திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1011 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1011பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கையும் வேலுமாயிருக்கிற விருப்பைக் கண்ட காட்சியிலே எல்லாரையும் துக்கப்படுத்தவல்லவனான இரணியனுடைய உயிரைக் கவர்ந்து அவனது மார்வைப் பிளந்தருளின பெருமான் உறையுமிடமாவது சிங்கவேழ்குன்றம்.) 4
எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் எதலனின் இன்னுயிரை வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம் கவ்வு நாயும் கழுகும் உச்சிப் போதொடு கால் சுழன்று தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே –1-7-4
பதவுரை Show / Hide
எவ்வம் வெம்வேல், Evvam Vemveel - துன்பத்தை விளைப்பதாய் தீக்ஷ்ணமான வேலாயுதத்தையுடையனாய்
ஏதலன், Aethalan - பாகவத விரோதியான
பொன் பெயரோன், Pon Peyaron - இரணியனுடைய
இன் உயிரை, In Uyirai - இனிமையான பிரானணை
வவ்வி, Vavvi - அபஹரித்து
ஆகம், Aagam - (அவனுடைய) சரீரத்தை
வள் உகிரால், Val Ukiraal - கூர்மையான நகங்களாலே
வகிர்ந்த அம்மானது இடம், Vagirntha Ammanathu Idam - கிழித்தெறிந்த பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது:-
கவ்வும் நாயும், Kavvum Nayum - (கண்டவர்களை) யெல்லாம் கவர்கின்ற நாய்களும்
கழுகும், Kazhugum - கழுகுகளும் (நிறைந்திருப்பதனாலும்)
உச்சிப் போ தொடு கால் சுழன்று, Uchchi Po Thodu Kaal Suzhndru - கொழுத்த வெய்யிலும் சுழல்காற்றும் எப்போது மிருப்பதனாலும்
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா, Deivam Allal Chella Onna - தேவதைகள் தவிர மற்றையோர் சென்று கிட்ட  முடியாததான