திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1020 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1020பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சயனித்தருளும்படியையும் நின்றருளும்படியையும் கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்தார்; நடந்தருளும்படியை இப்பாட்டில் அநுஸந்திக்கிறார்.) 3
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான் கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-3
பதவுரை Show / Hide
நின்ற, Nindra - பேராமல் நின்று கொண்டிருந்த
மா மருது, Maa Maruthu - பெரிய மருதமரங்களிரண்டும்
இற்று வீழ, Itru Veela - முறிந்து விழும்படியாக
நடந்த, Nadanda - நடைகற்ற
நின்மலன், Ninmalan - நிர்மலனும்,
நேமியான், Nemiyan - திருவாழியை யுடையவனும்,
என்றும், Endrum - எப்போதும்
வானவர், Vaanavar - நித்யஸூரிகள்
கை தொழும், Kai Thozum - ஸேவிக்கப்பெற்ற
தாமரை அடி இணை எம்பிரான், Thamarai Adi Inai Empran - இரண்டு திருவடித் தாமரைகளை யுடைய ஸ்வாமியும்,
கன்றி, Kandri - (இந்திரன்) கோபங்கொண்டு
மாரி, Maari - மழையை
பொழிந்திட, Pozhindida - பெய்வித்தவளவிலே
ஆ நிரைக்கு, A Niraikku - பசுக்கூட்டங்களுக்கு
இடர்நீக்குவான், Idarnikkuvan - துன்பம் தொலைப்பதற்காக
சென்று, Sendru - போய்
குன்றம் எடுத்தவன், Kundram Eduththavan - கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்தவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற