| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1024 | பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (பிருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூத ஸ்வரூபியாக நிற்பவன் என்று சொன்னது-ஸகல லோகங்களும் தானிட்ட வழக்கா யிருக்குமவன் என்றபடி.) 7 | பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமுமிவை யாயினான் பேருமாயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம் காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோருமா முகில் தோய் தர சேரும்வார் பொழில் சூழ் எழில் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-7 | பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினான், Paarum Neer Eri Kaatrinodu Aakachamum Ivai Aayinaan - பூமி ஜலம் தேஜஸ் வாயு ஆகாசம் என்கிற பஞ்சபூத ஸ்வரூபியானவனும் ஆயிரம் பேரும் பேச நின்ற, Aayiram Perum Pesa Nindra - ஸஹஸ்ர நாமங்களாலும் பிரதி பாதிக்கப்படா நிற்பவனும் பிறப்பு இலி, Pirappu Ili - (கருமமடியாகப்) பிறத்தல் இல்லாதவனுமான எம்பெருமான் பெருகும் இடம், Perugum Idam - வளருகிற இடமானதும்,- நீள் விசும்பிடை, Neel Visumbidai - பெரிய ஆகாசத்தினின்றும் காரும் வார் பனி, Kaarum Vaar Pani - மழைநீரும் மிக்க பனித்துளியும் சோரும், Soorum - பெய்யப்பெற்றதும் மாமுகில் தோய்தர, Maamugil Thoythara - (மேலுள்ள) காள மேகங்கள் வந்து படியும்படியாக சேரும், Serum - பொருத்தமான வார், Vaar - உயரவோங்கியிருக்கிற பொழில், Pozhil - சோலைகளாலே சூழ், Sool - சூழப்பெற்றதும் எழில், Ezhil - அழகியதுமான |