திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1055 | பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னோராயிரம் பிள்ளைகளுக்கு தலைவன் ஆனவனுக்கு வரையாதே ரஷகன் ஆனவனுக்கு அடிமை செய்கையிலே ஒருப்பட்டாயே-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8 | சேயனணியன் சிறியன் பெரிய னென்பது சிலர்ப்பேசக் கேட்டிருந்தே,
என் னெஞ்சமென் பாய் எனக் கொன்று சொல்லாதே,
வேய்கள் நின்றுவெண் முத்த மேசொரி வேங்க டமலை கோயில் மேவிய,
ஆயர் நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. –2-1-8 | பதவுரை Show / Hideசேயன் என்பது, Seyan Enbadhu - (அவன்) வெகு தூரத்திலுள்ளவன் (அவனை எப்படி தொழ முடியும்) என்று சொல்லுவதும், (- (பரமபதநாதனைத் தொழுங்கள் என்றால்) (அர்ச்சாரூபியான எம்பெருமானைத் தொழுங்கள் என்றால்) (ஸ்ரீ கிருஷ்ணனைத் தொழுங்கள் என்றால்) (வ்யூஹவாஸூதேவனையும் அந்தர்யாமியான பெருமானையும் தொழுங்கள் என்றால்) (அந்த துர்வாதிகளின் திரளில் புகாமல்) (இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-)) அணியன் என்பது, Aniyan Enbadhu - (இவன்) இதோ இருக்கிறானே (இவனையா தொழுவது) என்று சொல்லுவதும், சிறியன் என்பது, Siriyan Enbadhu - (இவன்) இழிகுலத்திலே பிறந்தவனாயிற்றே (இவனையோ தொழுவது) என்று சொல்லுவதும், பெரியன் என்பதும், Periyan Enbadhu - கைக்கு எட்டாதவனை எப்படி தொழுவது? என்று சொல்லுவதுமாய் (ஆக இப்படியெல்லாம்) சிலர் பேச, Silar Pesu - சில துர்ப்பாக்கியசாலிகள் பேசாநிற்க, என் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - ஓ மனமே! கேட்டிருந்தே, Kettirundhe - (அந்த குத்ஸிதவாதங்களை நீ) ;கேட்டு வைத்தும் எனக்கு ஒன்று சொல்லாதே, Enakku Ondru Sollaadhe - என்னிடத்திலும் ஒரு வார்த்தை சொல்லாமல், வேய்கள், Veygal - மூங்கில்களானவை நின்று, Ninru - ஒரு படிப்பட நின்றுகொண்டு வெண்முத்தமே சொரி, Venmuthame Sori - வெளுத்த முத்துக்களைச் சொரியுமிடமான வேங்கடம் மலை, Vaengadam Malai - திருமலையை கோயில் மேவிய, Koyil Meviyah - கோயிலாக விரும்பிய ஆயர்நாயகற்கு, Aayarnayakarukku - ஸ்ரீ கோபால கிருஷ்ணனுக்கு |