக்கும் திவ்ய தேசம்
மல்லிகை செங்கழுநீர், Mallikai Chengaluneer - மல்லிகைகளும் செங்கழுநீர் களும்
சேடு ஏறு மலர் செருந்தி, Sedu Eru Malai Serunthi - திரள் திரளாகப் பூத்த பூக்களையுடைய ஸூர புன்னைகளும்
செழு கமுகம் பாளை, Sezhu Kamugam Paalai - அழகிய பாக்குப் பாளைகளும்
செண்பகங்கள், Senbagangal - செண்பகப் பூக்களும்
மணம் நாறும் வண் பொழி லின் ஊடே, Manam Naarum Van Pozhi Lin Oode - புரிமளம் வீசப்பெற்ற அழகிய சோலைகளின் நடுவே
ஆடு ஏறு வயல் ஆலைப் புகை கமழும் நாங்கூர், Aadu Eru Vayal Alaip Pugai Kamazhum Naangoor - கரும்பு ஆடுகைக்காக ஏறின வயலில் கரும்பாலைகளின் புகை பரிமளிக்கப் பெற்ற திருநாங்கூரிலே.
1242பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மகா பலியினுடைய யஞ்ஞ வாடத்திலே இவன் -தேவ கார்யம் செய்கிறான் -என்று தோற்றாத படியாக நாட்டில் வாமனர்கள் திரு உலகு அளந்து அருளின இடம் –என்னும் படியான வாமன வேஷத்தை பரிகரித்து எனக்கு மூன்றடி வேணும் -என்று அர்த்தித்து ஆகாசத்தையும் அலை எறியா நின்றுள்ள கடலையும் த்வீபங்களையும் எல்லாம் அனாயாசேன அளந்து கொண்ட உபகாரகன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 5
கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தான வேள்விக் களவின் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழிலயலே அண்டமுறு முழ ஒலியும் வண்டினங்கள் ஒலியும் அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும் அண்டமுறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-5
பதவுரை Show / Hide
கண்டவர் தம் மனம் மகிழ, Kandavar Tham Manam Maghizha - பார்த்தவர்களெல்லாருடைய மனமும் ஆநந்தமடையும்படி
மாவலி தன் வேள்வி, Mavali Than Velvi - மஹாபலியின் யாகபூமியிலே
களவின் மிகு சிறு குறள் ஆய், Kalavin Migu Siru Kural Aayi - வஞ்சனை மிகுந்த சிறுத்த வாமநரூபியாய்க் கொண்டு
மூ அடி என்று இரந்திட்டு, Moo Adi Endru Irandhittu - மூவடிநிலம் தா என்று யாசித்து
அண்டமும், Andamum - மேலுலகங்களையும்
இவ் அலை கடலும் அவனிகளும், Iva Alai Kadhalum Avanigalum - அலையெறிகின்ற இக்கடல்களோடு கூடின பூமண்டலத்தையும்
எல்லாம் அளந்தபிரான், Ellam Alandhapiraan - மற்றுமெல்லாவற்றையும் அளந்து கொண்ட எம் பெருமாள்
அமரும் இடம், Amarum Idam - எழுந்தருளி யிருக்கும் தவ்ய தேசம்.
வுளம் கொள் பொழில் அயலெ, Vulam Kol Pozhil Ayalel - அழகிய சோலைகளின் அருகே
அண்டம் உறு முழவு ஒலியும், Andam Uru Muzhavu Oliyum - ஆகாசத்தளவும் வியாபிக்கிற வாத்யகோஷங்களும்
வுண்டு இனங்கள், Vundu Inangal - வண்டுத்திரள்களின் ரீங்காரமும்
அரு மறையின் ஒலியும், Aru Maraiyin Oliyum - அருமையான வேதங்களின் கோஷமும்
மடவார் சிலம்பின் ஒலியும், Madavaar Silampin Oliyum - மாதருடைய காலணிகளின் ஓசையும்
ஆண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும்   அரிமேய விண்ணகரம், Aandam Urum Alai Kadalin Oli Thigazhum Arimeya Vinnaikaram - அண்டபித்தியளவுஞ் சென்று அலையெறிகிற (பிரளயக்) கடலின் கோஷம் போலே விளங்கப்பெற்ற  திருநாங்குகூரிலே  வணங்கு
1243பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளுக்காக இலங்கைக்கு நிர்வாஹனாய் இருக்கிறவனுடைய பத்துத் தலையும் இருபது தோளும் உதிரும்படியாக – தாளை உடைத்தாய் -நெடிதாய் -திண்ணியதாய் இருக்கிற வில்லை வளைத்த தசரதாத் மகன் -சேய் -பிள்ளை தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே என்னுமா போலே காணும் இருப்பது – அயர்வறும் அமரர்கள் அதிபதி வர்த்திக்கிற ஸ்தானம்) 6
வாள் நெடுங்கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா இலங்கை மன்னன் முடி யொருபதும் தோள் இருப்பதும் போய் உதிர தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன் தனிச்சரண் வானவர்க்கரசு கருதுமிடம் தடமார் சேண் இடங்கொள் மலர்க்கமலம் சேல் கயல்கள் வாளை செந்நெலொடு மடுத்தரிய உதிர்ந்த செழு முத்தம் வாள் நெடும் கண் கடைசியர்கள் வாரு மணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-6
பதவுரை Show / Hide
வாள்நெடு கண் மலர் கூந்தல் மைதிலிக்கா, Vaalnedu Kan Malai Koondhal Maithilikka - வாள்போல் கூர்மையாய் நீண்ட திருக்கண்களையும் பூவணிந்த கூந்தலையுமுடைய ஸீதாபிராட்டியைச் சிறை வைத்த குற்றத்திற்காக (- (அரிமேய விண்ணகரம்             வணங்கு))
இலங்கை மன்னன் ஒருபது முடியும் இருபது தோளும் போய் உதிர, Ilankai Mannan Orupathu Mudiyum Irupathu Tholum Poi Uthira - இராவணனுடைய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் சிதறிப் போம்படி
தாள் நெடு திண் சிலை வளைத்த தயரதன் சேய், Thaal Neduthin Silai Valaitha Thayaradhan Sei - கதையோடு  கூடி நீண்டு திண்ணிதான வில்லை வளைத்த தசரத புத்திரனும்
என் தன் தனிசரன், En Than Thanisarang - எனக்கு ஒப்பற்ற ரசஷகனும்
வானவாக்கு அரசு, Vaanavaakku Arasu - நித்யஸூரிநாதனுமான பெருமான்
கருதும் இடம், Karudum Idam - திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருக்கும் திவ்யதேசம்:
தடம் ஆர், Thadam Aar - பொய்கைகளில் நிறைந் திருப்பனவும்
சேண இடம் கொள், Sena Idam Kol - ஆகாசமுள்ள விடமெங்கும் ஓங்கி வளர்ந்திருப்பனவுமான
கமலம் மலர், Kamalum Malar - தாமரைப் பூக்களையும்
சேல் கயல்கள் வாளை, Sel Kayalgal Vaalai - சேல் கயல்வாளையென்னும் மீன்களையும்
செந்நெலொபடு மடுத்து, Sennelopadu Maduthu - செந்நெற் பயிர்களோடு சேர்த்துப் பிடித்து
அரிய, Ariya - அறுக்க
உதிர்ந்த செழு முத்தம், Uthirntha Sezhu Mutham - அவற்றினின்று உதிர்ந்த அழகிய முத்துக்களை
வாள் நெடு கண் கடைசியர்கள் வாரும், Vaal Nedukann Kadaiyiyarkal Vaarum - வாள்போன்று நீண்ட கண்களையுடைய கடைச் சாதிப் பெண்கள் வாரித் திரட்டுமிடமான
அணிநாங்கூர், Aninangoor - திருநாங்கூரில்
1244பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேனுகன் பூதனை அவர்களை முடித்துப் பொகட்ட அழகில் வந்தால் காமனுக்கும் உத்பாதனாய் அள்ளல் அல்லாதபடி ஸ்ரமஹரமான திருமேனியை உடையனாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கிற தேசம் ஆயிற்று) 7
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனை தன் ஆர் உயிரும் செகுத்தான் காமனைத் தான் பயந்த கரு மேனி யுடை யம்மான் கருதும் இடம் பொருது புனல் துறைதுறை முத்து உந்தி நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து வேள்வியோடு ஆறங்கம் நவின்று கலை பயின்று அங்கு ஆ மனத்து மறையவர்கள் பயிலு மணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-7
பதவுரை Show / Hide
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையின் திரியும், Thee Manathaan Kanjanathu Vanjanaiyin Thiriyum - பொல்லாத நெஞ்சை யுடையனான கம்ஸனுடைய கபடச் செய்கைக் கிணங்க (கெட்ட எண்ணத்துடனே) திரிந்து கொண்டிருந்த
தேனுகனும் பூதனைதன் உம், Thenughanum Poodhanithan Um - தேநுகாஸூரனுடையவும் பூதனையினுடையவும்
ஆர்உயிர் செகுத் தான், Aaruyir Sekuth Than - நற்சீவனை முடித்தவனும்
காமனை பயந்தகரு மேனி உடை அம்மான், Kaamanai Bayandhakaru Meeni Udai Amman - மன்மதனை புத்தரனாகப் படைத்தவனும் கரிய திருமேனியை யுடையவனுமான ஸர்வேச்வரன்
புனல் பொருது துறை துறை முத்து உந்தி, Punal Poruthu Thurai Thurai Muthu Undhi - ஜலமானது அலையெறிந்து துறைகள்தோறும் முத்துக்களை தள்ளிக்கிடக்குமிடமாயும்
நாமனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஆறு அங்கம் நவின்று, Namanathaal Manthirangal Naal Vedham Aaru Angam Navinru - நாவினாலும் மநஸ்ஸினாலும் (பகவானது) மந்த்ரங்களையும் நான்கு வேதங்களையம்ஆறு அங்கங்களையும் அப்யஸித்து
கலை பயின்று, Kalai Payinru - மற்றுமுள்ள சாஸ்திரங்களையும் அதிகரித்து
ஐந்து வேள்வி யோடு, Ainthu Velvi Yodu - பஞ்ச மஹா யஜ்ஞங்களோடு கூடி
அங்கு ஆம் மனத்து மறையவர்கள், Angu Aam Manathu Maraiyavarkal - ஆமுஷ்மிகத்திலேயே பொருந்தின நெஞ்சை யுடையரான வைதிகர்கள்
பயிலும், Payilum - நித்யவாஸம் பண்ணப்பெற்ற தாயுமுள்ள
அணி நாங்கூர், Ani Naangoor - திருநாங்கூரில்
அரிமேய விண்ணகரம், Arimeya Vinnakaram - வணங்கு
1245பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரமஹரமாய் இருக்கிற திருமேனியை உடையவன் பசுக்களை ரஷிக்கைக்காக ஸ்ரீ கோவர்த்தனத்தாலே மழை தடுத்து மன்றிலே ஆயர் அனுபோவ்யமாம் படி குடக் கூத்தாடினவன் கொண்டாடி வர்த்திக்கிற தேசம்) 8
கன்றதனால் விளவெறிந்து கனி யுதிர்த்த காளை காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான் குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன் குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள் துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் தொக்கு ஈண்டித் தொழுதி யொடு மிகப் பயிலும் சோலை அன்று அலர் வாய் மது வுண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-8
பதவுரை Show / Hide
கன்று அதனால் விளவு எறிந்து, Kandru Adhanal Vilavu Erinthu - வத்ஸாஸூரனைக் கொண்டு கபித்தாஸூரன்மேல் வீசியெறிந்து (- (அரிமேய விண்ணகரம்             வணங்கு))
கனி உதிர்த்த காளை, Kani Uthirtha Kaalai - விளாம்பழங்களை உதிரச் செய்த இளையவனும்
காமரு சீர், Kaamaru Seer - விருப்பத்தக்க கல்யாண குணங்களையுடையவனும்
முகில் வண்ணன், Mugil Vannan - காளமேக நிறத்தனும்
முன் காலிகள் காப்பான, Mun Kaaligal Kaappana - முன்பெருங்கால் பசுக்களை (பெருமழையினின்று) காக்கும் பொருட்டு
குன்று அதனால் மழை தடுத்து, Kundru Adhanal Mazhai Thaduthu - கோவர்த்தனமலையினால் மழையைத் தடை செய்தவனும்
குடம் ஆடு கூத்தன், Kudam Aadu Koothan - குடக்கூத் தாடினவனுமான பெருமான்
குலவும் இடம், Kulavum Idam - உவந்திருக்கும் திவ்யதேசம்
கொடி மதிள்கள், Kodi Mathilkal - த்வஜங்கள் பொருந்திய மதிள்களையும்
மாளிகை கோபுரங்கள், Maaligai Koorangal - மாளிகைகளையும் கோபுரங்களையும்
துன்று மணி மண்டபங்கள், Thunru Mani Mandapangal - நெருங்கின மணி மயமான மண்டபங்களையும்
சாலைகள், Saalaihal - தார்ச்சாலைகளையும் உடைத்தாய்
தூ மறையோர் தொக்கு ஈண்டி, Thoo Maraiyore Thokku Eendi - பரிசுத்தரான அந்தணர்கள் கும்பலாகக் கூடியிருக்கும் மிடமாய்
தொழுதியொடுமிக பயிலும் சோலை, Thozhuthiyodumiga Payilum Solai - பறவைகளின் ஒலியோழுடு மிகவுங் கூடியிருக்கின்ற சோலைகளிலே
அன்று அலர்வாய் பது உண்டு, Andru Alarvai Pathu Undu - அப்போதலர்ந்த செவ்விப் பூக்களில் தேனைப் பருகி
அங்கு அளி முரலும் நாங்கூர், Angu Ali Muralam Nangoor - அவ்விடத்தில் வண்டுகள் பாடப் பெற்றதான் திருநாங்கூரிலே
1246பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) () 9
வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு வாய்த்த தயிர் உண்டு வெண்ணெய் அமுதுண்டு வலி மிக்க கஞ்சன் உயிரது உண்டு இவ் உலகுண்ட காளை கருதுமிடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் மணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-9
பதவுரை Show / Hide
வஞ்சனையால் வந்தவள்தன் உயிர் உண்டு, Vanjanaiyala Vanthaval Than Uyir Undu - கபட வேஷத்தோடு வந்தவளான பேய்சியினுடைய உயிரை ஹிஞ்சி யுண்டவனாயும்
வாய்த்த தயிர் உண்டு, Vaayththa Thayir Undu - கையிலகப்பட்ட தயிரையெல்லாம் உண்டவனாயும்
வெண்ணெய் அமுது உண்டு, Vennai Amuthu Undu - வெண்ணெயை அமுது செய்தவனாயும்
வலிமிக்க கஞ்சன் உயிர் அது உண்டு, Valimikka Kanjan Uyir Adhu Undu - பலசாலியான கம்ஸனுடைய உயிரை அபஹரித்தவனாயும்
இ உலகு உண்ட, I Ulagu Unda - இவ்வுலகங்களையெல்லாம் (பிரளயக்கடல் கொள்ளாதபடி) அமுது செய்தவனாயுமுள்ள
காளை, Kaalai - யுவாவானவன் கருதும் இடம்
காவிரி, Kaviri - காவிரியாறானது
சந்து அகில் கனகம் ;உந்தி, Sandhu Akil Kanagam Undhi - சலதன மரங்களையும் அகில் மரங்களையும் ஸ்வர்ணங்களையும் தள்ளிக் கொண்டு வந்து
மஞ்ச உலவு பொதுழிலூடும் வயலூடும் வந்து வளம்கொடுப்ப, Manja Ulavu Pothuzhiloodum Vayaloodum Vanthu Valamkoduppa - மேகமண்டலத்தளவும் ஓங்கின சோலைகளிலும் கழனிகளிலும் தபிரவேசித்து (அவற்றுக்குச்) செழிப்பையுண்டாக்கப் பெற்றதும்
மா மறையோர் மாமலர்கள் தூவி அங்கு அஞ்சலித்து, Maa Maraiyor Maamalargal Thuvi Angu Anjaliththu - மஹா வைதிக ப்ராஹ்மணர்கள் சிறந்த புஷ்பங்களை ஸமர்ப்பித்து அங்கே கை கூப்பி நின்று
அரிசரண் என்று இறைஞ்சும், Arisarann Endru Irainchum - ‘ஹரி’ உன் திருவடிகளை சரணம் என்று சொல்லி வணங்கப்பெற்றதுமான
அணிநாங்கூர், Aninangoor - திருநாங்கூரிலே
அரிமேய விண்ணகரம், Arimeya Vinnakaram - வணங்கு
1247பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவை நின்ற இடத்திலே சென்று சினத்தை உடைத்தாய் இருக்கிற ருஷபங்கள் ஏழையும் முடியும்படி அடர்த்து ஸ்ரீ பின்னை பிராட்டி உடைய செவ்வியை உடைத்தாய் இருந்துள்ள தோள் உடன் அணைந்து ஸ்ரீயபதியாய் வர்த்திக்கிற கோயில்- இத்தை அப்யசிதவர்கள்-இஹலோகத்திலே ஹர்ஷர்கள் பயிலும் திரு உடையர் எவரேலும் எம்மை ஆளும் பரமரே-என்னும்படி அவர்களுக்கு தலைவராய் திருவடி திரு அநந்த ஆழ்வான் போல்வார் உடன் ஒரு கோவையாக ஆகப் பெறுவார்) 10
சென்று சினவிடை ஏழும் பட அடர்த்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் கோயில் அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரி மேய விண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை கன்றிநெடு வேல் வலவன் மங்கையர் தம் கோமான் கலிகன்றி யொலி மாலை ஐந்தினோடு மூன்றும் ஒன்றினோடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து உத்தமர்கட்கு உத்தமராய் உம்பரும் ஆவர்களே –3-10-10
பதவுரை Show / Hide
சென்றுசினம் ஏழ் விடையும் பட அடர்ந்து, Senru Sinam Ezhu Vidaiyum Pada Adarnthu - தானே சென்று கொடுமை மிகுந்த ஏழு ரிஷபங்களும் முடியும்படி பொருது
பின்னை செவ்வி தோள் புணர்ந்து உகந்த திருமால் தன் கோயில், Pinnai Sevvi Thol Punarndhu Ugandha Thirumal Than Koyil - நப்பின்னைப் பிராட்டியினுடைய அழகிய தோளோடே கலந்து திருவுள்ளம் மகிழ்ந்த லக்ஷ்மீநாதனுடைய ஸந்நிதியாய்
அமர்ந்த, Amarntha - பொருந்தி யெழுந்தருளியிக்கிற
செழு குன்றை, Sezhu Kunrai - அழகிய மலைபோன்ற எம்பொருமானைக் குறித்து
கன்றிநெடு வேல் வலவன் மங்கை யர்தம் கோமான் கலிகன்றி, Kanrinedu Vel Valavan Mangai Yartham Koman Kalikanri - கோபக்குறியோடு கூடினதாய் நீண்டதான வேற் படையைத் தரிக்கவல்லவரும் திரு மங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான திருமங்கை யாழ்வார்
அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர், Ayanum Aran Seyyum Anaiyavargal Nangoor - பிரமனையும் ருத்ரபுத்திரனான ஸூப்ரஹ்மண்யனையும் ஒத்திருக்கின்றவர்கள் (வேதம் வல்லவர்களாய் அழகியவர்காளன அந்தணர்கள்) வாழ்கிற திருநாங்கூரில்
அரிமேய வண்ணகரம், Arimeya Vannakaram - அரிமேய விண்ணககரமென்னுந் திருப்பதியில்
ஒலிமாலை ஐந்தினொடு மூன்றும் ஒன்றினொடும் ஒன்றும் இவை, Olimaalai Aindhinodu Moondrum Ondrinodum Ondrum Ivai - அருளிச் செய்த சொல்மலையாகிய இப்பத்துப் பரிசுகளையும்
கற்றுவல்லார், Kattruvallar - ஓதி யுணர்ந்து ஸேவிக்க வல்லவர்கள்
உலகத்து, Ulakatthu - இவ்வுலகத்திலே
உத்தமர்கட்கு உத்தமர் ஆய், Uttamarkadku Uttamar Aay - மிகவம் உத்க்ருஷ்டர்களா வாழ்ந்திருந்து (பின்பு)
உம்பரும் ஆவர்கள், Umbarum Aavarkal - நித்யஸூரிகளோடு சேர்ந்வர்களுமாவர்
1248பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மாதவன் தான் உறையுமிடம்- ரசிகனானவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம் ஸ்ரீ பிராட்டியும் தானுமாக ஸ்ரீ சித்ர கூடத்திலே வர்த்தித்தால் போலே) 1
போதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள் தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென் கரை மேல் மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே –4-1-1
பதவுரை Show / Hide
போது அலர்ந்த பொழில் சோலை புறம் எங்கும், Pothu Alarntha Pozhil Solai Puram Engum - புஷ்பங்கள் மலரப்பெற்ற பெரிய சோலைகளுள்ளவிடங்கள் முழுதும்.
தாது உதிர, Thadu Uthira - பூக்களின் தாதுகள் உதிரும்படியாக
பொரு திரைகள் வந்து அலைக்கும், Poru Thiraigal Vandu Alaikkum - செறிந்த அலைகள் வந்து வீசப்பெற்ற
தடம் மண்ணி, Thadam Manni - பெரியமண்ணியாற்றினுடைய
தென் கரைமேல், Then Karaimel - தெற்குக் கரையின் மேலே,
மாதவன் தான் உறையும் இடம், Madhavan Thaan Uraiyum Idam - மாதவப்பெருமாள் நித்ய வாஸம் செய்தருளுமிடம் (எதுவென்றால்,)
வயல் நாங்கை, Vayal Naangkai - கழனிகள் சூழ்ந்த திருநாங்கூரில்
வரி வண்டு தேதென என்று இசைபாடும், Vari Vandu Thethen Endru Isai Paadum - ரேகைகளையுடைய வண்டுகள் தென்ன தென்னவென்று இசைபாடப்பெற்ற.
திருத்தேவனார் தொகை, Thiruththevanar Thogai - திருத்தேவனார் தொகையென்னுந் திருப்பதியாம்.
1249பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சிருஷ்டி சம்ஹாரங்களுக்கு கடவரான ப்ரஹ்மாதிகளுக்கும் அந்தராத்மாவாவாய்ப் புக்கு நின்று அவ்வவ கார்யங்களை நடத்திக் கொடுத்தும்-ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தை நடத்தியும் போருகையாலே மூவரும் நிற்கிறான் தானே என்று சொல்லாம்படியாய்-மூர்த்தி சப்தம் ஸ்வரூப வாசியாய் – அவர்களுக்கும் காரண பூதனாய் பிரதானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 2
யாவரும் யாவையுமாய் எழில் வேதப் பொருள்களுமாய் மூவருமாய் முதலாய மூர்த்தி யமர்ந்து உறையும் இடம் மாவரும் திண் படை மன்னை நின்றி கொள்வார் மன்னு நாங்கைத் தேவரும் சென்று இறைஞ்சு பொழில் திருத் தேவனார் தொகையே –4-1-2
பதவுரை Show / Hide
யாவரும் ஆய், Yaavarum Aay - சேதனப் பொருள்கள் எல்லவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய் (- (அமர்ந்து உறையும் இடம்-;) (திருத்தேவனார் தொகையே -.))
யாவையும் ஆய், Yaavaiym Aay - அசேதனப் பொருள்கள் எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய்
எழில் வேதம் பொருள்களும் ஆய், Ezhil Vedham Porulgalum Aay - அழகிய வேதங்களின் அர்த்தமும் தானாய்
மூவரும் ஆய், Moovaarum Aay - (பிரமன், விஷ்ணு, ருத்ரன் என்று) மூன்று வடிவுகள் கொண்டவனும் தானேயாய்
முதல் ஆய, Muthal Aay - முழுமுதற் கடவுளான
மூர்த்தி, Moorthy - எம்பெருமான்
மா வரும், Maa Varum - குதிரை மேல் ஏறிவருகிற
திண் படை, Thin Padai - திடமான ஆயுதங்களையுடைய
மன்னை, Mannai - ராஜலோகத்தை
வென்றி கொள்வார், Vendri Kolvaar - தோற்கடித்து வெற்றிபெறும் மந்தணர்கள்
மன்னு, Mannu - நித்யவாஸம் பண்ணுகிற
நாங்கை, Naangkai - திருநாங்கூரில் உள்ளதாய்,
தேவரும் சென்று இறைஞ்சு, Thevarum Sendru Irainju - நித்யஸூரிகளும் வந்து வணங்கப் பெற்றதாய்
பொழில், Pozhil - சோலைகளை யுடைத்தான
1250பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகளுக்கும் தனக்கு பிரகாரமாய் புறம்பு ஒருவர் இன்றிக்கே உபய விபூதியும் தன் நிழலிலே ஒதுங்கும்படி இருக்கையாலே தலைவனானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 3
வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும் தானாய வெம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் ஆனாத பெரும் செல்வத்து அருமறையோர் நாங்கை தன்னுள் தேனாரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே –4-1-3
பதவுரை Show / Hide
வான் நாடும் மண் நாடும் மற்று உள்ள பல் உயிரும், Vaan Naadum Mann Naadum Matru Ulla Pal Uyirum - நித்ய விபூதியும் லீலாவிபூதியும் அவ்வவ்விடங்களிலுள்ள பல வகைப்பட்ட ஜீவராசிகளும் (- (எம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் -;) (நாங்கை தன்னுள் – ;) (திருத்தேவனார் தொகையே.))
தான் ஆய, Thaan Aaya - ஆகிய அவையெல்லாம் தானேயாயிருக்கப்பெற்ற
ஆனத, Aanadha - அழிவில்லாத
பெரு செல்வத்து, Peru Selvaththu - மிக்க ஐச்வரியத்தையுடையராய்
அருமறையோர், Arumaraivor - அருமையான வேதங்களை ஓதினவர்களுமான அந்தணர் வாழ்கிற
தேன் ஆரும் மலர் பொழில் சூழ், Then Aarum Malar Pozhil Soozh - தேன் நிறைந்த பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த
1251பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாம்தாம் அதிகாரத்துக்கு பாதகம் உள்ளவர் ஈச்வரோஹம் என்று இருப்பவர்கள் எங்களுக்கு ஸ்வாமியான நீ எங்கள் பக்கலிலே பிரசாதத்தை பண்ணி அருள வேணும் -என்ன அவர்கள் உடைய அதிகாரங்களை நடத்திக் கொடுக்கைகாக வந்து நின்று அருளுகிற தேசம் இப்படி ஒரு கார்யப் பாட்டால் அன்றிக்கே சோலை வாய்ப்புக் கண்டு விடாதே வர்த்திக்கிற தேசம் ஆய்த்து) 4
இந்த்ரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த சந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும் எந்தை எமக்கு அருள் என்ன நின்று அருளும் இடம் எழில் நாங்கை சுந்தர நற் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே –4-1-4
பதவுரை Show / Hide
இந்திரனும், Indiranum - தேவேந்திரனும் (- (திருத்தேவனார் தொகையே–.))
இமையவரும், Imaiyavarum - மற்றுமுள்ள தேவர்களும்
முனிவர்களும், Munivargalum - (ஸநகர் முதலிய) மஹர்ஷிகளும்
எழில் அமைந்த, Ezhil Amaindha - ப்ராஹ்மண லக்ஷ்மி பொருந்தியவனாய்
சந்தம், Sandham - வேதங்களை நிரூபகமாகவுடையனாய்
மலர், Malar - தாமரைப்பூவினின்று தோன்றினவனாய்
சதுமுகனும், Sathumuganum - பிரமனும்
கதிரவனும், Kathiravanum - ஸூரியனும்
சந்திரனும், Chandiranum - சந்திரனும்
எந்தை, Endhai - ‘எமக்குஸ்வாமியானவனே!
எமக்கு, Emakku - எங்கள் விஷயத்திலே
அருள், Arul - கிருபைபண்ணவேணும்’
என, En - என்று பிரார்த்திக்க
நின்று, Ninru - அதற்கு இசைந்து நின்று
அருளும் இடம், Arulum Idam - (அப்படியே) கிருபை பண்ணுமிடம் (எதுவென்றால்)
எழில் நாங்கை, Ezhil Nangkai - திருநாங்கூரில்
சுந்தரம் நல்பொழில், Sundaram Nalpozhil - மிகவுமழகிய சோலைகளாலே
புடை சூழ், Pudai Soozh - நாற்புறமும் சூழப்பட்ட
1252பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரளய ஆபத்திலே திரு வயிற்றிலே வைத்து நோக்கின உபகாரகன் வர்த்திக்கிற தேசம் சிம்ஹம் வர்த்திக்கும் முழஞ்சு என்னுமா போலே ஒருவரால் ஜெயிக்க ஒண்ணாத பெரு மிடுக்கை உடையராய் இருக்கிறவர்கள் நெருங்கி வர்த்திக்கிற தேசம்) 5
அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் குலவரையும் உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்தகில் கனகம் தெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மண்ணித் தென் கரைமேல் திண் திறலார் பயில்நாங்கைத் திருத் தேவனார் தொகையே — –4-1-5
பதவுரை Show / Hide
அண்டமும், Andamum - ஆகாசமும் (- (திகழ்மண்ணி தென் கரைமேல் –;) (திருத்தேவனார் தொகை-.))
அலை இக்கடலும், Alai Ikkadalum - அலையெறிகின்ற இக்கடல்களும்
அவனிகளும், Avanigalum - (நாவலந்தீவு முதலிய) தீவுகளும்
குலம் வரையும், Kulam Varaiyum - (ஹிமவான் முதலிய) குலபர்வதங்களும் ஆகிய இவற்றையெல்லாம்
உண்ட, Unda - (பிரளயகாலத்தில்) திரு வயிற்றில்கொண்ட
பிரான், Piran - உபகாரகனான எம்பெருமான்
உறையும் இடம், Uraiyum Idam - வாழுமிடம் (எதுவென்றால்)
ஒளி, Oli - ஒளிபொருந்திய
மணி, Mani - ரத்நங்களையும்
சந்து, Sandhu - சந்தன மரங்களையும்
அகில், Akil - அகில் கட்டைகளையும்
கனகம், Kanagam - பொன்களையும்
தெண் திரைகள் வர, Then Thiraigal Vara - தெளிந்த அலைகளின் வழியே வரும்படியாக
திரட்டும், Thirattum - ராசி ராசியாகக் குவிக்கின்ற
திண் திறாலர், Thin Thiralaar - மிக்க பலசாலிகள்
பயில், Payil - நித்யவாஸம் பண்ணுகிற
நாங்கை, Naangkai - திருநாங்கூரிலுள்ளதான
1253பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமிப் பரப்பை அடைய அமுது செய்து ஸ்ரீ சர்வேஸ்வரனை அபரிச் சேத்யன்-என்று அறியக் கடவ வேதங்களுக்கும் எட்ட ஒண்ணாத படியான பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம் அதிமாநுஷ சேஷ்டிதத்தை உடையனாய் ஒரு பவனான ஆலிலையிலே கண் வளர்ந்து அருளுகிற சர்வா திகன் வர்த்திக்கிற தேசம்) 6
ஞாலம் எல்லாம் அமுது செய்து நான்மறையும் தொடராத பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம் சாலிவளம் பெருகி வரும் தட மண்ணித் தென் கரை மேல் சேலுகளும் வயல் நாங்கைத் திருத் தேவனார் தொகையே— –4-1-6
பதவுரை Show / Hide
நால் மறையும் தொடராத, Naal Maraiyum Thodaraadha - (பெருமைபொருந்திய) நான்கு வேதங்களாலும் எட்டிப்பிடிக்க முடியாத (- (தடமண்ணித் தென்கரை மேல்;) (திருத்தேவனார் தொகையே))
பாலகன் ஆய, Paalagan Aaya - இளங்குழந்தையாய்க்கொண்டு
ஞாலம் எல்லாம், Njaalam Ellam - பூமிமுழுவதையும்
அமுது செய்து, Amuthu Seidhu - விழுங்கி
ஆல் இலையில், Aal Ilaiyil - ஆலந்தளிரில்
பள்ளி கொள்ளும், Palli Kollum - திருக்கண்வளர்ந்தருளுகிற
பரமன், Paraman - எம்பெருமானுடைய
இடம், Idam - திருப்பதி (எதுவென்றால்),
சாலி, Saali - செந்நெற் பயிர்களினுடைய
வளம், Valam - செழிப்பானது
பெருகிவரும், Perugivaram - அதிகப்பட்டு வராநிற்பதாய்
சேல் உகளும், Seyl Ugalum - மீன்கள் துள்ளி விளையாடப் பெற்றதான
வயல், Vayal - கழனிகளையுடைய
நாங்கை, Naangkai - திருநாங்கூரில்
சாலி, Saali - தற்சமவடசொல்
1254பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாட்டில் நடையாடாத ஸ்ரீ நரசிம்ஹ வேஷத்தை பரிக்ரஹித்து ஹிரண்யன் இடைய முரட்டு உடலிலே வியாபாரியா நிற்கச் செய்தேயும்-வாடக் கடவதல்லாத கூரிய திரு உகிராலே-ஓன்று செய்தானாய் விடுகை அன்றிக்கே உதிரம் அளைந்த கையேடு இருந்தானை -பெரியாழ்வார் திருமொழி -4-1-1–என்கிறபடியே சிறுக்கன் மேலே சீறினவன் பக்கலிலே தனக்கு சீற்றம் மாறாமையாலே பிளந்து பின்னை அளைந்து இருந்த வ்யாமோஹம்) 7
ஓடாத வாள் அரியின் உருவாகி இரணியனை வாடாத வள்ளுகிரால் பிளந்து அளைந்த மாலதிடம் ஏடேறு பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள் சேடேறு மலர்ப் பொழில் தழுவு திருத் தேவனார் தொகையே –4-1-7
பதவுரை Show / Hide
ஓடாத ஆள் அரியின் உரு ஆகி, Oadaadha Aal Ariyin Uru Aagi - நாட்டில் நடமாடாமல் அபூர்வமான நரஸிம்ஹ மூர்த்தியாகி (- (நாங்கை தன்னுள்;) (திருத்தேவனார் தொகையே))
வாடாத வள் உகிரால், Vaadaadha Val Ughiraal - வளையாத கூர்மைமிக்க நகங்களினால்
இரணியனை பிளந்து அளைந்த மாலது, Iraaniyanai Pilandhu Alaintha Maalathu - ஹிரண்யாஸுரனைக் கிழித்து (ரத்தப்பெருக்கிலே) அளைந்து கொண்டிருந்த எம்பெருமானுடைய
இடம், Idam - திருப்பதி (எதுவென்றால்)
ஏடு ஏறு பெரு செல்வத்து, Aedu Aeru Peru Selvaththu - புத்தகங்களிலே எழுதி வைக்கத்தக்க மிகுந்த ஐச்வரியத்தை யுடையராய்
எழில் மறையோர், Ezhil Maraiyor - அழகிய வைதிகர்களான அந்தணர் வாழ்கிற
சேடு ஏறு பொழில் தழுவு, Sedu Eru Pozhil Thazhuvu - இளமை பொருந்தி சோலைகளோடு கூடிய
1255பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்) 8
வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம் ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள் சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே –4-1-8
பதவுரை Show / Hide
வார் ஆரும் இளகொங்கை மைதிலியை, Vaar Aarum Ilakongai Maithiliy - கச்சையிட்டுத் தாங்க வேண்டும்படியான இளமுலைகளையுடைய ஸீதாபிராட்டியை (- (நாங்கை தன்னுள்–;) (திருத்தேவனார் தொகையே–.))
மணம் புணர்வான், Manam Punarvan - விவாஹம் செய்து கொள்வதற்காக
கார் ஆர் தின் சிலை இறுத்த, Kaar Aar Thin Silai Irutha - வயிரம்பற்றித் திண்ணிதான வில்லை முறித்த
தனி காளை, Thani Kaalai - விலக்ஷண யௌவநபுருஷன்
கருதும் இடம், Karudum Idam - திருவள்ளம்பற்றின திவ்யதேசம் (எதுவென்றால்)
ஏர் ஆரும் பெரு செல்வத்து எழில் மறையோர், Aer Aarum Peru Selvaththu Ezhil Maraiyor - அழகு பொருந்திய மிக்க ஐச்வரியத்தை யுடையராய் விலக்ஷண வைதிகர்களான அந்தணர் வாழ்கிற
சீர் ஆரும் மலர் பொழில் சூழ், Seer Aarum Malar Pozhil Soozh - அழகு விஞ்சிய பூக்களையுடைய சோலைகளாலே சூழப்பட்ட
1256பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மனோஹாரியான சேஷ்டிதத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்) 9
கும்ப மிகுமத யானை பாகனோடும் குலைந்து வீழக் கொம்பதனைப் பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்தது உறையும் இடம் வம்பவிழும் செண்பகத்தின் மணம் கமழும் நாங்கை தன்னுள் செம்பொன் மதிள் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே –4-1-9
பதவுரை Show / Hide
மிக கும்பம் மதம் யானை, Miga Kumbam Matham Yaanai - பெருத்த மத்தகத்தையுடைய (குவலயா பீடமென்கிற) மதயானையானது (- (அமர்ந்து உறையும் இடம்;) (நாங்கை தன்னுள்;) (திருத்தேவனார் தொகையே.))
பாகனொடும் குலைந்து வீழ, Bhaganodum Kulainthu Veela - தனது பாகனோடுகூட பங்கப்பட்டு பழியும்படியாக
அதன் கொம்பை, Adhan Kombai - அவ்யானையின் தந்தத்தை
பறித்து எறிந்த, Parithu Erindha - பிடுங்கிப் பொகட்ட
கூத்தன், Kooththan - திவ்ய சேஷ்டிதங்களையுடைய பெருமான்
வம்பு அவிழும் செண்பகத்தின் மணம் கமழும், Vambu Avizhum Senbagaththin Manam Kamazhum - அப்போதலர்ந்த செண்பகப் பூவிமுடைய வாஸனை வீசப்பெற்ற
செம்பொன் மதிள் பொழில் புடை சூழ், Sembon Mathil Pozhil Pudai Soozh - செவ்விய பொன்னால் செய்யப்பட்ட திருமதில்களும் சோலைகளும் சுற்றிலும் சூழ்ந்திருக்கப் பெற்ற
1257பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்-நன்மை மிக்க அவதி இன்றிக்கே இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் உடன் ஒரு கோவையாய் நச புன ஆவர்த்தத்தே -என்கிறபடி ஒருநாளும் பிரியாதே இருக்கப் பெறுவர்) 10
காரார்ந்த திருமேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம் சீரார்ந்த பொழில் நாங்கைத் திருத் தேவனார் தொகை மேல் கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார் ஏரார்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –4-1-10
பதவுரை Show / Hide
கார் ஆர்ந்த திருமேனி கண்ணன், Kaar Aarntha Thirumeeni Kannaan - மேகத்தோடொத்த திருமேனியை யுடைய கண்ணபிரான் (- (கூர் ஆர்ந்த வேல் கலியன்;))
அமர்ந்து உறையும்; இடம், Amarnthu Uraiyum Idam - பொருந்தி வாழும் திருப்பதியாய்,
சீர் ஆர்ந்த பொழில் நாங்கை, Seer Aarntha Pozhil Naangkai - அழகு பொருந்திய சோலைகளை யுடைய திருநாங்கூரிலுள்ளதான
திருத்தேவனார் தொகைமேல், Thiruththevanar Thogaimel - திருத்தேவனார் தொகை யென்னும் திவ்யதேசம் விஷயமாக
கூறு, Kooru - அருளிச்செய்த
தமிழ் பத்தும், Tamil Padhum - இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்
வல்லார், Vallar - ஓதவல்லவர்கள்
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து, Aer Aarntha Vaikundhathu - நன்மை மிக்க ஸ்ரீவைகுண்டத்தில்
இமையவரோடு இருப்பார், Imaiyavarodu Iruppaar - நித்யஸூரிகளோடு கூடி யிருக்கப் பெறுவார்கள்
1258பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் கேளாத படி வர பலத்தாலே பூண் கட்டி இருக்கிற தலைகளை ஷத்ரியத்துவத்துக்கு ஏகாந்தமான அம்பாலே அழியச் செய்து ராஷசர் உடைய ஐஸ்வர்யத்தை நம்முடையான் ஒருவன் கடவனாகப் பெற்றோம் இறே என்று அந்த ஐஸ்வர்யத்தை அவன் தம்பியான ஸ்ரீ விபீஷணனுக்கு கொடுத்து அருளினவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 1
கம்பா மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி யவை பத்தும் அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில் செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ் வம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமே –4-2-1
பதவுரை Show / Hide
கம்பம் மா கடல் அடைத்து, Kambam Maa Kadal Adaiththu - (கண்டபோதே) நடுக்கத்தை விளைப்பதான பெரிய கடலிலே ஸேதுகட்டி
இலங்கைக்கு மன் கதிர் முடி அவை பத்தும், Ilankaiyukku Man Kathir Mudi Avai Padhum - இலங்கைக்கு அதிபதியான இராவணனுடைய ஒளிவிடுகின்ற தலைகள் பத்தையும்
அம்பினால் அறுத்து, Ambinaal Aruththu - பாணங்களினால் அறுத்து
அவன் தம்பிக்கு அரசு அளித்தவன், Avan Thambikku Arasu Aliththavan - அவ்விராவணன் தம்பியான விபீஷணாழ்வானுக்கு இராஜ்யமளித்த இராமபிரான்
உறை கோயில், Urai Koyil - எழுந்தருளியிருக்குமிடம் எதுவென்றால்,
செம் பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ், Sem Palaa Nirai Senbagam Maadhavi Soothagam Vaalaihal Soozh - பலாமரங்களின் செல்விய வரிசைகளும் செண்பக மரங்களும் குருக்கத்திச் செடிகளும் மாமரங்களும் வாழை மரங்களும் (ஆகிய இவற்றால்) சூழப்பட்டு,
வம்பு உலாம் கமுகு ஓங்கிய, Vambu Ulaam Kamuku Oongiya - பரிமளம் வீசுகின்ற பாக்கு மரங்கள் ஓங்கி வளரப்பெற்ற
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்
வண்புரு டோத்தமம், Vanpuru Doththamam - வண்புருஷோத்தம மென்னும் திவ்யதேசமாம்.
1259பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூத்த கடம்பின் மேலே ஏறி காளியன் உடைய பணங்கள் ஆகிற ரெங்கத்தின் மேலே அவன் தப்பாதபடியாக நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே வந்து கடுகப் பாய்ந்து அந்த நிருத்தத்திலே-வன்மைக் கூத்து என்றும்-மென்மைக் கூத்து என்றும் சில உண்டு -அவற்றை அடையப் பண்ணின அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் வந்து வர்த்திக்கிற கோயில்) 2
பல்லவம் திகழ் பூங்கடம்பு ஏறி அக்காளியன் பணம் அரங்கில் ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர்கோன் உறை கோயில் நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறங்கம் வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே——— –4-2-2
பதவுரை Show / Hide
பல்லவம் திகழ் பூ கடம்பு ஏறி, Pallavam Thigazh Poo Kadambu Aeri - தளிர்கள் விளங்காநின்ற பூத்த கடம்ப மரத்தின்மேல் ஏறி (- (வண் புருடோத்தமம்))
அ காளியன் பணம் அரங்கில், A Kaaliyan Panam Arangil - அப்படிப்பட்ட (கொடியனான) காளியமுடைய படங்களாகிற நாட்ய  ஸ்தலத்தில்
ஒல்லை வந்து உறபாய்ந்து, Ollai Vandhu Urupaayndhu - திடீரென்று வந்து சிக்கனக் குதித்து
அரு நடம் செய்த, Aru Nadam Seidha - அருமையான கூத்தாட்டம் செய்த
உம்பர் கோன், Umbar Koon - தேவாதி தேவன்
உறைகோயில், Uraikoyil - வாழுமிடம்;
வெம் தழல் மூன்று, Vem Thazhal Moondru - த்ரேதாக்நிகளையும்
நால் வேதம், Naal Vedham - நான்கு வேதங்களையும்
ஐ வேள்வியோடு, Ai Velviyodu - பஞ்ச மஹாயஜ்ஞங்களையும்
ஆறு அங்கம், Aaru Angam - வேதாங்கங்கள் ஆறையும்
வல்ல, Valla - அதிகரித்து ஸமர்த்தர்களான
நல்ல அந்தணர், Nalla Andhanar - நல்ல பிராமணர்கள்
மல்கிய, Malkiya - நிறைந்திருக்கப்பெற்ற
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்
1260பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவற்றின் உடைய ரஷணமும் தனக்கே பரம் ஆகையாலே அவற்றை மேய்த்து அவற்றின் உடைய ஆபத்தை போக்கி ரஷிக்கிறவன்-இன்னமும் இப்படி ரஷிக்கைக்கு பாங்கான தேசம் என்று அவன் உகந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 3
அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது எல்லாம் உண்டு கோனிரை மேய்த்தவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில் கொண்டலார் முழவில் குளிர் வார் பொழில் குல மயில் நடமாட வண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே –4-2-3
பதவுரை Show / Hide
அண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறு அது எல்லாம், Andar Aanavar Vaanavar Konukku Endru Amaiththa Sooru Adhu Ellam - இடையர்கள் தேவேந்திரனுக்குப் பலியிட வேண்டுமென்று சமைத்த சோற்றை முழுவதும் (- (உகந்து இனிது உறை கோயில்;) (வண்புருடோத்தமம்))
உண்டு, Undu - அமுது செய்தவனாயும்
கோ நிரை அவை மேய்த்து காத்தவன், Ko Nirai Avai Meyththu Kaaththavan - பசுக்கூட்டங்களை மேய்த்து ரக்ஷித்தவனாயுமுள்ள பெருமான்
குளிர் வார் பொழில், Kulir Vaar Pozhil - குளிர்ந்து பரந்த சோலைகளிலே,
கொண்டல் ஆர் முழவில், Kondal Aar Muzhavil - மேகங்களினுடைய மிக்க கோஷம்உண்டாகும் போது
குலம் மயில் நடம் ஆட, Kulam Mayil Nadam Aada - கூட்டங் கூட்டமான மயில்கள் கூத்தாடப் பெற்றதும்,
வண்டு இசைபாடிடு, Vandu Isaipaadidu - வண்டுகள் (மயில்களின் கூத்தாட்டத்திற்குத் தகுதியாக) இசைபாடப் பெற்றதுமான
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்
1261பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உள்ளே போய் புக்கு கம்சன் தலை மயிரைப் பிடித்து முகம் கீழ் பட வலித்து திருவடிகளாலே யுதைத்து முடித்தவன் இன்னும் இப்படிப் பட்ட விரோதி அம்சத்தை போக்குகைக்காக நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 4
பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாடி புக்கு ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில் கரும்பினூடு உயர் சாலிகள் விளை தரு கழனியில் மலி வாவி மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே –4-2-4
பதவுரை Show / Hide
பரு கை யானையின் கொம்பினை பறித்து, Paru Kai Yaanainin Kombinai Pariththu - பருத்த துதிக்கையையுடைய (குவலயா பீடமென்னும்) யானையினது தந்தங்களை பிடுங்கிக் கொன்று, (- (வண்புருடோத்தமம்))
அதன் பாகனை சாடி புக்கு, Adhan Paaganai Saadi Pukku - அந்த யானையின் பாகனையும் உயிர் தொலைத்திட்டு உள்ளே நுழைந்து
மல்லரை ஒருங்க கொன்று, Mallarai Orunga Konru - மல்லர்களை ஒன்றுசேர முடித்திட்டு
பின் கஞ்சனை உதைத்தவன், Pin Kanjanai Uthaiththavan - அதற்குப் பிறகு கம்ஸனை முடித்தருளிய கண்ணபிரான்
உறை கோயில், Urai Koyil - நித்யவாஸம் பண்ணுமிடம்;
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு கழனியில் மலி வாவி, Karumbinoodu Uyar Saaligal Vilaitharu Kazhaniyil Mali Vaavi - கருப்பஞ்சோலைகளின் இடையே ஓங்கி வளரானின்ற செந்நெற் பயிர்கள் விளையப்பெற்ற கழனிகளில் நிறைந்திருக்கிற நடைவாவிகளினுடைய
மருங்கு எலாம், Marungu Elam - பக்கங்களிலெல்லாம்
பொழில் ஓங்கிய, Pozhil Ongiya - சோலைகள் வளர்ந்திருக்கப் பெற்ற
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்
1262பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதர சமாஸ்ரயணம் பண்ணின பாணன் உடைய ஆயிரம் தோளையும் தரித்தவன் இன்னும் ஆஸ்ரித விரோதிகளை போக்குகைக்கு ஈடாக வந்து வர்த்திக்கிற தேசம்) 5
சாடு போய் விழத் தாழ் நிமிர்த்து ஈசன் தன் படை யோடும் கிளையோடும் ஓட வாணனை யாயிரம் தோள்களும் துணித்தவன் உறை கோயில் ஆடுவான் கொடி யகல் விசும்பு அணைவிப் போய் பகலவன் ஒளி மறைக்கும் மாட மாளிகை சூழ் தரு திரு நாங்கூர் வண் புருடோத்தமமே –4-2-5
பதவுரை Show / Hide
சாடு கோய் விழ, Saadu Koyi Vizha - (அஸுரனால் ஆவேசிக்கப்பட்ட) சகடமானது விழுந்தொழியும்படி (- (உறை கோயில்;) (வண்புருடோத்தமம்))
தாள் நிமிர்த்து, Thaal Nimirththu - திருவடிகளைத் தூக்கினவனாயும்
ஈசன் தன் படையோடும் கிளையோடும் ஓட, Eesan Than Padaiyodum Kilaidodum Oda - ருத்ரன் தனது ஸேனைகயோடும் சுற்றத்தாரோடும் தோற்று ஓடிப்போகும் படியானவளவில்
வாணனை, Vaananai - பாணாஸுரனை
ஆயிரம் தோள்களும், Aayiram Thoalkalum - ஆயிரந் தோள்கயையும்
துணித்தவன், Thuniththavan - அறுத்தொழித்தவனாயுமுள்ள பெருமான்
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவி போய், Aadu Vaan Kodi Akal Visumbu Anavi Poi - அசையாநின்ற பெரிய த்வஜங்கள் பரந்த ஆகாசத்தைத் தழுவி உயரக்கிளம்பி
பகலவன் ஒளி மறைக்கும், Pagalavan Oli Maraikkum - ஸூர்யனுடைய பிரதாபத்தை மறையச்செய்யப்பெற்ற
மாடம் மாளிகை சூழ்தரு நாங்கூர், Maadam Maaligai Soozhdharu Naangoor - மாடங்களினாலும் மாளிகைகளினாலும் சூழப்பட்ட திருநாங்கூரில்
1263பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மூவடியை நீர் ஏற்று திருக்கையிலே நீர் விழுந்த அநந்தரம் வளர்ந்து அருளுகிற போது ப்ரஹ்ம பதத்து அளவும் சென்று அவன் கையிலே திருவடிகள் இருக்க அவன் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும்படி யாகவும் கங்கை புறப் படும் படியாகவும் திருவடிகளை நிமிர்த்து அருளின ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 6
அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில் கொங்கை கொங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள் மங்கைமார் முகம் காட்டிடு நாங்கூர் வண் புருடோத்தமமே –4-2-6
பதவுரை Show / Hide
மூன்று அடி, Moondru Adi - மூவடி நிலத்துக்காக (- (திரிவிக்கிரமனாக ஓங்கிவளர்ந்த காலத்து) (வந்து உறை கோயில்) (வண்புருடோத்தமம்))
அம் கையால் நீர் ஏற்று, Am Kaiyhaal Neer Aetru - அழகிய திருக்கையினால் உதக தானம் வாங்கி
அயன் அலர் கொடு தொழுகு ஏத்த, Ayan Alar Kodu Thozhugu Aettha - பிரமனானவன் புஷ்பங்களை ஸமர்ப்பித்து வணங்கி துதிக்கும்படியாகவும்
கங்கை போதா கால் நிமிர்த்தருளிய கண்ணன், Gangai Podha Kaal Nimirththaruliy Kannan - கங்காநதியானது பெருகும் படியாகவும் திருவடியை உயரநிட்டின ஸர்வேச்வரன்
கோங்கு அவை, Kongu Avai - கோங்குமரத்தின் அரும்புகளானவை
மங்கைமார் கொங்கை காட்ட, Mangaimaar Kongai Kaata - (அவ்வூரிலுள்ள) பெண்களினுடைய தனங்களை பிரகாசிப்பிக்கவும்
குமுதங்கள், Kumudhangal - செவ்வாம்பல்களானவை
வாய் காட்ட, Vaai Kaata - (அப்பெண்களின்) அதரங்களைப் பிரகாசிப்பிக்கவும்
மா பதுமங்கள், Maa Pathumangal - சிறந்த தாமரை மலர்கள்
முகம் காட்டிடு, Mugam Kaattidu - (அப்பெண்களின்) முகங்களை பிரகாசிப்பிக்கவும் பெற்ற
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்
1264பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் முடிந்து போகச் செய்தேயும் சிறுக்கன் பக்கல் உண்டான வாத்சல்யத்தாலே சீற்றம் மாறாதே ருதிர வெள்ளத்தை வெண்ணெய் போலே அளந்த ஸ்ரீ நர சிம்ஹம் எல்லாரும் ஒக்க அஞ்சும் படி வந்து தோற்றின கேசி வாயை கிழித்து தன்னைத் தந்த மகா உபகாரகன் வந்து வர்த்திக்கிற தேசம்) 7
உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை யளையும் வெஞ்சினத் தரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில் இளைய மங்கையர் இணை அடிச் சிலம்பினோடு எழில் கொள் பந்தடிப்போர் கை வளையில் நின்றொலி மல்கிய வண் புருடோத்தமமே –4-2-7
பதவுரை Show / Hide
ஒண் திறல் பொன் பெயரோன் உளைய, On Thiral Pon Peyaron Ulaiya - பிரஸித்தமான வலிவையுடையனான இரணியனானவன் நோவுபடும்படி (- (வந்து உறை கோயில்;) (வண்புருடோத்தமம்))
தனது உரம்பிளந்து, Thanathu Urampilandu - அவனுடைய மார்பைக் கிழித்து
உதிரத்தை அளையும், Uthirathai Alaiyum - (அவனது உடலில் நின்று இழிந்த) ரத்தத்தை அளைந்த
வென் சினத்து அரி, Ven Sinaththu Ari - உக்ரஸிம்ஹனானவனும்
பரி கீறிய, Pari Keeriyah - குதிரைவடிவு கொண்டுவந்த கேசியென்னும் அசுரனைக் கொன்றவனுமான
அப்பன், Appan - ஸ்வாமி
இளைய மங்கையர், Ilaiya Mangaiyar - சிறுபெண்கள் (நர்த்தனமனாடும்போது உண்டான)
இணை அடி சிலம்பினோடு, Inai Adi Silampinodu - இரண்டுகால்களிலும் அணிந்த தண்டைச் சிலம்பின் ஒலியோடு கூட,
ஏழில்கொள் பந்து அடிப்போர் கை வளையில் நின்று, Ezhalkol Pandhu Adipor Kai Valaiyil Nindru - அழகுபொருந்திய பந்தடிக்கும் சிறுமிகளினுடைய கைவளையல்களினின்று உண்டான
ஓலிமல்பிய நாங்கூர், Olimalpiya Nangoor - ஓசையானது நிறைந்த திருநாங்கூரில்
1265பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எலும்பானது பூரணமாய் இருக்கும் படியாக – பிஷையை முன்பு அருளின-தேவன் உடைய வலிய சாபம் நீங்க மகா உதாரனானவன்– வர்த்திக்கிற தேசம்) 8
வாளையார் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்றது நீங்க மூளையார் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில் வண்ணன் உறை கோயில் பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வன் பழம் விழ வெருவிப் போய் வாளை பாய் தடம் சூழ் தரு நாங்கூர் வண் புருடோத்தமமே –4-2-8
பதவுரை Show / Hide
வாளை ஆர்தட கண்உமை பங்கன், Vaalai Aarthada Kanumai Pangan - மீன்போன்ற விசாலமான கண்களை யுடையளான பார்வதியைத் தன் சரீரத்தின் ஒருபக்கத்தில் உடையனான ருத்ரனுடைய (- (வண்புருடோத்தமம்))
வல் சாபம் அது நீங்க முன், Val Saapam Adhu Neenga Mun - வலிய சாபம் தொலையும்படியாக, முன்பொரு காலத்தில்
மூளை ஆர் சிரத்து ஐயம் அளித்த, Moolai Aar Sirathu Aiyam Alitha - வெறும் எலும்பான தலையோட்டிலே பிக்ஷையளித்த
எம் முகில் வண்ணன், Em Mukil Vannan - நீலமேக நிறத்தனான எம்பெருமான்
பாளை, Paalai - பாளைகளை யுடைத்தாய்
வான், Vaan - ஓங்கியிருந்துள்ள
கமுகு ஊடு, Kamuku Oodu - பாக்கு மரங்களினிடையே
உயர், Uyar - உயர்ந்திருக்கின்ற
தெங்கின், Thengin - தென்னை மரங்களினுடைய
வன் பழம், Van Pazham - பெரிய காய்கள்
விழ, Vizha - (குளத்தில்) விழ
வாளை வெருவி போய் பாய், Vaalai Veruvi Poi Pai - (அங்குள்ள) மீன்கள் அஞ்சி அவ்விடத்தை விட்டுப் போய் வேறிடத்தில் குதித்துச் சேரப்பெற்ற
தடம் சூழ்தரு நாங்கூர், Thadam Soozhdharu Naangoor - தடாகங்களினால் சூழப்பட்ட திருநாங்கூரில்
1266பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னாலே ஸ்ருஷ்டனான சதுர்முகனாலே ஸ்ருஷ்டமான ஜகத் என்று அதன் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக அவன் விரும்பி வர்த்திக்கிற தேசம்) 9
இந்துவார் சடை ஈசனைப் பயந்த நான்முகனைத் தன் எழிலாரும் உந்தி மா மலர் மீ மிசைப் படைத்தவன் உகந்து இனிது உறை கோயில் குந்தி வாழையின் கொழும் கனி நுகர்ந்து தன் குருளையைத் தழுவிப் போய் மந்தி மாம்பணை மேல் வைகு நாங்கூர் வண் புருடோத்தமமே –4-2-9
பதவுரை Show / Hide
இந்து வார் சடை ஈசனை பயந்த, Indhu Vaar Sadai Eesanai Bayandha - சந்திரனோடுகூடி நீண்டிருக்கிற சடைமுடியையுடைய ருத்ரனை ஸ்ருஷ்டித்த (- (உகந்து இனிது உறை கோயில்;) (வண்புருடோத்தமம்))
நான் முகனை, Naan Mughanai - பிரமனை
தன் எழில் ஆரும் உந்திமா மலர்மீமிசை படைத்தவன், Than Ezhil Aarum Undhimaa Malarmimisai Padaiththavan - தன்னுடைய அழகு திருநாபிக் கமலத்திலே பொருந்திய உண்டாக்கின பெருமான்
மந்தி, Mandhi - பெண் குரங்கானது
குந்தி, Kundhi - குந்திக்கொண்டு
வாழையின் கொழு கனி நுகர்ந்து தன் குருளையை தழுவி போய், Vaazhaiyin Kozhu Kani Nukarndhu Than Kurulaiyai Thazhuvi Poi - நல்ல வாழைப் பழங்களை புஜித்து தன்து குட்டியை அணைத்துக் கொண்டு அங்கு நின்றும்போய்
மாம்பணைமேல் வைகும் நாங்கூர், Maambanai Mel Vaikum Naangoor - மாமரக் கிளைகளின் மேல் தங்கியிருக்கப் பெற்ற திருநாங்கூரில்
1267பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அருள் மாரி-ஆஸ்ரிதருக்கு பிரசாதம் பண்ணும் இடத்தில் மேகம் போலே உதாரரான ஸ்ரீ ஆழ்வார் பண்ணிலே ஆரும்படியாக பாடிய இப்பாடல் இப் பத்தையும் வல்லவர்கள் லோகத்திலே நிரவதிகமான ஆனந்தத்தை உடையராய்-அநந்தரம் நிரவதிக ப்ரீதி உக்தரான ஸ்ரீ நித்ய சூரிகளோடு ஒரு கோவையாக பெறுவர்) 10
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண் புருடோத்தமத்துள் அண்ணல் சேவடிக் கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலிமன் அருள் மாரி பண்ணுளார் தரப் பாடிய பாடல் இப்பத்தும் வல்லார் உலகில் எண்ணிலாத பேரின்பம் உற்று இமையவரோடும் கூடுவரே –4-2-10
பதவுரை Show / Hide
மண்ணுள் ஆர் புகழ் வேதியர் நாங்கூர், Mannul Aar Pugazh Vedhiyar Naangoor - பூமண்டலத்தில் நிறைந்த புகழையுடைய வைதிகர்கள் வாழ்கிற திருநாங்கூரிலுள்ள
வண்புருடோத்தமத்துள், Vanpurudoththama Thul - வண்புருடோத்தம மென்னுத் திருப்பதியில் எழுந்தருளியிருக்கிற
அண்ணல், Annal - ஸ்வாமியினுடைய
சே அடிக்கீழ் அடைந்து உய்ந்தவன், Sae Adikizh Adayndhu Uyndhavan - திருவடிகளின் கீழே சேர்ந்து உஜ்ஜீவித்தவரும்
ஆலி மன் –, Aali Man - திருவாலி நாட்டுக்குத் தலைவரும்
அருள் மாரி, Arul Maari - கிருபையை வர்ஷிக்கும்மேகமா-யுள்ளவருமான திருமங்கையாழ்வார்
பண்ணுள் ஆர்தர பாடிய பாடல் இப்பத்தும் வல்லார், Pannul Aarthar Paadiya Paadal Ippaththum Vallar - கானத்திலே பொருந்தும்படி பாடின பாசுரமான இத்திருமொழியை ஓதவல்லவர்கள்
உலகில் எண் இலாத பேர் இன்பம் உற்று, Ulagil En Iladha Per Inbam Utrum - இவ்வுலகின்கண் அளவற்ற மஹாநந்தங்களை அநுபவித்து (பிறகு)
இமையவரோடும் கூடுவர், Imayavaro Thum Kooduvar - நித்யஸூரிகளோடும் கூட்டி வாழப் பெறுவர்.
1268பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லோகத்தில் காட்டிலும் ஐஸ்வர்யம் விஞ்சி இருக்கும் ஆய்த்து அவ் ஊரில் – அது அடைய தோற்றும்படி தர்ச நீயமான மாடங்களை உடைய திரு நாங்கூரில் நன்றான நடுவுள் ஸ்ரீ செம் பொன் செய் கோயிலின் உள்ளே- கார் காலத்திலே வர்ஷ உந்முகமாகமாய்க் கொண்டு அழகிய வடிவை உடைத்ததாய் இருப்பதொரு மேகம் போலே இருககிறவனைக் கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெற்று அசந்நேவ-என்னும் நிலை தீர்ந்து சந்தமேனம் -என்கிறபடியே உஜ்ஜீவித்து க்ருதார்த்தன் ஆனேன் -என்கிறார்) 1
பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை வாரணிமுலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-1
பதவுரை Show / Hide
உலகத்தவர் பேர் அணிந்து, Ulagaththavar Per Anindhu - இவ்வுலகிலுள்ளார் அனைவரும் திருநாம ஸங்கீர்த்தனஞ் செய்துகொண்டு (- (கண்டு கொண்டு ஸேவித்து))
தொழுது ஏத்தும் பேரருளாளன், Thozhuthu Aethum Perarulalan - அடிபணிந்து துதிக்கப்பெற்ற பேரருளாளப் பெருமாளாய்
எம்பிரானை, Embiranaik - எமக்கு ஸ்வாமியாய்
கார் அணிமேகம் நின்றது ஒப்பானை, Kaar Animegam Nindrathu Oppanai - மழைகாலத்தில் உண்டான அழகிய மேகம் நிற்கிறாப் போலுள்ளவனான பெருமானை
சீர் அணிமாடம் நாங்கை நல்நடுவுள், Seer Animaadam Naangkai Nalanaduvul - அழகு பொருந்திய மாடங்களையுடைய திருநாங்கூரில் நட்டநடுவிலே
செம்பொன் செய் கோயிலின் உள்ளே, Sembon Sei Koyilin Ullae - செம்பொன் செய்கோயில் என்னுந் திருப்பதியிலே,
வார் அணி முலையாள், Vaar Ani Mulaiyal - கச்சணிந்த முலையையுடையளான
மலர் மகளோடு, Malar Magalodu - பெரிய பிராட்டியும்
மண் மகளும், Man Magalum - பூமிப்பிராட்டியும்
உடன் நிற்ப, Udan Nirpa - கூடியிருக்க
உய்ந்தொழிந்தேன், Uyndozhindhen - உஜ்ஜீவித்துப்போனேன்
1269பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ் திரு மேனி திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுபவித்து இதில் திவ்ய ஆத்ம ஸ்வரூபம் திவ்ய குண ஸ்வரூபம் அனுபவிக்கிறார்) 2
பிறப்பொடு மூப்பு ஓன்று இல்லவன் தன்னைப் பேதியா இன்ப வெள்ளத்தை இறப்பு எதிர் காலக் கழிவும் ஆனானை ஏழு இசையின் சுவை தன்னைச் சிறப்புடை மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே மறைப் பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே –4-3-2
பதவுரை Show / Hide
பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னை, Pirappodu Mooppu Ondru Illavan Thannai - பிறப்பு கிழத்தனம் முதலிய வாகாரங்களொன்று மில்லாதவனாய் (- (கண்டு நான் வாழ்ந்தொழிந்தேன்))
பேதியா இன்பம் வெள்ளத்தை, Paethiya Inbam Vellathai - என்றுமொருபடிப்பட்ட ஆநந்தக்கடலாய் இருப்பவனாய்
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை, Irappu Edhir Kaalam Kazhivum Aananaik - மூன்று காலங்களிலும் உள்ளவனாய்
ஏழ் இசையின் சுவைதன்னை, Ezhu Isaiyin Suvaithannai - ஸப்தஸ்வரங்களினுடைய ரஸம்போல் போக்யனாய்
மறைபெரு பொருளை, Maraiperu Porulai - வேதங்களிற் சிறந்த பொருளாயிருப்பவனாய்
வானவர் கோனை, Vaanavar Konai - நித்யஸூரி நாதனான எம்பெருமானை
சிறப்பு உடை மறையோர், Sirappu Udai Maraivor - சிறந்த வைதிகர்கள் வாழ்கிற
நாங்கை நல்நடுவுள், Naangkai Nalanaduvul - திருநாங்கூரில் நட்டநடுவிலே
செம்பொன்செய்கோயிலின் உள்ளே, Sembonseikoyilin Ullae - செம்பொன்செய்கோயில் என்னும் திருப்பதியிலே
1270பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காணவே தாபத் த்ரயம் ஆறும்படி ஸ்ரமஹரமான வடிவை உடையவனை கண்டு அனுபவித்து நான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன் -என்கிறார்) 3
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும் படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னைப் பங்கயத்தயன் அவன் அனைய திட மொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-3
பதவுரை Show / Hide
திடம், Thidam - திடமான (- (நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய்) (கோயிலின் உள்ளே அடியேன் நான் கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேன்))
விசும்பு எரி நீர், Visumbu Eri Neer - ஆகாசம் அக்நி ஜலம் முதலான பஞ்சபூதங்களும்
திங்களும், Thingalum - சந்திரனும்
சுடரும், Sudarum - ஸூர்யனும்
செழு நிலத்து பிராணிகளும், Sezhu Nilathu Piranigalum - வளம்மிக்க பூமியிலுள்ள பிராணிகளும்
மற்றும் படர் பொருள்களும், Mattrum Padar Porulgalum - மற்றும் பலவகைப்பட்ட பதார்த்தங்களும் (ஆகிய இவற்றுக்கு)
ஆய் நின்றவன் தன்னை, Aayi Nindravan Thannai - அந்தர்யாமியா யிருப்பவனும்
கடல் நிறம் வண்ணன் தன்னை, Kadal Niram Vannan Thannai - கடலின் நிறம் போன்ற திருமேனியை யுடையனுமான பெருமானை
பங்கயத்து அயன் அவன் அனைய, Pangayathu Ayan Avan Anaiya - தாமரையிற் பிறந்த பிரமனைப் போன்றவர்களாய்
திடம் மொழி மறையோர், Thidam Mozhi Maraiyor - திடமான வாக்கையுடையவர்களான அந்தணர்கள் வாழ்கிற
1271பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ்ப் பாட்டில் அந்தராத்மாவை அனுபவித்தவர் இதில் விபவத்தையும் அதுக்கடியான வ்யூஹத்தையும் அனுசந்தித்து உகக்கிறார்) 4
வசையறு குறளாய் மாவலி வேள்வியில் மண் அளவிட்டவன் தன்னை அசைவறும் அமரர் அடி இணை வணங்க வலைகடல் துயின்ற வம்மானைத் திசை முகனனை யோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே உயர் மணி மகுடம் சூடி நின்றானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-4
பதவுரை Show / Hide
வசை அறு குறள் ஆய், Vasai Aru Kural Aayi - குற்றமற்ற வாமநரூபியாய்க்கொண்டு (- (நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்))
மாவலி வேள்வியில், Mavali Velviyil - மஹாபலியினுடைய யாக பூமியில்
மண் அளவிட்டவன் தன்னை, Man Azhavittavan Thannai - உலகளந்தவனும்,
அசைவு அறும் அமரர், Asaivu Arum Amarar - சலிப்பில்லாத நித்யஸூரிகள்
அடி இணை, Adi Inai - உபயபாதங்களை
வணங்க, Vananga - ஆச்ரயிக்கும்படியாக
அலை கடல் துயின்ற அம்மானை, Alai Kadal Thuyinra Ammanaik - அலையெறிகின்ற திருப்பாற் கடலில் பள்ளிகொண்டிருப்பவனும்,
உயர் மணி மகுடம் சூடி நின்றானை, Uyar Mani Makudam Soodi Nindranaik - உயர்ந்த ரத்ன கிரீடத்தை அணிந்துகொண்டிருப்பவனுமான பெருமானை
திசைமுகன் அனையோர், Thisaimugan Anaiyor - பிரமனைப்போன்ற அந்தணர்கள் வாழ்கிற
1272பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விபவத்தில் நெஞ்சு சென்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களைப் பேசி அனுபவிக்கிறார்) 5
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர் தமக்குத் தாய் மனத்து இரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச் சயமே தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-5
பதவுரை Show / Hide
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று, Thee Manaththu Arakkar Thiral Azhithavane Endru - ‘தீய நெஞ்சையுடையரான ராக்ஷஸர்களின் உடைய மிடுக்கை நாசம் செய்தவனே!’ என்று சொல்லிக்கொண்டு (- (நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே அடியேன் நான் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்))
சென்று அடைந்தவர் தமக்கு, Sendru Adaindhavar Thamakku - வந்து கிட்டினவர்கள் விஷயத்தில்
தாய் மனத்து இரங்கி அருளினை கொடுக்கும், Thaai Manaththu Irangi Arulinai Kodukkum - தாய்போலே கரைந்து கிருபை பண்ணுகின்ற
தயரதன் மதலையை, Thayaradhan Mathalaiyai - தசரத புத்ரனானவனும்
காமனை பயந்தான் தன்னை, Kaamanai Bayandhaan Thannai - ப்ரத்யும்நனைப் படைத்தவனுமான பெருமானை
சயம் மே, Sayam Mae - ஜயசப்தங்கள் பொருந்தியிருக்கப் பெற்றதும்
தேன் மலர் பொழில் சூழ், Then Malar Pozhil Soozh - தேன்நிறைந்த புஷ்பங்களையுடைய சோலைகளாலே சூழப்பட்டதுமான
நாங்கை, Naangkai - திருநாங்கூரில்
1273பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி கைக்கு எட்டிற்று ஓர் அம்பை விட்டவனை நிரவதிக சம்பத்தை உடைய பிராமணர் உடைய அவர்கள் ஐஸ்வர்யத்துக்கு நிதான பூதையான ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் கூடக் காணப் பெற்று சாம்சாரிக சகல துரிதங்களும் தீரப் பெற்றேன்) 6
மல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானைச் செல்வ நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே அல்லி மா மலராள் தன்னோடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே –4-3-6
பதவுரை Show / Hide
மல்லை மாமுந்நீர் அதர்பட, Mallai Maamunneer Atharpad - செல்வம் மிக்க பெரிய கடலானது வழியாக அமையும்படி (- (நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே;))
மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை, Malaiyaal Anai Seidhu Magizhndhavan Thannai - மலைகளைக்கொண்டு அணைகட்டி திருவுள்ள முகந்தவனும்,
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க, Kallin Meedhu Iyandra Kadi Mathil Ilangai Kalang - (த்ரிகூடமென்னும்) மலையின் மேலே கட்டப்பட்ட அரணான மதிளை யுடைத்தான இலங்காபுரியானது சிதறிபொழியும்படி
ஓர் வாளி தொட்டனை, Oor Vaalai Thottanai - ஒரு அம்பை பிரயோகித்தவனுமான பெருமாணை
செல்வம் நால்மறையோர், Selvam Naalmaraiyore - சதுர்வேதங்களைச் செல்வமாகவுடைய அந்தணர் வாழ்கிற
அல்லி மாமலராள் தன்னொடும், Alli Maamalaraal Thannodum - பிராட்டியோடு கூட
அடியேன் கண்டுகொண்டு, Adiyen Kandukondu - அடியேன் ஸேவித்து
அல்லல் தீர்ந்தேன், Allal Theerndhen - துன்பங்கள் தொலையப் பெற்றேன்
1274பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பருவம் நிரம்பாத அளவிலே ஆய்த்து ஈஸ்வரன் செய்ததைச் செய்தது கம்சனை நிரசித்து -ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் -என்று ஸ்ரமஹரமான என்ற வடிவோடு நின்றவனை-கண்டார் கண் குளிரும்படியாக ஓர் அஞ்சன கிரி நின்றாப் போலே நிற்கிறவனை கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே) 7
வெஞ்சினக் களிறும் வில்லோடு மல்லும் வெகுண்டு இருத்து அடர்த்தவன் தன்னைக் கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானைக் கரு முகில் நிறத்தவனைச் செஞ்சொல் நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே –4-3-7
பதவுரை Show / Hide
வேம் சினம் களிறு வெகுண்டும், Vaem Sinam Kaliru Vegundum - வெவ்விய கோபத்தை யுடைத்தான (குவலயா பீடமென்னும்) யானையைச் சீறி முடித்தும், (- (நாங்கை ஈன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே கண்டுகொண்டு;))
வில் இறுத்து மல்லும்அடர்ந்தவன் தன்னை, Vil Iruththu Mallum Adarnthavan Thannai - (கம்ஸன் பூஜையின் வைத்திருந்த) வில்லை முறித்தும் மல்லர்களையும் முடித்தவனாய்
கஞ்சனை காய்ந்த காளை, Kanjanai Kaayndha Kaalai - கம்ஸனைக் கோபித்து முடித்த யுவாவான
அம்மானை, Ammaanai - ஸ்வாமியாய்
கருமுகில் திரு நிறத்தவனை, Karumugil Thiru Niraithavanai - காளமேகத் திருவுருவனாய்
அஞ்சனம் குன்றம் நின்றது ஒப்பானை, Anjanam Kunram Nindrathu Oppaanai - ஒரு மைமலை நின்றது போன்றுள்ளவனான பெருமானை
செம் சொல் நாவல் மறையோர், Sem Sol Naaval Maraiyore - அழகிய சொற்களையுடையரான வைதிகர் வாழ்கிற
அல்லல் தீர்ந்தேன், Allal Theerndhen - துன்பங்கள் தொலையப் பெற்றேன்.
1275பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இன்னமும் பாணன் போல்வார் விரோதிகள் வந்து முளைக்கில் செய்வது என் என்று மின் விளங்கா நின்றுள்ள சிகரத்தை உடைத்தான ஸ்ரீ திருமலையில் நித்ய வாசம் பண்ணுகிற வேதைகசமதி கம்யனாய் ஸ்வயம் பிரகாசமான ஸ்வரூபத்தை உடையனாய் உள்ளவனை-பாலோடு சக்கரை சேர்த்து பருகுவாரைப் போலே ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துடன் ஸ்ரீ திருவேம்கடமுடையானை சேர்த்து அனுபவிக்கிறார்) 8
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை மின் திகழ் குடுமி வேங்கடமலை மேல் மேவிய நல் வேத விளக்கைத் தென் திசை திலதம் அனையவர் நாங்கைச் செம் பொன் செய் கோயிலின் உள்ளே மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே –4-3-8
பதவுரை Show / Hide
அன்றியலாணன் ஆயிரம் தோளும் துணிய, Anriyalanan Aayiram Tholum Thuniy - கோபித்து எதிரிட்ட பாணாஸுரனுடைய ஆயிரந்தோள்களும் அறுத்துவிழும்படி (- (நாங்கை  செம்பொன்செய்) (கோயிலின் உள்ளே;) (நான் வணங்கி வாழ்ந்தொழிந்தேன்))
அன்று ஆழி தொட்டானை, Anru Aazhi Thottanai - அக்காலத்தில் திருவாழியைப் பிரயோகித்தவனும்
மின்திகழ் குடுமி வேங்கடம் மலை மேல் மேவிய, Minthigazh Kudumi Vengadam Malai Mel Meviy - ஒளிவிளங்கானின்ற சிகரத்தையுடைய திருவேங்கடமலையின் மேல் பொருந்தியிருப்பவனும்
வேதம் கல் விளக்கை, Vedham Kal Vilakkai - வேதங்களால் காணக்கூடிய நல்ல விளக்கானவனும்,
தென்திசை திலதம் அனையவர், Thendhisai Thilatham Anaiyavar - தென்திசைக்குத் திலகம் போன்ற மஹான்கள் வாழ்கிற
மன்ற அது பொலிய மகிழ்ந்து நின்றானே, Manra Adhu Poliya Makizhndu Nindraane - ஸ்ரீ வைஷ்ணவகோஷ்டி விளங்கத் திருவுள்ளமுவந்துநிற்பவனுமான பெருமானை
1276பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாலும் சக்கரையும் அனுபவித்து தமக்கு இனித்தாகையாலே எல்லாருக்கும் ரசித்தவன் என்று கொண்டு அருளிச் செய்கிறார்) 9
களம் கனி வண்ணா கண்ணனே என்தன் கார் முகிலே என நினைந்திட்டு உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறிய தேனைத் தெளிந்த நான்மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே –4-3-9
பதவுரை Show / Hide
களங்கனி வண்ணா, Kalankani Vanna - களாப்பழம்போன்ற திருநிறமுடையவனே! (- (தெளிந்த நான் மறையோர் நாங்கை நன்னடுவுள்) (செம்பொன்செய் கோயிலின் உள்ளே;) (நான் வணங்கி வாழ்ந்தொழிந்தேன்))
கண்ணனே, Kannane - ஸ்ரீக்ருஷ்ணனே!
என்தன் கார்முகிலே, Enthan Kaarmugile - என்னுடைய காளமேகமே!
என நினைந்திட்டு, En Ninaindittu - என்று தியானித்து
உளம் கனிந்திருக்கும், Ulam Kanindirukkum - நெஞ்சு பரிபக்குவமாயிருக்கிற
அடியவர், Adiyavar - தங்கள்  அடியார்களுடைய
உள்ளத்துள் ஊறிய தேனை, Ullaththul Ooriy Thenai - ஹ்ருதயத்திலே மாற்றுமாறாதே யிருக்கிற தேன் போன்றவனும்,
வளம் கொள்பேர் இன்பம் மன்னி நின்றானை, Valam Kolpaer Inbam Manni Nindraanai - மிகுந்த பரமாநந்தம் பொருந்தி நிற்பவனுமான பெருமானை
1277பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரப்பை உடைத்தான வெண் கொற்றக் குடைக் கீழே பூமியை அடைய பாகவத சேஷம் ஆக்குகைகாக நிர்வஹித்து அநந்தரம்-நிரவதிக ப்ரீதி உக்தராய் நித்ய சூரிகளோடு ஒரு கோவையாகப் பெறுவர் பேரருளாளன் எம்பிரான் -என்று உபக்ரமித்து வானவர் கோனை -என்று உபசம்ஹரிக்கிறார் தேவ ராஜா பிதாமகர் தனம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி நலமுடையவன் அருளினன் அயர்வறும் அமரர்கள் அதிபதி – கோயில் திருமலை பெருமாள் கோயில் உய்ந்து ஒழிந்தேன் வாழ்ந்து ஒழிந்தேன் அல்லல் தீர்ந்தேன் -ஒன்பது பாட்டும் ஒரு தட்டு இந்த பல சுருதி ஒரு தட்டு -ஒன்பதோடு ஒன்றும்) 10
தேனமர் சோலை நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாள் கலிகன்றி ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவின்றிக் கற்று வல்லார்கள் மான வெண் குடைக் கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே –4-3-10
பதவுரை Show / Hide
தேன் அமர் சோலை, Then Amar Solai - வண்டுகள் படிந்த சோலைகளையுடைய
நாங்கை, Naangkai - திருநாங்கூரில்
நல் நடுவுன், Nal Naduvun - நட்ட நடுவில்
செம்பொன்செய் கோயிலின் உள்ளே, Sembonsei Koyilin Ullae - செம்பொன்செய் கோயிலென்னுந் திருப்பதியிலே
வானவர் கோனை, Vaanavar Konai - தேவாதிதேவனை
கண்டமை, Kandamai - தாம் ஸேவித்தபடியை
சொல்லும், Sollum - அருளிச்செய்தவரும்
மங்கையார், Mangaiyaar - திருமங்கையில் உள்ளார்க்குத் தலைவரும்
வாள், Vaal - வாட்படையை யுடையவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வாருடைய,
ஊனம் இல் பாடல், Oonam Il Paadal - குறையொன்றுமில்லாத பாசுரமான
ஓன்பதோடு ஒன்றும், Onpathodu Onrum - இப்பத்துப்பாட்டுகளையும்
ஒழிவு இன்றி, Ozhivu Inri - ஒன்றும் விடாமல்;
கற்று வல்லார்கள், Kattru Vallarhal - ஓதி யுணரவல்லவர்கள்
மானம், Maanam - பரப்பையுடைய
வெண் குடை கீழ், Ven Kudai Keezh - வெண்கொற்றக் குடையின் கீழ் (இருந்துகொண்டு)
வையகம், Vaiyagam - பூ மண்டலத்தை
ஆண்டு, Aandu - அரசாண்டு
மகிழ்ந்து, Magizhndu - உவந்து
வானவர் ஆகுவர், Vaanavar Aaguvar - (பிறகு) நித்யஸூரிகளுமாவர்
1278பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பகவத் சரணாரவிந்த திவ்ய பரிமளம் யாதொரு ஜந்துவின் இடத்தில் உண்டாகிறதோ அங்கு சூரிகள் பிரசாதமும் குறைவற உண்டாம்–ஸ்வாபதேசம்- முதலையாலே இடர் பட்ட அளவிலே வந்து உதவிற்று இலன் என்று எனக்கு நான் கடவேனாய் இடர் பட்டேனோ ஒருவர் இல்லாதாப் போலே -இடர் படுவதே -என்று ஆனையை ரஷித்த கண்ணர் கிடீர்) 1
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும் தந்தை கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர் நூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம்கமுகின் முது பாளை பகுவாய் நண்டின் சேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே –4-4-1
பதவுரை Show / Hide
பள்ளத்து, Pallaththu - தாழ்ந்த நிலத்தில் முளைத்துள்ள
நூறு இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த, Nooru Idazh Kol Aravindham Nuzhaindha - பல இதழ்களையுடைய தாமரைப் பூவிலே பிரவேசித்த
பகு வாய் நண்டின், Pagu Vaai Nandin - விரிந்தவாயை யுடைத்தான நண்டினுடைய
சேறு அளையில், Seru Alaiyil - சேறுமிக்க விளையிலே
இள கமுகின் முது பாளை, Ila Kamugin Muthu Paalai - இளைய பாக்கு மரங்களினுடைய முற்றின பாளையானது
வெண்முத்தம் சிந்து, Venmuththam Sindhu - வெளுத்த முத்துக்களை இறைக்கப்பெற்ற
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்
திருத்தெற்றியம்பலத்து, Thiruththetriyampalathu - திருத்தெற்றியம்பலம் என்னுந் திருப்பதியில் எழுந்தருளியுள்ள
என், En - எனக்கு ஸ்வாமியாய்
செம் கண் மால், Sem Kan Maal - செந்தாமரைக் கண்ணனான ஸர்வேச்வரன் (எப்படிப்பட்டவனென்றால்,)
மாறு அரசர் மணி முடியும் திறலும் தேசும், Maaru Arasar Mani Mudiyum Thiralum Desum - பகைவரான (துரியோதனன் முதலிய) அரசர்களினுடைய மாணிக்கங்களிழைத்த கிரீடங்களும் வலியும் தேஜஸ்ஸும்
அவர்தம் காதலிமார் குழையும், Avardham Kaadhalimaar Kuzhaiyum - அவ்வரசரது மனைவியின் காதணியும்
தந்தை கால்  தளையும், Thandai Kaal Thalaiyum - தன் தகப்பனாரான வஸுதேவருடைய காலிலே இடப்பட்டிருந்த விலங்கும்
உடன் கழல, Udan Kazhala - ஏககாலத்திலே ஒழியும்படியாக
வந்து தோன்றி, Vandhu Thondri - திருவவதரித்தவனாயும்
கதம் நாகம், Kadham Naagam - சீற்றத்தையுடைய கஜேந்திராழ்வானை
காத்து அளித்த, Kaathu Aliththa - ரக்ஷித்தருளினவனாயுமுள்ள
கண்ணர்கண்டீர், Kannarkandheer - கண்ணபிரான் காண்மின்.
1279பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒருத்தரும் விரும்பாத நஞ்சை யுண்டு அறிவு குடி புகுராமையாலே உகந்த பிள்ளை கண்டீர் மடமகள் வடிவு கொண்ட -என்னாமல் மடமகள் தன் வடிவு கொண்ட -அசாதாரணமான வேஷம்) 2
பொற்றொடித் தோள் மடமகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கிப் பெற்றெடுத்த தாய் போல் மடுப்ப யாரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை கண்டீர் நெற்றோடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறிய வண்டொலியும் நெடும் கணார் தம் சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-2
பதவுரை Show / Hide
நெல் தொடுத்த நீலம்மலர்நிறைந்த சூழல், Nel Thodutha Neelammalarniraindha Soozhal - நெற்கதிர்களின்மேல் வரிசை வரிசையாகக் கட்டப்பட்ட கரு நெய்கற் பூக்களாலே நிறைந்துள்ள சுற்றுப்புறங்களில் (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து, என் செங்கண் மால்!))
இரு சிறைய வண்டஒலியும், Iru Sirai Vandaoliyum - அழகிய சிறகுகளையுடைய வண்டுகளின் ஆரவாரமும்
நெடு கண்ணார்தம் சிறு அடிமேல் சிலம்பு ஒலியும், Nedu Kannaartham Siru Adimeel Silambu Oliyum - நீண்ட கண்களையுடையரான மாதர்களது சிறிய பாதங்களிலணிந்த தண்டைகளினுடைய ஓசையும்
மிழற்று, Mizhatru - தொனிக்கப்பெற்ற
பொன்தொடி தோள், Pondhodi Thol - பொன் வளைகளணிந்த புஜங்களை உடையவளும்
மடம் மகள் தன், Madam Magal Than - ஆத்மகுணம் உடையவளுமான யசோதைப் பிராட்டியினுடைய
வடிவு கொண்ட, Vadivu Konda - வேஷத்தை ஏறிட்டுக்கொண்டுவந்த
பொல்லாத வன் பேய்ச்சி, Polladha Van Paeychchi - மிகவும் பொல்லாத பூதனையானவள்
கொங்கை வாங்கி, Kongai Vaangi - (தனது) முலையைக் கையாலெடுத்து
பெற்று எடுத்த தாய் போல மடுப்ப, Petru Edutha Thaai Pola Maduppa - பெற்றுவளர்த்த தாய்போலே
1280பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இடைச்சிகள் சிறு குடில்களின் வாசலிலே படலைத் திருக்கி வைத்துப் போனால் படலை திறந்து நுழைந்து புக்கு-அன்று கடைந்த வெண்ணெய் செவ்வி அழியாமல் அமுது செய்கைக்காக- இவனுக்கு நுழைந்து புகுகை யாகை இறே குடிலின் உடைய பெருமை) 3
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும் அடல் அடர்த்த வேற்கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர் மடலெடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டா வரு நீர்ப் பொன்னி திடலெடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-3
பதவுரை Show / Hide
மடல் எடுத்த நெடு தெங்கின, Madal Edutha Nedu Thengin - பாளைகள் மிகவும் நிறைந்து உயர்ந்துள்ள தென்னை மரங்களினின்று, (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மால்;))
பழங்கள், Pazhangal - காய்கள்
வீழ, Veela - (மாமங்களின் மீது) விழ அதனால் உதிர்ந்த
மாங்கனிகள் திரட்டு, Manganihal Thirattu - மாம்பழத் திரள்களை
உருட்டா மலர் சுமந்துவரும் நீர் பொன்னி, Urutta Malai Sumandhuvarum Neer Ponni - உருட்டிக்கொண்டும் (பல வகைப்) பூக்களையடித்துக் கொண்டும் பெருகுகின்ற பிரவாஹத்தையுடைய காவேரியானது
திடல் எடுத்து, Thidal Eduthu - மேட்டு நிலங்களை யெடுத்துவிட்டு
இழியும், Izhiyum - வெள்ளமிடப்பெற்ற
பசு வெண்ணெய் பதம் ஆர, Pasu Vennai Padham Aara - அப்போது கடைந்து வைத்த வெண்ணெயை அமுது செய்வதற்காக
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்துபுக்கு, Padal Adaitha Siru Kurambai Nuzhaindupukku - படலிட்டு மூடிவைத்த சிறு குடில்களிலே நுழைந்து உள்ளேபோய்
அடல் அடர்த்த வேல்கண்ணார், Adal Adaritha Velkannaar - போர்செய்வதற்குரிய வேற்படைபோன்ற கண்களையுடையரான இடைச்சிகளினுடைய
தோக்கை, Thokkai - சேலைத் தலைப்பை
பற்றி, Patri - பிடித்திழுத்து
அலந்தலைமை செய்து, Alandhalamai Seythu - துன்பமான சேஷ்டைகளைப் பண்ணி
பண்ணை முற்றும் உழலும், Pannai Mutrum Uzhalum - இடைச்சேரி யெங்குந் திரிகின்ற
ஐயன் கண்டீர், Aiyan Kandeer - மஹாநுபாவன் காண்மின்
1281பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கறுப்பு ஆர்ந்த திண்ணியதான ருஷபங்களை அடர்த்து விவாஹ மங்களத்தை நிர்வஹித்த கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர்) 4
வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடுஞ்சினத்து வன் தாள் ஆர்ந்த காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கருமுகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர் ஏராரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச் சீராரு மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-4
பதவுரை Show / Hide
ஏர் ஆரும் மலர் பொழில்கள், Aer Aarum Malai Pozhilgal - அழகுபொருந்திய புஷ்பங்களையுடைய சோலைகளானவை (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மால்))
எங்கும் தழுவி, Engum Thazhuvi - ஆகாசமுள்ளவளவும் வியாபித்து
எழில் மதியை, Ezhil Mathiyai - அழகிய சந்திரனை
கால் தொடர, Kaal Thodara - (அசையவொட்டாமல்) பால் கட்டப்பெற்றதும்
விளங்கு சோதி சீர் ஆரும் மணி மாடம் திகழும், Vilangu Sothi Seer Aarum Mani Maadam Thigazhum - விளங்குகின்ற ஒளியையுடைய அழகிய மணிமாடங்கள் பிரகாசிக்கப்பெற்றதுமான
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி, Vaar Aarum Mulai Madavaal Pinnaikku Aagi - கச்சணிந்த முலையையுடையவளும் ஆத்மகுணங்களை உடையவளுமான நப்பின்னைப்பிராட்டியைப் பெறுதற்காக,
வளை மருப்பின், Valai Maruppin - வளைந்த கொம்புகளையுடையனவாய்
கடு சினத்து, Kadu Sinatthu - மிக்க கோபத்தை யுடையனவாய்
வன் தாள் ஆர்ந்த, Van Thaal Aarnth - வலிய கால்களையுடையனவாய்
கார் ஆர், Kaar Aar - கருநிறம் பொருந்தியவான
திண் விடை, Thin Vidai - வலிய ரிஷபங்களை
அடர்ந்து, Adarnthu - வலியடக்கி
வதுவை ஆண்ட, Vadhuvai Aanda - (அவளை) விவாஹஞ் செய்துகொண்ட
கருமுகில் கோல் திருநிறத்துஎன் கண்ணர்கண்டீர், Karumugil Kol Thiruniraththen Kannarkandheer - நீலமேகச்யாமளனான நம் கண்ணபிரான் காண்மின்.
1282பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ருக்மிணி ஸ்ரீ நப்பின்னை இருவர் உடன் சம்ஸ்லேஷித்த படியை அனுசந்திக்கிறார்- வெளுத்த தந்த பங்க்தியை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார்- அவன் திருமேனியைப் பார்த்த படியே இருக்கையாலே திருமேனியிலே கறுப்பு கண்ணிலே ஊறின ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி) 5
கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை கதிர் முத்த வெண்ணகையாள் கரும் கண் ஆய்ச்சி முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர் மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி யாடவரை மட மொழியார் முகத்திரண்டு சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-5
பதவுரை Show / Hide
முலை இலங்குநிரை சந்தி மாடம் வீதி, Mulai Ilangunirai Sandhi Maadam Veethi - மலைபோல் விளங்குகின்ற வரிசைவரிசையாக ஒன்றோடொன்று சேர்ந்திருக்கிற மாடங்களையுடைய தெருக்களிலே (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்துஎன் செங்கண் மால்;))
மடம் மொழியார், Madham Mozhiyaar - இனிய பேச்சையுடைய பெண்களின்
முகத்து, Mugaththu - முகத்திலுள்ள
இரண்டு சிலை, Irandu Silai - இரண்டு விற்கள் போன்ற புருவங்களானவை
விலங்கி, Vilangi - வளைந்து
ஆடவரை மனம் சிறைகொண்டு இருக்கும், Aadavarai Manam Siraiykondu Irukkum - ஆண்பிள்ளைகளின் மனத்தை ஸ்வாதீனப்படுத்திக் கொண்டிருக்கப்பெற்ற
கலை இலங்கும், Kalai Ilangum - மேகலை விளங்கப்பெற்ற
அகல் அல்குல், Akal Alkul - அகன்ற நிதம்பத்தையுடையளாய்
கதிர்முத்தவெள் நகையாள், Kathirmuthavell Nagaiyaal - ஒளிபொருந்திய முத்துப் போலே வெளுத்த பற்களையுடையளான
கமலம் பாவை, Kamalam Paavai - பெரியபிராட்டியினுடையவும்
கரு கண் ஆய்ச்சி, Karhu Kan Aaychchi - கறுத்த கண்களையுடையளான நப்பின்னைப் பிராட்டியினுடையவும்
முலை இலங்கும் ஒளி மணி பூண்வடமும் தேய்ப்ப, Mulai Ilangum Oli Mani Poonvadam Theyppa - தனங்களிலே விளங்குகின்ற அழகிய மணிகளிழைத்துச் செய்யப்பட்ட கண்டிகையும் ஹாரமும் உராய, (அதனால்)
மூவாத, Moovadha - நித்யயௌவனம் மாறாத
வுரை நெடுதோள், Vurai Neduthol - மலைபோன்று நெடிய திருத் தோள்களையுடைய
மூர்த்தி கண்டீர், Moorthi Kandeer - ஸ்வாமி காண்மின்.
1283பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் மற்றும் உள்ள முதலிகளுமாக இப்பாட்டில் சொல்லுகிறது என் -என்று ஸ்ரீ பட்டருக்கு விண்ணப்பம் செய்ய0ஒரு கால் இயலைக் கேளா ராவணன் வார்த்தை காண்-என்று அருளிச் செய்தார்) 6
தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்து இருப்பான் அரக்கர் தங்கள் கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர் மான் போலும் மென்னோக்கில் செய்ய வாயார் மரகதம் போலே மடக்கிளியைக் கை மேல் கொண்டு தேன் போலும் மென் மழலை பயிற்று நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-6
பதவுரை Show / Hide
மான் போலும் மென் நோக்கின், Maan Polum Men Nookkin - மானின் நோக்குப்போன்ற அழகிய நோக்கையுடையராய் (- (நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என்) (செங்கண் மால்–;-))
செய்ய வாயார், Seyya Vaayaar - சிவந்த அதரத்தையுமுடையரான பெண்கள்
மரகதம் போல், Maragatham Pol - மரகதப்பச்சை போலே பசுமையாய்
மடம், Madham - அழகியதான
கிளியை, Kiliyai - கிளிப்பிள்ளையை
கை மேல் கொண்டு, Kai Mel Kondu - தங்கள் கைகளின் மேல்வைத்துக்கொண்டு
தேன் போலும் மெல் மழலை, Then Polum Mel Mazhalai - தேன் போலினியமிருதுவான பேச்சை
புயிற்றும், Puyitrum - கற்பிக்கப்பெற்ற
தரணி ஆளன் தான் போலும் என்றுஎழுந்தான், Tharani Aalan Thaan Polum Endru Ezhunthaan - ‘(இராமனென்கிற ஒரு சிறு மனிசன்) பூமியையெல்லாம் தானே ஆள்பலனாக நினைத்து அஹங்காரப்படுகின்றான்;
அது கண்டு, Adhu Kandu - அதை அறிந்தும்
தரித்து இருப்பான், Thariththu Iruppaan - (அந்த ராமனைத் தண்டியாமல்) பொறுத்திருப்பவன்
அரக்கர் தங்கள் கோன்போலும், Arakkar Thangal Konpolum - ராக்ஷஸர்க்குத் தலைவனாவனோ’
என்று, Endru - என்றிப்படி நினைத்து
எழுந்தான், Ezhunthaan - கிளர்ந்தவனான இராவணனுடைய
குன்றம் அன்ன, Kundram Anna - மலைபோன்ற
இருபது தோள், Irupathu Thol - இருபது தோள்களையும்
உடன், Udan - ஏககாலத்தில்
துணித்த, Thuniththa - அறுத்தொழித்த
ஒருவன் கண்டீர், Oruvan Kandeer - தனிவீரன் காண்மின்.
1284பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சர்வேஸ்வரன் செல்லும்படியான யாகம் இறே மங்கலங்கள் சேரத் தட்டு இல்லை இறே மகா பலி உடையனாய் தான் குறைவாளனாய் இரந்த-என்ன பிள்ளை தான்) 7
பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறள் உருவாய் பொருந்தா வாணன் மங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர் கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம் தன்னால் செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-7
பதவுரை Show / Hide
கொங்கு அலர்ந்த, Kongu Alarntha - பரிமளம் பரவாநின்ற (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மால்;))
மலர் குழலார், Malar Kuzhalaar - பூக்களையணிந்த கூந்தலையுடையரான மாதர்களின்
கொங்கை தோய்ந்த, Kongai Thoyntha - தனங்களின் மீது படிந்த
குங்குமத்தின் குழம்பு, Kungumaththin Kuzhambu - குங்குமச்சாறு தன்னை
அளைந்த, Alaindha - அளைந்ததனாலுண்டான
கோலம் தன்னால், Kolam Thannal - அழகினால்
செம், Sem - சிவந்திருக்கிற
கலங்கல், Kalangal - வெள்ளமானது
வெண் மணல் மேல் தவழும், Ven Manal Mel Thavazhum - வெளுத்த மணற்குன்றுகளின் மேல் பரவப்பெற்ற
பொங்கு இலங்கு புரிநூலும் தோலும் தாழ, Pongu Ilangu Purinoolum Tholum Thaazha - மிக விளங்குகின்ற யஜ்ஞோப வீதமும் கிருஷ்ணாஜிநமும் தொங்கப்பெற்ற
பொல்லாத குறள் உரு ஆய், Polladha Kurall Uru Aay - அழகிய வாமநமூர்த்தியாகி
பொருந்தா வாணன், Porundha Vaanan - ஆஸுரப்ரக்ருதியான மஹாபலியினுடைய
மங்கலம் சேர் மறை வேள்வி அதனுள் புக்கு, Mangalam Ser Marai Velvi Adhanul Pukku - மங்களம் பொருந்திய வேத கோஷத்தையுடைய யாக பூமியிலே எழுந்தருளி
குறைமண்அகலம் இரந்த மைந்தன் கண்டீர், Kuraimanagalam Irandha Maindan Kandeer - தனக்கு வேண்டியதான பூமியையாசித்த சிறுககன் காண்மின்
கேளா, Kela - கேட்டு என்றபடி
1285பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமியை இடந்து அதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை புல்கி கோட்டிடையிலே நீல மணி அழுத்தினால் போலே வைத்த செயலாலே என்னை அடிமை கொண்டவன் கிடீர்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கண கணப்பத் திருவாகாரம் குலுங்க நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர் இலங்கிய நான் மறையனைத்தும் அங்கம் ஆறும் ஏழு இசையும் கேள்விகளும் எண் திக்கும் எங்கும் சிலம்பிய நல் பெரும் செல்வம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-8
பதவுரை Show / Hide
இலங்கிய, Ilangiya - (பிரமாணங்களுள் சிறந்ததாக) விளங்குகின்ற (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மால்;))
நால் மறை அனைத்தும், Naal Marai Anaiththum - எல்லா வேதங்களும்
அங்கம் ஆறும், Angam Aarum - (வியாகரணம் முதலிய) ஆறு அங்கங்களும்
ஏழ் இசையும், Ezhu Isaiyum - ஸப்தஸ்வரங்களும்
கேள்விகளும், Kelvigalum - இதிஹாஸ புராணங்களும் (ஆகிய இவை)
எண் திக்கு எங்கும், En Thikku Engum - எட்டுத் திசைகளிலுமெல்லாம்
சிலம்பிய, Silambiya - கோஷம் செய்யப்பெற்றதும்
நல் பெரு செல்வம், Nal Peru Selvam - நல்ல அளவற்ற செல்வம்
திகழும், Thigazhum - விளங்கப்பெற்றதுமான
சிலம்பின் இடை, Silambin Idai - தண்டைச்சிலம்பின் நடுவிலிட்ட
சிறு பரல் போல், Siru Paral Pol - சிறிய பருக்காங்கல்போல
பெரிய மேரு, Periya Meru - பெருத்த மேருமலையானது
திரு குளம்பில், Thiru Kulambil - அழகிய குளம்பிலே
கணகணப்ப, Kanakanappa - கணகணவென்று ஒலிக்கும்படியாகவும்
திரு ஆகாரம் குலுங்க, Thiru Aakaram Kulunga - (திருமார்பில்) பிராட்டியிருக்குமிருப்பு குலுங்கும்படியாகவும்
நிலம் மடந்தைதனை, Nilam Madandhaithanai - பூமிப்பிராட்டியை
இடந்து, Idandhu - கோட்டால் குத்தியெடுத்து
புல்கி, Pulki - தழுவிக்கொண்டு
கோட்டிடை, Kottidai - கோரப் பல்லின்மீது
வைத்து அருளிய –, Vaithu Aruliyah - ஸ்தாபித்துக்கொண்ட
எம் கோமான் கண்டீர், Em Koman Kandir - எம்பெருமான் காண்மின்
1286பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆழியானது மிக்கு இருந்துள்ள ஊழி வெள்ளத்தைப் பண்டு திருமேனியிலே ஏக தேசத்தில் அடக்கின ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர்) 9
ஏழு உலகும் தாள்வரையும் எங்குமூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம் மோழை எழுந்து ஆழி மிகு மூழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர் ஊழி தொறும் ஊழி தொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நான்மறை யனைத்தும் தாங்கு நாவர் சேழுயர்ந்த மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலே –4-4-9
பதவுரை Show / Hide
ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்தசெல்வத்து, Ozhithorum Ozhithorum Uyarndha Selvathu - காலம் செல்லச்செல்ல வளர்ந்துவருகிற செல்வத்தையுடையராய் (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மால்–;))
ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கு நாவர், Ongiya Nanmarai Anaithum Thangu Navar - சிறந்த வேதங்களையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்கிற நாவையுடையரான வைதிகர்கள் வாழப்பெற்றதும்
சேழ்உயர்ந்தமணிமாடம் திகழும், Seyzhuyarnthamanimaadam Thigazhum - மிகவும் உயர்ந்த மணிமாடங்கள் விளங்கப்பெற்றதுமான
ஏழ் உலகும் நாள்வரையும் எங்கும், Ezhu Ulakum Naalvaraiyum Engum - ஸப்தத்வீபங்களும் பக்கத்ததுச் சிறுமலைகளையுடைய பெரிய மலைகளும் ஆகிய எவ்விடங்களையும்
மூடி, Moodi - ஆக்கிரமித்து
எண் திசையும் மண் தலமும் அண்டம் மண்டி, En Thisayum Mann Thalamum Andam Mandi - எட்டுத் திக்குக்களிலும் எல்லாப் பூமியிலும் அண்டத்திலும் பரவி
மோழை யெழுந்து, Mozhai Yezhunthu - மோழை கிளம்பி
ஆழி மிகும், Aazhi Mikum - கடல் பெருகும்படியான
ஊழி வெள்ளம், Oozhi Vellam - பிரளயப்பெரு வெள்ளத்தை
முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர், Mun Akattil Odukkia Em Moorthi Kandeer - முன்பொருகால் திருவயிற்றில் அடக்கிக்கொண்டஎமது ஸ்வாமியானவான்.
1287பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஐந்தும் ஐந்தும் வல்லார்-ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் அபதானங்கள் ஐந்தும் அது கலசாத ஐந்தும் ஐஹிகத்தில் ஐஸ்வர்யமும் குறைவற புஜித்து ஸ்ரீ பரம பதத்தில் ஸ்ரீ நித்ய சூரிகளோடு ஒரு கோவையாக விளங்குவர்) 10
சீரணிந்த மணி மாடம் திகழு திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக் கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் சீரணிந்து உலகத்து மன்னராகிச் சேண் விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே –4-4-10
பதவுரை Show / Hide
சீர் அணிந்த, Seer Anindha - சிறப்புப் பொருந்திய
மணி மாடம், Mani Maadam - மணிமாடங்கள்
திகழும், Thigazhum - விளங்கப்பெற்ற
நாங்கூர், Naangoor - திருநாங்கூரிலுள்ள
திருத்தெற்றியம்பலத்து, Thiruththetriyampalathu - திருத்தெற்றியம்பல மென்னந் திருப்பதியி லெழுந்தருளியிருக்கிற
என், En - எனக்கு ஸ்வாமியான
செம் கண் மாலை, Sem Kan Maalai - செந்தாமரைக்கண் பெருமான் விஷயமாக,
கூர் அணிந்த வேல் வலவன், Koora Anindha Vel Valavan - கூர்மை பொருந்திய வேற்படையை ஆளுமவரும்
ஆலி நாடன், Aali Naadan - திருவாலி நாட்டுக்குத் தலைவரும்
கோடி மாடம் மங்கையர் கோன், Kodi Maadam Mangaiyar Kon - கொடிகளணிந்த மாடங்களையுடைய திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும்
குறையல் ஆளி, Kuraiyal Aali - திருக்குறையலூரை ஆள்பவரும்
பார் அணிந்த தொல் புகழான், Paar Anindha Thol Pugazhaan - பூமிக்கு அலங்காரமான தொல்புகழை உடையவருமான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச்செய்த
பாமாலை இவை ஐந்தும் ஐந்தும், Paamalai Ivai Aindhum Aindhum - இப் பத்துப்பாசுரங்களையும்
வல்லார் தாம், Vallaar Thaam - ஓத வல்லவர்கள்
உலகத்து, Ulakatthu - இவ்வுலகத்தில்
சீர் அணிந்த மன்னர் ஆகி, Seer Anintha Mannar Aagi - அரசர்களாகி வாழ்ந்து (பிறகு)
சேண் விசும்பில், Seen Visumbil - பரமாகாச மென்கிற பரமபதத்திலே
வானவர் ஆய், Vaanavar Aayi - நித்ய ஸூரிகளோடு ஒத்தவர்களாய்
நிகழ்வர், Nigalvar - விளங்கப்பெறுவர்கள்
1288பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மலையை ஏந்தி பரிஹரிக்கப் போகாத மழையைக் காத்த என் ஸ்ரீ ஸ்வாமி) 1
தூம்புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னு காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட வெங்கும் தேம பொழில் கமழ் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-1
பதவுரை Show / Hide
தும்புஉடை பனை கை வேழம் துயர் கெடுத்தருளி, Thumbu Udai Panai Kai Vezham Thuyar Kedu Tharuli - துளையையுடைத்தாய் பனை போன்றதான துதிக்கையையுடைய கஜேந்திராழ்வானது துன்பத்தைப் போக்கியருளினவனாயும் (- (எவ்விடத்திலுள்ளானென்னில்);)
முன்னு காம்பு உடை குன்றம் ஏந்தி, Munnu Kaambu Udai Kuntram Aendhi - வேரூன்றின மூங்கில்களை உடைத்தான கோவர்த்தன மலையைக் (குடையாக) எடுத்துப்பிடித்து
கடு மழை காத்த எந்தை, Kadu Mazhai Kaatha Endhai - கடிதான மழையைத் தடுத்தவனாயுமுள்ள எம்பெருமான்,
பூ புனல் பொன்னி, Poo Punal Ponni - அழகியஜலத்தையுடைத்தான காவேரியானது
முற்றும் புகுந்து, Mutrum Pugundhu - எங்கும் பாய்ந்து
பொன், Pon - பொற்குவியல்களை
வரண்ட, Varanda - கொண்டுவந்து தள்ளப்பெற்றதும்
எங்கும், Engum - கண்டவிடமெங்கும்
தேம் பொழில் கமழும், Them Pozhil Kamazhum - தேன்மிக்க சோலைகள் பரிமளம் வீசப்பெற்றதுமான
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்
திருமணிக் கூடத்தான், Thirumanik Koodaththaan - திருமணிக்கூடமென்னும் திருப்பதியிலுள்ளான்.
1289பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இலங்கையைப் பற்றின ராவண சம்பந்தத்தால் வந்த துக்கம் போம்படியாக பிரதி பஷத்தின் மேலே கண் பாராதே அம்பை விட்ட ஸ்ரீ ஸ்வாமி) 2
கவ்வை வாள் எயிறு வன் பேய்க்கதிர் முலை சுவைத்து இலங்கை மன்னிய விடும்பை தீரக் கடுங்கணை துரந்த வெந்தை கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த தெய்வ நீர்க் கமழு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-2
பதவுரை Show / Hide
கவ்வை, Kavvai - ஆரவாரம்செய்பவளாய் (- (எவ்விடத்துள்ளானென்னில்;)? (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
வாள் எயிறு, Vaal Eiyiru - வாள்போன்ற கூர்மையான பற்களையுடையளாய்
வல் பேய், Val Pei - கல்நெஞ்சளான பூதனையினுடைய
கதிர் முலை, Kathir Mulai - (விஷத்தாலே) புகர் பெற்றிருக்கிற முலையை
சுவைத்து, Suvaiththu - உறிஞ்சி உண்டவனாயும்
இலங்கைவவ்விய, Ilankaiyavviya - லங்காபுரியைப் பற்றின
இடும்பை, Idumpai - (சாக்ஷஸப் பூண்டுகள் நெருங்கியிருத்தலாகிற) கேடானது
தீர, Theera - தொலையும்படியாக
கடுங் கணை, Kadung Kanai - கடுமையான அம்புகளை
துரந்த, Thurandha - (அவ்விலங்கையின் மீது) செலுத்தினவனாயுமுள்ள
எந்தை, Endhai - ஸ்வாமியானவன்
கொவ்வை வாய் மகளிர், Kovvai Vaai Makalir - கொவ்வைக்கனி போன்ற வாயையுடையரான பெண்கள்
கொங்கை, Kongai - (தங்கள்) கொங்கைத் தடத்தினின்று
குங்குமம், Kungumam - குங்குமச்சேறுகளை
கழுவி, Kazhuvi - கழுவ,
போந்த, Pondha - (அவற்றோடு கூடிப்) பெருகுகின்ற
தெய்வம் நீர், Deivam Neer - திவ்யமான தீர்த்தமானது
கமழும், Kamazhum - வாஸனை வீசப்பெற்ற
1290பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேக்கள் உடைய வியாபாரத்தை மணல் கொட்டகம் அழிக்குமா போலே அழித்து ஸ்ரீ நப்பின்னை பிராட்டியார் உடைய செவ்வியை உடைத்தான தோள்களோடு புணர்ந்த என் ஸ்ரீ ஸ்வாமி- அவ் ஊரில் உள்ளாருக்கு அத்யயனமும் அனுஷ்டானமும் யாத்ரையாய் இருக்குமா போலே யாய்த்து அவனுக்கு விரோதி நிரசனம் யாத்ரையாய் இருக்கும் படி) 3
மாத் தொழில் மடங்கச் செற்று மருதிற நடந்தவன் தாள் சேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணைந்த வெந்தை நாத் தொழில் மறை வல்லார்கள் நயந்தறம் பயந்த வண்கைத் தீத் தொழில் பயிலு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-3
பதவுரை Show / Hide
மா தொழில் மடங்க செற்று, Maa Thozhil Madanga Settru - குதிரை வடிவுகொண்டு வந்த கேசியென்னும் அஸுரனுடைய (பராக்ரமச்) செயல்களெல்லாம் அடங்கும்படி செய்து (அவ்வஸுரனை) கொன்றொழித்தவனாயும் (- (எங்குள்ளானென்னில்;) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
மருது இற நடந்து, Maruthu Ira Nadandhu - மருதமரங்கள் இற்றுமுடிந்து விழும்படி தவழ்நடை கற்றவனாயும்
வல் தாள் சே தொழில் சிதைத்து, Val Thaal Se Thozhil Sithaithu - வலிய கால்களையுடைய (ஏழு) ரிஷபங்களினுடைய வியாபாரத்தை பங்கப்படுத்தி
பின்னை, Pinnai - நப்பின்னைப் பிராட்டியினுடைய
செவ்வி தோள், Sevvi Thol - அழகிய தோள்களோடே
புணர்ந்த, Punarndha - கலவி செய்தவனாயுமுள்ள
எந்தை, Endhai - எம்பெருமான்
நா தொழில் மறை வல்லார்கள், Naa Thozhil Marai Vallarhal - நாவுக்கு வியாபாரமான வேதங்களைக் கற்று வல்லவர்கள்
நயந்து அறம் பயந்த, Nayandhu Aram Payandha - ஆசையோடே தருமங்களை யனுஷ்டித்த
வண் கை தி தொழில் பயிலும், Van Kai Thi Thozhil Payilum - உதாரமான கைகளாலே அக்நி காரியங்களை இடை விடாது செய்யப்பெற்ற
1291பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் விரோதி நிரசனத்தால் அல்லது போது போக்க மாட்டாதாப் போலே யாய்த்து இவையும் ரச அனுபவத்தால் அல்லது போது போக்க மாட்டாதே இருக்கும் படியும்) 4
தாங்கரும் சினத்து வன் தாள் தடக்கை மா மருப்பு வாங்கிப் பூங்குருந்து ஒசித்துப் புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத் தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-4
பதவுரை Show / Hide
தாங்க அரு சினத்து, Thanga Aru Sinatthu - (ஒருவராலும்) தாங்கமுடியாத கோபத்தையுடையதும் (- (எவ்விடத்திலுள்ளானெனில்) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
வன் தாள், Van Thaal - வலியுள்ள கால்களையுடையதும்
தட கை, Thad Kai - பெரிய துதிக்கையையுடையதுமான
மா, Maa - (குவலயாபீடமென்னும்) யானையினுடைய
மருப்பு வாங்கி, Maruppu Vaangi - தந்தத்தைப் பிடுங்கிப் போட்டவனாயும்
பூ குருந்து ஒசித்து, Poo Kurunthu Osiththu - பூத்த குருந்த மரத்தை முறித் தொழித்தவனாயும்
புள் வாய் பிளந்து, Pul Vaai Pilandhu - பகாஸுரனுடைய வாயைக் கிழித்தவனாயும்
எருது அடர்த்த, Eruthu Adarththa - ரிஷபங்களை வலியடக்கினவனாயுமுள்ள
எந்தை, Endhai - எம்பெருமான
மா கனி நுகர்ந்த மந்தி, Maa Kani Nukarntha Mandhi - மாம்பழங்களைப் புஜித்த குரங்கானது
வந்து, Vandhu - (அந்த மாமரத்தினின்றும் வாழை மரத்திலே) வந்து சேர்ந்து
வண்டு இரிய, Vandu Iriya - (அங்கிருந்த) வண்டுகள் சிதறியோடும்படியாக
தீம் வாழை கனி நுகரும், Theem Vaalai Kani Nukarum - இனிய வாழைப் பழங்களைப் புஜிக்கப்பெற்ற
1292பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏறிட்டுக் கொடு வந்த துர்மானத்தைப் போக்கி தானான படியே யாக்கி விட்ட படி அவளுடைய செவியையும் மூக்கையும் வாளாலே அறுத்த என் ஸ்வாமி – ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள ஸ்ரீ திரு நாங்கூர்) 5
கருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல் வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத திருமகள் மருவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-5
பதவுரை Show / Hide
கருமகள், Karumagal - சண்டாள ஸ்த்ரிபோல் மிகவும் தண்ணியளாய் (- (எவ்விடத்திலுள்ளானெனில்,) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
இலங்கை யாட்டி, Ilankai Yaatti - லங்காபுரிக்கு அதிகாரம் செலுத்துமவளாய்
பிலம் கொள் வாய்த் திறந்து தன்மேல் வருமவள், Pillam Kol Vayth Thirandhu Thanmel Varumaval - குஹைபோன்ற வாயைத் திறந்துகொண்டு தன்மேல் வந்தவளான சூர்ப்பணகையினுடைய
செவியும் மூக்கும், Seviyum Mookkum - காதையும் மூக்கையும்
வாளினால் தடிந்த எந்தை, Vaalinaal Thadindha Endhai - வாட்படையனால் அறுத்தொழிந்த ஸ்வாமி
பெரு மகள், Peru Magal - பெருமைதாங்கிய ஸ்த்ரியாயும்
பேதை, Pethai - (அடியாருடைய குற்றங்களை அறியாதவளாயுமிருக்கிற
மங்கை, Mangai - பூமிப்பிராட்டியும்
திரு மகள், Thiru Magal - பெரிய பிராட்டியும்
தன்னொடும் பிரிவு இலாத, Thannodum Pirivu Iladha - தன்னைவிட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரியாதவர்களாய்
மருவும், Maruvum - பொருந்தியிருக்கப்பெற்ற
1293பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தனக்குப் போராத ஜன்மங்களிலே வந்து பிறந்து ரஷகன் ஆனவன் தானான நிலையிலே காணலாம் படி திரு மணிக் கூடத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 6
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை ஒண் திறல் தென்னனோடே வடவரசு ஓட்டம் கண்ட திண் திறலாளர் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-6
பதவுரை Show / Hide
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும், Kendaiyum Kurallum Pullum Kezhallum Ariyum Mavum - (ஆகிய இவ்வவதாரங்களை உடையனாய்) மத்ஸ்யமும் வாமநனும்ஹம்ஸ பக்ஷியும் வராஹமும் நரசிம்ஹமும் ஹயக்ரிவனும் (- (எவ்விடத்திலுள்ளானெனில்;) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
அண்டமும், Andamum - ப்ரஹ்மாண்டமும்
சுடரும், Sudarum - ஸூர்ய சந்திரர்களும்
அல்லா ஆற்றலும், Allaa Aatralum - மற்றுமுள்ள சிறந்த வஸ்துக்களும்
ஆய, Aaya - தானேயாயிருக்கிற
எந்தை, Endhai - எம்பெருமான்
ஓண் திறல் தென்னன் ஓட, Oon Thiral Thenan Oda - மிக்கபலத்தை யுடையனான பாண்டியராஜன் தோற்று ஓடும்படியாகவும்
வட அரசு ஓட்டம் கண்ட, Vada Arasu Oottam Kanda - பாண்டியதேசத்துக்கு வடக்கிலுள்ள சோளதேசத்துக்கு அரசனானசோழனைத் தோற்று ஓடும்படியாகவும் பண்ணின.
திண் திறலாளர், Thin Thiralalar - மஹா பலசாலிகள் வாழ்கிற
1294பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரார்தமான பதார்த்தங்களுக்கு நியந்தாவான ஸ்ரீ சர்வேஸ்வரன் இங்கே வந்து வர்த்தியா நின்றான்-என்கிறார்) 7
குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு நின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாய வெந்தை மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும் தென்றல் வந்துலவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-7
பதவுரை Show / Hide
குன்றமும், Kundramum - மலைகளும் (- (எவ்விடத்திலுள்ளானெனில்;) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
வானும், Vaanum - ஆகாசமும்
மண்ணும், Mannum - பூமியும்
குளிர் புனல், Kulir Punal - குளிர்ச்சியே இயற்கையான நீரும்
திங்களோடு, Thingalodu - சந்திரனும்
நின்ற, Nindra - நிலைநின்ற
வெம் சுடரும், Vem Sudarum - ஸூர்யனும்
அல்லா நிலைகளும், Allaa Nilaihalum - மற்றுமுள்ள நக்ஷத்ராதி ஸ்திதியும்
ஆய, Aaya - தானேயாயிருக்கப்பெற்ற
எந்தை, Endhai - எம்பெருமான்
மன்றமும், Manramum - பெரிய வீதிகளும்
வயலும், Vayalum - கழனிகளும்
காவும், Kaavum - தோட்டங்களும்
மாடமும், Maadum - மாட மாளிகைகளும் ஆகிய
எங்கும், Engum - எல்லாவிடங்களிலும்
தென்றல், Thendral - தென்றல் காற்றானது
மணம் கொண்டு, Manam Kondo - பரிமளத்தை வீசிக்கொண்டு
வந்து உலவும், Vandhu Ulavum - ஸஞ்சரிக்கப்பெற்ற
1295பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (த்யாஜ்யமாயும் உபாதேயமாயும் பௌதிகமாயும் உள்ள பதார்த்தங்களுக்கு நியந்தா வானவன் இங்கே வந்து வர்த்தியா நின்றான் என்கிறார்) 8
சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத்தரணி ஓம்பும் பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களுமாய வெந்தை பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாயச் செங்கயல் உகளு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-8
பதவுரை Show / Hide
சங்கையும், Sangaiyum - ஸந்தேஹமும் (- (எவ்விடத்திலுள்ளானெனில்) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
துணிவும், Thunivum - நிச்சயமும்
பொய்யும், Poyyum - அஸத்யமும்
மெய்யும், Meiyyum - ஸத்யமும்
இத் தரணி ஓம்பும், Ith Tharani Oombum - இப்பூமண்டலத்தை ரக்ஷிக்கின்ற
பொங்கிய முகிலும், Pongiya Mukilum - பரம்பின மேகங்களும்
எல்லா பொருள்களும், Ella Porulkalum - மற்றுமுள்ள வஸ்துக்களும்
ஆய, Aaya - தானேயாயிருக்கப்பெற்ற
எந்தை, Endhai - எம்பெருமான்
பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாய, Pangayam Ukutha Therhal Parugiya Vaalai Paaya - தாமரைப் பூவானது வெளிப்படுத்தின மகரந்தத்தை பானம்பண்ணின வாளை மீன்கள் குறுக்கும் நெடுக்கும் பாய்ந்து விளையாட
செம் கயல், Sem Kayal - சிவந்த கயல் மீன்கள்
உகளும், Ugalum - (அவற்றுக்கு அஞ்சித்) துள்ளுமிடமான
1296பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிஷித்த அனுஷ்டானம் -விஹித அனுஷ்டானம்-மோஷம்-மோஷத்துக்கு உபயோகியான ஆத்ம குணங்கள் அதுக்கு விரோதியான அநாத்ம குணங்கள்-இவற்றுக்கு எல்லாம் நியந்தா வானவன் இங்கே வந்து வர்த்தியா நிற்கிறான் என்கிறார்) 9
பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பமும் தானும் கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய வெந்தை மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு தேவர் வந்து இறைஞ்சு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-9
பதவுரை Show / Hide
பாவமும், Paavamum - பாபமும் (- (எவ்விடத்திலுள்ளானென்னில்) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
அறமும், Aramum - புண்யமும்
வீடும், Veedum - மோக்ஷமும்
இன்பமும், Inbamum - ஸுகமும்
துன்பம் தானும், Thunbam Thaanum - துக்கமும்
கோவமும், Kovamum - கோபமும்
அருளும், Arulum - அநுக்ரஹமும்
அல்லா குணங்களும், Allaa Gunangalum - மற்றுமுள்ள ஸத்வம் முதலிய குணங்களும்
ஆய, Aaya - தானேயாயிருக்கிற
எந்தை, Endhai - எம்பெருமான்
மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என, Mooviril Engal Moorthi Ivan Ena - ‘ப்ரஹ்ம விஷ்ணு’ ருத்ரர்களாகிற மூன்று மூர்த்திகளுள் நாங்கள் ஆச்ரயிக்கத்தக்க மூர்த்தி இந்த விஷ்ணுவே’ என்று தெளிந்து
முனிவரோடு தேவர், Munivaroatu Thevar - மஹர்ஷிகளும் தேவதைகளும்
வந்து இறைஞ்சும், Vandu Irainchum - வந்து வணங்குமிடமான
1297பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தை வல்லவர்கள் கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு ஸ்வர்க்கத்தை நிர்வஹித்து அதுக்கு மேலே ஆதித்ய மண்டலத்தின் நடுவிட்டு ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கமே போய் பரமபதத்திலே சென்று ஸ்வ ஸ்வரூபத்தை பெற்று உஜ்ஜ்வலராவர் சர்வ நிர்வாஹகன் -சர்வ அபேஷித ப்ரதன் -விரோதி நிரசன சீலன்-விரோதி நிவ்ருத்த பூர்வக பல ப்ரதத்வம் அதிகாரிகள் பேதம் பற்ற அருளிச் செய்கிறார்) 10
திங்கள் தோய் மாட நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானை மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள் வல்லார் பொங்கு நீருலகம் ஆண்டு பொன்னுலகு ஆண்டு பின்னும் வெங்கதிர்ப் பருதி வட்டத்தூடு போய் விளங்குவாரே –4-5-10
பதவுரை Show / Hide
திங்கள் தோய் மாடம் நாங்கூர், Thingal Thoi Maadam Naangoor - சந்திர மண்டலத்திலே போய்ப் படிந்திருக்கிற மாடங்களையுடைய திருநாங்கூரிலுள்ள
திருமணிக் கூடத்தானை, Thirumanik Koodaththanai - திருமணிக்கூடமென்னுந் திருப்பதியிலெழுந்தருளியுள்ள எம்பெருமான் விஷயமாக,
மங்கையர் தலைவன், Mangaiyar Thalaivan - திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும்
வண் தார், Van Thaar - அழகிய மாலையை யணிந்தவருமான
கலியன், Kaliyan - ஆழ்வார்
வாய், Vaai - திருவாய்மலர்ந்தருளிய
ஒலிகள், Oligal - இப்பாசுரங்களை
வல்லார், Vallar - ஓதவல்லவர்கள்,
பொங்கு நீர் உலகம் ஆண்டு, Pongu Neer Ulagam Aandu - கடல் சூழ்ந்த இவ்வுலகை அரசாட்சி புரிந்து (அதன் பிறகு)
பொன் உலகு ஆண்டு, Pon Ulagu Aandu - ஸ்வர்க்கலோகத்தை அனுபவித்து
பின்னும், Pinnum - அதற்குமேலும்
வெம் கதிர் பரிதி வட்டத்தூடு போய், Vem Kadhir Paridhi Vattathoodu Poi - வெவ்விய கிரணங்களையுடையனான ஸூர்யனுடைய மண்டலத்தின் வழியேசென்று
விளங்குவார், Vilanguvaar - (பரமபதத்தில்) வாழப்பெறுவர்.
1298பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முதலையாலே இடர்பட்ட யானை தன்னை நோக்கிக் கொள்ளுதல் அம்முதலை இத்தை நோக்குதல் செய்ததோ பாதகமானது ரஷகம் ஆக மாட்டாதே அந்த ஆனையினுடைய ஸ்தானே யாய்த்து நான் முதலையினுடைய ஸ்தானே யாய்த்து பிறர்) 1
தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு நாவள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக் காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –4-6-1
பதவுரை Show / Hide
உலகம் முற்றும் தாவளந்து, Ulagam Mutrum Thaavalandhu - உலகமடங்கலும் தட்டித்தரிந்து (- (தாமரைப்பூ ஸம்பாதிப்பதற்காக))
தடம் மலர் பொய்கை புக்கு, Thadam Malar Poigai Pukku - பெரிதான பூக்களையுடைத்தான ஒரு தடாகத்தில் இறங்கி
அங்கு, Angu - அங்கு (முதலையினால் கவ்வப்பட்டு)
நா வளம் நவின்று ஏத்த, Naa Valam Navinru Aetha - நாவுக்கு அலங்காரமான திருநாமங்களை சொல்லித்துதிக்க
நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய், Naagaththin Nadukkam Theerththaa - கஜேந்திராழ்வானுடைய அச்சத்தை போக்கினவனே!,
மா வனம் பெருகி, Maa Vanam Perugi - மிக்க செல்வமானது அதிகமாகி
மன்னு, Mannu - பொருந்தியிருக்கப்பெற்ற
மறையவர் வாழும் நாங்கை, Maraiyavar Vaalum Naangkai - வைதிகர்கள் வாழ்ந்திருக்குமிடமான திருநாங்கூரில்
காவளம்பாடி மேய, Kaavalampadi Maeya - திருக்காவளம்பாடி யென்னுந்திருப்பதியில் நித்யவாஸம் பண்ணுகிற
கண்ணனே, Kannane - கண்ணபிரானே!
நீயே களைகண், Neeye Kalaikkan - நீயே ரக்ஷகனாகவேணும்….
1299பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவ் ஊரில் உள்ளாருக்கு இந்த்ராதிகள் படி இல்லை யாய்த்து அவனை இரப்பாளன் ஆக்கி தாங்கள் வயிறு வளரார்கள் ஆய்த்து மகா ராஜரைப் போலே தங்களை அழிய மாறி நோக்குவர்கள்) 2
மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான் விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய் துண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய கண்ணனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-2
பதவுரை Show / Hide
எனம் ஆகி மண் இடந்து, Enam Aagi Mann Idandhu - ஆதிவராஹமாகி (அண்டபித்தியில் அழுந்திக்கிடந்த) பூமியைப் பிரித்துக் கொணர்ந்தவனாயும் (- (சாவளந்தண்பாடியாய்! கண்ணனெ!) (நீயே களைகண்.))
மாவலி வலி தொலைப்பான், Maavali Vali Tholaippaan - மஹாபலியினுடைய மிடுக்கைப்போக்குமாறு
விண்ணவர் வேண்ட, Vinnavar Venda - தேவர்கள் யாசிக்க (அதற்கிணங்கி)
வேள்வியில் சென்று, Velviyil Sendru - (அந்த மாவலியின்) யாக பூமியில் எழுந்தருளி
குறை இரந்தாய், Kurai Irandhaai - தனக்கு வேண்டியதை யாசித்துப் பெற்றவனே!,
மாற்றார் தம்மை துண்ணென தொலைத்தவர் நாங்கை மேய, Maatraar Thammai Thunnena Tholaiththavar Naangkai Maeya - பகைவர்களைச் சீக்கிரமாக வென்று ஒழித்தவர்கள் வாழ்கிற திருநாங்கூரில் பொருந்தியிருக்கிற
1300பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உனக்கு முடி தந்த ப்ரஹ்மாதிகள் உடைய ஐஸ்வர்யம் போல் அன்றிக்கே ஊற்று மாறாத சம்பத்து உடையவன் சுக்ரீவன் ஆகையாலே காண் அவன் முடி பெற்றது) 3
உருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை யுருவ வோட்டிக் கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர்முடி யரசளித்தாய் பருத்தெழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகு நாங்கைக் கருத்தனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-3
பதவுரை Show / Hide
உருத்து எழு வாலி மார்பில் உருவ, Uruthu Ezhuthu Vaali Maarbil Uruva - கோபங்கொண்டு கிளம்பி வந்த வாலியினுடைய மார்பிலே தைக்கும்படி (- (காவளந்தண்பாடியாய்!;) (நீயே களை கண்))
ஒரு கணை ஒட்டி, Oru Kanai Otti - ஒரு பாணத்தைப் பிரயோகித்து (அவனைக் கொன்று)
கருத்து உடை தம்பிக்கு, Karuthu Udai Thambikku - தன் திருவுள்ளத்திற்குப் பொருந்தினவனான ஸுக்ரிவனுக்கு
இன்பம் கதிர் முடி அரசு அளித்தாய், Inbam Kathir Mudi Arasu Aliththaa - ஆனந்தகரமான ஒளிபொருந்திய கிரீடத்தையும் ராஜ்யத்தையும் கிருபைபண்ணினவனே!,
பருத்து எழு பலவும் மாவும் பழம், Paruthu Ezhuthu Palavum Maavum Pazham - பருமனாய்க்கொண்டு முளைக்கின்ற பலாமரங்களினுடையவும் மாமரங்களினுடையவும் பழங்களானவை
விழுந்து ஒழுகும் நாங்கை, Vizhundhu Ozhugum Naangkai - கீழேவிழுந்து தேன் வெள்ளமிடா நிற்கப்பெற்ற திருநாங்கூரிலுள்ள
கருத்தனே, Karuththanae - எல்லாவற்றுக்கும் கர்த்தாவாயிருப்பவனே!
1301பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராஜத் துரோகத்தைப் பார்த்தால் சம்பந்தம் உள்ள இடம் எங்கும் அழியச் செய்ய வேண்டி இருக்க அவன் தம்பிக்கே கொடுத்தான் ஆய்த்து) 4
முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு அனையவற்கு இளையவற்கே யரசு அளித்து அருளினானே சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்பு தேனுகரு நாங்கைக் கனை கழல் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-4
பதவுரை Show / Hide
முனை முகத்து அரக்கண் மாள, Munai Mugaththu Arakkan Maala - யுத்தகளத்திலே இராவணன் முடியும்படியாக (- (காவளந்தண்பாடியாய்!;) (நீயே களைகண்))
பத்து முடிகள் அறுத்து வீழ்த்து, Paththu Mudigal Aruththu Veelththu - (அவனது) பத்துத் தலைகளையும் அறுத்துத் தள்ளி
ஆங்கு, Aangu - அந்த லங்கையிலே
அனையவற்கு இளையவற்கே, Anaiyavarkku Ilaiyavarkke - அப்படிப்பட்ட ராவணனுடைய தம்பியான விபீஷணனுக்கு
அரசு அளித்தருளினானே, Arasu Alitharulinane - ராஜ்யத்தைத் தந்தருளினவனே!,
சுனைகளில் கயல்கள் பாய, Sunaiyil Kayalgal Paaya - நீர்நிலைகளில் கயல்மீன்கள் அஞ்சித் துள்ளயோடும்படியாக
சுரும்பு தேன் நுகரும், Surumbu Then Nukarum - வண்டுகளானவை (ஆரவாரத்துடனே) தேனைப் பருகுமிடமான
நாங்கை, Naangkai - திருநாங்கூரில்
கனை கழல், Kanai Kazhal - ஒலிக்கின்ற வீரத்தண்டையை யுடையனாய்க் கொண்டு
1302பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித சம்ரஷணத்துக்கும் அநாஸ்ரித சம்ஹாரத்துக்கும் உறுப்பாக ஸ்ரீ பிராட்டியோடே நித்ய சம்ச்லேஷமாய் செல்லா நிற்கும் கடவுள் என்று பர தேவதை என்ற படியாய் சர்வாதிகனான நீயே சந்நிஹிதனாய் இருக்க நான் வேறு ஒருவரைத் தேடித் போகவோ) 5
பட வரவுச்சி தன்னில் பாய்ந்து பன்னடங்கள் செய்து மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே தடவரை தங்கு மாடத் தகு புகழ் நாங்கை மேய கடவுளே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-5
பதவுரை Show / Hide
படம் அரசு உச்சி தன் மேல் பாய்ந்து, Padam Arasu Uchi Than Mel Paayndhu - (விரிக்கப்பட்ட) படங்களை யுடையனான காளிய நாகத்தினுடைய முடிமீது குதித்து (- (காவளந்தண்பாடியாய்!;) (கடவுளே ஸர்வாதிகனே!) (நீயே களைகண்))
பல் நடங்கள் செய்து, Pal Nadangal Seidhu - அனேக விதங்களான நர்த்தனங்களைச் செய்தவனாயும்
மடவரல் மங்கை தன்னை, Madarval Mangai Thannai - மடமைக் குணம் வாய்ந்த பெரியபிராட்டியாரை
மார்வகத்து, Marvagathu - திருமார்பிலே
இருத்தினானே, Iruthinane - நித்யமாக வைத்துக்கொண்டவனாயுமிருக்கிற பெருமானே!,
துடவரை மாடம் தங்கு தகு புகழ் நாங்கை மேய, Thudavarai Maadam Thangu Thagu Pugazh Naangkai Maeya - பெரிய மலைகள் போன்ற மாளிகைகள் பொருந்தியதும் தகுதியான புகழையுடையதுமான திருநாங்கூரில் மேவியிருக்கின்ற
1303பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவருடைய உபாயம் ஸூ ரஷிதமாக பெற்றது ஆய்த்து ஸூ ரஷிதமான உபாயத்தை விட்டு வேறு ஒன்றைத் தேடித் போகவோ) 6
மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று பல்லரசவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய் நல்லரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய கல்லரண் காவளந்தண் பாடியே களை கண் நீயே –4-6-6
பதவுரை Show / Hide
மல்லரை மாள அட்டு, Mallarai Maala Attu - மல்லர்களை மாளும்படி பொசித்து (- (காவளந்தண்பாடியாய்!,) (நீயே களைகண்))
கஞ்சனை மலைந்து கொன்று, Kanjanai Malaindhu Konru - கம்ஸனை எதிரிட்டுச் சென்று கொன்றொழித்து,
பல் அரசு அவிந்து வீழ பாரதம் போர் முடித்தாய், Pal Arasu Avinthu Veel Bharatham Por Mudiththai - பல்லாயிரம் ராஜாக்கள் நாசமடையும்படி பாரதயுத்தத்தை நிறைவேற்றினவனே!,
நல் அரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய, Nal Aran Kaavin Neezhal Narai Kamazh Naangkai Maeya - நல்ல அரணாகப் போரும்படியான சோலைகளினுடைய நிழலிலே பரிமளம் வீசப்பெற்ற திருநாங்கூரில் பொருந்தி வாழ்கிற
கல் அரண், Kal Aran - கல்மதிளை யுடைத்தான
1304பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏதத் விரதம் மம -என்கிறபடியே இத்தை அடைய ரஷிக்கைக்காக காவல் பூண்டு இருக்கிறவனே ரஷிக்கக் கடவதாக ஏறிட்டுக் கொண்டு அசந்நிஹிதனாய் இருக்கை அன்றிக்கே ஸ்ரீ திருக் காவளம் பாடியிலே சந்நிஹிதனான நீயே எனக்கு ரஷகனாக வேணும்) 7
மூத்தவருக்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பு ஒசித்தாய் பூத்தமர் சோலை யோங்கிப் புனல் பரந்து ஒழுகு நாங்கைக் காத்தேன் காவளந்தண் பாடியாய் களை கண்நீயே –4-6-7
பதவுரை Show / Hide
முன்பு, Munbu - முன்பொருகால் (- (நாங்கை, காவளந்தண்பாடியாய்;) (நீயே களைகண்))
மூத்தவற்கு அரசு வேண்டி தூது எழுந்தருளி, Moothavarkku Arasu Vendi Thoodhu Ezhundharuli - பாண்டவர்களில் தலைவனான தருமபுத்திரனுக்கு ராஜ்யமளிக்க விரும்பித் தூது சென்றவனாய்,
மாத்து அமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஒசித்தாய், Maathu Amar Paagan Veez Madha Kari Maruppu Osiththai - மத்தகத்தின் மீது பொருந்தியிருந்த பாகனானவன் விழுந்து முடியும்படி (குவலயா பீடமென்னும்) மத யானையினுடைய தந்தங்களை முறித் (து அந்த யானையை ஒழித்)தவனே!
பூத்து அமர் சோலை ஓங்கி, Poothu Amar Solai Ongi - புஷ்பித்து (வரிசையாகப்) பொருந்தியிருக்கிற சோலைகளானவை உயர்ந்து வளர்ந்திருக்கப் பெற்றதும்
புனல் பறந்து ஒழுகும், Punal Parandhu Ozhugum - ஜலமானது (அச்சோலைகளைச் சுற்றி) வியாபித்து பாயா நிற்கப்பெற்றதுமான
காத்தனே, Kaaththanae - ரக்ஷகனே!,
1305பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தர்ச நீயமான பூக்களை உடைத்தான பொழிலாலே சூழப் பட்ட இந்த்ரன் ஏற்றின ஸ்ரீ திரு நாங்கூரிலே ஸ்வர்க்கத்தில் உண்டான வேண்டப்பாடு பூமிக்கும் உண்டாக வேணும் என்று அக் கட்டளையாலே இந்த்ரனாலே சமைக்கப் பட்டது ஸ்ரீ திரு நாங்கூர் என்று சொல்லக் கடவது அன்று அப்படி ஸ்ரீ சத்ய பாமை பிராட்டிக்கு உதவினது எல்லாருக்கும் ஒக்க உதவுகைக்காக ஸ்ரீ திருக் காவளம் பாடியிலே வந்து சந்நிஹிதனான நீயே ரஷகனாக வேணும்) 8
ஏவிளம் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று காவளம் கடிது இறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய் பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக் காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –4-6-8
பதவுரை Show / Hide
இள கன்னிக்கு ஆகி, Ila Kannikku Aagi - இளம்பெண்ணாகிய ஸத்யபாமைப் பிராட்டிக்காக (- (காவளம்பாடி மேய கண்ணனே!) (நீயே களை கண்))
ஏவு இமையவர் கோனை செற்று, Aevu Imaiyavar Konai Settru - யுத்தத்திலே தேவேந்திரனைப் பங்கப்படுத்தி
கடிது கா வளம் இறுத்து, Kadithu Kaa Valam Iruththu - சீக்கிரமாக நந்தவனத்தின் அழகை அழித்து
கற்பகம், Karppagam - கல்பவ்ருக்ஷத்தை
கொண்டு போந்தாய், Kondhu Ponthaai - (த்வாரகையில்) கொண்டு வந்து நட்டவனே!,
பூவளம் பொழில்கள் சூழ்ந்த, Poovalam Pozhilgal Soozhntha - புஷ்பங்களின் வளம்பொருந்திய சோலைகளாலே சூழப்பட்டதாய்
புரந்தரன் செய்த, Purandharan Seitha - இந்திரனால் ஏற்படுத்தப்பட்டதான
நாங்கை, Naangkai - திருநாங்கூரில்
1306பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கார்யாவஸ்தமாயும் காரணாவஸ்தமாயும் போருகிறது ஸ்ரீ ப்ரஹ்மம் ஒன்றுமே என்று வேதங்களால் பிரதிபாதிக்கப் படுபவனுமாய் ஸ்ரீ திரு நாங்கூரிலே-சர்வ கந்த -என்கிற வஸ்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் என்று தோற்றும்படி இருக்கும் ஆய்த்து இப்படி நிரதிசய போக்யனான நீயே ரஷகனாக வேணும்) 9
சந்தமாய்ச் சமயமாகிச் சமய வைம்பூதமாகி அந்தமா யாதியாகி யருமறை யவையும் ஆனாய் மந்தமார் பொழில்கள் தோறும் மட மயிலாலு நாங்கைக் கந்தமார் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-9
பதவுரை Show / Hide
சந்தம் ஆய், Sandham Aayi - சந்தஸ்ஸுக்கு நியாமகனாய் (- (காவளந்தன்பாடியாய்!;) (நீயே களை கண்))
சமயம் ஆகி, Samayam Aagi - அவற்றின் வ்யவஸ்தைகளுக்கும் நியாமகனாய்
சமயம் ஐ பூதம் ஆகி, Samayam Ai Poodham Aagi - வ்யவஸ்தையோடு கூடின பஞ்ச பூதங்களுக்கும் நியாமகனாய்
அந்தம் ஆய், Andham Aayi - உலக முடிவுக்கு காரணபூதனாய்
ஆதி ஆகி, Aadhi Aagi - உலக ஸ்ருஷ்டிக்கும் காரண பூதனாய்
அரு மறை அவையும் ஆனாய், Aru Marai Avaiyum Aanaai - அருமையான வேதங்களுக்கும் நிர்வாஹகனாயிருக்கும் பெருமானே!
மந்தம் ஆர் பொழில்கள் தோறும் மடம் மயில் ஆலும் நாங்கை, Mandham Aar Pozhilgal Thorum Madham Mayil Aalum Naangkai - பாரிஜாத மரங்கள் பொருந்திய சோலைகளெங்கும் அழகிய மயில்களானவை கூத்தாடாநிற்குமிடமான திருநாங்கூரில்
கந்தம் ஆர், Kandham Aar - பரிமளம் நிறைந்த
1307பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருக் காவளம் பாடியிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கிருஷ்ணனை கிருஷ்ண அவதாரம் பர தசையோடு ஒக்கச் சொல்லலாம் படி இறே இங்குத்தை சௌலப்யம் இப்பத்தையும் வல்லவர்-மோஷத்தை பலமாகச் சொல்லில் அதிகாரிகள் கிடையாது -என்று அபிமத சாதனம் என்னவே கற்பர்கள் பின்னை மோஷத்தில் கொடு போய் மூட்டுகிறோம் -என்று-ஐஸ்வர்யத்தை பலமாகச் சொல்லிற்று) 10
மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழு நாங்கைக் காவளம் பாடி மேய கண்ணனை கலியன் சொன்ன பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை அரசராகிக் கோவிள மன்னர் தாழக் குடை நிழல் பொலிவர் தாமே –4-6-10
பதவுரை Show / Hide
மா வளம் பெருகி மன்னு மறையலர் வாழும் நாங்கை, Maa Valam Perugi Mannu Maraiyalar Vaalum Naangkai - மிக்க செல்வமானது அபிவிருத்தியடைந்து பொருந்தியிருக்கிற வைதிகர்கள் வாழுமிடமான திருநாங்கூரில்
காவளம்பாடி மேய கண்ணனை, Kavalampadi Mey Kannanai - திருக்காவளம்பாடியில் எழுந்தருளியுள்ள எம்பொருமான் விஷயமாக
கலியன் சொன்ன, Kaliyan Sonna - திருமங்கையாழ்வாரருளிச் செய்த
வளம் பா பத்தும் வல்லார் தாம், Valam Paa Pathum Vallar Thaam - அழகுபொருந்திய இப்பாசுரங்கள் பத்தையும் ஓதவல்லவர்கள்
பார் மிசை அரசர் ஆகி, Paar Misai Arasar Aagi - பூமியிலே, அரசர்களாயிருந்து கொண்டு
கோ இள மனனர் தாழ, Ko Ilamana Thaa - (மற்றுள்ள) ராஜாக்களும் இளவரசர்களும் வணங்குமாறு
குடை நிழல் பொலிவர், Kudai Nizhal Polivar - ஒற்றைக்குடை நிழலில் விளங்கப்பெறுவர்
1308பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பய பிரசங்கம் இல்லாத தேசத்திலே இருக்கிற நிருபாதிக பந்துவே புறம்பு புகல் உண்டு என்று இருக்கில் அன்றோ ஆறி இருக்கலாவது-அநந்ய கதியாய் இருக்கிற என் இடரைக் களையாய் – இவ்வடிவை அனுபவிக்கையை இழக்கப் போமோ) 1
கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய் நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த் திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து வண்ணா வடியேன் இடரைக் களையாயே –4-7-1
பதவுரை Show / Hide
கண் ஆர் கடல் போல் திருமேனி கரியாய், Kan Aar Kadal Pol Thirumeni Kariyai - இடமுடைத்தான கடல்போலே திருமேனி கறுத்திருக்கப்பெற்றவனே!
நண்ணார் முனை, Nannaar Munai - சத்துருக்களுடைய யுத்தத்திலே
வென்றி கொள்வார், Vendri Kolvaar - வெற்றிபெறுமவர்களான அந்தணர்கள்
மன்னு, Mannu - வாழ்கிற
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்
திண் ஆர் மதிள் சூழ், Thin Aar Mathil Soozh - திடமான மதிளாலே சூழப்பட்ட
திருவெள்ளக்குளத்துள், Thiruvellakkulathul - திருவெள்ளக்குளமென்னுந் திருப்பதியில் எழுந்தருளியிருக்கிற
அண்ணா, Anna - அண்ணனே!
அடியேன் இடரை களையாய், Adiyen Idarai Kalaiyai - அடியேனுடைய துன்பங்களை ஒழித்தருள வேணும்
1309பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷணத்துக்கு வளையம் வைத்து இருக்கிறாயே-விச்சேதியாதே சாவதி அன்றிக்கே இருந்துள்ள புகழை உடைய பிராமணர் உடைய ஸ்ரீ திரு நாங்கூர்-அவ் ஊரில் உள்ளார் படி உனக்கு வேண்டாவோ) 2
கொந்தார் துளவ மலர் கொண்டு அணிவானே நந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச் செந்தாமரை நீர்த் திரு வெள்ளக் குளத்துள் எந்தாய் அடியேன் இடரைக் களையாயே –4-7-2
பதவுரை Show / Hide
கொந்து ஆர்  துவளம் மலர் கொண்டு அணிவானே, Kondhu Aar Thuvazham Malar Kondo Anivane - பூங்கொத்துக்கள் நிறைந்திருக்கிற திருத்துழாய் மலர்களை அணிந்துகொண்டிருக்குமன்னே!,
நந்தாத பெரு புகழ் வேதியர் நாங்கூர், Nandhaadha Peru Pugazh Vedhiyar Naangoor - ஒருநாளும் குறையாத பெரிய புகழையுடையரான வைதிகர்கள் வாழ்கிற திருநாங்கூரில்,
செந்தாமரை நீர், Senthamarai Neer - செந்தாமரைப் பூக்களையுடைய நீர்நிலைகளையுடைத்தான
திருவெள்ளக் குளத்துள், Thiruvellak Kulathul - திருவெள்ளக்குளத்தி லெழுந்தருளியிருக்கிற
எந்தாய், Endhaai - என் ஸ்வாமியே!
அடியேன் இடரை களையாய், Adiyen Idarai Kalaiyai - அடியேனுடைய துன்பங்களை ஒழித்தருளவேணும்.
1310பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மழையில் அகப்பட்ட இடையர் இடருக்கும் என் இடருக்கும் வாசி பார்த்துக் கொள்ளாய் துரியோதனன் தானும் தன்னுடைய பரிகரமுமாக தம் தாம் வசம் அன்றிக்கே வணங்கினார்கள் சேஷி முன்பு சேஷ பூதர் அனுகூலிக்கக் கடவோம் அல்லோம் -என்னும் வ்யவஸ்தை அப்படியே சென்றார் எல்லாரும் வணங்கா நின்ற திரு வெள்ளக் குளத்துள் நின்றாய் ஸ்வரூப ரூபகுணங்களால் எல்லை காண ஒண்ணாதவனே இரண்டு தலையும் ஒக்க ஆற்றாமை உண்டாகில் அன்றோ ஆறி இருப்பது) 3
குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே நன்றாய பெரும் புகழ் வேதியர் நாங்கூர் சென்றார் வணங்கும் திரு வெள்ளக் குளத்துள் நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே –4-7-3
பதவுரை Show / Hide
குளிர்மாரி குன்றால் தடுத்து, Kulirmaari Kunraal Thadhu - (திருவாய்ப்பாடியை) வவ்வலிடப்ப பண்ணின மழையைக் கோவர்த்தன மலையினால் தடைசெய்து (- (திருவெள்ளக்குளத்துள்;))
ஊகந்தானே, Oogandhaane - திருவுள்ளம் மகிழ்ந்தவனே!
நன்று ஆய பெரு புகழ் வேதியர், Nandru Aaya Peru Pugazh Vedhiyar - விலக்ஷணமான மிக்க கீர்த்தியையுடைய வைதிகர்கள் வாழ்கிற
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்
சென்றார் வணங்கும், Senraar Vanangum - வருவார் போவாரெல்லாரும் வணங்கப்பெற்ற
நின்றாய், Nindraai - நின்றருள்கின்ற
நெடியாய், Nedhiyaai - ஸர்வேச்வரனே!,
அடியேன் இடர் நீக்கு, Adiyeen Idar Neekku - அடியேனுடைய துன்பங்களைப் போக்கியருள்.
1311பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செல்ல நின்றதுவும்-வர நின்றதுவும்-ஆகர்ஷமாய் இருக்கைக்கும் கிட்டினார் குற்றம் காணாக் கண் இட்டு இருக்கும்படி யாலேயும் -ஆனாய் -என்கிறார்) 4
கானார் கரி கொம்பு ஒசித்த களிறே நா நா வகை நல்லவர் மன்னிய நாங்கூர் தேனார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆனாய் அடியேனுக்கு அருள் புரியாயே –4-7-4
பதவுரை Show / Hide
கான் ஆர் கரி கொம்பு அது ஒசித்த களிறே, Kaan Aar Kari Kombu Adhu Osiththa Kalire - காட்டிலே வளர்ந்து கொழுப்படைந்திருந்த (குவலயாபீடமென்னும்) யானையினுடைய தந்தங்களை முறித்தொழித்த யானைபோல் செருக்குற்ற பெருமானே!
நானாவகை நல்லவர், Naanavagai Nallavar - (குலம் கல்வி முதலிய) பலவகைகளினால் நன்மை பெற்றவர்கள்
மன்னிய, Manniya - பொருந்திவாழ்கிற
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்
தேன் ஆர் பொழில் சூழ், Then Aar Pozhil Soozh - தேன் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட
திருவெள்ளக் குளத்துள், Thiruvellak Kulathul - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருக்கிற
ஆனாய், Aanaai - ஆனை போன்றவனே
அடியேனுக்கு அருள்புரியாய், Adiyenukku Arulpuriyai - அடியேன் மீது கிருபை பண்ணவேணும்
1312பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமலையிலே மேவின விளக்கே-தன் ஸ்வரூப ரூப குணங்களுக்கு தானே பிரகாசன் ஆனவனே நீ எதிர் சூழல் புக்குத் திரியா நின்றால்-இறாயாதே -பார்ஸ்வத்தில் ஆம்படி -பாங்காக வருவேன்) 5
வேடார் திருவேங்கடம் மேய விளக்கே நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர் சேடார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்தாய் பாடா வருவேன் வினையாயின பாற்றே –4-7-5
பதவுரை Show / Hide
வேடு ஆர் திருவேங்கடம் மேய, Veedu Aar Thiruvaengadam Maeya - வேடர்கள் மலிந்திருக்கிற திருமலையிலே நித்யவாஸம் பண்ணுகிற
விளக்கே, Vilakke - விளக்குப்போன்றவனே!
நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர், Naadu Aar Pugazh Vedhiyar Manniya Naangoor - நாடெங்கும் நிறைந்த புகழையுடையரான வைதிகர்கள் நித்யவாஸம் பண்ணுகிற திருநாங்கூரில்,
சேடு ஆர் பொழில் சூழ், Sedu Aar Pozhil Soozh - திரண்டிருக்கின்ற சோலைகளால் சூழப்பட்ட
திருவெள்ளக் குளத்தாய், Thiruvellak Kulaththai - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருப்பவனே!,
பாடா வருவேன் வினை ஆயின பாற்று, Paadaa Varuveen Vinai Aayina Paatru - (உன்னைப்) பாடிக்கொண்டு வருகின்ற அடியேனுடைய பாவங்களென்று உள்ளவை எல்லாவற்றையும் சிதறவடிக்க வேணும்.
1313பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவித்யா கர்மா வாசனா ருசி பகவத் அபசாராதிகள் பிராரப்த கர்மம் இவை துடக்கமான எல்லா இடரும் கெடுமாறு அருளாயே) 6
கல்லால் கடலை யணை கட்டி யுகந்தாய் நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச் செல்வா திரு வெள்ளக் குளத்து உறைவானே எல்லாவிடரும் கெடுமாறு அருளாயே –4-7-6
பதவுரை Show / Hide
கல்லால் கடலை அணை கட்டி உகந்தாய், Kallal Kadalai Anai Katti Uganthaa - கண்ட கற்களையுங்கொண்டு கடலிலே சேதுகட்டி மகிழ்ந்தவனே!
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர், Nallaar Palaar Vedhiyar Manniya Naangoor - விலக்ஷணரான பல வைதிகர்கள் நித்யவாஸம் பண்ணுகிற திருநாங்கூரில்
திருவெள்ளக் குளத்து உறைவானே, Thiruvellak Kulaththu Uraivaane - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருப்பவனே!
செல்வா, Selvaa - செல்வனே!
எல்லா இடரும் கெடும் ஆறு அருளாய், Ella Idarum Kedu Aaru Arulai - (எனது) துன்பங்களெல்லாம் தீரும்படி அருள்புரிய வேணும்.
1314பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஈஸ்வரத்வ பிடாரால் அன்றிக்கே கையிலே கோலைக் கொண்டு ஜாதி உசிதமான வ்ருத்தியைச் செய்தாய் என்று இடைச் சாதியாக எழுதிக் கொடுத்து இருக்குமத்தாலே என்னை அனன்யார்ஹனாகப் பண்ணினவனே திரு வெள்ளக் குளத்திலே நிற்கிற பெரியோனே என்னால் பொறுக்க ஒண்ணாத பாபத்தை போக்கி அருளாய்) 7
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே நாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர் சேலார் வயல் சூழ் திரு வெள்ளக் குளத்துள் மாலே யென வல் வினை தீர்த்து அருளாயே –4-7-7
பதவுரை Show / Hide
கோலால் நிரை மேய்த்த, Kolaal Nirai Meyththa - கோலைக்கொண்டு பசுக்கூட்டங்களை மேய்த்த
எம்கோவலர் கோவே, Emkovalar Kove - எமது கோபால கிருஷ்ணனே!
நாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர், Naalaagiya Vediyar Manniya Naangoor - நாலு வேதங்களையும் வல்லவர்கள் நித்யவாஸம் செய்கிற திருநாங்கூரில்
சேல் ஆர் வயல் சூழ், Seyl Aar Vayal Soozh - மீன்கள் நிறைந்த கழனிகளால் சூழப்பட்ட
திருவெள்ளக்குளத்துள், Thiruvellakkulathul - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருக்கிற
மாலே, Maale - எம்பெருமானே!
என் வல்வினை தீர்த்தருளாய், En Valvinai Theertharulai - என்னுடைய கொடிய பாவங்களை போக்கியருள வேணும்.
1315பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இடையர் உனது குணங்களில் மண்டி இருக்க-பிராமணர் வேதங்களில் மண்டி இருக்க நான் சம்சாரத்தில் மக்நன் ஆகி நிற்க-அருளாய் -என்கிறார்) 8
வராக மதாகி யிம்மண்ணை யிடந்தாய் நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச் சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆராவமுதே யடியேற்கு அருளாயே –4-7-8
பதவுரை Show / Hide
வாராகம் அது ஆகி, Vaaragam Adhu Aagi - மஹாவராஹமாய்த் திருவவதரித்து (- (நாராயணனே!;) (திருவெள்ளக்குளத்துள்;))
இ மண்ணை இடந்தாய், I Mannai Idanthai - இப்பூமியை அண்டபித்தியில் நின்றும் ஒட்டுவிடுவித்தெடுத்தவனே!,
நல்ல வேதியர், Nalla Vediyar - விலக்ஷணரான வைதிகர்கள் வாழ்கிற
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்
சீர் ஆர் பொழில் சூழ், Seer Aar Pozhil Soozh - சிறந்த சோலைகள் சூழ்ந்த
ஆரா அமுதே, Aaraa Amudhe - ஒருநாளும் த்ருப்தி பிறவாத அமிருதம் போன்றவனே!
அடியேற்ரு அருளாய், Adiyerru Arulai - அடியேன்மீது கிருபை பண்ணு.
1316பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூவிலே பிறந்தவள் பூ அடிக் கொதித்து விரும்பி அணைக்கும் படி மார்வு படைத்தவனே- பரம பதத்தில் நின்றும் வந்து சம்சாரிகள் பக்கலிலே உறைகையாலே தீப்யமாநனாய் இருக்கிறவனே சம்சாரத்தில் வர்த்திக்கிறான் ஐயோ ஐயோ என்று அருள் புரியாயே) 9
பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா நாவார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்த் தேவா திரு வெள்ளக் குளத்து உறைவானே ஆவா வடியான் இவன் என்று அருளாயே –4-7-9
பதவுரை Show / Hide
பூ ஆர், Poo Aar - தாமரைப் பூவில் பொருந்திவஹிக்கிற (- (திருவெள்ளக்குளத்து உறைவானே!–;) (என்று திருவுள்ளமிரங்க வேணும்.))
திரு மா மகள், Thiru Maa Magal - பெரிய பிராட்டியார்
புல்கிய, Pulkiya - புணர்ந்த
மார்பா, Maarbaa - திருமார்பை யுடையவனே!,
நா ஆர் புகழ், Naa Aar Pugazh - (உலகத்தாருடைய) நாக்கிலே நிறைந்திருக்கிற கீர்த்தியையுடைய
வேதியர், Vediyar - வைதிகர்கள்
மன்னிய, Manniya - நித்யவாஸம் பண்ணுகிற
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்,
தேவா, Devaa - பெருமானே!,
இவன் அடியான், Ivan Adiyan - “இந்த அடியவன்
ஆ ஆ என்று அருளாய், Aa Aa Endru Arulai - ஐயோ! ஐயோ!! (ஸம்ஸாரத்தில் நோவு படுகிறானே”)
1317பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வல்லவர்கள் நித்ய சூரிகளோடு ஒரு கோவை ஆவர்கள்) 10
நல்லன்புடை வேதியர் மன்னிய நாங்கூர்ச் செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக் கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை வல்லர் யென வல்லவர் வானவர் தாமே — –4-7-10
பதவுரை Show / Hide
நுல் அன்பு உடைவேதியர் மன்னிய நாங்கூர், Nul Anbu Udaivediyar Manniya Nangoor - சிறந்த பக்தியையுடையரான வைதிகர்கள் நித்யவாஸம் பண்ணுகிற திருநாங்கூரில்
திருவெள்ளக் குளத்து உறைவான் செல்வனை, Thiruvellak Kulathu Uraivaan Selvanai - திருவெள்ளக்குள மென்னுந்திருப்பதியிலே எழுந்தருளியிருக்கிற திருமால் விஷயமாக,
கல்லின், Kallin - மலையைக் காட்டிலும்
மலி, Mali - அதிசயித்த வலிவுள்ள
தோள், Thol - புஜங்களை யுடையரான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச்செய்த
மாலை, Maala - இச் சொல்மாலையை
வல்லர் என வல்லவர் தாம், Vallar En Vallarvar Thaam - ‘இவர்கள் ஸமர்த்தர்கள்’ என்று (அனைவரும்) சொல்லும்படியாக ஓதவல்லவர்கள்
வானவர், Vaanavar - நித்யஸூரிகளோடு சோப்பெறுவர்.
வல்லரென வல்லவர், Vallarena Vallarvar - இவர் பெரிய திருமொழிப் புலவர்’ என்று பிறர் கொண்டாடும்படியாகக் கற்குமவர்கள் என்கை.
1318பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமாலிடத்து ஈடுபட்ட தலைமகளது செயல்கண்டு நற்றாய் இரங்கிக் கூறுதல் திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு-அடியேன் இடரைக் களையாய் -என்று தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தார் அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட-அது பற்றாமல்-ப்ராப்தியால் உண்டான த்வரையாலே தாமான தன்மை போய்-பிரிந்து-பிரிவாற்றாமையாலே நோவு பட்டு) 1
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க் குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும் தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும் பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே –4-8-1
பதவுரை Show / Hide
வெருவாதாள், Veruvaathal - அஞ்சாதவளாய்க் கொண்டு (- (என் பெண் பிள்ளையானவள்) (வேங்கடமே வேங்கடமே என்கின்றாள்–;))
வாய் வெருவி, Vaai Veruvi - வாய்பிதற்றுகின்றவளாய்
என்குடங்கால் மருவாள், Enkudankaal Maruvaal - எனதுமடியில் பொருந்து கின்றிலள்;
வாள் நெடு கண் துயில் மறந்தாள், Vaal Nedu Kan Thuyil Marandhaal - வாள்போன்று நீண்ட கண்களிலே உறக்கத்தை மறந்துவிட்டாள்;
வண்டு, Vandu - வண்டுபோலவும்
ஆர் கொண்டல், Aar Konda - பூர்ண மேகம்போலவும்
உரு ஆளன், Uru Aalan - திருவுருவமுடையவனும்
வானவர் தம் உயிர் ஆளன், Vaanavar Tham Uyir Aalan - நித்யஸூரிகளுக்கு உயிராயிருப்பவனும்
ஒலி திரை நீர், Oli Thirai Neer - கோஷிக்கின்ற அலைநீர்
பௌவம் கொண்ட திரு ஆளன், Pauvam Konda Thiru Alan - பொருந்திய கடலில் நின்றும் கொள்ளப்பட்ட பிராட்டியை ஆள்பவனமான எம்பெருமான்
என் மகளை செய்தனகள், En Magalai Seithanagal - எனது பெண்பிள்ளை திறத்துச்செய்தவகைகளை
நான் எங்ஙனம் சிந்திக்கேன், Naan Engganam Sindhikkeen - நான் நினைக்கத்தான் முடியுமோ?
1319பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமாலிடத்து ஈடுபட்ட தலைமகளது செயல்கண்டு நற்றாய் இரங்கிக் கூறுதல் திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு-அடியேன் இடரைக் களையாய் -என்று தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தார் அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட-அது பற்றாமல்-ப்ராப்தியால் உண்டான த்வரையாலே தாமான தன்மை போய்-பிரிந்து-பிரிவாற்றாமையாலே நோவு பட்டு) 2
கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறு அடர்த்த காளை என்றும் வஞ்சி மேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயன் என்றும் செஞ்சொல் ஆளர் நீடு நாங்கைத் தேவ தேவன் என்று ஓதி பஞ்சி யன்ன மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-2
பதவுரை Show / Hide
அகல் அல்குல் கலை ஆளா, Akal Alkul Kalai Aala - அகன்ற நிதம்பமானது வஸ்த்ரத்தை தரிக்கின்றதில்லை; (- (என் மகளை செய்தனகள் எங்ஙனம்) (நான் சிந்திக்கேன்))
கை கனம் வளையும் ஆளா, Kai Kanam Valaiyum Aala - கைகளானவை பொன் வளைகளை ஆள்கின்றனவில்லை;
நான் என் செய்கேன், Naan En Seigkeen - (இதற்கு) நான் என்ன பண்ணுவேன்?
அடியேன், Adiyean - “அடியவளாகிய என்னை
விலை ஆள் ஆ, Vilai Aal Aa - பிறர்க்கு விற்கவும் உரிய வேலைக்காரியாக (க் கொள்ள)
வேண்டுதியோ, Vendudiyoo - திருவுள்ளம் பற்றுவாயோ?
வேண்டாயோ, Vendaayo - மாட்டாயோ?”
என்னும், Ennum - என்கிறாள்;
மெய்யம் மலை ஆளன், Meyyam Malai Alan - திருமெய்யமலையை இருப்பிடமாக வுடையவனும்
வானவர் தம் தலையாளன், Vaanavar Tham Thalaiyalan - நித்யஸூரிகளுக்குத் தலைவனாயிருப்பவனும்
ஏழ் மாமரம் எய்த வென்றி சிலை ஆளன், Ezha Mamaram Eytha Vendri Silai Alan - ஸப்தஸாலவ்ருக்ஷங்களைத் துளைத்த ஜயசீலமான அம்மை உடையவனமான பெருமான்
1320பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமாலிடத்து ஈடுபட்ட தலைமகளது செயல்கண்டு நற்றாய் இரங்கிக் கூறுதல் திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு-அடியேன் இடரைக் களையாய் -என்று தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தார் அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட-அது பற்றாமல்-ப்ராப்தியால் உண்டான த்வரையாலே தாமான தன்மை போய்-பிரிந்து-பிரிவாற்றாமையாலே நோவு பட்டு) 3
அண்டர் கோன் என் ஆனை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன் என்றும் நான் மறைகள் தேடி யோடும் செல்வன் என்றும் வண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு மாயன் என்று என்று ஓதி பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-3
பதவுரை Show / Hide
மான் ஆய மென் நோக்கி, Maan Aaya Men Nookki - மானின் நோக்குப் போன்ற அழகிய நோக்கை உடையளான என் மகள், (- (அம்மனைமீர் அறிகிலேன்–.))
வாள் நெடு கண் நீர் மல்கும், Vaal Nedu Kan Neer Malkum - ஒளி பொருந்திய நீண்ட கண்கள் நீர் நிரம்பப் பெற்றிருக்கின்றாள்;
வளையும், Valaiyum - (இவளது) வளைகளும்
சோரும், Sorum - (கையில் நின்று) நழுவாநின்றன;
தேனாய, Thenaya - தேனைக்கொண்ட
நறு துழாய், Naru Thuzhai - மணம்மிக்க திருத்துழாயினாலாகிய
அலங்கலின், Alangalin - மாலையினுடைய
திறம், Thiram - பரிசுகளை
பேசி, Peshi - சொல்லிக்கொண்டு
உறங்காள், Urangaal - உறக்கமற்றிருக்கின்றாள்;
காண்மின், Kaanmin - (இந்நிலைமையைக்) கண் கொண்டுபாருங்கள்;
கான் ஆயன், Kaan Aayan - காட்டிலே திரியுமவனும்
கடி மனையீல், Kadi Manaiyil - காவலுள்ள வீடுகளிலும்
தயிர் உண்டு, Thayir Undu - தயிரை உட்கொண்டு
நெய் பருக, Ney Paruga - நெய்யைக் குடிக்கும்படியாக
நந்தன் பெற்ற, Nandhan Pettra - நந்தகோபர் பெற்ற
ஆன் ஆயன், Aan Aayan - கோபாலக்ருஷ்ணனுமான பெருமான்
என் மகளை செய்தனகள், En Magalai Seithanagal - என் பெண்பிள்ளையைப் பண்ணின படிகளை
1321பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமாலிடத்து ஈடுபட்ட தலைமகளது செயல்கண்டு நற்றாய் இரங்கிக் கூறுதல் திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு-அடியேன் இடரைக் களையாய் -என்று தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தார் அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட-அது பற்றாமல்-ப்ராப்தியால் உண்டான த்வரையாலே தாமான தன்மை போய்-பிரிந்து-பிரிவாற்றாமையாலே நோவு பட்டு) 4
கொல்லை யானாள் பரிசு அழிந்தாள் கோல் வளையார் தம் முகப்பே மல்லை முந்நீர் தட்டிலங்கை கட்டழித்த மாயன் என்றும் செல்வ மல்கு மறையோர் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி பல்வளையாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-4
பதவுரை Show / Hide
தாய் வாயில் சொல் கேளாள், Thaai Vayil Sol Kelaal - தாயாகிய என்னுடைய வாய்ச் சொல்லை (என்மகள்) கேட்பதில்லை; (- (நங்காய்!, மங்கைமீர்!-;))
தன் ஆயத்தோடு அணையாள், Than Aayaththodu Anaiyaal - தனது தோழிமார்களுடன் கூடுவதில்லை;
தட மென் கொங்கையே ஆர சாந்து அணியாள், Thada Men Kongaiye Aara Santhu Anaiyaal - பருத்து மெல்லிதான (தனது) முலைகளையும் அழகாக சந்தனத்தினால் (முன்பு போல) அலங்கரிக்கின்றாளில்லை
எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும், Emperumaan Thiru Arangam Engae Ennum - ‘என் ஸ்வாமி யெழுந்தருளியிருக்கிற திருவரங்கம் எங்கே?’ என்கிறாள்;
பேய் மாய முலை உண்டு, Pei Maaya Mulai Undu - பேய்ச்சியான பூதனை முடியும் படியாக (அவளது) முலைப் பாலைப் பருகி
இ உலகு உண்ட பெருவயிற்றன், I Ulaku Unda Peruvayitran - இவ்வுலகங்களையும் அமுது செய்த பெரிய திருவயிற்றையுடையனான
மா மாயன், Maa Maayan - மிகக் ஆச்சர்ய பூதன்
என் மகளை செய்தனகள், En Magalai Seithanagal - என் பெண்பிள்ளைக்குச் செய்தவற்றை
பேசில், Pesil - சொல்லப்புகுந்தால்
மதிக்கிலேன், Mathikkileen - அளவிட்டுச் சொல்ல மாட்டுகின்றிலேன்.
1322பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமாலிடத்து ஈடுபட்ட தலைமகளது செயல்கண்டு நற்றாய் இரங்கிக் கூறுதல் திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு-அடியேன் இடரைக் களையாய் -என்று தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தார் அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட-அது பற்றாமல்-ப்ராப்தியால் உண்டான த்வரையாலே தாமான தன்மை போய்-பிரிந்து-பிரிவாற்றாமையாலே நோவு பட்டு) 5
அரக்கராவி மாள வன்று ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை நெருக்கு மாட நீடு நாங்கை நின்மலன் என்று என்று ஓதி பரக்கு அழிந்தாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-5
பதவுரை Show / Hide
பூண் முலை மேல் சாந்து அணியாள், Poon Mulai Mel Santhu Aniyal - ஆபரணங்கள் அணிந்த முலையின்மேல் சந்தனத்தை பூசுகின்றாளில்லை; (- (என் மகளை செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேன்))
பொரு கயல் கண் மை எழுதாள், Poru Kayal Kan Mai Ezhuthal - ஒன்றோடொன்று சண்டை செய்யுமிரண்டு மீன்கள் போன்றுள்ள கண்களிலே மையிட்டுக் கொள்ளுகிறாளில்லை;
பூவை பேணாள், Poovai Penal - (தான் வளர்த்துக் கொண்டிருந்த) பூவைப் பட்சியையும் ஆதரிக்கின்றாளில்லை;
எத்தனையும் ஏண் அறியாள், Ethanaiyum Aen Ariyal - எந்த வஸ்துவையும் நெஞ்சினால் நினைக்கின்றாளில்லை;
எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும், Emperumaan Thiru Arangam Engae Ennum - ‘என் ஸ்வாமியின் திருவரங்கம் எங்கே?’ என்பதொரு வார்த்தையையே சொல்லிக் கொண்டிருக்கிறாள்;
நாள் மலராள் நாயகன் ஆய், Naal Malaraal Naayagan Aay - செவ்வித்தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டிக்கு வல்லபனானவனும்
நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி, Naam Ariya Aayppadi Valarntha Nambi - நமக்கெல்லாம் தெரியும்படியாகத் திருவாய்ப்பாடியில் வளர்ந்தவனுமான பெருமான்
ஆண் மகன் ஆய், Aan Magan Aay - பெரிய ஆண்பிள்ளையாய்க் கொண்டு
1323பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமாலிடத்து ஈடுபட்ட தலைமகளது செயல்கண்டு நற்றாய் இரங்கிக் கூறுதல் திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு-அடியேன் இடரைக் களையாய் -என்று தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தார் அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட-அது பற்றாமல்-ப்ராப்தியால் உண்டான த்வரையாலே தாமான தன்மை போய்-பிரிந்து-பிரிவாற்றாமையாலே நோவு பட்டு) 6
ஞாலம் உற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் நானிலம் சூழ் வேலை யன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து சேல் உகளும் வயல் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி பாலின் நல்ல மென் மொழியாள் பார்த்தான் பள்ளி பாடுவாளே –4-8-6
பதவுரை Show / Hide
தாது ஆடு வனமாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள், Thadu Aadu Vanamalai Thaarano Endru Endru Thalarndhaal - ‘தாதுக்கள் நிரம்பிய வனமாலையை எனக்குத் தந்தருளமாட்டானோ?’ என்று பலகால் சொல்லி சோர்வடைந்தாள்; (- (என் மகளை செய்தனகள் நான் எங்ஙனம் சொல்லுகேன்?))
யாதாலும் ஒன்று உரைக்கில், Yaathaalum Onru Uraikkil - (அவளுக்கு அடக்கமுண்டாகும்படி நாம்) ஏதாவதொரு வார்த்தை சொன்னால் (அதற்கு மறுமொழியாக)
எம்பெருமான் திரு அரங்கம் என்னும், Emperumaan Thiru Arangam Ennum - ‘எம்பெருமான் திருவரங்கம்’ என்கிற வார்த்தையொன்றே சொல்லுகின்றாள்;
பூ மேல் மாது ஆளன், Poo Mel Maathu Aalan - பூவிற்பிறந்த பிராட்டிக்கு வல்லபனும்
குடம் ஆடி, Kudam Aadi - குடக்கூத்தாடினவனும்
மதுசூதன், Madhusoodhan - மதுவென்னமசுரனைக் கொன்றவனும்
முன்னம் மன்னர்க்கு ஆய் தூது சென்ற ஆளன், Munnam Mannarkku Aay Thoodhu Senra Aalan - முன்பொருகால் பஞ்சபாண்டவர்களுக்காக தூது நடந்தவனுமான ஸ்வாமி
1324பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காலும் பாடகமும் பொருந்தின படியை அவன் பாடா இருக்குமவள் அவனூரைப் பாடா நின்றாள்) 7
நாடி என்தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான் மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு சேடுலவு பொழில் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப் பாடகம் சேர் மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-7
பதவுரை Show / Hide
வார்ஆளும் இள கொங்கை, Vaar Aalum Ila Kogai - கச்சையிட்டுக் கட்டி ஆளக்கடவதான (தனது) இள முலைகள் (- (என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் செப்புகேன்))
வண்ணம் வேறு ஆயின ஆறு எண்ணாள்;, Vannam Veeru Aayin Aaru Ennaal - நிறம் வேறுபட்ட விதத்தை நினைக்கின்றாளில்லை
எண்ணில், Ennil - ஏதேனுமொன்றை எண்ணப்புகுந்தால்
பேராளன் பேர் அல்லால் பேசாள், Peraalan Per Allal Pesal - ஸர்வேச்வரனது திருநாமங்களைத் தவிர வேறொன்றையும் பேசுகிறாளில்லை;
இ பெண் பெற்றேன் நான், I Pen Petraen Naan - இப்படிப்பட்ட பெண்ணைப் பெற்றேன் நான்
என் செய்கேன், En Seykain - என்ன பண்ணுவேன்?;
தார் ஆளன், Thaar Aalan - திருமாலை சாத்திக்கொண்டிருப்பவனும்
தண் குடந்தை நகர் ஆளன், Than Kudanthai Nagar Aalan - குளிர்ந்த திருக்குடந்தை நகரை ஆள்பவனும்
ஐவர்க்கு ஆய், Aivarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக
அமரில், Amaril - (பாரதப்) போரில்
உய்த்த தேராளன், Uytta Theralan - நடத்தப்பட்ட தேரையுடையனுமான பெருமான்
1325பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பலரும் தன்னைப் பழிக்க-அவர்களை தனக்கு கூட்டு என்று-அவனூரைப் பாடுவாள் ஆனாள் ஊரவர் கவ்வை எரு விட்டு -ஏசுவதே பாடுகைக்கு உடல்) 8
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் ஒண் சுடரோடு உம்பர் எய்தா நிலவும் ஆழிப் படையான் என்றும் நேசன் என்றும் தென் திசைக்குத் திலதம் அன்ன மறையோர் நங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப் பலரும் ஏச என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-8
பதவுரை Show / Hide
உறவு ஆதும் இவள் என்று என்று, Uravum Aadhum Ival Endru Endru - ‘தாய் தந்தையர் என்கிற உறவு முறைகளைச் சிறிதும் உடையளல்லள்’ என்று பலகால் சொல்லி (- (இப்பெண்பிள்ளையோ வென்னில்) (மாயவனே! மாதவனே! என்கின்றாள்;) (என் மகளை செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேன்))
பலர் ஒழியாது ஏசும் அலர் ஆயிற்று, Palarl Ozhiyadhu Aesum Alar Aayitru - பலபேர்கள் எப்போதும் குறைகூறும்படியான பழி விளைந்திட்டது;
மறவாதே எப்பொழுதும், Maravadhe Eppozhudhum - மறவாமல் ஸர்வகாலமும்
பிறவாத பேராளன், Piravatha Peralan - கருமங்காரணமான பிறப்பையுடையனாகாத பெருமை பொருந்தியவனும்
பெண் ஆளன், Pen Aalan - பெண் பிறந்தாரைத் தனக்காகவுடையவனும்
மண் ஆளன், Man Aalan - மண்ணுலகத்தவர்களை ஆள்பவனும்
விண்ணோர் தங்கள் அறவாளன், Vinnor Thangal Aravaalan - நித்யஸூரிகளுக்குப் பரமதார்மிகனாயிருப்பவனுமான பெருமான்
1326பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கிருஷ்ணன் என்றும் ப்ரஹ்மாதிகள் ஸ்நேஹத்தைப் பண்ணி புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும் படியாக அவர்கள் மநோ ரதத்தே நிற்கிறவன் என்றும் ஆனந்தாவஹன் என்றும்–ஜகத் காரண பூதன் என்றும் ஸ்ரீ நாங்கை யிலே வர்த்திக்கிற தேவ தேவன் என்றும் ஓதி பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே) 9
கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும் எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழு உலகுக்கு ஆதி என்றும் திண்ண மாடு நீடு நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப் பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-9
பதவுரை Show / Hide
சேல் உகளும் வயல் புடை சூழ் திருஅரங்கத்து அம்மானை, Sel Ugalum Vayal Pudai Sooz Thiruarangathu Ammanaik - மீன்கள் துள்ளி விளையாடப் பெற்ற கழனிகளினால் சுற்றும் சூழப்பட்ட திருவரங்கத்திலுள்ள எம்பெருமானை (- (இஹலோக ஐச்வர்யங்களையநுபவித்துப் பின்பு))
சிந்தை செய்த, Sindhai Seitha - தியானித்துக் கொண்டிருக்கின்ற
நீலம் மலர் கண்மடவான் நிறை அழிவை, Neelam Malar Kanmadavaan Nirai Azivai - கருநெய்தல் போன்ற கண்களை யுடையனான பரகால நாயகியினது அடக்கம் அழிந்தமையைக் குறித்து
தாய் மொழிந்த அதனை, Thaai Mozhintha Adhanai - தாய்பேசின பாசுரமாக,
நேரார் சாலன், Neraar Saalan - பகைவர்க்கு யமன் போன்ற வரும்
வேல், Veel - வேற்படையையுடையரும்
பரகாலன், Parakalan - பரகாலனென்ற திருநாமமுடையவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை, Maala - இச் சொல்மாலையை
கற்று வல்லார் தாம், Kattru Vallar Thaam - ஓதி உணரவல்லவர்கள்,
மாலை சேர் வெண் குடை கீழ், Maalai Seer Ven Kudai Keezh - முத்துஸரங்கள் தொங்கவிடப் பெற்ற வெண்குடை நிழலில்
மன்னவர் ஆய், Mannavar Aay - அரசர்களாயிருந்துகொண்டு
போன் உலகில் வாழ்வர், Poon Ulagil Vazhvar - பரமபதத்தில் நித்யாநுபவம் பண்ணப்பெறுவர்.
1327பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராட்டி தசை வந்து ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார் ஒருத்தி வாய் வெருவ-ஒருத்தி கூப்பிட்ட எளிவரவு தீர -ஒரு நாளும் பிரிய வேண்டாதே இருக்கிற தேசத்திலே இருக்கப் பெறுவார்) 10
பாருள் நல்ல மறையோர் நாங்கைப் பார்த்தன் பள்ளி செங்கண் மாலை வார்கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம் கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார் ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே— –4-8-10
பதவுரை Show / Hide
பந்தோடு கழல் மருவாள், Pandhodu Kazhal Maruvaal - பந்தையும் கழற்காய்களையும் தொடுகிறதுமில்லை; (- (என் மகள்) (என் மகளை செய்தனகள் அம்மனைமீர்! அறிகிலேன், அந்தோ!))
பை கிளியும் பால் ஊட்டாள், Pai Kiliyum Paal Oottal - (தனது) பசுமை தங்கிய கிளிக்குப் பாலூட்டுகிறதுமில்லை;
பாவை பேணாள், Paavai Peenaal - (விளையாட்டுக் கருவியான) மரப்பாச்சியை நோக்குவதுமில்லை;
திருஅரங்கன், Thiruarangan - “ஸ்ரீரங்கநாதன்
வந்தானோ வாரானோ  என்று என்றே, Vandaano Vaaraano Endru Endrae - வந்து விட்டானோ? என்றும் வரமாட்டானோ?” என்றும் சொல்லிக்கொண்டு
வளையும் சோரும், Valaiyum Soorum - கைவளைகள் கழல நிற்கின்றாள்
சந்தோகன், Sandhogan - சாந்தோக்ய உபநிஷத்தினால் ப்ரதிபாத்யனும்
பௌழியன், Pauzhiyan - கௌஷீதகீப்ராஹ்மணத்தினால் ப்ரதிபாத்யனும்
ஐந்து அழல் ஓம்பு, Ainthu Azhai Oombu - பஞ்சாக்நிகளினால் ஆராதிக்கப் படுபவனும்
தைத்திரியன், Thaitthiriyan - தைத்திரிய உபநிஷத்தினால் பிரதிபாதிக்கப் படுபவனும்
சாமவேதி, Saamavethi - ஸாமவேதப்ரதிபாத்யனுமான பெருமான்
வந்து, Vandhu - இவ்விடம் வந்து
1328பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேஷிக்கு அதிசயத்தை பண்ணி யாய்த்து இவருக்கு ஸ்வரூப சித்தி- அத்தலைக்கு அதிசயத்தை பண்ணுகையே ஸ்வரூபமாம் படி யாய்த்து ப்ராப்தி இருப்பது – ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து சந்நிதி பண்ணின ஸ்வாமி- இவ்வஸ்து உனக்கு சேஷம் -என்னும் இம் முறையை அறிவித்தவனே இன்று இப்படி ஆறி இருக்கிற நீ-முன் தீம்பு செய்து-சம்பந்த ஞானத்தை எனக்கு பிறப்பிப்பான் என் சேஷத்வ ஞானத்தை பிறப்பித்து அருளிற்று அந்த சேஷத்வ அனுரூபமான வ்ருத்தியை என்னைக் கொண்டு அருள வேணும் – சர்வஞ்ஞன் ஆனவனுக்கும் அறிவிக்க வேண்டும்படி இருக்கிறது காணும் க்ரம ப்ராப்தி பற்றாத படியான இவருடைய சௌகுமார்யம்- என் முன்பே நாலடி இட்டு நடந்து காட்டினால்-அக்ரத ப்ரயயௌ ராம -என்கிறபடியே ஸ்ரீ பிராட்டிக்கு இட்ட விருந்து இட வேணும் காணும் இவருக்கு இப்படி நடந்தால் போன உயிர் மீளும்-உறாவின பயிரிலே ஒரு பாட்டம் மழை விழுந்தால் அது ஜீவிக்கச் சொல்ல வேணுமோ) 1
நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம் இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே எம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே — –4-9-1
பதவுரை Show / Hide
இந்தளூரிர், Indhaloorir - திருவிந்தளூரில் எழுந்தருளியிருக்கிற
எந்தாய், Endhaai - ஸ்வாமியே!.
நும்மை தொழுதோம், Nummai Thozhuthom - தேவரீரை ஆச்ரயித்தோம்;
நும் தம் பணி செய்து இருக்கும்  நும் அடியோம், Num Tham Pani Seidhu Irukkum Num Adiyom - உமக்குக் கைங்கரியம் செய்தே ஸத்தை பெற்கூடிய அடியவர்களா யிருக்கின்றோம்-;
இம்மைக்கு, Immaikku - இப்பிறவியிலே
இன்பம் பெற்றோம், Inbam Pettrom - உம்மைப் பற்றின உணர்வாகிற ஆனந்தத்ததைப் பெற்றிருக்கிறோம்;
எம்மை, Emmai - இப்படிப்பட்ட எங்கள் விஷயத்திலே
ஆ ஆ என்று அரங்கி, Aa Aa Endru Arangi - ஐயொவென்று திருவுள்ளமிரங்கி
கடது ஆ கருமம் அருளி, Kadathu Aa Karumam Aruli - சீக்கிரமாக ஏதேனுமொரு கைங்கரியத்தை நியமித்து
நம்மை ஒருகால் காட்டி நடந்தால், Nammai Orukal Kaatti Nadandhaal - தேவரீரை ஒரு தடவையாவது ஸேவை ஸாதிப்பித்து எமது கண்வட்டத்திலே உலாவினால்
நாங்கள் உய்யோமே, Naangal Uyyome - நாம் உஜ்ஜீவிக்க மாட்டோமோ?.
1329பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தர்ச நீயமான ஸ்ரமஹரமான ஸ்ரீ திரு வாலியிலே நித்ய வாஸம் பண்ணி வ்யாமோஹத்தை தெரிவித்தவனே – கள்வன் கொல் என்னும் படி கைப்பிடித்து வ்யாமோஹத்தை அறிவிப்பித்தவனே ஸ்ரீ திருவாலி யானைக் கைப்பிடித்து-ஸ்ரீ திரு நறையூர் நம்பியானை உபாய பூதனாகவும் – திரு இந்தளூரானை சேஷித்வ சம்பந்த ஞானம் அறிவிப்பிதவன் சம்பந்த ஞானத்தை பிறப்பித்த உனக்கு என்னுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை கொள்கை யாகிற இம்மாத்ரம் இத்தனையும் செய்கை பெரிய பணியோ) 2
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என் எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே –4-9-2
பதவுரை Show / Hide
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவ இனிய மைந்தா, Sindhai Thannul Neengaadhu Irundha Thiruve Maruva Iniya Maindha - நெஞ்சிலே ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரியாமலிருக்கிற செல்வமே!
மருவ இனிய மைந்தா, Maruva Iniya Maindha - அநுபவிக்க அநுபவிக்க போக்யனாயிருக்கிற நித்யயுவாவே!,
அம் தண் ஆலி மாலே, Am Than Aali Maale - அழகிய குளிர்ந்த திருவாலி நகர்ப்பெருமானே!,
சோலை மழகளிறே, Solai Mazhagalire - சோலைக்குள்ளே வளர்ந்தஒரு யானைக்குட்டி போன்றவனே!
நந்தா விளக்கின் சுடரே, Nandha Vilakkil Sudare - ஒரு நாளுமணையாதவிளக்குச் சோதிபோல் திகழுமவனே!
நறையூர் நின்ற நம்பீ, Naraiyoor Nindra Nambee - திருநறையூரில் எழுந்தருளியிருக்கிற பரிபூர்ணனே!
இந்தளுராய் என் எந்தாய், Indhaluraai En Endhaai - திருவிந்தளூரில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானே!
ஆடியேற்கு இறையும் இரங்காயே, Aadiyaerku Irain Irangaiye - அடியேன் விஷயத்தில் சிறிதும் கிருபைசெய்கிற யில்லையே!
1330பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உகவாதார் சொல்லும் பழியை பரிஹரிகைக்கும்-உகப்பார் நினைத்த வகைகள் எல்லாம் பரிமாறுகைக்கு அன்றோ திரு இந்தளூரிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறது) 3
பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த மூசி வண்டு முரலும் கன்னி முடியீர் உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும் ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே –4-9-3
பதவுரை Show / Hide
வையம் ஈர் அடியால் அளந்து, Vaiyam Eer Adiyal Alandhu - உலகங்களை இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவராயும்
வண்டு மூசி முரலும் கண்ணி முடியீர், Vandu Moosi Murallum Kanni Mudiyir - வண்டுகளானவை மொய்த்துக்கொண்டு ரீங்காரம் செய்யப்பெற்ற மாலையை திருமுடியில் அணிந்து கொண்டவராயுமிருக்கிற
இந்தளூரீர், Indhaloorir - திருவிந்தளூர் நாதரே!,
இங்கு, Ingu - இவ்வுலகில்
1331பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு அவத்யம் வரும் என்று இறே நீர் தாம் இப்படிப் படுகிறது-நாம் அத்தைப் பொறுக்கிறோம் என்ன
உமக்கு பொறுக்க ஒண்ணாததும் ஓன்று உண்டு-எங்களுக்கும் அவத்யம் என்கிறார்
நதே நுரூபே-என்னக் கடவது இறே) 4
ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காயாய்த்து அடியோர்க்குத் தேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக் காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான் வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே –4-9-4
பதவுரை Show / Hide
இங்கு ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு, Ingu Aasai Vazhuvathu Aeththum Emakku - இந்நிலத்தில் ஆசைகுன்றாமல் துதிக்கின்ற எமக்கு
இழுக்கு ஆய்த்து, Izhukku Aayththu - (இத்துதிசெய்தல்) அவத்யமாய் வந்து முடிந்தது;
தேசம் அறிய, Desam Ariya - உலகமெல்லாம் அறியும்படியாக
உமக்கே ஆளாய் திரிகின்றோமுக்கு அடியோர்க்கு, Umakke Aalai Thirikinromukku Adiyorukku - உமக்கே தொண்டராய்த் திரிகின்ற எமக்கு
1332பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு ருசி பிறந்த போதே நினைத்த படிகள் எல்லாம்
அனுபவிக்கைக்கு அன்றோ தேவரீர் திரு இந்தளூரிலே வந்து கிட்டி நிற்கிறது –
பூ அலறும் போதை செவ்விபார்த்து பறித்து கொடு வாரா நிற்பாரைப் போலே
ருசி பிறந்த போதே அடிமை கொள்ளுகைக்கு ஈடாக காலம் பார்த்து அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –
பரத்வம் நித்ய சூரிகளுக்கு அனுபாவ்யமாய் இருக்கும்
வ்யூஹம் ப்ரஹ்மாதிகள் உடைய கூக்குரல் கேட்கைக்கு ஈடாக இருக்கும்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதாரம் ஸ்ரீ தசரத ஸ்ரீ வசுதேவாதிகள் உடைய பாக்ய பலமாய் இருக்கும்
உகந்து அருளின நிலங்கள் -தங்களுக்கு ஹிதம் இன்னது என்று அறியாதே
சம்சாரம் த்யாஜ்யம் என்று அறியாதே
சர்வேஸ்வரன் பிராப்யன் என்று அறியாதே
இருக்கிற சம்சாரிகளுக்கே முகம் கொடுக்கைகாகவாய் இருக்கும் இறே
குருடருக்கு வைத்த இறையிலியில் விழித்தாருக்கு பிராப்தி இல்லை இறே
பின்னானார் வணங்கும் சோதி -என்னக் கடவது இறே) 5
தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய் எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால் தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே –4-9-5
பதவுரை Show / Hide
இந்தளூரீர், Indhaloorir - திருவிந்தளூர்ப் பெருமாளே!
நீர், Neer - தேவரீர்
தீ எம் பெருமான், Thee Em Perumaan - தேஜஸ்தத்வத்திற்கு அந்தர்யாமியான எம்பெருமானாகவும்
நீர் எம் பெருமான், Neer Em Perumaan - ஜலதத்வத்திற்கு அந்தர்யாமியான பெருமானாயும்
திசை எம்பெருமான் ஆயும் இருநிலன் எம்பெருமான் ஆகியும் நின்றால், Thisai Emperumaan Aayum Irunilan Emperumaan Aagiyum Nindraal - திசைகளுக்கு அந்தர்யாமியான பெருமானாயும் விசாலமான பூமிக்கு அந்தர்யாமியான பெருமானாயும் நின்றால்
1333பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவள் ஏகோந சேஷி யாகையாலே அவன் வரும் வரை காத்து இருக்க வேணும் உம்மை அரை ஷணமும் காணாவிடில் ஜீவிக்க மாட்டாத அடியேனையும் அவள் முன்னாகப் பற்றினார்க்கு இத்தனை வாசி உண்டு போலே காணும் சர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும்-இவருடைய பிரகிருதி மார்த்தவம் தம்மை ஆசைப் பட்டார் பருவம் அறிந்து முகம் காட்டிற்றிலர் என்னும்அவத்யத்தை பரிஹரிகைக்கு அன்றோ நீர் ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது-போந்த கார்யத்தை மறக்கிறது என்) 6
சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே –4-9-6
பதவுரை Show / Hide
சொல்லாது ஒழிய கில்லேன், Sollaadhu Ozhiyakilleen - (அடியேன் சொல்ல நினைத்ததைச்) சொல்லாதிருக்க முடியவில்லை; (- (இந்தளூரீர்!–;))
அறிந்த சொல்லில், Arindha Sollil - நான் அறிந்தவற்றைச் சொல்லத் தொடங்கினால்
(இதனைச் சொல்லுகிறேன் கேளீர்;), Idhanaich Sollugiren Kelir - இவ்வுலக நடை யெல்லாமும் தெரிந்துகொண்டிருக்கிறீர்;
அடியேனை, Adiyenai - (உம்மைப் பிரிந்து தரிக்க மாட்டாத) அடியேனை
நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர், Num Adiyaar Ellaarodum Okka Enni Irundheer - உம்முடைய மற்ற அடியவர்கள் எல்லாரோடும் ஸமமாக நினைத்திருக்கிறீர்;
நல்லார் அறிவீர், Nallaar Ariveer - நல்லவர்களையும் தெரிந்து கொண்டிருக்கிறீர்;
தீயார் அறிவீர், Theeyaar Ariveer - தீயவர்களையுந் தெரிந்து கொண்டிருக்கிறீர்;
இ உலகத்து எல்லாம் அறிவீர், I Ulakaththu Ellam Ariveer - இவ்வுலக நடையெல்லாமும் தெரிந்துகொண்டிருக்கிறீர்;
நமக்கு ஈதே அறியீர், Namakku Eedhe Ariyeer - என்னுடைய தன்மையொன்றையே அறியமாட்டாதவராயிருக்கிறீர்.
1334பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு ஒரு குற்றம் இல்லையாக வன்றோ-யஸ் சர்வஞ்ஞஸ் சர்வ வித் -இத்யாதி பிரமாணங்கள் சொல்லுகிறது நம்மை சர்வஞ்ஞன் சர்வ சக்தன் என்று பிரமாணங்கள் சொல்லா நிற்க நீர் நமக்கு ஞான சக்திகளில் வைகல்யம் சொல்லுகிறது-என் கொண்டு என்னில் அது ஒரு வ்யக்தியிலே பலிக்கக் கண்டேன் என்கிறார் பருவம் அறிந்து வந்து முகம் காட்டாமையைக் கொண்டு-சர்வஞ்ஞனை அஞனாக உப பாதித்தார் தம் தசைக்கு ஈடாக உதவாமையைக் கொண்டு சர்வ சக்தனை அசக்தனாக உபபாதிக்கிறார்) 7
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள வெம்மைப் பணி யறியா வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே காட்டீர் ஆனீர் நுந்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே –4-9-7
பதவுரை Show / Hide
நீர் பணி கொள்ள மாட்டீர் ஆனீர், Neer Pani Koll Maattheer Aanheer - தேவரீர் (எம்மிடத்தில்) கைங்கரியங்கொள்ள விரும்பாதவராயிருக்கின்றீர்; (- (இந்தளூரீர் !–;) (இதெல்லாம் கிடக்கட்டும்:))
எம்மை பணி அறியா விட்டீர், Emmai Pani Ariya Vitteer - அடியோங்களுக்கு சேஷத்வத்தை உணர்த்திவிட்டு கைவிட்டு விட்டீர்;
இதனை வேறே சொன்னோம், Idhanai Veerae Sonnom - மேற்சொல்லப்போகிற விஷயத்தை முக்கியமாக விண்ணப்பஞ் செய்கிறோம்;
நுந்தம் அடிக்கள் காட்டீர் ஆனீர், Nundham Adikkal Kaattheer Aanheer - தேவரீருடைய திருவடிகளைக் காட்டாமல் போனீர்;
காட்டில், Kaattil - காட்டியருளினால்,
இந்த நாட்டே, Indha Naatte - இந்த நாட்டிலே
வந்து, Vandhu - உம்முடைய அடிமைக்கு இசைந்துவந்து
உமக்கு தொண்டர் ஆன நாங்கள், Umakku Thondar Aan Naangal - உமக்கு அடிமைப்பட்டவர்களான நாங்கள்
உய்யோமே, Uyyoame - உஜ்ஜீவித்துப் போகமாட்டோமோ?
1335பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேதனர் உகந்ததையே நிறமாகக் கொள்ளும் ஸ்வ பாவரான-நம் பக்கல் உம்முடைய அபேஷிதம் பெற்று போகையிலே குறை உண்டோ – உம்முடைய அபேஷிதம் தன்னைச் சொல்லீர் என்ன –நீ உகந்தார் உகந்த வடிவுகளைக் கொண்டு வந்து அவர்களுக்கு காட்டிக் கொடுத்தாயே யாகிலும்-உன்னுடைய இச்சா க்ருஹீதமான அசாதாரண விக்ரஹத்தை இது காண் இருக்கும் படி -என்று கொடு வந்து எனக்குக் காட்ட வேணும் -என்கிறார்) 8
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால் பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே — –4-9-8
பதவுரை Show / Hide
வண்ணம் எண்ணுங்கால், Vannam Ennungkaal - தேவரீருடைய திருமேனி நிறத்தை ஆராயுமளவில், (- (இந்தளூரீர்!;))
முன்னை வண்ணம், Munnai Vannam - முதலதான கிருதயுகத்தில் கொண்ட நிறம்
பாலின் வண்ணம், Paalin Vannam - பாலின் நிறமான வெண்மையாயிருக்கும்;
முழுதும் நிலை நின்ற பின்னை வண்ணம், Muzhudhum Nilai Nindra Pinnai Vannam - எப்போதும் நிலைநிற்பதாயும் பிந்தின கலியுகத்திற்கொண்டதாயுமுள்ள நிறம்
கொண்டல் வண்ணம், Kondal Vannam - காளமேகத்தின் நிறமான கருமையாம்;
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி, Ponnin Vannam Maniyin Vannam Puraiyum Thirumeeni - பொன்னிறத்தையும் நிலமணி நிறத்தையு மொத்திருக்கின்ற (தேவரீருடைய திருமேனி)
இன்ன வண்ணம் என்று காட்டீர், Inna Vannam Endru Kaattheer - (கீழ்ச் சொன்ன நிறங்களுள்) இன்ன நிறமுடையதென்று தெரியக் காட்டியருளவேணும்
1336பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெஞ்சில் பிரகாசத்தை ஒழியவே நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுக்கும் வடிவை அங்கு உள்ளாரோபாதி முழுக்க காட்சி கொடுக்கைக்கு அன்றோ இங்கு வந்து நிற்கிறது) 9
எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும் வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால் சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே –4-9-9
பதவுரை Show / Hide
எந்தை தந்தை தம்மான் என்று என்று, Endhai Thandhai Thammaan Endru Endru - என் தகப்பனார் அவர் தகப்பனார் அவர் தகப்பனார் என்கிற முறைமையில் (- (இந்தளூரீர்!;))
எமர் ஏழ் அளவும், Emar Ezh Azhavum - எமது முன்னோர்கள் எழுதலை முறையாக
வந்து நின்ற, Vandhu Nindra - தேவரீருடைய கைங்கரியத்திற்கு இசைந்து வந்திருக்கின்ற
தொண்டரோர்க்கே, Thondarorkke - அடியோங்கள் விஷயத்திலேயே
வாசி வல்லீர், Vaasi Vallir - கணக்குப் பார்க்கின்றீர்;
ஆல், Aal - ஐயோ!;
சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர், Sindhai Thannul Mundi Nitrir - எமது நெஞ்சுக்குள்ளே முற்பட்டுவந்து நிற்கின்றீர்;
திருமேனி இந்த வண்ணம் என்று சிறிதும் காட்டீர், Thirumeni Indha Vannam Endru Siridum Kaatteer - திருமேனியின் நிறம் இன்னதென்று சிறிதேனும் காட்டுகின்றிலீர்
1337பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவற்றை அப்யசித்து-அந்த கர்வத்தாலே யமாதிகள் தலைமேலே அடி இட்டுத் திரியுமவர்கள் இவற்றை அப்யசிக்கும் அத்தனையே வேண்டுவது அவர்களுக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஆகவுமாம்- அந்த ஜன்மத்திலே-அந்த வ்ருத்தத்திலே-அந்த ஞானத்திலே அந்த ஜன்மாதிகளால் வரும் உத்கர்ஷம் வேண்டாதே ஸ்வத உத்கர்ஷத்தை உடையரான நித்ய சூரிககளால் சிரஸா வஹிக்கப் பெறுவர்) 10
ஏரார் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக் காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த சீரார் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து ஆராரவரே யமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே –4-9-10
பதவுரை Show / Hide
ஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில், Aer Ar Pozhil Soozh Indhalooril - அழகிய சோலைகளாலே சூழப்பட்ட
எந்தை பெருமனை, Endhai Perumanai - எம்பெருமான் விஷயமாக
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன், Kaar Ar Puravin Mangai Vendan - மேகங்கள்படித்த தோப்புகளையுடைய திருமங்கை நகர்க்குத் தலைவரான
கலியன், Kaliyan - ஆழ்வார்
ஒலி செய்த, Oli Seitha - அருளிச்செய்த
சீர் ஆர் இன் சொல் மாலை, Seer Ar In Sol Maalai - சிறந்த மதுரமான இச்சொல் மாலையை
கற்று, Kattru - ஓதி
திரிவார், Thirivaar - திரிகின்றவர்கள்
உலகத்து ஆர் ஆர், Ulagaththu Ar Ar - இவ்வுலகத்தில் எவரெவருண்டோ,
அவரே, Avarae - அவர்களே
என்றும், Endrum - எக்காலத்திலும்
அமரர்க்கு, Amararukku - நித்யஸூரிகளுக்கும்
அமரர் ஆவார், Amarar Aavaar - கௌரவிக்கத்தக்கவராவர்
1338பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரயநீய வஸ்து சந்நிஹிதமான இடம் என்று தோற்றும்படி யாய்த்து அத்தேசத்தில் போக்யதை இருப்பது எல்லாம் எங்கும் ஒக்க பக்வமாய்த்து அங்கு இருப்பது) 1
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான் பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில் காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களின் நடுவே வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென் பால் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-1
பதவுரை Show / Hide
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு, Aaychiyar Azaippa Vennai Undu - இடைச்சிகள் முறையிடும்படியாக வெண்ணெயை (த்திருடி) அமுதுசெய்தவனாயும்
ஒருகால் ஆல் இலை வளர்ந்த, Orukaal Aal Ilai Valarntha - பிரளயகாலமாகிற ஒரு ஸமயத்தில் ஆலந்தளிரில் திருக்கண் வளர்ந்தருளினவனாயும்
பேய்ச்சியை முலை உண்டு, Peychchiyai Mulai Undu - பூதனையினுடைய முலைப்பால் உண்டவனாயும்
இணை மருது இறுத்து, Inai Maruthu Iruthu - இரட்டை மருதமரங்களை முறிந்துவிழச் செய்தவனாயும்
பெரு நிலம் அளந்தவன், Peru Nilam Alandhavan - விசாலமான பூமியை (த்ரிவிக்ரமனாய்) அளந்துகொண்டவனாயுமிருக்கிற
எம்பெருமான் கோயில், Emperumaan Koyil - எம்பெருமானுடைய இருப்பிடம் (எதுவென்றால்)
காய்த்த நீள் கமுகும் கதலியும்  தெங்கும், Kaayththa Neel Kamugum Kathaliyum Thengum - காய்கள் நிறைந்து ஓங்கியிருக்கின்ற பாக்குமரங்களும் வாழைமரங்களும் தென்னை மரங்களும்
எங்கும் ஆம், Engum Aam - எல்லாவிடங்களிலும் மலிந்திருக்கிற
பொழில்களின் நடுவே, Pozhilgalin Nadhuvae - சோலைகளினிடையே
வாய்த்த நீர் பாயும், Vaayththa Neer Paayum - போதுமான ஜலம் பாயாநிற்கிற
மண்ணியின், Manniyin - மண்ணியாற்றின்
தென்பால், Thenpaal - தென்கரையிலுள்ள
திருவெள்ளியங்குடி அது, Thiruvelliyangudi Adhu - திருவெள்ளியங்குடியாகிற அத்தலமாம்.
1339பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கார் காலத்திலே நிறைந்த மேகம் போலே இருக்கிற வடிவை உடைய கிருஷ்ணன் ரஷணத்துக்கு பாங்கான இடம் -என்று திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற கோயில்) 2
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டிக் கார் நிறை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில் பூ நிரைச் செருந்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரி வண்டு மிண்டித் தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-2
பதவுரை Show / Hide
அன்று, Andru - முற்காலத்தில்
ஆ நிரை மேய்த்து, Aa Nirai Maeyththu - (கோபாலகிருஷ்ணனாய்ப் பிறந்து) பசக்கூட்டங்களை மேய்த்தவனாயும்
அலை கடல் அடைத்திட்டு, Alai Kadal Adaiththittu - அலையெறிகின்ற கடலிலே அணைகட்டி (இலங்கையிற் சென்று)
அரக்கர்தம் சிரங்களை உருட்டி, Arakkartham Sirangalai Urutti - ராக்ஷஸர்களுடைய தலைகளை அறுத்துத் தள்ளினவனாயும்
கார்நிறை மேகம் கலந்தது, Kaarnirai Megam Kalandhadhu - கார்காலத்தில் திரண்டெழுந்த மேகத்தோடொத்த
ஓர் உருவம், Oru Uruvam - விலக்ஷணமான வடிவையுடையனாயுமிருக்கிற
கண்ணனார், Kannanaar - கண்ணபிரான்
கருதிய கோயில், Karuthiya Koyil - திருவுள்ளமுவந்த திவ்ய தேசம் (எதுவென்றால்)
நிரை பூ, Nirai Poo - வரிசை வரிசையாகப் பூத்திருக்கிற
செருந்தி, Serundhi - ஸுரபுன்னை மரங்களினுடையவும்
முத்து அரும்பி, Muthu Arumbi - முத்துப்போன்ற மொக்குகள் அரும்பியிருக்கிற
புன்னை, Punnai - புன்னை மரங்களினுடையவும்
பொதும்பிடை, Podumpidai - பொந்துகளிலே
1340பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரத சாஸ்தரத்துக்கு வேண்டும் லஷணங்கள் எல்லாம் எழுதிக் கொள்ளலாம் படி பல வகைப் பட்ட ந்ருத்தங்களைப் பண்ணினவன் வந்து வர்த்திக்கிற தேசம்) 3
கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன் அலக்கழித்தவன் தன் படமிறப் பாய்ந்து பன் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில் படவரவல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய் அடை புடை தழுவி அண்ட நின்று அதிரும் திருவெள்ளியங்குடி யதுவே –4-10-3
பதவுரை Show / Hide
முன் கடு விடம் உடைய காளியன் தடத்தை கலக்கி, Mun Kadu Vidam Udaiya Kaaliyan Thadathai Kalakki - (அந்த நாகத்தை) முன்பொருகால், மிகக் கொடிதான விஷத்தையுடைத்தான காளியநாகம் கிடந்த பொய்கையைக் கலங்கச்செய்து (- (திருவெள்ளியங்குடி அதுவே))
அலக்கழித்து, Alakkazhithu - வருந்தும்படிபண்ணி
அவன் தன் படம் இற பாய்ந்து, Avan Than Padam Irapaayndhu - அக்காளியனுடைய படங்களானவை முறியும்படியாக (கடம்ப மரத்தினின்று பாய்ந்து)
பல் மணி சிந்த, Pal Mani Sindha - (படத்திலுள்ள) மணிகளெல்லாம் சிந்தும்படியாக
பல் நடம் பயின்றவன் கோயில், Pal Nadam Bayindravan Koyil - (அப்படங்களின் மீது நின்று) பலவகை நர்த்தனங்களைப் பண்ணின பெருமான் ஸந்நிதி (எதுவென்னில்)
படம் அரவு அல்குல் பாவை நல்லார்கள், Padam Aravu Alkul Paavai Nallargal - படமெடுத்த பாம்போடொத்த நிதம்பத்தையுடையரான அழகிய மாதர்கள்
பயிற்றிய நாடகத்து, Payitriya Naadakathu - பழகிய நாடகத்தினுடைய
ஒலி, Oli - ஓசையானது
அடை புடை போய் தழுவி, Adai Pudai Poi Thazhuvi - அடுத்த பக்கங்களிலெங்கும் சென்று பரவி
அண்டம் நின்று அதிரும், Andam Nindru Adhirum - ஆகாசத்திலுஞ் சென்று அதிரப்பெற்ற
1341பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்கும் படியாக அடுத்து அணியாக ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின சர்வாதிகன் வந்து சாய்ந்து அருளின கோயில்) 4
கறவை முன் காத்துக் கஞ்சனைக் காய்ந்த காள மேகத் திரு வுருவன் பறவை முன் உயர்த்துப் பாற் கடல் துயின்ற பரமனார் பள்ளி கொள் கோயில் துறை துறை தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென் பால் செறி மணி மாடக் கொடி கதிர் அணவும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-4
பதவுரை Show / Hide
முன் கறவை காத்து, Mun Karavai Kaathu - முற்காலத்தில் பசுக்களை ரக்ஷரித்தவனாயும் (- (திருவெள்ளியங்குடி அதுவே–.))
