திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1067 | பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்கே வந்து சாய்ந்த படியாலே பகவத் குணங்கள் நெஞ்சிலே ஊற்றிருந்து சொல்லி அல்லது நிற்க ஒண்ணாதபடி அவை ப்ரேரிக்க பாடின மாலை-இது கற்றார் அண்டத்தை ஆளுகை நிச்சயம் – அவனைப் பற்றியும் இத்தைப் பெறுமத்தனையோ – என்று விரக்தர் ஆனார்கள் ஆகில் அவர்கள் ஆளுமது பரம பதம் —என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10 | இண்டை கொண்டு தொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை,
வண்டு பாடும் பைபுறவில் மங்கையர் கோன்கலியன்,
கொண்ட சீரால் தண்டமிழ்செய் மாலையீ ரைந்தும்வல்லார்,
அண்ட மாள்வ தாணையன்றே லாள்வ ரருலகே. –2-2-10 | பதவுரை Show / Hideதொண்டர், Thondar - பக்தர்கள் இண்டை கொண்டு, Indai Kondu - புஷ்ப மாலைகளை ஏந்திக் கொண்டு ஏத்த, Aetha - துதிக்கும்படியாக எவ்வுள் கிடந்தானை, Evvul Kidandhaanai - திருவெவ்வுளூரிலே சயனித்தருள்பவனான பெருமான் விஷயமாக, வண்டு பாடும் பை புறவில் மங்கையர்கோன் கலியன், Vandu Paadum Pai Puravil Mangaiyarkon Kalyan - வண்டுகள் களித்துப் பாடா நின்ற விசாலமான சோலைகளையுடைய திருமங்கையிலுள்ளார்க்கு ஸ்வாமியான ஆழ்வார் கொண்ட சீரால், Konda Seeraal - நெஞ்சிலே கொண்ட பகவத் குணங்களாலே தண் தமிழ் செய், Than Tamil Sei - அழகிய தமிழ்ப் பாஷையிலருளிச் செய்த மாலை, Maalai - சொல்மாலையாகிய ஈர் ஐந்தும், Eer Aindhum - இப்பத்துப் பாசுரங்களையும் வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள் அண்டம் ஆள்வது ஆணை, Andam Aalvathu Aanai - இந்த பிரஹ்மாண்டங்களையெல்லாம் செங்கோல் செலுத்தி ஆளப் பெறுவது திண்ணம்; அன்றேல், Andrel - இவ் வுலகங்களை ஆள்வதில் ஆசையற்றவர்களாகில் அமரர் உலகு ஆள்வர், Amarar Ulagu Aalvar - பரமபதந் தன்னையே ஆளப் பெறுவர்கள். அமருலகு, Amarulagu - அமரருவகு. |