Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1010 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1010பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (வடிவின் பெருமைக்குத் தகுதியாகப் பெரிய வாயையும், ஒளி பொருந்திய (அல்லது, வாள் போன்ற) கோரப்பற்களையு முடைய நரசிங்கமாகத் தோன்றி இரணியனுடைய மாம்ஸஞ் செறிந்த மார்வைப் பிளந்த பெருமான் உறையுமிடம் சிங்கவேள் குன்றம்.) 3
ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
ஓய்ந்த மாவுமுடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால்
தேய்ந்த வேயுமல்ல தில்லாச் சிங்க வேள் குன்றமே –1-7-3
ஏய்ந்த பேழ்வாய் வாள் எயிறு, Eyndha Pezhvai Vaal Eiyiru - (வடிவுக்குத்) தகுதியாகப் பெருத்த வாயையும் வாள் போன்ற பற்களையுடைமுடையதாய்
ஓர் கோள் அரி ஆய், Oru Kola Ari Aay - ஒப்பற்றதாய் மிடுக்கையுடையதான நரசிங்கமாகி
அவுணன், Avunan - இரணியாசுரனுடைய
வாய்ந்த ஆகம், Vaayndha Aagam - வளர்ந்த உடலை
வள் உகிரால், Val Ukiraal - கூர்மையான நகங்களாலே
வகிர்ந்த, Vagirntha - கிழித்தெறிந்த
அம்மானது இடம், Ammaanathu Idam - ஸ்வாமி எழுந்தருளி யிருக்கிற இடமாவது:-
ஓய்ந்த மாவும், Oyndha Maavum - (கடினமான நிலங்களில் அங்குமிங்கும் திரிந்து அலைந்ததனால்) களைத்துப்போன மிருகங்களும்
உடைந்த குன்றும், Udaindha Kunrum - உடைந்துபோன சிறு மலைகளும்
அன்றியும், Andriyum - இன்னமும்
நின்று அழலால் தேய்ந்த வேயும் அல்லது, Ninru Azhalal Theyndha Veyum Allathu - இருந்தபடியே நெருப்பாலே குறைகொள்ளியாய்க் கிடக்கிற மூங்கிலும் ஆகிய இவைகள் தவிர
இல்லா, Illaa - வேறொன்றுமில்லாத