திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1054 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1054பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆதித்ய அந்தராத்மாவாய் இருக்கும் என்று அனுசந்தித்துப் போகை அன்றிக்கே கண்ணாலே கண்டு அடிமை செய்து அனுபவிக்கப் பெற்றாயே நீ –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7
தருக்கி னால்சமண் செய்து சோறுதண் தயிரினால்திரளை,மிடற்றிடை நெருக்கு வார்அலக் கணது கண்டென் நெஞ்சமென்பாய், மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டத னோடும், வானிடை அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே. –2-1-7
பதவுரை Show / Hide
தருக்கினால், Tharukkinaal - வெறும் தர்க்கங்களாலே (- (அடிமைத்தொழில் பூண்டாயே-.))
சமண் செய்து, Saman Seythu - தங்களுடைய சமண மதத்தைப்பற்றி வாது செய்துகொண்டு
தண் தயிரினால், Than Thayirinaal - நல்ல தயிரோடு கூடிய
சோறு திரளை, Sooru Thiralai - சோற்றுக் கவளத்தை
மிடறு இடை, Mitaru Idai - கழுத்துக்குள்ளே யிட்டு
நெருக்குவார், Nerukkuvaar - அடைப்பவர்களான அந்தச் சமணருடைய
அலக்கண் அது, Alakkan Adhu - அப்படிப்பட்ட திண்டாட்டத்தை
கண்டு, Kandu - பார்த்து
என் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - ஓ மனமே! (நீ அவர்களுடைய திரளில் சேராமல்)
வண்டுகள், Vandugal - வண்டுகளானவை
மருட்கள், Marutkal - மருள் முதலிய இசைகளை
பாடும், Paadum - பாடுமிடமான
வேங்கடம், Vengadam - திருமலையை
கோயில் கொண்டு, Koyil Kondu - திருக்கோயிலாகக் கொண்டு
அதனோடும், Adhanodum - அவ்வளவுமாத்திரமன்றிக்கே
வானிடை, Vaanidai - ஆகாசத்திலே (திரிகிற)
அருக்கன், Arukkan - ஸூர்யமண்டலத்திலும்
மேவி நிற்பாற்கு, Mevi Nirpaaruku - பொருந்தியிருக்கும் பெருமானுக்கு