திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1036 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1036பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன்னுடைய ஸம்பந்தத்தை               அறுத்துக்கொண்டு வெகுதூரம் ஓடிப்போன வெனக்கு ஓரிடத்திலும் ஒருவகையான ஆதாரமுமில்லை.) 9
பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன் மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-9
பதவுரை Show / Hide
மாயனே, Maayaney - ஆச்சரியமான குணங்களை யுடையவனே!
எங்கள் மாதவனே, Engal Maadhavane - எங்களுக்குப் புருஷகாரமான பிராட்டிக்கு வல்லபனே!
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலம் சுனை வேங்கடவா, Kal Then Paayndhu Ozhugum Kamalam Sunai Vengadavaa - மலை முழைஞ்சுகளின்றும் தேன் பெருகி வெள்ளமிடா நிற்பதும் தாமரைச் சுனைகளை யுடையதுமான திரு மலையிலே வாழ்பவனே!
பற்று ஒன்றும் இலேன், Patru Ondrum Ileen - ஒருவிதமான ஆகாரமும் அற்றவனாய்
பாவமே செய்து பாவி ஆனேன், Paavame Seidhu Paavi Aaneen - பாவங்களையே செய்து பாபிஷ்டனாய்
மற்று ஒன்று அறியேன், Mattru Ondru Ariyeen - ஒரு உபாயமுமறியாதவனான அடியேன்
அற்றேன், Atraen - உனக்கே அற்றுத் தீர்ந்தவனாய்க் கொண்டு