திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1060 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1060பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏச நின்ற -என்றது அனுவர்த்திக்கிறது-உதித அநுதித ஹோம நிந்தை போலே இருப்பது ஓன்று இறே – இது புக்க புக்க துறை தோறும் பகவத் விஷயத்தில் கால் தாழ வல்லர் -ஆயிற்று- பூமியிலே ஏவிக் கார்யம் கொள்ளுவாரைப் பெற்றது-இனி இவ்விடம் விட்டுப் போவோம் அல்லோம் என்று சாய்ந்தான் ஆயிற்று –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து,அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே பின்னோர் தூத னாதிமன்னர்க் காகிப் பெருநிலத்தார், இன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே. –2-2-3
பதவுரை Show / Hide
முன், Mun - ஸ்ரீராமாவதாரத்திலே (- (எவ்வுள்  கிடந்தான்-.))
வானரத்தின் வாயில், Vaanaraththin Vaayil - சிறிய திருவடி மூலமாக
ஓர் தூது மொழிந்து, Oru Thoodhu Mozhinthu - (பிராட்டிக்குத்) தூது சொல்லியனுப்பி (பிறகு)
அரக்கன், Arakkan - இராவணனுடைய
மன் ஊர்தன்னை, Man Oorthannai - சிறந்த லங்காபுரியை
வாளியினால், Vaalaiyin Aal - ஓர் அம்பினாலே
மாள முனிந்து, Maala Muninthu - மாண்டுபோகும்படி சீறிமுடித்து,
பின், Pin - பின் பொருகாலத்தில்
ஆதி மன்னர்க்கு, Aadhi Mannarkku - ராஜாதிராஜர்களான பாண்டவர்களுக்கு
ஓர் தூது ஆகி, Oru Thoodhu Aagi - விலக்ஷணனான தூதனாய்,
பெரு நிலத்தார் இன்னார் தூதன்  என நின்றானவனே, Peru Nilaththaar Innar Thoodhan En Nindraanavaney - பெரிய இப்பூமியிலுள்ளாரெல்லாரும் இவன் இன்னாருடைய தூதன் என்று சொல்ல அதனால் நிலைபெற்று நின்ற அப்பெருமான்