திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1031 | பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அநுலோமப் பிறவிகளென்றும் பிரதிலோமப் பிறவிகளென்றும் சாஸ்த்ரங்களில் எத்தனை விதமான ஸங்கர ஜன்மங்கள் சொல்லப்பட்டிருக்கின்றனவோ, அத்தனை ஜன்மங்களிலும் பிறப்பதுமிறப்பதும் செய்தாயிற்று.) 4 | குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன்
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-4 | பதவுரை Show / Hideநிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா, Nilam Thoy Neel Mukil Ser Neri Aar Thiruveengadavaa - பூமியிலே படிந்த பெரிய மேகங்கள் நடமாடின வழிகள் பொருந்தியிரு க்கிற திருமலையிலெழுந்தருளி யுள்ளவனே! எத்தனை குலமும், Ethanai Kulamum - எல்லாக்குலங்களிலும் பிறந்து இறந்து எய்த்து ஒழிந்தேன், Pirandhu Irandhu Eyththu Ozhindhaen - பிறப்பதும் இறப்பதுமாக இளைத்துப் போனவனும் நலம் ஒன்றும் இலேன், Nalam Onrum Ilaen - ஒருவகை நன்மையுமில்லாதவனும் நல்லது ஓர் அறமும் செய்திலேன், Nalladhu Oru Arahamum Seidhilaen - நல்ல தருமமொன்றும் செய்தறியாதவனும் அலந்தேன், Alandhaen - பல கஷ்டங்களை அநுபவித்த வனுமான அடியேன் வந்து அடைந்தேன், Vandhu Adaindhen - உன்னை வந்து பற்றினேன்; |