கஞ்சனை காய்ந்த, Kanjanai Kaayndha - கம்ஸனைச் சீறி முடித்தவனாயும்
காள மேகம் திருஉருவன், Kaala Megam Thiruruvan - காளமேகம் போன்ற திருமேனியை யுடையனாயும்
பறவை முன் உயர்த்து, Paravai Mun Uyarndhu - பெரிய திருவடியை முன்னே கொடியாக வெடுத்தவனாயும்
பாற்கடல் துயின்ற, Paarkadal Thuyindra - திருப்பாற் கடலிலே பள்ளி கொள்பவனாயுமிருக்கிற
பரமனார், Paramanaar - ஸர்வேச்வரன்
பள்ளி கொள் கோயில், Palli Kol Koyil - சாய்ந்தருளுமிடம் (எதுவென்றால்)
துறை துறை தோறும் பொன் மணி சிதறும், Thurai Thurai Thoram Pon Mani Sidhirum - எல்லாத் துறைகளிலும் பொன்களையும் மணிகளையும் கொழிக்கின்ற
தொகு திரை, Thogu Thirai - திருண்ட அலைகளை யுடைத்தான
மண்ணியின் தென்பால், Manniyin Thenpaal - மண்ணியாற்றின் தென்கரையிலே,
செறி மணி மாடம் கொடி கதிர் அணவும், Seri Mani Maadam Kodi Kathir Anavum - நெருங்க இழைக்கப்பட்ட மாணிக்கங்களை யுடைத்தான மாட மாளிகைகளிலுள்ள த்வஜங்கள் ஸூர்ய மண்டலத்தை ஸ்பர்சித்திருக்கப்பெற்ற
1342பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு கால் ஆஸ்ரிதன் பக்கல் வாத்சல்யத்தாலே சாரத்தியம் பண்ணி அதி ரத மகா ரதரான பீஷ்மாதிகள் தேரை விட்டு ஒடும்படியாக துடர்ந்த –செங்கண் மால் ஆஸ்ரித வாத்சல்யம் அடங்கலும் கண்ணிலே தோற்றும்படி இருப்பானாய்ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவன் வந்து வர்த்திக்கிற தேசம்) 5
பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து ஒரு கால் தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண் மால் சென்றுறை கோயில் ஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச் சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே –4-10-5
பதவுரை Show / Hide
ஒரு கால், Oru Kaal - ஒரு சமயத்தில் (- (மற்றொரு சமயத்தில்) (திருவெள்ளியங்குடி அதுவே))
பாரினை உண்டு, Paarinai Undu - உலகங்களை வயிற்றினுள்ளே அடக்கிவைத்தவனாயும்
பாரினை உமிழ்ந்து, Paarinai Umizhndu - அவ்வுலகங்களை வெளிப்படுத்தினவனாயும்
பாரதம் கையெறிந்து, Bharatham Kaiyerinthu - பாரதயுத்தத்தில் கையுமணியும் வகுத்தவனாயும்
தோரினை ஊர்ந்து, Thoorinai Oorndhu - (அர்ஜுநனுடைய) தேரை நடத்தி
தோரினை துரந்த, Thoorinai Thurandha - (எதிரிகளினுடைய) தேர்களைப் பங்கப்படுத்தினவனாயுமுள்ள
செம் கண் மால், Sem Kan Maal - புண்டரி காக்ஷன்
சென்று உறை கோயில், Sendru Urai Koyil - வந்து நித்யவாஸம் பண்ணுகிற ஸந்நிதி (எதுவென்றால்)
ஏர் நிரை, Aer Nirai - உழுகிற ஏர்களின் வரிசையையுடைய
வயலுள், Vayalul - கழனிகளிலுள்ள
வாளைகள், Vaalaihal - வாளை மீன்கள்
மறுகி, Marugi - அஞ்சி
இது எமக்கு இடம் அன்று என்று எண்ணி, Idhu Emakku Idam Andru Enni - ‘இந்த வயலானது நாம் வஸிக்கத் தக்கதன்று’ என்று நினைத்து
சீர் மலி பொய்கை, Seer Mali Poigai - அழகுமிக்க தடாகங்களிலே
சென்று அணைகின்ற, Sendru Anaikindra - சென்று சேரப்பெற்ற
1343பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கையில் வில் பிடித்த பிடியிலே முடிந்து போகிற ராஷசர் அடங்க இவன் கையில் நாம் பட்டுப் போனால் ஆகாதோ – என்னும்படி தர்ச நீயமான வில்லை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திருக் கோயில்) 6
காற்றிடைப் பூளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன கோயில் ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன வுண்டு மண்டிச் செற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி யதுவே –4-10-6
பதவுரை Show / Hide
பூளை காற்று இடை கரந்தன, Pooalai Kaatru Idai Karandhana - பூளைப்பூவானது பெருங்காற்றிலே உருமாய்ந்து ஒழிவதுபோல (- (திருவெள்ளியங்குடி அதுவே–.))
அரக்கர் கடல் சேனை அரந்தை உற, Arakkar Kadal Senai Arandhai Ura - ராக்ஷஸருடைய கடல் போன்ற சேனையானது துன்பமடையும்படியாகவும்
கூற்று இடை செல்ல, Koottu Idai Sella - யமனிடம் சென்று சேரும்படியாகவும்
கொடு கணை துரந்த, Kodu Kanai Thurandha - கொடிய அம்புகளைப் பிரயோகித்த
கோலம் வில் இராமன் தன் கோயில், Kolam Vil Iraman Than Koyil - அழகிய வில்லையுடைய இராமபிரானுடைய ஸந்நிதி (எதுவென்றால்);
ஊற்று இடை நின்ற வாழையின், Ootru Idai Nindra Vaalaiyin - நீரூற்று உள்ள நிலங்களிலே முளைத்திருக்கிற வாழை மரங்களினுடைய
ஊழ்ந்து வீழ்ந்தன கனிகள், Oozhndhu Veelndhana Kanigal - (கனியப்பழுத்து) இற்று உதிர்ந்த பழங்களை
கயல்கள், Kayalgal - கயல் மீன்கள்
மண்டி உண்டு, Mandi Undu - மேல்விழுந்து புஜித்து
சேற்றிடை உகள், Settridai Ugal - சேற்று நிலங்களிலே துள்ளி விளையாடப்பெற்ற
திகழ் வயல் சூழ், Thigazh Vayal Soozh - விளங்குகின்ற கழனிகளால் சூழப்பட்ட
1344பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சுத்த ஸ்வாபாவம் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் -என்னுதல் அன்றிக்கே-சுக்ரன் அத்தேசத்தை உபாசித்தான் என்று ஒரு பிரசித்தி உண்டு அத்தை சொல்லிற்று ஆகவுமாம் வெள்ளியார் -என்றது அவனை ஆதரித்து சொன்ன படி அன்றிக்கே –வெள்ளியார் வணங்க –வெள்ளி மலையை உடைய -ருத்ரன் வந்து ஆஸ்ரயிக்க ஸ்வப்ன லப்த்தம் தனம் யதா -என்கிறபடியே சடக்கென அவன் பாதகத்தைப் போக்கினவன்) 7
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்குத் தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில் அள்ளியம் பொழில் வாய் இருந்து வாழ் குயில்கள் அரி அரி என்று அவை அழைப்ப வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் திருவெள்ளியங்குடி யதுவே –4-10-7
பதவுரை Show / Hide
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த, Olliya Karumam Seivan Endru Unarntha - (வேண்டுவோர்க்கு வேண்டினபடி கொடுப்பதாகிற சிறந்த காரியத்தைச் செய்யக் கடவேனென்று ஸங்கல்பித்துக்கொண்ட (- (திரு வெள்ளியங்குடி அதுவே))
மாவலி, Mavali - மஹாபலியினுடைய
வேள்வியில், Velviyil - யாகத்திலே
தௌ;ளிய குறள் ஆய்புக்கு, Thau Liyak Kural Aaypukku - தெளிவுள்ள வாமந மூர்த்தியாய்க்கொண்டு பிரவேசித்து
மூ அடி கொண்டு, Moo Adi Kondo - (அந்த மாவலியிடமிருந்து) மூவடி நிலத்தை இரந்து பெற்று
திக்கு உற வளர்ந்தவன் கோயில், Thikku Ura Valarnthavan Koyil - எல்லாத் திசைகளிலும் வியாபிக்கும்படியாக வளர்ந்த பெருமான் வாழுமிடம் (எதுவென்றால்);
அள்ளி அம் பொழில் வாய், Alli Am Pozhil Vaai - தாதுகளையுடையனவாய் அழகியவான சோலைகளிலே
இருந்து வாழ், Irundhu Vazh - இருந்துகொண்டு மகிழ்கிற
குயில்கள் அவை, Kuyilgal Avai - குயில்களானவை
அரி அரி என்று அழைப்ப, Ari Ari Endru Azaippa - ‘ஹாரிர் ஹாரி:’ என்று கூவப்பெற்றதாய்,
வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான், Velliyar Vananga Virainthu Arul Seivaan - சுக்கிரன் வந்து உபாஸனை பண்ண அவனுக்கு விரைவில் அருள்செய்த பெருமானுடையதான
1345பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டி போல்வாரை ஏறிட்டுக் கொள்ளக் கடவ மடியிலே துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யனை ஏறிட்டு தன்னுடைய தாள் மேல் கிடாத்தி -என்கிற இடத்துக்கு ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யநான் கேட்டேன் என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர் பிரதி கூல்யனான ஹிரண்யனை விட்டு ஆசை உடைய என்னை அன்றோ அம்மடியிலே ஏறிட்டுக் கொள்ள அடுப்பது -என்று தம்மைப் பார்த்து அருளிச் செய்தாராக – அவனுடைய பரந்த மார்வை கிழித்துப் பொகட்ட ஆஸ்ரித வ்யாமோஹத்துக்கு அவதி இல்லாதவர் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்) 8
முடியுடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர் தம் பெருமானை அன்று அரியாய் மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில் படியிடை மாடத்து அடியிடைத் தூணில் பதித்த பன்மணி களின் ஒளியால் விடி பகல் இரவு என்று அறிவரிதாய திருவெள்ளியங்குடி யதுவே –4-10-8
பதவுரை Show / Hide
முடி உடை அமரர்க்கு, Mudi Udai Amararukku - கிரீடம் பூண்டிருக்கிற தேவர்களுக்கு (- (மாயனார் மன்னிய கோயில்–.) (திரு வெள்ளியங்குடி அதுவே–.))
இடர் செய்யும், Idar Seyyum - துன்பங்களைச் செய்து கொண்டிருந்த
அசுரர்தம் பெருமானை, Asuraratham Perumanai - இரணியாசுரனை
முன் அன்று, Mun Andru - முற்காலத்தில்
அரி ஆய் மடியிடை வைத்து மார்வைகீண்ட, Ari Aay Madiyidai Vaitthu Marvaikinda - நரசிங்கமாகி மடிமேல் வைத்துக்கொண்டு மார்பைக் கிழித்து முடித்தவனான
புடியிடை மாடத்து தூண் அடியிடையில் பதித்த, Pudiyidai Maadathu Thoon Adiyidaiyil Pathitha - பூமியிலே உண்டான மாடங்களில் (நடப்பட்டிருக்கிற) தூணடியிலே அழுத்தியுள்ள
பல் மணிகளின் ஒளியால், Pal Manigalil Oliyaal - பலவகைப்பட்ட ரத்னங்களின் ஒளியாலே
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய, Vidi Pakal Iravu Endru Arivu Aridhu Aaya - விடியற்காலமென்றும் பகற்காலமென்றும் இராக்காலமென்றும் அறியக் கூடாமலிருக்கிற
1346பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் திருவடிகளிலே அசாதாரணராய் இருப்பார் பக்கலிலே கிருபையைப் பண்ணி இவர்கள் கூக்குரல் கேட்கைக்கு அடுத்து அணித்தாக ஸ்ரீ திருப் பாற் கடல் கோயிலிலே கண் வளர்ந்து அருளினவன்) 9
குடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த அடியவர்க்கு அருளி யரவணைத் துயின்ற வாழியான் அமர்ந்து உறை கோயில் கடியுடைக் கமலம் அடியிடை மலர கரும்போடு பெரும் செந்நெல் அசைய வடிவுடை அன்னம் பெடையோடு சேரும் வயல் வெள்ளியங்குடி யதுவே –4-10-9
பதவுரை Show / Hide
அமரர், Amarar - பிரமன் முதலிய தேவர்கள் (- (ஆழியான் அமர்ந்து உறை கோயில்–) (வெள்ளியங் குடியதுவே))
குடி குடி ஆக கூடி நின்று, Kudi Kudi Aaga Koodi Nindru - குடும்பம் குடும்பமாகச் சேர்ந்திருந்து
குணங்களே பிதற்றி நின்று ஏத்த, Gunangalai Pithattri Nindru Aetha - (தனது) திருக்கல்யாண குணங்களையே சொல்லிக் கொண்டு துதிக்கப்பெற்ற
அடியவர்க்கு அருளி, Adiyavarkku Aruli - அடியார் திறத்தில் கிருபை பண்ணிக்கொண்டு
அரவு அணை துயின்ற, Aravu Anai Thuyindra - சேஷசயனத்தில் திருக்கண் வளர்ந்தருள்கின்ற
கடி உடை கமலம், Kadi Udai Kamalam - பரிமளத்தை யுடைத்தான தாமரைப் பூக்கள்
அடியிடை மலர, Adiyidai Malara - (கரும்புகளின் உடையவும் செந்நெற்பயிர்களின் உடையவும்) அடி நிலங்ககைளிலே மலரப் பெற்றதும்,
கரும்பொடு பெரு செந்நெல் அசைய, Karumpodu Peru Chennel Asaiya - கரும்புகளும் பெருத்த செந்நெற் கதிர்களும் அசைந்து கொண்டிருக்கப் பெற்றதும்
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும், Vadivu Udai Annan Pedaiyodum Serum - அழகிய வடிவையுடைய அன்னப் பறவைகள் பேடையோடு கூடப்பெற்றதுமான
வயல், Vayal - கழனிகளையுடைய
1347பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமியை இடந்து திரு எயிற்றினில் கொண்டு அந்த ஸ்ரமம் ஆறும்படியாக கடல் திரைகளில் குருந் திவலைகள் துடை குத்தி உறக்கத் ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் ஆய்த்து ஸ்ரீ திரு வெள்ளியங்குடியிலே சந்நிஹிதன் ஆனான்) 10
பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை வண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இக் குரை கடல் உலகே –4-10-10
பதவுரை Show / Hide
பண்டு முன் அன்று ஒருகால் எனம் ஆகி பார் இடந்து, Pandhu Mun Andru Orukal Enam Aagi Paar Idandhu - முன்பொருகாலத்தில் வராஹரூபியாய்த் திருவவதரித்துப் பூமியைக் குத்தியெடுத்து
எயிற்றினில் கொண்டு, Eiyirtrinil Konda - கோட்டின் மேற் கொண்டவனும்
தெண் தரை வருட பால் கடல் துயின்ற, Then Tarai Varuda Paal Kadal Thuyindra - தெளிந்த அலைகள் (திருவடிகளின் மேல்) மோதும்படி திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருள்பவனும்
திருவெள்ளியங்குடியானை, Thiruvelliyangudiyanai - திருவெள்ளியங்குடியில் திருக்கோயில் கொண்டிருப்பவனுமான எம்பெருமான் விஷயமாக,
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன், Vandu Arai Solai Mangaiyar Thalaivan - வண்டுகள் முரலும் சோலைகளை யுடைய திருமங்கை காட்டில் உள்ளவர்களுக்கு ஸ்வாமியும்
மானம் வேல், Manam Vel - பெருமை தங்கிய வேற்படையையுடையவருமான
கலியன், Kaliyan - ஆழ்வாருடைய
வாய் ஒலிகள் இவை, Vaai Oligal Ivai - ஸ்ரீஸூக்தியாகிய இத்திருமொழியை
கொண்டு, Kondhu - காலில் கொண்டு
பாடும் தவம் உடையார்கள், Paadum Thavam Udaiyargal - பாடும் பாக்கியமுடையவர்கள்,
குரை கடல் இவ்வுலகு ஆள்வர், Kurai Kadal Ivvalagu Aalvar - கோஷிக்கின்ற கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தை ஆளப்பெறுவகள்.
1348பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்ப்பாருக்கு என்றும் ஒக்க அறிய அரியதாம் படி இருக்கும் ஸ்வ பாவன் அறிகையும் அறியாது ஒழிகையும் ஆகிற இவ்வர்த்தம் கிடக்க சர்வ லோகேஸ்வரனாக சர்வருக்கும் சம்பிரதி பன்னன் விசேஷித்து என்னை அடிமை கொண்டவன்–அஸ்மத் ஸ்வாமின்) 1
அறிவது அரியான் அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான் குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம் நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாடப் பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-1
பதவுரை Show / Hide
அறிவது அரியான், Arivathu Ariyan - (ஒருவர்க்கும் தம் முயற்சியாலே) அறியக் கூடாதவனும்
அனைத்து உலகும் உடையான், Anaiththu Ulagum Udaiyan - எல்லாவுலகங்கட்கும் ஸ்வாமியானவனும்
என்னை ஆள் உடையான், Ennai Aal Udaiyan - அடியேனை அடிமை கொண்டவனும்
குறிய மாணி உரு ஆய, Kuriya Maani Uru Aaya - வாமநப்ரஹ்மசாரி வேஷங்கொண்டவனும்
கூத்தன் (அவ்வேஷத்தோடு மாவலி வேள்வியில் எழுந்தருளும் போது), Kooththan Avvaeshaththodu Maavali Velviyil Ezhundharulum Podhu - விலக்ஷணமான நடையிட்டு எழுந்தருளினவனுமான பெருமான்
மன்னி அமரும் இடம், Manni Amarum Idam - இடைவிடாது நித்யவாஸம் பண்ணுமிடமாவது;-
சுரும்பு நறிய மலர்மேல் ஆர்க்க, Surumbu Nariya Malarmel Aarkka - ‘சுரும்பு’ என்னுஞ் சாதி வண்டுகள் மணம்மிக்க புஷ்பங்களின் மீது (இருந்து கொண்டு) ரீங்காரம் செய்யப்பெற்றதும்
எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட, Ezhil Aar Manjjnai Nadam Aada - அழகுபொருந்திய மயில்கள் கூத்தாடப் பெற்றதும்
பொறி சிறை கொள் வண்டு இசை பாடும், Pori Sirai Kol Vandu Isai Paadum - வரியையும் சிறகையுமுடைய வண்டினங்கள் இசைபாடப் பெற்றதுமான
புள்ளம் பூதக்குடி, Pullam Poodhakudi - திருப்புள்ளம் பூதக்குடியென்னுந் திருப்பதியாம்.
1349பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆலவாய் உடையான் கேட்க ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று நாம் பிரசித்தமாக சொல்லிப் போருமது இறே கயல் உகளா நின்றதாகில்-புள்ளுக்குத் தேடித் போக வேண்டுகிறது என் -என்ன ஸ்ரீ பிள்ளை -அவ்விடம் அறிந்தது இல்லையோ-பிள்ளைக்கு அன்றோ தேடுகிறது நிலமிதியாலே அவை தான் தூணும் துலாமும் போலே வளர்ந்து இருக்கும் அதில் இதுக்கு சாத்மிக்கும் அவை தேடித் போகா நிற்கும்) 2
கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப் பொள்ளைக் கரைத்த போதகத்தின் துன்பம் தவிர்ந்த புனிதன் இடம் பள்ளச் செறுவில் கயல் உகள பழனக் கழனி யதனுள் போய் புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-2
பதவுரை Show / Hide
கள்ளம் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து, Kallam Kurall Aay Maavaliyai Vanchiththu - கபடமுள்ள வாமந ரூபியாகி மஹாபலியை ஏமாற்றி (- (புள்ளம் பூதங்குடி;–.))
உலகம் கைப்படுத்து, Ulagam Kaipaduthu - ஸகலலோகங்களையும் ஸ்வாதீனப்படுத்திக் கொண்டவனும்
பொள்ளை கரத்த போதகத்தின், Pollai Karathth Podhagatthin - துளைக்கையை யுடைய கஜேந்திரனது
துன்பம் தவிர்த்த, Thunbam Thavirtha - துயரத்தைப் போக்கியருளின
புனிதன், Punithan - பரம பவித்திரனுமான பெருமான் எழுந்தருளியிருக்கின்ற
இடம், Idam - இடமாவது;-
பள்ளம் செறுவில் கயல் உகள, Pallam Seruvil Kayal Ughal - தாழ்ந்திருக்கின்ற கழனிகளில் மீன்களானவை துள்ளித் துள்ளிவிளையாடா நிற்க
புள்ளு, Pullu - பக்ஷரிகளானவை
பழனம் கழனி அதனுள் போய், Pazhanam Kazhani Adhanul Poi - நீர் நிலைகளையுடைய கழனிகளினுள்ளே போய்
பிள்ளைக்கு இரை தேடும், Pillaiyikku Irai Thedum - தம் தம் குட்டிகளுக்கு உணவாகக்கூடிய சிறு மீன்களைத் தேடப்பெற்ற
1350பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராட்டி பக்கலிலும் ஆஸ்ரிதர் பக்கலிலும் ஒக்க வ்யாமோஹம் பண்ணுகிறவன் வர்த்திக்கிற தேசம்) 3
மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரந்துரந்து மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம் காவார் தெங்கின் பழம் வீழக் கயல்கள் பாயக் குருகிரியும் பூவார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-3
பதவுரை Show / Hide
மேவா அரக்கர் தென் இலங்கை வேந்தன் வீய, Meva Arakkar Then Ilankai Vendan Veeya - பகையே இயற்கையான ராக்ஷஸர்கள் நிறைந்த தென்னிலங்காபுரிக்கு அரசனான இராவணன் முடியும்படி (- (புள்ளம் பூதங்குடி –.))
சரம் துரந்த, Charam Durandha - அம்புகளைப் பிரயோகித்தவனும்
மா வாய் பிளந்து, Maa Vaai Pilanthu - குதிரை வடிவுடன் வந்த கேசியென்னு மசுரனுடைய வாயைக் கீண்டொழித்தவனும்
மல் அடர்த்து, Mal Adarthu - மல்லர்களை வென்றவனும்
மருதம் சாய்த்த, Marudham Saayththa - இரட்டை மருத மரங்களை முறித்துத் தள்ளினவனுமான
மாலது, Maaladhu - எம்பெருமானுடைய
இடம், Idam - இருப்பிடமாவது;-
கா ஆர் தெங்கின் பழம் வீழ, Kaa Aar Thengin Pazham Veela - தோட்டங்களில் நிறைந்திருக்கிற தென்னை மரங்களினின்றும் தேங்காய்கள் (இற்று) கீழே விழுந்ததனாலே
கயல்கள் பாய, Kayalgal Paaya - மீன்களானவை (அஞ்சி) துள்ளி அப்பால் ஓடப் பெற்றதும்
குருகு இரியும், Kurugu Iridum - நாரைகளானவை சிதறியோடப் பெற்றதும்
பூ ஆர் கழனி எழில் ஆரும், Poo Aar Kazhani Ezhil Aarum - தாமரை முதலிய பூக்கள் நிறைந்த கழனிகளினால் அழகு மிக்கதுமான
1351பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வன்மை மிக்கு திரண்டு இருந்துள்ள தோள்கள் இருபதையும் துணித்த மிடுக்கை உடைத்தான வில்லை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம்) 4
வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன் வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல்வில் ராமனிடம் கற்பார் புரிசை செய் குன்றம் கவினார் கூடம் மாளிகைகள் பொற்பார் மாடம் எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-4
பதவுரை Show / Hide
வெற்பால் மாரி பழுது ஆக்கி, Verpaal Maari Pazhuthu Aakki - கோவர்த்தன மலையினால் பெருமழையை (தடுத்து) வீணாக்கினவனும் (- (புள்ளம் பூதங்குடி))
விறல் வாள் அரக்கர் தலைவன் தன், Virhal Vaal Arakkar Thalaivan Than - பலிஷ்ட்டனான இராவணனுடைய
வற்பு ஆர் திரள் ஐ நான்கு தோளும் துணித்த, Varpu Aar Thiral Ai Naangu Tholum Thuniththa - திண்மை பொருந்திய திரண்ட இருபது தோள்களையும் அறுத்தொழித்த
வல் வில், Val Vil - வலிய சார்ங்கத்தையுடையவனான
இராமன் இடம், Iraman Idam - இராமபிரான் வாழுமிடமாவது;-
கற்பு ஆர் புரிசை செய் குன்றம், Karpu Aar Purisai Sei Kunram - சிறந்த தேலைப்பாடுகள் பொருந்திய திருமதிள்களாகச் செய்யப்பட்டிருக்கிற மலைகளினாலும்
கவின் ஆர் கூடம், Kavin Aar Koodam - அழகிய க்ருஹங்களினாலும்
மாளிகைகள், Maaligaihal - மாளிகைகளினாலும்
பொற்பு ஆர் மாடம், Porpu Aar Maadam - அழகிய மண்டபங்களினாலும்
எழில் ஆரும், Ezhil Aarum - சோபை பொருந்திய
1352பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவன் அறியாத தோர் இடம் தேடி வைக்கும் யாய்த்து சாந்துப் பரணியிலே தயிரை வைக்கும் யாய்த்து – ஸ்ரீ நேமி யம் கையனான ஸ்ரீ நாராயணனுக்கு ஒளிக்கப் போமோ பூசும் சாந்து என் நெஞ்சமே -என்னும்படி நெஞ்சுக்கு ஆஸ்ரயமான தம் உடம்பிலே சிநேகத்தையும் போக்யதா புத்தியையும் பண்ணினாலும் அவன் விடாதே தனக்கு ஆக்கிக் கொள்வன் என்னுமது ஸ்புரிக்க -சாந்துப் பரணியிலே -என்கிறார்) 5
மையார் தடங்கண் கருங்கூந்தல் யாய்ச்சி மறைய வைத்த தயிர் நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி யங்கை மாயனிடம் செய்யார் ஆரல் இரை கருதிச் செங்கால் நாரை சென்று அணையும் பொய்யா நாவில் மறை யாளர் புள்ளம் பூதங்குடி தானே –5-1-5
பதவுரை Show / Hide
மை ஆர் தடகண்கரு கூந்தல் ஆய்ச்சி, Mai Ar Thadakankaru Koondhal Aaychchi - மையணிந்த விசாலமான கண்களையுடையவளும் கறுத்த கூந்தலை யுடையவளுமான யசோதைப் பிராட்டி (- (புள்ளம் பூதங்குடி))
மறைய வைத்த தயிர் நெய் ஆர் பால், Marai Vaiththa Thayir Ney Ar Paal - கண் படாதபடி மறைத்து வைத்த தயிரையும் நெய்யையும் குடம் நிறைந்த பாலையும்
அமுது செய்த, Amuthu Seidha - (களவு வழியினால்) அமுது செய்த
நேமி அம் கை மாயன் இடம், Nemi Am Kai Maayan Idam - ஸுதர்சநஹஸ்தனான மாயோன் எழுந்தருளியிருக்குமிடமாவது;-
செம் கால் நாரை, Sem Kaal Naarai - சிவந்த கால்களையுடைய நாரைகள்
செய் ஆர், Sei Ar - கழனிகளில் நிறைந்திருக்கிற
ஆரல், Aaral - ஆரல் மீன்களை
இரை கருதி, Irai Karuthi - ஆஹாரமாகக் கொள்ள நினைத்து
சென்று அணையும், Sendru Anaiyum - (அங்கே) சென்று சேரப்பெற்றதும்
பொய்யா நாவில் மறை ஆளர், Poyyaa Naavil Marai Aalar - பொய்சொல்லி யறியாத நாக்கிலே வேதங்களைத் தாங்குமவரான அந்தணர் வாழப்பெற்றதுமான)
1353பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நப்பின்னை பிராட்டிக்காக கரு மாரி பாய்ந்தும் -குளத்தில் இரண்டு குச்சுகள் நடுவே குதிக்கை – அணைய வேணும் யாய்த்து வடிவு அழகு – மாறாத சினத்தை உடைத்தாய் காட்டு காட்டு என்று வருகிற இளைமையை உடைத்தான ருஷபங்கள் ஏழையும் ஊட்டியாக நெரித்த பரம பிரணயி யானவன் வர்த்திக்கிற தேசம்) 6
மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்காய் மன்னு சினத்த மழம் விடைகள் ஏழு அன்று அடர்த்த மாலதிடம் மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-6
பதவுரை Show / Hide
மின்னின் அன்ன நுண் மருங்குல், Minnin Annan Nun Marungul - மின்னலோடு ஒத்த நுட்பமான இடையை யுடையவளும் (- (புள்ளம் பூதங்குடி))
வேய் ஏய் தட தோள், Veiy Aey Thada Thol - மூங்கில் போன்று பருத்த தோள்களை யுடையவளுமான
மெல்லியற்கா, Melliyarkka - இளம்பெண்ணாகிய நப்பின்னைப் பிராட்டிக்காக
அன்று, Andru - முன்பொரு காலத்தில்
மன்னு சினந்த ஏழ் மழ விடைகள், Mannu Sinantha Ezh Mazha Vidaigal - மாறாத கோபத்தையுடைய ஏழு இளங்காளைகளை
அடர்த்த மாலது இடம், Adartha Maalathu Idam - வென்றொழித்த பெருமானுடைய இருப்பிடமாவது;
மன்னு முது நீர், Mannu Muthu Neer - ஒருநாறும் தண்ணீர் வற்றாத ஆழ்ந்த நீர்நிலைகளிலுள்ள
அரவிந்தம் மலர் மேல், Aravindham Malar Mel - தாமரைப் பூக்களிலே
வரி வண்டு இசை பாட, Vari Vandu Isai Paada - வரிவண்டுகள் இசைபாடப் பெற்றதும்,
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும், Punnai Pon Aey Thaathu Uthirkkum - புன்னை மரங்கள் பொன்னிறமான தாதுகளை உதிர்க்கப்பெற்றதுமான
1354பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரதானனான இந்த்ரன் வியாபாரம் வ்யர்த்த மாம்படி – பண்ணின உபகாரம் அறியாத பசுக்களை ரஷித்து – நாம் இவனைத் தலை அறுக்கல் ஆகாது -என்று இரங்கி தோள்களைக் கழித்து விட்டான் ஆய்த்து ருத்ரன் விட்டுப் போனதாய்த்து இவனுக்கு இரக்கத்துக்கு அடி – மாறாத இவ் வாதிக்யத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம் –பரந்த கழனியில் உண்டான எழில் மிக்கு இருந்த –புள்ளம் பூதங்குடி தானே) 7
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து சடையானோடே வடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம் குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-7
பதவுரை Show / Hide
விலங்கல் குடை ஆ கொண்டு ஏந்தி, Vilangkal Kudai A Kondu Aendhi - (கோவர்த்தன) மலையைக் குடையாகக் கொண்டு தரித்து (- (புள்ளம் பூதங்குடி))
மாரி பழுது ஆ நிரை காத்து, Maari Pazhuthu A Nirai Kaathu - மழை பழுதாம்படி செய்து பசுக்கூட்டங்களை ரக்ஷரித்தருளினவனும்
சடையான் ஓட, Sadayaan Oda - ருத்ரன் (போரில் முதுகு காட்டி) ஓடினபின்
அடல் வாணன் தட தோள், Adal Vaanan Thada Thol - செருச் செய்யவந்த பாணாஸுரனுடைய விசாலமான புஜங்களை
துணித்த தலைவன் இடம், Thuniththa Thalaivan Idam - அறுத்தெறிந்தவனுமான பெருமானுடைய இருப்பிடமாவது;–
வண்டுகள் குடி ஆ உண்ண, Vandugal Kudi A Unna - வண்டுகளானவை கூட்டங் கூட்டமாக விருந்து உண்ணும்படி
கோலம் நிலம் மட்டு உகுக்கும், Kolam Nilam Mattu Ukukkum - அழகிய நீலமலர்கள் தேனைப் பெருக்காநின்ற
புடை ஆர் கழனி எழில் ஆரும், Pudai Ar Kazhani Ezhil Aarum - நாற்புறமும் சூழ்ந்த கழனிகளினால் அழகு வாய்ந்த
1355பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராஜாக்கள் அடைய முடியும்படி – அர்ஜுனனுக்கு சாரத்தியம் பண்ணி-ஈஸ்வர அபிமானியான ருத்ரன் கையில் ப்ரஹ்மா வினுடைய சாபத்தாலே ஒரு காலும் நிறையாது இருக்கிற தலை யோட்டையைத் தன் திரு மேனியில் ஜல பிந்துவாலே நிறைத்த என் ஸ்ரீ ஸ்வாமி வர்த்திக்கிற தேசம்) 8
கறையார் நெடுவேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைந்த வெந்தை விடம் மறையால் முத்தீயை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால் பொறையால் மிக்க வந்தணர் வாழ் புள்ளம் பூதங்குடி தானே –5-1-8
பதவுரை Show / Hide
கரை ஆர் நெடு வேல் மறம் மன்னர் வீய, Karai Ar Nedu Vel Maram Mannar Veeya - ரத்தக்கறை மாறதே பொருந்தியிருக்கிற நீண்ட வேற்படையை யுடையவர்களான (துரியோதனாதி) பகை மன்னவர்கள் ஒழியும்படி (- (புள்ளம் பூதங்குடி,))
விசயன் தேர் கடவி, Vichayan Ther Kadavi - அர்ஜுநனுடைய தேரை நடத்தினவனும்,
இறையான் கையில் நிறையாத முண்டம், Iraiyaan Kaiyil Niraiyaadha Mundam - ருத்ரனுடைய கையில் ஒட்டிக்கொண்டதாய் ஒன்றாலும் நிரம்பாதிருந்த கபாலத்தை
நிறைத்த, Niraiththa - (பிச்சையிட்டு) நிறைத்தவனுமான
எந்தை, Endhai - எம்பெருமானுடைய
இடம், Idam - இருப்பிடமாவது
மறையால், Maraiyaal - வேதங்களாலும்
முத்தீ அவை வளர்க்கும் மன்னு புகழால், Muththi Avai Valarkkum Mannu Pugazhaal - நித்யாக்நிஹோத்ரம் செய்வதனாலுண்டான  நிலைநின்ற கீர்த்தியினாலும்
வண்மையால், Vanmaiyaal - ஔதார்யத்தினாலும்
பொறையால், Poraiyaal - பொறுமையினாலும்
மிக்க, Mikka - மேன்மை பெற்ற
அந்தணர், Andhanar - பிராமணர்கள்
வாழ், Vaazh - வாழப்பெற்ற
1356பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக் கேட்கைக்கு அநாதிகாரிகளாய் இருக்கவும் கூடும் -என்று திர்யக் வேஷ பரிக்ரஹம் பண்ணினான் ஆய்த்து – ஸ்ரீ சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே – அசூரர்களோடே கலந்து உரு மாய்ந்து போனத்தை பிரிக்கைக்காக நீரையும் பாலையும் பிரிக்கும் பதார்த்தத்தின் வடிவைக் கொண்டான் ஆய்த்து – பிரத்யுபகார நிரபேஷமாகவும்-உபகரித்த சுத்தியும் ஒரு சுத்தியே – சிலர் அபேஷிக்க அன்றிக்கே தன் பேறாக உபகரித்தான் ஆய்த்து) 9
துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள் அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன் இடம் மின்னு சோதி நவ மணியும் வேயின் முத்தும் சாமரையும் பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-9
பதவுரை Show / Hide
மண்ணும் விண்நாடும் தோன்றாது, Mannum Vinnadum Thondrathu - மண்ணுலகமும் விண்ணுலகமும் ஒன்றும் தெரியாதபடி
இருள் ஆய் துன்னி மூடிய நாள், Irul Aay Thunni Moodiya Naal - அந்தகாரமேயாய் நெருங்கி மூடிக்கிடந்த வளவிலே
அன்னம் ஆகி அருமறைகள் அருளிச்செய்த, Annam Aagi Arumaraigal Arulichcheytha - ஹம்ஸரூபியாய் அவதரித்து அருமையான வேதங்களை மீண்டும் வெளிப்படுத்தியருளின
அமலன், Amalan - பவித்திரனான பெருமானுடைய
இடம், Idam - இருப்பிடமாவது
மின்னு சோதி நவமணியும், Minnu Sothi Navamaniyum - விளங்குகின்ற தேஜஸ்ஸையுடைய நவரத்நங்களையும்
வேயின் முத்தும், Veyin Muthum - மூங்கில் முத்துக்களையும்
சாமரையும், Samaraiyum - சாமரங்களையும்
பொன்னும், Ponnum - பொன்களையும்
பொன்னி கொணர்ந்து அலைக்கும், Ponni Konarnthu Alaikkum - காவேரியானது தள்ளிக் கொண்டுவந்து அலையெறியப் பெற்ற  புள்ளம் பூதங்குடி
1357பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ராமோ ராமோ ராம -என்கிற படியே இரண்டு அஷரம் பிணைக்க வல்லார் எங்கும் உண்டு – ஸ்ரீ ஆழ்வாரும் ஒருவரே -என்னா நிற்கும் அத்தனை யாய்த்து – நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே யாய்த்து கொடை இருப்பது – இத் திரு மொழியை உபகரித்தவர் இறே – சொல் தான் ஈரைந்து இவை பாட-இதுக்கு மேற்பட்டது இல்லை இறே ரச்யதைக்கு- இவ்வாத்ம வஸ்துவை சோரக் கொடுக்கும் வினை நில்லாது) 10
கற்றா மறித்துக் காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற பொற்றாமரையாள் தன் கேள்வன் புள்ளம் பூதங்குடி தன் மேல் கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலிகன்றி சொல் தான் ஈரைந்து இவை பாடச் சோரா நில்லா துயர் தானே –5-1-10
பதவுரை Show / Hide
கன்று ஆ மறித்து, Kandru Aa Mariththu - கன்றுகளோடு கூடின பசுக்களை மடக்கி மேய்த்தவனும்
காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற, Kaaliyan Than Chennai Nadunga Nadam Payindra - காளிய நாகத்தின் தலையிலே (அந்த நாகம்) நடுங்கும்படி கூத்தாடினவனும்
பொன் தாமரையாள் தன் கேள்வன், Pon Thamaraiyal Than Kelvan - அழகிய தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டிக்கு வல்லபனுமான பெருமானுடைய
புள்ளம்பூதங்குடி தன் மேல், Pullampoothangudi Than Mel - திருப்புள்ளம் பூதங்குடி விஷயமாக,
கற்றார் பரவும், –, Kattrar Paravum - கற்றவர்களால் கொண்டாடப்படுபவரும்
மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும்
கார் ஆர் புயல் கை, Kaar Aar Puyal Kai - காளமேகம்போன்ற உதாரருமான
கலிகன்றி, Kalikanri - கலியனுடைய
சொல் இவை ஈர் ஐந்து பாட, Sol Ivai Eer Aindhu Paada - ஸ்ரீஸூக்தியாகிய இப்பத்துப் பாசுரங்களையும் பாடப்பெற்றால்
துயர் சோர நில்லா, Thuyar Soora Nillaa - துன்பங்கள் (இவ்வாத்மா) சோர்வு அடையும்படி தங்கியிருக்கமாட்டா
1358பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதராய் இருப்பவர் தம்மை அனுபவித்து ஆஸ்ரிதர்க்காக தாழ நிற்கும் இதுவும் ஒரு நீர்மையே என்று ஆழங்கால் படுமது ஒழிய தம்மால் அறியப் போகாது –இவன் இப்படியே தன்னை தாழ விட்டாலும் இவனைத் தாழ நினைத்து இருப்பாரைக் கிடையாதே-ராஜாதி ராஜன் என்கிற பெருமையாலும் மிக்குத் தோன்றுகிறது – சர்வ கந்த என்கிற வஸ்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசமாய் இருக்கச் செய்தேயும் அத்தை யமுக்கி இவர்கள் உடைய குழலில் பரிமளமே விஞ்சி வாரா நிற்கும் யாய்த்து) 1
தாந்தம் பெருமை அறியார் தூது வேந்தர்க்காய வேந்தரூர் போல் காந்தள் விரல மென்கலை நன் மடவார் கூந்தல் கமழும் கூடலூரே –5-2-1
பதவுரை Show / Hide
தம் பெருமை தாம் அறியார், Tham Perumai Thaam Ariyaar - தமது பெருமேன்மையைத் தாமும் அறியாதவரும்
வேந்தர்க்கு தூது ஆய வேந்தர், Vendarukku Thoodu Aaya Vendar - (பாண்டவ) மன்னர்கட்கு தூதனாய்ச் சென்றவருமான தேவாதி தேவருடைய
ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்)
காந்தன் விரல் மென் கலை நல் மடவார், Kanthan Viral Men Kalai Nal Madavaar - செங்காந்தன் மலர்போன்ற விரல்களையுடையவரும் அழகிய ஆடையணிந்தவர்களுமான நல்ல பெண்டுகளினுடைய
கூந்தல் கமழும், Koondhal Kamazhum - கூந்தல்களானவை பரிமளம் வீசப்பெற்ற
கூடலூர் –, Koodalur - திருக்கூடலூராகும்.
1359பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நப்பின்னை பிராட்டி ஒருதிக்குமேயாய் வேறு ஒரு ஆஸ்ரயத்தில் கிடவாத படியான அழகை லபித்து பெறாப் பேறு பெற்றானாய் அவன் வர்த்திக்கிற தேசம்) 2
செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை பெறும் தண் கோலம் பெற்றாரூர் போல் நறும் தண் தீன் தேனுண்ட வண்டு குறிஞ்சி பாடும் கூடலூரே –5-2-2
பதவுரை Show / Hide
செறும் திண்திமில் ஏறு, Serum Thinthimil Aeru - மேல் விழுவனவாய் திடமான முசுப்புக்களையுடையனவான ரிஷபங்கள் (- (கூடலூர்))
உடைய, Udaiya - பங்கமடைய,
பின்னை பெறு தண் கோலம், Pinnai Peru Than Kolam - நப்பின்னைப் பிராட்டியினுடைய பெறுதற்கு விரும்பத்தகுந்ததான அழகிய திருமேனியை
பெற்றார், Petrar - (ஏறுதழுவி) மணஞ் செய்து கொண்ட பெருமானுடைய
ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்)
நறு தண் தீம் தேன் உண்ட வண்டு, Naru Than Theem Then Unda Vandu - மணம்மிக்கதாய் குளிர்ந்ததாய் இனிமையான தேனைப் பருகின வண்டுகள்
குறிஞ்சி பாடும், Kurinji Paadum - குறிஞ்சிப் பண்ணைப்பாடப் பெற்ற
1360பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யத்தால் அல்லது செல்லாத நீர்மையைக் காட்டி அனந்யார்ஹன் ஆக்கி விலக்காத ஓர் அவகாசம் பெற்றவாறே ஹிருதயத்திலே வந்து அவன் வர்த்திக்கிற தேசம்) 3
பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு அடியேன் உள்ளம் புகுந்த ஒருவரூர் போல் கள்ள நாரை வயலுள் கயல் மீன் கொள்ளை கொள்ளும் கூடலூரே –5-2-3
பதவுரை Show / Hide
பிள்ளை உரு ஆய், Pillai Uru Aay - (கண்ணனாகிற) சிறுபிள்ளை யாயிருந்துகொண்டு (- (கூடலூர்))
தயிர் உண்டு, Thayir Undu - தயிரை அமுதுசெய்தவனும்
அடியேன், Adiyen - அடியேனுடைய
உள்ளம், Ullam - ஹ்ருதயத்திலே
புகுந்த, Pugundha - புகந்தவனுமான
ஒருவர், Oruthar - ஒரு பெருமானுடைய
ஊர், Oor - திவ்யதேசம்,
கள்ளம் நாரை, Kallam Naarai - வஞ்ச நெஞ்சுடைய நாரைகள்
வயலுள், Vayalul - கழனிகளிலே
கயல்மீன், Kayalmeen - கயல்மீன்களை
கொள்ளை கொள்ளும், Kollai Kollum - கபளீகரிக்கப்பெற்ற
1361பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னது அல்லாதது ஒன்றை பெற்றால் போலே இருக்கிற பூமிப் பரப்படைய நீர் ஏற்று அச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட என் குல நாதன் ஆனவன் வர்த்திக்கிற தேசம்) 4
கூறு ஏர் உருவில் குறளாய் நில நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் போல் சேறு ஏர் உழவர் கோதைப் போதூண் கோல் தேன் முரலும் கூடலூரே –5-2-4
பதவுரை Show / Hide
கூறு ஏர் உருவின், Koora Aer Uruvin - கொண்டாடுவதற்குத் தகுந்த ரூபத்தையுடைய (- (கூடலூர்))
குறள் ஆய், Kural Aay - வாமநமூர்த்தியாகி
நிலம் நீரேற்றான், Nilam Neeretraan - பூமிதானம் வாங்கிக்கொண்ட
எந்தை பெருமான் ஊர், Endhai Perumaan Oor - எம்பெருமானுடைய திவ்யதேசம்;-
சேறு, Seru - சேறுகளிலே
ஏர் உழவர், Aer Uzhuvar - ஏர்கட்டி உழுகின்றவர்களது
கோதை, Kodai - மயிர்முடியிலே வைக்கப்பட்ட
போது, Podhu - பூக்களிலுள்ள தேனை
ஊண், Oon - உணவாகவுடைய
கோல் தேன், Kol Then - சோலைவண்டுகள்
முரலும், Muralum - இசைபாடப்பெற்ற
1362பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உடம்பிலே புகரைக் கண்ட மேகமானது தன் உடம்பின் மின்னாகக் கொண்டு அதுக்கு அனந்தரமான முழக்கத்தை முழங்கா நிற்கும் ஆய்த்து- நீர் விழுகிற போது இங்கே கண்டு-கார்ய காலத்தில் அங்கே கண்ட ஸ்ரீ வாமனைப் போலே யாய்த்து இவையும்) 5
தொண்டர் பரவச் சுடர் சென்று அணவ அண்டத்து அமரும் அடிகளூர் போல் வண்டல் அலையுள் கெண்டை மிளிரக் கொண்டல் அதிரும் கூடலூரே –5-2-5
பதவுரை Show / Hide
தொண்டர் பரவ, Thondar Parava - ஆச்ரிதர்கள் துதிக்கும்படியாக (- (கூடலூர்.))
சுடர் சென்று அணவ, Sudar Sendru Anava - (திருமேனி) ஸூர்ய மண்டலத்தளவும் போய் ஸ்பர்சிக்க வளர்ந்து
அண்டத்து அமரும் அடிகள், Andaththu Amarum Adigal - ஆகாசாவகாசமுள்ள இடமெல்லாம் வியாபித்த ஸ்வாமியினுடைய
ஊர், Oor - திவ்யதேசம்;
வண்டல் அலையுள், Vandal Alaiyul - வண்டல் பாய்ந்திருப்பதாய் அலைகளையுடைத்தான நீர்நிலங்களிலே
கெண்டை மிளிர, Kendai Milira - கெண்டை மீன்கள் (தமது ஒளியாலே) மின்னாநிற்க (அதைக் கண்டு)
கொண்டல் அதிரும், Kondal Athirum - மேகங்களானவை முழக்கம் செய்யப் பெற்ற
1363பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ருத்ரனை துக்கத்தைப் போக்கின ஆபத்சகன் ஆனவன் வர்த்திக்கிற ஊர்) 6
தக்கன் வேள்வித் தகர்த்த தலைவன் துக்கந்துடைத்த துணைவரூர் போல் எக்கலிடு நுண் மணல் மேல் எங்கும் கொக்கின் பழம் வீழ் கூடலூரே –5-2-6
பதவுரை Show / Hide
தக்கன் வேள்ளி தகர்த்த தலைவன், Thakkan Velli Thakarththa Thalaivan - தக்ஷப்ரஜாபதியினுடைய யாகத்தை அழித்தவனான சிவபிரானுடைய (- (கூடலூர்))
துக்கம் துடைத்த, Thukkam Thudaitha - துயரத்தைப் போக்கின
துணைவர், Thunaiyar - ஆபத்பந்துவான பெருமானுடைய
ஊர், Oor - திவ்யதேசம்;
எக்கல் இடு, Ekkal Idu - வண்டல்படிந்த
நுண் மணல் மேல் எங்கும், Nun Manal Mel Engum - நுட்பமான மணல்களுள்ளவிடமெங்கும்
கொக்கின் பழம, Kokkin Pazham - மாம்பழங்கள்
வீழ், Veizh - விழுந்திருக்கப்பெற்ற
1364பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆபத்துக்களைப் போக்கி ரஷிப்பதாக பொருந்தி வர்த்திக்கிற தேசம்) 7
கரும் தண் கடலும் மலையும் உலகும் அருந்தும் அடிகள் அமருமூர் போல் பெரும் த ண் முல்லைப் பிள்ளையோடிக் குருந்தம் தழுவும் கூடலூரே –5-2-7
பதவுரை Show / Hide
கரு தண் கடலும், Karuthu Than Kadhalum - கறுத்துக் குளிர்ந்த கடல்களையும் (- (கூடலூர்))
மலையும், Malaiyum - மலைகளையும்
உலகும், Ulagum - (மற்றும்) லோகங்களையும்
அருந்தும், Arundhum - (பிரளயத்தில்) அமுதுசெய்த
அடிகள், Adigal - ஸ்வாமி
அமரும் ஊர், Amarum Oor - நித்யவாஸம் பண்ணுமிடம்;–
பெரு தண், Peru Than - பெருத்தும் குளிர்ந்துமிருக்கிற
முல்லைப் பிள்ளை, Mullai Pilla - முல்லைக் கொடி
ஓடி, Odi - படர்ந்து
குருந்தம், Kurundham - குருந்தமரத்தை
தழுவும், Thazhuvum - தழுவியிருக்கப்பெற்ற
1365பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருநீர் மலையைத் தனக்கு வாசஸ் ஸ்தானமாகக் கொண்டு வர்த்திக்கிற என் ஸ்வாமி யானவன் அத்தேசமும் தனக்கு உண்டாய் இருக்க பொருந்தி வர்த்திக்கிற தேசம்) 8
கலை வாழ் பிணை யோடு அணையும் திரு நீர் மலை வாழ் எந்தை மருவுமூர் போல் இலை தாழ் தெங்கின் மேல் நின்று இளநீர் குலை தாழ் கிடங்கின் கூடலூரே –5-2-8
பதவுரை Show / Hide
கலை, Kalai - ஆண்மான்கள் (- (கூடலூர்))
பிணையோடு, Pinaiyodu - பெண்மான்களோடு
அணை வாழும், Anai Vazhume - சேர்ந்து வாழும்படியான
திருநீர்மலை, Thiruneermalai - திருநீர்மலையிலே
வாழ், Vaazh - வாழ்கின்ற
எந்தை, Endhai - எம்பெருமான்
மருவும், Maruvum - பொருந்திவாழப்பெற்ற
ஊர், Oor - திவ்யதேசம்;-
இலை தாழ், Ilai Thazh - மட்டைகள் தழைத்திருக்கிற
தெங்கின் மேல் நின்ற, Thengin Mel Nindra - தென்னைமரங்களின் மேலிருக்கிற
இளநீர் குலை, Ilanir Kulai - இளநீர்க் குலைகள்
தாழ், Thazh - (தம்மேல்) தாழ்ந்திருக்கப்பெற்ற
கடங்கின், Kadangin - நீர்நிலைகளையுடைய
1366பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆற்றுப் பெருக்கு போலே பெருகா நின்றுள்ள காதலை உடைய அடியேனுடைய ஹிருதயமானது உருகும்படியாகப் புகுந்த அத்விதீயனானவன் வர்த்திக்கிற தேசம்) 9
பெருகு காதல் அடியேன் உள்ளம் உருவப் புகுந்து ஒருவரூர் போல் அருகு கைதை மலரக் கெண்டை குருகு என்றும் அஞ்சும் கூடலூரே –5-2-9
பதவுரை Show / Hide
பெருகு காதல், Perugu Kaadhal - வளர்ந்துவரும் ஆசையையுடையேனான (- (கூடலூர்))
அடியேன், Adiyen - அடியேனுடைய
உள்ளம், Ullam - மனமானது
உருக, Uruga - கரையும்படியாக
புகுந்த, Pugundha - உள்ளே பிரவேசித்திருக்கிற
ஒருவர், Oruthar - விலக்ஷண புருஷனுடைய
ஊர், Oor - திவ்யதேசம்;
அருகு, Aruga - ஸமீபத்திலே
கைதை, Kaithai - தாழைகள்
மலர, Malara - மலர்ந்திருக்க (அதனைக் கண்டு)
கெண்டை, Kendai - கெண்டை மீன்கள்
குருகு என்று அஞ்சும், Kurugu Endru Anjum - (தம்மைப் பிடித்துண்ண வந்திருக்கிற) நாரைகளென்றெண்ணி அஞ்சுமிடமான
1367பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காவி போலேயும் பெரும் கடல் போலேயும் இருந்துள்ள வடிவை உடைய ஸ்ரீ கிருஷ்ணன் திரு உள்ளத்தோடு பொருந்தி உஜ்ஜ்வலனாய் வர்த்திக்கிற ஸ்ரீ திருக் கூடலூர்) 10
காவிப் பெரு நீர் வண்ணன் கண்ணன் மேவித் திகழும் கூடலூர் மேல் கோவைத் தமிழால் கலியன் சொன்ன பாவைப் பாடப் பாவம் போமே –5-2-10
பதவுரை Show / Hide
காலி பெரு நீர் வண்ணன் கண்ணன், Kaali Peru Neer Vannan Kannan - கருநெய்தற் பூப்போலவும் கடல்போலவும் நிறமுடையனான எம்பெருமான்
மேவி திகழும் கூடலூர் மேல், Mevi Thigazhum Koodalur Mel - பொருந்தி விளங்கப்பெற்ற கூடலூர் விஷயமாக
கலியன், Kaliyan - திருமங்கைமன்னன்
கோவை தமிழால் சொன்ன, Kovai Tamizhal Sonna - ஒழுங்கான தமிழினால் அருளிச் செய்த
பாவை, Paavai - இப்பாசுரங்களை
பாட, Paada - பாடவே
பாவம் போம், Paavam Pom - பாவங்கள் தொலைந்துபோம்
1368பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமிக்கு ராஜாக்களால் வரும் நலிவைப் போக்கி ரஷித்த அருமை வேணுமோ என்னுடைய பிரதிபந்தகத்தைப் போக்கி என்னை அடிமை கொள்ளுகைக்கு -என்கிறார் முன் – நீ தான் விரோதியைப் போக்கப் புக்கது இன்றோ) 1
வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னவரை மூ வெழு கால் கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே மன்றில் மாம் பொழில் நுழை தந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தித் தென்றல் மா மணம் கமழ் தரவரு திரு வெள்ளறை நின்றானே –5-3-1
பதவுரை Show / Hide
தென்றல், Thendral - தென்றல் காற்றானது
மன்றில் மாம் பொழில் நுழைதந்து, Manril Maam Pozhil Nuzhaithanthu - இடைவெளிகளிலே யுள்ள மாந்தோப்புகளிலே நுழைந்தும்
மல்லிகை போது மௌவலின் போது அலர்த்தி, Mallikai Podhu Maulavin Podhu Alarthi - மல்லிகைப் பூக்களையும் முல்லைப் பூக்களையும் மலரச்செய்தும்
மா மணம் கமழ்தர வரு, Maa Manam Kamazhdhara Varu - மிக்க பரிமளம் வீச வந்துலாவப் பெற்ற
திரு வெள்ளறை, Thiru Vellarai - திருவெள்ளறையிலே
நின்றானே, Nindraane - நின்றருளும் பெருமானே!,
முன், Mun - முன்பொருகால்
வென்றி மா மழு ஏந்தி, Vendri Maa Mazhu Aendhi - ஜயசீலமான பெரிய கோடாலிப் படையைத் தரித்து
மண் மிசை மன்னரை மூவெழுகால் கொன்ற தேவ, Man Misai Mannarai Moovezhukaal Konra Deva - பூமியிலுள்ள அரசர்களை இருபத்தொரு தலைமுறை கொலைசெய்த தேவனே!
நின் குரை கழல் தொழுவது ஓர் வகை எனக்கு அருள்புரி, Nin Kurai Kazhal Thozhuthavathu Oru Vagai Enakku Arulpuri - உன்னுடைய ஆபரண வொலிபொருந்திய திருவடிகளை வணங்கப் பெறும் ஓருபாயத்தை அடியேனுக்கு அருளவேணும்.
1369பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஓர் ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக் கேட்க என்றால் இவன் இறாய்க்கும்-என்று இவன் தன்னை தாழ விட்டு ஸ்ரீ ஹயக்ரீவனாய் நின்று யாய்த்து உபதேசித்தது –ஸ்ரீ சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே யாய்த்து – வேதம் இதிஹாசாதிகள் இவற்றை உண்டாக்கினவனே என் பக்கலிலே கிருபையை பண்ணி யருள வேணும்) 2
வசையில் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் இசைகொள் வேதநூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே உயர்கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த் திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2
பதவுரை Show / Hide
உயர்கொள் மாதவி போ தொழு உலாவிய மாருதம், Uyarkol Maathavi Po Thozhu Ulaaviya Maarudham - ஓங்கிவளர்கின்ற குருக்கத்தி மரங்களிலுள்ள புஷ்பங்களோடே அணைந்த காற்றானது (- (திரு வெள்ளறை, நின்றானே!;))
வீதியின் வாய், Veedhiyin Vaai - வீதிகள்தோறும் (வீசும்போது)
திசை எல்லாம் கமழும், Thisai Ellam Kamazhum - திக்குக்களெல்லாம் பரிமளம் பரவப்பெற்றதும்
பொழில் சூழ், Pozhil Soozh - சோலைகள் சூழ்ந்திருக்கப்பெற்றதுமான
முன், Mun - முன்பொருகால்,
வசை இல் நால் மறை கெடுத்த, Vasai Il Naal Marai Kedu - குற்றமற்ற நான்கு வேதங்களையும் போக்கடித்துக் கொண்டு வருந்திநின்ற
அ மலர் அயர்கு, A Malai Ayarku - மலாரில் தோன்றின அப்பிரமனுக்கு
அருளி, Aruli - அருள்புரிந்து
பரி முகம் ஆய், Pari Mugam Aayi - ஹயக்ரிவாவதாரமெடுத்து
இசை கொள் வேத நூல் இவை என்று, Isai Kol Veda Nool Ivai Endru - “ஸ்வரப்ரதானமான வேத சாஸ்த்ரங்கள் இவைகாண்” என்று சொல்லி
பயந்தவனே, Payandhavaney - அவற்றை அவனுக்கு உபதேசித்துத் தந்தவனே!
எனக்கு அருள்புரி, Enakku Arulpuriy - என் மீது கிருபை பண்ண வேணும்
1370பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு வாழியைக் கொண்டு கார்யம் செய்யப் பெறாத படி அவன் வரம் பெற்று இருக்கையாலே ஸ்ரீ திரு உகிரே ஆயுதமாகக் கொண்டு வ்யாபரித்தவனே – என்னுடைய விரோதியைப் போக்கி என் பக்கலிலே கிருபையைப் பண்ணி அருள வேணும்) 3
வெய்யனாய் உலகு ஏழு உடன் நலிந்தவன் உடலம் இரு பிளவாகக் கையில் நீள் உகிர் படையது வாய்த்தவனே எனக்கு அருள் புரியே மையினார் தரு வரால் இனம் பாய வண் தடத்திடைக் கமலங்கள் தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-3
பதவுரை Show / Hide
மையின் ஆர் தரு, Maiyin Ar Tharu - கருநிறத்தினால் பூர்ணமான (- (திருவெள்ளறை, நின்றானே!;))
வரால் இனம், Varal Inam - வரால் மீன்களின் திரள்
வண் தடத்திடை பாய, Van Thadathidai Paaya - அழகிய தடாகங்களிலே துள்ளி விளையாடப்பெற்றதும்,
கமலங்கள் தெய்வம் நாறும், Kamalangal Deivam Naarum - தாமரைப் பூக்கள் திவ்யமான வாஸனை வீசாநின்ற
ஒண் பொய்கைகள், On Poigaihal - அழகிய பொய்கைகளினால்
சூழ், Sool - சூழப்பட்டதுமான
வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன், Veyyan Aayi Ulaku Ezhu Udan Nalindhavan - மிகவும் க்ரூரனாயிருந்து கொண்டு ஸப்த லோகங்களையும் ஒருங்கே ஹிம்ஸித்துக்கொண்டிருந்த இரணியனுடைய
உடலகம் இரு பிளவு ஆ கையில், Udalagam Iru Pilavu Aa Kaiyil - மார்பு இரண்டு கூறாம்படி திருக்கைகளில்
நீள் உகிர் படை அது வாய்த்தவனே, Neel Ukir Padai Adhu Vaiththavaney - நீண்ட நகங்களையே ஆயுதமாகப் பெற்றவனே!
எனக்கு அருள்புரி, Enakku Arulpuriy - அடியேன் மீது க்ருபை பண்ணவேணும்
1371பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேவர் திருவடிகளில் உண்டான கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண வர்த்தியான பரம பக்தியை எனக்கு பண்ணி அருள வேணும்) 4
வாம்பரி யுக மன்னர் தம் உயிர் செக ஐவர் கட்கு அரசளித்த காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை யருள் எனக்கு மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்த தீம் பலங்கனி தேனது நுகர் திரு வெள்ளறை நின்றானே –5-3-4
பதவுரை Show / Hide
மாம்பொழில் தளிர் கோதிய மட குயில், Maampozhil Thalir Kothiya Mada Kuyil - மாந்தோப்புகளிலே அவற்றின் தளிர்களை கொத்தி உண்ட அழகிய குயில்கள் (- (திருவெள்ளறையில் நின்றானே!;))
வாய் அது துவர்ப்பு எய்த, Vaai Adhu Thuvarppu Eytha - தமது வாய் துவர்த்துப்போக (அந்த ரஸத்தை மாற்றுகைக்காக)
தீம் பலங்கனி தேன் அது நுகர், Theem Palangani Then Adhu Nukar - இனிமையான பலாப் பழங்களிலுள்ள மதுவைப் பானம் பண்ணப் பெற்ற
வாம் பரி, Vaam Pari - (பாரதப்போர்ச் சேனைகளிலே) மேல்விழுந்து வருகிற குதிரைகள்
உக மன்னர்தம் உயிர் செக, Uga Mannartham Uyir Sek - மாளும்படியாகவும் (எதிரிகளான) அரசர்களினுடைய பிராணன் அழியும்படியாகவும் செய்து
ஐவர்கட்கு அரசு அளித்த, Aivar Kadhku Arasu Alitha - பஞ்சபாண்டவர்களுக்கு ராஜ்யத்தை உபகரித்தருளிவனும்,
காம்பின் ஆர் திருவேங்கடம் பொருப்ப, Kaampin Ar Thiruvaengadam Poruppa - மூங்கில்களாலே நிறைந்த திருவேங்கடமலையில் உள்ளவனமான பெருமானே!
நின் காதலை எனக்கு அருள், Nin Kaadhalai Enakku Arul - உன் விஷயமான பரம பக்தியை அடியேனுக்குப் பிறப்பித் தருளவேணும்.
1372பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பூமிப் பிராட்டி தன் விபூதி முகத்தாலே புக்கு அழுந்த –பிரளயத்தில் அகப்பட நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத ஸ்ரீ வராஹ வேஷத்தைப் பரிக்ரஹித்து அண்ட பித்தியிலே ஒட்டின பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறினவனே – அர்த்திக்கவும் மாட்டாதே பூமியை ரஷித்த உனக்கு அர்த்தித்த என்னுடைய ரஷணம் பண்ணுகை பெரிய பணியோ) 5
மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில் ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற தேனின் வாய் மலர் முருகு குக்கும் திரு வெள்ளறை நின்றானே –5-3-5
பதவுரை Show / Hide
கரும்பு கழை ஏறி, Karumbu Kazhai Eri - கரும்பு நுனியளவும் சென்று படர்ந்து (- (திருவெள்ளறையில் நின்றானே!;))
வெண் முறுவல் செய்து அலர்கின்ற, Ven Muruvai Seidhu Alarkindra - வெண்மையான புன்சிரிப்பைச் செய்வனபோல் விகஸியா நின்ற
மா கானம் முல்லை மலர், Maa Kaanam Mullai Malar - பெரிய காட்டு முல்லைப் பூக்கள்
தேனின் வாய் முருகு உகுக்கும், Thenin Vaai Murugu Ukukkum - வண்டுகளில் வாய்களிலே தேனைப் பெருக்காநிற்கப்பெற்ற
மானம் வேல் ஒண் கண், Maanam Veel On Kan - பெருமை தங்கிய வேற்படை போன்ற அழகிய கண்களையுடையளாய்
மடவரல், Madavarl - பெண்டிர்க்குரிய குணங்களையுடையளான
மண்மகள், Manmakal - பூமிப் பிராட்டி
அழுங்க, Azhunga - (பிரளயக் கடலில்) மூழ்கிக்கிடக்க,
அன்று, Andru - அக்காலத்து,
முந்நீர், Munnir - (அந்த பிரளயக்) கடலினுடைய
பரப்பில், Parappil - மஹாஜலத்திலே
ஏனம் ஆகி, Enam Aagi - மஹாவராஹ ரூபியாக (இழிந்து)
இருநிலம் இடந்தவனே, Irunilam Idanthavane - விசாலமான பூமியை அண்டபித்தியில் நின்றும் குத்தியெடுத்து வந்தவனே!
எனக்கு அருள்புரி, Enakku Arulpuriy - அடியேன்மீது கிருபை பண்ணாய்.
1373பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மந்தரத்தை தரிக்க வல்ல ஸ்ரீ ஆமையின் வேஷத்தை பரிக்ரஹித்து அவர்களை ரஷித்து அவர்களுக்கு சத்தா ஹேது வானவனே –நின்னடிமையை யருள் எனக்கு) 6
பொங்கு நீண்முடி யமரர்கள் தொழுது எழ அமுதினைக் கொடுத்து அளிப்பான் அங்குஒர் ஆமையதாகிய வாதி நின்னடிமையை யருள் எனக்கு தங்கு பேடை யோடூடிய மதுகரம் தையலார் குழல் அணைவான் திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே –5-3-6
பதவுரை Show / Hide
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம், Thangu Pedaivodu Oodiya Mathukaram - பூவிலே தங்கியிருந்த பெண் வண்டோடு பிரணய கலஹங்கொண்ட ஆண் வண்டு (- (திருவெள்ளறை, நின்றானே!;) (அவர்களுக்கு இரங்கி))
தையலார் குழல் அணைவான், Thayalar Kuzhal Anaivaan - ஸ்த்ரிகளினுடைய கூந்தல்களைச் சென்று கிட்டி அங்கே மறைந்திருக்கைக்காக,
திங்கள் தோய் சென்னி மாடம் சென்ற அணை, Thingal Thoi Senni Maadam Senra Anai - சந்திரமண்டலத்திலே படிந்திருக்கிற சிகரங்களையுடைய மாளிகைகளை சென்று சேர்ந்திருக்கப்பெற்ற
பொங்கு, Pongu - விளங்குகின்ற
நீள் முடி, Neel Mudi - நீண்ட கிரீடத்தை யுடையரான
அமரர்கள், Amarar - தேவர்கள்
தொழுது எழ, Thozhudhu Ezha - (தன்னை) வணங்கி யாச்ரயிக்க
அமுதினை கொடுத்து அளிப்பான், Amuthinai Koduthu Alippaan - அமிருதத்தைத் தந்தருள்வதற்காக
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி, Angu Oru Aamai Adhu Aagiya Aadhi - அப்போது விலக்ஷணமான கூர்மமாகத் திருவவதரித்த காரணபூதனே!
நின் அடிமையை எனக்கு அருள், Nin Adimaiyai Enakku Arul - உனக்கு நான் அடியனாயிருக்கப் பெறுவதை எனக்கு அருளவேணும்
1374பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணன் உடைய தலை பத்தையும் சின்னம் பின்னமாய் போம்படி யாக வில்லை வளைத்தவனே – என் பக்கலில் கிருபையை பண்ணி யருள வேணும்) 7
ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம் வேறு வேறு உக வில்லது வளைத்தவனே எனக்கு அருள் புரியே மாறில் சோதிய மரகதப் பாசடைத் தாமரை மலர் வார்ந்த தேறல் மாந்தி வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-7
பதவுரை Show / Hide
மாறு இல் சோதிய, Maaru Il Sothiya - ஒப்பற்ற ஒளியை யுடையனவாய் (- (திருவெள்ளறை, நின்றானே!;))
மரதகம் பாசு அடை, Maradhagam Paasu Adai - மரதகம் போன்ற பச்சிலைகளை யுடையனவான
தாமரை, Thamarai - தாமரைகளினுடைய
மலர், Malar - பூக்களில் நின்றும்
வார்ந்த தேறல், Vaarndha Therhal - பெருகின மகரந்தத்தை
மாந்தி, Manthi - பானம் பண்ணி
வண்டு, Vandu - வண்டுகள்
இன் இசை முரல், In Isai Murali - இனிய பண்களைப் பாடா நிற்கப்பெற்ற
அரக்கன் தன், Arakkan Than - இராவணனுடைய
நெடு முடி உடை, Nedu Mudi Udai - நீண்ட கிரீடங்களை யணிந்த
ஆறினோடு ஒரு நான்கு சிரம் எல்லாம், Aarinoodu Oru Naangu Siram Ellam - பத்துத்தலைகளும் ஒன்று தப்பாமல்
வேறு வேறு உக, Veeru Veeru Uga - தனித்தனியே அற்று விழும்படி
வில் அது வளைத்தவனே, Vil Adhu Valaithavaney - சார்ங்கத்தை வளைத்து அம்பெய்த பெருமானே!,
எனக்கு அருள்புரி, Enakku Arulpuriy - என்விஷயத்தில் கிருபை பண்ணு
1375பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீரையும் பாலையும் பிரிக்க வல்ல அன்னத்தின் வடிவினைக் கொண்டு தன் படிகளை அடங்கலும் பேச வற்றை இருக்கிற வேதத்தை உண்டாக்கினவனே-என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேணும்) 8
முன் இவ் யெழ் உலகு உணர்வு இன்றி இருள் மிகு யும்பர்கள் தொழுது ஏத்த அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே எனக்கு அருள் புரியே மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள் தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-8
பதவுரை Show / Hide
மன்னு கேதகை சூதகம் என்ற இவை, Mannu Kethakai Soodhagam Endra Ivai - மாறாதே பூத்திருக்கிற தாழைகளென்ன மாமரங்களென்ன இத்யாதி வ்ருக்ஷங்களை யுடைத்தான (- (திருவெள்ளறை, நின்றானே!;) (எனக்கு அருள்புரி–.))
வனத்து இடை, Vanaththu Idai - சோலைகளின் நடுவே
சுரும்பு இனங்கள், Surumbu Inangal - ‘சுரும்பு’ என்னுஞ்சாதி வண்டுகளின் கூட்டம்
தேன்ன என்ன, Thenna Enna - ‘தென்னதென்ன’ என்றுபாட,
வண்டு, Vandu - (சாதாரண) வண்டுகளானவை
இன் இசை முரல், In Isai Murali - இனிமையான இசைப் பாட்டுக்களைப் பாடாநிற்கப்பெற்ற
முன் இ ஏழ் உலகு உணர்வு இன்றி, Mun I Ezh Ulagu Unarvu Inri - முன்பொருகால் இவ்வுலகங்களெல்லாம் அறிவு கெட்டு
இருள் மிக, Irul Mika - அஜ்ஞாநாந்தகாரம் மேலிட்ட வளவிலே
உம்பர்கள் தொழுது ஏத்த, Umbarhal Thozhudhu Aetha - தேவர்கள் வணங்கித் துதிக்க
அன்று அன்னம் ஆகி அரு மறை பயந்தவனே, Anru Annan Aagi Aru Marai Payandavaney - அப்போது ஹம்ஸரூபியாகி அருமையான வேதங்களை ஸம்பாதித்துக் கொடுத்தவனே!
1376பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஔதார்யத்துக்கு சமைந்து இருந்த படியால் தன்னை இரப்பாளனாக்கி அவனதாக்கிக் கொண்டான் ஆய்த்து – இந்த்ரன் உடைய ஆஸ்ரயணத்தோ பாதி போராதோ என்னுடைய ஆஸ்ரயணம்) 9
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும் பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர மா வேறித் தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே –5-3-9
பதவுரை Show / Hide
ஓங்கு பிண்டியின் செம்மலர், Ongu Pindiyin Semmalar - உயர்ந்து வளர்கின்ற அசோக மரத்தினுடைய சிவந்த புஷ்பங்களின் மேலே (- (திருவெள்ளறை, நின்றானே!–;))
வண்டு ஏறி உழிதர, Vandu Eri Uzithara - வண்டுகள் ஏறி ஸஞ்சரிக்க,
தீம் குயில் மா ஏறி, Theem Kuyil Maa Eri - மதுரஸ்வரம் உள்ள குயில்கள் மாமரங்களின் மேலேறிநின்று
மிழற்றும், Mizhatrum - கூவுதல் செய்யப்பெற்ற
படப்பை, Padappai - கொடித் தோட்டங்களை யுடைத்தான
மாவலி, Mavali - மஹாபலியினுடைய
வேள்வியில் சென்று இரந்து, Velviyil Sendru Irandhu - யாகபூமியில் எழுந்தருளி (மூவடிமண்) யாசித்து
ஆங்கு அகல் இடம் முழுதினையும் பாங்கினால் கொண்ட, Aangu Akal Idam Muzhudhinaiyum Pankinaal Konda - அப்போதே பூமிப் பரப்பெல்லாவற்றையும் முறைமையினால் ஸ்வாதீனப்படுத்திக்கொண்ட
பரம, Parama - புருஷோத்தமனே!
நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள்புரி, Nin Paninthu Ezhuvein Enakku Arulpuri - உன்னை வணங்கி யெழுகின்ற என் விஷயத்திலே க்ருபை பண்ணியருள்
1377பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அசந்நிஹிதனே யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து வடிவழகு – அழகு இல்லை யாகிலும் விட ஒண்ணாதது ஆய்த்து பிராப்தி – பிராப்தி இல்லை யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து போக்யதை – இப்பத்தையும் ஒன்றும் விடாதே ஏத்த வல்லவர்களை ஸ்ரீ நித்ய சூரிகள் ஸ்ரீ வைகுண்ட நாதனை விட்டு இவர்களை ஆதரியா நிற்பர்கள்) 10
மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திரு வெள்ளறை அதன் மேய அஞ்சனம் புரையும் திரு வுருவனை யாதியை யமுதத்தை நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ இரண்டும் எஞ்சலின்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசர் ஆவர்களே –5-3-10
பதவுரை Show / Hide
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ், Manju Ulaam Mani Maadangal Soozh - மேகங்கள் படிந்து உலாவப்பெற்ற நவரத்நங்கள் பதித்த மாளிகைகளினால் சூழப்பட்ட
திருவெள்ளறை அதன் மேய, Thiruvellarai Adan Meyya - திருவெள்ளறையில் நித்ய வாஸம் செய்பவனும்
அஞ்சனம் புரையும் திரு உருவனை, Anjanam Puraiyum Thiru Uruvanei - மை போன்ற திவ்யமான வடிவையுடையவனும்
ஆதியை, Aadhiye - ஸகல ஜகத்காரண பூதனும்
அமுதத்தை, Amudhatthai - அமுதம்போல் போக்யனுமான எம்பெருமானை,
நஞ்சு உலாவிய வேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும், Nanju Ulaaviya Vel Valavan Kalikanri Sol Aiy Irandum - விஷம்தங்கிய வேற்படையைச் செலுத்தவல்லவரான திருமங்கையாழ்வார் அருளிச்செய்த இப்பத்துப் பாசுரங்களைக் கொண்டு
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார், Enjal Inri Nindru Aetha Vallar - குறைவின்றி மனம் நிலைபெற்று துதிக்க வல்லவர்கள்
இமையோர்க்கு அரசு ஆவர்கள் –, Imaiyorkku Arasu Aavargal - நித்யஸூரிகளுக்கும் ஆதரிக்கத் தக்கவராவலர்கள்
1378பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ ஸ்ரஷ்டாவாய் ஆபத் சகனுமாய் இருக்கும் இருப்பைக் காட்டி என் குலத்துக்கு நாதன் ஆனவன் – அடியார்களை குழாங்களை– உடன் கூடுவது என்று கொலோ -என்று சொல்லும் ஸ்ரீ நித்ய சூரிகளும் இவ்விடத்தை விரும்பி இங்கே படுகாடு கிடப்பார்கள் ஆய்த்து) 1
உந்தி மேல் நான் முகனைப் படைத்தான் உலகுண்டவன் எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால் சந்தினொடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி அந்தி போலும் நிறத்தார் வயல் சூழ் தென்னரங்கமே –5-4-1
பதவுரை Show / Hide
சந்தினோடு மணியும் கொழிக்கும், Sandhinodu Maniyum Kozhikkum - சந்தனக்கட்டைகளையும் நவரத்னங்களையும் தள்ளிக்கொண்டு பெருகுகின்ற
புனல், Punal - தீர்த்தத்தை யுடைத்தான
காவிரி, Kaviri - திருக்காவிரி நதியாலும்
அந்தி போலும் நிறத்து ஆர் வயல், Andhi Polum Nirathu Ar Vayal - ஸந்தியாகாலம் போன்ற வர்ணத்தையுடைய கழினிகளினாலும்
சூழ், Sool - சூழப்பட்ட
தென் அரங்கம், Then Arangam - திருவரங்கமானது;–
உந்தி மேல் நான் முகனைபடைத்தான், Undhi Mel Naan Muganaipadaiththan - (தனது) திருநாபியிலே பிரமனை ஸ்ருஷ்டித்தவனும்
உலகு உண்டவன், Ulaku Undavan - (பிரளயகாலத்தில்) லோகங்களை அமுது செய்தவனும்
எந்தை பெம்மான், Endhai Pemmaan - எம் குலத்துக்கு நாதனானவனும்
இமையோர்கள் தாதைக்கு, Imaiyorkal Thathaikku - நித்யஸூரிகளுக்குத் தலைவனுமான பெருமானுக்கு
இடம், Idam - வாஸஸ்தலம்
என்பர், Enbar - என்று சொல்லுவர்கள்
1379பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடான பரப்பை உடையனாய் இருக்கிற ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிறவன் விடாதே வர்த்திக்கிற தேசம்) 2
வையம் உண்டு ஆலிலை மேல் மேவு மாயன் மணி நீண் முடிப் பை கொள் நாகத்தணையான் பயிலும் இடம் என்பரால் தைய நல்லார் குழல் மாலையும் மற்றவர் தட முலைச் செய்ய சந்தும் கலந்து இழி புனல் சூழ் தென்னரங்கமே –5-4-2
பதவுரை Show / Hide
நல் தையலார் குழல் மாலையும், Nal Thaiyalar Kuzhal Maalayum - நல்ல ஸ்த்ரீகளினுடைய தலையிலணிந்த பூமாலைகளும்
மற்று அவர் தடமுலை செய்ய சாந்தும், Mattru Avar Thadamulai Seyya Santhum - இன்னமும் அந்த ஸ்த்ரீகளினுடைய முலைத்தடங்களில் (பூசப்பட்ட) சிவந்த சந்தனமும் (ஆகிய இவற்றோடு)
கலந்து இழி புனல் சூழ், Kalandhu Izhi Punal Soozh - சேர்ந்து கலங்கிப் பிரவஹிக்கின்ற (காவிரித்) தீர்த்தத்தினால் சூழப்பட்ட
தென் அரங்கம், Then Arangam - திருவரங்கம்,
வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன், Vaiyam Undu Aal Ilai Maevum Maayan - (பிரளயத்தில்) பூமியை யெல்லாம் அமுது செய்து ஆலந்தளிரிலே பொருந்திக் கண்வளர்கின்ற ஆச்சர்ய சக்தியுக்தனும்,
மணி நீள் முடி, Mani Neel Mudi - மணிமயமான நீண்ட கிரீடமணிந்தவனும்
பை கொள் நாகத்து அணையான், Pai Kol Naagathu Anaiyaan - படங்கொண்ட திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையனுமான பெருமான்
பயிலும் இடம் என்பர், Payilum Idam Enbar - நித்யவாஸம் பண்ணுகிற இடமென்று சொல்லுவர்
1380பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (யஞ்ஞவாடத்திலே சென்று ஸ்ரீ திரு ஆழியைப் பிடிக்கக் கடவ கையாலே நீரை ஏற்ற ஸ்ரீ வாமனன் வர்த்திக்கிற தேசம்) 3
பண்டு இவ்வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர் கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால் வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –5-4-3
பதவுரை Show / Hide
வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி, Vandu Paadum Madhu Vaar Punal Vandu Izhi Kaviri - வண்டுகள் பாடப்பெற்ற தென் ஒழுகுகின்ற தீர்த்தமானது வந்து பிரவஹிக்கின்ற திருக்காவேரியினாலும் (- (தென் அரங்கம்;) (இடம் என்பர்))
அண்டம் நாறும் பொழில், Andam Naarum Pozhil - ஆகாச மெங்கும் பரிமளிக்கின்ற சோலைகளாலும்
சூழ்ந்து அழகு ஆர், Sozhndhu Azhagu Ar - சூழப்பட்டு அழகு பொருந்தியதான
பண்டு, Pandhu - முன்பொருகால்
இ வையம் அளப்பான் சென்று –, I Vaiyam Alappaan Sendru - இப்பூமியை அளந்து வசப்படுத்திக் கொள்வதற்காகப் போய்
மாவலி கையில், Maavali Kaiyil - மஹாபலியினுடை கையில் நின்றும் தாந ஜலத்தை
ஆழி தடம் கை கொண்ட, Aazhi Thadam Kai Konda - திருவாழியை யேந்தவல்ல தடக்கையாலே ஏற்றுக்கொண்ட
குறளன், Kuralan - வாமநமூர்த்தியினது
1381பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் சாய்ந்து அருளுகிற தேசம் என்னா நிற்பார்கள்) 4
விளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர் பாழ் பட வளைத்த வல் வில் தடக்கை யவனுக்கு இடம் என்பரால் துளைக்கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன் திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே –5-4-4
பதவுரை Show / Hide
துளைக்கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து மன் உச்சி திளைக்கும், Thulaikkai Yaanai Maruppum Akilum Konarnthu Man Ucchi Thilaikkum - துதிக்கையையுடைய யானைகளின் தந்தங்களையும் அகில் மரங்களையும் அடித்துக் கொண்டுவந்து முன்னே தள்ளி லீலாரஸமனுபவிக்கின்ற (- (தென் அரங்கம்) (இடம் எனபர்))
செல்வம் புனல் காவிரி சூழ், Selvam Punal Kaaviri Soozh - திவ்யமான தீர்த்தத்தையுடைய காவேரியினால் சூழப்பட்ட
வெம் போர் விளைத்த விறல் வாள் அரக்கன் நகர் பாழ்பட, Vem Por Vilaittha Viral Vaal Arakkan Nagar Paazhpada - கடுமையான யுத்தத்தை உண்டாக்கின பலிஷ்டனான வாட்படைவல்லனான இராவணனுடைய நகரமாகிய லங்கை பாழாகும்படியாக
வளைத்த வல்வில் தட கையவனுக்கு, Valaitha Valvil Thada Kaiyavanukku - வளைக்கப்பட்ட வலியவில்லைத் தடக்கையிலே உடையவனான பெருமானுக்கு
1382பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வழி கெட அன்றிக்கே நேர் கொடு நேரே அம்பாலே அழியச் செய்த வீர ஸ்ரீ யால் குறை வற்ற ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம்) 5
வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக அம்பு தன்னால் முனிந்த வழகன் இடம் என்பரால் உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நற் செம்பொனாரும் மதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –5-4-5
பதவுரை Show / Hide
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும், Umbra Koonum Ulaku Ezhum Vandu Eendi Vanangum - தேவர்களுக்கு நிர்வாஹகனான பிரமனும் ஸப்த லோகங்களும் கிட்டி திரண்டு வணங்கப்பெற்றதாய் (- (தென் அரங்கம்;) (இடம் என்பர்))
நல் செம் பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர், Nal Sem Pon Aarum Mathil Soozhndhu Azhagu Aar - நல்ல செம்பொன்னோடு ஒத்த மதிள்களால் சூழப்பட்டு அழகு பொருந்தியதான
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி கதாலன் வான் புக, Vambu Ulaam Koondhal Mandothari Kathaalan Vaan Puga - வாஸனை உலாவுகின்ற கூந்தலை யுடையளான மந்தோதரிக்குக் கணவனான இராவணன் வீர ஸ்வர்க்கமடையும்படியாக
அம்பு தன்னால் முனிந்த அழகன், Ambu Thannal Munintha Azhagan - பாணங்களினால் சீறிக்கொன்றொழித்த வீரச்ரியையுடையனான இராமபிரானது.
1383பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முலை உண்ணா விடில் தரியாதானாய் அவள் உயிரை முடித்தவன் இன்னும் இங்கன் ஒத்த விரோதிகளைப் போக்குகைகாக அணித்தாக வந்து வர்த்திக்கிற தேசம்) 6
கலை யுடுத்த வகலல்குல் வன் பேய் மகள் தாயென முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழும் இடம் என்பரால் குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி முன் அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே –5-4-6
பதவுரை Show / Hide
குலை எடுத்த கதலி பொழில் ஊடும் வந்து, Kulai Eduththa Kathali Pozhil Oodum Vandu - குலைகள் ஓங்கியிருக்கப் பெற்ற வாழைத்தோப்பு களினுள்ளே புகுந்து (- (அம்மரங்களை வேரோடே பறித்துக்கொண்டு) (தென் அரங்கம்;))
முன் உந்தி அலை எடுக்கும் புனல் காவிரி சூழ், Mun Undhi Alai Edukkum Punal Kaaviri Soozh - முன்னே தள்ளி அலைவீசியடியாநின்ற தீர்த்தத்தையுடைத்தான காவேரியினால் சூழப்பட்ட
கலை உடுத்த அகல் அல்குல் தாய் என, Kalai Uduththa Akal Alkul Thaai Enna - பட்டாடையணிந்த அகன்ற நிதம்பத்தையுடையளான தாயாகிய யசோதைபோல (வந்து)
முலை கொடுத்தாள் வன் பேய்மகள், Mulai Koduththaal Van Paeymakal - முலையுண்ணக் கொடுத்தவளான வலிய (பூதனையென்னும்) பேய்ச்சியினுடைய
உயிர் உண்டவன் வாழ்இடம் என்பர், Uyir Undavan Vazh Idam Enbar - பிராணனை உறிஞ்சி உண்ட கண்ணபிரான் வாழும் திவ்யதேசம் என்று சொல்லுவர்
1384பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு ஆழியும் கையிலே உண்டாய் இருக்கச் செய்தே அது கொண்டு வ்யாபாரிக்கப் பற்றாமையாலே திருக் காலாண்ட பெருமான் -என்கிறபடியே ஸ்ரீ திருவடிகளாலே அழியச் செய்தவன் வர்த்திக்கிற தேசம்) 7
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால் துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழும் இடம் என்பரால் மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மறையோர் செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் தென்னரங்கமே –5-4-7
பதவுரை Show / Hide
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும், Manju Cher Maaligai Needu Akil Pugaiyum - மேகமண்டலத்தை அளாவியிருக்கிற மாளிகைகளிலுண்டான அதிகமான அகிற்புகையும்
மா மறையோர் செம் சொல் வேள்வி புயையும் கமழும், Maa Maraiyore Sem Sol Velvi Puyaiyum Kamazhum - சிறந்த வைதிக ப்ராமணர்கள் வேதங்களிற் விதிப்படியே நடத்துகிற யாகங்களிலுண்டான ஹோமதூமமும் (சேர்ந்து) பரிமளிக்கப்பெற்ற
தென் அரங்கம், Then Arangam - திருவரங்கமானது, –
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் துஞ்ச, Kanjan Nenjum Kadu Mallarum Sakadhamum Thunja - கம்ஸனுடைய மனமும் கடிய மல்லர்களும் சகடாஸுரனும் தொலையும்படி
காலினால் வென்ற, Kaalinaal Vendra - திருவடியாலே வென்றொழித்த உஜ்வலமான திருவாழியையுடைய பெருமான் ரித்யவாஸம் பண்ணுமிடம் என்று சொல்லுவார்கள்
1385பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அநேக அவதாரங்களைப் பண்ணிக் கொண்டு வந்து ரஷகன் ஆனவன் அவ்வவதார காலங்களிலே பிற் பாடர்க்கும் இழக்க வேண்டாத படி வந்து சந்நிஹிதனான தேசம் கோயில் -என்கிறார்) 8
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த் தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால் வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல் தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே –5-4-8
பதவுரை Show / Hide
வானும் மண்ணும் நிறைய புகுந்த ஈண்டி வணங்கும், Vaanum Mannum Niraiya Pugundha Eendi Vanangum - விண்ணுலகத்திலுள்ளாரும் மண்ணுலகத்திலுள்ளாரும் ஏராளமாக வந்து சேர்ந்து ஒன்றாகத்திரண்டு வணங்கப்பெற்றதும், (- (தென் அரங்கம்;) (இடம் என்பர்))
நல் தேனும் பாலும் கலந்தன்னவர், Nal Thenum Paalum Kalandannavar - மதுரமான தேனும் பாலும் ஒன்றாகச் சேர்ந்தாற்போலே ஏகரஸராயிருக்கிற பக்தர்கள்
சேர், Ser - சேர்ந்திருக்கப்பெற்றதுமான
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய், Eyanam Meen Aamaiyodu Ariyum Siru Kuralum Aay - வராஹமாகவும் மத்ஸ்ய கூர்மமாகவும் நரஸிம்ஹமாகவும் வாமநனாகவும் திருவவதரித்தவனாய்
தானும் ஆய, Thaanum Aay - ஸ்ரீராமபிரானாகவும் திருவவதரித்தவனான
தரணி தலைவன், Tharani Thalaivan - ஸர்வலோகேச்வரனுடைய
1386பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உள்ளுச் சாய்ந்த வஸ்துவுக்கு அரணாகப் போரும்படியான ஸ்ப்ருஹநீயமாய் இருந்துள்ள மதிள்களாலே சூழப்பட்ட தர்ஸநீயமான ஸ்ரீ கோயில்) 9
சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையினாய விம் மாயையை யாரும் யறியா வகையான் இடம் என்பரால் வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார் புனல் காவிரி ஆய பொன் மா மதிள் சூழ்ந்த அழகார் தென்னரங்கமே –5-4-9
பதவுரை Show / Hide
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து, Veyin Muthum Maniyum Konarnthu - மூங்கில்களில் நின்று முதிர்ந்த முத்துக்களையும் ரத்னங்களையும் தள்ளிகொண்டுவந்து (- (தென் அரங்கம்;) (இடம் என்பர்))
ஆர் புனல் காவிரி, Aar Punal Kaaviri - நிறைந்திருக்கிற தீர்த்தத்தையுடைய திருக்காவேரியாலும்
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து, Aay Pon Maa Mathil Soozhndhu - தகுதியான அழகிய பெரிய திருமதிற்களாலும் சூழப்பட்டு
அழகு ஆர், Azhagu Aar - அழகு பொருந்தியிருப்பதான
என்றும்சேயன், Endrumseyan - எந்நாளும் எட்டாமலிருப்பவன்
மிக பெரியன், Miga Periyan - மஹாபுருஷன்;
நுண் நேர்மையன், Nun Naermaiyan - ஸூக்ஷ்மமான பொருள்களிற் காட்டிலும் ஸூக்ஷ்மத்தன்மை வாய்ந்தவன்,
ஆய, Aay - என்றிப்படி சொல்லக்கூடியதான
இ மாயை, I Maayai - இவ்வாச்சரியத்தை
அரும் அறியா வகையான், Arum Ariya Vagaiyaan - ஒருவரும் அறியக் கூடாதபடியிருப்பவனான ஸர்வேச்வரனுடைய
1387பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உந்தி – வையம் -இரண்டும் ஸ்ரீ உலகுண்ட ஸ்ரீ வடதள சாயி விஷயம் விளைத்த -வம்பு -ஸ்ரீ ராமன் விஷயம் கலை -கஞ்சன் -ஸ்ரீ கிருஷ்ண விஷயம் சேயன் -அல்லி -ஸ்ரீ யபதி விஷயம்–இப்படி நாலு இரண்டும் பண்டு -ஸ்ரீ திருக் குறளன் விஷயம் ஏனம் -சகல அவதார சமுதாய விஷயம்–இப்படி இரண்டும்-இவற்றை சாபிப்ராயமாக அப்யசிக்க வல்லார்கள் ஸ்ரீ கோயிலிலே இருந்து அனுபவித்து பின்னை சரீர சமனந்தரம் ஸ்ரீ பரம பதம் தாங்கள் இட்ட வழக்காக பெறுவர்கள்) 10
அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக் கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல் நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன் வல்லவர் தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே –5-4-10
பதவுரை Show / Hide
அல்லி மாதர் அமரும் திருமார்வன் அரங்கத்தை, Alli Maathar Amarum Thirumaarvan Arangaththai - பூவிற் பிறந்த பெரியபிராட்டியா பொருந்தி வாழப்பெற்ற திருமார்வையுடையனான ஸர்வேச்வரனுடைய திருவரங்கம் விஷயமாக,
கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலிகன்றி, Kallin Mannu Mathil Mangaiyar Kon Kalikanri - கல்லாலே கட்டப்பட்ட திடமாயிக்கிற  மதிளையுடைத்தான திருமங்கை நகரில் உள்ளவர்களுக்கு தலைவரான ஆழ்வார்
சொல் நல் இசை மாலைகள், Sol Nal Isai Maalaigal - அருளிச்செய்த நல்ல இசையோடு கூடின சொல் மாலையாகிய
நாலிரண்டும் இரண்டும், Naalirandum Irandum - இப்பத்துப்பாட்டுக்களையும்
உடன் வல்லவர்தாம், Udan Vallarvartaam - கருத்தோடுகூட ஓதவல்லவர்கள்
உலகு ஆண்டு, Ulaku Aandu - இவ்வுலகில் (கோயில் வாழ்ச்சியை) அநுபவித்து
பின் வான் உலகு ஆள்வர், Pin Vaan Ulaku Aalvar - பரமபதாநுபவத்தைப் பெறக்கடவர்.
1388பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பெருமாள் உடைய இங்குத்தை வரவாறே பிடித்து ஆற்றாமைக்கு உடலாம்படி காணும் பிறந்த ப்ராவண்ய அதிசயம் – ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் -அன்று நேர்ந்த நிசாசரரை -என்று ராவண வதம் தொடங்கி ஸ்ரீ பெருமாளை அடி ஒத்தினார் –அது தெற்கு திரு வாசலாலே புகுந்து கிடந்தது – மந்தி பாய் -என்று ஸ்ரீ பரம பதமே தொடங்கி அடி ஒத்தினார் –ஸ்ரீ திரு மலையிலே புகுந்து கிடந்தது அங்கே பார்த்த வாறே நின்ற படியைக் கண்டார் – இன்னமும் போக்கிலே ஒருப்பாடு தோற்றி இருந்தது என்று அவ்விடமே தொடங்கி அடி ஒத்தினவாறே வடக்குத் திரு வாசலாலே புகுந்து படுக்கை இங்கேயாய் இருந்தது -என்று ஸ்ரீ பட்டர் ஸ்ரீ அமலனாதி பிரான் அருளிச் செய்யா நிற்க நான் கேட்டேன் என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார்) 1
வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால் மருவாள் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல் உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே –5-5-1
பதவுரை Show / Hide
வெருவாதாள், Veruvaathaal - அஞ்சாதவளாய்க் கொண்டு (- (என் பெண் பிள்ளையானவள்) (வேங்கடமே வேங்கடமே என்கின்றாள்–;))
வாய் வெருவி, Vaai Veruvi - வாய்பிதற்றுகின்றவளாய்
என்குடங்கால் மருவாள், Enkudankaal Maruvaal - எனதுமடியில் பொருந்து கின்றிலள்;
வாள் நெடு கண் துயில் மறந்தாள், Vaal Nedu Kan Thuyil Marandhaal - வாள்போன்று நீண்ட கண்களிலே உறக்கத்தை மறந்துவிட்டாள்;
வண்டு, Vandu - வண்டுபோலவும்
ஆர் கொண்டல், Aar Kondaal - பூர்ண மேகம்போலவும்
உரு ஆளன், Uru Aalan - திருவுருவமுடையவனும்
வானவர் தம் உயிர் ஆளன், Vaanavar Tham Uyir Aalan - நித்யஸூரிகளுக்கு உயிராயிருப்பவனும்
ஒலி திரை நீர், Oli Thirai Neer - கோஷிக்கின்ற அலைநீர்
பௌவம் கொண்ட திரு ஆளன், Pauvam Konda Thiru Aalan - பொருந்திய கடலில் நின்றும் கொள்ளப்பட்ட பிராட்டியை ஆள்பவனமான எம்பெருமான்
என் மகளை செய்தனகள், En Magalai Seithanagal - எனது பெண்பிள்ளை திறத்துச்செய்தவகைகளை
நான் எங்ஙனம் சிந்திக்கேன், Naan Engnganam Sindhikkeen - நான் நினைக்கத்தான் முடியுமோ?
1389பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து – தன் சௌலப்யத்தைக் காட்டி விலையாளா யடியேனை வேண்டுதியோ -என்று இவளை இட்டு சொல்லுவித்துக் கொள்ளுகைகாக திரு மெய்யத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான் -பின்னானார் வணங்கும் சோதியில் போலே – யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவ -என்கிறபடியே முற்பாடரான சூரிகளுக்கும் அவ்வருகாய் இருந்து வைத்து இவ்வருகு உண்டான பிற்பாடருக்கும் உதவுகைக்காக இறே இங்கு வந்ததும் – தானே ரஷகன் என்று இருக்கும் இவளை வாய் விட்டுக் கூப்பிடும்படி பண்ணினானே- நமக்கு ஓன்று செய்யப் பிராப்தி உண்டோ -என்று இருக்கிறாள் இவள் பெறுவது அவனை யானால் இருந்த இடத்தே இருக்கப் போமோ -என்று இருக்கிறாள் மகள்) 2
கலையாளா வகலல்குல் கனவளையும் கை யாளா என் செய்கேன் நான் விலையாளா வடியேனை வேண்டுதியோ வேண்டாயோ என்னும் மெய்ய மலையாளன் வானவர் தம் தலையாளன் மராமரம் ஏழு எய்த வென்றிச் சிலையாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே –5-5-2
பதவுரை Show / Hide
அகல் அல்குல் கலை ஆளா, Akal Alkul Kalai Aalaa - அகன்ற நிதம்பமானது வஸ்த்ரத்தை தரிக்கின்றதில்லை; (- (என் மகளை செய்தனகள் எங்ஙனம்) (நான் சிந்திக்கேன்))
கை கனம் வளையும் ஆளா, Kai Kanam Valaiyum Aalaa - கைகளானவை பொன் வளைகளை ஆள்கின்றனவில்லை;
நான் என் செய்கேன், Naan En Seigkeen - (இதற்கு) நான் என்ன பண்ணுவேன்?
அடியேன், Adiyen - “அடியவளாகிய என்னை
விலை ஆள் ஆ, Vilai Aal Aa - பிறர்க்கு விற்கவும் உரிய வேலைக்காரியாக (க் கொள்ள)
வேண்டுதியோ, Vendudiyoo - திருவுள்ளம் பற்றுவாயோ?
வேண்டாயோ, Vendaayo - மாட்டாயோ?”
என்னும், Ennum - என்கிறாள்;
மெய்யம் மலை ஆளன், Meyyam Malai Aalan - திருமெய்யமலையை இருப்பிடமாக வுடையவனும்
வானவர் தம் தலையாளன், Vaanavar Tham Thalaiyalan - நித்யஸூரிகளுக்குத் தலைவனாயிருப்பவனும்
ஏழ் மாமரம் எய்த வென்றி சிலை ஆளன், Ezhu Maamaram Eytha Vendri Silai Aalan - ஸப்தஸாலவ்ருக்ஷங்களைத் துளைத்த ஜயசீலமான அம்மை உடையவனமான பெருமான்
1390பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சக்கரவர்த்தி நாடாள ஒரு பிள்ளை பெற வேணும் என்று ஒரு நோன்பு நோற்று பெற்றால் போலே கவ்யங்கள் பாழ் போக ஒண்ணாது-இவற்றை புஜிப்பான் ஒரு பிள்ளை வேணும் என்று இதுக்கு அன்றோ இவனைப் பெற்றது ப்ரணய தாரையில் அவன் செய்து நிற்கிற இவை என்னால் ஒன்றும் அறியப் போகிறன வில்லை) 3
மானாய மென்னோக்கி வாள் நெடுங்கண் கண்ணீர் மல்கும் வளையும் சோரும் தேனாய நறுந்துழாய் அலங்கலின் திறம் பேசி யுறங்காள் காண்மின் கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற ஆனாயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைகீர் அறிகிலேனே –5-5-3
பதவுரை Show / Hide
மான் ஆய மென் நோக்கி, Maan Aaya Men Nookki - மானின் நோக்குப் போன்ற அழகிய நோக்கை உடையளான என் மகள், (- (அம்மனைமீர் அறிகிலேன்–.))
வாள் நெடு கண் நீர் மல்கும், Vaal Nedu Kan Neer Malkum - ஒளி பொருந்திய நீண்ட கண்கள் நீர் நிரம்பப் பெற்றிருக்கின்றாள்;
வளையும், Valaiyum - (இவளது) வளைகளும்
சோரும், Soorum - (கையில் நின்று) நழுவாநின்றன;
தேனாய, Thennaay - தேனைக்கொண்ட
நறு துழாய், Naru Thuzhai - மணம்மிக்க திருத்துழாயினாலாகிய
அலங்கலின், Alankalin - மாலையினுடைய
திறம், Thiram - பரிசுகளை
பேசி, Paesi - சொல்லிக்கொண்டு
உறங்காள், Urangaal - உறக்கமற்றிருக்கின்றாள்;
காண்மின், Kaanmin - (இந்நிலைமையைக்) கண் கொண்டுபாருங்கள்;
கான் ஆயன், Kaan Aayan - காட்டிலே திரியுமவனும்
கடி மனையீல், Kadi Manaiyil - காவலுள்ள வீடுகளிலும்
தயிர் உண்டு, Thayir Undu - தயிரை உட்கொண்டு
நெய் பருக, Ney Paruga - நெய்யைக் குடிக்கும்படியாக
நந்தன் பெற்ற, Nandhan Pettra - நந்தகோபர் பெற்ற
ஆன் ஆயன், Aan Aayan - கோபாலக்ருஷ்ணனுமான பெருமான்
என் மகளை செய்தனகள், En Magalai Seithanagal - என் பெண்பிள்ளையைப் பண்ணின படிகளை
1391பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாயையும் அல்லாதாரையும் ஒக்க அபேஷிக்கும் படி நிருபாதிக பந்துவான தன் பக்கலிலே பாவ பந்தத்தை பிறப்பிக்கிறவன் வர்த்திக்கிற தேசம் எங்கே -என்னா நின்றாள் ஸ்வாமித்வம் இவை போலே ஔபாதிகம் அல்ல இறே எம்பெருமான் -என்னைத் தோற்பித்தவன் என்றே காணும் அவனை அறிவது இது இறே நமஸ் சப்தார்த்தம்) 4
தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கை யே யாரச் சாந்து அணியாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் பேய் மாய முலை உண்டு இவ்வுலகுண்ட பெரு வயிற்றன் பேசில் நங்காய் மா மாயன் என் மகளைச் செய்தனகள் மங்கைமீர் மதிக்கிலேனே –5-5-4
பதவுரை Show / Hide
தாய் வாயில் சொல் கேளாள், Thaai Vaayil Sol Kelaal - தாயாகிய என்னுடைய வாய்ச் சொல்லை (என்மகள்) கேட்பதில்லை; (- (நங்காய்!, மங்கைமீர்!-;))
தன் ஆயத்தோடு அணையாள், Than Aayaththodu Anaiyaal - தனது தோழிமார்களுடன் கூடுவதில்லை;
தட மென் கொங்கையே ஆர சாந்து அணியாள், Thada Men Kongaiye Aara Santhu Anaiyaal - பருத்து மெல்லிதான (தனது) முலைகளையும் அழகாக சந்தனத்தினால் (முன்பு போல) அலங்கரிக்கின்றாளில்லை
எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும், Emperumaan Thiru Arangam Engae Ennum - ‘என் ஸ்வாமி யெழுந்தருளியிருக்கிற திருவரங்கம் எங்கே?’ என்கிறாள்;
பேய் மாய முலை உண்டு, Pei Maaya Mulai Undu - பேய்ச்சியான பூதனை முடியும் படியாக (அவளது) முலைப் பாலைப் பருகி
இ உலகு உண்ட பெருவயிற்றன், I Ulaku Unda Peruvayitran - இவ்வுலகங்களையும் அமுது செய்த பெரிய திருவயிற்றையுடையனான
மா மாயன், Maa Maayan - மிகக் ஆச்சர்ய பூதன்
என் மகளை செய்தனகள், En Magalai Seithanagal - என் பெண்பிள்ளைக்குச் செய்தவற்றை
பேசில், Pesil - சொல்லப்புகுந்தால்
மதிக்கிலேன், Mathikkilaen - அளவிட்டுச் சொல்ல மாட்டுகின்றிலேன்.
1392பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ யபதி என்று ஒருத்தியை இட்டு அன்றோ தம்மை வ்யபதேசிப்பது நாம் அறிய -இது ஒரு பழங்கிணறு காண வர வேணுமோ-இவ்விசை இருந்தபடி எல்லாரும் அறியாமோ நம்பி- பெண்களுக்கு கையாளாய்-அத்தாலே தன்னைப் பூர்ணனாக நினைத்து இருக்குமவன் அன்றோ) 5
பூண் முலை மேல் சாந்தணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள் ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் நாண் மலராள் நாயகனாய் நாம் அறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி ஆண் மகனாய் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே –5-5-5
பதவுரை Show / Hide
பூண் முலை மேல் சாந்து அணியாள், Poon Mulai Mel Santhu Anaiyaal - ஆபரணங்கள் அணிந்த முலையின்மேல் சந்தனத்தை பூசுகின்றாளில்லை; (- (என் மகளை செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேன்))
பொரு கயல் கண் மை எழுதாள், Poru Kayal Kan Mai Ezhudhaal - ஒன்றோடொன்று சண்டை செய்யுமிரண்டு மீன்கள் போன்றுள்ள கண்களிலே மையிட்டுக் கொள்ளுகிறாளில்லை;
பூவை பேணாள், Poovai Peenaal - (தான் வளர்த்துக் கொண்டிருந்த) பூவைப் பட்சியையும் ஆதரிக்கின்றாளில்லை;
எத்தனையும் ஏண் அறியாள், Ethanaiyum Aen Ariyaal - எந்த வஸ்துவையும் நெஞ்சினால் நினைக்கின்றாளில்லை;
எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும், Emperumaan Thiru Arangam Engae Ennum - ‘என் ஸ்வாமியின் திருவரங்கம் எங்கே?’ என்பதொரு வார்த்தையையே சொல்லிக் கொண்டிருக்கிறாள்;
நாள் மலராள் நாயகன் ஆய், Naal Malaraal Naayagan Aay - செவ்வித்தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டிக்கு வல்லபனானவனும்
நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி, Naam Ariya Aayppaadi Valarntha Nambi - நமக்கெல்லாம் தெரியும்படியாகத் திருவாய்ப்பாடியில் வளர்ந்தவனுமான பெருமான்
ஆண் மகன் ஆய், Aan Magan Aay - பெரிய ஆண்பிள்ளையாய்க் கொண்டு
1393பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தனை அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது காண்-இது குடிப் பிறப்புக்கு போராது காண் இது தர்மி லோபத்தைப் பலிப்பிக்கும் காண் அவன் ஸ்த்ரரைணன் காண் -என்று ஒரு ஹித வசனம் பண்ணினால் அதுக்கு உத்தரமாக என்னை அனந்யார்ஹை ஆக்கினவன் வர்த்திக்கிற தேசம் என்னா நின்றாள்) 6
தாதாடு வனமாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள் காண்மின் யாதானும் ஓன்று உரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல் மாதாளன் குடமாடி மது சூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற தூதாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சொல்லுகேனே –5-5-6
பதவுரை Show / Hide
தாது ஆடு வனமாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள், Thaadhu Aadu Vanamaalai Thaarano Enru Enru Thalarndhaal - ‘தாதுக்கள் நிரம்பிய வனமாலையை எனக்குத் தந்தருளமாட்டானோ?’ என்று பலகால் சொல்லி சோர்வடைந்தாள்; (- (என் மகளை செய்தனகள் நான் எங்ஙனம் சொல்லுகேன்?))
யாதாலும் ஒன்று உரைக்கில், Yaadhalum Ondru Uraikkil - (அவளுக்கு அடக்கமுண்டாகும்படி நாம்) ஏதாவதொரு வார்த்தை சொன்னால் (அதற்கு மறுமொழியாக)
எம்பெருமான் திரு அரங்கம் என்னும், Emperumaan Thiru Arangam Ennum - ‘எம்பெருமான் திருவரங்கம்’ என்கிற வார்த்தையொன்றே சொல்லுகின்றாள்;
பூ மேல் மாது ஆளன், Poo Mael Maathu Aalan - பூவிற்பிறந்த பிராட்டிக்கு வல்லபனும்
குடம் ஆடி, Kudam Aadi - குடக்கூத்தாடினவனும்
மதுசூதன், Madhusoodhan - மதுவென்னமசுரனைக் கொன்றவனும்
முன்னம் மன்னர்க்கு ஆய் தூது சென்ற ஆளன், Munnam Mannarkku Aay Thoodhu Sentra Aalan - முன்பொருகால் பஞ்சபாண்டவர்களுக்காக தூது நடந்தவனுமான ஸ்வாமி
1394பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ விஷயத்திலும் இதர விஷயத்திலும் விரக்தியும் பகவத் விஷயத்தில் ப்ரீதியும் மாறாதே செல்லும்படியாய் இருப்பாள் ஒரு பெண் பிள்ளையை என்னைப் போலே புறம்பு பெற்றார் உண்டோ – அப்போது பீஷ்மாதிகள் அம்புக்கு தன்னை இலக்கு ஆக்கினால் போலே இப்போது தனக்காக இவளை காம ரசத்துக்கு இலக்கு ஆக்குகிறான் இப்போது இவளை அழிவுக்கு இட்ட படி என்னாலே பேசப் போமோ -என்கிறாள்) 7
வாராளும் இளம் கொங்கை வண்ணம் வேறாயின வாறு எண்ணாள் எண்ணில் பேராளன் பேரல்லால் பேசாளிப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான் தாராளன் தண் குடந்தை நகராளன் ஐவர்க்காய் அமரில் தேர் உய்த்த தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே –5-5-7
பதவுரை Show / Hide
வார்ஆளும் இள கொங்கை, Vaar Aalam Il Kogai - கச்சையிட்டுக் கட்டி ஆளக்கடவதான (தனது) இள முலைகள் (- (என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் செப்புகேன்))
வண்ணம் வேறு ஆயின ஆறு எண்ணாள்;, Vannam Veeru Aayin Aaru Ennaal - நிறம் வேறுபட்ட விதத்தை நினைக்கின்றாளில்லை
எண்ணில், Ennil - ஏதேனுமொன்றை எண்ணப்புகுந்தால்
பேராளன் பேர் அல்லால் பேசாள், Peraalan Per Allaal Pesaal - ஸர்வேச்வரனது திருநாமங்களைத் தவிர வேறொன்றையும் பேசுகிறாளில்லை;
இ பெண் பெற்றேன் நான், I Pen Petraen Naan - இப்படிப்பட்ட பெண்ணைப் பெற்றேன் நான்
என் செய்கேன், En Seigken - என்ன பண்ணுவேன்?;
தார் ஆளன், Thaar Aalan - திருமாலை சாத்திக்கொண்டிருப்பவனும்
தண் குடந்தை நகர் ஆளன், Than Kudandhai Nagar Aalan - குளிர்ந்த திருக்குடந்தை நகரை ஆள்பவனும்
ஐவர்க்கு ஆய், Aivarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக
அமரில், Amaril - (பாரதப்) போரில்
உய்த்த தேராளன், Uytta Theraalan - நடத்தப்பட்ட தேரையுடையனுமான பெருமான்
1395பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கலக்கிற இடத்தில் தாழ நின்று பரிமாறின படியையும்-அதுக்கடியான சீலத்தையும் கலந்த போதை பரிமாற்றத்தின் வகைகளையும் – இதில் ஸ்ரோத்ரியன் ஆகைக்கு வ்யுத்புத்தி பண்ணின இடத்தையும் சொல்லா நிற்கும் –ஆஸ்ரித விஷயத்தில் வ்யாமோஹாதிசயத்தை உடையவன்-பெரியோன் என்றபடி – பிறவியை அறுப்பதான திரு நாமத்தை உடையவன் துக்க நிவர்தகமான திரு நாமங்கள் கிடீர் இவளுக்கு துக்கத்தை பண்ணுகிறது) 8
உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்று ஆல் மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால் பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள் அறவாளன் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே –5-5-8
பதவுரை Show / Hide
உறவு ஆதும் இவள் என்று என்று, Uravum Aadhum Ival Endru Endru - ‘தாய் தந்தையர் என்கிற உறவு முறைகளைச் சிறிதும் உடையளல்லள்’ என்று பலகால் சொல்லி (- (இப்பெண்பிள்ளையோ வென்னில்) (மாயவனே! மாதவனே! என்கின்றாள்;) (என் மகளை செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேன்))
பலர் ஒழியாது ஏசும் அலர் ஆயிற்று, Palar Ozhiyadhu Aesum Alar Aayitru - பலபேர்கள் எப்போதும் குறைகூறும்படியான பழி விளைந்திட்டது;
மறவாதே எப்பொழுதும், Maravadhe Eppozhudhum - மறவாமல் ஸர்வகாலமும்
பிறவாத பேராளன், Piravatha Peraalan - கருமங்காரணமான பிறப்பையுடையனாகாத பெருமை பொருந்தியவனும்
பெண் ஆளன், Pen Aalan - பெண் பிறந்தாரைத் தனக்காகவுடையவனும்
மண் ஆளன், Man Aalank - மண்ணுலகத்தவர்களை ஆள்பவனும்
விண்ணோர் தங்கள் அறவாளன், Vinnor Thangal Aravaalan - நித்யஸூரிகளுக்குப் பரமதார்மிகனாயிருப்பவனுமான பெருமான்
1396பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு சர்வஞ்ஞன் அஞ்ஞன் செய்வதைச் செய்தால்-இதுக்கு மேல் எனனால் போக்கடி தேடப் போமோ இவள் தன் திறத்து படாது இருக்க தானே வந்து இப்படி பண்ணி-தானே உபேஷிப்பதே முன் தீமை செய்வானும் தானேயாய்-உபேஷிப்பானும் தானே யாவதே) 9
பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள் வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும் சந்தோகன் பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே –5-5-9
பதவுரை Show / Hide
பந்தோடு கழல் மருவாள், Pandhodu Kazhal Maruvaal - பந்தையும் கழற்காய்களையும் தொடுகிறதுமில்லை; (- (என் மகள்) (என் மகளை செய்தனகள் அம்மனைமீர்! அறிகிலேன், அந்தோ!))
பை கிளியும் பால் ஊட்டாள், Pai Kiliyum Paal Oottal - (தனது) பசுமை தங்கிய கிளிக்குப் பாலூட்டுகிறதுமில்லை;
பாவை பேணாள், Paavai Paenaal - (விளையாட்டுக் கருவியான) மரப்பாச்சியை நோக்குவதுமில்லை;
திருஅரங்கன், Thiruarangan - “ஸ்ரீரங்கநாதன்
வந்தானோ வாரானோ  என்று என்றே, Vandaano Varaanoo Endru Endrae - வந்து விட்டானோ? என்றும் வரமாட்டானோ?” என்றும் சொல்லிக்கொண்டு
வளையும் சோரும், Valaiyum Soorum - கைவளைகள் கழல நிற்கின்றாள்
சந்தோகன், Sandhogan - சாந்தோக்ய உபநிஷத்தினால் ப்ரதிபாத்யனும்
பௌழியன், Pauzhiyan - கௌஷீதகீப்ராஹ்மணத்தினால் ப்ரதிபாத்யனும்
ஐந்து அழல் ஓம்பு, Ainthu Azhai Oombu - பஞ்சாக்நிகளினால் ஆராதிக்கப் படுபவனும்
தைத்திரியன், Thaitthiriyan - தைத்திரிய உபநிஷத்தினால் பிரதிபாதிக்கப் படுபவனும்
சாமவேதி, Saamavethi - ஸாமவேதப்ரதிபாத்யனுமான பெருமான்
வந்து, Vandhu - இவ்விடம் வந்து
1397பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதன் பொருளை ஆசார்யர்களோடே கற்று அறியுமவர்கள்-தனி முத்துக் குடைக் கீழே இதில் அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தை அனுபவித்து ஸ்ரீ பரம பதத்திலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்) 10
சேலுகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானைச் சிந்தை செய்த நீல மலர்க் கண் மடவாள் நிறைவழிவைத் தாய் மொழிந்த வதனை நேரார் கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை கற்று வல்லார் மாலை சேர் வெண் குடைக் கீழ் மன்னவராய்ப் பொன் உலகில் வாழ்வர் தாமே –5-5-10
பதவுரை Show / Hide
சேல் உகளும் வயல் புடை சூழ் திருஅரங்கத்து அம்மானை, Sel Uhalum Vayal Pudai Soozh Thiruarangathu Ammaanai - மீன்கள் துள்ளி விளையாடப் பெற்ற கழனிகளினால் சுற்றும் சூழப்பட்ட திருவரங்கத்திலுள்ள எம்பெருமானை (- (இஹலோக ஐச்வர்யங்களையநுபவித்துப் பின்பு))
சிந்தை செய்த, Sindhai Seitha - தியானித்துக் கொண்டிருக்கின்ற
நீலம் மலர் கண்மடவான் நிறை அழிவை, Neelam Malar Kanmadavaan Nirai Azhivai - கருநெய்தல் போன்ற கண்களை யுடையனான பரகால நாயகியினது அடக்கம் அழிந்தமையைக் குறித்து
தாய் மொழிந்த அதனை, Thaai Mozhintha Adhanai - தாய்பேசின பாசுரமாக,
நேரார் சாலன், Neraar Saalan - பகைவர்க்கு யமன் போன்ற வரும்
வேல், Veel - வேற்படையையுடையரும்
பரகாலன், Parakalan - பரகாலனென்ற திருநாமமுடையவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை, Malai - இச் சொல்மாலையை
கற்று வல்லார் தாம், Kattru Vallar Thaam - ஓதி உணரவல்லவர்கள்,
மாலை சேர் வெண் குடை கீழ், Malai Ser Ven Kudai Keel - முத்துஸரங்கள் தொங்கவிடப் பெற்ற வெண்குடை நிழலில்
மன்னவர் ஆய், Mannavar Aay - அரசர்களாயிருந்துகொண்டு
போன் உலகில் வாழ்வர், Poon Ulagil Vazhvar - பரமபதத்தில் நித்யாநுபவம் பண்ணப்பெறுவர்.
1398பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தான் அல்லது ரஷகர் அல்லாதாரை அரியன செய்தும் ரஷிக்குமவனை – ஒரு கால் மலையை எடுத்து பசுக்களையும் இடையரையும் ரஷித்தான் – ஸ்ரீ திருப் பாற் கடலிலே கிடந்தான் -என்று கேட்டார் வாய் கேட்கை அன்றிக்கே நான் ஸ்ரீ கோயிலிலே காணப் பெற்றேன்) 1
கைம்மானம் மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை மைம்மான மரகதத்தை மறை யுரைத்த திரு மாலை எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-1
பதவுரை Show / Hide
மானம் கை மழ களிற்றை, Maanam Kai Mazha Kalittrai - நீண்ட கையையுடைய இளமைதங்கிய யானை போன்றவனும்
கடல் கிடந்த கருமணியை, Kadal Kidandha Karumaniyai - கடலிலே கண்வளர்ந்தருள்கிற நீலமணி போன்றவனும்
மை மானம் மரதகத்தை, Mai Maanam Marathagaththai - பசுமை நிறம் மிக்கிருக்கப் பெற்ற மரகதப் பச்சை போன்றவனும்
மறை உரைத்த திருமாலை, Marai Uraitha Thirumalai - வேதங்களாலே பிரதிபாதிக்கப்பட்ட ச்ரியபேதியானவனும்
எம்மானை, Emmanai - எனக்கு ஸ்வாமியானவனும்
எனக்கு என்றும் இனியானை, Enakku Endrum Iniyanai - எனக்கு எக்காலத்திலும் போக்யனா யிருப்பவனும்
பனி காத்த அம்;மானை, Pani Kaatha Am Maanai - மழையில் நின்றும் (ஆநிரையைக்) காத்தருளினவனுமான பொருமானை
யான் கண்டது, Yaan Kandathu - அடியேன் ஸேவிக்கப்பெற்றது (எவ்விடத்திலென்னில்)
அணிநீர் தென்அரங்கத்து, Anineer Thenarangkathu - அழகிய தீர்த்தம்பொருந்திய திருவரங்கத்திலே.
1399பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீஸ்ரீ இந்த லோகங்கள் ஏழையும் தன் வயிற்றிலே வைத்து ரஷிக்கச் செய்தேயும் ஒன்றும் செய்திலனாய் இருக்கையாலே உபகாரம் கொண்டார்க்கு பிரத்யுபகாரம் தேடி நெஞ்சாறல் பட வேண்டாத படி இருந்தவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 2
பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத் தண் கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு காரார் திண் கடல் ஏழும் மலை யெழ் இவ்வுலகு யெழ் உண்டு ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-2
பதவுரை Show / Hide
பேரானை, Peranai - திருப்பேர் நகரில் உறைபவனும் (- (கண்டது தென் அரங்கத்து))
குறுங்குடி எம் பெருமானை, Kurungudi Em Perumanai - திருக்குறுங்குடியி லெழுந்தருளியிருக்கும் ஸ்வாமி யானவனும்
திருத்தண்காலூரானை, Thiruthankalooranai - திருத்தண்காலில் நித்யவாஸம் பண்ணுமவனும்
கரம்பனூர் உத்தமனை, Karambanoor Uthamanai - திருக்கரம்பனூரில் உத்தமனாய் விளங்குபவனும்,
முத்து இலங்கு கார் ஆர் திண் கடல் ஏழும், Muthu Ilangu Kaar Aar Thin Kadal Ezhum - (உள்ளே) முத்துக்கள் ஒளிவிடாநிற்பனவும் கருநிறம் மிக்கவையும் திடமுள்ளனவுமான ஸப்த ஸமுத்ரங்களையும்
ஏழ் மலை, Ezh Malai - ஸப்த குலாசலங்களையும்
இ ஏழ் உலகு, I Ezh Ulagu - இவ்வேழுலகங்களையும் (பிரளயகாலத்தில்)
உண்டும், Undum - அமுது செய்தும்
ஆராது என்று இருந்தானை, Aarathu Endru Irundhaanai - த்ருப்திபெறாதவனாய் இருந்தவனுமான பெருமானை
1400பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒருவன் காலில் முள் பாய்ந்தால் சரீரி யானவன் நோவு படுமா போலே ஜகத்துக்கு வந்த ஆபத்து தன்னதாம் படி இதுக்கு அபிமானியாய் இருக்கிற இருப்பை அனுசந்தித்து இருக்கும் தனக்கு அசாதாராணர் ஆனவருக்கு சர்வ வித போக்யனாய் அத்தாலே உஜ்ஜ்வலனாய் இருக்குமவனை – ஸ்ரீ கிருஷ்ணனாய் அவதரித்து ஸ்ரீ பரமபதம் கலவிருக்கையாய் இருக்க நமக்கு இங்கே வந்து குறைய நிற்க வேண்டா நின்றது என்னும் இன்னாப்போடு அன்றிக்கே இப்படி யாகிலும் இவர்களுக்கு உறுப்பாக பெற்றோம் என்னும் ப்ரீதி பிரகர்ஷத்தோடே பண்டு ஒரு கால் பசுக்களையும் கன்றுகளையும் மேய்க்கும் இடையனாய் அதில் புரையற வர்த்தித்தவனை கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 3
ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும் தானாய பெருமானைத் தன் அடியார் மனத்து என்றும் தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால் ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-3
பதவுரை Show / Hide
அன்று, Andru - வராஹகல்பத்தின் தொடக்கத்தில் (- (கண்டது தென் அரங்கத்தே–.))
ஏன் ஆகி உலகு இடந்து, Yen Aagi Ulagu Idanthu - மஹாவராஹரூபியாய்த் திருவவதரித்துப் பூமியை (அண்டபித்தியில் நின்றும் குத்தியெடுத்துக் கொணர்ந்தவனும்)
இரு நிலனும் பெரு விசும்பும் தான் ஆய பெருமானை, Iru Nilanum Peru Vizhumbum Thaan Aaya Perumaanai - விசாலமான மண்ணுலகமும் பரந்த விண்ணுலகமும் தனக்கு உடலாக இருக்கப்பெற்ற ஸ்வாமியாயும்,
தன் அடியார் மனத்து, Than Adiyaar Manathu - தன் அடியவர்களது நெஞ்சிலே
என்றும் தேன் ஆகி அமுது ஆகி திகழ்ந்தானை, Endrum Then Aagi Amuthu Aagi Thigazhnthaanai - எப்போதும் தேன்போலவும் அமிருதம் போலவும் விளங்குமவனாயும்,
ஒருகால், Orukaal - முன்பொருகாலத்திலே
மகிழ்ந்து, Magizhndhu - திருவுள்ள முவந்து
ஆன் ஆயன் ஆனானை, Aan Aayan Aanaanai - பசுக்களை மேய்க்குமிடையனாய்ப் பிறந்தவனாயுமுள்ள எம்பெருமானை
1401பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஊர்ந்து வருகிற சகடம் சின்னம் பின்னமாய் போம்படி திருவடிகளாலே உதைத்தவனை- ஸ்ரீ நரசிம்ஹமாய் ஹிரண்யனைப் பிளந்து பொகட்டவனை – பரைப்பை உடைய பூமி இரண்டு அடியாலே அடங்கும்படி திருவடிகளை நீட்டி அளந்து கொண்டவனை – யான் கண்டது அணி நீர் ஸ்ரீ தென்னரங்கத்தே) 4
வளர்ந்தவனைத் தடம் கடலுள் வலியுருவில் திரிசகடம் தளர்ந்து திற யுதைத்தவனைத் தரியாதன்றி ரணியனைப் பிளந்தவனைப் பெருநிலம் இடை நீட்டிப் பண்டு ஒரு நாள் யளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-4
பதவுரை Show / Hide
தடங் கடலுள் வளர்ந்தவனை, Thadang Kadalul Valarnthavanai - விசாலமான கடலிலே திருக்கண் வளர்ந்தருளபவனும் (- (யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே–.))
வலி உருவின் திரி சகடம், Vali Uruvin Thiri Sakadam - வலிவுள்ள சரீரத்தை யுடைத்தாய்க்கொண்டு ஊர்ந்து வந்த (அஸுரனாலாவேசிக்கப்பட்ட) சகடமானது
தளர்ந்து உதிர உதைத்தவனை, Thalarndhu Uthira Uthaithavanai - கட்டுக்குலைந்து சிந்நாபிந்நமாகும்படி (அதனைத்) திருவடியால் உதைத்தவனும்
அன்று தரியாது இரணியனை பிளந்தவனை, Andru Thariyadhu Iraniyanai Pilandhavanai - ஒருகாலத்தில் பொறுத்திருக்கமாட்டாமல் இரண்யாசுரனைக் கிழித்துப்போட்டவனும்,
பண்டு ஒருகால், Pandhu Orukaal - மற்றுமொருகாலத்தில்
ஈர் அடி நீட்டி, Eer Adi Neetti - இரண்டு திருவடிகளைப் பரப்பிவைத்து
பெருநிலம் அளந்தவனை, Perunilam Alandhavanai - விசாலமான பூமியை யெல்லாம் அளந்து கொண்டவனுமான பெருமானை
1402பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்குத்தை மர்யாதைகளைத் தப்பி-அவ்வருகே பட்டார்க்கு பிராப்யமான ஸ்ரீ பரம பதமுமாய் – அத்தை அவர்கள் பெறுகைக்கு உறுப்பாக-பிராமணர்கள் உடைய யாகங்களிலே மந்திர பூர்வமான ஹவிஸ் ஸூக்களை த்ரேத அக்னி முகத்தாலே புஜிக்குமவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 5
நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன் ஊர் அழலால் உண்டானைக் கண்டார் பின் காணாமே பேர் அழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின் மறையோர் மந்த்ரத்தின் ஆர் அழலால் உண்டானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-5
பதவுரை Show / Hide
நீர் ஆய் அழல் ஆய் கெடு நிலன் ஆய் நின்றானை, Neer Aay Azhai Aay Kedu Nilan Aay Nindhiraanai - ஜலஸ்வரூபியாம் அக்நிஸ்வரூபியாயும் விசாலமான பூமிஸ்வரூபியாயும் இருப்பவனும், (- (கண்டது தென் அரங்கத்தே–.))
அன்று, Andru - ஸ்ரீராமனாய்த் திருவவதரித்த காலத்து
அரக்கன் ஊர், Arakkan Oor - இராவணனுடைய நகரமான இலங்கையை
கண்டார் பின் காணாமே, Kandaar Pin Kaanamae - முன்பு கண்டவர்கள் பின்பு காணவொண்ணாதபடி
அழலால் உண்டானை, Azhalaal Undaanai - அக்நிக்கு இரையாக்கினவனும்,
பேர் அழல் ஆய், Paar Azhai Aay - பெரியபடபாக்னி ஸ்வரூபியும்
பெரு விசும்பு ஆய், Peru Visumbu Aay - பரமபதத்துக்கு நிர்வாஹகனும்
பின், Pin - அதற்குமேலே,
மறையோர் மந்திரத்தின் ஆர் அழலால் உண்டானை, Maraiyore Mandiraththin Aar Azhalaal Undaanai - வைதிக ப்ராஹ்மணர்களினுடைய மந்த்ரபூதமான ஹவிஸ்ஸை அக்நிமுகத்தாலே அமுதுசெய்பவனுமான பெருமாளை
1403பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (த்வேஷத்தை தவிர்ந்து-தன்னை அடைந்தவர்கள் உடைய ஸ்வ பிராப்தி உபாயத்தை தானே நிர்வஹித்துக் கொடுக்குமவனை – த்வேஷமேயாய் இருப்பார் அளவில் இருக்கும் படி – ஸ்ரீ தேவகியாரையும் ஸ்ரீ வசுதேவரையும் நலியப் புக்க வாறே அத்தைப் பொறாதே இனி அரை ஷணம் இவனை வைக்க ஒண்ணாது என்று அவனைக் கொன்றான் ஆய்த்து- த்வேஷமும் பண்ணாதே தன்னை அடைவதும் செய்யாதே இருப்பார் அளவில் இருக்கும் படி ஆபத்தை அடையாளமாக ரஷிக்கும் இத்தனை யாய்த்து-தான் அறிந்த சம்பந்தத்தையே பார்க்கும் இத்தனை – கற்பகத்தை –இப்படி உபகரித்தோம் என்று நினைத்து இராதவனை) 6
தஞ்சினத்தை தவிர்த்து அடைந்தார் தவ நெறியைத் தரியாது கஞ்சனைக் கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை வெஞ்சினத்த கொடும் தொழிலான் விசையுருவை யசைவித்த அஞ்சிறைப் புட்பாகனை யான் கண்டது தென்னரங்கத்தே –5-6-6
பதவுரை Show / Hide
தம் சினத்தை தவிர்த்து அடைந்தார், Tham Sinaththai Thavirthu Adaindhaar - தங்களுடைய த்வேஷத்தை நீக்கிவிட்டுத் தன்னைவந்து பற்றினவர்களுக்கு (- (யான் கண்டது தென் அரங்கத்தே–.))
தவம் நெறியை, Thavam Neriyai - உபாய மார்க்கமாயிருப்பவனும்,
தரியாது, Thariyadhu - (தீம்புகளைப்) பொறுத்திருக்க மாட்டாமல்
கஞ்சனை கொன்று, Kanjanai Konru - கம்ஸனைக் கொன்றொழித்தவனும்,
அன்று, Andru - முன்பொருகாலத்தில்
உலகம், Ulagam - உலகங்களை
உண்டு உமிழ்ந்த கற்பகத்தை, Undu Umizhndha Karppagaththai - உண்பதும் வெளிப்படுத்துவதும் செய்த உதாரனும்
வெம் சினத்த கொடும் தொழிலோன், Vem Sinathth Kodum Thozhilon - வெவ்விய கோபத்தினால் செய்யக்கூடிய ஸம்ஹாரத் தொழிலையுடையனான ருத்ரனுடைய
விசை உருவை, Visai Uruvai - மிக்க வேகத்தோடு கூடின வடிவை
அசைவித்த, Azaiviththa - (பாணாஸுர யுத்தத்தில் சலிக்கச் செய்தவனும்)
அம் சிறை புள் பாகனை, Am Sirai Pul Paaganai - அழகிய சிறகுடைய பெரிய திருவடியை ஏறி நடத்துபவனுமான பெருமானை
1404பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானேயாய் இருக்கிற வஸ்து தான் ஏது என்ன – ஸ்ரீ திருமாலை – பிராபகத்தில் புருஷகாரமுமாய் பிராப்யத்துக்கு அவனோபாதி இறே இருப்பது – ஸ்ரீ ஸ்ரீ திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையவனாய் இருந்து வைத்து இவ் வவஸ்தைகளை என் நெஞ்சிலே பிறப்பிக்கைக்கு தானே வந்து மனசிலே விடாதே பொருந்தி இருக்கிறவனை-தானே அர்த்தியாய் கொண்டு இருக்க-நான் கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 7
சிந்தனையைத் தவநெறியைத் திருமாலைப் பிரியாது வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார் கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-7
பதவுரை Show / Hide
சிந்தனையை, Sindhanaiai - (எனது) மனோரதத்திற்கு விஷயமான விதமும் (- (அப்படியிருந்தும் அவ்விடத்தை விட்டு) (யான கண்டது அணி நீர் தென் அரங்கத்தே–.))
தவம் நெறியை, Thavam Neriyai - உபாயமார்க்கமா யிருப்பவனும்
திரு மாலை, Thiru Maalai - திருமகள் தொழுதனம்
வடமலையை, Vadamalaiyai - திருவேங்கடமலைக்கு நிர்வாஹதனும்
வந்து, Vandhu - எழுந்தருளி
எனது மனத்து, Enathu Manathu - என்னுடைய நெஞ்சிலே
பிரியாது இருந்த, Priyadhu Irundha - ஒரு நொடிப்பொழுதும் விட்டுப்பிரியாமல் எழுந்தருளியிருப்பவனும்,
வரி வண்டு ஆர், Vari Vandu Aar - அழகிய வண்டுகள் படிந்த
கொந்து, Kondhu - பூங்கொத்துக்கள்
அணைந்த, Anaindha - நெருங்கியிருக்கப்பெற்ற
பொழில், Pozhil - சோலைகளையுடைத்தான
கோவல், Koval - திருக்கோவலூரில்
உலகு அளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை, Ulaku Alappaan Adi Nimirththa Andhanai - உலகங்களை அளப்பதற்குகாகத் திருவடிகளை நீட்டின ஸ்வாமியாக ஸேவை ஸாதிப்பவனுமான பெருமானை
1405பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னையே பற்றின என்னோடு-சம்பந்தம் உடையாருக்கும்-வைஷ்ணவர்களுக்கும் -என்றபடி எனக்கும்-எனக்கு தாயும் தமப்பனும் என்று இருக்கிற இவர்களுக்கும் நித்ய சூரிகளுக்கும் ஒக்க தரம் வையாதே சேஷியாய் இருக்குமவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 8
துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லா சமணர்க்கும் அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானைத் தன் அடைந்த எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்க்கும் எம்மனைக்கும் அமரர்க்கும் பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-8
பதவுரை Show / Hide
துவரித்த உடையவர்க்கும், Thuvariththa Udaiyavarkkum - காவித்துணி கட்டித் திரியும் பௌத்தர்களும் (- (கண்டது தென் அரங்கத்தே))
தூய்மை இல்லா சமணர்க்கும் அவர்கட்கு, Thuymai Illaa Samanarkkum Avarkadku - பரிசுத்தியற்றவர்களான ஜைநர்களுமான அந்த அவைதிகர்கள் விஷயத்தில்
அருள் இல்லா, Arul Illaa - அருள் செய்யாதவனும்
அருளானை, Arulaanai - (வைதிகர் திறத்தில்) அருள் செய்பவனும்,
தன் அடைந்த, Than Adaindha - தன்னையே ஆச்ரயித்த
எமர்கட்கும், Emarkadkum - என்னைச் சேர்ந்தவர்களுக்கும்
அடியேற்கும், Adiyerkum - அடியேனுக்கும்
எம்மாற்கும், Emmaarkkum - எனது தகப்பனுக்கும்
எம் அனைக்கும், Em Anaikkum - எனது தாய்க்கும்
அமரர்க்கும், Amararukkum - நித்ய ஸூரிகளுக்கும்
பிரானரை, Piranarai - ஸ்வாமியாயிருப்பவனமான பெருமானை
1406பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாஹ்யேந்திரங்கள்-விஷயங்களில் போகாதபடி பண்ணி – ஆத்மா யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாக தன் பக்கலிலே பக்தியைப் பண்ணுமவர்களுக்கு-தன் ஸ்வரூபாதிகளை உள்ளபடியே காட்டிக் கொடுக்கும் விஸ்மயநீயனை –யான் கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 9
பொய் வண்ணம் மனத்தகற்றிப் புலன் ஐந்தும் செலவைத்து மெய் வண்ணம் நினைந்தவர்க்கும் மெய் நின்ற வித்தகனை மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ண மரகதத்தின் அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே –5-6-9
பதவுரை Show / Hide
பொய் வண்ணம் மனத்து அகற்றி, Poi Vannam Manathu Akattri - ப்ரக்ருதி ப்ராக்ருதங்களை மனத்தில் நின்றும் ஒழித்துவிட்டு (- (யான் கண்டது தென் அரங்கத்தே–.))
புலன் ஐந்தும் செலவைத்து, Pulan Aindum Selavaiththu - பஞ்சேந்திரியங்களையும் அப்பாற்படுத்தி
மெய்வண்ணம் நினைந்தவர்க்கு, Meivannam Ninaindhavarkku - உண்மையாகத் தன்னைச் சிந்திப்பவர்களுக்கு
மெய் நின்ற, Mei Nindra - தன் ஸ்வரூபத்தை உள்ளபடியே காட்டிக்கொடுக்கின்ற
வித்தகனை, Viththakanai - ஆச்சர்யபூதனும்,
மை வண்ணம், Mai Vannam - அஞ்சனத்தின் நிறம்போன்ற நிறத்தையும்
கரு முகில் போல் திகழ் வண்ணம் மரதகத்தின் அவ் வண்ணம், Karum Mukil Pol Thigazh Vannam Marathakaththin Av Vannam - காளமேகம் போல் விளங்குகின்ற நிறத்தையுடைய மரதகப் பச்சையின் அப்படிப்பட்ட நிறத்தையும்
வண்ணனை, Vannai - தனக்கு நிறமாக வுடையனுமான பெருமானை.
1407பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ ரஷணத்துக்கு ஒரு கைம்முதல் இல்லாத பசுக்களை அவற்றோடு பொருந்தி ரஷித்து அது தான் பர தசை-என்னும்படி ஸ்ரீ கோயிலிலே வந்து சந்நிஹிதன் ஆனவனை -சுலபன் ஆனவனை – மனஸ் சோடே இத்தை அனுசந்தித்துக் கற்றவர்கள் மேல் இவர்கள் போக்க வேணும் -என்று நினையாதே இருக்க துஷ் கர்மங்கள் தாமே இது நமக்கு நிலம் அல்ல -என்று விட்டு ஓடிப் போம்) 10
ஆமருவி நிரை மேய்த்த வணி யரங்கத்து யம்மானைக் காமரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர் நாமருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும் தாமருவி வல்லார் மேல் சாரா தீ வினை தானே –5-6-10
பதவுரை Show / Hide
ஆ நிரை, Aa Nirai - பசுக்கூட்டங்களை
மருவி மேய்த்த, Maruvi Meyththa - விரும்பி மேய்த்தவனாம்
அணி அரங்கத்து அம்மானை, Ani Arangaththu Ammanaik - திருவரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனான பெருமானைக் குறித்து,
காமரு சீர் கலி கன்றி ஒலிசெய்த, Kamaru Seer Kali Kandrai Oliseiththa - விரும்பத்தக்க சீர்மையையுடைய திருமங்கையாழ்வார் அருளிச் செய்ததும்
மலி புகழ் சேர், Mali Pugazh Ser - நிரம்பிய கீர்த்தியையுடையதும்
நா மருவு, Naa Maruvu - நாவுக்குப் பொருந்தியிருப்பதுமான
தமிழ் மாலை நாலிரண்டோடு இரண்டினையும், Tamil Maalai Naalirandodu Irandinaikku - இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்
தாம் மருவி வல்லார் மேல், Thaam Maruvi Vallar Mel - தாமே விரும்பிக் கற்குமவர்களிடத்து
தீ வினை சாரா, Thee Vinai Saaraa - பாவங்கள் அணுகமாட்டா
1408பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவற்றைச் சொன்ன பாசுரம் தன்னளவும் வரும்படியாய் இருக்கையாலே இவை அடைய -தான் -என்று சொல்லும்படி சரீரதயா சேஷமாகத் தான் சேஷியாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் – என்கிறார்) 1
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும் பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும் கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும் அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-1
பதவுரை Show / Hide
பண்டை நால் மறையும், Pandai Naal Maraiyum - அநாதியாகவுள்ள நான்கு வேதங்களும் (- (ஆகிய இவற்றோடு கூடின))
வேள்வியும், Velviyum - யாகங்களும்
கேள்வி பதங்களும், Kelvi Pathangalum - கேட்டறியவேண்டிய வியாகரணமும்
பதங்களின் பொருளும், Pathangalil Porulum - அந்தந்த பதங்களினால் அறியப்படுகிற ஜீவஸமஷ்டியும்,
பிண்டம் ஆய் விரிந்த, Pindam Aayi Virindha - (காரியப் பொருள்களுக்கெல்லாம் காரணமாய்க்கொண்டு) பிண்டரூபமாயிருந்து பிறகு விரிவுபெற்றவைகளான
பிறங்கு ஒளி அனலும், Pirangu Oli Analum - மிக்க காந்தியையுடைய அக்நியென்ன
பெருகிய புனலொடு, Perugiya Punalodu - த்ரவரூபமான ஜலமென்ன
நிலனும், Nilanum - பூமியென்ன
கொண்டல், Kondal - மேகமென்ன
மாருதமும், Maruthamum - வாயுவென்ன
குரை கடல் ஏழும், Kurai Kadal Ezhum - ஆரவாரிக்கின்ற ஸப்த ஸாசரங்களென்ன
ஏழு மா மலைகளும், Ezhum Maa Malaihalum - ஏழுகுல பர்வதங்களென்ன
விசும்பும், Visumbum - ஆகாசமென்ன
அண்டமும், Andamum - பிரமாண்டமும்
தான் ஆய் நின்ற எம்பெருமான், Thaan Aayi Nindra Emperumaan - ‘தான்’ என்ற சொல்லுக்குள்ளே அடங்கும்படி தனக்கு ப்ரகாரமாயிருக்கப்பெற்ற எம்பெருமான்
அரங்கம் மா நகர் அமர்ந்தான் –, Arangam Maa Nagar Amarnthaan - திருவரங்கம் பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ளான்,
1409பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சகல பிராணிகள் உடைய சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களுக்கும் கடவனாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் –ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ அரங்க நகர் அமர்ந்தானே) 2
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்ணில் பல் குணங்களே யியற்ற தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப் பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம் அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் அரங்க நகர் அமர்ந்தானே –5-7-2
பதவுரை Show / Hide
இந்திரன் பிரமன் ஈசன் என்ற இவர்கள், Indiran Brahman Eesan Endra Ivargal - இந்திரன் பிரமன் ருத்ரன் எனப்படுகிற இத்தேவர்கள் (- (அரங்கம் மா நகர் அமர்ந்தான்))
எண் இல், En Il - கணக்கில்லாத
பல் குணங்களே இயற்ற, Pal Gunangalye Iyatra - பல திருக்குணங்களையும் சொல்லித்துதிக்கப் (பெற்றவனாய்),
பல் உயிர்க்கு எல்லாம், Pal Uyirkkum Ellam - ஜீவராசிகளுக்கெல்லாம்
தந்தையும் தாயும்; மக்களும் மிக்க சுற்றமும், Thandaiyum Thaayum Makalum Mikka Sutramaum - தகப்பனும் மாதாவும் பிள்ளைகளும் அளவறந்த ஜ்ஞாதிகளும்
சற்றி நின்று அகலா பந்தமும், Sattri Nindru Akalaa Pandhamum - சூழ்ந்து கொண்டிருந்து விட்டுப்பிரிய மாட்டாத பந்துவர்க்கமும்
பந்தம் அறுப்பது ஓர் மருந்தும், Pandham Aruppadhu Oru Marundhum - ஸம்ஸாரபந்தத்தை அறுக்க வல்ல ஒரு மருந்தும்
பான்மையும், Paanmaiyum - (ஸம்ஸாரபந்தமற்றபின் விளையக்கூடிய) நிர்மல ஸ்வபாவமும்
அந்தமும், Andhamum - விநாசமும்
வாழ்வும், Vazhvum - வாழ்ச்சியும்
ஆய, Aay - தானேயாயிருப்பவனான
எம் பெருமான், Em Perumaan - ஸ்வாமியானவன்
1410பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னைப் பேணாதே கேட்கிறவனுக்கு ஆச்சார்ய அநுவர்த்தனம் பண்ண வேண்டுகிறதோ -என்று கூச வேண்டாத வடிவைக் கொண்டு தன்னைப் பெறிலும் பெற ஒண்ணாத வேதங்களை வெளியிட்டவன் – அன்று பிரமாணத்தை வெளி இட்டுத் தந்தவன்-இன்று பிரமேய பூதனான தன்னை வெளி இட்டுக் கொண்டு வந்து கண் வளர்ந்து அருளினான்) 3
மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவருலகும் துன்னு மா இருளாய்த் துலங்கு ஒளி சுருங்கித் தொல்லை நான்மறைகளும் மறைய பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறந்கிருள் நிறம் கெட ஒரு நாள் அன்னமாய் அன்று அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-3
பதவுரை Show / Hide
மன்னு மா நிலனும், Mannu Maa Nilanum - ஸ்தாவரமான பெரிய பூமியும் (- (அன்று ஒருநாள் அங்கு;) (அரங்கம் மா நகர் அமர்ந்தான்;))
மலைகளும், Malaigalum - மலைகளும்
கடலும், Kadalum - ஸமுத்ரங்களும்
வானமும், Vaanamum - ஆகாசமும்
தானவர் உலகும், Dhanavar Ulakum - அசுரர்களினிருப்பிடமும் (ஆகிய இவையெல்லாம்)
துன்னு மா இருள் ஆய், Thunnu Maa Irul Aay - நெருங்கிய போரிருள் மூடப்பெற்றவனாய்
துலங்க ஒளி சுருங்கி, Thulanga Oli Surungi - விளங்கும் பிரகாசம் மழுங்கி
தொல்லை நால் மறைகளும் மறை, Thollai Naal Maraihalum Marai - பழைய நால்வேதங்களும் மறைந்துபோக,
பின்னும், Pinnum - மீண்டும்
வானவர்க்கும், Vaanavarkkum - தேவர்களுக்கும்
முனிவர்க்கும், Munivarkkum - ரிஷிகளுக்கும்
நல்கி, Nalki - அருள்கூர்ந்து
பிறங்கு இருள் நிறம் கெட, Pirangu Irul Niram Keda - நிபிடமான இருள் நீங்கும்படியாக
அரு மறை பயந்தான், Aru Marai Bayandhaan - அரிய வேதங்களை உபகரித்தருளினவன்
1411பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான்கு தோள்கள் கொண்டு வ்யாபரித்த படி தான் ஆயிரம் தோள் கொண்டு வ்யாபரித்தான் என்னலாம்படி யாய்த்து) 4
மாயிரும் குன்றம் ஓன்று மத்தாக மாசுணம் அதனோடும் அளவி பாயிரும் பௌவம் பகடு விண்டலறப் படுதிரை விசும்பிடைப் படர சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவும் தாமுடன் திசைப்ப ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-4
பதவுரை Show / Hide
மா இரு குன்றம் ஒன்று, Maa Iru Kuntram Ondru - அகன்றும் உயர்ந்துமிருக்கிற (மந்தரமென்னும்) ஒருமலையை (- (அரங்கம் மா நகர் அமர்ந்தான்))
மத்து ஆக, Maththu Aaga - மத்தாகக்கொண்டு
அதனொடும், Adhanodum - அம்மலையிலே
மாசுணம், Masunam - (வாஸுகியென்னும); நாகத்தை
அளவி, Alavi - சுற்றி,
பா இரு பௌவம், Paa Iru Pouvam - பரந்தும் நீண்டுமிருக்கிற ஸமுத்ரம்.
பகடு விண்டு அலற, Pagadu Vindu Alara - யானைபிளிறுமா போலே பிளிறவும்
படு திரை, Padu Thirai - உண்டான அலைகள்
விசும்பிடை படர, Visumbidai Padara - ஆகாசத்திலே சென்றுகிட்டி வியாபிக்கவும்
சே இரு விசும்பும், Che Iru Visumbum - மிக்க உயரத்திலுள்ள ஸ்வர்க்காதி லோகங்களும்
திங்களும், Thingalum - சந்திரமும்
சுடரும், Sudarum - (மற்றுமுள்ள) தேஜஸ் பதார்த்தங்களும்
தேவர் தாமும், Thevar Thamum - தேவதைகளும்
உடன், Udan - எக்காலத்திலே
திசைப்ப, Thisaippa - ஆச்சரியப்படவும்
அலைகடல், Alaikadal - அலையெறிகின்ற கடலை
ஆயிரம் தோளால், Aayiram Tholal - பல திருக்கைகளினால்
கடைந்தான், Kadaindhaan - கடைந்தருளினவன்
1412பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நரசிம்ஹ வேஷத்தைக் கொண்டவன் இன்னம் அப்படிக்கொத்த விரோதி வர்க்கம் வந்து கிட்டினால் போக்குகைக்காக இங்கே வந்து சந்நிஹிதன் ஆனவன்) 5
எங்கனே யுய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம் பொங்கு வெங்குருதி பொன் மலை பிளந்து பொழி தரும் அருவி ஒத்து இழிய வெங்கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது அங்கனே ஒக்க வரி யுருவானான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-5
பதவுரை Show / Hide
தானவர், Thaanavar - அசுரர்கள் (- (அரங்கம் மா நகர் அமர்ந்தான்))
நினைந்தால், Ninaindhaal - (இரணியன் பட்ட பாட்டைச் சிந்தித்தார்களாகில்
எங்ஙனே உய்வர், Engganey Uivar - எப்படி உயிர்தரித்திருப்பார்கள்!;
இரணியன், Iraniyan - ஹிரண்யாஸுரனுடைய
பூண் இலங்கு அகலம், Poon Ilangu Akalam - ஆபரணங்கள் விளங்கப்பெற்ற மார்வில் நின்றும்
பொங்கு வெம் குருதி, Pongu Vem Kuruthi - பொங்குகின்ற உஷ்ணமான ரத்தமானது
பொன் மலை பிளந்து பொழி தரும் அருவி ஒத்து, Pon Malai Pilanthu Pozhi Tharum Aruvi Othu - மேருமலையைப் பிளந்து கொண்டு வெள்ளமிடுகின்ற அருவி போன்று
இழிய, Izhaiya - பெருகும்படியாக,
வெம் கண், Vem Kan - தீக்ஷ்ணமான கண்களையும்
வாள் எயிறு, Vaal Eiyiru - வாள்போன்ற பற்களையும் உடையதாய்
மா, Maa - பெரிதான
ஓர் வெள்ளி விலங்கல், Oor Velli Vilankal - ஒரு வெள்ளிமலையானது
விண் உற, Vin Ura - ஆகாசத்தைக்கிட்டி
கனல் விழித்து, Kanal Vizhithu - தீவிழிவிழித்து
எழுந்தது அங்ஙனே ஒக்க, Ezhunthathu Anggane Okka - எழுந்தால் எப்படியிருக்குமோ அப்படிப்பட்டதான
அரி உரு ஆனான், Ari Uru Aanaan - நரஸிம்ஹாவதாரமெடுத்தவன்
1413பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய அனுபவம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்துக்குப் போக்கு வீடாக புகரை உடைத்தான பல வாய்களையும் உடைய ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளினவன் அப்படியே காணலாம்படி இங்கே வந்து சந்நிஹிதன் ஆனான்) 6
ஆயிரம் குன்றம் சென்றது தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள் ஆயிரம் துணிய அடல் மழுப்பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலைகடல் நடுவே ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-6
பதவுரை Show / Hide
ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய, Aayiram Kuntram Sendru Thokkanaiya - ஆயிரம் மலைகள் நெருங்கச் சேர்ந்தாற்போலே                       இருக்கப் பெற்றவையும் (- (அரங்கம் மா நகர் அமர்ந்தான்))
அடல் புரை, Adal Purai - யுத்தத்திற்குத் தகுதியானவையும்
எழில் திகழ், Ezhil Thigal - அழகு பொலிந்தவையும்
திரள் தோள் ஆயிரம்   திரண்டவையுமான, Thiral Thol Aayiram Thirandavaiyumana - (கார்த்த வீர்யார்ஜுநனுடைய) தோள்களாயிரமும்
துணிய, Thuniya - அறும்படியாக
அடல் மழு பற்றி, Adal Mazhu Patri - தீக்ஷ்ணமான மழுப்படையைக் கையிற்கொண்டு
மற்றவன், Mattravan - அந்தக்கார்த்த வீரியார்ஜுநனை
அகல் விசும்பு அணைய, Akal Visumbu Anaiya - விசாலமான வீரஸ்வர்க்கத்தையடையச் செய்து (அதன் பின்)
அமரர், Amarar - தேவர்கள்
சென்று, Senru - கிட்டி
ஆயிரம் பெயரால் இறைஞ்ச, Aayiram Peyaraal Irajinja - ஸஹஸ்ரநாமங்களைச் சொல்லித் துதிக்க
ஆலை கடல நடுவே, Aalai Kadala Naduve - அலையெறிகின்ற ஸமுத்ரமத்யத்தில்
சுடர், Sudar - ஒளிபொருந்திய
ஆயிரம் வாய், Aayiram Vaai - ஸஹஸ்ரமுகங்களையுடைய
அரவு அணை, Aravu Anai - திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியிலே
அறிது துயில் துயின்றான், Aridhu Thuyil Thuyinraan - யோகநித்திரை பண்ணும் பெருமான்
1414பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏதேனுமாக இட்ட தடையைக் கொண்டு ஆழக் கடவ கடல் வழி பட நீரிலே புக்கு அமிழக் கடவ மலைகள் மிதந்து அணையாக -கணக்கு வழக்குப்பட ஒரு வியாபாரம் பண்ண மாட்டாத வானர ஜாதியைக் கொண்டு அடிமை கொண்டு நீர்க் கிளப்பத்தை உடைத்தான கடலை அடைத்தான் –அரங்க மா நகர் அமர்ந்தானே) 7
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன் எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறிகடல் நெறிபட மலையால் அரி குலம் பணி கொண்டு அலைகடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-7
பதவுரை Show / Hide
சுரி குழல் கனிவாய் திருவினை பிரித்த, Suri Kuzhal Kanivai Thiruvinai Piriththa - சிறந்த கூந்தலையும் கொவ்வைக்கனிபோன்ற அதரத்தையும் உடையளான பிராட்டியை வேறுபடுத்தின (- (கடலைக் கடக்கவேண்டிக் கடலரசனைநோக்கி) (அரங்கம் மா நகர் அமர்ந்தான்–.))
கொடுமையில் கடுவிசை அரக்கன், Kodumaiyil Kadhuvisai Arakkan - கொடுமையில் பெரிய வேகத்தையுடையனான இராவணனுடைய
எரி விழித்து இலங்கு மணிமுடி பொடி செய்து, Eri Vizhithu Ilangu Manimudi Podi Seidhu - அக்நிபோன்று விளங்கின மணிகளழுத்தின கிரீடங்களைப் பொடிபடுத்தி
இலங்கை, Ilankai - லங்காபுரியை
பாழ்படுப்ப, Paazhpaduppa - பாழாக்கி விடவேணுமென்று ஸங்கல்பித்து
வரி சிலை வளைய அடு சரம் துரந்து, Vari Silai Valaiya Adu Saram Thurandhu - அழகிய வில்லை வளைத்துக் கொலையம்புகளைப் பிரயோகித்து, (அவ்வளவிலே)
மறி கடல் நெறிபட, Mari Kadala Neripada - அலைமடிகின்ற கடல் வழிபட்டு அமைந்திட
அரி குலம் பணி கொண்டு அலை கடல் மலையால் அடைத்தான், Ari Kulam Pani Kondu Alai Kadala Malaiyaal Adaiththaan - வாநர ஸமூஹங்கள் கைங்கரியம் செய்யப் பெற்று அலைகடலை மலைகளினால் அணைகட்டின பெருமான்
1415பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனுடைய பிரகாசத்துக்கு அடைத்த சாலம் தன்னிலே அநேக ஆயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே இருந்துள்ள புகரை உடைய ஸ்ரீ திரு ஆழியைக் கொண்டு அந்த ஆதித்யனை மறைத்தவன் – இந்த ஆதித்யன் உடைய தேஜஸ்ஸூ கண்ணாலே முகக்கலாம் படி அளவு பட்டு இருக்கையாலே தமஸ்ஸூ போம்படியாய் இருக்கும் –- அங்கன் அன்றிக்கே ஸ்ரீ திரு ஆழி ஆழ்வான் தேஜஸ்ஸூ நேர் கொடு நேர் கண் கொண்டு பார்க்க ஒண்ணாத படி மிக்கு இருக்கையாலே பளபளத்து கண்ணை இருளைப் பண்ணிற்று) 8
ஊழியாய் ஓமத்து உச்சியாய் ஒரு காலுடைய தேர் ஒருவனாய் உலகினில் சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை மலங்க வன்று வடுசரம் துரந்து பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெடப் பகலே ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-8
பதவுரை Show / Hide
ஊழி ஆய், Oozhi Aay - காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும நிர்வாஹகனாய் (- (அன்று அங்கு;) (அரங்கம் மா நகர் அமர்ந்தான்))
ஓமத்து உச்சி ஆய், Omaththu Uchi Aay - யஜ்ஞங்களுக்குத் தலைவனாய்
ஒருகால் உடைய தேர் ஒருவன் ஆய், Orukaal Udaiya Ther Oruvan Aay - ஒற்றைச் சக்கரத்தேர் வலவனான ஸூர்யனுக்கு அந்தராத்மாவாய்
உலகில், Ulagil - இவ்வுலகத்திலே,
சூழி மால் யானை, Sozhi Maal Yaanai - முகபடாத்தையுடைத்தாய்ப் பெரிதான ஸ்ரீகஜேந்திரத்தினுடைய
துயர் கெடுத்து, Thuyar Keduthu - துன்பத்தைப் போக்கினவனாய்
அன்று இலங்கை மலங்க அடு சரம் துரந்து, Andru Ilangai Malanga Adu Saram Thurandhu - முன்பொருகால் லங்காபுரியானது பங்கமடையுமாறு கொலையம்புகளைப் பிரயோகித்தவனாய்,
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி, Paazhiyaal Mikka Paarththanukku Aruli - வலிமைமிகுந்த அர்ஜுநனுக்கு அருள்கூர்ந்து
பகலவன் ஒளி கெட, Pagalavan Oli Keda - ஸூர்யன் ஒளிமழுங்கும்படி
பகலே, Pagale - பகற்போதிலேயே
ஆழியால் ஆழியை மறைத்தான், Aazhiyaal Aazhiya Maraitthaan - சக்கராயுதத்தினால் ஸூர்யனை மறைத்தவனான பெருமான்
1416பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாதிகளுக்கு தூரஸ்தனாய்–என் போல்வாருக்கு கையாளாய்- என் பக்கல் அபேஷா மாத்ரமும் இன்றிக்கே இருக்கத் தானே வந்து என்னுடைய மானஸ வ்யசனத்தைப் போக்கும் –ஆயனாய் ஸ்ரீ கோவர்த்தன கிரியைத் தரித்து பண்ணின உபகாரம் அறியாத பசுக்களையும் இடையரையும் நோக்கினவன்) 9
பேயினார் முலை யூண் பிள்ளையாய் ஒரு கால் பெரு நிலம் விழுங்கி யது உமிழ்ந்த வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணி முடி வானவர் தமக்குச் சேயனாய் அடியேற்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும் ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-9
பதவுரை Show / Hide
பேயின் ஆர் முலை ஊண் பிள்ளை ஆய், Peyin Aar Mulai Oon Pillai Aay - பூதனையென்னும் பேய்ச்சியினுடைய (விஷம்) நிறைந்த முலையை உணவாகக் கொண்ட பேதையாய் (- (அரங்கம் மா நகர் அமர்ந்தான்))
ஒருகால் பெருநிலம் விழுங்கி அது உமிழ்ந்தவாயன் ஆய், Orukaal Perunilam Vizhungki Adhu Umizhndhavaayan Aay - (பிரளயம் நேர்ந்த) ஒருகாலத்தில் விசாலமான பூமியை உட்கொண்டு (பிறகு ஸ்ருஷ்டி காலத்தில்) அந்தப் பூமியை வெளிப்புறப்படவிட்ட திருப்பவளத்தையுடையனாய்,
மால் ஆய், Maal Aay - ஸர்வேச்வரனாய்,
ஆல் இலை வளர்ந்து, Aal Ilai Valarnthu - ஆலந்தளிரில் கண்வளர்ந்தருளினவனாய்
முணி முடி வானவர் தமக்கு சேயன் ஆய், Muni Mudi Vaanavar Thamakku Seeyan Aay - மணிமுடி யணிந்த தேவதைகளுக்கு எட்டாதவனாய்
அடியேற்கு அணியன் ஆய் வந்து, Adiyeerkku Aniyan Aay Vandhu - அடியேனுக்குக் கிட்டவந்து
என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும், En Sindhaiyul Vem Thuyar Arukkum - எனது நெஞ்சிலுள்ள வெவ்விய துக்கங்களைப் போக்குமவனாய்
அன்று, Andru - முன்பொருகால்
ஆயன் ஆய் குன்றம் ஒன்று எடுத்தான், Aayan Aay Kunram Ondru Eduththaan - கோபால க்ருஷ்ணனாகத் திருவவதரித்து கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்தவனான பெருமான்
1417பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லஷணங்களில் ஒன்றும் குறையாத படி விஸ்ருதமான வித்தை அப்யசிக்க வல்லார் ப்ராரப்தமான கர்மங்களை வாசனையோடு போக்கப் பெறுவார்) 10
பொன்னு மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து அன்னம் மாடுலவு மலை புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள் பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே –5-7-10
பதவுரை Show / Hide
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து, Ponnum Maa Maniyum Muththamum Sumandhu - பொன்களையும் சிறந்த ரத்தனங்களையும் முத்துக்களையும் திரட்டிக்கொண்டு
திரை பொரு மா நதி புடை சூழ்ந்து, Thirai Poru Maa Nathi Pudai Soozhndhu - அலையெறிந்துகொண்டு வருகின்ற பெரியநதியாகிய திருக்காவேரியினால் இரு பக்கமும் சூழப்பெற்றும்
மாடு அன்னம் உலவும் அலை புனல் சூழ்ந்த, Maadu Annan Ulavum Alai Punal Soozhndhu - பக்கங்களிலே அன்னப்பறவைகள் உலாவப்பெற்ற அலைகொண்ட தடாகங்களினால் சூழப் பெற்றுமிருக்கின்ற
அரங்கம் மா நகர், Arangam Maa Nagar - திருவரங்கம் பெரிய கோயிலில்
அமர்ந்தானை, Amarnthaanai - பொருந்தியுள்ள பெருமானைக்குறித்து,
மன்னு மா மாடம் மங்கையர் தலைவன், Mannu Maa Maadam Mangaiyar Thalaivan - சாச்வதமான பெரிய மாடங்களையுடைய திருமங்கையில் உள்ளார்க்குத் தலைவரும்
மானம் வேல், Maanam Vel - சிறந்த வேலாயதத்தையுடையவருமான
கலியன், Kaliyan - ஆழ்வார்
வாய் ஒலிகள் பன்னிய பனுவல், Vaai Oligal Panniya Panuval - விஸ்தரித்தருளிச் செய்த இப்பாசுரங்களை
பாடுவார், Paaduvaar - பாடுமவர்கள்
நாளும் பழ வினைபற்று அறுப்பார், Naalum Pazha Vinaipatru Aruppaar - எந்நாளும் கல்மஷ ஸம்பந்தமற்றிருப்பர்கள்.
1418பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தனை குறைவாளனை விஷயீ கரியாது ஒழிகிறது என் –என்னாப் போலே யாய்த்து பார்வை இருக்கிறது – இவள் பருவத்தையும் நோக்கையும் கண்டால் இவள் வழியே போவான் ஒருவன் இறே – பிராட்டியை தோழி என்றும்-இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை – சேஷ பூதன் உடைய தய நீயமான பாசுரம் சேஷி நெஞ்சிலே வேர் விழுந்து ரஷணத்துக்காய்க் கிடக்குமா போலே சேஷி பாசுரம் சேஷ பூதன் உடைய நெஞ்சிலே கிடக்கக் கடவது இறே கைங்கர்யத்துக்காக – ஸ்ரீ ராமாவதாரத்தைச் சொல்லி இங்கே சேர்க்கையாலே நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் -என்கிறபடியே அவரே இங்கே சாய்ந்தார் என்கிறது உடையவன் ஆகையாலே-உடைமை தேட்டமாய் அன்றோ-இங்கு வந்து சாய்ந்து அருளிற்று) 1
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1
பதவுரை Show / Hide
ஆழி வண்ண, Aazhi Vanna - கடல்வண்ணனே! (- (அக்குஹனை நோக்கி) (நான் அவற்றில் ஈடுபட்டு))
அணிபொழில் திருஅரங்கத்து அம்மானே, Anipozhil Thiruarangathu Ammanae - அழகிய சோலைகள் சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே!
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது, Ezhaik Aethalan Keel Magan Ennaathu - (இவன்) அறிவில்லாதவன், கொலைத்தொழில் புரிகின்றவன், நீச ஜாதியிற் பிறந்தவன்’ என்று (குஹனுடைய தாழ்வுகளைக்) கருதாமல்
இரங்கி, Irangi - (அவன் மீது) கிருபை பண்ணி (அவனை உயிர்த்தோழனாக அங்கீகரித்து)
மற்று, Mattru - அதற்கு மேலே
அவற்கு, Avarukku - அந்தக் குஹப்பெருமான் விஷயத்தில்
இன் அருள் சுரந்து, In Arul Surandhu - இனிமையான கருணை மேன்மேலும் உண்டாகப்பெற்றவனாய்
மாழை மான் மட நோக்கி, Maazhai Maan Mada Nookki - மானின் பார்வைபோன்ற கபடமற்ற கண் பார்வையை உடையளான என் மனைவியாகிய இந்த ஸீதை
உன் தோழி, Un Thozhi - உனக்குத் தோழியாவாள்;
எம்பி, Embi - என் தம்பியான லக்ஷ்மணன்
உம்பி, Umbi - உன் தம்பியாவன்;
என்று, Endru - என்று சொல்லி
ஒழிந்திலை, Ozhinthilai - இவ்வளவோடு நீவிட்டிடாதவனாய்
உகந்து, Ugandhu - மகிழ்ச்சி கொண்டு
நீ எனக்கு தோழன், Nee Enakku Thozhan - ‘நீ எனக்கு நண்பன்
இங்கு ஒழி, Ingu Ozhi - இங்கே நின்றிடுவாயாக’
என்ற, Endra - என்றும் (நீ ஸ்ரீராமாவதாரத்திற்) சொல்லியருளிய
சொற்கள், Sorkkal - வார்த்தைகள்
வந்து, Vandhu - கர்ணபரம்பரையாய் என் கேள்விக்கு வந்து
அடியேன் மனத்து இருந்திட, Adiyen Manaththu Irundhida - அடியேனுடைய நெஞ்சிலே பொருந்தியிருக்க,
நின் அடி இணை அடைந்தேன், Nin Adi Inai Adaindhen - உனது திருவடிகள் இரண்டையும் சரணமாகப் பற்றினேன்
1419பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜன்ம வ்ருத்தங்களால் குறைய நின்ற ஸ்ரீ குஹப் பெருமாள் பக்கல் பண்ணின விஷயீ காரத்தை என் பக்கலிலே பண்ண வேணும் என்று சரணம் புக்கார் -கீழில் பாட்டில் மனுஷ்ய சஜாதீயத்வம் கிடக்கச் செய்தே வந்த நிகர்ஷம் இறே -கீழ்ச் சொல்லிற்று இங்கு விசஜாதியமான திர்யக்கை அகப்பட-தத்கத நிகர்ஷம் பாராதே விஷயீ கரித்த மாத்ரம் அன்றிக்கே அந்தபுர கைங்கர்யத்திலே ஏவி அடிமை கொண்டால் போலே என் அளவிலும் கைங்கர்யத்தைக் கொள்ள வேணும் -என்கிறார் – இவ்வதிகாரிக்கு விஷயீகார அநந்தரம் கைங்கர்யத்தில் அன்வயிக்கும் அத்தனை போக்கி சாதனத்தில் அன்வயிக்க வேண்டியது இல்லை போலே காணும் இங்கு ஒழி என்கிற இடத்தில் சொல்லிற்று இத்தனை இறே) 2
வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும் ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-2
பதவுரை Show / Hide
வாதம் மா மகன், Vadhama Maa Magan - வாயுதேவனது பெரிய குமாரனான அனுமான் (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!-;) (அடி இணை அடைந்தேன்–.))
மற்று ஓர் சாதி விலங்கு மற்கடம் என்று ஒழிந்திலை, Mattru Oru Saadhi Vilangu Markadham Endru Ozhindilai - வேறு ஜாதியிற் பிறந்தவனென்றும், அதிலும் பகுத்தறிவில்லாத மிருகமென்றும், அதிலும் பலவகைப் பொல்லாங்குகளையுடைய குரங்கென்றும் (அவனது இழி குணங்களைப் பாராட்டி) விட்டிடாதவனாய்
உகந்து, Ugandhu - அவனிடம் அன்புவைத்து
காதல் ஆதரம் கடலினும் பெருக, Kaadhal Aadharam Kadalinum Peruga - அன்பும் ஆசையும் கடலைக் காட்டிலும், அதிகமாக வளர
செய், Sei - (நமக்கு இவன்) செய்த
தகவினக்கு, Thagavinaikku - உபகாரங்களுக்கு
கைம்மாறு இல்லை, Kaimaarru Illai - பிரதியுபகாரம் இல்லை’
என்று, Endru - என்று திருவுள்ளம் பற்றி
கோது இல் வாய் மையினாயொடும் உடனே உண்பன் நான், Kothu Il Vaai Maiyinayodum Udaney Unban Naan - குற்றமற்ற மெய்ம்மொழிகளை யுடையனான உன்னோடு உடனிருந்து உண்பேன்யான்’
என்ற, Endra - என்று (அவ்வனுமானைக் குறித்துக்) கூறியருளின
ஒண் பொருள், On Porul - சிறந்த விஷயம்
எனக்கும் ஆதல் வேண்டும் என்று, Enakkum Aadhai Vendum Endru - எளியனான அடியேன் விஷயத்திலும் உண்டாகவேண்டும் என்றெண்ணி
1420பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விஷயீகாரத்தையும்-விஷயீகார பலமான கைங்கர்யத்தையும்-சொல்லிற்று கீழ் கைங்கர்யத்துக்கு இடைச் சுவரான விரோதியைப் போக்கி-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை கைங்கர்யத்திலே அன்வயித்தால் போலே என்னுடைய விரோதியைப் போக்கி என்னைக் கைங்கர்யத்தில் அன்வயிப்பிக்க வேணும் -என்கிறார் – விஷயீகாரத்துக்கும் கைங்கர்யத்துக்கும் நிகர்ஷம் முன்னிட வேண்டுகையாலே சொன்னார் கீழ் விரோதி நிரசனத்துக்கு நிகர்ஷம் முன்னிட வேண்டியது இல்லை இறே விஷயீகாரம் ஆகிறது -உபாயத் தளவும் செல்ல பலிக்குமது இறே அவன் உபாயம் ஆனால் பின்னை கைங்கர்யத்தில் அன்வயிப்பிக்கும் இத்தனை அதுக்கு விரோதி அறுகை இறே பின்னை உள்ளது-அந்த விரோதி தான் உபய ஆகாரமாய் இருக்கக் கடவது அவை ஆகிறன-இந்த்ரிய வஸ்யதையும் யம வஸ்யதையும் இறே மேலில் பாட்டில் யம வச்யததை-இங்கு இந்த்ரிய வச்யதை சொல்லுகிறது எங்கனே என்னில் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு விரோதியான முதலையை நிரசித்தால் போலே எனக்கு விரோதியான இந்த்ரியங்களை நிரசித்து அருள வேணும் -என்கிறார் இவ்வதிகார்க்கு இந்த்ரிய வஸ்யதையாவது-விஷயாந்தர ப்ராவண்யம் முதலாய் கைங்கர்ய ஸ்பர்சியான அஹங்காரம் மமகாரம் முடிவாய் இறே இருப்பது) 3
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம் முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக் கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன் அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே –5-8-3
பதவுரை Show / Hide
கடி கொள் பூ பொழில் காமரு பொய்கை வைகுதாமரை வாங்கிய வேழம், Kadi Kol Poo Pozhil Kaamaru Poigai Vaikuthamarai Vaangiya Vezham - நறுமணங்கொண்ட மலர்கள் நிறைந்த சோலைகளாற் சூழப்பட்ட அழகிய பொய்கையிலே பொருந்திய தாமரைமலரை (அர்ச்சனைக்காகப்) பறித்த யானை யானது (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே;-) (அப்பொழுது நீ))
முடியும் வண்ணம், Mudiyum Vannam - மிகுந்த ஆபத்தையடையும்படி
ஓர் முழு வலி முதலை பற்ற, Oru Muzhu Vali Muthalai Patra - மிக்க வலிமையையுடைய தொரு முதலையானது பிடித்துக்கொள்ள
அது நின் சரண் நினைப்ப, Adhu Nin Saran Ninaippa - அதனால் வருந்திய அந்த யானையானது (தன்வலிமையால் விடுவித்துக்கொள்ள முடியாமல்) உனது திருவடிகளைத் தியானிக்க,)
கோடிய வாய் விலங்கின் உயிர் மலங்க, Kodiyai Vaai Vilangin Uir Malangka - கொடுந்தன்மையுள்ள வாயையுடைய முதலையின் பிராணன் சிதையும் படி
கொண்ட, Konda - வருவித்துக்கொண்ட
சீற்றம் ஒன்று, Seetrham Ondru - ஒரு கோபம்
உண்டு உளது, Undu Ulathu - உண்டாயுள்ளதை
அறிந்து, Arindhu - தெரிந்து கொண்டு (உன் அடியனேனும் வந்து அடி இணை அடந்தேன்.)
1421பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விஷயீகாரம் சொல்லி-விஷயீகார கார்யமான கைங்கர்யம் சொல்லி அதுக்கு இடைச் சுவரான தேக சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும்என்கிறதே -இரண்டு பாட்டாலே – அதில் தேக சம்பந்தம் கிடக்கச் செய்தே அனுபவ விரோதியான பாபைகதேச பலமான இந்த்ரிய வஸ்யதையைப் இதில் சரீர சம்பந்தம் அற்றால்-சர்வ பாப பலமாய் அனுபவ விரோதியாய்க் கொண்டு வரும் யம வஸ்யதையை தவிர்க்க வேணும் -என்கிறார் – ஸூமுகனுக்கு பெரிய திருவடியால் வந்த பயத்தை தவிர்த்துக் கொடுத்தால் போலே எனக்கு எம வச்யதையால் வந்த பயத்தை அறுத்து அவனை இட்டே பரிஹர -என்னும்படி பண்ணித் தர வேணும் -என்கிறார் சரணம் புகுவார் தாம்தாம் உடைய நிகர்ஷத்தை முன்னிட்டுக் கொண்டு இறே சரணம் புகுவது – அந்நிகர்ஷம் தான் ஆகிஞ்சந்ய ரூபமாயும்-அபராத ரூபமாயும் இறே இருப்பது அதாகிறது-அது தன்னை அனுசந்தித்தார் இறே அடைவே ந தர்ம நிஷ்டோச்மி-ந நிந்திதம் கர்ம-ஜ்ஞான கிரியாச பஜநா-இத்யாதிகளும் ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டது கீழ்–இதில் அபராதத்தை முன்னிடுகிறது) 4
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய் நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து வெஞ்சொல் ஆளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன யுளவதற்கு அடியேன் அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-4
பதவுரை Show / Hide
நஞ்சு சோர்வது, Nanju Soorvathu - விஷத்தை உமிழ்வதும் (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே-;) (அதற்கு அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன்–.))
வெம் சினம், Vem Sinam - கொடிய கோபத்தையுடையதுமான
ஓர் அரவம், Oru Aravam - (சுமுகனென்னும்) ஒரு பாம்பானது
வெருவி, Veruvi - (தன்னைக்கொல்ல விருக்கின்ற கருடனுக்கு) அஞ்சி
வந்து, Vandhu - உன்னிடத்தில் வந்து
நின் சரண் என, Nin Saran Ena - ‘உனக்கு அடைக்கலப் பொருளாகின்றேன் யான்’ என்று சொல்லி உன்னைச் சரணமடைய,
சரண் ஆய், Saran Aay - நீ அதற்கு ரக்ஷகனாகி
நெஞ்சில் கொண்டு, Nenjil Kondu - (அவனுக்கு நெர்ந்த துன்ப நிலையையும் அவன் சொல்லையும்) உன் திருவுள்ளத்திற்கொண்டு
நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது, Nin Am Sirai Paravaikku Adaikalam Koduthu Arul Seithathu - உனது அடியவனான அழகிய இறகுகளையுடைய கருடனிடத்தில் (அப்பாம்பை) அடைக்கலப் பொருளாக நீ ஒப்பித்துப் பாதுகாத்தருளிய திறத்தை
அடியேன் அறிந்து, Adiyen Arindhu - அடியேன் தெரிந்து கொண்டு,
வெம் சொலாளர்கள், Vem Solalargal - கொடிய சொற்களைச் சொல்பவர்களான
நமன் தமர், Naman Thamar - யமதூதர்கள்
கடியர், Kadiyar - பயங்கரமான தோற்றமுடையவர்களாய்
செய்வன, Seivan - (மரணகாலத்திலும் மறுமையிலும்) செய்பவையான
கொடிய, Kodiy - கொடுந்தொழில்கள்
உள், Ul - பலவுளவன்றோ;
1422பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விஷயீ காரத்தைச் சொல்லி-கைங்கர்யத்தைச் சொல்லி கைங்கர்யத்தின் உடைய உபய ஆகாரமான விரோதிகளைப் போக்கி தந்து அருள வேணும் -என்றார் கீழ் இதில் ஸ்ரீ கோவிந்த ஸ்வாமி உடைய கருத்து அறிந்து செய்தால் போலே என்னுடைய கருத்து அறிந்து கார்யம் செய்ய வேணும் -என்கிறார் – கீழ் நின்ற நிலைக்கு இவர்க்கு கருத்தாவது இந்த்ரிய வஸ்யதைக்கும் யம வஸ்யதைக்கும் அடியான-தேக சம்பந்தத்தை அறுத்து தர வேணும் என்கை மரணமானால் -என்கிறபடியே தன்னடையே சரீர விச்லேஷம் சித்திக்குமாகில் அபேஷிககிறது என் என்னில்-க்ரம ப்ராப்தி பற்றாத த்வேரா திரேகத்தாலே – ஸ்ரீ கோவிந்த ஸ்வாமி-என்பான் ஒரு பிராமணன் இதிஹாச புராண ஸ்ரவணத்தாலே ஸ்ரீ கிருஷ்ணன் உடைய பால்ய சேஷ்டிதங்களையும் ராச க்ரீடாதிகளையும் சாஷாத்கரித்து காமனாய் முன்பு காண வாராய் -என்று எண்ணி இருப்பார்க்கு பரித்ராணாயா சாது நாம் -என்கிறபடியே காட்டிக் கொடுத்து போருமவன் அன்றோ நமக்கும் அவ்வாசை உண்டானால் சித்தியாமை இல்லை-ததர்த்தமாக அர்த்திப்போம் -என்று சரீரத்தை ஒறுத்து தபஸை பண்ண-இவன் நினைவின் படியே ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தின் படிகளை அடைய சிருஷ்டித்துக் காட்டி அனுபவிப்பித்து-உனக்கு வேண்டுவது என் என்று கேட்டு அருள கூடப் போந்து இப்படி தேவரை அனுபவிக்கும் அத்தனை -என்ன நீ தபஸ் பண்ணுகிற போது விஷய விதுரனாய்-அன்ன பாநாதிகளையும் கழித்து உடம்பையும் நாரும் நரம்புமாய் ஆக்கிக் கொடு போந்தாய் இங்கே இருந்து நெகிழ்ந்த போகங்களையும் கழித்து வா என்று அவன் கருத்து அறிந்து அருளிச் செய்தால் போலே என் கருத்து அறிந்து கார்யம் செய்ய வேணும் -என்கிறார் – இவ்வர்த்தம் சாப்தம் அன்றிக்கே இருக்க இவருக்கு இது கருத்தாக சொல்லுகிறது பிரகரண பலத்தாலும்-அர்த்த க்ரமத்தாலும்-நாசமான பாசம் -என்றும் போந்தேன் -என்றும் சொல்லுகிற இவருக்கு இது கருத்தாக வேணும் இறே) 5
மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடிக்கண்ட மா மறையாளன் தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமை யிலத்த விங்கு ஒழிந்து போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் எனக்கும் ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-5
பதவுரை Show / Hide
மா கம், Maa Kam - பரமாகாசமெனப் படுகிற பரமபதத்திலுள்ளாரும் (- (ஆணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!–;) (எனக்கும் ஆகவேண்டும் என்று அடி இணை அடைந்தேன்–.))
மா நிலம், Maa Nilam - விசாலமான இப்பூமண்டலத்திலுள்ளாரும்
முழுதும், Muzhudhum - மற்றுமுள்ள சராசரங்களடங்கலும்
வந்து இறைஞ்சும், Vandu Irainchum - வந்து வணங்கப்பெற்ற
மலர் அடி, Malar Adi - (உனது) திருவடித் தாமரைகளை
கண்ட, Kanda - ஸாக்ஷாத்கரித்த
மா மறையாளன், Maa Maraiyalan - (கோவிந்தஸ்வாமி யென்னும்) மஹாவைதிக ப்ராம்மணனொருவனைக்குறித்து
அந்த, Andha - ‘அப்பா!,
நீ, Nee - நீ
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில், Thokai Maa Mayil Annavar Inbam Thutrilamaigalil - பெண்டிர்களாலுண்டாகும் விஷய போகஸுகங்களை அநுபவியாமையால்
இங்கு ஒழிந்து, Ingu Ozhindhu - (சில காலம்) இவ்விபூதியிலேயிருந்து
போகம் எய்தி, Pogam Eydhi - விஷய போகங்களை யநுபவித்து
பின்னும், Pinnum - அதன் பிறகு
நம் இடைக்கே போதுவாய், Nam Idaikkee Podhuvai - நம்மிடம் வந்து சேரக்கடவாய்’
என்ற, Endra - என்றருளிச்செய்த
பொன் அருள், Pon Arul - சிறந்த கிருபையானது
1423பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கோவிந்த ஸ்வாமி கருத்து அறிந்து அவனுடைய கார்யம் செய்தாப் போலே என் கருத்து அறிந்து என்னுடைய அபிமதம் செய்ய வேணும் என்றார் -கீழ் – ஸ்ரீ மார்கண்டேயன் மிருத்யு பய பீதனாய் சரணம் புக அவனுக்கு மிருத்யுவை நிரசித்து அந்த பய நிவ்ருதியை பண்ணிக் கொடுத்த அளவன்றிக்கே ஒரு காலமும் உன் திருவடிகளைப் பிரியாதபடியான பேற்றை அவனுக்குப் பண்ணிக் கொடுத்தால் போலே என் சம்சார பயத்தை பரிக்ரஹித்து உன் திருவடிகளை நான் பிரியாத படியான பேற்றை பண்ணித் தந்து அது நான் அர்த்திக்க இரப்புக்குக் கார்யம் செய்ததாய் காலன் கொண்டு மோதிரம் இடுமா போலே பண்ணப் பெற ஒண்ணாது என் ஸ்வரூப அநு ரூபமான பேறாகிறது-நீ தரப் பெறுமது -அது வேணும் என்கிறார்) 6
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றன் தன்னை யஞ்சி நின் சரண் எனச் சரணாய் தகவில் காலனை யுக முனிந்து ஒழியாப் பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும் அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-6
பதவுரை Show / Hide
மன்னு, Mannu - நிலைபெற்ற (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!–;) (அடி இணை அடைந்தேன்–.))
நால் மறை மா முனி பெற்ற மைந்தனை, Naal Marai Maa Muni Petra Maindhanai - நான்கு வேதங்களையும் ஓதியுணர்ந்த சிறந்த ம்ருகண்டு முனிவன் பெற்றகுமாரனாகிய மார்க்கண்டேயனை,
மதியாத வெம் கூற்றம் தன்னை அஞ்சி நின் சரண் என, Madhiyadha Vem Kootram Thannai Anji Nin Saran Ena - ஒருவரையும் லக்ஷரியஞ் செய்யாத கொடிய யமனுக்குப் பயந்து ‘உனது அடைக்கலப் பொருளாவேன் யான்’ என்று சொல்லி அவன் உன்னைச் சரணமடைந்தபோது
சரண் ஆய், Saran Aay - (அவனுக்கு நீ) ரக்ஷகனாகி
தகவு இல் காலனை உக முனிந்து, Thagavu Il Kaalanai Uga Munindhu - இரக்கமில்லாத யமனை வலியொழியும்படி கோபித்து
ஒழியா, Ozhia - அவ்வளவோடு விட்டிடாமல்
பின்னை, Pinnai - அதற்குமேலே
என்றும் நின்திரு அடி பிரியா வண்ணம் எண்ணிய, Endrum Nindhira Adi Priya Vannam Enniya - எந்நாளும் (அம்முனிகுமாரனை) உன்திருவடிகளை விட்டுப் பிரியாமலிருக்கும்படி திருவுள்ளம் பற்றிய
பேர் அருள் –, Per Arul - (உனது) சிறந்த திருவருளானது
எனக்கும் அன்னது ஆகும், Enakkum Annadhu Aagum - என் விஷயத்திலும் அப்படி உண்டாகவேணும்
என்று, Endru - என்று நினைத்து
1424பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விஷயீ காரத்தை சொல்லி கைங்கர்யத்தை சொல்லி அதுக்கு விரோதியாய் வருமதில் இந்த்ரிய வஸ்யதையைத் தவிர்த்து தர வேண்டுமேன்று சொல்லி அதுக்கடியான பாபமடியாக வந்த யம வஸ்யதையை பரிஹரிக்க வேணும் என்று சொல்லி அதுக்கடியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று சொல்லி கருத்து அறிந்து செய்யும் அளவு அன்றிக்கே உன் பரிவாலே செய்ய வேணும் என்று நின்றது -கீழ் – இதுக்கு அவ்வருகு அபேஷிக்கலாவது இல்லாமையாலே-மேலில் பாட்டுக்களுக்கு உதயம் இல்லை ஆனால் மேல் செய்கிறது என் என்னில் ஆழ்வீர்-சேஷியும் சேஷ பூதனும் ஆனால் சேஷி செய்தபடி கண்டு தத்தச்ய சத்ருசம் பவேத் -என்று சேஷ பூதன் இருக்கும் அத்தனை அல்லது இத்தனை த்வரிக்க கடவது அல்ல காணும் -என்ன தன்னைப் பார்த்தால் தன் சரீர அவசானத்தில் தான் பேறு உண்டோ உன் சர்வ சக்தித்வத்தாலே த்வரிக்கிறேன் இத்தனை அன்றோ அவனுடைய போக்யதை போலே-சர்வ சக்தித்வமும் த்வரிப்பிக்கும் இறே சாந்தீபிநீ புத்ரனை கடல் கொள்ள மீட்டுக் கொடுத்த அகடிதகட நா சாமர்த்த்யத்தையும் விஞ்சி இருப்பது ஓன்று இறே சம்சார ஆர்ணவத்திலே அகப்பட்டு நோவுபடுகிற என்னையும் மீட்டு உன் திருவடிகளை தருகை யாவது தேவரீர் உடைய சர்வ சக்தித்வத்தாலே அத்தை செய்து அருள வேணும் -என்கிறார்) 7
ஒது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன் காதல் என் மகன் புகலிடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று கோதில் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்தவன் சிறுவனைக் கொடுத்தாய் ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-7
பதவுரை Show / Hide
ஓது, Othu - ஓதியுணர்தற்கு உரிய (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!–;) (வந்து உன் அடி இணை அடைந்தேன்–.))
வாய்மையும், Vaimaiyum - ஸத்யவசநமான வேதத்தையும்
உவனியம் பிறப்பும், Uvaniyam Pirappum - (அதனை ஓதுதற்கு அதிகார முண்டாம்படி) உபநயனஞ் செய்தலால் வரும் (இரண்டாவது) பிறப்பையும்
முன், Mun - முன்பு
உனக்கு தந்த, Unakku Thanda - உனக்கு அளித்தவனும்
கோது இல் வாய்மையினால், Kothu Il Vaimaiyinal - (சாபாநுக்ரஹ சக்தியினால்) பழுதுபடுதலில்லாத  மெய்ம் மொழிகளையுடையவனுமான
அந்தணன் ஒருவன், Andhanan Oruvan - (ஸாந்தீபிநியென்னும்) ஒரு பிராமணன்
காதல் என் மகன் புகல் இடம் காணேன், Kaadhal En Magan Pugal Idam Kaanen - ‘(எனது) அன்புக்கு இடமான புத்திரன் சென்ற இடத்தை அறியேன்;
கண்டு நீ எனக்கு தருவாய் என்று, Kandu Nee Enakku Taruvay Endru - நீ (அவனிருக்கின்ற இடத்தை) நாடி யுணர்ந்து அந்த மகனை எனக்குக் கொடுக்கவேணும்’ என்று
உனை வேண்டிய, Unai Vendiya - உன்னைப் பிரார்த்தித்த
குறை, Kurai - அவனது வேண்டுகோளை
முடித்து, Mudiththu - நீ தலைக்கட்டி
அவன் சிறுவனை கொடுத்தாய், Avan Siruvanai Koduththay - அவன் மகனை (அவனுக்குக்) கொணர்ந்து கொடுத்தருளினாய்;
ஆதலால், Adhalal - (இங்ஙனம் செயற்கரிய செயல் செய்து அன்பர் குறையைத் தீர்த்து அவர் வேண்டியதை வேண்டியபடி தந்தருள்பவன் நீ) ஆகையால்
1425பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வைதிக புத்ர இதிகாசத்தை முன்னிட்டுக் கொண்டு சரணம் புகுகிறார் – இப்பாட்டிலும் சொல்லுகிறது -கீழ்ச் சொன்ன சர்வ சக்தி யோகத்தை ஆனால் வாசி என் என்னில் தேச கால விப்ரகர்ஷம் கிடக்கச் செய்தே-கார்யம் செய்த சக்தி மத்தையைச் சொல்லுகிறது) 8
வேத வாய் மொழி யந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப ஏதலார் முன்னே இன்னருள் அவர்க்குச் செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-8
பதவுரை Show / Hide
வேதம் வாய் மொழி, Vetham Vay Mozhi - வேதங்களையே வாய்ப்பேச்சாகவுடையவனான (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!;))
அந்தணன் ஒருவன், Andhanan Oruvan - ஒரு வைதிகப்ராமணன் (உன்னை அடுத்து)
எந்தை, Endhai - ‘எமது தலைவனே!
நின் சரண், Nin Saran - உனக்கு அடைக்கலப் பொருளாகிறேன் யான்;
என்னுடை மனைவி, Ennudai Manaivi - எனது மனைவியானவள்
காதல் மக்களை, Kaadhal Makkal - தான் ஆசையுடன் பெறுகின்ற பிள்ளைகளை
பயத்தலும் காணாள், Payaththalam Kaanal - பெற்றவளவிலே காணப்பெறுகின்றாளில்லை;
கடியது ஓர் தெய்வம், Kadiyathu Or Deivam - கொடுந் தன்மையுடையதான ஒரு தெய்வமானது
கொண்டு ஒளிக்கும், Kondhu Olikkum - (அப்பிள்ளைகளைக்) கொண்டு போய் ஒளித்து விடுகின்றது’
என்று, Endru - என்று (தன் குறையைச்) சொல்லி
அழைப்ப, Azhaiyppa - அதற்குப் பரிஹாரம் செய்வதற்கு உன்னை யழைக்க
ஏதலார் முன்னே, Aethalaar Munne - (அவளைப் பரிஹாஸித்துக் கொண்டிருந்த) பகைவர்களது முன்னிலையிலே
அவற்கு, Avarukku - அந்த வைதிகனுக்கு
இன் அருள் செய்து, In Arul Seidhu - இனிமையான கருணையைச் செய்து
இவர் உன் மக்கள் என்று கொடுத்தாய், Ivar Un Makkal Endru Koduththaai - ‘நான் அழைத்துக் கொண்டு வந்த இவர்கள் உன் பிள்ளைகள்’ என்று சொல்லிக் கொணர்ந்து கொடுத்தருளினாய்;
ஆதலால், Adhalal - (இப்படி செயற்கரியன செய்து சரணாகதரக்ஷணம் செய்தருள்பவன் நீ) ஆதலால்
1426பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ் இரண்டு பாட்டாலே அவனுடைய-சக்தி யோகத்தைச் சொல்லி-உபாய பூர்த்தியைச் சொல்லிற்றாய் நின்றது – இப்பாட்டுக்கு உதயம் என் என்னில் சம்சாரத்தின் உடைய தண்மையையும்-நம்முடைய அதிசய சக்தி த்வத்தையும் அனுசந்தித்து த்வரிக்கை யாகிற் இது ஔபாதிகம் காணும்-நாம் செய்தபடி கண்டிருக்குமது காணும் உமக்கு ஸ்வரூபம் -என்ன உன்னை அல்லது அறியாத தொண்டைமான் சக்கரவர்த்திக்கு ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கினால் போலே எனக்கும் ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்க வேணும் என்று சரணம் புகுகிறார் – கீழே நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்று திரு மந்த்ரத்தை சார்த்தமாக லபித்து உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்று ததீய சேஷத்வ பர்யந்தமாக அனுசந்தித்தார் – அதின் முன்பு ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தது இல்லையோ -என்னில் தம்தாமுக்கு பிறக்கும் ஜ்ஞானம் விச்வச நீயம் அன்று என்று காணும் இருக்க அடுப்பது ஸ்ரீ நாரத பகவானை இட்டு ஸ்ரீ புண்டரீகனுக்கு-கிந்தத்ர-என்றும்-நராஜ்ஜா தாநி-என்றும் திரு மந்த்ரத்தை சார்த்தமாக உபதேசித்து பிராப்தி வேளையில் உனக்கு வேண்டுவது என் என்று ஈஸ்வரன் கேட்க க்வாஹமத்யந்த துர்ப்புத்தி -என்றான் இறே சர்வ அபிமத சாதனம் இறே சரணா கதி யாகிறது) 9
துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-9
பதவுரை Show / Hide
துளங்கு, Thulangu - விளங்குகின்ற (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!–;) (உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்–.-))
நீள் முடி, Neel Mudi - நீண்ட கிரீடத்தையுடைய
அரசர் தம் குரிசில், Arasar Tham Kurisil - அரசாகட்கு அரசனாகிய
திண்திறல், Thinthiral - மிக்க வலிமையையுடைய
தொண்டை மன்னவன் ஒருவற்கு, Thondai Mannavan Oruvarukku - தொண்டை நாட்டரச னொருவனிடத்தில்
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து, Ulam Kol Anbinodu In Arul Surandhu - (நீ உன்) திருவுள்ளத்திற்கொண்ட அன்புடனே இனிமையான கருணையை மிகுதியாகச்செய்து,
அங்கு ஓடு நாழிகை ஏழுடன் இருப்ப, Angu Odu Naazhigai Ezhuudan Iruppa - அரசாளுதலாகிய இம்மைச் செல்வத்திலே வீணே கழிகின்ற அவனது நாழிகையானது (அங்ஙனம் கழியாது) ஏழு தத்துவப் பொருள்களுடனே கூடியிருக்கும்படி
வளம்கொள் மந்திரம், Valamkol Manthiram - சிறப்புக்கொண்ட பெரிய திருமந்திரத்தையும்
மற்று, Mattru - மற்றும் அதன் பொருளையும்
அவற்கு அருளிச் செய்த, Avarukku Arulich Seidha - அத் தொண்டைமான் சக்ரவர்த்திக்கு உபதேசித்தருளிய
ஆறு, Aaru - வகையை
அடியேன் அறிந்து, Adiyen Arindhu - அடியேன் தெரிந்து கொண்டு
1427பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவருடைய பாவ வருத்தி இல்லையாகிலும் இவருடைய பாசுரத்தைச் சொல்லவே ப்ராப்தி பிரதிகந்தகங்கள் போம் என்கிறது) 10
மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும் ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –5-8-10
பதவுரை Show / Hide
மாடம் மாளிகை சூழ், Maadam Maaligai Soozh - உபரிகைகளை யுடைய வீடுகள் எங்கும் நிறைந்திருக்கப்பெற்ற
திரு மங்கை, Thiru Mangai - திருமங்கை யென்னும் நாட்டுக்கு
மன்னன், Mannan - அரசரும்
ஒன்னலர் தங்களை வெல்லும், Onnalaar Thangalai Vellum - பகைவர்களை வெல்லுகின்ற
ஆடல் மா, Aadal Maa - ஆட்டத்திற்சிறந்த குதிரையை ஏறிச் செலுத்துதலில்
வலவன், Valavan - வல்லவருமான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்
அணி பொழில் திரு அரங்கத்து அம்மானை, Ani Pozhil Thiru Arangathu Ammanaai - அழகிய சோலைகள் சூழ்ந்த ஸ்ரீரங்கத்திற்பள்ளி கொண்டருள்கின்ற ஸ்வாமியும்
தொல், Tol - தொன்றுதொட்டு வருகிற
நீடு புகழ், Needu Pugazh - மிக்க கீர்த்தியையுடைய
ஆழி, Aazhi - திருவாழியாழ்வானைப் பிரயோகித்தலில்
வல்லானை, Vallaanai - வல்லவனும்
எந்தையை, Endhaiyai - எமது தலைவனுமான
நெடு மாலை, Nedu Maalai - பெருமையையுடைய ஸ்ரீமந்நாராயணனை
நினைந்த, Ninaindha - மனத்தினால் அநுபவித்து அருளிச் செய்த
இவை பத்து பாடல், Ivai Paththu Paadal - இந்தப் பத்துப் பாசுரங்களையும்
தொண்டீர், Thondeer - எம்பெருமானடியார்களே!
பாடுமின், Paadumin - நீங்கள் ஓதுங்கள்;
பாட, Paada - அங்ஙனம் ஓதவே
நும்மிடை பாவம் நில்லா, Nummidai Paavam Nillaa - உங்களித்திற் பாவங்கள் நிற்கமாட்டா.
1428பெரிய திருமொழி || 1
கையிலங்கு ஆழி சங்கன் கருமுகில் திரு நிறத்தன் பொய்யிலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமையாக்கும் செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப் பேர் பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே –5-9-1
பதவுரை Show / Hide
ஐக இலங்கு அழி சங்கன், Aika Ilangu Azhi Sangan - திருக்கையிலே விளங்குகின்ற திருவாழி திருச்சங்கையுடையவனும்
கரு முகில் திரு நிறத்தன், Karum Mukil Thiru Niraththan - காளமேகம்போன்ற திருநிறத்தை யுடையவனும்
பொய் இலன், Poi Ilan - (சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டுள்ள வைலக்ஷண்யங்களில்) பொய்யில்லாதவனும்
மெய்யன், Meiyyan - (அந்த வைலக்ஷண்யங்களைத் தன்னடியார்கட்கு) மெய்யே காட்டிக் கொடுப்பவனும்
தன் தாள் அடைவர் ஏல் அடிமை ஆக்கும், Than Thaal Adaivar Ael Adimai Aakkum - (யாராவது) தன் திருவடிகளைப் பணிவாராகில் (அவர்களை) நித்ய கைங்கரிய நிஷ்டராக ஆக்கிக் கொள்பவனும்,
அலர் கமலம் ஓங்கு செய், Alar Kamalam Ongu Sei - மலர்ந்த தாமரைகள் உயர்ந்திருக்கப்பெற்ற கழனிகளையும்
செறி பொழில், Serri Pozhil - அடர்ந்த சோலைகளையும் உடைத்தான
தென் திருப்பேர், Then Thiruppaer - தென்திருப்பேர் நகரில்
பை அரசு அணையான், Pai Arasu Anaithyaan - பரந்த படங்களையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையனமான பெருமானுடையனுமான பெருமானுடைய
நாமம் நான் பரவி உய்ந்த ஆறு ஏ, Naamam Naan Paravi Uyndha Aaru Ae - திருநாமங்களை நான் சொல்லி உஜ்ஜீவித்தபடி என்னே!.
1429பெரிய திருமொழி || 2
வங்கமார் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும் அங்கண் மா ஞாலம் எல்லாம் அமுது செய்து உமிழ்ந்த வெந்தை திங்கள் மா முகிலணவு செறி பொழில் தென் திருப்பேர் எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே –5-9-2
பதவுரை Show / Hide
வங்கம் ஆர் கடல்கள் ஏழும், Vangam Aar Kadalgal Ezhum - மரக்கலங்கள் நிறைந்திருக்கப்பெற்ற ஸப்த ஸாகரங்களும்
மலையும், Malaiyum - குலபர்வதங்களும்
வானகமும், Vaanagamum - ஆகாசமும்
மற்றும், Mattrum - அதற்குமேலே
அம் கண் மா ஞாலம், Am Kan Maa Nyaalam - அழகிய இடமுடைத்தான பரந்தபூமியும் (ஆகிய
எல்லாம், Ellam - எல்லாவற்றையும்
அமுது செய்து, Amuthu Seidhu - (பிரளயகாலத்தில்) விழுங்கி
உமிழ்ந்த, Umizhndha - பிறகு வெளிப்படுத்தின
எந்தை, Endhai - ஸ்வாமியும்
திங்கள் மா முகில் அணவு, Thingal Maa Mukil Anavu - சந்திர மண்டலத்தையும் மேக மண்டலத்தையும் அளாவியிருக்கிற
செறி பொழில், Serri Pozhil - நெருங்கிய சோலைகளையுடைத்தான
தென் திருப்பேர், Then Thiruppaer - தென் திருப்பேர் நகரில் எழுந்தருளியிருக்கிற
எங்கள் மால், Engal Maal - எம்பெருமானுமாகிய
இறைவன், Iraivan - ஸர்வேச்வரனுடைய
நாமம் ஏந்தி, Naamam Aendhi - திருநாமங்களைத் துதித்து
நான் உய்ந்த ஆறு ஏ, Naan Uyndha Aaru Ae - நான் வாழ்ந்தவிதம் என்னே!.
1430பெரிய திருமொழி || 3
ஒருவனை யுந்திப் பூ மேல் ஓங்குவித் தாகம் தன்னால் ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள் என்று விட்டான் பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர ரவணை மேல் கருவரை வண்ணன் தன் பேர் கருதி நான் உய்ந்தவாறே –5-9-3
பதவுரை Show / Hide
ஒருவனை உந்தி பூ மேல் ஓங்குவித்து, Oruvanai Undhi Poo Mel Onguvidhu - நான்முகனாகிய ஒருவனை திருநாபிக் கமலத்தில் உண்டாக்கினவனும் (- (நான் உய்ந்த ஆறு ஏ–.))
ஒருவனை, Oruvanai - ருத்ரனாகிய ஒருவனை
ஆகம் தன்னால், Aagam Thannal - (தனது) திருமார்பிலுண்டான ஸ்வேதஜலத்தாலே
சாபம் நீக்கி, Saapam Neekki - (அவனுடைய பிரமஹத்தி சாபத்தைத் தொலைத்து
உம்பர் ஆள், Umbar Aal - (நீ முன் போலவே) மேலுலகங்களை ஆளக்கடவாய்
என்று விட்டான், Endru Vittaan - என்று விடை கொடுத்தவனும்
பெரு வரை மதில்கள் சூழ்ந்த, Peru Varai Mathilgal Soozhntha - பெரிய மலைகள் போன்ற திருமதிள்களாலே சூழப்பட்ட
பெரு நகர், Peru Nagar - திருப்பேர்நகரில்
அரவு அணை மேல், Aravu Anai Mel - சேஷ சயனத்தின் மீது
கருவரை வண்ணன் தன் பேர், Karuvurai Vannan Than Peer - கரியமலை யொன்று சாய்ந்தாற்போன்றுள்ளனனுமான பெருமானடைய திருநாமங்களை
கருதி, Karuthi - சிந்தித்து
1431பெரிய திருமொழி || 4
ஊனமர் தலை யொன்று ஏந்தி உலகெலாம் திரியும் ஈசன் ஈனமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை யீந்தான் தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப் பேர் வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே –5-9-4
பதவுரை Show / Hide
ஊன் அமர் தலை ஒன்று, Oon Amar Thalai Ondru - மாம்ஸம் நிறைந்ததொரு பிரமகபாலத்தை (- (நான் வாழ்த்தி உய்ந்த ஆறு ஏ–.))
ஏந்தி, Aendi - கையில் தரித்துக்கொண்டு
உலகு எல்லாம், Ulaku Ellam - எல்லாலோகங்களிலும்
திரியும், Thiriyum - (பிச்சையெடுத்துத்) திரிந்துகொண்டிருந்த
ஈசன், Eesan - ருத்ரனானவன்
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன, Ein Amar Saapam Neekkaai Enna - ‘தண்மையை விளைவிப்பதான சாபத்தை நீக்கியருள்’ என்று பிரார்த்திக்க
ஒண் புனலை, On Punai - அழகிய ஸ்வேதஜலத்தை
ஈந்தரன், Eendharan - கொடுத் (து அந்த சாபத்தைத் தீர்த்) தவனும்.
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த, Then Amar Pozhilgal Soozhntha - வண்டுகள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்டதும்
செறி வயல், Serri Vayal - நெருங்கின கழனிகளையுடையதுமான
தென் திருப்பேர், Then Thiruppaer - தென் திருப்பேர் நகரில் எழுந்தருளியிருக்கிற
வானவர் தலைவன், Vaanavar Thalaivan - தேவாதிதேவனுமான பெருமானுடைய
நாமம், Naamam - திருநாமங்களை
1432பெரிய திருமொழி || 5
வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர் புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன்னாகத் தானை நக்கரி யுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே –5-9-5
பதவுரை Show / Hide
முன், Mun - முன்பொருகால்
வானோர், Vaanor - தேவதைகள்
வக்கரன் வாய் கீண்ட மாயனே என்று, Vakkaran Vaai Keenda Maayane Enru - ‘தந்தவக்ரனடைய வாயைக் கிழித்துப் போட்ட மாயவனே’ என்று (துதித்துக்கொண்டு)
புக்கு, Pukku - வந்து சேர்ந்து
அரண் தந்தருளாய் என்ன, Aran Thandharulai Enna - ‘(எங்களுக்கு) ரக்ஷை கொடுத்தருளவேணும்’ என்று பிரார்த்திக்க
பொன் ஆகத்தானை, Pon Aagaththanai - இரணியாசுரனை,
அரி உருவம் ஆகி, Ari Uruvam Aagi - நரஸிம்ஹரூபியாகி
நக்கு கிளர்ந்து நகம் இடந்து உகந்த, Nakku Kilarndhu Nakham Idandhu Ugantha - சிரித்து வளர்ச்சியடைந்து நகங்களினால் கிழித்துப்போட்டு திருவுள்ளம் மகிழ்ந்தவனும்
சக்கரம் செல்வன், Chakkaram Selvan - திருவாழியாலே அழகு பெற்றவனும்இ
தென் பேர் தலைவன், Then Per Thalaivan - தென் திருப்பேர் நகரிலெழுந்தருளி யிருப்பவனுமான பெருமானுடைய
தாள் அடைந்து உய்ந்தேன், Thaal Adaindhu Uyndhen - திருவடிகளை ஆச்ரயித்து உஜ்ஜீவிக்கப்பெற்றேன்.
1433பெரிய திருமொழி || (5-9–கையிலங்கு) (திருப்பேர் நகர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத இலங்கை அன்றோ எனக்குப் படை வீடு நான் இவ் ஊருக்கு நிர்வாஹகன் அன்றோ -என்று அபிமானித்து இருக்கிற ராவணன் உடைய அவ் ஊருக்கு கணையம் போலே இருக்கிற தோள்களைத் துணித்தான் ஆய்த்து) 6
விலங்கலால் கடலடைத்து விளங்கு இழை பொருட்டு வில்லால் இலங்கை மா நகர்க்கு இறைவன் இருவது புய்ம் துணிந்தான் நலங்கொள் நான்மறை வல்லார்கள் ஓத்தொலி யேத்தக் கேட்டு மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த வாறே –5-9-6
பதவுரை Show / Hide
விளங்கு இழை பொருட்டு, Vilangu Izhai Porutthu - விளங்குகின்ற ஆபரணங்களை அணியத்தகுந்தவளான பிராட்டிக்காக (- (இலங்காபுரியிற் புகுந்து) (எழுந்தருளியிருக்கப்பெற்ற),-)
விலங்கலால், Vilankalaal - மலைகளினால்
கடல், Kadal - தெற்குஸமுத்ரத்தை
அடைத்து, Adaiththu - அணை செய்து
இலங்கை மா நகர்க்கு இறைவன், Ilangai Maa Nagarkku Iraivan - (அந்த) அலங்கையென்னும் பெரியபட்டணத்திற்குத் தலைவனான இராவணனுடைய
இருபது புயம், Irupadhu Puyam - இருபதுதோள்களை
வில்லால், Villaal - (தனது) சார்ங்கத்தினால்
துணித்தான், Thuniththaan - அறுத்தொழிந்த பெருமான்
நலம் கொள், Nalam Kol - நல்லொழுக்கமுடையராய்
நால் மறை வல்லார்கள், Naal Marai Vallarhal - நான்கு வேதங்களிலும் வல்லவர்களான அந்தணர்கள்
ஓத்து ஒலி ஏத்த, Ooththu Oli Aetha - வேதகோஷங்களைச் செய்து கொண்டிருக்க
கேட்டு, Kaettu - அவ்வொலியைக் கேட்டு
மலங்கு, Malangu - மீன்களானவை
பாய், Paai - அஞ்சித் துள்ளயோடப் பெற்ற
வயல், Vayal - கழனிகளையுடைத்தான
திரு பேர், Thiru Per - திருப்பேர்நகரை
மருவி நான் வாழ்ந்த ஆறு ஏ, Maruvi Naan Vazhndha Aaru Ae - அடைந்து நான் வாழ்ச்சி பெற்றவிதம் என்னே!.
