திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1079 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1079பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முன்பு பூ பாரத்தைப் போக்கி நிர்வஹித்துப் -போந்தவன் –சீறி யருளி –அவனுடைய பிரதிஞ்ஞா காலத்தில் வந்து உதவிற்றிலன் ஆகில் குணங்கள் சாவாதியாம் போலே சர்வாதிகனான தான் வாமன வேஷத்தைப் பரிகிரஹித்து நிற்கச் செய்தே மஹா பலி பக்கலிலே சென்று இரந்து திருக் கையிலே நீர் விழுந்தவாறே ஆகாசவகாசம் இடம் அடையும்படி வளர்ந்து அளந்து கொண்டவனுக்கு வாஸ ஸ்தானம்- என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2
காண்டாவன மென்பதொர் காடமரர்க் கரையனது கண்டவன் நிற்க,முனே மூண்டாரழ லுண்ணமு னிந்ததுவும்அதுவன்றியும் முன்னுல கம்பொறைதீர்த் தாண்டான்,அ வுணனவன் மார்வகலம் உகிரால்வகி ராகமு னிந்து, அரியாய் நீண்டான்குற ளாகிநி மிர்ந்தவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-2
பதவுரை Show / Hide
அமரர்க்கு அரையன் அவன், Amararkku Arayan Avan - தேவர்களுக்குத் தலைவனான இந்திரனானவன் (- (மா மலை ஆவது நீர்மலை-.))
கண்டு நிற்க, Kandu Nirka - பார்த்துக்கொண்டிருக்கையில்
முனே, Mune - அவன் கண் முன்னே
“காண்டாவனம்”; என்பது ஓர் காடு அது, Kandavanam Enbathu Oru Kaadu Adhu - ‘காண்டாவனம்’ என்று ப்ரஸித்தமான வொருகாட்டை
ஆர் அழல், Aar Azhai - அக்நி பகவான்
மூண்டு உண்ண, Moondru Unna - மேல் விழுந்து உட்கொள்ளும்படியாக
முனிந்ததுவும், Munindathuvum - சீறி நியமித்தவனும்,
அது அன்றியும், Adhu Andriyum - அதுவுந்தவிர,
முன், Mun - முன்பு(பாரதப்போரில்)
உலகம் பொறை தீர்த்து, Ulagam Porai Theerthu - பூமியின் பாரங்களைத்தீர்த்து
ஆண்டான், Aandaan - உலகங்களை ரக்ஷித்தவனும்
அவுணன் அவன், Avunan Aavan - இரணியாசுரனுடைய
அகலம் மார்பு, Ahalam Maarbu - அகன்ற மார்பு
உகிரால், Ukiral - (திருக்கை) நகங்களாலே
வகிர் ஆக, Vagir Aaga - இருபிளவாம்படி
முனிந்து, Muninthu - சீறி
அரி ஆய் நீண்டான், Ari Aay Neendan - நரசிங்கமாய் வளர்ந்திட்டவனும்
குறள் ஆகி, Kural Aagi - (முதலில்) வாமநாவதாரஞ் செய்து
நிமிர்ந்தவனுக்கு, Nimirndhavanukku - (பிறகு) திரிவிக்கிரமனாய் வளர்ந்தவனுமான பெருமானுக்கு
இடம், Idam - இடம் (எதுவென்றால்)