திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1082 | பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவண வதம் பண்ணின அநந்தரம் திருமேனியில் பிறந்த பௌஷ் கல்யம் இருக்கிறபடி – நீலமானது அமர்ந்து இருக்கிற முகில் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவன் – அவ் வடிவு அழகாலே என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனுக்கு –மா மலையாவது நீர் மலையே – என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5 | மாலுங்கட லாரம லைக்குவடிட் அணைகட்டி வரம்புருவமதிசேர்
கோலமதி ளாயவி லங்கைகெடப் படைதொட்டொரு காலம ரிலதிர,
காலமிது வென்றயன் வாளியினால் கதிர்நீண்முடிபத்து மறுத்தமரும்,
நீலமுகில் வண்ணனெ மக்கிறைவற் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-5 | பதவுரை Show / Hideஒரு கால், Oru Kaal - முன்னொருகாலத்திலே (- (அவ்வளவிலும் இராவணன் சளைக்காமல்) (இடம் மாமலை ஆவது நீர்மலையே-)) மாலும் கடல் ஆர, Maalum Kadal Aara - பெரிய கடல் நிறையும்படி மலை குவடு இட்டு, Malai Kuvalu Ittu - மலைக் கொடுமுடிகளைக் கொண்டு போட்டு வரம்பு உருவ, Varambu Uruva - அக்கரையிலே சென்று சேரும்படி அணை கட்டி, Anai Katti - ஸேது கட்டி, மதி சேர், Madi Ser - சந்திரன் வரையில் ஓங்கியிருக்கிற கோலம் மதிளாய, Kolam Madilay - அழகிய மதில்களையுடைத்தான இலங்கை, Ilankai - லங்காபுரியானது கெட, Keda - அழியும்படியாக படை தொட்டு, Padai Thottu - ஆயதங்களைச் செலுத்தி அமரில் அதிர, Amaril Athira - போர்க்களத்தில் நின்று குமுறின வளவிலே இதுகாலம் என்று, Idhukalam Endru - இவனை முடிப்பதற்கு இதுவே தக்க ஸமயமென்று கொண்டு அயன் வாளியினால், Ayan Valiyinal - ப்ரஹ்மாஸ்த்ரத்தாலே கதிர் நீள் முடி பத்தும் அறுத்து, Kathir Neel Mudi Pathum Aruthu - (கிரீடங்களால்) ஒளிபெற்ற நீண்ட பத்துத் தலைகளையும் அறுத்து அமரும், Amarum - அயோத்திமாநகரில் பிராட்டியும் தானுமாக வந்து சேர்ந்த நீலம் முகில் வண்ணன், Neelam Mukil Vannan - காளமேக நிறத்தனான எமக்கு இறைவற்கு, Emakku Iraivarku - எம்பெருமானுக்கு |