திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1086 | பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருவடிகளில் விழுந்து ஆஸ்ரயிப்பார் உடைய பாபங்களை வாசனையோடே நசிப்பிக்கும் – அவ்வரியத்தையும் செய்யும்-இப்படி இருக்கையாலே அதுவே நமக்கு உஜ்ஜீவிக்கைக்கு ஸ்தானம் – என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9 | பேசுமள வன்றிது வம்மின்நமர்! பிறர்க்கேட்பதன் முன்பணி வார்வினைகள்,
நாசமது செய்திடும் ஆதன்மையால் அதுவேநம துய்விடம் நாண்மலர்மேல்
வாசமணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்துழல் வார்,மதியில்
நீசரவர் சென்றடை யாதவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே! –2-4-9 | பதவுரை Show / Hideநமர், Namar - நம்முடையவர்களே! இது பேசும் அளவு அன்று, Ithu Pesum Alavu Andru - இந்த திவ்யதேசவைபவம் நம்மால் சொல்லி முடிக்கப்போகாது, பிறர் கேட்பதன் முன், Piraar Kaetpadhan Mun - (இது) நாஸ்திகாதிகளின் காதில் விழுவதற்கு முன்னமே வம்மின், Vammin - வந்து கேளுங்கள், அது, Adhu - அந்த திவ்யதேசமானது பணிவார் வினைகள் நாசம் செய்திடும், Panivaar Vinaigal Naasam Seididum - தன்மை வணங்குமவர்களின் பாவங்களைத் தொலைக்கும் ஆதன்மையால், Aadhanmaiyaal - ஆகையாலே அதுவே, Adhuvae - அந்த திவ்யதேசமே நமது உய்வு இடம், Namathu Uyvu Idam - நாம் உஜ்ஜீவிப்பதற்கு உறுப்பானது (அஃது எவ்விடமென்றால்) மனம் ஐந்தொடு நைந்து உழல்வார், Manam Aindhodu Naindhu Uzhalvaar - நெஞ்சானது ஐந்து விஷயாந்தரங்களிலே செல்லப்பெற்று மிகவும் வருந்துகிறவர்களாயும் மதி இல், Madhi Il - புத்தி கெட்டவர்களாயுமிருக்கிற நீசர் அவர், Neesar Avar - அற்ப மனிதர்கள் சென்று அடையாதவனுக்கு இடம், Sendru Adaiyadaavanukku Idam - சென்று கிட்ட முடியாதவனான எம்பெருமானுக்கு இடமானதும் நாள் மலர்மேல், Naal Malarmel - அப்போதலர்ந்த பூவின் மேலே (படிந்து) வாசம் அணி வண்டு, Vaasam Ani Vandu - பரிமளத்தை ஏற்றுக் கொண்ட வண்டுகள் அறை, Arai - ரீங்காரம் செய்யப்பெற்ற பை புறவில், Pai Puravil - பரந்த சோலைகளை யுடையதுமான மா மலை ஆவது நீர்மலை, Maa Malai Aavadhu Neermalai - சிறந்த மலையாகிய திருநீர்மலையாம். |