1434பெரிய திருமொழி || (5-9–கையிலங்கு) (திருப்பேர் நகர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சாமான்யன் என்று இடுமீடு எல்லாம் இட அமையும் -என்று இருப்பாரைப் போலே வேறு ஒரு ஹேதுவைச் சொல்லி அன்றியே இது சொல்லியே நம்மைக் கட்டுவதே என்று இசைந்து இருந்தான் ஆய்த்து) 7
வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்தாய்ச்சி ஓச்சிக் கண்ணியார் குருங்கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான் திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப் பேருள் வேலை வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்தவாறே –5-9-7
பதவுரை Show / Hide
தான், Thaan - யசோதை நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளையாகிய தான்
வெண்ணெய் அமுது செய்ய, Vennai Amuthu Seyya - வெண்ணெயை (அளவில்லாதபடி திருடி) உண்டவளவிலே
ஆய்ச்சி, Aaychi - யசோதையானவள்
வெகுண்டு, Vegundu - சீற்றங்கொண்டு
மத்து ஓச்சி, Maththu Ochi - தயிர்கடையும் மத்தினால் அடிப்பதாக ஓங்கி
கண்ணி ஆர் குறுகயிற்றால் கட்ட, Kanni Ar Kurugayitral Katta - முடிச்சுகள் நிறைந்த சிறிய தாம்பினால் கட்டிவைக்க
வெட்டென்றிருந்தான், Vettenthirundhaan - இசைந்திருந்தவனும்:-
திண்ணம் மா மதிள்கள் சூழ்ந்த, Thinnam Maa Mathilgal Soozhntha - திடமான பெரிய மதிள்களாலே சூழப்பட்ட
தென் திருப்பேருள், Then Thirupperal - தென் திருப்பேர் நகரில் எழுந்தருளியிருக்கிறவனும்
வேலை வண்ணனார், Vela Vannanaar - கடல்போன்ற நிறத்தையுடையனுமான பெருமானுடைய
நாமம், Naamam - திருநாமங்களை
நாளும், Naalum - நாள்தோறும்
வாய் மொழிந்து, Vaai Mozhinthu - சொல்லி
உய்ந்த ஆறு ஏ, Uyandha Aaru Ae - நான் உஜ்ஜீவித்தபடி என்னே!-
1435பெரிய திருமொழி || (5-9–கையிலங்கு) (திருப்பேர் நகர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஓர் இடைச் சேரி மாதரம் அன்றிக்கே ஸ்லாக்கியமான ஏழு லோகங்களும் அறிய ஸ்ரீ திரு வாய்ப்பாடியிலே வஞ்சிக் கொம்பு போலே இருக்கிற வடிவை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டி உடைய ஒப்பனையோடே சேருகைக்காக ருஷபங்கள் ஏழையும் நிரசித்தான்) 8
அம் பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள் கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான் செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும் எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே –5-9-8
பதவுரை Show / Hide
அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய, Am Pon Ar Ulagam Ezhum Ariya - அழகிய பொன்போற் சிறந்த ஏழுலங்களும் அறியும்படியாக
ஆய்ப்பாடி தன்னுள், Aaypaadi Thannul - திருவாய்ப்பாடியிலே
கொம்பு அன்னார் பின்னை, Kombu Annar Pinnai - வஞ்சிக் கொம்புபோன்ற நப்பின்னைப் பிராட்டியினுடைய
கோலம், Kolam - திருமேனியை
கூடுதற்கு, Kooduthar - அணைவதற்காக
ஏறு, Eru - எருதுகளை
கொன்றான், Konraan - கொன்றொழிந்தவனும்
செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த, Sem Pon Aar Madiyilgal Soozhntha - செவ்விய பொன்போல் அழகிய திருமதிள்களாலே சூழப்பட்ட
தென் திருப் பேருள், Then Thirup Perul - தென் திருப்பேர் நகரில்
மேவும், Maevum - பொருந்திவாழ்பவனுமான
எம்பிரான், Embiraan - எம்பெருமானுடைய
நாமம், Naamam - திருநாமங்களை
நாளும், Naalum - நாள்தோறும்
ஏத்தி, Aethi - ஸங்கீர்த்தநம்பண்ணி
நான் உய்ந்த ஆறு ஏ, Naan Uyndha Aaru Ae - நான் உஜ்ஜீவித்த விதம் என்னே..
1436பெரிய திருமொழி || (5-9–கையிலங்கு) (திருப்பேர் நகர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாதிகளிலும் காட்டில் கை வந்து இருக்கிற பிராமணர் ஆனவர்கள் சிருஷ்டி காலம் தொடங்கி ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் ஒக்கக் குடி ஏறி ஜீவித்துப் போருகிறவர்கள் ஆய்த்து – சீலகுண பிரசுரராய் மிக்க தபசை உடையராய் இருக்கிற பிராமணர் ஹிருதயத்தை தனக்காக்கிக் கொண்டு இருக்கிறவன் என்னுடைய ஹிருதயஸ்தன் ஆனான்) 9
நால் வகைவேதம் ஐந்து வேள்வி யாறங்கம் வல்லார் மேலை வானவரில் மிக்க வேதியர் ஆதி காலம் சேலுகள் வயல் திருப்பேர் செங்கண் மாலொடும் வாழ்வார் சீல மா தவத்தர் சிந்தையாளி யென் சிந்தையானே –5-9-9
பதவுரை Show / Hide
நால் வகை வேதம், Naal Vagai Vedham - நான்கு வேதங்களிலும்
ஆறு அங்கம், Aaru Angam - ஆறு வேதாங்கங்களிலும்
ஐந்து வேள்வி, Ainthu Velvi - பஞ்சமஹாயஜ்ஞங்களிலும்
வல்லார், Vallaar - ஸமர்த்தர்களாய்.
மேலை வானவரில் மிக்க தேவதியர், Melaivaanavaril Mikka Deivathiyar - மேலுலகத்திலுள்ள தேவர்களிற் காட்டிலும் மேம்பட்ட பிராமணோத்தமராய்,
ஆதி காலம், Aadhi Kaalam - வெகுகாலந்தொடங்கி
சேல் உகள் வயல் திருப்பேர், Seyl Ugal Vayal Thiruppaer - மீன்கள் துள்ளுங் கழனிகளையுடைய திருப்பேர் நகரில்
செம் கண் மாலோடும், Sem Kan Maalodum - செந்தாமரைக் கண்ணனான ஸர்வேச்வரனோடுகூட
வாழ்வார், Vaazhvaar - நித்யவாஸம் பண்ணுமவராய்
சீலம் மா தவத்தர், Seelam Maa Thavaththar - நற்குணமும் நல்லொழுக்கமுமுடையரான பிராமணருடைய
சிந்தை ஆளி, Sindhai Aali - உள்ளத்தை (த்தனக்கு இருப்பிடமாகக்கொண்டு) ஆள்கின்ற எம்பெருமான்
என் சிந்தையான், En Sindhaiyaan - என்னுடைய ஹ்ருதயத்தில் நித்யவாஸம் பண்ணுமவன்.
1437பெரிய திருமொழி || (5-9–கையிலங்கு) (திருப்பேர் நகர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக இவ் வனுபவத்துக்கு மேலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்) 10
வண்டறை பொழில் திருப்பேர் வரிவரவு அணையில் பள்ளி கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே –5-9-10
பதவுரை Show / Hide
வண்டு அறை பொழில், Vandu Arai Pozhil - வண்டுகள் ஒலிசெய்யப் பெற்ற சோலைகளையுடைய
திருப்பேர், Thirupper - திருப்பேர் நகரில்
வரி அரவு அணையில், Vari Aravu Anaiyil - வரிகளையுடைய ஆதிசேஷனாகிற படுக்கையிலே
பள்ளி கொண்டு, Palli Kondo - சயனித்துக்கொண்டு
உறைகின்ற மாலை, Uraikindra Maalai - நித்யவாஸம் பண்ணுகிற ஸர்வேச்வரனைக் குறித்து,
கொடி மதிள் மாடம் மங்கை, Kodi Mathil Maadam Mangai - கொடி கள் விளங்கப்பெற்ற மதிள்களையும் மாளிகைகளையு முடைத்தான திருமங்கையில் அவதரித்தவராய்
திண்திறல் தோற் கலியன், Thinthiral Thor Kalayan - மிக்க வலிமைகொண்ட திருத்தோள்களையுடையரான ஆழ்வார்
செம் சொலால், Sem Solal - அழகிய சொற்களைக் கொண்டு
மொழிந்த, Mozhinda - அருளிச்செய்த
மாலை இவை, Maali Ivai - இச்சொல்மாலையை
கொண்டு, Kondo - அதிகரித்து
பாடி ஆட, Paadi Aada - பாடவுமாடவும் பெற்றால்
நீள் விசும்பு கூடுவர், Neel Visumbu Kooduvar - பரமபதம் சென்று சேரப்பெறுவர்கள்,
1438பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அந்தராத்மதயா நின்று ரஷகனாம் படி சொல்லி- கண்ணுக்கு இலக்காம்படி வந்து அவதரித்து ரஷகனாம்படி சொல்லி ஒதுங்குவார் அளவு பட்டு இத் தோள் நிழலே மிக்கு இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாஸம் பண்ணுகிற நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே) 1
தீதறு நிலத்தோடு எரி காலினொடு நீர் கெழு விசும்புமவையாய் மாசறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை யவையாய பெருமான் தாய் செற வுளைந்து தயிருண்டு குடமாடு தடமார்வர் தகை சேர் நாதன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-1
பதவுரை Show / Hide
தீது அது நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு விசும்பும் அவை ஆய், Theethu Adhu Nilathodu Eri Kaalinodu Neer Kezhu Visumbum Avai Aayi - குற்றமற்ற (சிறந்த) பூமியும் அக்நியும் வாயுவும் ஜலமும் சிறந்த ஆகாசமும் ஆகிய பஞ்சபூதங்களுக்கு அந்தராத்மாவாயிருப்பவனும் (- (பின்னையும் ஸமயம் பார்த்து))
மாசு அறு மனத்தினொடு, Maasu Aru Manathinodu - குற்றமற்ற மநஸ்ஸும்
உறக்கமொடு, Urakkamodu - உறக்கமும்
இறக்கை அவை ஆய, Irakkai Avai Aayi - மரணமும் ஆகிய இவற்றுக்கு நிர்வாஹகனும்
பெருமான், Perumaan - பெருமை தங்கியவனும்
தாய், Thaai - தாயாகிய யசோதைப்பிராட்டி
செற, Sera - சீறித் தாம்பெடுக்க
உளைந்து, Ulaindhu - அதற்கு நடுங்கிக்கிடந்தும்
தயிர் உண்டு, Thayir Undu - தயிரை (த்திருடி) உட்கொண்டு
குடம் ஆடு, Kudam Aadu - குடக்கூத்தாடினவனும்
தடம் மார்வர், Thadam Marvar - விசாலமான திருமார்வையுடையவனும்
தகை சேர், Thakai Ser - அருள் பொருந்தியவனுமான
நாதன், Nadhan - ஸ்வாமி
உறைகின்ற நகர், Uraikindra Nagar - நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருப்பதியாகிய
நந்திபுர விண்ணகரம், Nandhipura Vinnakaram - நந்திபுர விண்ணகரத்தை
மனமே நண்ணு, Maname Nannu - நெஞ்சே! அடைந்திடுவாயாக,
1439பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிருபாதிக பந்துவான ஸ்ரீ சர்வேஸ்வரன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்) 2
உய்யும் வகை யுண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழியாமை முன நாள் மெய்யின் அளவே யமுது செய்ய வல ஐயன் வான் மேவு நகர் தான் மைய வரி வண்டு மதுவுண்டு கிளையோடு மலர் கிண்டி யதன் மேல் நைவளம் நவிற்று பொழில் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-2
பதவுரை Show / Hide
மனமே!, Maname - நெஞ்சே! (- (சொல்லுகிற காரியமேதென்னில், சொல்லுகிறேன், கேள்;-) (நந்திபுரவிண்ணகரம், நண்ணு))
சொன செய்யில், Sona Seyyil - நான் சொல்வதைச் செய்தால்
உய்யும் வகை உண்டு, Uyum Vagai Undu - உஜ்ஜீவிக்கவுபாயமுண்டு
முன நாள், Muna Naal - முன்பொருகால்
உலகு ஏழும் ஒழியாமை, Ulaku Ezham Ozhiyamai - ஸப்த லோகங்களில் ஒன்றுந் தவறாதபடி
மெய்யின் அளவே, Meiyin Alave - (அவ்வுலகமெல்லாம் தனது சிறிய) திருமேனியளவாக (ஒடுங்கும்படி)
அமுத செய்ய வல, Amutha Seyya Vala - அமுது செய்வதில் ஸமர்த்தனாயிருந்த
ஐயன் அவன் தான், Aiyan Avan Thaan - அப்பெருமான்
மேவும் நகர், Mevum Nagar - பொருந்திவாழும் திவ்ய தேசமாயிருப்பதும்
ஐமய வரி வண்டு, Aimaya Vari Vandu - கரிய அழகிய வண்டுகள்
கிளையோடு, Kilayodu - தமது பந்துவர்க்கங்களோடு கூட
மது உண்டு மலர் கிண்டி, Madhu Undu Malar Kindi - தேனைப்பருகி பூக்களைக்கோதி
அதன் மேல், Adhan Mel - அதன் பிறகு
நைவளம் நவிற்று பொழில், Naivalam Navitru Pozhil - ராக விசேஷங்களைப் பாடப்பெற்ற சோலைகளை யுடையதுமான
1440பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏதேனும் தசையிலும் விச்வச நீயானாய் இருக்கிறவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்) 3
உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை எழும் ஒழியாமை முன நாள் தம் பொன் வயிராரளவும் உண்டவை உமிழ்ந்த தடமார்வர் தகை சேர் வம்பு மலர்கின்ற பொழில் பைம்பொன் வருதும்பி மணி கங்குல் வயல் சூழ் நம்பன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-3
பதவுரை Show / Hide
முளநாள் உம்பர் உலகு ஏழும் கடல் ஏழும் மலை ஏழும் ஒழியாமை, Mulanai Umbar Ulaku Ezham Kadal Ezham Malai Ezham Ozhiyamai - முன்பொருகால் மேலுலகங்களேழையும் ஸப்தஸாகரங்களையும் ஸப்த குலபர்வதங்களையும் ஒன்றும் விடாமல் (- (நந்திபுர விண்ணகரம், மனமே! நண்ணு–.))
தம் பொன் வயிறு ஆரளவும், Tham Pon Vayiru Aarlavum - தனது திருவயிறு நிறையுமளவும்
உண்டு, Undu - அமுது செய்து
அவை உமிழ்ந்த, Avai Umizhndha - (பிறகு ஸ்ருஷ்டி முகத்தால்) வெளிப்படுத்தினவனும்
தடமார்வர், Thadamarvar - விசாலமான திருமார்பை யுடையவனும்
தகை சேர், Thakai Ser - பெருமை பொருந்தியவனும்
நம்பன், Namban - விச்வாஸயோக்யனுமான எம்பெருமான்
உறைகின்ற நகர், Uraikindra Nagar - நித்யவாஸம் பண்ணுமிடமானதும்,-
வம்பு மலர்கின்ற பொழில், Vambu Malarkindra Pozhil - புதிது புதிதாக மலர்ந்து கொண்டேயிருக்கின்ற (பூக்களையுடைய) சோலைகளிலே
பை பொன் வரு தும்பி மணி, Pai Pon Varu Thumbi Mani - பசும்பொன் போன்ற நிறங்கொண்டு திரிகின்ற தும்பிகளினால்; அழகு பெற்றதும்
கங்குல் வயல் சூழ், Gangul Vayal Soozh - (கருவடைந்ததனால்) இருண்டிருக்கின்ற கழனிகளால் சூழப்பட்டதுமான
1441பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சிறகை உடைத்தாய் இருக்கிற மயில்கள் குயில்கள் இவை நெருங்க அத்தாலே பூக்கள் உதிர வண்டுகள் ஆளத்தி வைக்க –பொழிலிலே மேகங்கள் வந்து சஞ்சரியா நின்றுள்ள தேசம்) 4
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி யெதிர் பொருதுமென வந்த வசுரர் இறைகளவை நெறு நெறு என வெறியவவர் வயிறு அழல நின்ற பெருமான் சிறை கொள் மயில் குயில் பயில மலர்களுக வளி முரல அடி கொள் நெடுமா நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-4
பதவுரை Show / Hide
பிறையின் ஒளி எயிறு இலகமுறுதி, Piraiyin Oli Eiyiru Ilakamuruthi - பாலசந்திரன் போன்று ஒளிபெற்ற கோரைப் பற்கள் விளங்க மேலிட்டுவந்து (- (நந்திபுரவிண்ணகரம், மனமே! நண்ணு–.))
எதிர் பொருதும் என வந்த அசுரர், Edhir Porudhum En Vanda Asurar - எதிரிட்டுச் சண்டைபோடுவோ மென்று வந்த அஸுரர்களுடைய
இறைகள் அவை, Iraigal Avai - சரீரங்களானவை
நெறு நெறு என, Neru Neru En - நெறுநெறு வென்று முறிந்தொழிய
வெறிய அவர், Veriya Avar - வெறுங்கையரான அவ்வசுரர்கள்
வயிறு அழல நின்ற, Vayiru Azhala Nindra - வயிறெரியும்படி (வெற்றி பெற்று) நின்ற
பெருமான், Perumaan - ஸர்வேச்வரன் (எழுந்தருளியிருக்கப்பெற்றதாய்,)
சிறைகொள் மயில் குயில் பயில, Siraikol Mayil Kuyil Payil - (சிறந்த) சிறகுகளையுடைய மயில்களும் குயில்களும் நெருங்கிவாழப்பெற்றனவும்
மலர்கள் உக, Malargal Uga - பூக்கள் (எங்கும்) சிந்தியிருக்கப்பெற்றனவும்
அளி முரல, Ali Murala - வண்டுகள் ரீங்காரம் செய்யப்பெற்றனவும்
அடி கொள் நெடு மா நறை செய், Adi Kol Nedumaa Narai Sei - கீழேவேரூன்றி மேலே நீண்டுள்ள மா மரங்கள் மணம் வீசப்பெற்றனவுமான
பொழில் சோலைகளிலே, Pozhil Solaigalile - பொழில் சோலைகளிலே
மழை தவழும், Mazhai Thavazhum - மேகங்கள் உலாவப் பெற்றதான
1442பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (யுத்தத்துக்கு பரிகரமான வாளும்-தர்ச நீயமான வில்லும் வளைந்த வாயை உடைத்தான திரு ஆழியும் கதையும் இவற்றை அழகிய திருக் கையிலே உடையவன் அவதாரங்கள் போலே இப்போது சந்நிதி இல்லை என்ன வேண்டாத படி நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்) 5
மூள வெரி சிந்தி முனி வெய்தியமர் செய்தும் என வந்த வசுரர் தோளுமவர் தாளும் முடியோடு பொடியாக நொடியாம் அளவெய்தான் வாளும் வரி வில்லும் வளை யாழி கதை சங்கம் இவை யங்கை யுடையான் நாளும் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-5
பதவுரை Show / Hide
மூள எரி சிந்தி, Moola Eri Sindhi - (கண்டவிடமெங்கும்) புகையும்படியாக நெருப்புகளைக் கொட்டி (- (நந்திபுரவிண்ணகரம், மனமே! நண்ணு–.))
அமர்செய்தும் என வந்த அசுரர் அவர், Amarseithum Ena Vantha Asurar Avar - ‘யுத்தம் செய்வோம்’ என்று வந்த அசுரர்களினுடைய
தோளும் தாளும் முடியோடு, Tholum Thaalum Mudiyodu - தோள்களும் கால்களும் தலைகளும்
பொடி ஆக, Podi Aaga - பொடிபொடியாம்படி
நொடி ஆம் அளவு, Nodi Aam Alavu - ஒருநொடிப் பொழுதில்
எய்தான், Eydhaan - அம்புகளைச் செலுத்தினவனும்
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை அம் கை உடையான், Vaalum Vari Villum Vazh Aazhi Kadhai Sangam Ivai Am Kai Udaiyaan - நந்தகவாள், அழகியசார்ங்கம், மண்டலாகாரமான ஸுதர்சநம், கௌமோதகி, பாஞ்சஜந்யம் ஆகிய இப்பஞ்சாயுதங்களை அழகிய திருக்கையில் ஏந்தியுள்ள வனுமான பெருமான்
நாளும், Naalum - எப்போதும்
உறைகின்ற நகர், Uraikindra Nagar - எழுந்தருளியிருக்குந் திருப்பதியான
1443பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வெம்மையை உடைத்தாய் நிலம் தன்னையே விறகாகப் பற்றி எரிகிற காட்டிலே உலாவினவர் அப்பிராட்டியோடே புணர்ந்து சமஸ்த கல்யாண குணாத்மகன் வர்த்திக்கிற தேசம்) 6
தம்பியொடு தாமொருவர் தன் துணைவி காதல் துணையாக முன நாள் வெம்பி யெரி கானக முலாவுமவர் தாம் இனிது மேவு நகர் தான் கொம்புகுதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழிலார் புறவு சேர் நம்பி உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-6
பதவுரை Show / Hide
முன் நாள், Mun Naal - முன்பொருகால் (- (அதனைக் கேட்டு) (நந்திபுர விண்ணகரம் மனமே! நண்ணு–.))
தாம் ஒருவர், Thaam Oruthar - லோகவிலக்ஷணராகத் திருவவதரித்த ஸ்ரீராமபிரானாகிய ஒருவர்
தம்பியொடு, Thambiyodu - தம்பியான லக்ஷ்மணனும்
தன் காதல் துணைவி, Than Kaadhal Thunaivi - தனது காதலே வடிவெடுத்த பத்னியான ஸீதையும்
துணை ஆக, Thunai Aaga - ஸஹாயமாகக் கூடவர,
வெம்பி எரி கானகம், Vembi Eri Kaanagam - தீக்ஷ்ணமாய்ப் பற்றியெரிகின்ற காட்டிலே
உலாவும் அவர் தாம், Ulaavum Avar Thaam - உலாவினவர்
இனிது மேவு, Inidhu Mevu - போக்யமாகப் பொருந்தி வர்த்திக்கப்பெற்ற
நகர் தான், Nagar Thaan - திவ்ய தேசமாயும்
குயில், Kuyil - குயில்களானவை
கொம்பு, Kombu - கிளைகளில் நின்றும்
குதிகொண்டு, Kudikondru - குதித்து
கூவ, Koova - கூவுதல்செய்ய
மயில் ஆலும், Mayil Aalum - மயில்கள் கூத்தாடப்பெற்ற,
எழில் ஆர், Ezhil Aar - அழகுபொருந்திய
பறவு சேர், Paravu Ser - சோலைகளை யுடையதாயும்
நம்பி, Nambi - ஸகல கல்யாணகுண பூர்ணனான எம்பெருமான்
உறைகின்ற நகர், Uraikindra Nagar - நித்யவாஸம் பண்ணுமிடமாயுமிருக்கிற
1444பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆசூர பிரக்ருதிகள் கண்ணுக்குத் தோற்றாதபடி இருளிலே வந்த பெரு மிடுக்கனான ஸ்ரீ நந்த கோபர் பிள்ளை – பிறந்தது அங்கே ஆகில்-மீண்டும் போய் வளர்ந்தது அங்கே யாகில் – கம்ச பயத்தாலே நாலு நாள் வளர்ந்த இத்தனையும் கொண்டு அறிவு குறைய நின்றார் சொல்லுகை அன்றிக்கே அறிவில் தலை நின்ற நம் போல்வார் இங்கன் சொல்லுகிற இதுக்கு ஹேது என்-என்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க – நாமே அன்று காணும்-அவதார காலத்துக்கு முன்பே அறிவுடையராய் இருப்பாரும் இப்படி சொன்னார்கள் காணும் – அயம் ச கத்யதே ப்ராஜ்ஞை-இத்யாதிகளாலே-அவர்களுக்கு முலை சுரவா நின்றது ஆகில் இவன் தான் அஞ்சா நின்றான் ஆகில் உமக்கு இவ்வாராய்ச்சி என் தான் -என்று அருளிச் செய்தார் – அந்ய பரன்-அநந்ய பரனாய் அடிமை செய்து வர்த்திக்கிற தேசம் – அதாவது நந்தி என்பான் ஒருவன் அக்காலத்தில் அங்கே அனுகூலித்து வர்த்தித்தான் போலே) 7
தந்தை மனமுந்து துயர் நந்தவிருள் வந்த விறல் நந்தன் மதலை எந்தை யிவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான் மந்த முழ வோசை மழையாக வெழுகார் மயில்களாடு பொழில் சூழ் நந்தி பணி செய்த நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-7
பதவுரை Show / Hide
தந்தை, Thandai - தகப்பனாராகிய நந்தகோபருடைய (- (நந்திபுர விண்ணகரம், மனமே! நண்ணு–.))
மனம், Manam - மனத்தை
உந்து, Undhu - சோரப்பண்ணுகின்ற
துயர், Thuyar - துக்கமானது (புத்திரனில்லையேயென்கிற சோகம்)
நந்த, Nanda - தொலையும்படி
இருள் வந்த, Irul Vantha - (ஒருவர்க்குந் தெரியாதபடி மதுரையில் நின்றும்) இரவிலே (திருவாய்ப் பாடிக்கு) வந்து சேர்ந்த
விறல், Viral - பெருமிடுக்கனான
நந்தன் மதலை, Nandan Muthalai - நந்தகோபகுமாரனான கண்ணபிரான்
அமரர், Amarar - தேவர்கள்
இவன் எந்தை என்று, Ivan Endhai Endru - ‘இவனே எமக்குஸ்வாமி’ என்று சொல்லிக்கொண்டு
கந்தம் மலர் கொண்டு தொழ, Kandham Malar Kondo Thozha - மணம்மிக்க பூக்களைப் பணிமாறி ஆச்ரயிக்கும்படியாக
நின்ற, Nindra - எழுந்தருளியிருக்கிற
நகர் தான், Nagar Thaan - திவ்யதேசமாயும்,
முழவு, Muzhavu - வாத்யங்களினுடைய
மந்தம் ஓசை, Mandham Osai - மந்தமான த்வநியை
மழை ஆக, Mazhai Aaga - மேகமுழக்கமாகக் கருதி
கார், Kaar - கார்காலத்தில்
எழு, Ezhu - கிளர்கின்ற
மயில்கள், Mayilgal - மயில்கள்
ஆடு, Aadu - கூத்தாடுமிடமான
போழில், Pozhil - சோலைகளினால்
சூழ், Sool - சூழப்பெற்றதாய்
நந்தி பணிசெய்த நகர், Nandi Paniseitha Nagar - நந்தியென்னும் ஓரரசன் கைங்கரியங்கள் செய்யப் பெற்ற தலமான
1445பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமியிலே பாரத வர்ஷமே உத்தேச்யம்-பண்ணின புண்யமானது-சாலில் எடுத்த நீர் போலே ஷயித்தவாறே முகம் கீழ்ப்படத் தள்ளுகிற ஸ்வர்க்கமும் ஒரு தேசம் ஆய்த்தோ – கோலின பலங்களுக்கு எல்லாம் சாதன அநுஷ்டானம் பண்ணலாம் பாரத வர்ஷத்தை ஒழிய -என்றார்கள் இறே அப்படியே பூமிப் பரப்பில் ஸ்லாக்கியமாய் இருந்துள்ள இந்த நகரத்தோடே ஒக்க கடவது இல்லை என்று தேவர்கள் புஷ்பாதி உப கரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்) 8
எண்ணில் நினைவெய்தி யினியில்லை இறையென்று முனியாளர் திருவார் பண்ணில் மலி கீதமொடு பாடியவராடலொடு கூட வெழிலார் மண்ணிலிது போலு நகரில்லைஎன வானவர்கள் தாம் மலர்கள் தூய நண்ணி யுறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-8
பதவுரை Show / Hide
எண்ணில், Ennil - ஆராயுமளவில் (- (நந்திபுரவிண்ணகரம், மனமே நண்ணு–.))
நினைவு எய்தி இறை, Ninaivu Eydhi Irai - தியானத்திற்கு இலக்காகக் கூடிய ஸ்வாமி
இனி இல்லை என்று, Ini Illai Endru - இவனைக் காட்டிலும் வேறொருவனில்லை யென்று (நிச்சயித்து)
முனியாளர், Muniyalar - மஹாமுனிகள்
திரு ஆர் பண்ணில் மலி, Thiru Aar Pannil Mali - அழகுமிக்க இசையினால் நிறைந்த
கீதமொடு பாடி, Geethamodu Paadi - பாடல்களோடு கூட ஸ்துதிகள் செய்ய,
அவர் ஆடலொடு கூட, Avar Aadalodu Kooda - அந்த முனிவர் (தங்கள் பாட்டுக்குச் சேரத் தாங்களே செய்கின்ற) நர்த்தனங்களுக்குத் தகுதியாக,
வானவர்கள் தாம், Vaanavargal Thaam - தேவர்கள்
எழில் ஆர் மண்ணில், Ezhu Aaar Mannil - இப்பூலோகத்தில்
இது போலும் நகர் இல்லை என, Idhu Polum Nagar Illai Ena - இத்திருப்பதியைப் போன்ற நகரம் (எங்கும்) இல்லை’ என்று கொண்டாடி
மலர்கள் தூய், Malargal Thooei - புஷ்பங்களைப் பணிமாறி
நண்ணி, Nanni - ஆச்ரயித்து
உறைகின்ற, Uraikindra - நித்யவாஸமும் செய்யப்பெற்ற
நகர், Nagar - திவ்யதலமாகிய
1446பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நங்கள் ஸ்ரீ பெருமான் உறையும் –ஸ்ரீ பர அவஸ்தை ஸ்ரீ நித்ய சூரிகளுக்காய் இருக்கும் ஸ்ரீ வ்யூஹம் ப்ரஹ்ம ருத்ராதிகள் பரிபவத்தைப் போக்கவாய் இருக்கும் ஸ்ரீ அவதாரங்கள் ஸ்ரீ வசுதேவர் ஸ்ரீ சக்கரவர்த்திகள் தொடக்கமான பாக்யாதிகருக்காய் இருக்கும் பிற்பாடரான நம் போல்வாருக்காய் இருக்கும் இறே உகந்து அருளின நிலங்கள் ஸ்ரீ நித்ய சூரிகளும் இங்கே வரும் போது குறைவாளராய் வர வேணும் அந்தருக்கு வைத்த சாலையில் கண்ணை மறைத்து வர வேணும் இறே) 9
வங்க மலி பௌவமதுமா முகட்டின் உச்சி புக மிக்க பெரு நீர் அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல் பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால் நாங்கள் பெருமான் உறையும் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-9
பதவுரை Show / Hide
மனமே, Maname - நெஞ்சமே!, (- (நந்திபுரவிண்ணகரம், நண்ணு–.))
அவனது ஆணை, Avanathu Aanai - அப்பெருமானுடைய திருவாணையை
தலை சூடும் அடியார், Thalai Soodum Adiyar - சிரஸா வஹிக்கின்ற பக்தர்கள்,
வங்கம் மலி பௌவம் அது, Vangam Mali Pouvam Adhu - மரக்கலங்கள் நிறைந்த ஸமுத்ரமானது
மா முகடின் உச்சி புக, Maa Mugadin Uchi Puga - உயர்ந்துள்ள அண்ட பித்தியினுடைய தலையளவுஞ் சென்று வியாபிக்கும்படி
மிக்க, Mikka - பொங்கிக்கிளர்ந்த
பெரு நீர், Peru Neer - (ஊழிப்) பெரு வெள்ளத்திலும்
அங்கம் அழியார், Angam Azhiyar - சரீர நாசத்தை அடைய மாட்டார்கள்;
அறிதி ஏல், Aridhi Ael - (நீ இதை) அறிவாயேல்,
பொங்கு புனல் உந்தும் மணி, Pongu Punal Undum Mani - பெருகாநின்ற ஜலமானது தள்ளிக்கொண்டு வருகின்ற நவமணிகளின்
கங்குல் இருள் சீறும் ஒளி, Gangul Irul Seerum Oli - இரவிருளைப் போக்குகின்ற பிரகாசமானது
எங்கும் உளது, Engum Ulathu - எங்கும் வியாபித்திருக்கப்பெற்றதாய்
நங்கள் பெருமான் உறையும், Nangal Perumaan Uraiyum - எம்பெருமான் நித்யவாஸம் பண்ணுமிடமான
1447பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நண்ணு மனமே என்று உத்தேச்யமாக சொன்ன தேசம் ஆகையாலே இவ்விடம் நமக்கு ஆஸ்ரயநீய ஸ்தலம் என்னும் பிரதிபத்தியோடே கூட அப்யசிக்க வல்ல அடியவர்கள் உடைய க்ரூரமாய் அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவது அன்றிக்கே இருக்கிற பாபங்கள் சவாசனமாகப் போம்) 10
நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணி யுறையும் உறை கொள் புகராழி சுரி சங்கமவை அங்கை யுடையானை ஒளி சேர் கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும் முறையிலிவை பயில வல வடியவர்கள் கொடு வினைகள் முழுதகலுமே –5-10-10
பதவுரை Show / Hide
நறை செய் பொழில் மழை தவழும், Narai Sei Pozhil Mazhai Thavazhum - தேன் மிக்க சோலைகளில் மேகங்கள் வந்து சேரப்பெற்ற
நந்திபுரவிண்ணகரம், Nandhipuravin Nagaram - நந்திபுரவிண்ணகர மென்னுந் திருப்பதியை
நண்ணி, Nanni - அடைந்து
உறையும், Uraiyum - அங்கே நித்யவாஸம் பண்ணுமிடத்து
உறை கொள் புகர் ஆழி, Urai Kol Pugar Aazhi - உறையிலிடப்பட்டுத் தேஜஸ்ஸு மிகுந்த திருவாழியையும்
சுரி சங்கம், Suri Sangam - வலம்புரிச் சங்கத்தையும்
அவை, Avai - மற்றுமுள்ள திவ்யாயுதங்களையும்
அம் கை உடையானை, Am Kai Udaiyanai - அழகிய திருக்கையிலுடையனான எம்பெருமானைக் குறித்து,
கறை வளரும், Karai Valarum - ரக்தக்கறை மிக்கிருப்பதும்
ஒளி சேர், Oli Ser - ஒளிபொருந்தியதுமான
வேல், Veel - வேற்படையை
வல்ல, Valla - ஆளவல்ல
கலியன் ஒலி, Kaliyan Oli - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
இவை மாலை, Ivai Maalai - இத்திவ்யப் பிரபந்தத்தினுள்
இவை ஐந்தும் ஐந்தும், Ivai Aindhum Aindhum - இப்பத்துப் பாசுரங்களையும்
முறையில், Murail - கிரமப்படியே
பயில வல, Payila Val - அதிகரிக்கவல்ல
அடியவர்கள், Adiyavargal - பக்தர்களுடைய
கொடு வினைகள் முழுது, Kodu Vinaigal Muzhuthu - பாவங்களெல்லாம்
அகலும், Akalam - நீங்கியொழியும்
1448பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அர்த்தித்து நின்று பெற்ற அவ்விடம் தன்னிலே நின்றே அண்டங்கள் உடன் கூட பூமிப் பரப்பை அளந்து கொண்டவனே நான் இதர விஷயங்களில் பிரவணனாய் உன் பக்கலிலே வைமுக்ய்யம் பண்ணிப் போரா நிற்கச் செய்தேயும் இவ்வளவும் வர என் சத்தை அழியாமல் நோக்கிக் கொண்டு போந்தவனே – அநாதி காலம் சத்தையை நோக்கி கொடு போந்ததின் பலம் நீயே பெற வேண்டி இருந்தாய் ஆகில் என் பக்கலிலே கிருபையைப் பண்ணி அருள வேணும் – இன்னும் இவனுக்கு சம்சார வாசனை கழிந்தது இல்லை என்று இருக்க வேண்டா எனக்கு லோக யாத்ரையில் ருசி இல்லாமையைத் திரு வுள்ளம் பற்ற வேண்டும்) 1
வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன் தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே ஆண்டாய் யுன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –6-1-1
பதவுரை Show / Hide
அமரரும், Amararum - தேவர்களும்
தொண்டரும், Thondarum - (மற்றுமுள்ள) பக்தர்களும்
நம் பண்டை வினை கெட என்று, Nam Pandai Vinai Keda Endru - ‘நமது முன்னைத் தீவினைகளெல்லாம் தொலையவேணும்‘ என்று மநோரதித்து,
வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு, Vandu Unum Naru Malar Indai Konda - வண்டுகள் மதுவுண்ணப் பெற்ற மணம் மிக்க பூக்களினாலாகிய மாலைகளை ஏந்திக்கொண்டு
அடிமேல் பணிய நின்று, Adimeel Paniya Nindru - திருவடிகளிலே விழுந்து ஸேவிக்கும்படியாக நின்று
அங்கு, Angu - அப்போதே
அண்டமொடு, Andamodu - அண்டங்களையும்
அகல் இடம், Akal Idam - பரந்த பூமியையும்
அளந்தவனே, Alandavaney - (திருவடிகளால் வியாபித்து) அளந்து கொண்டவனே!
ஆண்டாய், Aandai - அடியேனை ஆண்டுகொண்ட பெருமானே!
விண்ணகர் மேயவனே, Vinnagar Meyavaney - திருவிண்ணகரில் நித்ய வாஸம் செய்பவனே!
உன்னை காண்பது ஓர் அருள், Unnai Kaanbathu Oru Arul - உன்னை நான் ஸேவிக்கும்படியான க்ருபையை
எனக்கு அருளுதி ஏல், Enakku Aruluthi Ael - என் விஷயத்தில் செய்தருள்வாயாகில்
மனை வாழ்க்கையை, Manai Vazhkkaiyai - (இனி) ஸம்ஸார வாழ்க்கையை
வேண்டேன், Vaendain - விரும்பமாட்டேன்
1449பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு கால் சொன்னத்தை ஒன்பதின் கால் சொல்லுகிறார் -பகவத் விஷய ருசியையும் தம்முடைய இந்த சம்சார அருசியை ஸ்திரம் என்னும் இடத்தை அவன் திரு உள்ளத்தே படுத்துகைக்காக) 2
அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-2
பதவுரை Show / Hide
அண்ணல் செய்து, Annal Seidhu - ‘தானே ஸர்வஸ்வாமி‘ என்பதைக் காட்டிக் கொண்டு (- (எம் பெருமானே!-;) (ஆண்டாய் * * * வேண்டேன்-.))
அலைகடல் கடைந்து, Alaikadal Kadaindhu - அலையெறிகின்ற கடலைக் கடைந்து
அதனுள் நஞ்சு, Adhanul Nanju - அக்கடலினின்று தோன்றின காலகூட விஷத்தை
நுதல் கண், Nuthal Kan - நெற்றிக்கண்ணனான ருத்ரன்
உண்ண, Unna - உட்கொள்ளும்படியாக
கண்டவனே, Kandavane - நியமித்தவனே!
விண்ணவர், Vinnavar - தேவர்கள்
அமுது உண, Amuthu Un - அம்ருதபாநம் பண்ணாநிற்க
அமுதில் வரும் பெண் அமுது, Amuthil Varum Pen Amuthu - அந்த அம்ருதத்திலிருந்து ஸாரமாகக் கிளர்ந்த பிராட்டியாகிற அம்ருதத்தை
உண்ட, Unda - அநுபவிக்கப் பெற்ற
1450பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அம்புக்கு கூர்மையாய் போய்ப் புக்கு பிரதி பஷத்தை அழியச் செய்து அந்த விஷய அபதானத்தை அவன் செய்தான் -என்று விருது ஊதித் திரியும்படி பண்ணிணவனே – ஓர் அபதானம் பண்ணினேன் என்று விருது ஊதித் திரியும்படி பண்ண வேண்டா ஸ்வரூப விரோதியைக் கழித்து ஸ்வரூப அனுரூபமான பேற்றை பண்ணித் தர வேணும்) 3
குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம் விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிறம் அம்பது வானவனே ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-3
பதவுரை Show / Hide
குழல் நிறம் வண்ண, Kuzhal Niram Vanna - திருக்குழலின் நிறம் போன்று நீலமான நிறத்தையுடையவனே!, (- (ஆண்டாய் * * * வேண்டேன்-.))
நின் கூறு கொண்ட, Nin Kooru Konda - உனது திருமேனியிலே ஒரு பகுதியை இடமாகவுடையவனும்
தழல் நிறம் வண்ணம், Thazhal Niram Vannam - நெருப்பின் நிறம் போன்ற நிறமுடையனுமான ருத்ரனால்
நண்ணார் நகரம் விழ, Nannaar Nagaram Vizha - பகைவரான அசுரர்களின் முப்புரம் முடியும்படியாக
நனி மலை, Nani Malai - மிகப் பெரிதான மேருமலை போன்ற
சிலை, Silai - வில்லை
வளைவு செய்து, Valaivu Seidhu - வளைத்து
அங்கு, Angu - அதுதன்னிலே
அழல் நிறம் அம்பு அது ஆனவனே, Azhai Niram Ambu Adhu Aanavane - நெருப்புப்போன்ற அம்பில் ஆவேசித்து நின்றவனே!
1451பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என் பக்கல் அகடிதகடங்களை கடிப்பிக்க வேண்டா -உன்னைக் காண்பதொரு வகை அருள வமையும் – என் தலையால் வரும் அம்சத்தில் கண் அழிவு இல்லை) 4
நிலவோடு வெயில் நில விருசுடர் உலகமும் உயிர் களும் உண்டு ஒரு கால் கலை தரு குழவியின் உருவினையாய் அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-4
பதவுரை Show / Hide
ஒரு கால், Oru Kaal - (பிரளயமாகிற) ஒரு ஸமயத்தில், (- (ஆண்டாய் * * * வேண்டேன்-.))
நிலவொடு வெய்யில் நிலவு இரு சுடரும், Nilavodu Veyyil Nilavu Iru Sudarum - நிலாவோடும் வெய்யிலோடும் கூடி ஸஞ்சரிக்கிற சந்திரஸூர்யர்களையும்
உலகமும், Ulagamum - உலகங்களையும்
உயிர்களும், Uyirgalum - (அங்குள்ள) பிராணிகளையும்
உண்டு, Undu - திருவயிற்றிலே வைத்து நோக்கி
கலைதரு, Kalaitharu - மிகச்சிறிய வடிவுகொண்ட
குழவியின் உருவினை ஆய், Kuzhaviyin Uruvinai Aayi - குழந்தை ரூபியாய்க் கொண்டு
அலை கடல், Alai Kadal - அலையெறிகின்ற கடலினிடையே
ஆல் இலை, Aal Ilai - ஆலந்தளிரில் கண்வளர்ந்தருளினவனே!
1452பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வாச்யங்களுக்கு எல்லாம் தன் பக்கலிலே இருப்பாம்படி இவற்றுக்கு ஆதார பூதனாய் நிற்கும்படி சொல்லிற்று வாசக ஜாதத்துக்கு எல்லாம் பிரதானமாய் இருக்கிற அகார சப்த வாச்யன் ஆனவனே) 5
பாரெழு கடலெழு மலை ஏழு மாயச் சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம் ஆர்குழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கோர் எழுத்து ஓர் உரு வானவனே ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-5
பதவுரை Show / Hide
பார் எழும், Paar Ezhum - ஏழு தீவுகளோடு கூடிய பூமிக்கும் (- (ஆண்டாய்  * * * வேண்டேன்-.))
கடல் எழும், Kadal Ezhum - ஸப்தஸாகரங்களுக்கும்
மலை எழும், Malai Ezhum - ஸப்தகுலாசலங்களுக்கும்
ஆய், Aai - நிர்வாஹகனாயிருந்து கொண்டு
அங்கு, Angu - அப்படிப்பட்ட பிரளயம் வந்த காலத்து,
சீர் கெழும், Seer Kezhum - அழகு மிக்க
இ உலகு ஏழும் எல்லாம், I Ulagu Ezhum Ellam - இவ்வுலகங்களேழையும்
ஆர் கெழு வயிற்றினில், Ar Kezhu Vayitrinil - அழகு மிக்க திருவயிற்றிலே
அடக்கி நின்று, Adakki Nindru - அடக்கி வைத்திருந்தவனாய்
ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே, Oru Ezhuthu Oru Uru Aanavane - அகாரத்திற்கு முக்கியமான பொருளாயிருப்பவனே!
1453பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ ஜகதாரரானாய் சர்வாதிகனாய் இருப்புதி என்று பிரமாணங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே உன்னுடைய அசாதாராண ஆகாரத்தை நான் சாஷாத் கரிக்கும் படி என் பக்கலிலே கிருபையைப் பண்ணி யருளிவுதி யாகில் – நானும் மெய்யே இத்தை அருவருத்தேன்) 6
கார்கெழு கடல்களும் மலைகளுமாய் ஏர் கெழும் உலகுமுமாகி முத லார்களும் அறிவரும் நிலையினாய்ச் சீர் கெழு நான்மறை யானவனே ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-6
பதவுரை Show / Hide
கார் கெழு, Kaar Kezhu - மேகங்கள் மிகப்படிந்திருக்கப் பெற்ற (- (ஆண்டாய் * * * வேண்டேன்-.))
கடல்களும், Kadalgalum - ஸமுத்ரங்களுக்கும்
மலைகளும், Malaihalum - மலைகளுக்கும்
ஆய், Aai - தாரகனாயும்
ஏர் கெழும், Eer Kezhum - ஒழுங்குபட்டிருக்கிற
உலகமும் ஆகி, Ulagamum Aagi - லோகங்களுக்கும் நிர்வாஹகனாயும்
முதலார்களும், Muthalarhalum - பிரதாநரான பிரமன் முதலியோர்க்கும்
அறிவு அரு நிலையினை ஆய், Arivu Aru Nilaiyinai Aai - அறிய முடியாத ஸ்வபாவத்தை யுடையவனாயும்
சீர் கெழு நால் மறை ஆனவனே, Seer Kezhu Naal Marai Aanavane - சிறந்த நான்கு வேதங்களுக்கும் ப்ரதிபாத்யனாயு மிருக்கும் பெருமானே,
1454பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரணவம் பர ஸ்வரூபத்தை ஒன்றையும் சொல்லுகிறதோ-ஆத்மவஸ்து ஸ்வரூபத்தையும் சொல்லுகிறதோ -என்றால் இரண்டையும் சொல்லா நின்றது இறே ஆத்மா நம் யுஞ்ஜீத -என்றும்-ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் பிராமணருக்கு தனமான வேதத்தில் இன்னிசை உண்டு ஸ்வர ரூபமான பிரவணம் – அத்தால் பிரதிபாத்யனாய் உள்ளவனே) 7
உருக்கு நறு நெய் கொண்டு ஆர் அழலில் இருக்கு உறும் அந்தணர் சந்தியின் வாய் பெருக்கமோடு அமரர்கள் அமர நல்கும் இருக்கினில் இன்னிசை யானவனே ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-7
பதவுரை Show / Hide
இருக்கு உறும் அந்தணர், Irukku Urum Andhanar - வேதம் வல்லவரான பிராமணர்கள் (- (ஆண்டாய் * * * வேண்டேன்-.))
அமரர்கள், Amarar - தேவதைகளினால்
பெருக்க மொடு அமர, Perukka Modu Amara - (தாங்கள்) செல்வம் பெருகி வாழும்படியாக
சந்தியின் வாய், Sandhiyin Vaai - ஸந்தியா காலந்தோறும்
உருக்குறு நறு நெய் கொண்டு, Urukkuru Naru Ney Kondu - உருக்கின மணம் மிக்க நெய்யைக் கொண்டு
ஆர் அழலில், Aar Azhalaal - ஆர்ந்த அக்நியில்
நல்கும், Nalkum - ஹோமம் பண்ணுவதற் குறுப்பான
இருக்கினில், Irukkiniil - வேதத்திலுள்ள
இன் இசை ஆனவனே, In Isai Aanavane - பிரணவத்திற்குப் பிரதிபாத்யனானவனே!
1455பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வைத்த வளையமும் நீயுமாய் இருக்கிற இருப்பைக் காட்டி என்னுடைய இதர விஷயத்தில் பிராவண்யத்தை தவிர்த்த சுத்தியை உடையவனே –உன்னை ஒழிந்த விஷயங்களில் ருசியை போக்கின நீயே நான் கண்ணாலே காணலாம் படி என் பக்கலிலே கிருபையை பண்ணுவுதியாகில்) 8
காதல் செய்து இளையவர் கலவி தரும் வேதனை வினையது வெருவுதலாம் ஆதலில் உனது அடியன் அணுகுவன் நான் போதலர் நெடு முடிப் புண்ணியனே ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-8
பதவுரை Show / Hide
போது அலர் நெடு முடி, Podhu Alar Nedum Mudi - உரிய காலங்களிலுண்டான புஷ்பங்களை யணிந்த நீண்ட திருவபிஷேகத்தையுடைய (- (ஆண்டாய் * * * வேண்டேன்-.))
புண்ணியனே, Punniyanne - பரிசுத்தனே!
இளையவர், Ilaiyavar - இளம்பெண்கள்
காதல் செய்து, Kaadhal Seidhu - அன்பு செய்து
தரும், Tharum - கொடுக்கிற
வேதனை, Vedhanai - துக்கரூபமான
கலவி அது, Kalavi Adhu - கலவிக்கு அடியாகவுள்ள
வினை, Vinai - கருமமானது
ெருவுதல் ஆம், Eruvuthal Aam - (எனக்கு) அச்சந்தருவதாக வுள்ளது;
ஆதலில், Aadhalil - ஆகையினால்,
உனது அடி நான் அணுகுவன், Unathu Adi Naan Anuguvan - (அந்தக் கருமம் தொலையும்படி) உனது திருவடிகளை நான் வந்து பணிகின்றேன்;
1456பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேவர்களுக்கு எல்லாம் பிரதானராய் அதிகாரி புருஷர்களாய் இருக்கிற ப்ரஹ்ம ருத்ராதிகளை சரீரதயா சேஷமாக உடையவனே – எனக்கு இங்கனே இருப்பதொரு அதிகாரத்தைத் தந்து கால்கட்டாம் அது எனக்கு வேண்டா அவர்கள் அதிகாரங்களில் எனக்கு ருசி இல்லை) 9
சாதலும் பிறத்தலும் என்று இவற்றை காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன் ஓதல் செய் நான்மறையாகி யும்பராதல் செய் மூவுருவானவனே ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-9
பதவுரை Show / Hide
ஓதல் செய், Othal Sei - பரம்பரையாக ஓதப்பட்டு வருகிற (- (ஆண்டாய் * * * வேண்டேன் -.))
நால் மறை ஆகி, Naal Marai Aagi - நான்கு வேதங்களுக்கும் நிர்வாஹகனாய்
உம்பர் ஆதல் செய் மூ உரு ஆனவனே, Umbar Aadhai Sei Moo Uru Aanavane - மேன்மையுடையவராகச் செய்யப்பட்டிருக்கின்ற பிரமன் சிவனிந்திரனாகிய மூவர்க்கு நியாமகனாயிருப்பவனே!
சாதலும் பிறத்தலும் என்ற இவற்றை, Sadhallum Piraththallum Endra Ivarthai - சாவதும் பிறப்பதுமான ஸம்ஸாரத்தை
காதல் செய்யாது, Kaadhal Seiyaadhu - விரும்பாமல்
உன கழல் அடைந்தேன், Una Kazhal Adaindhen - உனது திருவடிகளை அடைந்தேன்;
1457பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நல்ல சந்தஸ்ஸூக்களை உடைத்தான இவற்றை அப்யசிக்க வல்லார்கள் இவர் வேண்டேன் என்றதை தவிர்ந்து-அருளுதியேல் -என்ற பேற்றைப் பெறுவார்) 10
பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல் காமரு சீர்க் கலிகன்றி சொன்ன பாமரு தமிழ் இவை பாட வல்லார் வாமனன் அடி இணை மருவுவரே –6-1-10
பதவுரை Show / Hide
பூமரு, Poomaru - (எப்போதும்) பூக்கள் பொருந்தி இருக்கப்பெற்ற
பொழில், Pozhil - சோலைகளாலே
அணி, Ani - அலங்கரிக்கப்பட்ட
விண்ணகர் மேல், Vinnagar Mael - திருவிண்ணகர்த் திருப்பதி விஷயமாக,
காமரு சீர் கலிகன்றி சொன்ன, Kaamaru Seer Kalikanri Sonna - விரும்பத்தக்க ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷமியை யுடையரான திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பா மரு தமிழ் இவை, Paa Maru Tamil Ivai - தமிழ் பாசுரங்கள் நிறைந்த இத்திருப்பதிகத்தை
பாட வல்லார், Paada Vallar - ஓத வல்லவர்கள்
வாமனன், Vaamanan - ஸர்வேச்வரனுடைய
அடி இணை, Adi Inai - உபய பாதங்களை
மருவுவர், Maruvuvaar - பொருந்தப் பெறுவர்.
1458பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு தஞ்சமாவார் யார் -என்று ஆராயக் கடவன்-அவ்வளவில் நாம் தூரஸ்தராக ஒண்ணாது என்று நான் விபரீதத்திலே கை வளருகிற நாளே தொடங்கி எண்ணித் ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே திருவடிகளில் வந்து சரணம் புகுந்தேன் என்னும் அளவாய் ஆய்த்து இறே இங்கே வந்து நின்றது) 1
பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும் இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின வாயிலொட்டி யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-1
பதவுரை Show / Hide
புன் சொல், Pun Sol - (பிறர் சொல்லும்) அற்பமான வார்த்தைகளை
நெஞ்சில், Nenjil - நெஞ்சிலே
பொறுத்தேன், Porutthen - பொறுத்துக்கொண்டிருந்தேன்;
ஐம்புலன்கள் கடன் ஆயின, Aimpulankal Kadan Aayin - பஞ்சேந்திரியங்களுக்கும் கடமையாக ப்ராப்தமாயுள்ள
பொருள் இன்பம் என இரண்டும், Porul Inbam Ena Irandum - அர்த்தம், காமம் என்ற இரண்டையும்
இறுத்தேன், Irutthen - அநுபவித்துத் தீர்த்தேன்;
ஆர்வம் செற்றம், Aarvam Settram - (வேண்டியவர்களிடத்தில்) ப்ரீதியென்ன, (வேண்டாதவர்களிடத்தில்) பகையென்ன ஆகிய இவற்றை
வாயிலொட்டி, Vaayilotti - ‘அவசியம் நிறைவேற்றி விடக்கடவுன்’ என்று பிரதிஜ்ஞை பண்ணி
அறுத்தேன், Arutthen - நிறைவேற்றி விட்டேன்;
அவை தன்னை, Avai Thannai - அந்த ராகத்வேஷங்களை
மனத்து அகற்றி, Manaththu Akattri - (இப்போது) நெஞ்சில் நின்றும் நீக்கினவனாய்க் கொண்டு
வெறுத்தேன், Verutthen - அவற்றில் வெறுப்புற்றவனாகி,
திருவிண்ணகர் மேயவனே நின் அடைந்தேன், Thiruvinnagar Meyavane Nin Adaindhen - திருவிண்ணகர்ப் பெருமானே! உன்னைச் சரணம் புகுந்தேன்.
1459பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரு மார்பா –உன்னுடைய ஸ்வா தந்த்ர்யத்தை அழித்து ஸ்வீகரிப்பிக்கும் ஸ்ரீ பிராட்டி அன்றோ அருகே இருக்கிறாள் – அவள் ஏதேனும் தப்புச் சொல்லிலும் விடேன் என்னும் நீயும்-உன் ஸ்வா தந்த்ர்யத்தை அழித்து உன்னை இட்டு ஸ்வீகரிப்பிக்கும் அவளும் இருவரும் இங்கே சந்நிதி பண்ணுகையாலே தேவர் திருவடிகளுக்கு தகுதியானேன் – கலங்கா பெரு நகரம் இருப்பாய் இருக்க அவ்விடத்தை விட்டு ஸ்ரீ பிராட்டியோடு கூட எய்த்தாரை எடுக்கைக்காக திரு விண்ணகரிலே சந்நிஹிதனாய் – நான் எய்த்துக் கொடு நின்றேன் – எய்த்தாருக்கும் எய்த்தாரை எடுக்க வந்து நிற்கிறவர்களுக்கும் ஒரு சேர்த்தி இல்லையோ) 2
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியில் மனத்தால் இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில் பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா சிறந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே –6-2-2
பதவுரை Show / Hide
உன்னை, Unnai - (எப்போதும் ஸ்மரிக்கத் தகுந்தவனான) உன்னை (- (திருவிண்ணகர் மேயவனே!- ;) (அதற்கு மேலே))
முன்னம், Munnam - முதலிலே
மறந்தேன், Marandhen - மறந்தொழிந்தேன்;
மறந்த மதி இல் மனத்தால், Maranda Mathi Il Manaththal - இப்படி மறந்தோமே! என்கிற அநுதாப வுணர்ச்சியுமில்லாத மனத்தையுடைமையினால்
எத்தனையும், Ethanaiyum - மிகவும் (அசித்தைக் காட்டிலும்)
இறந்தேன், Irandhen - நிஹீனனாகக் கெட்டுப் போனேன்;
அதனால், Adhanal - ஆகையினாலே
இடும்பை, Idumpai - துக்கங்களுக்கு ஆஸ்பதமான
குழியில், Kuzhiyil - கர்ப்பக் குழியில்
பிறந்தே, Pirandhe - இடைவிடாது ஜனன மரணங்களை யுடையனாய்க் கொண்டு
எய்த்து ஒழிந்தேன், Eyththu Ozhindhen - அனர்த்தப்பட்டுப் போனேன்;
திரு மார்பா பெருமான், Thiru Maarpaa Perumaan - பிராட்டியை மார்பிலே யுடைய பெருமானே!
நின் அடிக்கே, Nin Adikke - உனது திருவடிகளுக்கே
சிறந்தேன், Siranthen - (இப்போது) தகுந்தவனாக அமைந்தேன்.
1460பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விபூதி த்வயத்தையும் தனக்கு பிரகாரமாக உடையனாய் இருந்து வைத்து என்னைப் பெறுகை தனக்கு தேட்டமாக வந்தான் ஆய்த்து – இன்னும் வரத்தும் போக்கும் உண்டு என்று தோற்றாதபடி ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்தான் ஆய்த்து – அறு காத பயணத்துக்கு பொதி சோறு கொண்டு போம் விஷயம் இங்கே சந்நிஹிதம் ஆய்த்து) 3
மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியில் உழைக்கும் ஊனேர் ஆக்கை தன்னை யுதவாமை உணர்ந்து உணர்ந்து வானே மா நிலமே வந்து வந்து என் மனத்து இருந்த தேனே நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-3
பதவுரை Show / Hide
வானே மா நிலமே, Vane Maa Nilame - நித்யவிபூதிக்கும் லீலா விபூதிக்கும் நிர்வாஹகனே! (- (திரு விண்ணகர் மேயவனே!- ;))
உவந்து வந்து, Uvandu Vandu - (பரமபதத்தில் நின்றும்) உவப்போடேவந்து
என்மனத்து இருந்த தேனே, Enmanaththu Irundha Thenne - என்மனத்தில் நித்யவாஸம் பண்ணுகின்ற பரமபோக்யனே!
மான் ஏய் நோக்கியர்தம், Maan Aey Nokkiyartham - மானைப் போன்ற கண்ணழகையுடையரான ஸ்த்ரீகளினுடைய
வயிற்றுக் குழியில், Vayittruk Kuzhiyil - கர்ப்பக்குழியில் இருந்து கொண்டு
உழைக்கும், Uzhaikkum - கஷ்டப்படுமதாய்
ஊன் ஏய், Oon Aey - மாம்ஸாதிகள் நிறைந்ததான
ஆக்கை தன்னை, Aakkai Thannai - சரீரத்தினுடைய
உதவாமை உணர்ந்து உணர்ந்து, Udhavamai Unarndhu Unarndhu - உபயோகமற்றதன்மையை நன்றாக அறிந்து
நின் அடைந்தேன், Nin Adaindhen - உன்னை வந்து பற்றினேன்
1461பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜ்ஞானம் பிறக்கைக்கு ஒரு காலமும்-த்யஜிகைக்கு ஒரு காலமும் வேண்டுகிறது இல்லை – இவ்வருகு உண்டான பந்துக்கள் நமக்கு உபகாரகர் அல்லர்கள்-இனி இவ்வளவுக்கு தஞ்சமாவார் ஆர் -என்று நெஞ்சிலே பட்டவாறே என்னையே தஞ்சமாக நினைத்து இரு -என்று அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு இறே-அது இப்போது வாரா உதவிற்று இவருக்கு இப்புத்தி விசேஷத்தை பண்ணுவித்து ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிதி பண்ணி யாய்த்த்து அர்ஜுனன் உடைய தேர்த் தட்டு போலே யாய்த்து ஸ்ரீ திரு விண்ணகர் அர்ஜுனனுக்கு அருளிச் செய்த வார்த்தை அவனோடு ஒத்த சம்பந்தம் உடையார்க்கு எல்லாமாம் இறே) 4
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே –6-2-4
பதவுரை Show / Hide
பெற்ற மக்கள், Petra Makkal - வயிற்றில் பிறந்த பிள்ளைகள் (- (திரு விண்ணகர் மேயவனே!- ;))
பெண்டிர், Pendir - மனைவியர்
என்ற இவர், Endra Ivar - இத்யாதிகளான பந்துக்கள்
பின் உதவாது அறிந்தேன், Pin Udhavathu Arindhen - முடிவு காலத்துக்குத் துணையாக மாட்டார்க ளென்பதைத் தெரிந்து கொண்டவனாய்
பிறிந்தேன், Pirindhen - (அவர்களை) விட்டொழிந்தேன்;
நீ பணித்த அருள் என்னும், Nee Paniththa Arul Ennum - (முன்பு திருத்தேர்த் தட்டிலே) நீ அருளிச் செய்த சரமச்லோகமாகிற
ஒள் வாள் உருவி, Ol Vaal Uruvi - ஒளி பொருந்திய கத்தியை உறையில்நின்றும் கழற்றி,
ஐம்புலன்கள் இடர் தீர, Aimpulankal Idar Theera - சப்தாதிவிஷயங்களாலே உண்டாகிற துயர் தொலையும்படி
எறிந்தேன், Erindhen - வீசினேன்;
வெறிந்து வந்து, Verinthu Vandu - அகிஞ்சானாய்க்கொண்டு வந்து
நின் அடிக்கே செறிந்தேன், Nin Adikke Serindhen - உனது திருவடிகளுக்கே பொருந்தினேன்.
1462பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஐஸ்வர்யம் பிரத்யஷம் நீர் ஆசைப்படுகிறது அதீந்த்ரம் என்ன ஒண்ணாத படி ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து நிற்கிறது – கைங்கர்ய சாம்ராஜ்யத்தை தருகைக்கு அன்றோ இந்நிலை) 5
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே மாண்டார் என்று வந்தார் அந்தோ மனை வாழ்க்கை தன்னை வேண்டேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-5
பதவுரை Show / Hide
பாண், Paan - இசைப்பாட்டையுடையனவாய் (- (திரு விண்ணகர் மேயவனே!-;))
தேன், Then - தேனைப் பருகுகின்ற
வண்டு, Vandu - வண்டுகள்
அறையும், Araiym - ரீங்காரம் செய்யப்பெற்ற
குழலார்கள், Kuzhalargal - கூந்தலையுடையரான மாதர்கள்
பல்லாண்டு இசைப்ப, Pallandu Isaiyappa - மங்களாசாஸணம் பண்ண
அரசு ஆகி, Arasu Aagi - அரசர்களாயிருந்து கொண்டு
வையம் எல்லாம், Vaiyam Ellam - பூமண்டலம் முழுவதையும்
ஆண்டார், Aandaar - ஆட்சிபுரிந்தார்கள்,
முன் ஆண்டவரே மாண்டார், Mun Aandavare Maandaar - (இப்படி) முன்பு ஆண்டு வந்த அவர்களே மாண்டு போனார்கள்,
என்று வந்தார், Endru Vandhaar - என்ற சொல்லுக்கு இலக்காய்க்கொண்டு வருகிறார்கள்;
அந்தோ, Andho - ஐயோ!
மனை வாழ்க்கை தன்னை வேண்டேன், Manai Vaalkkai Thannai Vendein - (இப்படி நிலையற்றதான) ஸம்ஸாரவாழ்க்கையை வெறுத்தவனாய்க்கொண்டு
நின் அடைந்தேன், Nin Adaindhen - உன்னைப் பற்றினேன்.
1463பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மதிளையும் அரணாகப் போம் படி கடலையும் உடைய இலங்கையை அழியச் செய்த – அந்த வில் கொண்டு வியாபாரிக்க அங்கே வந்து முகம் காட்டப் பெற்றது இல்லை என்ன அந்த பிரதி பஷத்தை அழியச் செய்து அங்கனே போனாயோ-போக்குக் காட்டி இங்கே அன்றோ வந்து புகுந்தது) 6
கல்லா ஐம் புலன்கள் வவை கண்டவாறே செய்யகில்லேன் மல்லா மல் அமருள் மல்லர் மாள மல்லடர்த்த மல்லா மல்லல் அஞ்சீர் மதிள் நீர் இலங்கை அழித்த வில்லா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-6
பதவுரை Show / Hide
கல்லா, Kallaa - (சாஸ்த்ர நெறியில் நிற்கமாட்டாத) கல்விபயிரா (- (திருவிண்ணகர்மேயவனே!- ;) (நின் அடைந்தேன்-.))
ஐம்புலன்கள் அவை, Aimpulankal Avai - பஞ்சேந்திரியங்களானவை
கண்ட ஆறு, Kanda Aaru - செய்ய நினைத்தவிதமாக
செய்யகில்லேன், Seyyakillein - நான் செய்யமாட்டுகின்றிலேன்;
மல்லர், Mallaiyar - வலிமையுள்ள பெருமானே!,
மல் அமருள், Mal Amarul - மற்போரில்
மல்லர் மாள, Mallaiyar Mal - (சாணூரன் முதலிய) மல்லர்கள் முடியும்படியாக
மல் அடர்த்த, Mal Atartta - (அவர்களுடைய) வலியையழித்த
மல்லா, Malla - மல்தொழில் வல்லவனே!,
மல்லம் அம் சீர், Mallam Am Cir - மிகவும் அழகிய செல் வத்தையுடைத்தாய்
மதிள், Matil - மதிள்களால் சூழப்பட்டதாய்
நீர், Nir - சுற்றிலும் நீர்க்கோட்டையை யுடைத்தான
இலங்கை, Ilankai - லங்காபுரியை
அழித்த, Alitta - நாசம்செய்த
வில்லா, Villa - சார்ங்கத்தையுடையவனே!
1464பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னுடைய பூர்வ வ்ருத்தத்தைப் பார்த்தால் தேவர் சீற வேண்டும்படியாய் இருக்கும் நான் சர்வ தோஷ உக்தனாய் இருந்தேன்-நீ சர்வஞ்ஞனாய் இருந்தாய் ஆனபின்பு -நம்மையும் தன்னையும் பாராதே இவன் நிர்தோஷரைப் போலே நம் காலைப் பிடிப்பதே என்று சீறாதே -சீறாமை போராது இத்தை திரு உள்ளத்தே கொண்டு அருள வேணும்- விச்வச நீயனான நீ சந்நிஹிதனாய் இருக்க பயாவஹமான பதார்த்தங்களுக்கு அடிமை செய்து திரிய வேணுமோ) 7
வேறாய் யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய் ஆறா வென் நரகத்து அடியேனை இடக்கருதிக் கூறா வைவர் வந்து குமைக்கக் குடி விட்டவரைத் தேறாது உன்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-7
பதவுரை Show / Hide
எந்தாய், Entay - ஸ்வாமிந்!, (- (திரு விண்ணகர் மேயவனே!- ;) (மனக்கொள்) (உன் அடைந்தேன்.))
யான், Yan - அடியேன்
வேறு ஆ, Veru A - விலக்ஷணமாக
இரந்தேன், Iranten - யாசிக்கின்றேன்;
வெகுளாது, Veguladu - சீற்றமி்ன்றி
ஐவர், Aivar - பஞ்சேந்திரியங்கள்
அடியேனை, Adiyenai - அடியேனை
ஆறா வெம் நரகத்து, Ara Vem Narakattu - ஓய்வில்லாத கொடிய ஸம்ஸாரநரகத்திலே
இடக் கருதி, Itak Karuti - தள்ள நினைத்து
கூது ஆ, Koothu Aa - என்னைத் தங்களுக்குப் பாகமாகக் கொண்டு
வந்து, Vandhu - என்னைக் கிட்டி
குமைக்க, Kumaikka - ஹிம்ஸிக்க,
குடி விட்டவரை, Kudi Vittavarai - (நீ என்னை நல்வாழிப் படுத்துகைக்காக ஸ்ருஷ்டிகாலத்தில் என்னிடத்தில்) குடியிருக்கச்செய்த அந்த இந்திரியங்களை
தேறாது, Theraadhu - நம்பாமல்
1465பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மூவா வானவர்–அகர்ம வச்யராக்கி அவர்களுக்கு உன்னை அனுபவிக்க கொடுத்து அவ்வழியாலே அவர்கள் சத்தையை நிர்வஹித்துக் கொண்டு போர நின்றாய்- பிராதாக்களில் ஒருவன் முடி சூடி வாழா நிற்க-ஒருவன் சிறைப் பட்டு கிடந்தால் போலே தோற்றா நின்றது யாய்ற்று – என்னுடைய ஷயத்தை போக்குகைகாக நீயே வந்து சந்நிஹிதனாய் இருக்க நான் பிறருக்கு அடிமை செய்து திரியவோ) 8
தீவாய் வல்வினையார் உடன் நின்று சிறந்தவர் போல் மேவா வென் நரகத்து இட உற்று விரைந்து வந்தார் மூவா வானவர்தம் முதல்வா மதி கோள் விடுத்த தேவா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-8
பதவுரை Show / Hide
தீ வாய், Thee Vaai - நெருப்பையுமிழ்கின்ற வாயையுடைய (- (திரு விண்ணகர் மேயவனே!- ;) (நின் அடைந்தேன்-,))
வல், Val - கொடிய
வினையார், Vinaiyaar - பாவங்கள்
சிறந்தவர் போல், Sirandhavar Pol - பந்துக்கள் போன்று
உடன் நின்று, Udan Nindru - என்னோடு பிரியாமல் கலந்துநின்று
மேவா வெம் நரகத்து இட உற்று, Mevaa Vem Narakaththu Ida Utru - பொருந்தாத கொடிய நரகத்திலே (என்னைத்) தள்ள முயன்று
விரைந்து வந்தார், Viraindhu Vandhaar - வெகுவேகமுடையனவா யிருக்கின்றன
மூவா, Moovaa - கிழத்தனம் முதலிய விகாரங்களற்ற
வானவர்தம் முதல்வா, Vaanavartham Muthalvaa - தேவாதிதேவனே!
மதிகோள் விடுத்த தேவா, Mathikool Vidutha Devaa - சந்திரனுடைய க்ஷயரோகத்தைப் போக்கினதேவனே!
1466பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டிமாரும் ஸ்ரீ நித்ய சூரிகளும் புருஷகாரமாக சரணம் புகுகிறார்) 9
போதார் தாமரையாள் புலவிக் குல வானவர்தம் கோதா கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த வேதா நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே –6-2-9
பதவுரை Show / Hide
போது ஆர் தாமரையாள், Pothu Aa Thamaraiyaal - நல்லபோதிலே அலர்ந்த தாமரைப்பூவை இருப்பிடமாகவுடையளான பிராட்டிக்கும் (- (திரு விண்ணகர் மேயவனே!- ;) (நின் அடைந்தேன்))
புலவி, Pulavi - பூமிப்பிராட்டிக்கும்
குலம் வானவர்தம், Kulam Vaanavartham - சிறந்த நித்யஸூரிகளுக்கும்
கோதா, Kodha - விரும்பத்தகுந்தவனே!
கோது இல் செங்கோல், Kothu Il Chengol - தடையின்றிச் செங்கோல் செலுத்துமவராய்
குடை, Kudai - கொற்றக்குடையை யுடையரான
மன்னர் இடை, Mannar Idai - (துரியோதநாதி) ராஜாக்களிடத்தில்
நடந்த தூதா, Nadanda Thutha - தூது நடந்தவனே!,
தூ மொழியாய், Thoo Mozhiyai - இன்சொற்களை யுடையவனே!
சுடர்போல், Sudharpol - விளக்கொளிபோலே (ஜ்வலித்துக்கொண்டு)
என் மனத்து இருந்த, En Manathu Irundha - என்னுள்ளத்தில் உறைகின்ற
வேதா, Veda - வேத வேத்யனே!- ;
1467பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தும் வல்லார் –அங்கே போய் சிலருக்கு பரதந்த்ரராய் இருக்கை அன்றிக்கே ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே-தாங்கள் அங்குத்தைக்கு நிர்வாஹகராய்க் கொண்டு ஸ்ரீ வைகுண்டத்தைப் பிராபிக்கப் பெறுவார்) 10
தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை வானாரும் மதிள் சூழ் வயல் மங்கையர் கோன் மருவார் ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார் கோனாய் வானவர் தம் கொடி மா நகர் கூடுவரே –6-2-10
பதவுரை Show / Hide
தேன் ஆர் பூ புறவின், Then Aar Poo Puravin - தேன்நிறைந்த பூக்களை யுடைய சோலைகள் யுடைத்தான
திரு விண்ணகர், Thiru Vinnagar - திருவிண்ணகர்த் திருப்பதியிலே
மேயவனை, Meyavanai - நித்யவாஸஞ்செய்தருளு மெம்பெருமான் விஷயமாக,
வான் ஆரும் மதிள் வயல் சூழ் மங்கையர் கோன், Vaan Aarum Mathil Vayal Soozh Mangaiyar Kon - ஆகாசத்தையளாவியிருக்கிற மதிள்களாலும் கழனிகளாலும் சூழப்பட்ட திருமங்கையிலுள்ளார்க்கு ஸ்வாமியாய்,
மருவார், Maruvar - பகைவருடைய
ஊன் ஆர், Oon Aar - சரீரங்களிலே புகுவதான வேற்படையையுடையரான
கலியன், Kaliyan - ஆழ்வார்
ஒலிசெய், Olisei - அருளிச்செய்த
தமிழ் மாலை, Tamil Malai - இத் தமிழ்ப்பாசுரங்களை
வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள்
கோன் ஆய், Kon Aay - ஸ்ரீவைகுண்ட நிர்வாஹகராய்க் கொண்டு
வானவர் தம் கொடி மா நகர், Vaanavar Tham Kodi Maa Nagar - நித்யஸூரிகளுடைய கொடிகளால் அலங்கரிக்கப் பட்ட சிறந்ததான ஸ்ரீவைகுண்டத்தை
கூடுவர், Kooduvar - அடையப்பெறுவர்.
1468பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (துறப்பேன் அல்லேன் இன்பம் –சுகத்தை சந்யசிப்பேன் அல்லேன் துறவாது நின்னுருவம் மறப்பேன் அல்லேன் –சுகத்தை துறவாமை யாவது உன்னுடைய வடிவை மறவாதே இருக்கை என்றும் மறவாது யான் உலகில் பிறப்பேனாக எண்ணேன் –மறவாமையால் பெற்றது பிறவாமை நின் திறத்தேன் ஆன தன்மையால் -பிறவாமை பெற்றது-ஸ்ரீ திரு விண்ணகரானே – உன் திறத்தேனாக பெற்றது நீ சந்நிஹிதன் ஆகை) 1
துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின்னுருவம் மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யானுலகில் பிறப்பேனாக எண்ணேன் பிறவாமை பெற்றது நின் திறத்தேன் ஆ தன்மையால் திரு விண்ணகரானே –6-3-1
பதவுரை Show / Hide
இன்பம், Inbam - (உன் அநுபவத்தினாலுண்டாகக்கூடிய) பேரின்பத்தை (- (திருவிண்ணகரானே!-))
துறப்பேன் அல்லேன், Thurappeen Alleen - தவிரமாட்டேன்;
துறவாது, Thuravaadhu - அவ்வின்பத்தைத்தவிராதவனாகி
என்றும், Endrum - ஒருநாளும்
நின் உருவம் மறப்பேன் அல்லேன், Nin Uruvam Marappeen Alleen - உன்வடிவழகை மறவாதவனாயிருக்கின்றேன்;
மறவாது, Maravaadhu - அவ்வடிவழகை மறவாதவனாகி
யான், Yan - நான்
உலகில், Ulagil - ஸம்ஸாரத்தில்
பிறப்பேன் ஆக எண்ணேன், Pirappeen Aaga Ennen - இனிப் பிறவியெடுக்க எண்ணமற்றவனாயிருக்கின்றேன்;
பிறவாமை பெற்றது, Piravaamai Pettrathu - இனிப்பிறவாதபடி பேறுபெற்ற இதுதானும்
நின் திறத்தேன் ஆதன்மை யால், Nin Thiraththen Aadhanmai Yaal - உனக்கே ஆட்பட்டதனாலேயாம்.
1469பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவண பவனத்தை விட்டு ஆகாஸ ஸ்தானனான போதே ஸ்ரீமான் ஆனான் இறே அப்ராப்த விஷயங்களை விட்ட அநந்தரம் ப்ராப்த விஷயத்தின் உடைய சரம அவதியிலே நின்றேன் பிராப்தி பலமான கைங்கர்யத்துக்கு யோக்யன் ஆனேன் – இவனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஔபாதிகமாய்-ஈஸ்வர பாரதந்த்ர்யம் ஸ்வா பாவிகமாய் இருக்கும் இறே – நீயே வந்து புகுகிற இடத்தில்-நான் விலக்கிற்றிலேன்-என்ற படி-அநந்ய கதியை விடில் நிர்க்க்ருணன் ஆம் பிராட்டிக்கு அநபிமதம் செய்யில் பிரணயி யன்றிக்கே ஒழியும்ஆக-ஸ்வரூபமும் பிரணயித்வமும்-இரண்டும் இழவாம்) 2
துறந்தேன் ஆர்வச் செற்ற சுற்றம் துறந்தமையால் சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே அறந்தானாய்த் திரிவாய் யுன்னை என் மனத்தகத்தே திறம்பாமல் கொண்டேன் திருவிண்ணகரானே –6-3-2
பதவுரை Show / Hide
அறம் தானாய்த் திரிவாய், Aram Thaanayth Thirivaai - தானே ஸாக்ஷாத்தர்மமாய் ஆள்பார்த்துத் திரியுமவனே!, (- (திருவிண்ணகரானே!- ;) (திருமாலே!- ;))
சுற்றம், Sutram - (ஸம்ஸாரிகளுடன்) உறவையும்
ஆர்வம், Aarvam - அன்பையும்
செற்றம், Settram - விரோதத்தையும்
துறந்தேன், Thurandhen - தவிர்ந்தேன்;
துறந்தமை யால், Thurandhamai Yaal - தவிர்ந்ததனால்,
நின் அடிக்கே, Nin Adikke - உன் திருவடிகளிலேயே
அடிமை சிறந்தேன், Adimai Sirandhen - கைங்கர்யம் பண்ணவுரியனானேன்;
உன்னை, Unnai - உன்னை
என் மனத்தகத்தே, En Manaththakaththae - எனது நெஞ்சினுள்ளே
திறம்பாமல் கொண்டேன், Thirampamal Konden - தவறாது தரித்துக் கொண்டேன்
1470பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தப்ப ஒண்ணாததைத் தப்பி திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன் என் பக்கலில் தயைப் பண்ணி யருள வேணும் -என்கிறார்) 3
மானேய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும் ஊனேய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன்னடைந்தேன் கோனே குறுங்குடியுள் குழகா திரு நறையூர்த் தேனே வரு புனல் சூழ் திரு விண்ணகரானே –6-3-3
பதவுரை Show / Hide
கோனே, Kone - ஸ்வாமிந்!
குறுங்குடியுள் குழகா, Kurungudiyul Kuzhaga - திருக்குறுங்குடியிலே வந்து கலந்துகொள்ள
வரு புனல் சூழ் திரு விண்ணகரானே, Varu Punal Sooz Thiru Vinnakaranne - பெருகுகின்ற தீர்த்தங்களால் சூழப்பட்ட திருவிண்ணகரில் எழுந்தருளியிருக்கும் பெருமானே!
மான் ஏய் நோக்கு நல்லார், Maan Aey Nookku Nallaar - மான் பார்வை போன்ற பார்வையையுடைய மாதர்களது
மதி போல் முகத்து உலவும், Mathi Pol Mugaththu Ulavum - சந்திரன் போன்ற முகத்தில் உலாவுகின்ற
ஊன் எய் கண் வாளிக்கு, Oon Aey Kann Vaalikku - மாம்ஸமயமான கண்களாகிற பாணத்துக்கு
உடைந்து, Udaindhu - அஞ்சி நடுங்கி
ஓட்டந்து, Oottandhu - ஓடிவந்து
உன் அடைந்தேன், Un Adaindhen - உன்னைச் சரணடைந்தேன்
1471பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நினைவு இன்றிக்கே இருக்க ஸ்ரீ மதுரையிலே உறங்குகிறவர்கள் ஸ்ரீ மத் த்வாரகையிலே விழித்தால் போலே திருவடிகளிலே வந்து கிட்டிக் கொடு நிற்கக் கண்டேன் – உன்னை கிட்டுகைக்கு மூல ஸுஹ்ருதமும் நீயே -என்கிறார் ஸ்ரீ சர்வாதிகனான உன்னைக் கிட்டி என்னுடைய பிராப்தி பிரதிபந்தகமான பாபங்களை அடியைப் போக்கினேன் – ராவணனாலே நெருக்குண்டு புகலிடம் அற்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு புகலாகக் கடவதாக கடல் கரை வெளியிலே எடுத்துவிட்டு நின்றால் போலே சம்சாரத்திலே விஷயங்களாலே நெருக்குண்டு நோவு படுகிற எனக்கு புகலாகஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே-அத்தைத் தப்பித் திருவடிகளிலே வந்து புகுந்தேன்) 4
சாந்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்து ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன் போந்தேன் புண்ணியனே உன்னை எய்த்து என் தீ வினைகள் தீர்ந்தேன் நின்னடைந்தேன் திருவிண்ணகரானே –6-3-4
பதவுரை Show / Hide
சாந்து ஏந்தும் மெல் முலையார், Santhu Aenthum Mel Mulaiyaar - குங்கும மணிந்த மெல்லிய முலைகளையுடையரான மாதர்களது (- (திரு விண்ணகரானே!- ;))
தடம் தோள், Thadam Thol - பருத்த தோள்களை
புணர் இன்பம் வெள்ளத்து, Punar Inbam Vellaththu - அணைவதனாலுண்டாகும் இன்பசாகரத்தில்
ஆழ்ந்தேன், Aazhnthen - (கீழ் நாட்களில்) மூழ்கிக்கிடந்தேன்; (அதனால்)
அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன், Aru Narakaththu Azhundhum Payan Padaiththen - கொடிய ஸம்ஸாரநரகத்தில் அழுந்திக்கிடப்பதாகிற பலனைப் பெற்றேன்;
புண்ணியனே, Punniyanne - புண்யமே வடிவெடுத்திருக்கும் பிரானே!
போந்தேன் நின் அடைந்தேன், Pondhen Nin Adaindhen - (உன் திருவடிவாரத்திலே) வந்து சேர்ந்தவனாய் உன்னையடைந்தேன்;
உன்னை எய்தி, Unnai Eydhi - உன்னைக் கிட்டி
என் தீ வினைகள் தீர்ந்தேன், En Thee Vinaigal Theerndhen - எனது கொடும்பாவங்கள் தொலையப்பெற்றேன்.
1472பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெரு மிடுக்கனான ராவணனை அழியச் செய்த வருத்தம் உண்டோ என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி சேர விட்டுக் கொள்ளுகைக்கு –எனக்காக வந்து நிற்கிற இடம் ஸ்ரீ திருவிண்ணகர் -என்கிறார்) 5
மற்றோர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்துப் பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம்பெருமான் வற்றா நீள் கடல் சூழ் இலங்கை ராவணனைச் செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே –6-3-5
பதவுரை Show / Hide
வற்றா நீள் கடல் சூழ், Vatraa Neel Kadal Sooz - ஒருநாளும் வற்றாத பெரியகடலால் சூழப்பட்ட
இலங்கை, Ilankai - லங்காபுரியில்
இராவணனை, Iravanai - ராவணனை
செற்றாய், Settrai - கொன்றொழித்தவனே!,
கொற்றவனே, Kotravaney - தேவாதிதேவனே!
மற்று ஓர் தெய்வம் எண்ணேன், Mattru Oru Deivam Ennen - வேறொரு தெய்வத்தை நெஞ்சிலும் நினைப்பேனல்லேன்;
எம்பெருமான், Emperumaan - ஸ்வாமிந்!
உன்னை, Unnai - உன்னை
என் மனத்து வைத்து, En Manaththu Vaiththu - எனது நெஞ்சில் இருத்தி
பெற்றேன், Petren - ஒரு பேறுபெற்றேன்;
பெற்றதுவும், Pettrathuvum - அப்படி நான் பெற்ற பேறாவது
பிறவாமை, Piravaamai - இனிப் பிறப்பில்லாமையே.
1473பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி ஜகதா காரனாய் இருக்கிற உன்னை –-நெஞ்சாலே அசந்நேவ-என்கிறபடியே அசத் கல்பனாய் உரு மாய்ந்து போன நான்இப்போது உஜ்ஜீவிக்கும் படி தேவரை அனுவர்த்தித்தேன் – இவ்வாத்மாவுக்கு நீயே சேஷி-உன்னைக் குறித்து இவ்வாத்ம வஸ்து அத்யந்த சேஷம் -என்கிற முறையாலே – தத்வம் இருந்தபடி அல்லது பிரதிபத்தி பண்ணக் கடவது அல்லாத படியான பின்பு வேறு சிலரை ஆஸ்ரயநீயனாக நினைத்து இரேன் – இப்படி ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதனான உன்னை ஒழிய ஸ்ரீ பர தத்வமும் அறியேன்) 6
மை ஒள் கருங்கடலும் நிலனும் அணி வரையும் செய்ய சுடர் இரண்டும் இவையாய நின்னை நெஞ்சில் உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்றோர் தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே –6-3-6
பதவுரை Show / Hide
மை ஒண் கருங்கடலும், Mai On Karungadalum - மை போன்று அழகியதாய்க் கறுத்திருக்கின்ற ஸமுத்ரமும் (- (திரு விண்ணகரானே!- ;))
நிலனும், Nilanum - பூமியும்
மணி வரையும், Mani Varaiyum - சிறந்த பர்வதங்களும்
செய்ய இரண்டு சுடரும், Seyya Irandu Sudarum - அழகிய சந்த்ர ஸூர்யர்களும்
இவை ஆய நின்னை, Ivai Aaya Ninnai - ஆகிய இப்பொருள்களாய் விரிந்துநிற்கிற வுன்னை
நெஞ்சில், Nenjil - நெஞ்சினால்,
உய்யும் வகை, Uyum Vagai - நான் உஜ்ஜீவிக்கும்படி
உண்மையால் உணர்ந்தேன், Unmaiyaal Unarnthen - உள்ளபடி தெரிந்து கொண்டேன்!
இனி, Ini - இப்படியான பின்பு
மற்று, Mattru - இதற்குமேலே
பிறிது ஓர் தெய்வம் யாதும் அறியேன், Piridhu Oru Deivam Yaadum Ariyen - எவ்விதமான தேவதாந்தரத்தையும் நினைக்கமாட்டேன்.
1474பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் ஒரு அநந்ய கதி -என்கிறார்-இதர தேவதைகளை வாயாலே பேசேன் –-அவ்வளவே அன்றிக்கே நெஞ்சால் அவற்றுக்கு ஒரு ஆதிக்யம் உண்டாக நினையேன் ஆபாத ப்ரதீதியிலே அவற்றுக்கு ஒரு உத்கர்ஷம் உண்டாய்த் தோற்றிற்று ஆகிலும் அத்தை விச்வசியேன் – சர்வாதிகனாய் இருக்கிற நீ ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆனாய் நீயே ஆஸ்ரயநீயன் என்று அறிவித்த பின்பு இனி உனக்கு விபூதி பூதரானார் பக்கல் பரத்வ பிரதிபத்தி பண்ணேன்) 7
வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கு மாறே நீ பணியா தடை நின் திரு மனத்து கூறேன் நெஞ்சு தன்னால் குணம் கொண்டு மற்றோர் தெய்வம் தேறேன் உன்னை அல்லால் திருவிண்ணகரானே –6-3-7
பதவுரை Show / Hide
வேறே, Veerae - விலக்ஷணமாக (- (திரு விண்ணகரானே!- ;) (அடியேன்-;))
கூறுவது உண்டு, Koora Vudhu Undu - விண்ணப்பஞ் செய்வதொரு வார்த்தையுண்டு;
விரித்து உரைக்கும் ஆறே நீ பணியாது, Virithu Uraikkum Aarae Nee Paniyadhu - (நான்) விரிவாகக்கேட்க வேண்டும்படி நியமியாமல்
நின் திருமனத்து, Nin Thirumanaththu - உன் திருவுள்ளத்தில்
அடை, Aadai - ஸாரமாகக் கொண்டருள வேணும்;
உன்னை அல்லால், Unnai Allaal - உன்னையொழிய
மற்று ஓர் தெய்வம், Mattru Oor Deivam - வேறொரு தெய்வத்தை
கூறேன், Kooraen - வாய்விட்டுச் சொல்லமாட்டேன்;
குணம் கொண்டு, Gunam Kondu - (அவர்களிடத்தில்) குணவிசேஷத்தைக் கண்டாகிலும்
நெஞ்சு தன்னால், Nenju Thannal - நெஞ்சினால்
தேறேன், Theeraen - (அவர்களை ஆச்ரயணீயராக) விச்வஸிக்கமாட்டேன்.
1475பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சம்சாரத்திலே இருந்து ஜீவித்து முடிந்து போவாரை மநோ ரதியாதே-தேவர் பக்கலிலே ஸ்நேஹித்து அவதானத்தைப் பண்ணி-அநவரதம் மநோ ரதிக்கும் படியான தெளிவை உடைய எனக்கு புநராவ்ருத்தி இல்லாத மோஷத்தை தரப் பார்த்தது என்று அத்தைத் தருகைகாக வந்து நிற்கிற நீ) 8
முளிந்தீய்ந்த வெம் கடத்து மூரிப் பெரும் களிற்றால் விளிந்தீய்ந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே அளிந்தோர்ந்த சிந்தை நின் பால் அடியேற்கு வானுலகம் தெளிந்தே என்று எய்துவது திரு விண்ணகரானே –6-3-8
பதவுரை Show / Hide
முளிந்து தீந்த, Mulinthu Theentha - உலர்ந்து தீஞ்சுபோன (- (திரு விண்ணகரானே!- ;))
வெம் கடத்து, Vem Kadathu - வெவ்விய பாலைநிலத்திலே
மூரிப் பெருங்களிற்றால், Mooraip Perungkalittraal - வலிய பெரிய யானையினால்
விளிந்து, Vilinthu - தள்ளப்பட்டு
தீந்து, Theinthu - கெட்டுப்போன
மா மரம் போல் வீழ்ந்தாரை, Maa Maram Pol Veelndhaarai - பெரியமரங்கள் போல் தொலைந்து போனவர்களை
நினையாதே, Ninaiyaadhe - நினையாமல்
நின்பால், Ninpaal - உன்னிடத்தில்
அளிந்து ஓர்ந்த சிந்தை அடியேற்கு, Alinthu Oorntha Sindhai Adiyeerkku - கனிந்து தெளிந்த மனமுடையேனான எனக்கு
தெளிந்து, Thelinthu - இந்த ஸம்ஸாரக் கலக்கங்கள் நீங்கி
வான் உலகம் எய்துவது என்று, Vaan Ulagam Eydhuvathu Endru - பரமபதம் அடையும் நாள் எதுவோ?
1476பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீயபதியான உன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்திலே அந்வயிக்கும் படியான வைலஷண்யத்தை உடைய என்னை- எனக்கு அதி தூரத்திலே வர்த்திக்கிற கர்மங்கள் என்னை நெருக்காத படி நீ அங்கீ கரித்து அருள வேணும்- நம்பீ-ஸ்ரீ லஷ்மீ சம்பந்தமும் மிகையாம் படி அன்றோ தேவரீர் உடைய பூர்த்தி – தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என் அடியார் அது செய்யார் -என்று அவளோடு மன்றாடும்படியான கல்யாண குணங்களாலே பூர்ணன் அன்றோ) 9
சொல்லாய் திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ மல்லா குடமாடி மதுசூதனே யுலகில் செல்லா நல்லிசையாய் திருவிண்ணகரானே –6-3-9
பதவுரை Show / Hide
மல்லா, Malla - மிடுக்குடையவனே! (- (திரு விண்ணகரானே!))
குடம் ஆடீ, Kudam Aadi - குடக்கூத்தாடினவனே!
மதுசூதனே, Madhusoodhane - மதுவென்னும் அசுரனைக் கொன்றவனே!
உலகில் செல்லா, Ulavil Chella - லோகத்தில் நடையாடாத (அபூர்வமான)
நல் இசையாய், Nal Isaiyai - நல்ல கீர்த்தியை யுடையவனே!.
நம்பீ, Nambi - பரிபூர்ணனே!,
திருமார்பா, Thirumaarpaa - பிராட்டியை மார்வில் உடையவனே!
சொல்லாய், Sollaai - அடியேனுக்கு மறுமொழி கூறியருளவேணும்;
உனக்கு ஆகி, Unakku Aagi - உன்விஷயத்தில்
தொண்டுபட்ட, Thondupatta - அடிமைபூண்ட
நல்லேனை, Nalleinai - விலக்ஷணனானவென்னை
வினைகள் நலியாமை, Vinaigal Naliyamai - பாவங்கள் தொந்தரவு செய்யாதபடி
நம்பு, Nambu - ஆதரித்தருளாய்.
1477பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஒரு படியாக அமையும்-இத்தை அதிகரிக்கைக்கு அடியான ருசியில் கண் அழிவு அற்று இருக்கும் அத்தனையே வேண்டுவது அவர்களுக்கு பகவத் பிராப்தி பிரதிபந்தகங்கள்-போக வேணும் என்று இவர்கள் இரக்க வேண்டா அவை தானே -நமக்கு இவ்விடம் இருப்பல்ல -என்று கால் வாங்கிப் போம்) 10
தாரார் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில் சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானைக் காரார் புயல் தடக்கைக் கலியன் ஒலி மாலை ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே –6-3-10
பதவுரை Show / Hide
தார் ஆர் மலர், Thaar Aar Malar - இதழ்மிக்க பூக்களையுடைத்தான
கமலம் தடம், Kamalam Thadam - தாமரைத் தடாகங்களினால்
சூழ்ந்த, Sozhndha - சூழப்பட்ட
தண் புறவின், Than Puravin - குளிர்ந்த தோட்டங்களை யுடையதாய்
சீர் ஆர் நெடு மறுகில், Seer Aar Nedum Marugil - செல்வம் மிக்க நீண்ட வீதிகளையுடையதான
திரு விண்ணகரானை, Thiru Vinnakaranai - திருவிண்ணகரிலே எழுந்தருளியிருக்கிற அப்பன்விஷயமாக,
கார் ஆர் புயல் தடக்கை கலியன், Kaar Aar Puyal Thadakkai Kalyan - காளமேகம் போன்று ஔதார்யத்தையுடைய நீண்ட கைகளையுடையரான திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை, Maala - சொல்மாலையாகிய
இவை, Ivai - இப்பாசுரங்களை
ஆர் ஆர் வல்லார், Ar Ar Vallar - எவரெவர் ஓதுகின்றனரோ,
அவர்க்கு, Avarkku - அவரவர்கட்கு
அல்லல், Allal - பாவங்கள்
நில்லா, Nilla - தங்கமாட்டாமல் ஓடிப்போய்விடும்.
1478பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி ஜகதா காரணனாய் வேத பிரதிபாத்யன் ஆனவன்-சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-என்று இறே-சொல்லுகிறது – அந்த வேதோக்தமான சர்வ கர்ம சமாத்ராத்யன் ஆனவன் சம்சாரிகள் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக கிட்டி வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரை ஆஸ்ரயிப்போம் ஒருப்படு என்று திரு உள்ளத்தோடு கூட்டுகிறார்) 1
கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால் பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன் விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான் நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே –6-4-1
பதவுரை Show / Hide
பீளையோடு, Peelayodu - பிளிச்சையோடு கூட (- (திரஸ்கரித்துச்) சொல்வதற்கு முன்,-)
கண்ணம் சுழன்று, Kannam Suzhandru - கண்கள் சுழலமிட்டு
ஈளை வந்து, Eilai Vandu - கோழைமேலிட்டு
ஏங்கினால், Aenginaal - தளர்ச்சியடைந்தால், (அப்போது)
பண் இன் மொழியார், Pan In Mozhiyaar - இசைப்பாட்டுபோல் இனிமையான வாய் மொழியை யுடையமாதர் (நம்மை நோக்கி)
பைய நடமின் என்னாத முன், Paiya Nadamin Ennaadha Mun - ‘மெல்ல நடந்து செல்லுங்கள்’ என்று
விண்ணும், Vinnum - ஆகாசமும்
மலையும், Malaiyum - பர்வதங்களும்
வேதமும், Vedhamum - வேதங்களும்
வேள்வியும், Velviyum - யாகங்களும்
ஆயினான், Aayinaan - தானேயாயிருக்கு மெம்பெருமான்
நண்ணும், Nannum - விரும்பியுடையுமிடமான
நறையூர், Naraiyoor - திருநறையூரை
நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே!
நாம் தொழுதும், Naam Thozhudum - நாம் வணங்குவோம்;
எழு, Ezhu - எழுந்திரு
1479பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் நமக்காக வந்து நிற்கிற தேசத்திலே நாமும் புக்கு ஆஸ்ரயிப்போம்) 2
கொங்குண் குழலார் கூடியிருந்து சிரித்து நீர் இங்கு என் இருமி எம்பால் வந்தது என்று இகழாத முன் திங்கள் எரி கால் செஞ்சுடராயவன் தேசுடை நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-2
பதவுரை Show / Hide
கொங்கு உண் குழலார், Kongu Un Kuzhalar - மணம் பொருந்திய கூந்தலை யுடையரான மாதர் (- (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு))
கூடி இருந்து, Koodi Irundhu - கூடு்டமாகத் திரண்டிருந்து
சிரித்து, Siriththu - பரிஹாஸம் பண்ணி
நீர் இருமி இங்கு எம்பால் வந்தது என், Neer Irumi Ingu Empaal Vandhadhu En - ‘நீங்கள் இருமிக்கொண்டு இவ்விடத்தில் எங்களிடத்தில் வந்தது எதுக்காக?‘
என்று இகழாத முன், Endru Ikazhatha Mun - என்று திரஸ்கரிப்பதற்கு முன்னே,-
திங்கள் எரி கால் செம் சுடர் ஆயவன், Thingal Eri Kaal Sem Sudar Aayavan - சந்திரனும் அக்நியும் காற்றும் ஸூரியனும் ஆகிய இப்பொருள்களாயிருக்கும் எம்பெருமானுடையதும்
தேசு உடை, Desu Udai - தேஜஸ்ஸையுடையதும்
நாங்கள், Naangal - நமக்குப் புகலிடமானதுமான
நறையூர், Naraiyoor - திருநறையூரை
1480பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எல்லாருக்கும் தம் தாமுடைய அபேஷிதங்கள் பெற்று போகலாம்படி அவன் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை நாம் போய் ஆஸ்ரயிப்போம்) 3
கொங்கார் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை எம்கோலம் ஐயா என் இனிக் காண்பது என்னாத முன் செங்கோல் வலவன் தான் பணிந்து ஏத்தித் திகழுமூர் நங்கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-3
பதவுரை Show / Hide
கொங்கு ஆர் குழலார், Kongu Aar Kuzhalar - (தலைப் பூக்களில் நின்றும் பெருகின) தேன்நிறைந்த கூந்தலையுடைய மாதர் (- (நாம் தொழுதும் நெஞ்சமே! எழு-.))
கூடி இருந்து, Koodi Irundhu - திரளாக இருந்து
சிரித்து, Siriththu - பரிஹாஸம்பண்ணி
ஐயா, Aiyya - ‘கிழவனாரே!
இனி, Ini - இப்படி நீர் கிழத்தன மடைந்த பின்பு
எம்மை, Emmai - எங்களையும்
எம் கோலம், Em Kolam - எங்களுடைய அலங்காரத்தையும்
என் காண்பது, En Kaanbadhu - எதுக்காகப் பார்ப்பது?’
என்னாத முன், Ennaadha Mun - என்று திரஸ்தரிப்பதற்கு முன்னே,
செங்கோல் வலவன் தான், Sengol Valavan Thaan - அரசாட்சி புரிந்த சோழராஜன்
பணிந்து, Panindhu - ஆக்ரமித்து
ஏத்தி, Aethi - துதித்து
திகழும் ஊர், Thigazhum Oor - விளங்கப் பெற்ற திவ்யதேசமாய்
நம் கோன், Nam Kon - எம்பெருமானுடையதான
நறையூர், Naraiyoor - திருநறையூரை
1481பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ அவஸ்தையிலும் பற்றலாம்படி விச்வச நீயனானவன் வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரை நாம் ஆஸ்ரயிப்போம்) 4
கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை வம்புண் குழலார் வாசலடைத்து இகழாத முன் செம்பொன் கமுகு இனம் தான் கனியும் செழும் சோலை சூழ் நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே –6-4-4
பதவுரை Show / Hide
கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற, Kombum Aravamum Valliyeum Vendra - வஞ்சிக் கொடியையும் ஸர்ப்பத்தையும் இளங்கொடியையும் தோற்கடித்த (- (நாம் தொழுதும், நெஞ்சமே ! எழு-.))
நுண் ஏர் இடை, Nun Aer Idai - நுட்பமாய் அழகிதான இடையையுடையரும்
வம்பு உண் குழலார், Vambu Un Kuzhalar - பரிமளம் மிக்க கூந்தலை யுடையருமான பெண்கள்
வாசல் அடைந்து, Vaasal Adaindhu - வாசற்கதவைப் போட்டுவிட்டு
இகழாத முன், Ikazhaadha Mun - அவமானப்படுத்துவதற்கு முன்னே-,
கமுகு இனம், Kamuku Inam - பாக்குமரங்களின் திரள்கள்
செம்பொன், Sembon - செவ்விய பொன் போலே
கனியும், Kaniyum - பழுத்திருக்கப்பெற்ற
செழு சோலை, Sezhu Solai - வளம்மிக்க சோலைகளாலே
சூழ், Sool - சூழப்பட்டதும்
நம்பன், Namban - விச்வஸிக்கத்தகுந்த எம்பெருமானுடையதுமான
நறையூர், Naraiyoor - திருநறையூரை
1482பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அங்கு உள்ள திர்யக்குகளும் அகப்பட இன்னது பெற்றிலோம் என்னும் சோகம் இன்றிக்கே அபிமத லாபத்தாலே களித்து வர்த்திக்கிற தேசம் ஆய்த்து ஆக-இன்னது பெற்றிலோம் என்னும் சோகம் இன்றிக்கே உத்தேச்யத்தைப் பெற்று களித்து வர்த்திகலாம் படியான நன்மையை உடைய தேசத்தை நாம் ஆஸ்ரயிப்போம்) 5
விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும் வென்ற கண் சலம் கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்து இகழா முன் மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ் தரு நலங்கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே –6-4-5
பதவுரை Show / Hide
விலங்கும், Vilangum - மானையும் (- (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு-.))
கயலும், Kayalum - மீனையும்
வேலும், Velum - வேற்படையும்
ஒண் காவியும், On Kaaviyum - அழகிய செங்கழுநீர்ப்பூவையும்
வென்ற, Vendru - தோற்கடித்த
கண், Kan - கண்களை யுடையரும்
சலம் கொண்ட சொல்லார் தாங்கள், Salam Konda Sollaar Thangal - கபடமுள்ள சொற்களை யுடையருமான பெண்கள்
சிரித்து, Siriththu - பரிஹாஸம் பண்ணி
இகழாத முன், Ikazhaadha Mun - திரஸ்கரிப்பதற்கு முன்னே,-
மலங்கும் வராலும் வாளையும், Malangum Varalum Vaalaiyum - பலவகைப்பட்ட மீன்கள்
பாய், Paai - துள்ளி விளையாடுகின்ற
வயல், Vayal - கழனிகளாலே
சூழ்தரு, Sooltharu - சூழப்பட்டதும்
நலம் கொள், Nalam Kol - நன்மைமிக்கதுமான
நறையூர், Naraiyoor - திருநறையூரை
1483பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சகல தாபமும் ஆறும்படியான ஜல சம்ருத்தியை உடைத்தான ஸ்ரீ திரு நறையூரை நாம் புக்கு ஆஸ்ரயிப்போம் – பொருந்தாத ராவணனை அழியச் செய்து ஸ்ரீ விபீஷணனுக்கு புகலாய் நின்ற ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைப் போலே நம்முடைய விரோதியை வாசனையோடே போக்குகைக்கு ஈடான பெரு மிடுக்கனானவன் வந்து வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரிலே போய்ப் புகுவோம்) 6
மின்னேர் இடையார் வேட்கையை மாற்றி இருந்து என்னீர் இருமி எம்பால் வந்தது என் என்று இகழா முன் தொன்னீர் இலங்கை மலங்க விலங்கெரி யூட்டினான் நன்னீர் நறையூர் தொழுது எழு மட நெஞ்சமே –6-4-6
பதவுரை Show / Hide
மின் நேர், Min Ner - மின்னல்போன்ற இடையையுடையரான மாதர் (முன்பு வைத்திருந்த) ப்ரீதியை (- (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு.-))
மாற்றி இருந்து, Maatri Irundhu - தீவிர்ந்தவர்களாய்க் கொண்டு
நீர், Nir - (கிழவரான) நீங்கள்
இருமி, Irumi - இருமிக்கொண்டு
எம்பால் வந்தது என் என்று, Embaal Vandhadhu En Endru - ‘எங்களிடம் வந்தது ஏதுக்காக!’ என்று
இகழாத முன், Ikazhaadha Mun - திரஸ்கரிப்பதற்கு முன்னே
தொல் நீர் இலங்கை, Thol Neer Ilangai - கடல்சூழ்ந்த லங்காபுரி
மலங்க, Malanga - வியாகுலப்படும்படி
விலங்கு, Vilangu - (அனமானாகிற) வானர வீரனைக்கொண்டு
எரி ஊட்டீனான், Eri Oottinaan - தீமூட்டிவிட்ட பெருமானுடையதாய்
நல் நீர், Nal Neer - நல்ல தீர்த்தங்களையுடைத்தான
நறையூர், Naraiyoor - திருநறையூரை
1484பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வேதத்தில் வாசனை போய் ஆசாரத்திலே ஏதேனும் ஓர் வைகல்யம் உண்டாய் இருக்கை அன்றிக்கே ஆசார பிரதானவர்கள் வர்த்திக்கிற தேசத்தை –நாமும் போய் ஆஸ்ரயிப்போம்) 7
வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து இவன் பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன் முன்னம் சொல்லார் மறை நான்கோதி யுலகில் நிலா யவர் நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-7
பதவுரை Show / Hide
வில் ஏர் நுதலார், Vil Aer Nuthalaar - வில்போன்று அழகிய நெற்றியையுடையரான மாதர் (- (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு-.))
வேட்கையை மாற்றி, Vedkaitai Maatri - (முன்பு வைத்திருந்த) ஆசையைத் தவிர்த்து
சிரித்து, Siriththu - பரிஹாஸம்பண்ணி
இவன் பொல்லான், Ivan Pollaan - ‘இந்தக் கிழவன் பொல்லாதவன்’
திரைந்தான், Thiraindhaan - சதை சுருங்கினான்
என்னும், Ennum - என்று (இகழ்ந்து) சொல்லும்படியான
புறன் உரை, Puran Urai - இழிவான வார்த்தைகள
கேட்பதன் முன், Kaetpathan Mun - கேட்கநேருவதற்கு முன்னே,-
சொல் ஆர், Sol Aar - பதங்கள் நிரம்பிய
நான்கு மறை, Naanthu Marai - நான்கு வேதங்களையும்
ஓதி, Othi - அதிகரித்து
உலகில், Ulagil - இவ்வுலகில்
நிலாயவர், Nilayavar - (அவ்வேதங்களை) ஸ்தாபிக்கு மவர்களாய்
நல்லார், Nallaar - நல்லொழுக்கமுடையரான வைதிகர்வாழ்கிற
நறையூர், Naraiyoor - திருநறையூரை
1485பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய உத்சவமும் வைதிக சமாராதானமும் என்றும் மாறாத ஊர் – ஸ்ரீ பரம பத்திலே போய் நித்ய அனுபவம் பண்ணும் அளவும் செல்ல இப் பிரக்ருதியோடே அத்தோடு போலியான ஸ்ரீ திரு நறையூரிலே புக்கு அனுபவிப்போம்) 8
வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார் தம்மைக் கேளுங்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன் வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர் நாளு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-8
பதவுரை Show / Hide
வாள் ஒண், Vaal On - வாள்போன்ற
கண் நல்லார், Kan Nallaar - கண்களையுடைய பெண்கள்
தாங்கள், Thangal - இப்போது இகழும் தாங்களே
மதனன், Madhanan - இவன் மன்மதன்
என்றார், Endraar - என்று சொன்ன
தம்மை, Thammai - ஆண்களைப் பார்த்து
ஈளையோடு, Eelaiyodu - கோழையோடு
ஏங்கு கிழவன், Aengu Kizhavan - ஏங்கும் கிழவன்
கேண்மின்கள், Keenmingal - எங்கே வந்தான் என்று கேளுங்கள்
என்னாத முன், Ennaadha Mun - என்று சொல்வதற்கு முன்
வேள்வும், Velvum - யாகங்களும்
விழவும் வீதியில், Vizhavum Veedhiyil - விழாக்களும் வீதியில்
என்றும் அறாத, Endrum Aradha - என்றும் தினமும்
ஊர் நாளும், Oor Naalum - நிகழும் ஊரான
நறையூர், Naraiyoor - நறையூரை
நாம் தொழுதும், Naam Thozhudum - நாம் வணங்குவோம்
எழு நெஞ்சமே!, Ezhu Nenjamai - எழுந்திரு மனமே
1486பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டிக்காக பரிகிரஹித்தான் என்கிற பெருமையை உடைய ஸ்ரீ திரு நறையூரை அவள் பரிகர பூதரான நாம் போய் ஆஸ்ரயிப்போம்) 9
கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட குனி சேர்ந்து வுடலம் கோலில் தளர்ந்து இளையா முன் பனி சேர் விசும்பில் பால் மதி கோள் விடுத்தான் இடம் நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-9
பதவுரை Show / Hide
கனி சேர்ந்து, Kani Serndhu - கோவைப்பழத்தோடொத்து (- (தளர்ந்து இளையாத முன்-;) (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு,-))
இலங்கு, Ilangu - விளங்காநின்ற
நல் வாயவர், Nal Vaayavar - அழகிய அதரத்தையுடையரான பெண்கள்
காதன்மை விட்டிட, Kaadhanmai Vittida - (வைத்திருந்த) ப்ரீதியை விட்டொழிக்கும்படியாக
உடலம், Udalam - சரீரமானது
குனி சேர்ந்து, Kuni Serndhu - கூன்வளைந்து
கோவில், Kovil - தடியோடுகூடி
விசும்பில், Visumbil - ஆகாசத்தில்
பால், Paal - பால் போன்று
பனி சேர், Pani Ser - குளிர்ச்சி பொருந்தியவனான
மதி, Madhi - சந்திரனுடைய
கோள், Kol - துன்பத்தை
விடுத்தான், Viduththaan - போக்கின பெருமானுடைய
இடம், Idam - இருப்பிடமாய்
நனி சேர், Nani Ser - பெருமை பொருந்தியதான
நறையூர், Naraiyoor - திருநறையூரை
1487பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்திரீகளும் கண்ணுக்கு இலக்கான யௌவனமும் உண்டான போதாக இத்தை மறவாதே அப்யசிக்க வல்லவர்கள் என்றும் ஒக்க பஞ்ச விம்சதி வார்ஷிகரான நித்ய சூரிகள் உடைய தேசத்துக்கு நியாமகராகப் பெறுவார் – என்றும் ஒக்க ஏக ரூபராய் இருக்கும் அவர்கள் இறே அவர்கள் –அவன் சாம்யா பத்தி கொடுத்து வைக்கையாலே) 10
பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை யிலாத முன் நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல் மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன்னரசு ஆவரே –6-4-10
பதவுரை Show / Hide
பிறை சேர் நுதலார், Pirai Ser Nudhalaar - சந்திரகலைபோன்ற நெற்றியை யுடையரான பெண்கள்
நம்மை, Nammai - நம் விஷயத்தில்
பேணுதல் இலாத முன், Penuthal Iladha Mun - ஆதரவைத் தவிர்த்துக் கொள்ளும்படியான கிழத்தனம் வருவதற்கு முன்னே,
நெஞ்சமே, Nenjamai - ‘ஓ மனமே!
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு என்ற, Nirai Ser Pozhil Soozh Naraiyoor Thozha Enra - தேன் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருநறையூரை வணங்கு’  என்று உபதேசித்தவரும்.
கறை ஆர் நெடு வேல், Karai Aar Nedu Vel - ரத்தக்கரை நிரம்பிய நீண்ட வேற்படையை யுடையவரும்
மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வாருடைய
சொல், Sol - இந்த ஸ்ரீஸூக்திகளை
மறவாது உரைப்பவர், Maravathu Uraippavar - மறவாமல் ஓதுமவர்கள்
வானவர்க்கு, Vaanavarkku - நித்ய ஸூரிகளுக்கும்
இன் அரசு ஆவர், In Arasu Aavar - மேற்பட்டவர்களாவர்.
1488பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவர்கள் புஜிக்கப் பெற்றது தன் பேறு என்னும் இடம் வடிவில் புகரிலே தோற்ற இருக்கிறவன் – அம்ருதத்தை புஜிக்கிற இவர்கள் உடைய விரோதியைப் போக்குகைக்காக கையிலே திவ்ய ஆயதங்களை தரித்துக் கொண்டு இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம்) 1
கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர் துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய வலங்கை யாழி இடங்கைச் சங்கம் உடையானூர் நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே –6-5-1
பதவுரை Show / Hide
முந்நீர், Munnir - ஸமுத்ரத்தை
கலங்க, Kalanga - கலங்கும்படியாக
கடைந்து, Kadaindhu - கடைந்து
அமுதம் கொண்டு, Amudham Kondu - (அதில் நின்று அமுதமெடுத்து
இமையோர் துளங்கல் தீர நல்கு, Imayor Thulankal Theera Nalku - தேவர்களின் கலக்கம் தீரும்படியாக (அவர்களுக்குக்) கொடுத்தருளியவனும்
சோதி சுடர் ஆய், Sothi Sudar Aay - பரஞ்சோதியா யுள்ளவனும்
வலங்கை ஆழி இடங்கை சங்கம் உடையான், Valangai Aazhi Idangai Sangam Udaiyaan - வலத்திருக்கையில் திருவாழி யையும் இடத்திருக்கையில் திருச்சங்கையும் உடையவனுமான எம்பெருமானுடைய
ஊர், Oor - திவ்ய தேசம்
நலம் கொள் வாய்மை, Nalam Kol Vaimai - நன்மை கொண்ட ஸத்யவாதித்வத்தை யுடையவரான
அந்தணர், Andhanar - பிராமணர்கள்
வாழும், Vazhum - வாழுமிடமான
நறையூர், Naraiyoor - திருநறையூராகும்.
1489பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அழகுக்கு சேர்ந்தால் போலே ஒளியை உடைத்தாய் தர்ச நீயமாய் இருக்கிற திரு உகிராலே இரண்டு கூறாம் படி கீண்டு பொகட்டு- ஆஸ்ரிதனுக்கு பிரதிஞ சம காலத்திலேயே உதவினான் என்கிற சுத்தியை உடையவன் வர்த்திக்கிற தேசம் – ஆளிட்டு அந்தி தொழுகை அன்றிக்கே தானே கை தொட்டுப் போக்கின சுத்தியை உடையவன்) 2
முனையார் சீயமாகி யவுணன் முரண் மார்வம் புனை வாள் உகிரால் போழ்பட வீர்ந்த புனிதனூர் சினையார் தேமாம் செந்தளிர் கோதிக் குயில் கூவும் நனையார் சோலை சூழ்ந்து அழகாய நறையூரே –6-5-2
பதவுரை Show / Hide
முனை, Munai - போர்புரிவதில்
ஆர், Ar - பொருத்தமுடைய
சீயம் ஆகி, Seeyam Aagi - நரஸிம்ஹமூர்த்தியாய்த் திருவவதரித்து
அவுணன், Avaunan - (இரணியனென்னும்) அசுரனுடைய
முரண் மார்வம், Muran Marvam - முரட்டு மார்பை
புனை, Punai - அழகு பொருந்தி
வாள், Vaal - ஒளிபொருந்திய
உகிரால், Ukiral - நகங்களினால்
போழ்பட, Pozhpada - இரண்டு பிளவாகும்படி
ஈர்ந்த, Eerndha - கிழித்துப்போட்ட
புனிதன், Punithan - பரமபவித்திரனான பெருமானுடைய
ஊர், Oor - திவ்யதேசம் (எது வென்றால்)
குயில், Kuyil - குயில்களானவை
சினை ஆர் தேமா, Sinai Ar Thema - தழைப்புவாய்ந்த தேன் மா மரங்களுடைய
செம் தளிர், Sem Thalir - சிவந்த தளிர்களை
கோதி, Kothi - கொந்தி
கூவும், Koovum - கூவப்பெற்றனவும்
நனை ஆர் சோலை சூழ்ந்து, Nanaik Ar Solai Soozhndhu - பூ மொட்டுகள் நிறைந்திருக்கப்பெற்றனவுமான சோலைகளால் சூழப்பட்டு
அழகு ஆய, Azhagu Aaya - ஆழகுடைத்தான
நறையூர், Naraiyoor - திருநறையூராம்.
1490பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேனா சமூஹத்தை துகைத்து கழித்து இலங்கையை அழியச் செய்தஸ்ரீ தசரதாத்மஜன் வர்த்திக்கிற ஊர்) 3
ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர் மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமர்ந்து நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே –6-5-3
பதவுரை Show / Hide
ஆனை புரவி தேரொடுகாலாள் அணிகொண்ட, Aanaipuravi Therodukalaal Anikonda - யானைகளும் குதிரைகளும் தேர்களும் காலாள்களுமாக அணிவகுக்கப்பட்ட
சேனை தொகையை சாடி, Senaithogaiyai Saadi - சேனைக் கூட்டத்தைச் சிதைத்து
இலங்கை செற்றான், Ilankai Settran - இலங்காபுரியை அழித்த பெருமானுடைய
ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்)
மீனை, Meenai - மீன்களை
தழுவி, Thazhuvi - (பிடிப்பதற்காக) இரண்டு கைகளாலும் அணைத்து
வீழ்ந்து, Veelndhu - (பின்பு அவற்றால் தள்ளுண்டவர்களாய்க்)கீழே விழுந்து
எழும், Ezhum - (பின்னும் அவற்றைப் பிடிக்க ஆசையினால்) எழுந்திருக்கிற
மீனவர்க்கு, Meenavarkku - உழவர்களுக்கு
அலமந்து, Alamandhu - அஞ்சி
ஆமை, Aamai - ஆமையானது
நானம் புதலில், Naanam Puthalil - மஞ்சள் புதரிலே
ஒளிக்கும், Olikkum - ஒளிந்துகொள்ளுமிடமான
நறையூர், Naraiyoor - திருநறையூராம்.
1491பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரிமளம் மிக்கு இருந்துள்ள திருக் குழலை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக ருஷபங்கள் ஏழையும் அழியச் செய்தவன் வர்த்திக்கிற தேசம்) 4
உறியார் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு வெறியார் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றானூர் பொறியார் மஞ்ஞை பூம் பொழில் தோறும் நடமாட நறு நாண் மலர் மேல் வண்டிசை பாடும் நறையூரே –6-5-4
பதவுரை Show / Hide
உறி ஆர் வெண்ணெய் உண்டு, Uri Aar Vennai Undu - உறிகளிலே நிறைத்து வைத்த வெண்ணெயை வாரி உட்கொண்டு
உரலோடும் கட்டுண்டு, Uralodum Kattundu - (அக்குற்றத்திற்காக) உரலோடு சேர்த்துக்கட்டப்பட்டவனும்
வெறி ஆர் கூந்தல் பின்னை பொருட்டு, Veri Aar Koondhal Pinnai Poruttu - பரிமளம் மிக்க கூந்தலையுடையம நப்பி்ன்னை பிராட்டிக்காக
ஆன் வென்றால், Aan Vendraal - (ஏழு) எருதுகளை வலியடக்கினவனுமான பெருமானுடைய
ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்)
பொறி ஆர் மஞ்ஞை, Pori Aar Manjai - புள்ளிகள் நிரம்பிய மயில்கள்
பூ பொழில் தோறும்நடம் ஆட, Poo Pozhil Thorumnadam Aada - பூஞ்சோலைகளெங்கும் கூத்தாடப் பெற்றதும்
வண்டு, Vandu - வண்டுகள்
நறு நாள் மலர் மேல், Naru Naal Malar Mel - மணம்மிக்க அப்போதலர்ந்த  பூக்களிலே இருந்துகொண்டு
இசை பாடும், Isai Paadum - இசைப்பாட்டுகளைப் பாடப்பெற்றதுமான
நறையூர், Naraiyoor - திருநறையூர்.
1492பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மிருது ஸ்வ பாவமான தோள் அழகை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக மருதுகளை வேரோடு பறிந்து விழும்படி சாய்த்த சர்வ ரஷகன் வர்த்திக்கிற தேசம்) 5
விடை ஏழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய் நடையால் நின்ற மருதம் சாய்ந்த நாதனூர் பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று நடையோடு இயலி நாணி யொளிக்கும் நறையூரே –6-5-5
பதவுரை Show / Hide
ஏழ் விடை வென்று, Ezhu Vidai Vendru - ஏழெருதுகளை வலியடக்கி (- (அப்படி நடக்க முடியாமையினாலே))
மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய், Men Thol Aaychikku Anban Aay - (மெல்லிய தோளழகை யுடைய நப்பின்னைப் பிராட்டிக்கு நாயகனானவனும்
நின்ற மருதம் நடையால் சாய்த்த நாதன், Nindra Marudham Nadayal Saayththa Naadhan - நிலைத்து நின்ற (இரட்டை) மருதமரங்களைத் தவழ்கிற நடையினாலே விழத்தள்ளினவனுமான எம்பெருமானுடைய
ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்)
அன்னம், Annam - ஹம்ஸங்களானவை
பெடையோடு, Pedaiyodu - (தமது) பேடைகளோடு கூடி
பெய் வளையார் தம்பின் சென்று, Pey Valaiyaar Thambin Sendru - செறிந்த வளைகளையணிந்த பெண்களின் பின்னேபோய்
நடையோடு இயலி, Nadayodu Iyali - (அவர்களுடைய) நடையை அநுஸரித்து நடக்கப்பார்த்து
நாணி ஒளிக்கும், Naani Olikkum - வெட்கமடைந்து ஒளிக்குமிடமான
நறையூர், Naraiyoor - திருநறையூராம்.
1493பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தான் மாதுலனாய் கண்ணநீரை விழ விட்டு துக்கம் கொண்டாடுவானாக மலை முறிந்து விழுமா போலே-அது விழும்படி பொருத ஆண் பிள்ளை வர்த்திக்கிற தேசம்) 6
பகுவாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர் நெகுவாய் நெய்தல் பூ மது மாந்திக் கமலத்தின் நகுவாய் மலர் மேல் அன்னம் உறங்கும் நறையூரே –6-5-6
பதவுரை Show / Hide
பகு வாய், Paghu Vaai - பெரிய வாயை யுடையவளும்
வன, Vana - மனக்கொடுமையை யுடையவளுமான
பேய், Pey - பேய்ச்சியாகிய பூதனையினுடைய
கொங்கை, Kongai - ஸ்தனத்தை
சுவைத்து, Suvaiththu - உறிஞ்சி
ஆர் உயிர் உண்டு, Aar Uyir Undu - (அவளது) அருமையான உயிரை முடித்தவனும்,
புகு வாய், Puku Vaai - (கம்ஸ னரண்மையினுள்ளே) நுழைய வேண்டிய வாசலில்
நின்ற, Nindra - (மதமூட்டி) நிறுத்தப்பட்டிருந்த
போதகம், Pothagam - (குவலயாபீடமென்னும்) யானை
வீழ, Veela - சாகும்படியாக
பொருதான், Porudhaan - போர்புரிந்தவனுமான பெருமானுடைய
ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்)
அன்னம், Annam - ஹம்ஸங்களானவை
நெகு வாய் நெய்தல் பூ, Neku Vaai Neiththal Poo - அலர்ந்த வாயையுடைய (விகஸித்த) கரு நெய்தற் பூக்களிலே
மது, Madhu - தேனை
மாந்தி, Maanthi - பருகி
கமலத்தின் நகு வாய் மலர்மேல், Kamalaththin Nagu Vaai Malarmel - விரிந்த வாயையுடைய தாமரைப்பூக்களிலே
உறங்கும், Uringum - கண்வளரப்பெற்ற
நறையூர், Naraiyoor - திருநறையூர்
1494பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சாந்தீபநீ அவனுடைய புத்ரனைக் கடல் கொள்ள அவனை மீட்டுக் கொடுத்தவன் வர்த்திக்கிற தேசம் – இழந்தார்கள் இழவுகள் தீர்க்குமவன் வர்த்திக்கிற தேசம்) 7
முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த அந்தணாளன் பிள்ளையை யன்நான்று அளித்தானூர் பொந்தில் வாழும் பிள்ளைக்காகிப் புள்ளோடி நந்துவாரும் பைம்புனல் வாவி நறையூரே –6-5-7
பதவுரை Show / Hide
முப்புரி நூலும், Muppuri Noolum - யஜ்ஞோபவீதத்தையும்
முந்து நூலும், Mundhu Noolum - அநாதியான வேதாக்ஷர ராசியையும்
முன் ஈந்த, Mun Eentha - முன்னே (தனக்குத்) தந்த
அந்தணாளன், Andhanalan - (ஸாந்தீபிநி யென்னும்) பிராமணனுடைய
பிள்ளையை, Pillaiyai - (கடலில் மூழ்கியிறந்த) புத்திரனை
அந்நான்று, Annanru - (குரு தக்ஷிணை ஸமர்ப்பிக்கிற) அக்காலத்தில்
அளித்தான், Aliththaan - (மீட்டுக்) கொடுத்தருளின பெருமானுடைய
ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்,)
புள், Pul - பறவைகள்
பொந்தில், Ponthil - மரத்தின் பொந்துகளில்
வாழும், Vazhum - வாழ்கிற
பிள்ளைக்காகி, Pillaiykaagi - குட்டிகளின் ஆஹாரத்துக்காக
ஓடி, Oodi - ஓடிவந்து
நந்து, Nandhu - நத்தைகளை
வாரும், Vaarum - திரட்டிக்கொண்டு போகப்பெற்ற
பைம்புனல் வாவி, Paimpunal Vaavi - தெளிந்த நீரையுடைய தடாகங்களையுடைத்தான
நறையூர், Naraiyoor - திருநறையூராம்.
1495பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேநா சமூஹமானது முடிந்து போம்படியாகவும்-ஜயத்ரதன் தலை அறுப்புண்ணும் படியாகவும் ஆஸ்ரிதன் உடைய பிரதிஞ சம காலத்திலேயே வந்து உதவின ஓரத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்) 8
வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம் விள்ளச் சிந்துக் கோன் விழ ஊர்ந்த விமலனூர் கொள்ளைக் கொழு மீன் உண் குருகோடிப் பெடையொடும் நள்ளக் கமலத் தேறல் உகக்கும் நறையூரே –6-5-8
பதவுரை Show / Hide
வெள்ளைப்புரவி தேர் விசயற்கு ஆய், Vellai Puravi Ther Visayarku Aayi - வெள்ளைக்குதிரைகள் பூட்டின தேரையுடையனான
விசயற்கு ஆய், Visayarku Aayi - அர்ஜுநனுக்காக
விறல் வியூகம் விள்ள, Virhal Viyugam Vill - (எதிரிகளினுடைய) மிடுக்கையுடைத்தான ஸேனாஸமூஹம் தொலையும்படியாகவும்
சிந்து கோன் விழ, Sindhu Kon Vizha - ஸிந்து தேசத்தலைவனான ஜயத்ரதன் முடியும்படியாகவும்
ஊர்ந்த, Oorntha - (தேரை) நடத்தின
விமலன், Vimalan - பரிசுத்தனான பெருமானுடைய
ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்)
கொள்ளை கொழுமீன் உண் குருகு ஓடி, Kollai Kozhumeen Un Kurugu Odi - மிகுதியாகக் கொழுத்த மீன்களைப் பிடித்துண்கிற கொக்குகள் ஓடிச்சென்று
பெடையோடும், Pedaiyodum - தம் பேடைகளோடகூட
நள்ளக் கமலம் தேறல் உருக்கும், Nallak Kamalam Therhal Urukkum - செறிந்த இதழ்களைடைய தாமரைப்பூவில் தேனைப் பருகப்பெற்ற
நறையூர், Naraiyoor - திருநறையூர்
1496பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்கிற தன் மேன்மை கிடக்கச் செய்தே ஆஸ்ரிதனுக்காக தாழ நின்று சாரத்தியம் பண்ணினவன் வந்து வர்த்திக்கிற தேசம்) 9
பாரையூரும் பாரந்தீரப் பார்த்தன் தன தேரையூரும் தேவதேவன் சேருமூர் தாரையூரும் தண் தளிர் வேலி புடை சூழ நாரையூரும் நல் வயல் சூழ்ந்த நறையூரே –6-5-9
பதவுரை Show / Hide
பாரை ஊரும் பாரம் தீர, Paarai Oorum Paaram Theera - பூமியில் நடமாடுகின்ற சுமையானது தொலையும்படியாக
பார்த்தன் தன் தேரை ஊரும், Paartthan Than Therai Oorum - அர்ஜுநனுடைய தேரை நடத்தினவனான
தேவதேவன், Deva Devan - தேவாதிதேவன்
சேரும் ஊர், Serum Oor - நித்யவாஸம் செய்தருளும் திவ்யதேசம் (எதுவென்றால்)
தாரை ஊரும் தண் தளிர் வேலி, Thaarai Oorum Than Thalir Veli - (தேனின்) வெள்ளம் பெருகாநின்ற குளிர்ந்த தளிர்கள் நிறைந்த வேலிகள்
புடை சூழ, Pudai Soozha - நாற்புறமும் சூழப்பெற்று
நாரை ஊரும, Naarai Oorum - நாரைகள் ஸஞ்சரிக்கப்பெற்ற
நல்வயல் சூழ்ந்த, Nalvayal Soozhntha - நல்ல கழனிகளால் சூழப்பட்ட
நறையூர், Naraiyoor - திருநறையூராம்,
1497பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செப்புமவர்க்குத்-திருமால் -சேமத் துணையாம் –இவனை அடை கொடு பாழ் போக்குகை அன்றிக்கே இவனுடைய ரஷணத்தை முடிய தலைக் கட்டிக் கொடுக்கும் துணையாம்) 10
தாமத் துளப நீண் முடி மாயன் தான் நின்ற நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் மேல் காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை சேமத் துணையாம் செப்புமவர்க்குத் திருமாலே –6-5-10
பதவுரை Show / Hide
துளபம் தாமம் நீள் முடி, Thulabam Thaamam Neel Mudi - திருத்துழாயினாலாகிய மாலையை நீண்ட திருமுடியிலே யுடையனான
மாயன் தான் நின்ற, Maayan Thaan Nindra - ஸர்வேச்வரன் நித்யவாஸம் பண்ணப்பெற்றதும்,
நாமம், Naamam - புகழ்பெற்றவைகளாய்
திரள் மா மாளிகை, Thiral Maa Maaligai - நெருங்கியிருக்கின்ற பெரிய திருமாளிகைகளினால்
சூழ்ந்த, Sozhndha - சூழப்பட்டதுமான
நறையூர்மேல், Naraiyoor Mel - திருநறையூர் விஷயமாக,-
காமம் கதிர்வேல் வல்லான் கலியன், Kaamam Kathirvel Vallaaan Kaliyam - மிகக் வொளிபொருந்திய வேற்படையைப் பிடிக்க வல்லவரான திருமங்கையாழ்வார்
ஒலி மாலை, Oli Maalai - அருளிச்செய்த இச்சொல் மாலையை
செப்புமவர்க்கு, Seppumavarkku - ஓதவல்லவர்களுக்கு
திருமால், Thirumaal - திருமகள் கொழுநனான ஸர்வேச்வரன்
சேமம் துணை ஆம், Semam Thunai Aam - எப்போதும் ரக்ஷகனான ஸஹாயபூதனாக ஆவன்.
1498பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செம்பியன் கோச் செங்கணான் -அவன் தனக்கு பெயர்-அவனுடைய அகடிதகட நா சாமர்த்தியம் உடன் இந்த வண்டுகள் மகிழம் பூவிலே படிந்த இத்துடன் வாசி அற உத்தேச்யமாய்த்து இருக்கிறது இவருக்கு அவ் ஊரில் உள்ளதாகையாலே) 1
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன் கொம்பமரும் வட மரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூட கிற்பீர் வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணிமாடம் சேர்மின்களே –6-6-1
பதவுரை Show / Hide
அம்பரமும், Ambaramum - ஆகாசத்தையும்
பெரு நிலனும், Peru Nilanum - பரந்த பூமியையும்
திசைகள் எட்டும், Thisaigal Ettum - எட்டுத்திக்குகளையும்
அலை கடலும், Alai Kadhalum - அலையெறிகின்ற கடல்களையும்
குலம் வரையும், Kulam Varaiyum - குலபர்வதங்களையும்
உண்ட, Unda - உட்கொண்ட
கண்டன், Kandan - திருக்கழுத்தையுடையவனும்
கொம்பு அமரும், Kombu Amarum - கிளைகள் பொருந்திய
வட மரத்தின், Vada Marathin - ஆலமரத்தினுடைய
இலை மேல், Ilai Mel - தளிரின் மீது
பள்ளி கூடினான், Palli Koodinaan - சயனித்துக்கொண்டவனுமான ஸர்வேச்வரனுடைய
திரு அடியே, Thiru Adiye - திருவடிகளையே
கூட கிற்பீர், Kooda Kirbeer - அடையவேணுமென்றிருப்பவர்களே!,
மணி வண்டு, Mani Vandu - அழகிய வண்டுகள்
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு, Vambu Avizhum Senbagathin Vaasam Undu - அப்போதலர்கின்ற செண்பகப் பூவின் பரிமளத்தைப் புஜித்து (பின்பு)
வகுளத்தின் மலர் மேல் வைகு, Vakulathin Malar Mel Vaiku - மகிழம்பூவின் மீது தங்கி யிருக்கப்பெற்றதும்.
செம்பியன் கோ செங்கணான் சேர்ந்த கோயில், Sembiyan Ko Senganaam Serndha Koyil - ‘செம்பியன் கோச்செய்கணான்’ என்னும் சோழராஜன் பணிசெய்யப்பெற்ற கோயிலுமான
திருநறையூர் மணிமாடம், Thirunaraiyoor Manimaadam - திரநறையூரிலுள்ள திவ்ய ஸந்நிதியை
சேர்மின்கள், Serminkal - போய்ச்சேங்கள்.
1499பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனுடைய விலாச சேஷ்டிதங்கள் உடன் காவேரியினுடைய ஸ்வைர சஞ்சாரத்தோடே வாசி அற இவருக்கு உத்தேச்யமாய் இருக்கிறது காணும் அங்கு உள்ளது ஆகையாலே) 2
கொழுங்கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குலவரையின் மீதோடி யண்டத் தப்பால் எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடிக் கீழ் இனிது இருப்பீர் இன வண்டாலும் உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-2
பதவுரை Show / Hide
நெடு வெள்ளம் கொண்ட காலம், Nedu Vellam Konda Kaalam - பிரளயப் பெருவெள்ளம் உலகங்களை) ஆக்ரமித்தவொரு சமயத்திலே (- (திருநறையூர் மணி மாடம், சேர்மின்கள்.-))
கொழுகயல் ஆய், Kozhukayal Aayi - பருத்த மத்ஸ்யரூபியாய்க் கொண்டு
குலவரையில் மீது ஓடி, Kulavaraiyil Meedhu Oodi - குவபர்வதங்களின் மேலே போய் ஸஞ்சரித்து
அப்பால், Appaal - அதற்குமேலே
அண்டத்து, Andaththu - அண்டபித்தியளவும்
எழுந்து, Ezhunthu - கிளம்பி (துள்ளி)
இனிது, Inidhu - சுகமாக
விளையாடும், Vilaiyadum - விளையாடின
ஈசன் எந்தை, Eesan Endhai - எம்பெருமானுடைய
இணை அடி கீழ், Inai Adi Keezh - உபயபாதங்களின் கீழ்
இனிது இருப்பீர், Inidhu Iruppir - சுகமாகவாழ விருப்பமுள்ளவர்களே!
இனம் வண்டு ஆலும், Inam Vandu Aalum - கூட்டமாகத் திரண்ட வண்டுகள் நடமாடப் பெற்ற
செழு பொன்னி, Sezhu Ponnni - அழகிய திருக்காவேரியானது
உழும் செறுவின் கரைகொணர்ந்து மேல், Uzhuvum Seruvin Karikondru Mel - உழப்படுகிற கழனிகளின் வரப்புகளின் மீது
மணி சிந்தி, Mani Sindhi - ரத்னங்களைக் கொண்டுவந்து சிதறத் தள்ளியும்
உலகு எல்லாம், Ulaku Ellam - ஸகல ஜனங்களும்
சந்தனமும், Sandhanamum - சந்தனக்கட்டைகளையும்
அகிலும், Akilum - அகிற்கட்டைகளையும்
கொள்ள, Kolla - எடுத்துக்கொள்ளும்படியாக
வளம் கொடுக்கும், Valam Kodukkum - வளங்களைக் கொடுக்குமிடமாய்
சோழன் சேர்ந்த, Chozhan Serndha - சோழராஜன் பணிசெய்யப்பெற்றதான
1500பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் ஜகதா காரனாய் நிற்கிற நிலையோடு இவன் யுத்தத்தில் பராக்ரமித்ததோடு வாசி அற -இவருக்கு உத்தேச்யமாய் இருக்கிறது காணும் அவ் ஊரை ஆஸ்ரயித்து வந்த சம்பத்து ஆகையாலே) 3
பவ்வ நீருடை யாடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா செவ்வி மாதிரமெட்டும் தோளா வண்டம் திரு முடியா நின்றான் பால் செல்ல கிற்பீர் கவ்வை மா களிருந்தி விண்ணி ஏற்றிக் கழல் மன்னர் மணி முடி மேல் காகமேறத் தெய்வ வாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம், சேர்மின்களே –6-6-3
பதவுரை Show / Hide
பவ்வம் நீர், Pavvam Neer - கடல் நீரை (- (திருநிறையூர் மணிமாடம் சேர்மின்கள்))
உடை ஆடை ஆகச் சுற்றி, Udai Aadai Aagasuttri - அரையிலுடுத்துக் கொள்ளும் பீதாம்பரமாகச் சுற்றி
பார் அகலம் திரு அடி ஆ, Paar Akalam Thiru Adi Aa - பூமிப் பரப்பையெல்லாம் திருவடியாகக் கொண்டு,
பவளம் மெய் ஆ, Pavalam Mei Aa - வாயுவைத் திருமேனியாகக் கொண்டு
செவ்வி மாதிரம் எட்டும் தோள் ஆ, Sevvi Maadhiram Ettum Thol Aa - அழகிய திசைகளெட்டையும் புஜங்களாகக் கொண்டு
அண்டம் திருமுடி ஆ, Andam Thirumudi Aa - அண்டப்பித்தியைத் திருவபிஷேகமாகவுங் கொண்டு
நின்றான் பால், Nindraan Paal - நின்ற ஸர்வேச்வரனிடத்திலே
செல்ல நிற்பீர், Sella Nirbeer - சென்று சேர விரும்பியிருக்குமவர்களே!,
கவ்வை, Kavvai - ஆரவாரத்தையுடையனவாய்
மா, Maa - பெரியவையான
களிறு, Kaliru - யானைகளை
உந்தி, Undhi - தள்ளிக்கொண்டு
வெண்ணி, Vennni - வெண்ணியென்னுமிடத்தில்
ஏற்ற, Etra - எதிர்த்து வந்த
கழல் மன்னர், Kazhal Mannar - வீரக்கழலணிந்த அரசர்களினுடைய
மணிமுடிமேல், Manimudimel - சிறந்த தலைகளின் மீது
காகம் ஏற, Kaagam Eera - காக்கைகள் ஏறி ஜீவிக்கும்படி
தெய்வம் வாள் வலம் கொண்ட, Deivam Vaal Valam Konda - திவ்யமான வாட்பட்டையின் வலிவைக் காட்டின
சோழன் –, Chozhan - சோழராஜன்
சேர்ந்த, Serndha - பணிசெய்யப்பெற்ற
1501பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் ஆஸ்ரித விரோதிகளைப் போக்கினதோடு இவன் யுத்தத்தில் வ்யாபரித்ததோடு வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது காணும் இவருக்கு) 4
பைங்கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கிப் பருவரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி அங்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர் வெங்கண் மா களிருந்தி விண்ணி யேற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம்மா வுய்த்த செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-4
பதவுரை Show / Hide
பைங் கண், Paing Kan - பசுமையான திருக்கண்களையுடைய (- (செங்கணான் கோ சோழந்;) (சேர்ந்த கோயில்;) (திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள்.))
ஆள் அரி உரு ஆய், Aal Ari Uru Aayi - நரஸிம்ஹரூபியாகி
வெருவ நோக்கி, Veruva Nookki - (எதிரிகள்) அஞ்சும்படி விழித்து
வரம் பரு தோள் இரணியனை, Varam Paru Thol Iraniyanai - பெற்ற வரங்களினால் பருத்த புஜங்களையுடையனான இரணியாசுரனை
பற்றி வாங்கி, Patri Vaangi - பிடித்திழுத்து
அம் கை, Am Kai - அழகிய திருக்கைகளிலுள்ள
வாள் உகிர் றுதியால், Vaal Ukir Rudhiyal - ஒளிபொருந்திய நகங்களின் நுனியினால்
அவனது ஆகம், Avanadhu Aagam - அவ்விரணியனுடைய சரீரத்தில் நின்றும்
அம் குருதி பொக்குவித்தான், Am Kuruthi Pokkuviththaan - அழகிய ரத்தத்தை வெள்ளமிடச்செய்த பெருமானுடைய
அடி கீழ் நிற்பீர், Adi Keezh Nirbeer - திருவடிகளின் கீழ் நிற்க விருப்பமுடையவர்களே!,
வெம் கண் மா களிறு உந்தி, Vem Kan Maa Kaliru Undhi - வெவ்விய கண்களை உடைய பெரிய யனைகளைத் தள்ளிக்கொண்டு
வெண்ணி ஏற்ற, Vennni Aetra - வெண்ணியென்னுமிடத்தில் எதிர்த்து வந்த
விறல் மன்னர், Virhal Mannar - சூரர்களான அரசர்கள்
திறல் அழிய, Thiral Azhiya - வலிமாளும்படியாக
வெம் மா உய்த்த, Vem Maa Uyththa - கடுங்குதிரைகளை நடத்தி வெற்றி பெற்றவனான
1502பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் பூமியை அடைய அளந்து கொண்டத்தோடு இவன் பூமியை அடையத் தானே நெருக்கி ஆண்டத்தோடு வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது காணும் இவருக்கு அவனை ஆஸ்ரயித்து வந்த சம்பத்து ஆகையாலே) 5
அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய் இரணியனதாகம் கீண்டு வென்றவனை விண்ணுலகில் செல யுய்த்தாற்கு விருந்தாவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப் புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் தென் தமிழன் வடபுலக் கோன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-5
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்பொரு காலத்தில் (- (அதற்கு மேலே) (சோழன், சேர்ந்த, திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள்-))
உலகம் மூன்றினையும், Ulagam Moondrinaiyum - மூவுலகங்களையும்
அளந்து, Alandhu - (திரிவிக்கிரமனாய்) அளந்து கொண்டவனும்
வேறு ஓர் அரி உரு ஆய், Veeru Oru Ari Uru Aay - விலக்ஷ்ணமானவொரு நரஸிம்ஹரூபியாகி
இரணியனது, Iraniyanathu - ஹ்ஹிரண்யாஸுரனுடைய
ஆகம், Aagam - உடலை
கீண்டு, Keendu - இருபிளவாகப் பிளந்து
வென்று, Vendru - வெற்றிபெற்று
அவனை விண் உலகில் செல உய்த்தார்க்கு, Avanai Vin Ulakil Sela Uyththarkku - அவ்விரணியனை வீரஸ்வர்க்கத்திற்குப் போகவிட்டவனுமான ஸர்வேச்வரனுக்கு
விருந்து ஆவீர், Virundhu Aaveer - விருந்தினராக ஆகவேண்டியிருக்குமவர்களே!,
மேல் எழுந்து, Mel Ezhunthu - கிளர்ந்துகொண்டு
விலங்கல் பாய்ந்து, Vilangkal Paayndhu - (இடையே தடையாக நின்ற) மலைகளை உடைத்துக்கொண்டு வந்து
பொன் சிதறி, Pon Sidhari - பொன்களை எங்கும் இறைத்துக்கொண்டு
மணி கொணர்ந்து, Mani Konarnthu - (மற்றும் பல)ரத்னங்களைத் திரட்டிக்கொண்டு வந்து
கரை மேல், Karai Mel - கரைகளின் மீது
சிந்தி, Sindhi - விழவிட்டு
புலம், Pulam - வெளிநிலங்களிலெங்கும்
பரந்து, Parandhu - வியாபித்து(இப்படி)
நிலம் பரக்கும், Nilaam Parakkum - பூமியெங்கும் பரவுகின்ற
பொன்னி, Ponni - திருக்காவேரியையுடைத்தான
நாடன், Naadan - நாட்டுக்குத் தலைவனாய்
தென் தமிழன், Then Tamizhan - தென் திசையிலுள்ள தமிழ்நாட்டுக்கரசனாய்
வடபுலம் கோன் –, Vadapulam Kon - வடநாட்டுக்கும் அரசனான
1503பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஜகதா காரதையோடு இவன் மூன்று ராஜ்யத்தையும் நிர்வஹித்ததோடு வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது ஆய்த்து அவ் ஊரை ஆஸ்ரயித்து வந்தது ஆகையாலே) 6
தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் தயங்கொளி சேர் மூவுலகும் தானாய் வானாய் தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய் தானாயன் ஆயினான் சரண் என்று உய்வீர் மின்னாடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட தென்னாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-6
பதவுரை Show / Hide
தன்னாலே, Thannale - ஸ்வேச்கையாலே (- (சோழன், சேர்ந்த திருநறையூர் மணிமாடம்) (சோமின்கள்?))
தன் உருவம், Than Uruvam - தனது திவ்யமங்கள விக்ரஹத்தை
பயந்த, Payandha - உண்நுபண்ணிக்கொண்ட
தான் ஆய், Thaan Aay - திவ்யாத்மஸ்வரூபத்தையுடையனாய்
நயங்கு ஒளி சேர் மூஉலகும் தான் ஆய், Nayangku Oli Seer Moolagum Thaan Aay - மிக்க வொளியையுடைய மூவுலங்களையும் தான் என்கிறசொல்லுக்குள்ளே அடக்கிக் கொண்டவனாய்
வான் ஆய், Vaan Aay - பரமபதத்துக்குத் தலைவனாய்
தன்னாலே, Thannale - தன்னுடைய ஸங்கல்பத்தாலே
தன் உருவில், Than Uruvil - தன்ஸ்வரூபத்தில் நின்றும்
மூன்று மூர்த்தி ஆய், Moondru Moorthi Aay - மூன்று மூர்த்திகள வெளியிட்டவனாய்
தான், Thaan - தானே
ஆயன் ஆயினான், Aayan Aayinaan - கோபாலக்ருஷ்ணனமாகத் திருவவதரித்தவனான எம்பெருமான்
சரண் என்று உய்வீர், Saran Endru Uyvheer - சரணம் என்றெண்ணி உஜ்ஜீவிக்க நினைப்பவர்களே!.
மின் ஆடு, Min Aadu - ஒளி பொருந்திய
வேல் ஏந்து, Vel Aendhu - வேற்படையைத்தரித்த
விளந்தை வேளை, Vilanthai Velaik - ‘விளந்தைவேள்’ என்னுமோரரசனை
விண் ஏற, Vin Aera - வீரஸ்வர்க்கமடையும்படி
தனி வேல் உய்த்து, Thani Vel Uythu - ஒப்பற்ற வேற்படையைப் பிரயோகித்து
உலகம் ஆண்ட, Ulagam Aanda - உலகங்களை ஆண்டு வந்த
தென் நாடன், Then Naadan - தென்தேசத்தரசனாய்
குடகொங்கன், Kudakongan - மேற்றிசையிலுள்ள கொங்கு நாட்டுக்குத் தலைவனான
1504பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெரிய ஆண் பிள்ளை யானவன் அவ் வாண் பிள்ளை தனத்தை நிர்வஹித்துக் கொடுக்கைக்காக ஆஸ்ரயிக்கிற தேசம்) 7
முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முது துவரைக் குலபதியாக் காலிப் பின்னே இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்த கிற்பீர் மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன் சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-7
பதவுரை Show / Hide
பேய்ச்சி, Peychchi - பூதனையானவள் (- (சேர்ந்த, கோயில், திருநறையூர் மணிமாடம்) (சேர்மின்கள்-.))
துஞ்ச, Thunja - மாளும்படியாக
தடமுலை, Tadamulai - (அவளது) பருத்த முலையிலுள்ள
நஞ்சு உண்டு, Nanju Undu - விஷத்தை உட்கொண்டவனும்,
முது துவரை, Muthu Thavarai - பிராசீனமான துவாரகைக்கு
குலபதி ஆய், Kulapathi Aay - தலைவனாய்த் திருவவதரித்து
காலி பின்னே, Kaali Pinne - பசுக்களின் பின்னே
தட, Tada - பெரிய
இலை குழல், Ilai Kuzhal - இலையாலே செய்யப்பட்ட குழலை
ஊதி, Oothi - ஊதிக்கொண்டு போனவனும்,
ஆயர் மாதர், Aayar Maathar - இடைப்பெண்களினுடைய
வளை இனம், Valai Inam - வளைத்திரள்களை
கொண்டான், Kondaan - (விளையாட்டாக) அபஹரித்தவனுமான எம்பெருமானுடைய
அடி கீழ், Adi Keezh - திருவடிகளின் கீழே
எய்த கிற்பீர், Eytha Kirbeer - கி்ட்டி ஆச்ரயிக்க விருப்பமுடையவர்களே!,
மலை தடத்த, Malai Thadatha - மலைப்பிராந்தங்களிலுண்டான
மணி, Mani - ரத்னங்களை
கொணர்ந்து, Konarndhu - திரட்டிக்கொண்டு வந்து
வையம் உய்ய, Vaiyam Uyy - உலகமெல்லாம் உஜ்ஜீவிக்கும்படி
வளம் கொடுக்கும், Valam Kodukkum - மிகுதியாக கொடுக்கின்றதாய்
வரு, Varu - பெருகிவருமதான
புனல், Punal - தீர்த்தத்தையுடைத்தாய்
அம், Am - அழகியதான
பொன்னி, Ponni - திருக்காவேரியையுடைய
நாடன், Naadan - நாட்டுக்குத் தலைவனாய்
சிலை, Silai - வில்லை
தட கை, Tada Kai - பெரிய கையிலுடையவனாய்
குலம் சோழன், Kulam Sozhan - சிறந்தவனான சோழராஜன்
1505பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கிருஷ்ணன் இடைப் பெண்கள் உடைய துகில்களையும் வளைகளையும் வாரிக் கொடு வருகிற வரவோடு வாசி அற –உத்தேச்யமாய் இருக்கிற படியை சொல்லிற்று -கீழ்ப் பாட்டில் – இப்பாட்டில் –ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனாய் இருக்கும் இருப்போடு ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்த செயலோடு வாசி அற உத்தேச்யமாய் இருக்கிற படி சொல்லுகிறது) 8
முருக்கிலங்கு கனித்துவர்வாய் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச் சென்று வென்றிச் செருக்களத்து திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர் இருக்கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட திருக்குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-8
பதவுரை Show / Hide
முருக்கு, Murukku - முருக்கம்பூப்போலவும் (- (சோழன், சேர்ந்த கோயில் திருநறையூர்) (மணிமாடம் சேர்மின்கள்-.))
இலங்கு கனி, Ilangu Kani - விளங்குகின்ற (கோலைப்) பழம்போலவும்
துவர், Thuvar - சிவந்திருக்கிற
வாய், Vaai - அதரத்தையுடையளான
பின்னை, Pinnai - நப்பின்னைப்பிராட்டிக்கு
கேள்வன், Kelvan - நாயகனும்,
முன், Mun - முன்பொருகாலத்தில்
மன் எல்லாம், Man Ellam - க்ஷத்ரியர்களெல்லாரும்
அவிய, Aviy - ஒழியும்படியாக
வென்றி செரு களத்து, Vendri Seru Kalathu - வெற்றி தரவல்ல போர்க்களத்திலே
சென்று, Sendru - போய்
செற்றம் வேந்தன், Settram Vendan - மாற்றரசனான கார்த் வீரியார்ஜுனனுடைய
திறல் அழிய, Thiral Azhiya - மிடுக்கு அழியும்படியாக
சிரம் துணித்தான், Siram Thuniththan - (அவனது) தலையைத் துணித்தவனுமான ஸர்வேச்வரனுடைய
திரு அடி, Thiru Adi - திருவடிகளை
நும் சென்னி வைப்பீர், Num Senni Vaippir - உங்கள் தலைகளிலே அணிந்துகொள்ள விருப்பமுடையவர்களே!
இருக்கு, Irukku - வேதத்தில்
இலங்கு திருமொழி, Ilangu Thirumozhi - சிறந்தவையான புருஷஸூக்தம் முதலிய பாகங்களை
வாய், Vaai - வாயிலே உடையவனாய்
ஏண் தோள், Aen Thol - எட்டு புஜங்களையுடையனான
ஈசற்கு, Eesarku - சிவபிரானுக்கு
எழில், Ezhil - அழகிய
எழுபது மாடம், Ezhupathu Maadam - எழுபது ஆலயங்களை
செய்து, Seithu - நிருமணம் செய்வித்து
உலகம் ஆண்ட, Ulagam Aanda - உலகத்தைப் பரிபாலனம் பண்ணின
திரு குலத்து, Thiru Kulathu - உயர்ந்த குலத்திற் பிறந்தவனாய்
வளம், Valam - செல்வம் மிக்கவனான
1506பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபய விபூதியினுடைய ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவன் ஜகத் ரஷணத்துக்கு உறுப்பாக கோயிலை வாசஸ் ஸ்தானமாக கொண்டு இருக்கிறவன் – தாமரைப் பூவை இருப்பிடமாக உடையளாய் அத்விதீயமான ஸ்த்ரீத்வத்தை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் – கேவலம் ப்ரஹ்ம பாவனையேயாய் இருக்கிற ஸ்ரீ சநகாதிகள் யேத்துகையால் வந்த பெருமையை உடையவன் – அனுபவிப்பாருக்கு இழிந்த இடம் எங்கும் துறையாகும் படியாய் இருக்கிற ஆயிரம் திரு நாமங்களை உடையவன் – ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபன் ஆனவன் பெருமையைக் கேட்க வேண்டி இருப்பீர் நறையூர் மணி மாடம் சேர்மின்களே) 9
தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற பேராளன் ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர் பாராளர் அவரிவர் என்று அழுந்தை ஏற்றப் படைமன்னர் உடல் துணியப் பரிமா வுய்த்த தேராளன் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-9
பதவுரை Show / Hide
தார் ஆவன், Thar Aavan - மாலையணிந்துள்ளவனும் (- (கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர்) (மணிமாடம் சேர்மின்கள்-,))
தண் அரங்கம் ஆவன், Than Arangam Aavan - குளிர்ந்த திருவரங்கமாநகரை ஆள்பவனும்
பூமேல் தனி ஆளன், Poomeel Thani Aalan - தாமரைப்பூவிற் பிறந்து ஒப்பற்றவளான பிராட்டியை ஆள்பவனும்
முனீயாளர் ஏத்த நின்ற பேர் ஆளன், Muniyaalar Aettha Nindra Per Aalan - மஹர்ஷிகள் துதிக்குப்படியாயுள்ள பெருமைவாய்ந்தவனும்
ஆயிரம் பேர் உடைய ஆளன், Aayiram Per Udaiya Aalan - ஸஹஸ்ரநாமங்களை வாசகமாகக் கொண்ட ஸ்வாமியும்
பின்னைக்கு மணவாளன், Pinnaikku Manavaalan - நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனுமான எம்பெருமானுடைய
பெருமை, Perumai - பெருமைகளை
கேட்பீர், Kaetbeer - கேட்கவேண்டியிருக்குவர்களே!,
ஆவர் இவர் என்று பார் ஆளர், Aavar Ivar Endru Paar Aalar - இன்னாரின்னாரென்று ப்ரஸித்தராய்க்கொண்டு பூமியை ஆள்பவராய்
அழுந்தை, Azhundhai - திருவழுந்தூரிலே வந்து
ஏற்ற, Etra - எதிரிட்டவர்களான
படை மன்னர், Padai Mannar - ஆயுதபாணிகளான அரசர்களின்
உடல் துணிய, Udal Thuniya - சரிரங்கள் துணிபடும்படி
பரிமா உய்த்த, Parimaa Uyththa - குதிரைப்படைகளைச் செலுத்தினவனும்
தேர் ஆளன், Ther Aalan - தேர் வீரனுமான
1507பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புறம்பே உண்டு உடுத்து போது போக்குகிற சம்சார விபூதியிலே வ்யாவ்ருத்தராய்க் கொண்டு அதிகரிப்பார் யமபடருடைய குரூரமான சப்தம் கேட்டு அஞ்சாதே –மேல் பெரும் பேறு இருந்த படி சொல்லில் – ஸ்ரீ பரம பதத்திலே போய் பதியினில் பாங்கினில் -என்கிறபடியே ஸ்ரீ நித்ய சூரிகள் எதிரே வந்து தந்தாம் இருப்பிடங்களிலே கொண்டு புக்கு உயர வைத்துத் தாங்கள் தாழ விருந்து ஸ்ரீ பாதம் விளக்கி கொண்டாடும்படியான பெருமையை உடையராய் ஆவார்கள்) 10
செம்மொழி வாய் நால்வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங்கண் மாலைப் பொய்ம்மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன் புலங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த அம்மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல் பாடுவார் வியனுலகில் நமனார் பாடி வெம்மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே –6-6-10
பதவுரை Show / Hide
செம் மொழி வாய், Sem Mozhi Vaai - உண்மை யுரைப்பவர்களும்
நால் வேதம் வாணர், Naal Vedham Vaanar - நான்கு வேதங்களையும் அதிகரித்தவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழும், Vazhum - வாழுமிடமான
திருநறையூர், Thirunaraiyoor - திருநறையூரென்னுந் திருப்பதியில்
மணிமாடம், Manimaadam - மணிமாடத்தில் எழுந்தருளியிக்கிற
செம் கண் மாலை, Sem Kan Maalai - புண்டரீகாக்ஷனான ஸர்வேச்வரன் விஷயமாக
பொய் மொழி ஒன்று இல்லாத, Poi Mozhi Ondru Illadha - பொய்யுரைகள் சிறிதும் கலசாத
மெய்ம்மை ஆளன், Meimmai Aalan - ஸத்ய வசனத்தையுடையரும்
புலம் மங்கை குலம், Pulam Mangai Kulam - அழகிய திருமங்கை நாட்டுக்கு
வேந்தன், Vendan - தலைவரும்
புலமை ஆர்ந்த அம் மொழி வாய், Pulamai Aarntha Am Mozhi Vaai - பாண்டித்யம் நிரம்பிய அப்படிப்பட்ட ஸ்ரீஸூதிகளை திருவாயிலே உடையவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வாருடைய
இன்பம் பாடல், Inbam Paadal - ஆநந்தமயமான (இந்தப்) பாசுரங்களை
வியன் உலகில், Viyan Ulagil - இப்பெரியவுலகத்திலே
பாடுவார், Paaduvaar - பாடுமவர்கள்
மெய்ம்மை சொல்லில், Meimmai Sollil - (பெறும்பலனை) உள்ளபடி சொல்லப்புகுந்தால்,
நமனார் பாடி, Namanar Paadi - யமலோகத்திலுண்டாகக்  கூடிய
வெம் மொழி கேட்டு, Vem Mozhi Kettu - கடுஞ்சொற்களைக் கேட்டு அஞ்சாமல்
விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந்தக்கோர், Vinnavarkku Virundhu Aakum Perunthakoor - நித்யஸூரிகள் ஆதரித்துக் கொண்டாடும்படியான பெருமை பொருந்தியவராவர்
1508பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாள் திரு நாளும் திங்கள் திரு நாளும் மாறாதே இருக்கிற ஸ்ரீ திரு நறையூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ நம்பி -ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்) 1
ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை தோளும் தலையும் துணி வெய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரந்துரந்தான் வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி நாளும் விழவின் ஒலி யோவா நறையூர் நின்ற நம்பியே –6-7-1
பதவுரை Show / Hide
அடியேனை, Adiyenai - அடியேனை
ஆளும் பணியும் கொண்டான், Aalum Paniyum Kondaaan - சேஷபூதனாகவும் நித்யகிங்கரனாகவும் திருவுள்ளம் பற்றினவனும்
விண்ட நிசாசரரை, Vindha Nisaacharari - பிரதிகூலரான ராக்ஷஸர்களின்
தோளும் தலையும் துணிவு எய்த, Tholum Thalaiyum Thunivu Eytha - தோள்களும் தலைகளும் துண்டு துண்டாம்படியாக
சுடு வெம் சிலை வாய், Sudu Vem Silai Vaai - மிகக்கடூரமான வில்லில் நின்றும்
சரம், Saram - அம்புகளை
துரந்தான், Durandhaan - பிரயோகித்தவனுமான பெருமான் (யாவனென்னில்)
வேளும் சேயும் அனையாரும், Velaum Seyum Anaiyaarum - மன்மதனோடும் ஸுபரஹ்மண்யனோடும் ஒத்த அழகிய புருஷர்களும்
வேல் கணாரும், Vel Kanaa Rum - வேல்போன்ற கண்களையுடைய மாதர்களும்
பயில் வீதி, Payil Veethi - வாஸஞ்செய்யப்பெற்ற திருவீதிகளை யுடைத்தாய்,
நாளும், Naalum - எப்போதும்
விழவின் ஒலி ஓவா, Vizhavin Oli Ovaa - உத்ஸவகோலாஹலங்கள் ஓயாதிருக்கப் பெற்றதான
நறையூர், Naraiyoor - திருநறையூரில்
நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணகிற
நம்பி, Nambi - ஸ்வாமி
1509பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இருபத்தொரு படி கால் ஷத்ரிய வம்சத்தை அறுத்துத் தூவும்படி அத்விதீயமான வாயை உடைய மழுவை ஆயுதமாக நிர்வஹித்து –ஜகத் ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவன்) 2
முனியாய் வந்து மூ வெழு கால் முடி சேர் மன்னர் உடல் துணியத் தனிவாய் மழுவின் படை யாண்ட தாரார் தோளான் வார் புறவில் பனி சேர் முல்லை பல்லரும்ப பானல் ஒரு பால் கண் காட்ட நனி சேர் கமல முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே –6-7-2
பதவுரை Show / Hide
முனி ஆய் வந்து, Muni Aay Vandhu - பரசுராம முனியாய்த் திருவவதரித்து (- (நறையூர், நின்ற நம்பி-,))
மூவெழுகால், Moovizhughaal - இருபத்தொரு தலைமுறையளவும்
முடி சேர்மன்னர் உடல் துணிய, Mudi Chermannar Udal Thuniya - முடியுடையரான க்ஷத்ரியர்களின் சரீரங்கள் தொலையும்படியாக
தனி வாய் மழுவின்படை ஆண்ட, Thani Vaai Mazhuvinpadai Aanda - ஒப்பற்ற (கூர்மையான) வாயையுடைத்தான கோடாலிமைய ஆயுதமாகக் கொண்டவனும்
தார் ஆர் தோளான், Thaar Aar Tholaan - மாலையணிந்த திருத்தோள்களையுடையனுமான பெருமான்,-
வார் புறவில், Vaar Puravil - அகன்ற சோலைப்புறத்திலே
ஒருபால், Orupaal - ஓரிடத்தில்
பனி சேர் முல்லை, Pani Cher Mullai - குளிர்ந்த முல்லைப் பூக்களானவை
பல் அரும்ப, Pal Arumba - (அவ்வூரிலுள்ள மாதர்களின் பற்கள் போன்று அரும்பு செய்யப்பெற்றதும்
பானல், Paanal - கருங்குவளைப் பூக்களானவை
(ஓருபால்), Oru Paal - மற்றோரிடத்தில்
கண்காட்ட, Kan Kaata - (அந்த மாதர்களின்) கண்கள் போன்று அலரப் பெற்றதும்
(ஒருபால்), Oru Paal - மற்றோரிடத்தில்
நனிசேர் கமலம், Nani Seer Kamalam - மிகுதியாகவுள்ள தாமரைப் பூக்களானவை
முகம் காட்டும், Mukam Kaatum - (அந்த மாதர்களின்) முகம் போன்று விகஸிக்கப் பெற்றதுமான
1510பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவ்வம்பு கையிலே இருக்கச் செய்தே ஓர் இயற்றி இல்லாதாரைப் போலே மகா பலி பக்கலிலே சென்று மண்ணை இரந்தான்- சாமத்துக்குச் செல்லாத இடத்தில் யாய்த்து பேதத்தில் இழிவது) 3
தெள்ளார் கடல் வாய் விட வாய்ச் சின வாளரவில் துயில் அமர்ந்து துள்ளா வருமான் வீழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண் புள்ளார் புறவில் பூங்காவி புலன் கொள் மாதர் கண் காட்ட நள்ளார் கமல முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே –6-7-3
பதவுரை Show / Hide
தெள் ஆர் கடல் வாய், Thel Aar Kadal Vaai - தெளிவுடைய திருப்பாற்கடலில்
விடம் வாய, Vidam Vaai - விஷயத்தை உமிழாநின்ற வாயையுடையனாய்
சினம், Sinam - (பிரதிகூலர்மேல்) சீற்றமுடையனாய்
வாள், Vaal - ஒளிபொருந்தியவனான
அரவில், Aravil - திருவனந்தாழ்வான் மீது
துயில் அமர்ந்து, Thuyil Amarnthu - சயனித்தருள்பவனும்
துள்ளா வரு, Thulla Varu - (பஞ்சவடியில்) துள்ளிவிளையாடிக்கொண்டு வந்த
மான், Maan - (மாரிசனாகிற) மாயா மிருகம்
விழ, Vizh - மாளும் படி
வாளி துரந்தான், Vaali Thurandhaan - அம்பு எய்தவனும்
மாவலி, Mavali - மஹாபலியினிடத்து
மண் இரந்தான், Man Irandhaan - பூமியை யாசித்தவனுமான பெருமான்-
புள் ஆர் புறவில், Pul Aar Puravil - பட்சிகள் நிறைந்த புறர் சோலைகளிலே
பூ காவி, Poo Kaavi - அழகிய செங்கழுநீர்ப் பூக்கள்
புலன் கொள் மாதர், Pulan Kol Maathar - அழகிய ஸ்த்ரீகளுடைய
கண், Kan - கண்களை
காட்ட, Kaata - காட்டப்பெற்றதும்
நள் ஆர் கமலம், Nal Ar Kamalam - (இதழ்ச்) செறிவையுடைய தாமரைப்பூக்கள்
முகம் காட்டும், Mukam Kaatum - (அவர்களது) முகங்களைக் காட்டப் பெற்றதுமான
1511பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நியாமகன் நியாம்யங்களிலே சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடி உண்டு அழுது நின்றான் என்றால் இது கூடுமோ என்று இருந்தோம் – இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹிருதயம் அஞ்சி நொந்தபடியால் அதுவும் கூடும் -என்று திரு உள்ளம் துணுக் என்று அஞ்சி அப்போது அருளிச் செய்த வார்த்தை) 4
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒள் கயிற்றால் விளியா வார்க்க வாப்புண்டு விம்மி யழுதான் மென்மலர் மேல் கழியா வண்டு கள் உண்ணக் காமர் தென்றல் அலர் தூற்ற நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே –6-7-4
பதவுரை Show / Hide
ஒளியா, Oliya - மறைந்து நின்று (- (நறையூர், நின்ற நம்பி-.))
வெண்ணெய், Venney - வெண்ணெயை
உண்டான் என்று, Undan Enru - விழுங்கின குற்றத்திற்காக
ஆய்ச்சி, Aycci - யசோதையானவள்
விளியா, Viliya - கோபித்து
ஒண் கயிற்றால், On Kayitral - அழகிய தாம்பினால்
உரலோடு, Uralotu - உரலோடு சேர்த்து
ஆர்க்க, Arkka - கட்ட
ஆப்புண்டு, Appuntu - கட்டுண்டு
விம்மி அழுதான், Vimmi Aludan - விக்கிவிக்கி அழுத பெருமான்,-
மெல் மலர்மேல், Mel Malarmel - மெல்லிய பூக்களின்மீது
வண்டு, Vandu - வண்டுகள்
களியா, Kaliya - களித்து
கள் உண்ண, Kal Unna - தேனைப்பருக
காமர் தென்றல், Kamar Tenral - அழகிய தென்றல்காற்று
அலர் தூற்ற, Alar Turra - புஷ்பங்களை வீசியிறைக்க,
நளிர் வாய்முல்லை, Nalir Vaymullai - குளிர்ந்த முகத்தையுடைய முல்லைப் பூக்கள்
முறுவலிக்கும், Muruvalikkum - புன்சிரிப்புச் செய்யுமாபோலே விகளிக்க்பபெற்ற
1512பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புருஷ புத்தயா அதீனம் ஆகையாலே நிர்த் தோஷமாய் இருக்கிற ஸ்ருதிகளை பத நியமங்களோடே அதிகரித்து – கேவல அத்யயனம் பண்ணுகை அன்றிக்கே அதனுடைய அனுஷ்டானம் அளவும் போருமவர்கள் அது தான் காதாசித்கமாய் இருக்கை அன்றிக்கே அது தான் யாத்ரையாய் இருக்குமவர்கள் – அது தன்னை ஒரு பலத்துக்காக அனுஷ்டிக்கை அன்றிக்கே அநந்ய பிரயோஜனராய் அனுஷ்டிக்கும்படியான வை லஷண்யத்தை உடையவர்கள் –வாழும் நறையூர் நின்ற நம்பியே) 5
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்ல்டர்த்துக் கல்லார் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல் சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர் நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே –6-7-5
பதவுரை Show / Hide
வில் ஆர் விழவில், Vil Ar Vilavil - (கம்ஸன் நடத்தின ததுர்யாகத்திலே) (- (நறையூர், நின்ற நம்பி-.))
வட மதுரை விரும்பி, Vata Maturai Virumbi - வடமதுரைக் கெழுந்தருள ஆசைப்பட்டு (எழுந்தருளின வளவிலே)
விரும்பா, Virumba - எதிரிகளான
மல், Mal - மல்லர்களை
அடர்த்து, Adarthu - முடித்து (அதன் பிறகு)
கல் ஆர் திரள் தோள் கஞ்சனை காய்ந்தான், Kal Ar Thiral Thol Kanjanai Kaindhaan - மலை போன்று திரண்ட தோள்களை யுடையனான கம்ஸனைச் சீறிக் கொன்றவனும்
காளியன் மேல், Kaaliyan Mel - காளிய நாகத்தின் மீது
பாய்ந்தான், Paindhaan - குதித்து அதனை வலியத்தின் வலுமான பெருமான்,
சொல் ஆர் சுருதி, Sol Ar Suruthi - (குற்றமற்ற) சொற்கள் நிரம்பீய வேதங்களை
முறை ஓதி, Murai Othi - முறைப்படியே அதிகரித்து
சோமு செய்யும் தொழிலினோர், Somu Seyyum Thozhilinor - ஸோமயாகம் முதலியயாகங்களை நடத்துவதைக் கருமமாக வுடையராய்
நல்லார், Nallaar - விலக்ஷணரான
மறையோர் பலர் வாழும், Maraiyor Palar Vaalum - வைதிகர்கள் பலர்வாழுமிடமான
1513பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பகுவாய் அலவன் கமலத்தின் இடைப் பள்ளி பட்டது –நள்ளியானது கர்ப்ப தாரனத்தாலே கேதித்து இருக்க அதுக்கு இனியது தேட வேணும் -என்று மதுவுக்காக போந்த அலவன் ஆனது தாமரைப் பூவில் வந்து இழிய கொள்ள போது அஸ்தமிக்கையாலே உடம்பைக் கொண்டு அங்கே இங்கே கொண்டு ராத்திரி அதிலே தங்கி – அதிலே தாதும் சுண்ணமும் உடம்பிலே நிழல் இட்டு தோற்ற போது விடிந்த வாறே வந்தது –இது போன போதே தொடங்கி-கதவைத் திறந்து வரவு பார்த்து கொடு நின்ற நள்ளி யானது இத்தைக் கண்டு ராத்திரி தங்கின படியாலும் உடம்பிலே சுவடு இருந்த படியாலும் இது வெருமன் அல்ல என்று முகம் மாறி கதவை அடைத்து உள்ளே போய்ப் புக்கது இத்தை ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த அநந்தரம் ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் ஆராய்ந்து குற்றம் நிரம்பினால் பின்னை அன்றோ தண்டிப்பது -என்ன என் செய்வோம் கேள்வி இல்லாத படி பெண்ணரசு நாடாய்த்து -என்று அருளிச் செய்வர்) 6
வள்ளி கொழு நன் முதலாய மக்களோடு முக் கணான் வெள்கியோடே விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணிந்து உகுந்தான் பள்ளி கமலத்திடைப் பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி நள்ளி யூடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே –6-7-6
பதவுரை Show / Hide
வள்ளி கொழுநன் முதலாய, Valli Kozhunaan Mudhalaaya - வள்ளியம்மைக்கு நாதனான ஸுப்ரஹ்மண்யன் முதலான (- (நறையூர், நின்ற நம்பி-.))
மக்களோடு, Makkalodu - புத்திரர்களோடு கூட
முக்கணான், Mukkanan - முகக்ண்ணனான ருத்ரன்
வெள்கி ஓட, Velgi Oda - வெட்கமடைந்து (எதிர் நிற்க மாட்டாமல் முதுகுகாட்டி) ஓடிப்கோக
விறல் வாணன், Viral Vaanan - பலிஷ்டனான பாணாஸுரனுடைய
வியன் தோள் வனத்தை, Viyan Thol Vanathai - பரம்பி தோள்களாகிற காட்டை
துணித்து, Thunithu - அறுத்து
உகந்தான், Uganthaan - திருவுள்ளமுவந்த பெருமான்,
கமலத்திடை, Kamalathidai - தாமரைப்பூவிலே
பள்ளி பட்ட, Palli Patta - போய்ப் படுத்துக்கொண்டு திரும்பிவந்த
பகு வாய் அலவன், Paghu Vaai Alavan - பெரிய வாயையுடைய ஆண் நண்டின்
முகம், Mukam - முகத்தை
நள்ளி, Nalli - பெண் நண்டானது
நோக்கி, Nokki - பார்த்து
ஊடும், Oodum - பிரணய கலஹம் பண்ணப் பெற்ற
வயல், Vayal - வயல்களினால்
சூழ்ந்த, Sozhndha - சூழப்பட்ட
1514பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவையே யாத்ரை யாம்படி கை வந்து இருக்கிற பிராமணர் வர்த்திக்கிற தேசம் தங்களை நோக்குகைக்காக தங்கள் உடைய வித்யா வ்ருத்தங்களால் அவன் தன்னையும் நோக்க வல்லார்கள் ஆயத்து) 7
மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவிக் குடையா வரை யொன்று எடுத்த ஆயர்கோவாய் நின்றான் கூர் ஆழிப் படையான் வேத நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ் நடையா வல்ல அந்தணர் வாழ நறையூர் நின்ற நம்பியே –6-7-7
பதவுரை Show / Hide
மிடையா வந்த, Midayaa Vantha - நெருங்கி (கூட்டங்கூட்டமாக) (போர்க்களததில்) வந்து நின்ற (- (நறையூர், நின்ற நம்பி -.))
வேல் மன்னர், Vel Mannar - வேற்படைக்கையரான
வீய, Veeya - தொலையும்படி
விசயன் தேர் கடவி, Visayan Ther Kadavi - அர்ஜுனனுடைய தேரை நடத்தினவனும்
ஒன்று வரை, Ondru Varai - கோவர்த்தனமென்கிற ஒரு மலையை
குடையா எடுத்து, Kudaiya Eduthu - குடையாகத் தூக்கிப் பிடித்து
ஆயர் கோ ஆய் நின்றான், Aayar Ko Aayi Nindraan - இடையர்களுக்கு ரக்ஷகனாய் நின்றவனும்
கூர் ஆழி படையான், Koora Aazhi Padaiyaan - கூர்மைபொருந்திய திருவாழியை ஆயுதமான வுடையவனுமான எம்பெருமான்,-
வேதம் நான்கு, Vedham Naanku - நான்கு வேதங்களையும்
ஐந்து வேள்வி, Aindhu Velvi - பஞ்ச மஹாயஜ்ஞங்களையும்
ஆறு அங்கம், Aaru Angam - ஆறு வேதாங்கங்களையும்
ஏழ் இசை, Ezhu Isai - ஸப்த ஸ்வரங்களையும்
நடை ஆ வல்ல, Nadai Aa Valla - எப்போதும் போது போக்காகக்கொண்ட
அந்தணர், Andhanar - பிராமணர்
வாழ், Vaazh - வாழுமிடமான
1515பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வீரக் கழலை உடைய ராஜாக்கள் முழுக்காயாக அவியும்படி ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே வைத்தான் ஆய்த்து) 8
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக் கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான் செந்தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர் நந்தா வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே –6-7-8
பதவுரை Show / Hide
பந்து ஆர் விரலாள், Pandhu Aar Viralal - பந்து பிடித்து விளையாடும் விரலையுடையளான (- (நறையூர். நின்ற நம்பி-.))
பாஞ்சாலி, Panchali - த்ரௌபதியானவள்
கூந்தல் முடிக்க, Koondhal Mudikka - குழல் முடித்துக் கொள்வதற்காக,
பாரதத்து, Bharathaththu - பாரதப்போரில்
கந்து ஆர் களிறு, Kandhu Aar Kaliru - (மதஜலத்தின்) மணம் பொருந்திய யானைகளின் மேலேறியிருப்பவர்களும்
கழல், Kazhal - வீரக்கழலை யணிந்தவருமான
மன்னர், Mannar - அரசர்கள் (துரியோதனாதியர்)
கலங்க, Kalanga - மதிகலங்குமாறு
சங்கம், Sangam - தனது  ஸ்ரீபாஞ்சஜன்யத்தை
வாய் வைத்தான், Vaai Vaiththaan - திருப்பவளத்தில் வைத்து ஊதின பெருமான்,-
செம் தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய, Sem Thaamarai Mel Ayanodu Sivanum Anaiya - கமலாஸநனான பெருமானோடும் ருத்ரனோடும் ஒத்த
பெருமையோர், Perumaiyor - பெருமைவாய்ந்தவர்களும்
நந்தா வண் கை, Nandha Van Kai - ஒரு காலும் குறைபடாத ஔதார்யத்தை யுடையவர்களுமான
மறையோர், Maraiyor - பிராமணர்கள்
வாழ், Vaazh - வாழப்பெற்ற
1516பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ கந்த -என்கிற -திரு மேனியிலே ஸ்வேத ஜலத்தைக் கொடுத்து மதிப்பனாய்த் திரிகிற இவன் உடைய குறையை தீரப் பெற்றோம் -என்கிற இத்தால் தான் உகந்தான் ஆய்த்து) 9
ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம் நீறும் பூசியேறூரும் இறையோன் சென்று குறை யிரப்ப மாறு ஒன்றில்லா வாச நீர் வரை மார்வகலத்து அளித்து உகந்தான் நாறும் பொழில் சூழ்ந்து அழகாய நறையூர் நின்ற நம்பியே –6-7-9
பதவுரை Show / Hide
ஆறும், Aarum - (கங்கையாகிற) நதியையும் (- (நறையூர், நின்ற நம்பி -.))
பிறையும், Piraiyum - சந்திகலையையும்
அரவமும், Aravamum - ஸர்ப்பங்களையும்
அடம்பும், Adambum - அடப்பம் பூவையும்
சடைமேல் அணிந்து, Sadaimeel Anindhu - ஜடையின் மீது தரித்துக்கொண்டு
உடலம், Udalam - உடம்பிலே
நீறும்பூசி, Neerumpoosi - சாம்பல் பூசிக்கொண்டு
ஏறு ஊரும், Eru Oorum - ரிஷபத்தின் மேலேறி நடத்துகின்ற
இறையோன், Irayon - சிவபிரான்
சென்று, Sendru - வந்துகிட்டி
குறை இரப்ப, Kurai Irappa - தனது பிரமஹத்யா சாபம் விடுபடுமாறு பிரார்த்திக்க,
வரை மார்பு அகலத்து ­, Varai Maarbu Akalathu - மலைபோன்ற திரூமார்பிடத்தில் நின்றும்
மாறு ஒன்று இல்லா வாசம்நீர், Maaru Ondru Illaa Vaasamneer - ஒப்பற்ற பரிமளம் மிக்க (வியர்வை) நீரை
அளித்து, Alithu - எடுத்துக்கொடுத்து
உகந்தான், Uganthaan - திருவுள்ளமுவந்த பெருமான்
நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய, Naarum Pozhil Soozhndhu Azhagu Aaya - நறுமணம்மிக்க சோலைகளால் சூழப்பட்ட அழகிய
1517பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லோகத்திலே ஆராய்ந்து சொல்லிமவர்கள் உடைய அருகே-பாபங்கள் ஆனவை கிட்டாது – பாபங்கள் வரப் போக்க வேணும் என்று அர்த்திக்கும் படி இருக்கை அன்றிக்கே இவ்விடம் நமக்கு இருப்பிடம் அன்று என்று பிராக்தமான பாபங்கள் தானே விட்டுப் போம் சம்சாரத்தில் நெடுநாள் இருந்து ஐஹிக போகங்களையும் புஜித்து பின்னை ஸ்ரீ பரம பதத்தே போய் ஸ்ரீ நித்ய சூரிகள் ஆதரிக்க நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்) 10
நன்மை யுடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பண்ணி யுலகில் பாடுவார் பாடு சாரா பழ வினைகள் மன்னி யுலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே –6-7-10
பதவுரை Show / Hide
நன்மை உடைய மறையோர் வாழ், Nanmai Udaiya Maraiyore Vaal - விலக்ஷணரான வைதிக ப்ராஹ்மணர்கள் வாழப்பெற்ற
நறையூர், Naraiyoor - திருநறையூரிலே
நின்ற, Nindra - நித்யவாஸஞ் செய்தருள்நின்ற
நம்பியை, Nambiyai - எம்பெருமான் விஷயமாக
கன்னி மதிள் வயல் சூழ் மங்கை கலியன், Kanni Mathil Vayal Soozh Mangai Kalyan - அழிவில்லாத மதிள்களாலும் கழனிகளாலும் சூழப்பட்ட திருமங்கைக்குத் தலைவரான ஆழ்வார்
ஒலி செய்த, Oli Seitha - அருளிச்செய்த
தமிழ் மாலை, Tamil Malai - தமிழ்த்தொடையான இத்திருமொழியை
உலகில் பன்னி பாடுவார்பாடு, Ulagil Panni Paaduvaarpaadu - இவ்விபூதியிலே ஆராய்ந்து பாடுமவர்களிடத்தில்
பழ வினைகள், Pazha Vinaigal - முன்னைத் தீவினைகள்
சாரா, Saraa - அணுகமாட்டா;  (அன்றியும் அவர்கள்)
மன்னி உலகம் ஆண்டு, Manni Ulagam Aandu - நெடுநாள் வாழ்ந்திருந்து இவ்வுலகை அரசாட்சி புரிந்து
போய், Poi - (பின்பு, பரமபதத்திலே) சென்று
வானோர் வணங்க வாழ்வார், Vaanor Vananga Vaalvaar - அங்குள்ள நித்யமுக்தர்கள் ஆதரிக்கும்படிவாழப்பெறுவர்.
1518பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேன் மிக்க பர்யந்தத்தை உடைத்தான திரு மலையிலே வந்து நிற்கிறவனை – தாளால் அளந்த போது தப்பினார்க்கும் இழக்க வேண்டாத படி ஸ்ரீ திருமலையிலே வந்து நின்றான் ஆய்த்து- அவன் நாடித் திரிகிற போது வைமுக்க்யம் பண்ணி இறாய்த்து திரிந்த நான் ஸ்ரீ நறையூரில் –அறுகாத பயணம் போய் ஸ்ரீ பரம பதத்தில் காண்கை அன்றிக்கே விடாய்த்த இடத்தில் தண்ணீர் குடிக்கப் பெறுவாரைப் போலே ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெற்றேன் – என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத் தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே –6-8-1
பதவுரை Show / Hide
மான் கொண்ட தோல் மார்வில் மாணி ஆய், Maan Konda Thol Maarvil Maani Aay - கிருஷ்ணாஜினத்தை மார்பிலே தரித்த பிரமசாரியாகி
மாவலி, Mavali - மஹாபலி பக்கலில்
மண்தான் கொண்டு, Manthaan Kondo - பூமியைத் தான் யாசித்துப்பெற்று
தாளால் அளந்த, Thaalal Alandha - திருவடிகளாலே ஆக்ரமித்துக் கொண்ட
பெருமானை, Perumaanai - பெருமை பொருந்தியவனும்
தேன்கொண்ட சாரல், Then Konda Saaral - தேனையுடைத்தான தாழ்வரைகளையுடைய
திருவேங்கடத்தானை, Thiruveengadathaanai - திருமலையில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமானை
நான் நாடி சென்று நறையூரில் கண்டேன், Naan Naadi Senru Naraiyooril Kandein - தேடிக் கொண்டுபோய் திருநறையூரில் ஸேவிக்கப் பெற்றேன்.
1519பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேவர்களுக்கு கடல் கடைந்தாப் போலேயும் ஜகத்துக்கு பிரளயத்தைப் பரிகரித்தால் போலேயும் என்னுடைய சம்சார பிரளயத்தை பரிகரிக்கைகாக ஸ்ரீ பிராட்டி யோடும் கூட ஸ்ரீ திரு வாலியிலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை தேவர்களோடு லௌகிகரொடு என்னோடு வாசி அற அபேஷிதம் செய்யும்படி யான ஸ்ரீ சர்வேஸ்வரனை –பிராப்தி உடையவனை) 2
முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்த நாள் அந்நீரை மீனாய் அமைத்த பெருமானைத் தென்னாலி மேய திருமாலை யெம்மானை நன்னீர் வயல் சூழ் நறையூரில் கண்டேனே –6-8-2
பதவுரை Show / Hide
முன்நாள், Munnal - முன்பொருகாலத்தில் (- (நறையூரில், கண்டேன்-.))
முந்நீரை, Munneerai - ஸமுத்ரத்தை
கடைந்தானை, Kadaindhaanai - கடைந்தவனும்
மூழ்ந்த நாள், Moozhndha Naal - (உலகத்தைப்) பிரளயங்கொண்ட காலத்தில்
மீன் ஆய், Meen Aay - மத்ஸ்ரூபியாகி
அந்நீரை, Annneerai - அந்தப் பிரளயக்கடல் நீரை
அமைத்த, Amaiththa - அடக்கின
பெருமானை, Perumaanai - பெருமை பொருந்தியவனும்
தென் ஆலி, Then Aali - அழகிய திருவாலிமா நகரில்
மேய, Meya - நி்த்யவாஸம் பண்ணுநின்ற
திருமாலை, Thirumalai - திருமகள் நாதனுமான
எம்மானை, Emmaanai - எம்பெருமானை
நல் நீர் வயல் சூழ், Nal Neer Vayal Soozh - நல்ல நீர்பாயும் கழனிகளாற் சூழப்பட்ட
1520பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆனைக்கு இடர் இன்றிக்கே முதலைக்கே இடர் ஆம்படி பண்ணினான் ஆய்த்து – ராஜ புத்ரர்களைப் பிணைத்தால் கைக் கூட்டனுக்கும் பாலும் சோறும் இடக் கடவது காண் -என்று அருளிச் செய்தார் -ஸ்ரீ பட்டர்- ஸ்ரீ பரமபதம் கலவிருக்கையாய் இருக்க என்னுடைய ரஷணத்துக்காக ஸ்ரீ திரு நாவாயிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை- அந்த ஸ்ரீ திரு நாவாய் தான் பரம பதத்தோபாதியாம் படி அடுத்து அணித்தாக ஸ்ரீ திரு நறையூரிலே-காணப் பெற்றேன்) 3
தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம் மூவாமை நல்கி முதலை துணித்தானைத் தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை நாவாயுளானை நறையூரில் கண்டேனே –6-8-3
பதவுரை Show / Hide
தூ வாய புள் ஊர்ந்து, Thoo Vaai Pul Oondru - பரிசுத்தமான வாயையுடைய பெரிய திருவடியை வாஹனமாகக்கொண்டு (- (நறையூரில், கண்டேன்-.))
துறை வந்து, Thurai Vandu - வந்து சேர்ந்து
வேழம் மூவாமை நல்கி, Vezham Moovaamai Nalki - ஸ்ரீ கஜேந்திராழ்வான் துன்பமடையாதபடி அருள்புரிந்து
முதலை துணித்தானை, Muthalai Thuniththaanai - முதலையை இரு துண்டமாக்கி யொழித்தவனும்
தேவாதி தேவனை, Devaadhi Devanai - நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
செம் கமலம் கண்ணானை, Sem Kamalam Kannaanaai - செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை யுடையனும்
நாவாய் உளானை, Naavai Ulaanai - திருநாவாயென்னும் திருப்பதியிலிருப்பவனுமான எம்பெருமானை
1521பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜகத் ரஷணத்துக்காக முடி கவித்து மாலை இட்டுக் கொண்டு இருக்கிறவனை நாள் தோறும் ஸ்ரீ நித்ய சூரிகள் உடைய ஆசையே யாத்ரையாக உடையனாய்க் கொண்டு இங்கே காணப் பெற்றேன்) 4
ஒடாவரியாய் இரணியனை ஊன் இடந்த சேடார் பொழில் சூழ் திரு நீர் மலையானை வாடா மலர்த் துழாய் மாலை முடியானை நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே –6-8-4
பதவுரை Show / Hide
ஓடா அரி ஆய், Odaa Ari Aay - நாட்டில் நடையாடாத (விலக்ஷணமான) நரஸிம்ஹ ரூபியாகி (- (நறையூரில், கண்டேன்-.))
இரணியன் ஊனை இடந்த, Iraniyan Oonai Idantha - ஹிரண்யா ஸுரனுடைய உடலைக் கிழித்தொழித்தவனும்
சேடு ஆர் பொழில் சூழ், Seedu Aar Pozhil Soozh - இளமைபொருந்திய சோலைகளாலே சூழப்பட்ட
திருநீர்மலை யானை, Thiruneermalai Yaanai - திருநீர்மலையிலே ஸந்நிதி பண்ணியிருப்பவனும்
வாடா மலர் துழாய் மாலை முடியானை, Vaadaa Malar Thuzhai Maalai Mudhiyaanai - செவ்விகுன்றாத மலர்களையுடைய திருத்துழாய் மாலையைத் திருமுடியில் அணிந்தள்ளவனுமான எம்பெருமானை
நாள் தோறும் நாடி, Naal Thorum Naadi - நித்தியமும் தேடித்திரிந்து
1522பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வருகிற ஸ்ரீ விபீஷணன் புகுரக் கடவன் அல்லன் என்று ஸ்ரீ மகா ராஜர் உள்ளிட்டார் நிரோதிக்க அவனைக் கை கொள்ளுகை தவிரோம் – என்று ஸ்ரீ பெருமாளும் நிர்பந்திக்க ஆகில் கிஷ்கிந்தையில் பரிகரம் இங்கனே விடை கொள்ளுகிறது -என்ன வேணுமாகில் அது செய்கிறது -இது ஒரு படியாலும் தவிரோம் என்று அவன் பக்கலிலே விசேஷித்து சங்கத்தைப் பண்ணினவனை-நான் அவனைத் தேடி ஸ்ரீ நறையூரிலே காணப் பெற்றேன்) 5
கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன் வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறானை நல்லானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-5
பதவுரை Show / Hide
கல் ஆர் மதிள் சூழ் கடி, Kal Aar Mathil Soozh Kadi - கற்களால் கட்டப்பட்ட மதிள்களால் சூழப்பட்ட (- (நாடி, நறையூரில் கண்டேன்-.))
இலங்கை கார் அரக்கன், Ilankai Kaar Arakkan - அருணுடைத்தான லங்காபுரியிலுள்ள நீசனான ராக்ஷஸராஜனுடைய
வல் ஆகம் கீள, Val Aagam Keela - மிடுக்குடைய சரீரம் தொலையும்படி
வரி வெம் சரம் துரந்த, Vari Vem Saram Thurandha - அழகிய வெவ்விய அம்புகளைப் பிரயோகித்த
வில்லானை, Villaanai - சார்ங்கத்தை யுடையவனும்
செல்வம் விபீடணற்கு, Selvam Vibeedanarku - ஸ்ரீமானான விபீஷணாழ்வானுக்கு
வேறுஆக, Veeraga - விலக்ஷணமாக
நல்லானை, Nallaanai - அன்பனுமான எம்பெருமானை
1523பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னை அணுகினவருக்கு தன் கையிலே சமர்ப்பிக்கலாம் படி விச்வச நீயன் ஆனவன் -– சம்சாரத்தில் இருக்கச் செய்தே அவனை விச்வசித்து பற்றப் பெற்றேன்) 6
உம்பர் உலகோடு உயிர் எல்லாம் உந்தியில் வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை அம்பன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை நம்பனை நாடி நறையூரில் கண்டேனே –6-8-6
பதவுரை Show / Hide
உம்பர் உலகோடு உயிர் எல்லாம், Umbra Ulagodu Uyir Ellam - தேவலோகத்தோடு கூட (மற்றுமுள்ள மநுஷ்யாதி பிராணிகளையும் (- (நாடி, நறையூரில் கண்டேன்-.))
உந்தியில் வம்பு மலர்மேல் படைத்தானை, Undhiyil Vambu Malarmel Padaithaanai - (தனது) திருநாபியிலுள்ள பரிமளம்மிக்க தாமரைப் பூவிலே ஸ்ருஷ்டித்தவனும்
மாயோனை, Maayoni - ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையவனும்
அம்பு அன்ன கண்ணாள், Ambu Anna Kannaal - அம்புபோன்ற கண்களை யுடையவளான
அசோதை தன், Asothai Than - யசோதைப்பிராட்டியின்
சிங்கத்தை, Singaththai - சிங்கக்குட்டி போன்ற பிள்ளையும்
நம்பனை, Nambanai - ஆச்ரிதர்களுக்கு நம்பத்தகுந்தவனுமான எம்பெருமானை
1524பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் புழக் கடையிலே ஒரு குப்பை மேனியைப் பிடுங்கினான் என்று வஜ்ரத்தை கொண்டு தொடருவதே -என்று ஸ்ரீ பிள்ளை அமுதனார் பணிக்கும் படி) 7
கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி விட்டானை மெய்யமர்ந்த பெருமானை மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டு வரை நட்டானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-7
பதவுரை Show / Hide
கட்டு ஏறு நீள் சோலை, Kattu Aeru Neel Solai - காவல் மிக்கிருப்பதும் நீண்ட சோலைகளையுடையதுமான (- (நாடி, நறையூரில் கண்டேன்-.))
காண்டவத்தை தீ மூட்டி விட்டானை, Kaandavaththai Thee Mootti Vittanai - காண்டவமென்னும் வனத்தை அக்நிக்கு இரையாக்கினவனும்
மெய்யம் அமர்ந்த பெருமானை, Meyyam Amarntha Perumaanai - திருமெய்யத்தில் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்வாமியும்
மட்டு ஏறு கற்பகத்தை, Mattu Aeru Karppagaththai - தேன் மிகுந்த கல்பவிருக்ஷத்தை
மாதர்க்கு ஆய், Maatharkku Aayi - (ஸத்யபாமைப்) பிராட்டிக்கா
வண் துவரை நட்டானை, Van Thavarai Nattaanai - (கொணர்ந்து) ஸ்தாபித்தவனுமான எம்பெருமானை
1525பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ அர்ஜுனன் உடைய தேரை நடத்தினவனை – ஆசை உடையேனாய்க் கிட்டி – அவ்வாசைக்கு அனுரூபமாக ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெற்றேன்) 8
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து விண்ணின் மீதேற விசயன் தேரூர்ந்தானை நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –6-8-8
பதவுரை Show / Hide
மண்ணின் மீ பாரம், Mannin Mee Paaram - பூமியின் மீது உண்டான சுமைகளை (- (நறையூரில், கண்டேன்-.))
கெடுப்பான், Keduppaan - தொலைப்பதற்காகவும்
மறம் மன்னர், Maram Mannar - மாற்றரசர்களது
பண்ணின் மேல் வந்த படை எல்லாம், Pannin Mel Vandha Padai Ellam - ஒழுங்காக எதிர்த்து வந்த எல்லாச் சேனைகளும்
விண்ணின் மீது ஏற ஸ்ரீ, Vinnin Meedhu Aera Sri - வீரஸ்வர்க்கம் போய்ச் சேரும்படியாகவும்
பாரத்ந்து, Bharathndhu - பாரதப்போரில்
விசயன் தேர் ஊர்ந்தானை, Visayan Ther Oornthaanai - அர்ஜுனனுடைய தேரை நடத்தினவனை
நான் நண்ணிநாடி, Naan Nanninaadi - நான் ஆசைப்பட்டுத்தேடி
1526பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அழகிய திருத் தோள்களை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் – ஸ்ரீ ஆழ்வார்களை ஒழியவே வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படி யாய்த்து திருத் தோள்கள் அழகு இருக்கும் படி – ஆபரணத்துக்கும் ஆபரணம் போலே –ஸ்ரீ பரம பதத்தில் இருப்பு ஸ்ரீ நித்ய சூரிகளுக்காய் இருக்குமா போலே நமக்கு ஸ்வாமி ஆனவனை-நமக்காக வந்து நிற்கிற ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெற்றேன்) 9
பொங்கேறு நீள் சோதிப் பொன்னாழி தன்னோடும் சங்கேறு கோலத் தடக்கை பெருமானைக் கொங்கேறு சோலைக் குடந்தை கிடந்தானை நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே –6-8-9
பதவுரை Show / Hide
பொங்கு ஏறு, Pongu Aeru - மேன்மேலும் அதிசயித்து வருகிற (- (நாடி, நறையூரில் கண்டேன்-.))
நீள் சோதி, Neel Sothi - அளவற்ற தேஜஸ்ஸையுடைய
பொன் ஆழி தன்னோடும், Pon Aazhi Thannodum - அழகிய திருவாழி யாழ்வானும்
சங்கு ஏறு கோலம் தட, Sangu Aeru Kolam Thada - ஸ்ரீ பாஞ்சஜந்யாழ்வானும் குடிகொண்டிருக்கப்பெற்ற அழகிய
கை, Kai - திருக்கைகளையுடைய
பெருமானை, Perumaanai - பெருமை பொருந்தியவனும்
கொங்குஏறு சோலை, Konguearu Solai - தேன் மிகுந்திருக்கிற பொழில்களையுடைய
குடந்தை, Kudanthai - திருக்குடந்தையில்
கிடந்தானை, Kidandhanai - பள்ளிகொண்டிருப்பவனுமான
நம் கோனை, Nam Konai - நம்பெருமானை
1527பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மதுரையில் காட்டிலும் மிக்க நன்மை உடைத்தான ஸ்ரீ திரு நறையூரிலே நிற்கிற கல்யாண குண பூர்ணனை – ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஒலி உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ்த் தொடை வல்லவர்கள் ஸ்ரீ பரம பதத்தில் அங்கு உள்ள ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு தைவங்கள் ஆவார்கள் வைகுந்தன் தமர் எமர் -என்று இறே அவர்கள் சொல்லுவது –அவர்களுக்கு ஆஸ்ரயநீயர் ஆவார்கள்) 10
மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ் தார்க் கன்னவிலும் தோளான் கலியன் ஒலிவல்லார் பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே –6-8-10
பதவுரை Show / Hide
மன்னு, Mannu - (பகவத்ஸம்பந்தம் ஒரு நாளும் மாறாமல்) நித்யமாயிருக்கிற (- (நல் நறையூர் நின்ற நம்பியை-;))
மதுரை, Madurai - வடமதுரையில்
வசுதேவர் வாழ் முதலை, Vasudevar Vazh Mudhalai - வசுதேவருடைய வாழ்வுக்கு மூலகந்தமாக வந்து பிறந்தவனான
வம்பு அவிழ் தார், Vambu Avizh Thar - பரிமளம் விளங்குகின்ற மாலையையுடையராய்
கல் நவிலும் தோளான், Kal Navilum Tholan - மலையென்று சொல்லத் தகுந்த புஜங்களை யுடையரான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த இத்திரு மொழியை
வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள்
பொன் உலகில், Pon Ulagil - பரமபதத்திற்சென்று
வானவர்க்கு, Vaanavarkku - அங்குள்ள நித்யஸூரிகளுக்கு
புத்தேளிர் ஆகுவர், Puttelir Aaghuvar - பூஜ்யராகப் பெறுவர்.
1528பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அருமந்தான் ஒரு மதிப்பன் இப்படி எளிவரவு படுவதே -என்று திரு உள்ளம் புண்பட்டு அவனுடைய சாபத்தை போக்கினான் ஆயத்து – அதுக்கடி என் என்னில்-திருவாளன் – தத்ர நாராயண ஸ்ரீ மான் -என்கிறபடியே ஸ்ரீயபதி யாகையாலே அவனுடைய -இணை யடியே யடை நெஞ்சே —அபிமானிகளும் ஆபன்னர் ஆன அன்று பற்றும் திருவடிகளை நெஞ்சே நீ பற்றப் பார்) 1
பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம் மடலெடுத்து மது நுகரும் வயலுடுத்த திரு நறையூர் முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன் இடர்கெடுத்த திருவாளன் இணை யடியே யடை நெஞ்சே –6-9-1
பதவுரை Show / Hide
பெடை அடர்த்த, Pedai Adarth - பேடையோடுகூடின
மட அன்னம், Mada Annam - அழகிய ஹம்ஸபக்ஷியானது
பிரியாது, Priyadhu - அப்பேடையைச் சற்றும் விட்டும் பிரியாமல் உடனிருந்து
கமலம் மலர், Kamalum Malar - தாமரைப்பூவில்
மடல் எடுத்து, Madal Eduthu - இதழ்களைக் கழற்றிவிட்டு
மது நுகரும், Madhu Nukarum - தேனைப் பருகப்பெற்ற
வயல், Vayal - கழனிகளாலெ
உடுத்த, Uthutha - சூழப்பட்ட
திரு நறையூர், Thiru Naraiyur - திருநறையூரி லெழுந்தருளி யிருப்பவனாய்,-
1529பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜனனி என்று வாசி பார்க்க மாட்டாமையாலே மிக்க பழியைத் தரித்து இருப்பானாய் முன்கை மிடுக்காலே தோன்றின படி நடந்து திரிகிற ராவணன் உடைய தலைகள் சிதறும்படியாக – எதிரிகளை அம்பாய் நலிகை அன்றிக்கே நெருப்பாக சுடுகிற அம்புகளை நடத்தினவன் உடைய) 2
கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி வழியார முத்தீன்று வளம் கொடுக்கும் திரு நறையூர் பழியாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற அழலாரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே –6-9-2
பதவுரை Show / Hide
கழி ஆரும், Kazhi Aarum - உப்புக்கழிகளிலே நிரம்பியிருக்கின்ற (- (அடி இணையே, நெஞ்சே! அடை-.))
கனம் சங்கம், Kanam Sangam - கனத்த சங்குகளானவை
எங்கும், Engum - எல்லாவிடங்களிலும்
கலந்து, Kalandhu - வந்துசேர்ந்து
நிறைந்து, Niraindhu - வரிசை வரிசையாக இருந்து
ஏறி, Eri - பாய்ந்து
வழி ஆர, Vazhi Aara - வீதிகள் நிறையும்படியாக
முத்து, Muthu - முத்துக்களை
ஈன்று, Eendru - கரந்து
வளம் கொடுக்கும், Valam Kodukkum - (இப்படி) செல்வமளிக்கப்பெற்ற
திருநறையூர், Thirunaraiyoor - திருநறையூரில்,-
பழி ஆரும், Pazhi Aarum - மிகுந்த அபவாதத்தையுடையனாய்
விறல், Viral - பலிஷ்டனான
அரக்கன், Arakkan - இராவணனுடைய
பரு முடிகள் அவை சிதற, Paru Mudigal Avai Sidhara - பருத்த (பத்துத்) தலைகளும் சிதறும்படியாக
அழல் ஆகும், Azhai Aakum - நெருப்புப்போன்ற
சரம், Saram - அம்புகளை
துரந்தான், Durandhaan - பிரயோகித்த பெருமானுடைய
1530பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நம்பி மூத்த பிரானுக்கு பின் பிறந்தவன் –பூமிப் பரப்போடு கூட தயிரையும் வெண்ணெயும் அமுது செய்தவனுடைய திருவடிகளை அடை நெஞ்சே) 3
சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாயக் கதலிகளின் திளை கொண்ட பழம் கெழுமி திகழ் சோலைத் திரு நறையூர் வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூவுலகோடு அளை வெண்ணெய் உண்டான் தன் அடி இணையே அடை நெஞ்சே –6-9-3
பதவுரை Show / Hide
சுளைகொண்ட, Sulaikondha - பல சுளைகளை யுடைத்தான (- (அடி இணையே நெஞ்சே! அடை -.))
பலங் கனிகள், Palang Kanigal - பலாப் பழங்களில் நின்றும்
தேன் பாய, Then Paaya - தேன் பெருகப்பெற்றும்,
கதலிகளின், Kadaligalil - வாழைமரங்களின்
திளைகொண்ட, Thilaikondha - பருத்திருந்துள்ள
பழம், Pazham - பழங்கள்
கெழுமு, Kezhumu - நெருங்கப்பெற்று மிருக்கிற
திகழ் சோலை, Thigal Solai - விளங்குகின்ற சோலைகளையுடைய
திருநறையூர், Thirunaraiyoor - திருநறையூரில்,-
வளை கொண்ட வண்ணத்தன், Valai Konda Vannathan - சங்குபோல் வெளுத்த நிறமுடையனான பலராமனுடைய
பின் தோன்றல், Pin Thondral - தம்பியாயும்
மூ உலகோடு, Moo Ulakodu - மூன்று லோகங்களையும்
அளைவெண்ணெய், Alai Vennai - தயிர் வெண்ணெயையும்
உண்டான் தன், Undaan Than - அமுது செய்தவானயு மிருக்கிற எம்பெருமானுடைய
1531பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மன்றில் பரப்படைய பாழ் தீரும்படி குடக் கூத்தாடி- இந்த்ரன் வர்ஷிப்பிக்க மலையை எடுத்து வர்ஷத்தை பரிக்ரஹித்த -மலையாலே மலையை எடுத்தால் போலே திரண்ட தோளை உடையவன்) 4
துன்று ஒளித் துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல் நின்றார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூர் மன்றாடக் குடமாடி வரை எடுத்து மழை தடுத்த குன்றாறும் திரள் தோளன் குறை கழலே அடை நெஞ்சே –6-9-4
பதவுரை Show / Hide
துன்று, Thunru - நெருங்கியும் (- (திரு நறையூர்-;) (நெஞ்சே! அடை-.))
ஒளி, Oli - ஒழுங்குபெற்று மிருக்கிற
துகில் படலம், Thugil Patalam - த்வஜபடங்களின் திரள்கள்
மாளிகை மேல், Maaligai Mel - மாளிகைகளின் மேல்
எங்கும் துன்னி, Engum Thunni - எல்லாவிடங்களிலும் நிபிடமாய்
ஆர நின்று, Aara Nindru - பரம்பியிருந்து
வான் மூடும், Vaan Moodum - ஆகாசத்தை மறையா நின்றதாய்
நீள் செல்வம, Neel Selvam - நிறைந்த செல்வத்தை யுடையதான
மன்று ஆர, Manru Aara - வெளிநிலமெங்கும்
குடம் ஆடி, Kudam Aadi - குடக்கூத்தாடினவனும்
வரை எடுத்து, Varai Eduthu - கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி
மழை தடுத்த, Mazhai Thadutta - மழையைத்  தடைசெய்தவனும்
குன்று ஆரும் திரள் தோளன், Kundru Aarum Thiral Tholan - மலைபோன்று திரண்ட திருத்தோள்களையுடையனுமான பெருமானுடைய
குரை கழலே, Kurai Kazhale - ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த திருவடிகளையே
1532பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லோகங்கள் ஏழையும் வயிற்றிலே வைத்து பிரளயம் தேடி வந்தால் இங்கு உண்டோ என்று பண்டையிலும் இளைத்துக் காட்டும் திரு வயிற்றை உடையவன் –தன்னைப் பற்றினாரை உள்ளே இட்டு தன்னை பிரளயத்துக்கு இலக்காக்கி நோக்குமவன் திருவடிகளிலே அடையப் பார்) 5
அகில் குறடும் சந்தனமும் பொன்னு மணி முத்தும் மிகக் கொணர்ந்து திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர் பகல் கரந்த சுடராழிப் படையான் இவ் உலகு எழும் புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே அடை நெஞ்சே –6-9-5
பதவுரை Show / Hide
அகில் குறடும், Akil Kuradum - அகில் கட்டைகளையும் (- (திரு நறையூர்-;) (நெஞ்சே! அடை-.))
சந்தனமும், Sandhanamum - சந்தனக் கட்டைகளையும்
அம் பொன்னும், Am Ponnum - அழகிய பொன்களையும்
அணி முத்தும், Ani Muthum - அழகிய முத்துக்களையும்
திரை, Thirai - அலைகளானவை
மிக கொணர்ந்து, Miga Konrandhu - மிகுதியாகத் திரட்டிக் கொண்டு வந்து
உந்தும், Undum - தள்ளுகிற
வியன் பொன்னி, Viyan Ponni - ஆச்சரியமான பொன்னி யாற்றையுடைய
பகல் கரந்த, Pakal Karandha - (பாரதப்போரில்) ஸூரியனை மறைத்த
சுடர் ஆழி, Sudar Aazhi - உஜ்வலமான சக்கரத்தை
படையான், Padaiyaan - ஆயுதமாகவுடையனும்
இ உலகு ஏழும், I Ulagu Ezhum - இவ்வுலகங்களெல்லாவற்றையும்
புக கரந்த, Puga Karandha - உள்புகச்செய்து மறைத்து வைத்த
திரு வயிற்றின், Thiru Vayittrin - திருவயிற்றை யுடையவனுமான பெருமானுடைய
பொன் அடியே, Pon Adiye - அழகிய திருவடிகளையே
1533பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாம் சென்று திருவடிகளைக் கிட்டினால் அவன் நம்முடைய தோஷங்களை கணக்கிடுவான் ஆகில் ந கச்சின் ந அபராத்யதி -என்று அத்தைப் பொறுப்பிக்கும் ஸ்ரீ பிராட்டியை உகந்து எப்போதும் திரு மார்பில் வைத்துக் கொண்டு இருக்கிறவன் உடைய ஸூ குமாரமான திருவடிகளை அடை- மதுப்பில் அர்த்தத்தை சொல்லுகிறது) 6
பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கைம்மா கரிக் கோடும் மின்னத் தண் திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர் மின் ஒத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மார்பில் மன்னத் தான் வைத்து உகந்தான் மலரடியே அடை நெஞ்சே –6-9-6
பதவுரை Show / Hide
மின்ன, Minna - (மேற்கே) மின்னல் கண்டவாறே (- (வியன் பொன்னி, திருநறையூர்-;) (நெஞ்சே! அடை-.))
