திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1036 | பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன்னுடைய ஸம்பந்தத்தை அறுத்துக்கொண்டு வெகுதூரம் ஓடிப்போன வெனக்கு ஓரிடத்திலும் ஒருவகையான ஆதாரமுமில்லை.) 9 | பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-9 | பதவுரை Show / Hideமாயனே, Maayaney - ஆச்சரியமான குணங்களை யுடையவனே! எங்கள் மாதவனே, Engal Maadhavane - எங்களுக்குப் புருஷகாரமான பிராட்டிக்கு வல்லபனே! கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலம் சுனை வேங்கடவா, Kal Then Paayndhu Ozhugum Kamalam Sunai Vengadavaa - மலை முழைஞ்சுகளின்றும் தேன் பெருகி வெள்ளமிடா நிற்பதும் தாமரைச் சுனைகளை யுடையதுமான திரு மலையிலே வாழ்பவனே! பற்று ஒன்றும் இலேன், Patru Ondrum Ileen - ஒருவிதமான ஆகாரமும் அற்றவனாய் பாவமே செய்து பாவி ஆனேன், Paavame Seidhu Paavi Aaneen - பாவங்களையே செய்து பாபிஷ்டனாய் மற்று ஒன்று அறியேன், Mattru Ondru Ariyeen - ஒரு உபாயமுமறியாதவனான அடியேன் அற்றேன், Atraen - உனக்கே அற்றுத் தீர்ந்தவனாய்க் கொண்டு |