திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1068 | பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதி வர்க்கத்தை கிழங்கு எடுக்குமவனாய் –ஈஸ்வர அபிமாநிகளுக்கு இடர் வந்தால் -போக்குமவனாய் – தனக்கு ஸ்நேஹிதர் ஆனார்க்காகத் தன்னை அழிய மாறுமவனாய் – போலியான ஸ்நேஹிகளுக்கும் ஏவிற்றுச் -செய்யுமவனானவனை –திரு வல்லிக்கேணியிலே காணப் பெற்றேன் என்கிறார் முதல் பாசுரத்தில்) 1 | விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ,
செற்றவன் றன்னை, புரமெரி செய்த சிவனுறு துயர்களை தேவை,
பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு பார்த்தன்றன் தேர்முன்நின் றானை,
சிற்றவை பணியால் முடிதுறந் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-1 | பதவுரை Show / Hideபெரு வில் விழவும், Peru Vil Vizhavum - சிறந்ததான தநுர்யாகமென்கிற உத்ஸவமும் கஞ்சனும், Kanjanum - (அந்த உத்ஸவத்தை நடத்தின) கம்ஸனும் மல்லும், Mallum - (அந்த கம்ஸனாலே ஏவி நிறுத்தப்பட்ட) மல்லர்களும் வேழமும்பாகனும், Vezhamumpaganum - (குவலயாபீடமென்கிற) யானையும் அதன் பாகனும் (ஆகிய எல்லாம்) வீழ செற்றவன் தன்னை, Veela Settravan Thannai - பங்கமடையும்படி த்வம்ஸம் பண்ணினவனும், புரம் எரி செய்த சிவன் உறு துயர், Puram Eri Seitha Sivan Uruthu Thuyar - திரிபுரமெரித்த சிவபெருமானடைந்த ப்ரஹ்மஹத்தி சாபத்தை களை, Kalai - களைந்தொழிந்த தேவை, Thevai - தேவனும், பற்றலர் வீய, Patralar Veeya - சத்துருக்கள் மாளும்படியாக கோல் கையில் கொண்டு, Kol Kaiyil Kondu - சாட்டையைத் திருக்கையிலே பற்றிக்கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை, Parthan Than Ther Mun Nindraanai - பார்த்தசாரதியாய் நின்றவனும் சிறு அவை பணியால், Siru Avai Paniyala - சிறிய தாயாகிய கைகேயியினுடைய சொல்லாலே முடி துறந்தானை, Mudi Thurandhaanai - உபேக்ஷித்தவனுமான பெருமானை திருவல்லிக்கேணி, Thiruvallikeni - திருவல்லிக்கேணி யென்னும் க்ஷேத்ரத்திலே கண்டேன், Kandein - ஸேவிக்கப்பெற்றேன். |