திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1066 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1066பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய சம்ச்லேஷத்தாலே கையும் பந்துமாய் -அது தான் பொறாமை சிவந்து ஸூகுமாரமான விரலை உடையவள் – நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் – குளிர்ந்த தாமரைப் பூவை பிறந்தகமாக உடையவள் – அப்பூ நெரிஞ்சி முள்ளாய் அடிக் கொதித்து வந்து அகலகில்லேன் -என்று இருக்கும்படி மார்வு படைத்தவன் –எவ்வுள் கிடந்தானே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9
பந்தி ருக்கும் மெல்விரலாள் பாவை பனிமலராள், வந்தி ருக்கும் மார்வன்நீல மேனி மணிவண்ணன், அந்த ரத்தில் வாழும் வானோர் நாயக னாயமைந்த, இந்தி ரற்கும் தம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. –2-2-9
பதவுரை Show / Hide
பந்து இருக்கும் மெல் விரலாள், Pandhu Irukkum Mel Viralal - பந்து தங்கிய மெல்லிய விரல்களை யுடையவளும் (- (எவ்வுள் கிடந்தான்-.))
பனி மலரான், Pani Malaraan - குளிர்ந்த தாமரைப் பூவைப் பிறப்பிடமாக வுடையவளுமான
பாவை, Paavai - பிராட்டியானவள்
வந்து இருக்கும் மார்வன், Vandu Irukkum Maarvan - வந்து தங்கி வாழ்கின்ற திரு மார்பை யுடையவனாய்
நிலம் மேனி மணி வண்ணன், Nilam Meeni Mani Vannan - நீலமான நிறத்தையுடைய மணியின் வர்ணம் போன்ற வர்ணத்தை யுடையவனாய்
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகன் ஆய் அமைந்த இந்திரற்கும் தம்பெருமான், Andharathil Vaalum Vaanor Naayagan Aay Amaindha Indirarkkum Thamberumaan - சுவர்க்கத்தில் வாழ்கின்ற தேவர்களுக்கு நாதனாக அமைந்த இந்திரனுக்கும ஸ்வாமியானவன்