திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1078 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1078பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு நறையூரிலே நின்றான்-ஸ்ரீ திருவாலியிலே இருந்தான்-ஸ்ரீ திருக் குடந்தையிலே சாய்ந்தான்-ஸ்ரீ திருக் கோவலூரிலே நடந்தான் – இடம் மா மலையாவது நீர் மலையே –மலையாய் இருக்கச் செய்தே அல்லாதவை வாஸ ஸ்தானம் ஆகிறது இல்லை இறே – உகந்து அருளின நிலங்களில் எங்கும் பண்ணக் கடவ விருப்பத்தைப் பண்ணிக் கொடு வந்து சந்நிஹிதனான தேசம் ஸ்ரீ திரு நீர் மலை- என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
அன்றாயர்கு லக்கொடி யோடணிமா மலர்மங்கையொ டன்பளவி,அவுணர்க் கென்றானு மிரக்கமி லாதவனுக்குக் குறையுமிட மாவது,இரும்பொழில்சூழ் நன்றாயபு னல்நறை யூர்த்திருவா லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர், நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-1
பதவுரை Show / Hide
அன்று, Andru - கிருஷ்ணனாய்ப் பிறந்த அக்காலத்து
ஆயர்குலம் கொடியோடு, Aayarkulam Kodiyodu - இடைக்குலத்திற் பிறந்தகொடி போன்ற நப்பின்னை பிராட்டியோடும்
அணி மா மலர் மங்கையொடு, Ani Maa Malar Mangaiyodu - மிகச் சிறந்த தாமரை மலரிற் பிறந்த பெரிய பிராட்டியோடும்
அன்பு அளவி, Anbu Alavi - அன்புடன் கலந்தவனும்
என்றானும், Endraanum - எக்காலத்திலும்
அவுணர்க்கு, Avunarkku - அசுரர்கள் விஷயத்திலே
இரக்கம் இலாதவனுக்கு, Irakkam Ilaadhavanukku - இரக்கமில்லாதவனுமான எம்பெருமானுக்கு
உறையும் இடம் ஆவது, Urayum Idam Aavathu - வாஸஸ்தான மெதுவென்றால்;-.
இரு பொழில் சூழ், Iru Pozhil Soozh - பரந்த சோலைகளாலே சூழப்பட்டு
நன்று ஆய புனல், Nandru Aaya Punal - நல்ல தீர்த்தங்களையுடைய
நறையூர், Naraiyoor - திருநறையூரிலே
நின்றான், Nindraan - நின்றவனும்
திரு ஆலி, Thiru Aali - திருவாலியிலே
இருந்தான், Irundhaan - வீற்றிருந்தவனும்
குடந்தை, Kudanthai - திருக்குடந்தையிலே
கிடந்தான், Kidandhaan - சயனித்தவனும்
தடம் திகழ் கோவல் நகர், Thadam Thigazh Koval Nagar - தடாகங்களாலே விளங்குகின்ற திருக்கோவலூரிலே
நடந்தாற்கு இடம், Nadandaarku Idam - உலகளந்த திருக்கோலமாக எழுந்தருளியிருந்தவனுமான எம்பெருமானுக்கு இடமான
மா மலை ஆவது நீர்மலை, Maa Malai Aavadhu Neermalai - சிறந்த மலையான திருநீர் மலையாம்.