பொன், Pon - பொன்களையும்
முத்தும், Muthum - முத்துக்களையும்
அரி உகிரும், Ari Ugrum - சிங்கங்களின் நகங்களையும்
புழை கைமா கரி கோடும், Puzhai Kaimaa Kari Kodum - த்வாரத்தையுடைய துதிக்கையையுடைத்தான பெரிய யானைகளின் கொம்புகளையும்
தண் திரை உந்தும், Than Thirai Undum - குளிர்ந்த அலைகளின் முகமாகக் கொழிக்கின்ற
மின் ஒத்த நுண், Min Oththa Nun - மின்னல் போன்று அதிஸூக்ஷ்மமான
மருங்குல், Marungul - இடையையுடையளாய்
மெல் இயலை, Mel Iyilai - ஸௌகுமார்யத்தை ஸ்வபாவமாக உடையளான பிராட்டியை
திருமார்பில், Thirumaarbil - திருமார்பிலே
மன்ன, Manna - பொருந்தும்படியாக
தான் வைத்து உகந்தான், Thaan Vaiththu Uganthaan - தரித்துக்கொண்டு திருவுள்ளமுவந்திருக்கிற பெருமானுடைய
மலர் அடியே, Malar Adiye - திருவடித்தாமரைகளையே
1534பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபகார சீலனான கிருஷ்ணன்-அயர்வறும் அமரர்கள் அதிபதி –உபய விபூதி நாயகன் என்னும் இடம் தோற்ற வைத்த வளையத்தை உடையவன் திருவடிகளை அடை நெஞ்சே) 7
சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் செங்கமலத் திடையிடை பார் தழைத்துக் கரும்போங்கிப் பயன் விளைக்கும் திரு நறையூர் கார் தழைத்த திருவுருவன் கண்ண பிரான் விண்ணவர் கோதியாதே தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே –6-9-7
பதவுரை Show / Hide
சீர்தழைத்த கதிர், Seerthazhaiththa Kathir - அழகுமிக்க கதிர்களையுடைய (- (அவற்றையடுத்து முளைத்த) (திரு நறையூர்-;) (நெஞ்சே! அடை -.))
செந்நெல், Sennel - செந்நெற்பயிர்களினுடையவும்
செங்கமலம், Sengamalai - செந்தாமரைகளினுடையவும்
இடை இடையில், Idai Idaiyil - நடு நடுவே
கரும்பு, Karumbu - கரும்புகளானவை
ஓங்கி பார் தழைத்து, Ongi Paar Thazhaiththu - உயரவெழுந்து தரையிலே படியவளர்ந்து
பயன் விளைக்கும், Payan Vilaikkum - பலன்களைக் கொடுக்கப்பெற்ற
கார் தழைத்த திரு உருவன், Kaar Thazhaiththa Thiru Uruvan - காளமேகப்போன்ற திருமேனியை யுடையவனும்
விண்ணவர் கோன், Vinnavar Kon - தேவாதி தேவன்
தார் தழைத்த துழாய் முடியன், Thaar Thazhaiththa Thuzhai Mudiyan - பூக்கள் நிறைந்த திருத்துழாய் மாலையைத் திருமுடியிலுடையவனுமான
கண்ணபிரான், Kannapiraan - கண்ணபிரானுடைய
தளிர் அடியே, Thalir Adiye - தளிர்போன்ற திருவடிகளையே
1535பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மலை போலே தர்ச நீயமான திரு மணி மாடக் கோயிலின் உள்ள அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே நிலையார நின்றான் ஆய்த்து- நிற்கிற போதை அழகைக் கண்டு-இவன் இருத்தல் சாய்ந்து அருளுதல் செய்து இவ் வழகை இழக்க வரில் செய்வது என்-என்று துணுக் துணுக் என்ன வேண்டும்படியாய் இருக்கும் – மலையை ஒக்க ஒக்கத்தை உடையதாய் அழகை உடைய மணி மாடங்கள் மிக உடைய ஸ்ரீ திருநறையூரில் மன்னி நிலையார நின்றான்) 8
குலையார்ந்த பழுக் காயும் பசும் காயும் பாளை முத்தும் தலையார்ந்த விளங்கனியின் தடஞ்சோலைத் திருநறையூர் மலையார்ந்த கோலஞ்சேர் மணி மாடம் மிக மன்னி நிலையார நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே –6-9-8
பதவுரை Show / Hide
குலை ஆர்த்த பழுக்காயும், Kulai Aartha Pazhukkaiyum - குலைகுலையாக நிறைந்து படுத்த காய்களும் (- (தட சோலை திரு நறையூர் -!) (நெஞ்சே! அடை-.))
பசுங்காயும், Pasungaiyum - பழுக்கப்போகிற காய்களும்
பாளை முத்தும், Paalai Muththum - பாளைகளிலுண்டான முத்துக்களும்
தலை ஆர்ந்த, Thalai Aarntha - தலைகளிலே நிறைந்திருக்கப்பெற்ற
இள கமுகின், Ila Kamugin - இளைய பாக்குமரங்களையுடைய
மலை ஆர்த்த கோலம் சேர், Malai Aartha Kolam Ser - மலைபோன்று அழகு பொருந்திய
மணி மாடம், Mani Maadam - மணிமாடக்கோயிலில்
மிக மன்னி, Miga Manni - மிகவும் பொருந்தி
நிலை ஆர நின்றான் தன், Nilai Aara Nindraan Than - ஸ்திரமாக நிற்கும் பெருமானுடைய
நீள் கழலே, Neel Kazhale - நீண்ட திருவடிகளையே
1536பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லோகத்துக்கு ஆஸ்ரயணீயராய் இருப்பாருக்கும் ஆஸ்ரயணீயனாய் இருக்கையாலே ஸ்ரீ சர்வாதிகன் –அவன் திருவடிகளையே ஆஸ்ரயிக்கப் பார்) 9
மறையாரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும் நிறையார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூர் பிறையாரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த இறையாகி நின்றான் தன் இணை அடியே அடை நெஞ்சே –6-9-9
பதவுரை Show / Hide
மறை ஆரும், Marai Aarum - வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்ட (- (நீள் செல்வத் திருநறையூர்-;) (இணை அடியே நெஞ்சே அடை-.))
பெரு வேள்வி, Peru Velvi - பெரிய யஜ்ஞங்களிலுண்டான
கொழும்புகை, Kozhumbugai - நல்ல புகையானது
வளர்ந்து போய், Valarnthu Poi - மேலே கிளம்பிப்போய்
எங்கும் நிறை ஆர வான்மூடும், Engum Nirai Aara Vaanmoodum - எல்லாவிடங்களிலும் நிறைந்திருந்து ஆகாசத்தை மறைக்கப்பெற்ற
பிறை ஆரும் சடையானும், Pirai Aarum Sadaiyanum - சந்திரகலையையுடைய சடை முடியை யுடையனான சிவனும்
பிரமனும், Brahmanum - நான்முகனும்
முன், Mun - முன்னேநின்று
தொழுது ஏத்த, Thozhudhu Aetha - வணங்கித்துதிக்கும்படி
இறை ஆகி நின்றான் தன், Irai Aagi Nindraan Than - ஸ்வாமியாயெழுந்தருளியிருக்கும் பெருமானுடைய
1537பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பாடல் பத்தும் வல்லார் –போக பூமிகளில் பிரதானமான ஸ்ரீ பரம பதத்திலே போய் ஸ்ரீ நித்ய சூரிகள் உடன் ஒரு கோவையாய் அவனை நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்) 10
திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன் பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார் விண் களகதது இமையவராய் வீற்று இருந்து வாழ்வாரே –6-9-10
பதவுரை Show / Hide
திண் களகம் மதிள் புடைசூழ், Thin Kalagam Mathil Pudaisool - திடமாய் (சுண்ணாம்புச்) சாந்து இடப்பெற்றதான திருமதிளாலே நாற்புறமும் சூழப்பட்ட
திருநறையூர், Thirunaraiyoor - திருநறையூரில்
நின்றானை, Nindraanai - எழுந்தருளியிருக்குமெம்பெருமான் விஷயமாக
வண் களகம், Van Kalagam - அழகிய அன்னப்பறவைகள்
நிலவு எறிக்கும், Nilavu Erikkum - நிலாப்போல் விளங்கப்பெற்ற
வயல், Vayal - கழனிகளையுடைத்தான
மங்கை நகராளன், Mangai Nagaralan - திருமங்கை நாட்டுக்குத் தலைவரான ஆழ்வார்
பண்கள் அகம் பயின்ற, Pankal Agam Payindra - பண்களுக்குள்ளே ஸாரமான பண்ணிலே அருளிச்செய்த
சீர், Seer - சீர்மை பொருந்திய
பாடல் இவை பத்தும், Paadal Ivai Paththum - இப்பாசுரங்கள் பத்தையும்
வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள்
விண்கள் அகத்து, Vingkal Akaththu - மேலுலகங்களுள் முக்கியமான பரமபதத்தில்
இமையவர்ஆய், Imaiyavar Aayi - நித்யஸூரிகளோடு ஒரு கோஷ்டியாய்
வீற்றிருந்து, Veetrirundhu - பெருமைபெறவிருந்து
வாழ்வார், Vaalvaar - வாழப்பெறுவர்.
1538பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ருக்கள் இட்ட அரண் அழியும்படியாக குரூரமான ராஷசர் திரண்ட இலங்கையை அழியச் செய்து அத்தால் வந்த வீர ஸ்ரீ யால் குறைவற்றவன் – பரப்பை உடைத்தான பூமியை அடைய இரண்டு அடியாலே அளந்த அத்புத கர்மத்தால் குறைவற்றவன் – கண் வளர்ந்து அருளுகிற போதை அழகாலே பூரணன் ஆனவன் –- சம்சாரிகளாய் குறைவே நிரூபகமாம் படி இருக்கிற நம்முடைய குறைவு தீர்க்கைக்கு அடியான பௌஷ்கல்யத்தை உடையைவன் – அவனுடைய பேர் சொல்லில் -நமோ நாராயணமே) 1
கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக் கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-1
பதவுரை Show / Hide
குடந்தை மேவி கிடந்த நம்பி, Kudandhai Mevi Kidandha Nambi - திருக்குடந்தையிலே பொருந்திப் பள்ளிகொண்டிருக்கின்ற ஸ்வாமியாயும்
கேழல் ஆய் உலகை இடந்த நம்பி, Kezhal Aayi Ulagai Idantha Nambi - வராஹரூபியாகி பூமியை (அண்டபித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித் தெடுத்த ஸ்வாமியாயும்
எங்கள் நம்பி, Engal Nambi - எங்களுடைய குறைகளைத் தீர்க்க வல்லவனாயும்
எறிஞர் அரண் அழிய, Erinjir Aran Azhiya - சத்துருக்களினுடைய கோட்டை அழியும்படியாக
கடியார் இலங்கை கடந்த நம்பி, Kadiyaar Ilangai Kadandha Nambi - கடூரமானதன்மையுடைய அரக்கர் வாழும் இலங்கையை நாசஞ்செய்த ஸ்வாமியாயும்
உலகை ஈர் அடியால் நடந்த நம்பி, Ulagai Eer Adiyaal Nadandha Nambi - லோகங்களை இரண்டடியாலே அளந்துகொண்ட ஸ்வாமியாயுமிருக்கிற ஸர்வேச்வரனுடைய
நாமம், Naamam - திருநாமத்தை
சொல்லில், Sollil - சொல்லப்பார்க்கில்
நமோ நாராயணமே, Namo Narayaname - (அது) பெரிய திருமந்திர மாகும்.
1539பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு பிரளயங்கதை யான பூமியை எடுத்துக் கொண்டு ஏறினான் லோகத்தை இரண்டு அடியாலே அளந்து கொண்டவன் உடைய நாமம்) 2
விடந்தான் உடைய வரவம் வெருவச் செருவில் முன நாள் முன் தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன் இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால் நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2
பதவுரை Show / Hide
முனநாள், Munanhaal - முனபொருகால், (- (நாமம் சொல்லில் நமோநாராயணமே-.))
விடம் உடைய அரவம் தான், Vidam Udaya Aravam Thaan - விஷத்தையுடைத்தான காளியநாகமானது
வெருவ, Veruva - அஞ்சும்படியாக
முன், Mun - இடைப்பிள்ளைகளின் முன்னே
தட தாமரை பொய்கை நீர் புக்கு, Tada Thamarai Poigai Neer Pukku - பெரிய தாமரைகளையுடைய (யமுனையின் ஒருமடுவின்) நீரில் புகுந்து
செருவில், Seruvil - (அந்த நாகத்தோடு போர் செய்ததில்
மிக்க, Mikka - மேன்மைபெற்ற
தாளாளன், Thaalalan - திருவடிகளை யுடையவனும்
கேழல் ஆகி, Kezhal Aagi - வராஹமூர்த்தியாகி
வையம், Vaiyam - பூமியை
இடந்தான், Idandhaan - குத்தியெடுத்துக் கொணர்ந்தவனும்
ஈர் அடியால், Eer Adiyaal - இரண்டடியாலே
உலகை, Ulagai - உலகங்களை
நடந்தானுடைய, Nadandhaanudaiya - அளந்துகொண்டவனுமான எம்பெருமானுடைய
1540பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (யசோதை பிராட்டி உண்ட தயிரையும் வெண்ணெயும் களவு கண்டு அமுது செய்யப் புக்கால் அவள் கண்டு பிடித்து கட்டுவது அடிப்பதாக நிற்கும் இறே- அப்போது வெண்ணெயைக் களவு கண்டோம் என்றால் வருவதோர் எளிவரவு உண்டோ -என்று இருக்கும் ஆய்த்து) 3
பூணாது அனலும் தறு கண் வேழம் மறுக வளை மறுப்பைப் பேணான் வாங்கி யமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன் பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய் நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-3
பதவுரை Show / Hide
பூணாது அனலும், Poonaadhu Anhalum - கட்டுத்தறிக்குப் பிடிபடாமல் சீறிக்கொண்டிருப்பதும் (- (நாமம் சொல்லில் நமோநாராயணமே-.))
தறுகண், Tharugann - வட்டமான கண்களையுடையதுமான
வேழம், Vezham - (குவலயாபீடமென்னும்) யானையானது
மறுக, Maruga - குடல்குழம்பும்படி
பேணான், Penaan - அதை மதியாதவனாய்
வளை மருப்பை, Valai Maruppai - (அதன்) வளைந்தகொம்புகளை
வாங்கி, Vaangi - பறித்தெறிந்தவனும்
அமுதம் கொண்ட பெருமான், Amudham Konda Perumaan - (கடலில் நின்றும்) அமுதத்தைக் கடைந்தெடுத்த பெருமை பொருந்தியவனும்
திரு மார்வன், Thiru Marvan - பிராட்டியை மார்பிலுடைவனும்
வண்டு பாண் ஆ முரலும் கூந்தல் ஆய்ச்சி, Vandu Paan Aa Murulum Koondhal Aaychi - வண்டுகளானவை இசையிலே பொருந்தும்படி ஒலிசெய்யப்பெற்ற மயிர்முடியையுடையளான இடைச்சியாகிய யசோதையினது
தயிர் வெண்ணெய், Thayir Vennai - தயிர் வெண்ணெய் முதலியவற்றை
நாணாது உண்டான், Naanaadhu Undaan - (களவுசெய்து) உட்கொண்டவனுமான எம்பெருமானது
1541பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தமையன் பக்கல் த்வேஷம் மிக்கு இருக்குமா போலே யாய்த்து இவன் பக்கல் ராகம் மிக்கு இருக்கும் படி – முதலிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் பரிவை இவன் ஒருவன் பக்கலிலும் பண்ணினவன் உடைய நாமம் சொல்லில் – நமோ நாராயணமே –வாத்சல்யத்துக்கும் வாசகம் இறே) 4
கல்லார் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள் எல்லா வுலகும் வணங்க விருந்த வம்மான் இலங்கைக் கோன் வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை விபீடணற்கு நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-4
பதவுரை Show / Hide
கல் ஆர் மதிள் சூழ் கச்சிநகருள், Kal Aar Mathil Soozh Kachinagarul - கருங்கல்லால் கட்டப்பட்ட திருமதிள்களால் சூழப்பட்ட காஞ்சீபுரத்தில் (- (நாமம் சொல்லில் நமோநாராயணமே -.))
நச்சி, Nachchi - வஸிக்கவிரும்பி
எல்லா உலகும் வணங்க, Ella Ulagum Vananga - லோகமெல்லாம் வணங்குமாறு
பாடகத்துள், Paadakaththul - திருப்பாடமென்னுந் திருப்பதியில்
இருந்த, Irundha - வீற்றிருக்கின்ற
அம்மான், Ammaan - ஸ்வாமியும்,
இலங்கை கோன், Ilankai Kon - லங்காதிபதியான ராவணனுடைய
வல் ஆள் ஆகம், Val Aal Aagam - மிகவும் பலிஷ்டமான சரீரத்தை
வில்லால் முனிந்த, Villal Munintha - வில்லாலே சீறியழித்த
எந்தை, Endhai - ஸ்வாமியும்
விபீடணற்கு நல்லானுடைய, Vipeedanarku Nallaanudaiya - விபீஷணாழ்வான் விஷயத்தில் நன்மை புரிந்தவனுமான எம்பிரானது
1542பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பண்டு மிருத்யு ராஷசரைக் கிட்ட அஞ்சி யாய்த்து இருப்பது – இப்போது பெருமாள் தோளை அண்டை கொண்டு அத்தாலே பொருந்தி புஜியா நிற்கும் ஆய்த்து – இதுவே ஸ்வ பாவமாம் படி பண்ணினவன்உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே) 5
குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென்னிலங்கை அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம் நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே –6-10-5
பதவுரை Show / Hide
முன், Mun - முன்பொருகாலத்தில் (- (நாமம் சொல்லில் நமோநாராயணமே-.))
குடை ஆம் வரையால், Kudai Aam Varaiyaal - குடையாகக்கொண்ட கோவர்த்தநகிரியினால்
நிரை, Nirai - பசுக்கூட்டங்களை
காத்தபெருமான், Kaathaperumaan - (பெருமழையில் நின்றும்) காத்தருளின பெருமானும்
மருவாத விடை ஏழும் வென்றான், Maruvaadha Vidai Ezhum Vendraan - எதிரிட்ட ஏழு எருதுகளையும் வலியடக்கினவனும்
கோவல் நின்றான், Koval Nindraan - திருக்கோவலூரில் நின்றதிருக் கோலமாயிருப்பவனும்
தென் இலங்கை, Then Ilangai - தென்னிலங்கையிலிருந்தவர்களாய்
அடையா, Adaiyaa - பணியாதவர்களான
அரக்கர், Arakkar - ராக்ஷஸர்கள்
வீய, Veeya - அழியும்படி
பொருது, Poruthu - போர்புரிந்து
வெம் கூற்றம், Vem Koottram - கொடியமிருத்யுவானவன்
மேவி, Mevi - (அஞ்சாமல்) பொருந்தியிருந்து
நடை ஆ, Nadai Aa - இதுவே காரியமாக
உண்ண கண்டான், Unna Kandan - (இலங்கையைப்) புஜீக்கும்படி செய்தவனுமான பெருமானுடைய
1543பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதர விஷயங்களின் உடைய பேரைச் சொல்லிப் போந்த நானும் அன்றோ சொன்னேன் – இனி இது கண்டால் எல்லார்க்கும் சொலத் தட்டில்லை இறே என்னோடு சம்பந்தம் உடையார் எல்லாரும் இத்தையே சொல்லிப் போருங்கோள் – நமோ நாராயணமே –நமக்கு வகுத்ததையே சொல்லிப் போருங்கோள- ஸ்ரீ ஆழ்வார்கள் கோஷ்டியில் இது ஒழிய வேறு ஒரு திரு நாமம் உண்டாக நினைத்து இருப்பார் இல்லை – உண்டாகில் ஆயிரம் -என்று திரளாக சொல்லும் இத்தனை பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையான் – தேவோ நாம சஹஸ்ரவான் –-பல பசு உடையவன் -என்னுமா போலே ஸ்ருதி வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லும் அன்று ஆய்த்து-இவர்கள் வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லுவது – அந்தர்யாமி ப்ராஹ்மணத்தோடு-காரண வாக்யங்களோடு– இது ஒழிந்தவை ஞான சக்த்யாதிகளைப் போலே – இது ஞான ஆனந்த அமலத் வாதிகளைப் போலே ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும்) 6
கான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர் மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே –6-10-6
பதவுரை Show / Hide
கானம் எண்கும், Kaanam Enkum - காட்டுக்கரடிகளையும்
குரங்கும், Kurangum - குரங்குகளையும்
முசுவும், Musuvum - ‘முசு’ என்னுஞ்சாதிக் குரங்குகளையும்
படை ஆ, Padai Aa - சேனையாகக்கொண்டு
அடல் அரக்கர், Adal Arakkar - கொடிய ராக்ஷருடைய
மானம், Maanam - செருக்கு
அழித்துநின்ற, Azhiththinira - அழியச்செய்த
வென்றி அம்மான், Vendri Amman - ஜயசீலனான ஸ்வாமியுமான
திருமால், Thirumaal - திருமாலினுடைய.-
எனக்கு, Enakku - எனக்கு
என்றும், Endrum - எப்போதும்
தேனும் பாலும் அமுதும் ஆய, Thenum Paalum Amuthum Aaya - பரமபோக்யமாயிருக்கின்ற
திருநாமம் நமோநாராயணம், Thirunamam Namonaarayanam - திருநாமமாகிய பெரிய திருமந்திரத்தை
நானும் சொன்னேன், Naanum Sonnaen - நானும் உச்சரித்தேன்;
நமரும் உரைமின், Namrum Uraimin - நம்மைச்சேர்ந்தவர்களும் சொல்லுங்கோள்.
1544பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காரண பூதனனவன் பேர் சொல்லுகை ப்ராப்தம் இறே பிராப்தம் செய்யப் பார்த்ததிலி கோள் ஆகில் இனியது தான் வேணுமே – பகவத் விஷயத்தில் கைங்கர்ய ருசி உடையார் எல்லாருக்கும் சொன்னேன்-இது செய்யாதார் கேளாதாராம் இத்தனை – நமோ நாராயணமே —சஹஸ்ர அஷரீ மாலா-மந்த்ரமாய் இருக்கிறதும் அல்ல) 7
நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும் ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார் குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம் நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7
பதவுரை Show / Hide
நின்றவரையும், Nindravaraiyum - ஸ்திரமாக நிற்கின்ற மலைகளும் (- (ஆகிய இவையெல்லாம்) (திருநாமம் நமோநாராயணம்-;) (நன்று சொன்னேன் காண்மின்.))
கிடந்த கடலும், Kidandha Kadalum - வற்றாதேயிருக்கின்ற ஸமுத்ரமும்
திசையும், Thisaiyum - திக்குக்களும்
இரு நிலனம், Iru Nilanam - பரந்த பூமியும்
ஒன்றும் ஒழியா வண்ணம், Onrum Ozhiyavannam - சிறிதும் பாழாகாதபடி
எண்ணி நின்ற, Enni Nindra - ஸங்கல்பத்தாலே ப்ரவாஹ நித்யமாக்கிக்கொண்டேவருகிற
அம்மானார், Ammanar - ஸ்வாமியும்
குன்று, Kundru - கோவர்த்தனமலையை
குடை ஆ எடுத்த அடிகளுடைய, Kudai A Edutha Adigaludaiya - குடையாயவேந்தின ஸ்வாமியுமானவனுடைய
தொண்டீர், Thondir - ஓ பக்தர்களே!
1545பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பண்ணின உபகாரம் அறியாத பசுக்களை சிரமத்தாலே நோவு படாத படியாக ரஷித்தான் – தான் அறிந்த ஆபத்தும் விலக்காமையும் இறே வேண்டுவது -ரஷிக்கைக்கு ஸ்வ பாவிக சம்பந்தத்தில் கண் அழிவு இல்லையே) 8
கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன் நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால் நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே –6-10-8
பதவுரை Show / Hide
கடு, Kadu - கடுமையான (- (நாமம் நமோநாராயணம்-.))
கால், Kaal - காற்றோடு கூடின
மாரி, Maari - மேகமானது
கல்லே பொழிய, Kalle Pozhiya - கற்களையே வர்ஷிக்கையில்
எமக்கு அல்லே என்று, Emakku Alle Endru - ‘(இது) எங்களுக்குக் காளராத்ரியாகவே யிருக்கின்றது’ என்று
படு்ங்கால், Padungkal - நெஞ்சிலேபட்டு
ஆயர், Aayar - இடையர்கள்
நீயே சரண் என்று அஞ்ச, Neeye Saran Endru Anja - (எமக்கு நீயே புகலாகவேணுமென்று சொல்லி அஞ்சியிருக்க
அஞ்சாமுன், Anjamun - அந்த அச்சத்தினுடைய காரியம் பலிப்பதற்கு முன்னே
நெடு கால் குன்றம் ஒன்று, Nedu Kaal Kuntram Ondru - சுற்று மலைகளையுடைத்தானவொரு கோவர்த்தனமலையை
குடை ஏந்தி, Kudai Aendhi - குடையாகவெடுத்துப் பிடித்து
நிரையை, Niraiyai - பசுக்கூட்டங்களை
சிரமத்தால், Sirama Thaal - ஆயாஸத்தினால்
நடுங்காவண்ணம், Nadungaavannam - நோவுபடாதபடி
காத்தான், Kaathaan - ரக்ஷித்த பெருமானுடைய
1546பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (குறைவற்றாரோடு-குறை வற்றாராக பிரமித்து இருப்பரோடு-குறைவாளரோடு வாசி அற எல்லாருக்கும் ஒக்க நிர்வாஹகனாய் இருக்கை – நீங்கள் அநாதி காலம் புத்தி பூர்வகமாக பண்ணின பாபம் தீரும்படி சொல்லப் பாரும் கோள்- ஸ்ரீ எண்ணாயிரத்து திரு வாய்க் குலத்து ஆழ்வான் -ஸ்ரீ நஞ்சீயரை பிரபத்தி யாகிறது புத்தி பூர்வம் பண்ணின பாபத்துக்கும்-பரிஹாரம் ஆகவற்றோ –-பிராமாதிகத்துக்கேயோ -என்ன அதன் உடைய ப்ரபாவ்வத்தைப் பார்த்தால் புத்தி பூர்வகத்துக்கும் பரிஹாரமாகவற்று ஜ்ஞானம் நடையாடும் இடத்தில் அனுதாபம் இன்றிக்கே இராது இறே-ஆகையால் இவன் பக்கல் ப்ராமாதிகம் அல்லாது கூடாது பூர்வாகத்தைப் போக்குகிற இது-புத்தி பூர்வத்துக்கு பரிஹாரம் ஆகாது என்ன ஒண்ணாதே அதில் புத்தி பூர்வம் ஒழிய இல்லாமையாலே –வினையைப் பண்ணுவதானாலும் சொல்ல வடுப்பது இது) 9
பொங்கு புணரிக் கடல் சூழாடை நில மா மகள் மலர் மா மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகராய எங்கள் அடிகள் இமையோர் தலைவர் உடைய திரு நாமம் நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோ நாராயணமே –6-10-9
பதவுரை Show / Hide
பொங்கு புணரி, Pongu Punari - மேன்மேலுங் கிளர்கின்ற அலைகளையுடைய
கடல், Kadal - ஸமுத்ரத்தை
சூழ் ஆடை, Sool Aadai - தனக்குச் சுற்றிக்கொள்ளும் வஸ்த்ரமாக வுடையளான
நிலம் மா மகள், Nilam Maa Magal - பூமிப்பிராட்டியார்க்கும்
மலர் மா மங்கை, Malar Maa Mangai - பெரிய பிராட்டியார்க்கும்
பிரமன், Brahman - நான்முகனுக்கும்
சிவன், Shivan - ருத்ரனுக்கும்
இந்திரன், Indiran - இந்திரனுக்கும்
1547பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதிலே பொருந்தி இத்தை சொல்ல வல்லவர்கள் உடைய பாபம் இவர்கள் பக்கலில் நில்லாது – இவர்களை விட்டுப் போய் பின்னையும் தான் நிற்கை அன்றிக்கே நசிக்கும் – த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கைக்கு முதல் இல்லை) 10
வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தைக் காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –6-10-10
பதவுரை Show / Hide
வாவி தடம் சூழ், Vaavi Thadam Sool - நடைவாவிகளாலும் தடாகங்களாலும் சூழப்பட்டதும்
மணிமுத்தாறு, Manimuthaaru - மணிமுத்தாற்றை யுடையதுமான
நறையூர், Naraiyoor - திருநறையூரி லெழுந்தருளியிருக்கிற
நெடுமாலை, Nedumalaik - ஸர்வேச்வரனை
நாவின் பரவி, Naavin Paravi - நாவினால் துதித்தும்
நெஞ்சில் கொண்டு, Nenjil Kondu - நெஞ்சில் சிந்தித்தும்
நம்பி நாமத்தை, Nambi Naamathai - அந்தத் திருநறையூர் நம்பியின் திருநாமம் விஷயமாக
காவி தட கண் மடவார்கேள்வன், Kaavi Thada Kan Madavaarkelvan - கருநெய்தற் பூப்போன்று பரந்த கண்களையுடைய மடவார்கட்கு விரும்பத் தகுந்தவராயிருந்த
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை, Maala - இச்சொல்மாலையை
மேவி, Mevi - விரும்பி
சொல்ல வல்லார் பாவம், Solla Vallar Paavam - சொல்ல வல்லவர்களுடைய பாபங்கள்
நில்லா, Nilla - நிற்கமாட்டாமல்
வீயும், Veeyum - அழிந்துபோதும்.
1548பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அனுபவ விரோதியான சம்சார சம்பந்தத்தை கழித்து அருள வேணும் -என்கிறார்) 1
கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல் மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன் நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி பிறவாமை என்னைப் பணி எந்தை பிரானே –7-1-1
பதவுரை Show / Hide
நறவு ஆர் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி, Naravu Ar Pozhil Soozh Naraiyur Nindra Nambi - தேன்மிக்க சோலைகளால் சூழப்பட்ட திருநறையூரில் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்வாமிந்!, (- (அது தன்னுடைய கன்றானது))
கறவா மடநாகு, Karavaa Madaanagu - பால்சுரவாத இளம்பசுவை
தன் கன்று உள்ளினால் போல், Than Kankru Ullinaal Pol - நினைத்துக் கத்துமாபோலே
அடியேன், Adiyen - அடியேன்
மறவாது, Maravaadhu - ஓயாமல்
உன்னையே அழைக்கின்றேன், Unnaiye Azhaiykinren - உன்னையே சொல்லிக் கூப்பிடா நின்றேன்;
எந்தை பிரானே, Endhai Pirane - எனக்குத் தந்தையான பெருமானே!
எனை, Enai - என்னை
பிறவாமை, Piravaamai - (இனி ஸம்ஸாரத்தில்) பிறவாதபடி
பணி, Pani - செய்தருளாய்.
1549பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இது தான் மிகை அன்றோ –பிரளயம் கொண்ட பூமியை நீ எடுத்தது ஆர் கூப்பிட – நீ அறிந்த ஆபத்தும் விலக்காமையும் அன்றோ வேண்டுவது உனக்கு ரஷிக்கைக்கு – பிரளயம் கொண்ட பூமி ஆழ்ந்த இத்தனை அல்லது என்னை எடுக்க வேண்டும் -என்றதோ) 2
வற்றா முதுநீரொடு மால்வரை ஏழும் துற்றாக முன் துற்றிய தொல் புகழானே அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன் பெற்றேன் அருள் தந்திடும் எந்தை பிரானே –7-1-2
பதவுரை Show / Hide
வற்றா முத நீரொடு, Vatraa Muda Neerodu - ஒருகாலும் வடியாத கடல்களையும் (- (அருள் தந்திடு கிருபைசெய்தருளவேணும்.))
மால்வரை ஏழும், Maalvarai Ezhum - பெரிய குலபர்வதங்களேழையும்
முன், Mun - முன்பொருகால்
துற்று ஆக துற்றிய, Thuttru Aaga Thuttriya - ஒரு கபளமாக வாரி விழுங்கின
தொல் புகழோனே, Thol Pugazhone - சாச்வதமான கீர்த்தியையுடையவனே!
அற்றேன் அடியேன், Attren Adiyen - உனக்கே உரியேனாய்த தீர்ந்திருக்கிற அடியேன்
உன்னையே அழைக்கின்றேன், Unnaiye Azhaiykinren - உன்னையே சொல்லிக் கூப்பிடுகின்றேன்;
பெற்றேன், Pettren - இப்படி உன்னையே அழைக்கும்படியான பாக்யத்தைப் பெற்றேன்;
1550பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சௌபரி பல வடிவு கொண்டால் போலே அநேக வடிவம் கொண்டு அவ்வோ இடங்கள் தோறும் இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்னும்படி வர்த்தியா நின்றான் – ஸ்ரீ திருப் பாற் கடலில் கிடந்ததும்-ஸ்ரீ திரு மலையில் நின்றதும்-ஸ்ரீ திருக் கோட்டியூரிலே வந்ததும் தமக்காக -என்று அறிந்த ஹர்ஷம் -அதுவே பருகிக் களிக்கின்றேன் -என்கிறார்) 3
தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய் ஆரேன் அதுவே பருகிக் களிக்கின்றேன் காரேய் கடலே மலையே திருக் கோட்டி ஊரே உகந்தாயை உகந்தேன் அடியேனே –7-1-3
பதவுரை Show / Hide
உன் அருள் என்னிடை வைத்தாய், Un Arul Ennidai Vaiththai - (இனி இவ்வருளை) உனது திருவருளை அடியேன் பக்கலிலே நிலை நிறுத்தினாய், (- (திருநறையூர்ப் பெருமானே!))
பிறர்க்கு, Pirarkku - வேறொருவர்க்கும்
தாரேன், Thaaren - விட்டுக்கொடுக்கக் கடவேனல்லேன்;
கார் ஏய் கடலே, Kaar Aey Kadale - மேகங்கள் படியப்பெற்ற திருப்பாற்கடலையும்
மலையே, Malaiye - திருமலையையும்
திருக் கோட்டியூரே, Thiruk Kottiyure - திருக்கோட்டியூரையும்
உகந்தாயை, Uganthayai - திருவுள்ள முவந்து இருப்பிடமாகக் கொண்டிருக்கிறவுன்னை
அடியேன் உகந்து, Adiyen Uganthu - அடியேன் விரும்பி
ஆரேன், Aren - பர்யாப்தி பெறாதவனாகி
அதுவே பருகி களிக்கின்றேன், Adhuve Parugi Kalikkindren - அவ்வருளையே அனுபவித்து ஸந்தோஷப்படுகின்றேன்
1551பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித விரோதியை ஆளிட்டு அந்தி தொழாதே-தானே கை தொட்டுப் போக்கினான் என்னும் சுத்தியை உடையனாய் இருக்கிறபடி) 4
புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா கள்வா கடல் மல்லைக் கிடந்த கரும்பே வள்ளால் உன்னை எங்கனம் நான் மறக்கேனே –7-1-4
பதவுரை Show / Hide
புள் வாய் பிளந்த, Pul Vaai Pilantha - பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்த
புனிதா, Punithaa - பரமபவித்திரனே!
என்று அழைக்க, Endru Azhaikka - என்று நான் கூப்பிட்ட வளவிலே
உள்ளே நின்று, Ullae Nindru - என்னுள்ளே பொருந்தி
என் உள்ளம் குளிரும் ஒருவா, En Ullam Kulirum Oruvaa - என் மனத்தில் தாபந்தணிக்க வல்ல அத்விதீயனே!
கள்வா, Kalvaa - ஒருவருமறியாமல் பெருநன்றிகள் செய்பவனே!
கடல்மல்லை கிடந்த கரும்பே, Kadalmallai Kidandha Karumbee - திருக்கடன் மல்லையில் பள்ளிகொண்டிருக்கிற பரமபோக்யனே!
வள்ளால், Vallal - உதாரனே!
உன்னை, Unnai - இப்படிப்பட்டவுன்னை
நான் எங்ஙனம் மறக்கேன், Naan Engganam Marakken - நான் எப்படிமறப்பேன்? (ஒருநாளும் மறவேன்.)
1552பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நர நாரணனே –ஸ்த நந்தய பிரஜைகாகா தாய் குடி நீரை குடிக்குமா போலே இவர்களுக்காகா தபஸ் ஸூ பண்ணுமவனே- எங்கள் நம்பி-குறைவாளரான எங்கள் குறையை நிரப்புகைக்கு ஈடான பௌஷ்கல்யத்தை உடையவனே – உன்னுடைய கைங்கர்யத்துக்கு நானே விரோதிகளை நானே போக்கித் தருகிறேன்-அஞ்சாதே கொள் -என்று மாஸூச என்றாப் போலே ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் – சர்வ பூதேப்ய அபயம் ததாமி -என்றாப் போலே இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்) 5
வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும் கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே –7-1-5
பதவுரை Show / Hide
வில் ஏர் நுதல், Vil Aer Nuthal - வில்போன்ற நெற்றியையும்
வேல் நெடு கண்ணியும், Veel Nedu Kanniyum - வேல்போன்று நீண்ட கண்களையுமுடையளான பிராட்டியும்
நீயும், Neeyum - நீயுமாக
கல் ஆர் கடு கானம், Kal Ar Kadu Kaanam - கற்கள் நிறைந்த கொடிய காட்டிலே
திரிந்த, Thirindha - ஸஞ்சரித்
களிறே, Kalire - மதயானைபோன்றவனே!,
நல்லாய், Nallai - ஆச்ரிதவத்ஸலனே!
நரநாராயணனே, Naranarayanane - நரநாராயணவதாரம் செய்தருளினவனே!
எங்கள் நம்பீ, Engal Nambi - எங்கள் குறைதீர்க்கவல்ல பரிபூர்ணனே!
உன்னை யான் வணங்கி தொழும் ஆறு, Unnai Yaan Vanangi Thozhum Aaru - அப்படிப்பட்டவுன்னை அடியேன் திருவடிகளிலே விழுந்து ஸேவிக்கும் முறைமையை
சொல்லாய், Sollaai - அருளிச் செய்யவேணும்.
1553பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேவர்கள் பருகும் அமிர்தம் போல் அன்றிக்கே கைங்கர்ய ருசி உடையராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் பருகும் அம்ருதமாய் – அப்போதே எடுத்து நுகரலாம் படி கனி போலே இருக்கிறவனே – காணப் பெறாமையாலே அசந்நேவ-என்கிறபடியே உரு மாய்ந்த நான் கண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேன்) 6
பனியேய் பரங்குன்றின் பவளத் திரளே முனியே திரு மூழிக் களத்து விளக்கே இனியாய தொண்டரோம் பருகு இன்னமுதாய கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-6
பதவுரை Show / Hide
பனி ஏய், Pani Aey - பனிமிக்கிருந்துள்ள
பரம் குன்றின், Param Kunrin - சிறந்த ஹிமவத்பர்வதத்திலுள்ள திருப்பிரிதியி லெழுந்தருளியிருக்கிற
பவளம் திரளே, Pavalam Thirale - பவளங்கள் திரண்டாற்போன்று அழகியவனே!
முனியே, Muniye - (அடியாருடைய நன்மைகளைச்) சிந்திக்குமவனே!
திருமூழிக் களத்து, Thirumoazhik Kalathu - திருமூழிக்களமென்னுந் திருப்பதியில்
விளக்கே, Vilakke - விளக்குப்போல் விளங்குமவனே
இனியாய், Iniyaai - பரமபோக்யனே!
தொண்டரோம் பருகு, Thondarom Parugu - தொண்டரான அடியோங்கள் பானம பண்ணுதற்கு உரிய
இன் அமுது ஆய, In Amuthu Aaya - இனிய அமுதமானவனே!
கனியே, Kaniye - கனிபோன்றவனே!
உன்னை கண்டு கொண்டு, Unnai Kandu Kondo - உன்னை ஸேவித்து
உய்ந்தொழிந்தேன், Uyndhozhindhen - உஜ்ஜீவிக்கப் பெற்றேன்
1554பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னோடு ச கோத்ரிகளாய் தான் உகந்த ஊர் எல்லாம் -என்கிறபடியே உகந்து அருளின நிலங்கள் எல்லாம் புக்கு அனுபவிக்கும் அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனே – நீ உகந்து அருளின நிலங்களிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே உன்னைக் கண்டு கொண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேன்) 7
கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு நிதியே திரு நீர் மலை நித்திலத்தொத்தே பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-7
பதவுரை Show / Hide
நிதியே, Nithiye - நிதிபோன்றவனே! (- (உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்,-))
திருநீர்மலை, Thiruneermalai - திருநீர்மலையி லெழுந்தருளியிருக்கிற
நித்திலம் தொத்தே, Niththilam Thoththae - முத்துமாலைபோன்றவனே!
எனக்கு, Enakku - அடியேனுக்கு
நின் அருள் அல்லது, Nin Arul Allathu - உன்னுடைய கிருபையைத் தவிர்த்து
கதி இல்லை, Gathi Illai - வேறொருபுகல் இல்லை;
பதியே பரவி தொழும் தொண்டர் தமக்கு கதியே, Pathiye Paravi Thozhum Thondar Thamakku Kathiye - திவ்யதேசங்களையே ஏத்தித்தொழுகின்ற பாகவதர்களுக்குக் கதியானவனே!
1555பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிறர் என்னை பேசா நின்றார்கள் என்று கை விடலாம்படி இருக்கிறாய் அல்லையே நீ – முத்துப் போலே ஸ்ரமத்தைப் போக்குமவனே –பெரு விலையனான மாணிக்கம் போலே இருக்கிறவனே பலத்தோடு வ்யபசரியாதவனே -முளையாத வித்து -நிஷ்பலம் என்பதால் முளைக்கின்ற வித்தே -என்கிறார் உன்னை எத்தைச் சொல்லி நான் விடுவது) 8
அத்தா அரியே என்று உன்னை அழைக்கப் பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற வித்தே உன்னை எங்கனம் நான் விடுகேனோ –7-1-8
பதவுரை Show / Hide
அத்தா, Aththaa - ஸ்வாமியே!
அரியே, Ariye - (விரோதிவர்க்கங்களை ஹரிக்குமவனே!
என்று, Endru - என்று இப்படிப்பட்ட திருநாமங்களைச் சொல்லி
உன்னை அழைக்க, Unnai Azaikka - நான் உன்னை அழைக்குமளவில்
பிறர், Piraar - அயலார்
என்னை, Ennai - இப்படி அழைக்கிற என்னைநோக்கி
பித்தா என்று பேசுகின்றார், Piththaa Endru Pesugindraar - ‘அடா பித்தனே!’ என்று சொல்லுகிறார்கள்;
முத்தே, Mutthae - முத்துப்போன்றவனே!
மணி மாணிக்கமே, Mani Maanikkame - சிறந்த மாணிக்கம் போன்றவனே!
முளைக்கின்ற வித்தே, Mulaikkindra Viththae - முளைக்கின்ற விதைபோலே பயனளிப்பவனே!
உன்னை, Unnai - இப்படிப்பட்டவுன்னை
நான், Naan - அடியேன்
எங்ஙனம் விடுகேன், Engnganam Vidugae - எவ்விதமாக விட்டொழிவேன்?
1556பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆபத்து கரை புரண்டால் வரையாதே எல்லாரையும் ஒக்க ரஷிக்கும் ஸ்வபாவன் ஆனவனே – திரைக் கிளர்த்தி உடைய கடல் சூழ்ந்த பூமியை அமுது செய்த திருப் பவளத்தை உடையவனே – இப்படி ஆபத் சகனான உன்னை எங்கனே மறக்கும் படி) 9
தூயாய் சுடர் மா மதி போல் உயிர் க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா ஆயா வலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ –7-1-9
பதவுரை Show / Hide
தூயாய், Thuyyaai - பரிசுத்தனானவனே!
சுடர், Sudar - ஒளிவிடுகின்ற
மா மதி போல், Maa Mathi Pol - பூர்ண சந்திரன் போலே
உயிர்க்கு எல்லாம், Uyirkkum Ellam - ஸகலப்ராணிகளுக்கும்
தாய் ஆய் அளிக்கின்ற, Thaai Aay Alikkindra - தாய்போன்று அருள்புரிகின்ற
தண் தாமரை கண்ணா, Than Thaamarai Kanna - குளிர்ந்த செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை யுடையவனே!
ஆயா, Aayaa - கோபாலனே!
அலை நீர் உலகு ஏழும், Alai Neer Ulaku Ezhum - அலைகடல் சூழ்ந்த ஸப்த லோகங்களையும்
முன், Mun - முன்னொருகால்
உண்டவாயா, Undavaayaa - அமுது செய்த திருப்பவளத்தை யுடையவனே!
உன்னை, Unnai - இப்படிப்பட்ட வுன்னை
நான் எங்ஙனம் மறக்கேன், Naan Engganam Marakken - நான் எப்படிமறப்பேன்!
1557பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னைப் போலே நீங்களும் இவ் விஷயத்திலே ருசியை உடையிகோளாய் பாடுவது ஆடுவதாகவே ஸ்ரீ பரம பதம் தன்னடையே சித்திக்கும் படியாம் – அதுக்கு விரோதியான பாபம் தன்னடையே போம்) 10
வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும் தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட உண்டே விசும்பு உந்தமக்கு இல்லை துயரே –7-1-10
பதவுரை Show / Hide
தொண்டீர், Thondir - பக்தர்களே! (- (விசும்பு உண்டு பரமபதம் கிடைக்கும்.))
வண்டு ஆர் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு, Vandu Aar Pozhil Soozh Naraiyur Nambikku - வண்டுகள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருநறையூரி லெழுந்தருளி யிருக்கும் பெருமானுக்கு
என்றும், Endrum - எக்காலத்தும்
தொண்டு ஆய், Thondu Aay - அடிமைபூண்டு
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி செய், Oli Sei - அருளிச் செய்த
தமிழ் மாலை இவை, Tamil Maalai Ivai - இத்தமிழ்ப் பாசுரங்களை
பாடுமின், Paadumin - பாடுங்கோள்
பாடி நின்று ஆட, Paadi Nindru Aada - (அப்படி) பாடியாடப்பெறில்
உந்தமக்கு, Undhamakku - உங்களுக்கு
துயர் இல்லை, Thuyar Illai - ஸம்ஸாரத் துன்பங்கள் இல்லையாய்விடும்;
1558பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இனி வேறே நூறாயிரம் இதர விஷயங்கள் முகம் காட்டினாலும் அவற்றோடு செறியேன் – நான் நோவு படுகிற சம்சாரத்தில் நீயே முற்பாடனாய் வந்து நின்ற பின்பு அவற்றோடு பொருந்துமோ – ப்ரீதி அதிசயத்தாலே -ஒ -என்கிறார்) 1
புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால் உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால் நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1
பதவுரை Show / Hide
புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து, Pul Aay Yenamum Aay Pugundhu - ‘ஹம்ஸரூபியாயும் வராஹ ரூபியாயும் என்னுள்ளே பிரவேசித்து (- (ஓ நறையூர் நின்ற நம்பீ!))
என்னை உள்ளம் கொண்ட கள்வா என்றலும், Ennai Ullam Konda Kalvaa Endralum - என உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட கள்வனே!’ என்று சொன்னவுடனே
என் கண்கள், En Kangkal - எனது கண்களில் நின்றும்
நீர்கள் சோர்தரும், Neerga Sortharum - கண்ணீர் பெருகுகின்றது :
ஆல், Aal - அந்தோ!;
நெஞ்சம், Nenjam - என்மனமானது
உன்னை, Unnai - எம்பெருமானான உன்னை
உள்ளியக்கால், Ulliyakkal - அநுஸந்திக்கப் புகுந்தால்
உள்ளே நின்று உருகி, Ulle Nindru Urugi - உள்ளே பிடித்து நீராக உருகிப்போவதனால்
உன்னை அல்லால், Unnai Allaal - (இப்படிப்பட்ட அன்புக்கு இலக்கான உன்னைத் தவிர்த்து (வேறொருவரையும்)
நள்ளேன், Nalleen - நேசிக்கமாட்டேன்.
1559பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புள்ளாய் ஏனமுமாய் புகுந்து -என்றார் கீழே –தாழ்ந்த ஜன்மத்தில் வேணுமாகில் பிறக்கிறாய் – நாட்டார் பிறக்கும் பிறவிகளில் பிறக்கல் ஆகாதோ – நாட்டில் நடையாடாத படியான நரசிம்ஹ ரூபத்தை யுடையையாய் – ஸ்ரீ நரசிம்ஹ வேஷ பரிக்ரஹம் பண்ணின அன்று தொடங்கி இவர் உடைய ஹிருதயத்திலே காணும் கிட்டுவது) 2
ஓடா வாளரியின் உருவாய் மருவி என்தன் மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா பாடேன் தொண்டர் தம்மைக் கவிதை பனுவல் கொண்டு நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-2
பதவுரை Show / Hide
ஓடா, Odaa - நாட்டில் எங்கும் நடையாடாத (- (ஓ நறையூர் நின்ற நம்பீ!- ;))
ஆள் அரியின் உரு ஆய், Aal Ariyin Uru Aay - நரஸிம்ஹரூபியாய்
என்றன் மாடே வந்து மருவி, Endran Maade Vandu Maruvi - என் பக்கல்வந்து பொருந்தி
அடியேன், Adiyen - அடியேனுடைய
மனம், Manam - மனத்தை
கொள்ள வல்ல மைந்தா, Kolla Valla Mainthaa - கவர்ந்து கொள்ளக் கூடிய மிடுக்கையுடையவனே!
பனுவல் கவிதை கொண்டு, Panoval Kavithai Kondo - இலக்கணம் வழுவாத கவிகளைக்கொண்டு
தொண்டர் தம்மை, Thondar Thammai - நீசர்களை
பாடேன், Paadeen - பாடுவது தவிர்ந்தேன்;
உன்னை அல்லால், Unnai Allaal - உன்னைத்தவிர (வேறொரு வரைக் கவிபாட)
நாடேன், Naadeen - முயலமாட்டேன்.
1560பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அஞ்சனம் போலே ஸ்ரமஹரமான வடிவை உடைய உன்னை அல்லது புறம்பே சிலரை – இப்போது புறம்பாக நினைக்கிறது -புறம்புற்றை திருப்பதிகளை – எத்தனை வேணும் என்று ப்ரேரித்தாலும் ப்ரீதி புரஸ் சரமாக ஏத்துமது இல்லை) 3
எம்மானும் எம் அம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததன் பின் அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன் மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே –7-2-3
பதவுரை Show / Hide
எம்மானும், Emmaanum - என் தகப்பனும் (- (நறையூர் நின்ற நம்பீ!- ;))
எம் அனையும், Em Anaiyum - என் தாயும்
என்னை பெற்று, Ennai Petru - என்னைப் பிரஸவித்துவிட்டு
ஒழிந்ததன் பின், Ozhindadhan Pin - நீங்கிய பின்பு
அடியேனுக்கு, Adiyenukku - அடியேனுக்கு
அம்மானும், Ammanum - தகப்பனும்
அம்மனையும், Ammanaiyum - தாயும்
ஆகி நின்ற, Aagi Nindra - தானேயாய்நின்ற
நல், Nal - விலக்ஷணமாய்
மானம், Maanam - பெருமைபொருந்தி
ஒண், On - அழகியதான
சுடரே, Sudare - தேஜஸ் ஸ்வரூபியே!,
உன், Un - உன்னுடைய
மை மானம், Mai Maanam - மைபோன்ற
வண்ணம் அல்லால், Vannam Allal - திருமேனி நிறத்தையல்லது (வேறொன்றையும்)
மகிழ்ந்து, Magizhndu - மனமுவந்து
ஏத்த மாட்டேன், Aetha Maatten - துதிக்கமாட்டேன்.
1561பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேராச் சேர்த்தியாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து அவ் வாலந்தளிர் அளவன்றிக்கே ஸ்ரீ பரம பதம் போலே இடம் பெற இருந்து என்னை உனக்காக்கிக் கொண்ட இம் மகோ உபகாரத்தை அறியாதே நான் க்ருத்க்னனாய் இருக்கிறேன் அல்லேன் – அவ்விடை யாட்டமும் அறிந்தே இருக்கிறேன் -உனக்கு உறைவிடம் இல்லாமை தான் செய்தாயோ நீ – உனக்கு அசங்குசிதமாக வர்த்திகைக்கு ஒரு ஸ்தானம் இல்லையோ -இத் தேசத்தை உடைய உனக்கு) 4
சிறியாய் ஓர் பிள்ளையுமாய் யுலகு உண்டு ஓர் ஆலிலை மேல் உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான் அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும் நறைவாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-4
பதவுரை Show / Hide
அணி வண்டு, Ani Vandu - அழகிய வண்டுகள் (- (நறையூர், நின்ற நம்பீயோ!- ;))
கிண்டும், Kindum - குடையப்பெற்றதும்
நறை வாரும், Nirai Vaarum - தேன் பெருகப்பெற்றதுமான
பொழில், Pozhil - சோலையாலே
சூழ், Sool - சூழப்பட்ட
சிறியாயோர் பிள்ளையும் ஆய், Siriyaayor Pillaiyum Aay - மிகச் சிறுகுழந்தையாய்
உலகு உண்டு, Ulaku Undu - உலகங்களை உட்கொண்டு
ஓர் ஆல் இலை மேல், Or Aal Ilai Mel - ஒரு ஆலந்தளிரிலே
உறைவாய், Uraivaay - பொருந்தியிருந்தவனே!
என் நெஞ்சின் உள்ளே உளைவாய், En Nenjin Ullae Ulaivaay - எனது நெஞ்சுக்குள்ளே வஸிப்பவனே!
உறைந்தது தான், Uraindhadhu Thaan - (நீ இப்படி என்னெஞ்சினுள்ளே) வாஸஞ்செய்தருள்வதை
அடியேன், Adiyen - அடியேன்
அறியா திருந்தறியேன், Ariyaa Thirundhariyeen - தெரிந்துகொள்ளாமலிருக்கவில்லை
1562பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னையும் அடிமையில் மூட்டுகைகாக என்னுடைய ஹிருதயத்திலே புகுந்த உன்னைப் போக ஒட்டுவேனோ சேஷ பூதராவார் சேஷி செய்தபடி செய்யக் கண்டு இருக்குமவர்கள் அன்றோ ஒட்டேன் என்று நிர்பந்திக்கை உம்முடைய ஸ்வரூபத்துக்குப் போருமோ -என்ன – மடல் எடுக்க நினைப்பார் இது ஆம் இது ஆகாது என்று கார்யம் பார்த்தோ செய்வது – நீயோ சால நாண் உடையையாய் இருக்கிறாய் –-நீ முந்துற மடல் எடுத்து பின்னை அன்றோ மடல் எடுப்பித்தது – அவன் மடல் எடுக்கை யாகிறது -முற்பாடனாய் வர நிற்கை இறே) 5
நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பது அரிதால் ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல ஒட்டேன் நாண் தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-5
பதவுரை Show / Hide
நீண்டாயை, Neendaayai - நெடுமாலாகிய உன்னை (- (நறையூர் நின்ற நம்பீயோ!- ;))
வானவர்கள், Vaanavarkal - பிரமன் முதலியோர்கள்
நினைந்து, Ninaindhu - தியானித்து
ஏத்தி, Aethi - தோத்திரம்பண்ணி
காண்பு அரிது, Kaanbu Aridhu - காண்பதானது அஸாத்யமான காரியம்
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு, Aandai Enru Aadharikkap Paduvaaykku - ‘எம்பெருமானே!’ என்று (தேவர்களால்) ஆதரித்துத் துதிக்கப்படுகின்ற உன்விஷயத்தில்
நான் அடிமை பூண்டேன், Naan Adimai Poondhen - நான் அடிமைத் தொழில் செய்யப்பெற்றேன்;
என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை, En Nenjin Ullae Pugundhaayai - எனது மனத்திலுள்ளே புகுந்திருக்கிற உன்னை
போகல் ஒட்டேன், Pokal Ottaen - இனி வேறோரிடம் போக வொட்டேன்;
உனக்கு, Unakku - உன் விஷயத்திலே
நாண் தான் ஒழிந்தேன், Naan Thaan Ozhindhen - வெட்கமற்றவனானேன்.
1563பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ போகாதே கொள் -என்று காலைக் கட்டி வளைக்கலாம் படி என் பக்கலிலே அருளைப் பண்ணின ஸ்ரீ திரு நறையூரிலே வந்து நின்று ஆய்த்து-இவருக்கு அருளிற்று) 6
எந்தாதை தாதை அப்பால் எழுவார் பழ வடிமை வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன் அந்தோ என் ஆர் உயிரே அரசே அருள் எனக்கு நந்தாமைத் தந்த வெந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-6
பதவுரை Show / Hide
என் ஆர் உயிரே, En Aar Uyire - எனது அருமையான உயிர் போன்றவனே! (- (நறையூர் நின்ற நம்பீயோ!- ;) (ஆகப் பத்துத்தலைமுறையாக))
அரசே, Arase - என்னை ஆள்பவனே!
எனக்கு அருள் நந்தாமல் தந்த எந்தாய், Enakku Arul Nandamal Thanda Endathai - என் திறத்தில் கிருபையைக் குறைவின்றிச் செய்தருளின எம்பெருமானே!
எம் தாதை தாதை, Em Thathai Thathai - நானும் என் தகப்பனும் அவன் தகப்பனும்
அப்பால், Appaal - அவனுக்கு முன்புண்டான
எழுவர், Ezhvar - ஸப்த புருஷர்களும்
பழவடிமை வந்தார், Pazhavadi Mai Vandhaar - இயற்கையான அடிமையைச் செய்து வந்தவர்கள்;
என் நெஞ்சின் உள்ளே, En Nenjin Ullae - எனது மனத்தினுள்ளே
வந்தாயை, Vandhaayai - வந்து சேர்ந்த உன்னை
போகல் ஒட்டேன், Pokal Ottaen - இனி வேறிடம் போக வொட்டேன்
1564பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ போகில் நான் முடிவன் -என்கிறார் – இத்தலை இழக்க வரும் அளவில் -இட்ட அடி பேர்க்க மாட்டான் – நீர் வளைக்கிறது என்ன மிடுக்கு கொண்டு என்ன – நீர் குற்றம் கண்டு கை விடப் பார்க்கும் அன்றும்ந கச்சின் ந அபராத்யதி -என்னும் அவள் அன்றோ அருகே இருக்கிறாள்) 7
மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா எந்நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இனிப் போய் பிறர் ஒருவர் வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன் நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-7
பதவுரை Show / Hide
நல் நெஞ்சம், Nal Nenjam - (அடியார் திறத்தில்) நல்ல ஹ்ருதயத்தை யுடையளான (- (நறையூர், நின்ற நம்பீயோ!- ;))
அன்னம், Annam - அன்ன மென்னடையாளான பிராட்டி
மன்னும், Mannum - பொருந்தி வாழ்கிற
மன் அஞ்ச, Man Anja - க்ஷத்திரியர்களெல்லாரும் அஞ்சும்படியாக
ஆயிரம் தோள், Aayiram Thol - (கார்த்த வீரியார்ஜுநனுடைய) ஆயிரந் தோள்களையும்
மழுவின், Mazhuvin - கோடாவிப்படையினால்
துணித்த, Thuniththa - அறுத்தொழித்த
மைந்தா, Maindha - மிடுக்கனே?
என் நெஞ்சத்துள், En Nenjaththul - எனது நெஞ்சினுள்ளே
இருந்து, Irundhu - இருந்து வைத்து
இனி, Ini - இனிமேல்
இங்கு போய், Ingu Poi - இங்கு நின்றும் வேறோரிடம்போய்
பிறர் ஒருவர், Piraar Oruthar - வேறொருவருடைய
வல் நெஞ்சம், Val Nenjam - கடினமான நெஞ்சிலே
புக்கு இருக்க, Pukku Irukka - புகுந்திருக்க
ஒட்டேன், Ottaein - ஸம்மதிக்கமாட்டேன்;
வளைத்துவைக்கேன், Valaithuvaikken - தடைசெய்கின்றேன்.
1565பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விலஷணமான புஷ்பங்களிலே வண்டுகள் ஆனவை குடைந்து வண்டு உண்ணும் -என்கிறபடியே உள்ளே உள்ளே அவஹாகிக்கும் அத்தனை போக்கி வேறு ஒன்றில் போக ஒண்ணாத படி போக்யமான தேசத்தை வாசஸ் ஸ்தானமாக உடையவனே- அவ் ஊரில் அவஹாகித்தாருக்கு வேறேயும் ஓர் இடம் தேடித் போகலாம் படியோ அவ் ஊரில் போக்யதை இருப்பது) 8
எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள் கைப் போது கொண்டு இறைஞ்சிக் கழல் மேல் வணங்க நின்றாய் இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் நற்போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-8
பதவுரை Show / Hide
நல் போது, Nal Podhu - நல்ல புஷ்பங்களிலே (- (நறையூர், நின்ற நம்பீயோ!- ;))
வண்டு கிண்டும், Vandu Kintum - வண்டுகள் குடையப்பெற்ற
இமையோர், Imaiyor - நித்யஸூரிகள்
எப்போதும், Eppodhum - எக்காலத்திலும்
பொன்மலர் இட்டு, Ponmalar Ittu - நல்ல பூக்களை ஸமர்ப்பித்து
தொழுது, Thozhudhu - வணங்கி
தங்கள், Thangal - தங்களுடைய
கை போது கொண்டு இறைஞ்சி, Kai Podhu Kondu Irainji - புஷ்பம் போன்ற கைகளினால் அஞ்ஜலிசெய்து
கழல் மேல், Kazhal Mel - திருவடிகளிலே
வணங்க நின்றாய், Vananga Nindraai - ஆச்ரயிக்குமாறு நிற்பவனே!
இப்போது, Ipodhu - இன்று
என் நெஞ்சின் உள்ளே, En Nenjin Ullae - எனது மனத்துள்ளே
புகுந்தாயை, Pugundhaayi - வந்துபுகுந்த வுன்னை
போகல் ஒட்டேன், Pokal Ottaen - வேறிடம் போகவொட்டேன்
1566பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து கலந்த படியை அனுசந்திக்க அனுசந்திக்க தமக்கு இனிதாக நின்றது –எனக்கு சர்வ வித போக்யமுமாய் உள்ளவனே – வேறு ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி அது கொண்டு பெற இருக்கை அன்றிக்கே இந்த சரீரம் தன்னையே கொண்டு பிராபிக்கப் பெற்றேன் – அது செய்த படி தான் எங்கனே என்ன –நீ வர நிற்கையாலே நான் இப் பேறு பெற்றேன்) 9
ஊனேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால் யானாய் என் தனக்காய் அடியேன் மனம் புகுந்த தேனே தீன் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால் நானே எய்தப் பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-9
பதவுரை Show / Hide
யான் ஆய், Yaan Aayi - எனக்கு அந்தராத்மாவாய் (- (நறையூர் நின்ற நம்பீயோ!- ;))
என் தனக்கு ஆய், En Thanakku Aayi - எனக்கு விதேயனாய்க் கொண்டு
அடியேன் மனம் புகுந்து, Adiyein Manam Pugundhu - அடியேனுடைய மனத்தினுட் பிரவேசித்த
தெனே, Thene - தேன்போல் இனியவனே!
தீம் கரும்பின் தெளிவே, Theem Karumbin Thelivae - இனிமையான கரும்பின் சாறுபோன்றவனே!
ஊன் ஏர் ஆக்கை தன்னை, Oon Aer Aakkai Thannai - மாம்ஸமயமான சரீரத்தை
உழந்து, Uzhandhu - (பலவகைகளாலும்) சிரமப்பட்டு
ஓம்பி வைத்தமையால், Oombi Vaiththamaiyaal - பேணிவைத்துக்கொண்டிருந்ததனால்
என் சிந்தை தன்னால், En Sindhai Thannal - என்னுடைய மனத்தினால்
நானே எய்த பெற்றேன், Naane Eytha Pettraen - (இப்போது உன்னை) நானே வந்தடையப்பெற்றேன்.
1567பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தை அனுசந்தித்தார்க்கு -இது ஒரு சப்தமே -என்று கொண்டாடும் இதுவே ஸ்வ பாவமாம் படி இருக்கிற சொல் தொடையைச் சொல்லும் அவர்கள்-இத்தை சொல்லுகையே போரும் ஆய்த்து பிரயோஜனம் – அதுக்கு மேலே-போக பூமிகளிலே மேலாய் இருக்கிற ஸ்ரீ பரம பதத்திலே போய் இவ் வாத்மாவின் உடைய ஸ்வரூப அனுரூபமான முறையாலே நிரதிசய ஸ்வரூபா நந்திகளாய் பின்னை ஒரு நாளும் புநரா வ்ருத்தி இல்லாத பேற்றைப் பெறுவார்கள்) 10
நன்னீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக் கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன் சொன்னீர் சொல் மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில் நன்னீர்மையால் மகிழ்ந்து நெடும் காலம் வாழ்வாரே –7-2-10
பதவுரை Show / Hide
நல் நீர் வயல் புடை சூழ் நறையூர், Nal Neer Vayal Pudai Soozh Naraiyoor - நல்ல நீரையுடைய கழனிகளாலே நாற்புறமுஞ் சூழப்பட்ட திருநறையூரில்
நின்ற, Nindra - நித்யாவஸம் செய்தருள்கின்ற
நம்பியை, Nambiyai - எம்பெருமான் விஷயமாக,
கல் நீர மால் வரை தோள், Kal Neera Maal Varai Thol - ஒலிக்கின்ற அருவிநீரையுடைய பெரிய மலைபோன்ற திருத்தோள்களை யுடையவரும்
மங்கையர் கோன், Mangaiyar Koon - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார் (அருளிச்செய்த)
சொல் நீர, Sol Neera - கொண்டாடிச் சொல்ல வேண்டுவதையே ஸ்வபாவமாகவுடைய
சொல் மாலை, Sol Maalai - இச்சொல் மாலைகளை
சொல்லுவார்கள், Solluvaargal - கற்பவர்கள்
சூழ் விசும்பில், Sozh Vizhumbil - பெரிய திருநாட்டில்
நல் நீர்மையால், Nal Neermaiyaal - (நித்தியகைங்கர்யமாகிற) சிறந்த ஸ்வபாவத்தோடு கூடி
நெடுங்காலம், Nedungkaalam - சாச்வதாமாக
மகிழ்ந்து வாழ்வார், Magizhndhu Vaazvaar - பரமாநந்தங்கொண்டு வாழப்பெறுவர்.
1568பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ யத்னத்தால் அன்றிக்கே அவன் காட்டின வழியாலே காணப் பெற்ற அடியேனான நான் – ஸ்ரீ திரு நறையூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற கல்யாண குண பூர்ணனை – மனஸ் ஸூ சஹகரிக்க -அத்தாலே கண்ணால் காணும் காட்சி அன்றிக்கே அந்த நெஞ்சு தானே முழு மிடறு செய்து பூரணமாக நெறிபட அனுபவிக்கப் பெற்றேன் – நெஞ்சே அனுபவித்து கண்கள் அனுபவிக்கப் பெற்றது இல்லை -என்கிற குறை கிடவாமை -கண்கள் கண்டு அனுபவிக்க அவற்றுக்கு ஆஸ்ரய பூதனாய் இருக்கிற நானும் – என் கண்கள் களிப்பக் களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேனே -திரு வாய் மொழி -10-8-4- என்கிறபடியே களிக்கப் பெற்றேன்) 1
சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம் மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக் கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே –7-3-1
பதவுரை Show / Hide
சினம் இல், Sinam Il - கோபத்துக்கு இருப்பிடமாய் (- (நறையூர் நின்ற நம்பியை-;))
செம் கண், Sem Kan - சிவந்த கண்களையுடைரான
அரக்கர், Arakkar - ராக்ஷஸர்கள்
உயிர் மாள, Uyir Maala - உயிரிழந்து முடியும்படியாக
செற்ற, Settra - சீறின
வீல்லி என்று, Veelli Endru - வில்லை யுடையவனே! என்று
கற்றவர், Kattravar - அறிவுடையவர்கள்
தம் தம், Tham Tham - தங்கள் தங்களுடைய
மனம் உள் கொண்டு, Manam Ula Kondu - நெஞ்சிலே தியானித்து
என்றும் எப்போதும், Endrum Eppodhum - எக்காலத்திலும் எல்லா நிலைமைகளிலும்
நி்ன்று, Ninru - நிலைநின்று
ஏத்தும், Aethum - தோத்திரம் பண்ணும்படியாகவுள்ளவனும்
மா முனியை, Maa Muniyai - (அடியார்திறத்தில் இன்னமும் என் செய்வோமென்று, நெடிய சிந்தனைகளைச் செய்பவனும்
கனவில், Kanavil - மாநஸாநுபவத்தில்
ஏழ் மரம் எய்த, Ezha Maram Eytha - ஸப்தஸால விருஷங்களை அம்பு எய்து துளைபடுத்தின
மைந்தனை, Mainthanai - மிடுக்குடையவனும்
நனவில் சென்றார்க்கும், Nanavil Senraarkkum - கண்மலரப் பெற்றவர்களான சிறந்த ஞானிகட்கும்
நண்ணற்கு அரியானை, Nannarku Ariyanai - கிட்டக் கூடாதவனுமான
அடியேன் நான், Adiyen Naan - அடியேனாகிய நான்
கனவில், Kanavil - மாநஸாநுபவத்தில்
இன்று கண்டேன், Indru Kandein - இன்று காணப்பெற்றேன்;
கண்டமையால், Kandamaiyala - காணப்பெற்றதனால்
என் கண் இணைகள், En Kan Inaihal - எனது இரண்டு கண்களும்
களிப்ப, Kalippa - ஸந்தோஷிக்க
களித்தேன், Kalitthen - நானும் ஸந்தோஷித்தேன்.
1569பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி பூர்ணனாய் இருந்து வைத்து என் பக்கலில் அன்பைப் பண்ணினவனை – அவன் என்பக்களில் அன்பைப் பண்ணி மேல் விழா நிற்க நான் அவனை ஒழிய வேறு சிலரை ஆதரிப்பேனோ) 2
தாயை நினைந்த கன்றே ஒக்க வென்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக் காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை அன்று இவ்வையகம் உண்டு உமிழ்ந்திட்ட வாயனை மகரக் குழை காதனை மைந்தனை மதிள் கோவல் இடைகழி யாயினை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே –7-3-2
பதவுரை Show / Hide
தாய் நினைந்த கன்றே ஒக்க, Thaai Ninaindha Kanre Okka - தன் தாயாகிய பசுவை நினைக்கும் கன்றுபோல
என்னையும், Ennaiyum - அடியேனையும்
தன்னையே நினைக்க செய்து, Thannaie Ninaikka Seidhu - (எம் பெருமானாகிய) தன்னையே சிந்திக்கும்படி பண்ணி (அதற்கு மேலே)
தான் எனக்கு ஆய் நினைந்து, Thaan Enakku Aay Ninaindhu - எனக்கு வேண்டிய நன்மைகளை யெல்லாம் தானே சிந்தித்து
அருள் செய்யும் அப்பனை, Arul Seyyum Appanai - கிருபை பண்ணும் உபகாரகனும்,
அன்று, Andru - முன்பொருகாலத்தில்
இ வையகம், I Vaiyagam - இவ்வுலகத்தை யெல்லாம்
உண்டு, Undu - விழுங்கி (பின்பு)
உமிழ்ந்திட்ட, Umizhndhitta - வெளிப்புறப்பட விட்ட
வாயனை, Vayanai - திருப்பவளத்தை யுடையவனும்,
மகரம் குழை காதனை, Makarum Kuzhai Kaadhani - மகர கு்ணடலங்களைத் திருச்செவிகளில் அணிந்துள்ளவனும்
மைந்தனை, Mainthanai - நித்யயுவாவும்
மதிள் கோவல் இடை கழி ஆயனை, Mathil Koval Idai Kazhi Aayenai - திருமதில்களை யுடைய திருக்கோவலூரிடை கழியில் கோபாலனாய் நிற்பவனும்
அமரர்க்கு, Amararukku - நித்யஸூரிகளினிடையே
அரி ஏற்றை, Ari Aetrai - சிங்கம் போலவும் காளை போலவும் செருக்குத் தோற்ற விருப்பவனும்
என் அன்பனை அன்றி, En Anbanai Andri - என்னிடத்தில் அன்புடையவனுமான திருநறையூர் நம்பியைத் தவிர்த்து
ஆதரியேன், Aadharien - (வேறொருவனை) ஆதரிக்கமாட்டேன்.
1570பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவர் உடைய திரு உள்ளம் ஒழிய வேறு ஓர் இடம் உண்டாக நினைத்து இருக்கிறிலன் – பின்னை அவ்வோ இடங்களிலே இவன் இல்லையோ என்னில் சௌபரி பல வடிவு கொண்டு அனுபவித்தால் போலே இதுக்கு அவ்வருகு இல்லை என்னலாம் படி அவன் முகம் கொடுத்துக் கொண்டு இருந்த படி – எனக்கு ஜனகன் ஆனவனை-என்னுடைய குல நாதன் ஆனவனை – தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை எனக்கு பிரகாசிப்பித்த மகா உபாகாரகனை – எத்தால் மறக்கேனே –பண்ணின உபகாரம் அளவுபட்டு மறக்கவோ நான் இட்ட பச்சையை நினைத்து ஆறி இருக்கவோ-எவ்வழியால் மறப்பது) 3
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் அடியேனுடைச் சிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் இது சிக்கெனப் பெற்றேன் கொந்துலாம் பொழில் சூழக் குடந்தைத் தலைக் கோவினைக் குடமாடிய கூத்தனை எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே –7-3-3
பதவுரை Show / Hide
வந்த நாள் வந்து, Vandha Naal Vandhu - தானாகவே என்னை ஸ்வீகரிக்க எழுந்தருளின நாளிலே எழுந்தருளி
என் நெஞ்சு, En Nenju - எனது நெஞ்சை
இடம் கொண்டான், Idam Kondaaan - இருப்பிடமாகக் கொண்டான்;
மற்று ஓர் நெஞ்சு அறியான், Mattru Oor Nenju Ariyaan - வேறொருவருடைய நெஞ்சையும் தனக்கு இருப்பிடமாக நெஞ்சிலும் நினைக்கின்றிலன்;
அடியேனுடை, Adiyeenudai - அடியேனுடைய
சிந்தை ஆய் வந்து, Sindhai Aay Vandhu - மநோரதங்களைத் தானுடையனாய் வந்து
என்னை, Ennai - அடியேனை
தென்புலர்க்கு சேர் கொடான், Thenpularkku Seer Kodaan - யமபடர்கையில் காட்டிக்கொடாதே விஷயீ கரித்தருளினான்,
இது, Idhu - இதனை
சிக்கன, Sikkan - திடமாக
பெற்றேன், Pettren - லபித்தேன்; (ஆன பின்பு.)
கொந்து உலாம் பொழில் சூழ், Kondhu Ulaam Pozhil Soozh - பூங்கொத்துக்கள் நிறைந்த சோலைகளினால் சூழப்பட்ட
குடந்தைத் தலை, Kudandhaith Thalai - திருக்குடந்தையில் (எழுந்தருளியுள்ள)
கோவினை, Kovinai - ஸ்வாமியும்
குடம் ஆடிய கூத்தனை, Kudam Aadiya Kooththanai - குடக் கூத்தாடினவனும்
எந்தையை, Endhaiyai - எனக்குத் தந்தையும்
எந்தை தந்தை தம்மானை, Endhai Thandhai Thammaanai - என் முதுகுரவர்க்கும் ஸ்வாமியுமான
எம்பிரானை, Embiraanai - (திருநறையூர்) நம்பியை
எத்தால், Eththaal - எக்காரணம் பற்றி
மறக்கேன், Marakken - மறப்பேன் (மறக்கமுடியாது.)
1571பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும் மார்விலே அம்பு ஏற்றும் உபகரிக்கும் அவனுக்கு அல்லது வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது) 4
உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச் சென்று இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை வம்பார் புனல் காவிரி அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –7-3-4
பதவுரை Show / Hide
உரங்களால் இயன்ற மன்னர் மாள, Urangalal Iyanra Mannar Maala - மிடுக்கினால் மிகக் துரியோதனாதியரசாகள் தொலையும்படி
பாரதத்து, Bharathaththu - பாரதயுத்தத்திலே
ஐவர்க்கு ஆய் சென்று, Aivarkku Aay Sendru - பஞ்சபாண்டவர்க்குத் துணையாயெழுந்தருளி
இரங்கி, Irangi - (அவர்கள் விஷயத்தில்) மனமிரங்கி
ஒரு தேர் ஊர்ந்து, Oru Ther Oornthu - (அவர்களுடையதான) ஒரு தேரை ஸாரதியாயிருந்து நடத்தி
அவர்க்கு, Avarkku - அப்பாண்டவர்க்கு
இன் அருள் செய்யும் எம்பிரானை, In Arul Seyyum Empranai - பரம கிருபையைச் செய்தருளின ஸ்வாமியும்
வம்பு ஆர் புனல் காவிரி, Vambu Aar Punal Kaviri - புதுமைமிக்க தீர்த்தத்தை யுடைய திருக்காவேரியால் சூழப்பட்ட
அரங்கம், Arangam - திருவரங்கம் பெரியகோயிலை
ஆளி, Aali - ஆள்பவனும்
என் ஆளி, En Aali - என்னையாள்பவனும்
விண் ஆளி, Vin Aali - பரமபதத்துக்குத்தலைவனும்,
ஆழி சூழ், Aazhi Soozh - கடல் சூழ்ந்த
இலங்கை, Ilankai - லங்காபுரியானது
மலங்க, Malanga - வியாகுலமாகும்படி
சென்று, Sendru - அங்கெழுந்தருளி
சரங்கள் ஆண்ட, Sarangkal Aanda - அம்புகளை நடத்தின
தண் தாமரை கண்ணனுக்கு அன்றி, Than Thamarai Kannankku Andri - குளிர்ந்த தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையுடையனுமான திருநறையூர் நம்பிக்கல்லது (மற்றொருவர்க்கு)
என் மனம், En Manam - என் மனமானது
தாழ்ந்து நில்லாது, Thazhndhu Nilladhu - நைச்சியம் வஹித்திருக்க மாட்டாது.
1572பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் ஒழியச் செல்லாமை பிறந்து-அது நேர் கொடு நேர் கிடையாமை களவு கண்டு புஜிக்கப் புக்கு-அது தன்னை முடியச் செய்து தலைக் கட்டாமை வாயது கையதாக அகப்பட்டு-உரலோடு சேர்த்து கட்டுண்டு-அடியுண்டு அடிக்கு இறாய்த்து உடம்பு வெளுத்து-பயர்த்து-பேகணித்து நின்ற நிலையை அனுசந்திக்க அனுசந்திக்க இவர்க்கு இவ்விருப்பு தானே யாய்த்து-சர்வ வித போக்யமுமாய் இருக்கிறது – சர்வ ரச-என்கிற படியே இனியதாக நின்றது –இப்படி சர்வ வித போக்யனாய் இருக்கிறவனை ஒழிய என் உடைய நெஞ்சு வேறு சிலரை அநவரத பாவனை பண்ணாது) 5
ஆங்கு வென்னரகத்து அழுந்தும் போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து தங்கு தாமரை யன்ன பொன்னாரடி எம்பிரானை யும்பர்க்கு அணியாய் நின்ற வேங்கடத்தரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட தீங்கரும்பினைத் தேனை நன்பாலினை யன்றி என் மனம் சிந்தை செய்யாதே –7-3-5
பதவுரை Show / Hide
ஆங்கு வெம் நரகத்து, Aangu Vem Narakaththu - அப்படிப்பட்ட கொடிய நரகங்களிலே
அழுந்தும் போது, Azhundhum Podhu - அழுந்தி நோவுபட நேர்ந்தகாலத்து
அங்கே வந்து, Angae Vandhu - அவ்விடங்களில் வந்து
அஞ்சேல் என்று, Anjael Endru - பயப்படவேண்டாவென்று
அடியேனை தாங்கு, Adiyenai Thaangu - அடியேனைப் பாகாத்தருள்கின்ற
தாமரை அன்ன பொன் ஆர் அடி, Thamarai Anna Pon Aar Adi - தாமரைபோன்று அழகு மிக்க திருவடிகளையுடையனும்
எம்பிரானை, Embiraanai - எமக்கு உபகாரகனும்
உம்பர்க்கு அணி ஆய் நின்ற, Umbarkku Ani Aay Nindra - மேலுலகங்கட்கெல்லாம் அலங்காரமாயிருக்கின்ற
வேங்கடத்து, Vengadathu - திருமலையில் எழுந்தருளியிருக்கிற
அரியை, Ariyai - சிங்கம் போன்றவனும்
பரி கீறியை, Pari Keeriyai - குதிரையுருவாய் வந்த அசுரன் வாயைக் கிழிந்தவனும்
வெண்ணெய் உண்டு, Vennai Undu - வெண்ணெயை (க் களவாடி) அமுது செய்து
உரலினிடை, Uralinidai - உரலோடு கூட
ஆப்புண்ட, Aappund - கட்டுண்டிருந்தவனும்
தீம் கரும்பினை, Theem Karumbinai - மதுரமான கருப்பஞ்சாறு போன்றவனும்
தேனை, Thenai - தேன் போன்றவனும்
நன் பாலினை அன்றி, Nan Palinai Andri - இனிய பால்போன்றவனுமான திருநறையூர் நம்பியையல்லது (மற்றொருவரை)
என் மனம், En Manam - எனது நெஞ்சானது
சிந்தை செய்யாது, Sindhai Seyyaadhu - நினைக்கமாட்டாது,
1573பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதுக்கு முன்பு ஒதப் போகாதவன் அபி நிவிஷ்டனாய் ஓதுமா போலே சாந்தீபநீயோடே சாதாரமாக நாலு வேதத்தையும் அப்யசித்த பண்டிதனை – இவ்வதாரத்துக்கு நாற்றங்காலாயக் கொண்டு ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின நீர்மை உடையவனை அல்லது பாடல் செய்யேன்) 6
எட்டனைப் பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ் தட்டலர்த்த பொன்னே யலர் கோங்கின் தாழ் பொழில் திருமால் இரும் சோலை அம் கட்டியைக் கரும்பு ஈன்ற இன் சாற்றைக் காதலால் மறை நான்கு முன்னோதிய பட்டனைப் பரவைத் துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யனே –7-3-6
பதவுரை Show / Hide
எள் தனை பொழுது ஆகிலும், El Thanai Pozhuthu Aagilum - எள்ளத்தனை நொடிப் பொழுதுங் கூட (- (மற்றொருவரையும்))
என் மனத்து அகலாது, En Manathu Akalathu - என் மனத்தைவிட்டுப் பிரியாமல்
என்றும், Endrum - எக்காலத்திலும்
இருக்கும், Irukkum - என் மனக்தே யிருக்கையினாலாகிய
புகழ், Pugazh - கீர்த்தியையுடையவனும்
தட்டு அலர்த்த, Thattu Alarttha - தட்டுப்போலே விகஸிப்பிக்கப்பட்ட
பொன் ஏய் அலர், Pon Aey Alar - பொன் போன்ற அலரை யுடைத்தான
கோங்கின், Kongin - கோங்குமரங்களினுடைய
தாழ் பொழில், Thazh Pozhil - தழைத்த தோப்புகளையுடைய
தருமாலிருஞ் சோலை, Tharumalirunj Cholai - திருமாலிருஞ்சோலையிலெழுந் தருளியிருக்கிற
அம் கட்டியை, Am Kattiyai - மதுரமான கற்கண்டுபோல் போக்யனாயிருப்பவனும்,
கரும்பு ஈன்ற இன் சாற்றை, Karumbu Eendra In Sattrai - கரும்பில் நின்று முண்டான இனிய ரஸம்போன்றவனும்,
முன், Mun - முற்காலத்தில்
காதலால், Kaadhalal - அன்புடனே
மறை நான்கும், Marai Naankum - நால்வேதங்களையும்
ஓதிய, Othiya - (ஸாந்தீபிநி பக்கலில்) அத்யயனம் பண்ணின
பட்டனை, Pattanai - பண்டிதனும்
பரவை, Paravai - (திருப்பாற்) கடலில்
துயில், Thuyil - கண்வளர்ந்தருளினாநின்ற
ஏற்றை, Aetrai - பரமபுரஷனும்
என் பண்பனை அன்றி, En Panbanai Andri - எனக்கு எளியனுமான திருநறையூர் நம்பியைத்தவிர
பாடல் செய்யேன், Paadal Seyyen - பாடமாட்டேன்
1574பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ இந்த்ரியங்களுக்கும் தானே விஷயம் ஆனான் –பெரு விலையனான நீல மணி போலே இருக்கிற நிறத்தை உடையவனை – இந்நிறத்தைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவனுடைய நிறத்தை ஒழிய என்னுடைய வாக் இந்த்ரியம் ஆனது வேறு ஒன்றைப் பேசாது) 7
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள் விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல் வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே –7-3-7
பதவுரை Show / Hide
பண்ணின், Pannin - இராகங்களுக்குள்ளே
இன், In - இனிமையான
மொழி, Mozhi - சொல்லையுடைய
யாழ், Yaazh - வீணையினுடைய
நரம்பில், Narambil - தந்திகளில்
பெற்ற, Petra - உண்டான
பாலை ஆகி, Paalai Aagi - பாலையென்கிற சிறந்த பண் போலே மிக இனியனாய்க் கொண்டு
இங்கே புகுந்து, Inge Pugundhu - என்னெஞ்சில் வந்து புகுந்து
என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான், En Kannum Nenjum Vaayum Idam Kondaaan - எனது அவயவங்களைத் தனக்கு இருப்பிடமாக அங்கீகரித்தான்
கொண்டபின், Kondapin - அப்படி அங்கீகரித்தபின்பு,-
மறையோர், Maraiyore - வைதிகர்களினுடைய
மனம், Manam - மனத்தை
தன் உள், Than Ula - தனது வாஸஸ்தானமாகவுடையவனும்
விண்ணுளார் பெருமானை, Vinnulaar Perumaanai - நித்யஸூரிகளுக்குநாதனும்
எம்மானை, Emmaanai - எனக்கு ஸ்வாமியும்
வீங்கு நீர், Veengu Neer - நிரம்பிய நீரையுடையதாய்
மகரம் திளைக்கும், Makarath Thilaikkum - மீன்கள் துள்ளிவிளையாடா நி்ன்றுள்ளதான
கடல், Kadal - கடல் போன்ற
வண்ணன், Vannaan - திருநிறத்தையுடையவனும்
மா மணி வண்ணன், Maa Mani Vannaan - நீலமணி நிறத்தவனும்
எம் அண்ணல், Em Annal - எமக்கு நாதனமான திருநறையூர் நம்பியீனுடைய
வண்ணமே அன்றி, Vanname Andri - ஸ்வபாவத்தையே யல்லது (மற்றொன்றை)
என் வாய் உரையாது, En Vaai Uraiyaadhu - என் வாய் சொல்லமாட்டாது.
1575பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒன்றும் இன்றிக்கே இருக்கிற என் பக்கலில் தான் ஆசை உடையனாய்-என்னை சர்வாஸ்வாபஹாரம் பண்ணினவனை – நான் அநாதி காலம் பண்ணிப் போந்த ஆத்மாபஹாரத்தை-அரை ஷணத்திலே பண்ணினவனை இன்று-நினைவு இன்றிக்கே இருக்க காணப் பெற்றேன்) 8
இனி எப்பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள் பெற்றமையால் அடும் துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றதோர் தோற்றத் தொன் நெறியை வையம் தொழப் படும் முனியை வானவரால் வணங்கப் படும் முத்தினைப் பத்தர் தாம் நுகர்கின்றதோர் கனியைக் காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே –7-3-8
பதவுரை Show / Hide
இம்மையே, Immaye - இஹலோகத்திலேயே (- (இன்று கண்டுகொண்டேன்-.))
அருள் பெற்றமையால், Arul Pettramaiyaal - எம்பெருமானுடைய திருவருளைப் பெற்றேனாதலால்
இனி, Ini - இனிமேல்
எமக்கு, Emakku - எம்மை
எப் பாவம், Ep Paavam - எவ்விதமான பாவம்
வந்து எய்தும், Vandu Eydhum - வந்து கிட்டக்கூடும்
சொல்வீர், Solveer - சொல்லுங்கள்;
அடும், Adum - ஆத்மஹாநியை விளைக்கிற
துனியை, Thuniyai - கருமங்களை
தீர்த்து, Theerthu - தவிர்த்து
இன்பமே, Inbame - நித்யாநந்தத்தையே
தருகின்றது, Tharugindrathu - தருகின்ற
ஓர் தோற்றம் தொல் நெறியை, Or Thotram Thol Neriyai - ஒப்பற்ற விலக்ஷணமாய் அநாதியான உபாயமாயிருப்பவனும்
வையம், Vaiyam - உலகத்தவர்களால்
தொழப்படும், Thozhapadum - ஆச்ரயிக்கப்படுகின்றவனும்
முனியை, Muniyai - (அவர்களுடைய நன்மைகளைச்) சிந்திப்பவனும்
வானவரால் வணங்கப்படும், Vaanavaral Vanangapadum - நித்யஸூரிகளால் வணங்கப்படுகின்ற
முத்தினை, Muththinai - முத்துப்போன்றவனை
பத்தர் தாம், Pathar Thaam - பக்தர்களால்
நுகர்கின்றது, Nugarkindrathu - உட்கொள்ளப்படுகின்ற
ஓர் கனியை, Or Kaniyai - ஒரு பழம்போன்றவனும்
காதல் செய்து, Kaadhal Seidhu - ஆசையுற்று
என் உள்ளம் கொண்ட, En Ullam Konda - என் நெஞ்சைக் கொள்ளை கொண்ட
கள்வனை, Kalvanai - கள்ளவனுமான பெருமானை
1576பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவனை அல்லது போற்றி என்று என்னுடைய ஹிருதயம் ஆனது மங்களா சாசனம் பண்ணாது – பாழாளாகப் படை பொருதானுக்கு அல்லது என்னுடைய ஹிருதயமானது பல்லாண்டு பாடாது – நித்ய சூரிகள் பெரும் பேற்றைப் பெற்றேன் -சம்சாரியான நான் – பர தந்த்ரனாய் இருக்கையாலே பிரத்யுபகாரம் பண்ணலாவது காண்கிறிலேன் எத்தைச் செய்வேன் சொல்லி கோள்) 9
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கென்றும் என் மனத்தே இருக்கும் புகழ் தஞ்சை ஆளியைப் பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனைத் தழலே புரை விஞ்ச வாள் அரக்கன் நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும் பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை யன்றி என் மனம் போற்றி என்னாதே –7-3-9
பதவுரை Show / Hide
அடியேன், Adiyen - பரதந்திரனான நான்
இதற்கு என் செய்கேன், Idharku En Seigen - (அவன் பண்ணின மஹோபகாரமாகிய) இதற்கு என்ன கைம்மாறு செய்வேன்?
உரையீர், Uraiyeer - சொல்லுங்கள்;
என்றும், Endrum - எக்காலமும்
என் மனத்தே, En Manatthae - என்னுள்ளத்திலேயே
இருக்கும், Irukkum - குடியிருப்பதனாலாகிய
புகழ், Pugazh - கீர்த்தியையுடையவனும்
தஞ்சை ஆளியை, Thanjai Aaliyai - தஞ்சை மாமணிக்கோயிலை ஆள்பவனும்
அன்று, Andru - நரஸிம்ஹாவதாரததில்
பொன் பெயரோன், Pon Peyaron - இரணியனுடைய
நெஞ்சம், Nenjam - மார்பை
இடந்தவனை, Idanthavanai - பிளந்தொழித்தவனும்
தழலே புரை, Thazhale Purai - நெருப்புப் போன்றவனாய்
மின் செய், Min Sei - ஒளிவிடுகின்ற
வாள், Vaal - வாட்படையை யுடையவனான
அரக்கன், Arakkan - இராவணனுடைய
நகர், Nagar - நகரமாகிய இலங்கை
பாழ்பட, Paalpada - பாழாகும்படி
சூழ், Sool - அந்நகரியைச் சூழ்ந்து கொண்டு அகழாயிருந்த
கடல், Kadal - கடலை
சிறை வைத்து, Sirai Vaiththu - அணைகட்டினவனும்
இமையோர் தொழும், Imaiyor Thozhum - தேவர்களால் ஆச்ரயிக்கப்படுமவனும்
பொன் செய் மால் வரையை, Pon Sei Maal Varaiyai - விரும்பத்தக்க பெரிய மலைபோன்றவனும்
மணி குன்றினை அன்றி, Mani Kunrinai Andri - நீலமணிமயமான பர்வதம் போன்றவனுமான திருநறையூர் நம்பியைத் தவிர்த்து (மற்றொருவனை நோக்கி)
என் மனம், En Manam - என் மனமானது
போற்றி என்னாது, Pothri Ennaadhu - மங்களாசாஸநம் பண்ணமாட்டாது.
1577பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி உடையார் இத்தைப் பாடப் பாருங்கோள்-கரும்பு தின்னக் கூலி இறே பாடுகை தானே பிரயோஜனமாக போந்து இருக்க அதுக்கு மேலே பிராப்தி பிரதிபந்தகமான பாபங்கள் நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் இல்லை -என்று தன்னடையே விட்டுப் போம்) 10
தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச் சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –7-3-10
பதவுரை Show / Hide
தோடு, Thodu - இதழ்களானவை
விண்டு, Vindhu - விரிந்து
அலர், Alar - விகஸிக்கப்பெற்ற
பூ பொழில், Poo Pozhil - பூஞ்சோலைகளையுடைய
மங்கையர் தோன்றல், Mangaiyar Thondral - திருமங்கை நாட்டிலுள்ளவர்கட்குத் தலைவரும்
திரு ஆலி நாடன், Thiru Aali Naadan - திருவாலி நாட்டுக்குப் பிரபுவானவரும்
வாள், Vaal - வாளை யுடையவருமான
கலியன் அவன், Kalyan Avan - அத் திருமங்கையாழ்வார்
நல் நறையூர் நின்ற நம்பி தன், Nal Naraiyur Nindra Nambi Than - திருநறையூர் நம்பியினுடைய
நல்ல மா மலர் சே அடி, Nalla Maa Malar Che Adi - அழகிய சிறந்த திருவடித்தாமரைகளை
சென்னியில் சூடியும், Chennaiyil Soodyum - (தமது) தலைமே லணிந்துகொண்டும்
தொழுதும், Thozhudum - வணங்கியும்
எழுந்து, Ezhundhu - எழுந்திருந்து
ஆடியும், Aadiyum - (ப்ரீதிக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடியும்
தொண்டர் கட்கு, Thondar Kadku - பாகவதர்களுக்கு (உஜ்ஜீவனமாக)
சொன்ன, Sonna - அருளிச் செய்த
சொல் மாலை, Sol Maalai - சொல் தொடையாகிய
இவை பத்து பாடல், Ivai Paththu Paadal - இந்தப் பத்துப் பாசுரங்களையும்
தொண்டீர், Thondir - எம்பெருமானடியார்களே!
பாடுமின், Paadumin - நீங்கள் ஓதுங்கள்;
பாட, Paada - அங்ஙனம் ஓதவே
நும்மிடை பாவம் நில்லா, Nummidai Paavam Nilla - உங்களிடத்திற் பாவங்கள் நிற்கமாட்டா.
1578பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருத் துழாய் போலேயும் ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும் உம்முடைய ஸ்பர்சம் நமக்கு இனிதாய் இரா நின்றது – உம்முடைய தலையைக் கொடு வாரும் நம்முடைய காலை வைக்க என்ன இங்கு உமக்கு ஒழியாது வகுத்தவர்கள் காலுக்கு இடம் போரும் இத்தனை) 1
கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர் தம் கோவே என்று விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத் தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே –7-4-1
பதவுரை Show / Hide
கண் சோர, Kan Soora - கண்கள் சுழலமிட்டுத் தளரும்படியாகவும்
வெம் குருதி, Vem Kuruthi - வெவ்விய ரத்தமானது
வந்து இழிய, Vandhu Izhaiya - வெள்ளமிட்டுப் பெருகவுமாய்
மண் சேர, Man Cheera - மாண்டுபோம்படி
வெம் தழல் போல் கூந்தலாளை, Vem Thazhal Pol Koondhalalai - நெருப்புப்போல் செம்பட்ட மயிரையுடையளான பூதனையினுடைய
முலை, Mulai - (விஷங்கலந்த)முலையை
உண்ட, Unda - உறிஞ்சியுண்ட
மா மதலாய், Maa Mathalai - இளம்பிள்ளையே!
வானவர் தம் கோவே, Vaanavar Tham Kove - தேவாதி தேவனே!
என்று, Endru - என்று இவ்வண்ணமாகத் துதிசெய்து
விண் சேரும் இள திங்கள், Vin Serum Ila Thingal - ஆகாயத்தில் திரிகின்ற பாலசந்திரனுடைய
அகடு, Akadu - கீழ்வயிற்றை
உரிஞ்சு, Urinthu - அளாவுகின்ற
மணி மாடம், Mani Maadam - திருமாளிகைகள்
மல்கு, Malku - நிறைந்திருக்கப்பெற்ற
செல்வம், Selvam - வளம் மிக்க
தண், Than - குளிர்ந்த
சேறை, Serai - திருச்சேறையில் எழுந்தருளியிருக்கின்ற
எம்பெருமான், Emperumaan - ஸாரநாதப் பெருமாளுடைய
தாள், Thaal - திருவடிகளை
தொழுவார் காண்மின், Thozhuvaar Kaanmin - வணங்குமவர்கள் தாம்
என் தலை மேலார், En Thalai Meelaar - என் தலைமேல் வீற்றிருக்க வுரியார்.
1579பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய வசந்தமாய் ஸ்ரமஹரமான பொழிலை உடைத்தாய் இருக்கிற ஸ்ரீ திருச் சேறையிலே ஸ்பர்தையாலே ஆகாசத்தைத் தள்ளுகிறாப் போலே இருக்கிற ஸ்ரீ கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனுடைய திருவடிகளைத் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே – நிதித்யாசி தவ்ய-என்கிற விஷயத்துக்குஇடம் காண்கிறிலேன்) 2
அம்புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யகலத்து அமர்ந்து மல்லல் கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம் வம்பலரும் தண்சோலை வண்சேறை வான் உந்து கோயில் மேய எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே –7-4-2
பதவுரை Show / Hide
அம் புருவம், Am Puruvam - அழகிய புருவத்தையும்
அரி நெடு கண், Ari Nedu Kan - செவ்வரி கருவரிபடர்ந்து நீண்ட கண்களையுமுடையளான
அலர் மகளை, Alar Magalai - பெரிய பிராட்டியாரை
வரை அகலத்து, Varai Akalathu - மாலைபோன்ற திருமார்பிலே
அமர்ந்து, Amarnthu - பொருந்தவைத்துள்ளவனும்
மல்லல் கொம்பு, Mallal Kombu - தழைத்த கிளைகளை வடிவமாகவுடைய விளாமரத்திலுள்ள
கனி மேல், Kani Mel - பழத்தின் மேலே
இள கன்று கொண்டு, Ila Kandu Kondu - (அஸுரவடிவாய் வந்த தொரு) சிறு கன்றை(த் தடியாக)க் கொண்டு
எறிந்த, Erintha - வீசியெறிந்த
கூத்தர் ஆம், Koothar Aam - நடையழகுடையவனும்,
வம்பு அலரும் தண் சோலை, Vambu Alarum Than Solai - பரிமளம் வீசுகின்ற குளிர்ந்த சோலைகளையுடைய
வண் சேறை, Van Serai - அழகிய திருச்சேறையிலே
வான் உந்து கோயில் மேய, Vaan Unthu Koyil Meya - ஆகாசத்ததையளாவுகின்ற ஸந்நிதியில் நித்யவாஸம் செய்பவனுமான
எம்பெருமான், Emperumaan - ஸாரநாதப்பெருமாளுடைய
தாள், Thaal - திருவடிகளை
தொழுவார், Thozhuvar - ஸேவிப்பவர்கள்
எப்பொழுதும், Eppozhudum - எந்நாளும்
எம் மனத்தே இருக்கின்றார், Em Manathae Irukkindraar - என்னெஞ்சிலேயே வாஸஞ்செய்கிறார்கள்
1580பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருச் சேறையிலே எழுந்து அருளி இருக்கிறவன் திருவடிகளை ஏத்தி –ஆஸ்ரயிக்கிற பாக்யாதிகரே – சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஆஸ்ரயிக்கிற நித்ய சூரிகளில் சம்ருத்தர் ஆகிறார் – அங்கே இருந்து ஆஸ்ரயிக்கிறவர்கள் இங்கே இருந்தபடியே ஆஸ்ரயிக்கிறவர்களோடே ஒவ்வார் இறே) 3
மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக் காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா என்று நின்று தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப் போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே –7-4-3
பதவுரை Show / Hide
வாள் எயிறு, Vaal Eiyiru - ஒளி பொருந்திய கோரப்பல்லானது
மீது ஓடி, Meethu Odi - மேல் முகமாக வளர்ந்து
மின் இலக, Min Ilaka - மின்னல்போல் விளங்க
முன் விலகும் உருவினாளை, Mun Vilakum Uruvinai - முன்னே வந்து நின்ற உருவத்தை யுடையளான சூர்ப்பணகை யினுடைய
காதோடு, Kaadodu - காதையும்
கொடி மூக்கு, Kodi Mooku - கொடி மூக்கையும்
அன்று, Andru - அப்போது
உடன், Udan - உடனே
அறுத்த, Arutha - அறுத்துவிட்ட
கைத்தலத்தா, Kaithalaththaa - திருக்கையை யுடையவனே!
என்று நின்று, Endru Nindru - என்று நிலைநின்று,-
வண்டு, Vandu - வண்டுகளானவை
தாதோடு, Thadodhu - பூந்தாதுகளிலே
அலம்பும், Alambum - ஆரவாரம் செய்யப்பெற்ற
தண் சேறை, Than Serai - குளிர்ந்த திருச்சேறையிலுள்ள
எம்பெருமான், Emperumaan - ஸாரநாதப்பெருமாளுடைய
தாளை, Thaalai - திருவடிகளை
ஏத்தி, Aethi - துதித்து
போதோடு, Pothodu - புஷ்பங்களையும்
புனல், Punal - தீர்த்தத்தையும்
தூவும், Thuvum - ஸமர்ப்பிக்கிற
புண்ணியர், Punniyar - பாக்கியசாலிகள்
விண்ணவரில், Vinnavaril - நித்யஸூரிகளிற் காட்டிலும்
பொலிகின்றார், Polikindraar - மேம்பாடுடையார்.
1581பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு – அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய-காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன்) 4
தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப் போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும் தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும் பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே –7-4-4
பதவுரை Show / Hide
தேர் ஆளும், Ther Aalum - தேர்களை நடத்தவல்லவனாய்
வாள், Vaal - வாட்படையையுடையனான
அரக்கன், Arakkan - இராவணனுடைய
தென் இலங்கை, Then Ilangai - அழகிய லங்காபுரியை
வெம் சமத்து, Vem Samathu - கொடிய போர்க்களத்தில்
பொன்றி வீழ, Pondri Veela - சிதறியழிந்துபோம்படி
போர் ஆளும் சிலை அதனால், Por Aalum Silai Adhanal - போரை நடத்தவல்ல வில்லினால்
பொரு கணைகள், Poru Kanigal - கொடிய அம்புகளை
போக்குவித்தாய், Pokkuviththai - பிரயோகித்தவனே!
என்று, Endru - என்று சொல்லி,
நாளும், Naalum - நாள்தோறும்
தார் ஆளும் வரை மார்பன், Thar Aalum Varai Marban - மாலையை அணிந்தள்ள மலை போன்ற திருமார்பையுடையவனும்
உம்பர் ஆளும், Umbar Aalum - மேலுலகங்களை ஆள்பவனும்
பேராளன், Peraalan - பெருமை பொருந்தினவனுமான
தண் சேறை எம்பெருமான், Than Serai Emperumaan - திருச்சேறைப் பெருமானுடைய
பேர், Per - திருநாமங்களை
ஓதும், Oodhum - ஓதுகின்ற
பெரியோரை, Periyoorai - மஹாத்மாக்களை
ஒருகாலும், Orukaalum - ஒருபோதும்
பிரிகிலேன், Prikileen - பிரியமாட்டேன்.
1582பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரமஹரமாய் இருக்கிற ஸ்ரீ திருச் சேறையிலே நாயனார் உடைய திருவடிகளை நாள் தோறும் போக ரூபமாக அனுசந்திப்பாருக்கு –என்னுடைய ஹிருதயமானது தேனூறி எப்பொழுதும் இனிதாக நின்றது இது வெருமனேயோ) 5
வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன் முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வருக்கு அல்லால் சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பார்க்கு என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5
பதவுரை Show / Hide
அரி உரு ஆய், Ari Uru Aay - நரஸிம்ஹரூபியாய்
முந்தி சென்று, Mundhi Sendru - முந்துற வெளிப்பட்டு
இரணியன் முரணை, Iraaniyan Muranai - இரணியாசுரனுடைய வலியை
அழித்த, Azhitha - பாழ்படுத்தின
முதல்வற்கு அல்லால், Muthalvarkku Allaal - ஜகத்காரணபூதனான எம்பெருமானுக்கல்லது,
மாசு உடம்பின், Maasu Udambin - அழுக்கேறின உடம்பையுடையராய்
வல், Val - வலிந்து வாது செய்பவர்களான
அமணர் தமக்கும், Amanar Thamakum - ஜைநர்கட்கும்
வந்திக்கும் மற்றவர்க்கும், Vandhikkum Matravarkkum - ‘வந்தே’ என்று சொல்லிக் கொண்டு திரிகிற பௌத்தர்கட்கும்
அல்லேன், Alleen - கூட்டுப்படக் கடவேனல்லேன்;
சந்தம் பூமலர், Sandham Poomalai - சந்தநப் புஷ்பங்களையுடைய
சோலை, Solai - சோலைகளையுடைத்தான
தண் சேறை, Than Serai - குளிர்ந்த திருச்சேறையிலுள்ள
எம்பெருமான், Emperumaan - ஸாரநாதப் பெருமாளுடைய
தாளை, Thaalai - திருவடிகளை
நாளும், Naalum - நாள்தோறும்
சிந்திப்பார்க்கு, Sindhippaarkku - தியானம் செய்யும் பாகவதர்திறத்தில்
என் உள்ளம், En Ullam - என் மனமானது
தேன் ஊறி, Then Oori - அமுதம் சுரக்கப்பெற்று
எப்பொழுதும், Eppozhudum - இடைவிடாது
தித்திக்கும், Thithikkum - திக்திக்கின்றது.
1583பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வண் சேறை எம்பெருமான் அடியாரைக் கண்ட மாத்ரத்திலே –கண்டி கோளே என்னுடைய நெஞ்சும் கண் இணையும் களிக்கிற படி-ஆன பின்பு அத்யவசிக்கையில் ஒரு குறை உண்டோ) 6
பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன் வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு இதுகாணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6
பதவுரை Show / Hide
பண்டு அன்று, Pandhu Andru - முன்பொருகால்
ஏனம் ஆய், Enam Aay - மஹாவராஹரூபியாய்
உலகை, Ulagai - பூமியை
இடந்தா, Idandha - கோட்டாற் குத்தியேடுத்துவந்த
பண்பாளா, Panpaala - குணசாலியே!
என்று நின்று, Endru Nindru - என்று சொல்லி நிலைநின்று
தொண்டு ஆனேன், Thondu Aaneen - (உனது திருவடிகட்கு) அடிமை யானேன்;
திரு அடியே துணை அல்லால், Thiru Adiye Thunai Allaal - (உனது) திருவடிகளே துணை யாவதன்றி
துணை இலேன், Thunai Ileen - வேறு துணையுடையேனல்லேன்;
சொல்லுகின்றேன், Solligindren - இ சத்தியம்;
வண்டு ஏந்தும், Vandu Aenthum - வண்டுகளைத் தரிக்கின்ற
மலர், Malar - பூக்களையுடைய
புறவில், Puravil - தோப்புகளை யுடைத்தான
வண் சேறை, Van Serai - அழகிய திருச்சேறையிலுள்ள
எம்பெருமான், Emperumaan - ஸாரநாதப் பெருமாளுடைய
அடியார் தம்மை, Adiyaar Thammai - பக்தர்களை
கண்டேனுக்கு என் நெஞ்சும், Kandeenukku En Nenjum - ஸேவிக்கப்பெற்ற எனது மனமும்
கண் இணையும், Kan Inaiyum - இரண்டு கண்களும்
களிக்கும் ஆறு, Kalikkum Aaru - களிக்கும் விதம்
இது காணீர், Idhu Kanneer - இதோ பாருங்கள்.
1584பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரமஹரமான திருச் சேறையிலே நிற்கிற ஸ்ரீ நாயனார் உடைய ஸ்லாக்கியமான வடிவு அழகைஅனுசந்தித்தேற்கு – ஸ்ரோத்ராதிகள் ஐந்தாலும் உண்டான வெளிச் சிறப்பை தன் பக்கலிலே ஆக்கிக் கொண்டான் – அது தனக்குத் தான் விஷயம் ஆனான் -என்றபடி – ஐ அறிவும் கொண்டானுக்கு ஆளான அளவிலே நிற்கிறது இல்லை – அவனுக்கு ஆளானார் அளவிலே ஆளாகா நின்றது என் அன்பானது) 7
பை விரியும் வரி யரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும் மை விரியும் மணி வரை போல் மாயவனே என்று என்றும் வண்டார் நீலம் செய் விரியும் தண் சேறை எம்பெருமான் திருவடியைச் சிந்தித்தேற்கு என் ஐ யறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம் என் அன்பு தானே –7-4-7
பதவுரை Show / Hide
படுகடலில், Padukadalil - ஆழ்ந்த திருப்பாற்கடலில்
பை விரியும் வரி அரவில், Pai Viriyum Vari Aravil - விரிந்த படங்களையும் புள்ளிகளையுமுடைய திருவனந்தாழ்வான் மீது
துயில் அமர்ந்த, Thuyil Amarntha - பள்ளிகொண்ட
பண்பா என்றும், Panpaa Endrum - குணசாலியே! என்றும்,
மை விரியும் மணி வரை போல், Mai Viriyum Mani Varai Pol - கருநிறம்மிக்க நீலமணி மயமான மலைபோன்ற (திருமேனியையுடைய)
மாயவனே என்று என்றும், Maayavane Endru Endrum - ஆச்சரியனே! என்று பலகால் சொல்லி,
வண்டு ஆர் நீலம், Vandu Aar Neelam - வண்டுகள் படிந்த கரு நெய்தல்களானவை
செய், Sei - கழனிகளிலே
விரியும், Viriyum - மலரப்பெற்ற
தண் சேறை, Than Serai - குளிர்ந்த திருச்சேறையிலுள்ள
எம்பெருமான், Emperumaan - எம்பெருமானுடைய
திரு அடியை, Thiru Adiyai - திருவடிகளை
சிந்தித்தேற்கு என், Sindhitheerkku En - தியானம் பண்ணாநின்ற என்னுடைய
ஐ அறிவும் கொண்டானுக்கு, Ai Arivum Kondaanaikku - ஐம்புலன்களினறிவையும் தன் விஷயத்திலாக்கிக் கொண்ட அப் பெருமானுக்கு
ஆள் ஆனார்க்கு, Aal Aanarkku - ஆட்பட்ட பாகவதர்களுக்கு
என் அன்பு தான், En Anbu Thaan - என்னுடைய ப்ரீதியானது
ஆள் ஆம், Aal Aam - உரியதாகும்.
1585பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாகவதர்களை நெஞ்சாலே நினைக்க மிருத்யுவால் வரும் பயம் போம் – பாபங்கள் உடைய நலிவால் வரும் பயத்துக்கும் அஞ்ச வேண்டா என்கிறது) 8
உண்ணாது வெங்கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானைப் பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னைக் கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே –7-4-8
பதவுரை Show / Hide
மேலை விண்ணோரும், Melaivinnoram - மேலுலகத்தவர்களான நித்ய ஸூரிகளும்
மண்ணோரும், Mannoram - இம் மண்ணுலகத்திலுள்ளாரும்
வந்து இறைஞ்சும், Vandhu Irainchum - கிட்டி வணங்கும்படியான
மென் தளிர் போல் அடியினானை, Men Thalir Pol Adiyinanae - மெல்லிய தளிர்போன்ற (ஸூகுமாரமான) திருவடிகளை யுடையவனும்
பண் ஆர வண்டு இயம்பும் பை பொழில் சூழ் தண் சேறை அம்மான் தன்னை, Pan Aara Vandu Iyampum Pai Pozhil Soozh Than Saerai Amman Thannai - பண்கள் நிரம்ப வண்டுகள் பாடப்பெற்ற சோலைகளாற் சூழப்பட்ட குளிர்ந்த திருச்சேறையில் எழுந்தருளியிருப்பவனுமான ஸாரநாதப் பெருமானை
கண் ஆர கண்டு, Kan Aara Kandu - கண்கள் நிறையும்படி ஸேவித்து
உருகி, Urugi - மனம் நெகிழ்ந்து
கை ஆர, Kai Aara - கைகளின் ஆசை தீரும்படி
தொழுவாரை, Thozhuvaarai - தொழாநின்ற பாகவதர்களை
கருதுங்கால், Karuthungkaal - சிந்தைசெய்த மாத்திரத்தில்,
வெம், Vem - கொடிதான
கூற்றம், Kootram - யமதேவதையானது
உண்ணாது –, Unnaadhu - நெருங்கமாட்டாது;
ஓவாத பாவங்கள், Ovaadha Paavangal - இடைவிடாத பாவங்களானவை
சேரா, Sera - கிட்டமாட்டா.
1586பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எனக்கு இது தான் உண்டான படி எங்கனே என்கிறார்) 9
கள்ளத்தேன் பொய்யகத்தேன் ஆதலால் போதருகால் கவலை என்னும் வெள்ளத்தேற்கு என் கொலோ விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால் தள்ளத்தேன் மண நாறும் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாறே –7-4-9
பதவுரை Show / Hide
விளை வயலுள், Vilai Vayalul - பயிர்தழைத்த கழனிகளில் (முளைத்திருக்கிற)
கரு நீலம், Karun Neelam - கருநெய்தலை,
களைஞர், Kalaignar - களைபிடுங்குகிற உழவர்
தாளால், Thaalal - (தங்கள்) கால்களாலே
தள்ள, Thalla - ஒதுக்கித்தள்ள,
தேன், Then - (அதில்நின்று மொழுகின) தேனினுடைய
மணம் நாறும், Manam Naarum - பரிமளம் வீசப்பெற்ற
தண் சேறை, Than Serai - திருச்சேறையில் எழுந்தருளியிருக்கின்ற
எம்பெருமான், Emperumaan - ஸாரநாதப் பெருமாளுடைய
தாளை, Thaalai - திருவடிகளை
நாளும், Naalum - நாள்தோறும்
உள்ளத்தே, Ullatthae - நெஞ்சிலே
வைப்பாருக்கு, Vaipparukku - வைத்துச் சிந்தைசெய்கின்ற பாகவதர் விஷயத்தில்
என் உள்ளம் உருகும் ஆறு காணீர், En Ullam Urugum Aaru Kanneer - என்மனம் நீர்ப்பண்டமாக உருகும் விதத்தைப் பாருங்கோள்;
கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதாலால், Kallatthen Poi Agatthen Aathaalal - ஆத்மாபஹாரக்கள்வனும் வஞ்சநெஞ்சையுடையனுமாய் அடியேனிருப்பதால்
போதருகால், Potharugal - ஒரு நொடிப் பொழுதும் இடைவிடாதே
கவரை என்னும் வெள்ளத் தேற்கு, Kavarai Ennum Vellat Therku - துக்கமாகிற பெருங்கடலில் அழுந்திக்கிடந்த எனக்கு
இது என் கொல், Idhu En Kol - இப்படிப்பட்ட பேறு எங்ஙனே உண்டாயிற்றோ?
1587பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார்-ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையைக் கொண்டு-பகவத் விஷயத்தில் ருசி உடையீர் – ஹேய ப்ரத்ய நீகமாய்-தர்ச நீயமாய் இருந்துள்ள திருவடிகளிலே சூட்டுங்கோள்- அது செய்யும் பொது அஞ்சலியைப் பண்ணா நின்ற கையை உடையராய்க் கொண்டு தொழுது இம்மாலையைச் சூட்டுங்கோள்) 10
பூ மாண் சேர் கருங்கழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம் தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான் தன்னை வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை தொண்டீர் தூ மாண் சேர் பொன்னடி மேல் சூட்டுமின் நும் துணைக் கையால் தொழுது நின்றே –7-4-10
பதவுரை Show / Hide
அன்னம், Annam - அன்னப்பறவைகள்
வயல் நின்ற பெடையோடு, Vayal Nindra Pedaiyodu - கழனிகளில் திரிகிற பேடைகளோடு கூட,
பூ மாண் சேர் கரு குழலார் போல் நடந்து, Poo Maan Ser Karu Kuzhalar Pol Nadandhu - பூக்களணிந்து அழகு பெற்ற கறுத்த கூந்தலை யுடைய இளம் பெண்களைப்போல நடந்து (பின்பு)
தே மாவின், The Maavin - தேன் மாமரத்தினுடைய
இன் நிழலில், In Nizhalil - இனிமையான நிழலில்
கண் துயிலும், Kan Thuyilum - கண்ணுறங்கப்பெற்ற
தண் சேறை, Than Serai - திருச்சேறையி லெழுந்தருளி யிருக்கிற
அம்மான் தன்னை, Ammaan Thannai - எம்பெருமான் விஷயமாக,-
வாம்மான் தேர், Vaammaan Ther - ஓடிவருகின்ற குதிரைகள் பூண்ட தேரையுடையரான
பரகாலன் கலிகன்றி, Parakalan Kalikanri - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச் செய்த
மாலை கொண்டு, Maalai Kondu - இச் சொல்மாலைகளைக் கொண்டு
தொண்டீர், Thondir - ஓ பக்தர்களே!,
தூ, Thoo - பரிசுத்தமாய்
மாண் சேர், Maan Ser - மாட்சிமை தங்கியதாய்
பொன், Pon - விரும்பத்தக்கதான
அடிமேல், Adimael - (அப்பெருமானது) திருவடிகளின் மேல்
நும் துணை கையால், Num Thunai Kaiyal - உங்களுடைய அஞ்ஜலிபந்தமான கைகளினால்
தொழுது நின்று, Thozhudhu Nindru - ஸேவித்திருந்து
சூட்டுமின், Sootumin - சூட்டுங்கோள்.
1588பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராப்ய பூதனான அவன் வந்து நிற்கையாலே நமக்கு பிராப்ய பூமி தான் போலே இருந்தது என்று ஆதர அதிசயம் தோற்ற சொல்லுகிறது) 1
தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நல்லிருள் கண் வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும் முந்தி வானம் மழை பொழியும் மூவா வுருவில் மறையாளர் அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1
பதவுரை Show / Hide
வானம், Vaanam - மேகமானது
முந்தி, Mundhi - (யாகஞ் செய்வதற்கு) முன்னமே
மழை பொழிய, Mazhai Pozhiya - மழை பெய்யப்பெற்றதும்,
மூவா உருவின், Moova Uruvin - கிழத்தனமற்ற உருவத்தை யுடையரான
மறையாளர், Maraiyalar - பிராமணர்கள்
அந்திமூன்றும், Andhimoonrum - முச்சந்தியும்
அனல் ஓம்பும், Anal Oombum - அக்நிஹோத்ரம் செய்யப்பெற்றதுமான
அணி ஆர் வீதி, Ani Ar Veethi - அழகுமிக்க திருவீதிகளை யுடைய
அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரென்னுந் திருப்பதியானது,-
தந்தை, Thandhai - தகப்பனாராகிய வஸுதேவருடைய
காலில், Kaali - காலிலே (பூட்டப்பட்டிருந்த)
பெரு விலங்கு தாள் அவிழ, Peru Vilangu Thaal Avizha - பெரிய விலங்குப்பூட்டு இற்றுவிழும்படியாக
நள் இருள் கண், Nal Irul Kan - நடுநிசியிலே
வந்த, Vandha - திருவவதரித்த
எந்தை பெருமானார், Endhai Perumaanar - எம்பெருமான்
மருவி நின்ற, Maruvi Nindra - நித்யவாஸஞ் செய்யப்பெற்ற
ஊர்போலும், Oorpolum - திவ்யதேசமாகும்.
1589பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாரத சமரத்திலே பீஷ்மாதிகள் -அதி ரதர் மகா ரதர் -என்று இங்கனே ஆண் பிள்ளைகளாகப் பேர் பெற்று ஜீவித்து இருந்தோம் இப்போதாக பூசல் கோழைகளாக ஒண்ணாது -என்று சாரதி பக்கலிலே வந்து கிட்டுவது தேர் காலில் உழக்குண்டு போக ஒண்ணாது -என்று அகலுவதாய்க் கொண்டு அவர்கள் படுவுற்றை படா நின்றன வாய்த்துக் குருகு இனங்களும்) 2
பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாளப் பாரதத்துத் தேரில் பாகனாயூர்ந்த தேவ தேவனூர் போலும் நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சிப் போன குருகினங்கள் ஆரல் கவுளோடு அருகு அணையும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-2
பதவுரை Show / Hide
நீரில் பனைத்த, Neeril Panaitta - தண்ணீரில் செழித்து வளர்ந்த
நெடு வாளைக்கு, Nedu Valaikku - பெரிய மீன்களுக்கு
அஞ்சி போன, Anji Pona - பயப்பட்டு ஓடிப்போன
குருகு இனங்கள், Kurugu Inangal - குருகு என்னும் பறவைக் கணங்கள்
ஆரல், Aaral - ஆரல் என்னஞ் சிறுமீனை
கவுளோடு, Kavulodu - கதுப்பிலேகொண்டு
அருகு அணையும், Arugu Anaiyum - பின்னையும் அணுகி வந்து சேரப்பெற்ற
அணி ஆர் வயல் சூழ் அழுந்தூர், Ani Aar Vayal Soozh Azhundoor - அழகுமிக்க கழனிகளால் சூழப்பட்ட திருவழுந்தூரானது,-
பாரித்து எழுந்த, Pariththu Ezhundha - (வெற்றி பெறவேணுமென்று) ஊக்கங்கொண்டு கிளர்ந்த
படை மன்னர் தம்மை  மாள, Padai Mannar Thammai Maala - ஆயுதபாணிகளான அரசர்கள் முடியும்படி
பாரதத்து, Bharathaththu - பாரதப் போரில்
தேரில், Theril - (அர்ஜுநனுடைய) தேரிலே
பாகன் ஆய் ஊர்ந்து, Bhagan Aayi Oorndhu - ஸாரதியாயிருந்து கொண்டு நடத்தின
தேவ தேவன், Deva Devan - வோதிதேவனுடைய
ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும்.
1590பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இந்த்ராதிகள் உடைய வஜ்ரத்துக்கு அழியாத பையல் தலைகளை மனிச்சுக்கு ஏகாந்தமான மிடுக்காலே அழித்தான் ஆய்த்து) 3
செம்பொன் மதிள் சூழ் தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும் உம்பர் வாளிக்கு இலக்காக வுதிர்த்த வுரவோனூர் போலும் கொம்பிலார்ந்த மாதவி மேல் கோதி மேய்ந்த வண்டினங்கள் அம்பராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே –7-5-3
பதவுரை Show / Hide
கொம்பில் ஆர்ந்த, Kombil Aarntha - கிளைகளினால் நிறைந்திருக்கிற
மாதவி மேல், Maadhavi Mel - குருக்கத்தி மரத்தின் மேலே
கோதி, Kothi - (தளிர்களைக்) கீறி
மேய்ந்த, Meyndha - மதுபானம் பண்ணின
வண்டு இனங்கள், Vandu Inangal - வண்டுத்திரள்கள்
அம்பு அராவும் கண்மடவார், Ambu Aravum Kanmadavaar - அம்புபோன்ற கண்களை உடையரான மாதர்களினுடைய
ஐம்பால், Aimpal - கூந்தலின் மீது
அணையும், Anaiyum - வந்துசேரப் பெற்ற
அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூர்,-
செம் பொன் மதில் சூழ், Sem Pon Mathil Soozh - செம்பொன் மயமான மதில்களாலே சூழப்பட்ட
தென் இலங்கைக்கு, Then Ilangaiyku - தென்னிலங்காபுரிக்கு
இறைவன், Iraivan - நாயகனான இராவணனது
சிரங்கள் ஐ இரண்டும், Siralgal Ai Irandum - பத்து தலைகளையும்
உம்பர்வாளிக்கு, Umbarvaaliku - ப்ரஹ்மாஸ்திரத்திற்கு
இலக்கு ஆக, Ilakku Aaga - வக்ஷியமாக்கி
உதிர்த்த, Uthirtha - அறுத்தொழித்த
உரவோன், Uravon - பொருமிடுக்கனான பெருமானுடைய
ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும்.
1591பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேறு என்றால் இறாய்க்கக் கடவ வவை-அங்கு உள்ள போக்யதையின் மிகுதியாலே அத்தை மதியாதே சஞ்சரியா நிற்கும்-இத்தால் சொல்லிற்று ஆய்த்து-பிரளயம் என்று பாராதே ஜகத் ரஷணத்துக்காக ஸ்ரீ மகா வராஹம் ஆனது இறங்குமா போலே இரா நின்றது ஆய்த்து) 4
வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி யடியேன் மனம் புகுந்து என் உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற ஊர் போலும் புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடித் போன காதல் பெடையோடும் அள்ளல் செறுவில் கயல் நாடு மணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-4
பதவுரை Show / Hide
காதல் பெடையோடும், Kaadhal Pedaiyodum - அன்பார்ந்த பேடையொடு கூடி (- (அணி ஆர் வயல் சூழ் அழுந்தூர்-;))
பிள்ளைக்கு இரை தேடி போன, Pillaiyku Irai Thedi Pona - குட்டிக்காக இரைதேடிக் கொண்டு சென்ற
புள்ளு, Pullu - பறவையானது
அள்ளல் செறுவில், Allal Seruvil - சேறு மிக்க விளை நிலங்களிலே
கயல், Kayal - மீன்கள்
நாடும், Naadum - தேடப்பெற்ற
வெள்ளத்துள், Vellathul - பிரளய வெள்ளம் நேர்ந்த காலத்தில்
ஓர் ஆல் இலை மேல் மேவி, Oor Aal Ilai Mel Mevi - ஒப்பற்றவொரு ஆலந்தளிரின் மீது பொருந்தியிருந்து
அடியேன் மனம் புகுந்து, Adiyein Manam Pugundhu - (அந்த நிலைமையுடனே) அடியேனது நெஞ்சினுட புகுந்து
என் உள்ளத் துள்ளும், En Ullath Thullum - எனது அந்த நெஞ்சினுள்ளும்
கண்ணுள்ளும், Kannullum - கண்களிணுள்ளும்
நின்றார், Nindraar - நிலைத்து நின்ற பெருமான்
நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணுகிற
ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும்.
1592பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜகதாகாரனானவன் அசாதாரண விக்ரஹத்தைக் கண்டு அனுபவிக்கலாம் படி வந்து நிற்கிற ஊர் போலும்) 5
பகலும் இரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய் நிகரில் சுடராய் இருளாகி நின்றார் நின்ற ஊர் போலும் துகிலின் கொடியும் தேர்த் துகளும் துன்னி மாதர் கூந்தல் வாய் அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-5
பதவுரை Show / Hide
துகிலின் கொடியும், Thugilin Kodiyum - துணிகளோடு கூடின துவஜங்களும் (- (அழுந்தூர்-;))
தேர் துகளும், Ther Thughalum - தேர் நடத்தும் போது உண்டாகும் தூள்களும்
துன்னி, Thunni - நெருங்கி
மாதர், Maathar - ஸ்திரீகளுடைய
கூந்தல், Koondhal - கூந்தலிலே (ஊட்டப்பட்ட)
அகிலின் புகையால், Akilin Pugaiyaal - அகிற்புகையுமாகிய இவற்றால்
முகில் ஏய்க்கும், Mugil Aiykkum - வர்ஷகாலத்தை ஒத்திருக்கின்ற
அணி ஆர் வீதி, Ani Ar Veethi - அழகிய திருவீதிகளை யுடைத்தான
பகலும் இரவும் தானே ஆய், Pagalum Iravum Thaaney Aay - பகற்போதுக்கும் இராப் போதுக்கம் நியாமகனாய்
பாரும் விண்ணும் தானே ஆய், Paarum Vinnum Thaaney Aay - லீலா விபூதிக்கும் நித்ய வீபூதிக்கும் நியாமகனாய்
நிகர் இல் சுடர் ஆய், Nikar Il Sudar Aay - ஒப்பில்லாத தேஜஸ் பதார்த்தங்களுக்கும் ப்ரகாரியாய்
இருள் ஆயி நின்றார், Irul Aayi Nindraar - இருளையும் ப்ரகாரமாக வுடையரான பெருமாள்
நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணப்பெற்ற
ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும்.
1593பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னைப் பெறுகையால் வந்த அலாப்ய லாபம்தன்னது என்னும் இடம் தோற்ற ஸ்மிதம் பண்ணி – தான் செய்தது விலக்காத படியான தசையை எனக்கு பிறப்பித்து-என் அருகே வந்து நின்று அது சாத்மித்தவாறே ஹிருதயத்திலே வந்து புகுந்து இனி இவருக்கு ஒரு போக்கு இல்லை என்று தோற்ற நிற்கிறவர்) 6
ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும் நீடு மாடத் தனிச் சூலம் போழ்கக் கொண்டல் துளி தூவ ஆடல் அரவத் தார்ப்போவா அணியூர் வீதி அழுந்தூரே –7-5-6
பதவுரை Show / Hide
நீடு மாடம், Needu Maadam - (நாட்டப்பட்ட) உயர்ந்த மாடங்களில் (- (அணி ஆர் வீதி அழுந்தூர்))
தனி சூலம், Thani Soolem - ஒப்பற்ற சூலமானது
போழ்க, Pozhga - (மேகத்தின் வயிற்றைக்) கீண்ட வளவிலே
கொண்டல், Kondhal - மேகமானது
துளி தூவ, Thuli Thoova - மழை பொழியப் பெற்றதும்
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா, Aadal Aravathu Aarppu Ovaa - கூத்தாட்டவொலிகளினாலுண்டான கோலாஹலம் ஓயாமலிருக்கப்பெற்றதுமான
ஏடு இலங்கு தாமரை போல், Aedu Ilangu Thaamarai Pol - இதழ்விளங்குகின்ற தாமரைப்பூ மலர்ந்தாலொப்ப
செம் வாய் முறுவல் செய்தருளி, Sem Vaai Muruvai Seitharuliy - சிவந்த திருப்பவளத்தினால் புன்முறுவல் செய்துகொண்டு
மாடு வந்து, Maadu Vandu - என் பக்கலிலே வந்து
என்மனம் புகுந்து நின்றார், Enmanam Pugundhu Nindrar - என்மனத்திலே புகுந்து நின்றபெருமாள்
நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணப்பெற்ற
ஊர் போலும், Oor Polum - திவ்ய தேசமாகும்.
1594பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரிவை பிரசங்கித்து-என்னுடைய கண்ணும் கண்ணீருமான ஆற்றாமையைக் கண்டு பின்னை கால் வாங்கிப் போக மாட்டாதே நின்றவர் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் போலும்) 7
மாலைப் புகுந்து மலரணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என் நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும் வேலைக் கடல்போல் நெடு வீதி விண்டோய் சுதை வெண் மணி மாடத்து ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே –7-5-7
பதவுரை Show / Hide
வேலை கடல் போல, Velaikadal Pola - கரையையுடைய ஸமுத்ரம் போல (- (அழுந்தூர்-;) (பின்பு பிரிவதாக பிரஸங்கித்து))
நெடு, Nedu - நீண்டிருக்கின்ற
வீதி, Veethi - வீதிகளிலுண்டான
விண் தோய், Vin Thoy - ஆகாசத்தளவு மோங்கியிருக்கிற
சுதை வெண்மணி மாடத்து, Suthai Venmani Maadathu - சாந்திட்டு வெளுத்திருக்கின்ற திருமாளிகைகளின் மேல்
அழல் கதிரை, Azhai Kathirai - ஸூர்யகிரணங்களை
ஆலைப் புகையால், Aalaip Pugaiyal - ஆலையாடிக்கிளர்ந்த புகையினால்
மறைக்கும், Maraikkum - மறைக்கப்பெற்ற
வீதி, Veethi - தெருக்களையுடைத்தான
மாலை புகுந்து, Maalai Pugundhu - மாலைப்பொழுதிலே வந்து
மலர் அணை மேல் வைகி, Malar Anai Mel Vaiki - பூம்படுக்கையில் தங்கியிருந்து
அடியேன் மனம் புகுந்து, Adiyein Manam Pugundhu - அடியேனுடைய மனத்திற் பிரவேசித்து
என் நீலம் கண்கள், En Neelam Kangal - எனது நீலோற்பலம் போன்ற கண்கள்
பனி மல்க, Pani Malka - நீர் தளும்பும்படி
நின்றார், Nindraar - நின்று கொண்டிருந்தவர்
நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணுகிற
ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும்
1595பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இன்ன பரிமாற்றம் பெற்றிலோம் -என்கிற அத்ருப்தி நெஞ்சில் கிடவாதபடி யாக வாய்த்து நெஞ்சிலே குறைவறப் புகுந்து நின்றபடி) 8
வஞ்சி மருங்கிலிடை நோவ மணந்து நின்ற கனவகத்து என் நெஞ்சு நிறையக் கை கூப்பி நின்றார் நின்ற ஊர் போலும் பஞ்சியன்ன மெல்லடி நற்பாவை மார்கள் ஆடகத்தின் அஞ்சிலம்பின் ஆர்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே –7-5-8
பதவுரை Show / Hide
பஞ்சி அன்ன மெல் அடி, Panjai Anna Mel Adi - பஞ்சுபோன்ற மிருதுவான பாதங்களையுடைய (- (அணி ஆர் வீதி அழுந்தூர்-))
நல் பாவைமார்கள், Nal Paavaimargal - நல்ல ஸ்திரீகளினுடைய
ஆடகத்தின் அம் சிலம்பின், Aadakathin Am Silampin - பொன்மயமான அழகிய சிலம்புகளினின்று முண்டான
ஆர்ப்பு, Aarppu - ஆரவாரமானது
ஓவா, Ovaa - இடைவிடாதிருக்கிற
வஞ்சி, Vanjci - வஞ்சிக்கொடிபோன்ற
மருங்குல் இடை, Marungul Idai - இடுப்பானது
நோவ, Nova - நோகும்படியாக
மணந்து நின்ற, Manandhu Nindra - ஸம்ச்சேஷித்து நின்ற
கனவகத்து, Kanavakathu - கனவிலே
என் நெஞ்சு நிறையா, En Nenju Niraiyaa - எனது நெஞ்சு நிறையுமாறு
கை கூப்பி, Kai Koopi - நான அஞ்ஜலி செய்யப்பெற்று
நின்றார், Nindraar - நின்று கொண்டிருந்தவர்
நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணுகிற
ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும்.
1596பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தலையில் உள்ளதை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணி தன் பக்கல் உள்ளது ஒன்றும் தொங்காத படி பண்ணிப் போந்த சுத்தியை உடையவர் வர்த்திக்கிற தேசம் போலும்) 9
என் ஐம் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளிப் பொன்னங்கலைகள் மெலிவெய்தப் போன புனிதரூர் போலும் மன்னு முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-9
பதவுரை Show / Hide
மன்னு முது நீர், Mannu Muthu Neer - ஒருநாளும் தண்ணீர் வற்றாத ஆழ்ந்த நீர் நிலைகளிலுள்ள தாமரைப்பூக்களிலே (- (அந்த இசைப்பாட்டுக்குச் சேர) (அணி ஆர் வயல் சூழ் அழுந்தூர்-,))
அரவிந்தம் மலர் மேல், Aravindham Malar Mel - தாமரைப்பூக்களிலே
வரி வண்டு, Vari Vandu - வரி வண்டுகள்
இசை பாட, Isai Paada - இசைகளைப் பாடா நிற்க
அன்னம், Annam - அன்னப்பறவை
பொடை யோடும், Podai Yodum - தன் பேடையோடுகூட
ஆடும், Aadum - நர்த்தனம் பண்ணப்பெற்ற
இங்கே, Inge - நானிருக்குமிடத்து
எழுந்நருளி, Ezhunnaruli - எழுந்தருளி
என் ஐம்புலனும், En Aimpulanum - எனது பஞ்சேந்திரய அறிவையும்
எழிலும், Ezhilum - அழகையும்
கொண்டு, Kondhu - கொள்ளைகொண்டு
பொன் அம் கலைகள், Pon Am Kalaigal - மிக அழகிய (எனது) வஸ்திரங்கள்
மெலிவு எய்த, Melivu Eytha - தளரும்படியாகச் செய்து
போன, Pona - பிரிந்துபோன
புனிதர், Punithar - பரமபவித்திரருடைய
ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும்.
1597பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சொல்களால் சம்ருத்தமாய் உள்ள தமிழ் தொடையை வாயாலே சொல்ல – பாவத்தை உண்டாக்குவதானாலும் தவிர ஒண்ணாததைச் சொல்ல பாவங்கள் தன்னடையே போம்) 10
நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன் சொல்லில் பொதிந்த தமிழ் மாலை சொல்லப் பாவம் நில்லாதே –7-5-10
பதவுரை Show / Hide
நெல்லில், Nellil - நெற்பயிரினிடையே (முளைத்த)
குவளை, Kuvazhai - கருநெய்தற் பூக்கள்
கண் காட்ட, Kan Kaatta - (அவ்வூர் பெண்களது) கண்கள் போன்றுவிளங்கவும்
நீரில், Neeril - நீரிலே முளைத்த
குமுதம், Kumudham - ஆமபல் பூக்கள்
வாய் காட்ட, Vaai Kaatta - (அவர்களது) வாய் போன்று விளங்கவும்
அல்லி கமலம், Alli Kamalam - இதழ்மிக்க தாமரைப் பூக்கள்
முகம் காட்டும், Mugam Kaatum - (அவர்களது) முகம்போன்று விளங்கவும் பெற்ற
கழனி, Kazhani - கழனிகளையுடைய
அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரிலே
நின்றானை, Nindraanai - எழுந்தருளியிருக்கு மெம்பிரான் விஷயமாக.-
வல்லி பொதும்பில், Valli Pothumbil - பூங்கொடிகள் மிக்க முழஞ்சுகளிலே
குயில் கூவும், Kuyil Koovum - குயில்கள் கூவப்பெற்ற
மங்கை, Mangai - திருமங்கை நாட்டுக்கு
வேந்தன், Vendan - தலைவரான
பரகாலன், Parakalan - ஆழ்வார் (அருளிச்செய்த)
சொல்லில் பொலிந்த, Sollil Polintha - நல்ல சொற்களினால் விளங்குகின்ற
தமிழ் மாலை, Tamil Maalai - இத்தமிழ்ப் பாசுரங்களை
சொல்ல, Solla - ஓதவே
பாவம், Paavam - பாவங்கள்
நில்லா, Nilla - இல்லையாய் விடும்.
1598பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவ் ஊரில் உள்ளார் உடைய ஜன்மமும் இன்றிக்கே ஸ்ரீ பிரகலதான் உடைய படியும் இன்றிக்கே இருக்கிற நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்) 1
சிங்கமதாய் அவுணன் திரளாகம் முன் கீண்டுகந்த சங்கமிடத்தானைத் தழலாழி வலத்தானைச் செங்கமலத் தயனனை பார் தென் அழுந்தையில் மன்னி நின்ற அங்கமலக் கண்ணனை யடியேன் கண்டு கொண்டேனே –7-6-1
பதவுரை Show / Hide
முன், Mun - முன்னொருகால்,
சிங்கம் அது ஆய், Singam Adhu Aai - நரசிம்ஹ ரூபியாய்க்கொண்டு
அவுணன், Avunan - இரணியாசுரனுடைய
திறல் ஆகம், Thiral Aagam - வலிமிக்க மார்வை
கீண்டு, Keendu - இருபிளவாக்கி
உகந்த, Ugantha - திருவுள்ளமுவந்தவனும்
சங்கம் இடத்தானை, Sangam Idaththaanai - சங்கை இடத்திருக்கையிலுடையவனும்
தழல் ஆழி வலத்தானை, Thazhal Aazhi Valaththaanai - தீக்ஷ்ணமான திருவாழியை வலத்திருக்கையிலுடையவனும்
செம் கமலத்து அயன் அனையார், Sem Kamalaththu Ayan Anaiyaar - செவ்விய (திருநாயிக்) கமலத்திற் பறந்த பிரமனைப்போன்ற  பிராமணர்கள் (வாழ்கிற)
தென் அழுந்தையில் மன்னி நின்ற, Then Azhundhaiyil Manni Nindra - அழகிய திருவழுந்தூரிலே நித்யவாஸம் செய்பவனும்
அம் கமலம் கண்ணனை, Am Kamalam Kannanai - அழகிய தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையனுமான ஆமருவியப்பனை
அடியேன் கண்டு கொண்டேன், Adiyen Kandu Konden - அடியேன் ஸேவிக்கப்பெற்றேன்.
1599பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அசாதாரண பரிகரத்துக்கு ஐயோ என்று கிருபையைப் பண்ணி ஸ்ரீ திரு வழுந்தூரிலே வந்து நிற்கிற அயர்வறும் அமரர்கள் அதிபதியை-நான் கண்ணாலே காணப் பெற்று ஷோபம் அடையத் தீர்ந்து களிக்கப் பெற்றேன்) 2
கோவானார் மடியக் கொலையார் மழுக் கொண்டு அருளும் மூவா வானவனை முழு நீர் வண்ணனை யடியார்க்கு ஆவா வென்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற தேவாதி தேவனை யான் கண்டு கொண்டு திளைத்தேனே –7-6-2
பதவுரை Show / Hide
கோ ஆனார், Ko Aanaar - க்ஷத்ரியர்களென்று பேர் பெற்றவரடங்கலும் (- (தென் அழுந்தையில் மன்னி நின்ற -;))
மடிய, Madiya - மடிந்தொழியும்படி
கொலை ஆர் மழு, Kolai Aar Mazhu - கொலைத்தொழில் வல்ல மழுப்படையை
கொண்டருளும், Kondarulum - (திருக்கையில்) ஏந்தியுள்ளவனும்
மூவா வானவனை, Moova Vaanavanai - கிழத்தனம் முதலிய விகாரங்களில்லாத தேவாதி தேவனும்
முழுநீர் வண்ணனை, Muzhunir Vannnai - கடல்போன்ற திருநிறத்தை யுடையவனும்
அடியார்க்கு, Adiyarkku - அடியார் விஷயத்திலே
ஆ ஆ என்று இரங்கி, Aa Aa Endru Irangi - ஐயோவென்று கிருபை பண்ணி
தேவாதி தேவனை, Devaadhi Devanai - தேவர்கட்கும் சிறந்த தேவனுமான பெருமானை
யான் கண்டு கொண்டு, Yaan Kandu Kondo - அடியேன் ஸேவித்து
திளைத்தேன், Thilaiththen - களிக்கப்பெற்றென்.
1600பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய விபூதி உக்தனான சம்பத்துக்கு மேலே ஓன்று காணும் –ஸ்ரீ திரு வழுந்தூருக்கு கடவன் ஆனது – அநந்ய கதியான நான் கிட்டப் பெற்று –அசந்நேவ -என்னும் நிலை தவிர்ந்து –உஜ்ஜீவித்து –க்ருதார்த்தனாகப் பெற்றேன்) 3
உடையானை யொலி நீர் உலகங்கள் படைத்தானை விடையானோடே அன்று விறலாழி விசைத்தானை அடையார் தென்னிலங்கை அழித்தானை யணி யழுந்தூர் உடையானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –7-6-3
பதவுரை Show / Hide
உடையானை, Udaiyanai - ஸர்வஸ்வாமியானவனும் (- (அடியேன் அடைந்து-;-))
ஒலி நீர் உலகங்கள் படைத்தானை, Oli Neer Ulagangal Padaiththaanai - கடல் சூழ்ந்த உலகங்களைப் படைத்தவனும்
அன்று, Andru - பாணாஸுர யுத்தத்தினன்று
விடையான் ஓட, Vidaiyaan Oda - பரமசிவன் தோற்று ஓடும்படி
விறல் ஆழி, Virhal Aazhi - வலிமிக்க திருவாழியை
விசைத்தானை, Visaiththaanai - வேகமாகப் பிரயோகித்தவனும்
அடையார் தென் இலங்கை அழித்தானை, Adaiyaar Then Ilangai Azhiththaanai - பகைவர் நிறைந்திருக்கிற தென்னிலங்கையை அழியச்செய்தவனும்
அணி அழுந்தூர் உடையானை, Ani Azhundhoor Udaiyanai - அழகிய திருவழுந்தூரை இருப்பிடமாக வுடையனுமான பெருமானை
உய்ந்து போனேன், Uyinthu Poneen - உஜ்ஜீவித்து விட்டேன்.
1601பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அன்று பசுவின் நெய்யை அமர்ந்து அமுது செய்த ஸ்ரீ திரு வழுந்தூர் நின்றானை- ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே நின்ற படி யாய்த்து இங்கு நிற்பது – கண்ணாலே காணப் பெற்று அபூர்ணனான நான் பூர்ணனாகப் பெற்றேன்) 4
குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போர் ஏற்றை அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ண வணி யழுந்தூர் நின்றானை யடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே –7-6-4
பதவுரை Show / Hide
குன்றால், Kundraal - கோவர்த்தந கிரியைக்கொண்டு (- (அடியேன் கண்டுகொண்ட-;))
மாரி, Maari - பெருமழையை
தடுத்தவனை, Thaduthavanai - தடை செய்தவனும்
குலம் வேழம், Kulam Vezham - சிறந்தகுலத்துப் பிறந்த கஜேந்திராழ்வான்
பொன்றாமை, Pondraamai - (முதலைவாய்ப்பட்டு) முடிந்து போகாமல்
அன்று, Andru - அக்காலத்து
அதனுக்கு அருள்செய்த, Adhanukku Arulcheytha - அதற்கு அருள்புரிந்தவனும்
போர் ஏற்றை, Por Aetrai - போர் செய்யவல்ல காளை போன்றவனும்
ஆவின் நறு நெய், Aavin Naru Ney - பசுவின மண நெய்யை
அமர்ந்து உண்ண, Amarnthu Unna - விரும்பியமுதுசெய்ய
அன்று, Andru - அன்றேபிடித்து
அணி அழுந்தூர் நின்றானை, Ani Azhundoor Nindraanai - அழகிய திருவழுந்தூரில் நிற்பவனமான பெருமானை
நிறைந்தேன், Niraindhen - குறையற்றவனானேன்.
1602பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரமஹரமான வடிவை உடையனாய்க் கொண்டு தாபத்ரயம் போம் படி நின்றவனை தாபத் த்ரயத்தாலும் தப்தனாய் இருக்கிற நான் கண்டு என்னுடைய தாபத்ரயங்கள் தீரப் பெற்றேன்) 5
கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ண மங்கையுள் நின்றானை வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்து உண்டானைச் செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற அஞ்சனக் குன்றன் தன்னை அடியேன் கண்டு கொண்டேனே –7-6-5
பதவுரை Show / Hide
கஞ்சனை, Kanjanai - கம்ஸனை (- (தென் அழுந்தையில் மன்னி நின்ற -;) (அடியேன் கண்டுகொண்டேன்-))
காய்ந்தானை, Kaindhaanai - சீறித் தொலைத்தவனும்
கண்ண மங்கையுள் நின்றானை, Kanna Mangaiyul Nindraanai - திருக்கணணமங்கையில் நிற்பவனும்
வஞ்சனம், Vanjanam - வஞ்சனையையுடையளான
பேய், Pei - பேய்ச்சியினுடைய
முலையூடு, Mulaiyoodhu - முலைவழியே
வாய் மடுத்து, Vaai Maduthu - வாய் வைத்து
உயிர், Uyir - (அவளது) பிராணனை
உண்டானை, Undhaanai - அபஹரித்தவனும்,
செம் சொல் நால் மறையோர், Sem Sol Naal Maraiyore - அழகிய சொற்கள் நிறைந்த நான்குவேதங்களையும் வல்ல வைதிகர்கள் வாழ்கிற
அஞ்சனம் குன்றம் தன்னை, Anjanam Kuntram Thannai - மைமலைபோன்ற வடிவழகையுடையவனுமான பெருமானை
1603பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு அழுந்தூரில் உண்டான பிராமணர் ஆனவர்கள் திருவடிகளில் ஆஸ்ரயிக்கும் படியாக நிற்கிற ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –அனந்யார்ஹனான நான் கண்டு கொண்டு களிக்கப் பெற்றேன்) 6
பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும் உரியானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும் கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே –7-6-6
பதவுரை Show / Hide
பெரியானை, Periyaanai - எல்லாசிலும் மேம்பட்டவனும் (- (அடியேன் கண்டுகொண்டு களித்தேன்-.))
அமரர் தலைவற்கும், Amarar Thalaivarkkum - தேவேந்திரனுக்கும்
பிரமனக்கும், Brahmanakkum - ப்ரஹ்மாவுக்கும்
யானை உரி உகந்தானவனுக்கும், Yaanai Uri Uganthaanavanukkum - யானைத்தோலை உகந்து திரிக்கின்ற சிவபிரானுக்கும்
உணர்வதனுக்கு அரியானை, Unarvadhanukku Ariyaanai - உள்ளபடி அறியக்கூடாதவனும்
அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரிலே
மறை யோர்கள், Marai Yorgal - வைதிகர்கள்
அடி பணியும், Adi Paniyum - திருவடிதொழப்பெற்ற
கரியானை, Kariyanai - நீலநிறத்தனுமான பெருமான
1604பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு வழுந்தையிலே நித்ய வாஸம் பண்ணுகிற –அடி உடைத்தான கல்பகம் ஆய்த்து- ஸ்வர்க்கத்திலே நிராலம்பநமாக நிற்கிறது அன்றிக்கே பூமியிலே வேர்ப் பற்று உண்டான கற்பகத்தைக் கண்டு கொண்டு என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன்) 7
திருவாழ் மார்பன் தன்னைத் திசை மண் எரி நீர் முதலா உருவாய் நின்றவனை யொலி சேரும் மாருதத்தை அருவாய் நின்றவனைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-7
பதவுரை Show / Hide
திரு வாழ் மார்வன் தன்னை, Thiru Vaal Marvan Thannai - பிராட்டி வாழ்கிற திருமார்பை யுடையவனும் (- (தென் அழுந்தையில் மன்னி நி்ன்ற-;) (கண்டுகொண்டு களித்தேன்-.))
திசை மண் நீர் எரி முதலா, Thisai Mann Neer Eri Muthalaa - திக்குகளென்ன பூமியென்ன ஜலமென்ன அக்னியென்ன ஆகிய இவை முதலான
உரு ஆய் நின்றவனை, Uru Aayi Nindra Vanai - பதார்த்தங்களாய் நிற்பவனும்
ஒலி சேரும் மாருதத்தை, Oli Serum Maarudhatthai - சப்தத்தையும் குணமாகவுடைய வாயுவுக்கு நிர்வாஹகனும்
அரு ஆய் நின்றவனை, Aru Aayi Nindra Vanai - அரூபியாயிருப்பவனும்
கரு ஆர் கற்பகத்தை, Karuu Aar Karppagaththai - வேர்ப்பற்றையுடைத்தான கல்பவ்ருக்ஷம் போன்றவனுமான பெருமானை
1605பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முது நான்மறை உண்டு -பாசி பூத்த வேதம் –அது திரு வீதிகள் தோறும் திரைக் கிளப்பத்தை உடைய கடல் போலே கோஷியா நின்றுள்ள ஸ்ரீ தென் அழுந்தையில் மன்னி நின்ற – சகல கலைகளாலும் புருஷார்த்தமாக பிரதிபாதிக்கப் பட்டவனைக் கண்டு கொண்டு என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன்) 8
நிலையாளாக வென்னை உகந்தானை நிலமகள் தன் முலையாள் வித்தகனை முது நான்மறை வீதி தோறும் அலையாரும் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னி நின்ற கலையார் சொற்பொருளைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-8
பதவுரை Show / Hide
என்னை, Ennai - என்னை (- (தென் அழுந்தையில் மன்னி நின்ற -;) (கண்டுகொண்டு களித்தேன்-.))
நிலை ஆள் ஆக, Nilai Aal Aaga - நிலைநின்ற அடியவனாக
உகந்தானை, Uganthaanai - உகந்து திருவுள்ளம் பற்றினவனும்
நிலம் மகள் தன், Nilam Magal Than - பூமிப்பிராட்டியினுடைய
முலை, Mulai - திருமுலைத்தடங்களை
ஆள், Aal - ஆளவல்ல
வித்தகனை, Viththakanai - ஸமர்த்தனும்
வீதி தொறும், Veethi Thorum - தெருக்கள் தோறும்
முது நால் மறை, Muthu Naal Marai - புராதனமான நால் வேதங்களும்
அலை ஆரும் கடல் போல் முழங்கும், Alai Aarum Kadal Pol Muzhangu - அலைகள் நிரம்பிய கடல் போலப் பெருமுழக்கம் செய்யப்பெற்ற
கலை ஆர் சொல் பொருளை, Kalai Aar Sol Porulai - சாஸ்த்ரங்களில் நிறைந்துள்ள சொற்களுக்குப் பொருளாயிருப்பவனுமான பெருமானை
1606பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு அழுந்தூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற – கார் காலத்திலேயே மேகம் போலே ஸ்ரமஹரமான வடிவு அழகை உடையவனை – கண்கள் குளிரக் காணப் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன்) 9
பேரானைக் குடந்தை பெருமானை இலங்கொளி சேர் வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை ஆராவின்னமுதைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9
பதவுரை Show / Hide
பேரானை, Peraanai - திருப்பேர்நகரில் பள்ளி கொண்டிருப்பவனும (- (தென் அழுந்தையில் மன்னி நின்ற-) (கண்டுகொண்டு களித்தேன்-.))
குடந்தை பெருமானை, Kudandhai Perumaanai - திருக்குடந்தையில் தன் பெருமைகளெல்லாந் தோற்ற சயனித் திருப்பவனும்
இலங்கு ஒளி சேர், Ilangu Oli Ser - விளங்குகின்ற காந்தியோடு கூடின
வார் ஆர், Vaar Aar - கச்சுநிறைந்த
வனம் முலையாள், Vanam Mulaiyal - அழகிய முலைகளையுடைளான
மலர்மங்கை, Malar Mangai - பெரிய பிராட்டியார்க்கு
நாயகனை, Nayakanai - வல்லபனும்
ஆரா இன் அமுதை, Aara In Amuthai - எவ்வளவு அநுபவித்தாலும் த்ருப்திபெறமுடியாத இனிய அமுதம் போன்றவனும்
கார் ஆர் கரு முகிலை, Kaar Ar Karu Mukilai - மழை காலத்துக் காளமேகம் போன்றவனுமான பெருமானை
1607பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அடைவில் தப்பாதபடி அனுசந்திக்க வல்லவர்கள்-ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே த்ரிபாத் விபூதி அடையத் தாங்கள் இட்ட வழக்காகப் பெறுவர்கள்) 10
திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற அறமுதல் ஆனவனை யணி யாலியர் கோன் மருவார் கறை நெடுவேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும் முறை வழுவாமை வல்லார் முழுதாள்வர் வானுலகே –7-6-10
பதவுரை Show / Hide
திறல் முருகன் அனையார், Thiral Murugan Anaiyar - வலிமையில் ஸுப்ரஹ்மண்யன் போன்றவாகள் நிறைந்த (- (தென் அழுந்தையில், மன்னி நின்ற-;))
அறம் முதல்வனவனை, Aram Muthalvanavanai - ஸகலதர்மங்களுக்கும் மூலகாரணமான பெருமாள் விஷயமாக,
அணி ஆலியர் கோன், Ani Aliyar Kon - அழகிய திருவாலிப்பதியிலுள்ளார்க்குத் தலைவராய்
மருவார், Maruvar - பகைவருடைய
கறை, Karai - ரக்தக்கறையையுடைத்தான
நெடுவேல், Neduvel - நீண்டவேற்படையை
வலவன், Valavan - ஆளவல்லவரான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்
சொல், Sol - அருளிச்செய்ய
ஐ இரண்டும், Ai Irandum - இப்பத்துப்பாசுரங்களையும்
முறை வழுவாமை, Murai Vazhuvamai - முறைதப்பாமல்
வல்லார், Vallar - ஓதவல்லவர்கள்
வான் உலகு, Vaan Ulagu - பாரமபதத்தை
முழுது, Muzhuthu - பூர்ணமாக
ஆள்வர், Aalvar - ஆளப்பெறுவர்.
1608பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷகனான உன்னில் காட்டிலும் பாதக வர்க்கம் அணித்தாய் நின்று நலியா நின்றன – கர்ம வச்யன் ஆகையாலே கர்ம க்ருதங்கள் சேர்ந்தே இருக்கும் நீ அவசரம் பார்த்து புகுந்தாய் -இவை சஹஜங்கள்- உண்ணிலாய -என்னுமா போலே ஒருவர் இருவர் இன்றிக்கே சேதன சமாதியால் நலியா நின்றுள்ள ஐந்து இந்த்ரியங்கள் என் பக்கல் வந்து புகுந்து என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்குகிறவன வில்லை- என்னுடைய விஷயத்தைக் காட்டு -என்னுடைய விஷயத்தைக் காட்டு என்று இவை தனித் தனியே அலைத்து நெருக்க-அவற்றுக்கு அஞ்சி வந்து சர்வ ஸ்வாமியான உன் திருவடிகளிலே சரண ரஷணத்தில் அதிகரித்த உனக்கு அத்தை முடிய நடத்த வேண்டாவோ) 1
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –7-7-1
பதவுரை Show / Hide
திருவுக்கும திரு ஆகிய செல்வா, Thiruvukkum Thiru Aagiya Selva - ஸ்ரீ மஹாலக்ஷிமிக்கும் லக்ஷ்மீகரனான செல்வனே!
தெய்வத்துக்கு அரசே, Deivathukku Arase - நித்யஸூரிகட்குத் தலைவனே!
செய்ய கண்ணா, Seyya Kanna - புண்டரீகாக்ஷனே!
உருவம் செம் சுடர் ஆழி வல்லானே, Uruvam Sem Sudar Azhivallane - அழகிய வழிவை யுடைத்தாய் செவ்விய சுடர்மயனான திருவாழியை (ப்ரயோகித்தலில்) ஸமர்த்தனே!
உலகு உண்ட ஒருவா, Ulaku Unda Oruva - (பிரளயத்தில்) உலகங்களை யமுதுசெய்த அத்விதீயனே!
திரு மார்பா, Thiru Marbaa - பிராட்டியைத் திருமார்பிலுடையவனே!
அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரில்
மேல் திசை நின்ற அம்மானே, Mel Thisai Nindra Ammane - மேலைத்திசையில் எழுந்தருளியிருக்கும் பெருமானே!,
ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை அன்று, Oruvarkku Aatru Uyyum Vagai Andru - ஒரு இந்திரியத்துக்குத் தப்பிப் பிழைக்கும் வழி இல்லை;
ஆல், Aal - அந்தோ! ;
ஐவர், Aivar - ஐந்து இந்திரியங்கள்
உடன் நின்று, Udan Nindru - நெருங்கியிருந்து
என்னுள் புகுந்து, Ennul Pugundhu - என் பக்கலிலே வந்து புகுந்து
ஒழியாது, Ozhiyadhu - ஓயாமல் (எப்போதும்)
அருவி, Aruvi - அலைத்து
தின்றிட, Thinridha - நெருக்க
அஞ்சி, Anji - (அதற்கு) அஞ்சி
நின், Nin - உன்னைச் சரணம்
அடைந்தேன், Adaindhen - புகுந்தேன்
1609பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வேறேயும் சில ரஷகரும் யுண்டாய் -அவர்கள் ரஷிக்கிறார்கள் என்று உனக்கு ஆறி இருக்க ஒண்ணாது கிடாய் – அநந்ய கதியான நான் உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகலை யுடையேன் அல்லேன் – அநந்ய கதிகளை நோக்குகைக்கு அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது) 2
பந்தார் மெல்விரலி நல் வளைத் தோளி பாவை பூ மகள் தன்னொடும் யுடனே வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால் வண்ணா மழை போல் ஒளி வண்ணா சந்தோகா பௌழியா தைத்ரியா சாமவேதனே நெடுமாலே அந்தோ நின்னடி யன்றி மற்றறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –7-7-2
பதவுரை Show / Hide
பந்து ஆர் மெல் விரல், Pandhu Aar Mel Viral - பந்து பொருந்திய மெல்லிய கைவரல்களை யுடையளும் (- (அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே!- ;))
நல் வளை தோளி, Nal Valai Thoali - நல்ல வளைகளையணிந்த தோள்களை யுடையளும்
பாவை, Paavai - பதுமை போன்றவளுமான
பூ மகள் தன்னோடும் உடனே வந்தாய், Poo Magal Thannodum Udaney Vandhai - பெரிய பிராட்டியாரோடு கூட எழுந்தருளினவனாய்
என் மனத்தே மன்னி நின்றாய், En Manaththae Manni Nindraai - என் நெஞ்சிலே பொருந்தி யெழுந்தருளியிருக்கு மவனே!
மால் வண்ணா, Maal Vanna - கருத்த நிறத்தை யுடையவனே!
மழை போல் ஒளி வண்ணா, Mazhai Pol Oli Vanna - மேகம் போன்று குளிர்ந்து அழகிய வடிவையுடையவனே!
சந்தோகா, Santhokaa - சாந்தோக்ய உபநிஷத்தை உணர்ந்தவனே!
பௌழியா, Pauzhiyah - கௌஷீதகீப்ராஹ்மண முணர்ந்தவனே
தைத்திரியா, Thaitthiriyah - தைத்திரீய உபநிஷத்தை உணர்ந்தவனே!
சாம வேதியனே, Saama Vedhiyaney - ஸாமவேத முணர்ந்தவனே!
நெடுமாலே, Nedumaale - ஸர்வஸ்மாத்பரனே!
நின் அடி அன்றி, Nin Adi Andri - உனது திருவடிகளையன்றி
மற்று அறியேன், Mattru Ariyen - வேறொரு புகல் அறிகிறேனில்லை.
1610பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிருபாதிக பந்துவே உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகல் யுடையேன் அல்லேன் – நிருபாதிக பந்தம் தோற்ற வந்து நிற்கிறவனே) 3
நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் அடியேனைச் செய்யாத வுலகத்திடைச் செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்குமுள் புகுந்து பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப் போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்னடைந்தேன் ஐயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-3
பதவுரை Show / Hide
ஐயா, Aiya - ஸ்வாமீ! (- (அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!- ;) (நின் அடைந்தேன்-;) (நின் அடி அன்றி மற்று அறியேன்-))
நெய் ஆர் ஆழியும், Ney Aar Aazhiym - நெய்யிட்டிருக்கிற சக்கரத்தையும்
சங்கமும், Sangamum - ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும்
ஏந்தும், Aendhum - தரித்திருக்கின்ற
நீண்ட தோள் உடையாய், Neenda Thoal Udaiyaai - பெரிய திருக்கைகளை யுடையவனே!
அடியேனை, Adiyenai - உனக்கே உரியவனான என்திறத்தில்
உலகத்திடை, Ulagaththidai - இவ்வுலகத்திலே
செய்யாத செய்தாய், Seyyadha Seithai - செய்யத்தகாதவற்றை யெல்லாம் செய்தாய்;
ஐவர், Aivar - பஞ்சேந்திரியங்கள்
பொய்யால், Poyyaal - க்ருத்ரிமத்தோடு கூடி
சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து, Sirumaikkum Perumaikkum Ula Pugundhu - சிற்றின்ப வாழ்வுக்கும் பேரின்ப வாழ்வுக்கும் பொதுவாக என்னுள்ளே புகுந்து
என் மெய் குடி ஏறி, En Mey Kudi Eri - என் சரீரத்திலே குடியேறியிருக்க
போற்றி வாழ்வதற்கு அஞ்சி, Pothri Vazhvadarku Anji - அவற்றை த்ரப்தியடையச் செய்து வாழ்வதற்குப் பயப்பட்டு.
1611பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒருவனுக்கு உள்ளீடாய் நின்று ரஷிக்கை அன்றிக்கே வராஹ கல்பத்தின் யுடைய ஆதியிலே ஸ்ரீ மகா வராஹமாய் வந்து அவதரித்து கண்ணுக்கு இலக்கை நின்று நோக்கினவனே- அது தன்னை பழம் கதை யாக்கி இபொழுது இங்கே வந்து நிற்கிறவனே) 4
பரனே பஞ்சவன் பௌழியன் சோழன் பார் மன்னர் மன்னர் தாம் பணிந்து ஏத்தும் வரனே மாதவனே மதுசூதா மற்றோர் நற்றுணை நின்னலால் இலேன் காண் நரனே நாரணனே திரு நறையூர் நம்பீ எம்பெருமானும் பாராளும் அரனே ஆதி வராஹ முன்னானாய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-4
பதவுரை Show / Hide
பரனே, Parane - பரமபுருஷனே! (- (அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!-))
பஞ்சவன் பூழியன் சோழன், Panjavan Puzhiyan Sozhan - பஞ்சவனென்றும் பூழியனென்றும் சோழனென்றும் பெயர் கொண்ட
பார் மன்னர் மன்னர் தாம், Paar Mannar Mannar Thaam - பூமிக்கு ராஜாதி ராஜர் களானவர்கள்
பணிந்து ஏத்தும், Panindhu Aethum - பணிந்து துதிக்கும் படியான
வரனே, Varane - சிறந்தவனே!
மாதவனே, Madhavane - திருமாலே!
மதுசூதா, Madhusoodha - மதுவென்னு மசுரனைக் கொன்றவனே!
நரனே நாரணனே, Naraney Narayananey - நரநாராயணாவதாரம் செய்தருளினவனே!
திரு நறையூர் நம்பீ, Thiru Naraiyur Nambee - திருநறையூரி லெழுந்தருளி யிருக்கின்ற பரிபூர்ணனே!
எம் பெருமான், Em Perumaan - எமக்குத் தலைவனே!
உம்பர் ஆளும் அரனே, Umbar Aalum Arane - தேவதைகளை ஆளவல்ல ருத்ரனுக்கு ஆந்தர்யா மியானவனே!
முன், Mun - முன்பொருகாலத்தில்
ஆதி வராகம் ஆனாய், Aadhi Varagam Aanai - ஆதிவராஹ மூர்த்தியாய் அவதரித்தவனே!
நின் அலால், Nin Alaal - உன்னையொழிய
மற்று ஓர் நல்துணை, Mattru Oru Nalthunai - வேறொரு நல்ல ரக்ஷகனை
இலேன், Ilaen - உடையேனல்லேன்.
1612பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இக் கலியுகத்தின் யுடைய ஸ்வ பாவத்தை நான் அழகியதாகக் கண்டேன் – உன் பக்கலிலே வைமுக்யத்தை யுண்டாக்கி -பின்பு விஷய ப்ராவண்யத்தையும் பிறப்பித்து முடிக்கும் சம்சார ஸ்வ பாவத்தை நான் அழகிதாக அறிந்தேன் – எனக்கு ஹிதமாவதும் உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமதுவே என்று அறிந்தேன்) 5
விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து பண்டானுய்ய வோர் மால்வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மைக் கருமமாவதும் என்தனக்கு அறிந்தேன் அண்டா நின்னடியன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-5
பதவுரை Show / Hide
விண்டான், Vindaan - பகைவனான இரணியன் (- (அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!- ;) (நின் அடி அன்றி மற்று அறியேன்-.))
விண் புக, Vin Puga - வீரஸ்வர்க்கம் சென்று சேரும்படி
வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்திலே
அரி ஆய், Ari Aay - நரசிங்கமாய்த் தோன்றி
பரியோன், Pariyon - பருத்தவடிவையுடையனான அவ்விரணியனுடைய
மார்வகம், Marvagam - மார்பை
பற்றி பிளந்து, Patri Pilandhu - பிடித்துக் கிழித்தவனாயும்,
பண்டு, Pandu - முன்பு (க்ருஷ்ணாவதாரத்தில்)
ஆன் உய்ய, Aan Uyy - பசுக்கள் ஜீவிக்கும்படி
ஓர் மால் வரை –  ஓர் மால் வரை, Or Maal Varai Or Maal Varai - ஒரு பெரிய மலையை
ஏந்தும், Aendhum - எடுத்துப்பிடித்த
பண்பாளா, Panpaala - நீர்மையுடையவனே!
பரனே, Parane - சிறந்தவனே!
பவித்திரனே, Paviththiraney - பரிசுத்தனே!
அண்டா, Andaa - அண்டங்கட்கு இறைவனே!
கலியுகத்த தன் தன்மை, Kaliyugath Than Thanmai - இக்கலியுகத்தின் ஸ்வபாவத்தை
நான் கண்டேன், Naan Kandein - நான் தெரிந்து கொண்டேன்;
என் தனக்கு, En Thanakku - எனக்கு
கருமம் ஆவதும், Karumam Aavadhum - செய்யத்க்கதையும்;
அறிந்தேன், Arindhen - அறிந்து கொண்டேன்;
1613பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காலம் நீ இட்ட வழக்கு அன்றோ –உன் திருவடிகளை ஒழிய வேறு ஒன்றை அறியேன் அந்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் பிற்பட்டாருக்கும் இழவாமைக்கு அன்றோ நீ இங்கே வந்து நிற்கிறது) 6
தோயாவின் தயிர் நெய் அமுதுண்ணச் சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற தாயால் ஆப்புண்டு இருந்து அழுது எங்கும் தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும் சேயாய் கிரேத திரேத துவாபர கலியுகமிவை நான்கும் ஆனாய் ஆயா நின்னடியன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-6
பதவுரை Show / Hide
சொன்னார், Sonnar - எதையும் வாய்வந்தபடி சொல்லுகிறவர்கள் (- (அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!- ;) (நின் அடி அன்றி மற்று அறியேன்-.-))
சொல்லி, Solli - வசைகூறி
நகும் பரிசே, Nakum Parisey - சிரிக்கும்படியாக
தோயா இன் தயிர் நெய் அமுது உண்ண, Thoya In Thayir Ney Amuthu Unna - நன்றாகத்தோயாதே இனிய தயிரையும் நெய்யையும் அமுது செய்ய (அப்பொழுது)
பெற்ற தாயால், Petra Thaayal - தாயாகிய யசோதையினால்
ஆப்புண்டு, Aappundu - கட்டுண்டு
இருந்து, Irundhu - போகமாட்டேதே நின்று
அழுது ஏங்கும், Azhuthu Aengum - விக்கி விக்கியழுத
தாடாளா, Thaadaala - பெரியோனே!
தரை யோர்க்கும், Tharai Yorkkum - பூமியிலுள்ளவர்களுக்கும்
விண்ணோர்க்கும், Vinnorkkum - விண்ணுலகத்திலுள்ளவர்களுக்கும்
சேயாய், Seyyaai - கிட்டக்கூடாதவனே!
முன், Mun - முன்னமே
கிரேத திரேத துவாபர கலியுகம் இவை நான்கும் ஆனாய், Kireetha Thireetha Dhuvabara Kaliyugam Ivai Naankum Aanai - கிருதயுகத் த்ரேதாயுகம் த்வாபரயுகம் கலியுகம் என்னுமிந்த நான்கு யுகங்களுக்கும் நிர்வாஹகனானவனே!
ஆயா, Aayaa - கோபாலக்ருஷ்ணனே!
1614பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி போகங்களைப் புஜிக்கவேணும் என்று ஐவர் நெருக்கி புஜிப்பிக்க அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன்) 7
கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா இறுத்திட்டான் விடை ஏழும் முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும் ஆனாய் பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர் அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் தின்ற வம்மானே –7-7-7
பதவுரை Show / Hide
கஞ்சனை அஞ்ச கறுத்து முனிந்தாய், Kanjanai Anja Karuthu Munindhai - கம்ஸனை அவன் பயப்படும்படி கோபித்து நிரஸித்தவனே! (- (அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!- ;))
கார் வண்ணா, Kaar Vanna - மேகம் போல் குளிர்ந்த வடிவையுடையவனே!
கடல் போல் ஒளி வண்ணா, Kadal Pol Oli Vanna - கடல் போன்று அழகிய வடிவையுடையவனே!
முன், Mun - முன்பொருகால்
ஆன் விடை ஏழும் இறுத்திட்டு வென்றாய், Aan Vidai Ezhum Iruthittu Vendraai - ஏழு எருதுகளையும் முறித்துவென்றவனே!
எந்தாய், Endhaai - எம்பெருமானே!
முன், Mun - முற்காலமே தொடங்கி
அந்தரம் ஏழும் ஆனாய், Andharam Ezhum Aanai - மேலுலகங்களேழுக்கும் நியாமகனானவனே!,
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணா, Poruththuk Kondu Irundhaal Porukka Ona - வருந்தி ஸஹித்துக் கொண்டிருப்போமென்றாலும் ஸஹிக்க முடியதாபடியான
போகமே நுகர்வான் ஐவர் புகந்து, Pogame Nugharvaan Aivar Pugandhu - துக்கானுபவங்களையே பெறுவிப்பதற்காகப் பஞ்சேந்திரியங்கள் என்னிடம் வந்து சேர்ந்து
அறுத்து தின்றிட, Aruththu Thinridha - ஹிம்ஸித்து ஆத்ம நாசத்தைப் பண்ண
அஞ்சி, Anji - அதற்குப் பயப்பட்டு
நின் அடைந்தேன், Nin Adaindhen - உன்னை ஆச்ரயித்தேன்.
1615பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வகுத்த ஸ்வாமியான நீ -ராஜ புத்ரனாய் பிறந்து முடி இழந்து போவாரைப் போலே ஆகாமே அடியேனாய் இருக்கிற என்னை நித்ய கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேணும் – ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு வந்து புகுரலாம் படி கடல்கரை வெளியிலே வந்து நின்றால் போலே எனக்கு உறவுமுறையார் கை விட்ட அன்று வந்து கிட்டலாம் படி அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது) 8
நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக் கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக் காவலைப் பிழைத்துக் குடி போந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –7-7-8
பதவுரை Show / Hide
நெடியானே, Nedhiyaane - எல்லார்க்கும் மேற்பட்டவனே! (- (அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!-,))
கடி, Kadi - (பூமிக்கு) அரணாகிய
ஆர்கலி, Aarkali - ஸமுத்ரத்தில் (பள்ளி கொண்டிருக்கிற)
நம்பீ, Nambi - பூர்ணனே!
எந்தாய், Endhaai - எம்பெருமானே!
நின்னையே நினைந்து, Ninnaiye Ninaindhu - உன்னையே தியானித்துக் கொண்டு
இங்கு இருப்பேனை, Ingu Irippenai - இங்கு இருக்கிற என்னை
கடியார், Kadiyar - க்ரூரங்களாயும்
காளையார், Kaalaiaar - (ஹிம்ஸிப்பதில்) யௌவன பருவ முள்ளனவாயுமிருக்கிற
ஐவர், Aivar - பஞ்சேந்திரியங்கள்
புகுந்து, Pugunthu - என்னிடம் நெருங்கி
காவல் செய்த அக் காவலை பிழைத்து, Kaaval Seitha Ak Kaavalai Pizhaithu - (என்னை உன்னிடம் வரவொட்டாதபடி)தடை செய்த அந்தச் சிறைக்கு தப்பிவந்து
உன் அடி கீழ், Un Adi Keezh - உன் திருவடிகளின் கீழே
குடி போந்து, Kudi Ponthu - குடியிருக்கக் கருதி
வந்து புகுந்தேன், Vandhu Pugunthen - வந்து சேர்ந்தேன்;
எனக்கு, Enakku - அடியேனுக்கு
கூறை சோறு இவை தந்தருளி, Kooraik Sooru Ivai Thandharuli - துணியும் சோறுமாகிய இத் திருவடிகளைத் தந்தருளி
அடியேனை பணி ஆண்டு கொள், Adiyenai Pani Aandu Kol - அடியேனை நித்ய கிங்கரனாக்கிக் கொள்ள வேணும்
1616பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாவது இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன் ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும் கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் இது அன்றோ) 9
கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப் போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட்கொடியாய் நெடுமாலே தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன் ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-9
பதவுரை Show / Hide
புனிதா, Punithaa - பரிசுத்தனே! (- (புள் கொடியாய் கருடத்வஜனே!) (திருமாலே!, அடுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!- ;))
நெடுமாலே, Nedumaale - ஸர்வாதிகனே!
தீ வாய் நாக அணையில் துயில்வானே, Thee Vaai Naaga Anaiyil Thuyilvaane - (பகைவர்மேலே) நெருப்பை உமிழ்கிற ஸர்ப்பமாகிய படுக்கையில் சயனித் திருப்பவனே!
ஐவர், Aivar - பஞ்சேந்திரியங்கள்
கோ ஆய், Ko Aai - என்னை நியமிப்பனவாய்க்கொண்டு
என் மெய், En Meiy - என் சரீரத்தில்
குடி ஏறி, Kudi Eri - குடிபுகுந்து
கூறை சோறு இவை தா என்று, Kooraik Sooru Ivai Thaa Endru - துணியையும் சோற்றையும் கொடு என்று
குமைத்து, Kumaitthu - அடர்த்துக் கொண்டிருந்து
போகார் –, Pogaar - விட்டுப்போகின்றனவில்லை;
நான், Naan - அடியேன்
அவரை, Avarai - அவ்விந்திரியங்களின் கொடுமைகளை
பொறுக்ககிலேன், Porukkakilain - ஸஹிக்கமாட்டுகின்றிலேன்;
இனி செய்வது ஒன்று அறியேன், Ini Seivathu Ondru Ariyen - உன்னையே புகலாக நான் அடைந்தேனான பின்பு (என்னுடைய ஹிதத்துக்காக) நான் செய்து கொள்ளத்தக்கது ஒன்றுமறிகின்றிலேன்;
அடியேற்கு, Adiyeerkku - அடியேன் விஷயத்தில்
ஆ ஆ என்று, Aa Aa Endru - ஐயோவென்று
இறை இரங்காய், Irai Irangai - சிறிது கிருபை செய்தருள வேணும்.
1617பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தையும் அப்யசிக்க வல்லார் –சிரகாலம் ராஜாக்களாய் -லோகங்களை அடைய நிர்வஹித்து பெரிய முத்தின் குடைக்கீழே இருந்து நிரவதிக ப்ரீதி யுக்தராய்ப் பெறுவார் – இந்த்ரிய வஸ்தையை அனுசந்தித்து அஞ்சின ஸ்ரீ ஆழ்வார் இத்தை பலமாகச் சொல்லுவான் என் என்னில் இவருக்கு அந்த ஐஸ்வர்யம் பாகவத சேஷமாக்குக்கைக்கு உடலாகையாலே அதுவும் புருஷார்த்தத்திலே புக்குப் போய்த்து காண்-என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தாராம்) 10
அன்னம் மன்னும் பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக் கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன் சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார் மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மன்னுவாரே –7-7-10
பதவுரை Show / Hide
அன்னம் மன்னு, Annam Mannu - அன்னப்பறவைகள் பொருந்திவாழ்கிற
பை பூ பொழில் சூழ்ந்த, Pai Poo Pozhil Soozhntha - பரந்த பூஞ்சோலைகளாற் சூழப்பட்ட
அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரில்
மேல் திசை நின்ற, Mel Thisai Nindra - மேலைத்திக்கில் எழுந்தருளியிருக்கின்ற
அம்மானை, Ammaanai - எம்பெருமானைக்குறித்து,-
கன்னி மன்னு திண் தோள், Kanni Mannu Thin Thol - ஒரு நாளு மழியாத மிடுக்கை யுடைய தோள்களை யுடையராய்
ஆலி நாடன், Aali Naadan - திருவாலிநாட்டுக்குத் தலைவராய்
மங்கை, Mangai - திருமங்கையிலுள்ளார்க்கு
குலம் வேந்தன், Kulam Vendan - குலக்கிரமமக வந்த ராஜாவான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்
சொன்ன, Sonna - அருளிச்செய்த
இன் தமிழ், In Tamil - மதுரமான தமிழ்ப்பாஷையினாலாகிய!
நல் மணி கோவை, Nal Mani Kovai - நல்ல ரத்னமாலை போலச் சிறந்த
தூய மாலை இவை பத்தும், Thuya Maalai Ivai Paththum - பரிசுத்தமான இந்தச் சொல்மாலைகள் பத்தையும்
வல்லார், Vallar - ஓதி யுணருமவர்
மன்னவர் ஆய், Mannavar Aay - பிரபுக்களாய்
மன்னி, Manni - நெடுநாள் வாழ்ந்து
உலகு ஆண்டு, Ulaku Aandu - லோகங்களை அரசாட்சி செய்துக்கொண்டு
மானம், Maanam - பெரிய
பெண் குடை கீழ், Pen Kudai Keezh - வெண்குடை நிழலிலே இருந்து
மகிழ்வர், Magizhvar - மகிழப்பெறுவர்.
1618பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தனித் தனியே பிரஹ்மாவைப் போலே சிருஷ்டிக்க ஷமராய் இருக்கிற பிராமணர் நித்ய வாஸம் பண்ணுகையாலே வந்த நிரவதிக சம்பத்தை உடைய ஸ்ரீ திரு வழுந்தூரிலே வந்து நின்று அருளின இது தான் அலாப்யலாபமாகக் கொண்டு நிற்கிறவன் – அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடி கோள்-அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் போகப் பாருங்கோள்) 1
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின் எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-1
பதவுரை Show / Hide
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம், Engum Mali Nirai Pugazh Naal Vedham - எவ்விடத்திலும் நிறைந்து பரவிய கீர்த்தியையுடைய நான்கு வேதங்களும் (- (உலகத்தவர்களே!))
ஐந்து வேள்விகளும், Ainthu Velvikalum - பஞ்சமஹாயஜ்ஞங்களும்
கேள்விகளும், Kelvigalum - (மற்றும் இன்றியமையாத)நூற்கேள்விகளும் (ஆகிய இவற்றை)
இயன்ற, Iyanra - இயற்கையாகவே அறிந்துள்ள
தன்மை, Thanmai - குணத்தையுடையராய்
அம் கமலத்து அயன் அனையார், Am Kamalathu Ayan Anaiyar - (எம்பெருமானுடைய) அழகிய நாபீ கமலத்தில் தோன்றியவனாகிய பிரமனையொத்தவரான அந்தணர்கள்
பயிலும், Payilum - நித்யவாஸஞ்செய்கிற
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
அணி, Ani - அழகிய
அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரில்
நின்று, Ninru - வந்துநின்று
உகந்த, Ugantha - (அத்தலத்தில் வாழ்க்கையையே பெறாப் பேறாக நினைத்து) அகமகிழ்கின்ற
அமரர் கோ, Amarar Ko - நித்யஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமான் (யாவனென்னில்,)
செம் கமலம் திரு மகளும், Sem Kamalam Thiru Magalum - செந்தாமரை மலரில் வாழ்கின்ற ஸ்ரீதேவியும் புவியும் – பூமிதேவியும்
செம் பொன் தனது திரு அடியின் இணை வருட, Sem Pon Thanathu Thiru Adiyin Inai Varud - (தனது) சிவந்த பொன்மயமான இரண்டு திருவடிகளையும் தடவவும்
முனிவர் ஏத்த, Munivar Aettha - மஹர்ஷிகள் புகழ்ந்து துதிக்கவும்
வங்கம் மலி தட கடலுள் –, Vangam Mali Thada Kadalul - அலைகள் நிரம்பிய பெரிய திருப்பாற்கடலில்
அனந்தன் என்னும் வரி அரவின், Ananthan Ennum Vari Aravin - திருவனந்தாழ்வானென்கிற புள்ளிகளை யுடைய ஸர்ப்பசயனத்தில்
துயின்ற, Thuyindra - (பள்ளி கொண்டு) யோக நித்திரை செய்கின்ற
மாயோன், Mayon - ஆச்சரியமான குணமுடையவன்;;;
காண்மின், Kaanmin - காணுங்கள்
1619பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அன்னமானது அப்பூம் படுக்கையிலே போக ஸ்ரோதஸ்ஸில் தன்னை விஞ்சின பெடையோடு ஒக்க சாய்கிற நிரவதிக சம்பத்தை உடைய –அங்குத்தை திர்யக்குகளும் அகப்பட போக பிரதாநமாய்த்து இருப்பது) 2
முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண முநிவரோடு தாநவர்கள் திசைப்ப வந்து பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அருளிய வெம்பரமன் காண்மின் செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் சங்க மவை முரலச் செங்கமல மலரை ஏறி அன்னமலி பெடையோடு மமரும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த யமரர் கோவே –7-8-2
பதவுரை Show / Hide
செந்நெல் மலி கதிர், Sennel Mali Kathir - செந்நெற் பயிரினது (நெல்) நிரம்பிய கதிர்கள் (- (அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோ -;) (யாவனென்னில்;))
கவரி வீச, Kavari Veesa - சாமரங்கள் போல் அசைந்தாடா நிற்கவும்
சங்கம் அவை முரல், Sangam Avai Murali - அசைந்தாடா நிற்கவும் சங்கங்கள் ஒலியா நிற்கவும்
அன்னம், Annam - ஆண் அன்னங்கள்
மலி பெடை யோடும், Mali Pedai Yodum - (தம்மிடத்தில் அன்பு) மிக்குள்ள பெண்ணன்னங்களுடனே
செம் கமலம் மலரை ஏறி அமரும், Sem Kamalam Malaiyai Eri Amarum - செந்தாமரை மலர்களின் மிது ஏறி வீற்றிருக்கப் பெற்ற
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
முன், Mun - முற்காலத்தில்
இ ஏழ் உலகும், I Ezh Ulakum - இந்த ஏழுலகங்களையும்
இருள் –, Irul - (அஜ்ஞாநமாகிற) அந்தகாரமானது
மண்டி உண்ண, Mandi Unna - மிகுந்து தன்வசமாக்கிக் கொள்ள  (அதனால்)
முனிவரொடு தானவர்கள் திசைப்ப, Munivarotu Thanavarkal Thisaippa - முனிவர்களும் அசுரர்களும் அறிவு கெட்டுக் கலங்க,  (அப்பொழுது)
வந்து, Vandu - திருப்பாற்கடலினின்று திருவவதரித்து
பன்னு, Pannu - பரவிய
கலை, Kalai - (அங்கங்களாகிய) சாஸ்திரங்களை யுடைய
நால்வேதம், Naalvedham - நான்கு வேதங்களினது
பொருளை எல்லாம், Porulai Ellam - அர்த்தங்களையெல்லாம்
பரி முகம் ஆய், Pari Mukam Aayi - ஹயக்ரீவமூர்த்தியாய்
அருளிய, Aruliyam - மீட்டுக்கொணர்ந்தருளிய
எம் பரமன், Em Paraman - நமது சிறந்த கடவுளாவன்.
1620பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதர் உடைய விரோதியைப் போக்கி –அவர்கள் உடைய அபேஷிதம் சம்விதானம் பண்ணும் ஸ்வபாவன் என்கிற சுத்தியை எனக்கு பிரகாசிப்பித்தவன் கிடீர்) 3
குலத்தலைய மத வேழம் பொய்கை புக்குக் கோள் முதலை பிடிக்க வதற்கு அனுங்கி நின்று நிலத்திகழும் மலர்ச் சுடரேய் சோதி யென்ன நெஞ்சிடர் தீர்த்து அருளிய வென் நிமலன் காண்மின் மலைத் திகழ் சந்தகில் கனக மணியும் கொண்டு வந்துந்தி வயல்கள் தோறும் மடைகள் பாய அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-3
பதவுரை Show / Hide
மலை திகழ் சந்து அகில் கனகம் மணியும், Malai Thigazh Sandhu Akil Kanagam Maniyum - ஸஹ்யமலையினிடத்துப் பொருந்தி விளங்குகின்ற சந்தன மரங்களையும் அகிற் கட்டைகளையும் பொன்னையும் ரத்னங்களையும் (- அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோ-;  (யாவனென்னில்))
கொண்டு வந்து, Kondhu Vandu - திருட்டிக்கொணர்ந்து
உந்தி, Undhi - தள்ளி
வயல்கள் தோறும் மடைகள் பாய, Vayalgal Thorum Madaigal Paaya - கழினிகளிலெல்லாம் நீர்பாயும்
அலைத்து வரும், Alaitthu Varum - அலையெறிந்து கொண்டு வாரா நின்றுள்ள
பொன்னி, Ponni - காவேரியினால்
வளம் பெருகும், Valam Perugum - செழிப்பு மிகப்பெற்ற
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
குலம் தலைய மதம் வேழம், Kulam Thalaiya Madham Vezham - நல்ல சாதியிற் பிறந்த யானைகட்குள்ளே தலைமையையுடைய மதங்கொண்ட கஜேந்திராழ்வான்
பொய்கைபுக்கு, Poykaipukku - தடாகத்திலிறங்கின போது
கோள் முதலை பிடிக்க, Kol Muthalai Pidikka - வலிமையையுடைய  முதலையானது  (தன்னைப்) பிடித்திழுத்ததனால்
அதற்கு அணுங்கி நின்று, Adharku Anungi Nindru - அம்முதலைக்கு அஞ்சி நின்று
நில திகழும் மலர் சுடர் ஏய் சோதீ, Nila Thigazhum Malar Sudar Aye Sothi - நிலாவிளங்குகின்ற பரவுதலையுடைய சந்திரனை ஒத்த குளிர்ந்த ஒளியை (தண்ணளியை) யுடையவனே!
என்ன, Enna - என்று ஓலமிட்டுத்துதிக்க
நெஞ்சு இடர் தீர்த்து அருளிய, Nenju Idar Theerthu Aruliya - (அந்த கஜேந்திரனது) மனத்துன்பத்தை நீக்கியருளிய
எம் நிமலன், Em Nimalan - எமது குற்றமற்ற கடவுளாவன.
1621பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அண்டபித்தியிலே புக்குச் சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறி –அந்த பூமிக்கும் அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை அணைத்து- அந்த பூமி தன்னை திரு எயிற்றிலே ஒரு நீல மணி அழுத்தினால் போலே வைத்து அருளின அச் செயலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன் கிடீர் – நிரவதிக சம்பத்தை உடைத்தாய் –சம்சார விபூதிக்கு ஆபரணம் போலே இருக்கிற ஸ்ரீ திரு அழுந்தூரிலே) 4
சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கற்குன்றம் திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றியாகி இலங்கு புவி மடந்தை தனை யிடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய வெம்மீசன் காண்மின் புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்கப் பொழில்கள் தொறும் குயில் கூவ மயில்கள் ஆல அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-4
பதவுரை Show / Hide
பூகம் தொக்க, Pookam Thokka - பாக்கு மரங்கள் நிறைந்துள்ள (- அணி அழுந்தூர் நின்ற உதந்த அமரர் கோ-;  (யாவனென்னில்))
பொழில்கள் தோறும், Pozhilgal Thorum - சோலைகளிலெங்கும்
சிறை புலம்பு வண்டு ஒலிப்ப, Sirai Pulambu Vandu Olippa - சிறகு களையுடையனவாய் ரீங்காரஞ் செய்யுந்தன்மை யனவான வண்டுகள் ஒலிக்கவும்
குயில் கூவ, Kuyil Koova - குயில்கள் கூவவும்
மயில்கள் ஆல, Mayilgal Aala - மயில்கள் கூத்தாடவும்
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து, Alambu Thirai Punal Pudai Soozhndhu - அலைகின்ற அலைகளை யுடைய காவிரியின் நீரானத பக்கங்களிலே சுற்றிப் பாய்தலினால்
அழகு ஆர், Azhagu Aar - அழகு மிக்கிருக்கின்ற
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
செம் கண் ஓர் குன்றம், Sem Kan Or Kuntram - சிவந்த கண்களை யுடையதொரு மலை
சிலம்பு முதல் கலன் அணிந்து, Silambu Mudhal Kalan Anindhu - தண்டை முதலிய ஆபரணங்களைப் பூண்டு
திகழ்ந்தது என, Thigazhnthathu Ena - விளங்குவது போல
திரு உருவம் பன்றி ஆகி, Thiru Uruvam Pandri Aagi - மஹாவராஹரூபியாய்,
இலங்கு புவி மடந்தை தனை, Ilangu Puvi Madanthai Thanai - விளங்குகின்ற பூமிப்பிராட்டியை
இடந்து, Idandhu - (அண்டபித்தியினின்றுங் கோட்டாற்) குத்தியெடுத்து
புல்கி, Pulki - அணைந்து
எயிற்றிடை, Eyirtridai - (தனது) கோரதந்தத்தினிடத்தில்
வைத்து அருளிய, Vaiththu Aruliyah - வைத்தருளினவனான
எம் ஈசன், Em Eesan - எமது தலைவனாவன்.
1622பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நரசிம்ஹத்துக்கும் பிற்காலியாத மிடுக்கை உடைய ஹிரண்யன் உடைய உடலைக் கீண்டு – அவள் உடைய முலை வழியே அவளுடைய பிராணங்களும் வற்றி வரும்படி முலையை அமுது செய்த ஆச்சர்ய பூதன் கிடி கோள் இங்கு வந்து நிற்கிறவன்) 5
சின மேவும் அடல் அரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு மன மேவும் வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள வுயிர் வவ்விய வெம்மாயோன் காண்மின் இனமேவும் வரி வளைக்கை ஏந்தும் கோவை ஏய்வாய மரகதம் போல் கிளியின் இன்சொல் அனமேவு நடை மடவார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-5
பதவுரை Show / Hide
இனம் மேவு வரி வளை கை ஏந்தும், Inam Mevu Vari Valaik Aenthum - கூட்டமாக அணியப்பெற்ற கோடுகளையுடைய வளையல்களை யணிந்த (தமது) கைகளிலே ஏந்தப் பெற்றதும் (- அணி அழுந்தூர் நன்று உகந்த அமரர் கோ-; (யாவனென்னில்) (எம் மாயோன் காண்மின்))
கோவை ஏய் வாய, Kovai Aey Vaai - கொவ்வைக்கனியை யொத்த வாயையுடையதும்
மரகதம் போல், Maragatham Pol - மரகதரத்னம் போலப் பச்சை நிறமுடையதுமான
கிளியின், Kiliyin - கிளியைப் போன்ற
இன் சொல், In Sol - மதுரமான சொற்களையும்
அனம் மேவும் நடை, Anam Mevum Nadai - அன்னப்பேடை போன்ற நடையழகையுமுடைய
மடவார், Madavaar - இளமகளிர்
பயிலும், Payilum - மிகுதியாகப் பொருந்தப்பெற்ற
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி, Sinam Mevum Adal Ariyin Uruvam Aagi - மிக்க சீற்றங்கொண்டுள்ள வலிய நரசிங்க மூர்த்தியாய்
திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு, Thiral Mevum Iraniyanathu Aagam Keendu - மிக்க பராக்ரமமமைந்த ஹிரண்யாஸுரனது மார்பைப் பிளந்து
மனம் மேவு வஞ்சனையால் வந்த, Manam Mevu Vanjanaiyahl Vantha - மனத்திற் கொண்டுள்ள வஞ்சக குணத்தோடு (தன்னைக்கொல்ல) வந்த
பேய்ச்சி, Peychchi - பூதனையென்னும் பேய்மகள்
மாள, Maal - இறக்கும்படி
உயிர வௌவிய, Uyira Vauviyah - (அவளது) உயிரைக் கவர்ந்த
1623பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் கையில் தான் நீர் ஏற்றுப் பெற்று அந்த திருவடிகளின் கீழே ஏழு வகைப் பட்ட லோகங்களும் அடங்கும்படிக்கு ஈடாக வளர்ந்து –அத்விதீயமாய் ஆயதங்களுக்கு எல்லாம் பிரதாநமாய் இருக்கிற திரு ஆழியைப் பரிகரமாக உடையவனான என் ஸ்வாமி கிடி கோள்) 6
வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித் தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின் தேனமரும் பொழில் தழுவும் எழில் கோள் வீதிச் செழு மாட மாளிகைகள் கூடம் தோறும் ஆனதொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-6
பதவுரை Show / Hide
தேன் அமரும், Then Amarum - தேன் எப்போதும் பொருந்தியுள்ள (- அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோ-; (யாவனென்னில்;) (அவனாற் கொடுக்கப்பட்டவுடனே))
பொழில் தழுவும், Pozhil Thazhuvum - சோலைகளாற் சூழப்பட்ட
எழில் கொள், Ezil Kol - அழகைக் கொண்ட
வீதி, Veethi - தெருக்களிலேயுள்ள
செழு மாடம் மாளிகைகள், Sezhu Maadam Maaligaihal - செழித்த உபரிகை வீடுகளிலும் சிறந்த வீடுகளிலும்
கூடம் தோறும், Koodam Thoram - மற்றுமுள்ள இடங்களிலும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும், Aan Thol Seer Maraiyalar Payilum - கல்வி யொழுக்கங்களாற் சிறப்புப் பொருந்திப் பழமையான கீர்த்தியை யுடைய வேதம்வல்ல அந்தணர்கள் நெருங்கி வஸிக்கப்பெற்ற
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
துயர் தீர, Thuyar Theera - வருத்தம் நீங்கும்படி
வந்து தோன்றி, Vandhu Thondri - (வாமநனாய்) வந்து அவதரித்து
மாண் உரு ஆய், Maan Uru Aayi - பிரமசாரியாய்
மா வலியை மூ அடி வேண்டி, Maa Valiyai Moo Adi Vendi - மஹாபலியினிடத்தில் மூன்றடி நிலத்தை வேண்டிப்பெற்று
தான், Thaan - தானே
அமர, Amara - (தனது காலடியின் கீழ்) அடங்கும்படி
ஏழ் உலகும் அளந்த, Ezhu Ulagum Alandha - கீழேழ் மேலேழ் என்னம் எல்லா வுலகங்களையும் அளந்து தனதாக்கிக்கொண்ட
வென்றி தனி முதல் சக்கரம் படை, Vendri Thani Mudhal Chakkaram Padai - வெற்றியையுடையதும் ஒப்பற்றதும் (ஆயுதங்களிற்) பிரதானமுமான சக்ராயுதத்தைக் கையிலேந்திய
எம் தலைவன், Em Thalaivan - எமது ஸ்வாமியாவன்.
1624பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு கொலை அம்பாலே எய்து அவனை அழித்து விரோதி போக்கப் பெற்றோம் -ஆஸ்ரிதர்களும் குடி இருப்புப் பெற்றார்கள் – என்று அவர்களுக்கு உகவக் கடவ உகப்பை தான் உகந்த ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர்) 7
பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன் அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் காண்மின் செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசை முகனே யனையவர்கள் செம்மை மிக்க அந்தணர் தம் ஆகுதியின் புகையார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-7
பதவுரை Show / Hide
செம் தமிழும், Sem Tamizhum - செவ்விய தமிழ்ப்பாஷையும் (- அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோ-; (யாவனென்னில்;))
வடகடலையும், Vadakadalaikum - ஸம்ஸ்க்ருத பாஷையும்
திகழ்ந்த, Thigalntha - விளங்குகின்ற
நாவர், Navar - நாக்கையுடையவர்களும்
திசை முகனை அனையவர்கள், Thisai Mughanai Anaiyavargal - (தனித்தனி) பிரமனை யொத்தவர்களுமான
செம்மை மிக்க அந்தணர் தம், Semmai Mikka Andhanar Tham - நற்குணங்கள் நிறைந்த ப்ராஹ்மணர்களது
ஆகுதியின் புகை ஆர், Aaguthin Pugai Aar - ஹோம்ஞ்செய்வதனால் தோன்றுகின்ற புகை நிரம்பப்பெற்றுள்ள
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி, Pandhu Anaindha Mel Viralal Seethaikku Aagi - பந்து பொருந்திய மெல்லிய கை விரல்களையுடைய சீதையின் நிமித்தம்
மீது பகலவன் இயங்காத இலங்கை வேந்தன், Meethu Pakalavan Iyangaadha Ilangai Vendan - (தனக்கு நேராக) மேலிடத்திலே (அச்சத்தினால்) ஸூர்யனும் ஸஞ்சரிக்கமாட்டாத இலங்கைக்கு அரசனான இராவணனது.
அந்தம் இல் திண் கரம் சிரங்கள், Andham Il Thin Karam Sirangal - அழிவில்லாத வலிய தோள்களும் தலைகளும்
புரண்டு வீழ, Purandu Veela - (அறுபட்டுக்)கீழ் விழுந்து புரளும்படி
அடு கணையால், Adu Kanaiyaal - கொல்லுந் தன்மையுள்ள அம்பினால்
எய்து, Eydhu - பிரயோகித்து
உகந்த, Ugantha - மகிழ்ந்த
அம்மான், Ammaan - தலைவனாவான்.
1625பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அனுகூல ஸ்பர்சம் ஒழிய த்ரவ்யம் ஒழிய செல்லாமையாலே பரிமள பிரசுரமான பூவை உடைத்தான குழலை உடைய யசோதை பிராட்டி வைத்த தயிரையும் வெண்ணெயும் அமுது செய்து அத்தாலே பெறாப் பேறு பெற்றானாக இருக்கிற ஆச்சர்ய பூதன் கிடீர்) 8
கும்ப மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ விடை யடர்த்துக் குரவை கோத்து வம்பவிழும் மலர்க் குழலாள் யாய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின் செம்பவள மரகதம் நன் முத்தம் காட்டத் திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும் அம் பொன் மதிள் சூழ்ந்து அழகார் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த வமரர் கோவே –7-8-8
பதவுரை Show / Hide
செம் பவளம் மரதகம் நல் முத்தம் காட்ட திகழ் பூகம், Sem Pavalam Maradhagam Nal Muththam Kaata Thigazh Poogam - செந்நிறமன பவழத்தையும் (பசுநிறமான) மரகதத்தையும் (வெண்ணிறமான) முத்தையும் தம்மிடத்தில் தோற்றும்படி விளங்குகின்ற பாக்குமரங்களும் (- அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோ-;  (யாவனென்னில்;))
பல கதலி, Pala Kathali - பல வாழை மரங்களும்
வளம் மிக்க, Valam Mikka - செழிப்பு மிகுந்து,
எங்கும், Engum - எல்லாப் பக்கங்களிலும்
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து, Am Pon Mathil Pozhil Pudai Soozhndhu - அழகிய பொன் மயமான மதிள்களாலும் சோலைகளாலும் சுற்றிலும் சூழப்பெற்று
அழகு ஆர், Azhagu Aar - அதனால் அழகு நிறைந்த
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
கும்பம் மிகு, Kumbam Miku - மஸ்தகம் பருத்திருக்கப் பெற்றதாய்
மதம், Matham - மதத்தையுடைத்தான
வேழம், Vezham - (குவலயாபீடமென்னும்) யானை
குலைய, Kulaiya - அழியும்படி
கொம்பு பறித்து, Kombu Pariththu - அதன் தந்தங்களைப் பறித்தும்
மழவிடை அடர்த்து, Mazhavidai Adarththu - இளமையான ஏழு எருதுகளை வலியடக்கியும்
குரவை கோத்து, Kuravai Koathu - (ஆய்ச்சியரோடு) குரவைக் கூத்தாடியும்
வம்பு அவிழும், Vambu Avizhum - நறுமணம் வீசுகின்ற
மலர், Malar - மலர்களைச் சூடியுள்ள
குழலாள், Kuzhalal - கூந்தலை யுடையவளாகிய
ஆய்ச்சி, Aaychi - யசோதையென்னும் இடைச்சி
வைத்த, Vaiththa - (உறிகளில் சேமித்து) வைத்திருந்த
தயிர், Thayir - தயிரையும்
வெண்ணெய், Vennaiy - வெண்ணெயையும்
உண்டு, Undu - புஜித்தும்
உகந்த, Ugantha - மனமகிழ்ந்திருந்த
மாயோன் காண்மின், Maayon Kaanmin - விசித்ர சக்தியை யுடையவன்
1626பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாள் செல்ல நாள் செல்ல மிடுக்கு ஏறி வாரா நிற்பதான தோளை உடையனாய் விஜயமானது எப்போதும் ஒக்க வர்த்தியா நின்ற புகழை உடைத்தான ஸ்ரீ திரு வாழியைக் கையிலே உடைய சர்வாதிகன் கிடீர்) 9
ஊடேறு கஞ்சனொடு வில்லும் மல்லும் ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற நீடேறு பெரு வலித் தோளுடை வென்றி நிலவு புகழ் நேமி யங்கை நெடியோன் காண்மின் – சேடேறு பொழில் தழுவும் எழில் கொள் வீதித் திரு விழவில் மணியணிந்த திண்ணை தோறும் ஆடேறு மலர்க் குழலார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-9
பதவுரை Show / Hide
சேடு ஏறு, Sedu Aeru - இளமைமிக்குத் தோன்றுகின்ற (- அணி அழுந்தூர்  நின்று உகந்த அமரர் கோ-; (யாவனென்னில்;))
பொழில், Pozhil - சோலைகளால்
தழுவும், Thazhuvum - அணையப்பெற்ற
எழில் கொள் வீதி, Ezhil Kol Veethi - அழகிய தெருக்களிலே நடக்கின்ற
திரு விழவில், Thiru Vizhavill - திருவிழாக்களிலே
மணி அணிந்த திண்ணை தோறும், Mani Anintha Thinnai Thoram - ரத்நங்கள் பதிக்கப்பெற்ற திண்ணைகளிலெல்லாம்
ஆடு எறு, Aadu Eru - கூத்தாடும் தொழிலில் வல்லவர்களான
மலர் குழலார், Malar Kuzhalar - மலர்களையணிந்த கூந்தலை யுடைய மகளிர்
பயிலும், Payilum - நெருங்கியிருக்கப்பெற்ற
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
ஊடு ஏறு கஞ்சனொடு, Oodu Aeru Kanjanodu - (மஞ்சத்தில்) மத்தியில் ஏறியுள்ள கம்ஸனும்
மல்லும், Mallum - மல்லர்களும்
வில்லும், Villum - (தனுர்யாகத்தில் வைக்கப்பட்டிருந்த) வில்லும்
ஒள் கரியும், Ol Kariyum - அழகிய (குவலயாபீடமென்னும்) யானையும்
உருள் சகடும், Urul Sakadum - உருண்டு செல்லுந் தன்மைய தான சகடமும்
உடைய, Udaiya - அழிந்தொழியும்படி
செற்ற, Settra - அழித்திட்ட
நீடு ஏறு பெருவலி தோள் உடைய, Needu Aeru Peruvazhi Thol Udaiya - நீண்டு உயர்ந்துள்ள மிக்க வலிமைகொண்ட தோள்களையுடையவனும்
வென்றி நிலவு புகழ் நேமி அம் கை, Vendri Nilavu Pugazh Nemi Am Kai - வெற்றியினால் விளங்குகின்ற புகழையும் சக்கரமேந்திய கைகளையுமுடையனுமான
நெடியோன், Nediyon - பரமபுருஷனானவன்.
1627பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ வித ரஷணங்களையும் பண்ணும் இடத்தில்தன்னை எண்ணினால் பின்னை ஒருவரையும் எண்ணாது இருக்கிற சர்வாதிகனை –ஸ்ரீ திரு வழுந்தூரிலே நின்று அருளின சர்வாதிகன் ஆனவனை – இப்பத்தையும் வல்லார்-ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும்-என்று தாம் சேர்த்து அனுபவித்த பிரகாரம் இருக்கிறபடி – முதல் பாட்டு -ஸ்ரீ ஷீரார்ணவம்/ 2-4-5-10—திர்யக் திருவவதாரம் -நான்கு பாடல்களிலும் ஸ்ரீ கஜேந்திர ரஷணம் ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண திரு வவதாரம் -மீது ஐந்து பாசுரங்கள் இவற்றை அப்யசிக்க வல்லாருக்கு ப்ரஹ்மாதிகள் உடைய பதம் உண்டாக முன்னம் தட்டில்லை – ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் தாம் பாகவத சேஷத்வம் ஆக்குகைக்கு உடலாய் இருக்கையாலே ஐஸ்வர் யத்தையும் ஆதரித்து அருளினார் என்று அருளிச் செய்வர்) 10
பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல் ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே –7-8-10
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்பொருகாலத்தில்
பன்றி ஆய், Panri Aayi - வராஹாவதாரமாகியும்
மீன் ஆகி, Meen Aagi - மத்ஸ்யாவதாரமாகியும்
அரி ஆய், Ari Aay - நரஸிம்ஹாவதாரமாகியும்
பாரை, Paarai - நிலவுலகத்தை
படைத்து, Padaithu - ஸ்ருஷ்டித்தும்
காத்து, Kaathu - ரக்ஷித்தும்
உண்டு, Undu - பிரளய காலத்தில் உட்கொண்டும்
உமிழ்ந்த, Umizhndha - (அந்தப்பிரளயம் நீங்கினவாறே வெளிநாடுகாண) உமிழ்ந்துமருளிய
பரமன் தன்னை, Paraman Thannai - பரம்பொருளானவனும்
அமரர்க்கு அதிபதியும், Amararukku Adhipathiyum - தேவர்கட்குத் தலைவனான இந்திரனென்ன
அயனும், Ayanum - பிரம்மதேவனென்ன
சேயும், Seyum - அவனது மகனான சிவபிரானென்ன ஆகிய இவர்கள்
அடிபணிய, Adhipaniya - தனது திருவடிகளை வணங்கும்படி
அணி அழுந்தூர் நின்ற, Ani Azhundhoor Nindra - திருவழுந்தூரில் நின்ற திருக்கோலமாக எழுந்தருளியிருக்கிற
கோவை, Kovai - தேவாதிதேவனுமான எம்பெருமானைப்பற்றி
கன்றி நெடு வேல் வலவன், Kandri Nedhu Vel Valavan - சினங்கொண்டு நீண்டுள்ள வேற்படையில் வல்லவரும்
ஆலி நாடன், Aali Naadan - திருவாலிநாட்டுக்குத் தலைவரும்
கலிகன்றி, Kalikanri - கலிகன்றியென்னும் திருநாமமுடையவருமான திருமங்கை யாழ்வார்
ஒலிசெய்த, Oliseitha - இன்னோசையுடையனவாம்படி பாடியருளிய
இன்பம் பாடல், Inbam Paadal - மதுரமான பாடல்களான
ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும், Ondrinodu Naangum Oru Aindhum - இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார், Vallar - ஓதியுணர்ந்தவர்கள்
ஒலிகடல் சூழ், Olikaadal Soozh - ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்ட
உலகு, Ulaku - இவ்வுலகங்களை
ஆளும், Aalum - ஆளவல்ல
உம்பர் தாம், Umbar Thaam - தேவர்களாவர்.
1628பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உகந்து அருளின நிலங்களும் இவர் திரு உள்ளமும் ஒக்க வாய்த்து அவன் விரும்பி இருப்பது – இப்படி இருக்கையாலே ஆஸ்ரயிப்பாருக்கு ஆஸ்ரயநீய ஸ்தானம் இவை இரண்டும் யாய்த்து – சல சயனன் -என்றது-அது அவனுக்குத் திரு நாமமாய்-ஜல சயனன் வர்த்திக்கிற இடம் சல சயனம் என்று ஊருக்கு பெயராகிறது) 1
கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர் வெள்ளம் முது பரவைத் திரை விரியக் கரையெங்கும் தெள்ளும் மணி திகழும் சிறு புலியூர்ச் சல சயனத் துள்ளும் எனதுள்ளத் துள்ளும் உறைவாரை உள்ளீரே –7-9-1
பதவுரை Show / Hide
மனம், Manam - மனத்தில் நின்றும்
கள்ளம், Kallam - க்ருத்ரிமச்செயல்
விள்ளும் வகை கருதி, Vizhllum Vagai Karuthi - விட்டு நீங்கவேண்டும் வகையை விரும்பி
கழல் தொழுவீர், Kazhal Thozuveer - (எம்பெருமானுடைய) திருவடிகளை ஆச்ரயிக்க வேண்டியிருக்கிறவர்களே!
