திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1075 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1075பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வாயில் ஓர் ஆயிர நாமம் –-அவன் அப்போது சொல்லிற்று-நால் இரண்டாகிலும் பருவத்துக்கு தக்க அளவல்லாதபடி இருக்கையாலே குவாலாகச் -சொல்லுகிறார் – நால் இரண்டு -ஸ்ரீ திரு அஷ்டாஷரம் ஆகவுமாம்–ஸ்ரீ நாராயண -ஸ்ரீ ஹரி என்றுமாம் -ஸ்ரீ விஷ்ணு ஷட் அஷரி-யாகவும் – ஹிரண்யன் உடைய முரட்டு வடிவைக் கண்டு பிற் காலியாதே ஸ்ரீ நரசிம்ஹமாய் அவ்வழியாலே தானே ஆஸ்ரயணீயன் என்னும் இடத்தை வெளி இட்டான் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம், ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பில னாகி, பிள்ளையைச் சீறி வெகுண்டுதூண் புடைப்பப் பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய், தெள்ளிய சிங்க மாகிய தேவைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-8
பதவுரை Show / Hide
பள்ளியில் ஓதி வந்த, Palliyil Oadhi Vanda - பள்ளிக்கூடத்தில் வாசித்து விட்டு வீட்டுக்கு வந்த (- (திருவல்லிக்கேணி கண்டேன்.))
தன் சிறுவன் வாயில், Than Siruvan Vayil - தனது மகனான ப்ரஹ்லாதனுடைய வாயில்
ஓர் ஆயிரம் நாமம், Oru Aayiram Naamam - விலக்ஷணமான ஸஹஸ்ர நாமங்கள்
ஒள்ளிய ஆகி போத, Olliya Aagi Podha - அழகாக உச்சரிக்கப்பட்டு வர
ஆங்கு, Aangu - அக்காலத்திலே
அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி, Adhanukku Ondrum Oru Poruppu Ilan Aagi - அதை எள்ளளவும் பொறுக்கமாட்டாதவனாய் (இரணியன்)
பிள்ளையை சீறி வெகுண்டு, Pillaiyai Seeri Vegundu - அந்த ப்ரஹ்லாதன்மீது மிகவும் கோபித்து
தூண் புடைப்ப, Thoon Pudaippa - தூணைத் தட்டினபோது
பிறை எயிறு அனல் விழி பேழ் வாய், Pirai Eiyiru Anal Vizhi Pezh Vayi - பிறைபோன்ற பற்களையும் நெருப்புப்பொறி கிளர்கின்ற கண்களையும் பெரிய வாயையுமுடைய
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை, Thelliya Singam Aagiya Thevai - தெளிசிங்கப் பெருமாளாகத் திருவவதரித்த தேவனை