திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1008 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1008பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ் இரண்டாந் திருமொழியின் நான்காம் பாட்டின் உரையில் நரஸிம்ஹாவதார ப்ரமேயங்களை மிக்க விரிவாக வரைந்தோ மாதலால் அங்கே கண்டு கொள்வது.) 1
அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய் அவுணன் பொங்காவாகம் வள்ளு கிரால் போழ்ந்த புனிதன் இடம் பைம் கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ் செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே –1-7-1
பதவுரை Show / Hide
அங்கு, Angu - (‘நீ சொல்லுகிற விஷ்ணு இங்கில்லை’ என்று இரணியன் சபதஞ் செய்த) அவ்விடத்திலே
அம் கண் ஞாலம் அஞ்ச ஓர் ஆள் அரி ஆய், Am Kan Nyaalam Anja Oor Aal Ari Aay - அழகியதாய் விசாலமான பூமியிலுள்ளாரெல்லாரும் பயப்படும்படியான ஒப்பற்ற நரசிங்கமூர்த்தியாய் (எம்பெருமான் தோன்றினதைக் கண்டு)
அவுணன் பொங்க, Avunan Pong - இரணியன் கிளர்ந்த வளவிலே,
ஆகம், Aagam - அவனது உடலை
வள் உகிரால், Val Ukiraal - கூர்மையான நகங்களாலே
போழ்ந்த, Pozhntha - இருபிளவாகப் பிளந்த
புனிதன் இடம், Punithan Idam - பரம பரிசுத்தனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது;-
செம் கண் ஆளி, Sem Kan Aali - (சீற்றத்தால்) சிவந்த கண்களையுடைய சிங்கங்களானவை
பை கண் ஆனை கொம்பு கொண்டு, Pai Kan Aanei Kombu Kondu - பசுமையான கண்களையுடைய யானைகளின் தந்தங்களைக் கொணர்ந்து
பத்திமையால், Pathimaiyaal - பக்தியினாலே
அடி கீழ், Adi Keezh - (பகவானுடைய) திருவடிகளிலே
இட்டு, Ittu - ஸமர்ப்பித்து
இறைஞ்சும், Iraichum - ஆச்ரயிக்கப்பெற்ற
சிங்கவேள் குன்றம், Singaveal Kunram - அஹோபிலமென்கிற சிங்க வேள்குன்றமாம்.