| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1007 | பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (இமையோர் நாதனாகிய இந்திரன் தனது பரிவாரங்களை யெல்லாம் அழைத்து நாம் எல்லாரும் நைமிசாரணியத்துள் சென்று எம்பெருமானை ஸேவிப்போம் வாருங்கள்;) 10 | ஏதம் வந்து அணுகா வண்ண நாம் எண்ணி எழுமினோ தொழுதும் என்று இமையோர் நாதன் வந்து இறைஞ்சும் நைமி சாரணி யத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை தான் கற்று வல்லார்கள் ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் உம்பரும் ஆகுவர் தாமே –1-6-10 | ஏதம் வந்து அணுகா வண்ணம், nan - “துக்கங்கள் நம்மிடம் வந்து சேராத வகையை நாம் எண்ணி, nan - நாம் எண்ணியிருப்போமாகில் தொழுதும் எழு மின் என்று, nan - (நைமிசாரண்யத்திலேபோய்த்) தொழுவோம் வாருங்கள்” என்று சொல்லி இமையோர் நாதன் வந்து, nan - தேவேந்திரன் வந்து இறைஞ்சும், nan - ஆச்ரயிக்கப்பெற்ற நைமிச அரணியத்து எந்தையை, nan - நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானை சிந்தையுள் வைத்து, nan - தியானம் செய்து காதல் மிகுந்த, nan - பகவத்பக்தி அதிகரிக்கப்பெற்ற கலியன், nan - திருமங்கையாழ்வார் வாய் ஒலி செய்மாலை, nan - அருளிச் செய்த இச்சொல் மாலையை கற்று வல்லுநர்கள் தாம், nan - அப்யஸித்துத் தேறினவர்கள் ஓதம்நீர் வையகம், nan - கடல் சூழ்ந்த இப்பூமண்டலத்தை வெண் குடை கீழ் ஆண்டு, nan - வெளுத்த குடை நிழலின் கீழே இருந்துகொண்டு அரசாட்சி செய்தபின்பு உம்பரும் ஆகுவர், nan - நித்யஸூரிகளோடும் சேரப்பெறுவர்கள். |