திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1056 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1056பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பலரும் அவனை ஆஸ்ரயித்து பின்னையும் காணப் பெறார்கள் – ப்ரஹ்மாதிகள் அநந்தரம் தம் தாம் அதிகார அர்த்தமாக ஆஸ்ரயியா நிற்பர்கள் – நீ இவ்விரண்டு கோடியிலும் இன்றிக்கே அவன் பக்கலிலே அடிமை புக்காயே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9
கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்நெஞ்சமென் பாய் துணிந்துகேள், பாடி யாடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலா, ஆடு தாமரை யோனு மீசனும் அமர் கோனும்நின் றேத்தும்,வேங்கடத்து ஆடு கூத்தனுக் கின்று அடிமைத்தொழில் பூண்டாயே. –2-1-9
பதவுரை Show / Hide
கூடி, Koodi - உலகத்தாரோடே கூடி (- (இதற்கு முன்பெல்லாம்) (இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-.))
ஆடி, Aadi - அவர்கள் எந்த விஷயங்களிலே ஊன்றுவர்களோ அந்த விஷயங்களிலே ஊன்றி,
உரைத்ததே உரைத்தாய், Uraiththade Uraiththai - அவர்கள் என்ன வார்த்தைகளைச் சொல்லுவார்களோ அந்த வார்த்தை களையே சொல்லிக் கொண்டிருந்த
என் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - என் மனமே!
துணிந்து கேள், Thuninthu Kela - (இப்போது நான் உனக்கு மகிழ்ந்து சொல்வதை) விச்வஸித்துக் கேள்;
பலரும், Palarum - எத்தனையோ பேர்கள்
பாடி, Paadi - (பகவத் குணங்களைப்) பாடிக் கொண்டும்
ஆடி, Aadi - கூத்தாடிக்கொண்டும்
பணிந்து, Paninthu - ஆச்ரயித்து
ஏத்தி, Aethi - துதித்தும்
காண்கிலா, Kankila - ஸாக்ஷாத்கரிக்க முடியாதவனும்,
ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர் கோனும் நின்று ஏத்தும் வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு, Aadu Thamaraiyonum Eesanum Amarar Konum Ninru Aethum Vengadathu Aadu Koothanukku - வெற்றியையுடைய பிரமனும் சிவனும் இந்திரனும் நிலை நின்று போற்றுமிடமான திருமலையிலே நிற்பவனும் (முன்பு) குடக்கூத்தாடினவனுமான பெருமானுக்கு