முது பரவை, Muthu Paravai - பழையதான கடலினுடைய
திரை, Thirai - அலைகளினாலுண்டான
வெள்ளம், Vellam - ப்ரவாஹமானது
கரை எங்கும் விரிய, Karai Engum Viriya - கரைகளிலெல்லாம் பரவாநிற்க,
தெள்ளும், Thellum - (அவ்வலைகளினால்) கொழிக்கப்பட்ட
மணி, Mani - ரத்ணங்கள்
திகழும், Thigazhume - விளங்கப்பெற்ற
சிறுபுலியூர், Sirupuliyoor - சிறுபுலியூரில்
சலசயனத் துள்ளும், Salasayanath Thullum - சலசயனமென்கிற ஸந்நிதியினுள்ளும்
எனது உள்ளத் துள்ளும், Enathu Ullath Thullum - என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளும்
உறைவாரை, Uraivaarai - நித்யவாஸம் பண்ணுகிற பெருமானை
உள்ளீர், Ullir - சிந்தனை செய்யுங்கள்.
1629பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அழகியதாய் கண்டார்க்கு மேல் விழும்படியான வடிவை உடைய ஸ்ரீ வாமனன் ஆன ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய திருவடிகளை ஸ்மரியுங்கோள்) 2
தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ்சோற்றோடு கஞ்சி மருவிப் பிரிந்தவர் வாய் மொழி மதியாது வந்து அடைவீர் திருவில் பொலி மறையோர் சிருபுலியூர்ச் சல சயனத்து உருவக் குறளடிகள் அடி யுணர்மின் யுணர்வீரே –7-9-2
பதவுரை Show / Hide
உணர்வீர், Unarveer - விவேகிகளே!, (- (சிறுபுலியூர், சலசயனத்து-,))
தெருவில், Theruvil - (வேலையற்றுத்) தெருக்கள் தோறும் திரிகின்றவர்களாய்
சிறு நோன்பியர், Siru Nonpiyar - அற்பங்களான விரதங்களைக் கைக்கொண்டவர்களாய்
நெஞ் சோற்றொடு கஞ்சி மருவி, Nenj Sotrrodu Kanjimaruvi - செஞ்சோற்றையும் கஞ்சியையுமுண்ண விரும்பி
பிரிந்தவர், Pirindhavar - வைதிக கோஷ்டியிற் சேராதே தனிப்பட்டுப் பிரிந்தவர்களான ஜைநர் முதலானாருடைய
வாய் மொழி, Vaai Mozhi - வாய்ப்பேச்சுகளை
மதியாது, Madhiyadhu - திரஸ்கரித்து விட்டு
வந்து அடைவீர், Vandhu Adaiveer - (எம்பெருமானளவிலே) வந்து சேருங்கள்;
திருவில், Thiruvil - செல்வத்தினால்
பொலி, Poli - விளங்குகின்ற
மறையோர், Maraiyore - வைதிகர்கள் வாழ்கிற
உருவம், Uruvam - அழகிய
குறள், Kural - வாமநாவதாரஞ்செய்தருளிய
அடிகள், Adigal - ஸ்வாமியினுடைய
அடி, Adi - திருவடிகளை
உணர்மின், Unarmin - சிந்தியுங்கள்
1630பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண்டிகோளே நாம் இருக்கிறபடி நீங்களும் இப்படியே இருக்கப் பாருங்கோள் -என்கிறார் – ஸ்ரீ சிறு புலியீர் சல சயனத்தில் நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய திருவடிகளை ஒழிய வேர் ஒன்றை த்யாஜ்யதயா வாகிலும் அறிவது ஓன்று இல்லை) 3
பறையும் வினை தொழுது உய்மின் நீர் பணியும் சிறு தொண்டீர் அறையும் புனல் ஒரு பால் வயல் ஒரு பால் பொழில் ஒரு பால் சிறை வண்டினம் அறையும் சிறு புலியூர்ச் சல சயனத் துறையும் மிறையடி யல்லது ஓன்று இறையும் அறியேனே –7-9-3
பதவுரை Show / Hide
பணியும் சிறு தொண்டீர், Paniyum Siru Thondheer - (தகாதவிஷயங்களில்) பணிவுள்ள சிறுதொண்டர்களே! (- (தொழுதலால்) (சிறுபுலியூர், சலசயனத்து-;))
நீர், Neer - நீங்கள்
தொழுது, Thozhudhu - (சிறுபுலியூர்ச் சலசயனத்தைத்) தொழுது
உய்மின், Uymin - உஜ்ஜீவியுங்கள்;
வினை, Vinai - பாவங்கள்
பறையும், Paraiyum - தொலைந்துபோம்;
ஒருபால், Orupaal - ஒருபக்கத்திலுள்ள
அறையும் புனல், Araiym Punal - ஒலிக்கின்ற ஜல்த்திலும்
ஒருபால், Orupaal - மற்றொருபக்கத்திலுள்ள
வயல், Vayal - கழனிகளிலும்
ஒருபால், Orupaal - மற்றுமொருபக்கத்திலு்ள
பொழில், Pozhil - சோலைகளிலும்
சிறை வண்டு இனம் அறையும், Sirai Vandu Inam Araiym - சிறகுகளையுடைய வண்டுத் திரள்கள் ரீ்ங்காரஞ் செய்யப்பெற்ற
உறையும், Uraiyum - பொருந்திவாழ்கின்ற
இறை, Irai - பெருமானுடைய
அடி அல்லது, Adi Allathu - திருவடிகளையன்றி
ஒன்று, Ondru - வேறொன்றை
இறையும், Iraiyum - சிறிதும்
அறியேன், Ariyen - அறியமாட்டேன்.
1631பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தம்மை அவர்கள் ஆப்தராக நினைத்து இருக்கிறபடியால் தாம் சொல்லிற்று கேட்பார்கள் -என்று பார்த்து தம்படியை அவர்களுக்கு அறிவித்து-நீங்களும் என்னைப் போலே அவனைக் கொண்டு உங்கள் விரோதிகளைப் போக்கிக் கொள்ளப் பாருங்கோள் என்கிறார்) 4
வானார் மதி பொதியும் சடை மழுவாளி யொடு ஒருபால் தானாகிய தலைவனவன் அமரர்க்கு அதிபதியாம் தேனார் பொழில் தழுவும் சிறு புலியூர் சல சயனத் தானாயனது அடி அல்லது ஓன்று அறியேன் அடியேனே –7-9-4
பதவுரை Show / Hide
ஒருபால், Orupaal - திருமேனியினொரு பக்கத்தில் (- (அடியேன் அறியேன்-))
வான் ஆர் மதி பொதியும் சடை, Vaan Aar Mathi Pothiyum Sadai - ஆகாசத்திலே பொருந்தி யிருக்கிற சந்திரன் அடங்கிய ஜடையை யுடையவனாய்
மழுவாளி யொடு, Mazhuvaali Yodu - மழுவேந்தியான சிவனோடு கூடி
தான் ஆகிய தலைவன் அவன், Thaan Aagiya Thalaivan Avan - தான் என்று சொல்லப்படும் தலைவனாயிருப்பவனும்
அமரர்க்கு அதிபதி ஆம், Amararukku Adhipathi Aam - தேவர்கட்கு இறைவனான இந்திரனும் தானாயிருப்பவனும்,
தேன் ஆர் பொழில் தழுவும், Then Aar Pozhil Thazhuvum - தேன் நிறைந்த சோலைகள் தழுவப்பெற்ற
சிறுபுலியூர், Sirupuliyoor - திருச்சிறுபுலியூரிலே
சலசயனத்து, Salasayanathu - சலசயனமென்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனுமான
ஆன் ஆயனது, Aan Aayanathu - கோபாலக்ருஷ்ணனுடைய
அடி அல்லது, Adi Allathu - திருவடிகளையன்றி
ஒன்று, Ondru - மற்றொன்றையும்
1632பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அல்லாதார் செய்தபடி செய்ய அநந்ய கதியான என் பக்கலிலே உன்னுடைய கண் அழிவற்ற கிருபையைப் பண்ணி அருள வேணும்) 5
நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை நாளும் எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறிநீர்ச் செந்தாமரை மலரும் சிறு புலியூர்ச் சலசயனத்து அந்தாமரை யடியாய் உனதடியேற்கு அருள் புரியே –7-9-5
பதவுரை Show / Hide
இமையோர், Imaiyor - தேவர்கள்
நாளும், Naalum - நாள்தோறும்
எந்தாய் என, Endhai Enna - எம்பெருமானே! என்று சொல்லி
தொழுது, Thozhudhu - அடிபணிந்து
ஏத்தும், Aethum - துதிக்கப்பெற்ற
இடம், Idam - திவ்யதேசமாய்
எறி நீர் செந்தாமரை மலரும் சிறுபுலியூர், Eri Neer Senthamarai Malarum Sirupuliyur - அலைமோதும் நீர் நிலைகளிலே செந்தாமரைப் பூக்கள் மலரப்பெற்றதான சிறுபுலியூரிலுள்ளதான
சலசயனத்து, Salasayanathu - சலசயனக்கோயிலிலே (எழுந்தருளியிருக்கிற)
அம் தாமரை அடியாய், Am Thamarai Adiyaai - அழகிய தாமரைப் பூப்போன்ற திருவடிகளை யுடையவனே!
நந்தா நெடு நரகத்திடை, Nandha Nedu Naragathidai - அழிவில்லாத பெரிய நரகத்திலே
நணுகாவகை, Nanugavakai - (நான்) சேராதபடி
உனது அடியேற்கு அருள் புரி, Unathu Adiyerku Arul Puri - உன் அடியானான என் திறத்தில் க்ருபை பண்ணவேணும்,
1633பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சிறுபுலியீர்ச் சலசயனத்தை தொழுகையே ஸ்வபாவமாக உடையாருடைய திருவடிகளைத் தொழுவார்க்கு துக்கங்கள் நில்லா –அவை தன்னடியே விட்டுப் போம்) 6
முழு ஆம்பலும் அலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவிக் கழுநீரொடு மடவாரவர் கண் வாய் முக மலரும் செழுநீர் வயல் தழுவும் சிறுபுலியீர்ச் சலசயனம் தொழு நீர்மை யது உடையார் அடி தொழுவார் துயர் இலரே –7-9-6
பதவுரை Show / Hide
முழு நீலமும், Muzhu Neelamum - பூர்த்தியாகக் கறுத்திருக்கிற நீலோற்பவமும் (- (சிறுபுலியூர், சலசயனத்தை-,))
ஆம்பல் மலரும், Aambal Malarum - ஆம்பல் மலர்களும்
அரவிந்தமும், Aravindhamum - தாமரைகளும்
கழுநீரொடு, Kazhunirodu - செங்கழுநீர்ப் பூக்களும்
விரவி, Viravi - சேர்ந்து
மடவாரவர், Madavaaravar - (அங்குள்ள) மாதர்களினுடைய
கண், Kan - கண்கள் போலவும்
வாய், Vaai - அதரம் போலவும்
முகம், Mugam - முகம் போலவும்
அலரும், Alarum - விகஸிக்கப்பெற்ற
செழு நீர் வயல், Sezhu Neer Vayal - செழித்த நீர் நிறைந்த வயல்களினால்
தழுவும், Thazhuvum - சுற்றுஞ் சூழப்பட்ட
தொழும் நீர்மையது உடையார், Thozhum Neermaiyathu Udaiyaar - தொழுகையையே ஸ்வபாவமாக வுடையவர்களினுடைய
அடி, Adi - திருவடிகளை
தொழுவார், Thozhuvar - தொழுமவர்கள்
துயர் இலர், Thuyar Ilan - துக்கமற்றவரார்.
1634பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன் திருவடிகளில் அசாதாரணராய் இருப்பார் ஹிருதயங்களில் உள்ளாயோ –அடியேன் அறிகிறேன் இல்லை – எனக்கு இது தெரிய அருளிச் செய்ய வேணும் – இத்தால் சொல்லிற்று ஆயத்து –ஸ்ரீ சௌபரி பல வடிவு கொண்டால் போலே இவ்வோ இடங்கள் தோறும் இனி அவ்வருகு இல்லை என்னும்படி குறைவற வர்த்திக்கிற படியைக் காட்டிக் கொடுத்தான்) 7
சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும் மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ தீயோம்புகை மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத் தாயோ வுனதடியார் மனத்தாயோ வறியேனே –7-9-7
பதவுரை Show / Hide
சேய் ஓங்கு, Sei Ongu - மிகவும் உயர்ந்ததாய்
தண், Than - குளிர்ந்ததான
திருமாலிருஞ் சோலைமலை, Thirumaalirunj Cholaimalai - திருமாலிருஞ்சோலை மலையிலே
உறையும், Uraiyum - நித்யவாஸஞ்செய்கிற
மாயா, Maayaa - ஆச்சரியனே!  (நீ)
மறை நான்கினுளாயோ, Marai Naankinulayo - நால் வேதங்களினுள்ளே இருக்கின்றாயோ?
தீ ஓம்பு, Thii Oombu - ஹோமத்தீயை வளர்க்கின்ற
கை, Kai - கையையுடையரான
மறையோர், Maraiyore - வைதிகர்கள் வாழ்கின்ற
சிறு புலியூர் சலசயனத் தாயோ, Siru Puliyur Salasayanath Thaayo - சிறுபுலியூரில் சலசயனக் கோயிலுள்ளாயோ?
உனது அடியார் மனத் தாயோ, Unathu Adiyaar Manath Thaayo - உனது அன்பர்களின் நெஞ்சிலுள்ளாயோ?
அறியேன், Ariyen - அறிகின்றிலேன்;
எனக்கு இது உரையாய், Enakku Ithu Urayai - எனக்கு இதை(த் தெரிய) அருளிச் செய்யவேணும்.
1635பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அனுபவ ஜனித ப்ரீதிக்குப் போக்கு விடுகைக்கு பலவாய்த் தலைகளை உடையனாய் சைத்யாதிகளை பிரக்ருதியாக உடைய ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளி பிரயோஜன நிரபேஷமாக ரஷணத்திலே ஒருப் பட்டு இருக்கிறவனே – என் பக்கலிலே உன்னுடைய கிருபையைப் பண்ணி அருள வேணும்) 8
மையார் வரிநீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சல சயனத்து ஐவாய அரவணை மேல் உறை யமலா யருளாயே –7-9-8
பதவுரை Show / Hide
கிளி, Kili - கிளிகளானவை
மடவார், Madavaar - ஸ்த்ரீகளினுடைய
செவ்வாய், Sevvaai - சிவந்த வாயில் நின்று முண்டான
மொழி, Mozhi - சொற்களை
பயிலும், Payilum - ஆவ்ருத்திபண்ணாநின்ற
சிறுபுலியூர்,, Siru Puliyur - சலசயனத்து-;
ஐ வாய், Ai Vaai - ஐந்து வாயையுடைய
அரவு அணை மேல், Aravu Anai Mael - அதிசேஷனாகிற சயனத்தில் மீது
உறை, Urai - உறைகின்ற
அமலா, Amalaa - நின்மலனே!
மை ஆர், Mai Aar - அயணிந்ததாய்
வரி, Vari - ரேகைகளையுடைத்தாய்
நீலம் மலர், Neelam Malar - கரு நெய்தல் பூப்போன்றதான
கண்ணார், Kannaar - கண்ணையுடையரான மாதர்களிடத்திலே
மனம், Manam - மனத்தை
விட்டிட்டு, Vittittu - விட்டொழித்து
உய்வான், Uyvaan - உஜ்ஜீவிப்பதற்காக
உன கழலே, Un Kazhale - உனது திருவடிகளையே
தொழுது எழுவேன், Thozhudhu Ezhuvein - வணங்கியெழுகின்றேன்;
அருளாய், Arulai - (அடியேன் மீது) க்ருபை செய்தருள்.
1636பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிரதிசய போக்யனாய்க் கொண்டு ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடும் கூட சிறுபுலியூர்ச் சல சயனத்த்திலே சாய்ந்து அருளினவனே-ஸ்ரீ யபதியான உனது திருவடிகளை ஒழிய எனக்கு வேறு ஒரு புகல் இல்லை பிராப்யம் இல்லை) 9
கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா பெருமால் வரை யுருவா பிறவுருவா நினதுருவா திருமா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சல சயனத்து அருமா கடலமுதே யுனதடியே சரணாமே –7-9-9
பதவுரை Show / Hide
கரு மா முகில் உருவா, Karuma Mukil Uruva - கறுத்துப் பெருத்த மேகம் போன்றவடிவையுடையவனே! (- (சிறுபுலியூர் சலசயனத்து-;))
கனல் உருவா, Kanal Uruva - (அன்பில்லாதார்க்கு அணுகவொண்ணாதபடி) நெருப்பைப்போலும் உருவமுடையவனே!
புனல் உருவா, Punal Uruva - நீர்போலே குளிர்ந்த வடிவையுடையவனே!
பெரு மால் வரை உருவா, Perumal Varai Uruva - மிகவும் பெரிய மலைபோன்ற உருவத்தையுடையவனே!
பிற உருவா, Pira Uruva - மற்றுமுள்ள பொருள்களையும் வடிவாக வுடையவனே!
நினது உருவா, Ninathu Uruva - உனக்கு அஸாதாரணமான திவ்யமங்களவிக்ரஹத்தை யுடையவனே!
திரு மா மகள் மருவும், Thiru Ma Magal Maruvum - பெரிய பிராட்டியார் பொருந்தி வாழ்கிற
அரு மா கடல் அமுதே, Aru Ma Kadal Amudhe - பெறுதற்கரிய சிறந்த கடலமுதம் போன்றவனே!
உனது அடியே, Unathu Adiye - உனது திருவடிகளே
சரண் ஆம், Saran Aam - (அடியேனுக்கு) புகலிடமாம்.
1637பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாபம் வருகைக்கு யோக்யமான தேசத்திலே இருக்கச் செய்தேயும் இவற்றை வாயாலே சொல்லி ஆஸ்ரயிக்க- பாபங்கள் தானே நமக்கு இவ்விடம் இருப்பிடம் அல்ல -என்று விட்டுப் போம்) 10
சீரார் நெடுமறுகில் சிறுபுலியூர்ச் சல சயனத்து ஏரார் முகில் வண்ணன் தன்னை இமையோர் பெருமானைக் காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே –7-9-10
பதவுரை Show / Hide
சீர் ஆர் நெடு மறுகில், Seer Ar Nedum Marukil - சீர்மைபொருந்திய நீண்ட திருவீதிகளை யுடைத்தான (- சலசயனக்கோயிலிலே (எழுந்தருளியிருக்கின்ற))
சிறுபுலியூர், Sirupuliyoor - சிறுபுலியூரில் சலசயனத்து
ஏர் ஆர், Eer Ar - அழகுமிக்க
முகில்வண்ணன் தன்னை, Mukilvannan Thannai - மேகம்போன்ற திருநிறத்தையுடையனாய்
இமையோர் பெருமானை, Imaiyor Perumanai - நித்யஸூரிகட்குத் தலைவனான திருமாலைக்குறித்து,-
கார் ஆர் வயல் மங்கைக்கு, Kar Ar Vayal Mangaiyku - கருமைபொருந்திய கழனிகளையுடைய திருமங்கை நாட்டுக்கு
இறை, Irai - தலைவரான
கலியன், Kaliyan - ஆழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை இவை, Malai Ivai - இச்சொல் மாலைகளை
பாரார், Paarar - பூமியிலுள்ளவர்கள்
பரவி, Paravi - சொல்லி
தொழ, Thozha - (அப்பெருமானைத்) தொழுமளவில்
பாவம், Paavam - பாவங்கள்
பயிலா, Payila - நிற்கமாட்டா (தொலைந்துபோம்)
1638பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தேயும் இதுக்கு முன்பு அனுபவித்து அறியாதது ஒன்றில் போலே பிறக்கிற ஆசை யானவனை –அம்ருதத்தை நீராகப் பாய்ச்சி வளர்த்தால் போலே நிரதிசய போக்ய பூதமான கரும்பு போலே இனியனாய் இருக்கிறவனை – அப்போதே நுகரலாம்படி பக்வ பலமாய் இருக்கிறவனை –பசித்த இடத்தே ஸூக போஜனம் பண்ணப் பெறுவாரைப் போலே அபேஷை பிறந்த இடத்தே கண்டு அனுபவிக்கப் பெற்றேன்) 1
பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யானை எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக் கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-1
பதவுரை Show / Hide
பெரு புறம் கடலை, Peru Puram Kadalai - விசாலமான இடத்தை யுடைத்தான கடல் போலே அளவிட முடியாத ஸ்வரூப ஸ்வபாவங்களை யுடையவனும்
அடல் ஏற்றினை, Adal Aetrinai - செருக்குடைய ரிஷபம் போலே மேனாணிப் புள்ளவனும்
பெண்ணை, Pennai - ஸ்திரீகளைப்போல் பாரதந்திரியமே வடிவாயிருப்பவனும்
ஆணை, Aanai - ஸ்வதந்தரனாயிருப்பவனும்
எண் இல் முனிவர்க்கு, En Il Munivarkku - எண்ணிறந்தயோகிகளுக்கு
அருள் தரும் தவத்தை, Arul Tarum Thavathai - அருள் தந்திடும் தவப்பயனாயுள்ளவனும்
முத்தின் திரள் கோவையை, Muththin Thiral Kovaiyai - முத்துத்திரளினாலாகிய மாலை போன்றவனும்
பத்தர் ஆவியை, Pathar Aaviyai - பக்தர்களுக்கு உயிர் நிலையாயிருப்பவனும்
நித்திலம் தொத்தினை, Niththilam Thoththinai - முத்துக்குவியல் போன்றிருப்பவனும்
அரும்பினை, Arumbinai - அரும்புபோல குமாரத் தன்மையுள்ளவனும்
அலரை, Alarai - மலர்ந்த புஷ்பம்போலே யௌவன பருவ முள்ளவனும்
அடியேன் மனத்து ஆசையை, Adiyen Manaththu Aasaiyai - அடியேனுடைய மனத்திலே புதிது புதிதாகத் தோன்றுகிற ஆசைக்கு இலக்கானவனும்
அமுதம் பொதி இன் சுவை கரும்பினை, Amudham Pothi In Suvai Karumbinai - அமுதத்தை நீராகப் பாய்ச்சி அதனால் வளர்ந்த இனிய சுவையை யுடைய கரும்புபோல் மதுரமானவனும்
கனியை, Kaniyai - கனிபோல் அப்போதே அநுபவிக்கத்தக்க போக்யனுமான எம்பெருமானை
சென்று நாடி, Sendru Naadi - தேடித்திரிந்து
கண்ண மங்கையுள், Kanna Mangaiyul - திருக்கண்ண மங்கையிலே
கண்டு கொண்டேன், Kandu Konden - ஸேவிக்கப்பெற்றேன்.
1639பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிரதிசய போக்கியம் ஆனவனை –நெருக்கிக் கார்யம் கொள்ள வேண்டாதே அப்போதே பருகலாம்படி இருக்கிற கரும்பில் ராசம்சம் ஆனவனை – ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே) 2
மெய்ந்நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை மைந்நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக் கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-2
பதவுரை Show / Hide
மெய் நலம் தவத்தை, Mei Nalam Thavathai - மெய்யாய் நன்றான பக்தியோகத்திற்கு ப்ரவர்த்தகனும் (- (கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன்-.))
திவத்தை தரும் மெய்யை, Thivaththai Tarum Meiyyai - பரமபதமளிக்வல்ல ப்ரபத்தி யோகத்திற்கு ப்ரவர்த்தகனும்
பொய்யினை, Poyyinai - (அன்பில்லாதார்க்குப்) பொய்யனாயிருப்பவனும்
கையில் ஓர் சங்கு உடை, Kaiyil Oru Sangu Udai - திருக்கையில் ஒப்பற்ற ஸ்ரீபாஞ்சஜந்யத்தை யுடையவனும்
மை நிறம் கடலை, Mai Niram Kadalai - கறுத்த நிறத்தையுடை கடல்போன்றவனும்
கடல் வண்ணனை, Kadal Vannana - கடல்போல் கம்பீர ஸ்வபாவமுள்ளவனும்
மாலை, Malai - எல்லாரினும் மேம்பட்டவனும்
ஆலிலை பள்ளி கொள் மாயனை, Aalilai Palli Kol Mayanai - ஆலந்தளிரில் பள்ளி கொண்ட ஆச்சரியனும்
நென்னலை பகலை, Nennalai Pakalai - நேற்றைப்போதில் அநுபவிக்க்பபட்ட வஸ்துபோல் நெஞ்சை விட்டகலாத போக்யதையை யுடையவனும்
இற்றை நாளினை, Ittai Naalhinai - இன்று அநுபவிக்கப்படுகிற வஸ்து போன்றவனும்
நாளையாய் வரும், Naalaiyaai Varum - மேலுள்ள காலமும் இப்படியே அனுபவிக்க வுரியவனானவனும்
திங்களை, Thingkalai - மாஸத்துக்கு நிர்வாஹகனும்
ஆண்டினை, Aandhinai - ஸம்வத்ஸரத்துக்கு நிர்வாஹகனும்
கன்னலை, Kannalai - கன்னற்கட்டி போன்றவனும்
கரும்பினிடை தேறலை, Karumbinidai Therilai - கரும்புத் தடியிலுண்டான  சாறுபோன்றவனுமான பெருமானை
1640பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அசாதாரணமான விக்ரஹத்தோடே ஸ்ரீ திருமலையிலே ஏக தேசமாய் இருக்கிறவனை – நசையை உடையோமாய்க் கொண்டு நம்மாலே ஆஸ்ரயிக்கப்படுகிற போக யோக்யமான காலம் ஆனவனை – அதுக்கு உறுப்பாக த்ரவ்யார்ஜனத்து ஈடான காலம் ஆனவனை சென்று நாடி ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே) 3
எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலி மங்கை தன்னை பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனிமா மதி யந்தவள் மங்குலைச் சுடரை வடமா மலை யுச்சியைநச்சி நாம் வணங்கப் படும் கங்குலைப் பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-3
பதவுரை Show / Hide
எங்களுக்கு, Engalukkum - எங்கள் விஷயத்தில் (- (சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன்-,))
அருள் செய்கின்ற, Arul Seigindra - கிருபை பண்ணுகிற ஸர்வேச்வரனும்
வாசம் வார் குழலாள், Vaasam Vaar Kuzhalal - பரிமளம் விசா நின்றுள்ள கூந்தலையுடையவளான
மலை மங்கை தன் பங்கனை, Malai Mangai Than Panganai - பார்வதியைத் தனக்குப் பாதிபாகமாக வுடையவனான ருத்ரனை
பங்கில் வைத்து உகந்தான் தன்னை, Pangil Vaiththu Ugandhaan Thannai - தனது ஒரு பக்கத்திலே (இடஙகொடுத்து) வைத்து உகந்திருப்பவனும்
பான்மையை, Paanmaiyai - இப்படிப்பட்ட சீல குணமே ஸ்வபாவமாயுள்ளவனும்
பனி மா மதியம் தவழ் மங்குலை, Pani Maa Madhiyam Thavazh Mangulai - குளிர்ந்த பூரணசந்திரன் தவழப்பெற்ற ஆகாசமாய் நிற்பவனும்
சுடரை, Sudarai - ஸூர்யனக்கு அந்தர்யாமியா யிருப்பவனும்
வட மா மலை உச்சியை, Vada Maa Malai Uchiye - வேங்கட மலையின் கிகரந் தானாயிருப்பவனும்
நச்சி நாம் வணங்கப்படும், Nachchi Naam Vanangappadum - நம்மால் விரும்பி வணங்கப் படுபவனும்
கங்குலை, Gangulai - இராப்பொழுதுக்கு ப்ரவர்த்தகனும்
பகலை, Pagalai - பகற்பொழுதுக்கு ப்ரவர்த்தகனுமான பெருமானை
1641பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இந்த ஸ்வ பாவத்தைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனை –எனக்கு கைம்முதல் இல்லாத வன்று அழித்துக் கெடுத்து ஜிவிக்கலாம் படி யான நிதியானவனை –பொன் போலே ஸ்ப்ருஹநீயம் ஆனவனை – அப் பொன்னை அழித்தும் ஸ்வீகரிக்கக் கடவ ரத்னம் போலே ஸ்லாக்கியம் ஆனவனை – சென்று நாடி ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே) 4
பேய் முலைத்தள நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக் காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-4
பதவுரை Show / Hide
பேய் முலைத்தலை நஞ்சு உண்ட பிள்ளையாய், Pei Mulaitthalai Nanju Unda Pillaiyaai - பேய்ச்சியாகிய பூதனையுடைய முலையிடத்துண்டான விஷத்தை அமுது செய்த சிறுவனும், (- (சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன்-))
தெள்ளியார் வணங்கப்படும் தேவனை, Thelliyaar Vanangappadum Devanai - தெளிந்த ஞானிகளால் ஆச்ரயிக்கப்படுகின்ற தெய்வமாயிருப்பவனும்
மாயனை, Maayanai - ஆச்சரியனும்
மதிள் கோவல் இடைகழி மைந்தனை, Mathil Koval Idaikazhi Maindhanai - திருமதிளை யுடைய திருக்கோவலூரிலே இடைகழியிலுறைகின்ற யுவாவானவனும்
அன்றி, Andri - தவிரவும்
அந்தணர், Andhanar - அந்தணர்களினுடைய
சிந்தையுள், Sindhaiyul - மனத்திலேயிருந்து கொண்டு
ஈசனை, Eesanai - அவர்களை நியமிப்பவனும்
இலங்கும் சுடர் சோதியை, Ilankum Sudar Sothiyai - ஒளிபெற்று விளங்குகின்ற பெருஞ் சோதிமயமாயிருப்பவனும்.
எந்தையை, Endhaiyai - எனக்கு ஸ்வாமியம்
எனக்கு எய்ப்பினில் வைப்பினை, Enakku Eyppinil Vaippinai - எனக்குத் தளர்த்தி வருங்காலத்தில் (உதவக் கூடிய) நிதி போன்றவனும்
காசினை, Kaasinai - பொன் போன்றவனும்
மணியை, Maniyai - ரத்னம் போன்றவனுமான எம்பெருமானை
1642பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவ்வளவும் போகப் பற்றாதார்க்கு காட்சி கொடுக்கைக்காக ஸ்ரீ திரு நின்றவூரிலே நிற்கிற முத்துத் திரள் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனை – ஸ்வ ஸ்பர்சத்தால் வரும் ஸூகமாய் இருக்கிறவனை – தாரகம் ஆனவனை –-சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே) 5
ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய கூற்றினைக் குரு மா மணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினைக் காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-5
பதவுரை Show / Hide
ஏற்றினை, Aetrinai - காளைபோல் செருக்குடையவனும் (- (சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன்-.))
இமயத்துள் எம் ஈசனை, Imayathul Em Eesanai - இமயமலைத் திருப்பிரிதியிலெழுந்தருளியிருக்கின்ற ஸ்வாமியும்
இம்மையை, Immayai - இஹலோகத்ததுப் பலன்களை யளிப்பவனும்
மறுமைக்கு மருந்தினை, Marumaikku Marundhinai - பரலோகபுருஷார்த்தத்திற்கு ஸாதனமாயிருப்பவனும்
ஆற்றலை, Aatralai - பரிபூர்ணசக்தியே வடிவெடுத்தது போலிருப்பவனும்
அண்டத்து அப்புறத்து, Andaththu Appuraththu - அண்டங்களுக்கு அப்பாலுள்ள பரமபதத்தில்
உய்த்திடும், Uyththidum - (அன்பர்களைச்) செலுத்தவல்ல
ஐயனை, Aiyyanai - ஸ்வாமியும்
கையில், Kaiyil - திருக்கையில்
ஒன்று ஆழி, Onru Aazhi - ஒப்பற்ற திருவாழியை
ஏந்திய, Aendhiya - தரித்துக்கொண்டுள்ளவனும்
கூற்றினை, Koottinai - (எதிரிகட்கு) யமன் போன்றவனும்,
குரு மா மணி குன்றினை, Guru Maa Mani Kunrinai - சிறந்த நீலமணிமயமான மலைபோன்றவனும்
நின்றவூர் நின்ற நித்திலம் தொத்தினை, Ninravoor Nindra Niththilam Thoththinai - திருநின்றவூரி லெழுந்தருளி யிருக்கிற முத்துத்திரள் போன்றவனும்
காற்றினை, Kaatrinai - காற்றுப்போல் ஸுகமளிப்பவனும்
புனலை, Punalai - தண்ணீர்போல் உயிர்தரிக்கச் செய்பவனமான பெருமானை
1643பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வைஸ் ஸ்ப்ருஹநீயமானவனை-போக்ய-போகோ உபகரண போக ஸ்தானங்களாய் உள்ளவனை – காலமே சேஷித்த அன்று காலமாய் நின்றவனை – நித்தியமான திவ்ய ஆயுதங்களை ஏந்தும் திருக் கையை உடையவனை – நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனை -என்றபடி – பிராமணர் உடைய மரியாதை போலே இருக்கிற சங்கல்பத்தை உடையவனை – பிராமணராலே அத்யயனம் பண்ணப் படுகிறவனை-என்றுமாம் –ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே) 6
துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் சுடர் வான் கலன் பெய்ததோர் செப்பினைத் திருமங்கை மணாளனைத் தேவனைத் திகழும் பவளத்தொளி யொப்பனை யுலகேழினை யூழியை ஆழி ஏந்திய கையனை யந்தணர் கற்பினைக் கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6
பதவுரை Show / Hide
துப்பனை, Thuppanai - ஸத்யஸங்கல்பனும் (- (கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே-.))
துரங்கம், Thurangam - குதிரைவடிவாய் வந்த அஸுரன்
பட, Pada - அழியும்படி
சீறிய, Seeriyai - சீற்றங்கொண்ட
தோன்றலை, Thonralai - பெருமையிற்சிறந்தவனும்
சுடர் வான் கலன்பெய்தது, Sudar Vaan Kalanpeithathu - ஒளிபொருந்திய சிறந்த ஆபரணங்களை இட்டு வைப்பதற்குரிய
ஓர் செப்பினை, Oru Seppinai - ஒரு கரண்டகம் போன்றவனும்
திருமங்கை மணாளனை, Thirumangai Manalanai - திருமகள் கொழுநனும்
தேவனை, Devanai - அத்திருமகளுடைய சேர்த்தியால் விளங்குபவனும்
திகழும் பவளத்து ஒளி ஒப்பனை, Thigazhum Pavazhathu Olli Oppanai - விளங்குகின்ற பவழங்களின் ஒளியை ஒத்திருப்பவனும்
உலகு ஏழினை, Ulaku Ezhinai - ஏழுலகங்கட்கும் நியாமகனும்
ஊழியை, Oozhiyai - காலமாய் நிற்பவனும்
ஆழி ஏந்திய கையனை, Aazhi Aendhiya Kaiyanai - சக்கரமேந்திய திருக்கையை யுடையவனும்
அந்தணர் கற்பினை, Andhanar Karppinai - அந்தணர்களின் கல்விக்கு விஷயமாயிருப்பவனுமான எம்பிரானை
கழுநீர் மலரும் வயல், Kazhunir Malarum Vayal - செங்கழுநீர்ப்பூக்கள் மலரப்பெற்ற வயல்களை யுடைத்தான
1644பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதிகளைப் போக்குமவன் –விரோதி நிரசனத்தை சீலமாக உடைய உபகாரகனை – படபாமுகாக்னி ஜலம் அடைய தகன் பக்கலிலே வந்து சுவரும்படி இருக்குமா போலே சர்வ பதார்த்தங்களும் தன பக்கலிலே வந்து லயிக்கும்படி இருக்கும் சக்தியை உடையவனை – களிவண்டு அறையும் பொழில் ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டேனே) 7
திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவதேவனை மூவரில் முன்னிய விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற கருத்தனைக் களிவண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே –7-10-7
பதவுரை Show / Hide
திருத்தனை, Thiruthanai - எப்போதும் பூர்ணத்ருப்தி யுள்ளவனும் (- (கண்ணமங்கையுள், கண்டுகொண்டேன்-))
திசை நான்முகன் தந்தையை, Thisai Naanmugan Thandhaiyai - சதுர்முகப்ரஹ்மாவுக்கு ஜனகனும்
தேவதேவனை, Devadevanai - தேவாதிதேவனும்
மூவரில், Moovariyil - (‘அரி அயன் அரன்’ என்று சொல்லப்படுகிற மும்மூர்த்திகளுள்
முன்னிய, Munniya - முற்பட்டிருக்கிற
விருத்தனை, Viruthanai - தலைவனும்
விளங்கும் சுடர் சோதியை, Vilangum Sudar Sothiyai - விளங்குகின்ற தேஜோராசிமயமான திவ்யமங்களவிக்ரஹத் தையுடையவனும்
விண்ணை, Vinnai - மேலுலகங்கட்கு நியாமகனும்
மண்ணினை, Manninai - மண்ணுலகுக்கு நியாமகனும்
கண்ணுதல் கூடிய அருத்தனை, Kannuthal Koodiya Aruthanai - நெற்றிக்கண்ணனான சிவன் கூடப்பெற்ற (தனது திருமேனியிற்)பாதிபாகத்தையுடையவனும்
அரியை, Ariyai - ஹரியென்னுந் திருநாமமுடையவனும்
பரி கீறிய அப்பனை, Pari Keeriyah Appanai - குதிரையாய்வந்த அஸுரனைக் கிழித்த உபகாரனும்
அப்பில் ஆர் அழல் ஆய் நின்ற கருத்தனை, Appil Aar Azhai Aay Nindra Karuthanai - நீரிலுள்ள பாடபாக்நியானது ஜலமெல்லாம் தன்னிடத்தே வந்து சுவறும்படியிருக்குமா போலே ஸகலபதார்த்தங்களும்  தன்னிடத்தே வந்து லயிக்கும்படி யிருக்கிற முழுமுதற்கர்த்தாவுமான எம்பெருமானை
களி வண்டு அறையும் பொழில், Kali Vandu Araiym Pozil - களித்த வண்டுகள் இசைபாடுஞ் சோலைகளையுடைய
1645பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிருபாதிக சேஷியை-தன் பக்கல் ஆசை உடையார் தலை மேலே நிற்கிறவனாய்- அது தான் பெறாப் பேறாக நினைத்து பூர்ணனாய் இருக்கிறவனை – கம்சனுடைய துரபிசந்தியை அவன் தன்னோடு போக்கி உகவாதாரோடு செவ்வை அழியப் பரிமாறுமவனை – ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டேனே) 8
வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சியில் நிற்கும் நம்பியைக் கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே –7-10-8
பதவுரை Show / Hide
வெம் சினம் களிற்றை, Vem Sinam Kalirrai - கொடிய கோபத்தையுடைய மதயானை போன்றவனும் (- (கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன்-.))
விளங்காய் வீழ, Vilangai Veezha - (அஸுரனாவேசித்த) விளாமரத்தின் காய்கள் உதிர்ந்து விழும்படி
கன்று, Kanru - (அஸுரனானவொரு) கன்றை
வீசிய, Veesiya - தூக்கியெறிந்த
ஈசனை, Eesanai - ஸ்வாமியும்
பேய் மகள், Pei Makal - (பூதனையென்னும்) பேய்ச்சியானவள்
துஞ்ச, Thunja - முடியும்படி
நஞ்சு, Nanju - (அவளது முலையில் தடவியிருந்த) விஷத்தை
சுவைத்து உண்ட, Suvaithu Unda - ருசிபார்த்து (உயிருடன்) கவர்ந்த
தோன்றலை, Thonralai - இளமகனும்,
தோன்றல் வாள் அரக்கன் கெட, Thonral Vaal Arakkan Keda - (இலங்கைக்கு) அரசனாய் வாட் படையையுடையனான இராவணன் மாளும்படி
தோன்றிய, Thonriya - திருவவதரித்த
நஞ்சினை, Nanjinai - விஷம்போன்றவனும்,
அமுதத்தினை, Amudhatthinai - (அன்பர்க்கு) ஆராவமுதமாயிருப்பவனும்
நாதனை, Nadhanai - ஸர்வசேஷியாயிருப்பவனும்
நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியை, Nachchuvaar Uchi Mael Nirkum Nambiyai - தன்னை ஆசைப்படுமவர்களின் தலைமீது நிற்கின்ற பரி பூர்ணனும்
கஞ்சனை துஞ்ச வஞ்சித்த வஞ்சனை, Kanjanai Thunja Vanchiththa Vanchanai - கம்ஸன் முடியும்படி அவனை வஞ்சித்த வஞ்சகனுமான பெருமானை
1646பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹமே வடிவாய் இருக்கிறவனை–ததாமி புத்தியோகம் தம் -என்கிறபடியே தன்னைப் பிராபிக்கைக்கு ஈடான புத்தி யோகத்தை கொடுக்குமவனை – வேதத்தை எங்கும் ஒக்க அதிகரித்து இருப்பார்க்கு தன்னை ஒழிய பதார்த்த தர்சனம் பண்ண ஒண்ணாத படி அவர்களுக்கு -திருஷ்டி பூதனாய் உள்ளவனை – காணப் பெறாமையால் உறாவின கண்களின் உறாவுதல் தீரும்படி -நின்று கண்டு அனுபவிக்கப் பெற்றேன்) 9
பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை மண்ணினை மலையை யலைநீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள் கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-9
பதவுரை Show / Hide
பண்ணினை, Panninai - ஸங்கீதம் போல் இனியனானவனும் (- (கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன்-.))
பண்ணில் நின்றது ஓர் பான்மையை, Pannil Nirandhadhu Oor Paanmai - அந்த சங்கீதத்தின் ஸாரமான தன்மைபோன்ற தன்மையை யுடையவனும்
பாலுள் நெய்யினை, Paalul Neyyinai - பாலினுள்ளே நெய் மறைந்திருப்பது போல எங்கும் மறைந்துறைகின்றவனும்
மால் உரு ஆய் நின்ற விண்ணினை, Maal Uru Aay Nirnda Vinninai - மிக்க பரப்பையுடைத்தான நித்ய விபூதிக்கு நாதனும்
விளங்கும் சுடர் சோதியை, Vilangum Sudar Sothiyai - விளங்குகின்ற பரஞ்சோதிமயமான திருமேனியையுடையவனும்
வேள்வியை, Velviyai - யாகஸ்வரூபியும்
விளக்கின் ஒளி தன்னை, Vilakkin Oli Tannai - விளக்கொளிபோலே ஸ்வயம் ப்ரகாசனும்
மண்ணினை, Manninai - பூமிபோலே எல்லாவற்றையும் பொறுத்திருப்பவனும்
மலையை, Malaiyai - மலைபோல் ஒருவராலும் அசைக்க வொண்ணாதவனும்
அலை நீரினை, Alai Nirinai - தண்ணீர்போலே வேண்டுமிடங்களுக்கு வருவித்துக்கொள்ளவுரியவனும்
மாலை, Malai - அடியவரிடத்து வியாமோஹம் கொண்டிருப்பவனும்
மா மதியை, Ma Madiyai - சிறந்த புத்தியை யளிப்பவனும்
மறையோர்தங்கள் கண்ணினை, Maraiyortankal Kanninai - வைதிகர்களுக்குக் கண் போன்றிருப்பவனுமான பெருமானை
கண்கள் ஆரளவும் நின்று, Kankal Aralavum Ninru - கண்கள் த்ருப்தி பெறுமளவும் நின்று
1647பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது-என்னோடு அதிகரிக்கில் அறியலாம் ஒரு வசிஷ்டனோடே-ஒரு சாந்தீபனோடே தாழ நின்று அதிகரிக்கக் கடவ அவனுக்கு ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ – இவை பத்தையும் –அனுசந்திப்பார்க்கு அடைவு படச் சொல்லுகையால் உண்டான அருமையாலே வல்லராய் உபாதான லோகங்களில் போக பூமிகள் எல்லாம் புக்கு அங்கு உண்டான போகங்களைப் புஜிப்பார்கள்) 10
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ் விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10
பதவுரை Show / Hide
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார்
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று, Kannamankaiyul Kandu Konden Enru - ‘திருக்கண்ணமங்கையில் (எம்பெருமானை) ஸேவிக்கப்பெற்றேன்’ என்று
காதலால் உரை செய்த, Kadalal Urai Seyta - அன்புடனருளிச் செய்த
வண்ணம் ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை, Vannam On Tamil Onpatotu Onru Ivai - இசையையுடைத்தாய் அழகியதான இத்தமிழ்ப் பாசுரங்ள் பத்தையும்
வல்லர் ஆய் உரைப்பார், Vallar Ay Uraippar - நிபுணராய்ச் சொல்லுமவர்கள்
மதியம் தவழ் விண்ணில், Madhiyam Taval Vinnil - சந்தியன் தவழப்பெற்ற மேலுலகங்களில்  (சென்று)
விண்ணவர் ஆய், Vinnavar Ay - தேவர்களாய்
மகிழ்வு எய்துவர், Makizhvu Eytuvar - (போகங்களையநுபவித்து) ஆநந்த மடைவர்கள்;
மெய்ம்மை சொல்லில், Meimmai Sollil - உண்மையாகச் சொல்லப் புகுந்தால்,
வெண் சங்கம் ஒன்று ஏந்திய கண்ண, Ven Sangam Onru Entin Kanna - வெண்ணிறமாய் விலக்ஷணமான ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தைத் தரித்துள்ள பெருமானே!
குறிப்பு ஆகில், Kurippu Agil - திருவுள்ளமாயின்
கவியின் பொருள், Kaviyin Porul - இப்பாசுரங்களின் பொருள்
நின் தனக்கும் கற்கலாம், Nin Tanakkum Karkalam - (ஸர்வஜ்ஞனான) உனக்கும் கேட்டுணரத்தக்கதாகும்.
1648பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் பெண் பிள்ளை சொல்லக் கடவ இது தனக்கு ரசித்த படியாலே அப்பாசுரத்தை தன் வாயாலேயும் ஒரு கால் பேசி அனுபவிக்கப் பார்க்கிறாள்) 1
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால் மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால் முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால் கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ –8-1-1
பதவுரை Show / Hide
சிலை, Silai - (என்றும்) ‘சார்ங்கவில்’ (- (இல்லையாகில் இப்படிப்பட்ட நிலைமை) (இவளுக்கு எப்படி உண்டாகும்!.))
இலங்கு பொன் ஆழி, Ilangu Pon Aazhi - ‘விளங்குகின்றதும் விரும்பத் தக்கதுமான திருவாழி’ (என்றும்)
திண் படை, Thin Padai - ‘வலிமை பொருந்திய வாட்படை’ (என்றும்)
தண்டு, Thandu - ‘கதை’ (என்றும்)
ஒண் சங்கம் என்கின்றாள், On Sangam Enkindraal - ‘அழகிய சங்கு’ என்றும் சொல்லா நின்றாள்,
ஆல்!, Aal - இஃது என்னே!
மற்று, Mattru - இன்னமும்
அவனுக்கு, Avanukku - ‘அப்பெருமானுக்கு
மலை இலங்கு, Malai Ilangu - மலைபோல் விளங்குகின்ற
நான்கு தோளே, Naanthu Thoale - நான்கு திருத்தோள்களும்
எற்றே காண், Ettrae Kaan - எப்படி அழகாயிருக்கின்றன பார்’
என்கின்றாள், Enkindraal - என்று சொல்லுகிறாள்;
முலை இலங்கு, Mulai Ilangu - முலையில் விளங்குகின்ற
பூ பயலை, Poo Payalai - அழகிய பசலை நிறமானது
முன்பு ஓட, Munbu Oda - முன்னே சென்று வழிகாட்ட
அன்பு ஓடி இருக்கின்றாள், Anbu Odi Irukkindraal - அன்பு பின் செல்லப் பெற்றிருக்கின்றாள்;
கலை இலங்கு மொழி ஆளர், Kalai Ilangu Mozhi Aalar - சாஸ்த்ரப் பயிற்சி விளங்குகின்ற வாய்ப் பேச்சை யுடையவர்கள் வாழ்கிற
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற
அம்மானை, Ammaanai - சௌரிப்பெருமாளை
கண்டாள் கொல் ஓ, Kandhaal Kol O - ஸேவிக்கப் பெற்றாளோ!
1649பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கையும் திவ்ய ஆயுதங்களுமாய் பண்ணின உபகாரம் இன்னளவு என்று பரிச்சேதிக்கலாய் இருக்கிறதோ – நிருபாதிக பந்து என்று தோற்றி யன்றோ செயல் இருக்கிறது – தன்னை உபகரிக்கைக்கு தான் முற்பாடனாய் அவசர ப்ரதீஷனாய் -வந்து நிற்கிறபடி – அஞ்சன கிரி போலே யாயிற்று கண்ணுக்கு விஷயமான போது இருக்கிறபடி – அவன் அவசர ப்ரதீஷனாய் நிற்கையே அன்றிக்கே-இவளும் ஆபி முக்கியம் பண்ணப் பெற்றது வடிவு அழகிலும் ஔதார்யம் தோற்ற நின்ற நிலையிலும் போலே காணும் இவள் கண் விழித்தது) 2
செருவரை முன்னா சறுத்த சிலையன்றோ கைத்தலத்து என்கின்றாளால் பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால் ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா வென்னப்பா வென்கின்றாளால் கருவரை போல் நின்றானைக் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-2
பதவுரை Show / Hide
முன், Mun - முன்னம் (- (என்கின்றாள் ஆல்;) (என்கின்றாள் ஆல்;) (கண்ணபுரத்து அம்மானை கண்டாள் கொலோ-))
செருவரை, Seruvarai - போர் வீரர்களை
ஆசு அறுத்த, Aasu Aruttha - சீக்கிரமாகத் தொலைத்த
சிலை அன்றோ, Silai Anro - சார்ங்க வில்லன்றோ
கைத்தலத்தது, Kaithalaththathu - திருக்கையிலுள்ளது
என்கின்றாள், Enkindraal - என்று சொல்லுகிறாள்;
மற்றொருகை, Mattroru Kai - மற்றொரு திருக்கையிலே,
முன், Mun - முன்பொருகால்
பொரு வரை, Poru Varai - (சிறகோடு கூடிப்) போர் செய்த மலைகளை
போர், Por - யுத்தத்தில்
தொலைத்த, Tholaitha - பங்கமடைவித்த
பொன் ஆழி, Pon Aazhi - அழகிய திருச்சக்கரம் (உள்ளது)
ஒப்பு, Oppu - ஒத்திருக்கும் விஷயத்தில்
நின் ஒப்பார் ஒருவரையும் இலா, Nin Oppaar Oruvaraiyum Ila - உன்னோடொத்தவர்கள் ஒருவருமில்லாதிருக்கப்பெற்ற
என் அப்பா, En Appa - என் நாயகனே;
கரு வரை போல் நின்றானை, Karuvai Pol Nindranai - அஞ்சன மலைபோல் நிற்பவனான
1650பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தனை அதிமாத்ர பிராவாண்யம் ஆகாது காண்- எல்லாம் செய்தாலும் நாங்கள் சொல்லுகிற ஹித வசனத்தை நீ கேட்க வேணும் காண் என்று நீங்கள் சொன்னால் -அவனுடைய ஆபரண சோபை கண்களுக்கு முற்படா நின்றது – உங்கள் வார்த்தை செவிப் படுகிற இத்தை நான் கேட்கவோ கண்ணுக்கு இலக்கான அவன் அழகிலே துவக்குண்ணவோ -என்னா நின்றாள் – சேஷித்வ ஸூசகமாய் இருக்கவோ -என்னா நின்றாள்) 3
துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால் மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால் பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால் கன்னி மா மதிள் புடை சூழ் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3
பதவுரை Show / Hide
துன்னு, Thunnu - நெருங்கியிருக்கின்ற (- (கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ….))
மா மணி, Ma Mani - சிறந்த ரத்னங்களிழைக்கப்பெற்ற
முடி மேல், Mudi Mel - கிரீடத்தின் மீது
துழாய் அலங்கல், Thuzhai Alangkal - திருத்துழாய் மாலை
தோன்றும ஆல் என்கின்றாள் ஆல், Thonrum Aal Enkindraal Aal - விளங்குகின்றதே! என்று சொல்லுகிறாளே!;
மின்னு, Minnu - ஜ்வலிக்கின்ற
மா மணி, Ma Mani - சிறந்த மணிகளழுத்தின
மகர குண்டலங்கள், Makara Kuntalangal - மகரக் குழைகள்
வில் வீசும் என்கின்றாள் ஆல், Vil Veesum Enkindraal Aal - ஒளி வீசுகின்றன என்று சொல்லுகிறாளே! ;
பொன்னின் மா மணி ஆரம், Ponnin Maa Mani Aaram - பொன்னாலே செய்யப்பட்டதும் சிறந்த ரத்னங்களழுத்தப்பட்டதுமான ஹாரமானது
அணி ஆகத்து, Ani Aagathu - அழகிய திருமார்பிலே
இலங்கும் ஆல் என்கின்றாள் ஆல், Ilangum Aal Enkindraal Aal - விளங்கா நின்றதே! என்று சொல்லுகிறாளே! ;
கன்னி மா மதில், Kanni Maa Mathil - அழிவில்லாத பெரிய மதிள்களாலே
புடை சூழ், Pudai Soozh - நாற்புறமும் சூழப்பட்ட
1651பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பெரிய திருவடி முதுகில் இருந்து இருப்பைக் காட்டி என்னை எனக்கு உரியேன் ஆகாதபடி -பண்ணினவன் – ஹிதம் சொல்லி விலக்குகிற நீங்களும் பாருங்கோள்- அழகிய பவளம் போலே இருந்துள்ள திரு வதரத்தைக் கண்டார்க்கு விட்டுப் போகலாய் இருந்ததோ – உக்தி மாத்ரத்திலே மீளாதே அவ்விஷயத்தைக் கண்டு அனுபவித்தாள் என்று தோற்றி இரா நின்றது) 4
தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால் போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின்றாளால் ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால் கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-4
பதவுரை Show / Hide
தார் ஆய தண் துளபம், Thaar Aaya Than Thulabam - மாலையாகிய குளிர்ந்த திருத்துழாயிலுள்ள (- (என்கின்றாள் ஆல்;) (என்கின்றாள் ஆல்;) (என்கின்றாள் ஆல்… ;) (கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ….))
வண்டு, Vandu - வண்டுகளாலே
உழுத, Uzutha - (தேனும் சுண்ணமுங்கொண்டு) சேறு செய்யப்பட்ட
வரை மார்பன், Varai Maarban - மலைபோன்ற திருமார்பை யுடையவன்
போர் ஆனை, Poar Aanaik - போர் புரிய நின்ற (கம்ஸனது) யானையினுடைய
கொம்பு ஒசித்த, Kombu Osiththa - தந்தங்களை முறித்தொழித்த
புள் பாகன், Pul Paagan - கருடவாஹநன்
என் அம்மான், En Ammaaan - எனக்கு ஸ்வாமி
ஆரானும் காண்மின்கள், Aaraanum Kaanmingal - யாராகிலும்பாருங்கள்
அவனுக்கு, Avanukku - அப்பெருமானுடைய
வாய், Vaai - திருவதரமானது
அம் பவளம், Am Pavalam - அழகிய பவளம் போல் சிவந்தது
கார் வானம், Kaar Vaanam - கறுத்த மேகம்
நின்று அதிரும், Ninru Adhirum - நிலைநின்று கோஷிக்கப்பெற்ற
1652பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம்முடைய உத்தேச்யமும் நிரதிசய போக்யமாய் இரா நின்றது – சேர்ப்பாரும் அருகே இருக்க -நான் எத்தைச் சொல்லி அகலுவது -என்னா நின்றாள் – எனக்கு பற்றாசானார் இருக்க நான் என்ன கண் அழிவு சொல்லிக் கடக்க போவது போக்யதை இல்லாமையோ –பிராப்தன் அல்லாமையோ –சேர்ப்பார் இல்லாமையோ –நான் எத்தைச் சொல்லி அகலுவது – நிரதிசய போக்யனான இவனை இவள் அனுபவித்து சொல்லுகிறாள் போலே இருந்தது) 5
அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் முடித் தலமும் பொற் பூணும் என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால் வடித் தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின்றாளால் கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-5
பதவுரை Show / Hide
அடித்தலமும், Adiththalum - திருவடிகளும் (- (என்கின்றாள் ஆல்…,) (என்கின்றாள் ஆல்…. ;) (கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ…,))
தாமரையே, Thamaraiye - தாமரைப்பூவே;
அம் கைகளும், Am Kaigalum - அழகிய திருக்கைகளும்
பங்கயமே, Pangayame - தாமரைப்பூவே;
முடித்தலமும், Mudiththalum - கிரீடமும்
பொன் பூணும், Pon Poonum - (அதிலிழைத்த) திருவாபரணமும்
என் நெஞ்சத்துள் அகலாது, En Nenchatthul Akalathu - என் மனத்தைவிட்டுப் பிரியாது
வடி, Vadi - கூர்மை பொருந்திய
தட கண், Thada Kan - பெரிய கண்களையுடையளான
மலரவளோ, Malaravaloo - பங்கயச் செல்வியான பெரிய பிராட்டியாரோ வென்னில்
வரை ஆகத்துள் இருப்பாள் என்கின்றாள், Varai Agaththul Iruppaal Enkindraal - மலைபோன்ற திருமார்பிலிருக்கிறாளென்று சொல்லுகிறாள்;
கடி கமலம், Kadi Kamalam - பரிமளமுள்ள தாமரைப்பூக்கள்
கள் உகுக்கும், Kal Ukukkum - தேனைப் பொழியப் பெற்ற
1653பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபமானம் கதிர் பெருக்க வேண்டி இருக்கிறபடி – கடலைக் கழுத்தே கட்டளையாகப் பருகின மேகம் போலேயும்-அஞ்சன கிரி போலேயும் இருக்கிற வடிவை உடையவன் என்னா நின்றாள் – ஸ்ரமஹரதையும் அபரிச்சேத்யையும் இரண்டையும் சொல்லுகிறது) 6
பேராயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால் ஏரார் கன மகரக் குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால் நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால் காரார் வயல்மருவும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-6
பதவுரை Show / Hide
ஆயிரம் பேர் உடைய, Aayiram Per Udaiya - ஆயிரந் திருநாமங்களையுடைய (- (என்கின்றாள் ஆல்…. ;) (என்கின்றாள் ஆல்-;) (கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ-))
பேர் ஆளன் பேர் ஆளன் என்கின்றாள், Per Aalan Per Aalan Enkindraal - மஹாநுபாவனென்று பலகாலும் சொல்லுகின்றாள்;
ஏர் ஆர், Aer Aar - அழகு பொருந்திய
கனம், Kanam - கனகத்தினால் செய்யப்பட்ட
மகர குண்டலத்தன், Makara Kuntalaththan - மகரக்குழைகளையுடையவன்,
எண் தோளன், En Tholan - எட்டு புஜங்களையுடையவன்
நீர் ஆர், Neer Aar - நீர் நிறைந்த
மழை முகிலே, Mazhai Mukile - கார்காலத்து மேகத்தையும்
நீள் வரையே, Neel Varaiye - பெரிய மலையையும்
ஒக்கும், Okum - ஒத்திருப்பன்
கார் ஆர் வயல் அமரும், Kaar Aar Vayal Amarum - கருமை மிக்க கழனிகள் அமர்ந்திருக்கப்பெற்ற
1654பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் உடைய உடை வாய்ப்பிலே தோற்றமை தோற்ற வாய் விடா நின்றாள் – திருப் பீதாம்பரம் சாத்தினால்- கௌசேய புஷ்பித கடீ தடம் -என்கிறபடியே திருவரை பூத்தாப் போலே யாயிற்று இருப்பது) 7
செவ்வரத்த உடை ஆடை யதன் மேலோர் சிவளிகைக் கச்சென்கின்றாளால் அவ்வரத்த வடியிணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால் கைவளர்க்கும் அழலாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-7
பதவுரை Show / Hide
செம் வரத்த உடை ஆடை, Sem Varath Uday Aadai - (என்றும்) சிவந்ததாய்ச் சிறந்ததாக உடுக்கப்பட்ட பீதாம்பரம் (- (அன்றி,) (என்கின்றாள் ஆல் – ;) (கண்ணபுரத்து அம்மானை கண்டாள் கொலோ-))
அதன் மேல் ஓர் சிவளிகை கச்சு என்கின்றாள், Adhan Mel Oor Sivalikai Kachchu Enkindraal - அந்தப் பீதாம்பரத்தின் மேல் ஒப்பற்ற சிவளிகைகச்சு (சாத்தப்பட்டிருக்கிறது) என்றும் சொல்லுகிறாள்;
அவ் வரத்த அடி இணையும், Av Varath Adi Inaiyum - அப்படிப்பட்ட சிறந்த உபயபாதங்களும்
அம் கைகளும், Am Kaigalum - அழகிய திருக்கைகளும்
பங்கயமே என்கின்றாள், Pangayame Enkindraal - தாமரைப்பூவே என்று சொல்லுகிறாள்;
மை வளர்க்கும் மணி உருவம், Mai Valarkkum Mani Uruvam - நீலநிறத்தை மிகுதியாகத் தோற்றுவிக்கின்ற நீலமணி போன்ற திருமேனி
மரதகமோ, Marathagamo - மரதகமணியோ,
மழை முகிலோ, Mazhai Mukilo - காளமேகமோ
கை வளர்க்கும் அழல் ஆளர், Kai Valarkkum Azhai Aalar - தமது கைகளால் ஓம்பப்படுகின்ற அக்நியையுடைய வரான அந்தணர் வாழ்கிற
1655பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழே அவன் அடியைப் பிடித்தும் மடியைப் பற்றியும் படியை அனுபவித்ததை கேட்டவர்கள்- இவளுக்கு இப்படி அனுபவம் செல்லா நின்றால் முலையில் பூம் பயலை பிறக்கும்படி விரஹ வ்யசனம் நடக்கைக்கு அடி என் என்று கேட்க – இவளுக்கு கிட்டே வந்து சம்ச்லேஷித்தது அல்லாதே அதூர விப்ரக்ருஷ்டமாய் வந்தாப் போலே தோற்றுகையாலே தன்னிடத்தில் வரவில் நிர்ணயம் பிறவாதே விரஹ கிலேசத்தை அடைந்தாள் என்று அவள் வார்த்தையாலே அறிந்தாளாக -அனுவதிக்கிறாள் -என்று சங்கதி – ஸ்ரீ பிள்ளை அமுதனார் இத் திருமொழிக்கு பிரவேசம் சொல்லா நிற்க ராஜாக்கள் அந்தபுரக் கட்டிலே-தெருவிலே -பள்ளி யந்துலாத்திலே ஏறி உலவா நிற்பர்கள் காண் – என்றாப் போலே அநேகம் வாக்ய சில்பங்களை பண்ணினார் – அப்போது பால்யத்தாலே அவ்வடைவுகள் புத்தி பண்ணப் பெற்றிலோம் அவற்றுக்கு இதில் பற்றாசு ஏது என்று விசாரித்தோம் – இதுவாகாதே என்று தெளிந்தோம் காண் என்று இவ்வளவிலே ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார்) 8
கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால் வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால் பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால் கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-8
பதவுரை Show / Hide
கொற்றம் புள் ஒன்று ஏறி, Kotrham Pul Ondru Eri - வெற்றி பொருந்திய ஒரு கருடப் பறவையை மேற்கொண்டு (- (என்கின்றாள் ஆல்-;) (கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ-.))
மன்று ஊடே, Mandru Oode - திருவீதியிலே
வருகின்றான், Varugiraan - எழுந்தருளுகிறான்
வெற்றி போர், Vettri Por - ஜயசீலமான யுத்தத்திலே
இந்திரற்கும் இந்திரனே ஒக்கும் என்கின்றாள், Indhirarkkum Indhirane Okum Enkindraal - மஹேந்திரனை ஒத்திருப்பன் என்கின்றாள்;
அவன் ஆகம், Avan Aagam - அப்பெருமானுடைய திருமார்பை
பெற்றக்கால், Petra Kaal - பெற்றால்
பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாள், Pen Pirandhom Uyyom O Enkindraal - பெண்ணாய் பிறந்த நாம் வாழ்ந்துபோக மாட்டோமோ என்கிறாள்;
கற்ற நூல் மறை ஆளர், Katra Nool Marai Aalar - (முறையே) கற்கப்பட்ட சாஸ்த்ரங்களை யுடையரான வைதிகர் வாழ்கிற
1656பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது காட்டுமோ – பயில்கின்றாளால் -என்றது கண்டாயே –எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ – இப்படியாக வேண்டாவோ -என்று ஸ்ரீ ஜீயர் – கண்டவர்கள் நெஞ்சை மேல் எழுத்துக் கொடா நிற்பர்கள் ஆயிற்று) 9
வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால் உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால் பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால் கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-9
பதவுரை Show / Hide
வண்டு அமரும், Vandu Amarum - வண்டுகள் படிந்த (- (கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ-))
வனமாலை, Vanamalai - திருத்துழாய் மாலை
மணிமுடிமேல், Manimudimeel - ரத்ன கிரீடத்தின் மீது
மணம் நாறும் என்கின்றாள், Manam Naarum Enkindraal - பரிமளம் கமழ நிற்கிறது என்கிறாள்;
எனக்கு இவர் பால் அன்பு உண்டு என்று, Enakku Ivar Paal Anbu Undu Endru - ‘எனக்கு இவரிடத்திலே அன்பு உண்டு’ என்று சொல்லி
ஒருகாலும் பிரிகிலேன் ஆல் என்கின்றாள், Orukaalum Pirikileen Aal Enkindraal - (அவ்வன்பரை) ஒரு நொடிப்பொழுதும் பிரிந்திருக்க முடியவில்லையே யென்கிறாள்;
இவரை, Ivarai - ‘இப்பெரியவரை
பண்டு, Pandhu - இதற்கு முன்னம்
யாம் கண்டறிவது, Yaam Kandarivathu - நாம் பார்த்திருப்பது
எவ் ஊரில், Ev Ooril - எந்த வூரிலே?
என்றே பயில்கி்ன்றாள், Endrae Payilkinraaal - என்றே பலகாலும் உருப்போடுகின்றாள்;
கண்டவர், Kandavar - ஸேவித்தவர்களெல்லோரும்
தம் மனம், Tham Manam - தங்கள் மனத்தை
வழங்கும், Vazhangu - அர்ப்பணம் செய்து விடும் படியான
1657பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரமபதத்தில் -ஆண்மின்கள் -என்றபடியே தாங்களே நிர்வாஹகராய் -இவ்வருகு உள்ளார் அடங்கலும் சாத்யர் ஆவார்கள்) 10
மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று காவளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10
பதவுரை Show / Hide
மா வளரும் மென் நோக்கி, Maa Valarum Men Nookki - மானினுடைய நோக்குப் போன்று விசாலமாய் மெல்லிதான நோக்கை யுடையளான
மாதராள், Madharaal - (பரகால) நாயகியானவள்
மாயவனை கண்டாள் என்று, Maayavanai Kandaal Endru - ஆச்சரியனான எம்பெருமானைக் கண்டாள் கொலோ என்று
கா வளரும் கடி பொழில் சூழ், Kaa Valarum Kadi Pozhil Soozh - சோலைகளில் வளரும் பரிமளமானது பூமியெங்கும் பரவப்பெற்ற
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியுள்ள
அம்மானை, Ammaanai - ஸ்வாமியைக் குறித்து
கலியன் சொன்ன, Kaliyan Sonna - திருமங்கையாழ்வாரருளிச் செய்த
பா வளரும், Paa Valarum - சந்தங்கள் நிறைந்திருக்கப் பெற்ற
தமிழ் மாலை, Tamizh Maalai - தமிழ்ப் பாசுர மாலையாகிய
பன்னிய நூல், Panniya Nool - கொண்டாடுதற்கு உரிய இத்திவ்ய ப்ரபந்தத்திற் சேர்ந்த
இவை ஐந்தும் ஐந்தும், Ivai Aindhum Aindhum - இப்பத்துப் பாட்டையும்
வல்லார், Vallaar - ஓதியுணரவல்லவர்கள்
பூ வளரும், Poo Valarum - பூக்கள் நிறைந்த
கற்பகம் சேர், Karppagam Ser - கல்ப வ்ருக்ஷம் பொருந்திய
பொன்னுலகில், Ponnulakil - பரமபதத்தில்
மன்னவர் ஆய், Mannavar Aay - நிர்வாஹகர்களாகவும்
புகழ் தக்கோர், Pugazh Thakkor - (இங்குள்ளவரையில்) புகழ்க்குத் தகுதியுடையவர்களாகவும் இருக்கப் பெறுவர்.
அடிவரவு, Adivaravu - சிலை, செரு, துன்னு, தார், அடி, பேர், செவ்வரத்த, கொற்ற, வண்டு, மாவளரும், தெள்ளியீர்.
1658பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கை வளை கொள்ளுவது தக்கதே என்ன -என்றாள் நமகக்குக் கைவளை கொள்ளத் தகாமை என் -என்று ஸ்ரீ சௌரிப் பெருமாள் கேட்க – தகாது என்னும் இடத்தை உபபாதிக்கிறாள்) 1
தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர் வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணரோ துள்ளுநீர் கண்ணபுரம் தொழுதாள் இவள் கள்வியோ கை வளை கொள்வது தக்கதே –8-2-1
பதவுரை Show / Hide
தெள்ளியீர், Thelliyeer - தெளிந்த அறிவு உடையவரே! (- (இவள்) இப்படிப்பட்ட இவள் (அப்படியிருக்க))
தேவர்க்கும் தேவர், Thevarkkum Thevar - தேவாதி தேவரே!
திரு தக்கீர், Thiru Thakkeer - பெரிய பிராட்டியார்க்குத் தகுதி யானவரே!
வெள்ளியீர், Velliyeer - சுத்தமான ஸ்வபாவத்தை யுடையவரே!
வெய்ய விழு நிதி வண்ணர், Veyya Vizhu Nidhi Vannar - காய்ச்சின சிறந்த பொன் போன்ற நிறமுடையவரே!
ஓ!, O - இஃது என்ன அநியாயம்!.
இவள், Ival - இப்பரகால நாயகியானவள்
துள்ளும் நீர், Thullum Neer - கரைபுரண்டு பெருகுகின்ற நீரை யுடைத்தான
கண்ணபுரம், Kannapuram - திருக்கண்ணபுரத்தை
தொழுதாள், Thozhuthaal - கையெடுத்துக் கும்பிட்டாள்
கள்வியோ, Kalviyoo - (ஆத்மாபஹாரம் செய்திலளாகை யாலே) கள்வியன்றே;
கை வளை கொள்வது, Kai Vazhai Kolvathu - (அடிச்சியான இவளுடைய) கைவளைகளைக் கொள்ளை கொள்வதானது
தக்கதே, Thakkadhe - உமக்குத் தகுந்ததோ?
1659பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ந நமேயம் -என்கிற பிரதிஞ்ஞை குலைந்து-ஷிப்ரம் தேவ பிரசாதி நீ -என்கிறபடியே அவிவாதம் தோற்ற ஓர் அஞ்சலி பண்ணினாள் ஆகில் இது குறையோ -என்று இறே கீழ்ச் சொல்லிற்று – இத்தைக் கேட்ட ஸ்ரீ சௌரி பெருமாள் -நீ நம்மைக் குறை சொல்லக் கடவையோ உன் மகளை நியமித்துக் கொள்ள மாட்டாயோ ஸ்திரீகளுக்கு நாண் மடம் அச்சம் பயிர்ப்பு -என்கிற ஆத்மா குணங்களில் பிரதான குணம் அன்றோ லஜ்ஜை – அது உன் மகளுக்கு இல்லையான பின்பு அவளை நியமிக்க வன்றோ அடுப்பது -என்ன அவளுடைய உக்தி வியாபாரங்கள் இருந்தபடியாலும் – சம்சர்க்க தோஷம் இருந்த படியாலும் – அவளை நியமிக்க என்பதும் ஓன்று உண்டோ இவளை அடியிலே அலைவலையாக்கி புறப்பட விட்ட இவர் கார்யமே தலை காட்டிற்று -என்கிறாள்) 2
நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள் காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள் பாணனார் திண்ணம் இருக்க வினி யிவள் நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2
பதவுரை Show / Hide
இவள், Ival - இப்பரகால நாயகியானவள்
நீள் நிலா முற்றத்து நின்று, Neel Nila Muthrathu Nindru - உன்னதஸ்தானத்திலுள்ள நிலா முற்றத்தில் நின்று கொண்டு
நோக்கினாள், Nokkinhaal - பார்த்தாள்; (தான் பார்த்துவிட்டு)
காணும் ஓ! கண்ணபுரம் என்ற காட்டினாள், Kaanum O Kannapuram Endra Kaattinaal - ‘வாரீர்! பாருங்கோள் இதோ கண்ணபுரம்’ என்று (பிறர்க்கும்) காட்டினாள்;
பாணனார் திண்ணம் இருக்க, Paananaar Thinnam Irukka - சேர்விக்கும ஆசார்யருடைய த்ருடாத்யவஸாயம் குறையற்றிருக்கையாலே
இனி இவள் நாணுமோ, Ini Ival Naanumoo - இனி இவள் வெட்கப்பட்டு மீளக்கூடுமோ;
நறையூரார்க்கே, Naraiyooraar Kke - திருநறையூர்ப் பெருமானாகிய எம்பெருமானுக்கே
நன்று நன்று, Nandru Nandru - (தன் எண்ணம்) நன்றாய்த் தலைக்கட்டிற்று.
1660பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இனி இவள் நாணுமோ என்று இறே கீழ் சொல்லிற்று அந்த லஜ்ஜை தான் உண்டாவது சத்தை உண்டானால் இறே தான் பண்ணுகிற சிசுரோபசாரங்கள் கார்யமாய்த் தலைக் கட்ட காண்கிறிலோம் என்னாய் முடியப் போகிறதோ -என்கிறாள் தாபார்த்தராய் இருப்பார் தாப ஹரனான ஜலநிலையனை இறே பற்றுவது அவனைப் பற்றுமவள் அல்லை இறே இவள் அவனைப் பற்றுவார் முக்த ப்ராயரான சநகாதிகள் இறே இவள் பற்றுவது அர்ச்சாரூபத்திலே இறே அதில் தனக்கு தாப ஹராமான திருப்பதிகளிலே சிலவற்றைச் சொல்லுகிறாள்) 3
அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய் வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள் பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள் உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ –8-2-3
பதவுரை Show / Hide
இவள், Ival - இப்பரகாலநாயகியானவள் (- (அதற்கு ஒருவரும் பதில் சொல்லுவாரில்லாமை யாலே))
அருவி சோர் வேங்கடம், Aruvi Soor Vengadam - அருவிகள் சொரிகின்ற திருமலையென்றும்
நீர்மலை என்று, Neermalai Endru - திருநீர்மலையென்றும் சொல்லி
வாய் வெருவினாள், Vaai Veruvinaal - வாய் பிதற்றினாள்;
மெய்யம் வினவி, Meyyam Vinavi - திருமெய்யத்தைப் பற்றிக் கேள்விகேட்டு
இருக்கின்றாள், Irukkindraal - வாளாவிருக்கிறாள்;
பெருகு சீர், Perugu Seer - சீர்மை மிகுந்த
கண்ணபுரம் என்று, Kannapuram Endru - திருக்கண்ணபுரம் என்று
பேசினாள், Pesinaal - வாயாற் சொன்னவளாய்க் கொண்டு (உடனே)
உருகினாள், Uruginhaal - நீர்ப்பண்டமானாள்;
உள் மெலிந்தாள், Ul Melindhaal - நெஞ்சி சிதிலகமாகப் பெற்றாள்;
இது என் கொல், Idhu En Kol - இப்படியுமொரு நிலைமை யுண்டாகக் கடவதோ?.
1661பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வாய் வெருவினாள்-வினவி இருக்கின்றாள்-பேசினாள்-உருகினாள் என்கிற இவ்வாற்றாமை தான் உண்டானது தாரகம் உண்டானால் இறே அது இருந்தபடி என் என்ன-அது தானே இல்லை -என்கிறாள் – கீழ் உண்டான தசைகள் ஸ்வஸ்த்த தசைகள் என்னும்படி இருந்ததீ -என்கிறாள் ஊணும் உறக்கமும் உண்டானால் இறே கீழ்ப் பிறந்த அவஸ்தைகளுக்கு அவகாசம் உள்ளது) 4
உண்ணும் நாளில்லை உறக்கமும் தான் இல்லைப் பெண்மையும் சால நிறைந்திலள் பேதை தான் கண்ணனூர் கண்ணபுரம் தொழுங்கார்க் கடல் வண்ணர் மேல் எண்ணம் இவட்கு இது என் கொலோ –8-2-4
பதவுரை Show / Hide
உண்ணும் நாள் இல்லை, Unnum Naal Illai - இவள் ஒருநாளும் உண்பதில்லை;
உறக்கம் தானும் இல்லை, Urakam Thaanum Illai - கண்ணுறங்குவது மில்லை;
பெண்மையும் சால நிறைந்திலள், Penmaiym Saala Niraindhilal - நன்றாக முதிர்ந்த பெண்மைப் பருவமுடையளல்லள்;
பேதை தான், Pethai Thaan - இளம் பெண்தான்; (இப்படியிருக்கச் செய்தேயும்)
கண்ணன் ஊர், Kannan Oor - எம்பெருமானுடைய திவ்யதேசமாகிய
கண்ணபுரம், Kannapuram - திருக்கண்ணபுரத்தை
தொழும், Thozhum - தொழாநின்றாள்;
இவட்கு எண்ணம், Ivadhku Ennam - இவளுடைய எண்ணம்
கார் கடல் வண்ணர்மேல், Kaar Kadal Vannarmel - கரிய கடல் போன்ற நிறத்தை யுடையரான சௌரிப் பெருமாள் மேலுள்ளது;
இது என் கொல், Idhu En Kol - இது என்ன ஆச்சரியம்!,
1662பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெண்மையும் சால நிறைந்திலள் -என்று இறே கீழ்ப் பாட்டில் சொல்லிற்று – அது காலாந்தரேண உண்டாகிறது –-அதுக்கடியான பெண்மை தான் உண்டோ -என்ன அது தானே இல்லை என்கிறாள் – நீ எது கொண்டு அறிந்தாய் என்ன கரண த்ரயங்களும் அவனை நினைத்த மாத்ரத்திலே விக்ருதமாகா நின்றன-இவளுக்கு என்ன பெண்மை -என்கிறாள்) 5
கண்ணனூர் கண்ணபுரம் தொழும் காரிகை பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள் வெண்ணெய் உண்டு ஆப்புண்டு வண்ணம் விளம்பினால் வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியுமே –8-2-5
பதவுரை Show / Hide
கண்ணன் ஊர், Kannan Oor - சௌரிப் பெருமாளுடைய திவ்ய தேசமான
கண்ணபுரம், Kannapuram - திருக்கண்ணபுரத்தை
தொழும், Thozhum - தொழுகின்ற
காரிகை, Kaarikai - இவ்வழகியானவள்
தன்னுடைய, Thannudaiya - தன்னுடைய
உண்மை, Unmai - (வியாமோஹத்தின்) உண்மையை
உரைக்கின்றாள், Uraikkindraal - வாய்விட்டுச் சொல்லுகிறாள்;
பெண்மை என்?, Penmai En - இஃது என்ன பெண்மைக்குணம்?
வெண்ணெய் உண்டு, Vennai Undu - (அவன் வெண்ணெயை (க்களவாடி) அமுதுசெய்து
ஆப்புண்ட, Aappund - (தாம்பினால்) கட்டுண்ட
வண்ணம், Vannam - ஸமாசாரத்தை
விளம்பினால், Vilambinaal - (யாரேனும் ஏசிச்) சொன்னால்
வண்ணமும், Vannamum - (இவளுடைய) மேனி நிறமும்
பொன் நிறம் ஆவது ஒழியும், Pon Niram Aavathu Ozhiyum - பசலை நிறமாயிருக்குமிருப்பு தவிர்ந்து நல்ல நிறமாம்படி (இவள்) ஸந்தோஷப் படுகிறாள்.
1663பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ்ப் பாட்டிலே-தன்னுடை உண்மை உரைக்கின்றாள் -என்றும் வெண்ணெய் உண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினால் வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியும் -என்றும் சொன்னாய் அதில் உண்மை எது-பொன்னிறம் போனபடி என் -என்ன -அத்தைச் சொல்லுகிறாள் – ஸ்ரீ கண்ணனூர் -என்றாள் இறே கீழ்-அந்த ஸ்ரீ கண்ணனூரான ஸ்ரீ திரு வாய்ப்பாடியிலெ பெண்கள் அடைய குரவ கிம் கரிஷ்யந்தி தக்த்தா நாம் விரஹாக்னி நா -என்று-இக்குருக்கள் நம்மைச் செய்யப் புகுகிறது என் – விரஹ அக்னியால் வெந்து கிடக்கிற நம்மை ஆற்றி ஒரு குடம் நீர் சொரிவார்களோ -என்று பந்து வர்க்கங்களை நேராக விட்டு ஸ்ரீ கிருஷ்ணனை அனுபவிக்கக் கடவதாக யமுனா தீரத்தேற வந்தார்கள் – அங்கு ஸ்ரீ கிருஷ்ணனைக் கண்டிலர்கள் – பின்பு அனுகாரத்திலே இழிந்து நான் நடவா நின்றேன் -நீ நடைச் சக்கரவத்து பிடித்துக் காண் -எனபது துஷ்ட காளிய திஷ்டாத்ரா கிருஷ்ணோஹமிதி சாபரா -என்று பாரடா காளியனே -நான் உன் மேல் ஏறி ஆடப் புகா நின்றேன் -எனபது-இப்படிகளாலே அனுகரித்தார்கள் இறே இவளும் -ஸ்ரீ திரு ஆய்ப்பாடி -ஸ்ரீ திருக் கண்ணபுரம் ஆகவும் ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ சௌரிப் பெருமாள் ஆகவும் – ஸ்ரீ சௌரிப் பெருமாள் தான் ஆகவும் அனுகரித்து பேசுகிறாள் – சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-அஹம் பிரஹ்மாஸ்மி-என்று தான் அவனாய்-அவன் தானாய்-இறே இருப்பது இது இறே இவளுடைய வைதிக லோகாயுத மதம் இருக்கிறபடி – வேறே அனுகரித்தாரும் சிலர் உண்டு இறே கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -என்று-அவளைப் போலே ஜகத் காரண ரூபியை பற்றுமவள் அன்று இறே இவள் – அர்ச்சாவதார ரூபியை இறே இவள் அனுகரிப்பது இவ் வர்ச்சாவதார ரூபத்தால் பிறக்கும் அனுபவம் ஒழிய அந்த அந்த அவதாரங்களால் பிறக்கும் அனுபவத்தை நாய்க்கு இட என்று இருக்குமவள் இறே இவள் – ஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் ஸ்ரீ ஆழ்வார் திரு நறையூர் அரையரும் இப்பாட்டை அனுசந்தித்து இப்பாட்டுக்கு ஒரு சேர்த்தி கண்டிலோம் -என்று ஸ்ரீ பட்டர் பாடே வந்து இப்பாட்டு இருக்கிறபடி என் -என்று கேட்க – மகள் அனுகாரத்தை தாய் அநு பாஷிக்கிறாள் -என்று அருளிச் செய்தார் – ஆரூட யோகராய் இருப்பார் சிலர் வந்தால் யோபவான் யன்நிமித்தம் வாயதாகம நகாரணம் -என்கிறபடியே நீ யார்-வந்தது எங்கு நின்றும் -என்று கேட்கக் கடவது இறே-அப்படியே -நீ எங்கு நின்றும் வந்தது -வந்த காரணம் ஏது -என்ன வந்தது இன்னிடத்தில் நின்றும் –-வந்த கார்யம் இன்னது -என்கிறாள்) 6
வடவரை நின்றும் வந்தின்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று பேசினாள் மடவரல் மாதர் என் பேதை யிவர்க்கிவள் கடவதென் கண் துயில் இன்று இவர் கொள்ளவே –8-2-6
பதவுரை Show / Hide
வட வரை நின்றும் வந்து, Vada Varai Nindrum Vandu - ‘வடக்குத் திருமலையில் நின்றும் புறப்பட்டு வந்து
இன்று, Indru - இப்போது
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரத்தை
இடவகை கொள்வது யாம், Idavakai Kolvadhu Yaam - இருப்பிடமாகக் கொண்டிருப்பது நானே’
என்று பேசினாள், Endru Pesinaal - என்று (சௌரிப் பெருமாளோடு ஐக்கியமாகத் தன்னைச்) சொல்லிக் கொண்டாள்;
இவர், Ivar - இந்த சௌரிப்பெருமாள்
இன்று, Indru - இன்றைக்கு
கண் துயில், Kan Thuyil - (இவளுடைய) கண்ணுறக்கத்தை
கொள்ள, Kolla - கொள்ளை கொள்வதற்கு,
மடவரல், Madavaral - மடப்பமென்னும் குணத்தை யுடையவளும்
மாதர், Maathar - விரும்பப்படும் அழகையுடையவளுமான
என் பேதை இவள், En Pethai Ival - என் சிறுமியாகிய இவள்
இவர்க்கு கடவது என், Ivarkku Kadavadhu En - இப்பெருமாளுக்குக் கடமைப்பட்ட விதம் என் கொல்!.
1664பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவர்க்கு இவள் கடவது என் -என்று இவள் கண்ணுறக்கத்தை இவர் கொள்ளுகைக்கு பிராப்தி உண்டோ என்றாய் இப்படி இவரோடும் இவளோடும் கொள் கொடை அற்றோ இருக்கிறது கார்க்கடல் வண்ணர் மேல் எண்ணம் என்றும் கண்ண புரம் தொழும் என்றும் கண்ண புரம் என்று பேசினாள் என்றும் சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் அவனேயாம் படி அன்றோ அவள் இருக்கிறது – அவரோடு அவளோடு பிராப்தி இல்லை என்று சொல்லக் கடவையோ அது கிடக்கட்டும் உன் மகள் தான் இவ்வீடுபாடுகள் தானே பொறுக்க ஷமையோ-என்ன இவற்றுக்கு இவள் இளைக்குமவளோ -என்கிறாள்) 7
தரங்க நீர் பேசிலும் தண் மதி காயினும் இரங்குமோ வெத்தனை நாள் இருந்து எள்கினாள் துரங்கம் வாய் கீண்டு கந்தானது தொன்மையூர் அரங்கமே எனபது இவள் தனக்காசையே –8-2-7
பதவுரை Show / Hide
பேசினும் தண் மதி காயினும், Pesinum Than Mathi Kaayinum - திரைக்கிளர்ச்சியையுடைய கடல் கோஷம் செய்தாலும் குளிர்ந்த சந்திரன் காய்ந்தாலும் (- (தரங்கம் நீர்) (இவள்))
இரங்குமோ, Irangumo - இளைப்பாளோ? (இளைக்கமாட்டாள்.) (ஏனென்னில்)
எத்தானை நாள் இருந்து எள்கினாள், Ethanai Naal Irundhu Ezhkinal - நெடுநாளே பிடித்தும் (இவற்றிலே) ஈடுபட்டிருக்கிறாளன்றோ
துரங்கம் வாய் கீண்டு உகந்தானது, Thurangam Vaai Kindu Uganthaanadhu - குதிரை வடிவாக வந்த அசுரனுடைய வாயைக் கிழித்தெறிந்து மகிழ்ந்த பெருமானுடைய
தொன்மை ஊர், Thonmai Oor - அநாதி திவ்யதேசமாகிய
அரங்கம் என்பதே, Arangam Enbadhe - திருவரங்கம் என்று சொல்லிக்கொண்டிருப்பதே
இவள் தனக்கு ஆசை, Ival Thanakku Aasai - இவளுடைய ஆசையா யிருக்கிறது.
1665பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முதல் பாட்டிலே -தெள்ளியீர் தொழுத இவள் கை வளை கொள்வது தக்கதே -என்று தொழுத இவள் கையில் வளையை வாங்குகை தகுதி அல்ல தப்பச் செய்தோம் -என்று இசைந்து நின்றார் ஸ்ரீ சௌரிப் பெருமாள் – பின்பு தன்னிலே-இவர்க்கு இவள் கடவது என் கண் துயில் இன்றி இவர் கொள்ள -என்றும் – அரங்கமே இவள் தனக்கு ஆசையே -என்றும் சொன்னதை ஸ்ரீ சௌரிப் பெருமாள் கேட்டார் – சர்வதஸ் ஸ்ருதி மல்லோகே -என்று இருக்குமவர் இறே அவர் இப்படி இவள் சொன்னவாறே-வளை கொடுப்பதாக நினைத்து இருந்தோம் – இனி கொண்டு அது கொடுக்கிறது என் – இன்னம் எட்டுமது உண்டாகில் வாங்க அமையாதோ -என்று ஸ்ரீ சௌரிப் பெருமாள் சிவட்கு என்று-உன் மகளுக்கு ஸ்ரீ அரங்கமே எனபது ஆசை என்றாய் – அவளோடு நம்மோடு பிராப்தி இல்லை என்றும் சொன்னாய் – ஆனால் நம்மூருக்கு இவள் வருவான் என்-நாம் இவளை அழைத்தோமோ ஆசைப் பட்ட இடத்தேறப் போகல் ஆகாதோ -என்ன அதில் சம்சயம் இல்லை -ஸ்ரீ அரங்கமே இவள் தனக்கு ஆசை -நினைவும் அதுவே ஸ்வ அபிமத சித்திக்கு உறுப்பாக நாட்டார் செய்கிறதைக் கண்டு தனக்கும் தன் அபிமதம் சித்திக்குமோ -என்று தன் ஆசையாலே செய்வான் முறைமை கண்டு போனாள் இத்தனை -என்கிறாள் – கார்க்கடல் வண்ணர் மேல் எண்ணம் என்று என்றே இவளுக்கு மநோ ரதம் இலங்கொலி நீர் பெரும் பௌவம் மண்டி யுண்ண பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் -என்று கடலைப் பருகின காள மேகம் போலே இறே ஸ்ரீ பெரிய பெருமாள் வடிவு இருப்பது – ஆகையாலே நினைவும் அங்கே என்னும் இடம் சித்தம் இறே) 8
தொண்டெல்லாம் நின்னடியே தொழுது உய்யுமா கண்டு தான் கண்ண புரம் தொழப் போயினாள் வண்டுலாம் கோதை என் பேதை மணி நிறம் கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே –8-2-8
பதவுரை Show / Hide
தொண்டு எல்லாம், Thondu Ellam - ஸகல பக்தவர்க்கங்களும்
நின் அடியே, Nin Adiye - உனது திருவடிகளையே
தொழுது, Thozhuthu - ஸேவித்து
உய்யும் ஆ கண்டு, Uyum Aa Kandu - உஜ்ஜீவித்துப் போவதைப் பார்த்து
தான், Thaan - இவளும்
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரத்தை
தொழ, Thozha - ஸேவிப்பதற்கு
போயினான், Poyinraan - சென்றான்;
வண்டு உலாம் கோதை, Vandu Ulaam Kothai - வண்டுகள் உலாவப்பெற்ற மயிர் முடியையுடையளான
என் பேதை, En Paithai - என் குழந்தையினுடைய
மணி நிறம் கொண்டு, Mani Niram Kondu - அழகிய மேனி நிறத்தைக் கொள்ளைகொண்டு
தான், Thaan - ஸ்வாமியாகிய நீ
கோயின்மை செய்வது, Koyinmai Seivathu - அநியாயம் பண்ணுவது
தக்கதே, Thakkadhe - தகுதியோ?
1666பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ்ப் பாட்டிலே -என் பேதை மணி நிறம் கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே -என்று நிவாரகர் இல்லாத தேசத்திலே வழி யடிப்பாரைப் போலே முக்த்தையான இவள் நிறத்தை கொள்ள வேணுமோ என்று இவள் சொன்ன வார்த்தையைக் கேட்ட ஸ்ரீ சௌரிப் பெருமாள் – நீர் நம்மை நியமிக்கக் கடவையோ – சர்வச்ய வஸி சர்வச்ய ஈசானா -என்று சர்வர்க்கும் நியாமகராய் நம்மை நியமிக்கக் கடவையோ மடவரல் மாதர் என் பேதை -என்று-உன் மகள் என்றும்-உனக்கு பவ்யை என்றும் -சொன்னாய் அவளை நியமித்துக் கொள்ள மாட்டாயோ – நீ நம்மை நியமிக்க போராய் காண் -என்ன இவள் பருவம் இது-பாவம் இது-ஆனபின்பு என்னால் நியமிக்கலாயோ இருப்பது -என்கிறாள் – இவள் அளவு இதுவாய் இருக்க இவளைப் போலே அவஹாகித்தாள் ஒரு பெண் பிள்ளை வார்த்தையாலே சொன்னாள் இறே அவள் உடைய திருத் தாயார் – முலையோ -இத்யாதி – இவள் அளவு இதுவாய் இருக்க -அவகாஹனம் இருந்த படி என் –அளவன்றி இருந்ததீ-என்றாள் இறே – முலையோ முழு முற்றும் போந்தில – முலை புரைகிற வித்தனை –வளரும் அளவும் செல்ல வரையிட்டதில்லை – இது பருவம் இருந்தபடி – ஸ்ரீ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே – ஸ்ரீ திருமலையை விடாமல் சொல்லா நின்றாள் இது அவகாஹனம் இருந்த படி – இவள் பரமே – இவள் அளவன்றிக்கே இருந்ததீ-என்றாள் இறே – அவளுடைய பருவம் இல்லையே இவளுக்கு அவகாஹனத்திலும் வாசிக மாத்ரமே இறே அவளுக்கு உள்ளது – காயிகத்தால் வந்த அவகாஹனம் உண்டே இவளுக்கு – பங்குக்களாய் இருப்பார்க்கும் அந்தரராய் இருப்பார்க்கும் போக ஒண்ணாதபடி ஸ்ரீ பரமபதத்துக்கு அடுத்து அணித்தாய் அர்ச்சிராதி போலே பெரிய ஏற்றம் ஏற வேண்டி இறே ஸ்ரீ திருமலை இருப்பது அத்தனை துஷ்ப்ராப்யமாய் அன்றே ஸ்ரீ திருக் கண்ண புரம் இருப்பது இருந்தபடியே எல்லார்க்கும் புக்கு அனுபவிக்கலாம் படி இறே ஸ்ரீ திருக் கண்ண புரம் இருக்கிற படி – ஆகையால் இவள் அளவு இதுவாய் இருந்தது – அவகாஹநத்தில் எல்லை இதுவாய் இருந்தது ஆன பின்பு இவளை நியமிப்பார் உண்டோ என்று பொதுவிலே சொல்லுகிறாள் – பெறுவேனோ என்னாதே பெறுவரே -பொதுவிலே மமமத்பக்த பக்தேஷூ ப்ரீதிரப்யதி காபவேத் -என்ற உன்னாலும் இவ்வளவு அவகாஹிக்கப் போமோ) 9
முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா தெள்ளியள் என்பதோர் தேசிலள் என் செய்கேன் கள்ளவிழ் சோலைக் கணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே –8-2-9
பதவுரை Show / Hide
முள் எயிறு ஏய்ந்தில, Mul Eiyiru Eiyndhila - முளைக்கின்ற பற்களும் நிரம்பவில்லை;
கூழை முடி கொடா, Koozhai Mudi Koda - கூந்தலும் எடுத்து முடிக்கப்போரும்படி வளர்ந்தனவில்லை;
தெள்ளியள் என்பது ஓர் தேசு இலள், Thelliyal Enbathu Oor Desu Ilal - விவேகமுடையவள் என்று சொல்லும்படியான தேஜஸ்ஸை உடையவளல்லள்
என் செய்கேன், En Seigain - (இப்படிப்பட்ட இவள் விஷயத்தில்) நான் என்ன செய்வேன்!
கள் அவிழ்சோலை, Kal Avizhsolai - மது பெருகுகின்ற சோலைகளையுடைய
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரத்தை
கை தொழும், Kai Thozhum - கையெடுத்து வணங்குகிற
பிள்ளையை, Pillaiyai - பிள்ளையை
பிள்ளை என்று எண்ணப் பெறுவரே, Pillai Endru Ennap Peruvare - பிள்ளையென்று நினைக்கலாகுமோ? (கௌரவிக்கப்ராதி யுண்டிறே.)
1667பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தால்-கவி பாடிற்று இன்னாரை பாடினேன் இந் நான் என் கவி தான் இன்னது -இது கற்றார்க்கு பலம் இன்னது -என்று இவை நாலையும் சொல்லுகிறார்) 10
கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல் சீர்மலி பாடல் இவை பத்தும் வல்லவர் நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே –8-2-10
பதவுரை Show / Hide
கார் மலி, Kaar Mali - மேகங்கள் நிறைந்திருக்கப்பெற்ற
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற
எம் அடிகளை, Em Adigalai - எம்பெருமானைக் குறித்து
பார் மலி மங்கையர் கோன் பரகாலன், Paar Mali Mangaiyar Kon Barakalan - இப்பூமியெங்கும் புகழ் மிக்க திருமங்கையாழ்வார்
சொல், Sol - அருளிச்செய்த
சீர் மலி, Seer Mali - பகவத்குணங்கள் நிறைந்த
பாடல், Paadal - பாசுரங்கள்
இவை பத்தும், Ivai Pathum - இத்திருமொழியை
வல்லவர், Vallavar - கற்றுணரவல்லவர்கள்
நீர் மலி, Neer Mali - கடல் சூழ்ந்த
வையத்து, Vaiyathu - இப் பூண்டலத்திலே
நீடு, Needu - நீண்டகாலம்
நிற்பார்கள், Nirpargal - நிலைநிற்கப் பெறுவர்.
1668பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மிக்க பரிமளத்தை உடைத்தான திருத் துழாய் மாலையையும் உடைத்தாய் பெரிய மிடுக்கையும் உடைத்தாய் மலை போலே இருக்கிற திருத் தோள்கள் அசையும் படியாக மலையை எடுத்து பரிஹரித்த ஆபத் சகனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு-என்னுடைய தர்ச நீயமான வளையை இழந்தேன்) 1
கரையெடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும் திரை எடுத்து வரு புனல் சூழ் திருக் கண்ண புரத்து உறையும் விரையெடுத்த துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடை பெயர வரையெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே –8-3-1
பதவுரை Show / Hide
கரை எடுத்த, Karai Edutha - கோஷத்தையுடைத்தாய்
சுரி, Suri - வளைந்த
சங்கும், Sangum - சங்குகளையும்
கனம், Kanam - செறிந்திருக்கிற
பவளத்து, Pavalathu - பவழங்களினுடைய
எழு, Ezhu - வளர்த்தியையுடைய
கொடியும், Kodiyum - கொடிகளையும்
திரை, Thirai - அலைகளானவை
எடுத்து வரு, Eduthu Varu - அடித்துக்கொண்டு வரப்பெற்ற
புனல், Punal - ஜலத்தாலே
சூழ், Sool - சூழப்பட்ட
திருக்கண்ணபுரத்து, Thirukkannapurathu - திருக்கண்ணபுரத்திலே
உறையும், Urayum - நித்யவாஸம் செய்தருள்பவனும்
விரை எடுத்த, Virai Edutha - பரிமளம் மிகுந்த
துழாய் அலங்கல், Thuzhai Alangkal - திருத்துழாய் மாலையை யணிந்த தாய்
விறல், Viral - மிடுக்கையுடையதாய்
வரை, Varai - மலைபோன்றதான
தோள், Thol - திருத்தோள்
புடை பெயர, Pudai Peyar - அசையும்படியாக
வரை எடுத்த, Varai Edutha - கோவர்த்தனமலையை யெடுத்து (க்குடையாகப்) பிடித்தவனுமான
பெருமானுக்கு, Perumanukku - எம்பெருமானுக்கு
என் வரி வளை, En Vari Vilai - எனது அழகிய வளைகளை
இழந்தேன், Izhandhen - இழந்துவிட்டேன்.
1669பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (குவலயா பீடமானது வெருவும்படியாக அதன் கொம்புகளை அநாயாசேன முறித்துப் பொகட்ட அச் செயலுக்கு வளை இழந்தேன்) 2
அரி விரவும் முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும் தெரிவு அரிய மணி மாடத் திருக் கண்ண புரத் துறையும் வரி அரவின் அணைத் துயின்று மழை மதத்த சிறு தரு கண் கரி வெருவ மருப்பு ஒசித்தார்க்கு இழந்தது என் கன வளை –8-3-2
பதவுரை Show / Hide
அரி, Ari - கறுப்பானது (- (இழந்தேன்-.))
விரவும், Viravum - கலந்து பரவப்பெற்ற
முகில் கணத்தால், Mugil Kanathal - மேகக் கூட்டங்களாலும்
அகில் புகையால், Akil Pugaiyal - அகில் புகைகளாலும்
வரையோடும் தெரிவு அரிய, Varaiyodum Therivu Ariya - மலையோடு வாசியறிய வொண்ணாத
மணி மாடம், Mani Maadam - மணிமயமான மாளிகைகளையுடைய திருக்கண்ணபுரத்து; உறையும் -;
வரி அரவு இன் அணை துயின்று, Vari Aravu In Anai Thuyinru - கோடுகளையுடைய ஆதிசேஷனாகிற போக்யமான படுக்கையிலே சயனிப்பவனாயும்
மழை மதத்த, Mazhai Mathath - மழைபோல் பெருகுகின்ற மதஜலத்தையுடையதும்
சிறு தறு கண், Siru Tharu Kan - சிறுத்த வட்டணித்த கண்களையுடையதுமான
கரி, Kari - குவலயா பீட மென்னும் யானை யானது
வெருவ, Veruva - அஞ்சும்படியாக
மருப்பு, Maruppu - (அதன்) தந்தத்தை
ஒசித்தாற்கு, Osiththarku - ஒடித்தொழித்தவனாயுமுள்ள பெருமானுக்கு
என் கனம் வளை, En Kanam Valai - எனது பொன்வளைகளை
1670பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சந்த்ரனுக்கு வந்த ஷயத்தை போக்கி-அது தன்னை தன் பேறாக நினைத்து இருக்கிற புண்டரீ காஷனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு ஒரு காலும் கழற்ற ஒண்ணாத வளையை இழந்தேன்) 3
துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம் திங்கள் மா முகில் துணிக்கும் திருக் கண்ண புரத் துறையும் பைங்கண் மால் விடை அடர்த்துப் பனி மதி கோள் விடுத்துகந்த செங்கண் மால் யம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே –8-3-3
பதவுரை Show / Hide
மாடம் நெடுமுகட்டின் சூலிகை, Madam Nedumugattin Soolikai - உந்நதமாய் சிறந்த ரத்னங்களிழைக்கப் பெற்றதான மாடமாளிகைகளினுடைய நீண்ட உச்சியிலுள்ள சூலமானது (- (துங்கம் மா மணி) (திருக்கண்ணபுரத்து, உறையும்-;) (இழந்தேன்-.))
போம் திங்கள், Pom Thingal - மேலே சஞ்சரிக்கின்ற சந்திரனையும்
மா முகில், Maa Mukil - பெரிய மேகங்களையும்
துணிக்கும், Thunikkum - துண்டிக்கப் பெற்ற
பைங்கண் மால் விடை அடர்த்து, Paingkan Maal Vidai Adarthu - பசுமை தங்கிய கண்களையுடைய பெரிய எருதுகளை அழியச் செய்தவனாயும்
பனி மதி கோள் விடுத்து, Pani Mathi Kol Viduthu - குளிர்ச்சியை இயல்வாகவுடைய சந்திரனுடை க்ஷயத்தைப்போக்கி
உகந்த, Ugantha - திருவுள்ள முவந்தவனாயும்
செங்கண் மால் அம்மானுக்கு, Sengkan Maal Ammanukku - புண்டரீகாக்ஷனாயு மிருக்கிற ஸர்வேச்வரன் விஷயத்திலே
என் செறி வளை, En Seri Valai - என்னுடைய கழலாதிருக்கத்தக்க வளைகளை
1671பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இரண்டு எண்ண ஒண்ணாத படி நிர்விவரமாய் இருக்கிற மருதுகள் முறிந்து விழும்படியாக போன முக்தனுக்கு என்னுடைய ஸ்லாக்கியமான வளையை இழந்தேன்) 4
கணம் மருவும் மயில் அகவும் கடி பொழில் சூழ் நெடு மறுகில் திணம் மருவும் கன மதிள் சூழ் திருக் கண்ண புரத் துறையும் மணம் மருவும் தோள் ஆய்ச்சி யார்க்கப் போய் உரலோடும் புணர் மருதம் இற நடந்தாற்க்கு இழந்தேன் என் பொன் வளையே –8-3-4
பதவுரை Show / Hide
கணம் மருவு, Kanam Maruvu - திரள் மிக்கிருந்துள்ள (- (திருக்கண்ணபுரத்து, உறையும்) (என் பொன் வளை இழந்தேன்-.))
மயில், Mayil - மயில்களானவை
அகவு, Akavu - கூத்தாடப்பெற்ற
கடி பொழில் சூழ், Kadi Pozhil Soozh - மணம்மிக்க சோலைகளாற் சூழப்பட்டதாய்
நெடு மறுகில், Nedu Marugil - பெரிய திருவீதிகளையுடைத்தாய்
திணம் மருவு, Thinam Maruvu - திடம் பொருந்திய
கனம், Kanam - கனகமயமான
மதிள், Mathil - திருமதிள்களாலே
சூழ், Sool - சூழப்பட்டதான
மணம் மருவு தோள் ஆய்ச்சி, Manam Maruvu Thol Aaychchi - பரிமளம் பொருந்திய தோள்களை யுடையளான இடைச்சி
ஆர்க்க, Aarkka - (தாம்பினால்) கட்ட
உரலோடும் போய், Uralodum Poi - உரலோடு கூடச் சென்று
புணர் மருதம், Punar Marutham - இரட்டை மருதமரங்கள்
இற, Ira - இற்று முறிந்து விழும்படி
நடந்தாற்கு, Nadandaarikku - நடைகற்ற பெருமானுக்கு
1672பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஈடுபட்டு ஓடி அமுது செய்த-தயிரைக் காட்டி -நீ களவு கண்டாய் என்பார்கள் என்று பார்த்து அத்தை இல்லை செய்கைக்காக –முகம் எங்கும் தடவிக் கொள்ளுகிற இளிம்பனுக்கு நான் இளிம்பு பட்டேன்) 5
வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள் தீ எடுத்து மறை வளர்க்கும் திருக் கண்ண புரத் துறையும் தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே –8-3-5
பதவுரை Show / Hide
அந்தணர், Andhanar - பிராமணர் (- (திருக்கண்ணபுரத்து, உறையும்-;) (என் வரி வளை இழந்தேன்-.))
வாய் எடுத்த மந்திரத்தால், Vaai Edutha Mandiraththaal - உரக்க உச்சரிக்கப்படுகிற மந்திரங்களைக் கொண்டு
தம் செய் தொழில்கள், Tham Sei Thozhilgal - தாங்கள் செய்யும் அநுஷ்டாக மாகிய
தீ எடுத்து, Thee Eduthu - அக்நி காரியங்களைக் குறையறச் செய்து
மறை வளர்க்கும், Marai Valarkkum - வேதமரியாதையை ஓங்கச் செய்யுமிடமான
தாய் எடுத்த, Thaai Edutha - தாயான யசோதைப்பிராட்டி கையிலெடுத்த
சிறு கோலுக்கு, Siru Kolukku - சிறிய தடிக்கு
உளைந்த ஓடி, Ulainda Odi - அஞ்சி ஓடிச் சென்று
தயிர் உண்ட வாய் துடைத்த, Thayir Unda Vaai Thudaitha - தயிரை அமுதுசெய்த வாயைத் துடைத்த
மைந்தனுக்கு, Maindhanukku - ஸ்வாமிக்கு
1673பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அன்று ஹிரண்யன் மிடுக்கு அழியும்படி யாக ஸ்ரீ பிராட்டிமாரும் கண்டு கொண்டு இருக்கும் படியாக ஸ்ரீ உகிராலே-அவன் உடைய சரீரத்தை பேதித்து தன்னுடைய ஸ்ரீ ஈஸ்வரத்வத்தை நிலை நிறுத்தினவனுக்கு என் பருவத்தில் ஒருவனுக்கு உதவினான் அன்றோ-என்று இருந்தாயிற்று வளை இழந்தது) 6
மடல் எடுத்த நெடும் தாளை மருங்கு எல்லாம் வளர் பவளம் திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக் கண்ண புரத் துறையும் அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால் உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே –8-3-6
பதவுரை Show / Hide
மடல் எடுத்த, Madal Edutha - மடல்களை உயரக்கொண்ட (- (திருக்கண்ணபுரத்து, உறையும்-;) (என் ஒளி வளை இழந்தேன்-.))
நெடு, Nedu - நீண்ட
தாழை, Thaalai - தாழைச் சொடிகளின்
மருங்கு எல்லாம், Marungu Ellam - பக்கங்களிலெல்லாம்
வளர், Valar - வளர்கின்ற
பவளம், Pavalam - பவழங்களானவை
திடல் எடுத்து, Thidal Eduthu - மேடுகளிலே படர்ந்து
சுடர் இமைக்கும், Sudar Imaikkum - ஒளியுடன் விளங்கப்பெற்ற
அன்று, Andru - முன்பொருகாலத்தில்
இரணியனை, Iraniyanai - ஹிரண்யாஸுரனை
அடல், Adal - யுத்தத்திலே
அடர்த்து, Adarthu - நெருக்கி
முரண் அழிய, Muran Azhiya - (அவனுடைய) மிடுக்கு அழியும் படியாக
அணி உகிரால், Ani Ukiraal - அழகிய நகங்களாலே
உடல் எடுத்த, Udal Edutha - (அவனது) உடம்பைப் பிளந்தொழிந்த
பெருமானுக்கு, Perumanukku - ஸர்வேச்வரனுக்கு
1674பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரளய காலத்தில் எடுத்து வைத்து பின்னே வெளி நாடு காண உமிழ்ந்த ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அவனுடைய ஆபத் சகச்வத்தை விஸ்வசித்து கிடாய் நான் கெட்டேன் -என்கிறார்) 7
வண்டமரும் மலர்ப்புன்னை வரி நீழல் அணி முத்தம் தெண்திரைகள் வரத் திரட்டும் திருக் கண்ண புரத் துறையும் எண் திசையும் எழு சுடரும் இரு நிலனும் பெரு விசும்பும் உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே –8-3-7
பதவுரை Show / Hide
வண்டு அமரும், Vandu Amarum - வண்டுகள் படிந்திருக்கிற (- (திருக்கண்ணபுரத்து, உறையும் -;) (என் ஒளி வளை இழந்தேன்-.))
மலர், Malar - புஷ்பங்களையுடைத்தான
புன்னை, Punnai - புன்னைமரத்தினுடைய
வரி நீழல், Vari Neezhal - அகன்ற நிழலிலே
தெண் திரைகள், Then Thiraigal - தெளிந்த அலைகளானவை
அணி முத்தம், Ani Muththam - அழகிய முத்துக்களை
வர திரட்டும், Vara Thirattum - கொண்டுவந்து திரட்டப்பெற்ற
எண் திசையும், En Thisaiyum - எட்டுத் திசைகளையும்
எழு கடலும், Ezu Kadalum - ஏழு கடல்களையும்
இரு நிலனும், Iru Nilanum - விசாலமான பூமியையும்
பெரு விசும்பும், Peru Visumbum - பெரிதான ஆகாசத்தையும்
உண்டு, Undu - (பிரளயத்தில்) அமுது செய்து
உமிழ்ந்த, Umizhndha - (பிறகு) வெளிப்படுத்தின
பெருமானுக்கு, Perumanukku - ஸ்வாமிக்கு
1675பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தர்ச நீயமான வடிவை உடையனான ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற – சிவந்த கமலத்தை உடைத்தான திரு நாபியை உடையவனுக்கு -உத்பாதகனை விஸ்வசித்து முடிந்தேன் -என்கிறாள்) 8
கொங்கு மலி கருங்குவளை கண்ணாகத் தெண் கயங்கள் செங்கமல முகமலர்த்தும் திருக் கண்ண புரத் துறையும் வங்கமலி தடங்கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே –8-3-8
பதவுரை Show / Hide
தெண் கயங்கள், Then Kayangal - தெளிந்த தடாகங்களானவை (- (திருக்கண்ணபுரத்து, உறையும்-;) (என் செறி வளை இழந்தேன்-.))
கொங்கு மலி, Kongu Mali - பரிமளம் மிக்க
கரு குவளை, Karhu Kuvalai - கரு நெய்தற்பூக்களை
கண் ஆக, Kan Aaga - கண்களாகவும்
செம் கமலம், Sem Kamalam - செந்தாமரைப் பூக்களை
முகம், Mukam - முகங்களாகவும்
மலர்த்தும், Malarthum - விகஸிப்பிக்கப்பெற்ற
வங்கம் மலி தட கடலுள், Vangam Mali Thada Kadalul - அலைகள் நிரம்பிய பெரிய திருப்பாற்கடலிலே
வரி, Vari - கோடுகளையுடைய
அரவு, Aravu - திருவனந்தாழ்வானாகிற
இன், In - இனிமையான
அணை, Anai - திருப்பள்ளி மெத்தையிலே
துயின்ற, Thuyinra - சயனித்தருளாநின்ற
செம் கமலம் நாபனுக்கு, Sem Kamalam Nabanukku - செந்தாமரைப்பூவைத் திருநாபியிலே உடையனான பெருமானுக்கு
1676பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னை ஒழியச் செல்லாமை உடையாருக்கு தன்னை கொடுக்குமவன் அன்றோ – நம் செல்லாமை பரிஹரியானோ விஸ்வசித்து வளை இழந்தேன் -என்கிறாள்) 9
வாராளும் இளங் கொங்கை நெடும் பணைத் தோள் மடப்பாவை சீராளும் வரை மார்பன் திருக் கண்ண புரத் துறையும் பேராளன் ஆயிரம் பேர் ஆயிரம் வாய் அரவணை மேல் பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே –8-3-9
பதவுரை Show / Hide
வார் ஆளும் இளகொங்கை, Vaar Aalum Ilakongai - கச்சினால் தாங்கப்படுகின்ற இள முலைகளையுடையளாய் (- (திருக்கண்ணபுரத்து, உறையும்-;) (என் பெய் வளை இழந்தேன்-.) (பேராளர் பெருமான் பேராளரென்று மஹான்களுக்குப் பெயர்; அவர்கட்கும் மஹான் என்றபடி.))
நெடு பணை தோள், Nedu Panai Thol - நீண்ட மூங்கில் போன்ற தோள் களையுடையளாய்
மடம், Madam - ஆத்மகுணங்களால் நிறைந்தவளாய்
பாவை, Pavai - பதுமை போன்றவளான பெரிய பிராட்டியார் (நித்யவாஸம் பண்ணப் பெறுகையினாலே)
சீர் ஆளும், Seer Aalum - சீர்மையை யுடைத்தான
வரை, Varai - மலைபோன்ற
மார்பன், Marban - திருமார்பையுடையவனும்
பேர் ஆளன், Per Aalan - பெருமை பொருந்தியவனும்
ஆயிரம் பேர், Aayiram Per - ஆயிரந்திருநாமங்களை யுடையவனும்
ஆயிரம் வாய், Aayiram Vaai - ஆயிரம் முகங்களையுடைய
அரவு, Aravu - ஆதிசேஷனாகிற
அணை மேல், Anai Mel - படுக்கையின் மீது பள்ளி கொண்டிருப்பவனுமான
பேராளர் பெருமானுக்கு, Peralar Perumanukku - தேவாதி தேவனுக்கு
பெய்வளை, Peivazhai - அணிந்துக்கொண்டிருந்தவளை.
1677பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாவிலே பொருந்தும் படி பாட சஹ்ருதயமாக பண்ணின பாபங்களும் விட்டுப் போம் – உக்தி மாத்ரத்தைச் சொல்ல புத்தி பூர்வகமாக பண்ணின பாபங்கள் கிட்டா -என்கிறார்) 10
தேமருவு பொழில் புடை சூழ் திருக் கண்ண புரத் துறையும் வாமனனை மறி கடல் சூழ் வயலாலி வள நாடன் காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை நா மருவி யிவை பாட வினையாய நண்ணாவே –8-3-10
பதவுரை Show / Hide
தே மருவு, The Maruvu - தேன் பொருந்திய
பொழில், Pozhil - சோலைகளினால்
புடை சூழ், Pudai Soozh - நாற்புறமுஞ் சூழப்பட்ட
திருக்கண்ணபுரத்து, Thirukkannapurathu - திருக்கண்ணபுரத்தில்
உறையும், Urayum - நித்யவாஸம் பண்ணுகிற
வாமனனை, Vamananai - வாமநாவதாரம் செய்தருளின பெருமானைக் குறித்து,
மறி கடல் சூழ், Mari Kadal Soozh - அலை மடிகின்ற கடலாலே சூழப்பட்டு
வயல் வளம், Vayal Valam - வயல் வளங்களையு முடைத்தான
ஆலி நாடன், Aali Naadan - திருவாலிநாட்டுக்குத் தலைவரும்
காமரு சீர், Kamaru Seer - விரும்பத்தக்க குணங்களையுடையவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார்
கண்டு உரைத்த, Kandu Uraitha - ஆராய்ந்து அருளிச்செய்த
தமிழ் மாலை இவை, Tamizh Maalai Ivai - இத்தமிழ்ப் பாசுரங்களை
நாமருவி, Naamaaruvi - நாவிலே பொருந்தவைத்து
பாட, Paada - பாடுமளவிலே
வினை ஆய, Vinai Aaya - பாபமென்று உள்ளவை யெல்லாம்
நண்ணா, Nannaa - கிட்டாதே ஒழிந்துபோம்
1678பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சீல குணம் சத் கார்ய வாதம் கொண்டு அறிய வேண்டும்படியாய் இருக்கும் –அங்கு பிரமாணங்கள் சொல்ல அறியும் இத்தனை – இங்கு எத்தனையேனும் தாழ்ந்தாருக்கும் முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலையைக் கண்ணாலே காண்கையாலே அது ஸ்பஷ்டம் ஆவது இங்கே யாயிற்று – கோல்களிலும் பணை களிலும் வைத்த மதுவை பானம் பண்ணக் கடவ உன்னை சர்வரச -என்கிற வஸ்துவைப் போய் அனுபவி என்று அன்றோ சொல்கிறது – ஸ்வாபதேசம்-சப்தாதி விஷய நிச்சாரதையும் –-பகவத் அனுபவ நிரதிசய சாரத்தையும் சிஷ்யருக்கு அறிவிக்கிறார்) 1
விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்வன் மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலி புகழ் சேர் கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல் வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ –8-4-1
பதவுரை Show / Hide
கோல் தும்பி, Kool Thumbi - கொம்புகளில் திரிகின்றவண்டே!
விண்ணவர் தங்கள் பெருமான், Vinnavar Thangal Perumaan - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்
திரு மார்வன், Thiru Maarvan - பிராட்டியைத் திருமார்பிற் கொண்டவனும்
மண்ணவர் எல்லாம் வணங்கும், Mannavar Ellam Vanangum - இந்நிலத்திலுள்ளார் எல்லாராலும் வணங்கப் படுபவனும்
மலி புகழ் சேர், Mali Pugazh Ser - நிறைந்த கீர்த்தியை யுடையவனும்
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருப்பவனுமான
எம்பெருமான், Emperumaan - ஸ்வாமியினுடைய
கதிர் முடிமேல், Kathir Mudimael - ஒளிபொருந்திய திருமுடியின் மீதுள்ள
வண்ணம் நறு துழாய், Vannam Naru Thuzhai - அழகியதும் மணத்ததுமான திருத்துழாயைக் கொண்டு
வந்து, Vandhu - இங்கே வந்து
ஊதாய், Oodhai - நீ ஊது.
1679பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருவடிகளை அக்ரமமாக ஏத்தி அதிலே விழுந்து எல்லாரும் ஸ்தோத்ரம் பண்ணி ஸ்நேஹத்தைப் பண்ணுகிற நிதித்யாசிதவ்ய -என்று விதிக்கிற விஷயத்தில் அன்றோ நான் உன்னைப் பற்றச் சொல்லுகிறது) 2
வேத முதல்வன் விளங்கு புரி நூலன் பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி காதன்மை செய்யும் கண்ண புரத் தெம்பெருமான் தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-2
பதவுரை Show / Hide
வேதம் முதல் வன், Vedham Mudhal Van - வேதங்களால் முழு முதற் கடவுளாகப் பிரதிபாதிக்கப்படுபவனும் (- (கண்ணபுரத்தெம்பெருமானுடைய,-) (அந்த நறுமணத்தைக் கொணர்ந்து)- (ஊதாய் கோல் தும்பீ!-.))
விளங்கு, Vilangu - (திருமேனியில்) விளங்குகின்ற
புரி நூலன், Puri Noolan - யஜ்ஞோபவீதத்தையுடையவனும்
பலரும், Palarum - எல்லாரும்
பாதம், Paadham - திருவடிகளை
பரவி பணிந்து ஏத்தி, Paravi Paninthu Aethi - ஆச்ரயித்து வணங்கித் துதித்து
காதன்மை செய்யும், Kaadhanmai Seyyum - பக்தி பண்ணுதற்கு உரியனான
தாது, Thaadu - தாதுகளையுடைத்தாய்
நறு, Naru - மணம்மிக்கதான
துழாய், Thuzhai - திருத்துழாயிலே
தாழ்ந்து, Thaazhnthu - படிந்து
1680பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தங்களை ஆஸ்ரயணீயராக நினைத்து இறுமாந்து இருக்கிறவர்கள் எல்லாரும் அவ்விறுமாப்பைப் பொகட்டு திருவடிகளிலே ஆஸ்ரயிக்கும் படி ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே நிற்கிறவன் – சஜாதீயர் உடைய யாத்ரை அமையாதோ உனக்கு) 3
விண்ட மலரெல்லாம் ஊதி நீ என் பெறுதி அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும் கண்டு வணங்கும் கண்ண புரத் தெம்பெருமான் வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ –8-4-3
பதவுரை Show / Hide
நீ, Nee - நீ (- (கோல் தும்பீ!-) (கண்ணபுரத்தெம்பெருமானுடைய,-) (வந்து ஊதாய்-))
விண்ட மலர் எல்லாம், Vindha Malai Ellam - விகஸித்த புஷ்பங்களி லெல்லாம்
ஊதி, Oothi - ஒலிசெய்து
என் பெறுதி, En Peruthi - என்னபேறு பெறுகின்றாய்? (ஒன்றுமில்லை)
அண்டம் முதல்வன், Andam Muthalvan - பரமபதத்துக்கு நிர்வாஹகனும்
அமருர்கள் எல்லாரும் பண்டு வணங்கும், Amarurgal Ellaarum Pandu Vanangum - தேவர்களெல்லாரும் (தங்கள் அஹங்காரந் தொலைந்து) ஸேவித்து வணங்கப் பெற்றவனுமான
வண்டு நறு துழாய், Vandu Naru Thuzhai - வண்டுகள் படிந்து பரிமளம் மிக்க திருத்துழாயைக் கொண்டு
1681பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எல்லாருக்கும் மேல் விழுந்து பற்ற வேண்டும்படியான வடிவை உடையனுமாய்க் கொண்டு ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை அன்றோ பற்றச் சொல்லுகிறது) 4
நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய் சீர் மலின்ற தோர் சிங்க வுருவாகிக் கார்மலி வண்ணன் கண்ண புரத் தெம்பெருமான் தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-4
பதவுரை Show / Hide
நீர்மலிகின்றது, Neermalikinrathu - ஸமுத்ரத்திலே வியாபித்த (- (கோல் தும்பீ-) (கண்ணபுரத் தெம்பெருமானுடைய-;))
ஓர் மீன் ஆய், Oru Meen Aayi - அத்விதீயமான மத்ஸ்யாவதாரமெடுத்தவனும்
ஓர் ஆமையும் ஆய், Oru Aamaiyum Aayi - விலக்ஷணமான கூர்மாவதார மெடுத்தவனும்
சீர் மலிகின்றது ஓர் சிங்கம் உரு ஆகி, Seer Malikinrathu Oru Singam Uru Aagi - சீர்மை மிகுந்த நரஸிம்ஹாவதார மெடுத்தவனும்
கார் மலி வண்ணன், Kaar Mali Vannan - மேகத்திற்காட்டிலும் சிறந்த வடிவு பெற்றவனுமான
தார், Thaar - மாலையிலே
மலி, Mali - பொருந்திய
தண், Than - குளிர்ந்த
துழாய், Thuzhai - திருத்துழாயிலே
தாழ்ந்து, Thaazhnthu - தாமதித்திருந்து
ஊதாய், Oodhai - (வந்து) ஊது.
1682பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமிக்கு செவ்வி பெற்று இருந்துள்ள திருத் துழாயிலே தாழ்ந்தூதாய்) 5
ஏரார் மலரெல்லா மூதி நீ என் பெறுதி பாரார் உலகம் பரவப் பெரும் கடலுள் காராமையான கண்ண புரத் தெம்பெருமான் தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-5
பதவுரை Show / Hide
நீ, Nee - நீ (- (கண்ணபுரத்தெம்பெருமானுடைய -;))
ஏர் ஆர் மலர் எல்லாம், Ear Ar Malai Ellam - அழகு நிரம்பிய (மற்ற புஷ்பங்களிலெல்லாம்
ஊதி, Oothi - ஒலி செய்து
என் பெறுதி, En Peruthi - என்னபேறு பெறுவாய்;  (ஒன்றும் பெறமாட்டாய்.)
பார் ஆர் உலகம், Par Ar Ulagam - இப்பூமியிலே பொருந்திய ஜனங்களெல்லாம்
பரவ, Parava - வணங்குமாறு
பெரு கடலுள், Peru Kadalul - பெரிய ஸமுத்ரத்தினுள்ளே
கார் ஆமை ஆன, Kar Aamai Aan - பெரிய ஆமையாகத் திருவவதரித்த
தார் ஆர் நறு துழாய், Thar Ar Naru Thuzhai - மாலையிலே பொருந்திய பரிமளம் மிக்க திருத்துழாயிலே
தாழ்ந்து ஊதாய், Thazhndu Oodhai - வைகியிருந்து (வந்து) ஊது.
1683பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ அங்கே சென்றால் முகம் தருவிப்பார் உண்டு அவன் தான் விரோதி நிரசன சீலன்- என்றும் ஒக்க ஆபத்துக்களில் உதவிப் போந்தவன் உதவாது ஒழியிலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவன் ஆனபின்பு அவன் பக்கலிலே சென்று இங்கே வந்தூதப் பாராய் -என்கிறாள்) 6
மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன் பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி காரில் திகழ் காயா வண்ணன் கதிர் முடி மேல் தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-6
பதவுரை Show / Hide
மார்வில் திருவன், Marvil Thiruvan - திருமார்பிலே ஸ்ரீ மஹாலக்ஷிமியை யுடையவனும் (- (கோல் தும்பீ!-))
வலன் ஏந்து சக்கரத்தன், Valan Aendhu Chakkarathan - வலத்திருக்கையில் தரிக்கப்பட்ட திருவாழியையுடையவனும்
பாரை, Parai - (அண்டபித்தியில்) ஒட்டிக்கிடந்த பூமியை
பிளந்த பரமன், Pilanda Paraman - (மஹாவராஹமாகிக்) குத்திக் கொணர்ந்த மேன்மை வாய்ந்தவனும்
பரம் சோதி, Param Sothi - நிகரற்ற சோதியே வடிவெடுத்தவனும்
காரில் திகழ், Kaaril Thigal - கறுப்பு நிறத்தினால் விளங்குகின்ற
காயா, Kaayaa - காயாம்பூப்போன்ற
வண்ணன், Vannan - வடிவையுடையவனுமான பெருமானுடைய
கதிர் முடிமேல், Kathir Mudimael - ஒளி பொருந்திய திருமுடிமீதுள்ள
தாரில், Thaaril - மாலையில் (தொடுக்கப்பட்டிருக்கின்ற)
நறு, Naru - பரிமளம் மிக்க
துழாய், Thuzhai - திருத்துழாயில்
தாழ்ந்து, Thaazhnthu - தங்கியிருந்து
ஊதாய், Oodhai - (வந்து) ஊது.
1684பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கையாலே வளைத்து கார்யம் கொள்ளலாம் படி இருக்குமவன் – அழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற காமனுக்கும் கூட உத்பாதகன் – மாலையாய் பரிமளிதமான திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்தூதாய்) 7
வாமனன் கற்கி மதுசூதனன் மாதவன் தார் மன்னு தாசரதியாய தட மார்வன் காமன் தன தாதை திருக் கண்ண புரத் தெம்பெருமான் தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-7
பதவுரை Show / Hide
வாமநன், Vaamanan - வாமநாவதாரஞ் செய்தவனும் (- (கண்ணபுரத்தெம்பெருமானுடைய-;) (தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ!-.))
கற்கி, Karkki - கல்கியவதாரம் செய்யப் போகிறவனும்
மது சூதன், Madhu Soothan - மதுவென்னு மசுரனைக் கொன்றவனும்
மாதவன், Madhavan - திருமகள் கொழுநனும்
தார் மன்னு, Thar Mannu - (ரக்ஷகத்வஸூசகமான) மாலை பொருந்திய
தட மார்வன், Thada Marvan - பெரிய திருமார்பையுடையவனும்
தாசரதி ஆய, Dasarathi Aaya - தசரத புத்ரனாகத் திருவவதரித்தவனும்
காமன் தன் தாதை, Kaman Than Thathai - மன்மதனுக்குத் தந்தையுமான
தாமம், Thamam - மாலையிலுள்ள
நறு, Naru - பரிமளம் மிக்க
துழாய், Thuzhai - திருத்துழாயில்
1685பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதிகளுக்கும் மிருத்யு வானவன் – ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே வந்து சந்நிஹிதனான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய புகரை உடைத்தான திரு அபிஷேகத்தின் மேலே உண்டான-தர்ச நீயமான திருத் துழாய் மாலையிலே வந்தூதாய்) 8
நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில் சால மலரெல்லாமூதாதே வாளரக்கர் காலன் கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல் கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ –8-4-8
பதவுரை Show / Hide
நெடு நீர், Nedu Neer - அதிகமான ஜலத்தையுடைய (- (கோல் தும்பீ!-) (கண்ணபுரத்தெம்பெருமானுடைய-;) (கொண்டு ஊதாய்-.))
வயல், Vayal - வயல்களிலுண்டான
நீலம் மலர்கள், Neelam Malargal - நீலோற்பல மலர்களிலும்
மருங்கில், Marungil - சுற்றிலுமுள்ள
மலர் எல்லாம், Malar Ellam - எல்லா மலர்களிலும்
சால, Sala - மிகவும்
ஊதாதே, Oothathe - ஒலிசெய்வது தவிர்த்து
வாள் அரக்கர் காலன், Vaal Arakkar Kalan - வாட்படையையுடைய ராக்ஷஸர்களுக்கு மிருத்யுவான
கதிர் முடி மேல், Kathir Mudi Mael - ஒளி பொருந்திய திருமுடி மீதுள்ள
கோலம், Kolam - அழகிய
நறு, Naru - பரிமளம் மிக்க
துழாய், Thuzhai - திருத்துழாயை
1686பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு அபூமியான இருக்கிற இடத்தில் போகச் சொல்லுகிறேனோ) 9
நந்தன் மதலை நிலமங்கை நற்துணைவன் அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான் கந்தங்கமழ் காயா வண்ணன் கதிர் முடி மேல் கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ –8-4-9
பதவுரை Show / Hide
நந்தன் மதலை, Nandan Mathalai - நந்தகோப குமாரனும் (- (கோல் தும்பீ!-))
நிலம் மங்கை நல் துணைவன், Nilam Mangai Nal Thunaivan - பூமிப்பிராட்டிக்கு இனிய வல்லபனும்
அந்தம் முதல்வன், Andham Muthalvan - ஸம்ஹாரத்துக்குக் ஸ்ருஷ்டிக்குங் கடவனும்
அமரர்கள் தம் பெருமான், Amarar Galam Perumaan - நித்யஸூரிகட்குத் தலைவனும்
கந்தம் கமழ், Kandham Kamazh - பரிமளம் கமழப்பெற்றவனும்
காயா வண்ணன், Kaayaa Vannaan - காயாம்பூப்போன்ற நிறத்தனுமான பெருமானுடைய
கதிர் முடிமேல், Kathir Mudimael - ஒளிபொருந்திய திருமுடியின் மீதுள்ள
கொந்து, Kondhu - கொத்துக் கொத்தான
நறு, Naru - மணம்மிக்க
துழாய் கொண்டு, Thuzhaai Kondo - திருத்துழாயைக் கொணர்ந்து
ஊதாய், Oodhai - ஊது.
1687பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேஷ பூதரான நாங்கள் இவற்றைக் கொண்டு பாடும்படியாக நீ உன் ஹிருதயத்திலே கொண்டு அவன் பக்கலிலே அறிவித்து எங்களுக்கு அவன் முகம் தரும்படி பண்ணி எங்கள் குறையைத் தீர்க்கப் பாராய் – என்கிறார் பத்தாம் பாசுரத்தில் இவர் ஒருவரும் ஆஸ்வஸ்தர் ஆகவே எல்லாரும் ஆஸ்வஸ்தர் காணும்) 10
வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன் கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத் தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ –8-4-10
பதவுரை Show / Hide
வண்டு அமரும் சோலை, Vandu Amarum Solai - வண்டுகள் படிந்த சோலைகளையுடையதும் (- (கோல் தும்பீ!-))
வயல், Vayal - கழனிகளை யுடையதுமான
ஆலி, Aali - திருவாலி யென்கிற
நல் நாடன், Nal Naadan - நல்ல நாட்டுக்குத் தலைவரும்
கண்ட சீர், Kanda Seer - பிரத்யக்ஷமான திருக்குணங்களையுடையவரும்
வென்றி, Vendri - ஜயசீலருமான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை, Maalaik - இச்சொல் மாலையைக் கொண்டு,
கொண்டல் நிறம் வண்ணன், Kondal Niram Vannaan - மேகத்தின் நிறம்போன்ற நிறத்தையுடையனான
கண்ண புரத்தானை, Kanna Puraththaanai - திருக்கண்ணபுரத் தெம்பெருமானை
தொண்டரோம், Thondarom - அடியோங்கள்
பாட, Paada - பாடும்படியாக
நினைந்து, Ninaindhu - நீ நெஞ்சிற்கொண்டு
ஊதாய், Oodhai - ஊதவேணும்.
1688பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிறரால் வந்த விலங்கு பரிஹரிக்குமவன் தன்னால் வந்த விலங்கு பரிஹரியாது ஒழிவதே – ஸ்ரீ வசுதேவர் காலிலே விலங்கு கழலும்படி வந்து அவதரித்த முக்த்தன் உடைய ஸவபாவத்தை அனுசந்தித்து ஆபத்துக்களிலே வந்து உதவும் ஸ்வ பாவனான பின்பு அந்த பித்ராதிகள் அளவில்லாத ஆசையை உடைய நமக்கு வந்து உதவுவானோ என்று பிரிந்து தனி இருக்கிற என் நெஞ்சானது அவன் பின்னே போயிற்று) 1
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன் சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப் பெறும் அளவு இருந்தேனை அந்தி காவலன் அமுதுறு பசுங்கதிர் அவை சுட அதனோடு மந்த மாருதம் வனமுலை தடவந்து வலி செய்வது ஒழியாதே –8-5-1
பதவுரை Show / Hide
தந்தை, Thandhai - தகப்பனாரான நந்தகோபருடைய
காலில், Kaalil - காலில் பூட்டியிருந்த
விலங்கு, Vilangu - விலங்கானது
அற, Aru - இற்று முறிந்து விழும்படி
வந்து தோன்றிய, Vandu Thonriya - திருவவதரித்த
தோன்றல் பின், Thonral Pin - ஸ்வாமியான கண்ணபிரானுடைய பின்னே
தமியேன் தன், Thamiyen Than - தனிப்பட்டிருக்கின்ற என்னுடைய
சிந்தை, Sindhai - நெஞ்சானது
போயிற்று, Poyitru - போய்விட்டது;
அவனிடை, Avanidai - அப்பெருமானிடத்தில்
திரு அருள், Thiru Arul - க்ருபையை
பெறும் அளவு இருந்தேனை, Perum Alavu Irundhenai - பெறுவதற்க ஸமயம் பார்த்திருக்கின்ற என்னை
அந்தி காவலன், Andhi Kavalain - இராப்பொழுதுக்கு இறைவனான சந்திரனுடைய
அமுது உறு, Amuthu Uru - அமுதம் மிக்க
பசுங் கதிர் அவை, Pasung Kathir Avai - அப்போதுண்டான கிரணங்களானவை
சுட, Suda - தஹிக்க,
அதனோடும், Adhanodum - அதோடுகூட,
மந்த மாருதம், Mantha Maarutham - மெல்லிய தென்றற்காற்றும்
வனம் முலை தடம் வந்து, Vanam Mulai Thadam Vandu - அழகிய முலைத்தடத்திலே வந்து வீசி
வலி செய்வது ஒழியாது, Vali Seivathu Ozhiyadhu - ஹிம்ஸைபண்ணுவதில் நின்றும் ஓய்கிறதில்லை.
1689பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புறம்பு உள்ளார் ஒருவரும் இல்லை யாயிற்று –அகவாய் குடி போயிற்று – நாயகனோ வந்து அணைகிறிலன்- இனி எத்தைச் செய்வது) 2
மாரி மாக்கடல் வளை வணர்க்கு இளையவன் வரை புரை திரு மார்பில் தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்த தோர் துணை காணேன் ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும் தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே –8-5-2
பதவுரை Show / Hide
மாரி, Maari - மேகம்போன்றவனும்
மா கடல், Maa Kadal - நீலக்கடல் போன்றவனும்
வளை வணற்கு இளையவன், Valai Vanarku Ilaiyavan - சங்குபோன்ற (வெளுத்த) நிறமுடையனான பலராமனுக்குப் பின் பிறந்தவனுமான கண்ணபிரானுடைய
வரை புரை, Varai Purai - மலைபோன்ற
திரு மார்வில், Thiru Marvil - திருமார்பிலுள்ள
தாரின், Tharin - மாலையினிடத்து
ஆசையின், Aasaiyin - ஆசையினால்
போயின, Poyin - என்னைவிட்டு நீங்கின
நெஞ்சமும், Nenjamum - மனமும்
தாழ்ந்தது, Thaanthathu - மீண்டுவரத் தாமதித்தது; (அவனிடத்திலேயே கால் தாழ்ந்துவிட்டது.)
ஓர் துணை காணேன், Oor Thunai Kaanen - உதவியான ஒருவரையுங் காண்கின்றிலேன்;
ஊரும் துஞ்சிற்று, Oorum Thunjirru - ஊரிலுள்ளாரும் உறங்கினார்கள்;
உலகமும் துயின்றது, Ulagamum Thuyinrrathu - உலகங்களும் உறங்கின;
விசும்பு, Visumbu - ஆகாசத்திலே
இயங்கும், Iyankum - ஸஞ்சரிக்கின்ற
ஒளியவன் தேரும், Oliyavan Therum - ஸூர்யனது தேரும்
போயிற்று, Poyitru - மறைந்து போயிற்று;
திசைகளும், Thisaigalum - திக்குக்களும்
மறைந்தன, Maraindhana - தெரியவில்லை;
செய்வது ஒன்று அறியேன், Seivathu Onru Ariyeen - (இந்நிலையில்) செய்யத்தக்கது ஒன்றுமறிகின்றிலேன்.
1690பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவ்வளவிலே வாராதே இரான் என்கிற நெஞ்சையும் அழித்து கொடு வந்து தோற்றா நின்றதாயிற்று இடையன் ஊதுகிற குழல் –பிராமணர் ஊதுகிற குழலுக்கு அகப்படாள் காணும் இவள் – மாஸூச -என்பார் ஒருவரையும் காண்கிறதில்லை) 3
ஆயன் மாயமே யன்றி மற்றென் கையில் வளைகளும் இறை நில்லா பேயினார் உயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ தூய மா மதிக் கதிர் சுடத் துணை யில்லை யிணை முலை வேகின்றதால் ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் அஞ்சல் என்பார் இல்லையே –8-5-3
பதவுரை Show / Hide
ஆயன், Aayan - கண்ணபிரானுடைய
மாயமே அன்றி மற்று என்?, Maayame Anri Matru En - வஞ்சனை தவிர வேறு என்ன இருக்கிறது? (ஒன்றுமில்லை)
வளைகளும், Valaigalum - வளைகளும்
கையில் இறை நில்லா, Kaiyil Irai Nillaa - கையில் க்ஷணகாலமும் தங்குவதில்லை;
பேயினார், Peyinaar - பேய்ச்சியாகிய பூதனையினுடைய
உயிர், Uyir - பிராணனை
உண்டிடும் பிள்ளை, Undidum Pillai - உண்டு அவளை முடித்த பிள்ளை
நம் பெண் உயிர்க்கு, Nam Pen Uyirkkum - (அவளைப்போல்) பெண்ணாய்ப் பிறந்த நம்முடைய பிராணனுக்கு
இரங்குமோ, Irangumo - தயை பண்ண ப்ரஸக்தி யுண்டோ?
தூய மா மதி, Thuya Maa Mathi - மறுவற்ற சந்திரனுடைய
கதிர், Kathir - கிரணங்கள்
சுட, Suda - தஹிப்பதனாலே
இணை முலை, Inai Mulai - இரண்டு முலைகளும்
வேகின்றது, Veingirathu - தீப்பற்றி யெரிகி்ன்றன;
ஆல், Aal - அந்தோ! ;
துணை இல்லை, Thunai Illai - (எரியும் நெருப்பையவிக்கத்) துணையாவாரில்லை;
உள்ளமும், Ullamum - மனமும்
ஆயன், Aayan - கண்ணபிரானுடைய
வேயினுக்கு, Veiyinukku - வேய்ங்குழலுக்கு ஈடுபட்டு
அழிகின்றது –, Azhikindrathu - மாய்கின்றது;
அஞ்சேல், Anjael - ‘பயப்படாதே’ என்று அபயமளிப்பாராருமில்லையே.
1691பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷகன் ஆனவன் இவ்வளவில் வந்து உதவிற்றிலன் பாதக பதார்த்தம் தானே இனிக் கிருபை பண்ணி மீளில் நான் எனக்கு உரியேனாய் இருக்கலாம்) 4
கயம் கொள் புண் தலை களிறு உந்து வெந்திறல் கழல் மன்னர் பெறும் போரில் மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் மறி கடல் நீர் தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலை மேல் இயங்கு மாருதம் விலங்கில் என்னாவியை எனக்கெனப் பெறலாமே –8-5-4
பதவுரை Show / Hide
கயம் கொள் புண் தலை, Kayam Kol Pun Thalai - (சீயும் ரத்தமும்) தடாகம் போலே வற்றாதிருக்கிற புண்கள் நிரம்பிய தலையையுடைய
களிறு, Kaliru - யானைகளை
உந்து, Undhu - தள்ளி நடத்தவல்ல
வெம் திறல், Vem Thiral - வெவ்விய வலிமையை யுடையவரும்
கழல், Kazhal - வீரக்கழலையுடையருமான
மன்னர், Mannar - அரசர்களினுடைய
பெரும் போரில், Perum Poril - பெரிய பாரத யுத்தத்தில்
மயங்க, Mayangka - அறிவுகலங்கும்படி
வெண் சங்கம், Ven Sangam - வெளாதத பாஞ்சஜந்யத்தை
வாய் வைத்த, Vaai Vaiththa - திருப்பவளத்தில் வைத்து ஊதின
மைந்தனும், Mainthanum - மஹா புருஷனும்
வந்திலன், Vandhilan - (என்னிடம்) வந்து சேர்ந்தானில்லை;
மறிகடல், Marikadal - அலைமடிகின்ற கடலினுடைய
நீர், Neer - ஜலத்ததில்
தயங்கு, Thayangku - அசைந்து வருகின்ற
வெண் திரை, Ven Thirai - வெண்மையான அலைகளாலுண்டான
திவலை, Thivalai - திவலைகளாகிற
நுண் பனி எனும், Nun Pani Enum - நுட்பமான பனியென்று சொல்லப்படுகிற
தழல், Thazhal - நெருப்பை
முகந்து, Mugandhu - வாரிக்கொண்டுவந்து
இள முலை மேல், Ila Mulai Mel - (எனது) இளமைதங்கிய முலைகளின் மீது
இயங்கு, Iyangu - வீசுகின்ற
மாருதம், Marudham - காற்றானது
விலங்கில், Vilankil - தணியப்பெற்றால்
என் ஆவியை, En Aaviyai - எனது உயிரை
எனக்கு என பெறலாம், Enakku En Peralaam - எனக்கு உரித்தாக அடையலாகும்.
1692பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு அவன் பண்ணின அருளோடு கூட அதினுடைய பல ரூபமான பகலும் போய் நின்றதாயிற்று – அருள் போகவே பகலும் போம் இறே) 5
ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால் தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முது நீரில் ஆழ வாழ்கின்ற வாவியை யடுவதோர் அந்தி வந்து அடைகின்றதே –8-5-5
பதவுரை Show / Hide
ஏழு மா மரம், Ezhu Maa Maram - ஸப்தஸால வ்ருக்ஷங்கள்
துளைபட, Thulaipada - (ஸுக்ரீவனுடைய நம்பிக்கைக்காகத்) துளைபடும்படி
சிலை, Silai - வில்லை
வளைத்து, Valaiththu - வளைத்தவனும்,
இலங்கையை, Ilankaiyai - லங்காபுரியை
மலங்குவித்த, Malanguviththa - கலங்கப்பண்ணினவனுமான
ஆழியான், Aazhiyaan - அறுகாழி மோதிரத்தைக் கை யிலேயுடைய இராமபிரான்
நமக்கு அருளிய அருளொடும், Namakku Aruliya Arulodum - நம் விஷயத்திற் பண்ணின கிருபையோடுகூட
பகல் எல்லை கழிகின்றது, Pagal Ellai Kazhikinrathu - பகற்போதும் முடிந்து போகாநின்றது;
ஆல், Aal - அந்தோ! ;
தோழி, Thozhi - வாராய் தோழீ! ;
இதற்கு நாம் என் செய்தும், Idharku Naam En Seiththum - இந்த ஆபத்துக்கு நாம் என்ன பரிஹாரம் செய்யவல்லோம்! ;
துணை இல்லை, Thunai Illai - துணைநிற்பார் ஆருமில்லை;
சுடர், Sudhar - ஸூரியனானவன்
படு, Padu - தான் தோன்றின
முது நீரில், Muthu Neeril - ஸமுத்ரத்தினுள்
ஆழ, Aazha - ஆழ்ந்து மறைந்துபோக,
வாழ்கின்ற ஆவியை அடுவது, Vazhkindra Aaviyai Adhuthal - பிழைத்திருக்க நினைத்திருக்கின்ற பிராணனை முடிப்பதான
ஓர் அந்தி, Oru Andhi - ஒரு ஸாயம்ஸந்த்யாகாலமானது
வந்து அடை கின்றதே, Vandhu Adai Kinrathae - வந்து சேர்கின்றதே!.
1693பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெருப்பை தூவா நின்றுள்ள அம்பை உடைத்தாய் தர்ச நீயமாய் இருக்கிற வில்லை வளைத்த மிடுக்கன் வருகிறிலன்-இனி ஒரு அபலை இருந்து நோக்கிக் கொள்ளவோ) 6
முரியும் வெண்டிரை முது கயம் தீப்பட முழங்கு அழல் ஏறி அம்பின் வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன் எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணை நெடுங்கண் துயிலா கரிய நாழிகை ஊழியில் பெரியன கழியுமாறு அறியேனே –8-5-6
பதவுரை Show / Hide
முரியும், Muriyum - கிளர்ந்து அலைகின்ற
வெண் திரை, Ven Thirai - வெளுத்த அலைகளையுடைய
முதுகயம், Muthugaiyam - ஸமுத்ரமானது
தீப்பட, Theepada - தீக்கொளுவியெரியும்படி
முழங்கு அழல் எரி அம்பின், Muzhangu Azhala Eri Ambin - ஒலியுடைய நெருப்பு எரியாநின்றுள்ள அம்புகளையுடைய
வரி கொள் வெம் சிலை, Vari Kol Vem Silai - அழகியதாய்க் கொடிதாயிருந்துள்ளவில்லை
வளைவித்த, Valaivitha - வளையச் செய்த
மைந்தனும், Mainthanum - மஹாவீரனான இராமபிரானும்
வந்திலன், Vandhilan - வரவில்லை;
என் செய்கேன், En Seigain - என்ன பண்ணுவேன்? ;
எரியும், Eriyum - பிரகாசித்துக்கொண்டிருந்த
வெம் கதிர், Vem Kathir - ஸூர்யனும்
துயின்றது, Thuyinrathu - அஸ்தமித்தான்;
பாவியேன், Paviyen - பாவியான என்னுடைய
இணை நெடுங்கண் துயிலா, Inai Nedungkan Thuyila - பெரிய இரண்டு கண்களும் உறங்குகின்றனவில்லை;
ஊழியின், Oozhiyin - கல்ப காலத்திற்காட்டிலும்;
பெரியன, Periyan - பெரியவையாயுள்ள
கரிய நாழிகை, Kariya Naazhigai - இரவு நாழிகைகள்
கழியும் ஆறு அறியேன், Kazhiym Aaru Ariyen - எப்படி கழியப் போகின்றனவோ அறிகின்றிலேன்.
1694பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் முடியவே அவனைக் கிடையாது – அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம் ஆனபின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன்) 7
கலங்க மாக்கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரையாகம் மலங்க வெஞ்சமத்து அடுசரம் துரந்த எம்மடிகளும் வாரானால் இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடு மாயன் விலங்கல் வேயின தோசையுமாயினி விளைவது ஓன்று அறியேனே –8-5-7
பதவுரை Show / Hide
மா கடல், Maa Kadal - பெரிய கடலானது
கலங்க, Kalanga - கலங்கும்படியாக
கடைந்து, Kadaindhu - (அதனைக்) கடைந்தவனும்
அடைந்து, Adaindhu - (அக்கடலில்) அணை கட்டினவனும்
இலங்கையர் கோனது, Ilankaiyar Konathu - இலங்கையிலுள்ளார்க்கு அரசனான இராவணனுடைய
வரை ஆகம், Varai Aagam - மலைபோன்ற மார்பானது
மலங்க, Malanga - வியாகுலப்படும்படி
வெம் சமத்து, Vem Samathu - கொடியபோரில்
அடு சரம், Adu Saram - கொலையம்புகளை
துரந்த, Thurandha - பிரயோகித்தவனுமான
எம் அடிகளும், Em Adigalum - எமது ஸ்வாமியும்
வாரான், Varaan - வரவில்லை;
ஆல், Aal - அந்தோ! ;
இலங்கு, Ilangu - விளங்காநின்ற
வெம் கதிர், Vem Kathir - கடூரமான கிரணங்களையுடைய
இள மதி அதனொடும், Ila Mathi Adhanodum - இளம் சந்திரனோடு கூட
விடை, Vidai - எருதினுடைய
மணி, Mani - (கழுத்தில் கட்டின மணியின்) ஓசையும்
அடும், Adum - (என்னைக்) கொலை செய்கின்றது;
ஆயன், Aayan - இடையனான கண்ணபிரானிடத்துள்ள
விலங்கல் வேயினது, Vilangal Veiyinathu - மலை மூங்கிற்குழலினுடைய
ஓசையும், Osaiyum - த்வநியும்
ஆய், Aai - உண்டாக,
இனி விளைவது ஒன்று அறியேன், Ini Vilaiyvadhu Ondru Ariyeen - இனி உண்டாகப்போகும் ஆபத்தை ஒன்று மறிகின்றிலேன்.
1695பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடியே அனுபவித்து அல்லது நசியாத படி க்ரூரமாய் இருப்பதொரு பாபம் உண்டாக அறிகிறிலேன் – இன்னம் இதில் காட்டில் நரகத்தில் போய் அனுபவிப்பதோர் அனுபவம் தான் உண்டாக அறிகிறிலேன்) 8
முழுது இவ்வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவெய்த மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய மைந்தனும் வாரானால் ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை யடங்க வஞ்சிறைக் கோலித் தழுவு நள்ளிருள் தனிமையில் கடியதோர் கொடு வினை அறியேனே –8-5-8
பதவுரை Show / Hide
இ வையகம், I Vaiyagam - இந்த லோகமானது (- (வாரான் ஆல்-;))
முழுது, Muzhuthu - அடங்கலும்
முறை கெட மறைதலும், Murai Keda Maraithalum - மரியாதை குலைந்து போனதனால்
முனிவனும், Munivanum - ஜமதக்நி முனிவன்
முனிவு எய்த, Munivu Eytha - சீற்றங்கொள்ள (அது காரணமாக)
மழுவினால், Mazhuvinal - கோடாலிப்படையினால்
மன்னர், Mannar - க்ஷத்ரியர்களினுடைய
ஆர் உயிர், Aar Uyir - அருமையான பிராணன்களை
வௌவிய, Vauviy - கவர்ந்த
மைந்தனும், Mainthanum - மிடுக்கையுடைய (பரசுராம) பிரானும்
ஒழுகு, Ozhugu - பெருகுகின்ற
நுண் பனிக்கு, Nun Panikku - சிறுபனிக்காக
ஒடுங்கிய, Odungiya - ஒடுங்கிவர்த்திக்கிற
பேடையை, Pedaiai - பெண் பறவையை
அம் சிறை கோலி, Am Sirai Koli - அழகிய சிறகுகளை விரித்து
அடங்கத் தழுவும், Adangath Thazhuvum - நிபிடமாக அணைத்துக் கொள்வதற்குரிய
நள்ளிருள், Nallirul - நடு நிசியில்
தனிமையின், Thanimaiyin - (இப்படி) தனிமைப்பட்டிருப்பதிற்காட்டிலும்
கடியது, Kadiyadhu - க்ரூரமான
ஓர் கொடு வினை, Oru Kodu Vinai - வேறொருபாபத்தை
அறியேன், Ariyeen - அறிகின்றிலேன்.
1696பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண்டத்துக்கு எல்லாம் பாத்த்ய கோடியிலே அந்வயிக்கும் படி மகா பாபத்தை பண்ணின என்னுடைய தரமி லோபத்தை பண்ணுகையிலே ஒருப்படா நின்றது) 9
கனம் செய் மா மதிள் கண புரத் தவனொடும் கனவினில் அவன் தந்த மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக விருந்தேனை சினம் செய் மால் விடைச் செறு மணி யோசை என் சிந்தையைச் சிந்துவிக்கும் அனந்தல் அன்றிலினிரி குரல் பாவியேன் ஆவியை யடுகின்றதே –8-5-9
பதவுரை Show / Hide
கனம் செய், Kanam Sei - திண்ணிதாகச் செய்யப்பட்டுள்ள
மா மதிள், Maa Madil - பெரிய திருமதில்களையுடைத்தான
கணபுரத்து, Kanapurathu - திருக்கண்ணபுரத்திலெழுந்தருளியிருக்கிற
அவனொடும், Avanodum - அப்பெருமானோடு கூடியிருப்பதாக
கனவினில், Kanavinil - ஸ்வப்நத்திலே
அவன் தந்த, Avan Thanda - அப்பெருமான் கொடுத்த
மனம் செய் இன்பம், Manam Sei Inbam - மாநஸிகமாத்ரமான இன்பமானது
வந்து உள்புக, Vandhu Ulpuka - நினைவுக்குவர (அத்தாலே)
எள்கி, Elgi - ஈடுபட்டு
என் வளை நெக இருந்தேனை, En Valai Nega Irundhenai - என் கைவளை கழலும்படி யிருக்கிறவென்னை
சினம் செய், Sinam Sei - கோவங்கொண்ட
மால் விடை, Maal Vidai - பெரிய விருஷபத்தினுடைய
செறு மணி, Seru Mani - க்ரூரமான மணியினுடைய
ஓசை, Osai - த்வநியானது
என் சிந்தையை, En Sindhaiyai - எனது நெஞ்சை
சிந்துவிக்கும், Sindhuvikkum - சிதிலமாக்குகின்றது;
அனந்தல், Anandhal - உறக்கங்கொண்டிருக்கின்ற
அன்றிலின், Anrilin - அன்றிற்பறவையினுடைய
அரி குரல், Ari Kural - தழுதழுத்த பேச்சானது
பாவியேன், Paviyen - பாவியான என்னுடைய
ஆவியை, Aaviyai - உயிரை
அடுகின்றது, Adhigindrathu - ஹிம்ஸிக்கின்றது.
1697பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத் திரு மொழியை அப்யசிக்க வல்லார் –பிரிவாற்றாமை கூப்பிடுவது தவிர்ந்து நித்ய விபூதியில் நித்ய சூரிகளோடே கூடி அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்கிறபடியே ஹர்ஷத்துக்கு போக்கு விட்டுக் கூப்பிட்டு பின்னை ஒரு காலும் புனராவ்ருத்தி இல்லாத பேற்றைப் பெறுவர்) 10
வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த கார் கொள் பூம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார் ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே –8-5-10
பதவுரை Show / Hide
வார் கொள், Vaar Kol - கச்சு அணிந்த
மென் முலை, Men Mulai - மெல்லிய முலைகளையடைய
மடந்தையர் அவர், Madandaiyar Avar - (திருவாய்ப்பாடியிலுள்ள) அப்பெண்கள்
தட கடல் வண்ணன், Thada Kadal Vannan - பெரிய கடலின் நிறம் போன்ற நிற முடையனான கண்ணபிரானுடைய
தாளை, Thaalai - திருவடிகளை
நயந்து, Nayandhu - ஆசைப்பட்டு
ஆர்வத்தால், Aarvaththal - அன்பினால்
முன் புலம்பிய புலம்பலை, Mun Pulambiya Pulambalai - முன்பு கதறின கதறலை
அறிந்து, Arindhu - உட்கொண்டு,
கார் கொள் பை பொழில் மங்கையர் காவலன், Kaar Kol Pai Pozhil Mangaiyar Kaavalan - மேக ஸஞ்சாரத்தையுடைய பரந்தசோலைகளையுடைத்தான திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்
உரைசெய்த, Uraichseitha - அருளிச் செய்த
ஒலி, Oli - இச்சொற்களை
வல்லார், Vallaar - ஓதியுரணவல்லவர்கள்
ஏர்கொள், Aerkol - அழகிய
வைகுந்தம் மா நகர், Vaikundham Maa Nagar - பரமபதமென்னுந் திருநாட்டிலே
புக்கு, Pukku - புகுந்து
இமையவரோடும், Imaiyavarodum - நித்யஸுரிகளோடே
கூடுவர், Koodhuvar - சேரப்பெறுவர்கள்.
1698பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் -என்னுமா போலே பிரஜைகளின் உடைய ரஷணத்துக்கு இவர்களும் தாமுமான சேர்த்தி உண்டாக வேணும் என்று பார்த்து வைத்தான் ஆயிற்று – அவனும் நாமும் இவர்களும் சேர வர்திக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் என்று உகந்த ஸ்ரீ திருக் கண்ண புரத்தை தொழுவோம்) 1
தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா வரக்கர் துளங்கா முன் திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன் வண்டார் கூந்தல் மலர் மங்கை வடிக்கண் மடந்தை மா நோக்கும் கண்டான் கண்டுகொண்டுகந்த கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-1
பதவுரை Show / Hide
தொண்டீர், Thondheer - பகவத் கைங்கரியத்தில் ருசி யுடையீர்காள்! (- (இவர்களுடைய))
உய்யும் வகை, Uyum Vagai - உஜ்ஜீவிக்கும் வழியை
கண்டேன், Kandein - தெரிந்து கொண்டேன்;
முன், Mun - முற்காலத்தில்
துளங்கா அரக்கர், Thulanga Arakkar - ஒருநாளும் கஷ்டப்பட்டறியாத ராக்ஷஸர்கள்
துளங்க, Thulanga - கஷ்டப்படும்படியாக
திண் தோள் நிமிர, Thin Thol Nimira - வலிமை பொருந்திய திருத்தோள்கள் நிமிரவும்
சிலை வளைய, Silai Valaiya - வில்வளையவும்
சிறிதே முனிந்த, Siridhe Munintha - ஸ்வல்பமான சீற்றமே கொண்டவனாய்
திரு மார்பன், Thiru Maarban - லக்ஷ்மியைத் திருமார்பிலே உடையவனாய்,
வண்டு ஆர் கூந்தல் மலர் மங்கை, Vandu Aar Koondhal Malar Mangai - வண்டுகள் படிந்த கூந்தலையுடைய பெரிய பிராட்டியாரென்ன
வடி கண் மடந்தை, Vadi Kan Madanthai - கூர்மை பொருந்திய திருக்கண்களையுடைய பூமிப்பிராட்டியாரென்ன
மா நோக்கம் கண்டான், Maa Nokkam Kandan - சிறந்த கடைக்கண் பார்வையை அனுபவிப்பவனான எம்பெருமான்
கண்டு கொண்டு உகந்த, Kandu Konda Ugantha - (நித்யவாஸத்திற்குப் பாங்கான இடமென்று) திருவுள்ளம் பற்றி மகிழ்ந்து உறையுமிடமான
கண்ணபுரம், Kannapuram - திருக்கண்ணபுரத்தை
நாம் தொழுதும், Naam Thozhudum - நாம் தோழுவோம்
1699பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அது ஸ்ரீ பிராட்டி பக்கல் ஓரத்தால் செய்த செய்யல் அன்றோ – நாம் அதற்க்கு பிற்பாடர் ஆனோமே -என்ன அது வேண்டா -அவன் விரோதி நிரசன சீலன் -என்கிறார்) 2
பொருந்தா வரக்கர் வெஞ்சமத்துப் போன்ற வன்று புள்ளூர்ந்து பெரும் தோள் மாலி தலை புரளப் பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை இருந்தார் தம்மை உடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்துப் புக்கு ஒழிப்பக் கருந்தாட் சிலை கைக் கொண்டானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-2
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்பொருகாலத்தில், (- (கண்ணபுரம், நாம் தொழுதும்-.))
வெம் சமத்து, Vem Samathu - கொடிய போர்க்களத்திலே
பொருத்தா அரக்கர், Poruththa Arakkar - சத்ருக்களான ராக்ஷஸர்கள்
பொன்ற, Pondra - முடியும்படியாக
புள் ஊர்ந்து, Pul Oornthu - கருடப் பறவையை ஏறி நடத்திக் கொண்டெழுந்தருளி
பெரு தோள் மாலி, Peru Thol Maali - வலிய தோள்களையுடையனான மாலியினுடைய
தலை, Thalai - தலையானது
புரள, Purala - (அற்று விழுந்து நிலத்தில்) புரளும் படியாகவும்
பேர்ந்த அரக்கர், Perntha Arakkar - அவனைத் தவிர மற்ற ராக்ஷஸர்கள்
தென் இலங்கை இருந்தார் தம்மை உடன் கொண்டு, Then Ilangai Irundhaar Thammai Udhan Kondo - தென்னிலங்கையிலிருந்து மற்றுமுள்ள ராக்ஷஸர்களையுங் கூட்டிக்கொண்டு
அங்கு, Angu - அவ்விடத்திலிருந்து
எழில் ஆர்பிலத்து, Ezhil Aarbilathu - அழகிய பாதாளத்திலே
புக்கு ஒளிப்ப, Pukku Olippa - புகுந்து மறையும்படியாகவும்
கருந் தாள் சிலை, Karun Thaal Silai - வயிரம்பற்றித் திண்ணிதான வில்லை
கை கொண்டான், Kai Kondaaan - திருக்கையிலே தரித்தவனான எம்பெருமானுடைய
ஊர், Oor - இருப்பிடமான
1700பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஸ்துதமான ஸ்ரீ ராமாவதாரம் பின்னாட்டின படி சொல்லுகிறது) 3
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த வாற்றலான் வல்லாளரக்கர் குலப்பாவை வாட முனி தன் வேள்வியைக் கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-3
பதவுரை Show / Hide
வல்லி இடையாள் பொருட்டாக, Valli Idaiyaal Porutthaga - கொடிபோல் மெல்லிய இடையை யுடையளான ஸீதைக்காக, (- (ஊர், கண்ணபுரம், நாம் தொழுதும்-.))
நீர், Neer - கடலை அகழாகவுடையதாய்
மதிள், Mathil - மதிள்களையுமுடைத்தான
இலங்கையர், Ilangaiyar - லங்காபுரியிலுள்ள அரக்கர்களுக்கு
கோவை, Kovai - தலைவனான இராவணனை
அல்லல் செய்து, Allal Seidhu - துன்பப்படுத்தி
வெம் சமத்துள், Vem Samaththul - வெவ்விய போர்க்களத்திலே
ஆற்றல் மிகுந்த, Aatral Mikuntha - தன்னுடைய மிடுக்கை மிகவும் விளங்கக்காட்டின
ஆற்றலான், Aatralan - மஹா வீரனும்
வல் ஆள் அரக்கர், Val Aal Arakkar - வலிய ஆண்மைத்தனமுடைய ராக்ஷஸர்களின்
குலம், Kulam - குலத்தில் தோன்றிய
பாவை, Pavai - தாடகை யென்னும் அரக்கியை
வாட, Vaada - முடிய (ச் செய்து)
முனி தன், Muni Than - விச்வாமித்ர முனியினுடைய
வேள்வியை, Velviyai - யாகத்தை
கல்வி சிலையால், Kalvi Silaiyaal - தான் கற்றுப் பயின்ற வில்லைக் கொண்டு
காத்தான், Kaaththaan - காத்தருளினவனுமான பெருமானுடைய
1701பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீரிலே இட்டால் ஆழக் கடவ மலைகளைக் கொண்டு கடலை அடைத்த ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுக்கு வாசஸ் ஸ்தானமான ஸ்ரீ கண்ண புரம் நாம் தொழுதுமே) 4
மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக் கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்றுத் தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக் கல்லால் கடலை அடைத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-4
பதவுரை Show / Hide
கொடியோன், Kodiyon - கொடியவனான இராவணனுடைய (- (அதற்காக) (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.))
இலங்கை, Ilankai - லங்காபுரியில்
புகல் உற்று, Pugal Utru - பிரவேசிக்கவேண்டி
மல்லை முந்நீர், Mallai Munnir - செழி்ப்பான கடலானது
அதர் பட, Adhar Pada - வழிபடும்படியாக
வரி வெம் சிலை, Vari Vem Silai - வரிகளை யுடையதாய் வெவ்வியதான வில்லை
கால் விளை வித்து, Kaal Vilai Viththu - வளையச்செய்து
கொல்லை விலங்கு, Kollai Vilangu - காட்டுமிருகங்கள் (வாநரமுதலிகள்)
பணி செய்ய, Pani Seyya - கைங்கரியம் பண்ண
தொல்லை மரங்கள், Thollai Marangal - பழைய மரங்களையும்
புகப் பெய்து, Pugap Peidhu - கடலினுட் புகும்படியாக வெட்டிப்போட்டு
துவலை, Thuvilai - திவலைகள்
நிமிர்ந்து, Nimirndhu - கிளர்ந்து
வான், Vaan - ஆகாசத்திலே
அணவ, Anava - அளாவும்படியாக
கல்லால், Kallal - மலைகளைக் கொண்டு
கடலை, Kadalai - ஸமுத்ரத்தை
அடைத்தான், Adaiththaan - அணைசெய்த எம்பெருமானுடைய
1702பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித ரஷணம் ஒரு தலையானால் தன்னைப் பேணாதே ரஷிக்கும்-ஸ்வபாவன் -ஆயிற்று) 5
ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம் ஓமமாகி ஊழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரிச் சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன் காமன் பயந்தான் கருதுமூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-5
பதவுரை Show / Hide
ஆமை ஆகி, Aamai Aagi - கூர்மரூபியாயும் (- (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.))
அரி ஆகி, Ari Aagi - நரஸிம்ஹரூபியாயும்
அன்னம் ஆகி, Annam Aagi - ஹம்ஸரூபியாயும் (அவதரித்தவனும்)
அந்தணர் தம், Andhanar Tham - பிராமணர்களினுடைய
ஓமம் ஆகி, Oomam Aagi - யாகங்களில் ஆராதிக்கப்படுமவனும்
ஊழி ஆகி, Oozhi Aagi - பிரளயகாலத்திலு முள்ளவனும்
நெடு புணரி, Nedu Punari - ஓங்கின அலைகளையுடைத்தான
உவரி, Uvari - கடலினால்
சூழ்ந்த, Sozhndha - சூழப்பட்டதும்
சேமம் மதிள் சூழ், Semam Mathil Sozh - காப்பான மதிள்களாலே சூழப்பட்டதுமான
இலங்கை, Ilankai - லங்காபுரிக்கு
கோன், Koon - தலைவனான இராவணனுடைய
சிரமும், Siramum - தலைகளையும்
கரமும், Karumum - தோள்களையும்
துணித்து, Thuniththu - அறுத்தொழித்தவனும்,
முன், Mun - முன்பொருகால்
காமன், Kaaman - மன்மதனை
பயந்தான், Payandhaan - பிள்ளையாகப் பெற்றவனுமான எம்பெருமான்
கருதும், Karudum - திருவுள்ளம் பற்றியிருக்கப்பெற்ற
1703பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனுமாய் – முன் கறுத்து திண்ணியதான தாளை உடைய குவலயா பீடத்தை அநாயாசேன முறித்தானூர்) 6
வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன் திருந்தா வரக்கர் தென்னிலங்கைச் செந்தீ யுண்ணச் சிவந்தொரு நாள் பெருந்தோள் வாணற்க்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி முன் கருந்தாள் களிறு ஓன்று ஒசித்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-6
பதவுரை Show / Hide
மட நெஞ்சே, Mada Nenje - ஸாதுவான நெஞ்சே! (- (ஊர், கண்ணபுரம் நாம், தொழுதும்-))
நீ வருந்தாது இரு, Nee Varundhaathu Iru - நீ வருத்தப்படாமலிரு;
நம் மேல், Nam Mel - நம்மிடத்து
வினைகள், Vinaigal - பாவங்களின் பலன் ஒன்றும்
வாரா, Vaaraa - வந்து சேரமாட்டாது; (ஏனென்றால்)
முன், Mun - முன்னே
திருந்தா அரக்கர், Thirundhaa Arakkar - திருந்தாமலிந்த ராக்ஷஸர்களின் ஊராகிய
தென் இலங்கை, Then Ilangai - தென்னிலங்காபுரியை
செம் தீ உண்ண, Sem Thee Unna - சிவந்த நெருப்பு ஆக்ரமித்து உண்ணும்படியாக
சிவந்து, Sivandhu - சீற்றங்கொண்டவனும்
ஒரு நாள், Oru Naal - மற்றொருகாலத்தில்
பெரு தோள் வாணற்கு, Peru Thol Vaanarku - பெரிய தோள்களையுடைய பாணாஸுரன் விஷயத்தில்
அருள் புரிந்து, Arul Purindhu - (உயிரைக் கவராது விட்டிடுகை யாகிற) கிருபையைச் செய்தருளினவனும்
பின்னை மணாளன் ஆகி, Pinnai Manaalan Aagi - நப்பின்னைப் பிராட்டிக்கு நாதனானவனும்
முன், Mun - முன்பொருகால்
கரு தாள், Karuthaal - வலிமையுள்ள கால்களையுடைய
களிறு ஒன்று, Kaliru Ondru - (குவலயாபீடமென்கிற) ஒரு யானையை
ஒசித்தான், Osiththaan - தொலைத்தவனுமான பெருமானுடைய
1704பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணன் பண்ணின பிராதி கூல்யம் தம்பி அளவாக வந்தேறுவதாக இருக்கச் செய்தேயும் அத்தைப் பாராதே அவன் தம்பிக்கு ராஜ்யத்தை கொடுத்தான் ஆயிற்று –அதுக்கு முன்பு தமையனுடைய வைரத்துக்கு ஹேதுவாய்க் கொண்டு வந்த மாயா மிருகத்தை ஓர் அம்பாலே முடித்தவன்) 7
இலையார் மலர்ப் பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய வதனுக்கு அருள் புரிந்தான் அலைநீர் இலங்கைத் தசக்ரீவற்கு இளையோருக்கு அரசை அருளி முன் கலைமாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-7
பதவுரை Show / Hide
கொலை ஆர் வேழம், Kolai Ar Vezham - (கஜேந்திராழ்வான்) கொலைத் தொழிலை இயற்கையாக வுடைய யானை (- (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.))
இலை ஆர், Ilai Ar - இலைகள் நிரம்பிய
மலர், Malar - மலர்களையுடைத்தான
பூ, Poo - அழகிய
பொய்கை வாய், Poykai Vaai - தடாகத்திலே
முதலை தன்னால், Muthalai Thannal - முதலையினால்
அடர்ப்புண்டு, Adarppundhu - துன்பமடைந்து
கடுக்குற்று, Kadakku Kutral - நடுங்கி
குலைய, Kulaiya - கையோய்ந்து நிற்க,
அதனுக்கு, Adhanukku - அவ்யானைக்கு
அருள் புரிந்தான், Arul Purindhaan - கிருபைபண்ணி யருளினவனும்,
அலை நீர் இலங்கை, Alai Neer Ilangai - கடல் சூழ்ந்த இலங்கைக்குத் தலைவனான
தசக்ரீவற்கு, Dasakreevarukku - இராவணனுடைய
இளையோற்கு, Ilaiyorukku - தம்பியான விபீஷணனுக்கு
அரசை அருளி, Arasai Aruli - லங்காராஜ்யத்தைக் கொடுத்தருளினவனும்
முன், Mun - அதற்கு முன்பே
கலைமா, Kalaimaa - (மாரீசனாகிற) மானை
சிலையால், Silaigal - ஒரு வில்லாலே
எய்தான், Eydhaan - அம்பெய்து கொன்றவனுமான பெருமானுடைய
தசக்கிரீவன், Dasakreevan - வடசொல் விகாரம்.
1705பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ்ப் பாட்டில் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு திவ்யம் வர்ஷ சஹச்ரம்-என்று பதினாயிரம் சம்வத்சரம் கிலேசப் பட்டு ஸ்வ யத்ன நிவ்ருத்தி பிறந்த பின்பு வந்து உதவினான் – ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு -த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச்ச-என்று பிராப்ய ஆபாசங்களையும் விட்டு சரணம் புகுருகையாலே அரசு அளித்தான் – எனக்கு அங்கனே இருப்பதொரு நிலையும் அன்றிக்கே சஞ்சலம் ஹி மன -என்கிறபடியே நின்றவா நில்லாத ஸ்வ பாவத்தை யுடைத்தாய் இருக்கை உண்டாகையாலே எங்கனே வந்து இருப்பது என்ன ஸ்ரீ பாஞ்சாலிக்கு விரோதிகள் என்ற பேர் பெற்றவற்றை எல்லாம் போக்கி அருளினவன் -என்கிறார் – நெஞ்சை தேற்றுகிறார் -இரண்டு பாட்டாலும்) 8
மாலாய் மனமே யருந்துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க காலார் மறுத்தும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும் மாலார் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-8
பதவுரை Show / Hide
மனமே, Maname - நெஞ்சே! (- வருந்தாது இரு வருத்தப்படாமலிரு; (ஏனென்றால்) (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.))
நீ, Nee - நீ
மால் ஆய், Maal Aay - மயக்கங்கொண்டு
அரு துயரில், Aru Thuyaril - அநுபவித்து முடிக்கப் போகாத துக்கங்களில் (ஈடுபட்டு)
வலி மிக்க, Vali Mikka - மிருந்த வலிமையையுடையதாய்
கால் ஆர், Kaal Aar - வேரூன்றியிருந்ததான
மருதும், Maruthum - இரட்டை மருதமரத்தையும்
காய் சினத்த, Kaai Sinath - மிகுந்த கோபங்கொண்டு வந்த
கழுதும், Kazhudum - பேய்ச்சியாகிய பூதனையையும்
கதம், Katham - கோபத்தையுடைய
மா, Maa - (சேசியென்னும்) குதிரையையும்
கழுதையும், Kazhudaiyum - கழுதைவடிவங் கொண்டுவந்த தேநுகாஸுரனையும்
மால் ஆர் விடையும், Maal Aar Vidaiyum - பெரிய வடிவம் பூண்டுவந்த விருஷபங்களையும்
மத கரியும், Madha Kariyum - (குவலயாபீடமென்னும்) மதயானையையும்
மல்லர் உயிரும், Mallar Uyirum - மல்லர்களின் உயிரையும்
மடிவித்து, Madiviththu - முடித்தவனும்
காலால், Kaalal - திருவடியினால்
சகடம், Sakadam - சகடாஸுரனை
பாய்ந்தான், Paayndhaan - பாய்ந்து முடித்தவனுமான பெருமானுடைய
1706பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மலையை எடுத்து இந்த்ரன் வியாபாரம் வ்யர்த்தமாம் படி பண்ணி கொடி போலே அழகிய இடையை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக வலிய தாளை உடைய ருஷபங்கள் ஏழையும் அழியச் செய்த – ஸ்ரீ கண்ண புரம் நாம் தொழுதுமே) 9
குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன் சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக் கன்றால் விளங்காய் எறிந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-9
பதவுரை Show / Hide
குன்றால், Kundraal - கோவர்த்தன மலையினால் (- (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.))
மாரி, Maari - பெருமழையை
பழுது ஆக்கி, Pazhuthu Aakki - பயனற்றதாம்படி செய்தவனும்
அன்று, Andru - முன்பொருகால்,
கொடி ஏர் இடையாள் பொருட்டாக, Kodi Aer Idaiyaal Porutthaga - கொடிபோன்று அழகிய இடையை யுடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக
வல் தாள் ஏழ் விடை, Val Thaal Ezh Vidai - வலிய கால்களையுடைய ஏழு ரிஷபங்களை
அடர்த்த, Adarttha - வலியடக்கினவனும்
வானோர் பெருமான், Vaanor Perumaan - நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
மா மாயன், Maa Maayan - ஆச்சரிய சேஷ்டிதங்களையுடையவனும்
பஞ்சவர்க்கு ஆய், Panchavarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக
தூது சென்றான், Thoodhu Senraan - (துரியோதனன் பக்கல்) தூது சென்றவனும்
திரி கால் சகடம், Thiri Kaal Sakadham - ஊர்ந்து செல்லுங்காலையுடைய சகடத்தின்
சினம், Sinam - பகையை
அழித்து, Azhiththu - அழித்தவனும்
கன்றால், Kanraal - வத்ஸாஸுரனைக் கொண்டு
விளங்காய் எறிந்தான், Vilangaai Erindhaan - கபித்தாஸுரன்மேல் வீசியெறிந்து இருவரையும் முடித்தவனுமான பெருமானுடைய
1707பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத் திரு மொழியை வல்லார் –பௌமம் மநோ ரதம் ஸ்வர்க்க்யம் -என்கிறபடியே அலங்காரங்கள் எல்லாம் -சத்ர சாமராதி ராஜ சிஹ்னங்களை-பெற்று –இவ்வளவிலே போகாதே ஸ்ரீ பரமபதத்திலே போய் புக்கு பதியினில் பாங்கினில் -என்கிறபடி ஸ்ரீ நித்ய சூரிகள் திருவடிகளில் விழும்படியான பேற்றைப் பெறுவார்) 10
கருமா முகில் தோய் நெடுமாடக் கண்ண புரத் தெம்மடிகளைத் திரு மா மகளால் அருள் மாரிச் செழு நீராலி வள நாடன் மருவார் புயல்கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் இரு மா நிலத்துக்கு அரசாகி யிமையோர் இறைஞ்ச வாழ்வாரே –8-6-10
பதவுரை Show / Hide
கரு மா முகில், Karumaa Mukil - கறுத்துப் பெருத்தமேகங்கள் (- (மேல் பரமபதத்திலுஞ்சென்று))
தோய், Thoy - வந்து படியப் பெற்ற
நெடு மாடம், Nedu Maadam - பெரிய மாளிகைகளையுடைத்தான
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற
எம் அடிகளை, Em Adigalai - எம்பெருமான் விஷயமாக,
திருமாமகளால், Thirumaamagalal - பெரிய பிராட்டியாரடியாக
அருள்மாரி, Arulmaari - ‘அருள் மாரி’ என்ற திருநாமம் பெற்றவரும்
செழு நீர் ஆலி வளம் நாடன், Sezhu Neer Aali Valam Naadan - ஜலஸம்ருத்தியையுடைய திருவாலி வளநாட்டுக்குத் தலைவரும்
மருவு ஆர் புயல் கை, Maruvu Aar Puyal Kai - எப்போதும் நிலைத்திருக்குந் தன்மைவாய்ந்த காளமேகத்தோடொத்த ஔதார்யத்தை யுடையவரும்
மங்கை வேந்தன், Mangai Vendan - திருமங்கைக்குப் பிரபுவுமான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் அருளிச்செய்த
ஒலி, Oli - இப்பாசுரங்களை
வல்லார், Vallaar - கற்றுவல்லவர்கள்
இரு மா நிலத்துக்கு அரசு ஆகி, Iru Maa Nilaththukku Arasu Aagi - (பூமியும் ஸ்வர்க்கமுமாகிற) இரண்டு உலகங்களுக்கும் அரசராயிருக்கப்பெற்று,
இமையோர், Imaiyor - நித்தியமுக்தர்கள்
இறைஞ்ச, Irainj - ஸத்கரிக்கும்படி
வாழ்வார், Vazhvar - வாழப்பெறுவர்கள்.
1708பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பொய்கைகளாலே நெருங்கி இருந்துள்ள ஸ்ரீ திருக் கண்ண புரம் நமக்கு ஸ்ரீ ஸ்வாமி யானவனுடைய வாசஸ் ஸ்தானம்) 1
வியமுடை விடையின முடைதர மட மகள் குயமிடை தடவரை யகலம துடையவர் நயமுடை நடையன மிளையவர் நடை பயில கயமிடை கண புர மடிகள் தமிடமே –8-7-1
பதவுரை Show / Hide
நயம் உடை நடை, Nayam Udai Nadai - அழகிய நடையையுடைய
அனம், Anam - அன்னப் பறவைகள்
இளையவர், Ilaiyavar - இளம் பெண்களினுடைய
நடை, Nadai - நடையை
பயில், Payil - அப்யஸிக்கப்பெற்றதும்
கயம், Kayam - தடாகங்கள்
மிடை, Midai - நெருங்கியிருக்கப் பெற்றதுமான
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,-
வியம் உடை விடை இனம், Viyam Udai Vidai Inam - வலிமை பொருந்திய விருஷபங்களின் கூட்டமானது
உடைதர, Udaithara - அழிந்தவளவிலே
மட மகள், Mada Magal - மடமைக் குணமுடைய நப்பின்னைப் பிராட்டியானது
குயம், Kuyam - திருமுலைகள்
மிடை, Midai - நெருங்கியணைப்பெற்ற
தட வரை அகலமது உடையவர், Tada Varai Akalamuthu Udaiyavar - பெரிய மலை போன்ற திருமார்பையுடையவரான
அடிகள் தம், Adigal Tham - ஸ்வாமியினுடைய
இடம், Idam - திவ்யதேசமாம்.
1709பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய நெஞ்சு கலந்த திரள் மிக்கு இருந்துள்ள ஸ்ரீ திருக் கண்ண புரம்) 2
இணை மலி மருதி னொடெரு திறவிகல் செய்து துணை மலி முலையவள் மணமிகு கலவியுள் மண மலி விழவினொடடிய வரளவிய கண மலி கண புர மடிகள் தமிடமே –8-7-2
பதவுரை Show / Hide
மணம் மலி, Manam Mali - மகிழ்ச்சி மிகுந்த
விழவினொடு, Vizhavinodu - திருவிழாக்களில்
அடியவர், Adiyavar - ஸ்ரீவைஷ்ணவர்கள்
அளவிய, Alaviy - நெருங்கப்பெற்ற
கணம், Kanam - திரள்
மலி, Mali - நிறைந்துள்ள
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,-
இணை மலி, Inai Mali - சேர்த்தி பொருந்திய
மருத, Marutha - (இரட்டை) மருதமரங்களை
இற, Ira - இற்று முறிந்துவிழும்படி (செய்தவனும்)
எருதினொடு, Eruthinodu - (ஏழு) எருதுகளோடே
இகல் செய்து, Ikal Seidhu - போர்புரிந்து
துணை மலி முலையவள், Thunai Mali Mulaiyaval - சேர்த்தியழகுவாய்ந்த முலைகளை யுடையளான நப்பின்னைப் பிராட்டியின்
மணம், Manam - விவாஹத்தாலுண்டாகக் கூடிய
மிகு கலவி, Migu Kalavi - மிகுந்த ஸம்ச்லேஷத்தை
உள், Ul - உட்கொண்ட
அடிகள் தம், Adigal Tham - ஸ்வாமியினுடைய
இடம், Idam - திவ்யதேசமாம்.
1710பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனும் ரஷிக்க-தானும் ஒருதலை பற்றுகை அன்றிக்கே அவனே ரஷகனாம்படி இருக்கை- மலையை குடையாக எடுத்து பரிஹரித்து ரஷணத்தில் தன்னை எண்ணினால் பின்னை ஒருவர் இல்லாத படி இருக்கிறவர்) 3
புயலுறு வரை மழை பொழி தர மணி நிரை மயலுற வரை குடை யெடுவிய நெடியவர் முயல் துளர் மிளை முயல் துளவள விளை வயல் கயல் துளு கண புர மடிகள் தமிடமே –8-7-3
பதவுரை Show / Hide
முயல் துளர், Muyal Thular - முயற்சிசெய்கிற களைக்கொட்டுகளையுடைய
மிளை, Milai - சிறுதூறுகளில் நின்றும்
முயல், Muyal - முயல்களானவை
துள, Thula - துள்ளவும்,
வளம், Valam - செழிப்பாக
விளை, Vilai - விளைகின்ற
வயல், Vayal - கழனிகளிலே
கயல், Kayal - கயல்மீன்கள்
துளு, Thulu - துள்ளவும் பெற்ற
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,-
புயல் உறு, Puyal Uru - பெருங்காற்றோடு கூடின
வரை மழை, Varai Mazhai - கல் மழை
பொழிதர, Pozhithara - பொழியுமளவில்
மணி நிரை, Mani Nirai - அழகிய பசுக்கள்
மயல் உற, Mayal Ura - கலங்கி நிற்க (அப்போது)
வரை, Varai - (கோவர்த்தன) மலையை
குடை, Kudai - குடையாக
எடுவிய, Eduviya - எடுத்த
நெடியவர், Nediyavar - மஹாபுருஷனான
அடிகள் தம், Adigal Tham - ஸ்வாமியினுடைய
இடம், Idam - திவ்ய தேசமாம்.
1711பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூவை இருப்பிடமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார் விரும்பி வர்த்திக்கிற தேசம்) 4
ஏதலர் நகை செய விளைய வரளை வெணெ போது செய்தமரிய புனிதர் நல் விரை மலர் கோதிய மது கரம் குலவிய மலர் மகள் காதல் செய் கண புர மடிகள் தமிடமே –8-7-4
பதவுரை Show / Hide
நல் விரை, Nal Virai - நல்ல பரிமளத்தையுடைய
மலர், Malar - பூக்களை
கோதிய, Kothiya - கொந்தி, அவை அஸார மென்று விட்டு வந்த
மதுகரம், Mathugaram - வண்டுகள்
குலவிய, Kulaviy - சூழ்ந்து பரவப்பெற்ற
மலர், Malar - (தாமரை) மலரில் அவதரித்த
மகள், Magal - பெரிய பிராட்டியார்
காதல் செய், Kaadal Sei - விரும்பப்பெற்ற
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,-
ஏதலர், Aethalar - பகைவரான சிசுபாலாதிகள்
நகை செய, Nakai Sei - சிரிக்கும் படியாக
இளையவர் அளை வெணெய் போது செய்து, Ilaiyavar Alai Venei Podhu Seidhu - இளமகளிர் கடைந்து வைத்த வெண்ணெயைத் திருத்தியாக அமுது செய்து
அமரிய, Amariya - ஸந்தோஷித்த
புனிதர், Punithar - பவித்திரரான
அடிகள் தம் இடம், Adigal Tham Idam - ஸ்வாமியின் திவ்ய தேசமாம்.
1712பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூசல் செய்து –-த்விதாபஜ்யேயம் -என்று பொருந்தாமையிலே நின்றவர்கள் முடிய – ப்ரஹ்மாதிகளும் கூட கணிசிக்க வரிதான ஊரை) 5
தொண்டரு மமரரும் முனிவரும் தொழுதெழ அண்டமொட கலிடமளந்த வரமர் செய்து விண்டவர் பட மதிள லங்கை முன்னெரி யெழக் கண்டவர் கண புரமடி கள் தமிடமே –8-7-5
பதவுரை Show / Hide
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,-
தொண்டரும், Thondarum - ஸ்ரீ வைஷ்ணவர்களும்
அமரரும், Amararum - பிரமன் முதலிய தேவர்களும்
முனிவரும், Munivarum - யோகிகளும்
தொழுது எழ, Thozhuthu Ezha - வணங்கி உஜ்ஜீவிக்கும்படியாக
அண்டமொடு, Andamodu - மேலுலகங்களையும்
அகல் இடம், Akal Idam - பரம்பிய நிலவுலகங்களையும்
அளந்தவர், Alandhavar - அளந்து கொண்டவரும்
விண்டவர், Vintavar - சத்துருக்கள் அழிந்து போம்படி
அமர் செய்து, Amar Seidhu - யுத்தம் பண்ணி
மதிள் இலங்கை, Mathil Ilangai - மதிளையுடைய இலங்காபுரி
முன், Mun - முன்பொருகால்
எரி எழ, Eri Ezha - தீக்கொளுவி யெரியும்படியாக
கண்டவர், Kandavar - ஸங்கல்பித்தவருமான
அடிகள் தம், Adigal Tham - ஸ்வாமியினுடைய
இடம், Idam - திவ்யதேசமாம்.
1713பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணுகையாலே இளைதாய் கொழுவியதாய் அழகியதான பூவிலே முழுகின வண்டின் உடைய பண் கிளர்ந்த ஸ்ரீ திருக் கண்ண புரம் அடிகள் தம் இடமே) 6
மழு வியல் படை யுடையவனிடம் மழை முகில் தழுவிய வுருவினர் திருமகள் மருவிய கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண் எழுவிய கண புர மடிகள் தமிடமே –8-7-6
பதவுரை Show / Hide
திருமகள் மருவிய, Thirumagal Maruviya - எரிய பிராட்டியார் பொருந்தியிருக்கப்பெற்ற (- (இன்னமும்))
கொழுவிய செழு, Kozhuviya Sezhu - மிகவும் செழுமைதங்கிய
மலர், Malar - தாமரைப்பூவிலே
முழுசிய, Muzhuchiya - அவகாஹித்த
பறவை, Paravai - (வண்டுகளாகிய) பறவைகளினுடைய
பண், Pan - இசைப்பாட்டுகள்
எழுவிய, Ezhuviya - எங்கும் வியாபிக்கப்பெற்றதான
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,-
மழு, Mazhu - மழுவை
இயல்படை உடையவன் இடம், Iyaldapai Udaiyavan Idam - விதேயமான ஆயுதமாகவுடைய பெருமானது இருப்பிடம்;
மழை முகில் தழுவிய உருவினர், Mazhai Mukil Thazhuviya Uruvinar - நீர் கொண்டெழுந்த மேகம் போன்ற திருவுருவத்தை யுடையரான
அடிகள் தம், Adigal Tham - ஸ்வாமியினுடைய
இடம், Idam - திவ்ய தேசமாம்.
1714பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் சேஷி -நாம் சேஷ பூதர் -என்று இருக்கிற முறையிலே சொல்லுகிற அடியார் தங்களுக்கு பிராப்யம் என்று புத்தி பண்ணி வர்த்திக்கிற ஸ்ரீ திருக் கண்ண புரம்) 7
பரிதி யொடணிமதி பனிவரை திசை நிலம் எரிதி யொடென வினவியல் வினர் செலவினர் சுருதியொ டருமறை முறை சொலு மடியவர் கருதிய கண புர மடிகள் தமிடமே –8-7-7
பதவுரை Show / Hide
சுருதியொடு, Surudhiyodu - ஸ்வரத்தோடு கூடின
அரு மறை, Aru Marai - அருமையான வேதங்களை
முறை, Murai - முறைப்படியே
சொலும், Solum - ஓதுகின்ற
அடியவர், Adiyavar - ஸ்ரீ வைஷ்ணவர்கள்
கருதிய, Karuthiya - (நமக்கு இவ்விடமே ப்ராப்யம் என்று) அநுஸந்திக்கப்பெற்ற
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,-
பரிதியொடு, Paridhiyodu - ஸூர்யனென்ன
அணி மதி, Ani Mathi - அழகிய சந்திரனென்ன
பனி வரை, Pani Varai - இமயமலை முதலிய குலபர்வதங்களென்ன
திசை, Thisai - திக்குக்களென்ன
நிலம், Nilam - பூமண்டல மென்ன
எரி, Eri - ஜ்வலிக்கின்ற
தியொடு, Thiyodu - அன்நி யென்ன
என, En - என்று சொல்லப்படுகிற
இன, Ina - இப்படிப்பட்ட பொருள்களையெல்லாம்
இயல்வினர், Iyalthinavar - ப்ரகாரமாகவுடையவரும்
செலவினர், Selavinar - இவற்றை நடத்திக்கொண்டு போருகிறவருமான
அடிகள் தம் இடம், Adigal Tham Idam - ஸ்வாமியின் திவ்ய தேசமாம்.
1715பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமிப் பரப்பை அளந்து கொண்ட திருவடிகள்-சங்கைஸ் ஸூ ராணாம் -என்கிறபடியே அவற்றை எல்லாரும் ஒக்க இருந்ததே குடியாக ஆஸ்ரயிக்க- ஸ்ரீ பெரிய பிராட்டியார் விரும்பி அணையா நின்றுள்ள பெரிய வரை போன்று இருந்த மார்வை உடையவர்) 8
படி புல்கு மடி யிணைப் பலர் தொழ மலர் வைகு கொடி புல்கு தட வரை யகலமது டையவர் முடி புல்கு நெடு வயல் படை செல வடி மலர் கடி புல்கு கண புர மடிகள் தமிடமே –8-7-8
பதவுரை Show / Hide
முடி புல்கு, Mudi Pulgu - நாற்று முடிகளோடு கூடியிருக்கிற
நெடு வயல், Nedu Vayal - விசாலமான கழனிகளிலே
படை, Padai - கலப்பைகளை
செல, Sela - செலுத்தும்போது
அடி, Adi - கால்பட்ட
மலர், Malar - (தாமரை முதலிய) பூக்களானவை
கடி புல்கு, Kadi Pulgu - பரிமளத்தைப் புறப்பட விடப்பெற்ற
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரம்;-
பலர் தொழ, Palvar Thozha - பல பக்தர்கள் வணங்கும்படியாக
படி புல்கும் அடி இணை உடையவர், Padi Pulgum Adi Inai Udaiyavar - பூமியை யளாவிய திருவடியிணையை யுடையவரும்
மலர் வைகு, Malar Vaiku - தாமரைமலரில் பொருந்திய
கொடி, Kodi - கொடிபோன்ற பெரிய பிராட்டியார்
புல்கு, Pulku - அணையப்பெற்ற
தடவரை அகலம் அது உடையவர், Tadavarai Akalam Adhu Udaiyavar - பெரிய மலைபோன்ற திருமார்பை யுடையவருமான
அடிகள் தம், Adigal Tham - ஸ்வாமியினுடைய
இடம், Idam - திவ்யதேசமாம்
1716பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மலரை தனக்கு இருப்பிடமாக வுடையாளாக இருக்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியார் – தன்னோடு நித்ய சம்ஸ்லிஷ்டையாய் ஸ்ரீ பூமிப் பிராட்டி என்று இப்படி சொல்லப் படுகிற நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையராய் இருக்கிற இவர்களோடும் – வலத் திருக் கையிலே மன்னா நின்றுள்ள ஸ்ரீ திரு ஆழியை உடையனுமாய் நீல மணி போலே போலே குளிர்ந்து இருந்துள்ள வடிவை உடையவர்) 9
புல மனு மலர் மிசை மலர் மகள் புணரிய நில மகளென வின மகிளர் களிவரொடும் வலமனு படை யுடை மணி வணர் நிதி குவை கல மனு கண புர மடிகள் தமிடமே –8-7-9
பதவுரை Show / Hide
நிதி குவை, Nidhi Kuvai - பொற்குவியல்களையுடைய (- (ஸமுத்ரத்தை சமீபத்திலுடைத்தான))
கலம், Kalam - மரக்கலங்கள்
மனு, Manu - பொருந்தி யிருக்கப்பெற்ற
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரம்,-
புலம் மனு, Pulam Manu - இந்த்ரியங்கள் அழுந்திக்கிடக்கும் படியாக அழகுவாய்ந்த
மலர் மிசை, Malar Misai - தாமரைப் பூவிலுண்டான
மலர்மகள், Malar Magal - பெரிய பிராட்டியோடு
புணரிய, Punarai - கூடின
நிலம் மகள், Nilam Magal - பூமிப்பிராட்டியார்
என இன, En In - என்று இப்படிப்பட்ட
மகளிர்களிவரொடும், Magalirgal Ivarodum - திவ்ய மஹிஷிகளோடும்
வலம் மனு, Valam Manu - வலத்திருக்கையில் பொருந்திய
படை உடை, Padi Udai - திருவாழிப்படையையுடைய வரும்
மணி வணர், Mani Vanar - நீலமணிபோன்ற நிறத்தை யுடையவருமான
அடிகள் தம், Adigal Tham - ஸ்வாமியினுடைய
இடம், Idam - திவ்யதேசமாம்.
1717பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அழகிய இசையோடு கூட – இத் திரு மொழியை –வண் குறிஞ்சி -என்று சொல்லுவார்கள் – இத்தை அப்யசிக்குமவர்கள் –அவர்களுக்கு அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிற பாபங்கள் கிட்டாது) 10
மலி புகழ் கண புர முடைய வெம்மடிகளை வலி கெழு மதிளயல் வயலணி மங்கையர் கலியன தமிழிவை விழுமிய விசையினொடு ஒலி சொலு மடியவ ருறு துயரிலரே –8-7-10
பதவுரை Show / Hide
மலி புகழ், Mali Pugazh - நிறைந்த புகழையுடைய
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரத்தை
உடைய, Udaiya - இருப்பிடமாகவுடைய
எம் அடிகளை, Em Adigalai - எம்பெருமான் விஷயமாக
வடி கெழு, Vadi Kezhu - திண்மை பொருந்திய
மதிள், Mathil - மதிளையும்
அயல், Ayal - சுற்றுப்புறங்களில்
வயல், Vayal - கழனிகளையும்
அணி, Ani - அலங்காரமாகக்கொண்ட
மங்கையர், Mangaiyar - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான
கலியன, Kaliyan - திருமங்கையாழ்வாருடைய
இவை தமிழ், Ivai Tamil - இத்தமிழ்ப் பாசுரங்களை
விழுமிய இசையினொடு, Vizhumiya Isaiyinodu - சிறந்த இசையோடு கூட
ஒலி சொலும், Oli Solum - அப்யஸிக்கின்ற
அடியவர், Adiyavar - பக்தர்கள்
உறு துயர் இலர், Uru Thuyar Ilir - அவச்யமபவிக்குப்படியாக ஏற்பட்ட துக்கங்களினின்றும் விடுபட்டவராவர்.
1718பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சதா ஏக ரூபமான வடிவை இதர சஜாதீயமாக்கிக் கொண்டு வந்து அவதரித்தவன் – சேஷ பூதனான நான் காணப் பெற்றேன்) 1
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில் மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக்கண்ணன் ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள் கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே –8-8-1
பதவுரை Show / Hide
முது முந்நீர், Muthu Munneer - கடல் வெள்ளம் (- (அடியேன் கண்டு கொண்டேன்-.))
வானோர் அளவும், Vaanor Alavum - தேவர்களின் எல்லையளவும்
வளர்ந்த காலம், Valarntha Kaalam - பரந்து சென்ற காலத்திலே
வலி உருவின் மீன் ஆய் வந்து, Vali Uruvin Meen Aay Vandhu - வலிகொண்ட வடிவையுடைய மீனாய்த் திருவவதரித்து
வியந்து, Viyandhu - ஆச்சரியப்படும்படியாக
உய்யக்கொண்ட, Uyyaikonda - எல்லாரையும் பிழைப்பித்தருளின
தண் தாமரை கண்ணன், Than Thamarai Kannan - குளிர்ந்த தாமரை போன்ற திருக்கண்களையுடையவனும்
ஆனா உருவின் ஆன் ஆயன் அவனை, Aana Uruvin Aan Aayan Avanai - விகாரமற்ற உருவையுடைய ஸ்ரீ கிருஷ்ணனாகத் திருவவதரித்தவனுமான பெருமானை,
அம், Am - அழகிய
மா, Maa - பரந்த
விளை, Vilai - விளைவுமிக்க
வயலுள், Vayalul - வயல்களை யுடையதும்
கான் ஆர் புறவில், Kaan Ar Puravil - காடுகள் செறிந்த பர்யந்தங்களை யுடையதுமான
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே
1719பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேஜஸ்சை உடைத்தான அம்ருதமானது தோற்றும் அளவும் நீருக்கு இறாயாதாய வடிவை உடைய ஆமையாய்- மலை திரிந்து வரும்படியாக பரப்பை உடைத்தான கடலிலே அதுக்கு தாரக பூதனாய்க் கொண்டு கிடந்த விஸ்மய நீயனை ஸ்ரீ கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே) 2
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கோர் வரை நட்டு இலங்கு சோதி யாரமுதம் எய்தும் அளவோர் ஆமையாய் விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-2
பதவுரை Show / Hide
மலங்கு, Malangu - (உள்ளுக்கிடக்கிற) மீன்சாதிகள் (- (அடியேன் கண்டுகொண்டேன்-))
விலங்கு, Vilangu - தடுமாறும்படியான
நெடுவெள்ளம், Neduvellam - பெரிய வெள்ளம்
மறுக, Maruga - குழம்பும்படியாக
அங்கு, Angu - ஆழமான அவ்விடத்திலே
ஓர் வரை நட்டு, Or Varai Nattu - ஒரு (மந்தர) பர்வதத்தை நாட்டி
இலங்கு சோதி ஆர் அமுதம், Ilangu Sothi Ar Amudham - விளங்குகின்ற தேஜஸ்ஸோடு கூடின அம்ருதமானது
எய்தும் அளவு, Eydhum Alavu - தோன்றும் வரையில்
ஓர் ஆமை ஆய், Or Amai Aayi - ஒப்பற்ற ஆமையா யிருந்துகொண்டு
விலங்கல், Vilangal - அந்த மந்தரமலையானது
திரிய, Thiriya - நாற்புறமும் திரிந்து வரும்படியாக
தட கடலுள், Tada Kadalu - பெரிய அக்கடலிலே
சுமந்து கிடந்த, Sumandhu Kidandha - (அம்மலையைத்) தாங்கிக்கொண்டிருந்த
வித்தகனை, Vithagankalai - ஆச்சரியபூதனான பெருமானை
கலங்கல் முந்நீர் கண்ணபுரத்து, Kalangal Munneer Kannapurathu - கலக்கமுள்ள கடலை அணித்தாக வுடைய திருக்கண்ணபுரத்திலே
1720பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அண்டபித்தியிலே சென்று சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறுகைக்கு ஈடான வலியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை) 3
பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில் ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும் காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3
பதவுரை Show / Hide
முது முந்நீர், Muthu Munneer - கடல் வெள்ளம் (- (அடியேன் கண்டுகொண்டேன்-.))
பாராரளவும், Paararalavum - பூமிப்பரப்படங்கலும்
பரந்த காலம், Paranda Kaalam - சூழ்ந்த காலத்தில்
வளை மருப்பில், Valai Maruppil - வளைந்த கோரப்பல்லையுடைய
ஏர் ஆர் உருவத்து, Aer Ar Uruvathu - அழகு மிக்க திருமேனியை யுடைய
ஏனம் ஆய், Enam Aayi - வராஹமூர்த்தியாகி
எடுத்த, Edutha - (பூமியை) உத்தரிப்பித்த
ஆற்றல், Aatral - மிடுக்கையுடையனான
அம்மானை, Ammaanai - ஸர்வேச்வரனை
கூர் ஆர், Koora Ar - கூர்மை பொருந்திய (வாயலகுகளையுடைய)
குருகு, Kurugu - நாரைகளானவை
ஆரல், Aaral - ஆரல் மீன்களை
இரை கருதி, Irai Karuthi - ஆஹாரமாகக் கொள்ள நினைத்து
பாய, Paaya - (நீரில்) பாய்ந்தவளவிலே
கயல், Kayal - கயல் மீன்கள்
இரியும், Iridum - அஞ்சியோடும் படியுள்ளதும்
கார் ஆர் புறவில், Kaar Ar Puravil - மேகங்கள் படிந்த சோலைகளை யுடையதுமான
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தில்
1721பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ரு பஷமானது குலைந்து ஓடும்படி இருக்கிற சிம்ஹமும்-உளை மயிருமாய் மனுஷ்ய வேஷமும் சேராத வடிவு இரண்டும் சேர்ந்து தோன்ற –சத்ருவான ஹிரண்யனுடைய மார்வை யுத்தத்திலே பிளந்து வளைந்த திரு வுகிரை உடையவனை) 4
உளைந்த வரியும் மானிடமும் உடனேத் தோற்ற ஒன்றுவித்து விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றொன் அகலம் வெஞ்சமத்து பிளந்து வளைந்த வுகிரானைப் பெரும் தண் செந்நெல் குலை தடிந்து களம் செய் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-4
பதவுரை Show / Hide
உளைந்த, Ulaindha - கண்டபோதே அஞ்சி நடுங்க வேண்டும்படியான (- (அடியேன் கண்டுகொண்டேன்-.))
அரியும், Ariyum - சிங்கவுருவத்தையும்
மானிடமும், Maanidamum - மனிதவுருவத்தையும்
உடனாய் ஒன்றுவித்து, Udanai Onruvithu - ஒருசேரப் பொருந்தச் செய்து
தோன்ற, Thondra - (நரஸிம்ஹரூபியாய்த்)தோன்ற (அப்போது)
விளைந்த, Vilaintha - உண்டான
சீற்றம், Seetrum - கோபத்தைக் கண்டு
விண் வெதும்ப, Vin Vethumba - விண்ணுலகத்தவர்களும் அஞ்சி நடுங்க
வேற்றோன், Vetroron - பகைவனான இரணியனுடைய
அகலம், Agalam - மார்பை
வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்திலே
பிளந்து, Pilandhu - இருபிளவாக்கி
வளைந்த உகிரானை, Valaindha Ukiraanai - வளைந்த நகங்களையுடைய பெருமானை,
பெரு, Peru - பெருத்த
தண், Than - அழகிய
செந்நெல் குலை, Sennel Kulai - செந்நெற்கதிர்கள்
தடிந்து, Thadinthu - வயிரம்பற்றி
களம் செய், Kalam Sei - இருள் மூடியிருக்கப்பெற்ற
புறவில், Puravil - சுற்றுப்பிரதேசங்களை யுடைத்தான
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே
1722பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சதா ஏக ரூபமான விக்ரஹத்தை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை – தோன்றுகின்ற வாமன வேஷம் அன்று கிடீர் இவனுக்கு நிலை நின்ற வடிவு) 5
தொழு நீர் வடிவில் குறள் உருவாய் வந்து தோன்றி மா வலி பால் முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு பால் முல்லை முகையோடும் கழு நீர் மலரும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-5
பதவுரை Show / Hide
தொழும் நீர், Thozhum Neer - கண்டவாறே வணங்கவேண்டும் படியான நீர்மையையுடைய (- (அடியேன் கண்டு கொண்டேன்-.))
வடிவின், Vadivin - வடிவு கொண்ட
குறள் உரு ஆய், Kural Uru Aay - வரமந ரூபியாய்
வந்து தோன்றி, Vandhu Thondri - அவதரித்து
மாவலிபால், Mavalipaal - மஹாபலியினிடத்தில்
முன், Mun - முன்பொருகால்
முழுநீர் வையம், Muzhneer Vaiyam - கடல் சூழ்ந்த வுலகத்தை
கொண்ட, Konda - இரந்து பெற்ற
மூவா உருவின், Moova Uruvin - விகாரமற்ற ரூபத்தையுடையனான
அம்மானை, Ammaanai - ஸர்வேச்வரனை,
உழு நீர், Uzhu Neer - (எப்போதும்) உழுவதையே இயல்வாகவுடைய
வயலுள், Vayalul - வயல்களிலே
பொன் கிளப்ப, Pon Kilappa - பொன் விளையப் பெற்றதும்
ஒருபால், Orupaal - வேறு சில இடங்களில்
முல்லை, Mullai - முல்லைமலர்களும்
முகையோடும், Mugaiyodum - கருமுகைமலர்களும்
கழுநீர், Kazhunir - செங்கழுநீர்ப்பூக்களும்
மலரும், Malarum - மலரப் பெற்றதுமான
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே
1723பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வடித்த வாயை உடைய மழுவே ஆயுதமாக வந்து தோன்றி இருபத்தொரு படி கால் பூமி நெளியும்படியாக வந்து தோன்றின –ஷத்ரிய குலத்தை அறுத்துப் பொகட்ட வலியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை) 6
வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால் படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-6
பதவுரை Show / Hide
வடி வாய், Vadi Vaai - கூர்மை பொருந்திய வாயையுடைய (- (அடியேன் கண்டுகொண்டேன்-.))
மழுவே, Mazhuve - கோடாலியையே
படை ஆக, Padai Aaga - ஆயுதமாகக் கொண்டு
வந்து தோன்றி, Vandhu Thondri - (பரசுராமனாய்த்) திருவவதரித்து
மூ எழுகால், Moo Ezhugaal - இருபத்தொரு தலைமுறையளவும்
படி, Padi - பூமியில்
ஆர், Aar - நிறைந்திருக்கிற
அரசு, Arasu - க்ஷத்ரியர்களாகிற
களை, Kalai - விரோதிகளை
கட்ட, Katta - தொலைத்த
பாழியானை, Paazhiyaanai - மிடுக்குடையனான
அம்மானை, Ammaanai - எம்பெருமானை,-
வண்டு, Vandu - வண்டுகளானவை
குடி ஆ, Kudi Aa - குடும்பமாக
கொண்டு உண்ண, Kondhu Unna - (மதுவை) எடுத்துப் பருகும்படியாக
கோலம் நீலம், Kolam Neelam - அழகிய நீலோற்பல மலர்கள்
மட்டு, Mattu - மதுவை
உகுக்கும், Ugukkum - பெருகச்செய்யப் பெற்ற
கடி ஆர் புறவின், Kadi Aar Puravin - பரிமளம் மிக்க சுற்றுப் பிரதேசங்களையுடைய
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தில்
1724பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வெவ்விய சீற்றத்தை உடைய கடியிலங்கை குடி கொண்டோட யுத்தத்திலே வெவ்விய போரை பண்ணின நம்முடைய ஸ்ரீ ஸ்வாமியை) 7
வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து செய்த வெம்போர் நம்பரனைச் செழும் தண் கானல் மண நாறும் கைதை வேலிக் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-7
பதவுரை Show / Hide
வையம் எல்லாம், Vaiyam Ellam - உலகமெல்லாம் (- (அடியேன் கண்டுகொண்டேன்-.-))
உடன் வணங்க, Udan Vananga - ஒருமைப்பட்டு திருவடிகளில் விழுந்துவணங்க
வணங்கா, Vanangaa - தான் ஒருவரையும் வணங்க வேண்டும்படியிராத
மன்னன் ஆய், Mannan Aay - ராஜாதிராஜனாய் (இராமபிரானாய்)
தோன்றி, Thonri - திருவவதரித்து
வெய்ய சீற்றம், Veyya Seetrum - கடுமையான சீற்றத்தையுடையதும்
கடி, Kadi - அரண்களையுடையதுமான
இலங்கை, Ilankai - இலங்காபுரியிலுள்ளவர்கள்
குடி கொண்டு ஓட, Kudi Kondu Oda - குடும்பத்தோடும் (யமலோகத்திற்கு) ஓடிச் செல்லும்படியாக
வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்தில்
வெம் போர் செய்த, Vem Por Seitha - கடுமையான யுத்தத்தை நடத்தின
நம் பரனை, Nam Paranai - எம்பெருமானை,-
செழு, Sezhu - அழகிய
தண், Than - குளிர்ந்த
கானல், Kaanal - நெய்தல் நிலத்தையுடையதும்
மணம் நாறும் கைதை, Manam Naarum Kaithai - பரிமளம்மிக்க தாழைகளை
வேலி, Veli - வேலியாகவுடையதுமான
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே
1725பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வெற்றியே தொழிலாக உடைய வேலை உடைய ராஜாக்கள் விண்ணிலே செல்ல யுத்தத்திலே செற்ற வெற்றியை தொழிலாக உடையவனை) 8
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-8
பதவுரை Show / Hide
ஒற்றை குழையும், Otrai Kuzhaiyum - ஒரு காதில் தொங்குகிற திருக்குண்டலமும் (- (அடியேன் கண்டுகொண்டேன்-.))
