திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1063 | பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அசாதாராண திவ்ய விக்ரஹ யுக்தனாய் –இதர விஸஜாதியனாய் இருக்கச் செய்தேயும் ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாய் நின்று ஸ்ருஷ்ட்யாதிகளை நடத்துகிறான் என்று ஸநகாதிகள் ஏத்தும் படியாய் இருக்கிறவன் இங்கே சாய்ந்தான் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6 | சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும்,
ஆத்தனம்பி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம்,
மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு-
தேத்தும், நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. –2-2-6 | பதவுரை Show / Hideதொண்டர், Thondar - அடியவர்கள் (- (எவ்வுள் கிடந்தான்-.)) மிண்டி, Mindi - நெருக்கமாகத் திரண்டு நம்பி சோத்தம் என்று தொடர்ந்து அழைக்கும், Nambi Soththam Endru Thodarnthu Azaikkum - ‘ஸ்வாமீ! உனக்கு அஞ்சலி’ என்று சொல்லிப் பின் தொடர்ந்து துதிக்கப் பெற்ற ஆத்தன், Aathan - ஆப்தனான நம்பி, Nambi - ஸ்வாமியாய் செம் கண், Sem Kan - செந்தாமரைக் கண்ணனான நம்பி ஆகிலும், Nambi Aakilum - ஸ்வாமியுமாய் இருக்கச் செய்தேயும், முனிவர், Munivar - ஸநகர் முதலிய ரிஷிகள் தேவர்க்கு எல்லாம், Thevarkku Ellam - தேவர்களுக்குள் பெரிய மூத்த நம்பி முக்கண் நம்பி என்று தொழுது ஏத்தும் நம்பி எம்பெருமான், Mootha Nambi Mukkan Nambi Endru Thozhuthu Aethum Nambi Emperumaan - ‘பிரமனே! சிவனே!. என்று சொல்லி வணங்கி ஏத்தும் படியாயுள்ள (ஸர்வாந்தர்யாமியான) பெருமான் |