திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1064 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1064பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரு மேனியில் ஏக தேசத்தில் இருக்கிற ருத்ரன் விஸ்த்ருதமான திருவடிகளை தலையாலே சுமக்கும்படி நிற்கிறவன் –எங்களுக்கு ஜநகனுமாய்-ஸ்வாமி யுமானவன்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7
திங்க ளப்பு வானெரிகாலாகி, திசைமுகனார் தங்க ளப்பன் சாமியப்பன் பாகத் திருந்த,வண்டுண் தொங்க லப்பு நீண்முடியான் சூழ்கழல் சூடநின்ற, எங்க ளப்ப னெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே. –2-2-7
பதவுரை Show / Hide
திங்கள் ஆகி, Thingal Aagi - சந்திரனுக்கு அந்தர்யாமியாயும் (- (எங்கள் அப்பன் எம்பெருமான்-;) (எவ்வுள் கிடந்தான்-.))
அப்பு வான் எரி கால் ஆகி, Appu Vaan Eri Kaal Aagi - ஜலம் ஆகாசம் தேஜஸ்வாயு முதலிய பூதங்களுக்கு சரீரியாயும்
திசைமுகனார் தங்கள் அப்பன், Thisaimughanar Thangal Appan - பிரமனுக்குத் தந்தையாயும்
சாமி அப்பன், Saami Appan - ஸாமவேதத்தால் பிரதிபாதிக்கப்பட்ட ஸ்வாமியாயும்
பாகத்து இருந்த, Paagathu Irundha - தனது திருமேனியின் ஒருபக்கத்திலே இருப்பவனாய்
வண்டு உண்தொங்கல் அப்பு நீள் முடியான், Vandu Unthongal Appu Neel Mudiyan - வண்டுகள் மதுபானம் பண்ணப்பெற்ற கொன்றை மாலையையும் கங்கா ஜலத்தையும் நீண்ட சடையிலேயு டையனான சிவபிரான்
சூழ் கழல் சூட நின்ற, Sool Kazhal Sooda Nindra - விசாலமான திருவடிகளைத் தன் தலைமீது அணிந்து கொள்ளும்படி யிருப்பவனாயுமுள்ள