ஒருபால், Orupaal - ஒரு பக்கத்தில்
நாஞ்சிலும், Naanjilum - கலப்பையும்
தோன்ற, Thondra - விளங்க
தான் தோன்றி, Thaan Thondri - (பலராமனாய்த்) திருவவதரித்து,
வெற்றி தொழிலார், Vettri Thozhilar - ஜயம்பெறுவதையே இயல்வாக வுடையரும்
வேல், Vel - வேற்படையையுடையருமான
வேந்தர், Vendar - அரசர்கள்
விண் பால் செல்ல, Vin Paal Chella - வீரதஸ்வர்க்கத்திற்குச் சென்று சேரும்படி
வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்தில்
செற்ற, Settra - (அவ்வரசர்களை) அழியச் செய்ததனாலுண்டான
கொற்றம், Kotrham - வெற்றியை
தொழிலானை, Thozhilaanaik - தொழிலாகவுடைய பெருமானை,-
செம் தீ மூன்றும், Sem Thee Moondrum - த்ரேதாக்நிகளெனப்படுகிற மூன்று அக்நிகளும்
இல், Il - திருமாளிகை தோறும்
இருப்ப, Iruppa - ஜ்வலித்துக் கொண்டிருக்கப்பெற்றதும்
கற்ற மறையோர், Katra Maraiyor - கலைகளைக் கற்ற வைதிகர்களுடையதுமான
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தில்
“ஒற்றைக்குழையும், Otrai Kuzhaiyum - ஒருகாதுக்குழையும்” என்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானம்.  இதற்கு அரும்பதவுரைகாரர்
1726பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அபர பஷத்திலே அஷ்டமியிலே நள் இருளிலே பிறந்தவனை) 9
துவரிக் கனிவாய் நிலமங்கை துயர் தீர்ந்து உய்யப் பாரதத்துள் இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த வம்மானை உவரியோதம் முத்துந்த ஒரு பால் ஒரு பால் ஒண் செந்நெல் கவரி வீசும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-9
பதவுரை Show / Hide
துவரி கனி வாய், Thavari Kani Vaai - இலவம் பூப்போலவும் கொவ்வைக்கனி போலவும் சிவந்த அதரத்தையுடையளான (- (அடியேன் கண்டுகொண்டேன்-.))
நிலம் மங்கை, Nilam Mangai - பூமிப்பிராட்டியானவள்
துயர் தீர்ந்து, Thuyar Theerndhu - (பாவிகளைச் சுமப்பதனாலுண்டான) துக்கம் தொலைந்து
உய்ய, Uyya - சுகப்படும்படியும்,
பாரதத்துள், Bharathaththul - பாரதப் போரில்
இவரித்த, Ivariththa - எதிரிட்ட
அரசர், Arasar - ராஜாக்கள்
தடுமாற, Thadumara - நிலைகுழம்பும்படியாகவும்
இருள் நாள், Irul Naal - இராப்பொழுதில்
பிறந்த, Pirandha - திருவவதரித்த
அம்மானை, Ammaanai - ஸ்வாமியை,-
ஒரு பால், Oru Paal - ஒரு புறத்தில்
உவரி ஓதம், Uvari Otham - கடலலைகள்
முத்து, Muthu - முத்துக்களை
உந்த, Unda - ஒதுக்கித்தள்ளவும்
ஒரு பால், Oru Paal - இன்னொருபுறத்தில்
ஒண், On - அழகிய
செந்நெல், Sennel - செந்நெற்பயிர்கள்
கவரி வீசும், Kavari Veesum - சாமரம் போல் வளைந்து வீசவும் பெற்ற
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே
1727பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே கண்டு அடிமை புக்க –ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த தேனோடு ஒத்த நல்ல சொல்லை உடைய தமிழ் மாலை சொல்ல பாவமானது போம்) 10
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த் தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும் ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே –8-8-10
பதவுரை Show / Hide
மீனோடு, Meenodu - மத்ஸ்ய ரூபியாயும்
ஆமை, Aamai - கூர்ம ரூபியாயும்
கேழல், Kezhal - வராஹரூபியாயும்
அரி, Ari - நரஸிம்ஹ ரூபியாயும்
குறள் ஆய், Kural Aay - வாமநமூர்த்தியாயும்
முன்னும் இராமன் அய், Munnum Iraaman Ayi - பரசுராம மூர்த்தியாயும்
தான் ஆய், Thaan Aay - ஸாக்ஷாதவதாரமான ஸ்ரீராமபிரானாயும்
பின்னும் இராமன் ஆய், Pinnum Iraaman Aay - பலராமனாயும்
தாமோதரன் ஆய், Thaamodharan Aay - கண்ணபிரானாயும்
கற்கியும் ஆனான் தன்னை, Karkiyum Aanaan Thannai - கல்கியாயும் திருவவதாரஞ் செய்யுமியல் பினனான எம்பெருமானை
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே (ஸேவித்து)
அடியன், Adiyan - சேஷபூதரான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி செய், Oli Sei - அருளிச் செய்த
தேன் ஆர் இன் சொல், Then Aar In Sol - தேன் போன்று மதுரமான சொற்களையுடைய
தமிழ் மாலை, Tamizh Maalai - இத்தமிழ்ப்பாசுரங்களை
செப்ப, Seppa - அப்யஸிக்குமளவில்
பாவம், Paavam - பாவங்கள்
நில்லா, Nilla - நிற்கமாட்டாமல் அகன்றொழியும்,
1728பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வடிவு அழகாலே என்னை எழுதிக் கொண்டவனை – எனக்கு உபகாரகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை – என் நெஞ்சிலே இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை –அடைந்து உஜ்ஜீவிக்கப் போனேன்) 1
கைம்மான மத யானை யிடர் தீர்த்த கரு முகிலை மைம்மான மணியை யணி கொள் மரகதத்தை எம்மானை யெம்பிரானை ஈசனை யென் மனத்துள் அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –8-9-1
பதவுரை Show / Hide
மானம் கை மதம் யானை, Maanam Kai Matham Yaanai - நீண்ட துதிக்கையையுடையதும் மதங்கொள்ளுமியல்வுடையதுமான கஜேந்திரனுடைய
இடர், Idar - துயரத்தை
தீர்த்த, Theertha - போக்கியருளின
கரு முகிலை, Karum Mugilai - காளமேகம் போன்றவனும்
மை, Mai - மைபோன்ற நிறத்தையுடைய
மானம் மணியை, Maanam Maniyai - பெருவிலைபெறும் நீல ரத்னம் போன்றவனும்
அணி கொள் மரதகத்தை, Ani Kol Marathakaththai - அழகு பொருந்திய மரதகப் பச்சை போன்றவனும்
எம்மானை, Emmaanai - எமக்கு ஸ்வாமியும்
எம்பிரானை, Embiraanai - எமக்கு மஹோபகாரம் செய்தருள்பவனும்
ஈசனை, Eesanai - ஸர்வேச்வரனும்
எம் மனத்துள் அம்மானை, Em Manaththul Ammmaanai - என் நெஞ்சினுள் இருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீசௌரிராஜனை
அடியேன் அடைந்து, Adiyean Adaindhu - அடியேன் ஆச்ரயித்து
உய்ந்து போனேன், Uyinthu Ponaen - உஜ்ஜீவித்துப் போனேன்
1729பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னுடைய ரஷணத்தில் உத்யுக்தனாய்க் கொண்டு ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வாதிகனை – ப்ரஹ்மாதிகளுக்காக கடலிலே வந்து கண் வளர்ந்து அருளின பெரியவனை –அடியேன் அடைந்து உய்ந்து பிழைக்கப் பெற்றேன்) 2
தருமான மழை முகிலைப் பிரியாது தன்னடைந்தார் வருமானம் தவிர்க்கும் மணியை யணி யுருவில் திருமாலை யம்மானை யமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை – அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே –8-9-2
பதவுரை Show / Hide
தரு, Tharu - கல்பவிருக்ஷம் போன்றவனும் (- (அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேன்-,))
மானம், Maanam - பெரிய
மழை முகிலை, Mazhai Mukilai - காளமேகம் போன்றவனும்,
பிரியாது, Priyaadhu - ஒரு காலும் விட்டுநீங்காமல்
தன் அடைந்தார், Than Adaindhaar - தன்னை வந்து பணிந்தவர்கட்கு
வரும், Varum - நேர்கின்ற
மானம், Maanam - அவமானத்தை
தவிர்க்கும், Thavirkum - போக்குகின்றவனும்
மணியை, Maniyai - நீல மணிபோன்றவனும்
அணி உருவின், Ani Uruvin - அழகிய வடிவத்தையுடைய
திருமாலை, Thirumaalai - லக்ஷ்மீநாதனும்
அம்மானை, Ammaanai - ஸர்வசேஷியா யிருப்பவனும்
அமுதத்தை, Amudhatthai - அமிருதம் போன்றவனும்
கடல் கிடந்த பெருமானை, Kadal Kidandha Perumai - திருபாற்கடலில் திருகண்வளர்ந்தருளும் பெருமானுமான ஸ்ரீசௌரிப் பெருமானை
1730பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இது தான் உமக்கு எத்தனை குளிக்கு நிற்கும் -என்ன நான் பிறர்க்கு உரியேன் அல்லேன் -என்கிறார்) 3
விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப் படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்பொருகாலத்தில் (நப்பின்னைப் பிராட்டியைப் பெறுதற்காக)
ஏழ்விடை, Ezhuvidai - ஏழு ரிஷபங்களை
வெகுண்டு, Vegundu - சீறிக்கொண்டு
அடர்த்து, Adarthu - வலியடக்கினவனும்,
விலங்கல், Vilangal - த்ரிகூடபர்வதத்தில்
உற, Ura - சென்று சேரும்படியாக
படையால், Padaiyal - (வாநர) ஸேனைகளைக்கொண்டு
ஆழி, Aazhi - ஸமுத்ரத்தை
தட்ட, Thatta - அடைத்தவனும்,
பரமன், Paraman - எல்லாரினுஞ் சிறந்தவனும்
பரம் சோதி, Param Sothi - சிறந்த தேஜஸ்ஸ்வரூபியும்
மடை ஆர், Madai Aar - மடைகளெங்கும் நிரம்பிய
நீலம், Neelam - நீலோற்பல மலர்கள்
மல்கும், Malkum - வியாபித்திருக்கப் பெற்ற
வயல், Vayal - கழனிகளாலே
சூழ், Sool - சூழப்பட்ட
கண்ணபுரம் ஒன்று, Kannapuram Ondru - திருக்கண்ணபுரமென்கிற ஒரு விலக்ஷண திவ்யதேசத்தை
உடையானுக்கு, Udaiyanukku - (இருப்பிடமாக) உடைய பெருமானுக்கு
அடியேன், Adiyen - சேஷபூதனான நான்
ஒருவர்க்கு, Oruvarkku - வேறுசிலர்க்கு
உரியேனோ, Uriyenoo - உரிமைப்படுவேனோ?
1731பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு சம்சாரி சேதனன் உடைய ஹிருதயத்திலே அவனுக்கு அபேஷை இன்றிக்கே இருக்க தானே போய் புகுவதே – இது ஒரு நீர்மை இருக்கும்படியே என்று இருந்ததே குடியாக எல்லாரும் ஒக்கச் சொல்லுகையாலே வந்த மிக்க புகழை உடையனாய்க் கொண்டு உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை –நிரதிசய போக்யனாய் இருக்கிறவனை – அடைந்து உய்ந்து போனேனே) 4
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே –8-9-4
பதவுரை Show / Hide
மிக்கானை, Mikkaanai - சிறந்தவனும் (- (அடைந்து உய்ந்து போனேன்-.))
மறை ஆய் விரிந்த விளக்கை, Marai Aayi Virindha Vilakkai - வேதமாக விரிவுபெற்ற விளக்குப் போன்றவனும்
என்னுள் புக்கானை, Ennul Pukkaanaai - என்னெஞ்சினுள்ளே புகுந்திருப்பவனும்
புகழ் சேர், Pugazh Ser - கீர்த்தி வாய்ந்தவனும்
பொலிகின்ற பொன்மலையை, Polikindra Ponmalaiya - ஜ்வலிக்கின்ற பொன் மலை போன்றவனும்,
தக்கானை, Thakkaanai - தகவுடையவனும்
கடிகை தட குன்றின் மிசை இருந்த, Kadikai Thada Kunrin Misai Irundha - கடிகை யென்னும் பெரிய திருமலையின் மீது எழுந்தருளியிருக்கின்ற
அக்காரக் கனியை, Akkaarak Kaniyai - அக்காரக் கனியுமான திருக்கண்ணபுரத்தெம்பெருமானை
1732பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாம் என்ன உபகாரம் பண்ணினோமாக தான் இப்படி கிடந்து படுகிறது -என்ன – நான் இருந்த இடம் தேடி நீயே வந்தாய் – ஸ்ரீ திருக் குடந்தையிலே கண் வளர்ந்து நாம் ஆஸ்ரிதர்க்கு உறுப்பாகப் பெற்றோமே இறே-என்று அத்தாலே உகந்து – இப்படி உபகாரகனான உன்னை மறவாது ஒழியப் பெற்றேன் – நீயோ தீரக் கழிய உபகரித்து நின்றாய் – நான் அந்த உபகாரகத்தை மறவாது ஒழியப் பெற்றேன் –இனி இதுக்கு மேற்பட பேறு உண்டோ) 5
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த மைந்தா வுன்னை என்றும் மறவாமை பெற்றேனே –8-9-5
பதவுரை Show / Hide
எந்தாள், Endhaal - எம்பெருமானே!
என் மனத்தே, En Manathae - என் நெஞ்சினுள்ளே
நீ வந்தாய், Nee Vandhaai - நீ வந்து புகுந்தாய்;
வந்து புகுந்து பின்னை, Vandhu Pugundhu Pinnai - அங்ஙனம் வந்து சேர்ந்த பின்பு
போய் அறியாய், Poi Ariyaai - திரும்பிப்போவதை அடியோடு மறந்திட்டாய்;
இதுவே, Idhuvae - இந்தப் பேறுதானே
அமையாதோ, Amaiyaa Tho - போராதோ?
கொந்து ஆர், Kondhu Aar - கொத்துக்கள் நிரம்பிய
பை பொழில், Pai Pozhil - பரந்த சோலைகளினால்
சூழ், Sool - சூழப்பட்ட
குடந்தை, Kudandhai - திருக்குடந்தையிலே
கிடந்து, Kidandhu - சாய்ந்தருளி
உகந்த, Ugantha - திருவுள்ளமுவந்த
மைந்தா, Maindha - ஸுந்தரனே!,
உன்னை, Unnai - உன்னை
என்றும், Endrum - என்றைக்கும்
மறவாமை பெற்றேன், Maravaamai Pettraen - மறவாமலிக்கப் பெற்றேன்.
1733பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெஞ்சைப் பார்த்து அதினுடைய நினைவை காதாசித்கமாக்கி அவன் நம்மை உபகரித்து நின்றான் நீ தப்பச் செய்யா நின்றாய் – என்கிறார்) 6
எஞ்சா வென் நரகத்து அழுந்தி நடுங்கின்றேற்கு அஞ்சேல் என்று அடியேனை யாட் கொள்ள வல்லானை நெஞ்சே நீ நினையாது இறைப் போதும் இருத்தி கண்டாய் மஞ்சார் மாளிகை சூழ் வயலாலி மைந்தனையே –8-9-6
பதவுரை Show / Hide
எஞ்சா, Enjaa - ஒருகாலும் குறைதலில்லாத
வெம் நரகத்து, Vem Narakathu - கொடிய நரகத்திலே
அழுந்தி, Azhundhi - ஆழங்காற்பட்டு
நடுங்குகின்றேற்று அடியேனை, Nadungikindretru Adiyanai - நடுங்குகின்ற என்னை
அஞ்சேல் என்று, Anjeyl Endru - ‘பயப்படாதே’ என்று தேற்றி
ஆட்கொள்ள வல்லானை, Aadkolla Vallaanaik - அடிமைகொள்ள வல்லவனும்
மஞ்சு ஆர் மாளிகை சூழ், Manju Aar Maaligai Soozh - மேகமண்டலத்தளவும் ஓங்கின திருமாளிகைகளால் சூழப்பட்டு
வயல், Vayal - வயல்களையுடைத்தான
ஆலி, Aali - திருவாலியில் எழுந்தருளியிருக்கிற
மைந்தனை, Maindhanai - ஸ்வாமியுமான ஸ்ரீசௌரிப்பெருமானை
நெஞ்சே, Nenjey - மனமே!
நீ, Nee - நீ
இறைப்பொழுதும், Iraippoludhum - க்ஷணகாலமும்
நினையாது இருத்தி கண்டாய், Ninaiyadhu Irudhi Kandaai - நினையாமலேயிருக்கிறாயே.
1734பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உமக்கு இத்தனை அதி மாத்திர நிர்பந்தம் என் என்ன – இவ்விஷயத்தை விட்டுப் போய்-பின்னை நீ ஆரை நினைக்க இருக்கிறாய் -என் புறம்பு நினைக்க ஒருவரும் இல்லையோ என்னில் இது வன்றோ புறம்பு உள்ளார் படி) 7
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே –8-9-7
பதவுரை Show / Hide
பெற்றார், Petraar - என்னைப் பெற்ற தாய்தந்தையர் (- (என் ஏழை நெஞ்சே!- ;))
பெற்று ஒழிந்தார், Petru Ozhindhaar - பெற்றுப் போட்டுப் போய்விட்டார்கள்;
பின்னும், Pinnum - பின்பு
அடியேனுக்கு, Adiyanukku - அடியேனுக்கு
உற்றான் ஆய் நின்று, Utran Aayi Nindru - ஸகலவித பந்துவுமாயிருந்து கொண்டு
வளர்த்து, Valarthu - என்னை வளரச்செய்து
என் உயிர் ஆகி நின்றானை, En Uyir Aagi Nindraanai - (அவ்வளவோடும் விடாமல்) எனக்கு உயிராயிருந்து கொண்டு மேலும் நன்மைகளைச் செய்பவனும்
முற்றா மா மதி, Mutraa Maa Mathi - பருவம் நிரம்பாத சந்திரனுடைய
கோள், Kol - க்ஷயரோகத்தை
விடுத்தானை, Viduthaanai - போக்கினவனுமான
எம்மானை, Emmaanai - எம்பெருமானை
எத்தால், Eththal - எக்காரணம்பற்றி
யான் மறக்கேன், Yaan Marakken - நான் மறக்க வல்லேன்?
இது சொல், Idhu Sol - இவ்விஷயத்திற்கு விடைகூறு.
1735பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உமக்கு உற்றானாய் நின்றவன் பண்ணின உபகாரம் தான் என் என்ன ஸ்வ அனுபவத்துக்கு விச்சேதம் வாராத படி பண்ணி தந்தவன் அன்றோ -என்கிறார் அதுக்கு உம்முடைய பக்கல் உள்ளது என் என்னில்) 8
கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெரும் கடலே பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை வற்றா நீர் வயல் சூழ் வயலாலி யம்மானைப் பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே –8-9-8
பதவுரை Show / Hide
கற்றார், Kattrar - விவேகிகள்
பற்று அறுக்கும், Patru Arukkum - ‘இதன் ஸம்பந்தமே நமக்கு வேண்டா’ என்று வெறுத்து ஒழிக்கும்படியான
பிறவி பெருகடலே, Piravi Perugadale - ஸம்ஸாரமாகிற பெரிய கடலையே
பற்றா, Pattra - போக்யமாகப் பற்றி
அடியேன் வந்து பிறந்தேன், Adiyen Vandu Pirandhen - (இந்நிலத்திலே) அடியேன் வந்து (பலபிறப்பும்) பிறவாநின்றேன்
பிறந்த பின்னை, Pirandha Pinnai - இப்படி பிறந்து வருமடைவிலே,
வற்றா நீர் வயல் சூழ், Vatra Nee Vayal Soozh - ஒருகாலும் வற்றாத நீர்வளமுடைய கழனிகளாலே சூழப்பட்ட
வயலாலி, Vayalali - ‘வயலாலி’ என்றேபெயர் பெற்ற திருவாலியில் எழுந்தருளியிருக்கிற
அம்மானை, Ammaanai - எம்பெருமானை
பெற்றேன், Petren - ப்ராப்தனானேன்,
பெற்றதுவும், Pettrathuvum - அவனைப்பெற்றவாறே
பிறவாமை பெற்றேன், Piravamai Petren - மறுபிறப்பில்லாமை பெற்றேன்
1736பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு தேச விசேஷத்திலே போனால் சதா தர்சன நத்தாலே -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்குமத்தை இங்கே கண்ணாலே கண்டு களிக்கப் பெறுவது என்றோ -என்கிறார் – இங்கே கண்களாலே காண்கை யாவது என் என்னில்-இவருடைய த்வரை இருக்கிற படி இறே) 9
கண்ணார் கண்ண புரம் கடிகைகடி கமழும் தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள் விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ –8-9-9
பதவுரை Show / Hide
கண் ஆர், Kan Aar - கண் பொருந்தும்படியான (ஸுந்தரமான)
கண்ணபுரம், Kannapuram - திருக்கண்ணபுரத்திலும்
கடிகை, Kadikai - திருக்கடிகாசலத்திலும்
தண் ஆர், Than Aar - குளிர்ச்சி பொருந்திய
தாமரை சூழ், Thamarai Soozh - தாமரைகளாலே சூழப்பட்ட
தலைச்சங்கம் மேல் திசையுள், Thalaichangam Mel Thisaiyul - தலைச்சங்கமென்னும் பதியில் மேலைப்பக்கத்திலும்
விண்ணோர், Vinnor - நித்யஸூரிகளுக்கு
நாள் மதியை, Naal Madiyai - நாள்தோறும் சந்திரன்போலே அநுபவிக்கவுரியனாய்
விரிகின்ற வெம் சுடரை, Virikindra Vem Sudarai - உதயகாலத்தில் விரியும் ஸூரியன்போலே ப்ரதாபம் மிக்கவனான எம்பெருமானை
இங்கு, Ingu - இந்நிலத்திலே
கண் ஆர கண்டுகொண்டு, Kan Aara Kandukondu - கண்கள் த்ருப்திபெறுமளவும் காணப்பெற்று
களிக்கின்றது, Kalikkindrathu - ஆநந்திப்பது
என்று கொல், Endru Kol - என்றைக்கோ?.
1737பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இன் தமிழாகிற இசைத் தொடையைக் கொண்டு கைங்கர்ய ருசியை உடையரான நீங்கள் –கடல் சூழ்ந்த பூமியிலே இவற்றைப் பாடுவது ஆடுவதாய் உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் – அன்றிக்கே – சர்க்கே பி நோ பஜா யந்தே பிரளயே நவ்ய தந்திச -என்கிறபடியே வரக் கடவதான பிரளயத்திலே புக்கு அழுந்தி நோவு படாமே நீங்கள் இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக உங்கள் சஞ்சாரத்தாலே ஜகத்தை உஜ்ஜீவிப்பிக்க பாருங்கோள் என்னுதல்) 10
செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன் கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர் வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே –8-9-10
பதவுரை Show / Hide
கரு, Karhu - கர்ப்பத்தில்
நீர், Neer - நீர்கொண்ட
முகில், Mugil - மேகம் போன்ற
வண்ணன், Vannan - திருநிறத்தையுடையரான
கண்ணபுரத்தானை, Kannapuraththaanai - சௌரிப்பெருமாள் விஷயமாக,-
செரு நீர வேல் வலவன், Seru Neera Vel Valavan - யுத்தம் செய்வதையே இயல்வாக வுடைய வேற்படையைப் பிரயோகிக்கவல்லவரும்
மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கையிலுள்ளார்க்கு அரசருமான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் (அருளிச்செய்த)
இரு நீர், Iru Neer - மிக்க நீர்மையையுடைய
இன் தமிழ், In Tamil - இனிய தமிழினாலாகிய
இன் இசை, In Isai - இனிய இசையையுடைய
இவை மாலைகள் கொண்டு, Ivai Malaigal Kondo - இச்சொல் மாலைகளைக் கொண்டு
தொண்டீர், Thondheer - தொண்டர்களே!
வரு நீர் வையம் உய்ய, Varu Neera Vaiyam Uyy - கடல் சூழ்ந்த உலகம் உஜ்ஜீவிக்கும்படி
பாடி, Paadi - வாயாரப்பாடி
ஆடுமின், Aadumin - மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகக் கூத்தாடுங்கள்
1738பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே அடிமை செய்ய வேணும் என்னும் சாபல்யத்தை உடைய எனக்கு – பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனும் அவளுமான சேர்த்தியிலே யாயிற்று இவர் நினைத்து இருப்பது – பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்னும் இடத்தை யாயிற்று வேதங்கள் வெளி இட்டது – பிரமாணங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே வந்து சுலபனான நீ சொல்லு) 1
வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம் உண்டானே உன்னை உகந்து உகந்து உன் தனக்கே தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம் கண்டானே கண்ண புரத் துறை யம்மானே –8-10-1
பதவுரை Show / Hide
வண்டு ஆர் பூ, Vandu Aar Poo - வண்டுகள் நிறைந்து அழகிய
மா மலர், Maa Malar - சிறந்த (தாமரைப்) பூவிற் பிறந்த
மங்கை, Mangai - பெரிய பிராட்டியாருடைய
மணம் நோக்கம், Manam Nokkam - மகிழ்ச்சியோடு கூடிய திருக்கண் பார்வையை
உண்டானே, Undane - தாரகமாகக் கொண்டுள்ளவனே!
நால் வேதம் கண்டானே, Naal Vedham Kandaney - நான்கு வேதங்களாலும் காணப்பட்டவனே!
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே
உறை, Urai - நித்யவாஸஞ்செய்தருள்கிற
அம்மானே, Ammaney - ஸ்வாமியே!,
உன்னை உகந்து உகந்து, Unnai Uganthu Uganthu - உன்னையே மிகவும் உசந்து
உன் தனக்கே, Un Thanakke - உனக்கே
தொண்டு ஆனேற்கு, Thondu Aanerku - அடிமை செய்யப் பெறவேணுமென்று ஆவல் கொண்டிருக்கும் என்விஷயத்தில்
என் செய்கிறாய், En Seigirai - என்செய்வதாக இருக்கிறாய்?
சொல்லு, Sollu - இதை அருளிச்செய்யவேண்டும்.
1739பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன் தனக்கே தொண்டனானேன் என்றாரே-இங்கன் சொல்லுவான் என் புறம்பே ஆஸ்ரயிப்பாரும் ஆஸ்ரயநீயருமாய் அன்றோ இருக்கிறது -என்ன அவர்கள் செய்தபடி செய்கிறார்கள் –-எனக்கு முன்னம் இதர விஷயங்களில் புத்தி இல்லை -என்கிறார்) 2
பெரு நீரும் விண்ணும் மலையும் உலகேழும் ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய நின்னை யல்லால் வருதேவர் மற்றுளர் என்று என் மனத்திறையும் கருதேன் நான் கண்ண புரத்துறை யம்மானே –8-10-2
பதவுரை Show / Hide
பெரு நீரும், Peru Neerum - ஸமுத்ரங்களையும் (- (கண்ணபுரத்து உறை அம்மானே!- ;))
விண்ணும், Vinnum - ஆகாயத்தையும்
மலையும், Malaiyum - மலைகளையும்
உலகு ஏழும், Ulaku Ezham - ஏழுலகங்களையும்
ஒரு தார் ஆ, Oru Thar Aa - ஒருமாலையாக
நின்னுள், Ninnul - தன்னுள்ளே
ஒடுக்கிய, Odakkiya - (ஒருமூலையில்) அடங்கச் செய்து கொண்ட
நின்னை அல்லால், Ninnai Allal - உன்னைத்தவிர
வரு தேவர் மற்று உளர் என்று, Varu Thevar Matru Ular Endru - (நான் ஆச்ரயணீயன் என்று சொல்லிக்கொண்டு) வரக்கூடிய தேவதைவேறொன்று இருப்பதாக
என் மனத்து, En Manathu - என்னெஞ்சிலே
இறையும், Irayum - சிறிதும்
நான் கருதேன், Naan Karuthen - நான் நினைத்தறியேன்.
1740பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வேறு சிலரை ஆஸ்ரயநீயர் அல்லர் -என்று நினைத்து இருக்கும் அளவேயோ – தாமஸ புருஷர்களோடு சம்பர்க்கமும் இல்லை – சாத்விகரை ஒழிய காலம் செலுத்தவும் மாட்டேன் -என்கிறார் – எண்ணாத மானிடத்தை எண்ணுமவன் அல்லேன் -என்றும் பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிவிலேன்-என்கிறார்) 3
மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும் கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே –8-10-3
பதவுரை Show / Hide
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு, Mattrum Oor Deivam Ulathu Endru Irupparodu - உன்னைக்காட்டிலும் வேறொரு தெய்வம் ஆச்ரயிக்கவுரியதாக உண்டு என்று நினைத்திருப்பவர்களோடே (- (கண்ணபுரத்து உறை அம்மானே!- ;))
உற்றிலேன், Utrilain - இணங்கமாட்டேன்;
நின் திரு எட்டெழுத்தும், Nin Thiru Ettaezhuthum - உனது திருவஷ்டாக்ஷர மந்திரமானது
மற்று எல்லாம் பேசிலும், Mattrum Ellam Pesilum - அறியவேண்டிய எல்லாப் பொருள்களையும் சொன்னாலும்
நான் கற்று உற்றது, Naan Kattru Utrathu - (அத்திருமந்திரத்தை) நான் அதிகரித்துத் தெரிந்து கொண்ட பொருள்)
உன் அடியார்க்கு அடிமை, Un Adiyarkku Adimai - பாகவத சேஷத்வமேயாம்.
1741பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அக்குணங்கள் எல்லாம் உண்டானாலும் நாம் விரும்பி இருத்தல் -செய்த அன்று -அன்றோ – அது -கார்யகரமாவது என்ன – நஞ்சு தாரகமான உனக்கு ஆகாதது -இல்லை ஸ்ரீ பிராட்டிமார் எனக்கு புருஷகாரம் ஆனபின்பு என் கார்யத்துக்கு குறை உண்டோ -என்கிறார்) 4
பெண்ணானாள் பேரிளம் கொங்கையின் ஆர் அழல் போல் உண்ணா நஞ்சுண்டு உகந்தாரை யுகந்தேன் நான் மண்ணாளா வாள் நெடும் கண்ணி மது மலராள் கண்ணாளா கண்ண புரத் துறை யம்மானே –8-10-4
பதவுரை Show / Hide
மண் ஆளா, Mann Aalaa - பூமிப்பிராட்டியை ஆள்பவனே! (- (கண்ணபுரத்துறையம்மானே!- ;))
வாள் நெடு கண்ணி, Vaal Nedu Kanni - ஒளிபொருந்திப் பெருத்த கண்களையுடையவளும்
மது மலராள், Madhu Malaraal - மதுபெருகுகின்ற மலரிற் பிறந்தவளுமான ஸ்ரீ மஹா லக்ஷமிக்கு
கண்ணாளா, Kannala - வல்லபனானவனே!
பெண் ஆனாள், Pen Aanala - பெண்வடிவுகொண்டுவந்த பூதனையினுடைய
பேர் இள கொங்கையின், Per Il Kongaiyin - பெரிதும் இளையதுமான ஸ்தநத்திலுள்ள
ஆர் அழல் போல், Aar Azhai Pol - நெருப்புப்போன்றதான
உண்ணா, Unnaa - உண்ணமுடியாத
நஞ்சு, Nanju - விஷத்தை
உண்டு, Undu - உறிஞ்சியுண்டு
உகந்தாயை, Uganthaayi - திருவுள்ளமுவந்த வுன்னை
நான் உகந்தேன், Naan Uganthen - நான் அடைந்து மகிழப் பெற்றேன்.
1742பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாமும் உகந்து –வலிய புருஷகாரமும் உண்டாய் –சுலபனும் -ஆனாலும்-நீர் புறம்பு பற்றற்று அகிஞ்சனராய் வரும் அன்று அன்றோ கார்யகரம் ஆவது -என்ன என் குறை அறுத்து வைத்தேன்-நீ உன் தலையிலே குறை கிடவாதபடி பரிஹரித்துக் கொள்ளாய்-என்கிறார்) 5
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான் மற்றாரும் பற்றிலேன் ஆதலால் நின் அடைந்தேன் உற்றான் என்று உள்ளத்து வைத்தருள் செய் கண்டாய் கற்றார் சேர் கண்ண புரத்துறை யம்மானே –8-10-5
பதவுரை Show / Hide
கற்றார் சேர், Kattrar Ser - பண்டிதர்கள் சேர்ந்து வாழுமிடமான (- (கண்ணபுரத்து, உறை அம்மானே!- ;))
பெற்றாரும், Pettrarum - மாதாபிதாக்களென்ன
சுற்றமும், Sutramum - உறவினரென்ன
என்ற இவை, Endra Ivai - என்று சொல்லப்படுகிற இப்படிப்பட்டவர்களை
நான் பேணேன், Naan Peene - நான் உற்றாராக விரும்ப மாட்டேன்;
மற்று ஆரும், Mattru Aarum - மற்று யாரிடத்திலும்
பற்று இலேன், Patru Ileen - பற்று உடையேனல்லேன்;
ஆதலால், Aathalal - ஆகையாலே
நின் அடைந்தேன், Nin Adaindhen - உன்னைவந்து ஆச்ரயித்தேன்;
உள்ளத்து, Ullathu - திருவுள்ளத்திலே
உற்றான் என்று வைத்து, Utran Endru Vaiththu - இவன் நம்முடையவன் என்று அபிமானித்து
அருள் செய், Arul Sei - கிருபை பண்ணவேணும்.
1743பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னைக் கொள்ளும் அளவு போராது- செய்த குற்றங்கள் ஆராய்வதாக நீ இட்ட யமாதிகளும் என் பக்கல் வாராத படி பண்ண வேணும் -என்கிறார்) 6
ஏத்தி உன் சேவடி எண்ணி யிருப்பாரை பார்த்து இருந்து அங்கு நமன் தமர் பற்றாது சோத்தம் நாம் அஞ்சுதம் என்று தொடாமை நீ காத்தி போல் கண்ண புரத்துறை யம்மானே –8-10-6
பதவுரை Show / Hide
உன், Un - உன்னுடைய (- (கண்ணபுரத்துறையம்மானே!- ;))
சே அடி, Sae Adi - திருவடிகளை
ஏத்தி, Aethi - துதித்து
எண்ணி இருப்பாரை, Enni Iruppaarai - சிந்தித்திருக்குமவர்களை
நமன் தமர், Naman Thamar - யமபடர்கள்
பார்த்து இருந்து, Paarthu Irundhu - உயிர்போகுங்காலத்தை எதிர்பார்த்திருந்து
அங்கு, Angu - அந்த சரமஸமயத்தில்
பற்றாது, Patraathu - வந்து கிட்டமாட்டாமல்,
சோத்தம், Soththam - “நமஸ்காரம்,
நாம் அஞ்சுவதும், Naam Anjuvadhum - நாம் (அணுகுவதற்கும்) அஞ்சுகின்றோம்”
என்று, Endru - என்று சொல்லி
தொடாமை, Thodamai - தொடுதலும் செய்யாதபடி
நீ காத்தி போன்ம், Nee Kaathi Poonm - ரக்ஷித்தருளுகிறாயன்றோ.
1744பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவர்கள் கிட்டாமையையோ – உன் பிரபாவத்தாலே அவர்களுக்கு மறைந்து வர்த்திக வேண்டும்படியாய் அன்றோ இருக்கிறது -என்கிறார்) 7
வெள்ளை நீர் வெள்ளத்து அளைந்த அரவணை மேல் துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே வள்ளலே யுன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் கண்ண புரத்துறை யம்மானே –8-10-7
பதவுரை Show / Hide
வெள்ளை நீர், Vellai Neer - திருப்பாற்கடலினுடைய (- (கண்ணபுரத்துறை அம்மானே!- ;))
வெள்ளத்து, Vellathu - வெள்ளத்திலே
அணைந்த, Anaindha - சேர்ந்த
அரவு அணைமேல், Aravu Anaimeel - சேஷசயனத்தின்மேலே
துள்ளு நீர், Thullu Neer - சிறுதிவலைகள்
மெள்ள, Mella - மெதுவாகவீச
துயின்ற, Thuyinra - திருக்கண்வளர்ந்தருள்கின்ற
பெருமானே, Perumane - ஸ்வாமியே!
வள்ளலே, Vallale - உதாரனே!
உன் தமர்க்கு, Un Thamarkku - உன் அடியார் விஷயத்தில்
நமன் தமர், Naman Thamar - யமபடர்கள்
என்றும், Endrum - எக்காலத்திலும்
கள்ளர் போன்ம், Kallar Poonm - திருடர்போலே மறைந்தொளிப்பர்கள்.
1745பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ பாபங்களைக் கனக்க கூடு பூரித்து வைக்க –அதனுடைய பலானுபவத்தை பண்ணுவிக்குமவர்களுக்கு மறைந்து வர்திக்கைக்கு ஹேது என் -என்ன – நீ ஆஸ்ரிதர்க்காக உன்னை அர்த்தி யாக்கின படியையும்-விரோதி நிரசன சீலனாய் இருக்கிற படியையும் அனுசந்தித்தேன் – அவை வாசனையோடே போய் நிற்க்கக் கண்டேன் -என்கிறார்) 8
மாணாகி வையம் அளந்ததுவும் வாளவுணன் பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன் பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும் காணேன் நான் கண்ண புரத்துறை யம்மானே –8-10-8
பதவுரை Show / Hide
மாண் ஆகி, Maan Aagi - (முன்பு) வாமநப் பிரமசாரியாகி (- (கண்ணபுரத்துறை அம்மானே!- ;))
வையம், Vaiyam - உலகங்களை
அளந்ததுவும், Alandhathuvum - அளந்துகொண்டதையும்
வாள் அவுணன், Vaal Avunan - வாள்கொண்ட இரணியாசுரனுடைய
பூண் ஆகம், Poon Aagam - ஆபரணங்களணிந்தமார்பை
கீண்டதுவும், Keendathuvum - கிழித்தெறிந்ததையும்
ஈண்டு, Eendu - இப்போது
நினைத்திருந்தேன், Ninaiththirundhen - நான் அநுஸந்திக்கின்றேன்;
பேணாத, Penaadha - ஆத்மோஜ்ஜீவநத்துக்கு ஒரு நன்மையும் செய்து கொள்ளாதவனும்
வல் வினையேன் நான், Val Vinaiyen Naan - வலியபாபங்களையுடையவனுமான நான்
இடர் எத்தனையும், Idar Eththanaiyum - துளி பாவத்தையும்
காணேன், Kaanen - (என்னிடத்தில்) காண்கிறேனில்லை.
1746பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உம்முடைய விரோதி போன படி தான் என் – நீர் பெற்ற பேறு தான் என் -என்ன) 9
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையைப் பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே –8-10-9
பதவுரை Show / Hide
முன், Mun - முந்துற (- (கண்ணபுரத்து உறை அம்மானே!- ;) (அதற்குப்பிறகு அடியேன்))
என்னை, Ennai - அடியேனை
உனக்கு, Unakku - உனக்கு
தொண்டு ஆக, Thondu Aaga - அடியவனாக
நாட்டினாய், Naatthinai - நிறுத்திக்கொண்டாய்;
அத்தனையே கொண்டு, Aththanaiye Kondu - அவ்வளவே காரணமாக
என் வல் வினையை, En Val Vinaiyai - எனது கொடிய பாவங்களை
மாட்டினேன், Maatthinenn - மாளச்செய்தேன்;  (அதுவுமன்றி)
பாட்டினால், Paattinaal - இப்படிப்பட்ட பாசுரங்களினால்
உன்னை என் நெஞ்சத்து இருந்தமை, Unnai En Nenchatthu Irundhamai - நீ எனது நெஞ்சினுள் இருக்கிற படியை
காட்டினாய், Kaatthinai - விளங்கச்செய்தாய்.
1747பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவற்றை நிதியாக கொண்டு பாடும் அடியார்களுக்கு கால தத்வம் உள்ளதனையும் ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே ஸ்ரீ பரமபதம் ஆட்சியாகக் கடவது – ஸ்ரீ சர்வேஸ்வரன் என் பக்கல் பண்ணின ஓரம் இருந்தபடி கண்டேனுக்கு இத்தை அப்யசித்தவர்களுக்கும் அவ்வளவு சென்று அல்லது பர்யவசிக்க ஒண்ணாது என்னும் இடத்தை அழகியதாக அறிந்தோம்) 10
கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும் அண்டம் போய் ஆட்சி யவர்க்கு அது அறிந்தோமே –8-10-10
பதவுரை Show / Hide
கண்ட சீர், Kanda Seer - கண்ணாலே ப்ரத்யக்ஷமாகக் காணக்கூடிய செல்வம் பொருந்திய
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே
உறை, Urai - நித்யவாஸஞ்செய்தருள்கின்ற
அம்மானை, Ammaanai - சௌரிப் பெருமான் விஷயமாக,
சீர் கொண்ட, Seer Konda - ஸ்ரீ வைஷ்ணவலக்ஷமி வாய்ந்த
தொண்டன், Thondan - தாஸனான
கலியன், Kaliyan - திருமங்கைமன்னன்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை, Maalaik - இப்பாமாலையை
பண்டம் ஆய், Pandam Aay - நிதியாகக் கொண்டு
பாடும், Paadum - பாடவல்ல
அடியவர்க்கு, Adiyavarkku - ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு
எஞ்ஞான்றும், Ennjanrum - எப்போதும்
அண்டம் போய் ஆட்சி, Andam Poi Aatchi - பரமபதத்திலிருந்து கொண்டு வானகமாளப் பெறுவதாகும்;
அவர்க்கு அது அறிந்தோம், Avarkku Adhu Arindhom - அவர்கட்கு அதுவே பேறு என்பதை நிச்சயமாகத் தெரிந்து கொண்டோம்.
1748பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு கருமத்தை அனுஷ்டியா நின்றோம் அது நமக்கு ரஷகம் அன்று ஸ்ரீ சர்வேஸ்வரனே ரஷகன் -என்று இருக்கும் இருப்பில் குலைத்தலை உடைய நெஞ்சை உடையார் அன்றிக்கே இருப்பாருமானவர்கள் வர்த்திக்கிற – ஸ்ரீ திருக் கண்ணங்குடியுள் நின்றானே) 1
வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவிச் சங்கமாரங்கைத் தடமலருந்திச் சாம மா மேனி என் தலைவன் அங்கமாறைந்து வேள்வி நால் வேத மருங்கலை பயின்று எரி மூன்றும் செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக் கண்ணங்குடியுள் நின்றானே –9-1-1
பதவுரை Show / Hide
வங்கம், Vangam - மரக்கலங்களை யுடைத்தாய்
மா, Maa - பெரிதான
முந்நீர், Munnir - (திருப்பாற்) கடலிலே,
வரி, Vari - பல கோடுகளையும்
நிறம், Niram - அழகையுமுடைய
பெரிய, Periya - விசாலமான
வாள், Vaal - ஒளி பொருந்திய
அரவு, Aravu - திருவனந்தாழ்வானாகிற
இன், In - இனிமையான
அணை, Anai - படுக்கையிலே
மேவி, Mevi - பொருந்தி வர்த்திப்பவனும்,
என் தலைவன், En Thalaivan - எம்பெருமான் (எங்கு எழுந்தருளியிருக்கிறனென்றால்)
அங்கம் ஆறு, Angam Aaru - ஆறு வேதாங்கங்களென்ன
ஐந்து வேள்வி, Ainthu Velvi - பஞ்சமஹாயஜ்ஞங்களென்ன
நால் வேதம், Naal Vedham - நான்கு வேதங்களென்ன
அரு கலை, Aru Kalai - (வேதங்களுக்கு உபப்ரும் ஹணமாகவுள்ள) அருமையான நூல்களென்ன ஆகிய இவற்றை
பயின்று, Payinru - காலக்ஷேபமாகக் கொண்டு
எரி மூன்றும், Eri Moondrum - த்ரேதாக்நிகளை
செம் கையால் வளர்க்கும், Sem Kaiyal Valarkkum - செவ்விய கைகளாலே ஓம்புகின்றவர்களும்
துளக்கம் இல் மனத்தோர், Thulakkam Il Manaththor - நிலைநின்ற அத்யவஸாய முடையவர்களுமான அஅந்தணர்வாழ்கிற
திருக்கண்ணங்குடியுள், Thirukkannangudiyul - திருக்கண்ணங்குடி யென்னுந் திருப்பதியிலே
நின்றான், Nindraan - எழுந்தருளியிருக்கிறான்.
1749பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆகாச அவகாசத்தை வெளி அடைத்துக் கொண்டு வந்து தோற்ற – சாபத்தாலே திண்ணியதான நெஞ்சை உடைய முதலை-சின்னம் பின்னம் -என்கிறபடியே துணி படும்படி பிரதி பஷததின் மேலே நெருப்பை உமிழா நின்றுள்ள திரு ஆழியை ஏவினவன்) 2
கவளமாக தத்த கரி உய்யப் பொய்கை காரம் கொளக் கலங்கி யுள் நினைந்து துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணி படச் சுடு படை துரந்தோன் குவளை நீள் முளரிக் குமுத மொண் கழுநீர் கொய் மலர் நெய்தல் ஒண் கழனித் திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத் திரு கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-2
பதவுரை Show / Hide
கவளம், Kavalam - கவளங்கொள்ளுமியல் புடையதும் (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்-.))
மா கதத்த, Maa Kathath - மிக்க மதத்தையுடையதுமான
கரி, Kari - கஜேந்திரன்
பொய்கை, Poykai - ஒரு பொய்கையிலிருந்த
கராம், Karaam - முதலையினாலே
கொள, Kol - கௌவப்பட்டு
கலங்கி, Kalangi - கலக்கமடைந்து
உள் நினைந்து, Ul Ninaindhu - (எம்பெருமானைச்) சிந்தித்து
துவள, Thuvazhal - வருந்திநின்றவளவிலே,
உய்ய, Uyya - அது உஜ்ஜீவக்கும்படி
மேல் வந்து தோன்றி, Mel Vandu Thondri - மேல்வழியாய் எழுந்தருளி ஸேவைஸாதித்து
வன் முதலை, Van Muthalai - வலிவுள்ள (அந்த) முதலை
துணிபட, Thunipad - துண்டாக அறும்படி
சுடு படை, Sudu Padai - ஜ்வலிக்கின்ற திருவாழிப்படையை
துரந்தோன், Thuranthoon - பிரயோகித்தருளின எம்பெருமான்,-
குவளை, Kuvazhai - கருநெய்தற்பூக்களென்ன
நீள் முளரி, Neel Mulari - பெரிய தாமரைப் பூக்களென்ன
குமுதம், Kumudham - ஆம்பலென்ன
ஒண் கழுநீர், On Kazhuneer - செங்கழுநீரென்ன
கொய் மலர் நெய்தல், Koi Malar Neithal - பறிக்கைக்கு உரியமலரை யுடைத்தான நெய்தலென்ன ஆகிய இவற்றாலே
ஒண், On - அழகுபெற்ற
கழனி, Kazhani - கழனிகளையுடையதும்
திவளும் மாளிகை சூழ், Thivalum Maligai Soozh - பிரகாசிக்கின்ற திருமாளிகைகளாலே சூழப்பட்டதும்
செழு மணி புரிசை, Sezhu Mani Purisai - சிறந்த ரத்நமயமான திருமதிளையுடையதுமான
1750பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எங்கும் ஒக்க பிரளயமாய் நலிவானது மேலிட-ஆகாசமும்-பூமியும் குல பர்வதங்களும் கடலிலே புக்கு அகப்பட –இவற்றை அடைய தன் மேலே ஏறிட்டுக் கொண்டு தரிக்க வற்றாய் – பெரிய களிப்பை உடைய ஸ்ரீ மத்ஸ்ய ரூபியாய் பரந்த புனலை தன் செலுவிலெ-ஏக தேசத்திலே -அடக்கினவன்) 3
வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப மீது கொண்டு உகளும் மீனுருவாகி விரி புனல் வரியகட்டு ஒளித்தோன் போதலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து சீத ஒண் தென்றல் திசை தொறும் கமழும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே –9-1-3
பதவுரை Show / Hide
வாதை வந்து அடர, Vathai Vandu Adara - கஷ்டம்நேர்ந்து அதிகரிக்க (- (திருக்கண்ணங்குடியுள், நின்றானே-.))
வானமும், Vaanamum - ஆகாசமும்
நிலனும், Nilanum - பூமியும்
மலைகளும், Malaigalum - மலைகளும்
அலை கடல், Alai Kadal - மலையெறிகின்ற கடலிலே
குளிப்ப, Kulippa - அழுந்திவிட.
மீது கொண்டு, Meethu Kondo - (இவற்றை யெல்லாம்) தன் மேலே யேறிட்டுக் கொண்டு
உகளும், Ugalum - களிப்புடன் உலாவுகிற
மீன் உரு ஆகி, Meen Uru Aagi - மத்ஸ்ய ரூபியாகி
விரி புனல், Viri Punal - பரம்பின பெருவெள்ள நீரை
வரி அகடு, Vari Akadu - அழகிய (தனது) செலுவிலே
ஒளித்தோன், Oliththon - அடக்கின எம்பெருமான்,
போது, Podhu - உரிய காலத்திலே
அலர், Alar - விகஸிக்கிற
புன்னை, Punnai - புன்னைகளென்ன
மல்லிகை, Mallikai - மல்லிகைகளென்ன
மௌவல், Mauval - முல்லைகளென்ன (இவற்றினுடைய)
புது விரை மது மலர், Puthu Virai Madhu Malar - புதிய பரிமளத்தையும் தேனையுமுடைய பூக்களிலே
அளைந்து, Alaindhu - அளாவி
சீதம் ஒண் தென்றல், Seetham On Thendral - குளிர்ந்த அழகிய தென்றற்காற்று
திசை தொறும், Thisai Thorum - எல்லாப்பக்கங்களிலும்
கமழும், Kamazhum - வாஸனைவீசப்பெற்ற
1751பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வராஹமாய் பூமியை பிரளயம் கொண்டது என்று அத்தை எடுத்து ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வந்த வை வர்ண்யத்தைப் போக்கினவன் – பாண்டவர்களுக்கு சாரதி யானவன்) 4
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண் பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன் ஒன்றலா வுருவத் துலபபில் பல்காலத் துயர் கொடி யொளிவளர் மதியம் சென்று சேர் சென்னிச் சிகர நன்மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே –9-1-4
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்பொருகால், (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்-.))
வென்றி சேர், Vendri Ser - வெற்றிபெறுந்தன்மையுடையதும்
திண்மை, Thinmai - வலிமையுடையதும்
விலங்கல் மா மேனி, Vilangkal Maa Meni - மலைபோன்ற பெரிய வடிவுடையதும்
வெள்எயிறு, Velaiyiru - வெறுத்தகோரப்பற்களையும்
ஒள் எரி, Ol Eri - ஜ்வலிக்கின்ற அக்நியோடொத்த
தறு கண், Tharu Kan - வட்டணித்த கண்களையும் உடையதுமான
பன்றி ஆய், Pandri Aayi - வராஹரூபியாய்த் திருவவதரித்து
பார் மகள், Paar Magal - பூமிப்பிராட்டியினுடைய
பயலை, Payalai - விரஹவேதனையை
தீர்த்தவன், Theerthavan - போக்கினவனும்
பஞ்சவர் பாகன், Panjavar Bhagan - பாண்டவர்களுக்கு ஸாரதியுமான எம்பெருமான்,-
ஒன்று அலா உருவத்து, Onru Ala Uruvaththu - பலவகைப்பட்ட உருவங்களையுடையவையாய்
உலப்பு இல், Ulappu Il - முடிவில்லாமல்
பல் காலத்து, Pal Kaalaththu - நீண்டகாலமுள்ளவையாய்
உயர் கொடி ஒளி வளர் மதியம் சென்று சேர் சென்னி சிகரம், Uyar Kodi Olli Valar Madhiyam Sendru Ser Chennni Sikaram - உயர்ந்தகொடிகளானவை ஒளிமிக்க சந்திர மண்டலத்தளவும் சென்று சேரும்படியாக ஓங்கின சிகரங்களை யடையவையான
நல் மாடம், Nal Maadam - அழகிய மாடமாளிகைகளை யுடைத்தான
1752பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமிப் பரப்பை அடைய இரண்டடியாலே அளப்பதாக பரந்த திக்குகள் அடங்கலும் திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி வளர்ந்தவன்) 5
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு பின்னும் ஏழு உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் அன்ன மென் கமலத் தணி மலர்ப்பீடத் தலை புனலிலைக் குடை நீழல் செந்நெல் ஒண் கவரி யசைய வீற்று இருக்கும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-5
பதவுரை Show / Hide
மன்னவன், Mannavan - (மஹாபலியென்னும்) அரசனுடைய (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்.))
பெரிய வேள்வியில், Periya Velviyil - மஹாயஜ்ஞத்திலே
குறள் ஆய், Kural Aayi - வாமநமூர்த்தியாய் (ச்சென்று)
நீரொடு, Neerodu - (அவன்வார்த்த) தாரையோடு
மூ அடியும், Moo Adiyum - மூவடி நிலத்தையும்
கொண்டு, Kondru - கைப்பற்றி
பின்னும், Pinnum - பிறகு
ஏழ் உலகும், Ezhu Ulagum - ஏழுலகங்களையும்
ஈர் அடி ஆக, Eer Adi Aaga - இரண்டடியாலே அளப்பதாக
பெரு திசை அடங்கிட, Peru Thisai Adangida - பரந்த திக்குக்கள் இட மடையும்படி
நிமிர்ந்தோன், Nimirndhon - ஓங்கிவளர்ந்த பெருமான்,-
அன்னம், Annam - அன்னப்பறவை
மென் கமலத்து மலர், Men Kamalaththu Malar - மெல்லிய தாமரைப்பூவாகிய
அணி பீடத்து, Ani Peedaththu - அழகிய ஆஸனத்திலே
அலை புனல், Alai Punal - அலையெறிகிற ஜலத்திலுண்டான
இலை, Ilai - இலையாகிற
குடை, Kudai - குடையினுடைய
நீழல், Neezhal - நிழலிலே
செந்நெல் ஒண் கவரி அசைய, Sennel On Kavari Asaiya - அழகிய செந்நெற்கவரிவீச
வீற்றிருக்கும், Veetirukkum - வீற்றிருக்கப்பெற்ற
1753பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மழுவைக் கொண்டு பூமியில் ராஜாக்களை இருபத்தொரு படி கால் அறுத்து அவர்கள் உடைய ருதிர வெள்ளத்திலே குளித்து உதக் கிரியையும் பண்ணி மிக்க கோபம் தவிர்ந்தவன்) 6
மழுவினால் அவனி யரசை மூவெழு கால் மணி முடி பொடிபடுத்துதிர குழுவு வார் புனலுள் குளித்து வெங்கோபம் தவிர்ந்தவன் குலை மலி கதலி குழுவும் வார் கமுகும் குரவு நற்பலமும் குளிர் தரு சூத மாதவியும் செழுமையார் பொழில்கள் தழுவு நன் மாடத் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-6
பதவுரை Show / Hide
மூ எழு கால், Moo Ezhuthu Kaal - இருபத்தொரு தலைமுறையளவும் (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்-))
அவனி அரசை, Avani Arasai - பூமியிலுள்ள ராஜாக்களுடைய
மணி முடி, Mani Mudi - மணியணிந்த கிரீடங்களை
மழுவினால், Mazhuvinal - கோடாலிப்படையினால் பொடி பொடியாகச்செய்து
பொடிபடுத்து, Podipaduthu - (அரசர்களை யெல்லாம் கொன்று.)
உதிரம் குழுவு, Uthiram Kuzhuvu - (அவர்களுடைய) ரத்த ஸமூஹமாகிற
வார் புனலுள், Vaar Punalul - வெள்ளத்திலே
குளித்து, Kulithu - ஸ்நாநம்பண்ணி
வெம் கோபம் தவிர்ந்தவன், Vem Kobam Thavirthavan - மிக்க கோபம் தணியப் பெற்ற பெருமான்,-
குலை மலி, Kulai Mali - குலைகளாலே நிறைந்த
கதலி, Kathali - வாழைகளினுடைய
குழுவும், Kuzhuvum - தோப்பும்
வார் கமுகும், Vaar Kamukum - ஓங்கின பாக்குமரங்களும்
குரவும், Kuravum - குரவமரங்களும்
நல் பலவும், Nal Palavum - நல்ல பலாமரங்களும்
குளிர்தரு சூதம், Kulirtharu Sootham - குளிர்ந்த மாமரங்களும்
மாதவியும், Madhaviyum - குருக்கத்தியுமாகிய
செழுமை ஆர் பொழில்கள் தழுவு, Sezhumai Aar Pozhilgal Thazhuvu - செழிப்புடைய சோலைகளாலே சூழப்பட்டதும்
நல் மாடம், Nal Maadam - நல்ல மாடமாளிகைகளையுடையதுமான
சூதம், மாதவி, Sootham Madhavi - வடசொற்கள்
1754பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இலங்கைக்கு நிர்வாஹகனாய் இருக்கிற ராவணனை –ஆதித்ய கிரணம் போலே கூரிய அம்புகளாலே வர பலத்தாலே பூண் கட்டின முடிகள் ஆனவை பனம் பழம் போலே உதிரும்படி வில்லை வளைத்தவன் – மதுபான மத்தமான வண்டுகள் இனிய இசை பாடா நின்றுள்ள ராவணன் உடன் பொருத ஸ்ரமம் ஆறும் படி ஆடல் பாடல் கேட்டுப் போது போக்கி இருக்கலான தேசம் ஆயிற்று) 7
வானுளாரவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கை யார் கோனைப் பானுநேர் சரத்தால் பனங்கனி போலப் பரு முடியுதிர வில் வளைத்தோன் கானுலா மயிலின் கணங்கள் நின்றாடக் கண முகில் முரச நின்றதிரத் தேனுலா வரி வண்டின் இன்னிசை முரலும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-7
பதவுரை Show / Hide
வலிமையால், Valimaiyaal - (தனது) மிடுக்கினால் (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்-.))
வானுளாரவரை நலியும், Vaanulaaravarai Naliyum - தேவர்களை ஹிம்ஸதித்துக் கொண்டிருந்த
மறிகடல் இலங்கை யார் கோனை, Marikadal Ilangai Yaar Konai - அலைமறியுங் கடல்சூழ்ந்த இலங்கையில் உள்ளவர்களுக்கு அரசனான இராவணனுடைய
பரு முடி, Paru Mudi - பருத்த தலைகள்
பானு நேர் சரத்தால், Paanu Ner Sarathaal - ஸூர்யனோடொத்த (திக்ஷ்ணமான) அம்புகளாலே
பனங்கனி போல, Panangani Poola - பனம்பழம்போல
உதிர, Uthira - அற்றுவிழும்படி
வில் விளைத்தோன், Vil Vilaitthon - சார்ங்கத்தை வளைத்த பெருமான்
கான் உலாம், Kaan Ulaam - காட்டிலே உலாவுகின்ற
மயிலின் கணங்கள், Mayilin Kanangal - மயில் கூட்டங்கள்
நின்று ஆட, Ninru Aada - நின்று கூத்தாடவும்,
கணம் முகில், Kanam Mukil - திரண்ட மேகங்கள்
முரசம் நின்று அதிர, Murasam Ninru Athira - முரஜவாத்தியம் போல நின்று முழங்கவும்,
தேன் உலாம் வரி வண்டு, Then Ulaam Vari Vandu - தேன்களிலே திரிகின்ற அழகிய வண்டுகள்
இன் இசை முரலும், In Isai Muralam - இனிய ராகங்களை ஆலாபிக்கவும் பெற்ற
1755பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்ப்பத் த்வஜன்-என்னக் கடவது இ றே துரியோதனனை –அவன் தன ஓலகத்தினுள்ளே ஆசனத்தை ஜகத்துக்கு வேர் பற்றானவனை அளிக்கப் புகா நின்றோம் என்று கூசாதே இட்டு அதுவே ஹேதுவாக பெரிய வடிவானது அண்ட அவகாசத்தை ஊடுருவ திக்குகள் தன பக்கலிலே அடங்கும்படியாக வளர்ந்தவன்) 8
அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சாதே இட வதற்குப் பெரிய மா மேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன் வரையின் மா மணியும் மரகதத் திரளும் வயிரமும் வெதிருதிர் முத்தும் திரை கொணர்ந்துந்தி வயல்தொரும் குவிக்கும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-8
பதவுரை Show / Hide
அரவு நீள் கொடியோன், Aravu Neel Kodiyon - ஸர்ப்பத்வஜனான துரியோதனன் (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான் -.))
அவையுள், Avaiyul - ஸபையிலே
ஆசனத்தை, Aasanaththai - (பொய்யான) ஆஸனத்தை
அஞ்சிடாதே இட, Anjidaadhe Ida - அஞ்சாமல் இட
அதற்கு, Adharku - அதுகாரணம்பற்றி
பெரிய மா மேனி, Periya Maa Meeni - பெரிய திருமேனியை யுடையனாய்க் கொண்டு
அண்டம் ஊடு உருவ, Andam Oodu Uruva - மேலுலகம் ஊடுருவிச் செல்லும்படியாகவும்
பெரு திசை அடங்கிட, Peru Thisai Adangida - பெரிய திக்குகள் (தன்னிலே) அடங்கும் படியாகவும்
நிமிர்ந்தோன், Nimirndhon - வளர்ந்த பெருமான்
வரையின் மா மணியும், Varaiyin Maa Maniyum - ஸஹ்ய பர்வதத்திலிருக்கிற சிறந்த ரத்னங்களையும்
மரதகம் திரளும், Maradhagam Thiralum - மரதகக் குலியல்களையும்
வயிரமும், Vayirum - வயிரங்களையும்
வெதிர் உதிர் முத்தும், Vethir Uthir Muththum - மூங்கில்களினின்று உதிர்ந்த முத்துகளையும்
திரை, Thirai - அலைகளானவை
உந்தி கொணர்ந்து, Undhi Konarnthu - தள்ளிக்கொண்டுவந்து
வயல் தொறும், Vayal Thorum - கழனிகளெங்கும்
குவிக்கும், Kuvikkum - குவிக்குமிடமன
1756பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விஞ்சின பாரமானது ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வாராத படி ஸ்ரீ மகா பாரதத்திலே ராஜாக்கள் ஆனவர்கள் மடியும் படியாக ஸ்ரீ அர்ஜுனன் முன்னே நின்று தேரை நடத்தினவன் – ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவன்) 9
பன்னிய பாரம் பார் மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரிலே மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனர்க்கு உய்த்த மா மாயன் துன்னு மாதவியும் சுர புனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய் தென்ன வென்றளிகள் முரன்றிசை பாடும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-9
பதவுரை Show / Hide
பார்மகட்கு, Paarmakadku - பூமிப்பிராட்டிக்கு இருந்த (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்-.))
பன்னிய பாரம், Panniya Paaram - விஞ்சின பாரமானது
ஒழிய, Ozhiy - விட்டுநீங்கும்படி
பாரதம் மா பெரு போரில், Bharatham Maa Peru Poaril - மிகப் பெரிய பாரதயுத்தத்தில்
மன்னர்கள், Mannargal - அரசர்கள்
மடிய, Madiy - தொலையும்படி
மைத்துனற்கு, Maiththunarukku - அர்ஜுநனுக்கு
மணி நெடு திண் தேர் உய்த்த, Mani Neduthin Ther Uyththa - மணிகளுடையதாய்ப் பெரிதாய்த் திடமாயிருந்த தேரை நடத்தின
மா மாயன், Maa Maayan - ஆச்சரிய சக்தியுக்தனான பெருமான்,-
துன்னு மாதவியும், Thunnu Maadhaviyum - நெருங்கின குருக்கத்தியும்
சுரபுனை பொழிலும், Surapunai Pozhilum - சுரபுன்னைச் சோலைகளும்
சூழ்ந்து எழு செண்பகம், Soozhndhu Ezhuthu Senbagam - சுற்றிலுமுண்டான செண்பகங்களும் ஆகிய இவற்றினுடைய
மலர்வாய், Malarvaai - பூக்களிலே
அளிகள், Azhigal - வண்டுகள்
தென்ன என்று, Thenna Endru - தென்ன தென்ன வென்று
முரன்று, Murandru - ஆலாபித்து
இசை பாடும், Isai Paadum - இசைபாடப்பெற்ற
1757பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத ஊரை வில்லாலே அக்னி கிளரும்படியாக செற்ற ஸ்ரீ திருக் கண்ணங்குடியுள் நின்றானை – ஸ்ரீ ஆழ்வார் ஒலியை உடைத்தாக அருளிச் செய்தவையாய்–லஷணங்களில் குறை அற்று இருந்துள்ள இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்க்களுக்கு ஸ்ரீ பகவத் தாரித்ர்யம் இல்லை – என்கிறார்) 10
கலையுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படையொடும் சென்று சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக் கண்ணங்குடியுள் நின்றானை மலைகுலா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் உலவு சொல் மாலை யொன்பதொடு ஒன்றும் வல்லவர்க்கு இல்லை நல்குரவே –9-1-10
பதவுரை Show / Hide
கலை உலா அல்குல், Kalai Ula Alkul - நல்ல ஆடை உலாவுகின்ற இடுப்பையுடையளான
காரிகை திறத்து, Kaarikai Thirathu - அழகிற்சிறந்த ஸீதாபிராட்டிக்காக
கடல் பெரு படையொடும் சென்று, Kadal Peru Padaiyodum Sendru - ஸமுத்திரத்திற் காட்டில பெரிதான (வானர) சேனையோடே எழுந்தருளி
சிலையினால், Silaithinaal - சார்ங்கவில்லாலே
இலங்கை தீ எழ செற்ற, Ilankai Thee Ezh Setra - இலங்கை நெருப்புப்பற்றி யெரியும்படி அழித்தவனும்
திருக்கண்ணங்குடியுள் நின்றானை, Thirukkannangudiyul Nindraanai - திருக்கண்ணங்குடியில் எழுந்தருளு யிருப்பவனுமான எம்பெருமான் விஷயமாக;
மலைகுலா மாடம், Malaikula Maadam - மலையென்று கொண்டாடிச் சொல்லத்தக்க மாடங்களை யுடைத்தான
மங்கையர், Mangaiyar - திருமங்கை நாட்டில் உள்ளவர்கட்கு
தலைவன், Thalaivan - தலைவரும்
மானம் வேல், Maanam Veel - சிறந்த வேற்படையை யுடையவருவான
கலியன், Kaliyan - ஆழ்வாருடைய
வாய் ஒலிகள், Vaai Oligal - ஸ்ரீ ஸூக்தியாய்
உலவு, Ulavu - லக்ஷணங்களில் குறையற்றவையான
சொல் மாலை ஒன்பதோடு ஒன்றும், Sol Maalai Onpathodu Ondrum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லவர்க்கு, Vallavarkku - ஓதவல்லவர்களுக்கு
நல்குரவு, Nalkuravu - ஏழைமை
இல்லை, Illai - இல்லையாம்.
1758பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மர்மங்களிலே கடாஷியா நின்றார் பார்த்த பார்வை ஒரு கால் மாற வைக்கிறிலர் – நீ பின்னை செய்தது என் என்ன –இப்பார்வைக்கு நானும் கூட்டு என்று பார்க்கிறாளோ -என்று அஞ்சுகின்றேன் – அவன் பார்வையும் அவள் பார்வையும் ஆனதாகிறது – அப்போதை அழகு இருந்த படி காண்) 1
பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி யகலத்தாரம் மின்னிவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவராவர் தோழீ என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார் அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-1
பதவுரை Show / Hide
தோழீ, Thozhi - வாராய் தோழியே!,
இவர் மேனி, Ivar Meeni - இந்த எம்பெருமானுடைய திருமேனியானது
பொன், Pon - பொன்னாயிருக்கின்றது
மரதகத்தின் பொங்கு இள சோதி, Marathakathin Pongu Ila Sothi - மரதகப்பச்சையின் பரம்பின புதிய தேஜஸ்ஸை யுடைத்தான
அகலத்து, Akalathu - திருமார்பில் (சாத்தப்பட்டுள்ள)
ஆரம், Aaram - ஹாரமானது
மின், Min - மின்னலாயிருக்கிறது
இவர், Ivar - இப்பெரியவர்
வாயில், Vaail - வாயினால்
நல் வேதம் ஓதும் வேதியர், Nal Vedham Oodhum Vethiyar - நல்லவேதத்தை உருச்சொல்லுகிற வைதிகரா யிருக்கின்றார்;
வானவர் ஆவர், Vaanavar Aavar - (மேன்மையில்) தேவர்களோடொப்பர்;  (இவர்)
என்னையும் நோக்கி, Ennaiyum Nookki - என்னையும் உற்றுப் பார்த்து
என் அல்குலும் நோக்கி, En Alkulum Nookki - எனது நிதம்பத்தையும் உற்றுப் பார்த்து
ஏந்து இள கொங்கையும், Aendu Ila Kongaiyum - ஏந்தப்படுகின்ற இளைய முலைகளையும்
நோக்குகின்றார், Nookkiyiraar - உற்றுப்பார்க்கின்றார்;
அன்னை என் நோக்கும் என்று, Annai En Nookkum Endru - தாய் என்ன நினைப்பாளோ வென்று
அஞ்சுகின்றேன், Anjikiren - பயப்படுகிறேன்;
அச்சோ, Achcho - ஆச்சரியம்;
ஒருவர் அழகிய ஆ, Oruthar Azhagiya Aa - ஒரு பெரியவருடைய ஸௌந்தரியத்தை என்ன! சொல்லுவேன்.
1759பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒப்பித்துக் கொண்டு இரா நின்றார் –திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் திருக் கையிலே உடையராய் இரா நின்றார் – ஒப்பனை தான் வேண்டாத படி இரா நின்றது திருத் தோள்களை கண்டவாறே – இவ் வழகு நம்மால் பேசப் போகாது-விஸ்மயப்பட்டு விடும் அத்தனை) 2
தோடவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த சேடர்கோல் என்று தெரிக்க மாட்டேன் செஞ்சுடராழியுஞ் சங்குமேந்தி பாடக மெல்லடியார் வணங்கப் பன் மணி முததொடிலங்கு சோதி ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-2
பதவுரை Show / Hide
தோடு அவிழ் நீலம், Thodu Avizh Neelam - இதழ்கள் மலரப்பெற்ற நீலோற்பலங்கள் (- (அச்சோ ஒருவர் அழகிய ஆ -.))
மணம் கொடுக்கும், Manam Kodukkum - பரிமளத்தைப் புற்ப்பட விடுகின்றன
சூழ் புனல், Sool Punal - பரந்த தீர்த்தங்களாலே
சூழ், Sool - சூழப்பட்ட
குடந்தை, Kudandhai - திருக்குடந்தையிலே
கிடந்த, Kidandha - திருக்கண்வளர்ந்தருள்கின்ற
சேடர் கொல்என்று, Sedar Kolendru - யௌவன புருஷரோ இவர்! என்று
தெரிக்கமாட்டேன், Therikkamaatten - தெரிந்து கொள்கின்றிலேன்,
செம் சுடர் ஆழியும், Sem Sudar Azhiyum - சிவந்த ஒளியையுடை திருவாழியையும்
சங்கும், Sangum - சங்கையும்
ஏந்தி, Aendi - தரித்துக்கொண்டு,
பாடகம் மெல் அடியார் வணங்க, Paadagam Mel Adiyaar Vananga - பாதகடகம் பூண்ட மெல்லி பாதங்களையுடைய பெண்டிர்களால் வணங்கப்பெற்ற
பல் மணிமுத்தொடு, Pal Manimuththodu - பலவகைப்பட்ட ரத்னங்களோடும் முத்துகளோடும்
இலங்கு சோதி ஆடகம் பூண்ட, Ilangu Sothi Aadagam Poonda - விளங்குகின்ற தேஜஸ்ஸையுடைய பொன் திருவாபரணங்களை யணிந்துள்ள
ஒரு நான்கு தோளும், Oru Naangu Tholum - விலக்ஷணமான நான்கு திருத்தோள்களுமாய்
1760பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஓங்கி இருப்பதாய் பரந்து இருப்பதான மலை விளங்கினாப் போலே செவ்வையை உடைத்தாய் -மிக்க புகரை உடைத்தான – ஆயிரம் தோளையும் உடையராய்-அத் தோள்கள் தோறும் தோள் வந்தியை உடையராய் இரா நின்றார் கீழே நான்கு தோளும் என்னச் செய்தே ஆயிரம் தோள் என்கிறது ஆயிரம் தோள் ஆனால் கண்டு அனுபவிக்கும் கரணங்கள் அநேகம் கொண்டு அனுபவிக்க வேண்டும் படி இரா நின்றார் -என்கை – ஓர் ஒப்பனை வேணுமோ -அவ்வடிவு அழகு தானே அமையாதோ) 3
வேயிரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ்வையம் எல்லாம் தாயின நாயகராவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்தவாறு சேயிரும் குன்றம் திகழ்ந்தது ஒப்பச் செவ்வியவாகி மலர்ந்த சோதி ஆயிரம் தோளோடு இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-3
பதவுரை Show / Hide
தோழீ, Thozhi - வாராய்தோழியே!’ (- (அச்சோ ஒருவர் அழகிய ஆ-.))
வேய் இரு சோலை, Veiy Iru Solai - மூங்கில்மயமான பரந்த சோலைகளை யுடைத்தான
விலங்கல், Vilangkal - குன்றுகளாலே
சூழ்ந்த, Soozhndha - சூழப்பட்ட
மெய்யம், Meyyam - திருமெய்ய மலையில் எழுந்தருளியிருக்கிற
மணாளர், Manalar - மணவாளப்பிள்ளையும்
இ வையம் எல்லாம் தாயின, I Vaiyam Ellam Thaayin - இந்த பூமிப்பரப்பையெல்லாம் தாவி அளந்தவருமான
நாயகர் ஆவர், Naayakar Aavar - பரமபுருஷர்போலும் இவர்!
தாமரை கண்கள் இருந்த ஆறு, Thamarai Kangkal Irundha Aaru - தாமரை போன்ற திருக்கண்களிருக்கும் படியை என் சொல்வேன்;!
சேய் இரு குன்றம், Sey Iru Kuntram - ஓங்கியும் பரந்துமிருக்கின்ற மலைகள்
திகழ்ந்தது ஒப்ப, Thigazhnthathu Oppa - விளங்குமாபோலே
செவ்விய ஆகி, Sevviya Aagi - அழகுடையனவாய்
மலர்ந்த சோதி, Malarndha Sothi - பரந்த தேஜஸ்ஸை யுடையனவான
ஆயிரம் தோளொடு, Aayiram Tholodu - ஆயிரம் திருத்தோள்களும்
இலங்கு பூணும், Ilangu Poonum - விளங்குகின்ற திருவாபரணங்களுமாய்
1761பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவர் திரு வதரம் இருக்கிற படியை பார்த்தவாறே சிவந்த பவளம் என்னலாம் படி இருந்தது – தேவர் இவர்-இதர விசஜாதியருமாய் இருந்தார்-மனிச்சரோடு கூட்டலாய் இருக்கிறிலர் – இவர் வடிவு இருந்த படியைச் சொல்லில்-எங்கும் ஒக்க ஸ்ப்ருஹநீயமாய் இரா நின்றது – உபமானம் இல்லாத விஷயத்தில்-உபமானம் சொல்லி இருப்போமோ) 4
வம்பவிழும் துழாய் மாலை தோள் மேல் கையன வாழியும் சங்கும் ஏந்தி நம்பர் நம்மில்லம் புகுந்து நின்றார் நாகரிகர் பெரிது மிளையர் செம்பவளம் இவர் வாயின் வண்ணம் தேவர் இவரது உருவம் சொல்லில் அம்பவளத் திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-4
பதவுரை Show / Hide
தோள் மேல், Thol Mel - திருத்தோள்களிலே
வம்பு அவிழும் துழாய் மாலை, Vambu Avizhum Thuzhai Maalai - பரிமளம் விஞ்சுகிற திருத்துழாய் மாலையுள்ளது;
ஆழியும் சங்கும், Aazhiyum Sangum - சக்கரமும் சங்கமும்
கையன, Kaiyan - திருக்கைகளிலுள்ளன;
ஏந்தி, Aendi - (அத்திவ்யாயுதங்களைத்) தரித்துக்கொண்டு
நம்பர், Nambar - (இந்த) ஸ்வாமி
நம் இல்லம் புகுந்து நின்றார், Nam Illam Pugundhu Nindraar - நம்மனையிலே வந்து ஸுலபராயிரா நி்ன்றார்;
நாகரிகர், Naagarikar - பெருமதிப்பராயிரா நின்றார்;
பெரிதும் இளையர், Peridum Ilaiyar - மிக்க இளம்பருவமுடையராயிருக்கின்றார்;
இவர், Ivar - இவருடைய
வாயின் வண்ணம், Vaayin Vannam - அதரத்தின் நிறம்
செம் பவளம், Sem Pavalam - சிவந்த பவளமே;
தேவர் இவரது, Thevar Ivarthu - அமாநுஷரான இவருடைய
உருவம் சொல்லில், Uruvam Sollil - உருவமிருக்கும்படியைச் சொல்வோமாகில்
அம் பவளம் திரளேயும் ஓப்பர், Am Pavalam Thiraleeyum Ooppar - அழகிய பவளத்திரள் போலே விரும்பத் தக்கவரா யிரா நின்றார்;
1762பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவர் வடிவு இருக்கும் படியைச் சொல்லப் புக்கால் கடல் போலே இரா நின்றது – பிரதி பஷத்தை கனல் எழக் காய்கிற ஸ்ரீ திரு ஆழியை ஒரு கையிலே ஏந்தி –தமக்கு அடங்காத ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை மற்றைக் கையிலே உடையராய் இருந்தார் – இத்தைச்சொல்லி நம்மால் கரையிலே நிற்கும் அத்தனை அல்லது நம்மால் உள் இழிந்து பேசப் போகாது) 5
கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன பாழி யம் தோளுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம் வாழியரோ விவர் வண்ணம் எண்ணில் மா கடல் போன்றுளர் கையில் வெய்ய ஆழி யொன்றேந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-5
பதவுரை Show / Hide
கோழியும், Kozhiyum - உறையூரையும் (- (அச்சோ ஒருவர் அழகிய ஆ-.))
கூடலும், Koodalum - தென் மதுரையையும்
கோயில் கொண்ட, Koyil Konda - இருப்பிடமாகவுடைய
கோவலரே ஒப்பர், Kovalare Oppar - கோபாலக்ருஷ்ணன் போன்றிருக்கின்றார் இவர்;
குன்றம் அன்ன, Kundram Anna - மலை போன்ற
பாழி, Paazhi - வலிமை பொருந்திய
அம், Am - அழகிய
ஓர் நான்கு தோளும், Oor Naanthu Tholum - விலக்ஷணமான நான்கு திருத்தோள்களையும்
உடையர், Udaiyar - உடையராயிருக்கின்றார்;
இவர்தம்மை, Ivarthammai - இவரை
பண்டும், Pandum - முன்பொருகாலும்
கண்டு அறியோம், Kandu Ariyom - நாம் பார்த்ததில்லை;
வாழியரோ, Vazhiyaro - பல்லாண்டு பல்லாண்டு; (இவர் வாழ்ந்திடுக.)
இவர் வண்ணம் எண்ணில், Ivar Vannam Ennil - இவருடைய வடிவிருக்கும் படியை நினைக்கப்புக்கால்
மா கடல் போன்று உளர், Maa Kadal Poonru Ular - பெரிய கடல்போலே யிருக்கின்றாரிவர்;
கையில், Kaiyil - ஒரு திருக்கையில்
வெய்ய, Veyya - தீக்ஷ்ணமான
ஆழி ஒன்று ஏந்தி, Aazhi Onru Aendhi - ஒரு திருவாழியை ஏந்தியும் (மற்றொரு திருக்கையிலே)
ஓர் சங்கு பற்றி, Oru Sangu Patri - ஒரு சங்கத்தைத் தரித்துக் கொண்டும்.
1763பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண்டாரை தம் வசமாக்கி தன் காலிலே விழ விட்டுக் கொள்ள அஞ்சன கிரி போலேயுமாய் இரா நின்றார் – வாக்குக்கு அவிஷயமான விஷயத்தில் நான் எத்தைச் சொல்லுவது) 6
வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை தஞ்சுடையாளர் கொல் யான் அறியேன் தாமரைக் கண்கள் இருந்தவாறு கஞ்சனை யஞ்ச முன் கால் விசித்த காளையராவர் கண்டார் வணங்கும் அஞ்சன மா மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-6
பதவுரை Show / Hide
வெம் சினம் வேழம், Vem Sinam Vezham - வெவ்விய சீற்றத்தை யுடைய (குவலயாபீட மென்னும்) யானையினது
மருப்பு, Maruppu - கொம்பை
ஒசித்த, Osiththa - முறித்தொழித்த
வேந்தர் கொல், Vendar Kol - பிரபுவோ இவர்!
ஏந்து இழையார், Aendhu Izhaiyar - தரிக்கப்படும் ஆபரணங்களை யுடையரான பெண்டிருடைய
மனத்தை, Manaththai - நெஞ்சை
தஞ்சு உடையாளர் கொல், Thanju Udaiyalar Kol - தஞ்சமாகவுடையவரோ இவர்!
யான் அறியேன், Yaan Ariyeen - நான் அறிகின்றிலேன்;
தாமரை கண்கள் இருந்த ஆறு, Thamarai Kangkal Irundha Aaru - தாமரைபோன்ற திருக்கண்களிருக்கும்படி என்னே!
முன், Mun - முன்பு
கஞ்சன், Kanjan - கம்ஸன்
அஞ்ச, Anja - பயப்படும்படியாக
கால் விசைத்த, Kaal Visaittha - (தனது) திருத்தாள்களின் வலிமையைக் காட்டின
காளையர் ஆவர், Kaalaivar Aavar - இளையவராக இருக்கின்றார்;
கண்டார் வணங்கும், Kandaar Vanangum - கண்டவர்களெல்லாரும் வணங்குதற்குரியவராய்
அஞ்சனம் மாமலை யேயும் ஒப்பர், Anjanam Maamalai Yeyum Oppar - பெரிய வொரு அஞ்சனமலை போன்றிருப்பவரான
ஒருவர், Oruthar - ஒருபெரியவருடைய
அழகிய ஆ, Azhagiya Aa - ஸௌந்தரியமானது
அச்சோ, Achcho - ஆச்சரியம்!.
1764பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வடிவைப் பார்த்த வாறே மேக் சகலங்கள் அன்றிக்கே எல்லாம் ஒன்றாகத் திரண்டு வர்ஷிக்கையிலே ஒருப்பட்ட மேகம் போலே இரா நின்றது –விசஜாதீயத்துக்கு சஜாதியங்களில் சில வற்றை சொன்ன இடம் என் சொன்னோம் ஆனோம்) 7
பிணியவிழ் தாமரை மொட்டலர்த்தும் பேரருளாளர் கொல் யான் அறியேன் பணியும் என்னெஞ்சம் இது என் கொல் தோழி பண்டிவர் தம்மையும் கண்டறியோம் அணி கெழு தாமரை யன்ன கண்ணும் அங்கையும் பங்கயம் மேனி வானத்து அணி கெழு மா முகிலே யும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-7
பதவுரை Show / Hide
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும், Pini Avizh Thaamarai Mottu Alarthum - பாவந்தொலையப் பெற்ற (மஹான்களினுடைய ஹ்ருதய புண்டரீக மென்கிற தாமரை மொக்கை விகஸிப்பிக்கவல்ல (- (அச்சோ ஒருவர் அழகிய ஆ-.))
பேரருளாளர் கொல், Perarulalar Kol - பேரருளாளப் பெருமானோ இவர்!,
யான் அறியேன், Yaan Ariyeen - நான் அறிகின்றிலேன்;
தோழீ, Thozhi - வாராய் தோழியே!,
என் நெஞ்சம், En Nenjam - என்னுடைய நெஞ்சானது
பணியும், Paniyum - தானே வணங்கா நின்றது;
இது என்கொல், Idhu Enkol - இது என்னோ? ;
இவர் தம்மை, Ivar Thammai - இவரை
பண்டும் கண்டு அறியோம், Pandum Kandu Ariyom - முன்னமொருகாலும் பார்த்தில்லை
கண்ணும், Kannum - இவருடைய (திருக்கண்கள்)
அணி கெழு, Ani Kezhu - அழகுமிக்க
தாமரை அன்ன, Thaamarai Anna - தாமரை போலிருக்கின்றன;
அங்கையும், Angaiyum - அங்கைகளும்
பங்கயம், Pangayam - தாமரையே
மேனி, Meeni - திருமேனி விஷயத்தில்
வானத்து அணி கெழுமா முகிலேயும் ஒப்பர், Vaanathu Ani Kezhumaa Mukileyum Oppar - ஆகாசத்திலே அழகு மிக்கெழுந்த காளமேகத்தை ஒத்திருக்கின்றார்;
1765பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னை விலக்கப் பார்க்கிற நீங்களும் வந்து-காணுங்கோள் -உங்களால் தான் விடலாமாகில் – ஸ்ரீ திருவடி திருத் தோளில் இருந்தால் இருக்கும் அழகு தான் இப்படியேயோ) 8
மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிரும் சோலை மணாளர் வந்து என் நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர் மலையார் கொல் நினைக்க மாட்டேன் மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் வந்து காணீர் அஞ்சிறைப் புள்ளும் ஓன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-8
பதவுரை Show / Hide
மஞ்சு உயர், Manju Uyar - மேகமண்டலத்தளவும் உயர்ந்ததாய் (- (அச்சோ ஒருவர் அழகிய ஆ-.))
மா மதி தீண்ட நீண்ட, Maa Mathi Theenda Neenda - சந்திரன் படும்படியாக நீண்டிருப்பதான
மாலிருஞ் சோலை, Maalirunj Cholai - திருமாலிருஞ்சோலையி லெழுந்தருளியிருக்கிற
மணாளர், Manalar - மணவாளப்பிள்ளை
வந்து, Vandhu - அவ்விடத்தை விட்டுவந்து
என் நெஞ்சுள்ளும், En Nenjullum - என்னுடைய நெஞ்சினள்ளும்
கண்ணுள்ளும், Kannullum - கண்களினுள்ளும்
நின்று நீங்கார், Ninru Neengaar - நிலைநின்று நீங்கமாட்டா திருக்கின்றார்;
நீர்மலையார் கொல், Neermalaiyaar Kol - திருநீர்மலை யெம்பெருமானோ இவர்! ;
நினைக்க மாட்டேன், Ninaikka Maatten - இன்னாரென்று தெரிந்துணரகில்லேன்;
அம் சிறை புள்ளும் ஒன்று, Am Sirai Pullum Ondru - அழகிய சிறகுகளை யுடைய பெரியதிருவடியின் மீது
ஏறி வந்தார், Eri Vandhaar - ஏறிக்கொண்டு எழுந்தருளியிருக்கிற இவர்
மஞ்சு உயர் பொன் மலைமேல் எழுந்த, Manju Uyar Pon Malaimel Ezhundha - மேகமண்டலத்தளவும் ஓங்கினவொரு பொன்மலையின் மேல் எழுந்த
மா முகில் போன்று உளர், Maa Mukil Poondru Ular - காளமேகம்போன்றிருக்கின்றார்;
வந்து காணீர், Vandhu Kaanir - வந்து ஸேவியுங்கள்;
1766பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரு முகத்திலே விழித்த வாறே-ஆபத் சகர் என்று தோற்றும்படி இரா நின்றார்) 9
எண்டிசையும் எறி நீர்க் கடலும் ஏழுலகும் உடனே விழுங்கி மண்டியோர் ஆலிலைப் பள்ளி கொள்ளும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன் கொண்டல் நன்மால் வரையேயும் ஒப்பர் கொங்கலர் தாமரைக் கண்ணும் வாயும் அண்டத்தமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-9
பதவுரை Show / Hide
எண் திசையும் எறி நீர், En Thisaiyum Erhi Neer - எட்டுத்திசைகளிலும் வந்து அலையெறிகின்ற நீரையுடைய (- (ஒப்பர்ஒத்திருக்கின்றார்;) (ஒருவர், அழகிய ஆ அச்சோ!-.-))
கடலும், Kadalum - கடல்களையும்
ஏழ் உலகும், Ezhu Ulagum - ஸப்தலோகங்களையும்
உடனே விழுங்கி, Udane Vizhunki - (பிரளயத்தில்) ஒருசேர விழுங்கி
ஓர் ஆல் இலை, Oor Aal Ilai - ஒரு ஆலிலையிலே
மண்டி, Mandi - பொருந்தி
பள்ளி கொள்ளும், Palli Kollum - துயில் கொண்டருளின
மாயர் கொல், Maayar Kol - ஆச்சரியபூதரோ இவர்! ;
மாயம், Maayam - (இவருடைய) ஆச்சரியநிலைமையை
அறியமாட்டேன், Ariyamaatten - அறிகின்றிலேன்;
கொண்டல், Kondal - நீர்கொண்ட மேகத்தையும்
நல் மால் வரையேயும், Nal Maal Varaiyeum - அழகிய பெரிய மலையையும்
கண்ணும் வாயும், Kannum Vaayum - (இவருடைய) திருக்கண்களும் திருமுகமும்
கொங்கு அலர் தாமரை, Kongu Alar Thaamarai - பரிமளம் மிக்க தாமரையாயே யிருக்கின்றன;
அண்டத்து அமரர், Andaththu Amarar - பரமபதத்திலுள்ள நித்யஸூரிகள்
பணிய நின்றார், Paniya Nindraar - வந்து தொழும்படி நிற்கின்ற
1767பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னை பிராபிக்கைக்கு வழி இட்டுக் கொடுத்த ஜகத் காரண பூதனானவன் –ஸ்ரீ திரு நாகையிலே தன் அழகாலே விட ஒண்ணாத படி பண்ணிக் கொண்டு நின்றான் ஆயிற்று – தம்மால் அளவிட ஒண்ணாமையால் பிரித்து அனுபவிக்கிறார்-உயிர் தோழியும் தானுமாய் அனுபவித்த ஏழு பாடல்கள் எல்லாரையும் குறித்த இரண்டு பாடல்கள்-பல ஸ்ருதி ஒன்றும் இத்தை அப்யசிக்க வல்லார்கள் இங்கும் கோலின பலங்களும் பெற்று இது தன்னின் பலமான ஸ்ரீ நித்ய சூரிகளோடு ஒரு கோவையாய் இனியராகப் பெறுவார்கள்) 10
அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார் மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே –9-2-10
பதவுரை Show / Hide
அன்னமும், Annamum - ஹம்ஸமாகவும்
கேழலும், Keelalum - வராஹமாகவும்
மீனும், Meenum - மத்ஸ்யமாகவும்
ஆய, Aaya - அவதரித்த
ஆதியை, Aadhiyai - ஜகத்காரணபூதரும்
நாகை, Naagai - திருநாகையில் எழுந்தருளியிருக்கின்ற
அழகியாரை, Azhagiyaarai - அழகிற்சிறந்தவருமான ஸௌந்தர்யராஜப் பெருமாளைக் குறித்து,
கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன், Kanni Nal Maa Madil Mangai Vendan - அழிவற்ற நல்ல பெரிய மதில்களையுடைய திருமங்கைக்குத் தலைவரும்
காமரு சீர், Kaamaru Seer - விரும்பத்தக்க குணங்களையுடையவருமான
கலிகன்றி, Kalikanri - கலியன்
குன்றா இன் இசையால் சொன்ன, Kundraa In Isaiyaal Sonna - குறைவில்லாத இனிய இசையுடனே அருளிச்செய்த
செம் சொல் மாலை, Sem Sol Maalai - அழகிய சொல்மாலையாகிய
ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும், Ezham Irandum Oor Ondrum - இப்பத்துப்பாசுரங்களையும்
வல்லார், Vallar - கற்றுவல்லவர்கள்
மன்னவர் ஆய், Mannavar Aayi - (இவ்வுலகில்) சக்கரவர்த்திகளாயிருந்து
உலகு ஆண்டு, Ulaku Aandu - அரசாட்சிபுரிந்து
மீண்டும், Meendum - அதற்குமேலும்
வானவர் ஆய், Vaanavar Aayi - முக்தர்களாகி
மகிழ்வு எய்துவர், Magizhvu Eydhuvar - ஆனந்தமடைவர்கள்.
1768பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் போல்வாருக்கு அன்றோ அவன் தானே வரும் அளவும் ஆறி இருக்கிறோம் என்று தரிக்கல் ஆவது பழையார் பாடாற்ற வல்லது புதியார் க்கும் ஆற்றப் போமோ ஆர் உயிர் பட்டது என் உயிர் பட்டது -என்னக் கடவது இறே அசாதாரணரான ஸ்ரீ நித்ய சூரிகளிலே ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் போல்வார் தான் பட்டார்களோ நான் பட்டபடி -என்கிறார் என்று ஆயிற்று – இதுக்கு ஸ்ரீ ஜீயர் அருளிச் செய்யும் படி –-இது தன்னை ஸ்ரீ ஆழ்வார் பாடா நிற்க ஸ்ரீ எம்பெருமானார் -அங்கு ஆர் உயிர் பட்டது இங்கே எனது உயிர் பட்டது -என்று அருளிச் செய்தார் – ஸ்ரீ ஆழ்வார் உடைய அனுபவத்தை யாகில் ப்ராப்யமாக சொல்லுகிறதும்-ஆசைப் படுகிறதும் அதுக்கு அவ்வருகே ஒரு ஏற்றம் சொல்லுவாரைப் போலே சொல்லுவான் என் என்று நான் ஸ்ரீ ஜீயரைக் கேட்க நாவோடையான ஸ்திரீக்கு பர்த்தாவின் உடைய கர ஸ்பர்சம் உண்டானால்-வேர்ப்பது விடுவது ஆமாபோலே அனுபவத்தில் புதுமையால் படுகிற அலமாப்பு காணும் என்று அருளிச் செய்தாராக ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர்) 1
தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு பொன்னை நைவிக்கும் அப் பூஞ்செருந்தி மண நீழல் வாய் என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே –9-3-1
பதவுரை Show / Hide
வல் வினையேன், Val Vinaiyen - கொடிய பாவத்தை யுடையேனான நான்
தன்னை, Thannai - என்னை
நைவிக்கில் என், Naivikkil En - சிதிலப்படுத்திக் கொள்வதனால் என்ன பயன்?
பொன்னை நைவிக்கும், Ponnai Naivikkum - (பொன்னுருவத்தைத் தோற்கடிக்கவல்ல
அப்பூ செருந்தி மணம் நீழல்வாய், Appoo Serunthi Manam Neelalvai - அப்படிப்பட்ட ஸுரபுன்னைப் பூக்களின் பரிமளமுள்ள நிழலிலே
என்னை நைவித்து, Ennai Naiviththu - என்னை யீடுபடுத்தி
எழில் கொண்டு, Ezhil Konda - (எனது) மேனிநிறத்தைக் கவர்ந்துகொண்டு
அகன்ற, Akanra - பிரிந்துபோன
பெருமான், Perumaan - எம்பெருமானுடைய
இடம், Idam - இருப்பிடமாயும்,
முத்தம், Muththam - முத்தரும்பின
புன்னை பொழில் சூழ்ந்து, Punnai Pozhil Soozhndhu - புன்னைமரச் சோலைகளாலே சூழப்பட்டு
அழகாய, Azhagaya - அழகியதாயுமிருக்கிற
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை
தொழுதும், Thozhudum - வணங்குவோம்,
எழு, Ezhu - புறப்படு.
1769பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அதனில் பெரிய என் அவா -என்னுமா போலே விபுத்வத்துக்கு அவ்வருகாம் படியாய் இருக்கை- அணு வஸ்து இறே விபு வஸ்துவை விளாக்குலை கொள்ளுகிறது – அப்படியே இருக்கும் இறே சங்கோசம் அற அவன் பண்ணிக் கொடுத்த வாறே – பிரிகிற தமக்கும் அது உண்டாகில் பிரியான் இறே-இன்னம் காதல் தானே பெருகி தலை மறிந்தது இல்லை) 2
உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தேன் தொழுதும் எழு முருகு வண்டுண் மலர்க்கைதையின் நீழலில் முன்னொரு நாள் பெருகு காதன்மை என்னுள்ளம் எய்தப் பிரிந்தான் இடம் பொருது முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே –9-3-2
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenjee - மனமே! (- (பின்னை என்ன செய்யவேணுமென்கிறாயோ, கேள்;))
இங்கு இருந்து, Ingu Irundhu - இங்கேயிருந்துகொண்டு
நினைந்து, Ninaindhu - சீந்தித்து
உருகி, Urugi - உருகுவதனால் என்னபயன்?
வண்டு, Vandu - வண்டுகள்
முருகு உண், Murugu Un - தேனுண்ணப் பெற்ற
மலர், Malar - பூவையுடைத்தான
கைதையின், Kaithaiyin - தாழையினுடைய
நீழலில், Neelalil - நிழலிலே
முன் ஒருநாள், Mun Orunaal - முன்பொருநாள்
என் உள்ளம், En Ullam - என்னெஞ்சானது
பெருகு காதன்மை எய்த, Perugu Kaadhanmai Eydha - மிக்க ஆவல்கொள்ளும்படி
பிரிந்தான், Pirindhaan - பிரிந்துபோன பெருமானுடைய
இடம், Idam - இருப்பிடமாயும்
முந்நீர், Munnir - கடவானது
பொருது, Porudhu - அலையெறிந்து
கரைக்கே, Karaikkai - கரையிலே
மணி உந்து, Mani Unthu - ரத்னங்களைக் கொழித்துத் தள்ளுமிடமாயுமுள்ள
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை
தொழுதும், Thozhudum - சென்றுவணங்குவோம்;
எழு, Ezhu - எழுந்திரு
1770பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நினைக்க ஒண்ணாமை அன்றிக்கே மறக்க ஒண்ணாது -என்கிறது) 3
ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின் பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம் போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3
பதவுரை Show / Hide
மனமே, Maname - நெஞ்சமே! (- (ஒருவகையாலும் மறக்கமுடிய வில்லையே!;))
ஏது செய்தால், Aethu Seithal - என்னகாரியஞ் செய்தால்
மறக்கேன், Marakken - (பெருமானை) மறந்தவளாவேன்?
தாது மல்கு, Thadu Malku - பூந்தாதுகள் நிறைந்த
தடம் சூழ், Thadam Soozh - தடாகங்களாற் சூழப்பட்ட
பொழில், Pozhil - சோலைகளினுடைய
தாழ்வர், Thazhvar - பர்யந்தங்களிலே
தொடர்ந்து, Thodarnthu - (என்னைத்) தொடர்ந்து கொண்டு
பேதை, Pethai - “பேதாய்!
இனி பின், Ini Pin - இனிமேல்
நின்னை, Ninnai - உன்னை
பிரியேன், Priyeen - (ஒருநாளும்) பிரியமாட்டேன்; என்று சொல்லிவைத்து
அகன்றான், Akanraan - பிரிந்துபோன பெருமானுடைய
இடம், Idam - இருப்பிடமாயும்,
நாளும் போது கமழும், Naalum Podhu Kamazhum - எப்போதும் பூக்கள் மணநாறப் பெற்ற
பொழில் சூழ்ந்த, Pozhil Soozhntha - சோலைகளாற் சூழப்பட்ட
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை
தொழுதும் எழு, Thozhudhum Ezhuthu - வணங்குவோம் வா.
1771பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் ஆர்த்தர் இல்லை இறே – ஆர்த்தர்க்கு உத்தேச்யம் சென்று பெற வேண்டாதே இருந்த இடத்தே கொடு வந்து தள்ளும் தேசம் ஆயிற்று – பாவியேன் -அத்தேசத்தின் படி அவனுக்கும் உண்டாகப் பெற்றிலோமே) 4
கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன் நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன் மங்கை நல்லாய் தொழுதும் எழு போயவன் மன்னுமூர் பொங்கு முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே –9-3-4
பதவுரை Show / Hide
நல் மங்காய், Nal Mangai - உயிர்த்தோழியே!, (- (ஆதலால்) (போய் தொழுதும் எழு))
கொங்கு உண்டே கரி ஆக, Kongu Unde Kari Aaga - தேனுண்கிறவண்டு ஒன்றே ஸாக்ஷியாக (பிறரொருவருமறியாதபடி)
கொடியேற்கு வந்தான், Kodiyerku Vandhaan - பாலியான என்பக்கல் விக்கு) வந்தனான
நங்கள் ஈசன், Nangal Eesan - எம்பெருமான்
முன், Mun - முன்பு
நமக்கே பணித்த, Namakke Panitha - நமக்குச் சொல்லி வைத்த
மொழி, Mozhi - சொற்படி
செயிதிலன், Seyithilan - நடத்தவில்லை;
அவன் மன்னும் ஊர், Avan Mannum Oor - அப்பெருமான் பொருந்தி வாழுமிடமாயும்
பொங்கு முந்நீர், Pongu Munnir - அலைமோதுகின்ற கடலானது
கரைக்கே, Karaikkai - கரையோரத்திலே
மணி உந்து, Mani Unthu - ரத்னங்களைக் கொழித்துத்தள் ளுமிடமாயுமுள்ள
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை
1772பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழே மறக்க ஒண்ணாது என்றது இறே-இங்கே நினைக்க ஒண்ணாது என்கிறது – மறத்தல் நினைத்தால் இரண்டாய் இறே இருப்பது-அவை இரண்டும் அரிதாக நின்றது உணரில் -உள்ளம் சுடுமால்–என்கிறது வருந்தி நினைக்கில் என்கிறது இல்லை நினைந்தவாறே நெஞ்சு சுடா நின்றது என்கை) 5
உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின் தணரிலாவி தளரும் என வன்பு தந்தானிடம் புணரி யோதம் பணில மணி யுந்து புல்லாணியே –9-3-5
பதவுரை Show / Hide
வினையேன், Vinaiyen - பாவியான நான் (- (தோழீ!) தொழுதும் எழு-;)
உணரில், Unaril - நினைத்தமாத்திரத்தில்
உள்ளம் சுடும், Ullam Sudum - நெஞ்சு வேம்;
ஆல், Aal - அந்தோ! ;
துணரின் நாழல் ஈறு போது, Thunarin Naazhal Eeru Podhu - பூங்கொத்துக்களை யுடைத்தான நாழலின் மணம் மிக்க புஷ்பங்களை
நம் சூழல், Nam Soozhal - நமது பரந்த கூந்தலிலே
பெய்து, Peidhu - சூட்டி
பின் தணரில் ஆவிதளரும் என அன்பு தந்தான், Pin Thanaril Aavithalarum Ena Anbu Thandhan - ;இனி விட்டுப் பிரிந்தால் உயிர் தடுமாறிப் போகும்; என்னும்படியான அன்பைக் கொண்டிருந்து (விட்டுப் பிரிந்த) பெருமானுடைய
இடம், Idam - உறைவிடமாயும்
புணரி ஓதம், Punari Otham - கடலலைகளானவை
பணிலம், Panilam - சங்குகளையும்
மணி, Mani - ரத்னங்களையும்
உந்து, Undhu - ஒதுக்கித் தள்ளுமிடமாயுள்ள
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை
1773பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் நித்ய வாஸம் பண்ணாத இடத்தில் நினைக்கவும் அரிது அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் காயிக வியாபாரமும் பண்ணக் குறை இல்லை – வள்ளல் –சம்ஸ்லேஷ சமயத்தில் தன்னை எனக்கு சர்வ ஸ்வாதானம் பண்ணினவன் – மாயன் – இப்போது முறை கெட்டுத் தான் இருந்த இடத்தே செல்ல வேண்டும்படி அப்போது அப்படி பரிமாறினவன் மணி வண்ணன் – இவை ஒன்றுமே இல்லை யாகிலும் விட ஒண்ணாத படியான வடிவு அழகை உடையவன் – எம்மான் –அவ் வடிவு அழகை காட்டி என்னை அனந்யார்ஹனாக எழுதிக் கொண்டவன்) 6
எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தென் தொழுதும் எழு வள்ளல் மாயன் மணி வண்ணன் எம்மான் மருவும் இடம் கள்ளவிழும் மலர்க்காவியும் தூ மடல் கைதையும் புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே –9-3-6
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenjee - மனமே!
நினைந்து, Ninaindhu - (அவனைச்) சிந்தித்து
எள்கி, Elgi - ஈடுபட்டு
இங்கு இருந்து என், Ingu Irundhu En - இங்கேயிருப்பதனால் என்ன பலன்?
வள்ளல், Vallal - உதாரனும்
மாயன், Maayan - ஆச்சர்யச் செய்கைகளையுடை யவனும்
மணிவண்ணன், Manivannan - நீலமணிபோன்ற நிறமுடையவனுமான
எம்மான், Emman - எம்பெருமான்
மருவும் இடம், Maruvum Idam - விரும்பியுறையுமிடமாயும்,
கள் அவிழும் மலர்காவியும், Kal Avizhum Malarkaaviyum - மது ஒழுகுகின்ற மலர்களையுடைய செங்கழுநீர்களும்
தூ மடல் கைதையும், Thoo Madal Kaithaiyum - வெளுத்தமடல் களையுடைய தாழைகளும்
புள்ளும், Pullum - பலவகையான பறவைகளும்
அள்ளல் பழனங்களும், Allal Pazhanangalum - சேறுமிக்க வயல்களும்
சூழ்ந்த, Soozhndha - சூழ்ந்திருக்கப் பெற்றதாயுமுள்ள
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை
தொழுதும் எழு, Thozhudhum Ezhuthu - தொழுவோம் வா,
1774பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் ருசி முன்னாக -இத்தலை ருசி பண்ணும் அன்று இறே பலத்தோடே வ்யாப்தம் ஆவது – அவனுடைய ருசி இறே பேற்றுக்கு உடலாக தலைக் கட்டுவது – இவனுடைய ருசி அவனுடைய விரகத்துக்கு உடலாம் இத்தனை இறே) 7
பரவி நெஞ்சே தொழுதும் எழு போயவன் பாலமாய் இரவு நாளும் இனிக் கண் துயிலாது இருந்து என் பயன் விரவி முத்தம் நெடு வெண் மணல் மேற்கொண்டு வெண் திரை புரவி என்னப் புதம் செய்து வந்து யுந்து புல்லாணியே –9-3-7
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenjee - மனமே!
இனி, Ini - இப்போது
இரவும் நாளும், Iravum Naalum - இரவும் பகலும்
கண்துயிலாது இருந்து என்பயன், Kanthuyilaadhu Irundhu Enpayan - (கண்ணுறங்கா திருப்பதனால் என்ன பயன்?
முத்தம், Muththam - முத்துக்களோடே
விரவி, Viravi - கலந்து
நெடு வெண்மணல், Nedu Venmanal - அதிகமான வெண்மணற்களை
மேல் கொண்டு, Mel Kondu - மேலே எறட்டிக்கொண்டு வந்து
வெண் திரை, Ven Thirai - வெளுத்த அலைகள்
புரவி என்ன, Puravi Enna - குதிரை போல
புதம் செய்துவந்து, Pudham Seithuvandu - தாவிக்கொண்டு வந்து தள்ளுமிடமான
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியிலே
அவன் பாலம் ஆய் போய், Avan Paalam Aay Poi - அவ்வெம்பெருமான் பக்கல்ஈடு பட்டோமாய்ச் சென்று
பரவி தொழுதும், Paravi Thozhudum - துதிந்து வணங்குவோம் வா, எழு
1775பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிர பேஷரான இவர் ஓர் அபலை இறே -என்று பாராதே நமக்கு ஸ்நேஹிப்பாரைப் போலே சலத்தைப் பண்ணினார் ஆயிற்று) 8
அலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பராய்ச் சாலமதாகித் தகவொன்றிலர் நாம் தொழுதும் எழு உலவு கானல் கழி யோங்கு தண் பைம்பொழி லூடிசை புலவு கானல் கழி வண்டினம் பாடு புல்லாணியே –9-3-8
பதவுரை Show / Hide
அலமும் ஆழிபடையும் உடையார், Alamum Aazhipadaiyum Udaiyaar - காலப்பையும சக்கரமுமாகிற திவ்யாயுதங்களை யுடையரான பெருமான் (- (அவர் அப்படியிருந்தாலும்) (நெஞ்சே!) நாம் தொழுதும் எழு)
நமக்கு, Namakku - நம் விஷயத்திலே
அன்பர் ஆய், Anbar Aay - அன்புடையவர் போன்றவராய்
சலம் அது ஆகி, Salam Adhu Aagi - கபடத்தையுடையவராகி
தகவு ஒன்று இலர், Thagavu Ondru Ilan - சிறிதும் இரக்கமில்லாதவரா யிருக்கின்றார்
உலவு கால், Ulavuk Kaal - உலாகின்ற தென்றல் காற்றையுடைய
நல் கழி, Nal Kazhi - நல்ல கழிகளிலே
ஓங்கு தண் பை பொழிலூடு, Ongu Than Pai Pozhiloodu - உயர்ந்து குளிர்ந்து பரந்த சோலைகளிடத்தே
புலவு கானல் களிவண்டு இனம், Pulavu Kaanal Kalivandu Inam - புலால் நாற்றம் நாறுகின்ற கடற்கரைச் சோலைகளிலுள்ள களிவண்டுகளின் கூட்டமானது
இசை பாடு, Isai Paadu - இசைபாடப்பெற்ற
புல்வாணி, Pulvaani - திருப்புல்லாணியை
1776பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செய்யக் கடவது அல்லாதன எல்லாம் செய்து பெறக் கடவோம் புருஷார்த்தம் -ஸ்வ யத்ன சாத்தியம் என்று இருப்பார் படுவது எல்லாம் படக் கடவோம்) 9
ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர்ப் பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாத லில் ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பராய்ப் போதுமாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே –9-3-9
பதவுரை Show / Hide
மாதே, Maadhe - தோழிப்பெண்ணே,! (- (நாம்))
நமக்கே நலம் ஆதலில், Namakke Nalam Aadhalin - நமக்கே புருஷார்த்தமாதலால்
குளித்து, Kulithu - ஸ்நாநம்பண்ணி
நாமம் ஓதி, Naamam Oadhi - (பிரானுடைய) திருநாமங்களை ஓதி
ஒளி மா மலர்பதம், Oli Maa Malarpadham - ஒளிபொருந்திய சிறந்த திருவடிவத் தாமரைகளை
உச்சிதன்னால், Uchithannal - தலையினால்
நாளும் பணிவோம், Naalum Panivom - நாள்தோறும் தொழக் கடவோம்;
ஆது தாரான் எனிலும், Aadhu Tharaan Enilum - (அப்பிரான் ஒன்றும் தரமாட்டானேலும்
தரும், Tharum - தந்திடுவன்;
அன்றியும், Andriyum - தரினும் தாராதொழியினும்
அன்பராய், Anbarai - பக்தராய்
அவன் மன்னு புல்வாணியே, Avan Mannu Pulvaaniye - அவன் பொருந்தி வாழும் திருப்புல்லாணியையே
தொழுதும், Thozhudum - தொழுவோம்,
போது, Podhu - வா.
1777பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்து பாட்டையும் அதிகரிக்கவுமாம் அன்றிக்கே ஒரு பாட்டை அதிகரிக்கவுமாம் அதில் அர்த்தானுசந்தானம் பண்ணவுமாம் அதில் இசையை அப்யசிக்கவுமாம் – இவ்விசை தன்னை ஒருவன் பாடா நின்றால் அதில் அசஹமானனாம் அதன்றிக்கே ஒழியுமுமாம் – ஏதேனும் ஒரு ஆகாரத்தில் அந்வயமே வேண்டுவது – அவர்களுக்கு வாசஸ் ஸ்தான தேசம் -துக்க கந்த ரஹீதமான நித்ய விபூதியே இத்தை இங்கே அப்யசிக்க அவர்கள் இங்குத்தை தனிமை தீர அர்ச்சிராதி மார்க்கமே அங்குள்ளார் கொண்டாடப் போய் நித்ய விபூதியிலே புக்கு நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்) 10
இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப் புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல் கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலி மாலை வலம் கொள் தொண்டர்க்கு இடமாவது பாடல் வைகுந்தமே –9-3-10
பதவுரை Show / Hide
இலங்கு முத்தும், Ilangu Muthum - விளங்குகின்ற முத்துக்களையும்
பவளம் கொழுந்தும், Pavalam Kozhundum - பவளத்துளிர்களையும்
எழில் தாமரை, Ezhil Thamarai - அழகிய தாமரைகளையு முடைத்தாய்
புலங்கள் முற்றும், Pulangal Mutrum - உள்ள இடங்கள் முழுதும்
பொழில் சூழ்ந்து, Pozhil Soozhndu - சோலைகளால் சூழப்பட்டதாய்
அழகு ஆய, Azhagu Aaya - அழகியதான
புல்லாணி மேல், Pullaani Mael - திருப்புல்லாணிவிஷமாக,
கலங்கல் இல்வா புகழான், Kalangal Ilvaa Pugazhaan - கலக்கமற்ற கீர்த்தியையுடைய வரான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச் செய்த
மாலை, Maala - சொல்மாலையாகிய இத்திரு மொழியை
வலங்கொள் தொண்டர்க்கு, Valangol Thondarkku - அதிகரிக்கின்ற பாகவதர்களுக்கு
இடம் ஆவது, Idam Aavadhu - இருப்பிடமாவது (எவ்விடமென்றால்)
பாடு இல்லைகுந்தம், Paadu Illaikundham - ஒரு துன்பமுமில்லாத ஸ்ரீவைகுண்டமே.
1778பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரிந்த நிலத்தில் இருக்க ஒண்ணாது ஒழிவது போகத் தொடங்கின தேசத்திலே போய்ப் புக ஒண்ணாது ஒழிவது நம் தசை இருந்த படி -என் -என்கிறாள்) 1
காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும் ஏவாயின் ஊடு இயங்கும் எக்கில் கொடிதாலோ பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன் பாவாய் இது நமக்கோர் பான்மையே யாகாதே –9-4-1
பதவுரை Show / Hide
கா ஆர்மடல், Kaa Aarmadal - சோலையெங்கும் நிறைந்த மடலையுடைய
பெண்ணை, Pennai - பனைமரத்திலுள்ள
அன்றில், Anril - அன்றிற்பறவையினுடைய
அரி குரலும், Ari Kuralum - தழுதழுத்த த்வநியும்
எவாயினுடு இயங்கும் எஃகின், Evayinudu Iyankum Eghin - அம்புபட்ட புண்வாயில் வ்யா பரிக்கின்ற வேற்படையிற் காட்டிலும்
கொடிது, Kodithu - கொடியதாயிருக்கின்றது;
ஆல் ஓ, Aal O - ஐயோ!;
1779பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நோவு படுகை நமக்கே ஸ்வ பாவமாய் விட்டது என்று ஒரு வார்த்தை சொல்லி பின்பு பேசாதே இருக்கும் பிரகிருதி அன்றே – தான் இருக்கிற இடத்தே வர்த்திக்கிற சில பஷிகளை தூது விடுகிறாளாயிற்று சுலபன் அல்லாதவனை ஆசைப் பட்டு உடம்பு வெளுத்து இருக்கிறேனோ அது தான் பரத்வம் என்னும் படி இருக்கிற இடத்தே என் தசையை அறிவுயுங்கள் -என்கிறாள்) 2
முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த மன்னன் சரிதைக்கே மாலகிப் பொன் பயந்தேன் பொன்னங்கழிக் கானல் புள்ளினங்காள் புல்லாணி அன்னமாய் நூல் பயந்தார்க்கு ஆங்கு இதனைச் செப்புமினே –9-4-2
பதவுரை Show / Hide
பொன்னங் கழி கானல், Ponnang Kazhi Kaanal - பொன்னங்கழி யென்கிற கடற் கரைநிலங்களிலுள்ள
புள் இனங்கள், Pul Inangal - பறவையினங்களே!,
முன்னம், Munnam - முன்பொருகால்
குறள் உரு ஆய், Kural Uru Aayi - வாமநரூபியாகி (மாவலிபக்கல்)
மூ அடி மண்கொண்டு, Moo Adi Mankondru - மூவடிநிலத்தை இரந்து பெற்று
அளந்த, Alandha - (மூவுலகையும்) அளந்து கொண்ட
மன்னன், Mannan - தேவாதிதேவனுடைய செயலுக்கே
மால் ஆகி, Maal Aagi - நான் வியாமோஹ மடைந்த வளாகி
பொன் பயந்தேன், Pon Payandhen - நிறவேறுபாடு அடைந்தவளானேன்;
இதனை, Idhanai - எனது இந்த நிலைமையை
புல்லாணி ஆங்கு, Pullaani Aangu - திருப்புல்லாணியென்கிற அவ்விடத்திலே சென்று,
அன்னம் ஆய் நூல் பயந்தாற்கு, Annam Aayi Nool Payandhaarku - ஹம்ஸரூபியாய் வேதசாஸ்த்ரங்களை உபகரித்தபெருமானுக்கு
செப்புமின், Seppumin - சொல்லுங்கள்.
1780பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழே என்னுடைய உடம்பில் நோவை அறிவியுங்கோள் என்றாள் இங்கு என்னுடைய சிந்தா வ்யதையை அறிவியுங்கோள் -என்கிறாள்) 3
வவ்வித் துழாயதன் மேல் சென்ற தனி நெஞ்சம் செவ்வியறியாது நிற்கும் கொல் நித்திலங்கள் பவ்வத்திரை யுலவு புல்லாணி கை தொழுதேன் தெய்வச் சிலையார்க்கு என் சிந்தை நோய் செப்புமினே –9-4-3
பதவுரை Show / Hide
துழாய்அதன் மேல் வவ்லி, Thuzhai Adhan Mel Vavli - (தலைவனது) திருத்துழாய் மாலையைப் பற்றிக்கொண்டு
சென்ற, Sendra - புறப்பட்டுப் போன,
தனி நெஞ்சம், Thani Nenjam - (எனது) தனிப்பட்டமனமானது
செவ்லி அறியாது நிற்கும் கொல், Sevli Ariyaadhu Nirkkum Kol - முறையறியாமல் (அவ்விடத்தே) தாமதித்திருக்குமோ?
பவ்வம் திரை, Pavvam Thirai - கடலலைகளில்
நித்திலங்கள் உலவு, Niththilangal Ulavu - முத்துக்கள் உலாவப்பெற்ற
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை
கைதொழுதேன், Kaithozhuthen - கையெடுத்துத் தொழுதவளான
என், En - என்னுடைய
சிந்தை நோய், Sindhai Noi - மநோவியாதியை
தெய்வம் சிலையாற்கு, Deivam Silaiyarku - திவ்யமான வில்லையுடைய ரானபெருமாளுக்கு
செப்புமின், Seppumin - (பறவைகளே!) சொல்லுங்கள்.
1781பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு பாலனுக்கு தமப்பன் பகையாக உதவிக் கார்யம் செய்தவன் அபலைக்குத் தன்னைப் பெறாமையாலே வந்த வ்யசனத்துக்கு வாசி வைத்து உதவின படி காண் –என் உடம்பிலே கண்ண நீரையும் உண்டாம் படி பண்ணினான்) 4
பரிய விரணியதாக மணி யுகிரால் அரியுருவாய்க் கீண்டான் அருள் தந்தவா நமக்குப் பொரு திரைகள் போந்துலவு புல்லாணி கை தொழுதேன் அரி மலர்க் கண்ணீர் ததும்ப வந்துகிலும் நில்லாவே –9-4-4
பதவுரை Show / Hide
பரிய, Pariya - பருத்த
இரணியானது, Iraniyanathu - இரணியாசுரனுடைய
ஆகம், Aagam - மார்பை
அரி உரு ஆய், Ari Uru Aay - நரஸிம்ஹ ரூபியாய்
அணி உகிரால், Ani Ukiraal - அழகிய நகங்களாலே
கீண்டான், Keendaan - கிழித்தொழித்த பெருமான் நம்விஷயத்திலே
அருள் தந்த ஆ, Arul Thanda Aa - கிருபைபண்ணின விதம் என்னே!;
பொரு திரைகள், Poru Thiraigal - ஒன்றின்மேலொன்றாக ஏறித் துவருகிற அலைகள்
போந்து உலவு, Pondhu Ulavu - கிட்டவந்து உலாவப் பெற்ற
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை
கைதொழுதேன், Kaithozhuthen - தொழுதவளான என்னுடைய
அரி மலர்கண், Ari Malarkann - வண்டுபடிந்த பூப்போன்ற கண்களின்று
நீர்ததும்ப, Neerthadum - நீர்தளும்ப
அம் துகிலும், Am Thugilum - அழகிய வஸ்த்ரமும்
நில்லா, Nilla - அரையில் தங்குகின்றதில்லை.
1782பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவளுடைய பந்துக்கள் அடைய திரண்டு நாங்கள் சொன்ன வார்த்தை கேளாதே அவன் வார்த்தை கேட்டாய் இறே- நாங்கள் சொன்னதுவே மெய்யாய்-அவன் சொன்ன வார்த்தை பொய்யான படி கண்டாயே – இனி நாங்கள் சொன்னத்தை கேட்க வல்லையே என்ன அப்படியே செய்கிறோம் -அவன் பின் போன நெஞ்சை மீட்டால் -என்கிறாள்) 5
வில்லாலிலங்கை மலங்கச் சரம் துரந்த வல்லாளன் பின் போன நெஞ்சம் வருமளவும் எல்லாரு மென் றன்னை யேசிலும் பேசிடினும் புல்லாணி யெம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே –9-4-5
பதவுரை Show / Hide
இலங்கை, Ilankai - லங்காபுரியானது
மலங்க, Malanga - நலங்கியழியும்படியாக
வில்லால், Villal - சார்ங்கத்தாலே
சரம், Saram - அம்புகளை
துரந்த, Durandha - பொழிந்த
வல்லாளன் பின், Vallalan Pin - மஹாவீரரான பெருமாள் பின்னே
போன, Pona - சென்ற
நெஞ்சம், Nenjam - மனமானது
வரும் அளவும், Varum Alavum - மீண்டுவருகிறவரையில்,
எல்லாரும், Ellarum - தோழிமார்தாய்மார் முதலிய அனைவரும்
என் தன்னை, En Thannai - என்னை
ஏசிலும், Esilum - பழித்தாலும்
பேசிடினும், Pesidinum - (கண்டித்துச்) சொன்னாலும் (ஒன்றுக்கும் மீளாதபடி)
புல்லாணி எம்பெருமான், Pullani Emperuman - திருப்புல்லாணி யெம்பெருமானுடைய
பொய், Poi - பொய்யுரைகளை
கேட்டு இருந்தேன், Kettu Irundhen - நம்பித்தரித்திருக்கின்றேன்.
1783பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு ஆஸ்வாசத்தை பண்ணக் கடவனானவன் போய்க் கொடு நின்றான்-நலிவார் பெருத்திரா நின்றது அனுபவிக்கலான நிலத்திலே போய்ப் புகப் பெற்றிலோம்-இங்குள்ளவையும் நம்மை விட்டுப் போகா நின்றது -என்கிறாள்) 6
சுழன்று இலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய் மறைந்தான் அழன்று கொடிதாகி யஞ்சுடரில் தான் அடுமால் செழுந்தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கை தொழுதேன் இழந்து இருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே –9-4-6
பதவுரை Show / Hide
சுழன்று இலங்கு வெம் கதிரோன், Suzhandru Ilangu Vem Kathiron - (மேருமலையைச்) சுற்றி வந்துகொண்டு பிரகாசிக்கின்ற ஸூரியன்
தேரோடும் போய் மறைந்தான், Therodum Poi Marainthaan - தனது தேரோடே சென்று அஸ்தமித்தான்;
அம்சுடரோன் தான், Amsudharon Thaan - அழகிய கிரணங்களையுடைய சந்திரனோ வென்றால்
அழன்று கொடிது ஆகி, Azhandru Kodithu Aagi - மிகவும் தீக்ஷ்ணனாய்க் கொண்டு
அடும், Adum - தஹிக்கின்றான்,
ஆல், Aal - அந்தோ!
செழு, Sezhu - செழுமைதங்கிய
தடம், Thadam - தடங்களாலும்
பூ சோலை, Poo Cholai - பூஞ்சோலைகளாலும்
சூழ், Sool - சூழப்பட்ட
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை
கைதொழுதேன், Kaithozhuthen - கைதொழுத யான்
என்தன் எழில்நிற மும், Enthan Ezhilnira Mum - எனது அழகிய நிறத்தையும்
சங்கும், Sangum - வளைகளையும்
இழந்திருந்தேன், Izhandhirundhen - இழந்து விட்டேன்
1784பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சௌபரி ஐம்பது வடிவு கொண்டு புஜித்தால் போலே ரத்னங்களால் பண்ணப் பட்ட மாடங்கள் தோறும் தானும் அவனுமாய் அனுபவிக்கக் காணும் கோலிற்று – அது எல்லாம் செய்து சமைந்தேன் – அப்ராப்யத்தை ஆசைப் படும்படியான பாபத்தை பண்ணின என் மேலே – வேலையும் வெந்தழலே வீசுமே —இந்த த்வனிக்கு சேஷித்தது உண்டாகா கொண்டு பிரமியா நின்று இவள் தன் விரஹ அக்னி தன் மேல் படாத படி கடக்க நின்று வீசா நின்றதாயிற்று) 7
கனை ஆர் இடி குரலின் கார் மணியின் நா வாடல் தினை யேனும் நில்லாது தீயில் கொடிதாலோ புனையார் மணி மாடப் புல்லாணி கை தொழுதேன் வினையேன் மேல் வேலையும் வெந்தழலே வீசுமே –9-4-7
பதவுரை Show / Hide
கனை ஆர்இடி குரலின், Kanai Aaridi Kuralin - இடியிடித்தாற்போன்று மிக்க த்வநியோடு கூடின
கார், Kaar - கறுத்த
மணியின், Maniyin - (மாட்டின் கழுத்திலுள்ள) மணியின்
நா ஆடல், Naa Aadal - நாக்கு அசைந்து ஒலிப்ப தானது
தினையேனும் நில்லாது, Dhinaiyenum Nilladhu - தினையளவும் (கொஞ்சமும்) ஓயாமல்
தீயின், Theeyin - நெருப்பைக் காட்டிலும்
கொடிது, Kodithu - கொடுமைபுரியாநின்றது;
புனை ஆர்மணி மாடம், Punar Aarmani Maadam - அழகுமிக்க மணிமாடங்களை யுடைய
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை
கைதொழுதேன், Kaithozhuthen - தொழுவதற்கு ஆசைப்பட்டவளான
வினையேன் மேல், Vinaikyen Mel - பாவியேன் மேல்
வேலையும், Velaiyum - கடல்தானும்
வெம் தழலே, Vem Thazhale - வெவ்விய நெருப்பையே
வீசும், Veeseum - வீசுகின்றது.
1785பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரபல விரோதிகளை ஆற்றி உகந்தாருக்கு தன்னைக் கொடுக்க கடவனாக ஆசைப் பட்ட நமக்கு நம் விரோதிகளை மாற்றி நமக்கு தன்னை தந்தபடி காண்) 8
தூம்புடைக் கை வேழம் வெருவ மருப்பொசித்த பாம்பின் அணையான் அருள் தந்தவா நமக்குப் பூஞ்செருந்திப் பொன் சொரியும் புல்லாணிக் கை தொழுதேன் தேம்பல் இளம் பிறையும் என்தனக்கு ஓர் வெந்தழலே –9-4-8
பதவுரை Show / Hide
தூம்பு உடை கை வேழம், Thoombu Udai Kai Vezham - துளையையுடையத்தான துதிக் கையையுடைய (குவலயாபீடமென்னும்) யானையானது
வெருவ, Veruva - அச்சமுறும்படி
மருப்பு ஒசித்த, Maruppu Osiththa - (அதன்) கொம்புகளை முறித்த
பாம்பின் அணையான், Paampin Anaiyaan - சேஷசாயியான பெருமான்
கைதொழுதேன், Kaithozhuthen - தொழுவதற்கு ஆசைப்பட்டவளான
என் தனக்கு, En Thanakku - எனக்கு
நமக்கு, Namakku - நம் திறத்தில்
அருள் தந்த ஆ, Arul Thanda Aa - அருள் செய்தவிதம் என்னே!;
பூ, Poo - அழகிய
செருந்தி, Serunthi - சுரபுன்னைமரங்கள்
பொன் சொரியும், Pon Soriyum - பொன்போன்ற மலர்களை உதிர்க்குமிடமான
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை
தேம்பல் இளபிறையும், Thembal Ilapiraiyum - மிக இளைய சந்திரனும்
ஓர்வெம் தழல், Orvem Thazhal - வெவ்விய நெருப்புப்போலுள்ளான
1786பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜகதா காரனாய் இருக்கிறவன் –அபேஷியாது இருக்க இவற்றை உண்டாக்கினவன் அபேஷை உடைய நம் கார்யம் செய்த படி காண் – சாமான்யத்திலே பண்ணக் கடவது விசேஷணத்தில் அன்றிக்கே இருப்பதே நாட்டுக்கு இட்ட அக்கம் -தான்யாதிகள் -அந்தப் புரத்துக்கு அரிதாவதே) 9
வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்குப் போதலரும் புன்னை சூழ் புல்லாணி கை தொழுதேன் ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே –9-4-9
பதவுரை Show / Hide
வேதமும், Vedhamum - வேதஸ்வரூபியாகவும்
வேள்வியும், Velviyum - யஜ்ஞஸ்வரூபியாகவும்
விண்ணும், Vinnum - மேலுலகங்களாகவும்
இரு சுடரும், Iru Sudarum - சந்திரஸூர்யர்களாகவும்
ஆதியும், Aadhiyum - ஜகத்காரண பூதகனாகவும்
ஆனான், Aanaan - ஆன பெருமான்
நமக்கு, Namakku - நம் திறத்திலே
அருள் தந்த ஆ, Arul Thanda Aa - அருள் செய்தவிதம் என்னே!;
போது அலரும், Podhu Alarum - பூக்கள் மலரப்பெற்ற
புன்னை சூழ், Punnai Soozh - புன்னைமரங்களால் சூழப்பட்ட
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை
கைதொழுதேன், Kaithozhuthen - தொழவிரும்பியவளான
நானும், Naanum - நானும்
ஓதமும், Othathum - கடலும்
உறங்காது இருந்தேன், Urangathu Irundhen - கண்ணுறக்கமற் றிருக்கிறோம்.
1787பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த ஸ்ரீ திரு மொழியை அப்யசிக்க வல்லார் –இங்கும் குறைவற அனுபவித்து அங்கும் குறைவற அனுபவிக்கப் பெறுவார்கள்) 10
பொன்னலரும் புன்னை சூழ் புல்லாணி யம்மானை மின்னிடையார் வேட்கை நோய் கூர விருந்ததனைக் கன்னவிலும் திண தோள் கலியன் ஒலி வல்லார் மன்னவராய் மண்ணாண்டு வானாளும் உன்னுவரே –9-4-10
பதவுரை Show / Hide
பொன் அலரும் புன்னை சூழ், Pon Alarum Punnai Soozh - பொன் போன்ற பூக்கள் மலரப்பெற்ற புன்னை மரங்களால் சூழப்பட்ட
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியி லெழுந்தருளியிருக்கிற
அம்மானை, Ammaanai - எம்பெருமான் விஷயத்திலே
மின் இடையார், Min Idaiyaar - மின்னல்போல் நுண்ணிய இடையை யுடையரான பெண் பிறந்தவர்கள்
வேட்கை நோய் கூர, Vetkai Noi Koora - ஆசை நோய் மிகும்படியாக
இருந்தனை, Irundhanai - இருக்கும் நிலைமையைப் பற்றி
கல் நவிலும் திண்தோள் கலியன், Kal Navilum Thinthol Kalyan - மலையென்று போற்றத் தகுந்த திண்ணிய திருத்தோள்களை யுடையரான ஆழ்வார்
ஒலி, Oli - அருளிச் செய்த இப்பாசுரங்களை
வல்லார், Vallar - கற்று வல்லவர்கள்
மன்னவர்  ஆய், Mannavar Aay - அரசர்களாகி
மண் ஆண்டு, Man Aandu - பூமியை ஆட்சிபுரிந்து (பிறகு)
வான் நாடும், Vaan Naadum - பரமபத நாட்டிற்கும்
உன்னுவர், Unnuvar - விரைந்தெழுவர்
1788பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு விஷயத்தை ஆசைப் பட்டு பெறாதே இருக்கிற நமக்கு நாட்டுப் பகையாக விட்டதே) 1
தவள இளம்பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித் துவள வென் நெஞ்சகம் சோர வீரும் சூழ் பனி நாள் துயிலாது இருப்பன் இவளுமோர் பெண் கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன குவளை மல் நிற வண்ணனர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் –9-5-1
பதவுரை Show / Hide
தவளம் இளபிறை, Thavalam Ilapirai - வெண்ணிறமுள்ள பாலசந்திரனும்
துள்ளும் முந்நீர், Thullum Munnir - அலையெறிகின்ற கடலும்
தண் மலர்தென்றலோடு, Than Malarthenralodu - குளிர்ந்து பூக்களில்படிந்து வீசுகின்ற தென்றற் காற்றும்
அன்றில், Anril - அன்றிற் பறவையும்
ஒன்றி, Onri - ஒன்று சேர்ந்து
என் நெஞ்சகம், En Nenjachagam - என்மனமானது
துவள, Thuvazhal - துர்ப்பலமாம்படியாகவும்
சோர, Soora - சிதிலம்படியாகவும்
ஈரும், Eerum - நோவுபடுத்துகின்றன;
சூழ் பனி நாள், Sool Pani Naal - எங்கும் பனிபரவியிருக்கு மிக் காலத்தில்
துயிலாது இருப்பேன், Thuyilaadhu Iruppein - கண்ணுறங்காதேகிடக்கிறேன்;
இவளும் ஓர் பெண் கொடி என்று இரங்கார், Ivalum Oru Pen Kodi Endru Irangaar - இவள் ஒரு இளம்பெண் ணன்றோ? என்று மனமிரங்காதவராய்
என்கலம் ஐந்தும், Enkalam Aindhum - எனது பஞ்சேந்திரிய வுணர்ச்சியையும்
முன்கொண்டு, Munkondu - முன்பு கொள்ளை கொண்டு பிரிந்து போன
குவளை மலர்நிறம் வண்ணர், Kuvazhai Malarniram Vannaar - கருநெய்தற்பூவின் நிறம் போன்ற நிறமுடையரான பெருமாள்
மண்ணு, Mannu - நித்யவாஸம்பண்ணுகிற
குறுங் குடிக்கே, Kurung Kudikke - திருக்குறுங்குடியிலேயே
என்னை உய்த்திடு மின், Ennai Uyththidu Min - என்னைக் கொண்டு சேர்த்திடுங்கள்
1789பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம்முடைய ப்ராவண்யத்தை குண ஹானியாக உப பாதிக்கை அன்றிக்கே – ந கச்சின் ந அபராத்யதி -என்று பொறுப்பித்து அவன் திருவடிகளோடு சேர்க்குமவள் இருந்த இடத்தே கொடுபோய் பொகடுங்கள்) 2
தாதவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இளவாடை இன்னே ஊதை திரி தந்து உழறி உண்ண ஓர் இரவும் உறங்கேன் உறங்கும் பேதையர் பேதமையால் இருந்து பேசிலும் பேசுக பெய் வளையார் கோதை நறு மலர் மங்கை மார்பன் குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் –9-5-2
பதவுரை Show / Hide
தாது அவிழ் மல்லிகை, Thadu Avizh Malligai - தாதுகள் விரிகிற மல்லிகைகளிலே (- (தோழிமார்களே!) (குறுங்குடிக்கே *** மின்.))
புல்கி, Pulki - போய் அணைந்து
தண் மதியின், Than Mathiyin - குளிர்ந்த சந்தியனோடுகூட
இன்னே வந்த, Innae Vantha - இப்படிவந்து வீசுகின்ற
இளவாடை, Ilavaadai - மந்தமாருதமாகிற
ஊதை, Oothai - குளிர்காற்றானது
திரிதந்து, Thirithandu - இங்குமங்கும் உலாவி
உழறி உண்ண, Uzhari Unna - துகைத்துமுடிக்க
ஓர்இரவும், Ooriravum - ஒரு ராத்திரியும்
உறங்கேன், Uranken - உறங்காதிருக்கிறேன்;
பெய் வளையர், Pey Valaiyar - கைவளை கழலாதவர்களாய்
உறங்கும் பேதையர், Urankum Paedaiyar - உறக்கமே போதுபோக்கான விவேகமற்ற பெண்கள்
பேதைமையால், Paedaimaiyaal - தங்கள் அறிவீனத்தினால்
இருந்து, Irundhu - வேலையற்றறிருந்து
பேசிலும் பேச்சு, Pesilum Peichu - (என் விஷயமாக) என்ன பழி சொன்னாலும் சொல்லட்டும்;
கோதை, Kothai - கூந்தலிலே
நறுமலர், Narumalai - மணமிக்க பூக்களை அணிந்துள்ள
மங்கை, Mangai - மணம்மிக்க பூக்களை அணிந்துள்ள
மார்பன், Maarban - திருமார்பிலேயுடைய பெருமானது
1790பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம் இனம் உள்ள ஊரிலே கொடு போய் பொகடப் பாருங்கோள் – தர்ச நீயமான மயில் நெருங்கி வர்த்திக்கிற பர்யந்தத்தை உடைத்தான ஸ்ரீ திருக்குறுங்குடி யிலே கொடு போய் பொகடப் பாருங்கோள்) 3
காலையும் மாலை யொத்துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும் போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கழலே யொக்கும் வாடை சொல்லில் மாலவன் மா மணி வண்ணன் மாயம் மற்றுளவை வந்திடா முன் கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் –9-5-3
பதவுரை Show / Hide
காலையும், Kaalaiyum - காலைப்பொழுதும்
மாலை ஒற்றுண்டு, Maalai Otrundu - மாலைப்பொழுதுபோதலு யிருந்து நலிகின்றது;
கங்குல் நாழிகை, Gangul Naazhikai - இரவின் நாழிகை
ஊழியின், Oozhiyin - கல்பகாலத்திற் காட்டிலும்
நீண்டு, Neendu - பெருகி
உலாவும் போல்வது ஓர்தன்மை புகுந்து நிற்கும், Ulaavum Polvadhu Oorthanmai Pugundhu Nirkum - (யமபடரைப் போலே) ஸஞ்சரிக்கிறாப் போன்றத்தன்மை பெற்றிருக்கின்றது,
வாடை சொல்லில், Vaadai Sollil - வாடையின் தன்மையைப் பற்றிச் சொல்லப் புகுந்தால்
பொங்கு அழலே, Pongu Azhale - எரிகின்ற நெருப்பே போன்றிருக்கும்;
மாலவன், Maalavan - மிகப் பெரியவனாயும்
மா மணிவண்ணன், Maa Manivannan - நீலமணிவண்ணனாயு மிருக்கிற அப்பெருமானுடைய
மாயம், Maayam - (நம்மைக் கொல்வதற்கான மாயச் செய்கைகள்)
மற்றும் உள, Matrum Ula - இன்னமும் பலவுண்டு;
அவை வந்திடா முன், Avai Vandida Mun - அவையும் தலைகாட்டுவதற்கு முன்னமே
கோலம் மயில் பயிலும் புறவின் குறுங்குடிக்கே,, Kolam Mayil Payilum Puravin Kurungkudikke - அழகிய மயில்கள் நெருங்கி வாழ்கிற புறவுகளையுடைய என்னை உய்த்திடுமின்
1791பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அயர்வறும் அமரர்கள் தங்களுக்கு முடி மேலே மணியாக வைத்த சிரோ பூஷணமாக வைக்கப் பட்ட – அவனுடைய பெருமை பேசி-ஒரு மணி யோசை என் உள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன் -என்னுதல்- பேச -என்றதாகில்-ஒருவனுடைய நீர்மை இருக்கும் படியே ஒருவனைப் பிரிந்து ஒருத்தி படும் பாடே -என்று இரண்டு இடத்திலும் உள்ளாறும் நின்று சொல்லும்படியாக -என்றாகிறது) 4
கரு மணி பூண்டு வெண்ணாகணைந்து காரி இமில் ஏறு அணர் தாழ்ந்து உலாவும் ஒரு மணி யோசை என்னுள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன் பெரு மணி வானவருச்சிவைத்த பேரருளாளன் பெருமை பேசி குரு மணி நீர் கொழிக்கும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் –9-5-4
பதவுரை Show / Hide
கருமணி பூண்டு, Karumani Poondhu - கறுத்தமணியைத் தரித்துக் கொண்டு (- (உறங்காது இருப்பேன்) (என்னை உய்த்திடுமின்-.))
வெண் நாகு அணைத்து, Ven Naaku Anaithu - வெளுத்த நாகுகளோடே அணைத்து
கார்இமில், Kaarimill - கறுத்த முகப்பபை யடைத்தான
எறு, Eru - காளைகளினுடைய
அணர், Anar - கழுத்திலே
தாழ்ந்து உலாவும், Thaazhnthu Ulaavum - தொங்குகின்ற
ஒரு மணி, Oru Mani - ஒரு மணியினுடைய
ஓசை, Osai - ஒலியானது
என் உள்ளம், En Ullam - என் நெஞ்சை
தள்ள, Thalla - சோர்வு படுத்த
ஓர் இரவும், Or Iravum - ஒரு ராத்திரியும்
வானவர், Vaanavar - நித்யஸூர்கள்
உச்சி, Uchi - தங்கள் தலைமீது
பெரு மணி, Peru Mani - சிறந்த ரத்னமாக
வைத்த, Vaitha - வைத்துப் போற்றுகிற
பெருமை, Perumai - பெருமைகளை
பேசி, Paesi - பேசிக்கொண்டு
நீர்குரு மணி கொழிக்கும் புறவின் குறுங்குடிக்கே, Neerkuru Mani Kozhikkum Puravin Kurungkudikke - ப்ரவாஹஜலமானது சிறந்த ரத்னங்களைக் கொண்டு தள்ளுகின்ற புறவுகளையுடைய திருக்குறுங்குடியிலேயே
1792பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முன்பு சொன்னவை போல் அன்றிக்கே தனித் தனியே இவை முடித்து விடுமா போலே இரா நின்றது – தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றி -என்னச் செய்தே பின்னையும் ஜீவித்து இருந்தோம் இறே – இவை நம்மை வைப்பன வன்றிக்கே இரா நின்றன) 5
திண் இமில் ஏற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு கொண்டதோர் மாலையும் அந்தி ஈன்ற கோல விளம்பிறையோடு கூடி பண்டை வல்லவிவை நமக்குப் பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும் கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் –9-5-5
பதவுரை Show / Hide
திண் திமில், Thin Thimil - திடமான முசுப்புடைய (- (ஆகையாலே) (குறுங்குடிக்கே, என்னை உய்த்திடுமின்-.))
ஏற்றின், Aetrin - விருஷபத்தினுடைய
மணியும், Maniyum - கழுத்துமணியும்
ஆயன், Aayan - இடையனுடைய
தீம் குழல் ஓசையும், Theem Kuzhal Osaiyum - மதுரமான புல்லாங்குழ லொழியும்
தென்றலோடு கொண்டது ஓர்மாலையும், Thendralodu Kondathu Ormaalaiyum - தென்றற்காற்றோடு ஒருமித்த கோட்பாட்டை யுடையதான மாலைப்பொழுதும் ஆகிய
இவை, Ivai - இவை
அந்தி ஈன்ற, Andhi Eendra - அந்திப்பொழுது தோற்றுவிக்கிற
கோலம் இளபிறை யோடு கூடி, Kolam Ilapirai Yodu Koodi - அழகிய இளம்பிறைச் சந்தி ரனையும் துணைகூட்டிக் கொண்டு
நமக்கு, Namakku - நம் விஷயத்திலே
பண்டைய அல்ல, Pandaiya Alla - முன் இருந்தாற்போலிருக்கின்றனவில்லை;
பாவியேன், Paaviyen - பாவியான என்னுடைய
ஆவியை, Aaviye - உயிரை
வாட்டம் செய்யும், Vattam Seyyum - வாடச் செய்கின்றன;
கொண்டல் மணி நிறம் வண்ணர், Kondal Mani Niram Vannarar - மேகத்தினுடையவும் நீலமணியினுடையவும் நிறம் போன்ற நிறமுடைய பெருமாள் பொருந்திவாழப்பெற்ற
1793பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மறவாமை தேட்டமாம் தேசத்தை விட்டு அவனைக் கண் கண்டு அனுபவிக்கலாம் தேசத்திலே கொடு போய் பொகடுங்கோள் – கொடிக்கு தரை கிடக்க வேண்டாதே கொள் கொம்பிலே படரலாம் தேசத்திலே) 6
எல்லியும் நன் பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக வேந்திழையார் நல்லரவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி வண்ணரை நாம் மறவோம் கொல்லை வளரிள முல்லை புக்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமினே –9-5-6
பதவுரை Show / Hide
ஏந்து இழையார், Aendhu Izhaiyar - ஆபரணங்களணிந்துள்ள பெண்கள் (- (ஆகையாலே) (குறுங்குடிக்கே, என்னை உய்த்திடுமின்:-))
எல்லியும் நல்பகலும் இருந்தே, Elliyum Nalpagalum Irundhe - இரவும் பகலும் போதுபோக்கற்று இருந்துகொண்டு
ஏசிலும் எசுக, Esilum Esuga - பழிசொன்னாலும் சொல்லட்டும்:
நல்லர், Nallar - (அவர்கள்) பாக்யவதிகளன்றோ?
அவர் திறம் நாம் அறியோம், Avar Thiram Naam Ariyom - அவர்களைப் பற்றி நமக்கு ஆராய்ச்சிவேண்டா;
நமக்கு, Namakku - நமக்கு
நாண் மடம் அச்சம் இங்கு இல்லை, Naan Madham Acham Ingu Illai - பெண்மைக்குணங்கள் அற்றுப்போயின;
வல்லன சொல்லி, Vallana Solli - தங்களாலியன்றவற்றை (வாய் கூசாமல்) சொல்லி
மகிழ்வரேலும், Magizhvarelum - சிரித்தார்களேயாகிலும்
நாம், Naam - நாம்
மா மணி வண்ணரை, Maa Mani Vannarai - நீலமணிவண்ணரான பெருமாளை
மறவோம், Maravom - மறக்கமாட்டோம்;
கொல்லை, Kollai - தோட்டங்களிலே
வளர், Valar - வளர்கின்ற
இள முல்லை, Ila Mullai - இளமுல்லைக் கொடிகள்
புல்கு, Pulgu - படரப்பெற்ற
1794பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரியேன் என்கிற பாசுரத்தாலே பிரிவை உணர்த்தினான் ஆயிற்று – வ்யதிரேகத்தால் அறிந்து கொள்கிறாள் என்று – இவர் பிரியேன் என்கிற பாசுரத்தாலே யாகிலும் சொன்னார் அதுவும் வாய் கொண்டு சொல்ல மாட்டாமை -ஆது கொலோ -என்கிறாள் ஆயிற்று -இவள்) 7
செங்கண் நெடிய கரிய மேனித் தேவர் ஒருவர் இங்கே புகுந்து என அங்கம் மெலிய வளை கழல ஆது கொலோ வென்று சொன்ன பின்னை ஐங்கணை வில்லி தன்னாண்மை என்னோடு ஆடுமதனை யறிய மாட்டேன் கொங்கலர் தண் பனை சூழ் புறவில் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் –9-5-7
பதவுரை Show / Hide
நெடிய செம்கண், Nedhiya Semkan - நீண்டு சிவந்த திருக்கண்களையும் (- (குறுங்குடிக்கே, என்னை உய்த்திடுமின்))
கரிய மேனி, Kariya Meeni - கறுத்த திருமேனியையுமுடையரான
தேவர் ஒருவர், Thevar Oruthar - ஒரு பெருமாள்
இங்கே புகுந்து, Inge Pugundhu - இங்கு எழுந்தருளி
என் அங்கம் மெலிய, En Angam Meliya - எனது உடல் இளைக்கும்படியாகவும்
வளை கழல, Valai Kazhala - வளைகள் கழன்றொழியும்படி யாகவும்
ஆது கொலோ என்று சொன்ன பின்னை, Aathu Koloo Endru Sonna Pinnai - அப்படிப்பட்ட பிரிவை உணர்த்தினது முதலாக
ஐங் கணை வில்லி, Aing Kanai Villi - ஐந்து அம்புகளையுடைய வில்லை ஆள்பவனான மன்மதன்
என்னோடு ஆடும், Ennodu Aaduum - என்விஷயத்திலே காட்டுகின்ற
தன் ஆண்மை அதனை, Than Aanmai Adhanai - தன்னுடைய பௌருஷத்தை
அறிய மாட்டேன், Ariya Maatten - (எடுத்துச்செல்ல) அறிகின்றிலேன் ;
கொங்கு அலர், Kongu Alar - தேன் ஒழுகுகின்ற
தண், Than - குளிர்ந்த
பணை, Panai - மரக்கொம்புகளால்
சூழ், Sool - சூழப்பட்ட
புறவின், Puravin - புறவுகளை யுடைய
1795பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பந்துக்களை நோக்கிச் சொல்லுகிற வார்த்தை இறே – க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்கலாம் படி அன்று -இங்கு ஓடுகிற தசை இனி அங்கே போய்ப் புக்காலும் அவன் தன்னாலே பேறாம் படி எனக்கு பிரயோஜனம் உள்ளது – அதில் அவன் கருத்து அறிந்த படியையும் அறிந்து கார்யம் செய்யப் பாருங்கோள் – உனக்கு க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்க ஒண்ணாமைக்கு இப்போது வந்தது என -என்ன) 8
கேவலம் அன்று கடலின் ஓசை கேண்மின்கள் ஆயன் கை யாம்பல் வந்து என ஆவி யளவும் அணைந்து நிற்கும் அன்றியும் ஐந்து கணை தெரிந்து இட்டு ஏவலம் காட்டி யிவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன் கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் –9-5-8
பதவுரை Show / Hide
கடலின் ஓசை, Kadalin Osai - ஸமுத்ரகோஷமானது (- (குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்))
கேவலம் அன்று, Kevalam Andru - ஸாமாந்யமன்று;
கேண்மின்கள், Keenmingal - கேளுங்கள் ;
ஆயன், Aayan - கோபாலனுடைய
கை, Kai - கையிலுள்ள
ஆம்பல் வந்து, Aambal Vandu - குழலோசை வந்து
என் ஆவி அளவும் அணைந்து நிற்கும், En Aavi Alavum Anaindhu Nirkum - என்னுடைய பிராணன் வரையில் கிட்டி நிற்கின்றது;
அன்றியும், Andriyum - அதற்கு மேலும்
இவன் ஒருவன், Ivan Oruvan - (மன்மதனென்கிற) இப்பாவியொருவன்
ஐந்து கணை, Ainthu Kanai - தனது) பஞ்சபாணங்களை
தெரிந்திட்டு, Therindittu - நன்றாக ஆராய்ந்து
ஏவலம் காட்டி, Evalam Kaatti - பிரயோகிக்க வல்லஸாமர்த்தியத்தைக் காண்பித்து
இப்படியே புகுந்து, Ippadiye Pugundhu - என்மேல் நோக்கம் வைத்து
எய்திடா முன், Eythida Mun - பிரயோகிப்பதற்கு முன்னமே
கோவலர்கூத்தன், Kovalarkootthan - இடைச்சாதிக்கு ஏற்ற கூத்துகளில் வல்லவனான பெருமானுடைய
குறிப்பு, Kurippu - திருவுள்ளக்கருத்தை
அறிந்து, Arindhu - தெரிந்துகொண்டு
1796பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கோவலர் கூத்தன் -என்றபடி இறே இனவாயர் தலைவன் ஆனவன் விரும்பி வர்த்திக்கிற தேசத்தில் கொடு போய் பொகடப் பாருங்கோள் – தன்னுடைய மநோ ஹாரி சேஷ்டிதங்களாலே நித்ய சூரிகளை தோற்ப்பித்துக் கொண்டு இருக்கிறவன் விரும்பி வர்த்திக்கிற ஸ்ரீ திருக் குறுங்குடியிலே) 9
சோத்தென நின்று தொழ விரங்கான் தொன்னலம் கொண்டு எனக்கு இன்று தாறும் போர்ப்பதோர் பொற் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை மூத்திடுகின்றன மற்றவன் தன் மொய்யகலம் அணையாது வாளா கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் –9-5-9
பதவுரை Show / Hide
என் கொங்கை, En Kongai - எனது முலைகள் (- (ஆகையாலே) (குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்-.))
அவன்தன், Avanthan - அவனுடைய
மொய் அகலம், Moy Akalam - அழகிய திருமார்பை
அணையாது, Anaiyadhu - அணையப்பெறாமல்
வாளா, Vaalai - வீணாக
மூர்த்திடுகின்றன, Moorthidikkinrana - பருக்கின்றன;
கூத்தன், Kooththan - மநோஹரமான சேஷ்டிதங்களை யுடையவனும்
இமையவர்கோன், Imaiyavarkon - நித்யஸூரிகட்குத் தலைவனுமான பெருமான்
விரும்பும், Virumbum - விரும்பிவர்த்திக்கு மிடமான
1797பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் வர்த்திக்கிற குறுங்குடி யிலே என்னைக் கொடு போய் பொகடுங்கோள் – இதுக்கு வேறு ஒரு பலம் சொல்லா விட்டது -உகந்து அருளின தேச பிராப்தி தானே பலமாய் இருக்கையாலே) 10
செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப் பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக் கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக் கொற்றவன் முற்றுலக ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் –9-5-10
பதவுரை Show / Hide
தென் இலங்கை, Then Ilangai - தென் திசையிலுள்ள இலங்கா புரியானது
மலங்க, Malanga - கலங்கும்படியாக
செற்றவன், Settravan - த்வம்ஸம்பண்ணினவனும்
தேவபிரான், Devapiraan - தேவர்களுக்குப் பிரபுவானவனும்
திரு மாமகனை டிபற்றும் என் நெஞ்சம் கோயில் கொண்ட, Thiru Mamakanai Tipratum En Nenjam Koyil Konda - பெரிய பிராட்டியாரைப் பெற்றுவைத்தும் என் மனதைக் கோயிலாகக்கொண்டுள்ளவனுமான
பேரருளாளன், Perarulalan - பேரருளாளப்பெருமானுடைய
பெருமை, Perumai - பெருமையை
பேச கற்றவன், Pesakattravan - அருளிச் செய்ய வல்லவரும்
காமரு சீர், Kaamaru Seer - விரும்பத்தக்க குணங்களை யுடையவருமான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வாருடைய
கண்ணகத்தும், Kannagathum - கண்களினுள்ளும்
மனத்தும், Manathum - நெஞ்சினுள்ளும்
அகலா, Akala - விட்டுநீங்காத
கொற்றவன், Kotravan - ஸர்வேச்வரனாய்
முற்றுலகு ஆளி, Mutrulagu Aali - ஸகலலோகநாதனான பெருமான்
நின்ற, Nindra - நித்யவாஸம்பண்ணப்பெற்ற குறுங்குடிக்கே, என்னை உய்த்திடுமின்
1798பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஈஸ்வர அபிமாநிகளாய் இருப்பர்க்கும் முகம் கொடுத்துக் கொண்டு இருக்குமவன் அனுகூலராய்ச் சென்று கிட்டுகிற நமக்கு முகம் தரச் சொல்ல வேணுமோ – ரஷ்ய ரஷக பாவம் மாறாதே போரும் தேசமாயிற்று-சீலாவானாய் இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் – அவ் ஊரில் மரங்களுக்கும் அவன் படி உண்டு என்கிறார்) 1
அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும் தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே –9-6-1
பதவுரை Show / Hide
கொக்கின் பிள்ளை, Kokkin Pillai - கொக்கின் குட்டியானது
தக்கமரத்தின், Thakkamarathin - (தனக்கு ஏறத்) தகுந்ததான தாழ்ந்த கிளையில் ஏறி
தாழ் சினை ஏறி, Thazh Sinai Eri - தாழ்ந்த கிளையில் ஏறி
தாய் வாயில், Thai Vayil - தாய்கொக்கின் வாயிலிருக்கிற
வெள்ளிறவு, Velliravu - ‘வெள்ளிறா’ என்னும் சாதிமீனை
உண்ணும், Unnum - உண்ணப்பெற்ற
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியென்னும் தலமானது,
அக்கும், Akum - எலும்பையும்
புலியின அதளும், Puliyin Adhalum - புலியின் தோலையும்
உடையார் அவர் ஒருவர், Udaiyar Avar Oruthar - உடையவரான சிவபிரானாகிற ஒருவர்
பக்கம் நிற்க, Pakkam Nirka - அருகேயிருக்க (இடங்கொடுத்து)
நின்ற, Nindra - எழுந்தருளியிருக்கின்ற
பண்பர், Panbar - சீலகுணமுடையரான பெருமாளுடைய
ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாம்.
1799பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற அழகு எளியர்க்கு கிட்ட ஒண்ணாமை அன்றிக்கே ப்ரஹ்மாதிகளுக்கும் அகப்பட இக்கரையிலே நின்று கூப்பிடும்படி ஸ்ரீ சர்வாதிகனாய் இருக்கிறவன் எல்லாருக்கும் ஒக்க அனுபவிக்கலாம் படி வர்த்திக்கிற தேசம் ஸ்ரீ திருக் குறுங்குடி என்கிறார் – கீழே நின்ற நம்பி அனுபவம்-இதில் கிடந்த நம்பி அனுபவம்) 2
துங்க வரவத் திரை வந்துலவத் தொடு கடலுள் பொங்கா ரரவில் துயிலும் புநிதரூர் போலும் செங்கால அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும் கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே –9-6-2
பதவுரை Show / Hide
செம் கால், Sem Kaal - சிவந்தகால்களையுடைய (- (ஊர் போலும்))
அன்னம், Annam - அன்னப்பறவை
திகழ் தண் பணையில், Thigal Than Panaiyil - அழகிய குளிர்ந்த நீர் நிலைகளிலே
கொங்கு ஆர் கமலத்து அலரில், Kongu Aar Kamalathu Alaril - மணம்மிக்க தாமரைப்பூவில்
பெடையோடும், Pedaiyodum - பேடையுடனே
சேரும், Serum - சேர்ந்துவாழுமிடமான
குறுங்குடி, Kurungkudi - குறுங்குடியானது
துங்கம், Thungam - ஓங்கினவைகளாய்
ஆர் அரவம், Aar Aravam - பெரிய ஆரவாரத்தை யுடையவைகளான
திரை, Thirai - அலைகள்
வந்து உலவ, Vandu Ulava - வந்து வீச
தொடு கடலுள், Thodu Kadalul - ஆழ்ந்த திருப்பாற்கடலிலே
பொங்கு ஆர் அரவில், Pongu Aar Aravil - பெரிய திருமேனி வாய்ந்த திருவனந்தாழ்வான் மீது
துயிலும், Thuyilum - திருக்கண்வளர்ந்தருளா நின்ற
புனிதர், Punithar - பரமபவித்திரரான பெருமாளுடைய
1800பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மஹாஸ் வராஹஸ் ஸ்புட பத்ம லோசன -என்கிறபடியே காணவே தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிர்ந்து முகில் போலே இருக்கிற வடிவை உடையனாய் இருகிறவன் – அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதித்து போகாதே நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்) 3
வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள் கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர் ஏழைச் செங்காலின் துணை நாரைக்கு இரை தேடிக் கூழைப் பார்வைக் கார் வயல் மேயும் குறுங்குடியே –9-6-3
பதவுரை Show / Hide
தொண்டீர்காள், Thondeerkaal - பாகஸதர்களே!
வாழ கண்டோம், Vaazha Kandom - உஜ்ஜீவிக்கும் வகையறிந்தோம்
ஏழை செம் கால், Ezhaik Sem Kaal - மிருதுவாய்ச் சிவந்த கால்களையுடைய
இன் துணை நாரைக்கு, In Thunai Naraikku - இனிய துணையாகிய நாரைச்சேவனுக்கு
இரை தேடி, Irai Thedi - உணவு தேடிக்கொண்டு
கூழை பார்வை, Koozhai Paarvai - க்ருத்ரிமமான பார்வையை
கார் வயல் மேயும், Kaar Vayal Meyum - கருவடைந்த வயல்களிலே மேயப்பெற்றதும்
கேழல், Kezhal - வராஹாவதாரம் செய்தருளினவராய்
செம் கண், Sem Kan - செந்தாமரைக் கண்ணராய்
மா முகில் வண்ணர், Maa Mukil Vannaar - காளமேகம் போன்ற நிறத்தையுடையவரான பெருமாள்
மருவும் ஊர், Maruvum Oor - பொருந்திவாழும் திவ்ய தேசமாயிருப்பதுமான
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியை
வந்து காண்மின், Vandhu Kaanmin - வந்து ஸேவியுங்கள்
1801பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தலைகள் பத்தும் சிதறும்படியாக சென்று அடை மதிள் படுத்தி ராவணன் உடைய நெஞ்சில் திண்மையையும் தோளில் மிடுக்கையும் போக்கின ஆண் பிள்ளை வர்த்திக்கிற ஊர் போலே) 4
சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன் உரவும் கரமும் துனித்த வுரவோனூர் போலும் இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம் குரவின் பூவே தான் மண நாறும் குறுங்குடியே –9-6-4
பதவுரை Show / Hide
இரவும் பகலும், Iravum Pagalum - எப்போதும்
தேன், Then - வண்டுகள்
ஈன், Een - இனிமையாக
முரல, Mural - ரீங்காரஞ் செய்யப் பெற்றதும்
மன்று எல்லாம், Manru Ellam - வெளிநிலமுழுதும்
குரவின் பூவேதான், Kuravin Poovethaan - குருவம்பூக்களே
மணம் நாறும், Manam Naarum - பரிமளிக்கப்பெற்றதுமான
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியானது
முன், Mun - முன்பு (ராமாவதாரத்தில்)
அரக்கன், Arakkan - இராவணனென்னும் ராக்ஷஸனது
சிரம் ஐந்தும் ஐந்தும், Sirama Aindhum Aindhum - பத்துத் தலைகளும்
சிந்த, Sindha - சிதறும்படி
சென்று, Sendru - (இலங்கைக்கு) எழுந்தருளி
உரமும் கரமும், Uramum Karumum - (அவனது) மார்பையும் கைகளையும்
துணித்த, Thuniththa - துணித்தொழித்தவனான
உரவோன், Uravon - பெருமிடுக்குடைய பெருமானுடைய
ஊர்போலும், Oorpolum - திவ்யதேசமாகும்.
1802பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாண்டவர்களுக்காக யுத்தத்தில் நடத்தினவன் வர்த்திக்கிற ஊர் போலும் – முடி சூடுவார் யாரோ என்று இருக்குமாயிற்று தாழ்வு செய்து திரிகைக்கு) 5
கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலி மாந்தேர் ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தானூர் போலும் மைவைத்திலங்கு கண்ணார் தங்கள் மொழி யொப்பார் கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே –9-6-5
பதவுரை Show / Hide
கொவ்வைக் கனிவாய், Kovvaik Kanivai - கோவைப்பழம்போற் சிவந்த வாயையுடைய
கிள்ளை, Killa - கிளிகளானவை
மை வைத்து இலங்கு கண்ணார் தங்கள் மொழி ஒப்பான், Mai Vaiththu Ilangu Kannaar Thangal Mozhi Oppaan - மையிட்டு விளங்குகின்ற கண்களையுடைய பெண்களில் பேச்சுப்போல
பேசும், Pesum - பேசுமிடமான
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியானது
அன்று, Andru - முன்பொருகால்
அமரில், Amaril - பாரதயுத்தத்தில்
கவ்வை களிறு மன்னர், Kavvai Kaliru Mannar - பேரொலிகொண்ட யானைகளை யுடையவரான அரசர்கள்
மாள, Maala - மாண்டுபோம்படியாக
ஐவர்க்கு ஆய், Aivarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக
கலி மா தேர், Kali Maa Ther - திண்ணிய பெரியதேரை
உய்த்தான், Uyiththaan - நடத்தின பெருமானுடைய
ஊர்போலும், Oorpolum - திவ்யதேசமாகும்
1803பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சாமாராதன உபகரணங்களைத் தரித்துக் கொண்டு அதிகாரிகளான நீங்கள் அடைவு கெட ஏத்தி அஞ்சலியை பண்ணி உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள்) 6
தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர்காள் மா நீர் வண்ணர் மருவி யுறையும் இடம் வானில் கூநீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே –9-6-6
பதவுரை Show / Hide
தொண்டீர்காள், Thondeerkaal - தொண்டர்களே! (- (“கூனீர்“ என்பதில் “நீர்மை“ என்னும் பண்பு ஈறுபோயிற்று, நீர்மையாவது ஸ்வபாவம்.))
தூ நீர், Thoo Neer - பரிசுத்தியை யுடையரான நீங்கள்
தீ, Thee - (தூபதீபங்களுக்கான) அக்நியையும்
நீர், Neer - (அர்க்கியத்துக்கான) தீர்த்தத்தையும்
வண்ணம் மா மலர், Vannam Maa Malar - நாநாவர்ணமுடைய சிறந்த புஷ்பங்களையும்
விரை, Virai - பரிமளத்ரவ்யங்களையும்
ஏந்திக் கொண்டு, Aendhik Kondo - எடுத்துக்கொண்டு
பாவி, Paavi - (எம்பெருமானைத்) துதித்து
தொழுமின், Thozhumin - தொழுங்கோள்,
எழுமின், Ezhumin - உஜ்ஜீவிக்கப் பாருங்கோள்
வானில், Vaanil - ஆகாசத்தில்
கூன் நீர், Koon Neer - வளைந்திருப்பதை இயற்கையாகவுடைய
மதியை, Madhiyai - சந்திரனை
மாடம் தீண்டும், Maatam Theendum - மாடங்கள் ஸ்பர்சிக்கும்படியாக ஓங்கியுள்ள
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியானது
மா நீர் வண்ணர், Maa Neer Vannarar - கடல் வண்ணரான பெருமாள்
மருவி உறையும் இடம், Maruvi Uraiyum Idam - பொருந்தியாழுமிடமா யிருக்கின்றது.
1804பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜன்மாதிகளுக்கு ஹேதுவாய் இருக்கிற விஷயங்களைப் பற்றி இருக்கிற மநோ ரதத்தைத் தவிர்த்து அவனுக்கே அடியோம் என்று இருக்கிற நீங்கள் அவன் வர்த்திக்கிற ஊரைச் சென்று அடையுங்கோள்) 7
வல்லிச் சிறு நுண்ணிடை யாரிடை நீர் வைக்கின்ற அல்லல் சிந்தை தவிர அடைமின் அடியீர்காள் சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறு ஒப்பான் கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குறுங்குடியே –9-6-7
பதவுரை Show / Hide
அடியீர்காள், Adiyeergal - பகவத் பக்தர்களே!
நீர், Neer - நீங்கள்
வல்லி சிறு நுண் இடையாரிடை, Valli Siru Nun Idaiyaridai - கொடிபோன்று மிக நுண்ணிய இடையை யுடையரான பெண்களிடத்து
வைக்கின்ற, Vaikkindra - வைத்திருக்கிற
அல்லல் சிந்தை தவிர, Allal Sindhai Thavira - துக்ககரமான சிந்தனையைத் தவிர்த்து
கொல்லை முல்லை, Kollai Mullai - கொல்லைகளிலுள்ள முல்லைகளானவை
சொல்லில் திரு அனையார், Sollil Thiru Anaiyaar - சொல்லுமிடத்து ஸ்ரீ மஹா லக்ஷ்மியை யொத்திருக்கின்ற ஸ்த்ரீகளினுடைய
கனிவாய், Kanivai - கோவைக்கனிபோன்ற வாயிலுள்ள
எயிறு ஒப்பான், Eiyiru Oppaan - பற்களோடொப்ப
மெல் அரும்பு, Mel Arumbu - அழகிய அரும்புகளை
ஈனும், Eenum - புறப்படவிடுமிடமான
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியை
அடைமின், Adaimin - அடையுங்கோள்
1805பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம்மோடு ஒரு சம்பந்தம் உடைய நீங்கள் –பர பக்தி உக்தராய்க் கொண்டு -வகுத்த ஸ்வாமி யானவன் இருக்கிற தேசத்தை சென்று அடையுங்கோள்) 8
நாராரிண்டை நாண் மலர் கொண்டு நந்தமர்காள் ஆராவன்போடு எம்பெருமானூர் அடைமின்கள் தாராவாரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும் கூர்வாய் நாரை பேடையோடாடும் குறுங்குடியே –9-6-8
பதவுரை Show / Hide
நம் தமர்காள், Nam Thamarkal - நம்மோடொத்த பகவத்பக்தர்களே! (- (எம்பெருமான் ஊர் அடைமின்கள்))
நார் ஆர் இண்டை, Naar Aar Indai - நார்களில் நெருங்கக் கோக்கப்பட்ட மாலைகளையும்
நாள் மலர், Naal Malar - அப்போதலர்ந்த பூக்களையும்
கொண்டு, Kondru - ஏந்திக் கொ;ண்டு
ஆரா அன்போடு, Aaraa Anbodu - பரபக்தியுக்தராய்க் கொண்டு
வார்புனல், Vaarpunal - நீண்ட நீர்நிலங்களிலே
மேய்ந்து, Meiyndhu - இரைமேய்ந்து
வயல், Vayal - வயல்களில்
வாழும், Vaalum - வாழ்கின்ற
கூர் வாய் நாரை, Koora Vaai Naarai - கூர்மையுள்ள வாயலகுகளையுடைய நாரைகள்
பேடையோடு, Pedaioodu - பேடைகளுடனே
ஆடும், Aadum - களித்துவர்த்திக்கப்பெற்ற
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியென்கிற
எம்பெருமான் ஊர், Emperumaan Oor - திவ்யதேசத்தை
அடைமின்கள், Adaiminkal - சென்று சேருங்கள்
1806பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செவ்விப் பூக்களைத் தரித்துக் கொண்டு சென்று –தீர்க்க பிரமாணத்தை பண்ணுங்கோள் – வழு விலா வடிமை செய்ய வேண்டும் -என்றும் இருக்கும் நீங்கள்) 9
நின்ற வினையும் துயரும் கெட மா மலரேந்திச் சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள் என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக் குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே –9-6-9
பதவுரை Show / Hide
தொண்டர்காள், Thondarkal - பகவத்பக்தர்களே!
நின்ற வினையும், Nindra Vinaikum - ஸஞ்சிதகருமங்களும்
துயரும், Thuyarum - ப்ராரப்தகருமங்களும்
கெட, Keda - ஒழியும்படியாக
மா மலர், Maa Malar - சிறந்த புஷ்பங்களை
ஏந்தி, Aendi - எடுத்துக்கொண்டு
இரவும் பகலும் என்றும், Iravum Pagalum Endrum - இரவும் பகலுமாகிய எக்காலத்திலும்
வரி வண்டு இசை பாட, Vari Vandu Isai Paada - வஜீவண்டுகள் இசை பாடப்பெற்றதும்
குன்றின் முல்லை, Kundrin Mullai - மலையிலுள்ள முல்லைப் பூக்கள்
மன்றிடை, Mandridai - வெளிநிலங்களிலே
நாறும், Naarum - கமழப்பெற்றதுமான
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியை
சென்று, Sendru - அடைந்து
பணிமின், Panimin - ஸேவியுங்கள்
தொழுமின், Thozhumin - அஞ்ஜலிபண்ணுங்கள்,
எழுமின், Ezhumin - (இவ்வகையாலே) உஜ்ஜீவிக்கப்பாருங்கள்
1807பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உக்தி ஆபாசங்களால் அழிக்க ஒண்ணாத படியான திண்மையை உடைய இத்தை அஹ்ருத்யமாகச் சொல்ல புத்தி பூர்வகமாகப் பண்ணின பாபங்கள் போம்) 10
சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம் கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல் கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே –9-6-10
பதவுரை Show / Hide
சிலைபால், Silaihaal - சார்ங்கத்தாலே
இலங்கை, Ilankai - லங்காபுரியை
செற்றான், Setraan - அழித்தவனும்
மற்று, Mattru - அன்றியும்
சினம், Sinam - சிற்றங்கொண்ட
ஓர் வேழம், Oru Vezham - (குவலயாபீடமென்கிற) ஒரு யானையினது
கொலை ஆர், Kolai Aar - கொலைத் தொழில்வல்ல
கொம்பு, Kombu - தந்தங்களை
கொண்டான், Kondaan - முறித்துக் கொண்டவனான பெருமான்
மேய, Meya - நித்யவாஸம் பண்ணுகிற
குறுங்குடி மேல், Kurungkudi Mael - திருக்குறுங்குடி விஷயமாக
கலை ஆர் பனுவல்வல்லான், Kalai Aar Panuvalvallaaan - சாஸ்த்ரோக்த லக்ஷணங்களமைந்த கவிகளைப் பாட வல்லவரான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச் செய்த
மாலை, Maala - சொல்மாலையாகிய
நிலை ஆர் பாடல், Nilai Aar Paadal - நிலைநிற்கும் பாசுரமாகிய (வேதரூபமான) இத்திருமொழியை
பாட, Paada - பாடவே
பாவம், Paavam - பாவங்கள்
நில்லா, Nilla - நில்லாமல் ஓடிப்போம்
1808பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வமும் உப சம்ஹ்ருதம் ஆனவன்று இவற்றுக்கு லய ஸ்தானமாய்- சிருஷ்டி காலம் வந்தவாறே உத்பத்தி ஸ்தானமாய் காரணாவஸ்திதமான சித் அசித்துக்களுக்கும் நிர்வாஹகனாய் கார்ய மத்யே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன் – நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ திரு வல்ல வாழை வாயாலே சொல்லும்படியாக நெஞ்சாலே நினைக்கப் பண்ணப் பாராய் -நெஞ்சே என்கிறார்) 1
தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல் அந்தமாய் யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய மைந்தனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-1
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenjee - மனமே!
தந்தை, Thandai - தகப்பனென்றும்
தாய், Thaai - தாயென்றும்
மக்கள், Makkal - பிள்ளைகளென்றும்
சுற்றம், Sutram - ஜ்ஞாநிகளென்றும்
உற்றவர் என்று, Utravar Endru - மற்றும் உறவுமுறையாரென்றும்
பற்றி நின்ற, Patri Nindra - பற்றிக்கொண்டிருக்கிற
எழி என, Ezhi Ena - (இந்தவாழ்வு) அவத்யமென்றும்
கருதினாய் எல், Karuthinai El - நினைப்பாயாகில்
அந்தம் ஆய், Andham Aayi - (பிரளயத்தில்) லயத்துக்கு ஆச்ரயமாயும்
ஆதி ஆய், Aadhi Aayi - உச்பத்திஸ்தாநமாயும்
ஆதிக்கும் ஆதி ஆய், Aadhikkum Aadhi Aayi - காரணாவஸ்தையிலுள்ள சேதநாசேதநங்களுக்கும் நிர்வாஹகனாயும்
ஆயன் ஆய, Aayan Aayi - கோபாலக்ருஷ்ணனாக அவதரித்தவனாயுமுள்ள
மைந்தனார், Mainthanar - பெருமானுடைய
வல்லவாழ், Vallavaazh - திருவல்லவாழென்கிற திருப்பதியை
சொல்லும் ஆ, Sollum Aa - வாயாற்சொல்லுவதில்
வல்லை ஆய், Vallai Aayi - வல்லமையுடையையாய்
மருவு, Maruvu - பொருந்து
1809பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாண்டவர்களுக்காக பண்டு தன்னை தாழ விட்டு தூது போன மேன்மையை உடையவர் – நம்மை யாரோ ஏவிக் கார்யம் கொள்வார் என்று வந்து நிற்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை —) 2
மின்னு மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண்ணிடை நுடங்கும் அன்ன மென்னடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல் துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்காகி முன் தூது சென்ற மன்னனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-2
பதவுரை Show / Hide
மின்னும், Minnum - மின்னலையும் (- (நெஞ்சே) (மன்னால் வல்லவாழ் மருவு-))
மா வல்லியும், Maa Valliyum - அழகிய கொடியையும்
வஞ்சியும், Vanjiyum - வஞ்சிக் கொம்பையும்
வென்ற, Vendra - தோற்பித்த
நுண் இடை, Nun Idai - நுட்பமான இடுப்பு
நுடங்கும், Nudangum - துவளும்படியிருப்பவர்களாய்
அன்னம் மென் நடையினார், Annam Men Nadaininar - அன்னம்போல் மெதுவான நடையையுடையரான மாதருடைய
கல்வியை, Kalviyai - புணர்ச்சியை
அருவருத்து, Aruvaruthu - வெறுத்து
அஞ்சினாய்ஏல், Anjinayel - அச்சமுறுவாயாகில்,
முன், Mun - முன்பொரு கால்
துன்னு மாமணி முடி பஞ்சவர்க்கு ஆகி, Thunnu Mamanikudi Panjavarkku Aagi - நெருங்கின சிறந்த ரத்னங்களிழைத்த கிரீடமணியத் தக்க பஞ்சபாண்டவர்களுக்காக
தூது சென்ற, Thoodu Sentra - தூது நடந்த
1810பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மகா பலியுடைய யாகத்திலே சென்று தன் அல்லாதத ஒன்றை அர்த்திப்பாரைப் போலே பூமியை அபேஷிக்க இரப்பிலே தகண் ஏறின வடிவை யுடையவர் –தம்முடைய அர்த்தித்வம் தோற்ற வந்து நிற்கிற திரு வல்ல வாழை) 3
பூணுலா மென் முலைப் பாவைமார் பொய்யினை மெய்யிதென்று பேணுவார் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல் நீணிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண்ணிரந்த மாணியார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-3
பதவுரை Show / Hide
பூண் உலாம், Poon Ulaam - ஆபரணங்கள் விளங்குகின்ற (- (வல்லவாழ் மருவு))
மெல் முலை, Mel Mulai - மெல்லிய முலைகளையுடைய
பாவைமார், Pavaimaar - ஸ்த்ரீகளினுடைய
பொய்யினை, Poyyinai - சூதுகளை
இது மெய் என்று பேணுவோர் பேசும் அப்பேச்சை, Idhu Mey Endru Penuvor Pesum Appechchai - இதுமெய்யென்று ஆதரிப்பவர்கள் பேசுகின்ற
பிழை என நீர் கருதினால் எல், Pizhai Ena Neer Karuthinaal El - அப்படிப்பட்ட வார்த்தைகளை தப்பென்று நீ கரதுவாயாகில்
நீள் நிலா வெண்குடை, Neel Nila Venkudai - பரந்த நிலாவைப்போன்று வெண்கொற்றக் குடையுடன்
வாணனார், Vaananaar - வாழ்பவனான மஹாபலியினுடைய
வேள்வியில், Velviyil - யாகத்திலே
மண், Man - (மூவடி) மண்ணை
இரந்த, Iranda - யாசித்த
மாணியார், Maaniyaar - பிரமசாரி வாமகமூர்த்தி
1811பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுத்துக் கொண்டு ஸ்ரீ பரமபதத்திலே இருக்கிறவர் அத்தோடு ஒரு போலியான ஒக்கத்தை உடைத்தான ஸ்ரீ திருமலையிலே வர்த்திக்கிறவர் – தர்ச நீயமான கடல் போலே இருக்கிற வடிவை உடையவர் – வர்த்திக்கிற –ஸ்ரீ திரு வல்ல வாழை – அங்கு உள்ளு நிற்கிறவர் வடிவு அழகு இருக்கிறபடி) 4
பண்ணுலா மென் மொழிப் பாவைமார் பணை முலை யணைது நாம் என்று எண்ணுவார் எண்ணமது ஒழித்து நீ பிழைத்து உய்யக் கருதினாயேல் விண்ணுளார் விண்ணின் மீதியன்ற வேங்கடதுளார் வளங்கொள் முந்நீர் வண்ணனார் வல்ல வாழ் சொல்லுமால் வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-4
பதவுரை Show / Hide
பண் உலகம், Pan Ulagam - இசைவிளங்குகின்ற (- (வல்லவாழ் மருவு))
மெல் மொழி, Mel Mozhi - இனிய பேச்சுக்களுடைய
பாவைமார், Pavaimaar - ஸ்த்ரீகளினுடைய
பணை முலை, Panai Mulai - நெருங்கின ஸ்தனங்களை
நாம் அணைத்தும் என்று, Naam Anaiththum Endru - நாம் அணைவோமென்று
எண்ணுவார், Ennavar - சிந்திப்பவர்களினுடைய
எண்ண அது ஒழித்து, Enna Adhu Ozhithu - அப்படிப்பட்ட சிந்தனையைத் தவிர்த்து
நீ பிழைத்து உய்ய கருதினால், Nee Pizhaithu Uyya Karuthinaal - நீ உஜ்ஜீவிக்க வேண்டில்,
விண் உளார், Vin Ulaar - நித்யஸூரிகளுக்காக
விண்ணின் மீது, Vinnin Meedhu - பரமபதத்தில்
இயன்ற, Iyanra - காட்சிகொடுத்துக் கொண்டிருப்பவரும்
வேங்கடத்து உளார், Vengadathu Ulaar - திருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவரும்
வளம் கொள் முந்நீர் வண்ணார், Valam Kol Munneer Vannaar - அழகிய கடல் போன்ற வடிவையுடையவருமான பெருமாளுடைய
1812பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நஞ்சாலே நிறைந்து இருந்துள்ள முலையின் மேலே அழகிய கையையும் வாயையும் வைத்து அவளுடைய ஆயுஸையும் முடித்த -மைந்தனார் விரோதி நிரசனமே யாத்ரையாய் இருக்கிறவர் வர்த்திக்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை) 5
மஞ்சு தோய் வெண் குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார் துஞ்சினார் என்பதோர் சொல்லை நீ துயர் எனக் கருதினாயேல் நஞ்சு தோய் கொங்கை மேலங்கை வாய் வைத்து அவள் நாளையுண்ட மஞ்சனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-5
பதவுரை Show / Hide
ஞ்சுதோய் வெண்குடை மன்னர் ஆய், Nanjuthoy Venkudai Mannar Aay - மேகமண்டலத்தளவு மோங்கின வெண்கொற்றக்குடையையுடைய சக்ரவர்த்திகளாய் (- (நிகருதினாய் எல்-))
வாரணம் சூழ, Vaaranam Soozha - யானைத்திரள் சூழ்
வாழ்ந்தார், Vaazndhaar - வாழ்ந்தவர்கள்
துஞ்சினார் என்பது ஓர் சொல், Thunzhinaar Enbathu Oru Sol - மாண்டு போனார்களென்கிற வார்த்தையை
துயர் என, Thuyar Ena - துக்கமென்று
நஞ்சுதோய், Nanjuthoy - விஷம்தோய்ந்த
கொங்கை மேல், Kongai Mael - (பூதனையின்) முலைமேல்
அங்கை வாய் வைத்து, Angai Vaai Vaiththu - அகங்கையையும் வாயையும் வைத்து
அவள், Aval - அப்பூதனையினது
நாளை, Naalai - ஆயுளை
உண்ட, Unda - முடித்த
1813பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ராஹ்மண லஷணங்களால் குறைவற்று இருக்கிற-நாலு வகைப் பட்ட வேதம்-பஞ்சாக்னிகள் பஞ்ச மகா யஞ்ஞங்கள் அங்கங்கள் ஆறு இவற்றை யாத்ரையாக உடையராய் இருப்பார் வர்த்திக்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை) 6
உருவினார் பிறவி சேரூன் பொதி நரம்பு தோல் குரம்பையுள் புக்கு அருவி நோய்செய்து நின்ற ஐவர் தாம் வாழவதற்கு அஞ்சினாயேல் திருவினார் வேத நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கமாறும் மருவினார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-6
பதவுரை Show / Hide
உருவின் ஆர் பிறவி சேர், Uruvin Aar Piravi Ser - ஸூக்ஷமசரீரத்தோடே கூடியிருப்பதுபிறப்பையடைந்து
ஊன் பொதி, Oon Pothi - மாமஸத்தைப் பொதிந்து கொண்டு கிடக்கிற
நரம்பு தோல் குரம்பையுள், Narambu Thol Kurampaiyul - நரம்பும் தோலுமாகி குடிசையினுள்ளே
ஐவர்தாம், Aivardham - பஞ்சேந்திரியங்களானவை,
புக்கு, Pukku - புகுந்து
அருவி நோய், Aruvi Noi - ஹிம்ஸைகளைப்பண்ணி நோவுபடுத்ததிக்கொண்டு
வாழ்வதற்கு, Vazhvadarku - குடியிருப்பதற்கு
அஞ்சினால் எல், Anjinal El - நீ பயப்பட்டாயாகில்
திருவின் ஆர், Thiruvin Ar - பரமப்ரமாணமா யிருக்கையாகிற ஸ்ரீயோடுகூடின
வேதம் நான்கு, Vedham Nanku - நான்கு வேதங்களையும்
அங்கம் ஆறும், Angam Arum - ஆறு வேதாங்கங்களையும்
ஐந்து தீ, Ainthu Thi - பஞ்சாக்நிகளையும்
ஐந்து வேள்வி, Ainthu Velvi - பஞ்சமஹாயஜ்ஞங்களையும்
மருவினார், Maruvinar - பொருந்தியிருப்பவர்கள் வாழ்கிற
1814பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீர்க் களிப்பை அறுக்கைக்கு ஈடாக உஷ்ண கிரணனான ஆதித்யனாய் அவனால் வந்த தாபத்தை ஆற்றுகைக்கு ஈடான தண்ணளியை உடைத்தான சந்த்ரனாய் – மேக சஞ்சாரத்தை யுடைத்தான ஆகாசமாய் நிற்கிற ஆச்சர்ய பூதரானவர் –கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி வந்து நிற்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை) 7
நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா பேயர் தாம் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல் தீயுலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல் வானாகி நின்ற மாயனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-7
பதவுரை Show / Hide
சோய் எலாம், Soy Elam - எல்லா நோய்களையும் (- (நெஞ்சே!) (வல்லவாழ் *** மருவு))
பெய்த்து, Peytthu - இட்டுப்பண்ணின
ஓர் ஆக்கையை, Or Akkaiyai - சரீரத்தை
மெய் என கொண்டு, Mei En Kondu - மெய்யென்றே எண்ணிக்கொண்டு
பேயர்தாம், Peyartham - அவிவேகிகள்
வாளா, Vaalai - வீணாக
பேசும் அப்பேச்சை, Pesum Appechchai - பேசுகிற பேச்சுக்களை
பிழை என நீ கருதினாய் எல், Pizhai En Ni Karuthinay El - பிசகென்று நீ நினைத்தாயாகில்,
தீ உலாம் வெம் கதிர், Thi Ulam Vem Kathir - ஜ்வாலையோடு கூடின உஷ்ண கிரணனான ஸூரியனாகவும்
திங்கள் ஆய், Thingal Ay - சந்திரனாகவும்
மங்குல் வான் ஆகி நின்ற, Mangul Vaan Aagi Nindra - மேக ஸஞ்சாரத்தையுடைய ஆகாசமாகவும் பரம்பி நிற்கின்ற
மாயனார், Maayanar - ஆச்சர்யபூதனான பெருமானுடைய
1815பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பொற்றாமரையை இருப்பிடமாக உடையாளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் அவளுக்குத் தகுதியான தாமும் ரகவோஹர்த்தி வைதேஹீம் -என்னுமா போலே –அவன் வரக் கடவ வழி எல்லாம் வந்து நின்றான் – வந்ததே -என்று ஒரு வார்த்தை சொல்லும் இத்தனை நீ செய்ய வேண்டுவது) 8
மஞ்சுசேர் வானெரி நீர் நிலம் காலிவை மயங்கி நின்ற அஞ்சு சேராக்கையை அரணம் அன்று என்று உய்யக் கருதினாயேல் சந்துசேர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும் நாளும் வந்துசேர் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-8
பதவுரை Show / Hide
மஞ்சு சேர் வான், Manju Seer Vaan - மேகங்கள் சேர்ந்த ஆகாசம் (- (நெஞ்சே) (வல்லவாழ் *** மருவு))
எரி, Eri - அக்நி
நீர், Neer - ஜலம்
நிலம், Nilam - பூமி
கால், Kaal - காற்று ஆகிய
இவை, Ivai - இப்பஞ்சபூதங்களும்
மயங்கி நின்ற, Mayangi Nindra - கூடிவர்த்திக்கிற
அஞ்சு சேர் ஆக்கையை, Anju Seer Aakkaiyai - பாஞ்ச பௌதிகமான சரீரத்தை
அரணம் அன்று என்று, Aranam Andru Endru - ரக்ஷகமல்லவென்று கொண்டு
உய்ய, Uyya - உஜ்ஜீவித்துப் போக
கருதினால் ஏல், Karuthinaal Ael - நினைத்தாயாகில்
சந்து சேர், Sandhu Seer - சந்தனமணிந்த
மெல் முலை, Mel Mulai - மெல்லிய முலைகளையுடைய
பொஷ் மலர் பாவையும் தாமும், Posh Malar Paavayum Thaamum - பெரிய பிராட்டியாரும் தாமுமாக
நாளும், Naalum - எப்போதும்
வந்து சேர, Vandhu Sera - கூடிவாழுமிடமான
1816பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கேவல தர்க்கம் கொண்டு அர்த்த நிர்ணயம் பண்ணுகை அன்றிக்கே பிரமாணம் கொண்டு அர்த்த நிச்சயம் பண்ணுமவர்கள் தன்னை ஒழிய வேறு ஒன்றை போக்யமாக நினைத்து இருப்பார்க்கும் அத்தைக் கொடுக்கும் மகோதாரன் – இவ்வமிர்தம் எனக்கு வேண்டா என்னாமை கிடாய் வேண்டுவது) 9
வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற கள்ள நூல் தன்னையும் கருமம் அன்று என்று உய்யக் கருதினாயேல் தெள்ளியார் கை தொழும் தேவனார் மா முநீரமுது தந்த வள்ளலார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-9
பதவுரை Show / Hide
வெள்ளியார், Velliyar - பாசுபதர்களென்றும் (- (வல்லவாழ் *** மருவு))
பிண்டியார், Pindiyar - ஜைநர்களென்றும்
என்றிவர், Endru Ivar - சொல்லப்படுகிற புறமதத்தவர்கள்
ஒதுக்கின்ற, Othukkindra - சொல்லிக்கொண்டுதிரிகிர
கள்ளம் நூல் தன்னையும், Kallam Nool Thannaiyum - பொய்யான சாஸ்த்ரங்களையும்
கருமம் அன்று என்று, Karumam Andru Endru - ‘இவைநமக்கு உபாதேயமல்ல’ என்றுகொண்டு
உய்ய, Uyya - உஜ்ஜீவித்துப்போக
கருதினாய் ஏல், Karuthinai Ael - நினைத்தாயாகில்
தெள்ளியார், Thelliyar - தெளிவுபெற்றவர்கள்
கைதொழும், Kaithozhum - வணங்கப்பெற்ற
தேவனார், Devanar - ஸ்வாமியாயும்
மா முநீர், Maa Munir - பெரிய கடலில் நின்றும்
அமுது, Amuthu - அமுதத்தை
தந்த, Thanda - எடுத்துத் தந்தருளின
வள்ளலார், Vallalar - உதார்ராயுமிருக்கிற பெருமாளுடையதான
1817பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தைக் கற்று வல்லார் –பூமிப் பரப்புக்கு அடைய தாங்களே நிர்வாஹகராய் தேஹ சமனந்தரம்-நித்ய விபூதியிலே புக்கு-ஏஷஹ்யேவா நந்தயாதி -என்கிறபடியே நிரதிசய ஆநந்த யுக்தராவார்) 10
மறைவலார் குறைவிலா ருறையுமூர் வல்ல வாழடிகள் தம்மை சிறைகுலா வண்டறை சோலை சூழ் கோல நீளாலி நாடன் கறையுலா வேல் வல்ல கலியன் வாயொலி யிவைகற்று வல்லார் இறைவராய் இருநிலம் காவல் பூண்டு இன்ப நன்கெய்துவாரே –9-7-10
பதவுரை Show / Hide
மறை வலார், Marai Valar - வேதமல்லவர்கள்
குறைவு இலார், Kuraivu Ilar - குறைவொன்றுமில்லாதவர்களாய்க் கொண்டு
உறையும் ஊர், Urayum Oor - நித்யவாஸம்பண்ணுமிட மான
வல்லவாழ், Vallavaazh - திருவல்லவாழில் எழுந்தருளியிருக்கிற
அடிகள் தம்மை, Adigal Thammai - ஸ்வாமிவிஷயமாக
சிறைகுலாவண்டு அறைசோலை சூழ், Sirai Kulavandu Araisolai Soozh - சிறகையும் கொண்டாட்டத்தையுமுடைய வண்டுகள் ரீங்காரஞ் செய்யப்பெற்ற சோலைகளால் சூழப்பட்ட
கோலம், Kolam - அழகிய
நீள், Neel - பெரிய
ஆலி நாடன், Aali Naadan - திருவாலிநாட்டுக்குத் தலைவரும்
கறை உலாம், Karai Ulaam - ரத்தக்களைகழுவாத
வேல் வல்ல, Vel Valla - வேற்படையை யுடையருமான
சலியன், Saliyan - திருமங்கையாழ்வார்
வாய் ஒலி, Vaai Oli - திருவாயமலர்ந்த
இவை, Ivai - இப்பத்துப் பாசுரங்களை
கற்று வல்லார், Kattru Vallar - ஓதியுணரவல்லவர்கள்
இறைவர் ஆய், Iraivar Aay - அரசர்களாயிருந்துகொண்டு
இரு நிலம், Iru Nilam - விசாலமான இந்நிலத்தை
காவல் பூண்டு, Kaval Poondhu - ஆண்டு கொண்டு
நன்கு இன்பம் எய்துவரார், Nangu Inbam Eydhuvarar - பரமாநந்தமடையப்பெறுவர்
1818பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராப்த விஷயத்தை வணங்கிலும் வணங்குகிறாய் தவிரிலும் தவிருகிராய் – இதர விஷயங்களை முந்துற முன்னம் விட்டுக் கொடு நிற்கப் பாராய் -என்கிறார்) 1
முந்துற வுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடுதடுமாறல் அந்தரம் ஏழு மலை கடல் ஏழுமாய எம்மடிகள் தம் கோயில் சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்தருவிகள் நிரந்து வந்திழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-1
பதவுரை Show / Hide
மடநெஞ்சே, Madanenchae - விதேயமானமனமே!, (- (அதைவிட்டுச் செய்யவேண்டுவது யாதெனில்))
முந்துற உரைக்கேன், Mundhura Uraikken - (உனக்கு) முக்கியமாகச் சொல்லுகிறேன், (கேள்)
விரை குழல் மடவார் கல்வி, Virai Kuzhal Madavaar Kalvi - பரிமளம்மிக்க கூந்தலை யுடையரான மாதர்களின் கல்வியாகிற
தடுமாறலை, Thadumaaralai - தடுமாற்றத்தை
விடு, Vidu - விட்டொழி,
அந்தரம் ஏழும், Andharam Ezhum - ஏழுதீவுகளும்
அலை கடல் ஏழும் ஆய, Alai Kadal Ezhum Aay - அலையெறிகின்ற ஸப்த ஸாகரங்களுமாய்ப் பரந்து நிற்கிற
எம் அடிகள் தம், Em Adigal Tham - நம் ஸ்வாமியினுடைய
கோயில், Koyil - இருப்பிடமாய்
அருவிகள், Aruvigal - அருவிகளானவை
சந்தொடு, Sandhodu - சந்தனமரங்களோடு
மணியும், Maniyum - ரத்னங்களையும்
அணி மயில் தழையும், Ani Mayil Thazhaim - அழகிய மயில் தோகைகளையும்
தழுவி வந்து, Thazhuvi Vandu - உருட்டிக்கொண்டுவந்த
நிரந்து, Nirandhu - நெருங்கி
வந்து இழி, Vandu Izhil - பிரவஹிக்கப்பெற்ற
சாரல், Saaral - பக்கங்களையுடைத்தான
மாலியருஞ்சோலை, Maaliyaruncholai - திருமாலிருஞ்சோலையை
வணங்குதும் வா, Vananguthum Vaa - வணங்குவோம் வா
1819பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நித்ய சூரிகளும் அண்டாந்தர வர்த்திகளானவர்களும் ஆஸ்ரயிக்க ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் மேலே பள்ளி கொண்டு ஆதி ராஜ்ய சூசகமான திரு அபிஷேகத்தை உடைய ப்ரதானர் வர்த்திக்கிற தேசம்) 2
இண்டையும் புனலும் கொண்டிடையின்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர் அண்டரும் பரவ வரவணைத் துயின்ற சுடர் முடிக் கடவுள் தம் கோயில் விண்டலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன் வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-2
பதவுரை Show / Hide
இண்டையும், Intaiyum - பூமாலையையும் (- (சாரல், மாலிருஞ்சோலை வணங்குதும்மடநெஞ்சே வா))
புனலும், Punalum - தீர்த்தத்தையும்
கொண்டு, Kondru - ஏந்திக்கொண்டு
இடைஇன்றி, Itaiyinri - நிரந்தரமாக
தொழுதும், Thozhudum - ஸேவிப்போம்
எழுமின் என்று, Elumin Enru - எழுந்திருங்கள் என்று சொல்லிக்கொண்டு
இமையோர், Imaiyor - நித்யஸூரிகளும்
அண்டரும், Antarum - தேவர்களும்
பாவ, Pava - ஆச்ரயிக்க
அரவு அணை துயின்ற, Aravu Anai Tuyinra - சேஷசயனத்தில் திருக்கண்வளர்ந்தருள் கின்றவனும்
சுடர் முடி, Cutar Muti - சோதிமிக்க கிரீடத்தை யுடையவனுமான
கடவுள் தம், Katavul Tam - எம்பெருமானுடைய
கோயில், Koyil - இருப்பிடமாய்
விண்டு அலர், Vindu Alar - விண்டுவிரியாநிற்பதாய்
தூளி, Tuli - தூள்களையுடையதான
வேய், Vey - மூக்கில்
வளர், Valar - வளரப்பெற்ற
புறவில், Puravil - சுற்றுப்பக்கங்களில்
விரை, Virai - பரிமளம் மிக்க
குறிஞ்சி மலரின், Kurinci Malarin - குறிஞ்சிப்பூவினுடைய
நறு தேன், Naru Ten - செவ்வித்தேனிலே
அமர், Amar - படிந்த
வண்டு, Vandu - வண்டுகளையுடைய
1820பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அழகு மிக்கு இருந்துள்ள ஸ்ரீ வாமன வேஷத்தை பரிஹரித்து அதி ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு பூமிப் பரப்பை அடைய அளந்து கொண்டு – அந்தச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட ஸ்வாமி யானவன் பிற்பட்டார்க்கு இழக்க வேண்டாத படி நிற்கிற தேசம்) 3
பிணி வளராக்கை நீங்க நின்று ஏத்தப் பெரு நிலம் அருளில் முன்னருளி அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த வெம்மடிகள் தம் கோயில் கணி வளர் வேங்கை நெடு நிலமதனில் குறவர் தம் கவணிடைத் துரந்த மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-3
பதவுரை Show / Hide
பிணிவளர், Pinivalar - நோய்கள் வளரப்பெற்ற (- (மடநெஞ்சே!-))
ஆக்கை, Aakkai - சரீரம்
நீங்க, Neenga - நீங்குமாறு
நின்று ஏத்த, Ninru Aetha - நின்று துதிப்பதற்காக
பெரு நிலம், Peru Nilam - பரந்த பூமியை
அருளில், Arulil - க்ருபையினாலே
முன் அருளி, Mun Aruli - முன்னே தந்தருளினவனும்
அணி வளர் குறள் ஆய், Ani Valar Kural Aayi - அழகுமின்ன வாமநமூர்த்தியாய்
அகல் இடம் முழுதும், Akal Idam Muzhudhum - பூமிப்பரப்பையெல்லாம்
அளந்து, Alandhu - அளந்து கொண்டவனுமான
எம் அடிகள் தம் கோயில், Em Adigal Tham Koyil - எம்பெருமானுடைய இருப்பிடமாய்
கணி வளர் வேங்கை, Kani Valar Vengai - காலமுணர்த்தும் சோதிடன் போன்று வளர்கின்ற வேங்கைமரங்களையுடைய
நெடு நிலம் அதனில், Nedu Nilam Adhanil - விசாலமான பூமியிலே
குறவர், Kuravar - குறவர்கள்
தம், Tham - தங்களுடைய
கவண் இடை துரந்த, Kavan Idai Thurandha - கல்லெறியுங் கயிற்றில் வைத்து எறிந்த
மணி, Mani - மணிகளினொளி
வளர், Valar - மிகுதியாகக் காணப்பெற்ற
சாரல், Saaral - சுற்றுப்பக்கங்களையுடைய
மாலிருஞ்சோலை., Malirunjolai - வணங்குதும்வா
1821பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு ருஷி வாக்யத்தையே கொண்டு ஸ்திரீ வதம் என்று பிற்காலியாதே ரஷகரான நமக்கு ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு ஏகாந்தமானது செய்ய வேண்டாவோ -என்று அவள் முடியும்படி திரு உள்ளத்திலே கொண்டவன் – பின்னையும் பிற்பாடர் உடைய ரஷணத்துக்கு பாங்கான நிலம் என்று விரும்பி -வர்த்திக்கிற ஸ்ரீ கோயில்) 4
சூர்மையிலாய பேய் முலை சுவைத்துச் சுடு சரமடு சிலைத் துரந்து நீர்மையிலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில் கார்மலி வேங்கை கொங்கலர் புறவில் கடி மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன் வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-4
பதவுரை Show / Hide
சூர்மையில் ஆய், Soormail Aayi - கொடுமையாடு கூடின (- (தண் மாலிருஞ்சோலை, வணங்குதும், மடநெஞ்சே! வா-))
பேய், Pei - (பூதனையென்னும்) பேய்ச்சியினுடைய
முலை, Mulai - (விஷந்தீற்றிய) முலையை
சுவைத்து, Suvaithu - (அவளுயிர்மாளச்) சுவைத்துண்டவனாய்
சுடு சரம், Sudu Saram - கொடிய அம்புகளை
அடு சிலை துரந்து, Adu Silai Thurandhu - பகைவரை முடிக்கவல்ல வில்லிலே தொடுத்துவிட்டு
நீர்மை இலாத தாடகை மாள நினைந்தவர், Neermai Iladha Thaadagai Maala Ninaindhavar - இரக்கமற்றவளான தாடகைமுடியும்படி ஸங்கல்பித்தவனான பெருமான்
மனம் கொண்ட கோயில், Manam Konda Koyil - திருவுள்ளம்பற்றி வாழுமிடமாய்
கால் மலி, Kaal Mali - மேகமண்டலம்வரை ஓங்கிவளர்ந்த
வேங்கை, Vengai - வேங்கைமரங்களும்
கோங்கு, Kongu - கோங்குமரங்களும்
அலர், Alar - விகஸிக்கப்பெற்ற
புறவில், Puravil - பொழில்களிலே
கடி, Kadi - பரிமளம்மிக்க
குறிஞ்சி மலரின், Kurinci Malarin - குறிஞ்சிப்பூவினுடைய
நறு தேன், Naru Ten - செல்வித்தேனினுடைய
வார் புனல், Vaar Punal - ப்ரவாஹம்
சூழ், Sool - சூழப்பெற்றதான
1822பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சங்கல்ப்பத்தாலே அன்றிக்கே பத்தும் பத்தாக வீர வாசி தோற்ற பூசலிலே பொறுத்த ஸ்ரீ ஸ்வாமிகள் வர்த்திக்கிற தேசம்) 5
வணங்க லிலரக்கன் செருக்களத் தவிய மணி முடி யொருபதும் புரள அணங்கு எழுந்தவன் தன் கவந்தம் நின்றாட அமர் செய்த வடிகள் தம் கோயில் பிணங்கலில் நெடு வேய் நுதி முகம் கிழிப்பப் பிரசம் வந்து இழிதரப் பெருந்தேன் மணம் கமழ் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-5
பதவுரை Show / Hide
வணங்கல் இல் அரக்கன், Vanangal Il Arakkan - வணக்கமற்ற இராவணன் (- (மட நெஞ்சே!-) (அடிகள் தம் கோயில்) (மாலிருஞ்சோலை, வணங்குதும் வா-.))
செரு களத்து, Seru Kalathu - போர்க்களத்தில்
அவிய, Aviyam - முடியும்படியாகவும்
மணி முடி ஒருபதும் புளர, Mani Mudi Orupadhum Pulara - (அவனது) மணியணிந்த முடிகள் பத்தும் தரையில் புரளும்படியாகவும்
அவன்தன் கவந்தம், Avanthan Kavantham - அவனுடைய கபந்தம்
அணங்கு எழுந்து, Anangu Ezhundhu - தெய்வாவேசங் கொண்டது பொல
நின்று ஆட, Ninru Aada - நின்று ஆடும்படியாகவும்
அமர் செய்த, Amar Seitha - யுத்தம் பண்ணின
பிணங்களில், Pinangalil - ஒன்றுக்கொன்று பிணங்கியிருப்பதோடு கூடின
நெடு வேய் நுதி, Nedu Vei Nuthi - ஓங்கின மூங்கிலின் நுனி
முகம் கிழிப்ப, Mugam Kizhippa - (மலையுச்சியிலுள்ள தேன் கூட்டின்) வாயைக்கிழிக்க
பிரசம் வந்து இழிதா, Piracham Vandu Izhidha - (அதிலுள்ள) தேனீக்கள் சிதற
பெரு தேன், Peru Then - அதிகமான தேனினுடைய
மணம், Manam - பரிமளம்
கமழ், Kamazh - வீசப்பெற்ற
சாரல், Saaral - பக்கங்களையுடைத்தான
1823பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி – அங்கு நின்றும் போந்து அவதரித்து விளாம் பழத்துக்காக ஒரு சிறு கன்றை வீசி கையிலே குடங்களைக் கொண்டு கூத்தாடி -பெண்கள் உடைய குரவைக் கூத்திலே தன்னைக் கொடு வந்து கோத்து மநோ ஹாரியான சேஷ்டிதத்தை உடைய ஸ்ரீ சுவாமி வர்த்திக்கிற தேசம்) 6
விடங்கலந்தமர்ந்த வரவணைத் துயின்று விளங்கனிக்கு இளங்கன்று விசிறி குடங்கலந்தாடிக் குரவை முன் கோத்த கூத்த வெம்மடிகள் தம் கோயில் தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் தடவரைக் களிறு என்று முனிந்து மடங்கல் நின்ற திரு மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-6
பதவுரை Show / Hide
விடம் கலந்து, Vidam Kalandhu - (பிரதிகூலர்மேல் உமிழ்வதற்காக) விஷத்தோடே கூடி (- (மடநெஞ்சே!-) (அதைவிட்டுத் திருவாய்ப்பாடியிலே வந்து பிறந்தருளி) (மேகங்களானவை) (மாலிருஞ்சோலை, வணங்குதும் வா.))
