திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1005 | பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கலி புருஷன் என்னைத் துன்பப்படுத்த நினைத்துத் தனக்குக் கையாட்களான இந்திரியங்களையழைத்து நீங்கள் திருமங்கை யாழ்வாரை நன்றாக ஹிம்வித்துவிடுங்கள் என்று ஏவினான் ;) 8 | ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா
பாவினாரின் சொல் பன் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-8 | பதவுரை Show / Hideகுறுங்குடி, Kurungudi - திருக்குறுங்குடியிலெழுந்தருளியிருக்கிற நெடு கடல் வண்ணா, Nedu Kadal Vanna - பெரிய கடல் போன்ற திருநிறமுடையவனே! கலியார், Kaliyar - கலிபுருஷனென்கிற ஒரு மஹாப்ரபுவானவர் நலிக என்று, Nalika Endru - “இந்தத் திருமங்கை மன்னனை ஹிம்ஸியுங்கோள்” என்று சொல்லி என் மேல், En Mel - என் மேலே ஐவர் ஏவினார், Aivar Aevinar - பஞ்சேந்திரியங்களையும் ஏவிவிட்டார்; எங்ஙனே வாழும் ஆறு, Enggane Vaalum Aaru - அந்தக் கலிபுருஷர் இனி பிழைக்க வழி ஏது? (ஏனென்னில்;) நான், Naan - அடியேன் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன், Kovinar Seyyum Kodumaiyai Madithen - குறும்பர்களான அந்த இந்திரியங்கள் செய்யத்தக்க கொடுமைகளை அப்புறப்படுத்திவிட்டேன்; என் நாவினால், En Naavinai - எனது நாவினாலே பா ஆர் இன் சொல் பல் மலர்கொண்டு, Paa Ar In Sol Pal Malarkondu - நல்ல சந்தங்கள் நிறைந்த இனிய சொற்களாகிற புஷ்பங்கள் பலவற்றையுங் கொண்டு உன் பாதமே பரவி, Un Paathame Paravi - உன் திருவடிகளையே தோத்திரஞ்செய்து பணிந்து, Panindhu - கீழே விழுந்து |