திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1030 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1030பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜீவஹிம்சை பண்ணிப் போந்த குற்றங்களையும் பொறுத்தருளவேணுமென்று சரணம் புகுகிறார்.) 3
கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோளொன்றி லாமையினால் என்றேனும் இரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன் குன்றேய் மேக மதிர்  குளிர் மா மலை வேங்கடவா அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-3
பதவுரை Show / Hide
குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா, Kundru Aey Megam Adhir Kulir Maa Malai Vengadavaa - மலைபோன்ற மேகங்கள் கோஷிக்குமிடமாய்க் குளிர்ந்ததாய்ச் சிறந்ததான திருவேங்கட மலையி லெழுந்தருளி யிருப்பவனே!
குறிக்கோள் ஒன்று இலாமையினால், Kurikkol Onru Ilamaiyinai - விவேகமென்பது சிறிதுமில்லாமையினாலே
இரந்தார்க்கு, Irandhaarkku - யாசித்தவர்களுக்கு
இனிது ஆக, Inidhu Aaga - மதுரமாக
என்றேனும், Endraenume - ஒருநாளும்
உரைத்து அறியேன், Uraiththu Ariyaen - பதில் சொல்லி அறியேன்;
பல் உயிரை, Pal Uyirai - பல பிராணிகளை
கொன்றேன், Konraen - கொலைசெய்து முடித்தேன்;
அன்றே, Andrae - அந்த க்ஷணத்திலேயே
வந்து அடைந்தேன், Vandhu Adaindhen - உன்னை வந்து பற்றினேன்;