திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1061 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1061பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரியவும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரமே பின்னாட்டிற்று –சமஸ்த கல்யாண குணாத்மகனாய்ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்த இருப்பிலும் இங்கே வந்து அவதரித்து தான் தாழ நின்ற பின்பு ஆயிற்று –பூரணன் ஆயிற்று – சர்வ வித பந்துவானவனை காணலாவது ஸ்ரீ பரம பதத்திலே என்று அவ்விடத்துக்கு போக பொதி சோறு கட்ட வேண்டாதே பந்து க்ருத்யம் பண்ணலாம் படி ஸ்ரீ திரு வெவ் வுள்ளிலே வந்து சாய்ந்தான் ஆயிற்று – என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4
பந்த ணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால், வெந்தி றலே றேழும்வென்ற வேந்தன் விரிபுகழ்சேர், நந்தன் மைந்த னாகவாகும் நம்பி நம்பெருமான், எந்தை தந்தை தம்பெருமானெவ்வுள் கிடந்தானே. –2-2-4
பதவுரை Show / Hide
பந்து அணைந்த மெல் விரலாள் பாவைதன் காரணத்தால், Pandhu Anaindha Mel Viralal Paavaithan Kaaranaththal - பந்து பொருந்திய மெல்லிய விரல்களை யுடையளான நப்பின்னைப்பிராட்டி நிமித்தமாக (- (எவ்வுள் கிடந்தான்-.))
வெம் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன், Vem Thiral Aeru Aezhum Vendhan - க்ரூரமான மிடுக்கையுடைய ஏழுரிஷபங்களையும் வென்று முடித்த அரசனும்,
விரி புகழ் சேர் நந்தன், Viri Pugazh Cher Nandhan - உலகமெங்கும் பரந்த புகழையுடையனான நந்தகோபனுக்கு
மைந்தன் ஆக ஆகும் நம்பி, Maindhan Aaga Aagum Nambi - திருக்குமாரனாக அவதரித்த பரிபூர்ணனும்
நம்பெருமான், Namberumaan - நமக்கு ஸ்வாமியும்
எந்தை தந்தை தம்பெருமான், Endai Thandai Thamberumaan - நம்குலத்துக்கெல்லாம் நாதனுமானவன்