| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1010 | பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (வடிவின் பெருமைக்குத் தகுதியாகப் பெரிய வாயையும், ஒளி பொருந்திய (அல்லது, வாள் போன்ற) கோரப்பற்களையு முடைய நரசிங்கமாகத் தோன்றி இரணியனுடைய மாம்ஸஞ் செறிந்த மார்வைப் பிளந்த பெருமான் உறையுமிடம் சிங்கவேள் குன்றம்.) 3 | ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம் ஓய்ந்த மாவுமுடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால் தேய்ந்த வேயுமல்ல தில்லாச் சிங்க வேள் குன்றமே –1-7-3 | ஏய்ந்த பேழ்வாய் வாள் எயிறு, Eyndha Pezhvai Vaal Eiyiru - (வடிவுக்குத்) தகுதியாகப் பெருத்த வாயையும் வாள் போன்ற பற்களையுடைமுடையதாய் ஓர் கோள் அரி ஆய், Oru Kola Ari Aay - ஒப்பற்றதாய் மிடுக்கையுடையதான நரசிங்கமாகி அவுணன், Avunan - இரணியாசுரனுடைய வாய்ந்த ஆகம், Vaayndha Aagam - வளர்ந்த உடலை வள் உகிரால், Val Ukiraal - கூர்மையான நகங்களாலே வகிர்ந்த, Vagirntha - கிழித்தெறிந்த அம்மானது இடம், Ammaanathu Idam - ஸ்வாமி எழுந்தருளி யிருக்கிற இடமாவது:- ஓய்ந்த மாவும், Oyndha Maavum - (கடினமான நிலங்களில் அங்குமிங்கும் திரிந்து அலைந்ததனால்) களைத்துப்போன மிருகங்களும் உடைந்த குன்றும், Udaindha Kunrum - உடைந்துபோன சிறு மலைகளும் அன்றியும், Andriyum - இன்னமும் நின்று அழலால் தேய்ந்த வேயும் அல்லது, Ninru Azhalal Theyndha Veyum Allathu - இருந்தபடியே நெருப்பாலே குறைகொள்ளியாய்க் கிடக்கிற மூங்கிலும் ஆகிய இவைகள் தவிர இல்லா, Illaa - வேறொன்றுமில்லாத |