திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1087 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1087பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரயண காலத்திலேயே கர்மங்கள் அடைய விட்டோடிப் போம் – அதுக்கு மேலே பிராப்தியும் வேண்டி இருக்கில் அதுவும் அவர்க்கு சுலபமாம் – அன்றிக்கே-பூமிக்கு எல்லாம் தாங்களே நிர்வாஹகராய் ஐஸ்வர்யத்தை அனுபவித்து பின்னையும் திருவடிகளிலே கூடப் பெறுவர்–என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10
நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல் நிலவும்புகழ் மங்கையர் கோன்,அமரில் கடமாகளி யானைவல்லான் கலியன் ஒலிசெய்தமிழ் மாலைவல் லார்க்கு, உடனே விடுமால்வினை வேண்டிடில் மேலுலகும் எளிதாயிடு மன்றியி லங்கொலிசேர், கொடுமாகடல் வையக மாண்டுமதிக் குடைமன்னவ ராயடி கூடுவரே. –2-4-10
பதவுரை Show / Hide
நெடு மால் அவன் மேவிய, Nedu Maal Aavan Meviyai - ஸர்வேச்வரன் நித்யவாஸம் செய்தருளப்பெற்ற (- (ஆல்-அசை.) (பின்பு))
நீர்மலை மேல், Neermalai Mel - திருநீர்மலை விஷயமாக,
நிலவும் புகழ், Nilavum Pugazh - நித்யமான புகழையடையரும்
மங்கையர்கோன், Mangaiyarkon - திருமங்கைநாட்டி லுள்ளார்க்குத் தலைவரும்
அமரில், Amaril - போர்க்களத்திலே
கடம் மா களி யானை வல்லான், Kadham Maa Kali Yaanai Vallaaan - மதத்தாலே மிகவும் களித்த யானையை நடத்தவல்லவருமான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலிசெய், Olisei - அருளிச்செய்த
தமிழ் மாலை, Tamizh Maalai - இத்தமிழ்த்தொடையை
வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு
வினை, Vinai - (உள்ள) பாவங்கள்
உடனே, Udane - அப்போதே
விடும், Vidum - அகன்றொழியும்;
வேண்டிடில், Vendidil - அபேக்ஷை யுண்டாகில்
மேல் உலகும், Mel Ulakum - சுவர்க்கம் முதலிய மேலுலகங்களின் அநுபவமும்
எளிது ஆயிடும், Ezhithu Aayidum - ஸூலபமாகும்;
அன்றி, Andri - அதுவுமல்லாமல்,
இலங்கு ஒலி சேர் கொடு மா கடல் வையகம், Ilangu Oli Ser Kodu Maa Kadal Vaiyagam - விளங்காநின்ற கோஷத்தையுடைய வளைந்த பெரிய கடலால் சூழப்பட்ட பூமியை
மதி குடை மன்னவர் ஆய்  ஆண்டு, Mathi Kudai Mannavar Aay Aandu - சந்திரனை யொத்த வெண் கொற்றக்குடையை யுடைய ராஜாக்களாய் அரசாண்டு
அடி கூடுவர், Adi Kooduvar - அவனது திருவடிகளைக் கிட்டப் பெறுவர்கள்.