அமர்ந்த, Amarntha - வாய்ப்பாக அமைந்த
அரவு அணை, Aravu Anai - திருவனந்தாழ்வானாகிற படுகையில்
துயின்று, Thuyinru - பள்ளிகொள்பவனாயிருந்து
முன், Mun - முன்பொருகால்
விளங்கனிக்கு, Vilanganikku - (அஸுராவேசங்கொண்ட) விளாம்பழத்தின்மீது
இன கன்று, Ina Kandu - (அப்படியெ அஸுரா வேசங் கொண்ட ஒரு கன்றுகுட்டியை
விசிறி, Visiri - வீசியெறிந்தவனாயும்
குடம் கலந்து ஆடி, Kudam Kalandhu Aadi - பலகுடங்களைச் சேர்த்தெடுத்தாடினவனாயும்
குரவை கோத்த, Kuravai Koththa - ராஸக்ரீடை நடத்தினவனாயும்
கூத்த, Kooththa - இப்படிப்பட்ட பலவகையான ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையனாயுமுள்ள
எம் அடிகள் தம், Em Adigal Tham - எம்பெருமானுடைய கோயில்
தட கடல், Thada Kadal - ஆழ்ந்தகடலிலே
முகந்து, Mugandhu - நீரைமொண்டுகொண்டு
விசும்பு இடை, Visumbu Idai - ஆகாசத்திலே (ஏறி)
பிளிற, Pilira - சுர்ஜிக்க, (அதைக்கேட்டு)
மடங்கல், Madangal - சிங்கமானது
தட வரை களிறு என்று முனிந்து, Thada Varai Kaliru Endru Munindhu - பெரிய மலையிலுள்ள யானை (கர்ஜிக்கிறது) என்றெண்ணிச் சீற்றங்கொண்டு
நின்று அதிரும், Ninru Adhirum - நிலைநின்று பிரதிகர்ஜிக்கப் பெற்ற
1824பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித விரோதிகளை போக்குகையில் உண்டான ப்ரீதியாலே உகந்து எறிந்த ஸ்ரமஹரமான வடிவை உடையவன் ஆஸ்ரித விரோதிகளைப் போக்குகைக்கு பாங்கான தேசம் என்று திரு உள்ளத்தாலே ஆதரித்து வர்த்திக்கிற ஸ்ரீ கோயில் – என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7
தேனுகனாவி போயுக வங்கோர் செழும் திரள் பனம் கனி யுதிர தானுகந்து எறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் வானகச் சோலை மரகதச் சாயல் மா மணிக்கல்லதர் நிறைந்து மானுகர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-7
பதவுரை Show / Hide
தேனுகன், Thenukan - தேநுகாஸுரனுடைய (- (மடநெஞ்சே!-) (மாலிருஞ்சோலை, வணங்குதும் வா))
ஆவி, Aavi - பிராணன்
போய் உக, Poi Uga - தொலைந்து போவதற்காக
அங்கு, Angu - அவ்விடத்தில்
ஓர் செழு திரள் பனங்களி உதிர, Oru Sezhu Thiral Panangal Uthira - அழகாக்த் திரண்டிருந்த பனம்பழங்கள் உதிரும்படியாக
தான் எறிந்து உகந்த, Thaan Erinthu Ugandha - அக்கழுதையைப் பனங்கனிமேலெறிந்து திருவுள்ளமுவந்த
தட கடல் வண்ணர், Thada Kadal Vannaar - கம்பீரமான கடல்போன்ற வடிவையுடையரான பெருமாள்
முன், Mun - முன்பு
எண்ணி, Enni - இதுவே பாங்கான இடமென்று திருவுள்ளம்பற்றி
இடம் கொண்ட, Idam Konda - இருப்பிடமாக ஸ்வீகரித்த கோயில்
மான், Maan - மான்களானவை,
மரதகம் சாயல், Maradhagam Saayal - மரதகமணிபோன்ற ஒளியையுடையவையாய்
வானகம், Vaanagam - ஆகாசத்தளவும் ஓங்கினவைகளான
சோலை, Solai - சோலைகளிலிருக்கிற
மா மணிக்கல் அதர், Maa Manikkal Adhar - நீலப்பாறை வழிகளில் (புகுந்து)
நிறைந்து, Niraindhu - நிறைய இருந்து
நுகர், Nugar - மேயப்பெற்ற
சாரல், Saaral - பக்கங்களையுடைத்தான
1825பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருப் பாற் கடலிலே திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி –அங்கு நின்றும் போந்து – அவதரித்து பதத்தாலே -பதற்றத்தாலே -அடி மேல் அடியாக விட்டுக் கொடு வருகிற குதிரையினுடைய மிக்க சீற்றத்தைப் போக்கின -ஸ்ரமஹரமான வடிவை உடையவன் வர்த்திக்கிற ஸ்ரீ கோயில்) 8
புதமிகு விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல ரவணைத் துயின்று பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த பனி முகில் வண்ணர் தம் கோயில் கதமிகு சினத்த கடதடக் களிற்றின் கவுள் வழிக் களி வண்டு பருக மத மிகு சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-8
பதவுரை Show / Hide
புணரி, Punari - (திருப்பாற்கடலின்) அலைகளானவை (- (மடநெஞ்சே!-) (அதைவிட்டுக் திருவாய்ப்பாடியிலே வந்து பிறந்தருளி) (மாலிருஞ்சோலை, வணங்குதும் வா))
புதம் மிகு விசும்பில் சென்று அணவபொரு, Pudham Miku Visumbil Sendru Anavaporu - மேகங்கள் நிறைந்த ஆகாசத்திலே சென்று உறாயும்படியாகக் கொந்தளிக்கிற
கடல், Kadal - திருப்பாற்கடலிலே
அரவு அணை, Aravu Anai - திருவனந்தாழ்வானாகிற படுக்கையின்மீது
துயின்று, Thuyinru - பள்ளிகொள்பவனாயிருந்து
பதம் மிகு பரியின், Patham Miku Pariyin - முயற்சிமிக்க (கேசியென்கிற) குதிரைவடிவான அசுரனுடைய
மிகு சினம், Miku Sinam - மிக்க சீற்றத்தை
தவிர்த்த, Thavirtta - போக்கினவரும்
பனி முகில் வண்ணர் தம், Pani Mukil Vannar Tham - குளிர்ந்த மேகம் போன்ற வடிவையுடையவருமான பெருமாளுடைய கோயில்
கதம் மிகு, Katham Miku - மிகக் கோபத்தையுடைத்தாய்
சினத்த, Sinath - (அதற்கு மூலமான) த்வேஷத்தையுடைத்தாய்
கடம், Kadham - மதங்கொண்ட
தட, Thada - பெரிய
களிற்றின், Kalittrin - யானையினுடைய
கவுள் வழி, Kavul Vazhi - கபோலத்தின் வழியே (பெருகாநின்ற)
களி, Kali - மதஜலத்தை
வண்டு, Vandu - வண்டுகள்
பருக, Paruga - பானம் பண்ணாநிற்கச் செய்தேயும்
மதம் மிகு சாரல், Matham Miku Saaral - மதநீர்பாய்ந்து வெள்ளமிடாநின்ற பக்கங்களை யுடைத்தான
1826பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என் குல நாதனாய் அப்படி அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிறவர் நித்ய சூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகம் கொடுக்கலாம் தேசம் என்று திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற தேசம்) 9
புந்தியில் சமணர் புத்தர் என்று இவர்கள் ஒத்தன பேசவும் உகந்திட்டு எந்தை பெம்மனார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல் தாழ் வரை மகளிர்கள் நாளும் மந்திரத்திறைஞ்சும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-9
பதவுரை Show / Hide
புந்தி இல், Pundhi Il - விவேகமற்ற (- (மட நெஞ்சே!-) (மாலிருஞ்சோலை, வணங்குதும் வா))
சமணர், Samanar - சமணரென்றும்
புத்தர் என்ற இவர்கள், Buddhar Endra Ivargal - பௌத்தர் என்றும் சொல்லப்படுகிற வேதபாஹ்யர்கள்
ஒத்தன, Oththana - தங்களுடைய துர்ப்புத்திக்கு ஒத்த பொருள்களை
பேசவும், Pesavum - சொல்லச் செய்தேயும்
உகந்திட்டு, Uganthittu - (இப்பாவிகள் தம்மைப் பணியாவிட்டாலும் அன்பர்க்கு உதவப் பெற்றோமே! என்று) திருவுள்ள முவந்து
எந்தை பெம்மானார், Endhai Pemmanaar - என் தந்தைமுதலானார்க்கும் நாதராய்
இமையவர் தலைவர், Imaiyavar Thalaivar - நித்யஸூரிகளுக்குத் தலைவரான பெருமாள்
முன், Mun - முன்னே
எண்ணி, Enni - இதுவேபாங்கான விட மென்றெண்ணி
இடம் கொண்ட, Idam Konda - ஸ்வீகரித்தருளின கோயில்
வரை மகளிர்கள், Varai Magalirgal - மலைப்பெண்கள்
சந்தனம் பொழிலின், Sandhanam Pozhilin - சந்தனத் தோப்பிலுள்ள
தாழ் சினை, Thazh Sinai - தாழ்ந்த கிளைகளினுடைய
நீழல் தாழ், Neezhal Thazh - நிழலின்கீழே (இருந்துகொண்டு)
நாளும், Naalum - நாள்தோறும்
மந்திரத்து, Mandiraththu - மந்திரங்களைக் கொண்டு
இறைஞ்சும், Iraichum - துதிக்கப்பெற்ற
1827பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ ஹிருதயத்திலே அனுசந்தித்துக் கொண்டு பாடுகைக்கு ஈடான பாக்கியம் உடையவர்கள் இக்கடல் சூழ்ந்த பூமிக்கு நிர்வாஹகர் ஆகப் பெறுவார்) 10
வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி வண்ணரை வணங்கும் தொண்டரைப் பரவும் சுடரொளி நெடு வேல் சூழ் வயலாலி நன்னாடன் கண்டல் நல வேலி மங்கையர் தலைவன் கலியன் வாயொலி செய்த பனுவல் கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆழ்வார் இக்குரை கடலுலகே –9-8-10
பதவுரை Show / Hide
வண்டு அமர், Vandu Amar - வண்டுகள் படிந்த
சாரல், Saaral - பக்கங்களையுடைய
மாலிருஞ் சோலை, Maalirunj Cholai - திருமாலிருஞ்சோலையிலுள்ள
மா மணி வண்ணரை, Maa Mani Vannarai - நீலமணிவண்ணரான அழகரை
வணங்கும் தொண்டவர், Vanangum Thondavar - வணங்குகின்ற பாகவதர்களை
பரவும், Paravum - துதிப்பவரும்
சுடர் ஒளி நெடு வேல், Sudar Oli Nedu Vel - மிக்கவொளி பொருந்திய பெரிய வேற்படையை யுடையவரும்
சூழ் வயல் ஆலி நல் நாடன், Sool Vayal Aali Nal Naadan - பரந்த வயல்களை யுடைய நல்ல திருவாலி நாட்டுக்குத் தலைவரும்
கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன், Kandal Nal Veli Mangaiyar Thalaivan - தாழைகளை அழகிய வேலையாகக் கொண்ட மங்கைநாட்டிலுள்ளார்க்கு நிர்வாஹகருமான
கலியன், Kaliyan - ஆழ்வார்
வாய் ஒலி செய்த, Vaai Oli Seitha - திருவாய்மலர்ந்தருளிய
பனுவல இவை கொண்டு, Panuvai Ivai Kondu - இப்பாசுரங்களைக் கொண்டு
பாடும் தவம் உடையார்கள், Paadum Thavam Udaiyargal - பாடும்படியான பாக்கிய முடையவர்கள்
குரை கடல் இவ்வுலகு, Kurai Kadal Ivvalagu - ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட இவ்வுலகை
ஆள்வர், Aalvar - ஆளப்பெறுவர்.
1828பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ உபய விபூதி உக்தனாய் இருந்து வைத்து –ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து – பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த கிலேசத்தைப் பரிஹரித்து – ஸ்ரீ கோவிந்தாபிஷேகம் பண்ணினவன் – பிற்பாடராய்-இடக்கை வலக்கையும் அறியாத சம்சாரிகளுக்கும் முகம் கொடுக்கைக்காக ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் – அவனோடு அணைக்கைக்கு ஈடான அழகை உடையவள்அணைந்தே விட வல்லளோ) 1
மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து பூ வளருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ –9-9-1
பதவுரை Show / Hide
மூவரில், Moovarinil - த்ரிமூர்த்திகளுள்
முன் முதல்வன், Mun Muthalvan - முக்கியனும்
முழங்கு ஆர், Muzhangu Aar - (திரைக்கிளப்பத்தாலே கோஷித்தல் பொருந்திய
கடலுள், Kadalul - திருப்பாற்கடலிலே
கிடந்து, Kidandhu - திருக்கண்வளர்ந்தருளி
உந்தி, Undhi - திருநாபியில்
அலர், Alar - மலர்கின்ற
பூ தன்னுள், Poo Thannul - (தாமரைப்) பூவிலே
புவனம், Puvanam - உலகத்தை
படைத்து, Padaiththu - ஸ்ருஷ்டித்து
உண்டு, Undu - (பிரளயகாலத்தில்) திருவயிற்றில்வைத்து நோக்கி
உமிழ்ந்த, Umizhndha - பிறகு வெளிப்படுத்திவனும்
தேவர்கள் நாயகனை, Thevargal Nayakanai - நித்யஸூரிகளுக்கு நாதனும்
திருமாலிருஞ் சோலை நின்ற, Thirumaliruncholai Nindra - திருமாலிருஞ்சோலை மலையில் நிற்பவனுமான
கோவலர் கோவிந்தனை, Kovalaar Govindhanai - கோபாலக்ருஷ்ணனான எம்பெருமானை
கொடி எர் இடை, Kodi Er Idai - கொடிபோன்ற இடையை யுடையளான என் மகள்
கூடும் கொலோ, Koodum Kolon - அணையப்டபெறுவளோ?
1829பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மூ வுலகும் படைத்த பிரதான மூர்த்தி தன்னை –ரஷணத்துக்கு இட்ட வீரக் கழல் த்வனியா நின்றுள்ள திருவடிகளை –அவற்றைக் காண்கைக்கு கண் படைத்த இவள் கண்டே விட வல்லளேயோ) 2
புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகருள் முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னைச் சினை வளர் பூம் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்றான் கனை கழல் காணும் கொலோ கயற்கண்ணி எம் காரிகையே –9-9-2
பதவுரை Show / Hide
புனை வளர், Punai Valar - புன்னைமரங்கள் வளரப்பெற்ற (- (திருக்கண்வளர்ந்தருளுகிற))
பூ பொழில் ஆர், Poo Pozhil Aar - பூஞ்சோலைகளை யுடையதும்
பொன்னி சூழ், Ponni Soozh - திருக்காவேரியாலே சூழப்பட்டதுமான
அரங்கம் நகருள், Arangam Nagarul - திருவரங்கம் பெரியகோயிலில்
முனைவனை, Munaivanai - பிரதாநனும்
மூ உலகும் படைத்த, Moo Ulakum Padaiththa - மூன்று லோகங்களையும் ஸ்ருஷ்டித்த
முதல் மூர்த்தி தன்னை, Muthal Moorhthi Thannai - முக்கிய மூர்த்தியானவனும்
சினை வளர் பூ பொழில் சூழ், Sinai Valar Poo Pozhil Soozh - பணைகள்மிக்க பூஞ்சோலைகளால் சூழப்பட்ட
திருமாலிருஞ்சோலை நின்றான், Thirumaliruncholai Nindraan - திருமாலிருஞ்சோலையில் நிற்பவனுமான எம்பெருமானுடைய
கனை கழல், Kanai Kazhal - (வீரக்கழலின்) ஒலியை யுடைத்தான திருவடிகளை
கயல் கண்ணி, Kayal Kanni - கயல்போன்ற கண்களை யுடையளான
எம் காரிகை, Em Kaarikai - எமது அழகியமகள்
காணும் கொலோ, Kaanum Koloo - ஸேவிக்கப்பெறுவளோ?
1830பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு மலையிலே நின்று அருளின –அண்டாந்தர வர்த்திகளுக்கு நிர்வாஹகன் ஆனவனை – அவனுக்கு ஈடாக ஒப்பித்து இருக்கிற இவள்அவ் ஒப்பனையோடு சென்று அணுக வல்லளேயோ) 3
உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகனாய் ஆலிலை மேல் கண் துயில் கொண்டுகந்த கரு மாணிக்க மா மலையை திண்டிறல் மா கரி சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற அண்டர் தங்கோவினை இன்று அணுகும் கொலோ என்னாயிழையே –9-9-3
பதவுரை Show / Hide
உலகு எழினையும், Ulaku Ezhinaiyum - ஸப்தலோகங்களையும்
உண்டு, Undu - (பிரளயகாலத்தில்) திருவயிற்றினுள் அடக்கி
ஒரு பாலகன், Oru Palagan - ஒரு சிறுகுழவியாய்
ஆல் இலை மேல், Aal Ilai Mael - ஓராலிலையின்மீது
கண் துயில் கொண்டு, Kan Thuyil Kondu - திருக்கண்வளர்ந்தருளி
உகந்த, Ugantha - திருவுள்ள முவந்த
கரு மாணிக்கம், Karum Manikkam - பெரிய கருமாணிக்கமலை போன்ற வடிவையுடைய
திண் திறல் மா கரி சேர், Thin Thiral Maa Kari Seer - மிக்க வலிமை வாய்ந்த மதயானைகள் சேரப்பெற்ற
திருமாலிருஞ்சோலை, Thirumaliruncholai - திருமாலிருஞ்சோலை மலையில்
நின்ற, Nindra - நிற்பவனுமான
அண்டர் தம் கோவினை, Andar Tham Kovinaik - தேவாதிதேவனை
என் ஆய் இழை, En Aay Izhai - சுத்தமான ஆபரணங்களை யணிந்துள்ள என்மகள்
இன்று, Indru - இப்போது
அணுகும் கொல், Anugum Kol - கிட்டப்பெறுவளோ?
1831பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சந்திர பதத் தளவும் ஓங்கின சிகரத்தை உடைத்தான ஸ்ரீ திரு மலையிலே வந்து சந்நிஹிதனாய் – நமக்கு எளியவன் ஆனவனை –அவ் வெளிமைக்கு தோற்று இருக்கிற இவள் கிட்ட வல்லளேயோ) 4
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த பங்கய மா மலர்க்கண் பரனை யெம் பரஞ்சுடரை திங்கள் நன் மா முகில் சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற நங்கள் பிரானை யின்று நணுகும் கொலோ என் நன்னுதலே –9-9-4
பதவுரை Show / Hide
முன், Mun - முன்பொருகாலத்தில் (- (திருமாலிருஞ்சோலையில்))
சிங்கம் அது ஆய், Singam Adhu Aay - நாஸிம்ஹ மூர்த்தியாகி
அவுணன், Avaunan - (இரணியனென்னும்) அசுரனுடைய
திறல் ஆகம், Thiral Aagam - வலிமையுள்ள மார்பை
கீண்டு, Keendu - எளிதாகக்கிழித்து
உகந்த, Ugantha - திருவுள்ளமுவந்தவனும்
மா, Maa - பெரிய
பங்கயம் மலர், Pangayam Malar - தாமரைப்பூப்போன்ற
கண், Kan - திருக்கண்களை யுடையவனும்
பரனை, Paranai - எல்லாரினும் மேம்பட்டவனும்
எம், Em - எமக்கு நாதனும்
பரம் சுடரை, Param Sudarai - பரஞ்சோதியென்று ஓதப்பட்டவனும்,
திங்கள், Thingal - சந்திரமண்டலத்தோடும்
மா முகில், Maa Mukil - மேகமண்டலத்தோடும்
சேர், Ser - படிந்த (சிகரத்தையுடைத்தான)
நல், Nal - விலக்ஷணமான
நின்ற, Nindra - நிற்பவனுமான
நங்கள் பிரானை, Nangal Piranai - எம்பெருமானை
என் நல் நுதல், En Nal Nuthal - அழகிய நெற்றியை  யுடையளான என் மகள்
இன்று, Indru - இப்போது
நணுகும் கொல், Nanugum Kol - சென்று சேர்ந்திடுவனோ?
1832பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வாமன வேஷத்தைக் கொண்டு போய்ப் புக்கு வளர்ந்து –பூமியாந்தரிஷ்யாதிகள் மூன்றடியிலே அடங்கும்படி அளந்தவன் – ஸ்ரீ திருமலையிலே வந்து நின்ற –அயர்வறும் அமரர்கள் அதிபதியை அவர்களோடு ஒத்த ருசியை உடைய இவள் வணங்கித் தொழ வல்லள் கொலோ) 5
தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன் தேனமர் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற வானவர் கோனை யின்று வணங்கித் தொழ வல்லள் கொலோ –9-9-5
பதவுரை Show / Hide
தானவன், Thaanavan - (மஹாபலியென்னும்) அசுரனுடைய (- (திருமாலிருஞ்சோலையில்) (என்பெண்மகள்))
வேள்வி தன்னில், Velvi Thannil - யாகத்திலே
தனியே, Thaniye - அத்விதீயனான
குறள் ஆய், Kural Aayi - வாமநமூர்த்தியாய் (எழுந்தருளி)
நிமிர்ந்து, Nimirndhu - (உதகதானம் பெற்றவாறே) ஓங்கிவளர்ந்து
வானமும், Vaanamum - மேலுலகங்களையும்
மண் அகமும், Man Akamum - கீழுலகங்களையும்
திரி விக்கிரமன், Thiri Vikkiraman - த்ஜீவிக்ரம மூர்த்தியானவனும்
தேன் அமர் பூ பொழில் சூழ், Then Amar Poo Pozhil Soozh - தேன்மிக்க பூஞ்சோலைகளால் சூழப்பட்ட
நின்ற, Nindra - நிற்பவனுமான
வானவர் கோனை, Vaanavar Konai - தேவாதிதேவனை
இன்று, Indru - இப்போது
வணங்கி தொழவல்லள், Vanangi Thozhavallal - ஸேவிக்கப்பெறுவளோ?
1833பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பர பக்திக்கும் அத்வேஷத்துக்கும் வாசி வையாதே தன்னைக் கொடுப்பான் ஒருவன் -என்கை – பர பக்தியையும் அத்வேஷத்தையும் பிறப்பிக்கைக்காக-வந்து அவதரித்தவன் – அந்த அவதார பலம் இருக்கிறபடி –பிரசஸ்த கேசனாய் இருக்கிறவனை – அக் குழலுக்கு தகுதியான அவயவ சோபையை உடையவள் கிட்ட வல்லளேயோ) 6
நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான் வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான் தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ –9-9-6
பதவுரை Show / Hide
நேசம் இல்லாதவர்க்கும், Nesam Illaadavarkkum - பரபக்தியில்லாதவர்களுக்கும் (- (திருமாலிருஞ்சோலையில்))
நினையாதவர்க்கும், Ninaiyaadavarkkum - (‘ஈச்வரனில்லை’ என்று நாஸ்திகவாதம் பண்ணுவதற்காகிலும் அவனை) நெஞ்சால் எண்ணாதவர்கட்கும்
அரியான், Ariyaan - கிட்டக்கூடாதவனும்,
வாசம் மலர் பொழில் சூழ், Vaasam Malar Pozhil Soozh - மணம்மிக்கமலர்களையுடைய சோலைகளால் சூழப்பட்ட
வட மா மதுரை, Vada Maa Madurai - திருவடமதுரையில்
தேசம் எல்லாம் வணங்கும், Desam Ellam Vanangum - எல்லாத தேசத்தவர்களாலும் வந்து வணங்கப்படும் தான்
நின்ற, Nindra - நிற்பவனும்
கேசவன் நம்பி தன்னை, Keesavan Nambi Thannai - சிறந்த குழல்கற்றையை யுடையனுமான பெருமானை
கெண்டை ஒண் கண்ணி, Kendai On Kanni - கெண்டைமீன் போன்ற கண்ணழகுடையளான என்மகள்
காணும் கொலோ, Kaanum Koloo - காணப்பெறுவளோ?
1834பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதி நிரசனத்தால் வந்த ஸ்ரமம் அடைய ஆற்றலாம் படியான தேசம் ஆயிற்று – தெளிந்த அருவிகள் ஆனவை கொழித்து எறடா நின்றுள்ள ஸ்ரீ திருமலையிலே – தன்னை சர்வ ஸ்வதானம் பண்ணி கொடு நிற்கிறவனை – அந்த ஔதார்யத்துக்கு நாம் இலக்காக வேணும் என்று இருக்கிற இவளுடைய மநோ ரதம் ஒரு படித் தலைக்கட்ட வற்றேயோ) 7
புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ –9-9-7
பதவுரை Show / Hide
புள்ளினை வாய் பிளந்து, Pullinai Vaai Pilandhu - பகாஸுரனுடைய வாயைக் கிழித்தவனும் (- (திருமாலிருஞ்சோலையில்))
பொரு மா கரி கொம்பு ஒசித்து, Poru Maa Kari Kombu Osiththu - போர்செய்ய முயன்றி (குவலயாபீடமென்னும்) மதகரியின் கொம்பை முறித்தவனும்
கள்ளம் சகடு உதைத்த, Kallam Sakadu Uthaiththa - திருட்டெண்ணங்கொண்ட சகடாஸுரனை (த் திருவடிகளால்) உழைத்தொழித்தவனும்
கரு மாணிக்கம் மா மலையை, Karum Manikkam Maa Malaiyai - பெரியகரிய மாணிக்கமலை போன்ற வடிவையுடையவனும்
தெள் அருளி கொழிக்கும், Thal Aruli Kozhikkum - தெளிந்த அருவிகள் பிரவஹிக்கப்பெற்ற
நின்ற, Nindra - நிற்பவனும்
வள்ளலை, Vallalai - உதாரனுமான பெருமானை
வாள் நுதலாள், Vaal Nuthalaal - ஒளிபொருந்திய நெற்றியை யுடையளான என்மகள்
வணங்கி தொழ வல்லள் கொலோ, Vanangi Thozha Vallal Koloo - ஸேவிக்கப்பெறுவளோ?
1835பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நித்ய சூரிகள் அனுபவித்த வடிவு அழகை இங்கு உள்ளார் இழவாத படி தனக்கு வாசஸ் ஸ்தானமாகப் போரும்படி தர்ச நீயமான பொழி லாலே சூழப் பட்ட ஸ்ரீ திருமலையிலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை – தன் மயிர் முடியாலே இவனைத் துவக்க வல்ல இவள் அவனைத் தொழுதாளாய்த் தலைக் கட்ட வல்லளேயோ) 8
பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்தொரு தேர் முன்னின்று காத்தவன் தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை தீர்த்தனைப் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற மூர்த்தியைக் கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே –9-9-8
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்பொருகாலத்தில்
பார்த்தனுக்கு, Paarththanu Kku - அர்ஜுநன்பக்கலிலே
அருளி, Aruli - அருள்கூர்ந்து
பாரத்தது, Paaraththathu - பாரதயுத்தத்திலே
ஒரு தேர் முன் நின்று, Oru Ther Mun Nindru - ஸாரதியாயிருந்து
காத்தவன் தன்னை, Kaaththavan Thannai - ரக்ஷித்தருளினவனும்,
விண்ணோர், Vinnor - நித்யஸூரிகள் அநுபவிக்கவுரிய
கரு மாணிக்கம் மா மலையை, Karum Manikkam Maa Malaiyai - கரிய பெரிய மாணிக்கமலை போன்றவடிவு படைத்தவனும்
தீர்த்தனை, Theerththanai - பரமபவித்திரனும்
பூம்பொழில் சூழ், Poombozhil Soozh - திருமாலிருஞ்சோலையில்
நின்ற, Nindra - நிற்பவனுமான
மூர்த்தியை, Moorththiyai - ஸ்வாமியை
கை தொழவும் என் மொய் குழற்கு முடியும் சொல், Kai Thozhavu En Moy Kuzharkku Mudiyum Sol - ஸேவிப்பதற்கு அடர்ந்தகூந்தலை யுடையளான் என் மக்களுக்கு வாய்க்குமோ?
1836பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷிக்கைக்கு பாங்காக ரஷ்ய வர்க்கம் உள்ள இடம் தேடி வேதைக சமதிகம்யனாய் வைத்து கண்ணுக்கு இலக்காகும் படி ஸ்ரீ திரு மலையிலே நின்றவனை – அது தன்னை பரதத்வோடு ஒக்கச் சொல்லலாம் படி எத்தனையேனும் சாலத் தண்ணியர்க்கும் முகம் கொடுத்துக் கொடு நிற்கிற இடம் இறே இவ்விடம் –-ஸ்வர்க்கத்தில் அப்சரஸ்கள் வந்து ஆஸ்ரயிக்க அவர்கள் உடைய சிலம்பின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தான ஆற்றை உடைய ஸ்ரீ திருமலையிலே வந்து நிற்கிற கல்யாண குணங்களாலும் உஜ்ஜ்வலிதனாகா நின்றுள்ள சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை கிட்டுக்கைக்கு யோக்யமான அழகை உடைய இவள் அவனைக் கிட்டிவிட வல்லளேயோ) 9
வலம்புரி யாழியானை வரையார் திரடோளன் தன்னைப் புலம் புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனைச் சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்சோலை நின்ற நலந்திகழ் நாரணனை நணுகும் கொல் என் நன்னுதலே –9-9-9
பதவுரை Show / Hide
வலம்புரி ஆழியனை, Valampuri Aazhiyanai - சங்கும் சக்கரமுமுடையனும் (- (திருமாலிருஞ்சோலையில்))
வரை ஆர் திரள் தோளன் தன்னை, Varai Aar Thiral Tholan Thannai - மலைபோன்று திரண்ட திருத்தோழ்களை யுடையவனும்
புலம்பரி நூலவனை, Pulambari Noolavananai - மநோஹரமான யஜ்ஞோபவீதத்தையுடையவனும்
பொழில் வேங்கடம், Pozhil Vengadham - சோலைசூழ்ந்த திருவேங்கட மலையிலுள்ளவனும்
வேதியனை, Vedhiyai - வேதப்ராதிபாத்யனும்
சிலம்பு இயல் ஆறு உடைய, Silambu Iyala Aaru Udaiya - ‘சிலம்பு’ என்று சொல்லப்படுகிற நூபுரகங்கையை யுடைத்தான்
நின்ற, Nindra - நிற்பவனும்
நலம் திகழ் நாரணனை, Nalam Thigazh Narananai - திருக்கல்யாணகுணங்கள் விளங்கப் பெற்றவனுமான ஸ்ரீமந்நாராயணனை
என் நல் நுதல், En Nal Nuthal - அழகிய நெற்றியையுடையளான என் மகள்
நுணகும் சகால், Nunakum Sakal - கிட்டப்பெறுவளோ?
1837பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாடலான பனுவல் பத்தையும் அப்யசிப்பார்க்கு பிராப்தி பிரதிபந்தங்கள் அடங்கலும் போம் – காணும் கொலோ என்கிற சம்சயம் இவர் தம்மோடேயாய் இவர் உடைய பிரபந்தம் அப்யசிப்பார்க்கு பிராப்தியில் ஒரு கண் அழிவு இல்லை) 10
தேடற்கு அரியவனைத் திரு மாலிருஞ்சோலை நின்ற ஆடற்பரவையனை அணியா யிழை காணும் என்று மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே –9-9-10
பதவுரை Show / Hide
தேடற்கு அரயவனை, Theedarku Arayavananai - (ஒருவற்கும் தன்முயற்சியாலே) தேடிப்பிடிக்க முடியாதவனும்
திருமாலிருஞ்சோலை நின்ற, Thirumaliruncholai Nindra - திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளியிருப்பவனும்
ஆடல் பறவையனை, Aadal Paravaiyai - (ஸந்தோஷத்திற்குப் போக்குவிடன) ஆட்டத்திற்சிறந்த பெரிய திருவடியை ஊர்தியாகவுடையனுமான ஸுந்தரபாஹுவை.
அணி ஆய் இழை காணும் என்று, Ani Aay Izhai Kaanum Endru - அழகிய ஆபரணங்களையுடைய என்மகள் காணப்பெறுவளென்று.
மாடம் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன, Maadam Kodi Mathil Soozh Mangaiyaar Kalikanri Sonna - மாடங்களில் நாட்டின் கொடிகளோடு கூடின திருமதிள்களாலே சூழப்பட்ட திருமங்கை நாட்லுள்ளர்க்கு தலைவரான ஆழிவார்ருளிச்செய்த
பாடல், Paadal - பாடலாகிய
பனுவல் பத்தும், Panoval Pathum - இப்பத்துப்பாசுரங்களையும்
பயில்பார்க்கு, Payilpaarakku - கற்பவர்களுக்கு
பாவங்கள் இல்லை, Paavangal Illai - பாவமொன்று மில்லையாகும்.
1838பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தம் திரு நாமத்தைச் சொல்லி ஏத்தும் படியாக நெஞ்சை பிரியாதே இருந்து அடியவர்க்கு பிரசாதத்தைப் பண்ணுமவன் – கிளர்ந்து ஸ்ரமஹரமான அருவிகள் நீர் மாறாதே ஒழுகுமா போலே-மேகம் பொன்களையே சிந்த – அத்தாலே மிக்க ஒளியை உடைத்தாய் செந்தாமரைகள் மாறாதே அலர்ந்த ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனவன்) 1
எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர் தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான் பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இலங்கொளி செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே –9-10-1
பதவுரை Show / Hide
எங்கள் எம் இறை, Engal Em Irai - எமக்கு அஸாதாரண ஸ்வாமியும் (- (எவ்விடத்துள்ளானென்னில்))
எம் பிரான், Em Piraan - எமக்கு உபகாரகனும்
இமை யோர்க்கு நாயகன், Imai Yorkku Naayagan - நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
ஏத்து, Aethu - துதிக்கின்ற
அடியவர் தங்கள் தம், Adiyavar Thangal Tham - பக்தர்களினுடைய
மனத்து, Manaththu - நெஞ்சிலே
பிரியாது, Priyaadhu - பிரியாமல் பொருந்தியிருந்து
அருள் புரிவான், Arul Purivaan - (அவர்கட்கு) அருள் செய்பவனுமான எம்பெருமான்
பொங்கு, Pongu - மேன்மேலும் கிளர்கின்ற
தண், Than - குளிர்ந்த
அருவி, Aruvi - அருவிகளானவை
புதம் செய்ய, Pudham Seyya - தாவிப்பாய,
பொன்களே சிதற, Pongkale Chithara - (அவ்வருவிகள் முகமாகப்) பொன்மணிகள் சிந்த
இலங்கு ஒளி, Ilangu Oli - (அதனால்) விளங்குகின்ற ஒளியையுடையதாயும்
செம் கமலம் மலரும், Sem Kamalam Malarum - செந்தாமரைப்பூக்கள் மலரப்பெற்றதாயுமுள்ள
திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலெழுந்தருளி யுள்ளான்
1839பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம்முடைய துக்கங்களை எல்லாம் போக்குகைக்காக பிராட்டிமாரோடே கூட ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 2
எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம் செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான் மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையோடும் அணைந்த மாருதம் தெய்வ நாற வரும் திருக் கோட்டியூரானே –9-10-2
பதவுரை Show / Hide
எவ்வம் நோய் தவிர்ப்பான், Evvam Noi Thavirppaan - துக்கஹேதுவான வியாதிகளை நீக்கியருள்பவனும்
எமக்கு இறை, Emakku Irai - எமக்குவகுத்த ஸ்வாமியும்
இன் நகை துவர் வாய் நிலம் மகள், In Nakai Thuvar Vaai Nilam Magal - இனிய புன்சிரிப்பையும் சிவந்த அதரத்தையுமுடையளான பூமிப்பிராட்டியினுடைய
செல்வி, Selvi - அழகை
தோய வல்லான், Thoya Vallaaan - அநுபவிக்கவல்லவனும்
திரு மா மகட்கு இனியான், Thiru Maa Makadku Iniyaan - பெரிய பிராட்டியார்க்கு போக்யனுமான எம்பெருமான்
வண்டு ஆடும், Vandu Aadum - வண்டுகள் சுழலமிடாநிற்கப் பெற்ற
மௌவல் மாலையோடும், Mauval Maalaiyodum - சாதிமல்லிகைப் பூக்களோடும்
மல்லிகை மாலையோடும், Mallikai Maalaiyodum - மல்லிகைப் பூக்களோடும்
அணைந்த, Anaindha - ஸம்பந்தித்த
மாருதம், Maarudham - காற்றானது
தெய்வம் நாற, Deivam Naara - திவ்யமான பரிமளத்தை வீசிக்கொண்டு
வரும், Varum - வந்து உலாவப்பெற்ற
திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலுள்ளான்
1840பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவ்வோ யுகங்கள் தோறும் ஆஸ்ரயிப்பார் உகந்த திரு நிறத்தை தானும் உகந்து கொண்டு பிரளய ஆபத்துக்களிலும் உதவும் ஸ்வ பாவனானவன் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் – என்கிறார்) 3
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றை சந்தந முந்தி வந்தசை தெள்ளு நீர் புறவில் திருக் கோட்டியூரானே –9-10-3
பதவுரை Show / Hide
வெள்ளியான், Velliyaan - (கிருதயுகத்தில்) வெளுத்த நிறமுடையவனும் (- (இப்படியிருந்தும்))
கரியான், Kariyaan - (கலியுகத்தில்) கறுத்தநிற முடையவனும்
மணி நிறம் வண்ணன், Mani Niram Vannan - (த்வாபரயுகத்திலே) நீல மணியின்நிறம் போன்ற நிறமுடையவனும்
விண்ணவர் தமக்கு இறை, Vinnavar Thamakku Irai - நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனும்
உயர்ந்தான், Uyarnthaan - எல்லாரினும் மேம்பட்டவனும்
எமக்கு ஒள்ளியான், Emakku Olliyaan - எனக்குத்தன்னழகைக் காட்டித்தந்தவனும்
உலகு ஏழும் உண்டு, Ulaku Ezhum Undu - (பிரளயகாலத்திலே) ஸப்தலோகங்களையும் திருவயிற்றிலே வைத்துக்காத்து
உமிழ்ந்தான், Umizhndhaan - பிறகு வெளிப்படுத்தினவனுமான ஸர்வேச்வரன்
துள்ளு நீர், Thullu Neer - கொந்தளிக்கின்ற அலைகளாலே
சாமரை கற்றை, Saamarai Kattrai - சாமரத்திரள்களையும்
சந்தனம், Sandanam - சந்தனமரங்களையும்
மொண்டு கொண்டு வந்து, Montu Kondu Vandu - இழுத்துக்கொண்டு வந்து
உந்தி, Undhi - தள்ளி
அசை, Asai - பிரவஹிக்கின்ற
தெள்ளுநீர், Thelluneer - தெளிந்தநீரையுடைய
புறவின், Puravin - சுற்றுப்பக்கங்களோடு கூடின
திருக்கோட்டியூரான, Thirukkoottiyooraan - திருக்கோட்டியூரிலுள்ளான்
1841பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டியோடு ஒக்க ருத்ரனுக்கும் திரு மேனி யிலே இடம் கொடுத்த சீலவான் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 4
ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பிலோர் கூறு தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான் நாறு செண்பக மல்லிகை மலர் புல்லியின் இளவண்டு நன்னறும் தேறல் வாய் மடுக்கும் திருக் கோட்டியூரானே –9-10-4
பதவுரை Show / Hide
ஏறு ஏறி, Eru Eri - விருஷயத்தை வாஹனமாகக்கொண்டு ஏறியிருப்பவனும்
இலங்கும் ஒன் மழு பற்றும், Ilankum On Mazhu Patrum - விளங்குகின்ற அழகிய மபுவாயுதத்தைக் கையிலேந்திக் கொண்டிருப்பவனுமான
ஈசற்கு, Eesarku - சிவபிரானுக்கு
இசைந்து, Isainthu - திருவுள்ளமிணங்கி
உடம்பில் ஓர் கூறு, Udamil Oru Kooru - தனது திருமேனியில் ஒரு பாகத்தை இருப்பிடமாகக் கொடுத்தருளினவனும்
குலம், Kulam - சிறந்த
மா மகட்கு, Maa Makadku - பெரியபிராட்டியார்க்கு
இனியான், Iniyaan - போக்யனுமான எம்பெருமான்
இன் இன வண்டு, In Ina Vandu - இனிய இளவண்டுகளானவை
நாறு, Naaru - மணம்மிக்க
செண்பகம், Senbagam - செண்பகப்பூவையும்
மல்லிகை மலர், Mallikai Malar - மல்லிகைப்பூவையும்
புல்கி, Pulki - தழுவி
நல் நறு தேறல், Nal Naru Therhal - நல்லமணமுள்ள தேனிலை
வாய் மடுக்கும், Vai Madukkum - வாய்வைத்துப் பருகுமிடமான
திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலுள்ளான்.
1842பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பண்டு பூமியை அளந்து கொண்டவன் இப்போது ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 5
வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன் விண்ணவர் கோன் மது மலர் தொங்கல் நீண் முடியான் நெடியான் படி கடந்தான் மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகமீது உயர்ந்தேறி வானுயர் திங்கள் தான் அணவும் திருக் கோட்டியூரானே –9-10-5
பதவுரை Show / Hide
வங்கம் கடல் வண்ணன், Vangam Kadal Vannan - கப்பல்களையுடைய பெரிய கடலின் நிறம்போன்ற நிறமுடையவனும்
மர மணி வண்ணன், Mara Mani Vannan - நீலமணி நிறமுடையவனும்
விண்ணவர் கோன், Vinnavar Kon - நித்யஸூரிகட்குத் தலைவனும்
மது, Madhu - தேனையுடைத்தான
மலர் தொங்கல், Malar Thongal - பூமாலையை
நீள் முடியான், Neel Mudiyaan - நீண்ட திருவபிஷேகத்தி லணிந்துள்ளவனும்
நெடியான், Nedhiyaan - ஸர்வோத்க்ருஷ்டனும்
படி கடந்தான், Padi Kadandhaan - (த்ஜீவிக்ரமாவதாரத்தில்) பூமியையளந்து கொண்டவனமான பெருமான்
மங்குல் தோய் மணி மாடம், Mangul Thoi Mani Maadam - மேகமண்டலத்தை அளாவியிருக்கின்ற மணிமாடங்களிலே (கட்டின)
வெண் கொடி, Ven Kodi - வெளுத்த த்வஜபடங்கள்
மாகம் மீது, Maagam Meedhu - ஆகாசத்தின் மேலே
உயர்ந்து ஏறி, Uyarnthu Eri - வியாபித்து
வரன் உயர் திங்கள்தான், Varan Uyar Thingalthaan - மிகவுமுயரநின்ற சந்திரனை
அணவும், Anavum - ஸ்பர்சிக்கப்பெற்ற
திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலுள்ளான்.
1843பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணன் மிடுக்கை அழித்த ஸ்ரீ தசராத்மாஜன் இப்போது ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 6
காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன் ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான் நாவலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு எனத் தேவர் வந்து இறைஞ்சும் திருக் கோட்டியூரானே –9-10-6
பதவுரை Show / Hide
காவலன், Kavalank - ‘நானே ஜகத்ரக்ஷகன்’ என்று அஹங்காரங்கொண்டிருந்த (- (எவ்விடத்திலுள்ளானென்னில்))
இலங்கைக்கு இறை, Ilangaikku Irai - லங்காதிபதியான இராவணன்
கலங்க, Kalanga - முடியும்படியாக
சரம், Saram - பாணங்களை
அவன், Avaan - அவ்விராவணனுடைய
ஏவலம், Evalam - பாணப்ரயோக ஸாமர்த்தியத்தை
தவிர்த்தான், Thavirthaan - தொலைத்தவனும்
என்னை ஆளுடை, Ennai Aaludai - என்னை அடிமைகொண்டருளினவனுமான
எம்பிரான், Embiraan - எம்பெருமான்
நாவலம் புவி மன்னர், Naavalam Puvi Mannar - ஜம்பூத்வீபத்திலுள்ள அரசர்கள்
மால் இங்கு உறைகின்றது என வந்து, Maal Ingu Uraikindrathu En Vandu - ‘எம்பெருமான் இவ்விடத்தில் நித்யஸந்நிதி பண்ணியிருக்கிறான்’ என்று தெரிந்துவந்து
வணங்க, Vananga - ஆச்ரயிக்க
தேவர், Thevar - பிரமன் முதலிய தேவர்களும்
வந்து இறைஞ்சும், Vandu Irainchum - வந்து வணங்கப்பெற்ற
திருக்கோட்டி யூரான், Thirukkoatti Yooran - திருக்கோட்டியூரிலுள்ளான்.
1844பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கன்றாயும் விளாவாயும் வந்த அசூரர்களால் வரும் நலிவைப் போக்கி ஸ்ரீ கோவர்த்தன உத்தாரணம் பண்ணின மகா அபதானத்தை உடையவன் -இப்போது ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 7
கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவன்று மா மழை நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான் குன்றின் முல்லையின் வாசமும் குளிர் முல்லையின் மணமும் அளைந்து இளம் தென்றல் வந்து உலவும் திருக் கோட்டியூரானே –9-10-7
பதவுரை Show / Hide
கன்று கொண்டு, Kandru Kondo - வத்ஸாஸுரனைக் கொண்டு
விளங்கனி, Vilanganai - கபித்தாஸுரன் மீது
எறிந்து, Erinthu - வீசியெறிந்து இரண்டையும் முடித்தவனும்
ஆநிரைக்கு அழிவு என்று, Aaniraikku Azhivu Endru - பசுக்கூட்டத்திற்குத் தீங்கு வந்ததேயென்றுபரிந்து
மா மழை, Maa Mazhai - பெருமழையை
நின்று காத்து, Ninru Kaathu - நிலைநின்று தடுத்து
உகந்தான், Uganthaan - திருவுள்ளமுவந்தவனும்
நிலம் மா மகட்கு, Nilam Maa Makadkku - பூமிப்பிராட்டிக்கு
இனியான், Iniyaan - போக்யனுமான எம்பெருமான்
இள தென்றல், Ila Thenral - இளமைதங்கிய தென்றற்கொற்று
குன்றின் முல்லையின் வாசமும், Kunrin Mullaiyin Vaasamum - மலைமுல்லைப்பூக்களின் பரிமளத்தையும்
குளிர் மல்லிகை மணமும், Kulir Malligai Manamum - குளிர்ந்த கொடிமல்லிகையின் பரிமளத்தையும்
அளைந்து, Alaindhu - முகந்துகொண்டு
வந்து உலவும், Vandhu Ulavum - வந்து (வீதிகளில்) உலாவப்பெற்ற
திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலுள்ளான்
1845பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (குருந்து தொடக்கமான விரோதி வர்க்கத்தைப் போக்கின ஸ்ரீ கிருஷ்ணன் -இப்போது ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 8
பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து அடியேனை ஆளுக ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான் தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே –9-10-8
பதவுரை Show / Hide
பூ, Poo - பூத்திருந்த
குருந்து, Kurundhu - குருந்தமரத்தை
ஒசித்து, Osiththu - முறித்துத் தள்ளினவனாயும்
ஆனை, Aanaik - (குவலயாபீட மென்னும்) யானையை
காய்ந்து, Kaayndhu - சீறிமுடித்தவனாயும்
அரிமா, Arimaa - (கேசியென்னும்) குதிரையை
செருத்து, Seruththu - கொன்றவனாயும்
அடியேனை, Adiyenai - அடியேனை
ஆள் உகந்து, Aal Ugandhu - ஆட்கொண்டருளத் திருவுள்ளமுவந்து
ஈங்கு, Eengu - இந்த ஸம்ஸாரத்திலே
என்னுள் புகுந்தான், Ennul Pugundhaan - என்னெஞ்சினுள்ளே புகுந்தருளினவனாயும்
இமையோர்கள் தம் பெருமான், Imaiyorkal Tham Perumaan - நித்யஸூரிகளுக்குத் தலைவனாயுமுள்ள பெருமான்
மாங்கனி, Maangani - மாம்பழங்கள்
துங்கு, Thungu - (பழுத்துத்) தொங்குகின்ற
தண், Than - அழகிய
பலவின் கனி, Palavin Kani - பலாப்பழங்களோடும்
தொகு வாழையின் கனியோடும், Thogu Vaalaiyin Kaniyodum - திரண்ட வாழைப்பழங்களோடுங்கூட
தேங்கு, Thengu - (விழுந்து) தேங்கியிருக்கப்பெற்ற
தண் புனல், Than Punal - குளிர்ந்த நீர்நிலங்களாலே
சூழ், Sool - சூழப்பட்ட
திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலுள்ளான்.
1846பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தான் தன்னை சர்வ பிரகாரத்தாலும் அனுபவிக்கைக்கு ஈடான பக்தியை உடையராய் -ப்ரஹ்மாவோடு சமாநரான- ப்ராஹ்மணருக்கு ஆஸ்ரயநீயனாய் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 9
கோவையின் தமிழ் பாடுவார் குடமாடுவார் தட மா மலர் மிசை மேவு நான் முகனில் விளங்கு புரி நூலர் மேவு நான் மறை வாணரை வகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும் தேவ தேவபிரான் திருக் கோட்டியூரானே –9-10-9
பதவுரை Show / Hide
கோவை இன் தமிழ், Kovai In Tamil - ஒழுங்குடைத்தான இனிய தமிழ்ப்பாசுரமாகிய இத்திருமொழியை
பாடுவார், Paduvar - (விரும்பி ஆதரித்துப்) பாடக்கூடியவர்களும்,
குடம் ஆடுவார், Kudam Aaduvar - குடமெடுத்து ஆடுமாபோலே (ப்ரீதிக்குப்போக்கு வீடாக) நர்த்தனஞ் செய்பவர்களும்
தட மா மலர் மிசை மேவு, Tada Maa Malar Misai Mevu - மிகப்பெரிய (திருநாபிக்) கமலத்தின்மீது பொருந்தியுள்ள
நான் முகனில், Naan Mughanil - பிரமனிற்காட்டிலும்
விளங்கு புரிநூலர், Vilangu Purinoolar - விளங்குகின்ற யஞ்ஞோப வீதத்தையுடையவர்களும்
மேவு நால் மறை வாணர், Mevu Naal Marai Vaanar - நான்கு வேதங்களையும் விரும்பிக் கற்றவர்களும்
ஐவகை வேள்வி, Aivagai Velvi - பஞ்சமஹாயஜ்ஞாநுஷ்டா நத்திலும்
ஆறு அங்கம், Aaru Angam - வேதாங்கங்கள் ஆறையும் பயில்வதிலும்
வல்லவர், Vallavar - ஸமர்த்தர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
தொழும், Thozhum - வணங்கப்பெற்ற
தேவதேவபிரான், Deva Deva Piraan - தேவாதிதேவன்
திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலுள்ளான்
1847பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார்களுக்கு ஸ்ரீபரமபதமே வாசஸ் ஸ்தானம் என்கிறார்) 10
ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில் சேல்கள் பாய் கழனித் திருக் கோட்டியூரானை நீல மா முகில் வண்ணனை நெடுமாலை யின் தமிழால் நினைந்த விந் நாலும் ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே –9-10-10
பதவுரை Show / Hide
ஆலும் மா வலவன், Aalum Maa Valavan - ஆடல்செய்நின்ற குதிரையை ஏறிச்செலுத்துதலில் ஸமர்த்தரும்
மங்கையர் தலைவன், Mangaiyar Thalaivan - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்,
அணி யொழில், Ani Yozhil - அழகிய சோலைகளையும்
சேல்கள் பாய் கழனி, Selgal Pai Kazhani - மீன்கள் துள்ளிவிளையாடுகின்ற கழனிகளையுமுடைத்தான
திருக்கோட்டி யானை, Thirukkoatti Yaanai - திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருப்பவனும்
முகில் வண்ணனை, Mugil Vannana - மேகம்போன்ற நிறத்தை யுடையவனும்
நெடு மாலை, Nedu Maalai - (அடியார்திறத்தில்) அதிகமான வியாமோஹத்தை யுடையனுமான எம்பெருமானை
இன் தமிழால், In Tamizhal - இனிய தமிழ்ப்பாசுரங்களைக் கொண்டு
நினைத்த, Ninaiththa - சிந்தித்த
இ நாலும் ஆறும், I Naalum Aarum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு
வான் உலகு, Vaan Ulagu - பரமபதம்
இடம் ஆகும், Idam Aakum - இருப்பிடமாகும்
1848பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு பிராப்ய பூமியைத் தருவானாய் தானே பிராப்யன் ஆனவனை திரு நீர் மலையிலே கண்டோம் இனி திருக் கண்ண மங்கையிலே காணக் கடவோம் – என்கிறார்) 1
ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள் வரு நல் தொல் கதியாகிய மைந்தனை நெருநல் கண்டது நீர் மலை இன்று போய் கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே –10-1-1
பதவுரை Show / Hide
ஒரு நல் சுற்றம், Oru Nal Suttam - அத்விதீய விலக்ஷண பந்துவாய்
எனக்கு உயிர், Enakku Uyir - எனக்கு ஆத்மாவாய்
ஒண் பொருள், On Porul - சிறந்த பெருளாயிருப்பவனாய்
வருநல் தொல் கதி ஆகிய, Varunal Thol Kathi Aagiya - மேல்வரப் போகிற நல்லப்ராய்ய பூமியும் தானேயா யிருப்பவனான
மைந்தனை, Mainthanai - நித்ய்யுவாலான பெருமானை
நெருநெல், Nerunel - நேற்று
கண்டது, Kandathu - ஸேவித்தது
நீர்மலை, Neermalai - திருநீர்மலையிலே
இன்று, Indru - இன்றைக்கோ வென்னில்,
கரு நெல் சூழ், Karunel Soozh - கருவடைந்த பயிர்களால் சூழப்பட்ட
கண்ணமங்கையுள், Kannamangaiyul - திருக்கண மங்கையிலே
போய் காண்டும், Poi Kaandum - சென்று ஸேவிப்போம்
1849பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வைஸ் ஸ்ப்ருஹணீயனானவை ஸ்ரீ திருமலையிலே கண்டோம் – இனி ஸ்ரீ திருத் தண் காவிலே சென்று காணக் கடவோம் – என்கிறார்) 2
பொன்னை மா மணியை யணி யார்ந்ததோர் மின்னை வேங்கடத் துச்சியில் கண்டு போய் என்னை யாளுடை யீசனை யெம்பிரான் தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே –10-1-2
பதவுரை Show / Hide
பொன்னை, Ponnai - பொன்போல விரும்பத்தகுந்தவனும்
மா மணியை, Maa Maniyai - நீலமணிபோன்றவனும்
அணி ஆர்ந்தது ஓர் மின்னை, Ani Aarnthathu Oru Minnai - அழகுமிக்கதொரு மின்னற் கொடிபோன்று உஜ்ஜவல ஸ்வரூபியானவனும்
என்னை ஆளுடை ஈசனை, Ennai Aaludai Eesanai - என்னை அடிமைகொண்ட ஸ்வாமியுமான
எம்பிரான் தன்னை, Embiran Thannai - ஸர்வேச்வரனை
யாம், Yaam - அடியோம்
(நெருநல்), Nerunel - நேற்று
வேங்கடத்து உச்சியில், Vengadathu Uchiil - திருவேங்கடமலையின் சிகரத்தில்
கண்டு, Kandu - ஸேவித்து,
(இன்று), Indru - இன்றைக்கு
தண்காவிலே சென்று காண்டும், Thankavilai Sendru Kaandum - திருத்தண்காவிலே போய் ஸேவிப்போம்.
1850பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வடதள சாயி யானவனை திருவாலியிலே கண்டோம் – இனி ஸ்ரீ திரு நாங்கூரிலே சென்று காணக் கடவோம் என்கிறார்) 3
வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய பாலை யாரமுதினைப் பைந்துழாய் மாலை யாலியில் கண்டு மகிழ்ந்து போய் ஞாலம் உன்னியைக் காண்டும் நாங்கூரிலே –10-1-3
பதவுரை Show / Hide
வேலை, Velai - (பிரளயக்) கடலிலே
ஆல் இலை, Aal Ilai - ஆலந்தளிரிலே
பள்ளி விரும்பிய, Palli Virumbiya - திருக்கண் துயில்வதை உகந்தருளினவனும்
பாலை, Paalai - பால்போன்றவனும்
ஆர் அமுதத்தினை, Aar Amudaththinai - அருமையான அமிருதம் போன்றவனும்
பைந்துழாய், Painthuzhai - பசுமைதங்கிய திருத்துழாயை யுடையவனும்
ஞாலம் உன்னியை, Njaalam Unniyai - உலகத்தவர்களெல்லாராலும் தியானிக்கப்படுபவனுமான
மாலை, Maalaik - ஸர்வேச்வரனை
ஆலியில் கண்டு மகிழ்ந்து, Aaliil Kandu Makizhndhu - திருவாலியில் ஸேவித்து ஆநந்தித்து
நாங்கூரிலே போய் காண்டும், Naangoorile Poi Kaandum - திருநாங்கூரிலே சென்று ஸேவிப்போம்.
1851பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ப்ரஹ்லதா ஆழ்வானுக்கு விரோதியான ஹிரண்யனை போக்கினவனை ஸ்ரீ திருப் பேரிலே கண்டோம் இனிப் போய் ஸ்ரீ திரு வெள்ளறையிலே காணக் கடவோம் என்கிறார்) 4
துளக்கமில் சுடரை அவுணன் உடல் பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய் அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள் விளக்கினைச் சென்று வெள்ளறை காண்டுமே –10-1-4
பதவுரை Show / Hide
துளக்கம் இல் சுடரை, Thulakkam Il Sudarai - ஒன்றாலும் அழிதலில்லாத ஒளியையுடையவனும்
அவுணன், Avaunan - (இரணியனென்னும்) அஸுரனுடைய
உடல், Udal - உடம்பை
பிளக்கும், Pilakkum - பிளந்தொழித்த
மைந்தனை, Mainthanai - மிடுக்கையுடையவனும்
அளப்பு இல் ஆர் அமுதை, Alappu Il Aar Amudhai - அளவிடுதலில்லாத போக்யதையை யுடைத்தான அமிருதம் போன்றவனும்
அமரர்க்கு அருள் விளக்கினை, Amararukku Arul Vilakkinai - நித்யஸூரிகளுக்கு அருள் செய்கின்ற விளக்குப் போன்றவனுமான பெருமானை
பேரில், Peril - திருப்பேர் நகரில்
வணங்கிப்போய், Vanangippoy - ஸேவித்து
வெள்ளறை, Vellarai - திருவெள்ளறையிலே
சென்று காண்டும், Sendru Kaandum - சென்று தொழுவோம்
1852பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ருத்ரனுடைய சாபத்தைப் போக்கினவனை ஸ்ரீ திரு நறையூரிலே கண்டோம் இனிப் போய் ஸ்ரீ திரு மெய்யத்திலே காணக் கடவோம் என்கிறார்) 5
சுடலையில் சுடு நீறன் அமர்ந்ததோர் நடலை தீர்த்தவனை நறையூர்க் கண்டு என் உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி யுண் விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துள்ளே –10-1-5
பதவுரை Show / Hide
சுடலையில், Sudalaiyil - சுடுகாட்டில்
சுடுநீறன், Suduneeran - சுட்டசாம்பலைப் பூசுமவனான ருத்ரனுக்கு
அமர்ந்தது, Amarnthathu - நேர்ந்ததான
ஓர் நடலை, Oru Nattalai - ஒரு கஷ்டத்தை
தீர்த்தவனை, Theerthavanai - போக்கியருளினவனும்
என் உடலை உள் புகுந்து, En Udalai Ula Pugundhu - எனது சரீரத்தினுள்ளே புகுந்து
உள்ளம், Ullam - நெஞ்சே
உருக்கி உண், Urukki Un - உருக்கி உண்கின்ற
விடலையை, Vidalaiyai - யுவாவுமான ஸர்வேச்வரனை
நறையூர் கண்டு, Naraiyur Kandu - திருநறையூரிலே ஸேவித்து
மெய்யத்துள்ளே சென்று காண்டும், Meyyaththulle Sendru Kaandum - திருமெய்யத்திலே சென்று ஸேவிப்போம்
1853பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரயோஜனாந்த பரருக்கும் அபேஷிதம் செய்யும் பரம உதாரனை ஸ்ரீ திருச் சேறையிலே கண்டோம் இனி ஸ்ரீ திருக் குடந்தையிலே காணக் கடவோம் என்கிறார்) 6
வானையார் அமுதம் தந்த வள்ளலைத் தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய் ஆனை வாட்டி யருளும் யமரர் தம் கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே –10-1-6
பதவுரை Show / Hide
வானையார், Vaanaiyaar - வானுலகத்திலுள்ளார்க்கு
அமுதம் தக்க, Amudham Thakka - அமுதமெடுத்தளித்த
வள்ளலை, Vallalai - உதாரனும்,
தேனை, Thenai - தேன்போல இனியவனும்
ஆனை, Aanaik - (குவலயாபீடமென்கிற) யானையை
வாட்டி அருளும், Vaatti Arulum - கொன்றொழித்தவனும்
அமரர்தம் கோனை, Amarartham Konai - நித்யஸூரிகளுக்கு நியாமகனுமான எம்பெருமானை
யாம், Yaam - அடியோம்
நீள் வயல் சேறையில், Neel Vayal Seraiyil - நீண்டவயல்களை யுடைத்தான திருச்சேறையில்
கண்டுபோய், Kandupoy - ஸேவித்து
குடந்தை, Kudanthai - திருக்குடந்தையிலே
சென்று காண்டும், Sendru Kaandum - போய்ஸேவிப்போம்.
1854பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கிருஷ்ணனாய் அனுகூல ஸ்பர்சம் உள்ள வெண்ணெயை விழுங்கினவனை ஸ்ரீ திருவழுந்தூரிலே கண்டோம் இனிப் போய் ஸ்ரீ திரு வெக்காவில் காணக் கடவோம்) 7
கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய் மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய் பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய வேந்தனைச் சென்று காண்டும் வெக்கா வுளே –10-1-7
பதவுரை Show / Hide
கூந்தலார் மகிழ் கோவலன் ஆய், Koondhalar Magizh Kovalain Aay - சிறந்த கூந்தலையுடையரான ஸ்த்ரீகள் உகக்கும்படியான கோபாலகிருஷ்ணனாய்த் திருவவதரித்து (- (கண்டு மகிழ்ந்து போய்))
வெண்ணெய், Vennai - வெண்ணெயை
மாந்த, Mantha - அமுதுசெய்யாநிற்க
அழுந்தையில், Azhundhaiyil - தேரழுந்தூரிலே
பாந்தள் பாழியில், Panthal Pazhiyil - திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
பள்ளி, Palli - திருக்கண்வளர்தலை
விரும்பிய, Virumbiya - விரும்பிக் கைக்கொண்ட
வேந்தனை, Vendhanai - ஸர்வேச்வரனை
வெஃகாவுள், Vekavul - திருவெஃகாவில்
சென்று காண்டும், Sendru Kaandum - போய் ஸேவிப்போம்
1855பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் திருவடிகளிலே நல்லாருக்கு ஆத்மாவனவனை ஸ்ரீ தெற்குத் திருமலையிலே கண்டோம் இனிப் போய் ஸ்ரீ திரு விண்ணகரிலே காணக் கடவோம் என்கிறார்) 8
பத்தராவியைப் பான்மதியை யணித் தொத்தை மாலிருஞ்சோலை தொழுது போய் முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினைச் சென்று விண்ணகர் காண்டுமே –10-1-8
பதவுரை Show / Hide
பத்தர் ஆவியை, Pathar Aaviyai - பக்தர்களுக்கு ஆத்மாவாக வுள்ளவனும்
பால் மதியை, Paal Mathiyai - களங்கமற்ற சந்திரனைப் போல அழகியவனும்
அணி தொத்தை, Ani Thothai - ஆபரணமாலை போன்றவனும்
முத்தினை, Muththinai - முத்துப்போன்றவனும்
மணியை, Maniyai - நீலமணிபோன்றவனும்
மணி மாணிக்கம், Mani Manikkam - சிறந்த மாணிக்கம் போன்றவனும்
வித்தினை, Viththinai - ஜகத்காரண பூகனுமான எம்பெருமானை
மாலிருஞ்சோலை, Maliruncholai - திருமாலிருஞ்சோலையில்
போய் தொழுது, Poi Thozhudhu - சென்று பணிந்து
விண்ணகர், Vinnagar - திருவிண்ணகரிலே
சென்று காண்டும், Sendru Kaandum - போய் ஸேவிப்போம்
1856பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (குவலயா பீடத்தின் கொம்பைப் பறித்தவனை ஸ்ரீ திருக் கோட்டியூரிலே கண்டு போய் ஸ்ரீ திரு நாவாயிலே காணக் கடவோம் என்கிறார்) 9
கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க வோர் கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனைக் கொம்புலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய் நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே –10-1-9
பதவுரை Show / Hide
கம்பம், Kambam - (கண்டார்க்கு) நடுக்கத்தை விளைக்கத்தக்கதாய்
மா, Maa - பெரிய வடிவுடைத்தான
களிறு, Kaliru - (குவலயாபீடமென்னும்) யானை
அஞ்சி, Anji - பயப்பட்டு
கலங்க, Kalanga - கலங்கி முடியுமாறு
ஓர் கொம்பு கொண்ட, Oru Kombu Konda - அதன் கொம்பை முறித்தெறிந்தவனும்
குரை கழல், Kurai Kazhal - ஒலிக்கின்ற வீரக்கழலை யுடையவனும்
கூத்தனை, Koothanai - விசித்திரமான நடையுடையவனும்
நம்பனை, Nambanai - (அன்பர்) விச்வஸிக்கத் தகுந்தவனுமான பெருமானை
கொம்புஉலாம் பொழில், Kombulalam Pozhil - கிளைகள் விளங்குகின்ற சோலைகள் யுடைத்தான
கோட்டியூர், Kottiyur - திருக்கோட்டியூரிலே
போய் கண்டு, Poi Kandu - சென்று ஸேவித்து
நாவாயுள் சென்று காண்டு, Navayul Sendru Kandu - திருநாவாயில் போய் ஸேவிப்போம்
1857பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவை சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு விச்சேதம் இல்லை –நச புனராவர்த்ததே ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே-நித்ய அனுபவம் பண்ணலாம் தேசத்தை ஆளுவார்கள்) 10
பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக் கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த சொல் திறமிவை சொல்லிய தொண்டர்க்கு அற்றமில்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே –10-1-10
பதவுரை Show / Hide
பெற்றம் ஆளியை, Petram Aalaiya - பசுக்களை ஆளப்பிறந்தவனும்
பேரில், Peril - திருப்பேர் நகரில்
மணளனை, Manalanai - மணவாளப்பிள்ளையாக ;ஸேவை ஸாதிப்பவனுமான பெருமான் விஷயமாக,
நூல் கற்ற கலிகன்றி உரைசெய்த, Nool Katra Kalikanri Uraichaidha - நூல்களைப் பயின்ற திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
சொல் திறம் இவை, Sol Thiram Ivai - இந்த சப்தராசியை
சொல்லிய தொண்டர் கட்கு, Solliya Thondar Kadku - ஓதுகின்ற பாகவதர்களுக்கு
அற்றம் இல்லை, Attram Illai - (கைங்கரியத்திற்கு) இடையூறு (ஒருநாளும்) இல்லையாம்.
அவர்க்கு அண்டம் ஆட்சி, Avarkku Andam Aatchi - அவர்களுக்குப் பரமபதம் ஆளவுரியதாம்.
1858பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராஷசரில் இனி ஆடு போலேக் கூப்பிடக் கடவார் இல்லை -என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர் – ஆடு -என்று வெற்றி இந்த ராஷச ஜாதியிலே வெற்றி சொல்லக் கடவார் இல்லை -என்கிறது என்ன இதுவே இறே பொருள் என்று அருளிச் செய்தார் -என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார் – தோற்றவர்கள் தோல்வியாலே பறையடிக்க ஆடுவதொரு கூத்துண்டு – அந்த சப்த அநுகாரம் – பொங்கத்தம் பொங்கோ –என்கிற இது) 1
இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர் பரக்க யாம் இன்று உரைத்தென் இராவணன் பட்டன இனி யாவர்க்கு உரைக்கோம் குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல வல்விலி ராமபிரானே அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-1
பதவுரை Show / Hide
எம் கோன், Em Kon - எங்களுக்குத் தலைவனான இராவணன்
இரக்கம் இன்றி, Irakkam Inri - ஈரநெஞ்சு இல்லாமல்
செய்த, Seitha - பண்ணின
தீமை, Theemai - அபசாரமானது
இம்மையே, Immaiye - இப்பிறப்பிலேயே
எமக்கு, Emakku - எங்களுக்கு
எய்திற்று காணீர், Eydhithru Kanneer - பலித்துவிட்டது பாருங்கோள்
இன்று, Indru - இப்போது
யாம், Yaam - நாங்கள்
பார்க்க, Paarka - விரிவாக
உரைத்து என், Uraiththu En - சொல்லுவதனால் என்ன பயன்?
இராவணன் பட்டனன், Iravanan Pattanan - ராவண்ன் மாண்டு போனான்,
இனி, Ini - இனிமேல்
யாவர்க்கு உரைக்கோம், Yaavarkku Uraikkom - யாருக்குச் சொல்லுவோம்
குரங்கு நாயகர்காள், Kurangu Naayakar Kaal - வாநரஸேநாபதிகளே!
இளங்கோவே, Ilankove - இளைய பெருமாளே!
கோல் வல்வில் இராமபிரானே, Kol Valvil Ramapiraney - அழகிய திண்ணிதான சார்ங்கவில்லைக்கொண்ட ஸ்ரீராமபிரானே!
அரக்கர், Arakkar - ராக்ஷஸஜாதியில்
ஆடு அழைப்பார் இல்லை, Aadu Azaippaar Illai - வெற்றியைச் சொல்லிக் கூவுவாரில்லை
நாங்கள், Naangal - (தோற்றொழிந்த) நாங்கள்
அஞ்சினோம், Anjinom - பயப்படுகின்றோம்
தடம் பொங்கத்தம் பொங்கோ, Thadam Pongatham Pongoo - தோற்ற தோல்விக்கு நாங்கள் ஆடுகிற ஆட்டங்காண்மின் என்றவாறு.
1859பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒப்பாய் இருக்கிற தோள் இரண்டையும் ஒரு திரு அபிஷேகத்தையும் உடையராய் இருக்கிற உம்மைக் கண்டு அடியாரான நாங்கள் ஒருவர் இருவர் அன்றிக்கே எல்லாரும் ஒக்க வாழ்ந்தோம் எமக்கு ஜனகன் ஆனவனே –எங்கள் நாதனே –-அஞ்சினோம் என்றாரைக் கொல்லுகை உனக்குப் போருமோ) 2
பத்து நீண் முடியும் அவற்றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம் சித்தம் மங்கையர்பால் வைத்துக் கெட்டான் செய்வதொன்று அறியா வடியோங்கள் ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம் அத்த யெம்பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-2
பதவுரை Show / Hide
அந்த எம்பெருமான், Andha Emperumaan - ஸ்வாமிந் ஸ்ரீராமபிரானே! (- (அஞ்சினோம், தடம்பொங்கத்தம் பொங்கோ))
நீள், Neel - நீண்ட
பத்து முடியும், Paththu Mudiyum - பத்துதலைகளையும்
அவை இரட்டி, Avai Iratti - அந்தத் தலைகளின் கணக்கில் இரட்டிப்பான கணக்கை யுடையவையாய்
பாழி, Paazhi - வலிமைமிக்கவையான
தோளும், Tholum - (இருபது) தோள்களையும்
படைத்தவன், Padaiththavan - உடையவனான இராவணன்
மங்கையர் பால் சித்தம் வைத்து, Mangaiyar Paal Sittam Vaiththu - ஸ்த்ரீ விஷயத்தில் மனம் செலுத்தி
செல்வம் கெட்டான், Selvam Kettaan - (தனது) செல்வம் அழியப் பெற்றான்
செய்வது ஒன்று அறியா அடியோங்கள், Seivathu Ondru Ariyaa Adiyongal - இனிச் செய்யத் தக்க தொன்று மறிய கில்லாத நாங்கள்
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும், Oththa Thol Irandum Oru Mudiyum - ஒன்றோடொன்று ஒப்பான இரண்டு திருத்தோள்களையும் ஒரு திருமுடியையுமுடையாய்
ஒருவர் தம் திறத்தோம் அன்றி, Oruvar Tham Thiraththom Andri - அத்விதீயரான தேவரீர் பக்கல் இதற்குமுன்பு ஈடு பட்டவர்களல்லாமையாலே
வாழ்ந்தோம், Vaazhnthom - கெட்டுப்போனோம்
எம்மை கொல்லேல், Emmai Kollel - எங்களைக் கொல்லா தொழிய வேணும்,
1860பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிரபதாரரைக் கொல்லாத இஷ்வாகு வம்சத்திலே பிறந்ததுக்கு தலை யன்றோ நீர்-விஷய ப்ரவணராய் கெடக் கடவ இஜ் ஜாதியை எத்தைச் சொல்லுவது-ஸ்வர்க்கத்துக்கு வன்னியம் அறுத்தவன் மகனே உனக்கு இஷ்டரான தேவர்கள் உகந்ததுவே செய்து விட்டாய் – அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ) 3
தண்ட காரணியம் புகுந்து அன்று தையலைத் தகவிலி எங்கோமான் கொண்டு போந்து கெட்டான் எமக்கு இங்கோர் குற்றமில்லை கொல்லேல் குலவேந்தே பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப் பேசுகின்றது என் தாசரதீ உன் அண்ட வாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-3
பதவுரை Show / Hide
குலம் வேந்தே, Kulam Vendee - (குற்றமற்றவர்களைத் தண்டியாத இக்ஷ்வாகுவின்) வம்சத்துக்குத் தலைவரே! (- (அக்குற்றங்காரணமாக) (ஆகையாலே) (அஞ்சினோம், தடம் பொங்கத்தம் பொங்கோ.))
தாசரதீ, Thaasarathii - ஸ்ரீராமபிரானே!
தகவு இலி எம்கோமான், Thagavu Ili Emkoman - ஈர்நெஞ்சு இல்லாதவனாய் எங்களுக்குத் தலைவனாயிருந்த இராவணன்
அன்று, Anru - (நீங்கள் வனத்திலே தாபஸராயிருந்த) அக்காலத்திலே
தண்டகாரணியம் புகுந்து, Thandakaraniyam Pugunthu - தண்டகாரணியத்தில் பிரவேசித்து
தையலை, Thailai - அழகிற்சிறந்த பிராட்டியை
கொண்டு போந்து, Kondhu Ponthu - அபஹரித்து வந்து
எமக்கு, Emakku - எங்களுக்கு
ஓர் குற்றம் இல்லை, Or Kuttram Illai - ஒரு குற்றமும் கிடையாது
கொல்லேல், Kollel - (எங்களைக்) கொல்லா தொழியவேணும்
பெண்டிரால் கெடும், Pendiraal Kedum - ஸ்த்ரீசாபல்யங் காரணமாகக் கெட்டுப்போகின்ற
இக் குடி தன்னை, Ik Kudi Thannai - இந்த ராக்ஷஸஜாதியைப் பற்றி
பேசுகின்றது என், Pesugindrathu En - பேசலாவது என்ன இருக்கிறது?
உன் அண்ட வாணர், Un Anda Vaanar - தேவரீருக்கு இஷ்டரான தேவதைகள்
உகப்பதே, Ugappadhe - ஸந்தோஷிக்கக்கூடிய காரியத்தையே
செய்தாய், Seithai - செய்தருளினீர்,
1861பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கல்யாண குணங்களால் பூரணையாய் இருக்கிற இவளை ராஷச குலத்துக்கு நஞ்சு கிடாய் -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சொன்னான் –ஸ்ரீ பிராட்டியை கொடு போங்கோள்) 4
எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-4
பதவுரை Show / Hide
ஏஞ்சல் இல், Aenjal Il - ஒரு குறைவுமில்லாதவனாய் (- (அப்படி சொல்லியும் அப்பாவி பணிந்து வாழ மாட்டாமையாலே) (அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.))
இலங்கைக்கு இறை, Ilankaiyil Irai - (இந்த) லங்காபுரிக்கு அரசனாய்
எம் கோன் தன்னை, Em Kon Thannai - எங்களுக்குத் தலைவனாயிருந்த இராவணனை நோக்கி
முன், Mun - முன்பு
எங்கள் கண் முகப்பே, Engal Kan Mugappe - எங்கள் கண்ணெதிரில்
அவன் தம்பியே, Avan Thambiye - அவனுக்குத் தம்பியான விபீஷ்ணாழ்வான்
பணிந்து, Panindhu - விநயமுடன்கைகூப்பிநின்று
நங்கையை அரக்கர் குடிக்கு நஞ்சுதான் என்று சொன்னான், Nangaiyai Arakkar Kudikku Nanjudhaan Endru Sonnaan - ‘இப்பிராட்டி ராக்ஷஸ குலத்துக்கு விஷமாகத் தோன்றியவன் கிடாய்’ என்று சொன்னான்
விஞ்சை வானவர் வேண்டிற்றேபட்டோம், Vinchai Vaanavar Vendirthepattoam - தேவஜாதிகள் ஆசைப்பட்டிருந்தபடியே (நாங்கள்) அனர்த்தப்பட்டோம்
வேரி வார் பொழில் மா மயில் அன்ன, Vaeri Vaar Pozhil Maa Mayil Anna - பரிமளத்தையுடைத்தாய் விசாலமான சோலையில் வளர்ந்த சிறந்தமயில் போன்றவளும்
அஞ்சு அல் ஓதியை, Anju Al Othiyai - (சுருட்சி நீட்சி குளிர்ச்சி அழகு பரிமளம் என்று) ஐந்துவகைப்பட்ட குணங்களையுடையதாய் ராத்ரிபோற் கறுத்திருக்கின்ற கூந்தலையுடையளுமான பிராட்டியை
கொண்டு நடமின், Kondhu Nadamin - கொண்டு போங்கள்
1862பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணன் கையிலே முன்பு தோற்ற ம்ருத்யு வானவன் வந்து ராவணன் தேவர்களை நெருக்கி வரக் கொண்டு மனுஷ்யர்களை அநாதரித்தான்-அத்தாலே அந்த ம்ருத்யு மானுஷ வேஷத்தை பரிஹரித்து தோன்றி – அந்த மனிச்சுக்கு ஏகாந்தமான அம்பாலே எங்களை கொல்லுகிற இத்தனை – அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ) 5
செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர் கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-5
பதவுரை Show / Hide
செம் பொன் நீள் முடி, Sem Pon Neel Mudi - செம்பொன்னாற் செய்யப்பட்ட நீண்ட கிரீடத்தை யுடையனாய் (- (அதுவே நிமித்தமாக) (அஞ்சினோம், தடம் பொங்கத்தம் பொங்கோ))
எங்கள், Engal - எங்களுக்குத் தலைவனான
இராவணன், Iravanan - ராவணனானவன்
சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து, Seethai Enbathu Oru Deivam Konarnthu - ஸீதையென்கிற ஒரு தெய்வப் பெண்ணைக் கவர்ந்து வந்து
வம்பு உலாம் கடி காவில், Vambu Ulam Kadi Kaavil - புதுமை மாறாத்தும் பரிமளத்தை யுடையதுமான (அசோக)வனத்திலே
சிறை ஆ வைத்ததே, Sirai Aa Vaiththadhe - சிறையிலிருப்பாம்படி வைத்திருந்த இதுதானே
குற்றம் ஆயிற்று, Kutram Aayitru - அபராதமாய்த் தலைக் கட்டிற்றுக்கிடீர்
கும்பனோடு நிகும்பனும் பட்டான், Kumbanodu Nikumbanum Pattaan - கும்பனும் நிகும்பனும் மாண்டொழிந்தனர்
கூற்றம், Kootram - (இராவணன்கையில் முன்பு தோற்றிருந்த) யமனானவன்
மானிடம் ஆய் வந்து தோன்றி, Maanidam Aay Vandhu Thonri - மநுஷ்ய வேஷத்தைப் பூண்டு கொண்டு இங்ஙனே வந்துதோன்றி
எம்மை, Emmai - எங்களை
அம்பினால், Ambinaal - பாணத்தினால்
கொன்றிடு கின்றது, Kondridhu Kindrathu - கொல்லுகின்றான்.
1863பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அரணை உடைத்தாய் அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து – வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் –நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம் என்று அவன் கையிலே ஸ்ரீ பிராட்டியை விட்டுக் கொடாதே இளிம்பரான நாங்கள் இப்படிப் படா நின்றோம் –அச்சம் அல்லாத அன்று பட்டத்தை இன்று பட வேணுமோ) 6
ஓதமாகடலைக் கடந்தேறி யுயர்கொள் மாக்கடிகாவை யிறுத்துக் காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடலிலங்கை மலங்க எரித்துத் தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே ஆதர் நின்று படுகின்றது அந்தோ அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-6
பதவுரை Show / Hide
ஓதம், Otham - அலைகலையுடைய (- (அஞ்சினோம், தடம் பொங்கத்தம் பொங்கோ.))
கடந்து ஏறி, Kadandhu Eri - தாண்டி
உயிர்கொள் மா கடி காவை இறுத்து, Uyirkol Maa Kadi Kaavai Irudhu - உயர்த்தியையுடைத்தாய்ப் பெரிதாய் மணம்மிக்கதான அசோகவனத்தை முறித்து
காதல், Kaadhal - (இராவணனுடைய) அன்புக்கு இலக்கான
மக்களும், Makkalum - அக்ஷகுமாரன் முதலிய புத்திரர்களையும்
சுற்றமும், Sutramum - அந்தரங்க சேவகர்களையும்
கொன்று, Konru - கொலை செய்து
கடி இலங்கை மலங்க எரித்து, Kadi Ilangai Malanga Erithu - காவலையுடைத்தான லங்கையானது கலங்கும்படியாகத் தீக்கொளுவி
தூது வந்த, Thoodhu Vanda - (பிராட்டிபக்கல்) தூத சொல்லவந்த
குரங்குக்கே, Kurangukke - அனுமான் கையிலேயே
உங்கள் தோன்றல் தேவியை, Ungal Thondral Deiviyai - உங்கள் ஸ்வாமியான பெருமாளுடைய தேவியான ஸீதையை
விட்டுக் கொடாதே, Vittuk Kodaadhe - ஸமர்ப்பியாமல்
ஆதர், Aadhar - அவிவேகிகளான நாங்கள்
நின்று படுகின்றது அந்தோ, Ninru Padikindrathu Andho - இப்படி துவண்டு நின்று அநர்த்தப்பட வேண்டிற்றாயிற்று ஐயோ!
1864பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அப்ராப்த விஷயத்தில் சாபலத்தை பண்ணுமவனை – நான் இவ்வூர்க்கு அதிபதி -நிர்வாஹகன் என்று இது ஒன்றுமையே நினைத்து இருந்தான் – குற்றம் நின்ற இடத்தே வதம் பண்ணப் பார்த்தருள வேணும் – நாங்கள் அறியாமல் கொலை உண்டோம் ஆகாமல் சொன்னோம் – தடம் பொங்கத்தம் பொங்கோ) 7
தாழமின்றி முந்நீரை யஞ்ஞான்று தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல் மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதியின் மனத்தானை ஏழையை இலங்கைக்கு இறை தன்னை எங்களை யொழியக் கொலையவனைச் சூழுமா நினை மா மணி வண்ணா சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-7
பதவுரை Show / Hide
மா மணி வண்ணா, Maa Mani Vanna - நீலமணிநிறத்தனாவ பெருமானே! (- (தடம் பொங்கத்தம் பொங்கோ))
தாழம் இன்றி, Thaalam Inri - காலதாமதமில்லாமல்
முந்நீரை, Munnirai - கடலை
அஞ்ஞான்று, Anjjaantru - அன்றைக்கு
தகைந்ததே கண்டு, Thakainthadhe Kandu - அணைசெய்த்தொன்றையே கண்டு,
வஞ்சி நுண் மருங்குல், Vanchi Nun Marungul - வஞ்சிக்கொடி போன்று நுட்பமான இடையை யுடையளாய்
மாழை மான் மட நோக்கியை, Maazhai Maan Mada Nokkikie - பேதைமைக்குணமுள்ள மானின்பார்வை போன்ற கபட மற்ற கண் பார்வையை யுடையளான ஸீதையை
விட்டு, Vittu - (தேவரீர் ஸந்நிதியிலே) ஸமர்ப்பித்துவிட்டு
இலங்கைக்கு இறை தன்னை அவனை, Ilangaikku Irai Thannai Avanai - அந்த இராவணனை
எங்களை ஒழிய கொலை, Engalai Ozhiy Kolai - எங்களைத் தவிர்த்துக் கொல்லவேணும்
சூழும் ஆ நினை, Soolum Aa Ninai - அடியோங்கள் தேவரிரைச் சூழ்ந்துக்கொண்டு பிரார்த்திக்கிறவிதனைத் திருவுள்ளம் பற்றவேணும்
சொல்லினோம், Sollinom - எங்கள் கோரிக்கையை விண்ணப்பஞ்செய்து கொண்டோம்
1865பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டியை சிறை வைத்த ராவணன் உடைய தப்ப நினைத்த நெஞ்சில் –உறைக்க எய்ய வல்லனாய் அழகிய வடிவையும் திண்ணிய தோளையும் உடைய ஸ்ரீ பெருமாளுக்கு அஞ்சினோம்) 8
மனம் கொண்டேறும் மண்டோதரி முதலா அங்கயல் கண்ணினார்கள் இருப்பத் தனம் கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து தஞ்சமே சில தாபதர் என்று புனம் கொள் மென் மயிலைச் சிறை வைத்த புன்மையாளன் நெஞ்சில் புக வெய்த அனங்கன் அன்ன திண தோள் எம்மிராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-8
பதவுரை Show / Hide
மனம் கொண்டு ஏறும், Manam Kondu Aerum - நெஞ்சைக் கவரும்படியான அழகுடையவர்களான (- (அஞ்சினோம், தடம் பொங்கத்தம் பொங்கோ))
மண்டோதரி முதலா, Mandothari Muthala - மந்தோதரி முதலான
அம் கயல் கண்ணினார்கள், Am Kayal Kanninargal - அழகிய மீன்போன்ற கண்களையுடையரான மனைவியர் பலர்
இருப்பு, Iruppu - குறையற்றிருக்கச் செய்தேயும்,
தனம் கொள், Thanam Kol - தனக்குச் செல்வமாயிருக்கின்ற
மெல் முலை, Mel Mulai - அவர்களுடைய அழகிய முலைகளிலே
நோக்கம் ஒழிந்து, Nokkam Ozhinthu - கண் செலுத்தாமல்
சில தாபதர் தஞ்சமே என்று, Sila Thapathar Thanjame Endru - (இப்பிராட்டிக்காகப் பரிந்து வரக்கூடியவர்கள்) சில காட்டாள்கள்தானே அவர்கள்சரக்கோ, என்று அவலீலையாக நினைத்துக் கொண்டு
புனம் கொள் மென் மயிலை சிறை வைத்த, Punam Kol Men Mayilai Sirai Vaiththa - காட்டில் தன்னிஷ்டப்படி திரிகின்ற அழகிய மயில் போன்றவளான பிராட்டியைச் சிறையிலே வைத்தவனாய்
புன்மை யாளன், Punmai Yalan - நீசனான இராவணனுடைய
நெஞ்சில், Nenjil - மருமத்திலே
புக, Puga - உறைக்க
எய்த, Eitha - அம்பு செலுத்தியவரும்
அனங்கள் அன்ன, Anangal Anna - மன்மதனைப் போன்ற அழகுடையவரும்
திண் தோள், Thin Thol - வலிமைமிக்க திருத்தோள்களையுடையவருமான
எம் இராமற்கு, Em Iramarukku - எங்களிராமவிரானுக்கு
1866பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மகா ராஜர் புருஷகரமாகத் தொழுதோம் – எங்களுக்கு இரங்க வேணும் – எங்கள் நாயகனே – லோகத்துக்கு அடைய பிரகாசனான ஆதித்யன் மகன் அன்றோ நீர் சர்வ நிர்வாககர் அன்றோ – நாங்கள் சொல்லச் செய்தே எங்களைக் கொல்லில் உங்களுக்கு அவத்யமாம் – தடம் பொங்கத்தம் பொங்கோ) 9
புரங்கள் மூன்றுமோர் மாத்திரை போதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பில் சரங்களே கொடிதாய் அடுகின்ற சாம்பவான் உடன் நிற்கத் தொழுதோம் இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெங்கதிரோன் சிறுவா குரங்குகட்கு அரசே எம்மைக் கொல்லேல் கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-9
பதவுரை Show / Hide
ஓர் மாத்திரை போதில், Or Maathirai Podhil - ஒரு கண்ணிமைப்பொழுதில் (- (தடம் பொங்கத்தம் பொங்கோ))
புரங்கள் மூன்றும், Purangal Moondrum - முப்புரங்களையும்
பொங்கு எரிக்கு, Pongu Erikku - அக்நிஜ்வாலைக்கு
இரை கண்டவன், Irai Kandanavan - இரையாக்கின ருத்ரனுடைய
அம்பில், Ambil - அம்புகளிற்காட்டிலும்
சரங்கன், Sarangkan - இந்த ராமபரணங்கள்
கொடிது ஆய், Kodithu Aay - கொடியவைகளாய்
அடுகின்ற, Adhigindra - பொசிக்கின்றன
சாம்பவான், Sambavaan - ஸ்ரீஜாம்பவான்
உடன் நிற்க, Udan Nirka - புருஷகாரமாகக் கூடநிற்க
தொழுதோம், Thozhudhom - வணங்குகின்றோம்
எந்தை பிரானே, Endhai Pirane - எங்கள் நாயகனே!
இலங்கு வெம் கதிரோன்தான் சிறுவர், Ilangu Vem Kathironthan Siruvar - விளங்குகின்ற ஸூர்யனுக்குப் புதல்வனாய்
குரங்குகட்கு அரசே, Kurangukadku Arase - வாநரங்கட்குப் பிரபுவான ஸுக்ரீவனே!
எமக்கு நீ இரங்கு, Emakku Nee Irangu - எங்கள் விஷயத்திலே நீ இரங்கியருளவேணும்
எம்மை கொல்லேல், Emmai Kollel - எங்களைக் கொல்லா தொழியவேணும்
கூறினோம், Koornom - இந்தப் பிரார்த்தனையே அடுத்தடுத்துச் சொல்லுகின்றோம்,
1867பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தொண்டீர் -அந்த ராஷசர்கே கண்ட பாசுரம் அன்று இது-ஜிதந்தே -என்றால் -எல்லாருக்கும் சொல்ல வேணும் இறே- இச் சரீர அநந்தரம் இருக்கும் இடம் ஸ்ரீ பரம பதம் –அது தான் அனுபவத்தால் அறிந்து கொள்ளும் அத்தனை – எல்லாரும் அறியச் சொன்னோம்) 10
அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப் பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ்வுலகினில் எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் இம்மையே இடரில்லை இறந்தால் தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-10
பதவுரை Show / Hide
தொண்டீர், Thondir - பகவத் பக்தர்களே!, (- (இது செய்தால்))
அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர, Angu Vaanavarkku Aakulam Theera - தேவலோகத்திலுள்ள தேவதைகளின் மனக்குழப்பம் தீரும்படி
அணி இலங்கை அழித்தவன் தன்னை, Ani Ilangai Azhithavan Thannai - அழகிய லங்காபுரியை அழித்தருளின பெருமான் விஷயமாக,
பொங்குமா வலவன் கலிகன்றி, Pongumaa Valavan Kalikanri - கிளர்த்தியையுடைய ‘ஆடல்மா’ என்னுங் குதிரையை நடத்த வல்லவரான ஆழ்வார்
புகன்ற, Pugandra - அருளிச்செய்த
பொங்கத்தம் கொண்டு, Pongattham Kondo - ‘பொங்கத்தம் பொங்கோ’ என்ற இந்த வெற்றியைப் பாசுரங்களைக் கொண்டு
இ உலகினில், I Ulaginil - இவ்விபூதியிலே
எங்கும், Engum - எல்லாவிடங்களிலும்
பாடி நின்று ஆடுமின், Paadi Nindru Aadumin - பாடிக்கொண்டு கூத்தாடுங்கள்,
இம்மையே இடல் இல்லை, Immaye Idal Illai - (உங்கட்கு) இப்பிறவியில் ஒருவகைத்துன்பமு முண்டாகாது,
இறந்தால், Irandhaal - மரணமானபின்பு
தங்கும் ஊர், Thangum Oor - நீங்கள் போய்ச்சேர்ந்து நிலை நிற்குமிடம்
அண்டமே, Andame - பரமபதமேயாம்,
கண்டு கொண்மின், Kandu Konmin - (இதனை அநுபவத்தாலே) கண்டு கொள்ளுங்கள்
சாற்றினோம், Saatrinom - இஃது எல்லாருமறியச்சொன்னோம்
தடம் பொங்கத்தம் பொங்கோ, Thadam Pongatham Pongoo - வெற்றியோ வெற்றி
1868பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சுக்ரீவா ஸ்ரீ பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி ஏத்துவாருக்கு உம்மை ஆஸ்ரயிக்க வேணும் இறே – அவர் இசைந்தாலும் -வத்த்யதாம் -என்று நீர் சொன்னால் உம்மை இசைப்பித்து -ஆனய -என்று உம்மை விட்டு அழைப்பித்துக் கைக் கொள்ள வேண்டுகையாலே – ஸ்ரீ ராஜாவோடு வார்த்தை சொல்லுகிறவர்கள் என்று ஸ்ரீ முதலிகள் கொல்லாதபடி -என்கிறார்கள் – பண்டே சிஷித்து வைத்தவர்கள் போலே ஆடுகின்றோம்-எங்கள் செயல் அறுதியாலே) 1
ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம் சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம் வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே –10-3-1
பதவுரை Show / Hide
இராமன், Iraman - இராமபிரானுடைய
திருநாமம், Thirunamam - திருநாமங்களை
நா தழும்ப, Na Thazhumba - நாக்குத் தடிக்கும்படி
எத்துகின்றோம், Eththukindrom - வாயாரச்சொல்லித் துதிக்கின்றோம்.
நம்பீ சுக்கிரீவா, Nambi Chukkrivaa - ஸுக்ரீவமஹாராஜரே!
சோத்தம், Soththam - இதோ அஞ்ஜலி
உம்மை தொழுகின்றோம், Ummalai Thozhugindrom - உம்மைத் திருவடிகளில் விழுந்து வணங்குகின்றோம்
உங்கள் வானரம், Ungal Vaanaram - நீங்களிட்ட வழக்காயிருக்கின்ற வானரவீரர்கள்
எம்மை கொல்லாமே, Emmai Kollame - எங்களைக் கொல்ல நினையாதபடி
வார்த்தை பேசீர், Vaarthai Pesir - ஒருவார்த்தையருளிச் செய்யவேணும்
கூத்தர் போல, Koothar Pola - கூத்தாடக்கற்றவர்கள் போல
குழமணிதூரம் ஆடுகின்றோம், Kuzhamanithuram Aadugindrom - உங்கள் வெற்றியும் எங்கள் தோல்வியுந்தோற்ற ஆடுகின்றோம்
1869பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எங்களுக்கு வேறு சிலர் ரஷகர் உண்டு என்று நினைத்து நலிய வேண்டியது இல்லை) 2
எம்பிரானே என்னை ஆள்வா என்று என்று அலற்றாதே அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்த்ரஜித் அழிந்தான் நம்பி அனுமா சுக்ரீவா வங்கதனே நளனே கும்பகர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே –10-3-2
பதவுரை Show / Hide
இந்திரசித்து, Indirachithu - இந்த்ரஜித்தானவன் (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.))
எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அரற்றாதே, Embirane Ennai Aalvaai Endru Endru Aratradhe - பகவந் நாமங்களையே சொல்லிக்கோஷம் போடாமல்
அம்பின் வாய் பட்டு, Ambin Vaai Pattu - பாணங்களுக்கு இரையாகி
ஆற்ற கில்லாது, Aattra Killaadhu - தரித்திருக்க மாட்டாமல்
அழிந்தான், Azhindhaan - மாண்டுபோனான்
நம்பி அனுமா!, Nambi Anumaa - சுக்கிரீவா! அங்கதனே! நளனே!
கும்பகரணன், Kumbakaranan - கும்பகர்ணனானவன்
பட்டுப் போனான், Pattup Ponaan - முடிந்துபோனான்
1870பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாங்கள் போக்கற்ற வழி மாதரம் அல்ல-உங்கள் சம்ருத்தி எங்களுக்கு பிரயோஜனமாம் படி ஆனோம் – எங்களை கொல்லுகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ – கண் படைத்த பிரயோஜனம் பெறும்படி இத்தைக் காணல் ஆகாதோ) 3
ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு காலனாகி வந்தவா கண்டு அஞ்சிக் கருமுகில் போல் நீலன் வாழ்க சுடேணன் வாழ்க வங்கதன் வாழ்க என்று கோலமாக வாடுகின்றோம் குழமணி தூரமே –10-3-3
பதவுரை Show / Hide
ஞாலம் ஆளும், Njaalam Aalum - பூமியை யெல்லாம் ரக்ஷித்தருள்பவராய் (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.))
உங்கள் கோமான், Ungal Gomaan - உங்களுக்கு ஸ்வாமியான ஸ்ரீராமபிரான்
எங்கள் இராவணற்கு, Engal Iraavanarku - எங்களுக்குத் தலைவனாயிருந்த இராவணனுக்கு
காலன் ஆகி வந்த ஆ கண்டு, Kaalan Aagi Vantha Aa Kandu - ம்ருத்யுவாக வந்தபடியைப் பார்த்து
அஞ்சி, Anji - பயப்பட்டு,
கரு முகில் போல், Karum Mukhil Pola - ;காளமேகம் போன்ற
நீலன் வாழ்க, Neelan Vazhga - நீலன் வாழவேணும்,
சுடேணன் வாழ்க, Sudhenan Vazhga - ஸுஷேணன் வாழவேணும்
அங்கதன் வாழ்க, Angathan Vazhga - அங்கதன் வாழவேணும்
என்று, Endru - என்று ஒவ்வொருவர்க்கும் பல்லாண்டுபாடிக்கொண்டு
கோலம் ஆக, Kolam Aaga - அழகாக
1871பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தர்ச நீயமான வில்லிலே அம்பைத் தொடுத்த ஸ்ரீ பெருமாள் தம்பியார் உடைய குணங்கள் பாடி ஆடுகின்றோம்) 4
மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதாரத்தைப் புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற வரிசிலையால் கணங்கள் யுண்ண வாளியாண்ட காவலனுக்கு இளையோன் குணங்கள் பாடி யாடுகின்றோம் குழமணி தூரமே –10-3-4
பதவுரை Show / Hide
மணங்கள் நாறும் வார் குழலால் மாதர்கள், Manangal Naarum Vaar Kuzhalal Maatharhal - பரிமளம் மிக்க நீண்ட கூந்தளையுடையரான ஸ்த்ரீகள் விஷணத்திலே (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.))
ஆதரத்தை புணர்ந்த சிந்தை, Aadharaththai Punarndha Sindhai - ஆசையை ஒருபோதும் விடாத நெஞ்சையுடையனாய்
புன்மை யாளன், Punmai Yalan - மிகவும் நீசனான இராவணன்
பொன்ற, Pondra - முடியும்படியாகவும்
கணங்கள் உண்ண, Kangal Unna - பிசாசுகள் ஏறிப் புசிக்கும்படியாகவும்
வரி சிலையால், Vari Silaiyal - அழகிய வில்வழியாக
வாளி ஆண்ட, Vaali Aanda - அம்புகளைப் பிரயோகித்த
காவலனுக்கு, Kaavalanukku - ஸர்வாக்ஷகரான பெருமாளுடைய
இளையோன், Ilaiyoan - திருத்தம்பியாரான லக்ஷ்மணருடைய
குணங்கள் பாடி, Gunangal Paadi - திருக்குணங்களைப் பாடிக்கொண்டு
1872பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீங்கள் தான் எங்களைக் கொல்லுகிறது வெற்றிக்காக இறே – அத்தை உங்களுக்கு நாங்கள் தந்தோம்- நாங்களும் ஆண் பிள்ளைகள் என்று இருக்கிறது -துர்மானத்தாலே இறே- எங்களை நலிகிற துர்மானத்தை வேண்டோம்) 5
வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்காக இன்று தம்மின் எங்கள் வாணாள் எம்பெருமான் தமர்காள் நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மைக் கொல்லாதே குன்று போலே ஆடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-5
பதவுரை Show / Hide
எம்பெருமான் தமர்காள், Emperumaan Thamarkaal - ஸ்ரீராமபக்தர்களான வாநர வீரர்களே! (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்))
வென்றி தந்தோம், Vendri Thandhom - ஜயத்தை உங்களுக்குக் கொடுத்துவிட்டோம்!
மானம் வேண்டாம், Maanam Vendaam - “நாங்களும் ஆண்பிள்ளைகள்” என்று கொண்டிருந்த அஹங்காரத்தைக் கைவிட்டிட்டோம்.
எங்கள் வாழ்நாள், Engal Vaazhnal - எங்களுடைய ஆயுளை
எமக்கு, Emakku - எங்களுக்கு
தானம் ஆக, Dhaanam Aaga - யாசகங் கொடுக்கும் விதமாக
இன்று தம்மின், Indru Thammin - இப்போது கொடுத்து விடுங்கள்,
நீர், Neer - நீங்கள்
எம்மை கொல்லாதே, Emmai Kollaadhe - எங்களைக் கொல்லாமல்
கண்கள் ஆர, Kangal Aara - கண் படைத்த பயன் பெறுமாறு
நின்று காணீர், Ninru Kaanir - நின்று காணுங்கோள்
குன்றுபோல, Kuntrupola - நாங்கள் மலைமலையாக நின்று
1873பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூசல் களத்தில் வெல்ல மாட்டாமை அஞ்சினோம் – பராபி பவ ந சாமர்த்தியம் உடையவன் மகன் அன்றோ – எங்களைக் கொல்ல வேண்டா-கார்யம் கொள்ள அமையும்) 6
கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்களத்து வெல்ல கில்லாது அஞ்சினோம் காண் வெங்கதிரோன் சிறுவா கொல்ல வேண்டா ஆடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-6
பதவுரை Show / Hide
உங்கள் கோமான், Ungal Gomaan - உங்களுக்குத் தலைவரான ஸ்ரீராமபிரான், (- (வானர முதலிகான்!) (குழமணிதூரம் ஆடுகின்றோம் காண்))
கல்லில், Kallil - மலைகளைக்கொண்டு
முந்நீர், Munnir - கடலை
மாற்றி வந்து, Maatri Vandu - (அணைகட்டித்) தகைந்து
இலங்கை, Ilankai - லங்கையிலுள்ள
காவல், Kaaval - அரண்களையும்
கடந்து, Kadandhu - அதிக்ரமித்து
எம்மை, Emmai - எங்களை
அமர் களத்து, Amar Kalathu - யுத்தபூமியிலே
அல்லல் செய்தான், Allal Seithaan - மிகவும் துன்பங்களுக்கு ஆளாக்கினார்
வெம் கதிரோன் சிறுவர், Vem Kathiron Siruvar - ஸூர்ய புத்திரனான ஸுக்ரீவனே!
வெல்ல கில்லாது, Vella Killaadhu - (உங்களை) ஜயிக்க மாட்டாமல்
அஞ்சினோ, Anjino - பயப்படுகின்றோம்
கொல்ல வேண்டா, Kolla Venda - எங்களைக் கொல்லாதொழிய வேணும்
1874பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வலியை உடையனாகையைப் பிறப்பே யுடைய ஸ்ரீ திருவடி வாழ்வான் என்று – பரிகரம் அடைய அவன் பக்கலிலே ப்ராவண்யம் –இவனை வாழ்த்தவே கொல்லுவார் இல்லை – ஸ்ரீ திருவடியைச் சொன்னோம் ஆனால் ம்ருத்யு சத்ருசராய் இருப்பாரும் விலங்குவர்கள் போலே காணும்) 7
மாற்றம் ஆவது இத்தனையே வம்மின் அரக்கர் உள்ளீர் சீற்றம் நும்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் அனுமனை வாழ்க என்று கூற்றம் அன்னார் காண வாடீர் குழ மணி தூரமே –10-3-7
பதவுரை Show / Hide
அரக்கர் உள்ளீர், Arakkar Ullir - ராக்ஷஸஜாதியிற் பிறந்திருக்கின்ற இலங்கையர்காள்!
வம்மின், Vammin - நீங்களும் எங்களோடே வந்து சேருங்கள்,
மாற்றம் ஆவது இத்தனையே, Maatram Aavathu Ithanaiye - (உங்கட்கு நாங்கள்) சொல்லும் வார்த்தை இவ்வளவே,
நும் மேல், Num Mel - உங்கள்மேல்
சீற்றம், Seetram - (ஸ்ரீராம ஸைந்யங்களுக்குண்டான) கோபம்
தீர வேண்டில், Theera Venda - தணிய வேண்டுமாகில்
சேவகம் பேசாதே, Sevagam Pesadhe - (நீங்கள் இனியும்) மிடுக்குச் சொற்களைப் பேசுதல் தவிர்ந்து
தொல் பிறப்பில் ஆற்றல் சான்ற அனுமானை, Thol Pirappil Aatral Sanra Anumaanai - அநாதிகாலமாக மிக்க வலிமையையுடையரான சிறிய திருவடிக்கு
வாழ்க என்று, Vazhga Endru - பல்லாண்டு பாடிக்கொண்டு
கூற்றம் அன்னார் காண, Kootram Annar Kaana - (நமக்கு) ம்ருத்யு போன்ற வானாலீரர்கள் காணும் படியாக
குழமணிதூரம் ஆடீர், Kuzhamanithooram Aadeer - குழமணிதூரக்கூத்தை ஆடுங்கோள்
1875பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு அயோத்யைக்கு கடவ ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் –ஸ்யாமமான நிறத்தை உடையவர் காண ஆடி கோள்- ராஜா கூத்துக் காணா நின்றான் என்று உங்களை விடும்படி) 8
கவள யானைப் பாய் புரவி தேரோடு அரக்கர் எல்லாம் துவள வென்ற வென்றியாளன் தன் தமர் கொல்லாமே தவள மாட நீடு அயோத்தி காவலன் தன் சிறுவன் குவளை வண்ணர் காண வாடீர் குழ மணி தூரமே –10-3-8
பதவுரை Show / Hide
கவளம் யானை, Kavalam Yaanai - கவளங்கொள்ளுமியல் பினவான யானைகளும்
பாய் புரவி, Paai Puravi - பாய்ந்து வருகிற குதிரைகளும்
தேரோடு, Therodu - தேர்களும் ஆகிய இவையெல்லாவற்றொடுங்கூட
அரக்கர் எல்லாம் துவள, Arakkar Ellam Thuvalla - ராக்ஷஸஜாதியடங்கலும் கஷ்டப்படும்படியாக
வென்ற, Vendra - ஜயித்த
வென்றியாளன் தன் தமர், Vendriyaalan Than Thamar - ஜயசீலரான பெருமாளுடைய கிங்கரர்களான வானரவீரர்கள்
கொல்லாமே, Kollaame - (நம்மை) கொல்லாதபடி,
தவளம் மாடம் நீடு, Thavalam Maadam Needu - வெண்மையான மாடமாளிகை களினால் நீண்டிருக்கிற
அயோத்தி, Ayodhya - அயோத்திமா நகர்க்கு
காவலன் தன், Kaavalan Than - அரசரான தசரதருடைய
சிறுவன், Siruvar - திருக்குமார்ராய்
குவளை வண்ணன், Kuvazhai Vannan - குவளை மலர்போன்ற நிறத்தையுடையரான இராமபிரான்
காண, Kaana - காணும்படியாக
குழமணிதூரம், Kuzhamanithooram - குழமணிதூரக்கூத்து
ஆடீர், Aadeer - ஆடுங்கோள்.
1876பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாங்கள் உஜ்ஜீவிக்கைக்காக-கச்ச அநுஜா நாமி -என்று விட்டடித்தவர் உடைய ஆஞ்ஞையை சிரஸா வஹித்துக் கொண்டு போந்தோம்) 9
ஏடு ஒத்து ஏந்தும் நீண் இலை வேல் எங்கள் இராவணனார் ஓடிப் போனார் நாங்கள் எய்தோம் உய்வதோர் காரணத்தால் சூடிப் போந்தோம் உங்கள் கோமான் ஆணை துடரேன்மின் கூடிக் கூடி யாடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-9
பதவுரை Show / Hide
ஏடு ஒத்த, Aedu Oththa - பனையோலே விரிந்தாற்போல் அகன்றதாயும் (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.))
நீள், Neel - நீண்டதாயும்
இலை, Ilai - இலையையுடைத்தாயுமிருக்கிற
வேல், Vel - வேற்படையை
ஏந்தும், Aendhum - கையிற்கொண்ட
எங்கள் இராவணனார், Engal Iravananar - எங்கள் பிரபுவான இராவணன்
ஓடி போனார், Odi Poonar - முதுகுகாட்டி ஓடிப்போய் விட்டார்
நாங்கள், Naangal - நாங்களோ
எய்த்தோம், Eyththom - இளைத்தோம்,
உய்வது ஓர் காரணத்தால், Uyvathu Oor Kaaranathaal - (இனி) உஜ்ஜீவிப்பதன் பொருட்டு
உங்கள் கோமான் ஆணை, Ungal Koman Aanai - உங்களுக்கு ஸ்வாமியான பெருமாளுடைய ஆஜ்ஞையை
சூடிப் போந்தோம், Soodip Ponthom - சிரஸாவஹிப்பவர்களாயிருக்கின்றோம்
தொடரேல் மின், Thodareel Min - (எங்களைக் கொல்வதற்குத்) தொடரவேண்டா,
கூடி கூடி, Koodi Koodi - திரள் திரளாகக் குழாங்கூடி
1877பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மகா ராஜரை நோக்கிச் சொன்ன ஒன்றும் ஒன்றும் -இரண்டு பாசுரங்கள் வானர முதலிளைக் குறித்து சொன்ன ஐந்து பாசுரங்கள் பரோபதேச ரூபமான மூன்று பாசுரங்கள் – இப்பத்தையும் பாடிக் கொண்டாட-உங்களுக்கு இனி வரக் கடவதொரு பயம் இல்லை – நாவலிட்டு உழி தருகின்றோம் -என்று வேண்டின படி ஆடித் திரியுங்கோள்) 10
வென்ற தொல் சீர் தென்னிலங்கை வெஞ்சமத்து அன்று அரக்கர் குன்றமன்னார் ஆடியுய்ந்த குழ மணி தூரத்தைக் கன்றி நெய்நீர் நின்ற வேற்கைக் கலியன் ஒலி மாலை ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்றாடுமினே –10-3-10
பதவுரை Show / Hide
தொல், Thol - நெடுநாளாக
வென்றி சீர், Vendri Seer - வெற்றியையே இயல்பாக வுடைத்தாயிருந்த
தென் இலங்கை, Then Ilangai - தென்னிலங்கையில்
வெம் சமத்து, Vem Samathu - வெவ்வியபோர்க்களத்திலே
அன்று, Anru - அப்போது
அரக்கர், Arakkar - ராக்ஷஸர்கள்
குன்றம் அன்னார், Kundram Annar - மலைபோன்றவர்களாக
ஆடி உய்ந்த குழமணி தூரத்தை, Aadi Uyndha Kuzhamani Thoorathai - குழமணிதூரக்கூத்தாடி உயிர் தப்பினபடியைக் குறித்து,
கன்றி நெய் நீர் நின்ற வேல் கை, Kandri Ney Neer Nindra Vel Kai - சினக்குறிப்புடன் கூடிய தாய் நெய்யிட்டிருப்பதை நீர்மையாகவுடைத்தாய் நின்ற வேற்படையைக் கையிலுடையரான
கலியன், Kalyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும், Maalaik Ondrum Ondrum Aindhum Moondrum - சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும்
பாடி நின்று, Paadi Nindru - பாடிக்கொண்டு
ஆடுமின், Aadumin - (ஆநந்தத்துக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடுங்கோள்
1878பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நந்தன் பெறப்பெற்ற நம்பி – ஈஸ்வரனுக்கு இது அலாப்ய லாபமாய் இருக்கிற படி – இவர் பிள்ளையாகப் பெற்ற ஏற்றம் உடையவனே – பிதரம் ரோசயா மாச -என்று அவனை ஆசைப் பட்டு இறே பிறந்தது தனக்கு கிடையாதது பெறுகை இறே -அலாப்ய லாபம் – பிறக்கிற சம்சாரிக்கு பிறவாமை ஏற்றமோபாதி இறே அவனுக்குப் பிறக்கப் பெறுகையும் – தேவர்கள் தாங்கள் புஜிக்கும் அம்ருதத்தில் வாசி – ஸ்ரீ நந்தன் பெறப்பெற்ற என்று தொடங்கி இவன் ஆதரித்து முலை உண்கைக்காக ஸ்தோத்ரம் பண்ணுகிறாள்) 1
சந்த மலர்க் குழல் தாழத் தானுகந்தோடித் தனியே வந்து என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து நந்தன் பெறப்பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –10-4-1
பதவுரை Show / Hide
நந்தன், Nandhan - நந்தகோபர்
பெற்ப்பெற்ற, Perppetra - பிள்ளையாகப் பெறும்படி வாய்ந்த
நம்பீ, Nambi - ஸ்வாமியே!
நான் உகந்து உண்ணும் அமுதே, Naan Uganthu Unnum Amudhe - நான் பரிவுடனே புஜிக்கின்ற அமுதமாயிருப்பவனே!
எந்தை பெருமானே, Endai Perumane - என்குல நாதனான கண்ணபிரானே!
சந்தம் மலர் குழல், Chandham Malar Kuzhal - செவ்விப் பூக்களை யணிந்த திருக்குழற்கற்றையானது
தாழ, Thaa - அலைய
தான் தனியே உகந்து ஓடி வந்து, Thaan Thaniye Uganthu Oodi Vandu - நீ (பலராமனைவிட்டுத்) தனியே மகிழ்ச்சியுடன் (என் பக்கல்) ஓடிவந்து
என் முலைத்தடம் தன்னை வாங்கி, En Mulaittadam Thannai Vaangi - எனது முலைகளைக்கையிற்பிடித்து
நின் வாயில் மடுத்து, Nin Vayil Maduthu - உனது வாயிலே நிறைத்துக் கொண்டு
உண்ணாய், Unnai - உண்ணவேணும்,
என் அம்மம், En Ammam - என்னுடைய முலைப்பாலாகிற
சேமம், Semam - க்ஷேமத்தளிகையை
உண்ணாய், Unnai - உண்ணவேணும்
1879பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாய் முலை சுரந்து பார்த்து இருக்கும் அன்று வருகை அன்றிக்கே நான் அழைத்தும் வரக் காணாது இருந்தேன் – எங்கே புக்கிருந்து உன் பக்கல் நிரபேஷரானார் உடன் – சாபேஷையாய் நான் பார்த்து இருக்க – என்ன விளையாட்டு விளையாடுகிறது) 2
வங்கமறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கு நம்பி செங்கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா கொங்கை சுரந்திட யுன்னைக் கூவியும் காணாது இருந்தேன் எங்கிருந்து ஆயர் தங்களோடு என் விளையாடுகின்றாயே –10-4-2
பதவுரை Show / Hide
வங்கம் மறி கடல் வண்ணா, Vangam Mari Kadal Vanna - அலைகள் மடிந்து மடிந்து எறிகிற கடலின் நிறம் போன்ற நிறமுடையவனே!
மா முகிலே ஒக்கும் நம்பீ, Maa Mukile Okkum Nambi - காளமேகத்தை யொத்திருக்கின்ற பிரானே!
நெடிய செம்கண் திருவே, Nedhiya Semkan Thiruve - நீண்ட செந்தாமரைக் கண்களையுடைய ஸ்ரீமானே!
செம் கமலம் புரை வாயா, Sem Kamalam Purai Vayaa - செந்தாமரைப் பூப்போன்ற திருமுகத்தை யுடையவனே!
கொங்கை காந்திட, Kongai Kanthida - என் முலைகளிலே பரல்காக்க
உன்னை கூவியும், Unnai Kooviyum - உன்னையழைத்தும்
காணாது இருந்தேன், Kaanadhu Irundhen - நீவரக்காண்கின்றிலேன்,
ஆயர்களோடும், Aayargalodum - இடைப்பிள்ளைகளோடே
எங்கு இருந்து, Engu Irundhu - எவ்விடத்திலிருந்துகொண்டு
என்விளையாடுகின்றாய், Envilaiyaadugindrai - என்ன விளையாட்டு விளையாடுகின்றாய்?
1880பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவயவங்கள் தோறும் முழுசா முகத்தைப் பாரா முலை சுரக்கப் பண்ணாமல் மடியிலே இருந்தாயிற்று உண்பது – இது அடைய தரையிலே போகாமே உன் வாயிலேயாம்படி முலை யுண்ண வாராய்) 3
திருவில் பொலிந்த எழிலார் ஆயர் தம் பிள்ளைகளோடு தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற மருவிக் குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய் –10-4-3
பதவுரை Show / Hide
திருவின் பொலிந்த, Thiruvin Polintha - செல்வத்தினால் மிக்கவர்களாய்
எழில் ஆர், Ezil Aar - வடிவழகும் நிறைந்தவர்களான
ஆயர்தம் பிள்ளைகளோடு, Aayartham Pillaihalodhu - இடைப்பிள்ளைகளோடு கூட
தெருவில் திளைக்கின்ற, Theruvil Thilaikkindra - வீதியிலே விளையாடுகின்ற
நம்பீ, Nambi - பிரானே!
செய்கின்ற, Seigindra - நீ செய்துவருகிற
தீமைகள், Theemaigal - தீம்புகளை
கண்டிட்டு, Kandittu - பார்த்து (அதனாலுண்டான உவப்பினால்)
என் கொங்கையின், En Kongaiyin - என்னுடைய முலையினின்
தீம் பால், Theem Paal - இனிய பாலமுது
உருகி, Urugi - தானே உருகி
ஒட்டந்து, Ottandhu - வெள்ளமிட்டு
பாய்ந்திடுகின்ற, Paayndhidugindra - பெருகிப் பாழாய்ப் போகின்றது (அப்படி பாழாய்ப் போகாமே)
குடங்கால், Kudankaal - (எனது) மடியிலே
மருவி இருந்து, Maruvi Irundhu - பொருந்தியிருந்து
வாய், Vaai - வாயினால்
முலை உண்ண, Mulai Unna - முலைப்பாலுண்பதற்கு
நீ வாராய், Nee Vaarai - நீ வரவேணும்
1881பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என் ஒக்கலையிலே இழியாது இருந்து ஆதரித்து இனிதாக அம்மம் உண்ண வாராய்) 4
மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார் மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா மதக் களிறன்னாய் செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி நின் கையில் தருவன் ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் –10-4-4
பதவுரை Show / Hide
வையத்து வாழும் மடவார், Vaiyaththu Vaalum Madavaar - நாட்டிலே வாழ்கின்ற ஸ்த்ரீகளினுடையவும்
பிறர் மக்கள், Pirar Makkal - மற்றுமுள்ள மநுஷ்யர்களினுடையவும்
கண்ணுக்கு, Kannukku - கண்களுக்கு
மகள் பெறுதவம் போலும் ஒக்கும் முதல்வா, Magal Peruthavam Polum Okkum Muthalvaa - பிள்ளைபெறுதற்கு நோற்கும் நோன்புதான் ஒருவடிவு கொண்டதோ! என்று சொல்லலாம் படியிருக்கின்ற ஜகத்காரண பூதனே!
மதம் களிறு அன்னாய், Matham Kaliru Annai - மதம்பிடித்த யானை போலேச் செருக்கியிருப்பவனே!
செக்கர் இளபிறை தன்னை, Chekkar Ilapirai Thannai - செவ்வானத்திலிருக்கின்ற பாலசந்திரனை
வாங்கி, Vaangi - பிடித்து
நின் கையில், Nin Kaiyil - உன் கையிலே
தருவன், Tharuven - கொடுப்பேன்
ஒக்கலை மேல் இருந்து, Okkalai Mel Irundhu - (என்) இடுப்பிலே இருந்து கொண்டு
அம்மம், Amma - முலைப்பாலை
உவந்து, Uvandu - ஆதரித்து
இனிது, Inidhu - போக்யமாக
உண்ண, Unna - உண்பதற்கு
நீ வாராய், Nee Vaarai - நீ வரவேணும்
1882பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இனி இதுசெய்யான் -என்னும்படி படுக்கையிலே கிடந்தது-அவள் பேர நின்றவாறே வெண்ணெயை விழுங்கும் விகிர்தமான செயலை உடையவனே – நெடும் போது உண்டாயிற்று முலைக் கடுப்போடு இருக்கிறது – இத்தனை போது அல்லாதே என்னால் பொறுத்து பாடாற்றப் போகாது – உன் நோவிலும் தாய் நோவு அறியும்வன் அன்றோ –வேண்டும் அளவில் வந்து ஸ்பர்சித்த நீ அன்றோ) 5
மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய் வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா இத்தனை போதன்றி எந்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா உத்தமனே அம்மம் உண்ணாய் யுலகளந்தாய் அம்மம் உண்ணாயே –10-4-5
பதவுரை Show / Hide
மைத்தகரு குஞ்சி, Maiththakaru Kunchi - மைபோன்ற கறுத்த திருக்குழல்களையுடைய (- (அம்மம் உண்ணாய்))
மைந்தா, Maindhaa - சிறுக்கனே!
மா மருதூடு, Maa Marudhuudu - பெரிய மருதமரங்களினுடைய
நடந்தாய், Nadandhaai - தவழ்ந்து சென்றவனே!
விரையாதே, Viraiyadhe - ஸாவகாசமாக
வித்தகனே, Viththagane - ஆச்சரியசக்திவாய்ந்தவனே!
விரையாதே, Viraiyadhe - ஸாவகாசமாக
வெண்ணெய் விழுங்கும், Vennyei Vizhungum - வெண்ணெயை வாரி விழுங்கவல்ல
விகிர்தா, Vikirthaa - விலக்ஷணனே!
என் தன் கொங்கை, En Than Kongai - என்னுடைய ஸ்தனமானது
சுரந்து, Surandhu - பால்சுரந்து
இத்தனை போது அன்றி, Iththanai Podhu Andri - இதுவரையிலிருந்தது போலல்லாமல்
இருக்க கில்லா, Irukka Killa - இனி இருக்கமாட்டா
உத்தமனே, Uththamaney - சிறந்த குணசாலியே!
உலகு அளந்தாய், Ulaku Alandhai - உலகமளந்தபிரானே!
1883பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தீமைகள் செய்யா நிற்புதி-கண்டு இருக்க ஆகர்ஷகமான தீம்புகளை செய்வுதி – அத்தீமை காண என் ஹிருதயம் உருகி முலை வழியே பாலாய் புறப்படா நின்றது – கண்கள் சிவப்பது-மூரி நிமிர்வது-கொட்டாவி கொள்வது -அழுவது -ஆகாதே) 6
பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசில் பெரிதும் வலியை கள்ள மனத்தில் உடையைக் காணவே தீமைகள் செய்தி உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற பள்ளிக் குறிப்புச் செய்யாதே பாலமுது உண்ண நீ வாராய் –10-4-6
பதவுரை Show / Hide
பிள்ளைகள் செய்வன செய்யாய், Pillaihal Seivana Seyyai - (உன்னோடொத்த பருவமுள்ள) பிள்ளைகள் செய்யும் தீம்புகளை நீ செய்கின்றிலை, (- (பால் அமுது உண்ண நீ வாராய்))
பேசில், Pesil - உன்னைப்பற்றிச் சொல்வோமாகில்
பெரிதும் வலியை, Peridhum Valiyai - மிகவும் மிடுக்குடையனாயிரா நின்றாய்,
மனத்தில், Manathil - நெஞ்சிலே
கள்ளம் உடைய, Kallam Udaiya - கபடத்தை வஹியாநின்றாய்,
காணவே, Kaanave - (தண்டிக்க வேண்டியவர்களும்) பார்த்துக்கொண்டிருக்கும்படியாக
தீமைகள், Theemaigal - தீம்புகளை
செய்தி, Seithi - செய்கின்றாய்,
என் உள்ளம் உருகி, En Ullam Urugi - என்னுடைய நெஞ்சு நீர்ப்பண்டமாகி
கொங்கை, Kongai - முலைகளும்
ஓட்டந்து பாய்ந்திடுகின்ற, Oottandhu Paayndhidugindra - பால் பெருகிப் பாயப்பெறுகின்றன
பள்ளி குறிப்பு செய்யாதே, Palli Kurippu Seyyadhe - (கொட்டாவி விடுதல் முதலிய) தூக்கக் களைச்செர்
1884பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூதனை கையிலே அகப்பட்ட உன்னை ஆராக நினைத்தாய் – நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும் வல்லபன் ஆனவனே – அப்படியே ஓர் ஏத்தம் போலே காணும் இவள் மகன் ஆனதுவும்) 7
தன் மகனாக வன் பேய்ச்சி தான் முலை யுண்ணக் கொடுக்க வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை யுண்ட நம்பீ நன் மகள் ஆய் மகளோடு நானில மங்கை மணாளா என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –10-4-7
பதவுரை Show / Hide
வல் பேய்ச்சி, Val Paeychchi - கொடிய நெஞ்சுடையளான பூதனையானவன் (- (அம்மம் உண்ணாய்))
தன் மகன் ஆக, Than Magan Aaga - (உன்னைத் தன்புத்திரன் போல அபிமானித்து
தான் முலை உண்ண கொடுக்க, Thaan Mulai Unna Kodukka - தான் தனது முலையை உன்வாயிலே மடுக்க, (அவ்வளவிலே)
வல் மகன் ஆய், Val Magan Aay - வலிய ஆண்பிள்ளையாய்
அவள் ஆவி வாங்கி, Aval Aavi Vaangi - அவளுயிரைக் கவர்ந்து
முலை உண்ட நம்பீ, Mulai Unda Nambi - அவளது முலையை உண்ட பிரானே!
நல் மகள் ஆய்மகளோடு, Nal Magal Aaymagalodu - சிறந்த மகளாகிய நப்பின்னைப் பிராட்டிக்கும்
மணாளா, Manala - வல்லபனானவனே!
என் மகனே, En Magane - எனக்குப் பிள்ளையாக வாய்த்தவனே!
என் அம்மம், En Ammam - எனது ஸ்தந்யமாகிற
சேமம், Semam - க்ஷேமத்தளிகையை
உண்ணாய், Unnai - உண்ணவேணும்.
1885பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாயாரைக் கண்டால் தீமையிலே ஓன்று பத்தாக பணைக்கும்–ஸ்ரீ நந்த கோபர்க்காயிற்று அஞ்சுவது அத்தாலே அவனுக்கு அச்சம் உறுத்துக்கைக்காக ஸ்ரீ யசோதை பிராட்டி சொல்லும் பாசுரம் ஆயிற்று) 8
உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால் நொந்திட மோதவும் கில்லேன் உங்கள் தம் ஆநிரை எல்லாம் வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண அந்தியம்போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் –10-4-8
பதவுரை Show / Hide
ஆழி அம்கையனே, Aazhi Amkaiyane - திருவாழியினால் அழகு பெற்ற திருக்கையை யுடையவனே! (- (நீ செய்கிற தீமைகளைக் கண்டால்))
உந்தம் அடிகள், Undham Adigal - உங்கள் பிதாவாகிய நந்தகோபர்
முனிவர், Munivar - சீறுவர்
நான், Naan - நானோவென்றால்
என் கையில் கோலால், En Kaiyil Kolaal - என் கையிலுள்ள கொம்பினால்
உன்னை நொந்திட மோதவும் கில்லேன், Unnai Nondhida Modhavum Killeen - உன்னை நோகும்படி அடிக்கவும் மாட்டேன்,
உங்கள் தம் ஆ நிரை எல்லாம், Ungal Tham Aa Nirai Ellam - உங்களுடைய பசுக்கூட்டங்களெல்லாம்
வந்து புகுதரும் போது, Vandhu Pugudharum Podhu - (காடுகளில் மேய்ந்து) மீண்டு வந்து (ஊர்க்குள்) புகும்போது
வானிடை தெய்வங்கள் காண, Vaanidai Deivangal Kaan - ஆகாசத்திலுள்ள தேவதைகள் (எச்சிற்கண்ணால்) காணுமாறு
அந்தியம்போது, Andhiyam Podhu - மாலைப்பொழுதிலே
அங்கு நில்லேல், Angu Nillel - நாற்கந்தியிலே நிற்கவேண்டா
வாராய், Vaarai - (என்னருகே) வந்திடாய்
1886பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கன்றின் உடைய திரள்-ஓன்று இரண்டு போராது –கன்றுகளை திரளாக மறித்து காட்டிலே அங்கே இங்கே தட்டித் திரியும் போது ஒரு மத்தகஜம் உலாவுமா போலே யாயிற்று இருப்பது – உனக்கு விடாய் இல்லாமையோ – உனக்கு முலை தாராது ஒழியும் போது நான் தரிப்பனாயோ) 9
பெற்றம் தலைவன் என் கோமான் பேர் அருளாளன் மதலாய் சுற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே –10-4-9
பதவுரை Show / Hide
பெற்றம் தலைவன், Petram Thalaivan - பசுக்களுக்குத் தலைவனே!
எம் கோமான், Em Koman - எங்கள் பெருமானே!
பேரருளாளன் மதலாய், Perarulalan Mathalai - மஹாதயாளுவான நந்தகோபருடைய திருக்குமாரனே!
சுற்றம் குழாம், Sutram Kuzham - பந்த ஸமூஹத்துக்கெல்லாம்
இன கேரவே, Ina Kerave - யுவராஜாவானவனே!
தோன்றிய தொல் புகழாளா, Thondriya Thol Pugazhala - எங்கும் பாவி விளங்குகின்ற நித்ய கீர்த்தியை யுடையவனே!
கானம் தோறும், Kaanam Thoram - காடுகள் தோறும்
கன்று இனம், Kandru Inam - கன்றுகளின் கூட்டங்களை
மறித்து, Marithu - மடக்கி மேய்த்து
திரிந்த, Thirindha - உலாவின
களிறே, Kalire - கஜராஜமே!
எம் பெருமான், Em Peruman - எனக்குப் பெருமையை விளைப்பவனே!
ஏற்றுக்கு, Aetrukku - எதுக்காக
என் அம்மம் உண்ணாத இருந்தாய், En Ammam Unnaadha Irundhai - என் முலைப்பாலை உண்ணாமலிருக்கின்றாய்?
1887பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அம்மம் உண் என்று சொன்ன இப்பத்தையும் –அந்த பாவ வ்ருத்தியோடே சொல்லுவாருக்கு வந்தேறியான முக்தர் ஆனவர்கள் அன்றிக்கே அஸ்ப்ருஷ்ட சம்சாரிகளான ஸ்ரீ நித்ய சூரிகளோடே ஒக்க தரம் பெறலாம்) 10
இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும் மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலுமாமே –10-4-10
பதவுரை Show / Hide
எழில ஏந்து தோள் கலிகன்றி, Ezhil Aenthu Thol Kalikanri - அழகை ஏந்தியிருக்கின்ற தோள்களையுடையவரான திருமங்கையாழ்வார்
இம்மை இடர்கெட வேண்டி, Immai Idarkeda Vendi - இப்பிறவியிலுண்டான இடரெல்லாம் அழியவேண்டி
செம் கண் நெடியவன் தன்னை, Sem Kan Nediyavan Thannai - புண்டரீகாக்ஷனான ஸர்வேச்வரனை நோக்கி
செம்மை நூல் பனுவல் கொண்டு, Semmai Nool Panuval Kondo - சிறந்த சாஸ்த்ரமாகிய அருளிச்செயலைக் கொண்டு
அம்மம் உண் என்று உரைக்கின்ற இவை பாடல் ஐந்தும் ஐந்தும், Amma Um Enru Uraikkindra Ivai Paadal Aindhum Aindhum - ‘முலைப்பாலுண்ண வா’ என்று அழைப்பதான இப்பத்துப் பாசுரங்களையும்
மெய்ம்மை, Meimmai - யதார்த்தமான அன்பு பொலிய
மனத்து வைத்து, Manaththu Vaiththu - நெஞ்சிற்கொண்டு
ஏத்த, Aetha - அநுஸந்திக்குமளவில்
விண்ணவர் ஆகலும் ஆம், Vinnavar Aagalum Aam - நித்யஸூரிகளாகப் பெறுதலும் அவர்கட்கு நேரும்.
1888பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வடிவைக் காட்டி வாழ்வித்ததுவே அன்றிக்கே சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும்) 1
பூங்கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும் ஒங்கோத வண்ணனே சப்பாணி யொளி மணி வண்ணனே சப்பாணி –10-5-1
பதவுரை Show / Hide
பூ கோதை ஆய்ச்சி, Poo Kothai Aaychchi - புஷ்பங்களணிந்த மயிர்முடியை யுடையளான யசோதையினால் (- (சப்பாணி))
கடை, Kadai - கடையப்பட்ட
வெண்ணெய், Vennai - வெண்ணெயை
புக்கு உண்ண, Pukku Unna - (கள்ளத்தனமாய்ப்) புகுந்து அமுது செய்தவளவில்
அவள், Aval - அந்த யசோதை
ஆங்கு, Aangu - அவ்விடத்திலேயே
ஆர்த்து, Aarththu - (தாம்பினால்) கட்டி
புடைக்க, Pudaikka - அடிக்க
புடை உண்டு, Pudai Undu - அடிபட்டு
ஏங்கி இருந்து, Aengi Irundhu - (சற்றுப்போது) அழுது கொண்டிருந்த (பிறகு)
சிணுங்கி, Sinungi - சீராட்டப்பெற்று
விளையாடும், Vilaiyadum - விளையாடுகின்ற
ஓங்கு ஓதம் வண்ணனே, Ongu Otham Vannane - தேங்கின கடல் போன்ற வடிவையுடையவனே!
சப்பாணி, Sappaani - சப்பாணி கொட்டவேணும்
ஒளி மணி வண்ணனே, Oli Mani Vannane - ஒளிபொருந்திய மணி போன்ற நிறமுடையவனே!
1889பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தயிரையும் நெய்யையும் களவு கண்டு புசிக்கை போராததொரு செயல் இறே இப்படி போராத செயலைச் செய்தோம் என்று லஜ்ஜிக்கவும் அறியாதே தனக்கு பொருந்தின செயலைச் செய்தானாய் அத்தாலே என்னை எழுதிக் கொண்டு இருக்கிறவனே – தனக்குத் தகுதியான செயலைச் செய்தானாய் செய்ததுக்கு லஜ்ஜிக்கவும் கூட அறியாத மௌக்த்த்யத்திலே யாயிற்று இவளும் தோற்றது) 2
தாயர் மனங்கள் தடிப்பத் தயிர் நெய் யுண் டே ஏய் எம்பிராக்கள் இரு நிலத்து எங்கள் தம் ஆயர் அழக வடிகள் அரவிந்த வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-2
பதவுரை Show / Hide
தாயர் மனங்கள் தடிப்ப, Thaayar Manangal Thadippa - தாய்மாருடைய நெஞ்சு துடிக்கும்படியாக (- (சப்பாணி கொட்டாய்) (சப்பாணி கொட்டாய்))
தயிர் நெய் உண்டு, Thayir Ney Undu - தயிரையும் நெய்யையும் வாரி யமுதுசெய்து
ஏய், Ey - பொருத்தமான காரியம் செய்த்தாக நினைத்திருக்கிற
எம் பிராக்கள், Em Pirakkal - எம்பெருமானே!
இரு நிலத்து, Iru Nilathu - விசாலமான இப்பூமண்டலத்திலே
எங்கள் தம் ஆயர், Engal Tham Aayar - எங்கள் இடைச்சாதிக்குள்ளே
அழக, Azhaga - அழகிற் சிறந்தவனே!
அரவிந்தம், Aravindham - தாமரைப் பூப்போன்ற
அடிகள் வாயவனே, Adigal Vaayavane - திருவடிகளையும் திருமுகத்தையு முடையவனெ!
மால் வண்ணனே, Maal Vannane - கரிய திருமேனியனே!
1890பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாகவதர்களோடே அபாகவதர்கள் கலந்து இருக்குமா போலே –இங்கனே தாவா மோரை உருட்டி பிரயோஜனபரமான தயிரையும் நெய்யையும் அமுது செய்யும் யாயிற்று- உடம்பிலே தழும்பு கிடைக்கையாலே ஸ்ரீ தாமோதரன் என்னும் திரு நாமத்தை உடையவனே – எனக்கு கட்டலாம்படி பவ்யனான நீ இத்தையும் செய்யப் பாராய்) 3
தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுந்கிட்டுத் தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால் தாம்மோதரக் கையால் ஆர்க்கத் தழும்பு இருந்த தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி –10-5-3
பதவுரை Show / Hide
தா, Thaa - தாவி (- (சப்பாணி கொட்டாய்) (தாமரைக் கண்ணனே சப்பாணி))
மோர் உருட்டி, Moar Urutti - மோர்ப்பானைகளை உருட்டி விட்டு
தயிர் நெய் விழுங்கிட்டு, Thayir Ney Vizhungittu - தயிரையும் நெய்யையும் விழுங்கிவிட்டு
தாமோ தவழ்வர் என்று, Thamo Thavazhvar Endru - ‘இப்படி பெரிய காரியத்தைச் செய்தவரோ (ஒன்று மறியாத குழந்தை போலத்) தவழ்கின்றார்’ என்று சொல்லி
ஆய்ச்சியர் தாம், Aaychiyar Tham - இடைச்சிகள்
தாம்பினால் ஆர்க்க, Thampinaal Aarkka - தாம்பால் கட்டவும்
கையால் மோதர, Kaiyala Modhara - கைகளால் அடிக்கவும்
தழும்பு இருந்த, Thazhumbu Irundha - அதனால் காய்ப்பேறிக் கிடக்கின்ற
தாமோதரா, Thamodharah - தாமோதரனே!
1891பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அங்கு அருகும் உறவு முறையாய் இருப்பார் ஒருவரும் இன்றிக்கே லோகத்திலும் உறவு முறை இன்றிக்கே இருக்கிற மற்றுள்ளார் எல்லாரும் அஞ்சும்படியாக போய் – ஜாத்யுசிதமான வ்ருத்தியை உடையவனே கன்றுகள் மேய்க்குமவனே) 4
பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து உற்றார் ஒருவரும் இன்றி உலகினில் மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-4
பதவுரை Show / Hide
பெற்றார், Petraar - தாய் தந்தையருடைய (- (சப்பாணி கொட்டாய்))
தளை, Thalai - கால்விலங்கு
கழல, Kazhala - கழன்று விழும்படி
பேர்ந்து, Perndhu - வந்தவதரித்து
அங்கு, Angu - அவ்விடத்தில்
அயலிடத்து உற்றார் ஒருவரும் இன்றி, Ayaliadathu Utrar Oruvarum Inri - நெருங்கின உறவுமுறையார் ஒருவருமில்லாமற்போக
உலகினில் மற்றாரும் அஞ்ச, Ulaginil Matraarum Anja - உலகத்திலுள்ள எல்லாரும் அஞ்சும்படியாக
வஞ்கம் பெண் நஞ்ச உண்ட, Vanjkam Pen Nanja Unda - வஞ்சனையே வடிவாக வந்த பூதனையின் (முலையில் தடவின) விஷயத்தை அழுது செய்தருளின
கன்று ஆயனே, Kandru Aayaney - கோபாலகிருஷ்ணனே!
கார் வண்ணனே, Kaar Vannane - காளமேகநிறத்தனே!
1892பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உனக்கு பருத்த அப்பங்களை இடைச்சிகள் தருவர்கள் –அவர்கள் பேரிட்டு எங்களை வாழ்விக்க வேணும் – கண்டு கொண்டு இருக்க வேண்டும் கைகளால் சப்பாணி கொட்ட வேணும்) 5
சோத்தென நின்னைத் தொழுவன் வரம் தரப் பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் பெரியன ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச் சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி –10-5-5
பதவுரை Show / Hide
பேய்ச்சி முலை உண்ணட பிள்ளாய், Peychchi Mulai Unnada Pillai - பூதனையின் முலையை உறிஞ்சியுண்டே கண்ணபிரானே! (- (ஓர் ஆயிரம் சப்பாணி) (தடங்கைகளால் சப்பாணி கொட்டாய்))
வரம் தர, Varam Thara - என் கோரிக்கையை நீ நிறைவேற்றுதற்காக
நின்னை, Ninnai - உன்னை
சோத்தம் என, Soththam Ena - சோத்தமென்று சொல்லிக்கொண்டு
தொழுவன், Thozhuvan - தொழுகின்றேன்
ஆய்ச்சியர், Aaychiyar - இடைச்சிகள்
பெரியன அப்பம் தருவர், Periyana Appam Tharuvar - பெரிய அப்பங்களை உனக்குக் கொடுப்பர்கள்,
அவர்க்காக சாற்றி, Avarkkaaga Saartti - அவர்களுக்காக வென்று ஒரு வியாஜமிட்டு
1893பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கருவிளைப் பூவைக் காட்டா நின்றுள்ள நிறத்தையும் – ஆதி ராஜ்ய சூசகமான முடியையும் உடையனாய்க் கொண்டு ஸ்ரீ நந்த கோபர் கொண்டாடி வளர்க்க-வளர்ந்த செருக்கை உடையவனே – ஜாத்யுசிதமாம் படி குடமாடி வாழ்வித்த நீ சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும்) 6
கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு நானவலப்பம் தருவன் கருவிளைப் பூவலர் நீண் முடி நந்தன் தன் போரேறே கோவலனே கொட்டாய் சப்பாணி குடமாடி கொட்டாய் சப்பாணி –10-5-6
பதவுரை Show / Hide
கருவிளைப்பூ அவர், Karuvilaippoo Avar - காக்கணம் பூவைக் காட்டுகின்ற நிறமுடையவனே! (- (சப்பாணி கொட்டாய்))
நீள் முடி, Neel Mudi - நீண்ட திருவபிஷேக முடையவனே!
நந்தன் தன் போர் ஏறே, Nandan Than Por Aere - நந்தகோபன் வளர்க்க வளர்ந்த செருக்கின காளையே!
கோவலனே, Kovalane - பசுமேய்க்க வல்லவனெ!
உன் வயிறு கேவலம் அன்று, Un Vayiru Kevalam Andru - உன் வயிறு ஸாமந்யமானதன்று,
நான் வயிற்றுக்கு அவல் அப்பம் தருவன், Naan Vayirukku Aval Appam Tharuven - (உனது பெரிய) வயிற்றுக்குப் போரும்படியாக அவலும் அப்பமும் நான் தருவேன்,
குடம் ஆடீ, Kudam Aadi - குடக்கூத்தாடினவனே!
1894பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிள்ளைத் தனத்திலே கண் அழிவு அற்று இருக்கச் செய்தே உன்னை நோக்கித் தந்து உபகரித்தவனே – அன்று பூதனை தன்னை முடித்து உன்னை நோக்கித் தந்த நீ இன்று நான் சொல்லிற்று செய்ய வேண்டாவோ) 7
புள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்துத் துள்ளி விளையாடித் தூங்குறி வெண்ணெயை அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும் பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே கொட்டாய் சப்பாணி –10-5-7
பதவுரை Show / Hide
புள்ளினை வாய் பிளந்து, Pullinai Vaai Pilandhu - பகாசுரனுடைய வாயைக் கிழித்தெறிந்து (- (சப்பாணி கொட்டாய்,) (பேய் முலை உண்டானே! சப்பாணி))
பூ குருந்தம் சாய்த்து, Poo Kurundham Saaythu - பூத்திருந்த குருந்த மரத்தைச் சாய்த்து முறித்து
துள்ளி விளையாடி, Thulli Vilaiyaadi - நிலத்தில் நில்லாமல் விளையாடல்களைச் செய்து
தூங்கு உறி வெண்ணெயை, Thoongu Uri Vennaiyai - தொங்குகின்ற உறியிலுள்ள வெண்ணெயை
அள்ளிய, Alliya - வாரியெடுத்த
கையால், Kaiyala - கைகளாலே
அடியேன் முலை நெருடும், Adiyen Mulai Nerudum - என்னுடைய முலையை (ப்பால் சுரப்பதற்காக) நெருடுகின்ற
பிள்ளை பிரான், Pillai Piraan - பிள்ளையாயும் பிரவுவாயுமிருப்பவனே!
1895பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பேய் என்று அவளை புத்தி பண்ணி முலை வழியே அவளைப் பிடித்து முலை உண்டு அவளை முடித்த திருப் பவளத்தை உடையவனே – உகவாதாரை அழியச் செய்வுதி-உகப்பார் சொல்லிற்றும் செய்ய வேண்டாவோ) 8
யாயும் பிறரும் அறியாத யாமத்து மாயா வலவைப் பெண் வந்து முலை தரப் பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-8
பதவுரை Show / Hide
யாயும், Yaayum - பெற்ற தாயாகிய நானும் (- (சப்பாணி கொட்டாய்) (மால் வண்ணனே! சப்பாணி கொட்டாய்))
பிறரும், Pirarum - மற்றுமுள்ளவர்களும்
அறியாத, Ariyadha - கண்விழித்திருக்கப் பெறாமல் உறங்கிக் கொண்டிருந்த
யாமத்து, Yaamathu - நடுச்சாமத்திலே
மாயம், Maayam - வஞ்சகையாய்
அலவை பெண், Alavai Pen - துஷ்டஸ்த்ரீயான பூதனை
வந்து, Vandhu - (கம்ஸனால் ஏவப்பட்டுத் திருவாய்ப்பாடிக்கு) வந்து
முலை தா, Mulai Thaa - முலைகொடுத்தவளவிலே
அவளை, Avalai - அப்பூதனையை
பேய் என்று பிடித்து, Pei Endrupidithu - பேய்ச்சி யென்றறிந்து பிடித்துக்கொண்டு
உயிர் உண்ட, Uyir Unda - (அம்முலைவழியே அவளது) பிராணனைக் கவர்ந்த
வாயவனே, Vaivane - திருப்பவளத்தை யுடையவனே!
1896பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூதனை வரும் அளவும் ஆறி இருந்து கிட்டிக் கொண்டு தப்பாத படி மேல் விழுந்து பிடித்து முலை உண்டு அவளை முடித்து தன்னைக் காத்த மகோதாரனே – உதாராராய் இருப்பாருக்கு அபேஷிதங்களை எல்லாம் செய்ய வேண்டாவோ) 9
கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை தள்ளி உதைத்திட்டுத் தாயாய் வருவாளை மெள்ளத் துடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட வள்ளலே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-9
பதவுரை Show / Hide
கள்ளம் குழவி ஆய், Kallam Kuzhavi Aayi - மாயக் குழந்தையாய்ப் பிறந்து
சகடத்தை, Sakadatthai - (அஸுரன் ஆவேசித்திருந்த வண்டியை
காலால் தள்ளி உதைத்திட்டு, Kaalal Thalli Uthaithittu - திருவடியாலே தள்ளி யுதைத்தவனாயும்
தாய் ஆய் வருவாளை, Thaai Aayi Varuvaalai - தாய்வேஷம் பூண்டு வந்த பூதனையை
மெள்ள தொடர்ந்து பிடித்து, Mella Thodarndupidithu - விதானித்திருந்து மேல் விழுந்து பிடித்து
ஆர் உயிர், Aar Uyir - (அவளது) அருமையான உயிரை
உண்ட, Unda - கவர்ந்தவனான
வள்ளலே, Vallale - உதாரனே!
சப்பாணி கொண்டாய், Chappaani Kondaai - பால் வண்ணனே! சப்பாணி கொட்டாய்
1897பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பேராளன் –ஸ்ரீ நம் ஆழ்வார் -சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு -என்னா-அநந்தரம் -யாவர் நிகர் -என்றாப் போலே கவி பாடப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே தாமே தம்மைப் புகழ்ந்தால் போலே பேராளன் -என்கிறார் – இவருடைய திரு உள்ளத்தை விட்டு பிரியாதே இங்கே நித்ய வாஸம் பண்ணுகையால் உள்ள சம்பத்தை உடையனான இது – ஸ்ரீ பிராட்டியை தனக்கு உடையனானதுக்கு மேலே ஒன்றாயிற்று – இதுக்கு பல சுருதி சொல்லாமல் விட்டது தம்மை அறியாமை இவ்வனுபவம் தானே பிறருக்கும் பலமாய் இருக்கிறது) 10
காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன் பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த் தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10
பதவுரை Show / Hide
கார் ஆர் புயல் கை, Kaar Aar Puyal Kai - கார்காலத்து நிறையநீர் கொண்டெழுந்த மேகம் போன்ற ஔதார்யமுடையவராய் (- (சப்பாணி கொட்டாய்) (சப்பாணி கொட்டாய்))
மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவராய்
பேராளன், Peraalan - பெருமை பொருந்தியவரான
கலி கன்றி, Kali Kankri - திருமங்கையாழ்வாருடைய
நெஞ்சில், Nenjil - திருவுள்ளத்திலே
பிரியாது, Priyaadhu - ஒரு நொடிப்பொழுதும் விட்டுப்பிரியாமல்
இடம் கொண்ட, Idam Konda - நித்யவாஸம் பண்ணுகின்ற
சீரானா, Seerana - சீர்மை பொருந்தியவனே!
செம் தாமரை கண்ணா, Sem Thaamarai Kanna - செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையுடையவனே!
தண் துழாய் தார் ஆளா, Than Thuzhai Thar Aala - குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்துள்ளவனே!
தட மார்வா, Thad Marvaa - விசாலமான திருமார்வை யுடையவனே!
1898பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபதேசத்தாலும் அனுஷ்டானத்தாலுமாக அற நூல்-வேதம் விஸ்த்ருதமாம் படி பண்ணியவன் சந்திர சூரியர்களும் பூமியும் திரைக் கிளப்பத்தை உடைத்தான் பெரிய கடலும் மலைகளும் அக்னியும் இவை அடைய நெருக்கிக் கொடு புகும்படியாக ஸ்லாக்கியமான மிடற்றை – இவை புகும் அளவும் – விரித்துக் கொண்டு இருந்தவன் கிடீர் இன்று தயிரையும் வெண்ணையும் களவு கண்டு-அமுது செய்து-ஓர் இடைச்சி கையாலே கட்டுண்டு அடியுண்டு-ஒரு பிரதிகிரியை அற்றுப் போக மாட்டாதே -இருக்கிறான் –என்கிறார் முதல் பாசுரத்தில் காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேன் -திருவாய் மொழி -10-8-2-என்கிற பாட்டின் படியே) 1
எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும் பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே –10-6-1
பதவுரை Show / Hide
நான் நாரணன் ஆய், Naan Naaranan Aay - (சிஷ்யனும் ஆசார்யனுமாக) நாநாராயணரூபியாய்
உலகத்து, Ulagathu - லோகத்திலே
அறம் நூல் சிங்காமை விரித்தவன், Aram Nool Singamai Viriththavan - அறநெறிகளைத் தெஜீவிக்கும் நூலாகியவேதம் சுருங்கிப் போகாதபடி அதை விஸ்தரிப்பித்தவனாயும்
எம்பெருமான், Emperumaan - எமக்கு ஸ்வாமியாயும்
அது அன்றியும், Adhu Andriyum - அவ்வளவு மல்லாமல்
செம் சுடரும், Sem Sudarum - சந்திர ஸூர்யர்களும்
நிலனும், Nilanum - பூமியும்
பொங்கு ஆர், Pongu Aar - பொங்குதல் பொருந்திய ஸமுத்ரங்களும்
பொருப்பும், Poruppum - மலைகளும்
நெருப்பும், Neruppum - அக்நியும் (ஆகிய இவையடங்கலும்)
நெருக்கி, Nerukki - ஒன்றின்மேலோன்றாய்
புக அத்தனை போது, Puga Aththanai Podhu - உள்ளே புகு மளவும்
பொன் மிடறு, Pon Midaru - திருவயிற்றை
அங்காந்தவன் காண்மின், Angaanthavan Kaanmin - விவரித்துக்கொண்டிருந்தவனன்றோ
இன்று, Indru - இப்போது
அளை, Alai - தயிரையும்
வெண்ணெய், Vennai - வெண்ணெயையும்
உண்டு, Undu - (திருடி) உட்கொண்டு
ஆய்ச்சியால், Aaychiyal - இடைச்சிகளால்
ஆப்புண்டிருந்தவன், Aappundirundhavan - (தாம்பால்) கட்டுண்டிருக்கிறான்,
இது ஒப்பது ஓர் மாயம், Idhu Oppathu Oru Maayam - இதுபோன்ற ஆச்சரியம்
எங்கானும், Engaanum - எங்கேனு மோரிடத்திலாவது
உண்டே, Unde - கண்டதுண்டோ?
1899பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அந்த பிரளய காலத்து அவை தன் வயிற்றில் புகாத போது உண்டான தளர்த்தி எல்லாம் இவ் வெண்ணெய் பெறாத போது உடையனாய்க் கொண்டு அமுது செய்தான்) 2
குன்றொன்று மத்தா வரவமளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு ஒரு கால் நின்றுண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர நினைந்த பெருமான் அதுவன்றியும் முன் நன்றுண்ட தொல் சீர் மகரக் கடலேழ் மலையேழ் உலகேழ் ஒழியாமை நம்பி அன்றுண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப் புண்டு இருந்தவனே –10-6-2
பதவுரை Show / Hide
ஒன்று குன்று, Ondru Kuntru - (மந்தரமென்கிற) ஒரு மலையை (- (அது அன்றியும்) (இன்று ஆய்ச்சியால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்.))
மத்து ஆ, Maththu Aa - மத்தாகக் கொண்டு
அரவம், Aravam - (வாஸுகியென்னும்) நாகத்தை
அளவி, Alavi - (கடை கயிறாகச்) சுற்றி
குரை மா கடலை, Kurai Maa Kadalai - ஒலிக்கின்ற பெருங்கடலை
கடைந்திட்டு, Kadaindittu - கடைந்து
ஒருகால், Orukaal - மற்றொரு காலத்தில்,
உண்டை கொண்டு, Undai Kondu - (வில்லிலுள்ள) உண்டைகளைக் கொண்டு
வன் கூன், Van Koon - வலிதான கூனை
ஓட்டி நின்று, Otti Nindru - போக்கி
நிமிர, Nimira - (கூன்) நிமிரும்படி
நினைந்த, Ninaintha - திருவுள்ளம்பற்றின
பெருமான், Perumaan - ஸர்வேச்வரனாய்,
முன் அன்று, Mun Andru - முன்பொருகாலத்தில்,
நன்று உண்ட தொல் சீர், Nandru Unda Thol Seer - நன்றாகத் தன்னுட்கொள்ளப்பட்ட சிறப்பையுடைய
மகரம் கடல் ஏழ், Makarama Kadal Ezh - மகரங்கள் திளைக்கின்ற ஸப்த ஸாகரங்களும்
மலை ஏழ், Malai Ezh - ஸப்தகுலாசங்களும்
உலகு ஏழ், Ulaku Ezh - ஸப்தலோகங்களும்
ஒழியாமை, Ozhiyamai - ஒன்றுதப்பாதபடி
நம்பி, Nambi - (எல்லாவற்றையும் விரும்பி)
உண்டவன் காண்மின், Undavan Kaanmin - திருவயிற்றிற் கொண்டவனன்றோ
1900பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஹிரண்யாசுரன் உடைய முரட்டு உடலை வளைந்த உகிராலே இரண்டாகக் கிழித்தவன் கிடீர் இன்று ஒரு அபலையால் கட்டுண்டு இருக்கிறான்) 3
உளைத்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உலப்பில் வ்லியாலவர்பால் வயிரம் விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள் வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போலே அவுணன் உடல் வள்ளுகிரால் அளைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-3
பதவுரை Show / Hide
உலப்பு இல் வலியால், Ulappu Il Valiyal - எல்லையில்லாத வலிமையினால் (- (அதுவுமல்லாமல்) (இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்))
எழுந்த, Ezhundha - பெரிய கிளர்த்தியோடே தோன்றி
மது கைடவர்கள் அவர்பால், Madhu Kaidavargal Avarpaal - மதுகடைபர்களென்கிற அவ்வசுரர்களோடே
வயிரம், Vayiram - பகை
விளைந்திட்டது என்று எண்ணி, Vilaindhittathu Endru Enni - உண்டாகிவிட்ட தென்றறிந்து
உளைந்திட்டு, Ulaindhittu - அஞ்சி நடுங்கி
விண்ணோர், Vinnor - தேவர்கள்
பரவ, Parava - (திருவடிகளிலே தொழுது) துதிக்க,
அவர், Avar - அந்த மதுகைடபர்களுடைய
நாள், Naal - ஆயுளை
ஒழித்த, Ozhitha - முடித்த
பெருமான், Perumaan - ஸர்பேச்வரனாய்
முனநாள், Munan Naal - முற்காலத்தில்
வளைந்திட்ட வில்லாளி, Valaindhitta Villali - வளைந்தவில்லைக் கையிலேந்தியுள்ளவனும்
வல் வாள் எயிறு, Val Vaal Eiyiru - வலிமை பொருந்திப் பிறங்கிய பற்களை யுடையவனும்
மலை போல், Malai Pol - மலைபோன்றவனுமான
அவுணம், Avunam - இரணியாசுரனுடைய
உடல், Udal - உடலை
வள் உகிரால், Val Ukiral - கூர்மையான நகங்களினால்
அளைந்திட்ட வன் காண்மின், Alaintitta Van Kanmin - இரண்டாகக் கிழித்தவனன்றோ
1901பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமியை கொள்ளுகைக்காக தர்ச நீயமான வாமன வேஷத்தை உடையனாய் கொண்டு க்ருத்ரிமித்து லோகத்தை அளந்து– மகா பலியைச் சிறையில் இட்ட ஆண் பிள்ளை கிடீர் – ஓர் அபலை இட்ட சிறை விட்டுக் கொள்ள மாட்டாதே இருக்கிறான்) 4
தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால் பிளைந்திட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் திருமால் விரி நீருலகை வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய் அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-4
பதவுரை Show / Hide
இமையோர், Imaiyor - தேவர்கள் (- (இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்))
தளர்ந்திட்டு, Talarntittu - (அசுரர்களாலே நெருக்குண்டு) மிகவும் தளர்ச்சியடைந்து
சரண் தா என, Saran Ta En - ‘நீ எமக்கு ரக்ஷகனாக வேணும்’ என்று பிரார்த்திக்க,
தான் சரண் ஆய், Tan Saran Ay - தான் ரக்ஷகனாக நின்று
முரணாயவனை, Muranayavanai - பெருமிடுக்கனான இரணியனை
உகிரால், Ukiral - நகங்களாலெ
பிளந்திட்டு, Pilantittu - கிழித்துப்போட்டு
அமரர்க்கு, Amararukku - தேவர்களுக்கு
அருள் செய்து, Arul Seytu - கிருபைபண்ணி
உகந்த, Ukanta - திருவுள்ளமுவந்த
பெருமாள், Perumal - ஸர்வேச்வரனாய்
திருமால், Tirumal - திருமகள் கொழுநனாய்,
வளர்ந்திட்ட தொல் சீர், Valarntitta Tol Sir - மேன்மேலும் வளர்கின்ற அதிக ஸம்பத்தையுடைய
விறல், Viral - பலிஷ்டனான
மாவலியை, Mavaliyai - மஹாபலியை
மண் கொள்ள, Man Kolla - பூமியைக் கொள்ளும் பொருட்டு
ஒரு மாண் குறள் ஆய், Oru Man Kural Ay - அத்விதீயனான ப்ரஹ்மசாரி வாமன்னாய்
வஞ்சித்து, Vancittu - சிறு காலைக்காட்டி ஏமாத்தி
விரிநீர் உலகை, Virineer Ulagai - கடல்சூழ்ந்த வுலகங்களை
அளந்திட்டவன் காண்மின், Alandittavan Kaanmin - அளந்து கொண்டவனன்றோ
1902பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லோகங்கள் ஏழையும் தன் ஆஞ்ஞையாலே நடத்தினவன் கிடீர் இன்று தன் ஆஞ்ஞை அழிந்து ஓர் அபலை கையிலே கட்டுண்டு அடி யுண்கிறான்) 5
நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம் தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன் வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகேழ் ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-5
பதவுரை Show / Hide
அடியார் படும், Adiyar Padum - பக்தர்கள் அநுபவிக்கிற (- (அது அன்றியும் முன்;) (இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்))
ஆழ் தயராய் எல்லாம், Aaz Thayarai Ellam - கொடிய பாப பலன்களெல்லாம்
தீண்டாமை, Theendamai - அவர்களை ஸ்பர்சியாதபடி
நினைந்து, Ninaindhu - திருவுள்ளம்பற்றி
குறள் ஆய், Kural Aay - வாமணமூர்த்தியாகி
நெடு வான் அளவும், Nedu Vaan Alavum - பரம்பிய ஆகாசமெங்கும்
நீண்டான், Neendaan - வளர்ந்தவனாய்,
இமையோர் அளவும், Imaiyor Alavum - நித்யஸூரிகள்ளவும்
செல, Sela - செல்லும்படியாக
வைத்த, Vaitha - திருவடிகளை உயர்த்தி வைத்தருளின
பிரான், Piraan - உபகாரகனாய்
வேண்டாமை, Veendaamai - (‘எல்லாரையும் யமபடர்கள் ஆராயக்கடவர்கள்’ என்று தானே யிட்ட கட்டளையை) வேண்டாமையினாலே
நமன் தமர் என் தமரை வினவப்பெறுவார் அலர் என்று, Naman Thamar En Thamarai Vinavapperuvar Alar Endru - ;யமபடர்கள் எம்மடியாரை ஆராயக்கடவர்களல்லார் என்று நியமித்தருளி
உலகு ஏழ் ஆண்டான் அவன் காண்மின், Ulaku Ezh Aandaan Avan Kaanmin - உலகங்களையெல்லாம் ரக்ஷித்தருளினவனன்றோ
1903பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சஹஸ்ர பாஹ் வர்ஜுனனுடைய சினத்தை உடைத்தான தோள்கள் ஆயிரத்தையும் அழகுக்குப் பிடித்த மழுவாலே துணித்துப் பொகட்டவன் கிடீர் –இன்று ஓர் அபலை கையாலே கட்டுண்டு இருந்தான்) 6
பழித்திட்ட வின்பப் பயன் பற்றறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம் ஒழித்திட்ட வரைத் தனக்காக வல்ல பெருமான் திருமால் அதுவன்றியும் முன் தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோள் அவை யாயிரமும் மழுவால் அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியாரால் அளை வெண்ணெய் யுன்டாப்புண்டு இருந்தவனே –10-6-6
பதவுரை Show / Hide
பழித்திட்ட, Pazhithitta - சாஸ்திரங்களில் இகழப்பட்ட (- (அது அன்றியும் முன்) (இன்று ஆய்ச்சியால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்))
இன்பம், Inbam - சிற்றின்பமாகிற
பயன், Payan - அற்ப பலன்களை
பற்று அறுத்து, Patru Aruththu - வாசனையோடே விட்டிட்டு
பணிந்து, Panindhu - திருவடிகளிலே விழுந்து
ஏத்த வல்லார், Aetha Vallar - துதிக்கவல்லவர்களுடைய
துயர் ஆய எல்லாம், Thuyar Aaya Ellam - துன்பமென்று பேர்பெற்றவை யெல்லாவற்றையும்
ஒழித்திட்டு, Ozhiththittu - கழித்தருளி
அவரை, Avarai - அவர்களை
தனக்கு ஆக்க வல்ல, Thanakku Aakka Valla - தனக்கு நித்யகிங்கரராகச் செய்து கொள்ளவல்ல
பெருமான், Perumaan - ஸ்வாமியாய்
திருமால், Tirumal - ச்ரியபதியாய்
தெழித்திட்டு, Thezhiththittu - பெரிய ஆரவாரத்தைச் செய்துகொண்டு
எழுந்து, Ezhunthu - மார்புத்தட்டிக் கிளர்ந்து
எதிர் நின்ற, Edhir Nindra - (போர்புரிய) எதிரே வந்து நின்ற
மன்னன், Mannan - கதர்த்தவீர்யார்ஜுன்னென்னும்) அரசனுடைய
சினம், Sinam - கோவத் துடிப்புக்கொண்ட
தோள் அவை ஆயிரமும், Thol Avai Aayirathum - ஆயிரந்தோள்களையும்
மழுவால், Mazhuvaal - மழுப்படையினால்
அழித்திட்ட வன் காண்மின், Azhiththitta Van Kaanmin - அழித்தவனான பெருமானன்றோ
1904பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெருக்கிக் கொண்டு தோற்றின ஸ்ரீ வானர வீரர்களையே சேனையாகக் கொண்டு மலைகளை இட்டு நிரம்பும் படியாக பாய்ச்சி கடலை அணை செய்தவன் கிடீர் – மஹத் தத்வமான கடலை அணை கட்டினவன் கிடீர் இன்று ஒருத்தி கட்டு அவிட்க மாட்டாதே இருக்கிறான்) 7
படைத்திட்டது இவ்வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம் துடைத்திட்ட வரைத் தனக்காக வென்னத் தெளியா வரக்கர் திறல் போயவிய மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம கடலை அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-7
பதவுரை Show / Hide
முன நாள், Muna Naal - முன்பொருகாலத்தில் (- (இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்))
இ வையம், I Vaiyam - இவ்வுலகங்களை
படைத்திட்டு, Padaiththittu - (கரண களேபரங்கள் கொடுத்து) ஸ்ருஷ்டித்து
அது, Adhu - அவ்வுலகம்
உய்ய, Uyya - உஜ்ஜீவிப்பதற்குறுப்பாக
பணிந்து, Panindhu - திருவடிகளிலே விழுந்து
ஏத்த வல்லார், Aetha Vallar - அதிக்கவல்லவர்களுடைய
துயர் ஆய எல்லாம், Thuyar Aaya Ellam - துன்பமென்று பேர்பெற்றவற்றையெல்லாம்
துடைத்திட்டு, Thudaiththittu - போக்கி
அவரை, Avarai - அப்படிப்பட்டவர்களை
தனக்கு ஆக்க என்ன, Thanakku Aakka Enna - தனக்கே உரியவராக ஆக்கிக் கொள்ள நீனைத்தவளவிலே
தெளியா, Theliya - அத்திருவுள்ளத்தை ஸஹிக்க மாட்டாமல் கலங்கித் தீங்கிழைத்த
அரக்கர், Arakkar - ராவணாதி ராக்ஷஸர்களுடைய
திறல், Thiral - மிடுக்கு
மிடைத்திட்டு எழுந்த, Midaithittu Ezhuntha - நிபிடமாகத் திரண்ட
குரங்கை, Kurangai - வானரவீரர்களை
படை ஆ, Padai Aa - சேனையாகக்கொண்டு
விம்ம, Vimma - (கடல்) நிரம்பும்படி
விலங்கள், Vilangal - மலைகளை
புக பாய்ச்சி, Puga Paaychchi - பரப்பியிட்டு
கடலை, Kadalai - ஸமுத்ரத்தை
அடைத்திட்டவன் காண்மின், Adaithittavan Kaanmin - தூர்த்தவனான பெருமானன்றோ
1905பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அந்த வில்லை முறித்து அவளோட்டை சம்ச்லேஷ சுகத்தை ப்ரீதியோடு லபித்து யுவ ராஜாவாய் ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாத கடலை அணை கட்டி இலங்கையானது ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக ராவணன் உடைய முடியோடு தோள் தாள் இவை துணியும்படி அறுத்தவன் கிடீர் – இன்று ஒரு அபலை கட்டு அவிழ்க்க மாட்டாது இருக்கிறான்) 8
நெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை இருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர் செறித்திட்டி லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய அறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-8
பதவுரை Show / Hide
நெறித்திட்ட, Nerithitta - நெறித்திராநின்ற (- (பிற வனவாஸம் நேர்ந்த பின்பு) (இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்))
மென், Men - மிருதுவான
கூழை, Koozhai - மயிர்முடியையும்
நல் நேர் இழையோடு, Nal Naer Izhaiyodu - விலக்ஷணமாய் அழகிய ஆபரணங்களையு முடையளான ஸீதையோடு
உடன் ஆய, Udan Aaya - கூடப்பிறந்த
அல் அன்ன, Al Anna - இருண்ட
வில் அதனை, Vil Adhanai - அந்தவில்லை
இறுத்திட்டு, Iruththittu - முறித்துவிட்டு
அவள் இன்பம், Aval Inbam - அவனோடு கலவியால் உண்டாகுமின்பத்தை
அன்போடு, Anbodu - ப்ரீதியுடனே
அணைத்திட்டு, Anaithittu - லபித்து
இள கொற்றவன் ஆய், Ila Kotravan Aay - யுவராஜாவாயிருந்து
துளங்காத, Thulangadha - ஒருவராலும் அசைக்க முடியாத
முந்நீர், Munnir - கடலை
செறித்திட்டு, Serithittu - அணைகட்டி
இலங்கை மலங்க, Ilankai Malanga - லங்கை கலங்கும்படியாக
அரக்கன், Arakkan - இராவணனுடைய
செழு, Sezhu - செழித்த
நீள், Neel - நீண்ட
தோள், Thol - தோள்களும்
தாள், Thal - கால்களும்
துணிய, Thuniya - சிதிலமாகும்படியாக
அறுத்திட்டவன் காண்மின், Aruthittavan Kaanmin - அறுத்தொழித்தவனன்றோ
1906பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மகாராஜரை விஸ்வசிப்பிக்கைக்காக மராமரங்கள் ஏழையும் எய்து – மலை போலே இருக்கிற வடிவை உடையளாய் இருக்கச் செய்தேயும் ஸ்ரீ பிராட்டி போலே தன்னை சாமானை யாக புத்தி பண்ணி வந்த சூர்பணகைக்கு வைரூப்யத்தைப் பண்ணிவிட்டவன் கிடீர் – ப்ரதிகூல்யையாய் வருகையாலே இறே வைரூப்யத்தை விளைத்து விட்டது – அனுகூல்யைக்கு அகப்படாமை இல்லை இறே) 9
சுரிந்திட்ட செங்கேழ் உளைப் பொங்கரிமாத தொலையப் பிரியாது சென்று எய்தி எய்தாது திரிந்திட்டு இடம் கொண்ட அடங்காத தன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள் வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்தோர் ராக்கதி மூக்கு அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-9
பதவுரை Show / Hide
செம் கேழ், Sem Kezh - சிவந்த நிறமுடையனவான (- (சுரிந்திட்ட சுருண்டிராநின்ற) (இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்))
உளை, Ulai - பிடரி மயிர்களையுடைத்தாய்க் கொண்டு
பொங்கு, Pongu - களித்துவந்த
அரிமா, Arimaa - குதிரைவடிவனான கேசியென்னுமசுரன்
தொலைய, Tholaiya - முடிந்து போம்படியாக
பிரியாது, Priyaadhu - அதனைவிடாதே
சென்று எய்தி, Sendru Eydhi - சென்று கிட்டி,
எய்தாது இரிந்திட்டு இடம் கொண்டு அடங்காத அதன்வாய், Eydhaadhu Irindittu Idam Kondu Adangadha Adanvaai - கிட்டவாராமல் அங்குமிங்கும் திரிந்து கொண்டு அவகாசங்கொடாதே அவிதேய மாய்க்கிடந்த அந்தக் குதிரையின் வாயை
இரு கூறு செய்த, Iru Kooru Seitha - இருதுண்டமாக்கி யொழித்த
பெருமான், Perumaan - ஸ்வாமியாய்
முனநாள், Munan Naal - (அன்றியும்) முன்பொரு காலத்திலே
வரிந்திட்ட, Varinditta - கட்டுடைத்தான
வில்லால், Villal - வில்லாலே
மரம் ஏழும், Maram Ezham - மராமரங்களேழையும்
எய்து, Eythu - முறித்தவனாய்,
மலை போல் உருவம், Malai Pol Uruvam - மலைபோன்றவடிவையுடையளான
ஒரு இராக்கதி, Oru Iraakkathi - சூர்ப்பணகையென்னும் ஒரு ராக்ஷஸியினுடைய
மூக்கு, Mooku - மூக்கை
அரிந்திட்ட வன் காண்மின், Arinthitta Van Kaanmin - அறுத்தொழித்தவனான பெருமானன்றோ
1907பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு காலும் துக்கத்தை ப்ராபியார்கள் –நிரதிசய ஆனந்தத்தை ப்ராபித்து ப்ரஹ்மாதிகள் குடி இருப்புக்கும் அவ்வருகான பரம பதத்தை ப்ராபிப்பார்) 10
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய் அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல் நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார் என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே –10-6-10
பதவுரை Show / Hide
நின்றார் முகப்பு, Ninraar Mukappu - தன்னைக் காணவந்து நின்றவர்களெதிரே
சிறிதும் நினையான், Sirithum Ninaithyaan - கொஞ்சமும் வெட்கப்பட வறியாதவனாய்
வயிற்றை நிறைப்பான், Vayittrai Niraippaan - வயிற்றை நிறைப்பதற்காக
ஆய்ச்சியர், Aaychiyar - இடைச்சிகளுடைய
உறி, Uri - உறிகளிலேயிருந்த
பால், Paal - பாலையும்
தயிர், Thayir - தயிரையும்
நெய், Ney - நெய்யையும்
வெண்ணெய், Vennai - வெண்ணெயையும்
விழுங்கி, Vizhungi - (களவாடி) அமுதுசெய்து
அன்று, Anru - அப்போது
உரலோடு, Uralodu - உரலோடே
ஆப்புண்டிருந்த, Aappundirundha - கட்டுண்டிருந்த
பெருமான், Perumaan - கண்ணபிரானுடைய
அடிமேல், Adimeel - திருவடிகளின்மேலே
நன்று ஆய தொல் சீர், Nandru Aaya Thol Seer - விலக்ஷணமான ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயையுடையராய்
வயல் மங்கையர், Vayal Mangaiyar - வயல் சூழ்ந்த மங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான
கலியன், Kalyan - ஆழ்வார்
ஒலி செய்  –, Oli Sei - அருளிச்செய்த
தமிர் மாலை, Tamir Maalai - இப்பாசுரங்களை
வல்லார், Vallaar - கற்றுவல்லவர்கள்
என்றாலும், Endraalum - ஒருகாலும்
இடர் எய்தார், Idar Eydhaar - துன்பமடையார்கள்
இன்பம் எய்தி, Inbam Eydhi - நித்யாநந்தத்தைப் பெற்று
இமையோர்க்கும் அப்பால செல, Imaiyorkkum Appaal Sela - தேவர்களுக்கும் அவ்வருகான பரமபதத்தையடையும்படியான பாக்கியத்தை
எய்துவார், Eydhuvaar - பெறுவார்கள்.
1908பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் சொல்லிற்று செய்தல்-தமப்பனார் சொல்லிற்றைச் செய்தல் செய்யாத பருவம் இறே உன் பருவம் – நானும் சொல்லிற்றிலேன் தமப்பனாரும் அருளிச் செய்திலர் – நீங்கள் எல்லாரும் பிள்ளை பெற்று வளர்க்கிறி கோளே – நான் இனிச் செய்வது என் – ஸூசக மாத்ரமே அன்றிக்கே -காரகமும் உண்டாய் இருந்தது -காரகம் -காரணம்) 1
மானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை ஊனமுடையன செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் நானும் உரைத்திலன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன் தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –10-7-1
பதவுரை Show / Hide
உங்கள் ஆயர் குலம், Ungal Aayar Kulam - ‘உங்களிடைக்குலமானது (- (தாய்தந்தையரான நாங்களிருவரும் இப்படி உதாஸீநராயிருப்பதுவே காரணமாக) (நான் என் செய்கேன்?-))
மானம் உடைத்து அதனால், Maanam Udaithu Adhanaal - மானத்தோடு வாழுந்தன்மையுடைய தாகையாலே
பிறர் மக்கள் தம்மை, Piraar Makkal Thammai - அயலாருடைய பெண்பிள்ளைகளிடத்திலே
ஊனம் உடையன செய்ய பெறாய் என்று, Oonam Udaiyana Seiyya Perai Endru - இழிவான செயல்களைச் செய்யாதொழிய வேணும்’ என்று
இரப்பன், Irappan - வேண்டிக் கொள்வனேயன்றி
உரப்ப கில்லேன், Urapa Killeen - வெருட்டி வார்த்தை சொல்லியறியேன்
நங்கைகாள், Nangai Kaal - பெண்பிள்ளைகாள்!
நானும் உரைத்திலேன், Naanum Uraiththileen - (தாயாகிய) நானும் ஒன்று (சீறிச்) சொல்லியறியேன்,
நந்தன், Nandhan - (தகப்பனாரான) நந்தகோபரும்
பணித்திலன், Paniththilan - ஒன்று சொல்லமாட்டார்,
தானும், Thaanum - கண்ணபிரான்தானும்
ஓர் கன்னியும், Oru Kanniyum - ஒரு இளவாய்க் கன்னியுமாய்க்கொண்டு
கீழை அகத்து, Keelai Akathu - கீழண்டை வீட்டில்
தயிர் கடை கின்றான் போலும், Thayir Kadai Kindraan Polum - தயிர் கடைந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது,
1909பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷகத்துவத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவனை ஒழிய செய்ததுக்கு நிவாரகர் இல்லாதவனை ஒழிய இது செய்யக் கடவார் இல்லை – வந்தாருக்கு அறிவிக்குமது தவிர்ந்து அழைத்துக் காட்ட வேண்டும் அளவாய் வந்து விழுந்தது – கடைந்து சேமித்து வைத்த வெண்ணெயே அன்றிக்கே கடைககைக்கு யோக்யமான பாலும் கூடக் கண்டிலேன்) 2
காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன் மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-2
பதவுரை Show / Hide
காலை எழுந், Kaala Ezhun - விடியற்காலத்திலெழுந்து (- (பாவியேன் என் செய்கேன்என் செய்கேனோ))
கடைந்த, Kadaindha - (வருந்திக்) கடைந்த
இ மோர், I Mor - இந்த மோரை
விற்க, Virka - விற்பனை செய்ய
போகின்றேன், Pogindren - (தெருவேறப்) போகா நின்றநான்
கண்டே போனேன், Kande Ponaen - (கண்ணபிரான் எதிரே வருவதைப்) பார்த்தே (திடுக்கிட்டுக் கொண்டே) போனேன்,
மாலை நறு குஞ்சி, Maala Naru Kunchi - பூவணிந்து மணங்கமழப் பெற்ற மயிர்முடியையுடைய
நந்தன் மகன் அல்லால், Nandan Magan Allaal - அக்கண்ணபிரான் தவிர
மற்று வந்தாரும் இல்லை, Mattru Vandhaarum Illai - மற்றொருவரும் இங்கு வரப்ரஸக்தியில்லை
மேலே அகத்து நங்காய், Meelae Akathu Nangkaai - மேலண்டை வீட்டுப் பெண்பிள்ளாய்! (அசேரதாய்)
வந்து காண்மின்கள், Vandhu Kaanminkal - (கண்ணன் செய்த களவுகளை இங்கே) வந்துபாருங்கள்,
வெண்ணெயை அன்று, Vennaiy Andru - (கடைந்து வைத்த) வெண்ணெயை மாத்திரமல்லாமல்
பதின் குடம், Pathin Kudam - பத்துக் குடங்களிலே
இருந்த, Irundha - (கடைவதற்காகச் சேமித்து) வைத்திருந்த
பாலும், Paalum - பாலையும்
கண்டிலேன், Kandilein - காண்கின்றிலேன்
1910பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவன் பருவத்து அளவல்ல வயிற்றின் பெருமை – வெண்ணெயே அன்றிக்கே –இவ் வேழ் உலகும் கொள்ளும் – இத் தயிரும் பாலும் பாழ் போகாமே ஒரு பிள்ளை வேணும் என்று அன்றோ நீ பெற்றது – அவன் இப்பது அமுது செய்தான் ஆகில் நீ இப்பாடு படுகிறது என் -என்ன – அவனுக்கு இது சாத்மியாது ஒழியில்-செய்வது என் என்று அன்றோ அஞ்சுகிறது நான்) 3
தெள்ளியவாய்ச் சிறியான் நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிட்டு கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு பிள்ளை பரமன்று இவ் வேழ் உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ –10-7-3
பதவுரை Show / Hide
தெள்ளிய வாய், Thelliya Vaai - தெளிந்த திருப்பவளத்தை யுடையனான (- (நங்கைகாள்) (செய்த களவை மறைக்க வொண்ணாதபடி))
சிறியான், Siriyaaan - இச்சிறு பிள்ளையானவன்
உறி மேலைத் தடா நிறைந்த, Uri Melai Thadaa Niraindha - உறையின் மேலிலுள்ள பானையிலே நிரம்பியிருந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த, Velli Malai Irundhaal Oththa - வெள்ளிமலை போன்றிருந்த
வெண்ணெயை, Vennai - வெண்ணையை
வாரி விழுங்கியிட்டு, Vaari Vizhunkiyittu - (தன் தடங்கையார) வாரி விழுங்கிவிட்டு
கள்வன் உறங்குகின்றான், Kalvan Urangugiraan - கள்ளத் தூக்கம் தூக்குகின்றான்
வந்து காண்மின்கள், Vandhu Kaanminkal - வந்துபாருங்கள்
கை எல்லாம் நெய், Kai Ellam Ney - கை முழுதும் நெய் மயமாயிரா நின்றது,
வயிறு, Vayiru - (இவனது) வயிறானது
பிள்ளை பரம் அன்று, Pillai Param Andru - பிள்ளைப் பருவத்துக்கு ஏற்றதா யிருந்ததில்லை.
இ ஏழ் உலகும் கொள்ளும், I Ezhulagam Kollum - இந்த ஸப்த லோகங்களையும் உட்கொள்ளக் கடவது போலும்,
பேதையன், Paethaiyan - அறிவற்றவளான நான்
என் செய்கேன், En Seigken - என்ன பண்ணுவேன்?
1911பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண்ணி வைப்பாரைப் போலே கடைகிற போதே துடங்கி இவர்கள் எங்கே வைப்பார்களோ -என்று – கண்ணி வைப்பார் -வலை வைப்பார் இவர்கள் -ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணர்கள்-அடி ஒற்றிக் கொண்டு திரியா நிற்கும் ஆயிற்று – இக்களவைச் செய்து தான் அல்லாதாரைப் போலே தவழா நிற்கும் – நிரபேஷனான இவன்- இவனாக இவ்வூரிலே இடைச்சிகளுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை – இவர்கள் கீழே எங்கனே நான் இவ்வூரில் குடி இருக்கும் படி) 4
மைந்நம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்றவளை வண்ண நன் மா மேனி தன்னம்பி நம்பியும் இங்கே வளர்ந்தது அவனிவை செய்து அறியான் பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை என் செய்கேன் என் செய்கேனோ –10-7-4
பதவுரை Show / Hide
மை நம்பு, Mai Nambu - மையணிந்த (- (தான் ஒரு பாவமுமறியாதவன் போல) (என் செய்கேன் என் செய்கேன்))
வேல் கண், Vel Kan - வேற்படை போன்ற கண்களையுடையளான
நல்லான், Nallaan - யசோதைப்பிராட்டி யானவள்
பெற்ற, Petra - பெற்ற
வளை வண்ணம், Valai Vannam - சங்குபோல் வெண்ணிறத்ததாய்
நல் மா, Nal Maa - மிகச்சிறந்த
மேனி, Meeni - திருமேனியையுடைய
தன் நம்பி நம்பியும், Than Nambi Nambiyum - பலராமனும்
முன்னம், Munnam - முன்பு
இங்கு, Ingu - இத்திருவாய்ப்பாடியில்
வளர்ந்தது, Valarnthathu - வளர்ந்ததுண்டு
அவன், Avan - அந்த பலராமன்
இவை செய்து அறியான், Ivai Seidhu Ariyaan - இப்படிப்பட்ட தீம்புகளைச் செய்த்தில்லை,
பொய் நம்பி, Poi Nambi - பொய்யே வடிவெடுத்தவனாய்
புள்ளுவன், Pulluvan - வஞ்சகனாய்
கள்வம் பொதி அறை, Kalvam Pothi Arai - கள்ளத் தனத்திற்க்க கொள்கலமாயிருப்பவனான இக்கண்ணபிரான்
தவழ்ந்திட்டு, Thavazhnthittu - தவழ்நடைகற்று
போகின்ற ஆ, Pogindra Aa - போகிறபடி என்னே!
இ நம்பி நம்பி ஆ, I Nambi Nambi Aa - இந்த ஸ்வாமி ஸ்வாமியாக
ஆயச்சியர்க்கு, Aayachiyarkku - இடைச்சிகளுக்கு
உய்வு இல்லை, Uyvu Illai - ஜீவிக்கவழியில்லை
1912பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெண் பிறந்தார் தனியே விளையாடும் இடம் பார்த்துக் கொடு திரியும் – அவர்களோடு சென்று கிட்டி பந்தைப் பறித்தும் பரியட்டங்களைக் கிழித்தும் –பின்பு சொல்ல ஒண்ணாத படி களவு செய்யும் – பிரபுக்கள் கீழே குடி இருக்க ஒண்ணாதே சாதுக்களுக்கு) 5
தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும் நந்தன் மதலைக் கிங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-5
பதவுரை Show / Hide
நங்காய், Nangai - யசோதைப்பிராட்டியே! (- (என் செய்கேன் என் செய்கேன்))
தந்தை, Thandai - (இப்பெண்பிள்ளையின்) தகப்பனார்
புகுந்திலன், Pugundhilan - வீடுவந்து சேரவில்லை,
நான் இங்கு இருந்திலன், Naan Ingu Irundhilan - நானும் வீட்டிலிருந்திலேன்
தோழிமார் ஆரும் இல்லை, Thozhimaar Aarum Illai - தோழியரும் ஒருவருமில்லை
சந்தம் மலர் குழலாள், Santham Malar Kuzhalaal - பரிமளம்மிக்க பூக்களை யணிந்த கூந்தலை யுடையளான என்மகள்
தனியே, Thaniye - ஒருத்தியாயிருந்துகொண்டு
விளையாடும் இடம், Vilaiyaadum Idam - விளையாடிக்கொண்டிருந்த விடத்திலே
குறுகி, Kurugi - சென்று கிட்டி
பந்து பறித்து, Pandhu Pariththu - (அவளது கையில் நின்றும்) பந்தைப்பிடுங்கியும்
துகில் பற்றி கீறி, Thugil Patri Keeri - துணியைப் பிடித்துக் கிழித்தும்
படிறு செய்யும், Padiru Seyyum - தீம்புகளைச் செய்கிற
படிறன், Padiran - தூர்த்தனாகிய
நந்தன் மதலைக்கு, Nandhan Mathalaikku - கண்ணன் விஷயத்திலே
இங் என் கடவோம், Ing En Kadavom - இவ்விடத்தில் என்ன செய்யக் கடவோம்?
1913பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாமரை போலே இருக்கிற அதரமானது வெளுத்து இருக்க –இவள் நிறம் பெறுகைக்கு நான் எத்தைச் செய்வேன்) 6
மண் மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை அண்ணல் இலைக் குழலூதி நஞ்சேரிக்கே அல்லிற்றான் வந்த பின்னை கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-6
பதவுரை Show / Hide
நங்காய், Nangai - யசோதைப்பிராட்டியே! (- (என் செய்கேன் என் செய்கேன்))
மணமகள் கேள்வன், Manamagal Kaelvan - பூமிப்பிராட்டிக்கு வல்லபனாய்
மலர் மங்கை நாயகன், Malar Mangai Naayagan - பெரிய பிராட்டியார்க்கு நாயகனாய்
நந்தன் பெற்ற மதலை, Nandhan Pettra Mathalai - நந்தகோபன் பெற்ற பிள்ளையாய்
அண்ணல் தான், Annal Thaan - ஆண் பிள்ளைத்தனத்தில் குறையற்றவனான கண்ணபிரான்
இலை குழல், Ilai Kuzhal - இலையினாலாகிற ஊது குழலை
ஊதி, Oothi - ஊதிக்கொண்டு
அல்லில், Allil - இரவில்
நம் சேரிக்கே, Nam Cherikke - நம் மனைக்கு
வந்த பின்னை, Vandha Pinnai - வந்த பிறகு,
கண் மலர், Kan Malar - குவலைமலர் போன்றகண்கள்
சோர்ந்து, Soarnthu - வதங்கியும்
முலை வந்து விம்மி, Mulai Vandhu Vimmi - முலைகள் நெறித்துக் கிளர்ந்தும்
கமலம் செம் வாய் வெளுப்ப, Kamalam Sem Vaai Veluppa - தாமரைபோற் சிவந்த அதரம் வெளுத்தும் போகவும்
என் மகள் வண்ணம் இருக்கின்ற ஆ, En Magal Vannam Irukkindra Aa - என் மகளின் வடிவு விவர்ணப்பட்டிருக்கிற படியை என் சொல்வேன்!,
1914பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அத்தை அடங்கலும் கோவர்த்தநோச்மி-என்று தான் அமுது செய்த ஆச்சர்ய பூதன் – அத்தை அடங்கலும் அமுது செய்தானாய்-அல்லாதாரைப் போலே இருந்தான் ஆயிற்று) 7
ஆயிரம் கண்ணுடை இந்திரனாருக்கு என்று ஆயர் விழவு எடுப்ப பாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்தவதனை எல்லாம் போயிருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய் மாயனதனை எல்லாம் முற்ற வாரி வளைத்துண்டு இருந்தான் போலும் –10-7-7
பதவுரை Show / Hide
நங்காய், Nangai - அசோதாய்!
ஆயர், Aayar - இடையர்கள்
ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கென்று, Aayiram Kan Udai Indiranarukkenru - ஸஹஸ்ராக்ஷனான தேவேந்திரனுக்காக
விழவு எடுப்ப, Vizhavu Eduppa - ஆராதனை செய்வதற்கு
நல்லன பாசனம், Nallana Paasanam - நல்ல பாத்திரங்களிலே
பண்டிகளால், Pandigalal - (பலபல) வண்டிகளாலே
புகப்பெய்த அதனை எல்லாம், Pugappeyda Adhanai Ellam - கொண்டுவந்து தள்ளப்பட்ட அந்த அன்னராசியை யடங்கலும்
இன்று, Indru - இன்றையதினம்
அங்கு, Angu - அவ்விடத்தில்
மாயன் உன் மகன், Maayan Un Magan - மாயச்செய்கை வல்லவனான உன்பிள்ளை
போய் இருந்து, Poi Irundhu - போயிருந்து
ஒரு பூதம் வடிவு கொண்டு, Oru Poodham Vadivu Kondu - ஒரு பூதத்தின் வடிவைப் பூண்டு
அதனை எல்லாம் முற்ற, Adhanai Ellam Muttra - அவை முழுவதையும்
வளைத்து வாரி, Valaithu Vaari - (கைகளால்) வாரித்திரட்டி
உண்டிருந் தாண்டோலும், Undirun Thandolum - உட்கொண்டானானாயிற்று
1915பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவன் பூதனை உடைய முலையை அமுது செய்த பின்பு என்னுடைய பிள்ளை என்று இருக்க அஞ்சுவன்) 8
தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஒரோ குடந்துற்றிடும் என்று ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்க்கு எள்கி யிவனை நங்காய் சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் பேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே –10-7-8
பதவுரை Show / Hide
தோய்ந்த நங்காய், Thoyntha Nangkaai - தோய்ந்து வைக்கப்படட
தயிரும், Thayirum - தயிரையும்
நறு நெய்யும், Naru Neyyum - மணம் மிக்க நெய்யையும்
பாலும், Paalum - பாலையும்
ஓரோ குடம், Oro Kudam - ஒவ்வொரு குடத்தில் நின்றும்
துற்றிடும் என்று, Thuttridum Enru - (கண்ணன்) அமுது செய்து விடுவனென்று
ஆய்ச்சியர், Aaychiyar - இடைச்சிகளெல்லாரும்
கூடி, Koodi - திரண்டு
அழைக்கவும், Azaikkavum - என்னைக் கூப்பிடச் செய்தேயும்
நான், Naan - (அவனைப் பெற்ற தாயாகிய) நான்
இதற்கு, Idharku - இந்தச் செயலுக்கு
என்கி, Enki - ஈடுபட்டு
இவனை, Ivanai - இப்பிள்ளையை நோக்கி
பிரான், Piraan - “பிரானே!
சோத்தம், Soththam - உனக்கு ஓர் அஞ்சலி,
இவை செய்ய பெறாய், Ivai Seiyya Perai - இப்படிப்பட்ட தப்புக்காரியங்களைச் செய்யாதொழியவேணும்?“
என்று இரப்பன், Endru Irappan - என வேண்டிக்கொள்வனே யன்றி
உரப்ப கில்லேன், Urapa Killeen - கோபித்துப் பேசமாட்டுகின்றிலேன்
பேய்ச்சி, Peychchi - பூதனையினுடைய
முலை, Mulai - முலையை
உண்ட பின்னை, Unda Pinnai - (இவன்) உறிஞ்சியுண்டது முதலாக
இ பிள்ளையை, I Pillaiyai - இந்த மகனை
பேசுவது அஞ்சுவன், Pesuvathu Anjuvan - பொடிந்துவார்த்தை சொல்ல அஞசா நின்றேன்.
1916பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அத்யந்த சைசவத்தை உடையவன் – இவன் செய்யும் செயல்கள் அடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் ஒக்கும் – ஸ்ரீ திருவடிகளாலே மலை போலே ஊருகிற சகடத்தைச் சாடித் துகளாக்கின பின்பு இவனைப் பொடிய அஞ்சுவன்) 9
ஈடும் வலியும் உடைய இந்நம்பி பிறந்த வெழு திங்களில் ஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப் போனேன் சேடன் திரு மறு மார்பன் கிடந்தது திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தைச் சாடிப் பின்னை உரப்புவது அஞ்சுவனே –10-7-9
பதவுரை Show / Hide
அடங்கு எழில், Adangu Ezhil - முற்றிலும் அழகியதான
சம்பத்து அடங்க, Sampathu Adanga - (எம்பெருமானுடைய) விபூதியை எல்லாம்
கண்டு, Kandu - பார்த்து
அடங்க, Adanga - அதெல்லாம்
ஈசனஃது, Eesanathu - எம்பெருமானுடையதான
எழில் என்று, Ezhil Endru - ஸம்பத்து என்று துணிந்து
உள்ளே, Ulle - அந்தப்பகவத் விபூதிக்குள்ளேயே
அடங்குக, Adanguka - சொருகிப்போவது
1917பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எனக்குக் கைம்முதல் ஒன்றும் இல்லை –என் கையில் பலமில்லை -என்னவுமாம் – என் நெஞ்சு புண் மாறாத படி யாகப் பண்ணினாய் – நான் இக் கார்ஹச்த்த்ய தர்மத்தை எங்கனே அனுஷ்டிக்கும் படி) 10
அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யை பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் என்கை வலத்தாது மில்லை நெஞ்சத் திருப்பன செய்து வைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ –10-7-10
பதவுரை Show / Hide
நங்கைகாள், Nangai Kaal - பெண்காள்! (- (என் செய்கேன் என் செய்கேன்))
சொல்லி அழைத்திட அஞ்சுவன், Solli Azhaitta Anjuvan - (இவன் செய்யுந்தீம்புகளைச்) சொல்லி முறைப்பட அஞ்சுகின்றேன்,
பஞ்சியம் மெல் அடி பிள்ளைகள், Panchiyam Mel Adi Pillaihal - பஞசுபோல் மெல்லிய அடியை யுடையரான (இவ்வூர்ப்) பிள்ளைகள்
ஆயிரம் நாழி நெய்யை, Aayiram Naazhi Neyyai - ஆயிரம் நாழி நிறைந்த நெய்யை
உண்கின்று, Ungindru - உண்ணும்போது
பாகம் தான் வையார்களே, Paagam Thaan Vaiyaarkale - ஸ்வல்பபாகமும் மிகுத்தி வைத்தார்களில்லை,
கஞ்சன், Kanjan - கம்ஸனானவன்
கறவு, Karavu - (அவனுக்குச் செலுத்தவேண்டிய) கப்பமோவென்றால்
எட்டு நாளில், Ettu Naalil - இன்னமும் எட்டுநாளைக்குள் செலுத்தவேண்டிய தாகவுள்ளது.
என் கைவலத்து, En Kaivalathu - என்கையில்
ஆதும் இல்லை, Aadum Illai - ஒன்றுமில்லை
நம்பி, Nambi - கண்ணபிரானே!
நெஞ்சத்து இருப்பன செய்து வைத்தாய், Nenjathu Iruppan Seidhu Vaiththai - என்னெஞ்சு புண்பட்டிருக்கும்படியான காரியங்களையே செய்து போகிறாய்
1918பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாமரைப் பொய்கையிலே சென்று ஒளிந்து இருந்து – அவர்கள் உடைய பரியட்டங்களை அடைய வாரிக் கொண்டு – வேணுமாகில் இங்கனே ஏறி வாங்கிக் கொள்ளுங்கோள்- என்று இருந்தாய்) 11
அங்கனும் தீமைகள் செய்வார்களோ நம்பீ ஆயர் மட மக்களை பங்கய நீர் குடைத்தாடு கின்றார்கள் பின்னே சென்று ஒளித்து இருந்து அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு அரவு ஏர் இடையர் இரப்ப மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரமேறி யிருந்தாய் போலும் –10-7-11
பதவுரை Show / Hide
நம்பி, Nambi - கண்ணபிரானே! (- (அவ்வளவிலே))
ஆயர் மடம் மக்களை, Aayar Madham Makkalai - இடையர்களுக்கு விதேயரான பெண்பிள்ளைகளிடத்தில்
அங்ஙனும், Angganum - அப்படியும்
தீமைகள் செய்வர்களோ, Theemaigal Seivargaloo - தீம்புகள் செய்யத் தகுமோ?
பங்கயம் நீர், Pangayam Neer - தாமரைப்பொய்கையிலே
குடைந்து, Kudaindhu - அவகாஹித்து
ஆடுகின்றார்கள் பின்னே சென்று, Aadugindraargal Pinne Sendru - நீராடப்போனவர்களின் பின்னேபோய்
ஒளித்து இருந்து, Ollithu Irundhu - மறைந்து கொண்டிருந்து
அங்கு, Angu - அவ்விடத்தில்
அவர், Avar - அந்தப் பெண்பிள்ளைகளினுடைய
பூ துகில், Poo Thugil - அழகிய சேலைகளை
வாரிக் கொண்டிட்டு, Vaarik Kondaithu - வாரிக்கொண்டு
அரவு ஏர் இடையார், Aravu Aeer Idaiyaar - அரவுபோலே நுண்ணிய இடையையுடையரான அப்பெண்கள்
இரப்ப, Irappa - (அத்துகில்களை) யாசிக்க
நல் மங்கைமீர், Nal Mangaimir - அழகிய பெண்காள்!
வந்து, Vandhu - (நானிருக்குமிடத்திலே) வந்து
கொள்மின், Kolmin - (உங்கள் துகில்களைப்) பெற்றுக் கொள்ளுங் கோள்’
என்று, Endru - என்று சொல்லி
மரம் ஏறி இருந்தாய் போலும், Maram Eri Irundhai Polum - மரத்தினுச்சியில் ஏறியிருந்தாயாமே
1919பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருவடிகளால் உண்டான ஸ்பர்சத்தாலே தழைத்துப் பூத்த கடம்பிலே ஏறிப் பெரிய வேகத்தாலே மடுவிலே ஏறப் பாய்ஞ்சு –ஆயிரம் வாயாலும் விஷத்தை உமிழா நிற்பானாய் தான் நச்சுப் பொய்கையிலே கிடக்கிற காளியனோடே பிணங்கி வந்தாய் போலே இருந்தது) 12
அச்சம் தினைத்தனை யில்லை யப்பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும் உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய் பச்சிலைப் பூங்கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய் நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-12
பதவுரை Show / Hide
இப்பிள்ளைக்கு, Ippillaiyku - இந்த பிள்ளைக்கு
தினைத் தனை, Dinai Thanai - கொஞ்சமேனும்
அச்சம் இல்லை, Acham Illai - பயமில்லை
ஆண்மையும் சேவகமும், Aanmiyum Sevagathum - சௌர்யமும் வீர்யமுமே யுள்ளது
உச்சியில் முத்தி, Uchchiyil Muththi - உச்சிமோந்து
வளர்ந்து எடுத்தேனுக்கு, Valarnthu Eduthenukku - வளர்த்தெடுத்தாயாகிய எனக்கும்
தான் உரைத்திலன், Thaan Uraiththilan - தான் சொல்லாதவனாய்
இன்று போய், Indru Poi - இன்று வெளியிற்போய்
பச்சிலை, Pachilai - பசுமையான இலைகளை யுடைத்தாய்
பூ, Poo - பூத்திருக்கிற
கடம்பு, Kadambu - கடப்பமரத்தின்மீது
ஏறி, Eri - ஏறி
விசை கொண்டு, Visai Kondu - வேகத்துடனே
பொய்கையில் பாய்ந்து புக்கு, Poykaiyil Paayndhu Pukku - (காளியநாகங்கிடந்த) பொய்கையிலே குதி்த்து,
ஆயிரம் வாய், Aayiram Vaai - ஆயிரம்வாயாலும்
நஞ்ச அழல், Nanja Azhal - விஷத்தைக் கக்குகின்ற
நாகத்தினோடு, Naagaththinoadu - (அந்தக்காளிய) நாகத்தினோடு
பிணங்கி, Pinangi - போர் செய்து
நீ வந்தாய் போலும், Nee Vandhai Polum - நீ வந்தாயாமே
1920பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபரிதன லோகங்கள் அதிரும்படியான த்வனியை உடைத்தாய் அகவாயில் மரம் எல்லாம் தெரியும்படி நெருப்புப் போலே சிவந்த கண்ணை உடைத்தாய் இருக்கிற – வ்ருஷபங்களோடு கூட நித்ய வசந்தமான சோலைக்குள்ளே பிணங்கி வந்தாய் போலே இருந்தது -என்கிறாள்) 13
தம்பர மல்லன வாண்மைகளைத் தனியே நின்று தாம் செய்வரோ எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன் அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்கண் உடை வம்பவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-13
பதவுரை Show / Hide
எம் பெருமான், Em Peruman - என்னுடைய கண்ணபிரானே!
தம் பரம் அல்லன ஆண்மைகளை, Tham Parama Allana Aanmaigalai - தம் பருவத்திளைவல்லாத பௌருஷங்களை
தனியே நின்று செய்வரோ தாம், Thaniye Nindru Seivaro Tham - தனிமையா யிருந்து செய்யத் தகுமோ?
உன்னை பெற்ற வயிறு உடையேன், Unnai Pettra Vayiru Udaiyen - (தனியே அதிமாநுஷ காரியங்களைச் செய்கிற) உன்னைப் பெறும்படியான வயிறு படைத்தவளானேன்,
யான் இனி என் செய்கேன், Yaan Ini En Seigken - உன்னைப் பெற்ற பின்பு நான் என்ன செய்யவல்லேன்?
வம்பு அவிழ்கானத்து அங்கு, Vambu Avizhkanathu Angu - பரிமளம் வீசுகின்ற அச்சோலையிடத்திலே
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல், Ambaram Ezhamum Athirum Idi Kural - மேலுலகங்களெல்லாம் அதிரும்படியான கனத்த குரலையும்
அனல் செம் கண் உடை, Anal Sem Kan Udai - நெருப்புப்போலே சிவந்த கண்களையு முடையனவான
மால் விடையோடு, Maal Vidaiyodu - கரிய எருதுகளோடே
நீ பிணங்கி வந்தாய் போலும், Nee Pinangi Vandhai Polum - நீ போர் செய்து வந்தாயாமே
1921பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்திரு மொழியை வல்லவர்களுக்கு ஸ்ரீ யசோதைப் பிராட்டியார் உடைய அனுபவித்தில் குறைய அனுபவிக்க வேண்டா -என்கிறார்) 14
அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அருவரை போல் மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ் கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே –10-7-14
பதவுரை Show / Hide
அன்னம் நடை, Annam Nadai - அன்னத்தின் நடைபோன்ற நடையையும்
மடம், Madham - மடமைக் குணத்தையுமுடையளான
ஆய்ச்சி, Aaychi - யசோதைப்பிராட்டியானவள்
வயிறு அடித்து அஞ்ச, Vayiru Adithu Anja - வயிற்றிலே மோதிக்கொண்டு பயப்படும்படியாக
அரு வரை போல்மன்னு, Aru Varai Polmannu - பெரிய மலைபோலப் பேராதே நின்ற
கரு களிறு, Karhu Kaliru - (குவலயாபீட மென்கிற) கரிய யானையினுடைய
ஆர் உயிர், Aar Uyir - அருமையான உயிரை
வவ்விய, Vavviya - கவர்ந்த
மைந்தனை, Mainthanai - மிடுக்கனான கண்ணபிரான் விஷயமாக,
மா கடல் சூழ், Maa Kadal Soozh - பெரிய கடலாலே சூழப்பட்டு
கன்னி நல் மா மதிள், Kanni Nal Maa Mathil - ஸ்திரமாய் விலக்ஷணமான பெரிய திருமதிள்களை யுடைத்தான
மங்கையர், Mangaiyar - திருமங்கைநாட்டில் உள்ளவர்கட்கு
காவலன், Kavalan - பரிபாலகாய்
காமரு சீர், Kaamaru Seer - விரும்பத்தக்க திருக்குணங்களை யுடையரான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் (அருளிச்செய்த)
இன் இசை மாலைகள் ஈர் ஏழும், In Isai Maalaigal Eer Aezhum - மதுரமான இசையை யுடைய சொல்மாலை யான இப்பதினான்கு பாசுரங்களையும்
வல்லவர்க்கு, Vallavarkku - ஓதவல்லவர்களுக்கு
இடர் ஏதும் இல்லை, Idar Aedhum Illai - துன்பமொன்றுமில்லை யாகும்.
1922பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காலத்தைத் தப்பினான் ஆயிற்று -ஒப்பித்து வர வேண்டுகையாலே – இவர்களுக்கு உடலாக ஒப்பிக்கிறத்தோடு-இவர்களோடு சம்ஸ்லேஷிக்கிறதோடு வாசி என் என்றாயிற்று -அவன் படி – இருந்தபடியே உகக்கிற எங்களுக்கு ஒப்பிக்க வேணுமோ – கிட்டி வரச் செய்தேயும் காலத்தைத் தப்பி வருகையாலே ஓர் அடியிலே பத்தடி இட்டான் ஆயிற்று –சாபராதன் ஆகையாலே கிட்டி வர மாட்டுகிறிலன்- ஆற்றாமையாலே புறம்பு போக மாட்டுகிறிலன்–ஒப்பித்துக் கொடு வர வேணுமோ – காலத்தைத் தப்பி வர வேணுமோ – சாபராதனானால் மேல் விழ வன்றோ வடுப்பது) 1
காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்துத் தாது நல்ல தண்ணம் துழாய் கொடு அணிந்து போது மறுத்துப் புறமே வந்து நின்றீர் ஏதுக்கு யிதுவென் யிதுவென் யிதுவென்னொ –10-8-1
பதவுரை Show / Hide
காதில், Kaadhil - காதிலே (- (பெரியவரே) (இது ஏன்? இது ஏன்? இது ஏன்?))
கடிப்பு, Kadippu - குண்டலத்தை
இட்டு, Ittu - அணிந்துகொண்டும்
கலிங்கம் உடுத்து, Kalingam Uduthu - திருப்பரியட்டத்தைச் சாத்திக் கொண்டும்
தாது நல்ல த ண் அம் துழாய், Thaadu Nalla Tha N Am Thuzhai - தாதுகளையுடைத்தாய நல்ல குளிர்ந்த அழகிய திருத்துழாய்மாலையை
அணிந்து கொடு, Aninthu Kodu - அணிந்து கொண்டும்
போது மறித்து வந்து, Podhu Marithu Vandu - காலதாமதமாக வந்து
புறமே, Purame - கதவின் புறமாக
எதுக்கு நின்றீர், Ethukku Nindreer - ஏன் நிற்கின்றீர்
1923பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரத்யபிஜ்ஞார்ஹம் அல்லாத காலத்திலேயே வந்தார் இவர் –அந்ய பரதை பாவித்து வர வேணுமோ – கதவுக்கு புறம்பே நிற்க வேணுமோ – தள்ளவும் போகாதே ஒழிய வேணுமோ) 2
துவராடையுடுத்து ஒரு செண்டு சிலுப்பி கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர் இவராரிது வென் யிதுவென் யிதுவென்னொ –10-8-2
பதவுரை Show / Hide
துவர் ஆடை, Thuvar Aadai - சிவப்பு நிறமான திருப்பரியட்டத்தை (- (இது என் இது என் இது என்?))
உடுத்து, Uduthu - சாத்திக்கொண்டு
ஒரு செண்டு சிலுப்பி, Oru Sendu Siluppi - ஒருசெண்டையும் கையால்) சிலுப்பிக்கொண்டு
கவர் ஆக முடித்து, Kavar Aaga Mudithu - (கிருக்குழலை) வாரிமுடித்து,
கலி கச்சு கட்டி, Kali Katchu Katti - வலியகச்சுப்பட்டையை (இடுப்பில்) கட்டிக்கொண்டு
சுவர் ஆர் கதவின் புறமே, Suvar Aar Kathavin Purame - சுவரோடு சார்ந்த கதவின் புறமாக
வந்து நின்றீர், Vandu Nindreer - வந்து நிற்கின்றீர்,
இவர் ஆர், Ivar Aar - இப்படி நிற்கிற இவர் ஆர் கொல்?
1924பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நஞ்சுண்டாரைப் போலே மோஹிக்கும் படியாக பண்ணை நுனுங்கிக் கொண்டு வந்து – ராத்ரியிலே பிரசித்தராய் இருப்பார் அப்ரசித்தரைப் போலே வரக் கடவதோ பண்ணை ந னுக்கிக் கொடு வரக் கடவோதோ ராத்ரியிலே வரக் கடவதோ) 3
கருளக் கொடி ஒன்றுடையீர் தனிப் பாகீர் உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர் மருளைக் கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர் இருளத்து இது என் இது என் இது வென்னோ –10-8-3
பதவுரை Show / Hide
கருளன், Karulan - கருடனாகிற (- (இது என் இது என் இது என்?))
கொடி ஒன்று உடையீர், Kodi Ondru Udaireer - ஒரு த்வஜத்தையுடையவரே!
தனி பாகீர், Thani Baageer - அக்கருடனை நடத்துவதில் ஒப்பற்றவரே!
உறக்கில், Urakkil - தூங்கும்போது
சகடம் அது, Sakadam Adhu - அஸுரனாவாவேசிக்கப் பட்ட) வண்டியானது
உருள, Urula - உருமாய்ந்துபோம்படி
நிமிர்த்தீர், Nimirtheer - திருவடியைத்தூக்கினவரே!
இருளத்து, Irulathu - இவ்விராப்போதிலே
மருள, Marula - (பெண்கள்) மோஹிக்கும்படியாக
பாடிக்கொடு வந்து, Paadikkodu Vandu - இசைபாடிக் கொண்டு வந்து
இல்லம் புகுந்தீர், Illam Pugundheer - வீட்டினுள் வந்து சேர்ந்தீர்,
1925பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அரண் அழித்து வருவார் ஆதரம் உடையார் அன்றோ – பூர்ணராய் இருப்பார் அபூர்ணரைப் போலே வரக் கடவதேயோ – கலக்க வருவார் அப்ரசித்தமாக வன்றோ வருவது -அரண் அழித்து வர வேணுமோ) 4
நாமம் பலவுமுடை நாரண நம்பீ தாமத் துளவம் மிக நாறிடுகின்றீர் காமன் எனப்பாடி வந்து இல்லம் புகுந்தீர் ஏமத்து இது என் இது என் இது என்னோ –10-8-4
பதவுரை Show / Hide
நாமம் பலவும் உடை, Naamam Palavum Udai - பல பல திருநாமங்களையுடைய (- (இது என் இது என் இது என்?))
நாரண நம்பி, Naarana Nambi - ஸ்ரீமந்நாராயணமூர்த்தியே!
மிக நாறு, Miga Naaru - மிகவுமு பரிமளித்துக்கொண்டிருக்கிற
துளபம் தாமம், Thulabam Thaamam - திருத்துழாய்மாலையை
இடுகின்றீர், Idhuginreer - அணிந்துகொண்டிருப்பவரே!
காமன் என, Kaaman Ena - மன்மதன்போல
பாடி வந்து, Paadi Vandu - பாடிக்கொண்டுவந்து
ஏமத்து, Emathu - இராப்பொழுதில்
இல்லம்புகுந்தீர், Illampugundheer - வீட்டினுள் புகுந்தீர்,
1926பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மயிர் முடி பேணாதே வர வேணுமோ –ஆயுதத்தோடு வர வேணுமோ – பின்னை வெற்றி கொண்டாடி நிற்க வேணுமோ) 5
சுற்றும் குழல் தாழச் சுரிகை அணைத்து மற்றும் பல மா மணி பொன் கொடணிந்து முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் எற்றுக்கு இது என் இது என் இது என்னோ –10-8-5
பதவுரை Show / Hide
குழல், Kuzhal - திருக்குழல்களானவை (- (இதுஎன் இதுஎன் இதுஎன்?))
சுற்றும், Sutrum - பிடரியைச்சுற்றிலும்
தாழ, Thaa - தாழ்ந்தலையப்பெற்றும்
சுரிகை, Surigai - உடைவாளை
அணைத்து, Anaiththu - தரித்துக்கொண்டும்
மற்றும் பல, Mattrum Pala - மற்றும் பலவகைப்பட்ட
மா மணி, Maa Mani - சிறந்த ரத்னாபரணங்களையும்
பொன், Pon - பொன்னுபரணங்களையும்
அணிந்துகொடு, Anindhukodu - சாத்திக்கொண்டும்
முற்றம் புகுந்து, Muttram Pugundhu - (எங்கள்வீட்டு) முற்றத்திலே வந்து சேர்ந்து
முறுவல் செய்து, Muruvai Seidhu - புன்சிரிப்புச் சிரித்து
ஏற்றுக்கு நின்றீர், Aetrukku Nindheer - எதுக்காக நிற்கிறீர்?
1927பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வ்யதிரேகத்தில் முடிவார்க்கு அன்றோ நீ உதவுவது –பிரணயிநி பக்கல் ஆயுதத்தோடு வர வேணுமோ – இடம் அறிந்து அன்றோ வருவது) 6
ஆனாயரும் ஆநிரையும் அங்கு ஒழியக் கூனாய தோர் கொற்ற வில் ஓன்று கை ஏந்திப் போனார் இருந்தாரையும் பார்த்துப் புகுதீர் ஏனோர்கள் முன் இது என் இது என் இது என்னோ –10-8-6
பதவுரை Show / Hide
ஆன் ஆயரும், Aan Aayarum - கோபாலர்களையுமு (- (இதுஎன் இதுஎன்?))
ஆ நிரையும், Aa Niraiyum - பசுக்கூட்டங்களையும்
அங்கு ஒழிய, Angu Ozhiy - அங்கேவிட்டுவிட்டு,
கூன் ஆயது, Koon Aayadhu - வளைந்திருப்பதாய்
கொற்றம், Kotrham - ஐச்வாயஸூசகமான
வில் ஒன்று, Vil Ondru - ஒருவில்லை
கை ஏந்தி, Kai Aendhi - கையில் பிடித்துக்கொண்டு
போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர், Ponar Irundharaiyum Paarthu Pugudheer - போனவர்கள் யார், இருப்பவர்கள் யார் என்று பார்த்துக் கொண்டு வருகின்றீர்,
ஏனோர்கள் முன் என், Aenorkal Mun En - பிரதிகூலர்களின் எதிரே ஏனிப்படி?
1928பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உம்மை நீர் அறிந்தால் காலத்தைக் குறித்தே போவது எங்களை அறிந்தால் சொன்ன போதிலே வர வேண்டாவோ உறவு முறையாரைப் போலே நீர் கவிழ்ந்து இருக்கிறது என் –இங்கே வாரீர் – உம்மை நீர் அறிய வேண்டாவோ –எங்களை அறிய வேண்டாவோ) 7
மல்லே பொருத திரள் தோள் மணவாளீர் அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தைச் சொல்லாது ஒழியீர் சொன்ன போதினால் வாரீர் எல்லே இது என் இது என் இது என்னோ –10-8-7
பதவுரை Show / Hide
மல், Mal - மல்லர்களை (- (இதுஎன் இதுஎன் இதுஎன்?))
பொருத, Porutha - போர்செய்தழித்த
திரள் தோள், Thiral Thol - திரண்ட புஜங்களையுடைய
மணவாளீர், Manavaaleer - மணவாளரே!
நும் மனத்தின் கருத்தை, Num Manaththin Karuththai - உம்முடைய திருவுள்ளத்தை
அல்லே, Alle - (நேற்று) இரவே
அறிந்தோம், Arindhom - தெரிந்துகொண்டோம்
சொல்லாது ஒழியீர், Sollaadhu Ozhiyheer - (இன்னபோது வகுவேனென்லாமற் போகிறீரில்லை,
சொன்ன போதினால் வாரீர், Sonna Podhinal Vareer - குறிப்பிட்டகாலத்தின்படி வருகிறீல்லை,
எல்லை, Ellai - அந்தோ!,
1929பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உமக்கு சத்ருசராய் இருப்பவர் பலரும் அல்லையோ-இது தன்னைக் கொண்டாடும் அவர்கள் அன்றோ அவர்கள் – இது என்ன கஷ்டமோ–சாஹாசங்களைச் செய்யக் கடவ நீர் இங்கே வந்தது என் – குறைவற்ற நீர் இங்கே வந்தது என் – மேன்மை உடையார் வரக் கடவதோ) 8
புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர் இக்காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம் தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர் எல்லே இது என் இது என் இது என்னோ –10-8-8
பதவுரை Show / Hide
புக்கு, Pukku - (பொய்கையிலே) குதித்து (- (இதுஎன் இதுஎன் இதுஎன்))
ஆடு அரவம் பிடித்து, Aadu Aravam Pidiththu - படமெடுத்தாடுகின்ற காளிய நாகத்தைப் பிடித்து
ஆட்டும், Aattum - ஆட்டிவாட்டின
புனிதீர், Punitheer - பரிசுத்தரே!
