திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1096 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1096பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சாஸ்த்ரீய ஜ்ஞானத்தாலே தன்னை ப்ராபிக்கைக்கு ஈடான வழியைக் கண்டு வைத்தவனை – அப்பெரு வழியான சாஸ்திர ஜ்ஞானத்தாலே அன்றிக்கே இக் கண்ணாலே காணப் பெற்றேன் – என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9
தொண்டாயர் தாம்பரவு மடியினானைப் படிகடந்த தாளாளற் காளாயுய்தல் விண்டானை, தென்னிலங்கை யரக்கர்வேந்தை விலங்குண்ண வலங்கைவாய்ச் சரங்களாண்டு, பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும் கண்டானை, தொண்டனேன் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-9
பதவுரை Show / Hide
தொண்டு ஆயார் தாம், Thondu Aayaar Thaam - அடிமைப்பட்டவர்கள் (- (கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே கண்டுகொண்டேன்.))
பரவும், Paravum - துதிக்கப்பெற்ற
அடியினானை, Adiyinanae - திருவடிகளை யுடையவனும்,
படி கடந்த தாள் ஆளற்கு ஆள் ஆய் உய்தல் விண்டானை தென் இலங்கை அரக்கர் வேந்தை, Padi Kadanda Thaal Aalarku Aal Aayi Uythal Vintaanai Then Ilangai Arakkar Vendai - பூமியை யளந்த திருவடிகளை யுடையனான தனக்கு ஆட்பட்டு உஜ்ஜீவிப்பது தவிர்ந்தவனான இராவணனை
விலங்கு உண்ண, Vilangu Unna - மிருகங்கள் தின்னும்படி
வலம் கைவாய், Valam Kaivai - வலத்திருக்கையாலே
சரங்கள் ஆண்டு, Sarangkal Aandu - அம்புகளைப்பிரயோகித்தவனும்,
பண்டு ஆய, Pandhu Aaya - நித்யமான
நான்கு வேதங்களும், Naanthu Vedhangalum - நாலு வேதங்களையும்
ஐந்து வேள்விகளும், Ainthu Velvikalum - பஞ்சமஹா யஜ்ஞங்களையும்
கேள்வியோடு, Kelviyodu - ஸ்மிருதிகளையும்
அங்கம் ஆறும், Angam Aarum - ஆறு அங்கங்களையும் (பிரவர்த்திப்பித்தவனுமான எம்பெருமானை
தொண்டனேன், Thondanaen - அடியேன்