திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1092 | பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிலவறையிலே பிரவேசிப்பித்து நலிய வேணும் என்று –பதிபடை கிடந்த மல்லர் முடிந்து போம் படி சீறினவனை- அந்த க்ருத்ரிமத்தைத் தப்பி என்னை எழுதிக் கொண்டவனை காணப் பெற்றேன் என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5 | பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப் பாலகனா யாலிலையில் பள்ளியின்பம்
ஏய்ந்தானை, இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை,
தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்றப் பொய்யறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக்
காய்த்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-5 | பதவுரை Show / Hideதிரி சகடம், Thiri Sakadam - உருளுகிற சகடமானது (- (கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே கண்டுகொண்டேன்-.)) பாறி, Paari - சின்னபின்னமாகச் சிதறி வீழ, Veela - விழும்படி பாய்ந்தானை, Paayndhaanai - திருவடியாலுதைத்தவனும் பாலகன் ஆய், Paalagan Aay - சிறுபிள்ளையாய் ஆல் இலையில், Aal Ilaiyil - ஆலந்தளிரிலே பள்ளி இன்பம் ஏய்ந்தானை, Palli Inbam Aeyndhaanai - திருக்கண்வளர்தலாகிற ஸுகத்தை அநுபவித்தவனும் இலங்கு ஒளி சேர், Ilangu Oli Seer - மிக்க ஒளியை யுடைத்தான மணி குன்று அன்ன, Mani Kunru Anna - ரத்னமயமான பர்வதம் போன்றவனும் மால் வரை, Maal Varai - பெரிய மலைபோன்ற ஈர் இரண்டு தோள் எம்மான் தன்னை, Eer Irandu Thol Emmaan Thannai - நான்கு திருத்தோள்களையுடைய ஸ்வாமியானவனும் நிலம் மகள் தோள் தோய்ந்தானை, Nilam Magal Thol Thoyndhaanai - பூமிப்பிராட்டியின் தோளோடே அணைந்தவனும் தூதின் சென்று, Thoodhin Sendru - (பாண்டவர்களுக்குத்) தூது செய்யுந் தொழிலுடனே (துரியோதனனிடம்) எழுந்தருளி பொய் அவ் அறை வாய்புக பெய்த, Poi Av Arrai Vaaypuka Peytha - (அத்துரியோதனன்) க்ருத்ரிமமாகச் செய்துவைத்த அந்த நிலவறையி னுள்ளே நிறுத்தப்பட்டிருந்த மல்லர், Mallaar - மல்லர்கள் மங்க, Manga - முடியும்படி காய்ந்தானை, Kaayndhaanai - சீற்றங்காண்டவனுமான எம்மானை, Emmaanai - எம்பெருமானை |