திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1039 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1039பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புற்றானது என்றைக்கும் துஷ்ட ஸர்ப்பங்கள் மாறாதே உறையுமிடமாக இருப்பதுபோல இலங்கையானது இராவணனுக்கு முன்பும் குடியிருந்து வந்த மாலி முதலானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்ததாதலால் அவர்களையும் தொலைத்தபடி சொல்லுகிறது இப்பாட்டில்.) 2
இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர் குலம் கெட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய் விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய அலங்கல் துளப முடியாய் அருளாயே –1-10-2
பதவுரை Show / Hide
அன்று, Andru - முற்காலத்தில்
இலங்கை பதிக்கு, Ilankai Pathikku - லங்காபுரிக்கு
இறை ஆய, Irai Aaya - அரசர்களாயிருந்த
அரக்கரவர், Arakkaravar - (மாலிமுதலிய) ராக்ஷஸர்கள்
குலம்கெட்டு மாள, Kulamkettu Maala - கும்பலோடே சிதறியோடி முடியும்படியாக
கொடி, Kodi - (தனக்கு) த்வஜமான
புள், Pul - பெரிய திருவடியை
திரித்தாய், Thiriththai - ஸஞ்சரிப்பித்தவனே!,
விலங்கல் குடுமி, Vilankal Kudumi - (மேலே ஸஞ்சரீக்கிற சந்திர ஸூர்யர்கள்) விலங்கிப் போகவேண்டும்படியான (உயர்த்திபொருந்திய) சிகரத்தையுடைய
திருவேங்கடம், Thiruveengadam - திருமலையிலே
மேய, Meya - மேவியிருப்பவனாய்
துளபம், Thulabam - திருத்துழாயினாலாகிய
அலங்கல், Alangal - மாலையை
முடியாய், Mudiyaai - திருமுடியிலே அணிந்துள்ளவனே!
அருளாய், Arulai - (அடியேன் மீது) க்ருபை பண்ணியருள வேணும்.