திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1088 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1088பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ வித ரஷணம் பண்ணுமவன் -சர்வருக்கும் ஸ்ப்ருஹணீ யமாய் –தானே தாரகனுமாய்-பிரபல பிரதிபந்தகங்களை கேசி வாயைக் கிழித்தாற் போலே அநாசேயேந போக்க வல்லவனை-என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனை – இடர் பட்டு வரவும் பிற் பாடாகை அன்றிக்கே –இவன் இடர் பட்ட மடுவின் கரையிலே வந்து உதவினாப் போலே நான் நோவு படுகிற சம்சாரத்திலே -சம காலத்திலேயே –காணப் பெற்றேன் என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப் பாடுகடலி லமுதத்தைப் பரிவாய்கீண்ட சீரானை, எம்மானைத் தொண்டர்தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை, போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப் புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை, காரானை யிடர்க்கடிந்த கற்பகத்தைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-1
பதவுரை Show / Hide
பார் ஆயது, Paar Aayadhu - உலகமாக வுள்ளவற்றை யெல்லாம்
உண்டு, Undu - (பிரளயம் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்து
உமிழ்ந்த, Umizhndha - (பிரளயம் கழிந்தபிறகு) வெளிப்படுத்தினவனும்
பவளம் துணை, Pavalam Thunai - பவழத்தூண் போலே விரும்பத்தக்கவனும்
படு கடலில் அமுதத்தை, Padu Kadalil Amudhatthai - ஆழ்ந்த கடலிலுண்டான அமுதம்போலே போக்யனானவனும்
பரி வாய் கீண்ட சீரானை, Pari Vaai Kiinda Seeranaai - குதிரை வடிவுடன் வந்த கேசியென்னுமஸூரனுடைய வாயைக் கிழித்தெறிந்த வீரலக்ஷ்மியையுடையவனும்
எம்மானை, Emmaanai - எனக்கு ஸ்வாமியானவனும்
தொண்டர் தங்கள் சிந்தை உள்ளே, Thondar Thangal Sindhai Ullae - அடியவர்களுடைய நெஞ்சினுள்ளே
முளைத்து, Mulaiththu - தோன்றி
எழுந்த, Ezhundha - அபிவிருத்தியடைகின்ற
தீம் கரும்பினை, Theem Karumbinai - இனிய கரும்பு போன்றவனும்
போர் ஆனை, Poar Aana - போர் செய்யவந்த குவலயாபீடமென்னும் யானையினுடைய
கொம்பு, Kombu - தந்தங்களை
ஒசித்த, Osiththa - முறித்தெறித்த
போர் ஏற்றினை, Poar Aetrinai - யுத்தஸாமர்த்திய முள்ளவனும்
புணர் மருதம் இற நடந்த, Punar Marudham Ira Nadandha - இரட்டை மருதமரங்கள் முறியும்படி தவழ்ந்தவனும்
பொன் குன்றினை, Pon Kunrinai - பொன்மலை போல் அழகியவனும்
கார் ஆனை இடர் கடிந்த, Kaar Aana Idar Kadintha - பெரிய கஜேந்தராழவானுடைய துன்பத்தைத் தொலைத்தவனும்
கற்பகத்தை, Karppagaththai - கல்பவருக்ஷம்; போல ஸர்வ ஸ்வதானம் செய்பவனுமான எம்பெருமானை
நான் கண்டது, Naan Kandhadhu - அடியேன் ஸேவிக்கப்பெற்றது (எவ்விடத்திலென்றால்)
கடல்மல்லை தலசயனத்து, Kadalmallai Thalasayanaththu - ஸ்தலசாயிப் பெருமாளுடையதான திருக்கடல் மல்லையிலே