திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1057 | பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருமங்கையில் உள்ளாருக்கு பிரதாநரான ஸ்ரீ ஆழ்வார் இன் தமிழாலே அருளிச் செய்த இப்பத்தும் பாட வல்லார்க்கு பூண்ட வடிமை நித்யமாக செல்லும் தேசத்தை இருப்பிடமாக உடையவர் ஆவர்- என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10 | மின்னு மாமுகில் மேவு தண்திரு வேங்க டமலை கோயில்மேவிய,
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை,
கன்னி மாமதிள் மங்கை யர்க்கலி கன்றி யிந்தமி ழாலு ரைத்த, இம்
மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே. –2-1-10 | பதவுரை Show / Hideமின்னும் மா முகில் மேவு, Minnum Maa Mukil Mevu - மின்னுகின்ற காளமேகங்கள் வந்து சேருகிற தண் திரு வேங்கடம் மலை கோயில் மேவிய, Than Thiru Vengadam Malai Koyil Meviyah - குளிர்ந்த திருமலையைக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளி யிருப்பவனும், அன்னம் ஆய் நிகழ்ந்த, Annam Aay Nigazhndha - ஹம்ஸ ரூபியாய்த் திரு வவதரித்தவனும் அமரர் பெருமானை, Amarar Perumanai - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனுமான பெருமான் விஷயமாக, கன்னி மா மதிள் மங்கையர் கலிகன்றி, Kanni Maa Madi Mangkaiyar Kalikanri - நிலைநின்ற பெரிய மதில்களையுடைய திருமங்கை நாட்டில் உள்ளவர்களுக்குத் தலைவரான ஆழ்வார் இன் தமிழால் உரைத்த, In Tamizhal Uraitha - செவிக்கினிய தமிழ்ப் பாஷையாலே அருளிச்செய்த மன்னு, Mannu - (வேதம்போலே) நித்யமான இப்பாடல், Ippadal - இப்பாசுரங்களை வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு வான் உலகு, Vaan Ulagu - பரமபதம் இடம் ஆகும், Idam Aakum - வாஸஸ்தானமாகும். |