Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1024 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1024பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (பிருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூத ஸ்வரூபியாக நிற்பவன் என்று சொன்னது-ஸகல லோகங்களும் தானிட்ட வழக்கா யிருக்குமவன் என்றபடி.) 7
பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமுமிவை யாயினான்
பேருமாயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம்
காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோருமா முகில் தோய் தர
சேரும்வார் பொழில் சூழ் எழில் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-7
பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினான், Paarum Neer Eri Kaatrinodu Aakachamum Ivai Aayinaan - பூமி ஜலம் தேஜஸ் வாயு ஆகாசம் என்கிற பஞ்சபூத ஸ்வரூபியானவனும்
ஆயிரம் பேரும் பேச நின்ற, Aayiram Perum Pesa Nindra - ஸஹஸ்ர நாமங்களாலும் பிரதி பாதிக்கப்படா நிற்பவனும்
பிறப்பு இலி, Pirappu Ili - (கருமமடியாகப்) பிறத்தல் இல்லாதவனுமான எம்பெருமான்
பெருகும் இடம், Perugum Idam - வளருகிற இடமானதும்,-
நீள் விசும்பிடை, Neel Visumbidai - பெரிய ஆகாசத்தினின்றும்
காரும் வார் பனி, Kaarum Vaar Pani - மழைநீரும் மிக்க பனித்துளியும்
சோரும், Soorum - பெய்யப்பெற்றதும்
மாமுகில் தோய்தர, Maamugil Thoythara - (மேலுள்ள) காள மேகங்கள் வந்து படியும்படியாக
சேரும், Serum - பொருத்தமான
வார், Vaar - உயரவோங்கியிருக்கிற
பொழில், Pozhil - சோலைகளாலே
சூழ், Sool - சூழப்பெற்றதும்
எழில், Ezhil - அழகியதுமான