திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1077 | பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –நித்ய அனுபவம் பண்ணலாம் படியான ஸ்ரீ நித்ய விபூதியைப் ப்ராபிக்க பெறுவர் .) 10 | மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும் மாடமா ளிகையும்மண் டபமும்,
தென்னன்தொண் டையர்க்கோன் செய்தநன்மயிலைத் திருவல்லிக் கேணிநின் றானை,
கன்னிநன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க்கலி கன்றி,
சொன்னசொன் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர்வா னுலகே. –2-3-10 | பதவுரை Show / Hideமன்னு தண் பொழிலும், Mannu Than Pozhilum - நித்தியமாய் குளிர்ந்த சோலைகளும் வாவியும், Vaaviyum - நீர் நிலங்களும் மதிளும், Mathilum - மதில்களும் மாடம் மாளிகையும், Maadam Maaligaiyum - மாட மாளிகைகளும் மண்டபமும், Mandapamum - மண்டபங்களும் உண்டாம்படி தென்னன் தொண்டையர்கோன் செய்த, Thennan Thondaiyarkon Seitha - பாண்டிய குலத்தவனான தொண்டைமான் சக்கரவர்த்தி நிருமித்த நல் மயிலை திரு அல்லிக்கேணி நின்றாணை, Nal Mayilai Thiru Allikeni Nindraanai - அழகியமயிலைக்கடுத்த திருவல்லிக்கேணியிலே நின்றளும் பெருமான் விஷயமாக, கன்னி நல் மாடம் மங்கையர்தலைவன், Kanni Nal Maadam Mangaiyarthalaivan - அழிவில்லாத நல்ல மாடங்களையுடைய திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரும் காமரு சீர், Kaamaru Seer - சிறந்த ஸ்ரீவைஷ்ணவலக்ஷ்மியை உடையவருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார் சொன்ன, Sonna - அருளிச்செய்த சொல் மாலை பத்து உடன், Sol Maalai Pattu Udan - சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும் வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள் சுகம் இனிதுவான் உலகு, Sukam Inidhuvaan Ulagu - ஆநந்தமயமான பரமபதத்தை ஆள்வர், Aalvar - ஆளப்பெறுவர்கள். |