திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1097 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1097பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வாதிகனான புண்டரீகாஷன் என்று தோற்றும் படி கண் வளர்ந்து அருளினவனை ஆயிற்று கவி பாடிற்று – இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –ப்ராக்தமான கர்மங்களை தாங்களே வாசனையோடு போக்க வல்லார் ஆவார்கள் பாபங்களை கூடு பூரித்துக் கொள்ளும் இத்தனை போக்கி எலி எலும்பனான இவனால் இது போக்கிக் கொள்ளலாம் என்றால் -இது கூடுமோ என்னில் –அதில் ஒரு தட்டு இல்லை இது த்ருடம் -என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10
படநாகத் தணைக்கிடந்தன் றவுணர்கோனைப் படவெகுண்டு மருதிடைப்போய்ப் பழனவேலி, தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத் தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை, கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர்க் கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல், திடமாக விவையைந்து மைந்தும்வல்லார் தீவினையை முதலரிய வல்லார்தாமெ. –2-5-10
பதவுரை Show / Hide
படம் நாகம் அணை கிடந்து, Padam Naagam Anai Kidandhu - படங்களையுடைய சேஷசயனத்திலே பள்ளிகொள்பவனும்
அன்று, Andru - முன்பொருகால்
அவுணர் கோனை படவெகுண்டு, Avaunar Konai Padavegundhu - அசுரர் தலைவனான இரணியனை முடியும்படி சீறினவனும்
மருது இடை போய், Maruthu Idai Poi - இரட்டை மருதமரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனும்
பழனம் வேலி, Pazhanam Veli - நீர் நிலங்களைச் சுற்றிலுமுடைத்தாய்
தடம் ஆர்ந்த, Thadam Aarntha - தடாகங்கள் நிறையப்பெற்றதான
கடல்மல்லை தலசயனத்து, Kadalmallai Thalasayanaththu - திருக்கடல்மல்லையிலே
தாமரை கண்துயில் அமர்ந்த, Thamarai Kanthuyil Amarntha - தாமரைபோன்ற திருக்கண்கள் துயில்கொண்டிராநின்ற
தலைவர் தம்மை, Thalaivar Thammai - ஸ்வாமியுமான தலசயனத்துறைவாரைப் பற்றி,
கடம் ஆரும் கருகளிறு வல்லான், Kadham Aarum Karugaliru Vallan - மதம்மிக்க பெரிய யானையை நடத்தவல்லவரும்
போர் வெல், Por Vel - யுத்தத்திலே வெற்றி பெறுமவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார்
ஒலிசெய்த, Oliseitha - அருளிச்செய்த
இன்பம், Inbam - இன்பம் விளைக்கவல்ல
இவை ஐந்து ஐந்து பாடலும், Ivai Ainthu Ainthu Paadalum - இப்பத்துப் பாசுரங்களையும்
திடம் ஆக, Thidam Aaga - உறுதியாக
வல்லார் தாம், Vallaar Thaam - ஓதவல்லவர்கள்
தீவினையை, Theevinaiyai - பாவங்களை
முதல் அரிய வல்லார், Muthal Ariya Vallaar - வேரறுக்க வல்லவராவர்கள்.