இக்காலங்கள், Ikkaalangal - இப்போது
யாம், Yaam - நாங்கள்
உமக்கு, Umakku - உமக்கு
ஏது ஒன்றும் அல்லோம், Aethu Ondrum Allom - ஒருசரக்காகவும் எண்ணப்படுவோமல்லோம்,
தக்கார், Thakkar - உமக்குத் தகுத்திருப்பவர்களாய்
பலர், Palar - அளவற்றவர்களான
தேவிமார், Devimar - மஹிஷீவர்க்கங்களை
சால, Sala - மிகவும்
உடையீர், Udaiyeer - உடையராயிருக்கின்றீர்
எக்நே, Eknai - இது என்ன கஷ்டகாலம்!
1930பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வ்யதிரேகத்தால் தரியாதவர்கள் இருக்க-உன்னைக் கொண்டு கார்யம் இன்றிக்கே இருப்பார்க்கு அன்றோ நீ உதவுவது -என்று சொல்லப் புக்காள்- இவ்வார்த்தை சொல்லித் தலைக் கட்டினால் பின்னை தனக்கு அவகாசம் அறும் -என்று பார்த்து அதுக்கு முன்பே காலைப் பிடித்தான் காலைப் பிடிக்கிறது என் –மார்வத்து எழுத்து என்கிறது என்-வாயிது விரல் இது என்கிறது என்) 9
ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்க் கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய் தேடித் திரு மா மகள் மண் மகள் நிற்ப ஏடி இது என் இது என் இது என்னோ –10-8-9
பதவுரை Show / Hide
திரு மா மகள், Thiru Ma Magal - பெரிய பிராட்டியாம் (- (இதுஎன் இதுஎன்?))
மண் மகள், Man Magal - பூமிப்பிராட்டியாரும்
தேடி நிற்ப, Thedi Nirpa - தேடிக்கொண்டிருக்க
நீ போய், Nee Poi - அவர்களை உபேக்ஷித்துப்போய்
ஆய் மடவாரொடு, Aai Madavarodu - இடைப்பெண்களோடே
கூடி, Koodi - கலந்து
குரவை பிணை, Kuravai Pinai - ராஸக்ரீடை நடத்தின
கோமளம் பிள்ளயா, Komalam Pillaiya - அழகிய பிள்ளாய்!
இது என், Idhu En - இது என்ன காரியம்!
ஏடீ, Eadi - வாராய் தோழீ!
1931பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் தானே வந்து மேல் விழச் செய்தேயும் இவர்களுக்கு பாவ பந்தம் கனத்து இருக்கச் செய்தேயும் ஏறிட்டுக் கொண்ட சங்கல்பம் குலையாத படி நின்றதொரு நிலை உண்டு இறே இது கற்றார்க்கு அந்த மிறுக்கு இல்லை) 10
அல்லிக் கமலக் கண்ணனை யங்கோர் ஆய்ச்சி எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக் கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை சொல்லித் துதிப்பார் அவர் துக்கமிலரே –10-8-10
பதவுரை Show / Hide
அல்லி கமலம் கண்ணனை, Alli Kamalam Kannanai - தாதுகளையுடைய தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையுடைய கண்ணபிரானைக்குறித்து
அங்கு, Angu - திருவாய்ப்பாடியில்
ஓர் ஆய்ச்சி, Or Aaychi - ஓரிடைச்சி
எல்லி பொழுது, Elli Pozhudhu - இராப்பொழுதிலே
ஊடிய, Oodiya - ப்ரணயரோஷந் தோற்றப்பேசின
ஊடல் திறத்தை, Oodal Thirathai - வெறுப்புவார்த்தை விஷயமாக
கல்லில் மலி, Kallil Mali - மலையைக்காட்டிலும் அதிசயத்த (வலிமைகொண்ட)
தோள், Thol - திருத்தோள்களையுடையரான
கலியன், Kalyan - திருமங்கையாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச்செய்த
மாலை, Maalaik - இச்சொல்மாலையை
துதிப்பார் அவர், Thudhippar Avar - எம்பெருமானை ஏத்துமவர்கள்
துக்கம் இலர், Thukkam Ilir - துன்பமற்று வாழப்பெற்றுவர்கள்.
1932பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண் காண ஒண்ணாத ஆபத்தை பரிஹரித்த நமக்கு இது ஒன்றும் பழியாய்த் தலைக் கட்ட புகுகிறதோ – என்று கொண்டு இருக்கிறாயோ) 1
புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ கள்ளவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும் பிள்ளை தன கையில் கிண்ணமே யொக்கப் பேசுவது எந்தை பிரானே –10-9-1
பதவுரை Show / Hide
எந்தை பிரானே, Endhai Pirane - எம்பெருமானே!
எங்கள் கள அவிழ்கோதை காதலும், Engal Kala Avizhkothai Kaadhalum - தேனொழுகுகின்ற மயிர் முடியையுடையளான என்மகளின் ஆசையையும்
காரிகை மாதர் கருத்தும், Kaarikai Maathar Karuththum - (அவ்வாசையைப் பழிக்கின்ற) அழகியாருடைய கருத்தையும்
பிள்ளை தன் கையில் கிண்ணமே ஒக்க பேசுவது, Pillai Than Kaiyil Kinname Okka Pesuvathu - சிறுபிள்ளையின் கையிலுள்ள கிண்ணத்தை உபேக்ஷித்திருக்குமா போலே உபேக்ஷித்திருப்பதானது,
புள் உரு ஆகி, Pul Uru Aagi - (சிறுகுழந்தைகளை அனுங்கச் செய்யவல்ல)பறவையினுருவத்தையுடையவளாகி
நள் இருள், Nal Irul - நடுநிசியிலே
வந்த, Vanda - (முலைகொடுத்துக் கொல்ல) வந்த
பூதனை, Poothanai - பூதனை
மாள, Maala - மாளும்படியாகவும்
இலங்கை, Ilankai - லங்காபுரியை
ஒள் எரி மண்டி உண்ண, Ol Eri Mandi Unna - ஜ்வலிக்கிற அச்நிவியாபித்து புஜிக்கும்படியாகவும்
பணித்த, Paniththa - செய்தற்குறுப்பான
ஊக்கம் அதனை, Ookkam Adhanai - நிடுக்கை
நினைந்தோ, Ninaindho - திருவுள்ளம்பற்றியோ?
1933பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒருவர் இருவர் அன்றிக்கே ஊராக அனுபவிக்கும் படி குருகுல வாஸம் பண்ணினார்க்கும் ஆட ஒண்ணாத கூத்துக்களை அன்றோ நாம் உபகரித்தது ஆனபின்பு நமக்கு இது ஒன்றும் பழி யாகப் புகுகிறதோ -என்று இருக்கிறாயோ – ஊருக்காக உபகரித்த படி சொல்லிற்று -முன் –இனி ஒருத்திக்காக உபகரித்த படி சொல்லுகிறது) 2
மன்றில் மலிந்து கூத்து வந்தாடி மால் விடை ஏழும் அடர்த்து ஆயர் அன்று நடுங்க வா நிரை காத்த ஆண்மை கொலோ வறியேன் நான் நின்ற பிரானே நீள் கடல் வண்ணா நீ யிவள் தன்னை நின் கோயில் முன்றில் எழுந்த முருங்கையில் தேனா முன் கை வளை கவர்ந்தாயே –10-9-2
பதவுரை Show / Hide
நின்ற பிரானே, Nindra Piraane - திருமலையில நின்றருளும் பிரானே! (- (இது))
நீள் கடல் வண்ணா, Neel Kadal Vanna - பெரிய கடல்போன்ற வடிவையுடையவனே!
நீ, Nee - நீ
நீன் கோயில் மூன்றில் எழுந்த முருங்கையில் தேன் ஆ, Neen Koyil Moondril Ezhunthha Murungaiyil Then Aa - தன் கோயில் முற்றத்திலுண்டான முருங்கை மரத்தின் தேனை எளிதாகக் கவருமாபோலே
இவள் தன்னை, Ival Thannai - இப்பெண்மகளினுடைய
முன் கைவளை, Mun Kaivazhai - முன்கையிலுள்ளவளைகளை
கவர்ந்தாயே, Kavarnthaye - கைக்கொண்டாயே,
மன்றில் மலிந்து, Manril Malinthu - நாறசந்தியிலே பொருந்தி நின்று.
உவந்து, Uvandu - திருவுள்ளமுகந்து
கூத்து ஆடி, Koothu Aadi - (குடக்கூத்து முதலிய கூத்துகளை யாடியும்)
மால் விடை ஏழும் அடர்த்து, Maal Vidai Ezhum Adarthu - கரிய காளைகளேழையும் வலியடக்கியும்,
அன்று, Anru - (இந்திரன் கல்மாரி பொழிந்த) அக்காலத்தில்
ஆயர் நடுங்க, Aayar Nadunga - இடையர்கள் நடுங்கிநிற்க
ஆநிரை, Aanirai - பசுக்கூட்டங்களை
காத்த, Kaatha - ரக்ஷித்தோமென்கிற
ஆண்மை கொலோ, Aanmmai Koloo - மேனாணிப்பினாலோ?
நான் அறியேன், Naan Ariyeen - என்ன காரணமென்று நான் அறிகின்றிலேன்
1934பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெறுதற்கு அரியல் ஆனவளை –இவளை இப்படிப் பண்ண வல்ல வடிவு அழகை உடையவனே – கையில் இருந்த கறுப்புக் கட்டி -தின்னவுமாய் பொகடவுமாய் இருக்கும் இறே அப்படியே நினைத்து இருக்கிறாயோ இவளையும்) 3
ஆர்மலி யாழி சங்கோடு பற்றி ஆற்றலை யாற்றல் மிகுத்து கார் முகில் வண்ணா கஞ்சனை முன்னம் கடந்த நின் கடுந்திறல் தானோ நேரிழை மாதை நித்திலத் தொத்தை நெடுங்கடல் அமுதனை யாளை- ஆரெழில் வண்ணா அங்கையில் வட்டாம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-3
பதவுரை Show / Hide
கார் முகில் வண்ணா, Kaar Mukil Vanna - காளமேகநிறத்தனே! (- (இப்படி நினைத்திருப்பதானது))
ஆர் எழில் வண்ணா, Aar Ezhil Vanna - மிக்க அழகுடையவடிவு படைத்தவனே!,
நேர் இழை, Ner Izhai - நேர்மையான ஆபரணங்களை யுடையவளாய்
நித்திலம் தொத்தை, Niththilam Thoththai - முத்துமாலை போன்றவளான
நெடு கடல், Nedu Kadal - பெரிய கடலில் தோன்றிய அம்ருதம் போன்றவளான
மாதை, Maathai - இப்பெண்பிள்ளை விஷயத்திலே
இவள் அங்கையில் வட்டு ஆம் என கருதுகின்றாய், Ival Angaiyil Vattu Aam En Karudhingirai - ‘உள்ளங்கையிலுள்ள கருப்புக்கட்டிபோன்ற வளாமிவள்’ என்று நினைத்திருக்கிறாய்,
முன்னம், Munnam - முன்பு
ஆர் மலி, Aar Mali - கூர்மை மிக்க
ஆழி, Aazhi - திருவாழியையும்
சங்கொடு, Sangodu - திருச்சங்கையும்
பற்றி, Patri - கையிலேந்தி, (அவதரித்து)
ஆற்றலை, Aattralai - மிடுக்கை
ஆற்றல் மிகுத்து, Aatral Mikuthu - ஆறுதல் மிகும்படியாக்கி (யடக்கி)
கஞ்சனை, Kanjanai - கம்ஸனை
கடந்த, Kadandha - தொலைப்பதற் குறுப்பாயிருந்த
நின் கடு திறல் தானோ, Nin Kadu Thiral Thaano - உன்னுடைய வலியதான பராக்ரமத்தை நினைத்தோ?
1935பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன்னுடைய வடிவு அழகை ஒரு கால் காட்டிக் கொண்டு போகிறிலை பாவன பிரகர்ஷத்தாலே -உருவு வெளிப்பாட்டாய் முன்னே நின்று போகிறிலை- பரக்கச் சொல்வதால் என்ன கார்யம் உண்டு – சாபமாநய சௌமித்ரே-என்று நினைத்த போதே-வாங்கிக் கார்யம் கொள்ளலாம் படி உரிய அடியார் கையில் ஆயுதத்தோபாதியாக நினைத்திரா நின்றாய்) 4
மல்கிய தோளும் மானுரியதளும் உடையவர் தமக்குமோர் பாகம் நல்கிய நலமோ நரகனைத் தொலைத்த கரதலத்தது அமைதியின் கருத்தோ அல்லியங்கோதை யணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் சொல்லியென் நம்பி இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே –10-9-4
பதவுரை Show / Hide
நம்பீ, Nambi - ஸ்வாமிந்! (- (இப்படி உபேக்ஷித்திருப்பதானது) (அன்றி))
அல்லி அம் கோதை, Alli Am Kothai - செவ்விமாலையினாலே அழகுபெற்ற மயிர் முடியையுடையளான இப்பெண்பிள்ளையினுடைய
அணி, Ani - விலக்ஷணமான
நிறம், Niram - மேனி நிறத்தை
கொண்டு, Kondhu - அபஹரித்தது மன்றி
முன்னே வந்து நின்று போகாய், Munnai Vandu Nindru Pogai - உருவெளிப்பாட்டாலே எப்போதும் இவள் கண்ணெதிரே தோற்றிப் புறம்பு போகிறாயில்லை
நீ, Nee - நீ
இவளை, Ivazhai - இப்பெண்பிள்ளையை
உங்கள் தொண்டர்கை தண்டு என்ற ஆறு, Ungal Thondarkai Thandu Endra Aaru - அடியார் கையிலுள்ள தடியைப்போலே நினைத்திருக்கும் விதம் என்னே!
சொல்லி என், Solli En - (இவள் திறத்திலே உனக்கு உள்ள உபேக்ஷையைப்பற்றி விரிவாகச்) சொல்வதனால்
மல்கிய தோளும், Malkiya Tholum - பணைத்த தோள்களையும்
மான் உரி அதளும், Maan Uri Adhalum - மானின் உரிக்கப்பட்ட தோலையும்
உடையவர் தமக்கும், Udaiyavar Thamakkum - உடையவரான சிவபிரானுக்கும்
ஓர் பாகம், Oru Paagam - திருமேனியில் ஒரு பகுதியை
நல்கிய, Nalkiya - (இடமாகக்) கொடுத்திருக்கிறோ மென்கிற
நலமோ, Nalamo - பெருமையை நினைத்தோ?
நாகனை, Naganei - நாகாஸுரனை
தொலைத்த, Tholaitha - கொன்றொழிப்பதற்கீடான
காதலத்து, Kaadhalathu - கையிலுள்ள
அமைதியின் கருத்தோ, Amaithiyin Karuththo - மிடுக்கை நினைத்தோ?
1936பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மதுரா மதுராலாபா -என்னும்படியான பேச்சை உடையவளை – செவ்வி மாறாத மாலையையும் உடையவளை – இவள் வாசி ஒன்றையும் புத்தி பண்ணிற்று இல்லை –இதுக்கு நான் எத்தைச் செய்வேன் – பெரு வழிக் கரையிலே-நாவலில் விழுந்த பழமானது-குனிந்து எடுக்க்கவுமாய் தவிரவுமாய் இருக்கும் இறே அவ்வோபாதியும் நினைத்து இறுக்கிறலை யாயிற்று இவளையும்) 5
செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டவர் செல்லும் அரு வழி வான மதர் படக் கண்ட ஆண்மை கொலோ வறியேன் நான் திரு மொழி எங்கள் தே மலர்க் கோதை சீர்மையை நினைந்திலை யந்தோ பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் எனப் பேசுகின்றாயே –10-9-5
பதவுரை Show / Hide
எங்கள், Engal - எங்களுடையவளாய்
திருமொழி, Thirumozhi - சிறந்த (மதுரமான) பேச்சையுடையவளாய்
தேன் மலர் கோதை, Then Malar Kothai - தேனொழுகும் மலர்களணிந்த மயிர் முடியையுடையளான இப்பெண்பிள்ளையினுடைய
சீர்மையை, Seermaiyai - சிறப்பை
நினைத்திலை, Ninaithilai - அறிகின்றிலை
அந்தோ, Andho - ஐயோ!
இவள் பெரு வழி நாவல் கனியினும் எளியள் என பேசுகின்றாய், Ival Peru Vazhi Naaval Kaniyinum Ezhiyal En Pesugindraai - பெரிய வழியில் விழுந்து கிடக்கிற நாவற் பழத்தைக்காட்டிலும் இவள் எளியவள் என்று நினைத்திருக்கிறாயே1,
செரு, Seru - போர்க்களத்திலே
அழியாத, Azhiyaadha - ஒருநாளும் தோற்றறியாத
மன்னர்கள், Mannargal - அரசர்கள்
மாள, Maala - மாண்டுபோகும்படியாக
தேர் வலம் கொண்டு, Ther Valam Kondu - தேரின் வலிமையையே கொண்டு
அவர் செல்லும், Avar Sellum - அவ்வரசர்கள் போகக்கூடிய
அரு வழி வானம், Aru Vazhi Vaanam - அருமையான வழியையுடைய வீரஸ்வர்க்கத்தை
அதர்பட கண்ட, Adharpada Kanda - பெருவழியாக்கின
ஆண்மை கொலோ, Aanmmai Koloo - ஆண்பிள்ளைத்தனத்தை நினைத்தோ?
நான் அறியேன், Naan Ariyeen - எனக்குத் தெரியவில்லை
1937பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு கால் வடிவு அழகைக் காட்டிப் போகிறிலை -என்னுதல்-உருவு வெளிப்பாட்டாலே முன்னே நின்று போகிறிலை -என்னுதல் – எந்தை பிரானே-தன்னடையே பழுத்து நெகிழ்ந்து விழுகிறத்தை எறி மழுவைக் கொண்டு வியாபாரிக்க வேணுமோ) 6
அரக்கியர் ஆகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையர் கோனை செருக்கழித்து அமரர் பணிய முன்னின்ற சேவகமோ செய்ததின்று முருக்கிதழ் வாய்ச்சி முன்கை வெண் சங்கம் கொண்டு முன்னே நின்று போகாய் எறிக்கிலைக்காக வெறி மழு வோச்சல் என் செய்வது எந்தை பிரானே –10-9-6
பதவுரை Show / Hide
எந்தை பிரானே, Endhai Pirane - எம்பெருமானே!
முன், Mun - முன்பொருகால்
அரக்கியர், Arakkiyar - ராக்ஷஸ ஸ்த்ரீகளினுடைய
ஆகம், Aaham - மார்பு
புல்லென, Pullen - சூன்யமாம்படியாக
அணி மதிள் இலங்கையர் கோனை, Ani Mathil Ilangaiyar Konai - அழகிய மதிள்களையுடைய இலங்காபுரியிலுள்ளார்க்குத் தலைவனான இராவணனை
வில்லால், Villal - ஒரு வில்லாலே
செருக்கு அழித்து, Serukku Azhithu - கொழுப்படக்கி
அமர்ர் பணிய நின்ற, Amarr Panai Nindra - தேவர்கள் வணங்குமாறு நின்ற
சேவகமோ, Sevagamo - பராக்ரமத்தை நினைத்தோ
இன்று செய்த்து, Indru Seiththu - இன்று (இவள் திறத்திலே உபேக்ஷ) செய்வது?
முருக்கு இதழ் வாய்ச்சி, Murukku Idhal Vaaychchi - முருக்கம்பூப்போன்ற அதரத்தையுடையளான இப்பெண்பிள்ளையினுடைய
முன் கை, Mun Kai - முன்கையிலுள்ள
வண் சங்கம், Van Sangam - அழகிய வளைகளை
கொண்டு, Kondhu - பறித்துக்கொண்டது மன்றி
முன்னே நின்று போகாய், Munne Nindru Pogaai - உருவெளிப்பாட்டாலே எப்போதும் இவள் கண்ணெதிரே தோன்றிப் புறம் போகிறாயில்லை,
எருக்கு இலைக்கு ஆக, Erukku Ilaikku Aaga - எருக்கிலையை உதிர்ப்பதற்காக
எறி மழு ஓச்சல் என் செய்வது, Eri Mazhu Ochal En Seivathu - வீசுகோடாலியைக் கொண்டு ஓங்கியடிப்பது எதுக்கு?
1938பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவளுடைய –முன்னே உன்னுடைய வடிவை ஒரு கால் காட்டி போகிறிலை – தன்னடையே உடைந்து போகிற இத்தை தடியை இட்டுத் தகர்க்க வேணுமோ) 7
ஆழி யம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடலுலக முன்னாண்ட பாழி யம் தோள் ஆயிரம் வீழப் படை மழுப் பற்றிய வலியோ மாழை மென்னோக்கி மணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் கோழி வெண் முட்டைக்கு என் செய்வது எந்தாய் குறுந்தடி நெடுங்கடல் வண்ணா –10-9-7
பதவுரை Show / Hide
முன், Mun - முற்காலத்து, (- (நெடுங்கடல்வண்ணா எந்தாய்!))
திண், Thin - வலிமைபொருந்திய
ஆழி, Aazhi - உருளையோடு கூடின
அம் தேர், Am Ther - அழகிய தேரையுடையரான
அரசர், Arasar - ராஜாக்கள்
வந்து இறைஞ்ச, Vandhu Irajinja - வந்து வணங்கும்படியாக
அலை கடல் உலகம், Alai Kadal Ulagam - அலைகடல் சூழ்ந்த உலகங்களை
ஆண்ட, Aanda - ஆட்சிபுரிந்த
ஓர் ஆயிரம் பாழி அம் தோள் விழ, Oru Aayiram Pazhi Am Thol Vizh - (கார்த்தவீரியனுடைய) வலிமிக்க ஓராயிரந் தோள்கள் இற்று விழும்படியாக
வடை மழு பற்றிய வலியோ, Vadai Mazhu Patriya Valiyo - கோடாலிப்படையை எந்திய மிடுக்கை நினைத்தோ
மாழை மெல்நோக்கி, Mazhai Melnookki - மானினுடைய அழகிய நோக்குப் போன்ற நோக்கையுடையளான பெண்பிள்ளையினுடைய
மணி நிறம் கொண்டு, Mani Niram Kondu - அழகிய மேனி நிறத்தைக் கொள்ளை கொண்டது மன்றி
முன்னே வந்து நின்று போகாய், Munnai Vandu Nindru Pogai - உருவெளிப்பாட்டாலே இவள் கண்ணெதிரே தோற்றி நின்று புறம்பு போகிறாயில்லை,
கோழி வெண்முட்டைக்கு, Koli Venmuttaikku - (தன்டையே உடைந்து போக்க்கூடியதான) கோழி முட்டையை உடைப்பதற்கு
குறு தடி, Kuru Tadi - சிறிய தடிதானும்
ஏன் செய்வது, Ean Seivathu - ஏதுக்கு?
1939பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவள் உடைய வைலஷண்யம் ஒன்றையும் புத்தி பண்ணிற்று இல்லை – வாயில் பொகட்டின நீர் இழிச்சவும் கொப்பளிக்கவுமாய் இருக்கும் அவ்வோபாதியாக நினையா நின்றாய் -இவளையும்) 8
பொருந்தலன் ஆகம் புள்ளு வந்தேற வள்ளுகிரால் பிளந்து அன்று பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை கொலோ செய்ததின்று பெரும் தடங்கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில் கருங்கடல் வண்ணா கவுள் கொண்ட நீராம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-8
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பொருகால் (- (கருங் கடல் வண்ணா!))
பொருந்தலன், Porundhalan - பகைவனான இரணியனுடைய
ஆகம், Aaham - சரீரத்திலே
புள், Pul - (கழுகு பரந்து முதலிய பறவைகள்)
உவந்து ஏற, Uvanthu Eera - மகிழ்ந்து ஏறியுண்ணும்படியாக
வள் உகிரால், Val Ukiral - கூர்மையான நகங்களாலே
பிளந்து, Pilandhu - (அவ்வுடலைப்) பங்கஞ் செய்து)
பெருந் தகைக்கு, Perun Thagaikku - பெருத்தன்மை வாய்ந்தவனான ஸுக்ரீவனுக்கு
இரங்கி, Irangi - அருள் கூர்ந்து
வாலியை முனித்த, Vaaliyai Muniththa - வாலியைச் சீறி முடிந்தோமென்கிற
பெருமை கொலோ, Perumai Kolo - பெருமையை நினைத்தோ
இன்று செய்த்து, Indru Seiththu - இப்போது (இவள்திறத்திலே உபேக்ஷை) செய்வது?
பெரு தட கண்ணி, Peru Thada Kanni - மிகப் பரந்த கண்களை யுடையளாய்
சுரும்பு உறு கோதை, Surumbu Uru Kothai - (மதுபான விருப்பத்தினால்) வண்டுகள் மாறாத கூந்தலை யுடையளான இப்பெண் பிள்ளையினுடைய
பெருமையை, Perumaiyai - வைலக்ஷண்யத்தை
நினைந்திலே, Ninaindhile - ஆராய்கின்றிலை
பேசில், Pesil - (இவள் திறத்தில் நீ கொண்டிருக்கு மெண்ணத்தைப்) பேசப் புகுந்தால்
இவள் கவுள் கொண்ட நீர் ஆம் என கருது கின்றாய், Ival Kavul Kondu Neer Aam En Karuthu Kindraai - வாயினுட் கொள்ளப்பட்ட நீர்போலே இவனை நினைத்திருக்கின்றாயத்தனை.
1940பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவளுடைய ஸ்லாக்யதையில் குறை யுண்டாய் இழக்கிறேன் அல்லேன்-இதுக்கடி நான் பண்ணின பாபம் இறே- அக்நி பரிசர்யை பண்ணவே காலம் போந்து இருக்கிற பிராமணன் தோட்டமாக நினைத்தாயே – வேறேயும் ஒரு கர்த்தவ்யம் உண்டாகா நினைத்து இரா நின்றாய்) 9
நீரழல் வானே நெடு நிலம் காலாய் நின்ற நின்நீர்மையை நினைந்தோ சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னதோர் தேற்றன்மை தானோ பார் கெழு பவ்வத் தாரமுதனைய பாவையைப் பாவம் செய்தேனுக்கு ஆரேழல் ஓம்பும் அந்தணன் தோட்டமாக நின் மனத்து வைத்தாயே –10-9-9
பதவுரை Show / Hide
பாவம் செய்தேனுக்கு, Paavam Seithenukku - பாவியான என்னுடைய (- (இது))
பார் கெழு பௌவத்து ஆர் அமுது அனையபாவையை, Paar Kezhu Paavaththu Aar Amuthu Anaiyapavaiyai - பூமியைச் சூழ்ந்திருக்கிற கடலிலுண்டான அருமையான அம்ருதம்போன்ற கட்டழகியை
ஆர் அழல் ஒம்பும் அந்தணன் தோட்டம் ஆக நின் மனத்து வைத்தாய், Aar Azhai Ombum Andhanan Thottam Aaga Nin Manaththu Vaiththai - அக்நிஹோத்ரியான அந்தணனுடைய தோட்டமாகத் திருவுள்ளம் பற்றியிருக்கின்றாய்
நிலம்நீர் அழல்வான் நெடு நிலம்கால் ஆய் நின்ற நின் நீர்மையை நினைந்தோ, Nilamneer Azhalvan Nedu Nilamkal Aay Nindra Nin Neermayai Ninaindho - பஞ்சபூதங்களும் நாமேயாயிருக்கிறோ மென்கிற பெருமை நினைத்தோ?
சீர் கெழு கோதை, Seer Kezhu Kothai - சிறந்த மயிர்முடியை யுடையளான விஉள்
என் அலது இலள் என்ற, En Alathu Ilal Endra - என்னைத் தவிர்த்து வேறொரு கதியை யுடையவளல்லள் என்றுண்டான
அன்னது ஓர் தேற்றன்மை தானோ, Annadhu Oru Thetranmai Thaano - அப்படிப்பட்ட தைர்யத்தினாலோ?
1941பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தான் ஓன்று கண்டு சொல்லுகை அன்றிக்கே-முன்பு உள்ளார் சொன்ன பாசுரத்தை யாயிற்று சொல்லிற்று – யன் மங்களம் ஸூ பர்ணச்ய வினதாகல்ப யத்புரா அம்ருதம் ப்ரார்த்தயா நஸ- -பரம பக்தி இருந்த படியை சொன்ன படி – அதுக்கு அநந்தரம் உண்டாம் கைங்கர்ய லஷ்மியைப் பெற்று விஸ்த்ருதமாம்) 10
வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி மெய்ம்மை நின்று எம்பெருமானை வாள் திறல் தானை மங்கையர் தலைவன் மான வேற் கலியன் வாய் ஒலிகள் தோட்டலர் பைந்தார்ச் சுடர் முடியானைப் பழ மொழியால் பணிந்து உரைத்த பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவோடு மிகுமே –10-9-10
பதவுரை Show / Hide
வேட்டந்தை கருதாது, Vettandhai Karudhadhu - மேன்மேலே பெருகி வருகிற காமனைகளைக் கொள்ளாமல்
அடி இணை வணங்கி, Adi Inai Vanangi - தன் திருவடியிணைகளையே (பரமப்ரயோஜனமாக்க் கொண்டு) வணங்கிநிற்க
மெய்ம்மை நின்ற, Meimmai Nindra - (அப்படிப்பட்ட பசுமை காந்திகளுக்கு) உண்மையாகத் தன்னைக் காட்டிக் கொடுக்குமவனும்
தோடு அலர் பை தார் சுடர் முடியானை, Thodu Alar Pai Thaar Sudar Mudiyanaai - இதழ்களானவை விரிந்து விகஸிக்கப்பெற்ற பசுமைதங்கிய (திருத்துழாய்) மாலையை ஒளிமிக்க திருமுடியிலே அணிந்துள்ளவனுமான
எம் பெருமானை, Em Perumaanai - எம்பெருமானை நோக்கி,
வாள் திறல் தானே, Vaal Thiral Thaaney - வாள் வலி கொண்ட சேனையையுடையவரும்
மங்கையர் தலைவன், Mangaiyar Thalaivan - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரும்
மானம் வேல், Maanam Veel - பெருமைதங்கிய வேற்படையையுடைய வருமான
கலியன், Kalyan - திருமங்கையாழ்வாருடைய
வாய் ஒலிகள், Vaai Oligal - ஸ்ரீஸூக்தியாய்
பழமொழியால் பணிந்து உரைத்த, Pazhamozhiyal Panindhu Uraitha - பழமொழிகளைக் கொண்டு விநயத்துடன் அருளிச் செய்தவையான
பாட்டு இவை பாட, Paatu Ivai Paada - இப்பாசுரங்களைப் பாடவே
சித்தம், Siththam - (பாடுமவர்களது) நெஞ்சானது
பத்திமை பெருகி, Pathimai Perugi - பரமபக்திதலையெடுக்கப் பெற்று
திருவொடு மிகும், Thiruvodu Mikum - (எம்பெருமானது திருவடிகளில் நித்ய கைங்கரிய விருப்பமாகிற) செல்வமும் விஞ்சிவளரப்பெறும்.
1942பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருத்தாய் செம்போத்தே-போத்துத் திருத்துகை யாவது -அநு கூலிக்கை – என்றும் ஒக்க இவற்றின் உடைய ரஷணமே பண்ணிப் போருகையாலே வந்த குணவத்தா ப்ரதையை உடையவன் – ஸ்ரீ லஷ்மீ பதி என்கை அன்றிக்கே இது தானே தனக்குப் பேராய் இருக்கை – ஒரு கால் சொன்னால் ஆதரம் மட்டம் என்று இருக்கிறதாய் கொண்டு இருகால் மாட்டுச் சொல்கிறாள்) 1
திருத்தாய் செம்போத்தே திரு மா மகள் தன் கணவன் மருத்தார் தொல் புகழ் மாதவனை வரத் திருத்தாய் செம்போத்தே –10-10-1
பதவுரை Show / Hide
செம்போத்தே, Semboththae - ஓசெம்போத்துப் பட்சியே! (- (செம்போத்தே! திருத்தாய்))
திருமாமாள் தன் கணவன், Thirumaamal Than Kanavan - பெரியபிராட்டியார்க்கு கொழுநனாய்
மருதர், Maruthar - மணம் மிக்க மாலையை யணிந்துள்ளவனாய்
தொல் புகழ், Thol Pugazh - நித்யஸித்தமான கீர்த்தியை யுடையவனான
மாதவனை, Madhavanai - எம்பெருமானை
வர திருத்தாய், Vara Thiruththai - இங்கே வருமாறு நீதிருந்த வேணும்;
1943பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சப்த பூர்த்தியை உடைத்தாய்-நித்யமான புகழை உடையவனாய் இருக்கிறவனை –ஸ்ரீ ராமாயணத்துக்கு பிரதிபாத்யனாய் இருக்குமவனை –ரஷிக்கையால் வந்த புகழை உடையவனை – ஸ்ரீ பிராட்டிக்காக தன் மார்விலே அம்பேற்ற தீரோதாத்த நாயகனை –வரக் கூவாய்) 2
கரையாய் காக்கைப் பிள்ளாய் கருமா முகில் போல் நிறத்தன் உரையார் தொல் புகழ் உத்தமனை வரக் கரையாய் காக்கைப் பிள்ளாய் –10-10-2
பதவுரை Show / Hide
காக்கைப் பிள்ளாய், Kaakkai Pillai - காக்கைக்குட்டியே! (- (காக்கைப் பிள்ளாய்! கரையாய்))
கரு மா முகில் போல் நிறத்தன், Karumaa Mukil Pol Niraththan - காளமேகநிறத்தனாய்
உரை ஆர்தொல் புகழ், Urai Aarthol Pugazh - சொற்களில்  நிரம்பிய நித்ய கீர்த்தியையுடையனான
உத்தமனை, Uthamanai - புரஷோத்தமனை
வர கரையாய், Vara Karaiyaai - வருமாறு கூப்பிடவேணும்
1944பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதியைப் போக்கிற்றிலனே யாகிலும் விட ஒண்ணாத படி யாயிற்று வடிவு அழகு – வரக் கூவாய் பூங்குயிலே) 3
கூவாய் பூங்குயிலே குளிர்மாரி தடுத்துகந்த மாவாய் கீண்ட மணி வண்ணனை வரக் கூவாய் பூங்குயிலே –10-10-3
பதவுரை Show / Hide
பூகுயிலே, Pookuyile - அழகிய குயிலே! (- (பூங் குயிலே! கூவாய்-.))
குளிர்மாரி, Kulirmaari - (இந்திரனால் பெய்விக்கப் பட்ட) குளிர்மழையை
தடுத்து, Thaduthu - (கோவர்த்தன மென்னுங் கொற்றக் குடையினால்) தடைசெய்து
உகந்த, Ukanta - திருவுள்ளமுவந்தவனும்
மா   வாய்கீண்ட, Maa Vaaykeenda - நேசியென்னுங்குதிரையின் வாயைக்கீண்டவனும்
மணி வண்ணனை, Mani Vannana - நீலமணி நிறத்தனுமான எம            பெருமானை
வரகூவாய், Varakoovai - வருமாறு கூவவேணும்
1945பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு ஊரில் மன்று பாழ் தீரும்படியாக குடக் கூத்தாடினான் – ஒரு லோகத்தில் பாழ் தீரும்படியாகவும் ஒரு கூத்தாடினான் ஆயிற்று – தேன் மாறாத பூ மலரை உடைத்தான திருக் குழலை உடையவனை – பரம பிரணயிநி ஆனவனை – வரக் கொட்டாய் பல்லிக் குட்டி) 4
கொட்டாய் பல்லிக் குட்டி குடமாடி உலகளந்த மட்டார் பூங்குழல் மாதவனை வரக் கொட்டாய் பல்லிக் குட்டி –10-10-4
பதவுரை Show / Hide
பல்லக்குட்டி, Pallakkutti - ஓ பல்லிக்குட்டி! (- (பல்லிக்குட்டி கொட்டாய்-.))
குடம் ஆடி, Kudam Aadi - குடக் கூத்தாடினவனும்
மட்டு ஆர்பூ குழல், Mattu Aarboo Kuzhal - தேன் பொருந்தி ணிந்த திருக்குழற்கற்றை யையுடையவனும்
மாதவனை, Madhavanai - திருமகள் கொழுநனுமான எம் பெருமானை
வா, Vaa - இங்கே வருமாறு
கொட்டாய், Kottai - ஒலிசெய்
1946பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆயுதம் தானும் மிகையாம்படி யான திண்ணிய தோளை உடையவன் – வட வேங்கடவனை வரச் –ரஷணத்துக்கு உறுப்பாக முதலடி இட்டுக் கொண்டு நிற்கிறவனை – சொல்லாய் பைங்கிளியே) 5
சொல்லாய் பைங்கிளியே சுடராழி வலனுயர்த்த மல்லார் தோள் வட வேங்கடவனை வரச் சொல்லாய் பைங்கிளியே –10-10-5
பதவுரை Show / Hide
பைங்கிளியே, Paingiliye - பசுமைதங்கிய கிளியே! (- (பைங்கிளியே! சொல்லாய்-.))
சுடர்ஆழி, Sudarazhi - ஒளிமிக்க திருவாழிப் படையை
வலன், Valan - வலத்திருக்கையிலே
உயர்த்த, Uyarttha - உயரத் தாங்கியிருந்துள்ளவனும்
மல் ஆர்தோள், Mal Aarthol - மிடுக்குடைய திருத்தோள் களையுடையவனும்
வடங்கடவனை, Vadangadavani - வடதிருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனுமானபெருமானை
வரசொல்லாய், Varasollai - இங்குவரச்சொல்லவேணும்
1947பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தோழி என்று சமான துக்கையாய்-உடன் கூடினவளை சம்போதித்து- கோழி கூவென்னுமால் ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்றுக் கோழி கூவென்னுமால் – என் செய்கேன் -என்கிறாள்) 6
கோழி கூவென்னுமால் தோழி நான் என் செய்கேன் ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்றுக் கோழி கூவென்னுமால் –10-10-6
பதவுரை Show / Hide
தோழி, Thozhi - வாராய் தோழீ (- (மறுபடியும்) (எம்பெருமான் பிரிந்துபோய்விடப் போகிறானே))
கோழி கூ என்னும், Kozhi Koo Ennum - கோழியானது கூவென்று கத்துகிறது
ஆழிவண்ணனா வரும் பொழுது ஆயிற்று, Azhivannana Varum Pozhuthu Aayitru - கடல் வண்ணனான எம்பெரு மான் இங்குவந்து சேருகிற வேளையாயிற்று
ஆல், Aal - ஸந்தோஷம்
கோழி கூ என்னும், Kozhi Koo Ennum - கோழியானது கூவென்று கூப்பிடப்போகிறதே!
நான் என்செய் கேன், Naan Ensei Ken - நான் என்னபண்ணுவேன்
ஆல், Aal - கஷ்டம்!.
1948பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதர விஷயத்துக்கு இறே அவன் பிரேரகன்-இவ்விஷயத்துக்கு அவன் பிரேரிக்க வேண்டா – அவன் வடிவு தானே இறே ப்ரேரகம் பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -என்னக் கடவது இறே) 7
காமற்கு என் கடவேன் கரு மா முகில் வண்ணற்கு அல்லால் பூ மேல் ஐங்கணை கோத்துப் புகுந்து எய்யக் காமற்கு என் கடவேன் –10-10-7
பதவுரை Show / Hide
கருமாமுகில் வண்ணற்கு அல் லால், Karumamugil Vannarku Al Laal - கருத்துப் பெருத்த மேகம் போன்ற திருநிறத்தையுடையரான பெருமாளுக்குக் கடமைப் பட்டிருப்ப தல்லாமல் (- (காமற்கு என் கடவேன்?-.))
மேல், Mel - அதற்குமேலே
பூ, Poo - புஷ்பங்களாகிற
ஐகணை, Aikanai - பஞ்சபாணங்களை
கோத்து, Kothu - (கருப்புவில்லிலே) தொடுத்து
புகுந்து, Pugundhu - உள்ளேபுகுந்து
எய்ய, Eyy - பிரயோகித்து ஹிம்ஸிக்கும் படியாக
காமற்கு, Kaamarakku - (என்வயிற்றிறி பிறந்தபிள்ளையான) மன்மதனுக்கு
என் கடவேன், En Kadaven - கடமைப்பட்டவனோ நான்?
1949பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய்-வேல் போல் நெடிதாய் இருந்துள்ள கண்கள் களிப்ப – தேனார்ந்த சோலையை உடைத்தான ஸ்ரீ திருக் குடந்தையிலே சாய்ந்து அருளின வ்யாமுக்த்தன் – இங்கே போதுங்கொலோ) 8
இங்கே போதுங்கொலோ இனவேல் நெடுங்கண் களிப்பக் கொங்கார் சோலைக் குடந்தை கிடந்த மால் இங்கே போதுங்கொலோ –10-10-8
பதவுரை Show / Hide
கொங்கு ஆர், Kongu Ar - தேன்நிறைந்த (- (இங்கே போதும் சொலோ!-))
சோலை, Solai - சோலைகளையுடைய
குடந்தை, Kudanthai - திருக்குடைந்தையிலே
கிடந்த, Kidandha - திருக்கண்வளர்ந்தருளாநின்ற
மால், Maal - எம்பெருமான்,
இளம் வேல் நெடு கண் களிப்ப, Ilam Vel Nedu Kann Kalippa - ஓன்றுக்கொன்று ஒப்பாய்வேல் போன்ற நீண்ட (எனது) கண்களானவை கண்டு களிக்கும்படியாக
இங்கே, Inge - இவ்விடத்தே
போதும்கொலோ, Podhumkolo - எழுந்தருளக் கூடுமோ?
1950பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேவத்வ ஸூசகமான ஸ்ரீ திரு ஆழியையும்-மனுஷ்யத்வைகாந்தமாய் ஸ்ப்ருஹநீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய – ஸ்ரீ ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம்) 9
இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை இன்னார் என்று அறியேன் –10-10-9
பதவுரை Show / Hide
அன்னே, Anne - அம்மே!
ஆழியொடும், Azhiyodum - திருவாழியாழ்வானையும்
பொன்ஆர் சார்ங்கம், Ponaar Sargangam - அழகுபொருந்திய சார்ங்க வில்லையும்
உடைய, Udaiya - (திருக்கையிலே) உடைய வரான
அடிகளை, Adigalai - ஸ்வாமியை
இன்னார்என்று, Innaarendru - இன்னாரென்று தொரிந்து கொள்ளமாட்டுகின்றியேன்
அறியேன், Ariyen - இன்னார்என்று அறியேன்-.
1951பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பல ஸ்ருதி சொல்லாது ஒழிந்தது-இது தானே பிரயோஜனம் -ஆகையாலே) 10
தொண்டீர் பாடுமினோ சுரும்பார் பொழில் மங்கையர் கோன் ஒண்டார் வேல் கலியன் ஒலி மாலைகள் தொண்டீர் பாடுமினோ –10-10-10
பதவுரை Show / Hide
தொண்டீர்  அன்னே!, Thondir Anne - பாகவதர்களே (- (தொண்டீர்! பாடுமின்-.))
சுரும்பு ஆர்            பொழில், Surumbu Ar Pozhil - வண்டுகள் நிறையப்படிந்த சோலைகளையுடைய
மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கை நாட்டில் உள்ளவர்கட்குத் தலைவரும்
ஒண் தர்வேல், On Tharveel - அழகிய மாலையையும் வேற்     படையையுமுடையவருமான்
கலியன், Kalyan - ஆழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலைகள், Maalaihal - இச்சொல்மாலையை
பாடுமின், Paadumin - பாடுங்கள்
1952பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பசுக்களும் இடையரும் வர்ஷத்தைப் பரிஹரித்துக் கொள்ளுதல் – ஸ்ரீ பிராட்டி -அதார்மிகனான ராவணன் நஷ்டன் ஆவான் -என்று சபித்து போரும் என்று ஆயிற்று – இவளுக்கு தென்றல் பரிஹரித்துக் கொள்ள ப்ராப்தி உள்ளது) 1
குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை அன்று காத்த அம்மான் அரக்கரை வென்ற வில்லியார் வீரமே கொலோ தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன் –11-1-1
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பொருகால்
குன்றம் ஒன்று, Kuntram Onru - (கோவர்த்தனமென்கிற) ஒருமலையை
எடுத்து, Eduthu - (குடையாக) உயரவெடுத்து
ஏந்தி, Aendi - (ஏழுநாள் ஓய்வின்றிப்) பிடித்துக் கொண்டிருந்து
மா மழை, Maa Mazhai - (இந்திரன் பெய்வித்த) பெரு மழையில் நின்றும்
காத்த, Kaatha - (அடியார்க்ளைக்) காப்பாற்றி யருளின
அம்மான், Ammaan - ஸ்வாமியும்
அரக்கரை, Arakkarai - ராக்ஷஸாக்ளை
வென்ற, Vendru - கொன்றொழித்த
வில்லியார், Villiyaar - வில்லையுடையருமான பெருமாளுடைய
வீரமே கொலோ, Veerame Kolo - பராக்ரமத்தினாலோ
தென்றல் வந்து தீ வீசும், Thendral Vandu Thee Veesum - தென்றற்காற்று வந்து நெருப்பை வீசுகின்றது!
என் செய்கேன், En Seigken - (இதற்கு) என்ன பண்ணுவேன்!
1953பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தோளும் தோள் மாலையுமான மார்வும் கண்டு ஆசைப் பட்டு வந்த தண்டமோ – இதர விஷய ப்ரவணர் பட்டது படா நின்றோம் – புத்தி நாஸாத் ப்ரணச்யதி -என்கிறபடியே விநாசத்தைப் பலிப்பித்தான் – இதர விஷய ப்ரவணர் பட்டது படா நின்றோம் -இப்பிராப்த விஷயத்தை ஆசைப் பட்ட நாங்களும்) 2
காரும் வார்பனிக் கடலும் அன்னவன் தாரும் மார்வமும் கண்ட தண்டமோ சோரும் மா முகில் துளியினூடு வந்து ஈரவாடை தான் ஈரும் என்னையே –11-1-2
பதவுரை Show / Hide
சாரும், Saarum - வர்ஷிக்கின்ற
மாமுகில், Maamugil - காளமேகத்தினுடைய
ஒளியினூடு வந்து, Oliyinuudu Vandu - துளியினுள்ளேயிருக்கிற குளிர் சியை ஊட்டிக்கொண்டுவந்து
ஈரம்வாடை, Eeramvaadai - (அதனால்) குளிர்ச்சிமிக்கக வாடைக்காற்றானது
என்னை ஈரும், Ennai Eerum - என்னை ஹிம்ளிக்கின்றது
காரும்வார்            பனி கடலும் அன்னவன், Kaarumvaar Pani Kadhalum Annavan - நாளமேகத்தையும், பரந்து குளிர்ந்தகடலையு மொத்திருக்கின்ற எம்பெருமானுடைய
தாரும், Thaarum - திருத்துழாய்மாலையையும்
மார்வமும், Marvamum - திருமார்பையும்
கண்ட, Kanda - காணவேணுமென்று ஆசைப் பட்டதற்கான
தண்டமோ, Thandamo - சிக்ஷையோ?
1954பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஓதம் கிளர்ந்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையராய் இருக்கிறவருடைய – பரிமள பிரசுரமாய் இருக்கிற தாரானது உள்ளே புக்கு ஸ்த்ரீத்வத்தை நோக்கிக் கொண்டு மறைய இருக்கிறது என் – இங்கனே புறப்பட்டாயோ -என்று அறை கூவா நின்றது) 3
சங்கும் மாமையும் தளரும் மேனி மேல் திங்கள் வெங்கதிர் சீறும் என் செய்கேன் பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனார் கொங்கலர்ந்த தார் கூவும் என்னையே –11-1-3
பதவுரை Show / Hide
சங்கும், Sangum - கைவளைகளும்
மாமையும், Maamaiyum - நிறமும்
தளரும், Thalarum - சோர்ந்திருக்கப்பெற்ற
மேனிமேல், Menimeel - (எனது) உடம்பின்மேலே
திங்கள், Thingal - சந்திரனுடைய
வெம் கதிர், Vem Kathir - கொடிய கிரணங்களானவை
சீறும், Seerum - சீறுகின்றன
பொங்கு வெண்திரை புணாரிணனார், Pongu Ventrirai Punarinar - கிளர்கின்ற வெளுத்த அலைகளையுடைய கடல் போன்ற நிறவண முடையரான பெருமாளுடைய
கொங்கு அலர்ந்ததர், Kongu Alarnthathar - பரிமளம் விரிகின்ற திருத்தழாய்மாலையானது
என்னை கூவும், Ennai Koovum - என்னோடே போர் செய்ய அறைகூவாநின்றது
என் செய்கேன், En Seigken - என்ன பண்ணுவென்!-.
1955பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (போன இடத்திலே நலிய வேணும் என்று தாய் வடிவு கொண்டு வந்தவளை அனுகூலை என்று புத்தி பண்ணாதே அவளை பிரதிகூலை என்றே அறிந்து அவள் முலையை உண்டு முடித்த ஆராட்சி இல்லாத செயலோ) 4
அங்கோர் ஆய்க்குலத்துள் வளர்ந்து சென்று அங்கோர் தாயிருவாகி வந்தவள் கொங்கை நஞ்சுண்ட கோயின்மை கொலோ திங்கள் வெங்கதிர் சீறு கின்றதே –11-1-4
பதவுரை Show / Hide
திங்கள், Thingal - சந்திரனுடைய
வெம் கதிர், Vem Kathir - கொடிய கிரணங்கள்
சீறுகின்றது, Seerugindrathu - சீறுவதானது-
சென்று, Sendru - (மதுரையில் நின்றும்) போய்
அங்கு ஓர் ஆய் குலத்திலே வளர்ந்து, Angu Oor Aai Kulaththile Valarnthu - அந்த விலக்ஷணமான இடைக்குலத்துள்  வளர்ந்து கொண்டிருக்கையில்,
அங்கு ஓர் தாய் உருஆகி, Angu Oor Thaai Uruaagi - அங்குத் தாயாகிய யசோதைப்பிராட்டியின் வடிவு பூண்டு  வந்தவளான பூதனையினுடைய
கொங்கை நஞ்சு உண்ட, Kongai Nanju Unda - முலையில் தடவியிருந்த விஷத்தை
கோயின்மை கொலோ, Koyinmai Koloo - பராக்ரமமடியாகவோ?
1956பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அரியவற்றை வருத்தமறச் செய்து தலைக் கட்ட வல்லவன் தன்னை நெருக்கிக் கடைந்து உள்ளுண்டான மதியை வாங்குகையோ-இக்கடல் இங்கனே கிடந்தது கூப்பிடுகின்றது என்னைப் போலே மதி இழந்தோ இக்கடலும் கூப்பிடுகின்றது – மதி எல்லாம் உள் கலங்கி இறே இவளும் கிடக்கிறது – ஒன்றுக்கும் விக்ருதையாகாத நான் கலங்கிக் கூப்பிடுகிறாப் போலே இருந்ததீ இக்கடலும் தன் காம்பீர்யம் எல்லாம் அழிந்து கூப்பிடுகிறபடியும்) 5
அங்கோர் ளரியாய் அவுணனைப் பங்கமா விரு கூறு செய்தவன் மங்குல் மா மதி வாங்கவே கொலோ பொங்கு மா கடல் புலம்புகின்றதே –11-1-5
பதவுரை Show / Hide
அங்கு, Angu - ப்ரஹிலாதாழ்வான் எங்குமுளன்கண்ணன் என்று சொன்ன வப்பொழுதே
ஆள் அரிஆய், Aal Ariyai - நரஸிம்ஹ மூர்த்தியாக தரித்து
அவுணனை, Avunai - (இரணியமென்னும்) அசுரணை
பங்கம் ஆ, Pangam Aa - மானபங்காக்கி
இரு கூறு செய்தவன், Iru Kooru Seithavan - இருதுண்டமாகக் கிழித்த பெருமான்
மங்குல்மாமதி, Mangulmaamathi - ஆகாசத்திலே விளங்குகின்றசிறந்த சந்திரனை
வாங்கவே கொலோ, Vaangave Kolo - (தன்னிடத்தில் நின்றும்)அபஹாரித்ததனாலேயோ
பொங்குமா கடல், Pongumaa Kadal - திரைக்கிளப்பத்தையுடைய கருங்கடலானது
புலம்புகினறது, Pulampuginrathu - கோஷிக்கின்றது!
1957பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அன்றிலின் உடைய த்வனி எனக்கு பாதகமாகா நின்றது – நான் இதுக்கு எத்தைச் செய்வேன் – நான் இதுக்கு மார்விலே அம்பு ஏற்கவோ) 6
சென்று வார் சிலை வளைத்து இலங்கையை வென்ற வில்லியார் வீரமே கொலோ முன்றில் பெண்ணை மேல் முளரிக் கூட்டகத்து அன்றிலின் குரல் அடரும் என்னையே –11-1-6
பதவுரை Show / Hide
சென்று, Sendru - எதிரிகளிருக்குமிடத்தேறச் சென்று (- (என்னை அடரும் என்னை வருத்துகின்றது!))
வார்சிலை, Vaarcilai - பெரியவில்லை
வளைத்து, Valaiththu - (நானேற்றி) வளையச் செய்து
இலங்கையை, Ilankaiyai - லங்காபுரியை
வென்ற, Vendru - அழித்த
வில்லியார், Villiyaar - வில்வல்லவரான பெருமானுடைய
வீரமே கொலோ, Veerame Kolo - பராக்ரமமடியாகவோ
முன்றில் பெண்ணை     மேல், Munril Pennai Mael - வாசலிலுள்ள பனைமரத்தின் மேலே
முளரி கூட்டகத்து, Mulari Koottakathu - தாமரைப் பூவாலே இயற்றப்பட்ட கூட்டிலே கிடக்கிற
அன்றிலின், Anrilin - அன்றிற்பறவையினுடைய
குரல், Kural - தொனியானது
1958பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வைத்த கண் மாறாதே கண்டு கொண்டே இருக்க வேண்டும்படியான ஆகர்ஷகமான வடிவை உடையவர் – ஒரு மேருவை இனிய மேகம் படிந்தால் போலே ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே வர – சிதிலை யாகாதே நின்று-நான் கண்டத்துக்கு தண்டமோ –காமன் ஆனவன் தன்னுடைய புஷ்ப பாணங்களாலே-தோல் புரையே அன்றியே மர்மத்திலே எய்கிற இது) 7
பூவை வண்ணனார் புள்ளின் மேல் வர மேவி நின்று நான் கண்ட தண்டமோ வீவில் ஐங்ணை வில்லி யம்பு கோத்து ஆவியே இலக்காக எய்வதே –11-1-7
பதவுரை Show / Hide
ஐங்கணை வில்லி, Aingadai Villi - மன்மதனானவன்
வீவு இல், Veivu Il - இறைப்பொழுதும் ஓய்வில்லாமல்
அம்பு கோத்து, Ambu Koththu - பாணங்களைத் தொடுத்து
ஆவியே இலக்கு ஆக எய்வது, Aaviye Ilakku Aaga Eyvathu - என் உயிரையே லஷயமாகக் கொண்டு பிரயோகிப்பதானது
பூவை வண் ணனார், Poovai Vannanaar - காயம்பூவண்ணரான பெருமாள்
புள்ளின் மேல் வர, Pullin Mel Vara - பெரிய திருவடியின் மீது எழுந்தருள
நான்மேவி நின்று, Nanmevi Nindru - நான் விரும்பி நின்று கொண்டு
கண்ட தண்டமோ, Kanda Thandamo - கண்டதற்கான தண்டனையோ
1959பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேசிகனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நின்று வழி இட்டுக் கொடுக்கையாலே ராஷசர்கள் வெல்ல மாட்டிற்று இலர்கள் இறே – அப்படியே நிலவரே வழி காட்டி கொடு வந்து நலியா நிற்க நம்மால் பரிஹரிக்கப் போமோ) 8
மாலினம் துழாய் வரும் என்நெஞ்சகம் மாலினந்துழாய் வந்து என்னுள் புகக் கோல வாடையும் கொண்டு வந்ததோர் ஆலி வந்தது ஆல் அரிது காவலே –11-1-8
பதவுரை Show / Hide
என் நெஞசகம், En Nenjasagam - எனது நெஞ்சானது
மால்இனம், Maalinam - (அப்பெருமான் பக்கலுண்டான)  வியாமோஹத்திற்குத் தகுதியாக
துழாய் வரும், Thuzhai Varum - அலைந்துகொண்டு வாரா நின்றது
மாலின், Maalin - (அந்த) எம்பெருமானுடைய
அம் துழாய், Am Thuzhai - அழகிய திருத்துழாய் மாலையானது
என்னுள் வந்து புகளுதல், Ennul Vandu Pugaluthal - என்னுடைய நினைவுக்குவர
வந்தது ஓர் ஆலி, Vandhadhu Oru Aali - (ஏற்கெனவே தனியே) வந்துபார்த்துப்போனவொரு சிறு துளியானது
கோலம், Kolam - அழகிய
வாடையும், Vaadaiyum - வாடைக்காற்றையும்
கொண்டு வந்தது, Kondhu Vandhadhu - துணைகூட்டிக்கொண்டு வந்துவிட்டது.
ஆல், Aal - அந்தோ! (இனி)
காவல், Kaaval - (உயிரைக்) காப்பாற்றிக் கொள்
அரிது, Aridhu - முடியாதகாரியம்
1960பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அநந்ய பிரயோஜனரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் இட்ட திருத் துழாயில் பரிமளத்தை வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் – மிக்க சீர் தொண்டர் இட்ட -என்பான் என் என்னில் –அங்குத்தைக்கு பரிவர் உண்டு -என்று அறிந்தால் இறே இவளுக்கு கண் உறங்குவதும்-பழைய நிறம் வருவதுவும் – அநந்ய பிரயோஜாரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அங்குத்தைக்கு பரியா நின்றார்கள் என்று கேட்ட வாறே இனி நமக்கு ஒரு குறை இல்லை என்று கண் உறங்கா நிற்கும்-நிறமும் பழைய படியேயாம்) 9
கெண்டை ஒண் கண்ணும் துயிலும் எந்நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர் தொண்டரிட்ட பூம் துளவின் வாசமே வண்டு கொண்டு வந்தூதும் ஆகிலே –11-1-9
பதவுரை Show / Hide
மிக்க சீர் தொண்டர், Mikka Seer Thondar - அநந்யப்ரயோஜநரான ஸ்ரீ வைஷ்ணவாக்ள்
இட்ட, Itta - ஸமர்ப்பித்த
பூ துளவின், Poo Thulavin - திருத்துழாய் மலரின்
வாசம், Vaasam - பரிமளத்தை
வண்டு, Vandu - வண்டானது
கெண்டை, Kendai - கெண்டை மீன்போன்று அழகிய
ஒண் கணும், On Kanum - (எனது) கண்களும்
துயிலும், Thuyilum - உறக்கங்கொள்ளும்
என்நிறம், Enniram - எனது மேனி நிறமும்
கோண்டு வந்து, Kondhu Vandu - முகந்துகொண்டுவந்து
பண்டு பண்டு போல் ஓக்கும், Pandhu Pandhu Pol Okkum - முன்னைய வண்ணமாகும்
ஊதும் ஆகில், Oodhum Aakil - (என்னருகில்) ஊதுமானால்
1961பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இத்தை அப்யசிக்க வல்லார்களுக்கு பாதக பதார்த்தங்களால் நோவு பட வேண்டாதே நித்ய சம்ஸ்லேஷத்தோடே காலம் செல்லப் பெறுவர்–அல்லல் ஆகிறது இத் திரு மொழியில் பட்ட கிலேசம்) 10
அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச் சென்ற மாயனைச் செங்கண் மாலினை மன்றிலார் புகழ் மங்கை வாள் கலி கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே –11-1-10
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பொருகால்
பாரதத்து, Bharathaththu - பாரத யுத்தத்திற்குப் பூர்வாங்கமாக
ஐவர் தூதன் ஆய், Aivar Thoodhan Aay - பஞ்சபாண்டவர்கட்குத் தூதுவனாய்
சென்று, Sendru - எழுந்தருளின
மாயனை, Maayanai - ஆச்சரிய சக்தியுத்தனும்
செம் கண் மாலினை, Sem Kan Malinai - செந்தமாரைக் கண்ணனுமான ஸர்வேச்வரன் விஷயகமாக
மன்றில் ஆர் புகழ், Manril Aar Pugazh - நூறத்திகள் தோறும் நிறைந்த
மங்கை, Mangai - திருமங்கை நாட்டையுடையவரும்
வாள், Vaal - வாட்படை கொண்டவருமான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்(அருளிச்செய்த)
சொல், Sol - இந்த ஸ்ரீ ஸூக்திகளை
வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவாக்ளுக்கு
அல்லல் இல்லை, Allal Illai - ஒரு துன்பமும் உண்டாக மாட்டாது.
1962பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தால் சொல்லிற்று ஆயிற்று என் என் அவனை என் முலையோடு கொடு வந்து சேர்க்க வல்லார் இல்லையோ -என்கிறாள்) 1
குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும் மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான் முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்தீர்கின்ற அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ –11-2-1
பதவுரை Show / Hide
குன்றம், Kundram - கோவர்த்தனமலையை
எடுத்து, Eduthu - குடையாக வெடுத்துப்பிடித்து
மழை தடுத்து, Mazhai Thaduthu - மழையைத்தடை செய்தவனாயும்
இளையாரொடும், Ilaiyarodum - இளம் பெண்களோடே
மன்றில், Manril - நாற்சந்தியிலே
குரவை பிணைந்த, Kuravai Pinaintha - கைகோத்துக் குரவைக் கூத்தாடினவனாயுமுள்ள
மால், Maal - கண்ணபிரான்
என்னை மால் செய்தான், Ennai Maal Seithaan - என்னை மதிமயங்கப் பண்ணிவிட்டான்
முன்றில், Munril - வாசலிலே
தனி நின்ற, Thani Nindra - தனியேநின்ற
பெண்ணைமேல், Pennai Mel - பனைமரத்தின் மீது
கிடந்து, Kidandhu - இருந்துகொண்டு
ஈர்கின்ற, Eerkingira - ஹிம்ஸிக்கின்ற
அன்றிலை, Anrilai - அன்றிற்பறவையை
கூட்டின், Koottin - கூட்டில் நின்றும்
பிரிக்ககிற்பவர்            ஆர்கொலோ, Pirikkakirbavar Arkoloo - பிரித்துவிடவல்லவர் யாரோ? (அறியேன்)
1963பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இந்த இடையனானவன் வாயிலே வைத்து-ஸ்த்தானே சத்தான நின்று ஏங்கி ஊதுகிற குழலானது என்னோடே பாலிசமான வியாபாரங்களை பண்ணா நின்றது) 2
பூங்குருந்து ஒசித்தானை காய்ந்தரிமா செகுத்து ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை வாங்கி யுண்ட வவ்வாயன் நிற்க விவ்வாயன் வாய் ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளைமையே –11-2-2
பதவுரை Show / Hide
பூ குருந்து ஓசித்து, Poo Kurunthu Osiththu - பூத்திருந்த குருந்தமரத்தை முறித்தொழித்தவனாயும்
ஆனை காய்ந்து, Aanaik Kaayndhu - ரிஷபங்களைச் சீறிமுடித்தவனாயும்
அரி மா, Ari Maa - (கேசியென்ற) சத்துருவான குதிரையை
செகுத்து, Sekuthu - கொன்றவனாயும்
ஆங்கு, Aangu - கம்ஸனது அரண்மனை வாசலிலே
வேழத்தின், Vezhaththin - குவலயாபீடமென்கிற யானையினுடைய
கொம்பு கொண்டு, Kombu Kondo - தந்தத்தைப் பறித்தெறிந்தவனாயும்
வன்பேய், Vanpei - (பூதனையென்னும்) வலிய பேய்ச்சியினுடைய
முலை, Mulai - (நஞ்சு தீற்றிய) முலையை
வாங்கி, Vaangi - கையிற்பிடித்து
உண்ட அவ் வாயன், Unda Av Vayan - உறிஞசியுண்ட அப்படிப்பட்ட திருப்பவளத்தை யுடையவனாயுமிருக்கிற கண்ணபிரான்
நிற்க, Nirka - உதாஸீநனாயிருக்க
ஆயன், Aayan - அந்த கோபாலகிருஷ்ணனுடைய
வாய், Vaai - வாயிலே
ஏங்கு, Aengu - ஒலிக்கின்ற
இ வேய் குழல், I Vei Kuzhal - இந்த வேய்ங்குழலானது
என்னோடு, Ennodu - என்திறத்திலே
இளைமை ஆடும், Ilaiyai Aadum - சில சிறுச்சேவகங்கள் செய்யாநின்றது!
1964பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அப்போது இட்ட வெற்றி மாலையை பெற வேணும் என்று ஆசைப் பட்டத்தையே நினைத்துக் கொண்டு இருக்கிற என்னை – சந்த்யா சமயத்திலே தென்றல் ஆனது வந்து நலியா நின்றது –அதுக்கு மேலே – வெளி நிலத்தில் நாகைத் தொடர்ந்து-அது கை புகுந்தால் அல்லது மீளாத படி இருக்கிற வ்ருஷத்தின் உடைய கழுத்தில் மணி யோசையானது ஆராட்சி இல்லாத இடத்தில் செயலைச் செய்யா நின்றது) 3
மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி வண்ணன் அல்லி மலர்த் தண் துழாயை நினைந்து இருந்தேனையே எல்லியின் மாருதம் வந்தடும் அதுவன்றியும் கொல்லை வல்லேற்றின் மணியும் கோயின்மை செய்யுமே –11-2-3
பதவுரை Show / Hide
மல்லொடு, Mallodu - மல்லர்களும்
கஞ்சனும், Kanjanum - கம்ஸனும்
துஞ்ச, Thunja - முடியும்படி
வென்ற, Vendru - வெற்றிபெற்ற
மணி வண்ணன், Mani Vannan - நீலமணிவண்ணனான கண்ணபிரானுடைய
அல்லி தண் துழாய் மலரையே, Alli Than Thuzhai Malaraie - இதழ்களை யுடையதாய்க்குளி திருந்துள்ள திருத்துழாய் மாலையையே
நினைந்திருந்தேனை, Ninaindhirundhenai - சிந்தித்துக்கொண்டிருக்கின்ற என்னை
எல்லியில் மாருதம், Elliyil Maarudham - அந்திப்போதில் வீசும் காற்றானது
வந்து, Vandhu - நானிருக்குமிடத்தில்வந்து வீசி
அடும், Adum - நலிகின்றது
அது அன்றியும், Athu Anriyum - அதுவுந்தவிர
கொல்லை வல் ஏற்றின் மணியும், Kollai Val Aetrin Maniyum - வெளி நிலங்களில் நின்றும் மீண்டுவருகிற வலியகாளைகளின் கழுத்து மணியோசையும்
கோயின்மை செய்யும், Koyinmai Seyyum - தெந்தரவுபடுத்தாநின்றது.
1965பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவருடைய ஐஸ்வர்ய பிரகாசமான திருவடிகளை அனுசந்திக்கும் போது எல்லாம் – கறுத்த தன்மையை உடைத்தாய் இருக்கிற கடல் ராத்ரியிலே என் எளிமை கண்டு மிகைத்து கூப்பிடா நிற்கும் – அதுக்கு மேலே –நான் வருந்தும் படியாக பலவானாய் இருக்கிற வாடையானது வாரா நின்றது – ஓர் அபலை இதுக்கு கடகிடவோ) 4
பொருந்து மா மரம் ஏழு எய்த புனிதனார் திருந்து சேவடி என் மனத்து நினைதொறும் கரும் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அதுவன்றி வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன் –11-2-4
பதவுரை Show / Hide
பொருந்து, Porundhu - தம்மில்தாம் பொருந்திநின்ற
மாமரம் ஏழும் எய்த, Mamaram Ezham Eytha - பெரிய ஸாலவ்ருக்ஷங்களேழையும் அம்புசெலுத்தித் துளைபடுத்தின
புனிதனார், Punithanar - பரமபாரிசுத்தரான பெருமாளுடைய
திரு உந்து, Thiru Unthu - ஐச்வர்ய ப்ரகாசமான
சே அடி, Sae Adi - திருவடிகளை
என் மனத்து, En Manathu - என் நெஞ்சிலே
நினை தொறும், Ninai Thorum - அநுஸந்திக்கும் போதெல்லாம்
கரு தண்மா கடல், Karuthu Thanma Kadhal - கறுத்துக் குளிர்ந்து பெரிதான கடலானது
கங்குல், Kangul - இரவுமுற்றும்
ஆர்க்கும், Aarkkum - ஆரவாரிக்கும்
அது அன்றியும், Athu Anriyum - அதுவுந் தவிர
வாடை, Vadai - வாடைக் காற்றும்
வருந்த, Varuntha - நான் பரிதபிக்கும்படியாக
வரும், Varum - வந்து வீசுகின்றது
இதற்கு, Idharku - இதற்குப் பாரிஹாரமாக
இனி என் செய்கேன், Ini En Seyken - இனி என்ன பண்ண வல்லேன்
1966பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபரான அவர் இடையாட்டாத்தோமான பின்பு இறே இவை நமக்கு இப்படியாகப் புகுந்தது – அவருடைய பிரணயித்வம் கண்டு நாம் அகப்பட்ட பின்பு இறே- இவை நமக்குப் பாதகமாகப் புக்கது – பூர்வ அபராதங்களுக்கு சேர்த்தி போராதாகிலும் ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் -பின்னை மணாளன் திறத்தோம் ஆன பின்பு அன்றோ-இவை இப்படி யாயிற்று – சாமான்யன் என்று ஈடும் ஈடெல்லாம் இட அமையும் என்பாரைப் போலே அவளோடு ஒரு சம்பந்தம் சொல்லி நலிகிறவை நலிந்தால் என்-என்பாராம்) 5
அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும் மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும் பொன்னம் கலை அல்குல் அன்னம் மென்னடைப் பூங்குழல் பின்னை மணாளர் திறத்த மாயின பின்னையே –11-2-5
பதவுரை Show / Hide
அன்னை முனிவதும், Annai Munivadhum - பெற்றதாய் சீறிச் சொல்லுவதும் (- (அதற்கு முன்பு இல்லை))
அன்றிலின்     குரல் ஈர்வதும், Anrilin Kural Eirvadhum - அன்றிற்பறவையின்குரல் ஹிம்ஸிப்பதும்
மன்னு மறிகடல் ஆர்ப்பதும், Mannu Marikadal Aarpadhum - எப்போதும் அலைமடியப் பெற்ற கடல் கோஷிப்பதும்
வளை சோர்வதும், Valai Soorvadhum - கைவளைக்ள கழல்வதும் (ஆகிய இவையெல்லாம்)
அம், Am - அழகிய
பொன் கலை, Pon Kalai - பொன்னாடையணிந்த
அல்குல், Alkul - நிதம்பத்தையுடையவளும்
அன்னம் மென் நடை, Annam Men Nadai - அன்னத்தின்நடை போன்று அழகிய நடையையுடையவளும்
பூ குழல், Poo Kuzhal - பூவணிந்த கூந்தலை யுடையவளுமான
பின்னை, Pinnai - நப்பின்னைப் பிராட்டியின்
மணாளர், Manalar - நாயகரான கண்ணபிரானுடைய
திறத்தம் ஆயின பின்னையே, Thiraththam Aayin Pinnaiye - விஷயத்தில் ஈடுபட்டோ மானபிறகே
1967பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கோழியும் கூகின்றது இல்லை –விடிவுக்கு பிராப்தமான இதுவும் கூட அரிதாக நின்றது – கூர் இருள் ஆயிற்றே –விடிந்த பின்பும் இருள் கால் வாங்குகிறது இல்லை) 6
ஆழியும் சங்கும் உடைய நாங்கள் அடிகள் தாம் பாழிமையான கனவில் நம்மைப் பகர்வித்தார் தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றது கோழியும் கூகின்றது இல்லை கூர் இருள் ஆயிற்றே –11-2-6
பதவுரை Show / Hide
ஆழியும் சுங்கும் உடைய, Azhiyum Sungum Udaiya - திருவாழி திருச்சங்குகளை யுடையரான
நங்கள் அடிகள் தாம், Nangal Adigal Thaam - அஸ்மத்ஸ்வாமியான ஸர்வேச்வரன்
நம்மை, Nammai - நம்மை
பாழிமையான கனவின், Pazhimaiyana Kanavin - மிகப்பெரிதாய் ஸ்வப்நதுல்யமான ஸம்ச்லேஷத்தினால்
பகர்வித்தர், Pakarviththar - இப்படி கூப்பிடும்படியாகச் செய்துவிட்டார்
தோழியும் நானும் ஒழிய, Thozhiyum Naanum Ozhiy - தோழியும் நானும் தவிர
வையம், Vaiyam - மற்ற உலகத்தாரெல்லாரும்
துயின்றது, Thuyinrathu - உறங்கிவிட்டார்க்ள்
கோழியும், Kozhiyum - கோழிகூட
கூகின்றது இல்லை, Kookindrathu Illai - (விடிவுக்கு அறிகுறியாகக்) கூவுகினறதில்லை
கூர்இருள் ஆயிற்றே இன்னமும், Koorairul Aayitree Innamum - நள்ளிருளா யிருக்கின்றதே!
1968பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அந்த காமன் -எனக்கு நன் மகன் –சாமங்கள் தோறும் காமாக்னியை தூவா நின்றான் – தனக்கு நான் அனுவர்த்த நீயையான ஆகாரம் கிடக்கச் செய்தே என்னுடைய இம்முலைகள் தாம் அவனுக்கு என்றே யாயிற்று வளருகிறது) 7
காமன் தனக்கு முறை யல்லேன் கடல் வண்ணனார் மா மணவாளர் எனக்குத் தான் மகன் சொல்லில் யாமங்கள் தோறும் எரி வீசும் என்னிளம் கொங்கைகள் மா மணி வண்ணர் திறத்தவாய் வளர்கின்றவே –11-2-7
பதவுரை Show / Hide
காமன் தனக்கு முறை அல்லேன், Kaaman Thanakku Murai Allae - மன்மதனால் நான் நலியப்பெறுதற்கு முறையுடையே னல்லேன்
சொல்லில், Sollil - ஏனென்னில்
கடல் வண்ணனார், Kadal Vannanaar - கடல்வண்ணரான கண்ணபிரான்
எனக்கு மா மணவாளர், Enakku Maa Manavaalar - எனக்குச்சிறந்த நாயகராயிருக்கின்றார் (இவ்வழியாலே)
தான், Thaan - அந்த மன்மதன் தான்
எனக்கு மகன், Enakku Magan - எனக்கு மகனாகப் பெற்றான் (அப்படியிருந்தும்)
யாமங்கள் தோறு, Yaamangal Thoru - எப்போதும்
எரி வீசும், Eri Veesum - நெருப்பைத் தூவுகின்றாள்
என் இள கொங்கைகள், En Ilai Kongkaigal - எனது இளமுலைகளோ வென்னில்
மா மணி வண்ணர் திறத்த ஆய்வளர்கின்ற, Maa Mani Vannaar Thiratha Aayvalarkindra - நீலமணிவண்ணரான அப்பெருமாளை நோக்கியே வளர்கின்றனவாயுள்ளன
1969பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷகன் பாதகன் ஆனவாறே அவன் பரிகரமும் பாதகமாம் அத்தனை ஆகாதே – அவன் பாதகனாய் புக்கவாறே அவனை அனுவர்த்தித்த அவன் பரிகரமும் பாதகமாகப் புக்கது – இவள் சன்னதியிலே வர்த்திக்கில் இவளை அனுவர்த்தித்துக் கொண்டு பிராப்த காலத்தில் விடிய வேணும் என்று நினைத்து அது செய்யாத போன விடம் தெரியாத படி போனான் – இனி இருந்த படியாலே சரீரமானது சிதிலமாய் முடிந்து பிழைக்கும் இத்தனை போக்கி இனி நமக்கு ஜீவிக்கை என்று ஒரு பொருள் இல்லை யாகாதே) 8
மஞ்சுறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார் நெஞ்சு நிறை கொண்டு போயினர் நினைக்கின்றிலர் வெஞ்சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ நைஞ்சுடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே –11-2-8
பதவுரை Show / Hide
மஞ்சு உறு, Manju Uru - மேகமண்டலத்தைக் கிட்டி ஓங்கின (சிகரத்தையுடைய)
மாலிருஞ் சோலை, Maalirunj Cholai - திருமாலிருஞ் சோலைமலையிலே
நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணுகிற
மணாளனார், Manaalanar - எம்பெருமான்
நெஞ்சம், Nenjam - (எனது) நெஞ்சிலுள்ள
நின்ற, Nindra - அடக்கத்தை
கொண்டு போயினார், Kondu Poyinaar - அபஹாரித்துக்கொண்டு போனவராய்
நினைகின்றிலர், Ninaikindrilar - (இத்தலையை) மறந்தொழிந்தார்
வெம் சுடர், Vem Sudar - ஸூர்யனானவன்
போய், Poi - அஸ்தமித்துப்போய்
விடியாமல், Vidiyamal - மறபடியும் உதியாமல்
எவ்விடம் புக்கதோ, Evvidam Pukkatho - எங்கே புகுந்தொனித்தாலே
இனி, Ini - இப்படியான பின்பு
நமக்கு, Namkku - நம்முடைய
உடலம், Udalam - சரீரமானது
நஞ்சு, Nanju - சிதிலமாகி
துயினறால், Thuyinraal - முடிந்துபோமாகில்
நல்லது, Nallathu - நன்றாகும்
1970பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் முறை தப்பி நின்றான் – அவன் பரிகரமும் முறை தப்பி நின்றது – இனி நாமும் முறை தப்பி நின்றாகிலும் ஜீவிக்கும் அத்தனை – என்கிறாள்) 9
காமன் கணைக்கு ஓர் இலக்கமாய் நலத்தின் மிகு பூமரு கோல நம் பெண்மை சிந்தித்து இராது போய் தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால் கார் முகில் வண்ணரைக் கண்களால் காணலாம் கொலோ –11-2-9
பதவுரை Show / Hide
தோழி, Thozhi - வாராய்தோழீ
காமன்கணைக்கு, Kaamankanaikku - மன்மதபாணங்களுக்கு
ஓர்இலக்கம் ஆய், Oorilakkam Aay - இலக்காகி யிருப்பதனாலே
நலத்தின் மிகு, Nalaththin Migu - நன்மைமிக்கதாய்
பூமரு, Poomaru - விரும்பத்தக்கதாய்
கோலம், Kolam - அழகியதான
நம் பெண்மை, Nam Penmai - நமது பெண்மைக்குணத்தை
சிந்தித்து, Sindhithu - நினைத்துக்கொண்டு
இராது, Irathu - இவ்விடத்திலேயே இருந்திடாமல்
போய், Poi - புறப்பட்டுப்போய்
கார்முகில் வண்ணரை, Kaarmugil Vannarai - காளமேகச்யாமரான பெருமாளை
தூ மலர் நீர் கொடு, Thoo Malai Neer Kodu - பரிசுத்தமான புஷ்பங்களையும் தீர்த்தங்களையும் கொண்டு
நாம் தொழுது ஏத்தினால், Naam Thozhudhu Aethinaal - நாம் வணங்கித் துதித்தால்
கண்களால் காணல் ஆம் கொலோ, Kangkalal Kaanal Aam Kolo - (அவரை) கண்ணாலே ஸேவிக்கப் பெறலாமோ?
1971பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள் சில நாள் போய் சில நாள் நிற்கை அன்றிக்கே ஒரு நாளும் ஒன்றும் நில்லாது –இவ்வளவு அன்றிக்கே மேல் பெறப் புகுகிற பேற்றின் கனத்தைச் சொல்லப் புகில் – வருந்தி பனை நிழல் போலே தங்கள் அளவிலே போகை அன்றிக்கே இவர்கள் இருந்த தேசத்திலும் கூட இன்றிக்கே ஒழியும் – பாதக பதார்த்தங்களின் கையிலே நோவு படாதே அவை தானே அனுகூலமாம் படி அவனோடு நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவர்) 10
வென்று விடை யுடன் ஏழு அடர்த்த வடிகளை மன்றின் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல் ஓன்று நின்ற ஒன்பதும் உரைப்பவர் தங்கள் மேல் என்றும் நில்லா வினை யொன்றும் சொல்லில் உலகிலே –11-2-10
பதவுரை Show / Hide
வென்றி, Vendri - வெற்றியைத் தொழிலாகவுடைய (- (வினை ஒன்றும் நில்லா))
விடை ஏழ், Vidai Ezh - ஏழு ரிஷபங்களை
உடன், Udan - உடனே
அடர்த்த, Adarttha - திரஸ்காரித்த
அடிகளை, Adigalai - எம்பெருமான் விஷயமாக
மன்றில் மலி புகழ், Manril Mali Pugazh - நாற்சந்திகளிலே நிறைந்த புகழையுடையரும்
மங்கை மன், Mangai Man - திருமங்கை நாட்டுக்குத் தலைவருமான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்
சொல், Sol - அருளிச்செய்த
ஒன்று நின்ற ஒன்பது, Onru Nindra Onbathu - ஒன்றோடே கூடி நின்ற ஒன்பது பாட்டாகிய இத்திருமொழியை
உரைப்பவர் தங்கள்மேல், Uraippavar Thangalmel - அநுஸந்திப்பவாக்ளிடத்திலே
வினை ஒன்றும், Vinai Onrum - ஒருவகையான கருமமும்
என்றும், Endrum - ஒருநாளும்
நில்லா, Nilla - நிற்கமாட்டாது
சொல்லில், Sollil - இன்னமும்பலனை விவாரித்து சொல்லப்புக்கால்
உலகிலே, Ulagile - அவாக்ளிருந்ததேசத்திலுங்கூட
1972பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் வந்தேறியாயும் ஸ்வா பாவிகமாயும் உண்டான என்னுடைய ஆபரணங்களை இழந்து இருக்கிற இப்போது கிடிகோள்- அவர் ஆஸ்ரித அர்த்தமாக தம்மைத் தாழ விட்டு சாரத்தியம் பண்ணியும் -இரப்பாளனாகவும் – தம்மைப் பேணாதே அம்பு ஏற்றும் பண்ணும் வியாபாரங்கள் அடைய நமக்குப் பலித்த படி இது கிடிகோள்) 1
மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப் பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ் தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கிது காணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே –11-3-1
பதவுரை Show / Hide
மன் இலங்கு, Man Ilangu - (பல) அரசாகள் விளங்கா நின்ற
பாரதத்து, Bharathaththu - பாரதயுத்தத்திலே
தேர் ஊர்ந்து, Ther Oorndhu - (சாரதியாய் நின்று) தேரை நடத்தினவனாயும்
மாவலியை, Mavalaiya - மஹாபலியை
பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து, Pon Ilangu Thin Vilangkil Vaiththu - பொன்மயமாக விளங்குகின்ற திடமான விலங்கிலே பிணைத்தவனாயும்
பொரு கடல் சூழ், Poru Kadal Soozh - அலையெறிகின்ற கடலால் சூழப்பட்ட
தென்இலங்கை, Thenilankai - தென்னிலங்கையினுடைய
ஈடு, Eedu - மதிப்பை
அழித்த, Azhiththa - அழித்தவனாயுமிருக்கிற
தேவற்கு, Thevarku - எம்பெருமானுக்கு
என் இலங்கு சங்கோடு, En Ilangu Sangodu - எனது ஒளிமிக்கவைகளைகளையும்
எழில், Ezil - அழகையும்
தோற்றிருந்தேன், Thotrirundhen - இழந்திரா நின்றேன்
இது காணீர், Idhu Kanneer - இவ்விருப்பைக் காணுங்கோள்
1973பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அகவாயில் வாத்சல்ய பிரகாசமான திருக் கண்களை உடையனாய் – எல்லாம் பட்டுக் காண வேண்டும்படியான தோள் அழகை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை – அவனுடைய திரு நாமங்களைச் சொல்லி பாடுவதாக –ஒரு கிலேசம் இன்றிக்கே என் முலைகள் சம்ச்லேஷ சமயத்தில் போலே தன் நிறம் பெற்று வாரா நின்றது) 2
இருந்தான் என்னுள்ளத்து இறைவன் கறை சேர் பருந்தாள் களிற்றுக் கருள் செய்த செங்கண் பெருந்தோள் நெடுமாலைப் பேர்பாடி யாட வருந்தாது என் கொங்கை யொளி மன்னு மன்னே –11-3-2
பதவுரை Show / Hide
என் உள்ளத்து, En Ullaththu - எனது நெஞ்சினுள்ளே
இருந்தான், Irundhaan - வாழ்ந்திருப்பவனும்
இறைவன், Iraivan - ஸர்வஸ்வாமியும்
கறை சேர் பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த, Karai Seer Parundhaal Kalittrukku Arul Seitha - உரல் போன்று பருத்த அடியையுடைத்தான் கஜேந்திராழ்வானுக்கு அருள் செய்தவனும்
செம் கண், Sem Kan - செந்தாமரைக் கண்ணனும்
பெருந்தோள், Perundhol - பெருமைதங்கிய திருத்தோள்களையுடையனுமான
நெடுமாலை, Nedumalaik - ஸர்வேச்வரனுடைய
பேர், Pera - திருநாமங்களை
பாடி ஆட, Paadi Aada - வாயாரப்பாடிக் கூத்தாட
என் கொங்கை, En Kongai - எனது முலைகளானவை
வருந்தாது, Varundhaadhu - வருத்தமற்று
ஒளி மன்னும், Oli Mannum - ஒளிபெறும்
1974பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவர் நம்மை அகப்படுத்த ஏற்கவே கோலினார் நாம் அறிந்திலோம் இத்தனை காண் – தாம் ஹித ப்ரவர்த்தராய் இருக்கும் இருப்பைக் காட்டி நெஞ்சை நெகிழ்ந்து அது பலிக்கும் அளவானவாறே ஸ்ப்ருஹநீயமான வளையை அபேஷித்து கால் வாங்கப் போகாமே த்வார ஹிருதயத்திலே வந்து புகுந்து நித்தியமான ஆத்மவஸ்துவையும் தமக்காக்கிக் கொள்வாரைப் போலே இரா நின்றார் – இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை – உடைமை நாம் இட்ட வழக்கான தற்குப் பின்னே உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று இருக்க மாட்டுகிறிலர்) 3
அன்னே இவரை அறிவன் மறை நான்கும் முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே –11-3-3
பதவுரை Show / Hide
அன்னே, Annee - அஹஹ!
இவரை ஆறிவன், Ivaarai Aarivan - இந்த மஹாநுபாவரை (நான் நன்கு) அறிவேன்
இவர், Ivar - இப்பெரியவர்
முன்னே, Munne - முற்காலத்திலே
மறை நான்கும், Marai Nankum - நால் வேதங்களையும்
உரைத்த, Uraiththa - (நான்முகனக்கு)உபதேசித்த
முனிவர், Munivar - முனிவராவர்
வந்து, Vandhu - (ஒருகால் என்பக்கலில்)வந்து
பொன் ஏய் வளை கவர்ந்து, Pon Ey Valaikavarnthu - பொன்மயமான கைவளைகளை விரும்பி
மனம் புகுந்து, Manam Pugunthu - எனது நெஞ்சினுள் புகுந்து
போகார், Pogaar - விட்டுப்போகாமலிராநின்றார்
இவர் எண்ணும் எண்ணம், Ivar Ennum Ennam - இவர் நினைத்திருக்கும் நினைவு
என்னே, Enne - எதுவாயிருந்ததோ?
அறியோம், Ariyom - அறிகின்றிலோம்
1975பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவரை அறிவேன் என்ற படி எங்கனே -என்ன –ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யம் ஒழிய தமக்கு தாரகம் இல்லையாம் படி -யிருக்கிறவரை எங்கனே நாம் அறியோம் -என்னும் படி தான் – யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில் அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு அறியப் போகாது யென்று சொல்லலாமே – ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தை புஜிக்கப் பெற்றோம் யென்று ஹ்ருஷ்டரானவரை அறியோம் யென்று உரைக்கலாமே எனக்கு) 4
அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச் சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே –11-3-4
பதவுரை Show / Hide
வெறி ஆர், Veri Ar - பாரிமளம் மிக்க
பொழில் சூழ், Polil Sul - சோலைகளாலே சூழப்பட்டு
வியன், Viyan - வியக்கத்தக்கதான
குடந்தை, Kudanthai - திருக்குடந்தையிலே
மேவி, Mevi - பொருந்தியிருப்பவரும்
சிறியான் ஓர் பிள்ளை ஆய், Siriyan Or Pillai Ay - (க்ருஷ்ணாவதாரத்தில்) ஒப்பற்ற சிறு குழந்தையாய்
மெல்லநடந்திட்டு, Mellanadantittu - மெதுவாக நடந்து சென்று
உறி ஆர் நறு வெண்ணெய், Uri Ar Naru Venneyy - உறிகளிலே சேமித்திருந்த மணம்மிக்க வெண்ணெயை
உண்டு உகந்தர் தம்மை, Undu Uganthar Thammai - வாரியமுது செய்துதிருவுள்ள முகந்தவருமான இப்பெரியவரை
அறியோம் என்று உரைக்கல், Ariyom Endru Uraikkal - அறிகின்றிலோம் என்று சொல்லுதல்
எமக்கு ஆமே, Emakku Aame - எமக்குத் தகுமோ?
1976பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபாசன வேளையிலே இப்படி புத்தி பண்ணி பின்பு வேறு ஒரு படியாகை அன்றிக்கே உபாசநாநுகுணம் பலம் ஆகையாலே அவ்வளவும் போனால் பெரும் பரம பிரயோஜனமாய்க் கொண்டு பற்றப்படுவதும் தாமேயாக மனசிலே வைத்தோம்) 5
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே ஒக்க அருள் செய்வராதலால் தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே –11-3-5
பதவுரை Show / Hide
நாளும், Naalum - எப்போதும்
தம்மையே வணங்கி தொழுவார்க்கு, Thammaiye Vanangi Thozhuvaarakku - தம்மையே விநயமுடன் வணங்குமவர்கட்கு
தம்மையே ஒக்க அருள் செய்வர், Thammaiye Okka Arul Seivar - தம்முடையஸாம்யத்தை அருள் செய்பவர் (எம்பெருமான்)
ஆதலால், Aadhalal - ஆகையினால்
தம்மையே, Thammaiye - அவர்தம்மையே
நாளும் வணங்கி தொழுது இறைஞ்சி, Naalum Vanangi Thozhuthu Irainji - எப்போதும் த்ரிகரணங்களாலும் நமஸ்காரித்து
தம்மையே, Thammaiye - அவர்தம்மையே
என்றும், Endrum - எப்போதும்
பற்று ஆ, Patru Aa - புகலாக
மனத்து வைத்தோம், Manaththu Vaiththom - உறுதி கொண்டோம்.
1977பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் தானே பிரதம ஸூஹ்ருதமாய் நின்று வ்யாபரிக்கை யாலே பூமி அந்தரிஷாதிகளை அளந்து கொள்ளுகிற இடத்தில்-ஆகாசமானது எட்டுத் தொட்டாய் போந்தது பூமியானது திருவடிகளுக்கு போராது ஒழிவதே -யென்று இதிலே வித்தராய் – ப்ரஹ்மாதிகள் எழுதிக் கொடுத்து – கைத்தாமரை குவிக்கும் –ஸூக பிரதனான என்னுடைய ஸ்ரீ கிருஷ்ணனை வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் உற்றார்) 6
வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் உய்த்தார் ஒளி விசும்பில் ஓரடி வைத்து ஓரடிக்கும் எய்தாது மண் யென்று இமையோர் தொழுது ஏத்தி கைத்தாமரைக் குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே –11-3-6
பதவுரை Show / Hide
ஒளி விசும்பில், Oli Visumbil - (சந்திரன் ஸூரியன் முதலிய) சுடர்பொருள்கள் மிக்க  ஆகாசத்திலே
ஓர் அடிவைத்து, Oru Adivaiththu - ஒரு திருவடியை ஓங்கவைக்க
ஓர்அடிக்கும், Oru Adikkum - மற்றொரு திருவடிக்கு
மண் எய்த்தாது என்று, Man Eyththathu Endru - பூமி போதாதே! ஏன்று
இமையோர், Imaiyor - (பிரமன் முதலிய) தேவர்கள்
தொழுது எத்தி, Thozhu Etti - வணங்கித் துதித்து
கை, Kai - தங்களுடைய கைகளை
தாமரை குவிக்கும், Thamarai Kuvikkum - தாமரை மொக்குபோலே அஞ்ஜலிசெய்யப்பெற்று
என் கண்ணன் கண்ணனை, En Kannan Kannnai - எனக்குக் கண்போன்ற ஸ்ரீக்ருஷ்ணன்
அடியார், Adiyar - அடியவாக்ள்
மனத்தினில், Manathinil - தங்கள் நெஞ்சிலே
வைத்தர், Vaithar - நாட்டினார்கள்
வைத்து, Vaithu - அப்படி நாட்டியதனால்
இன்பம் உயர்த்தார், Inbam Uyarthar - ஆநந்தத்தை அடையப் பெற்றார்க்ள்.
1978பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம்முடைய விடாய்-அவனை ஹிருதயத்திலே வைத்து அனுசந்தித்து ஆனந்தித்தவர்கள் அளவன்றிக்கே இரா நின்றதி – பிரத்யாசத்தி யன்றே சைதில்யத்துக்கு பரிகரம் –நான் கேட்டிருந்த படி ஒழிய கிட்டக் கொள்ள மற்றைப் படியேயாய் இருந்தது – ஒரு வசன மாத்ரத்தாலே பிறககுமவை போல் அன்றிக்கே விஷயா தீனமாக பிறக்குமவையாய் இருப்பது – இவை யென்ன ஆச்சர்யங்கள்) 7
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள் என்னோ கழன்ற விவை யென்ன மாயங்கள் பெண்ணானோம் பெண்மையோம் நிற்க வவன் மேய அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே –11-3-7
பதவுரை Show / Hide
கண்ணன், Kannan - கண்ணபிரான்
மனத்துள்ளே, Manathulle - (என்) நெஞ்சினுள்ளே
நிற்கவும், Nirkavum - எழுந்தருளியிருக்கச்செய்தேயும்
கை வளைகள், Kai Valaihal - (எனது) கையில்வளைகளானவை
என்னோ கழன்று, Enno Kazhandru - ஏனோ கழன்று போயினவே!
இவை என்ன மாயங்கள், Ivai Enna Mayangal - இவை என்ன ஆச்சரியம்!
பெண் ஆனோம், Pen Anom - பெண்குடியிலே பிறந்துள்ளநாம்
பெண்மையோம், Penmaiyom - வெகு அழகாகப் பெண்மையை உடையவர்களாயிருக்கின்றோம்
நிற்க, Nirka - இது நிற்க
ஆவன்மேய, Aavanmeya - (அந்த எம்பெருமான் விரும்பி வர்த்திக்குமிடமாய்
அண்ணல், Annal - சிறந்ததான
மயலயம், Mayalayam - திருவேங்கட மலையையும்
ஆரங்கமும், Arangamum - திருவரங்கத்தையும்
பாடோமே, Padome - பாடுகைக்குத் தடையுடையரா யிருக்கிறோமோ?
1979பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரம பிராப்ய பூதனானவனை கிட்டுகையில் அருமை உண்டோ – அவன் நினையாமையாலே யன்றோ -என்னுதல் – நமக்கு அவன் பக்கல் ருசி இல்லாமை அன்றோ -என்னுதல்) 8
பாடோமே எந்தை பெருமானைப் பாடி நின்று ஆடாமே ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து சூடாமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம் கூடாமோ கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே –11-3-8
பதவுரை Show / Hide
நல் நெஞ்சே, Nal Nenje - நல்மனமே
எந்தை பெருமானை, Endai Perumanai - எம்பெருமானை
பாடோமே, Padome - பாடமாட்டோமோ?
ஆயிரம் பேரானை, Aayiram Peraanai - ஆயிரந்திருநாமங்களையுடையனான அப்பெருமானை
பாடிநின்று, Paadininru - பாடி
ஆடோமே, Aadome - (மகிழ்ச்சிக்குப் போக்குவீடாக)  ஆடமாட்டோமோ?
போ;, Po - (அவனது) திருநாமங்களை
நினைத்து, Ninaiththu - சிந்தித்து
சூடும் துழாய் அலங்கல், Soodum Thuzhai Alangal - அவன் சாத்திக்கொள்ளுகிற திருத்துழாய் மாலையை
சூடோமே, Soodome - அணிந்துகொள்ளமாட்டோமோ?
சூடி, Soodi - அப்படி அணிந்துகொண்டு
கூட, Kooda - அவனோடு கூடுகைக்கு
குறிப்பு ஆகில், Kurippu Aagil - உன் இசைவு உண்டாகில்
நாம் கூடோமே, Naam Koodome - நாம் கூடப்பெற மாட்டோமோ?
1980பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்திலே அந்வயிக்கப் பெற்றிலோமோ யாகிலும் காதாசித்கமான கைங்கர்யத்திலே யாகிலும் அந்வயிக்க லாம் படி அவன் இங்கே சந்நிஹிதனாகப் பெற்றோமே இது தான் முந்துற முன்னம் உண்டாகப் பெற்றோமே -யென்று இவ்வளவால் உண்டான திருப்தியோடு தலைக் கட்டுகிறது) 9
நன்னெஞ்சே நம்பெருமான் நாளும் இனிதமரும் அன்னம் சேர் கானல் அணியாலி கை தொழுது முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணன் பொன்னம் சேர் சேவடி மேல் போதணியப் பெற்றோமே –11-3-9
பதவுரை Show / Hide
நல்நெஞ்சே, Nalnenje - நல்லமனமே!
நம் பெருமான், Nam Perumaan - நமக்கு ஸ்வாமியானவன்
நாளும், Naalum - எப்போதும்
இனிது அமரும், Inidhu Amarum - திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிடமாய்
அன்னம் சேர் கானல், Annam Seer Kaanal - அன்னப்பறவைகள் சேர்ந்து வாழ்கிற நெய்தல் நிலங்கள் யுடையதாய்
ஆணி, Aani - இவ்விபூதிக்கு அலங்காரமா யிருக்கின்ற
ஆலி, Aali - திருவாலியை
கை தொழுது, Kai Thozhudhu - ஸேவித்து
முன்னம் சேர் வல்வினைகள் போக, Munnam Seer Valvinaihal Poga - நெடுநாளாகச் சேர்ந்திருக்கிற கொடுவினைகளெல்லம் நீங்குகைக்கு
முகில் வண்ணன், Mugil Vannaan - காளமேகநிறத்தனான                          எம்பெருமானுடைய
பென்னம் சேர் சே அடிமேல் போது, Pennam Ser Se Adimeel Podhu - விரும்பத்தக்க திருவடிகளின்மேலுள்ள புஷ்பங்களை
அணியப் பெற்றோம், Aniyap Petrom - அணிந்துகொள்ளுமாறு பாக்கியம் பெற்றோம்
1981பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கற்றோர்கள் பூமி அடங்கலும் ஆள்வர்கள்- கற்க வேண்டா – இவை கேட்போம் யென்று செவி தாழ்த்தார்க்கு அனுபவிக்க வேண்டியது ஒரு துயர் இல்லையே) 10
பெற்றார் ஆயிரம் பேரானைப் பேர் பாடப் பெற்றான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை கற்றோர் முற்று உலகு ஆள்வர் இவை கேட்க உற்றார்க்கு உறு துயர் இல்லை யுலகத்தே –11-3-10
பதவுரை Show / Hide
ஆயிரம் பேரானை, Aayiram Peraanai - ஆயிரந்திருநாமங்களையுடையனான எம்பெருமானுடைய
பேர், Pera - திருநாமங்களை
பாடப் பெற்றாள், Padap Petraal - பாடப்பெற்றவரான
கலியன், Kaliyan - ஆழ்வார்
ஒலிசெய், Olisei - அருளிச்செய்த
தமிழ் மாலை, Tamil Maalai - தமிழ்ச் சொல்மாலையாகிய திருமொழியை
கற்றார், Kattrar - கற்பவர்கள்
பெற்றுஆரார், Petruaar - அந்த எம்பெருமானை லபித்தும் த்ருப்தியடைய மாட்டார்க்ள்
முற்று உலக ஆள்வார், Muttru Ulaga Aalvaar - உலகங்கள் முழுவதையும் ஆளப்பெறுவாக்ள்
இவை, Ivai - இப்பாசுரங்களை
கேட்கல் உற்றார்க்கு, Kedkal Utrarkku - செவிதாழ்த்துக்கேட்கு மவாக்ளுக்கு
உலகத்தே, Ulagatthae - உலகமெங்கும்
உறு துயர் இல்லை, Uru Thuyar Illai - அநுபவிக்கக்கூடிய துக்க மொன்றுமில்லையாகும்
1982பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் திரு முதுகிலே மலைகள் அழிஞ்சு போகாத படி தரித்து ஏறிட்டுக் கொண்டு வருகிற ஜலம் தாரகமான வஸ்துவை – சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை – அவன் அப்படி தன்னுருக் கொடுத்து வேற்றுருக் கொண்டு அரியன செய்து ரஷியா நின்றான் – உனக்குச் செய்ய வேண்டும் அருந்தேவை -அவனை மறவாது இருக்கை இத்தனையும் செய்யப் பாராய் மறக்க ஒண்ணாத செயல்களை அவன் செய்யா நின்றால் நீ மறவாது இருக்க வேண்டாவோ) 1
நிலையிடமெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர் தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால் அலைகடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே –11-4-1
பதவுரை Show / Hide
என் மனனே, En Manane - என் நெஞ்சமே! (- (அவர்கட்கு நிலையிடம் தருவதற்காக))
எங்கும் நிலை இடம் இன்றி, Engum Nilai Idam Indri - நிலைத்து நிற்கைக்கு, ஓரிடமுமில் லாமல்
நெடு வெள்ளம், Nedu Vellam - மஹாப்ரள யவெள்ளமானது
உம்பர், Umbra - மேலுலகத்தவாக்ளுடைய
வளம் நாடு, Valam Naadu - செழிப்புற்றிருந்த ஸ்தானங்களை
மூட, Mood - வியாபித்தவளவிலே
இமையோர், Imaiyor - தேவர்கள் (அஞ்சிநடுங்கி)
எமக்கு, Emakku - எங்களுக்கு
தலை இட, Thalai Ida - தலைவணங்கி யாசிக்க
மற்று ஓர்   சரண் இல்லை, Mattru Oru Saran Illai - உன் தருவடி தவிர வேறொரு புகலிடமில்லை
என்ன, Enna - என்று விண்ணப்பஞ்செய்து நமஸ்காரிக்க
அரண் ஆவன் என்னும் அருளால், Aran Aavan Ennum Arulal - ‘உங்களுக்க நான் சரணமாகிறேன்’ என்று கொண்ட கிருபையினாலே
அலை கடல் நீர்குழாய், Alai Kadal Neerkuzhai - அலையெறிகின்றஸமுத்ரஜலம் குழம்பாகும்படியாகவும்
அதடு, Adadu - தன்கீழ் வயிற்றிலே
ஆட, Aada - அலையெறியும்படியாகவும்
ஆகல் வான், Aagal Vaan - அகன்ற ஆகாசத்திலே
ஓடி, Odi - (பிரமன் முதலியோருடைய குடியிருப்பிலே) சென்றோடி
உரிஞ்ச, Urinja - வீசும்படியாகவும்
முதுகில், Mudhugil - தன் திருமுதுகிலே
மலைகளை, Malaigalai - மலைகளை
மீது கொண்டு, Meethu Konda - ஏறிட்டுக்கொண்டு
வரும், Varum - வருகிற
மீனை மாலை, Meenai Maalai - மத்ஸ்யரூபியானஎம்பெருமான்
மறவாது, Maravathu - ஒருகாலும் மறவாமல்
இறைஞ்சு, Iraichu - வணங்குவாயாக.
1983பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு மலை சாய்ந்து கிடக்கிறாப் போலே இருக்கிற வலியை உடைய ஆமையான ஸ்ரீ யபதி -இனி ஒரு ரஷகம் வேண்டாத அரண்) 2
செருமிகு வாள் எயிற்ற வரவொன்று சுற்றித் திசை மண்ணும் விண்ணுமுடனே வெரு வர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய பருவரை யொன்று நின்று முதுகில் பரந்து சுழலக் கிடந்து துயிலும் அருவரை யன்ன தன்மை யடலாமையான திரு மால் நமக்கோர் அரணே –11-4-2
பதவுரை Show / Hide
செரு மிகு, Seru Miku - வலமிக்கதாய்
வாள், Vaal - ஒளிபொருந்தியதான
எயிற்ற, Eiyirtta - பற்களையுடைய
அரவு ஒன்று, Aravu Ondru - வாஸூகி நாகத்தை
சுற்றி, Suttri - (கடைகயிறாகச்) சுற்றி
திசை, Disai - திக்குக்களிலுள்ளாரும்
மண்ணும், Mannum - பூமியிலுள்ளாரும்
விண்ணும், Vinnum - மேலுலகங்களிலுள்ளாரும்
உடனே, Uthane - ஏகரூபமாக
வெருவர, Veruvara - அஞ்சி நடுங்கும்படியாகவும்
வெள்ளை வெள்ளம் முழுதும், Vellai Vellam Muzhudhum - திருப்பாற்கடலடங்கலும்
குழம்ப, Kuzhamba - குழம்பாகும்படியாகவும்
இமையோர்கள், Imaiyorkal - தேவர்கள்
நின்றுகடைய, Ninrukadai - நின்று கடைவதற்குப் பாங்காக
பரு வரை ஒன்று, Paru Varai Ondru - பெரியதொரு மலையானது
முதுகில், Mudhugil - தனது முதுகிலே
பரந்து நின்று, Parandhu Ninru - பரம்பி நின்று
சுழல, Suzhala - சுழலும்படியாக
கிடந்து, Kidandhu - அந்தமலையின் கீழே கிடந்து
துயிலும், Thuyilum - சாய்ந்துகிடவா நின்ற
அருவரை அன்ன தன்மை, Aruvarai Anna Thanmai - பெரியதொரு மலை சாய்ந்து கிடக்கிறாய் போன்றுள்ள
அடல், Adal - வலிமைகொண்ட
ஆமை ஆன, Amai Ana - கூர்மரூபியான
திருமால், Thirumal - எம்பெருமான்
நமக்கு, Namkku - நமக்கு
ஓர்அரண், Oorarang - ஒப்பற்ற ரக்ஷகன்.
1984பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அனுரூபஸ் சவை நாத – என்னுமா போலே இதுக்கு அடைய-இவை அடையத் திருவடிகளிலே சேர்ந்து அருளுவதற்கு தகுதியான காரணம் ஸ்ரீ வராஹ கல்பாதியிலே மஹா வராஹமாய் ரஷித்த ஸ்ரீ திரு மேனி – அது நம்மை அடிமை கொள்ளும் நிர்வாஹ வஸ்து) 3
தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உம்பர் உலகு ஏழினோடும் உடனே மாதிர மண் சுமந்த வடகுன்று நின்ற மலை யாறும் ஏழு கடலும் பாதமர் சூழ் குளம்பினக மண்டலத்தின் ஒரு பாலோடுங்க வளர் சேர் ஆதி முன் ஏனமாகிய யரணாய மூர்த்தி யது நம்மை யாளும் அரசே –11-4-3
பதவுரை Show / Hide
தீது அறு, Theethu Aru - குற்றமற்ற (- (ஆகிய இவையெல்லாம்))
திங்கள், Thingal - சந்திரனும்
பொங்கு சுடர், Pongu Sudar - தபிகின்ற தேஜஸ்ஸையுடைய ஸூர்யனும்
உம்பா, Umbha - தேவர்களும்
உம்பர் உலகு எழினோடும் உடனே, Umbar Ulagu Ezhinodum Udane - மேலுலகங்களேழும்
மாதிரம், Madhiram - திசைகளும்
மண் சுமந்த வடகுன்று, Man Sumandha Vadakuntru - பூமியைத் தாரிக்கினற மேருபர்வதமும்
நின்ற மலை ஆறும், Nindra Malai Aarum - மிச்சமான குவபர்வதங்காறும்
ஏழு கடலும், Ezhu Kadhalum - ஸப்த ஸாகரங்களும்
புர்தம் அமா, Purtham Ama - திருவடிகளிலே பொருந்தியுள்ள
சூழ்குளம்பின், Soolkulambin - பரம்பியதிருக்குளம்பினுடைய
அகம் மண்டலத்தின், Aham Mandalathin - உள் வலயத்தின்
ஒரு பால், Oru Paal - ஏகதேசத்திலே
ஒடுங்க, Odunga - அடங்கும்படி
வளர், Valar - வளரா நிற்பவனாய்
சேர், Ser - தகுதியான
ஆதி, Aadhi - காரணபூதனாய்
முன், Mun - வராஹகல்பாதியிலே
ஏனம், Eyanam - ஆகி மஹாவராஹரூபியாய்
அரண் ஆய, Aran Aaya - ரக்ஷகனாய் நின்ற
மூர்த்தி அது, Moorthy Adhu - அந்த ஸ்வாமியே
நம்மை ஆளும் அரசு, Nammai Aalum Arasu - நம்மை அடிமைகொள்ளவல்ல பிரபு
1985பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வளைந்த திரு உகிர்களை உடையவன் -வலி மிக்க பெரிய மறத்தை உடைய ஹிரண்யன் வடிவைக் கண்டு அத்தை ஒன்றாக மதியாதே கிட்டு ஸ்ரீ திரு வாழிக்கு இரை போதாது யென்று ஒரு ஸ்ரீ உகிராலே- இரண்டு பிளவாம்படி இட்ட குழி மஹா பிரளயத்தில் மும்மடங்கு பெரிது) 4
தளையவிழ் கோதை மாலை யிருபால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண் அள வெழ வெம்மை மிக்க வரியாகி யன்று பரியோன் சினங்கள் அவிழ வளை யுகிர் ஒளி மொய்ம்பின் மறவோனதாகம் மதியாது சென்று ஒரு உகிரால் விள வெழ விட்ட குட்டமது வையமூடு பெரு நீரின் மும்மை பெரிதே –11-4-4
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பொரு காலத்தில்
தளை அவிழ் கோதை மாலை, Thalai Avizh Kothai Maalai - கட்டுஅவிழ்கின்ற (விகஸிக்கின்ற) பூமாலையானது
இருபால், Irupaal - இரண்டு பக்கத்திலும்
தயங்க, Thayanga - அசைந்து விளங்க
எரிகான்ற, Erikaantra - அழலை உமிழா நின்றுள்ள
இரண்டு தறுகண், Irandu Tharukan - வட்டணித்த இரண்டு திருக்கண்களும்
அளவு எழ, Alavu Ezha - அளவு கடந்து மலர(ப்பெற்ற)
வெம்மைமிக்க அரி ஆகி, Vemmaimikka Ari Aagi - பயங்கரமான நரஸிம்ஹரூபியாய்
பாரியோன், Paariyon - ஸ்தூலகாயனான இரணியனுடைய
சினங்கள், Sinangal - பவகத் பாகவத விஷயங்களிலுண்டான மாச்சாரியமெல்லாம்
ஆவிழ, Aavizha - குலையும்படியாக
வளைஉகிர் ஆளி, Valaiugir Aali - வளைந்த திருநகங்களை யுடையனாயக் கொண்டு
மொய்ம்பில் மறவோனது, Moympil Maravonathu - வலிமையோடு கூடித் வேஷத்தை யுடையனான இவ்விரணியனது
ஆகம், Aagam - உடலை
மதியாது சென்று, Madhiyadhu Sendru - ஒருபொருளாக நினைக்காமல்கிட்டி
ஒரு உகிரால், Oru Ukiral - ஒரு திருநகத்தாலே
பிளவு எழ இட்ட, Pilavu Ezha Itta - இரண்டு பிளவாம்படி செய்ததனாலுண்டான
குட்டம் அது, Kuttam Adhu - ரக்தமடுவானது
வையம், Vaiyam - இவ்வுலகத்தையெல்லம்
மூடு, Moodu - வியாபிக்கின்ற
பெரு நீரில், Peru Neeril - பிரளயப் பெருவெள்ளத்திற் காட்டில்
மும்மை பெரிது, Mummaiy Peridhu - மும்மடங்கு பெரிதாயிருந்தது!
1986பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மந்தரத்துக்கு மேல் போய் சந்த்ராதித்யர்கள் ஸ்தானத்து அளவிலே நின்று ஆதரிக்க ப்ரஹ்மா-நம் இருப்பில் திருவடிகள் வந்தது -யென்று புறப்பட்டு ஆஸ்ரயிக்கும் படி – வளரா நிற்பதாய் – சேரக் குடி ஏறி இருக்கிற உபரிதன லோகங்கள் ஏழும் நடுவே போம்படி நடத்தின திருவடிகள் நமக்கு ரஷகம்) 5
வெந்திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை உணர செந்தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடி மூன்று இரந்து பெறினும் மந்தர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர் அந்தரம் ஏழினூடு செல வுய்த்த பாதமது நம்மை யாளும் அரசே –11-4-5
பதவுரை Show / Hide
வெம் திறல், Vem Thiral - கொடிய வலிமையையுடையனான
வாணன், Vaanan - மஹாபலியினுடைய
வேள்வி இடம், Velvi Itam - யாகபூமியிலே
அங்கு ஓர்  குறள் ஆகி, Anku Or Kural Aki - விலக்ஷணவாமனமூர்த்தியாய்க் கொண்டு
எய்தி, Eyti - எழுந்தருளி
மெய்ம்மை உணர, Meimmai Unar - இவன் மெய்யான யாசகன் என்று மாவலி தொரிந்து கொள்ளுமாறு
செம் தொழில் வேதம்நாவின் முனி ஆகி, Sem Tozhil Vedamnavin Muni Aki - நல்ல அனுஷ்டானங்களில் உபயோகப்படுகின்ற வேதத்தை நாவினால் உச்சரிக்கின்ற ரிஷிபோல  நின்று
மூன்று அடிஐவயம், Munru Atiaivayam - மூவடி நிலத்தை
இரந்து, Irantu - யாசித்து
பெறினும், Perinum - பெற்றவாறே
மந்தரம் மீது போகி, Mantiram Mitu Poki - மந்தரத்துக்கு மேலேபோய் அளாவி
மதிநின்று இறைஞ்ச, Matininru Irainca - சந்திரன் நின்றுதொழும்படியாகவும்
மலரோன், Malaron - நான்முகக்கடவுள்
வணங்க, Vanangka - வணங்கும்படியாகவும்
வளர்சேர், Valarcer - வளர்ந்து செல்லுவதாய்
அந்தரம் எழின் ஊடு, Antaram Elin Utu - மேலுலகங்களேழினுள்ளும்
செலஉய்த்த பாதம்அது, Celauytta Patamatu - செல்லும்படி நடத்தப்பெற்ற அந்தத்திருவடி யானது
நம்மை அரசு ஆளும், Nammai Aracu Alum - நம்மை ரக்ஷிக்கக் கடவது.
1987பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபர்-ஸ்ரீ யபதி -ஈஸ்வரன் உடைய சர்வ இந்த்ரியங்களையும் அபஹரிக்க வல்ல நீளைப் பிராட்டிக்கு வல்லவர்-யச்யஸா -என்னும்படி இவளை உடையவர் -என்னும் பெரும் புகழை உடையவர் – சர்வ லோகங்களையும் வயிற்றிலே வைத்து ரஷித்து ரஷ்யத்தின் அளவில்லாத ரஷகத்வ பாரிப்பை உடையராய் இப்படிக்கொத்தவர் நம்முடைய் ஆஸ்ரயணத்தின் சிறுமை பாராதே யாவதாத்மபாவியாக நம்மை அடிமை கொள்வர்) 6
இரு நில மன்னர் தம்மை யிரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே செரு நுதலூடு போகியவராவி மங்க மழு வாளில் வென்ற திறலோன் பெரு நில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர் புல மங்கை கேள்வர் புகழ் சேர் பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயராகியவர் நம்மை யாள்வர் பெரிதே –11-4-6
பதவுரை Show / Hide
இருநிலம் மன்னா; தம்மை, Irunilam Manna Tammai - பரம்பின இப்பூமண்டலத்திலிருந்த அரசர்களின்
இருநாலும் எட்டும் ஒரு நாலுடனே ஒன்றும், Irunalum Ettum Oru Nalutane Onrum - இருபத்தொரு தலைமுறையளவும்
செரு நுதலூடு போகி, Ceru Nutalutu Poki - பூசற்களத்தின் முகப்பிலே சென்று
அவர் ஆவி மங்க, Avar Avi Manka - அவ்வரசர்களின் உயிர்முடியும்படியாக
மழுவாளில், Mazhuvaalil - கோடாலிப்படையினால்
வென்ற, Vendru - கொன்றொழித்த
திறலோன், Thiralon - மிடுக்கையுடையராய்
நெருநிலம் மங்கை மன்னா;, Nerunilam Mangai Manna - பூமிப்பிராட்டிக்கு நாயகராய்
மலர் மங்கை நாதர், Malar Mangai Naathar - பெரிய பிராட்டியர்க்கும் நாதராய்
புலம் மங்கை கேள்வர், Pulam Mangai Kelvvar - தன்னுடைய ஸகலேந்திரியங்களையும் இழுக்கவல்ல நீளா தேவிக்கும் நாயகராய்
புகழ் சேர், Pugazh Ser - மஹாயசஸ்வியாய்
பெரு நிலம், Peru Nilam - பூமியை முழுதும்
உண்டு, Undu - திருவயிற்றில் வைத்துநோக்கி
உமிழ்ந்த, Umizhndha - பின்பு வெளிப்படுத்தியருளின
பெருவாயர் ஆகியவர், Peruvaayar Aagihavar - பெரிய திருவாயையுடையரான பெருமாள்
பெரிதே, Peridhe - மேலுள்ள மஹாகாலமெல்லம்
நம்மைஆள்வர், Nammai Aalvar - நம்மை அடிமைகொள்வர்
1988பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆயிரம் இரண்டாயிரமுமாக ஒரு தொடையிலே தொடை யுண்ணும் செவ்விய அம்புகளை நடத்தின – இதடையச் செய்தது -ஸ்ரீ பிராட்டி பக்கல் பிச்சாலே இறே இப்படி தம் மார்பிலே அம்பை ஏற்று ரஷிக்குமவர் நமக்கு ரஷகர்-நமக்கு மேல் ஒரு குறை உண்டோ) 7
இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர் அலை மலி வேற் கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள் சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7
பதவுரை Show / Hide
இலைமலி பள்ளி எய்தி, Ilaimali Palli Eydhi - பர்ணசாலையினருகே வந்து
எழில் சேர், Ezhil Ser - மிக்க அழகையுடையளாய்
ஆலை மலி வேல் கணாளை, Aalai Mali Vel Kanaalai - துன்பப்படுத்துமியல்வு பொருந்திய வேல் போன்ற திருக்கண்களை யுடையளான பிராட்டியை
அகல்விப்ப     தற்கு, Agalvippa Tharku - பிரிப்பதற்காக
இனம் ஆய மான் பின், Inam Aaya Maan Pin - ஸஜாதியமான மான்களின்பின்னே
இதுமாயம் என்ன, Idhumayam Enna - இது ஆச்சரியமான மான் என்று சொல்லும்படியாக
ஓர்உரு ஆய, Oru Uru Aaya - விலக்ஷணமான ரூபத்தை யேறிட்டுக்கொண்டு வந்த
மானை, Maanai - (மாரீசனாகிற) மாயமானை
அமையா, Amayaa - நிரஸித்து
கொலைமலிவு எய்துவித்த     கொடியோன், Kolaimalivu Eythuvitha Kodiyon - பரஹிம்ஸையையே தன்னிடத்துப் பூர்த்தியாகக் கொண்டிருந்தகொடியவனான இராவணனுடைய
இலங்கை, Ilankai - லங்காபுரியானது
பொடி ஆக, Podi Aaga - பொடிபடும்படி
வென்றி அமருள், Vendri Amarul - வெற்றிப்போர்க்களத்திலே
சிலை மலி செம் சரங்கள், Silai Mali Sem Sarangal - வில்லிலே நிறைந்த செவ்வியஅம்புகளை
செல உய்த்த, Sela Uytha - பிரயோகித்த
நங்கள் திருமால், Nangal Thirumaal - எம்பெருமான்
நமக்கு ஓர் அரண், Namakku Oor Aran - நமக்கு ஒப்பற்ற சரண்யன்
1989பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லோகத்தில் அஞ்ஞானம் தீர்ந்து தன்னைக் கண்டார் எல்லாரும் ஆனந்த நிர்பரராம் படியாக கேட்பார் உபசத்தி பண்ண மாட்டாமையாலே இழக்க வேண்டாத ஸ்ரீ திர்யக்காய் – ஸ்ரீ சாரதியாய் உபதேசித்தால் போலே ஹிதானுசந்தானம் பண்ணக் கடவ அவனே ரஷகன்) 8
முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு வீடும் அறியாது என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ் வையம் மகிழ அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே –11-4-8
பதவுரை Show / Hide
முன், Mun - முன்பொருகால்
உலகங்கள்     எழும், Ulagangal Ezhum - ஸகல லோகங்களையும்
மண்டி உண்ண, Mandi Unna - வியாபிக்கும்படியாகவும்
இமையோர், Imaiyor - தேவர்கள்
முதலோடு வீடும் அறியாது, Muthalodu Veedu Ariyaadhu - ஆதியுமந்தமுமறியாமல்
எண் இது வந்தது என்ன, En Idhu Vandhadhu Enna - திடீரென்று இப்படியான விது என்னோ? என்று
திசைப்ப, Thisaippa - திகைத்து நிற்கும்படியாகவும்
எழில் வேதம், Ezhil Vedham - அழகிய வேதங்கள்
இன்றி முறைய, Indri Muraiya - இல்லாமல் மறைந்து போனவளவிலே
பின்னையும், Pinnaim - மீண்டும்
வானவர்க்கும், Vaanavarkkum - தேவர்களுக்கும்
முனிவர்க்கும், Munivarkkum - மஸர்ஷிகளுக்கும்
நல்கி, Nalki - அருள் கூர்ந்து
இவையம், Ivaiyam - இவ்வுலகமானது
இருள் தீர்ந்துமகிழ, Irul Theerndumagizha - இருளால் விடுபட்டு ஆநந்திக்கும்படியாக
அன்னம் அது ஆய் இருந்து, Annam Adhu Aayi Irundhu - ஹம்ஸரூபியாய்த் திருவவதாரித்து
அங்கு, Angu - அப்போது
அறம் நூல், Aram Nool - வேத  சாஸ்திரங்களை
உரைத்த, Uraiththa - அருளிச்செய்த
அது, Adhu - அந்தப் பரஞ்சோதியே
நம்மை அரசுஆளும், Nammai Arasuhalum - நம்மை அடிமை கொள்ளும்
1990பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ யசோதை பிராட்டி உரலோடு கட்ட அத்தைக் கொண்டோடின மிடுக்கை உடைத்தாய் – ஓன்று என்னலாம் படி நின்ற மருதுகள் முறிந்து விழும்படியாக-நடை கற்ற தெள்ளியவன் நம்முடைய பாபத்தை சவாசனமாக போக்கும்-இது நிச்சிதம்) 9
துணை நிலை மற்று எமக்கோர் உளது என்று இராது தொழுமின்கள் தொண்டர் தொலைப் உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி பணை முலை யாயர் மாதர் உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர் இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே –11-4-9
பதவுரை Show / Hide
தொண்டர், Thondar - பாகவதர்காள்
எமக்கு மற்று ஓர்அணைநிலை உனது என்று இராது, Emakku Matru Ooranjilai Unathu Endru Iradhu - நமக்கு வேறொரு ஆச்ரயமுண்டு என்று நினைத்திராமல்
தொழுமின்கள், Thozhuminngal - எம்பெருமானை வணங்குங்கோள்
முன், Mun - முன்பொருகால்
தோலைய, Tholaiya - (கண்ணன்) முடிந்துபோக வெணுமென்றெண்ணி
உண, Unna - அவன் உண்ணும்படியாக
முலை கொடுத்த, Mulai Koduththa - (நஞ்சுதீற்றியதனது) முலையை (வாயில்) கொடுத்த
உரவோனது, Uravonathu - வன்னெஞ்சினளான பூதனையினுடைய
ஆவி உக, Aavi Uga - உயிர்மாளும்படி
உண்டு, Undu - ஸ்தந்யபானம்பண்ணி
வெண்ணெய் மருவி, Vennai Maruvi - வெண்ணெயை ஆசைப்பட்டு (க் களவு செய்ய)
பணைமுலை ஆயர்மாதர், Panaimulai Aayarmathar - பருத்தமுலையையுடையளான யசோதைப் பிராட்டியானவள்
உரலோடுகட்ட, Uralodukatta - உரலோடே பிணித்துவைக்க
அதனோடும் ஓடி, Adhanodum Oodi - அவ்வுரலையுமிழுத்துக் கொண்டோடி
இணை மருது, Inai Marudhu - இரட்டைமருதமரங்கள்
இற்று வீழ, Itru Veezha - முறிந்துவிழும்படியாக
நடை கற்ற, Nadai Katra - நடைபயின்ற
தெற்றல், Thetral - தெளிவுள்ள சிறுகுழந்தை
வினை பற்று அறுக்கும், Vinai Patru Arukkum - (நமது) ப்ரபங்களை வாஸனையோடே பொக்கியருளும்
விதியே, Vidhiyey - இது திண்ணமே
1991பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெஞ்சாலே தரித்தும்-இதுவே யாத்ரையாக யுழலு கிறவர்கள் ஸ்ரீ பரம பதத்தைப் பெற்று அனுபவிப்பார்கள்) 10
கொலை கெழு செம்முகத்த களிறொன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா சிலை கெழு செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலி கன்றி சொன்ன பனுவல் ஒழி கெழு பாடல் பாடி யுழல் கின்ற தொண்டரவர் ஆள்வர் உம்பர் உலகே –11-4-10
பதவுரை Show / Hide
கொலை கெழு, Kolai Kezhu - கொலை செய்யுமியல்வு விளக்கப் பெற்ற
செம் முகத்த, Sem Mugath - சிவந்த முகத்தையுடையத்தாயக் கொண்டுவந்த
களிறு ஒன்று, Kaliru Ondru - (குவலயாபீடமென்னும்) ஒரு யானையை
கொன்று, Kondru - கொன்றொழித்தவனாயும்
கொடியோன், Kodiyon - கொடியவனான இராவணனுடைய
பொடி ஆ, Podi Aa - பொடியாகும்படி
சிலை கெழு செம் சரங்கள் செல உய்த்த, Silai Kezhu Sem Sarangal Sel Uytha - வில்லிலுள்ள நெருப்புப் போன்ற அம்புகளைப் பிரயோகித்தவனாயுமுள்ள
நங்கள் திருமாலை, Nangal Thirumalai - எம்பெருமானைக் குறித்து,
வேலை புடை சூழ, Velai Pudai Soozha - கடலாலே சுற்றுஞ் சூழப்பட்டதாய்
கலி கெழு மாடம் வீதி, Kali Kezhu Maadam Veethi - வலிமைமிக்க மாடவீதிகளை யுடையதாய்
வயல், Vayal - கழனிகளையுடைத்தான
மங்கை, Mangai - திருமங்கைநாட்டிலே
மன்னு, Mannu - பொருந்திவாழ்கிற
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்
சொன்ன, Sonna - அருளிச்செய்த
பனுவல், Panoval - ஸ்ரீஸூக்தியாய்
ஒலி கெழு, Oli Kezhu - சொற்கள் சிறந்த
பாடி, Paadi - வாயாரப்பாடி
உழல்கின்ற, Uzhalginra - இதுவே போதுபோக்காய்த் திரிகின்ற
தொண்டர் அவர், Thondar Avar - பாகவதர்கள்
உம்பர் உலகு, Umbar Ulagu - பரமபத்த்தை
ஆள்வர் –, Aalvar - ஆளப்பெறுவர்கள்
1992பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காணேடீ — தோழமையால் ஏடீ -என்கிறது ஆதல் – பிராட்டியைக் கண்ட ப்ரீதியாலே ததிமுகனை குத்தினால் போலேஹர்ஷத்தாலே சொல்லுகிறாள் ஆதல் – இப்படி தன் ஸ்வரூபத்தை அழிய மாறி ஆஸ்ரித ரஷணத்துக்காக கிலேசப் பட்டவன் ஆனால் இவ்வாத்மாவுக்கு ஒரு குறை உண்டோ – அவன் நிரதிசய ஆநந்த பரி பூர்ணனாய் இருக்கிறது நமக்காகவாய் இருந்த பின்பு இவ்வாத்மாவுக்கு ஒரு குறை உண்டோ) 1
மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் காணேடீ கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள் வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே –11-5-1
பதவுரை Show / Hide
ஏ, E - தோழீ! (- (நீ ஏத்திச் சொல்லுகிற புருஷன்) (என்று ஒருத்திசொல்ல) (மற்றொருத்தி அதற்கு மறுமாற்ற முரைக்கிறாள்))
மான் அமரும், Maan Amarum - மானையொத்த
மெல் நோக்கி, Mel Nookki - மென்மையான கண்களை யுடையவளான
கைதேவி, Kaithevi - விதேஹராஜவம்சத்துப் பிறந்தவளான ஸீதையை
இன் துணை ஆ, In Thunai Aa - இனிய துணைவியாகக் கொண்டு
கான் அமரும், Kaan Amarum - காட்டிலே பொருந்திய
போய், Poi - போய்
காடு, Kaadu - காடுகளிலே
உறைந்தான் காண், Uraindhaan Kaan - வாஸம்பண்ணினான் காண்
சாழலே, Saalale - தோழீ!
கான் அமரும் கல் அதர் போய், Kaan Amarum Kal Adhar Poi - காட்டிலே பொருந்திய கல்நிலைந்தவழியே சென்று
காடு, Kaadu - காடுகளிலே
உறைந்த, Uraindha - ஸஞ்சரித்த
பொன் அடிகள், Pon Adigal - திருவடிகளானவை
வானவர் தம், Vaanavar Tham - தேவர்களினுடைய
சென்னி, Sennai - முடியில் (அணியத்தக்க)
மலர் கண்டாய், Malar Kandaai - புஷ்பங்களாயிராநின்றன காண்.
1993பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ராமன் சௌலப்யம் அனுபவித்தார் முதல் பாசுரத்தில் இது முதல் எட்டாம் பாசுரம் வரை ஸ்ரீ கிருஷ்ணன் சௌலப்யம் அனுபவிக்கிறார் – கர்ம வஸ்யர் உடைய ரஷணத்துக்கு வந்து பிறக்குமவன் ஆகையாலும் அவன் தான் சர்வ காரண பூதன் ஆகையாலும்-நமக்கு ஓர் குறை உண்டோ -என்கிறது) 2
தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான் முகற்கு தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே –11-5-2
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ!
தந்தை, Thandai - தந்தையாகிய வஸுதேவருடைய
தளை, Thalai - கால்விலங்கு
கழல, Kazhala - கழன்று விழும்படியாக
தோன்றி, Thonri - அவதரித்து
போய், Poi - மதுரையில் நின்றும் பெயர்ந்து போய்
ஆய்ப்பாடி, Aayppadi - திருவாய்ப்பாடியில்
நந்தன், Nandan - நந்தகோபருடைய
குலம், Kulam - குலத்திற்கு (க்கொழுந்தான)
மதலை ஆய், Madalai Aay - பிள்ளையாய்
வளர்ந்தான் காண், Valarnthaan Kaan - வளர்ந்தானன்றோ
சாழலே, Saalale - தோழீ!
நந்தன் குலம் மதலை ஆய் வளர்ந்தான், Nandan Kulam Madalai Aay Valarnthaan - இடைப்பிள்ளையாய் வளர்ந்தவன்
நான் முகற்கு, Naan Mugarku - நான் முகனுக்கு
தந்தை காண், Thandai Kaan - தகப்பன் காண்
எந்தை பெருமான் காண், Endhai Perumaan Kaan - என்னுடைய குலநாதன் காண்
1994பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் நேரே கிடையா விட்டால் களவு கண்டாகிலும் ஜீவிக்குமவன் ஆகையாலும் ரஷணத்தில் பர்யாப்தி பிறந்து இராதவன் ஆகிலும் நமக்கு ஒரு குறை உண்டோ) 3
ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித் தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிற்று இவ் வேழ் உலகும் உண்டு இடமுடைத்தால் சாழலே –11-5-3
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ!
ஆழ்கடல் சூழ் வையகத்தார், Aazhkaadal Sooz Vayakaththaar - ஆழ்ந்தகடலால் சூழப்பட்ட பூமியிலுள்ளாரெல்லாரும்
ஏச, Eesa - ஏசும்படியாக
ஆய்ப்பாடி, Aayppadi - ஏசும்படியாக
தாழ் குழலார் வைத்த, Thaal Kuzhalaar Vaiththa - தாழ்ந்த கூந்தலையுடைய இடைப்பெண்கள் சேமித்து வைத்திருந்த
தயிர், Thayir - தயிரை
உண்டான் காண், Undaan Kaan - வயிறா உட்கொண்டவன்ன்றோ
சாழலே, Saalale - தோழீ!
தாழ் குழலார் வைத்த தயிர் உண்டபொன் வயிறு, Thaal Kuzhalaar Vaiththa Thayir Undapon Vayiru - இடைச்சிகள் வைத்திருந்த தயிரை உட்கொண்ட திருவயிறானது
இஏழ் உலகும் உண்டும், Iyaazh Ulakum Undum - இவ்வுலகங்களை யெல்லாம் அமுது செய்தவளவிலும்
இடம் உடைத்து, Idam Udaiththu - இனன்மும் அவகாசத்தை யுடையதாயிருக்கின்றது.
ஆல், Aal - ஆச்சரியம்
1995பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ப்ரவணர் ஆகையாலே அது பின்னாட்டுகிறபடி – மனுஷ்யத்வே பரத்வம் அறியாதார்க்கு தயிரை வருந்திக் கடைந்து உறியிலே சேமித்து வைத்த அன்று கடைந்த வெண்ணெயை உண்டு உகந்தான் – சம்சாரிக்கு பகவல் லாபம் போலே அவனுக்கு இது – இவ் வயிற்றுக்கு கடல் சூழ்ந்த லோகம் அடையப் போராது காண்) 4
அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தான் காணேடீ உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்த பொன் வயிற்றுக்கு ஏறி நீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே –11-5-4
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ!
அறியா தார்க்கு, Ariyaa Thaarakku - ஒன்றுமறியாதவர்களுக்குள்ளே
ஆன் ஆயன் ஆகி, Aan Aayan Aagi - மாடுமேய்க்குமிடைக்குலத்தவனாய்
ஆய்ப்பாடி, Aayppadi - இடைச்சேரியிலே
உறி ஆர், Uri Aar - உறிகளிலே பொருந்தின
நறு வெண்ணெய், Naru Vennyei - மணம்மிக்க வெண்ணெயை
உண்டு, Undu - (களவுசெய்து) உட்கொண்டு
உகந்தான் காண், Uganthaan Kaan - ஸந்தோஷதித்தான் காண்
சாழலே, Saalale - தோழீ!
உறி ஆர் நறுவெண்ணெய் உண்டு உகந்த, Uri Aar Naruvennyei Undu Ugantha - உறிகளிலே பொருந்திய நறுவெண்ணெயை உட்கொண்டு உவந்த
பொன் வயிற்றுக்கு, Pon Vayirukku - திருவயிற்றுக்கு
எறி நீர் உலகு அனைத்தும், Eri Neer Ulagu Anaiththum - கடல்சூழ்ந்த லோகங்களெல்லாம்
எய்தாது, Eydhaadhu - போதாது
ஆல், Aal - ஆச்சரியம்
1996பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இடைச்சிக்கு பரிச்சின்னனாய் இருந்தானே ஆகிலும் ஸ்வ யத்னத்தால் அறியும் ப்ரஹ்மாதிகளுக்கு அபரிச்சின்னனாய் இருக்கும்) 5
வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே –11-5-5
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ! (- (கண்ணி குறு கயிற்றால் கண்டுண்டான் ஆகிலும்))
வண்ணம், Vannam - அழகியதாய்
கரு, Karuu - கறுத்த
குழல், Kuzhal - கூந்தலையுடைய
ஆய்ச்சியால், Aaychiyal - யசோதைப்பிராட்டியாலே
மொத்துண்டு, Moththundu - அடியுண்டு
கண்ணி குறு கயிற்றால், Kannni Kuru Kayittraal - முடிகளையுடைத்தாய் (எட்டம்போராதபடி) குறியதான கயிற்றினால்
கண்டுண்டான் காண், Kandundaan Kaan - கட்டுண்டு கிடந்தான்காண்
சாழலே, Saalale - தோழீ!
இமையோர்க்கும், Imaiyorkkum - தேவர்களுக்கும்
எண்ணற்கு, Ennarkku - நெஞ்சால் நினைப்பதற்கும்
1997பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கேட்டார் நெஞ்சு ஈரும் படி த்வனிக்க இடையர் மனஸ் களிப்ப மன்றிலே மரத்தைக் காலிலே கட்டி ஆடினான் காண் – இப்படி இடையர் கண் வட்டத்திலே நிற்கிற வஸ்துவை ப்ரஹ்மாதிகள் கண் வட்டத்திலே கண்டு அறிவார் இல்லை) 6
கன்றப் பறை கறங்கக் கண்டவர் தம் கண் களிப்ப மன்றில் மரக்கால் கூத்தாடினான் காணேடீ மன்றில் மரக்கால் கூத்தாடினான் ஆகிலும் என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே –11-5-6
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ! (- (மன்றில் மரக்கால்கூத்து ஆடினான் ஆகிலும்))
கன்ற, Kanru - (விரோதிகளின் நெஞ்சு) கன்றும்படியாக
பறை கறங்க, Parai Karangka - பறைகள் ஒலிக்கவும்
கண்டவர் தம், Kandavar Tham - பார்த்தவர்களினுடைய
கண், Kan - கண்களானவை
களிப்ப, Kalippa - கனிக்கவும்
மன்றில், Manril - நாற்சந்திகளிலே
மரக்கால் கூத்து ஆடினான் காண், Marakkaal Koothu Aadinan Kaan - மரத்தைக் காலிலேகட்டி யாடுவதொரு கூத்தை ஆடினானன்றோ?
சாழலே, Saalale - தோழீ!
இமை யோர்க்கும், Imai Yorkkum - தேவர்களுக்கும்
என்றும், Endrum - என்றைக்கும்
அரியன், Ariyan - அருமைப்பட்டவன் காண்.
1998பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (துர் உக்தி பண்ணுவதற்கு ஒருவரும் இல்லாத சமயத்தில் துர்யோதனில் குறைந்தார் இல்லாத இஜ் ஜகத்தை வயிற்றிலே வைத்து ரஷிததான் காண்) 7
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் வாகிலும் ஓத நீர் வையகம் முன் உண்டு உமிந்தான் சாழலே –11-5-7
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ! (- (தூதன் ஆய் மன்னவனால் கொல்லுண்டான் ஆகிலும்))
கோதை வேல் ஐவர்க்கு ஆய், Kothai Vel Aivarkku Aay - (அரசர்க்குரிய) பூமாலையையும் வேற்படையையும் உடையவரான பஞ்சுபாண்டவர்களுக்கு விதேயனாய்
மண் அகலம் கூறு இடுவான், Man Akalam Kooru Idhuvan - குரு பாண்டவாகட்குப் பூமியைப் பங்கிட்டுக் கொடுத்து சந்தி செய்வதற்காக
தூதன் ஆய், Thoodhan Aay - தூதுசென்றவனாய்
மன்னவனால், Mannavanaiyil - துரியோதனனென்னும் அரசனாயல்
சொல் உண்டான் காண், Sol Undaan Kaan - இழிவான சொற்களைச்சொல்லப் பெற்றானன்றோ?
சாழலே, Saalale - தோழீ!
முன், Mun - முன்பொருகால்
ஓதம் நீர் வையகம், Otham Neer Vayagam - கடல் சூழ்ந்த உலகத்தையெல்லாம்
உண்டு உமிழ்ந்தான், Undu Umizhndhaan - (பிரளயங்கொள்ளாதபடி) வயிற்றிலே வைத்து நோக்கி வெளிப்படுத்தினான்காண்க.
1999பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி தாழ்வு செய்தவன் லோகத்தில் ராஜாக்கள் ஆனார் முடி மேல் மாலையிலே காண் திருவடிகளை வைத்துக் கொண்டு இருப்பது – ராஜாதி ராஜ சர்வேஷாம் -இத்யாதி) 8
பார் மன்னர் மங்கப் படை தொட்டு வெஞ்சமத்துத் தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான்ஆகிலும் தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே –11-5-8
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ! (- (தேர் மன்னற்கு ஆய் அன்று தேர் ஊர்ந்தான்))
அன்று, Anru - பாரதப்போர்நிகழ்ந்த அக்காலத்தில்
பார், Paar - பூமியிலுள்ள
மன்னர், Mannar - அரசாகள் யாவரும்
மங்க, Manga - மாளும்படியாக
வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்திலே
படைதொட்டு, Padaithottu - (பிரதிஜ்ஞைக்குமாறாக)ஆயுதமெடுத்து
தேர்மன்னற்கு, Thermannarku - தேர்வீரனான அரிஜுனனுக்கு
ஆய், Aai - துணையாய்(ஸராதியாகி)
தேர் ஊர்ந்தான் காண், Ther Oornthaan Kaan - தேரைநடத்தினான் காண்.
சாழலே, Saalale - தோழீ!
தார் மன்னர் தங்கள், Thaar Mannar Thangal - வெற்றி மாலைபுனையும் அரசர்களுக்கெல்லாம்
தலை மேலான், Thalai Melan - தலைமேல் வீற்றிருப்பவன் காண்.
2000பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வடிவு அழகாலும் வரையாதே தீண்டும் படி யாலும் ஆஸ்ரிதர்க்கு தாழ்வு செய்யும்படியாலும் – கிருஷணாவதாரத்தோடு போலியாய் இறே ஸ்ரீ வாமன அவதாரம் இருப்பது – உதாரனாய் இருக்கிற மஹா பலி யஞ்ஞ பூமியிலே அவன் கண் வட்டத்துக்கு உள்ளே நின்று மூன்றடி மண் இரந்தான் காண் – அவன் கண் வட்டத்தே நின்ற இவனை நாட்டில் கண்டவர் இல்லை கிடாய்) 9
கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய் வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும் விண்டு ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் சாழலே –11-5-9
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ! (- (வண்தாரான் வேள்வியில் மண் இரந்தான் ஆகிலும்))
கண்டார், Kandaar - பார்த்தவர்களெல்லாரும்
இரங்க, Iranga - மனமிரங்கும்படி
கழிய குறள் உரு ஆய், Kazhiya Kurai Uru Aai - மிகக் குள்ளவடிவுடையவனாய்க் கொண்டு
வண்தாரான், Vandthaaran - வள்ளல்தனத்தைக் காட்டுகின்ற தனிமாலையையணிந்த மாவலியினுடைய
வேள்வியில், Velviyil - யாகபூமியிலே
மண் இரந்தாண் காண, Man Irandhaan Kaan - மண்ணையாசித்தானன்றோ
சாழலே, Saalale - தோழீ!
விண்டு, Vindhu - விஷ்ணுவாய்
ஏழ் உலகுக்கும் மிக்கான் காண், Ezhu Ulagukkum Mikkaan Kaan - எல்லாவுலகத்தினும் மேம்பட்டவன் காண்
2001பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கிரித்ரிம வேஷத்தைக் கொண்டு சிலருக்குச் சென்று கிட்ட ஒண்ணாத படி ஸ்ரீ திருப் பாற் கடலிலே காண் அவன் கிடப்பது – சடக்கெனெ சென்று காண ஒண்ணாத படி ஸ்ரீ திருமலையிலே காண் அவன் நிற்பது -என்பார்கள் காண் அப்படி இருக்கிறவன் காண் ஆழ்வார் ஹிருதயத்தில் நின்றும் புறப்படத் தள்ளினாலும் புறப்படாதே கிடக்கிறான்) 10
கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான் வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே –11-5-10
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ! (- (ஒருவர்க்கும் எளியவனாகாதபடி))
கள்ளத்தால், Kallathaal - கபடவேடித்தினால்
மாவலியை, Mavalaiya - மாவலியிடத்தில்
மூ அடி மண் கோண்டு, Moo Adi Man Koondhu - மூன்றடிமண்ணை இரந்து பெற்று
அளந்தான், Alandhaan - அளந்துகொண்டவன்
வெள்ளத்தான், Vellaththaan - திருப்பாற்கடலிலே உள்ளான்
வேங்கடத்தான், Vengadaththaan - திருமலையிலே உள்ளான்
என்பர்காண், Enpar Kaan - என்று சொல்லுகிறார்களன்றோ?
சாழலே, Saalale - தோழீ!
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும், Vellaththaan Vengadaththaan Aelum - திருப்பாற்கடலிலும் திருமலையிலும் அருமைப்படவுள்ளவனே யாகிலும்
கலிகன்றி, Kalikanri - கலியனுடைய
உள்ளத்தின் உள்ளே, Ullaththin Ullae - ஹ்ருதயத்தினுள்ளே
2002பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தமோ குணா அபிபூதராய் இருக்கையாலே ஸ்ரீ பரமாத்மாவுக்கு சரீரம் என்று உபாசிக்கப் போகாதவர்களை –செய்ந்நன்றி குன்றேல்மின் – அப்ராப்த விஷயங்களில் தாழ்வு செய்ய ஆசைப் பட்ட நீங்கள் –ஸ்ரீ சர்வேஸ்வரனையே ஏத்தப் பாருங்கோள்) 1
மைந்நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம் மெய்ந்நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர் எந்நன்றி செய்தாரா வேதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர் செய்ந்நன்றி குன்றேல்மின் தொண்டர்காள் அண்டனையே யேத்தீர்களே –11-6-1
பதவுரை Show / Hide
தொண்டர்காள், Thondarkal - (தகுதியற்றவிடத்திலே) தொண்டுபட்டிருப்பவர்களே!
மை நின்ற கரு கடல் வாய், Mai Nindra Karu Kadal Vaai - மைமாறாதே நின்றாப்போலே கறுத்திருந்துள்ள கடலிடத்து
உலகு இன்றி, Ulaku Inri - லோகமொன்று மில்லாமல்
வானவரும், Vaanavarum - தேவர்களும்
யாமும், Yaamum - (மனிதர்களான) நாமும்
எல்லாம், Ellam - (ஆகிய) எல்லாப்பொருள்களும்
நெய்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில், Neyninra Chakkarathan Thiruvayittril - நெய்யிட்டு விளங்காநின்ற திருவாழியையுடையனான எம்பெருமானுடைய திருவயிற்றில்
நெடுங்காலம், Nedungaalam - வெகுகாலம்
கிடந்தது, Kidandhadhu - அடங்கியிருந்தமை
ஓரீர், Oorir - அறிகின்றீரில்லையே
எந்நன்றி செய்தார் ஆ, Ennankuri Seithaar Aa - என்னவுபகாரம் பண்ணினார்களாகக் கொண்டு
எதிலோர் தெய்வத்தை, Edhiloor Deivaththai - விரோதிகளின் தேவதாந்தரங்களை
ஏத்துகின்றீர், Aethugindreer - துதிக்கின்றீர்கள்?
செய் நன்றி குன்றேல் மின், Sei Nandri Kunrheel Min - (எம்பெருமான்) செய்தநன்றியை மறவாதீர்கள்,
அண்டனையே, Andanaiye - (அந்த) ஸர்வேச்வரனையே
ஏத்தீர்கள், Aeththirgal - துதியுங்கோள்
2003பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவனுக்கு புறம்பாய் இருப்பது ஒன்றைப் பற்றி இவனைக் கை விட்டி கோளோ- லோகத்தின் உடைய சத்தை அவனுடைய பிரசாதாயத்தம் என்னும் இடம் அறியீர்களோ) 2
நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீதோடி நிமிர்ந்த காலம் மல்லாண்ட தடக் கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்தன்று எல்லாரும் அறியாரோ வெம்பெருமான் உண்டு உமிழ்ந்த வெச்சில் தேவர் அல்லாதார் தாம் உளரே யவன் அருளே யுலகாவது அறியீர்களே –11-6-2
பதவுரை Show / Hide
நில்லாத, Nilladha - ஓரிடத்திலும் நிலைநில்லாத
பெரு வெள்ளம், Peru Vellam - மஹாப்ரளய வெள்ளமானது
நெடு விசும்பின் மீது, Nedu Visumpin Meedhu - நெடுகிய ஆகாசத்தின் மீது
ஓடி, Odi - வழிந்தோடி
நிமிர்ந்தகாலம், Nimirndhagaalam - ப்ரவஹித்தபோது
மல் ஆண்ட தடகையால, Mal Aanda Thadakaiyaal - மிடக்கையுடைய பெரிய திருக்கையினாலே
பகிரண்டம், Pagirandam - பகிரண்டங்களை
அகப்படுத்த காலத்து அன்று, Akappadutha Kaalathu Andru - (பிரளயங்கொள்ளாதபடி) அகப்படுத்திக்கொண்ட அந்த ஸமயத்திலே
தேவர் எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் (என்று) எல்லோரும் அறியாரோ, Thevar Emperumaan Undu Umizhndha Echchil Enru Ellorum Ariyaaro - தேவதைகளெல்லாம் எம்பெருமானது திருவயிற்றில் புகுந்து புறப்பட்ட எச்சில் என்பதை எல்லாரும் அறியமாட்டார்களே
அல்லாதார் தாம், Alladhaar Thaam - அப்படி எச்சிலாகாத தேவதைகள்
உளரே, Ulaare - உண்டோ? (இல்லை)
உலகு, Ulaku - லோகமானது
ஆவது, Aavathu - ஸத்தை பெற்றிருப்பது
அவன் அருளே, Avan Arule - அப்பெருமானுடைய க்ருபையின் அதீன மென்பதை
அறியீர்களே, Ariyeergale - அறிகின்றிலீர்களோ?
2004பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஐஸ்வர்ய சூசகமாய் எதிரிகளை முடிக்க வற்றான ஸ்ரீ திரு வாழியை உடையவன் உடைய குணங்களை அடைவு கெடச் சொல்லாத தண்ணிய ஷூத்ரங்களை-சஹிக்க அரிதாய் இருக்கிறவவர்கள் க்ரௌர்யம் இருந்த படி என்) 3
நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால்வாய் ஒற்றைக் கை வெண் பகட்டில் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும் வெற்றிப் போர் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட கொற்றப் போராழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே –11-6-3
பதவுரை Show / Hide
நெற்றிமேல் கண்ணானும், Netrimeel Kannaanum - நெற்றிக் கண்ணனான சிவபிரானும்
நிறை மொழிவாய் நான்முகனும், Nirai Mozhivai Naanmukanum - வேதங்களை உச்சரிப்பவனான பிரமனும்
நீண்ட நூல் வாய் ஒற்றைக் கை வெண்பகட்டின் ஒருவனையும் உள்ளிட்ட, Neenda Nool Vaai Otrai Kai Venpakattin Oruvanaiyum Ullitta - நீண்டு தொங்குகின்ற வாயையும் துதிக்கையுமுடைய (ஐராவதமென்கிற) வெள்ளையானைப்பாகனான இந்திரனும் முதலான
அமரரோடும், Amararodum - தேவர்களெல்லாரையும்
வெற்றி போர் கடல் அரையன் விழுங்காமல், Vettri Por Kadal Arayan Vizhungamal - ஐயசீலனான ஸமுத்ரராஜன் விழுங்க வொண்ணாதபடி
தான் விழுங்கி, Thaan Vizhunki - தான் திருவயிற்றிலைவைத்து
உய்யக்கொண்ட, Uyyaakkonda - உஜ்ஜிவிப்பித்தருளின
கொற்றம் போர் ஆழியான், Kottam Por Azhiyan - யுத்தங்களில் வெற்றிபெறுகின்ற திருவாழியை யுடையனான எம்பெருமானுடைய
குணம், Gunam - திருக்குணங்களை
பாவா, Paavaa - துதிசெய்கில்லாத
சிறு தொண்டர், Siru Thondar - க்ஷுத்ரஜனங்களுடைய
கொடிய ஆறு ஏ, Kodiya Aaru Ae - கொடுத்தன்மை இருக்கிறபடி என்னே!
2005பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இனி இவர்களுக்கு ரஷகர் யாரும் இல்லை -என்று த்ரை லோகத்தையும் முறையாலே சத்வஸ்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் முழங்கா நின்றுள்ள ஒளி சேர்ந்து இருந்து உள்ள ஸ்ரீ திரு வயிற்றிலே வைத்து உம்மை உய்யக் கொண்ட –கனிந்து இருந்து களாம் போலே இருந்துள்ள ஸ்ரீதிரு உடம்பை உடைய ஒருவனையே – கழல் தொழுமா கல்லீர்களே) 4
பனிப் பரவித் திரை ததும்பப் பார் எல்லாம் நெடும் கடலேயான காலம் இனிக் களை கண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி முனித்தலைவன் முழங்கொளி சேர் திரு வயிற்றில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட கனிக்கவளத் திருவுருவத் தொருவனையே கழல் தொழுமா கல்லீர்களே –11-6-4
பதவுரை Show / Hide
பார் எல்லாம், Paar Ellam - பூமியடங்கலும்
பனி பாவை, Pani Paavai - குளிர்ந்துபரந்திருக்கிற
திரை, Thirai - அலைகளானவை
ததும்ப, Thadumba - எறியும்படி
நெடுங்கடலே ஆன சாலம், Nedungadale Aana Saalam - மஹாப்ரளய வெள்ளமே பரந்தபோது
இவர்க்கு, Ivarkku - இவ்வுலகத்தார்க்கு
இனி, Ini - இனிமேல்
களை கண் இல்லை என்று, Kalai Kan Illai Endru - ரக்ஷகராவார் ஆருமில்லை என்று
உலகம் ஏழினையும், Ulagam Ezhinaiyum - உலகங்களெல்லாவற்றையும்
ஊழில் வாங்கி, Oozhil Vaangi - முறையாலே வாங்கி
முழங்கு ஒலி சேர் திருவயிற்றில் வைத்து, Muzhangu Oli Seer Thiruvayittril Vaiththu - மஹாகோஷம் நிரம்பிய திருவயிற்றினுள் வைத்து
உம்மை, Ummmai - உங்களை
உய்யக் கொண்ட, Uyya Konda - உஜ்ஜீவிப்பித்தருளினவனும்
முனி தலைவன், Muni Thalaivan - ஸாத்விகர்களில் தலைவனும்
கனி களவம் திரு உருவத்து ஒருவனையே, Kani Kalavam Thiru Uruvaththu Oruvanaiye - கனிந்த களாப்பழம் போன்ற திருவுருவத்தை யுடையனுமான ஒரு பெருமானையே
கழல் தொழும் ஆ, Kazhal Thozhum Aa - திருவடிதொழும்படியை
கல்லீர்களே, Kalleergale - கற்கமாட்டீர்களோ?
2006பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சைதன்யம் உண்டாகில் வரையாதே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து அத்தாலே ப்ரஹ்மாதிகளுக்கு நிர்வாஹகனாய் – அளவுடையவனாய் இருந்துள்ளவனுடைய பெயரான திரு நாமங்களையே பேசீர்களே) 5
பாராரும் காணாமே பரவை மா நெடும் கடலேயான காலம் ஆரானும் அவனுடைய திரு வயிற்றில் நெடும் காலம் கிடந்தது உள்ளத்து ஓராத உனர்விலீர் உணருதிரேல் உலகளந்த உம்பர் கோமான் பேராளான் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே –11-6-5
பதவுரை Show / Hide
பார், Paar - பூமியிலே (- (நீங்கள்))
ஆரம் காணாமே, Aaram Kaanamae - ஒருவரையும் காணவொண்ணாதபடி
பாவை மாநெடு கடலே ஆன காலம், Paavai Maanedu Kadaley Aana Kaalam - பரந்திருந்துள்ள மஹா ப்ரளய வெள்ளமேயான சமயத்தில்
ஆரானும், Aaranum - எவரும்
அவனுடைய திருவயிற்றில், Avanudaiya Thiruvayittril - அப்பெருமானுடைய திருவயிற்றில்
நெடுங்காலம் கிடந்த்து, Nedungaalam Kidandthu - வெகுகாலம் வரையில் அடங்கியிருந்ததை
உள்ளத்து, Ullathu - நெஞ்சிலே
ஓராத, Ooradha - சிந்திக்கப்பெறாத
உணர்வு இலீர், Unarvu Ilir - மூடர்களே!
உணருதிர் எல், Unaruthir El - சேதனார்களாயிருப்பீர்களாகில்
உலகு அளந்த, Ulaku Alandha - உலகங்களை யளந்தருளின
உம்பர் கோமான், Umbar Koman - நித்யஸூரிநாதனாய்
பேராளன், Peralan - பெருமைபொருந்தியவனான எம்பெருமானுடைய
பேர் ஆன, Per Aan - திருநாமங்களான
பேர்கள் ஆயிரங்களுமே, Perkal Aayirangalume - ஸஹஸ்ரநாமங்களையே
பேசீர்கள், Pesirgal - பேசுங்கள்
2007பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு நம்மைப் பற்றப் பாராதே புறம்பே போயிற்றன-என்று வெறுத்து போய் இருக்க – அங்கே புதுசாக இருக்கிற தேவதைகளை கொண்டாடுகிற தொண்டீர் – அசேதனமாய் இருப்பது ஒன்றை வெந்நீர் ஆட்டுதிரோ – செய்ய மாட்டாத கிருபை அற்றீரே) 6
பேயிருக்கு நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீதோடிப் பெருகு காலம் தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான் போயிருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற தாயிருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே –11-6-6
பதவுரை Show / Hide
பேய் இருக்கும், Pei Irukkum - (மனிசரொருவருமில்லாதபடி) பேய் பிசாசுகளேயிருக்க வேண்டும்படியான
நெடு வெள்ளம், Nedu Vellam - மஹாப்ரளய வெள்ளமானது
பெரு விசும்பின்மீது ஓடி, Peru Visumbinmidhu Odi - ஆகாசத்தின்மேல் வழிந்தோடி
பெருகுகாலம், Perugukalam - பிரவஹித்த காலத்திலே
தாய் இருக்கும் வண்ணமே, Thai Irukkum Vanname - பெற்றதாய்போல(ப்பரிந்து)
உம்மை, Ummmai - உங்களை
தன் வயிறு, Than Vayiru - தன் திருவயிற்றிலே
இருத்தி, Iruththi - இருக்கவைத்து
உய்யக்கொண்டான், Uyyaikkondan - உஜ்ஜீவிப்பித்தருளின பெருமான்
போயிருக்க, Poyirukka - வெறுக்கும்படியாக
இங்கு, Ingu - இங்கே
மற்று ஓர் புதுதெய்வம், Mattru Or Puthudeivam - மற்றொரு க்ஷுத்ரதேவதையை
கொண்டாடும், Kondaatum - கொண்டாடுகிற
தொண்டீர், Thondeer - தொண்டர்களே!
2008பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கிருபை பண்ணி சந்நிஹிதனாய்க் கொண்டு ஸ்ரீ திருக் கண்ணமங்கைக்கு நிர்வாஹகன் ஆனவனுடைய திருவடிகளைப் பேணி –அவனை ஹிருதயத்தில் எண்ணாத மனுஷ்யரை – பகவத் ஜ்ஞானமும் வேண்டா –வைஷ்ணவ சஹ வாசமும் வேண்டா-அவைஷ்ணவர்களை நினையாத போது – இனிது என்கை) 7
மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம் உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடியவனை உள்ளத்து எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே –11-6-7
பதவுரை Show / Hide
மண் நாடும், Man Naadum - பூலோகமும்
விண் நாடும், Vin Naadum - சுவர்க்கமும்
வானவரும், Vaanavarum - தேவர்களும்
தானவரும், Thaanavarum - அசுரர்களும்
மறறும் எல்லாம், Mararum Ellam - மற்றுமுண்டான பொருள்களுமெல்லாம்
உண்ணாத, Unnaadha - தகைய வொண்ணாத
பெரு வெள்ளம், Peru Vellam - மஹாப்ரவாஹம்
உண்ணால், Unnaal - (உலகத்தை) விழுங்காதபடி
தான் விழுங்கி உய்யக் கொண்ட, Thaan Vizhunki Uyyak Konda - தான் திருவயிற்றிலே  வைத்து நோக்கி
கண்ணாளன், Kannaanalan - பரமதயாளுவும்
கண்ணமங்கை நகராளன், Kannamangai Nagaralan - திருக்கண்ணமங்கைத் தலத்திற்குத் தலைவனுமான எம்பெருமானுடைய
கழல், Kazhal - திருவடிகளை
சூடி, Soodi - சிரமேற்புனைந்து
அவனை, Avanai - அப்பெருமான்
உள்ளது, Ulladhu - நெஞ்சிலே
எண்ணாத, Ennaadha - சிந்திக்கமாட்டாத
மானிடத்தை, Maanidaththai - மனிசர்களை
எண்ணாத போது எல்லாம், Ennaadha Podhu Ellam - நினைக்கப்பெறாதகால மெல்லாம்
இனிய ஆறே, Iniya Aare - எமக்கு இனிதாகச் செல்லும் விதம் என்னே!
2009பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷ்யத்தின் அளவில்லாத ரஷண தர்மத்தாலே விஞ்சின திரு வயிற்றின் உடைய உள்ளே வைத்து உம்மை உய்யக் கொண்ட –கறுத்து இருந்துள்ள தேஜஸ்சை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை நினையாதார் தண்ணியவர்கள்) 8
மறம் கிளர்ந்து கரும் கடல் நீர் உரந்துரந்து பரந்தேறி யண்டத்தப்பால் புறம் கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம் ஏழினையும் ஊழில் வாங்கி அறம் கிளர்ந்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட நிறம் கிளர்ந்த கருஞ்சோதி நெடும் தகையை நினையாதார் நீசர் தாமே –11-6-8
பதவுரை Show / Hide
மறம் கிளர்ந்த, Maram Kilarndha - கொடுமைபொருந்திய
கருங்கடல் நீர், Karungadal Neer - கருங்கடலின் வெள்ளமானது
உரம், Uram - வேகத்தோடு
துரந்து, Thurandhu - ஓடி
பரந்து, Parandhu - சுற்றும்பரம்பி
அண்டத்து அப்பால் புறம், Andhatthu Appaal Puram - அண்டகடாஹத்திற்கு அவ்வருகாக
ஏறி, Eri - வியாபித்து
கிளர்ந்த காலத்து, Kilarndha Kaalaththu - விரும்பத்தக்க
உலகம் ஏழினையும், Ulagam Ezhinaiyum - உலகங்களை யெல்லாம்
ஊழில், Oozhil - முறைமையாலே
வாங்கி, Vaangi - வாரிப்பிடித்து
அறம் கிளர்ந்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து, Aram Kilarndha Thiru Vayittrin Akampadithil Vaiththu - தருமம் விஞ்சின திருவயிறினுட்புறத்திலே வைத்து
உம்மை, Ummmai - உங்களை
உய்யக்கொண்ட, Uyyaakkonda - உஜ்ஜீவிப்பித்த
கரு நிறம் கிளர்ந்த, Karuniram Kilarndha - கருமை மிக்கிருந்துள்ள
சோதி, Sothi - தேஜஸ்ஸையுடைய
நெடுந் தகையை, Nedun Thakaiya - ஸர்வேச்வரனை
நினையாதார் தாம், Ninaiyaadhar Thaam - சிந்திக்கப்பெறாதவர்க்ள
நீசர், Neesar - இழிகுலத்தவரேயாவர்
2010பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரளயம் தேடுகின்றது என்று இளைத்துக் காட்டி அல்லாத அவயவத்தோடு ஒத்த திரு வயிற்றின் உள்ளே வைத்து உம்மை உய்யக் கொண்ட –மேகம் போலே உதாரனான கையை உடையனாய் மணி போலே ஸ்ரமஹரமான நிறத்தை உடையவன் ஸ்ரமஹரமான ஸ்ரீ திருக் குடைந்தையை பாடி ஆடீர்களே) 9
அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர்த் திரை ததும்ப ஆவா வென்று தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தான் அருளி உலகம் ஏழும் உண்டு ஒத்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட கொண்டற் கைம் மணி வண்ணன் தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே –11-6-9
பதவுரை Show / Hide
அண்டத்தின் முகடு, Andaththin Mugadu - அண்டபித்தியானது
அழுந்த, Azhundha - உள்ளே அழுந்தும்படியாக
அலை முந்நீர், Alai Munneer - அலைக்கின்ற கடலினுடைய
திரை, Thirai - அலைகளானவை
ததும்ப, Thadumba - செறிய
ஆ ஆ என்று, Aa Aa Endru - ஐயோவென்று
தொண்டர்க்கும், Thondarkkum - பக்தர்களுக்கும்
அமரர்களுக்கும், Amarararkkum - தேவர்களுக்கும்
முனிவர்க்கும், Munivarkkum - ரிஷிகளுக்கும்
தான் அருளி, Thaan Aruli - தான் கிருபைசெய்து
உலகம் ஏழும் உண்டு, Ulagam Ezham Undu - உலகங்களையெல்லாம் அமுது செய்தவிடத்திலும்
ஒத்த, Oththa - முன்போலவே யிருக்கப்பெற்ற
திருவயிற்றின் அகம்படியில் வைத்து, Thiruvayittrin Akampadiyil Vaiththu - திருவயிற்றினுட்புறத்திலே வைத்து
உம்மை, Ummmai - உங்களை
உய்யக்கொண்ட, Uyyaakkonda - உஜ்ஜீவிப்பித்தருளின
கொண்டல் கை, Kondal Kai - மேகம்போல் உதாரனாய்
மணி வண்ணன், Mani Vannan - நீலமணி நிறத்தனான பெருமானுடைய
தண் குடந்தை நகர், Than Kudanthai Nagar - திருக்குடந்தைப் பதியை
பாடி, Paadi - பாடிக்கொண்டு
ஆடீர்கள், Aadeergal - நர்த்தனம் செய்யுங்கோள்
2011பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பாட்டுக்கு இதையே பொருள் திரண்டு பரந்த சோலைகள் உடைய ஸ்ரீ திரு மங்கைக்கு நிர்வாஹகர் அறிந்து உரைத்தார் – இதையே பொருள் -ஸ்ரீ த்வயத்தின் க்ரமத்திலே பல சுருதி அருளுகிறார் – சூழ் புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் -என்றும் குடந்தையே தொழுமின் என்றும் –உபக்ரமித்து – தண் குடந்தை பாடி ஆடீர்களே என்று உபதேசித்துத் தலைக் கட்டுகிறார்) 10
தேவரையும் அசுரர்களையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும் யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை கற்று வல்லார் பூவளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே –11-6-10
பதவுரை Show / Hide
தேவரையும், Thevaraiyum - தேவர்களையும்
அசுரரையும், Asuraraiyum - அசுரர்களையும்
திசைகளையும், Thisaigalaiyum - திருக்குக்களையும்
கடல்களையும், Kadalgalaiyum - ஸப்த ஸாகரங்களையும்
முற்றும் முற்றும் யாவரையும் ஒழியாமே, Mutrum Mutrum Yaavaraiyum Ozhiyamae - மற்றுமுள்ள எல்லாவற்றையும் ஒன்று தப்பாமல்
எம் பெருமான் உண்டு உமிழ்ந்த்து, Em Perumaan Undu Umizhndhu - எம்பெருமான் (பிரளய காலத்தில்) திருவயிற்றிலேவைத்து (ப்பின்பு) வெளிப்படுத்தியதை
அறிந்து, Arindhu - உள்ளபடியறிந்து
சொன்ன, Sonna - அருளிச்செய்த
கா வளரும் பொழில் மங்கை, Kaa Valarum Pozhil Mangai - பூந்தோட்டங் வளரப்பெற்ற சோலைகளை யுடையவருமங்கை நாட்டுத் தலைவரான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வாருடைய
ஒலி மாலை, Oli Maalai - சொல்மாலையாகிற இத்திருமொழியை
கற்று வல்லார் தாம், Kattru Vallar Thaam - ஓதி உணரவல்லவர்கள்
பூவளரும் திரு மகளால் அருள் பெற்று, Poovalarum Thiru Magalal Arul Petru - தாமரைப்பூவில் வளர்கின்ற பெரிய பிராட்டியாராலே அருள்செய்யப்பெற்று
பொன் உலகில், Pon Ulavil - நித்ய விபூதியிலே
பொலிவர், Polivar - விளங்கப்பெறுவர்கள்
2012பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அமுதம் கொண்டுகந்த- பிறருக்கு உபகரித்தானாய் இராதே தன் பேறாக உகந்தான் – இப்படிச் செய்கிறது -உடையவன் ஆகையாலே – பூணார மார்வனைப்-இவர் தம்முடைய -அம்ருதம் –சர்வாபரண பூஷிதனாய் பெரிய திருவடி தோளில் இருந்த இருப்பு – ஒரு பொன் மலை மேலே ஒரு பொன் மலை இருந்தாப் போலே – இதுக்கு முன்பு கண்டவை என்றும் கண் அல்ல –ஷேபமாகக் கண்டோமே -என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
நீணாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப் பேணான் கடைந்து அமுதம் கொண்டுகந்த பெம்மானைப் பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையைக் காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே –11-7-1
பதவுரை Show / Hide
நீள் நாகம், Neel Naagam - நீண்ட வாஸுகி நாகத்தை
சுற்றி, Suttri - (கடைகயிறாகச்) சுற்றி
நெடு வரை, Nedu Varai - பெரிய (மந்தர) மலையை
நட்டு, Nattu - (மத்தாக) நாட்டி
ஆழ் கடலை, Aaz Kadhalai - ஆழ்ந்த கடலை
பேணான், Penaan - மதியாதவனாகி
கடைந்து, Kadaindhu - கடைந்து
அமுதம், Amudham - அம்ருத்த்தை
கொண்டு, Kondhu - தேவர்கட்கு எடுத்துத்தந்து
உகந்த, Ugantha - திருவுள்ளமுவந்த
பெம்மானை, Pemmanaai - பெருமானும்,
ஆரம் பூண் மார்வனை, Aaram Poon Maarvanai - ஹாரங்களையணிந்த திருமார்பையுடையனும்
புள் ஊரும், Pul Oorum - பெரிய திருவடியை ஏறிச்செலுத்துகின்ற
பொன்மலையை, Ponmalaiyai - பொன் மலைபோன்றவனுமான ஸர்வேச்வரனை
காணாதார், Kaanadhaarkal - ஸேவிக்கப் பெறாதவர்களுடைய
கண், Kan - கண்களானவை
என்றும், Endrum - ஒருநாளும்
கண் அல்ல, Kan Alla - கண்களே அல்ல
கண்டாம், Kandam - (இதைநாம் நன்கு) அறிவோம்
2013பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு –இரண்டாம் திருவந்தாதி -என்று ஆஸ்ரிதர் ஈடுபட்டு நெஞ்சிலே எப்போதும் அனுபவித்து இருக்குமவனுடைய கீர்த்தி கேட்க வென்றால் கேளோம் என்னுமவர் செவி -செவி அல்ல – கேட்டோமே –ஷேபம்) 2
நீள் வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண் தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானை கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே –11-7-2
பதவுரை Show / Hide
நீள்வான், Neelvaan - நீண்டு வளர்வதற்காக
குறள் உரு ஆய், Kural Uru Aay - வாமநலேஷதாரியாய்
நின்று, Ninru - (யஜ்ஞசாலையிலேவந்து) நின்று
மாவலி, Mavali - மஹாபலியினிடத்தில்
மண், Man - (மூவடி) மண்ணை
இரந்து, Irantu - யாசித்து
தாளால், Thaalal - திருவடிகளாலே
அளவு இடம், Alavu Idam - அளந்து கொண்டவனும்
தக்கணைக்கு மிக்கானை, Thakkanaiyku Mikkaanai - அக்ரதாம்பலமளிப்பதற்குச் சிறந்தவனும்
தோளத மா மணியை, Tholadha Maa Maniyai - துளைபட்டு ஒளிமழுங்காத நீலமணி போன்றவனும்
தொண்டர்க்கு இனியானை, Thondarkku Iniyanai - பக்தர்களுக்குப் போக்யனுமான எம்பெருமானை
கேளா, Kela - கேட்கப்பெறாத
செவிகள், Sevigal - காதுகள்
செவி அல்ல, Sevi Alla - காதுகளேயல்ல
கேட்டோம், Kettom - (இதை நாம் பெரியோரிடத்துக்) கேட்டிருக்கின்றோம்.
2014பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ் இரண்டு பாட்டாலே ஞாநேந்த்ரியன்களை நிரசித்த்தார் இனி மூன்று பாட்டாலே கர்மேந்திரியங்களை நிரசிக்கிறார் – இதில் அவனுடைய கீர்த்திகளை ஒழிய பேசுமவை கடலோசை பேச்சாய் இருக்கச் செய்தேயும் – அர்த்தம் இன்றிக்கே இருக்கிறாப் போலே – கேட்டுத் திரிகிறிகோள் இறே -என்று ஷேபம்) 3
தூயானைத் தூய மறையானைத் தென்னாலி மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட வாயானை மாலை வணங்கி யவன் பெருமை பேசாதார் பேச்சு என்றும் பேச்சல்ல கேட்டாமே –11-7-3
பதவுரை Show / Hide
துயானை, Thuyanaik - பரமபவித்திரனும்
தூய மறையானை, Thuya Maraiyanai - பரிசுத்தமான வேதங்களினால் பிரதிபாதிக்கப்படுபவனும்
தென் ஆலி மேயானை, Then Aali Meyaanai - அழகிய திருவாலிப்பதியிலே பொருந்தி வாழ்பவனும்
மேவாள் உயிர் உண்டு அமுது உண்டவாயானை, Mevaal Uyir Undu Amuthu Undavayanai - பொருத்தமற்றவளான பூதனையினுடைய உயிரை உறிஞ்சியுண்டு (அந்த விஷத்திற்குமாற்றாகத் தாயின்) முலைப்பாலமுதை உண்ட வாயையுடையவனுமான
மாலை, Malai - திருமாலை
வணங்கி, Vanangi - அடிபணிந்து
அவன், Avan - அப்பெருமானுடைய
பெருமை, Perumai - பெருமேன்மையை
பேசாதார், Pesathar - பேசப்பெறாதவர்களுடைய
பேச்சு, Peetchu - பேச்சுக்களானவை
என்றும், Endrum - ஒருகாலும்
பேச்சு அல்ல, Peetchu Alla - பேச்சுக்களாகமாட்டா
கேட்டோம், Kettom - (இதனை நாம் பெரியோர்களிடத்துக்) கேட்டிருக்கின்றோம்.
2015பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சிறுக்கனுக்கு விரோதியைப் போக்கி மாலை இட்டு இருந்தவனை –பிரேம பரவசராய் பாடும் பாட்டு அல்லது பாட்டு அல்ல) 4
கூடா விரணியனைக் கூருகிரால் மார்விடந்த ஓடா வடலரியை யும்பரார் கோமானைத் தோடார் நறுந்துழாய் மார்வனை யார்வத்தால் பாடாதார் பாட்டு என்றும் பாட்டல்ல கேட்டாமோ –11-7-4
பதவுரை Show / Hide
கூடா, Kooda - பகைவனான
இரணியனை, Iraniyanai - ஹிரண்யாஸுரனுடைய
மார்வு, Maarvu - மார்பை
கூர் உகிரால், Koora Ugral - கூர்மைபொருந்திய நகங்களாலே
இடந்த, Idantha - கீண்டருளின
ஓடா, Oda - (அவ்விரண்யனுக்குப் பின்வாங்காத
அடல், Adal - வீரம்பொருந்திய
அரியை, Ariyai - நாசிங்கமூர்த்தியானவனும்
உம்பரார் கோமானை, Umbarar Komanai - நித்யஸூரிகட்குத் தலைவனும்
தோடு ஆர் நறு துழலாய் மார்வனை, Thodu Ar Naru Thuzhalai Maarvanai - இதழ்கள் மிக்க நறுந்துளப மாலையணிந்த திருமார்பையுடையனுமான எம்பெருமானை
ஆர்வத்தால், Aarvaththal - அன்புடனே
பாடாதார், Paadathar - பாடப்பெறாதவர்களுடைய
பாட்டு, Paatu - பாட்டுக்களானவை
என்றும், Endrum - ஒருநாளும்
பாட்டு அல்ல, Paatu Alla - பாட்டுக்களாகமாட்டா
கேட்டோம், Kettom - (என்று நாம் பெரியோர்களிடத்தில்) கேட்டிருக்கிறோம்
2016பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒன்றைச் சொல்லி இன்னது உபமானம் என்ன ஒண்ணாத வடிவு – சொல்லும் இடத்தில் உபமானம் கொண்டு இழிய வேணும் – அவை தான் இதுக்குப் போராவாய் இருக்கும் – காமினிக்கு காந்தனுடைய தேஹமும் –ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லாருக்கும் படி – சங்கேந்தும் கையானைக் –தொழுகைக்கு இவன் கை போலே-தொழுவித்துக் கொள்ளுகைக்கு அவன் கை – தமச பரம -இத்யாதி – கை தொழாக் கையல்ல கண்டாமே –-தொழாக் கை கை யல்ல -என்று அந்வயம்) 5
மையார் கடலும் மணி வரையும் மா முகிலும் கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும் கையானைக் கை தொழாக் கையல்ல கண்டாமே –11-7-5
பதவுரை Show / Hide
மைஆர் கடலும், Maiar Kadalum - கருங்கடலையும்
மணிவரையும், Manivaraim - நீலமணிமயமான மலையையும்
மா முகிலும், Maa Mugilum - காளமேகத்தையும்
கொய் ஆர் குவளையும், Koyi Ar Kuvalaiyum - பறிக்கவேணுமென்று விரும்பத்தக்க நீலோற்பலத்தையும்
காயாவும், Kaayavum - காயாம்பூவையும்
போன்று, Poondru - ஒத்து
இருண்ட, Irunda - கறுத்த
மெய்யானை, Meyyanaai - திருமேனியையுடையவனும்
மெய்யம் மலையானை, Meyyam Malaiyanaai - திருமெய்யமலையில்கோயில் கொண்டிருப்பவனும்
சங்கு ஏந்தும் கையானை, Sangu Aendhum Kaianaai - திருச்சங்கை ஏந்திக்கொண்டிருக்கின்ற திருக்கையையுடையனுமான பெருமானை
தொழா, Thozha - அஞ்சலிபண்ணாத
கை, Kai - கைகளானவை
கை அல்ல, Kai Alla - கைகளேயல்ல
கண்டாம், Kandam - (இதனை நாம் நன்கு) அறிவோம்.
2017பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனுக்கு என்று இராத-ஞான இத்ரியங்கள்-கர்ம இந்த்ரியங்கள் அனைத்துக்கும் நிர்வாஹகமான மனஸ்ஸை இரண்டு பாசுரங்களால் நிரசித்து அருளுகிறார் – தான் நினைக்கும் அவை ஒழிய நினைக்குமவை ஹிருதயம் அன்று -என்கிறார் – ரத்ன பரிஷகன் கையிலே புகுந்து இவன் விலை இட்டால் இறே விலை பெறுவது) 6
கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும் முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால் புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6
பதவுரை Show / Hide
கள் ஆர், Kal Aar - தேன்பொருந்திய
துழாயும், Thuzhayum - திருத்துழாயையும்
கணவலரும், Kanavalarum - அலரியும்
கூவிளையும், Koovilaiyum - பில்வபத்திரத்தையும்
முள் ஆர், Mul Aar - முட்கள் நிரம்பிய
முளரியும், Mulariyum - தாமரைப் பூவையும்
ஆம்பலும், Aampalum - ஆம்பல் மலரையும்
முன், Mun - கண்ணெதிரில்
கண்டக்கால், Kandakkaal - பார்த்தால்
புள் ஆய் ஓர் எனம் ஆய் புக்கு இடந்தான் பொன் அடிக்கு என்று, Pul Aayi Oor Enam Aayi Pukku Idanthan Pon Adikku Endru - ஹாம்ஸரூபியாய் அவதரித்தவனும் வராஹ ரூபியாயவதரித்துப் பூமியைப் பேதித்தெடுத்தவனுமான எம்பெருமானுடைய திருவடிகளுக்கு உரியவையென்று
உள்ளாதார், Ulladhaarkal - நினையாதவர்களுடைய
உள்ளத்தை, Ullathai - நெஞ்சை
உள்ளம் ஆ கொள்ளோம், Ullam Aa Kollom - நெஞ்சாகக் கொள்ள மாட்டோம்
2018பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபமானம் இல்லை என்று பேசாதே இருக்க மாட்டாரே – திவ்ய விக்ரஹத்துக்கு உபமானம் அபூமியானால் ஆத்மா குணங்களுக்கு உள்ளுப் போகார் இறே- இனி அவனுக்கு இது சேஷம் -என்னும் இத்தை இசையும் இத்தனை – நினைவுக்கு அநதிஷ்டமான நெஞ்சு -நெஞ்சு அல்ல) 7
கனையார் கடலும் கரு விளையும் காயாவும் அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும் சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல கண்டோமே –11-7-7
பதவுரை Show / Hide
கனை ஆர் கடலும், Kanai Ar Kadhalum - ஒலிமிக்க கடலையும்
கருவிளையும், Karuvilaiyum - கருவிளைப்பூபையும்
காயாவும், Kaayavum - காயாம்பூவையும்
அனையானை, Anaiyanai - ஒத்திருக்கின்ற எம்பெருமானை
அன்பினால் ஆர்வத்தால், Anbinal Arvaththal - அன்போடும் ஆற்றாமையொடும்
சுனை அர் மலர் இட்டு, Sunai Ar Malar Ittu - தடாகங்களில் நிரம்பிய பூக்களைக் கொணர்ந்து ஸமர்ப்பித்து
தொண்டர் ஆய் நின்று, Thondar Aayi Nindru - தொண்டர்களாயிருந்து கொண்டு
என்றும், Endrum - எப்போதும்
நினையாதார், Ninaiyathaar - நினைக்கப்பெறாதவர்களினுடைய
நெஞ்சு, Nenju - நெஞ்சானது
என்னும், Ennum - ஒருநாளும்
நெஞ்சு அல்ல, Nenju Alla - நெஞ்சாகமாட்டாது
கண்டாம், Kandam - (இதனை நாம் நன்கு) அறிவோம்.
2019பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதர்க்கு இப்படி எளியனாய் – மேன்மையால் குறையற்று சிவந்த கண்களை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை – நினைத்து அறியாதவர்கள் –இங்குத்தை எளிமையும் மேன்மையும்-இரண்டையும் அறியாதவர்கள்) 8
வெறியார் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த உறியார் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட சிறியானைச் செங்கண் நெடியானைச் சிந்தித்து அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமோ –11-7-8
பதவுரை Show / Hide
வெறி ஆர், Veri Ar - பரிமளம் மிக்க
கரு கூந்தல், Karuk Koondhal - கரிய கூந்தலையுடைய
ஆய்ச்சியர், Aaychiyar - இடைச்சிகளாலே
வைத்த, Vaiththa - சேமித்துவைக்கப்பட்டதாய்
உறி ஆர், Uri Aar - உறிகளிலே பொருந்தியதாய்
நறு, Naru - மணம்மிக்கதான
வெண்ணெய், Vennaiy - வெண்ணெயை
தான் உகந்து உண்ட, Thaan Ugandhu Unda - தான் விரும்பி யமுதுசெய்த
சிறியானை, Siriya Anai - சிறியவனும்
செம் கண், Sem Kan - சிவந்த திருக்கண்களையுடையனுமான
நெடியானை, Nediyaanai - ஸர்வேச்வரனை
சிந்தித்து அறியாதார், Sindhiththu Ariyathaar - நெஞ்சாலும் நினைத்தறியாதவர்கள்
என்றும், Endrum - எப்போதும்
அறியாதார், Ariyathaar - அவிவேகிகளேயாவர்
கண்டாம், Kandam - நன்கு அறிவோம்
2020பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் தன்னைப் பேணாது ஒழிய தங்களைப் பேணித் திரியுமவர்கள மானிடவர் அல்லர் – பிரித்து அவயவங்களைச் சொல்லுகிறது என் – கட்டடங்க மனுஷ்யர் அல்லர் – என்று என் மனத்தே வைத்தேனே –ஸ்ரீ சர்வேஸ்வரன் குற்றங்களும் பொறுக்கும் இறே – அவன் கழித்த வன்றும் கிருபை பண்ணுமவர் இறே ஸ்ரீ ஆழ்வார் இருவரும் அகப்பட கை விடும்படி யானார்கள் – மித்ர பௌ பிகம் கர்த்தும் -என்னும் அவளிலும் இவருக்கு வாசி உண்டு – தலை தான் போனது அவனுக்கு ஸ்வரூபம் நசிக்கும் இவனுக்கு) 9
தேனோடு வண்டாலும் திருமால் இருஞ்சோலை தானிடமாக்கிக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய் ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாத மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –11-7-9
பதவுரை Show / Hide
வண்டு, Vandu - வண்டுகளானவை
தேனொடு, Thenodu - வாயில் தேனோடே
ஆலும், Alum - ஆரவாரிக்கின்ற
திருமாலிருஞ் சோலை, Thirumaliruncholai - திருமாலிருஞ்சோலை மலையை
தான் இடம் ஆ கொண்டான், Thaan Idam Aa Kondaaan - தனக்கு இருப்பிடமாக அமைத்துக் கொண்டவனும்
அன்று, Anru - முன்பொருகாலத்தில்
தட, Thada - விசாலமாய்
மலர், Malar - குவளைமலர்போன்ற
கண்ணிக்காய், Kannikkai - கண்களையுடையளான நப்பின்னைப்பிராட்டிக்காக
ஆன் விடை ஏழ், Aan Vidai Ezh - ஏழுரிஷபங்களை
அடர்த்தாற்கு, Adarthaarkku - வலியடக்கின பெருமானுக்கு
ஆள் ஆனார் அல்லாதார், Aal Aanaar Alladhaar - அடிமைப்பட்டவர்கள் தவிர மற்றையோர்
மானடவர் அல்லர் என்று, Maanadavar Allar Endru - மநுஷ்யகோடியில் சேர்ந்தவர்களல்ல ரென்று
என் மனத்து, En Manathu - என்னெஞ்சிலே
வைத்தேன், Vaithen - உறுதியாகநாட்டினேன்
2021பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எல்லாரையும் ஆக்கிக் கொள்ளும் திருவடிகள் –திருவடிகளுக்கு ஆகாதார் இல்லை – இத் திருவடிகளைச் சூடும் ஸ்ரீ ஆழ்வார் –சேஷித்வத்துக்கு அவன் ஸ்ரீ திரு வாழியைப் பிடித்தால் போலே சேஷத்த்வத்துக்கு இவர் வேலைப் பிடித்த படி- முன்பே பாசுரம் இட்டுத் தந்தோம் – இனி சரீரத்தால் உள்ள விநியோகம் கொள்ளுங்கோள்) 10
மெய்நின்ற பாவம் அகலத் திருமாலைக் கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை ஐ ஒன்றும் ஐந்தும் இவை பாடி ஆடுமினே –11-7-10
பதவுரை Show / Hide
மெய்நின்ற, Mei Nindra - பிரகிருதியிலே அநுபவிக்க வேண்டிநின்ற
பாவம், Paavam - பாவங்கள்
அகல, Akala - ஒழிவதற்காக
கை நின்ற ஆழியான், Kai Nindra Azhiyan - திருக்கையில் பொருந்திய திருவாழியையுடையனான
திரு மாலை, Thiru Maalai - திருமகள் கொழுநனுடைய
சூழும் கழல், Soolum Kazhal - ஸர்வ்வ்யாபியான திருவடிகளை
சூடி, Soodi - முடிமேற்கொள்ளுமவராய்
கை நின்ற வேல் கை, Kai Nindra Vel Kai - கையும் வேற்படையுமாய் நிற்பவரான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை, Malai - சொல்மாலையாகிய
ஐ ஒன்றும் ஐந்தும் இவை, Ai Ondrum Aindhum Ivai - இப்பத்துப்பாசுரங்களையும்
பாடி, Paadi - வாயாரப்பாடி
ஆடுமின், Aadumin - நர்த்தனம் பண்ணுங்கோள்
2022பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பயத்துக்கு பரிஹாரமும்-உத்பாதகனும் -நீயாய் இருந்தாய் – அதுக்கு பய ஸ்தானம் ஆறு – உமக்கு பய ஸ்தானம் ஏது என்ன – அதுக்கு ஆறு ஓன்று-எனக்கு ஐஞ்சு ஆறு அகழ்ந்து பொகடுகிறது – அஞ்சும் ஆறும் ரசோக்தி விஷயங்கள் ஐந்தும் – தத் க்ராஹங்கள் ஆறும் கர்மேந்த்ரியங்கள் ஐந்தும் -ஜ்ஞாநேந்த்ரியங்கள் ஆறும் – ரூபத்தை சொல்லாமல் விட்டது -பயத்தாலே கண்ணாஞ்சுழலை இட்டமை தோற்றுகைக்கு – உன் பக்கல் நின்றும் அகற்றுகைக்கு பரிகரம் சப்தாதிகள் – அத்தைப் பரிஹரிக்கும் நீ பூர்ணனாய் இருந்தாய் – மமாயா துரத்தயா மாமேவ யே ப்ரபத்யந்தே –நான் பிணைத்த பிணை ஒருவராலும் அவிழ்க்கப் போகாது- என்னையே கால் கட்டி அவிட்கும் அன்று கழிக்கலாம் என்றாய் இறே ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் வார்த்தையை நினைப்பது) 1
மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று இன்னம் ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ –11-8-1
பதவுரை Show / Hide
நாற்றம் சுவை ஊறு ஒலி ஆகிய நம்பீ, Naatram Suvai Ooru Oli Agiya Nambi - கந்தம் ரஸம் ஸ்பர்சம் சப்தம் என்னும் புலன்கட்கு உரியனான எம்பெருமானே! (- (அதுயாதெனில்))
மாற்றம் உள ஆகிலும், Maatram Ula Aagilum - (நீ அடியேனை ஆட்கொண்டருளினாயில்லை என்று நான் உன் மேற் குறைகூறும் வார்த்தை கட்கெல்லாம் மாறாக (நீதானே ஆட்பட்டு உய்ந்தாயில்லை என்று என் மேற் குற்றமாக நீ) சொல்லத்தக்க வார்த்தைகள் பல உள்ளனவேயாகிலும்
சொல்லுவேன், Solluvein - (அவைநிற்க) யான் ஒன்று கூறுவேன்
மக்கள் தோற்றம் குழி இன்னம் தோற்றுவிப்பாய்கொல் என்று, Makkal Thotram Kuzhi Innam Thotruvippaaykol Endru - (உன்னைச்சரணமடையாத ஸாதாரண) மனிதர்கள் (கர்மவசத்தாற்) பிறக்குமிடமான கர்ப்பஸ்தாநத்திலே என்னை இன்னமும் பிறக்கும்படி செய்கிடுவையோ என்று கருதி
ஆற்றங்கரை வாழ் மரம் போல், Aatrangkarai Vaal Maram Pol - ஆற்றில் கரையிலேயுள்ள மரம் போன்றவனாகி
அஞ்சுகின்றேன், Anjuginren - (வரக்கடவதான அபாயத்தைக்குறித்து எப்பொழுதும்) பயப்படுகின்றேன்.
2023பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெரும் காற்றிலே அகப்பட்ட மரக் கலத்துக்கு உள்ளே சேதனர் உடைய நெஞ்சு போலே பயப் படுக்கைக்கு மேற்பட பரிஹாரத்தில் அந்வயம் இல்லை இறே அதுக்கு உட்பட்ட மனுஷ்யர் எல்லாருக்கும் உள்ள பயம் இவர் ஒருவருக்கும் உண்டாய் இருக்கிறது – மிகவும் நடுங்கா நிற்பன் -சரீர வியோக மாத்ரத்திலே இவர்களுக்கு – ஆழி வலவா –உன் கையில் திரு வாழிக்கும் எனது உள் நடுக்கத்துக்கும் சேர்த்திச் சொல்லிப் போ – உனக்கு அசக்தி உண்டு என்று சொன்னாய் ஆதல் -என் நடுக்கைத்தை பரிஹரித்தல் செய்) 2
சீற்றமுள வாகிலும் செப்புவன் மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று அஞ்சி காற்றைத் திடைப் பட்ட கலவர் மனம் போல் ஆற்றத் துளங்கா நிற்பன் ஆழி வலவா –11-8-2
பதவுரை Show / Hide
ஆழி வலவா, Aazhi Valavaa - சக்கரப்படையைப் பிரயோகித்தலில் வல்லவனே!
சீற்றம் உள ஆகிலும், Seetrum Ula Aagilum - நீ கோபிக்கும்படியான குற்றங்கள் (என்னிடம்) உள்ளனவானாலும்
செப்புவன், Seppuvan - (உன்னையன்றி எனக்கு வேறுகதியில்லை யாகையால் உன்பக்கல் என் குறையைச் சொல்லிக்கொள்வேன்
மக்கள் தோற்றம்குழி தோற்றுவிப்பாய் கொல் என்று அஞ்சி, Makkal Thotram Kuzhi Thotruvippaay Kol Endru Anji - மனிதர்கள் (கர்மாதீனமாகப்) பிறக்கும் பிறவியிலே என்னையும் புகுவிப்பையொ வென்று எண்ணி அச்சமுற்று
காற்றத்து இடைபட்ட கலவர் மனம் போல், Kaatrathu Idaipatta Kalavar Manam Pol - பெருங்காற்றில் அகப்பட்டுக் கொண்ட மரக்கலத்திலே யுள்ளாரது மனம்போல
ஆற்ற, Aatra - மிகவும்
துளங்கா நிற்பவன், Thulankaa Nirpavan - நடுங்கிநிற்பேன்
2024பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வம் சம்பந்தத்தாலே பார்த்த அன்று இறே இவ்விடம் த்யாஜ்யம் ஆவது அவன் சம்பந்தத்தை இட்டு பார்த்த போது இது தானே உத்தேச்யமாய் இருக்கும் இறே – இதில் அரை ஷணம் பொருந்தாத படியாய் இருக்கிற இவர் பாசுரத்துக்கும் இது ஒழியச் செல்லாத படியாய் இருக்கிற நம் பாசுரத்துக்கும் வாசி அறியாதான் ஒருவன் சரண்யனாகப் பெறில் நமக்கு அப் பேறு பெறலாவது-என்று அருளிச் செய்த தாமே அநந்தரம் – மித்ர பாவேன சம்ப்ராப்தம் -என்கிறபடியே இத் தலையில் உள்ளது போட்கன் ஆனாலும் நான் அவனை விடேன் -என்று அருளிச் செய்த படியால் நமக்குப் பெறுகைக்கு தட்டில்லை -என்று அருளிச் செய்து அருளினார் ஸ்ரீ நஞ்சீயர் – இது மெய்யாதல் -இல்லை யாகில்-பரிஹாரம் இன்றிக்கே போதல் -செய்யும் அத்தனை இது பொய்யாகிலும் நமக்கு அஞ்ச வேண்டா –-இத்தால் பொய்யாகாது என்ற படி – இது பொய்யாகில்-நரகாத்ய அனுபவங்களை சொல்லுகிறவையோ மெய்யாகப் புகுகிறது) 3
தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப் பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாப் போலே தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா –11-8-3
பதவுரை Show / Hide
என் தாமரை கண்ணா, En Thaamarai Kannaa - செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடைய எனது தலைவனே!
தூங்கு ஆர் பிறவிக்கள், Thoongu Aar Piravikkal - சஞ்சலம் மிக்க பிறப்புக்களிலே
இன்னம் புகபெய்து, Innam Pugapeythu - (இதுவரைபட்டது போதாமல்) இன்னமும் புகும்படி போட்டு
வாங்காய் என்று சிந்தித்து, Vaangai Endru Sindhithu - என்னை மீட்காதிருந்திடுவையோ? என்று கவலை கொண்டு
நான் அதற்கு அஞ்சி, Naan Atharku Anji - நான் அப்பிறவித்துன்பத்திற்கு அச்சமுறுதலால்
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாப்போல், Pambodu Oru Kooraivile Payinraappol - பாம்பினுடனே ஒருவீட்டிலே பழகி வசிப்பதுபோல
தாங்காது உள்ளம் தள்ளும், Thaangadhu Ullam Thallum - (பல பொல்லாங்குகட்கு இடமான உடலோடுகூடி வாழ்தலைப்) பெறாமல் என்மனம் தடுமாறுகின்றது.
2025பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இரண்டு தலையும் நெருப்பு பற்றி எரியா நிற்க நடுவே அகப்பட்டு நோவு படுகிற ஷூத்ர பதார்த்தம் போலே யாயிற்று ஜன்ம மரணங்கள் இரண்டிலும் அகப்பட்டு நோவு படுகிற படி – பிரளயத்தில் அகப்பட்டு அழிந்து போகப் புக்கதை எடுத்து ரஷித்தவன் அன்றோ) 4
உருவார் பிறவிக்குள் இன்னம் புகப் பெய்து திரிவாய் என்று சிந்தித்தி என்றதற்கு அஞ்சி இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல் உருகா நிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா –11-8-4
பதவுரை Show / Hide
ஊழி முதல்வா, Oozhi Muthalvaa - பிரளயகாலத்து (உலக முழுவதையும் வயிற்றில் வைத்துப் பாதுகாக்கிற) தலைவனே!
உரு ஆர் பிறவிக்கள், Uru Aar Piravikkal - வடிவமைந்த பிறப்புக்களிலே
இன்னம் புக பெய்து, Innam Puga Peythu - இன்னமும் (என்னைப்) பிரவேசிப்பது
திரிவாய் என்று சிந்தித்தி என்று, Thirivaai Endru Sindhiththi Endru - (கருமவசத்தால்) திரியக் கடவாய் என்று (என்னைக்குறித்து நீ) திருவுள்ளங்கொள்ளுகின்றனையோ? எனறு
அற்கு அஞ்சி, Arku Anji - அப்பிறவிகளில் திரிதற்கு அஞ்சி.
இரு பாடு எரி கொள்ளியின் உள் எறும்பே போல், Iru Paadu Eri Kolliyin Ula Erumbe Pol - இரண்டு பக்கத்திலும் நெருப்புப்பற்றியெரிய அவற்றின் நடுவிலே அகப்பட்டுவருந்தும் எறும்புபோல,
என் உள்ளம் உருகாநிற்கும், En Ullam Urugaanirkkum - என்மனம் (க்லேசத்தால்) நெகிழ்ந்து உருகிக்கொண்டேயிருக்கும்.
2026பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ பரிஹரித்த பிரளய ஆபத்தின் அளவல்ல நான் நோவு படுகிற சம்சார பிரளயம் – அங்கு ஒருவருமே அபேஷியாது இருக்க பரிஹரித்தாய் இங்கு நான் அபேஷிக்க வேண்டுகிற ஹேது என்) 5
கொள்ளக் குறையாத விடும்பைக் குழியில் தள்ளிப் புகப்பெய்தி கொல் என்றதற்கு அஞ்சி வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே உள்ளம் துளங்கா நிற்பன் ஊழி முதல்வா –11-8-5
பதவுரை Show / Hide
ஊழி முதல்வா, Oozhi Muthalvaa - பிரளயகாலத்தில் அத்வி தீயனாயிருப்பவனே!
கொள்ள குறையாக இடும்பை குழியில், Kolla Kuraiyaga Idumbai Kuzhiyil - அநுபவிக்க அநுபவிக்க்க் குறையாதபடியுள்ள துன்பங்களை விளைப்பதான கர்ப்பஸ்தானத்திலே
தள்ளி புக பெய்தி கொல் என்று, Thalli Puga Peythi Kol Endru - நான் புகும்படி என்னைத்தள்ளிப் போகடுவையோ நீ என்று
அதற்கு அஞ்சி, Adharku Anji - அப்பிறவித்துயர்க்கு அஞ்சி
வெள்ளத்து இடை, Vellathu Idai - வெள்ளத்திலே
பட்ட, Patta - அகப்பட்டுவருந்துகிற
நரி இனம் போலே, Nari Inam Pole - நரிக்கூட்டம்போலே
உள்ளம் துளங்கா நிற்பன், Ullam Thulangaa Nirpan - மனம் நடுங்கிநிற்பேன்யான்
2027பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பாட்டில் அருளிச் செய்யும் போது இதுவே அமையும் என்னும் படி ஆர்த்தி தோற்ற அருளிச் செய்து அருள்வர் – நான் உன்னை அடையும் படியாக அருள வேணும் – அம்மரத்தின் உலர்ந்த அம்சமும் தன்னிலே ஒன்றிப் பச்ச்சையாம் படி பண்ண வேணும் – அது பின்னை செய்யப் போமோ என்னில் வேர் பறிந்தவையும் புகட்டிடத்தே செவ்வி பெறும்படி பண்ணும் தேசத்தில் அன்றோ நீ வர்த்திக்கிறது முதல் பறிந்ததுக்கு செவ்வி பெறுத்த வல்ல உனக்கு உள்ளத்துக்கு ஒரு பசுமை பண்ண தட்டு என் – தய நீயனான எனக்கு கொள்வர் தேட்டமான உன் அருளை அருள வேணும்) 6
படை நின்ற பைம்தாமரையோடு அணி நீலம் மடை நின்று அலரும் வயலாலி மணாளா இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே அடைய வருளாய் எனக்கு உன்தன் அருளே –11-8-6
பதவுரை Show / Hide
படை நின்ற, Padai Nindra - உழுபடையாகிய கலப்பையைக்கொண்டு உழும்போது அதில் அகப்பட்டு அழியாமல் தப்பியொதுங்கி நின்ற
பைந்தாமரையோடு, Painthaamaraiyodu - பசுமையான தாமரைக் கொடிகளும்
அணி நீலம், Ani Neelam - அழகிய நீலோற்பலக்கொடிகளும்
மடை நின்று, Madai Nindru - (பின்பு களையாகப்பறித் தெறியப்பட்டு அங்ஙனம் எறியப்பட்ட இடமான) நீர்பாயும் மடையிலேகிடந்து
அலரும், Alarum - மலரப்பெற்ற
வயல், Vayal - கழனிகளை யுடைய
ஆவி, Aavi - திருவாலியென்னுந் திருநகரியிலெழுந்தருளியிருக்கிற
மணாளா, Manala - மணவாளானென்னுந் திருநாம்முடைய எம்பெருமானெ!
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே, Idaiyan Erindha Marame Othu Irame - (ஆடுமாடுகள் எட்டித் தழைமேயலாம்படி) இடையர்கள் (விரைந்து கையிற்கத்தி கொண்டு கிளைகளை வெட்டிச் சாய்க்கப்பெற்ற மரங்கள் போல யான் ஒருபுறம் உலராதபடி.
அடைய, Adaiya - நான் உன்னையடையும்படி
எனக்கு, Enakku - எளியவனான அடியேனுக்கு
உன்தன் அருள், Unthan Arul - உனது கருணையை
அருளாய், Arulai - அருளாய்
2028பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விசத்ருச த்ருஷ்டாந்தமாய் இருந்ததீ என்ன –அந்வயம் -விச்சேதத்தைப் பொறுக்கும் வ்யதிரேகம் அப்படி விச்சேதத்தைப் பொறாது இறே-அத்தைப் பற்றச் சொல்லிற்று – உன்னைக் கொண்டு விரோதியைப் போக்கிக் கொள்ள அமையும் என்று இருப்பாருக்கு விரோதியைப் போக்கிக் கொடுப்புதி – உன்னோடு அணைய வேண்டும் என்று ஆசைப் பட்டாருக்கு நித்ய சம்ச்லேஷம் பண்ணுகைக்கு உடம்பு கொடுப்புதி – நீ வேண்டா பிரயோஜனமே அமையும் என்று இருப்பாருக்கு அத்தைக் கொடுத்து உன்னையே பெற வேணும் என்று இருப்பாருக்கு உன்னைக் கொடுப்புதி – பரஞ்சோதீ – நீ அணைக்குக்கு உடம்பைக் கொடுக்காதே-ஷயத்தை வர்த்திப்பான் ஒருவன் ஆனாலும் உன்னை விடலாயோ வடிவு அழகு இருப்பது) 7
வேம்பின் புழு வேம்பன்று உண்ணாது அடியேன் நான் பின்னும் உன் சேவடி யன்றி நயவேன் தேம்பல் இளம் திங்கள் சிறை விடுத்து ஐ வாய்ப் பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ –11-8-7
பதவுரை Show / Hide
தேம்பல், Thembal - தக்ஷமுனிவனது சாபத்தினாலுண்டான க்ஷயரோகத்தால்) உடல்தேய்ந்து மெலிந்து வருந்துதலையுடைய (- (அதுபோலவெ))
இள திங்கள், Ila Thingal - பருவம் நிரம்பாத சந்திரன
சிறை விடுத்து, Sirai Viduthu - (அந்நோயாகிய) நிறைத்துன்பத்தினின்று விடுவித்து
ஐவாய் பாம்பின் அணை பள்ளி கொண்டாய், Aivai Paambin Anai Palli Kondaai - ஐந்து தலையையுடைய ஆதிசேஷனாகிய சயனத்தில் அறிதுயில்கொண்டருள்பவனே!
பரஞ்சோதை, Paranjothai - எல்லாவொளிகளினுஞ்சிறந்த ஒளியையுடையவனெ!
வேம்பின் புழு, Vembin Puzhu - வேப்பமரத்திலுண்டான புழுவானது
வேமுபு அன்றி உண்ணாது, Vemupu Andri Unnaadhu - அம்மரத்தின் இலை முதலியவற்றைச் சுவைபட உண்ணுமேயன்றி வேறொன்றை உண்ணாது
அடியேன் நான், Adiyen Naan - உனக்கே அடிமைப்பட்டவனான நான்
பின்னும், Pinnum - நீ வெறுத்தாலும்
உன் சே அடி அன்றி நயவேன், Un Che Adi Andri Nayvaen - உனது சிவந்த திருவடிகளை யன்றி வேறொன்றை விரும்பென்.
2029பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சோகித்த அர்ஜுனனைக் குறித்து உன்னுடைய சர்வ பரங்களையும் நம் தலையிலே ஏறிட்டு நம்மையே தஞ்சமாக நினைத்து இரு –நாம் உன் விரோதிகளைப் போக்குகிறோம் மாஸூச -என்னுமா போலே நான் உஜ்ஜீவிக்கும் படி யெனக்கு ஒரு வார்த்தை யருளிச் செய்ய வேணும் – பூ வலரும் போதை விகாசம் போலே வார்த்தை அருளிச் செய்யும் போது-திருமேனியில் பிறக்கும் செவ்வி காண வாயிற்று ஆசைப் படுகிறது – ஆஸ்ரித பரதந்த்ரனாகை -வென்றால் உகப்பார் ஒருவர் ஆயிற்று) 8
அணியார் பொழில் சூழ் அரங்க நரகரப்பா துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு மணியே மணி மாணிக்கமே மது சூதா பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி –11-8-8
பதவுரை Show / Hide
அணி ஆர் பொழியல் சூழ், Ani Aar Pozhiyal Soozh - அழகுமிக்க சோலைகள் சூழப்பெற்ற
அரங்கம் நகர், Arangam Nagar - திருவரங்கமென்னுந் திருநகரத்தில் எழுந்தருளியிருக்கின்ற
அப்பா, Appa - தந்தையே!
இனி, Ini - இனிமேல்
நின் அருள் அல்லது, Nin Arul Allathu - உனது கருணையையே யன்றி மற்றொன்றை
எனக்கு துணியேன், Enakku Thuniyen - எனக்கு (த்தஞ்சமாக) நினைத்திடேன்
மணியே, Maniye - நீலமணி போன்றவடிவை யுடையவனெ!
மணி மாணிக்கமே, Mani Manikkame - சிறந்த ரத்நமான மாணிக்கம் போல மேன்மை யுடையவனே!
மதுசூதா, Madhusoodha - மதுவென்னும் அசுரனை யழிந்தவனெ!
பரம் சோதி, Param Sothi - சிறந்த வொளியை யுடையவனே!
எனக்கு உய்யும் வகை பணியாய், Enakku Uyyum Vagai Paniyai - யான் (பிறவித்துயர் தீர்ந்து பரமபதம் பெற்று) உஜ்ஜீவிக்குமாறு எனக்கு ஒரு நல்வார்த்தையருளிச் செய்யவேணும்.
2030பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பணியாய் என்றார் கீழ் பாட்டில் தத் அனுஜாநந்தம் உதார வீஷணை-என்றும் தூது செய் கண்கள் -என்ற படியும் மலர விழித்துக் கடாஷிக்க -க்ருதார்த்தராய் – சம்சார உத்தரணத்துக்கு சம்சயம் உண்டோ என்று கொண்டு உமக்குத் திரு உள்ளம் ஆனபடி என் மநோ ரதத்தை தலைக் கட்டி அருள பிரார்த்திக்கிறார் -என்று சங்கதி) 9
நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய் சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா அந்தோ அடியேற்கு அருளாய் யுன்னருளே –11-8-9
பதவுரை Show / Hide
நந்தா நரகத்து, Nandha Narakathu - அழயாத்தொரு நரகமாகிற பிறவித்துயரத்திலே
அழுந்தா வகை, Azhundha Vagai - மூழ்கிக்கிடக்க வேண்டாதபடி
நாளும், Naalum - எப்பொழுதும்
தொண்டர் ஆனவர்க்கு, Thondar Aanavarkku - உனது அடியவரானவர்களுக்கு
இன் அருள் செய்வாய், In Arul Seivai - இனிமையான கருணையைச் செய்யுமியல்வுடையவனே!
எந்தாய், Endhai - எமது தந்தையே!
சந்தோகா, Santhokha - வேதங்களையெல்லாம் அறிந்தவனே!
தலைவனெ, Thalaivaney - மேம்பட்டவனெ!
தாமரை கண்ணா, Thamarai Kanna - செந்தாமரைமலர்போன்ற திருக்கண்களை யுடையவனே!
அந்தோ, Andho - ஐயோ!
அடியெற்கு, Adiyerkku - அடியேனுக்கு
உன் அருள், Un Arul - உனது கிருபையை
அருளாய், Arulai - செய்தருள்
2031பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒன்பது பாட்டிலும் இவருக்கு ஓடின வ்யசனமும்-வாசனையோடு கழியும் படி அஹம் -என்று ரஷகனான தன்னைக் காட்டினான் – இவர் நோவு பட்ட ஒன்பது பாட்டும்-அதுக்கு பரிஹாரமாகச் சொன்ன ஒரு பாட்டையும் சொல்ல வல்லவர்களுக்கு – பதினெட்டு ஒத்திலும் சோகத்தை உபபாதித்து-மாஸூச -என்று பரிஹரித்தால் போலே யாயிற்று ஒன்பது பாட்டாலும் நோவு பட்டவர்க்கு-ஒரு பாட்டாலே நோவு பரிஹரித்த படி – சம்சாரத்துக்கு ஹேதுவான அவித்யாதிகள் கழிந்து பின்னையும்-வித்து முதல் கிடந்து அரும்புகை அன்றிக்கே இவர் தாம் -த்வத் அனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று பிரார்த்தித்த படியே சவாசனமாகக் கழியும்) 10
குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை மன்றில் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல் ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல் ஒன்றும் வினையாயின சார கில்லவே –11-8-10
பதவுரை Show / Hide
குற்றம் எடுத்து, Kutram Eduthu - (கோவர்த்தன) மலையைக் குடையாகவெடுத்துப் பிடித்து (- (அது கொண்டு பெருமழையைத் தடுத்து))
ஆ நிரை, A Nirai - பசுக்கூட்டத்தை
காத்தவன் தன்னை, Kaaththavan Thannai - பாதுகாத்தவனான எம்பெருமானைக்குறித்து
மன்றில் புகழ், Manril Pugazh - சபைகளில் புகழப்படுவராய்
மங்கை மன், Mangai Man - திருமங்கை நாட்டுக்குத் தலைவரான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்
சொல், Sol - அருளிச்செய்த
ஒன்று நின்ற ஒன்பதும், Onru Nindra Onpathum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லவர் தம் மேல், Vallavar Tham Mel - ஓதியுணர்ந்தவர்களின் மேல்
வினை ஆயின, Vinai Aayina - கருமங்கள்
என்றும், Endrum - எப்பொழுதும்
சார கில்லா, Saar Killa - அணுகிப் பயன்விளைக்கமாட்டா