திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1057 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1057பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருமங்கையில் உள்ளாருக்கு பிரதாநரான ஸ்ரீ ஆழ்வார் இன் தமிழாலே அருளிச் செய்த இப்பத்தும் பாட வல்லார்க்கு பூண்ட வடிமை நித்யமாக செல்லும் தேசத்தை இருப்பிடமாக உடையவர் ஆவர்- என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10
மின்னு மாமுகில் மேவு தண்திரு வேங்க டமலை கோயில்மேவிய, அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை, கன்னி மாமதிள் மங்கை யர்க்கலி கன்றி யிந்தமி ழாலு ரைத்த, இம் மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே. –2-1-10
பதவுரை Show / Hide
மின்னும் மா முகில் மேவு, Minnum Maa Mukil Mevu - மின்னுகின்ற காளமேகங்கள் வந்து சேருகிற
தண் திரு வேங்கடம் மலை கோயில் மேவிய, Than Thiru Vengadam Malai Koyil Meviyah - குளிர்ந்த திருமலையைக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளி யிருப்பவனும்,
அன்னம் ஆய் நிகழ்ந்த, Annam Aay Nigazhndha - ஹம்ஸ ரூபியாய்த் திரு வவதரித்தவனும்
அமரர் பெருமானை, Amarar Perumanai - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனுமான பெருமான் விஷயமாக,
கன்னி மா மதிள் மங்கையர் கலிகன்றி, Kanni Maa Madi Mangkaiyar Kalikanri - நிலைநின்ற பெரிய மதில்களையுடைய திருமங்கை நாட்டில் உள்ளவர்களுக்குத் தலைவரான ஆழ்வார்
இன் தமிழால் உரைத்த, In Tamizhal Uraitha - செவிக்கினிய தமிழ்ப் பாஷையாலே அருளிச்செய்த
மன்னு, Mannu - (வேதம்போலே) நித்யமான
இப்பாடல், Ippadal - இப்பாசுரங்களை
வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு
வான் உலகு, Vaan Ulagu - பரமபதம்
இடம் ஆகும், Idam Aakum - வாஸஸ்தானமாகும்.