திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1095 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1095பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய சூரிகள் பரிய இருக்கிறவன் இங்கே வந்து சாய்ந்து அருளுவதே – இது என்ன நீர்மை -என்று எப்போதும் எண்ணப் படுமவன் படபாமுகாக்னி நிறைந்தால் போலே காண வேணும் என்று உறாவிப் பட்டினி விட்ட கண்களின் உடைய உறாவுதல் தீர காணப் பெற்றேன் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை, தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும் தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி, என்ணானை யெண்ணிறந்த புகழினானை இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-8
பதவுரை Show / Hide
பெண் ஆகி, Pen Aagi - மோஹினி யுருவமெடுத்து (- (கடி பொழில் சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே கண் ஆரக் கண்டுகொண்டேன்-.))
இன் அமுதம் வஞ்சித்தானை, In Amudham Vanchiththaanai - இனிய அமிருத்தை (அசுரர்கள் புஜிக்கவொண்ணாதபடி) வஞ்சித்தவனும்
அன்று, Andru - முன்பொரு காலத்தில்
பிறை எயிறு, Pirai Eiyiru - சந்திரனை யொத்த பற்களையுடைய
அடல் அரிஆய், Adal Ariyaai - பலசாலியான நரஸிம்ஹமுர்த்தியாய்
பெருகினானை,, Peruginanai - வளர்ந்தவனும்,
தண் ஆர்ந்த வார் புனல் சூழ், Than Aarntha Vaar Punal Soozh - குளிர்த்தி பொருந்திப் பெருகுகின்ற ஜலத்தாலே சூழப்பட்ட
மெய்யம் என்னும், Meiyyam Ennum - திருமெய்யமென்கிற
தடவரைமேல், Thadavarai Mel - பெரிய திருமலையின்மீது
பணங்கள் மேவி கிடந்தானை, Panangal Mevi Kidandhaanai - (திருவனந்தாழ்வானுடைய) படங்களின் கீழே பொருந்திப் பள்ளி கொண்டிருப்பவனும்
எண்ணானை, Ennaanai - (யோகிகளால்) சிந்திக்கப்படுமவனும்
எண் இறந்த புகழினானை, En Irandha Pugazhinaanai - கணக்கில்லாத கீர்த்திகளையுடையவனும்
இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை, Ilangu Oli Ser Aravindham Poonru Neenda Kannaanai - மிக்க ஒளியையுடைய தாமரையிதழ்போலே நீண்ட திருக்கண்களையுடையவனுமான எம்பெருமானை