திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1048 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1048பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் உடைமையை பெறுகைக்கு தன்னை இரப்பாளன் ஆக்கினவர்க்கு–மகாபலிக்கு கொடுத்து அல்லது நிற்க ஒண்ணாத படி விநீத வேஷத்தோடே சென்றான் ஆயிற்று –அவன் அடிமை கொள்வதாக வந்து இரந்து நிற்கிற பின்பு நீயும் அவன் நினைவின் படி போகப் பெறுவதே-என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
வானவர் தங்கள் சிந்தை போலேன் நெஞ்சமே.இனிவந்து, மாதவ மானவர் தங்கள் சிந்தையமர்ந்துறை கின்றவெந்தை, கானவரிடு காரகிற்புகை யோங்கு வேங்கடம் மேவி, மாண்குறள் ஆன அந்தணற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. –2-1-1
பதவுரை Show / Hide
என் நெஞ்சமே, En Nenjame - என்னுடைய மனமே!
மா தவம் மானவர் தங்கள் சிந்தை, Maa Thavam Maanavar Thangal Sinthai - மிக்க தவஞ் செய்தவர்களான மனிசருடைய நெஞ்சிலே
அமர்ந்து உறைகின்ற எந்தை, Amarnthu Uraikindra Endhai - பொருந்தி வாழ்கின்ற ஸ்வாமியும்
கானவர் இடு கார் அகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி, Kaanavar Idu Kaar Akil Pugai Ongu Vengadam Mevi - வேடர்கள் ஸமர்ப்பிக்கும் காரகிலபுகை பரவியிருக்கப்பெற்ற திருமலையிலே வாழ்பவனும்
மாண் குறள் ஆன அந்தணற்கு, Maan Kurai Aan Andhanarukku - வாமந ப்ரஹ்மசாரி வடிவெடுத்தவனுமான எம்பெருமானுக்கு
வானவர் தங்கள் சிந்தை போல, Vaanavar Thangal Sinthai Pola - நித்யஸூரிகளுடைய ஹ்ருதயம் போலே (நீயும்)
இனிது உவந்து, Inidhu Uvandu - நன்றாகக் கனிந்து
இன்று, Indru - இப்போது
அடிமை தொழில் பூண்டாயே, Adimai Thozhil Poondhaaye - கைங்கர்ய் வ்ருத்தியை ஏற்றுக் கொண்டாய் காண்.