திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1064 | பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரு மேனியில் ஏக தேசத்தில் இருக்கிற ருத்ரன் விஸ்த்ருதமான திருவடிகளை தலையாலே சுமக்கும்படி நிற்கிறவன் –எங்களுக்கு ஜநகனுமாய்-ஸ்வாமி யுமானவன்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7 | திங்க ளப்பு வானெரிகாலாகி, திசைமுகனார்
தங்க ளப்பன் சாமியப்பன் பாகத் திருந்த,வண்டுண்
தொங்க லப்பு நீண்முடியான் சூழ்கழல் சூடநின்ற,
எங்க ளப்ப னெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே. –2-2-7 | பதவுரை Show / Hideதிங்கள் ஆகி, Thingal Aagi - சந்திரனுக்கு அந்தர்யாமியாயும் (- (எங்கள் அப்பன் எம்பெருமான்-;) (எவ்வுள் கிடந்தான்-.)) அப்பு வான் எரி கால் ஆகி, Appu Vaan Eri Kaal Aagi - ஜலம் ஆகாசம் தேஜஸ்வாயு முதலிய பூதங்களுக்கு சரீரியாயும் திசைமுகனார் தங்கள் அப்பன், Thisaimughanar Thangal Appan - பிரமனுக்குத் தந்தையாயும் சாமி அப்பன், Saami Appan - ஸாமவேதத்தால் பிரதிபாதிக்கப்பட்ட ஸ்வாமியாயும் பாகத்து இருந்த, Paagathu Irundha - தனது திருமேனியின் ஒருபக்கத்திலே இருப்பவனாய் வண்டு உண்தொங்கல் அப்பு நீள் முடியான், Vandu Unthongal Appu Neel Mudiyan - வண்டுகள் மதுபானம் பண்ணப்பெற்ற கொன்றை மாலையையும் கங்கா ஜலத்தையும் நீண்ட சடையிலேயு டையனான சிவபிரான் சூழ் கழல் சூட நின்ற, Sool Kazhal Sooda Nindra - விசாலமான திருவடிகளைத் தன் தலைமீது அணிந்து கொள்ளும்படி யிருப்பவனாயுமுள்ள |