திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1063 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1063பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அசாதாராண திவ்ய விக்ரஹ யுக்தனாய் –இதர விஸஜாதியனாய் இருக்கச் செய்தேயும் ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாய் நின்று ஸ்ருஷ்ட்யாதிகளை நடத்துகிறான் என்று ஸநகாதிகள் ஏத்தும் படியாய் இருக்கிறவன் இங்கே சாய்ந்தான் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6
சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும், ஆத்தனம்பி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம், மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு- தேத்தும், நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. –2-2-6
பதவுரை Show / Hide
தொண்டர், Thondar - அடியவர்கள் (- (எவ்வுள் கிடந்தான்-.))
மிண்டி, Mindi - நெருக்கமாகத் திரண்டு
நம்பி சோத்தம் என்று  தொடர்ந்து அழைக்கும், Nambi Soththam Endru Thodarnthu Azaikkum - ‘ஸ்வாமீ! உனக்கு அஞ்சலி’ என்று சொல்லிப் பின் தொடர்ந்து துதிக்கப் பெற்ற
ஆத்தன், Aathan - ஆப்தனான
நம்பி, Nambi - ஸ்வாமியாய்
செம் கண், Sem Kan - செந்தாமரைக் கண்ணனான
நம்பி ஆகிலும், Nambi Aakilum - ஸ்வாமியுமாய் இருக்கச் செய்தேயும்,
முனிவர், Munivar - ஸநகர் முதலிய ரிஷிகள்
தேவர்க்கு எல்லாம், Thevarkku Ellam - தேவர்களுக்குள் பெரிய
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று தொழுது ஏத்தும் நம்பி எம்பெருமான், Mootha Nambi Mukkan Nambi Endru Thozhuthu Aethum Nambi Emperumaan - ‘பிரமனே! சிவனே!. என்று சொல்லி வணங்கி ஏத்தும் படியாயுள்ள (ஸர்வாந்தர்யாமியான) பெருமான்